Everything posted by ஏராளன்
-
ஜே.வி.பி இன் இனவாதப்போக்கை உணர்ந்தே தமிழர்கள் அவர்களை நிராகரித்தனர் - தமிழ்த்தேசிய தலைவர்கள் தெரிவிப்பு
(நா.தனுஜா) தேசிய மக்கள் சக்தியின் ஆழமான இனவாதப்போக்கை உணர்ந்திருப்பதாலேயே தமிழ் மக்கள் அவர்களைத் தொடர்ச்சியாக நிராகரித்துவருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த்தேசிய தலைவர்கள், பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பான அவர்களது தற்போதைய நிலைப்பாடு தெற்கில் வாழும் சிங்கள மக்களை கண்திறக்கச்செய்வதாக அமையும் எனத் தெரிவித்துள்ளனர். நாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என தேசிய மற்றும் சர்வதேச தரப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (29) இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் விஜித்த ஹேரத், 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து தற்போது ஆராயப்படவில்லை. அது உள்ளவாறே தொடர்ந்து நடைமுறையில் இருந்தாலும், அச்சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். அடுத்துவரும் புதிய பாராளுமன்றத்தில் இச்சட்டம் தொடர்பில் திருத்தங்களை முன்மொழிந்து, அவை பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் மாத்திரமே பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்துள்ளார். கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்திருக்கும் அவரது இக்கருத்து தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 'தேசிய மக்கள் சக்தி இற்றைவரை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஒழிப்போம் என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுத்துவந்திருக்கிறது. அச்சட்டத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் வழங்கவில்லை. மாறாக இச்சட்டத்தை ஒழிப்பதாக தேசிய மக்கள் சக்தியினால் உறுதியாகத் தீர்மானிக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் நான் கலந்துகொண்டு பேசியிருக்கிறேன். ஆனால் இப்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து வழுக்கத்தொடங்கிவிட்டார்கள்' என விசனம் வெளியிட்டிருக்கிறார். அதேபோன்று புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதற் எதிர்மாறாகவே செயற்பட்டுவருவதாக சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவர்களது ஆழமான இனவாதப்போக்கை உணர்ந்து தான் தமிழ்மக்கள் அவர்களைத் தொடர்ச்சியாக நிராகரித்துவந்திருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய நிலைப்பாடு தெற்கில் வாழும் சிங்கள மக்களைக் கண்திறக்கச்செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை இதனை தாம் முன்னரேயே எதிர்பார்த்ததாகத் சுட்டிக்காட்டிய புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானம், காணி விடுவிப்பு, பயங்கரவாதத்தடைச்சட்டம் என்பன உள்ளடங்கலாக சகல விடயங்களிலும் கடந்தகால அரசாங்கங்கள் எவ்வாறு செயற்பட்டனவோ, அதே வழியில் செயற்படுவதற்கே தேசிய மக்கள் சக்தி முற்படுவதாகவும், எனவே இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/197545
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரை) 1,042 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 297 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 714 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 10 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/197521
-
தலைவரின் கூட்டமைப்பையே சிதைத்தவர்களால் தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்க இயலுமா? - அங்கஜன்
தலைவரின் கூட்டமைப்பையே சிதைத்தவர்களால் தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்க இயலுமா? என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டுள்ள அவர், இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; எம் மக்கள் அரசியல் ரீதியாகவும் தலைநிமிர்ந்து தன்மானத்துடன் நிற்க வேண்டும் என்றால் தமிழர்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையே பலம் என அவர் அன்றே கணித்து தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதில் அதிக கவனம் செலுத்தினார். ஆனால் இன்று எம் தமிழ் தலைமைகள் எமக்காக உயிர் தியாகம் செய்தவர்களை மறந்து தமது சுயலாபத்திற்காக ஆளுக்கோர் பக்கம் நீயா? நானா? எனப் பிரிந்து நிற்கின்றனர். தமிழ் மக்களுக்காக தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் என அனைவரும் நம்பி இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிளவடைய இடமின்றி உள்ள போதிலும் மேலும் பிளவடைவதற்கான வாய்ப்புக்கள் கண்ணூடாக தெரிகின்றன. வீடாக இருந்த அந்த ஒற்றைச் சின்னம் இன்று சைக்கிள்,மான்,மாம்பழம் ,சங்கு என பிளவடைந்து மக்களுடைய எதிர்பார்ப்பிலும் மண் அள்ளிப் போட்டுள்ளது. மக்களுக்காக ஒன்றுபட இயலாதவர்கள் எப்படி மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார்கள்? என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். https://www.virakesari.lk/article/197529
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்பு! பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட விநாயகமூர்த்தி சகாதேவன் இன்று புதன்கிழமை (30) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் மோகனதாஸ், பனை அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/197527
-
தமிழ்த் தேசிய அரசியலை மக்கள்தான் காக்க வேண்டும்!
(புருஜோத்தமன் தங்கமயில்) வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள், தென் இலங்கைக் கட்சிகள் மற்றும் அவற்றின் உதிரிக் கட்சிகளிடம் சென்றுவிடுமோ என்கிற அச்சம், தமிழ்த் தேசிய அரசியலைப் பற்றிக் கொண்டிருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தென் இலங்கையின் பாரம்பரியக் கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடித்து, தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றிருக்கின்றார். அதனை ‘புதிய புரட்சி மாற்றம்’ என்று அடையாளப்படுத்துகிறார்கள். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும், அந்த வெற்றியின் நீட்சியை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலேயே ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒருசில நாட்களிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கான அறிவிப்பை அநுர வெளியிட்டார். இந்தப் புரட்சி மாற்ற அலைக்குள் தமிழ் மக்களும் அள்ளுண்டுவிடுவார்கள் என்கிற பயம், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாத்திரமல்ல, கடந்த காலங்களில் ஆட்சியாளர்களின் பங்காளியாக இயங்கிய ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றன என்பது கவனத்தில் கொள்ளப்படக் கூடியது. ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 22 பாராளுமன்ற ஆசனங்களை வெற்றி கொண்டமைதான், அதியுச்ச தேர்தல் வெற்றியாகும். அது, தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அங்கு, கூட்டமைப்பின் தலைவர்களோ, பங்காளிக் கட்சிகளோ வெற்றிக்கான உரித்தாளர்கள் அல்ல. அவர்கள், புலிகளினால் மக்களிடம் முன்மொழியப்பட்டு, வெற்றியைச் சுவைத்தவர்கள். அத்தோடு, அப்படியான தமிழர் வாக்கு ஒருங்கிணைவு, தற்போதுள்ள தேர்தல் நடைமுறைக்குள் சாத்தியம் இல்லாதது. அன்றைய திகதியில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 9 பாராளுமன்ற ஆசனங்கள். இன்று அது, 6 ஆக சுருங்கிவிட்டது. ஆக, 22 என்கிற பாராளுமன்ற ஆசனத்தை 19 எண்ணிக்கை அடிப்படையில் வைத்துக் கொண்டுதான், தமிழ்த் தேசிய வாக்குகளின் ஒருங்கிணைவின் அடைவு தொடர்பில் பேச வேண்டி ஏற்படுகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பினர் 10 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றன. அப்படிப் பார்த்தாலும் 6 ஆசனங்களின் இழப்பு, தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஏற்பட்டிருப்பதாக வாதம் முன்வைக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் மட்டக்களப்பில் 2 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் இழந்தன. அவற்றை பிள்ளையானும், வியாழேந்திரனும் வென்றனர். அம்பாறையில் வெற்றி கொள்ளப்பட வேண்டிய ஒற்றை ஆசனமும் கருணா அம்மானின் வாக்குப் பிரிப்பினால், இல்லாமற்போனது. யாழ்ப்பாணத்தில், அங்கஜன் ஒரு ஆசனத்தை வென்றார். வன்னியில் ஈபிடிபிக்கு உதிரி வாக்குகளினால் ஒரு ஆசனம் கிடைத்தது. நேரடியாக தமிழ் வாக்குகளின் மூலம், 4 ஆசனங்களை தமிழ்த் தேசியம் பேசாத ராஜபக்ஷக்களின் ஆதரவுக் கட்சிகள் வென்றன. ஒரு ஆசனம் அம்பாறையில் நேரடியாக இழக்கப்பட்டது. இந்த ஆசனங்களுக்கான வாக்குகளை தமிழ்த் தேசியக் கட்சிகளை நோக்கித் திருப்பினாலே, நேரடியாக 5 ஆசனங்கள் மற்றும் இன்னொரு தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்கான வாக்கின் திரட்சி அளவு என்பவற்றைக் கணக்கில் எடுத்தால், தமிழ்த் தேசியக் கட்சிகள் 19 ஆசனங்களை வெற்றி கொள்ள முடியும். இதில், யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசனம் உள்ளடக்கப்படவில்லை. ஏனெனில், அவர் புலிகளின் அலைக்குள்ளாலும் தப்பி, 2004 தேர்தலில் வென்றவர். ஆக, 22 என்கிற அதியுச்ச வெற்றிக் கணக்கினை தற்போது ஒப்பிட்டால், அது 19 என்று கொள்ளப்பட வேண்டும். அவற்றை மீளவும் வெற்றிகொள்வது என்பது மிகப்பெரிய சாதனை. கிட்டத்தட்ட அந்த இலக்கை தமிழ்த் தேசியக் கட்சிகள் அடைந்தால், அது 2004 பொதுத் தேர்தல் வெற்றியைவிட பெரிய வெற்றியென்று கொள்ளப்பட வேண்டியது. அதற்கான காரணங்களை, வெளிப்படையாக பேச வேண்டியதில்லை. தமிழ்த் தேசியக் கட்சிகள் இழந்திருக்கின்ற ஐந்து ஆறு ஆசனங்களை மீண்டும் கைப்பற்றுவதன் மூலம், தமிழ் மக்களை தமிழ்த் தேசிய வாக்குத் திரட்சிக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்பது ஒரு வகையிலான தேர்தல் கணக்கு ஒப்பீடு. ஆனால், அது சாத்தியமாக என்றால், நிச்சயமாக இல்லை. ஏனெனில், கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கும், அவர்களை தங்களின் கருவிகளாக கையாள்வதற்கும் விடுதலைப் புலிகள் போன்ற ஆளுமையுள்ள தரப்பொன்று தமிழ்ச் சூழலில் இல்லை. அத்தோடு, தமிழ்த் தேசியக் கட்சிகளை அழுத்தங்களை வழங்கி வழிப்படுத்துவதற்கான சிவில் சமூக அமைப்புக்களும் இயங்கு நிலையில் இல்லை. அப்படியான வாய்ப்புக்களை தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்ற பெயர்களில் எழுந்து அடங்கியவர்கள் அழித்துவிட்டார்கள். இதனால், தேர்தல் மைய அரசியல் கட்சிகளை ஓரணிக்குள் கொண்டு வருவதும், அதன் மூலம் தமிழ்த் தேசிய வாக்குகளை திரட்டி பெரிய வெற்றியைப் பெறுவதும் சாத்தியமில்லாதது. தற்போது ஒவ்வொரு கட்சியும் தங்களின் தனித்த வெற்றி தொடர்பில்தான் அக்கறையோடு இருக்கின்றன. யார் அதிக ஆசனங்களை வெற்றி கொள்கிறார்களோ, அவர்கள்தான், தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைக் கட்சி என்கிற நிலையில் இருப்பார்கள். அப்படியான நிலையில், அந்த இடத்தைத் தக்க வைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியும், அந்த இடத்தை அடைவது தொடர்பில் ஏனைய கட்சிகளும் இயங்கும். கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வென்ற 10 ஆசனங்களில், 4 ஆசனங்களை ரெலோவும், புளொட்டும் வென்றிருந்தன. அதனைக் கொண்டே தங்களை அதிகளவில் அலைக்கழித்துவிட்டார்கள் என்று தமிழரசுக் கட்சியினர் எரிச்சலோடு இருந்தார்கள். தங்களின் வீட்டுச் சின்னத்தில் நின்று வெற்றியைப் பெற்றுவிட்டு, தங்களுக்கே பிரச்சினைகளைக் கொடுக்கிறார்கள் என்ற கோபத்தில்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்தார்கள். அது, இந்தப் பொதுத் தேர்தல் வரையில் வந்து நிற்கின்றது. அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய ஒருங்கிணைவு என்பது பற்றிப் பேசினாலும், அது தன்னடைய தலைமையின் கீழ் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. அங்கு, தங்களைக் கேள்விக்குட்படுத்தாதவர்களாக பங்காளிக் கட்சிகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிரதானமாக தொக்கி நிற்கின்றது. ஒரு பேச்சுக்கு தமிழரசின் தலைமையின் கீழ், ஏனைய கட்சிகள் இணைந்தாலும் முன்னணி அடையாளத்துக்குள் இருக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இணைவதற்கான எந்த வாய்ப்புக்களும் இல்லை. அந்தக் கட்சி, அவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளை இறுகச் சாத்திக் கொண்டுதான், அரசியலே செய்கின்றது. அத்தோடு, அதற்கு வடக்குக் கிழக்குப் பூராவும் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதோ, வெற்றிபெற வேண்டும் என்பதோ நோக்கமும் இல்லை. அதிகபட்சம் யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆசனங்களை வென்று, பெரிதாக பொறுப்புக் கூறாத நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் போதும் என்பதுதான் அந்தக் கட்சியின் நிலைப்பாடு. அதற்கு, அந்தக் கட்சி தொடர்ச்சியாக ஒரு குடும்பத்தின் கீழ் இருப்பதும் காரணமாகும். கட்சியை வடக்குக் கிழக்குப் பூராவும் கட்டமைப்புக்களை பலப்படுத்தி வளர்த்து, அதிக வெற்றியைப் பெற்றால், அதுவே எதிர்காலத்தில் கட்சி மீதான கட்டுப்பாட்டினை பொன்னம்பலம் குடும்பத்திடம் இருந்து பறித்துக் கொண்டுவிடும் என்கிற எச்சரிக்கை உணர்வு அவர்களோடு தொடர்ந்து வருகின்றது. அதனால், அவர்கள் யாழ்ப்பாணத்துக்குள் சுருங்கிக் கொண்டுவிட்டார்கள். கட்சியை உண்மையிலேயே வளர்க்கும் நோக்கம் இருக்குமானால், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கிழக்கில் பிரச்சாரங்களை முன்னெடுத்த காங்கிரஸ், தங்களுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தால் அதனை கிழக்கிற்கு வழங்குவோம் என்று அறிவித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை. மாறாக, யாழ்ப்பாணத்துக்குள் அதனை வைத்துக் கொண்டார்கள். இன்றைக்கு அவர்கள் வடக்கு கிழக்குப் பூராவும் போட்டியிட்டாலும், அதன் நோக்கம் நேரடியாக வெற்றிபெறுவது அல்ல. மாறாக, தேசியப் பட்டியலுக்கான வாக்குத் திரட்டுதலாகும். கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்புக்குள் வேட்பாளர்களுக்கு இடையில் சொல்லிக் கொள்ள முடியாதளவுக்கு குழிபறிக்கும் வேலைகள் இடம்பெற்றன. அது, கூட்டமைப்பின் தோல்விகளுக்கான பிரதான காரணமாக மாறியது. அதுபோலவே, ஓரிரு ஆசனங்களை வெற்றிபெறும் களம் தங்களுக்கு வாய்த்திருக்கின்றது என்பதை உணர்ந்த காங்கிரஸ்காரர்களுக்குள்ளும் விருப்பு வாக்குப் போட்டியும் குழிபறிப்புக்களும் அரங்கேறின. மணிவண்ணன் அதிக வாக்குகளைப் பெற்றுவிடக்கூடாது என்பதில் கஜன்களும், கஜன்களைத் தாண்டி அதிக வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் மணிவண்ணனும் குறியாக இருந்தார்கள். இரு தரப்பும், மற்றத்தரப்புக்கு வாக்குப்போட வேண்டாம் என்ற பிரச்சாரத்தை வெளிப்படையாகவே செய்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் மணிவண்ணனை முன்னணியில் இருந்து விரட்டினார்கள். இன்றைக்கு வடக்குக் கிழக்கு பூராவும் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதான கட்சியாக களம் காண்கிறது. யாழ்ப்பாணத்தில் ஓரிரு ஆசனங்களுக்காக காங்கிரஸும் போட்டியில் இருக்கின்றது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினரான சங்குக் கூட்டணி யாழ்ப்பாணத்தில் ஒன்று, வன்னியில் ஒன்று என்ற ஆசன இலக்குகளோடு களம் கண்டிருக்கின்றது. அவர்களினால் ஏனைய மாவட்டங்களில் பெரிய வெற்றியைப் பெற முடியாது. வேணுமென்றால், ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்கான வாக்குத் திரட்சியை அவர்கள் குறி வைக்கலாம். அதன்மூலம், அதிக பட்சம் சங்குக் கூட்டணி, மூன்று ஆசனக் கணக்கோடு இருக்கின்றது. ஒப்பிடுகையில், கடந்த தேர்தலில் நான்கு ஆசனங்களைக் கொண்டிருந்தார்கள். இப்போது, அவற்றில் ஒன்று தமிழரசுக் கட்சியிடம் இழக்கப்படும் வாய்ப்புண்டு. தமிழரசுக் கட்சியினர் அலங்கரித்து அழகுபார்த்து விக்னேஸ்வரனை வடக்கு முதலமைச்சர் பதவியில் இருந்தினார்கள். அவரோ, தன்னுடைய தனிப்பட்ட ஓட்டத்துக்காக பேரவையைக் கொண்டு தனிக் கட்சி ஆரம்பித்து, கடந்த தேர்தலில் வென்று பதவியை அனுபவித்தும் விட்டார். இறுதியில் அவர், சாராயக்கடை அனுமதிப்பத்திரத்தை வாங்கிக் கொடுத்து, தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவு முகங்களின் ஒன்றாக மாறினார். இப்போது, அவரின் கட்சியில் மணிவண்ணன் அணியினர் போட்டியிடுகிறார்கள். அவர்களோடு, தமிழரசுக் கட்சியில் ஆசனம் கோரி, மறுக்கப்பட்ட இருவர் இணைந்திருக்கிறார்கள். இந்தக் குழுவினரால், தேர்தல் வெற்றியை நோக்கி பெரிதாக ஓட முடியாது. ஏனெனில், அவர்கள் தேர்தல் பிரச்சாரக் களத்தில், விக்னேஸ்வரன் சாராயக்கடை முகவராக செயற்பட்ட அவதூறுக்கு பதில் சொல்வதிலேயே காலத்தைக் கடத்த வேண்டியிருக்கின்றது. இன்னொரு பக்கம், தமிழரசுக் கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து சுயேட்சையாக மாங்காய் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். அவர்களினால் சில ஆயிரம் வாக்குகளை பெறுவதே பெரிய காரியமாக இருக்கும். அப்படியான நிலையில், ஆசனங்களை வெற்றிகொள்வதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது. அதனால்தான், அவர்கள் ஊடகங்களில் செவ்விகளின் வழியாக மாத்திரம் அரசியல் செய்கிறார்கள். அதிலும், சுமந்திரனை தாக்குவது மாத்திரம்தான் தமிழ்த் தேசிய அரசியல் என்றும் நினைத்துக் கொண்டு இயங்குகிறார்கள். தமிழ்த் தேசியக் கட்சிகளின் இந்தக் குழறுபடி நிலைக்குள் நின்றுகொண்டு, சில ஆசனங்களை வென்றுவிட வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி குறியாக இருக்கின்றது. அத்தோடு, கிழக்கில் அந்தக் கட்சி திருகோணமலை, அம்பாறையில் பெரிய வெற்றியையும் பெறும். அங்கு, அதற்கான வாய்ப்புக்களை சிங்கள, முஸ்லிம் மக்கள் வழங்கும் சாத்தியம் காணப்படுகின்றது. அப்படியான நிலையில், அந்த மாவட்டத்து தமிழ் மக்கள் புரட்சி மாற்றத்துக்கு வாக்களிக்கப் போகிறோம் என்று தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது, அந்த மாவட்டங்களின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழக்கப்பண்ணுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். குறித்த இரு மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியில் நின்று, விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் வேட்பாளர் ஒருவர் வெற்றிபெறுவது என்பது குதிரைக் கொம்பு போன்றது. அப்படியான சூழலில், களத்தினையும் தேவையையும் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். வடக்கில், தேசிய மக்கள் சக்தியினால் ஆசனங்களை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அந்தக் கட்சியிடம் அது தொடர்பிலான எதிர்பார்ப்பு அவசரமாக இருப்பது மாதிரியும் தெரியவில்லை. ஏனெனில், அந்தக் கட்சியின் வேட்பாளர் தெரிவுகளே அதனை வெளிப்படுத்துகின்றன. தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளராக வேண்டும் என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பிரபலமான கல்வியாளர்கள் தொடங்கி பலரும் முண்டியடித்தார்கள். ஆனால் அவர்களையெல்லாம் தவிர்த்துவிட்ட ஒப்பீட்டளவில் வெற்றிக்கான முகமாக அடையாளம்பெற முடியாதவர்களை அந்தக் கட்சி தெரிவு செய்திருக்கின்றது. அது, தனித்த ஆளுமைகளினால் அல்லாமல், கட்சி அடையாளத்தோடு வெற்றிபெற வேண்டும் என்பதும், அதுதான் எதிர்கால கட்சி வளர்ச்சிக்கு அவசியம் என்றும் அந்தக் கட்சியின் நிறைவேற்றுக்குழு நினைக்கின்றது. அதனை நோக்கிய தெரிவுதான் வடக்கில் அந்தக் கட்சி செய்திருப்பது. கிட்டத்தட்ட அதனைத்தான் மட்டக்களப்பிலும் அந்தக் கட்சியின் வேட்பாளர் தெரிவு வெளிப்படுத்தியிருக்கின்றது. எங்கெல்லாம் தமிழ் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று தோன்றிய இடங்களில், அதனை ஒரு நிலைப்பாடாகவே அந்தக் கட்சி கடைப்பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்திக்கு விழும் வாக்குகள், இன்றைய வெற்றிகளுக்கானது அல்ல. எதிர்கால நிலைத்த வெற்றிகளுக்கான அடித்தளம். அதனை, புரட்சி மாற்ற அலைக்குள் அல்லாட நினைக்கும் தரப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில், தேசிய மக்கள் சக்தி என்பது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தேர்தலுக்கான புதிய முகம். அந்த முகத்துக்குப் பின்னால், இருப்பது கடும்தேசியவாதமும், தமிழர் விரோதமும் கட்டவிழ்த்துவிட்ட கடந்த காலங்களும். அதனைத் தாண்டிய புதிய புரட்சிகளை, வரலாற்றை, அதிகாரப் பகிர்வினை அந்தக் கட்சி செய்துவிடும் என்ற நம்பிக்கை கொள்வது தேவையில்லாதது. ஆக, தமிழ் மக்கள், தங்களின் அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளை நோக்கி திரள்வதுதான் இருப்பதில் புத்திசாலித்தனமான தெரிவு. தமிழ்த் தேசியக் கட்சிகள் பொறுப்பற்றுச் செயற்பட்டாலும், தமிழ்த் தேசிய அரசியலை விடுதலைக்கான மூச்சாக கொண்டு சுமப்பதற்கான பொறுப்புணர்வின் அடிப்படையைக் கருதி, தமிழ் மக்கள் அந்த முடிவின் பக்கம் நிற்க வேண்டும். -காலைமுரசு பத்திரிகையில் ஒக்டோபர் 27, 2024 வெளியான பத்தி. http://maruthamuraan.blogspot.com/2024/10/blog-post_27.html
-
தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றியணையவில்லை ; வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!
தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றிணையாமல் ஆசனங்களை பெறுவதை மாத்திரம் நோக்கமாக கொண்டுசெயற்ப்படுவதாக வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (30) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், இம்முறை தேர்தலில் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் வேட்பாளர்கள் பேரம்பேசக்கூடிய ஒருசக்தியாக மக்களின் நன்மை கருதி ஒன்றிணையவில்லை. ஆசனங்களை பெறுவதனை மாத்திரம் நோக்கமாக கொண்டு ஏட்டிக்கு போட்டியாக தனித்தனியாக தேர்தலில் நிற்கின்றனர். இப்படி நின்று யாருக்காக நீங்கள் கதைக்கப்போகின்றீர்கள். நீங்கள் ஒரு அணியாக எப்போதாவது திரண்டிருக்கிறீர்களா? உங்களுக்குள்ளேயே போட்டியிட்டு குழப்பங்களை ஏற்ப்படுத்தி கட்சிகளை பிளவுபடுத்தி தமிழ்த்தேசியத்தையே இன்று இல்லாது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட தமிழ்மக்களை ஒன்றிணைத்து கலந்துரையாடி ஒற்றுமையாக எப்போது பயணித்துள்ளீர்கள். இந்த தேர்தலில் அதிகரித்துள்ள சின்னங்களால் தமிழ் மக்கள் குழப்பநிலையை அடைந்துள்ளனர். சங்கு, வீடு சுயேட்சை, சைக்கிள் என்று பலகட்சிகள், பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றது. இதனால் அரசியலை பற்றியே தெரியாதவர்கள் எல்லாம் பாராளுமன்றம் செல்லக்கூடிய நிலமையே இன்று ஏற்ப்பட்டுள்ளது. வடக்கில்12 ஆசனங்களை பெறுவதற்காக 800 ற்கும் மேற்ப்பட்டவர்கள் களம் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு யார் வாக்களிப்பது. நண்பர்கள் உறவினர்கள் வாக்களித்தால் அந்த வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது. இதன் மூலம் சிங்கள கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றும் நிலைமையினை நீங்களே உருவாக்கப்பார்க்கின்றீர்கள். பணத்தை ஏன் இவ்வாறு வீணடிக்கிறீர்கள் அதனை மக்களுக்கு வழங்குங்கள். நீங்கள் மாற்றத்தை உருவாக்குவோம் என்று கூறிவிட்டு இன்னும் கீழ் நிலைக்கே மக்களை தள்ளப்போகின்றீர்கள் என்று தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/197506
-
சம்பள உயர்வு குறித்து அறிவிக்க முன் நிதியமைச்சின் அனுமதி தேவையில்லை : பிரதமர் ஹரினி அரசமைப்பு குறித்து எங்கு கற்றார் ? - ரணில்
பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு இலங்கையின் அரசமைப்பு பற்றி ஏதாவது தெரியுமா? என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு அரச அதிகாரிகளின் அனுமதி அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். முன்னைய அமைச்சரவை உரிய நடைமுறைகளை பின்பற்றாமலே அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்க தீர்மானித்தது என பிரதமர் தெரிவித்துள்ளமை குறித்தே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கு திறைசேரி நிதியமைச்சின் அதிகாரிகளின் சம்மதத்தை முன்னைய அரசாங்கம் பெறவில்லை என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார், அமைச்சரவை இயங்குவதற்கு அவர்களின் அனுமதி அவசரம் என அவர் தெரிவிக்கின்றார். நீங்கள் எங்கிருந்து அரசமைப்பினை கற்றீர்கள் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவையே நாட்டை ஆள்கின்றது அரசமைப்பின் எந்த இடத்திலும் அதிகாரிகள் பற்றி குறிப்பிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசமைப்பு குறித்து அறியவேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் நான் உதவுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197497
-
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனிற்கு பிடியாணை
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து சொகுசு வாகனம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 23 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, இவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197495
-
யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு!
யாழ். கற்கோவளத்தில் கணவன், மனைவி தாக்கப்பட்டு கொலை ! யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர். கணவன், மனைவி இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர். மாணிக்கம் சுப்பிரமணியம் என்ற 53 வயதுடைய கணவனும், மேரி என்ற 54 வயதுடைய மனைவியுமே கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட கணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களைப் பார்வையிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197493
-
உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வைத்திருக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இதுவரை தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அரசாங்க வீட்டுவசதிகளை நிர்வகிக்கும் விதிமுறைகளுக்கு இணங்குவதாக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். கடந்த ஆட்சியில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 28 குடியிருப்புகளில் 12 வீடுகள் திரும்ப வழங்கப்படாமல் உள்ளன. வீடுகள் திரும்ப ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டுக் கட்டணங்களும் அகற்றப்படுவதை உறுதிசெய்யவும் அமைச்சகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/311356
-
கிழக்கு கடலில் கரை ஒதுங்கும் ஒருவகை மீன்கள்
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் ஒருவகை மீனினம் கடலிலிருந்து செவ்வாய்கிழமை (29) மாலை வேளையிலிருந்து கரை ஒதுங்குகின்றன. களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையும், மாங்காடு, குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு மீன்கள் கரை ஒதுகுவதை அப்பகுதி கடற்றொழிலாழர்கள் அவதானித்துள்ளனர். சிறிய அவளவிலான கறுப்பு நிற மீனினமே இவ்வாறு கரை ஒதுங்கி கடங்கரையில் இறந்து கிடக்கின்றன. https://www.virakesari.lk/article/197494
-
சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்ட பின்னணியில் அமித் ஷா – கனடா குற்றச்சாட்டு!
நிஜ்ஜார் கொலை வழக்கு: அமெரிக்க பத்திரிகையிடம் இந்திய அமைச்சர் அமித்ஷா பெயரை கூறியதாக கனடா அமைச்சர் ஒப்புதல் பட மூலாதாரம்,HOUSE OF COMMONS, CANADA படக்குறிப்பு, கனடாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசன் கனடா குடிமக்களை அச்சுறுத்தும் அல்லது கொல்லும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் ஒப்புதல் அளித்ததாக அந்நாட்டின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவிடம் கனடாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை (அக்டோபர் 29) அன்று கனடாவில் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவின் விசாரணை ஒன்று நடந்தது. அப்போது, அக்குழுவின் துணைத் தலைவரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரக்கேல் டான்சோ கனேடிய குடிமக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பினார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வான்கூவர் அருகே 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். விசாரணையின் போது, "கனடாவில் நடக்கும் குற்றங்களில் இந்திய உள்துறை அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு சார்பாக 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாளிடம் தெரிவித்தது யார்?", என்று அந்த குழுவின் துணைத் தலைவர் ரக்கேல் டான்சோ அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நத்தாலி ட்ரூயினிடம் கேள்வி எழுப்பினார். "இதுபோன்ற தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் அரசு பகிர்ந்து கொள்ளவில்லை", என்று நத்தாலி ட்ரூயின் பதில் அளித்தார். அக்டோபர் 14 ஆம் தேதி அன்று 'தி வாஷிங்டன் போஸ்ட்' என்ற அமெரிக்க செய்தித்தாளில் வெளியான ஒரு செய்திக்கட்டுரையை பற்றி ரக்கேல் டான்சோ கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். அந்த செய்தியில் கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டிருந்தது. "பத்திரிகையாளருக்கு யார் அந்த தகவலை கொடுத்தது? உங்களுக்கு அது பற்றி தெரியுமா? இந்த தகவலை நீங்கள் கொடுக்கவில்லை தானே?", என்று ரக்கேல் டான்சோ கேட்டார். இந்த விசாரணையியின் போது கனடாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசனும் இருந்தார். "மோரிசன், நீங்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியுமா? இந்த தகவலை நீங்கள் வழங்கினீர்களா?", என்று டேவிட் மோரிசனிடம் ரக்கேல் டான்சோ கேட்டார். "ஆம், பத்திரிகையாளர் ஒருவர் என்னை அழைத்து இதுபற்றி கேட்டார். நான்தான் அந்த நபரைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தேன்", என்று டேவிட் மோரிசன் பதில் அளித்தார். "அந்த பத்திரிகையாளர் பல்வேறு தரப்புகளிடம் இருந்து பெற்ற தகவல்களை வைத்து இது குறித்து நிறைய எழுதியிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரைப் பற்றி உறுதிப்படுத்தும்படி என்னிடம் கேட்டார். நான் அதை உறுதிப்படுத்தினேன்", என்று டேவிட் மோரிசன் கூறினார். ஆனால் இந்திய உள்துறை அமைச்சர் பற்றி டேவிட் மோரிசன் ஏதும் கூறவில்லை. செவ்வாய்க்கிழமை அன்று வெளிவந்த இந்த விஷயம் குறித்து கனடாவிலுள்ள இந்திய தூதரக அலுவலகமும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் கனடா முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இந்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. பட மூலாதாரம்,MEA படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் "குற்றச்சாட்டுகள் ஆதாரமாற்றவை" நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி முதலில் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில் வெளியான போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து தனது கருத்தினை தெரிவித்திருந்தது. "இந்த செய்தி ஒரு தீவிரமான விஷயத்தில் நியாயமற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது", என்று இந்த செய்திக்கட்டுரை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. "குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளின் நெட்வொர்க் குறித்து அமெரிக்க அரசு கவலை எழுப்பியதைத் தொடர்ந்து இந்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதைப் பற்றி ஊகங்களையும் பொறுப்பற்ற கருத்துகளையும் தெரிவிப்பது பயனுள்ளதாக இருக்காது", என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. கனடாவில் நடந்த குற்றங்களில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம்சாட்டியது. இந்த குற்றங்களில் கொலை, மக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவை அடங்கும். இந்த ஏஜெண்டுகள் கனடா குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கனடா கூறியிருந்தது. இந்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே இதுபற்றி கூடுதல் தகவல்கள் தெரிந்திருக்கும் என்று கனடா அதிகாரிகள் செவ்வாய்கிழமைக்கு முன் வெளிப்படையாக தெரிவித்து வந்தனர். கனடாவில் நடக்கும் பெரிய அளவிலான குற்றங்களில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் உடந்தையாக இருப்பதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு கனடாவின் காவல்துறை தெரிவித்த அதிர்ச்சியூட்டும் கருத்து குறித்தும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். ராயல் கனேடிய மவுண்டன் எனப்படும் கனேடிய காவல்துறையின் தலைவர் மைக் டுஹெம் செவ்வாய்கிழமையன்று இந்த குழுவிடம் சாட்சியம் அளித்தார். இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் இந்திய அரசாங்கத்திற்காக தகவல்களை சேகரித்ததை காவல்துறையிடம் உள்ள சாட்சிகள் உறுதிப்படுத்துகின்றன என்று அவர் கூறியிருந்தார். கனடாவில் கொலை, மக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் மிரட்டல் ஆகிய குற்றச் செயல்களை செய்யுமாறு அவர்கள் தூண்டியதாக மைக் டுஹெம் தெரிவித்திருந்தார். "இந்த வழக்கில் (நிஜ்ஜார் கொலை) இந்தியாவுக்கு பெரிய அளவில் பங்கு உள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.", என்றுகனடாவின் அரசு செய்தி நிறுவனமான சிபிசிக்கு அளித்த பேட்டியில் மைக் டுஹெம் கூறியிருந்தார். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், 13 கனேடிய குடிமக்களுக்கு இந்திய ஏஜென்டுகளால் ஆபத்து நிகழக்கூடும் என்று காவல்துறை எச்சரித்திருப்பதாக மைக் டுஹெம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிஜ்ஜார் கொலைக்குப் பிறகு இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு உறவுகள் மேலும் மோசமடைய வாய்ப்பு கனடா அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்த பிறகு இந்தியா-கனடா உறவில் மேலும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தும் இந்திய எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தியா அதனை மறுத்து வருகிறது. சமீப காலமாக இந்த விவகாரத்தால் இரு நாடுகளும் தத்தமது தூதரக அதிகாரிகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விலக்கிக் கொண்டன. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிஜ்ஜாரின் கொலைக்குப் பிறகு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தக் குற்றத்தில் இந்திய அதிகாரிகளின் தொடர்பு குறித்து கனடாவிடம் 'உறுதியான ஆதாரம்' இருப்பதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், கனடா அரசாங்கம் உறுதியான ஆதாரங்கள் எதையும் முன்வைக்கவில்லை. இந்தியா இந்த குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்தது. கனடாவிடம் அதற்கான ஆதாரத்தையும் இந்தியா கேட்டது. கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக இந்தியா அறிவித்த பிறகு, இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், "ட்ரூடோ அரசாங்கம் இந்திய அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரத்தையும் இந்தியாவிற்கு வழங்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தது. தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை களங்கப்படுத்தும் முயற்சி இது என்று இந்தியா குற்றம்சாட்டியது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (கோப்பு படம்) கனடா தனது நிலைப்பாட்டில் உறுதி ஆனால், தற்போது வரை ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி வருகிறார். கடந்த பதினைந்து நாட்களாக தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், ட்ரூடோ தனது குற்றச்சாட்டுகளில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரிடம் 'உரிய ஆதாரங்கள்' இல்லை. முதன்முறையாக, இந்த விவகாரத்தில் அவர் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அவரிடம் புலனாய்வு தகவல்கள் மட்டுமே இருந்தன. "இந்தியாவிடம் கனடா எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. இந்த வழக்கில் இந்தியாவுடன் இணைந்து பணி செய்யவே விரும்பியது. ஆனால் இந்தியா தொடர்ந்து ஆதாரங்களைக் கேட்டது" என்று வெளிநாட்டு தலையீடு ஆணையத்திடம் கனடா பிரதமர் கூறியிருந்தார். "ஆதாரங்கள் உங்கள் பாதுகாப்பு ஏஜென்சிகளிடமே உள்ளன" என்று மட்டும் பதிலளித்ததாக அவர் தெரிவித்தார். "கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியதற்கான தெளிவான சான்றாக இது இருக்கிறது", என்று விசாரணைக் குழுவிடம் அவர் கூறினார். பட மூலாதாரம்,FB/VIRSA SINGH VALTOHA படக்குறிப்பு, 2023 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதியன்று கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட என்ன காரணம்? இந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதிக்குப் பிறகு கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளன. கனடா அரசாங்கத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாததால் தனது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாக இந்தியா கூறியது. அதே நேரத்தில்தான், இந்தியாவின் ஆறு தூதரக அதிகாரிகளை கனடாவை விட்டு வெளியேற்றியுள்ளதாக அறிக்கை ஒன்றில் கனேடிய பிரதமர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடாவின் 6 தூதரக அதிகாரிகளை இந்தியாவைவிட்டு வெளியேற்றியது. கடந்த ஆண்டு கனடா குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் நிலவுகிறது. இந்த கொலையில் இந்தியாவுக்கு பங்கு இருப்பதாகக் குற்றம்சாட்டி, கனடா பகிரங்கமாக கேள்விகளை எழுப்பியது. 2023 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதியன்று கனடாவில் உள்ள குருத்வாரா ஒன்றில் வாகன நிறுத்துமிடத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நிஜ்ஜார் கனடாவின் வான்கூவரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் இருந்தார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்தியாவின் ஜலந்தரில் உள்ள பார் சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர். காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக இருந்து, உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல், ஒருங்கிணைத்தல், நிதியுதவி அளித்தல் உள்ளிட்ட போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று இந்திய அரசு கூறுகிறது. "நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசாங்கத்தின் சாத்தியமான தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன", என்று செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கனேடிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கனடாவின் 40 தூதரக அதிகாரிகளுக்கான சிறப்புரிமையை இந்தியா ரத்து செய்தது. இதனால், கனேடிய தூதரக ஊழியர்களில், மூன்றில் இரண்டு பங்கு பேர் இந்தியாவை விட்டு வெளியேறி சொந்த நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு கனடா அளிக்கும் சலுகை இந்தியாவுக்கு மட்டுமல்ல, கனடாவுக்கும்கூட சரியானது அல்ல என்று இந்தியா கூறியிருந்தது. 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் கூட, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிஜ்ஜார் கொலை பற்றியும் இந்தியாவுடனான உறவுகள் பற்றியும் மீண்டும் குறிப்பிட்டார். இந்தியா அப்போதும் மறுப்பு தெரிவித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj6k5rzyzxzo
-
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்த நீதவான் உத்தரவு
மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது புதன்கிழமை (30) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் இரண்டு சரீர பிணையில் குறித்த வைத்தியர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவின் வழக்கு விசாரணைகள் புதன்கிழமை (30) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் அவர் மன்றில் முன்னிலையாக வில்லை. மேலும் இரண்டு பிணைதாரர் களில் ஒருவர் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்தார். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் வைத்தியர் அர்ச்சுனா மற்றும் பினையாளி ஆகிய இருவரையும் கைது செய்து மன்றில் முன்னிலை யாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/197546
-
சென்னையில் திடீர் மழை பெய்யக் காரணம் என்ன? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காலையில் வெயிலுடன் தொடங்கிய இன்றைய தினத்தில், 10 மணி முதல் சட்டென்று குளிர்ந்த வானிலை நிலவத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. இதையடுத்து, இன்று காலையில் தூரலுடன் தொடங்கிய மழை சற்று நேரத்தில் கனமழையாக வேகமெடுத்தது. அண்ணா நகர், பாடி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்தில் 10செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன. அண்ணா மேம்பாலத்தின் கீழ், கனமழை காரணமாக மழைநீர் சூழ்ந்து, வாகனங்கள் செல்வது சிரமமாகியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுரங்கப் பாதைகளில் மழைநீர் நிரம்பியிருந்தது. கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் கூறியது என்ன? தமிழ்நாடு வானிலை ஆய்வு மையத் தகவலின்படி, மதியம் 12 மணி முதல் 1 மணிவரை அண்ணா நகர் மேற்கில் 9 செ.மீ மழை பெய்துள்ளது. புதிய மணலி டவுன், கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை ஆகிய பகுதிகளில் 6செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஆனால், கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மேலும், நவம்பர் 1-ம் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு, நவம்பர் 2-ம் தேதியன்று, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தீபாவளி தினத்தன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது கனமழை பெய்துள்ளது. இதுகுறித்துப் பேசிய தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், “இன்று பெய்த கனமழை கணிக்க முடியாத ஒன்று” எனக் கூறினார். திடீர் மழைக்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES பிபிசி தமிழிடம் பேசிய பிரதீப் ஜான், கிழக்கு திசையில் இருந்து வந்த மேகங்கள் காரணமாக மழை பெய்து வருவதாகவும், காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாகப் பெய்த இந்தத் திடீர் மழையைக் கணிக்க முடியவில்லை எனவும் கூறினார். “இதை முன்கூட்டியே கணிக்க முடியவில்லை. அதிலும், சென்னை அண்ணா நகர் மேற்குப் பகுதியில் 1 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் 100மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதை எதிர்பார்க்கவில்லை,” என்று கூறினார். மேலும், “கொளத்தூர், அம்பத்தூர், கொரட்டூர், முகப்பேர், பாடி, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் குறுகிய காலத்தில் கனமழை பெய்துள்ளது.” இது எதிர்பாராத ஒன்று என்கிறார் பிரதீப் ஜான். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yxd00xwqxo
-
பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (29) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோப்பாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் விமான நிலையத்திற்கு உரிய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர். விமான நிலையத்தின் விமான ஓடுபாதை விஸ்தரிப்பது தொடர்பாகவும் அனைத்து விதமான சர்வதேச விமானங்களும் வந்து செல்லக் கூடியவகையில் விமான ஓடுபாதை விஸ்தரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது. விமான நிலைய அபிவிருத்தி, விமான நிலைய உட்கட்டுமான அபிவிருத்தி, விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் நலன் சார்ந்த உட்கட்டமைப்பு வசதி வாய்ப்புகள் அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. விமான நிலையத்துக்கு வந்தடைந்த பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்ளாதவாறு விமான நிலையம் மட்டுமன்றி சுற்றியுள்ள பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி செய்தல், வீதி மின் விளக்குகள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய பிரதேச சபைக்கு ஆளுநர் அவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு விமான நிலையத்திற்காக ஒப்படைக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளுக்கான இன்றைய பெறுமதியை காணி உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டமிடல் தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. https://www.virakesari.lk/article/197474
-
இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக தர்ஜினி?!
இலங்கை வலைப்பந்து அணிக்கு பயிற்சியளிப்பதற்கான சவாலை ஏற்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி தெரிவித்துள்ளார். இதற்காக தம்மிடம் ஏற்கனவே உள்ள நிலை 01 சான்றிதழுக்கு அப்பால், விரைவில் நிலை 02 மற்றும் நிலை 03 பயிற்சி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நான்கு வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண மற்றும் ஐந்து ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய தர்ஜினி, 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த கேப் டவுன் உலகக் கிண்ணத்துக்கு பிறகு தேசிய அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் தர்ஜினி தனது இந்திய கணவர் ஆர்.பிரசாத்துடன் பெங்களூரில் நடந்த 13ஆவது ஆசிய நிலை வலப்பந்தாட்டப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் பார்வையாளராக பங்கேற்றார். இந்தநிலையில், இறுதிப் போட்டியில் வெற்றி, இலங்கை அணியிலிருந்து நழுவியது துரதிர்ஸ்டவசமானது, இந்த பின்னடைவுக்கு அணி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை அணிக்கு உள்நாட்டு அளவில் போதுமான அனுபவம் இருந்த போதிலும், வெளிநாட்டுக்களங்களில் வீராங்கனைகளுக்கு உரிய அனுபவம் இல்லை என்றும் தர்ஜினி குறிப்பிட்டுள்ளார். எனினும், அவர்கள் முன்கூட்டியே போதுமான சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால், அந்த அணிக்கு சர்வதேச அனுபவமும் உள்ளது என்று தர்ஜினி கூறியுள்ளார். https://thinakkural.lk/article/311316
-
கீழ்பாக்கம் மனநல காப்பகம் தனியார் வசம் செல்வதாக எழுந்த சர்ச்சை - அரசின் பதில் என்ன?
படக்குறிப்பு, கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் 230 ஆண்டுகள் பழமையான கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை மேம்படுத்த தனி அரசு நிறுவனம் தொடங்குவது தொடர்பாக, அரசு செயலர் சுப்ரியா சாஹூ எழுதியுள்ள கடிதத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அரசு மனநல காப்பகங்களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவே இவ்வாறு செயல்படுவதாக, மருத்துவ சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன. ஆனால், கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை தன்னார்வலர்களுக்கும் தனியாருக்கும் தாரை வார்க்கும் எண்ணம் இல்லை என்கிறார், அமைச்சர் மா.சுப்ரமணியன். சுமார் 230 ஆண்டுகள் பழமையான கீழ்பாக்கம் மனநல மையத்தில் என்ன பிரச்னை? இதற்கென தனியாக அரசு நிறுவனத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளதா? கடிதத்தில் என்ன உள்ளது? தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணிக்கு கடந்த அக்டோபர் 23ஆம் தேதியன்று கடிதம் ஒன்றை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலர் சுப்ரியா சாஹூ எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'மனநல காப்பகத்தின் மேம்பாட்டுக்கு தனியாக அரசு நிறுவனம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான காரணங்களையும் சுப்ரியா சாஹூ பட்டியலிட்டுள்ளார். அதில், "மனநல காப்பகத்தின் நிர்வாகக் கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு, பணியாளர்கள் நிலை, காலிப் பணியிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது 360 டிகிரி கோணத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம் எனத் தெரிய வந்துள்ளது." ஆனால், "அவற்றை முன்னெடுக்கும் திறன் தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புக்கு இல்லை. உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள், கார்ப்பரேட் பங்களிப்புகள் மூலம் நிதியைத் திரட்டும் வாய்ப்புகள் மனநல காப்பகத்திற்கு உள்ளன," எனக் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலர் சுப்ரியா சாஹூ இதை உறுதிசெய்யும் வகையில் நிறுவன சட்டப் பிரிவு 8ன்கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு நிறுவனங்களைப் போன்று பிரத்யேக அரசு நிறுவனம் அமைப்பது அவசியம் எனவும் இதன் வாயிலாக காப்பகத்தின் மேம்பாட்டிற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் சுப்ரியா சாஹூ குறிப்பிட்டுள்ளார். இதற்கான முன்மொழிவை மருத்துவ கல்வி இயக்குநர் அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திட்டத்திற்கு மருத்துவக் கல்வியின் கூடுதல் இயக்குநர் சாந்தாராமன் தொடர்பு அதிகாரியாகச் (Nodel officer) செயல்பட உள்ளதாகவும் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். மருத்துவ சங்கங்கள் எதிர்ப்பு இந்தக் கடிதத்திற்கு மருத்துவ சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. "அரசு சார்பில் பிரத்யேக நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் கூறுகிறார். ஆனால், அப்படியொரு நிறுவனம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மருத்துவக் கல்வியின்கீழ் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலே போதுமானது" என்றார். "வெளியில் இருந்து நன்கொடை பெற உள்ளதாக அரசு செயலர் கூறுகிறார். அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் தனித்தனி கணக்குகள் உள்ளன. நிதி உதவி செய்ய விரும்புகிறவர்கள் அந்த எண்ணுக்குப் பணம் அனுப்பலாம். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் பெரு நிறுவனங்கள் தங்களின் சி.எஸ்.ஆர் நிதியில் உணவு, உடை, கட்டடப் பராமரிப்பு ஆகியவற்றுக்குச் செலவு செய்வது வழக்கம். அந்த நிதியை அரசு முறையாகப் பராமரித்தால் போதும். இதற்கெனத் தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினாலும் இதே வேலைகள்தான் நடக்கும்" என்கிறார். டாஸ்மாக் நிறுவனத்தைப் போல அனைத்து மனநல மருத்துவமனைகளையும் பிரத்யேக நிறுவனத்தின்கீழ் கொண்டு வருவதுதான் அரசின் நோக்கம் எனக் கூறும் ரவீந்திரநாத், இதனால் அரசு மனநல காப்பகத்தின் நோக்கம் பயனற்றதாகிவிடும் என்று எச்சரிக்கிறார். இது தொடக்கப்புள்ளியாக மாறும் என கவலை "கீழ்பாக்கம் மனநல காப்பகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து, போதிய ஊழியர்களையும் மருத்துவர்களையும் நியமிக்கும் வேலைகளைச் செய்யாமல் தனி கம்பெனியாக மாற்றுவதை ஏற்க முடியாது" என்கிறார் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர் காசி. இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மனநலம் சார்ந்த சிகிச்சைக்காக மக்கள் இங்கு வருகின்றனர். பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் நிமான்ஸ் நிறுவனத்திற்கு இணையான சேவையை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அரசு மருத்துவமனையை கம்பெனியாக மாற்றியதாக முன்னுதாரணம் இல்லை," எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, இந்தக் கடிதத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் மருத்துவர் காசி மேலும், சுகாதாரத்துறை செயலரின் கடிதம் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளதாகக் கூறுகிறார் மருத்துவர் காசி. மேலும், "மனநல மருத்துவமனையை கம்பெனியாக மாற்றுவது என்பது பிற்காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் இதேபோன்று மாற்றி அதை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கப்புள்ளியாக இதைக் கருத வேண்டியுள்ளது" என்றார். இந்தக் கடிதத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் மருத்துவர் காசி வலியுறுத்துகிறார். தமிழ்நாடு அரசு கூறுவது என்ன? அரசு செயலரின் கடிதத்திற்கு எதிர்ப்பு வலுக்கவே, "தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிகள் எதுவும் அரசுக்கு இல்லை" என மக்கள் நல்வழ்வுத்துறை செயலர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். திங்கள் (அக்டோபர் 28) அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "மருத்துமனையின் கட்டமைப்பை மேம்படுத்தும் நல்ல எண்ணத்தில் அரசு செயலர் இதை முன்னெடுத்து வருகிறார். ஆனால், தனியார் மற்றும் தன்னார்வலர்களிடம் மனநல காப்பகத்தை ஒப்படைக்கும் எண்ணம் இல்லை" என்றார். அதோடு, கீழ்பாக்கம் மனநல காப்பகத்திற்கு தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் மேற்கொண்டு வரும் திட்டங்களையும் அமைச்சர் மா.சுப்ரமணியன் பட்டியலிட்டார். பட மூலாதாரம்,@SUBRAMANIAN_MA/X படக்குறிப்பு, தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிகள் எதுவும் அரசுக்கு இல்லை என அமைச்சர் தகவல் "தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் 2.30 கோடி ரூபாய் செலவில் இடைநிலை பராமரிப்பு மையம் ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதோடு பரந்துபட்ட மனநல சேவைகளை வழங்குவதற்கு 40 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணியையும் தொடங்கி வைத்துள்ளார்" என்றார். பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் நிமான்ஸ் மருத்துவமனைக்கு இணையாகக் கட்டமைப்புகளை மேம்படுத்த முதலமைச்சர் நிதி ஆதாரம் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் குறிப்பிட்டார். கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "தனியாரிடம் இருந்து சி.எஸ்.ஆர் நிதிப் பங்களிப்பு வந்தால் அதை ஏற்று மருத்துவமனையை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படும்" என்றார். இதுகுறித்து, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹூவிடம் விளக்கம் பெற பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, அவரிடம் இருந்து பதிலைப் பெற முடியவில்லை. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சங்குமணியிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர், கடிதம் தொடர்பாக அடுத்தகட்ட முயற்சிகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மாலையப்பனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை உருவான கதை பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, சுப்ரியா சாஹூவின் கடிதம் ஆசியாவில் மிகப் பழமையான, மிகப் பரந்துபட்ட மருத்துவமனையாக கீழ்பாக்கம் மனநல காப்பகம் அமைந்துள்ளது. கடந்த 1794ஆம் ஆண்டில் மருத்துவர் வாலன்டைன் கனோலி (Valentine Connolly) என்பவர் கிழக்கிந்திய கம்பெனியின் மானியம் (Grant) மூலம் இதைத் தொடங்கினார். தொடக்க காலங்களில் ஆங்கிலேயே அதிகாரிகளும் போர் வீரர்களும் இங்கு சேர்க்கப்பட்டனர். அப்போது மனநல காப்பகத்தை 'mental asylum' (மனநலம் பாதித்தோர் விடுதி) என அழைத்துள்ளனர். பிறகு 1913ஆம் ஆண்டில் மனநோய் மருத்துவமனைகளை நிர்வகிக்கும் வகையில் 'மனநல குறைபாடு சட்டம்' (Mental Deficiency Act 1913) கொண்டு வரப்பட்டது. உள்துறையின்கீழ் வரும் சிறைத்துறையின் கட்டுப்பாட்டிலேயே கீழ்பாக்கம் மனநல காப்பகம் இருந்துள்ளது. பிறகு, 1920ஆம் ஆண்டில் அரசு மனநல மருத்துவமனையாக மாறிய பின்னரே சுகாதாரத்துறையின் வசம் வந்துள்ளது. கடந்த 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை உள்நோயாளிகள் பிரிவு மட்டுமே இயங்கி வந்துள்ளது. அதன்பிறகு புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு தற்போது, வெளிப்புற நோயாளிகள், குழந்தைகள் மற்றும் வயது வந்தோருக்கான மனநல சிகிச்சை, போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையம், தீவிர மனநலம் பாதித்தோர் வார்டுகள், நீண்டகால மனநல சிகிச்சை, மனமகிழ் தெரபி, மனநலம் பாதித்தோர் இல்லம், சிறைவாசிகளுக்கான மனநல மையம் எனப் பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்நோயாளிகளாக சுமார் 750 பேர் உள்ளனர். தினமும் 400 முதல் 500 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்வதாக மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர். இங்கு பேராசிரியர் பணியில் 5 பேரும் உதவிப் பேராசிரியர்களாக 19 பேரும் பணிபுரிகின்றனர். இவர்களைத் தவிர பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 54 பேரும் எம்.ஃபில் கிளினிக்கல் சைக்காலஜி பிரிவில் 20 மாணவர்களும் படித்து வருகின்றனர். இப்போதுள்ள சூழலில், மனநல காப்பகத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அங்கு பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் 43 மனநல மருத்துவமனைகள் உள்ளன. அதில், மாநில அரசுகள் நடத்தும் மனநல மருத்துவமனைகளில் முதல் மூன்று இடங்களுக்குள் கீழ்பாக்கம் மனநல காப்பகம் இடம்பெற்றுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1jr0yk0ll4o
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கமாட்டோம் - ஜனாதிபதி செயலக அதிகாரி
பயங்கரவாத தடைச்சட்டத்தை தேசிய மக்கள் சக்தி ஏன் தொடர்ந்தும் தக்கவைக்க விரும்புகின்றது? அம்பிகா சற்குணநாதன் கேள்வி? பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமார திசநாயக்க மறக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்கவிரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தில் பிரச்சினையில்லை, மாறாக அது தவறாக பயன்படுத்தப்படுவதே பிரச்சினை என தேசிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது - பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கான காரணமாக தேசிய மக்கள் சக்தி இதனை தெரிவிக்கின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் பத்திரிகையாளர்கள் சிவில் சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதே பிரச்சினைக்குரிய விடயம் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் அது இடம்பெற அனுமதிக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமார திசநாயக்க நீங்கள் மறக்க முடியாது. இலங்கை இந்த சர்வதேச சட்டங்கள் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் காரணமாக அதனை கடைப்பிடிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் சிறைச்சாலை ஆய்வு உட்பட பல ஆய்வுகளில் கிடைத்த ஆதாரங்கள் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இவர்கள் பத்திரிகையாளர்களே அல்லது சிவில் சமூகத்தினரோ இல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே இது பழிவாங்குவது குறித்தது இல்லை மாறாக ஆனால் ஆழமாக வேரூன்றிய இனமதரீதியான பாகுபாடுகளை அடிப்படையாக கொண்டது. பயங்கரவாததடைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்போம் என அரசாங்கம் தெரிவிக்கின்ற அதேவேளை பொலிஸார் உரிய நடைமுறைகளை புறக்கணித்தே அதிகளவில் செயற்படுகின்றனர் என்பது வெளிப்படையாக தெரியும் விடயம். பயங்கரவாத தடைச்சட்டம் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்கள் துஸ்பிரயோகங்களையும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலையும் அதிகரிக்கின்றன தீவிரப்படுத்துகின்றன. மனித உரிமை மீறல்களை அதிகரிக்க கூடிய ஏனையபல ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்றன. அடிப்படை உரிய செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால் சட்டமே ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது, மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்கவிரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா? https://www.virakesari.lk/article/197478
-
கடவுச்சீட்டில் சிங்களம், தமிழ் மொழிகள் பின்னிலைக்கு சென்றமைக்கு நாம் பொறுப்பல்ல
புதிய கடவுச்சீட்டில் அரச கரும மொழிகளான சிங்களம், தமிழ் மொழிகள் முன்னிலையில் இருந்து பின்னிலைக்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பிலான முடிவு சமகால அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அது கடந்த அரசாங்கத்தின் முடிவு என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில், கடவுச்சீட்டு நெருக்கடி நிலைமை தொடர்பிலும், புதிதாக விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டில் பழைய கடவுச்சீட்டில் முதல் இரண்டு இடங்களில் இருந்த சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கடவுச்சீட்டு பிரச்சினை நாம் வந்து ஏற்படுத்தியது அல்ல. கடந்த அரசாங்கம் முறையாக கடவுச்சீட்டுகளை கொண்டுவர நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது. இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த புதிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அவற்றை உரிய காலத்தில் அனுப்ப தவறியுள்ளனர். இந்த நேரத்தில் பழைய கடவுச்சீட்டும் போதுமான அளவு கையிருப்பில் இருக்கவில்லை. நாம் வரும் போது இதுவே நிலைமையாக இருந்தது. இன்னுமொரு நிறுவனம் குறித்த டென்டருக்கு எதிராக நீதிமன்றத்திற்கும் போயிருந்தது. இந்நிலையில் முன்னாள் அரசாங்கம் சென்ற பாதையில் சென்றிருந்தால் ஒரு கடவுச்சீட்டும் இருந்திருக்காது. நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய முன்னர் கடவுச்சீட்டை பெற்ற நிறுவனத்திடம் இருந்து அவற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல மாதங்களா கடவுச்சீட்டு இல்லாமல் இருந்தமையினால் இப்போது கேள்விகள் அதிகரித்துள்ளதால் அதிகமானவர்கள் கடவுச்சீட்டு பெற செல்கின்றனர். இதனால் மக்களிடம் அத்தியாவசிய தேவையாக இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டு அலுவலகம் செல்லுமாறு கோருகின்றோம். இதேவேளை, புதிய கடவுச்சீட்டுகளை வடிவமைத்தது நாம் அல்ல. அதனை நாங்கள் மாற்றம் செய்ய போகவில்லை. அதற்குள் புகைப்படங்கள் பல உள்ளன. அவை ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தமையாகும். அனைத்தையும் மாற்றினால் நெருக்கடிகளே ஏற்படும். இப்போதுள்ள தொகை 6 மாதங்களுக்கு போதுமானது. அடுத்தக் கட்டமாக புதிய கடவுச்சீட்டுகளை கொண்டுவர புதிய நிறுவனத்திற்கு விலைமனு கோரல் வழங்கப்பட வேண்டும்.” என்றார். https://thinakkural.lk/article/311318
-
டிக்டொக் ஸ்தாபகர் சீன கோடீஸ்வரரானார்
உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்து வரும் டிக்டொக்கின் தாய் நிறுவனமான பைடன்ஸின் இணை ஸ்தாபகர் ஜாங் யிமிங் சீனாவில் கோடீஸ்வரரானார். ஜாங் யிமிங் 49.3 பில்லியன் சொத்து மதிப்புடன் ஹுருன் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சொத்து மதிப்பு 43 சதவீதம் அதிகமாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு 41 வயதான ஜாங் யிமிங் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து விலகினார். ஆனால் நிறுவனத்தின் சுமார் 20 சதவீத சொத்துக்கு உரிமையாளராக இருந்தார். சீன அரசுடனான உறவு குறித்து சில நாடுகள் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாலும் உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடகளில் ஒன்றாக டிக்டொக் மாற்றமடைந்துள்ளது. இரு நிறுவனங்களும் தாங்கள் சீன அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக இயங்குவதாக வலியுறுத்தினாலும், பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டோக்கை விற்பனை செய்யாவிட்டால் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் அதை தடை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டாலும் கடந்த ஆண்டு உலகளாவிய ரீதியில் இலாபத்தை 60 சவீதமாக பைடான்ஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது. இதனால் ஜாங் யிமிங்கின் தனிப்பட்ட சொத்து அதிகரித்துள்ளது. "சாங் யிமிங் கடந்த 26 ஆண்டுகளில் சீனாவில் நாங்கள் பெற்ற 18 ஆவது புதிய கோடீஸ்வரர் “என ஹுருன் ரூபர்ட் ஹூக்வெர்ஃப் தெரிவித்துள்ளார். சீனாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் பில் கேட்ஸ், வாரன் பஃபெட், ஜெஃப் பெசோஸ் மற்றும் எலோன் மஸ்க் ஆகிய 4 பேர் மட்டுமே கோடீஸ்வரர்களாக உள்ளனர். இது சீனப் பொருளாதாரத்தின் வேகத்தை குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/197465
-
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
இந்த ஆட்சியை இலகுவில் கவிழ்த்துவிடவே முடியாது; அநுர சூளுரை “அறுகம்பே சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். களுத்துறையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். “ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் டொலரின் பெறுமதி 400 ரூபா வரை செல்லும் என பிரச்சாரம் செய்தனர். இன்று அவ்வாறு நடந்துள்ளதா? இல்லை. எமது பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதித்துடன் பேச்சு நடத்தி வருகின்றனர். சாதகமான பிரதிபலன் கிட்டியுள்ளது. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எமது ஆட்சியில் அஸ்வெசும இல்லாமல் செய்யப்படும் என்றனர். அதுவும் நடக்கவில்லை. அன்று கூறிய அனைத்தும் பொய்யென உறுதியாகியுள்ளது. எனவே, பொய்களை நம்பி எவரேனும் ஏமாந்திருந்தால் அவர்களும் இன்று உண்மையை உணர்ந்திருப்பார்கள். எனவே, எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மக்கள் வழங்குவார்கள். இதனால் சிலர் குழம்பிப் போயுள்ளனர். ஏதேனும் சிறு சம்பவம் நடந்தால்கூட ஆட்சி கவிழுமா என எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். அறுகம்பே சம்பவம் தொடர்பில் அனைவரும் ஊடக சந்திப்புகளை நடத்துகின்றனர். அதன் மூலமாகவேனும் ஆட்சி கவிழுமா என்ற சந்தோசத்தில் அவர்கள் உள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்னரே எமக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுற்றுலாத்துறையும் பாதிக்காத வகையில் திட்டமிட்ட அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் அதேவேளை திட்டமிட்டவர்களையும் கைது செய்வதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311314
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவின் மத்திய பகுதியில் உள்ளநகரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் - 90க்கும் அதிகமானவர்கள் பலி என அச்சம் காசாவின் மத்திய பகுதியில் உள்ள பெய்ட் லகியா நகரில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல்போயுள்ளனர் என ஹமாசின் மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. ஐந்து மாடிக்கட்டிடமொன்றே தாக்கப்பட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். தரையில் துணியால் போர்த்தப்பட்ட உடல்களின் படங்கள் சமூக ஊடக ங்களில் வெளியாகியுள்ளன. தனது மருத்துவமனையில் சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஜபாலியாவில் உள்ள கமால் அட்வான் மருத்துவமனையின் இயக்குநர் குசாம் அபு சைபா தெரிவித்துள்ளார். போதிய மருந்துகள் இன்மையால் தனது மருத்துவமனை சிகிச்சை அளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197452
-
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக வங்கிக் கட்டமைப்பு மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்ட இரு தரப்பையும் பாதுகாப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படும் - ஜனாதிபதி
நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்ப்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எவ்வித தயக்கமும் இன்றி எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். இலங்கை வங்கிச் சங்கத்தின் பிரதிநிதிகளை செவ்வாய்க்கிழமை (29) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் வங்கிகளின் வகிபாகம் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், ஒன்றரை வருடங்களில் அந்த பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் வங்கிக் கட்டமைப்பு நிலைமையை தாங்கிக்கொண்டு தொழில் முனைவோரையும் பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, தொழில் முனைவோர் அந்த தாங்கிக்கொள்ளலை தவறாகப் பயன்படுத்துவது சிக்கலான விடயம் என்றும் சுட்டிக்காட்டினார். அதேபோல் வங்கிகளும் தொழில் முனைவோரை பாதுகாக்கும் வகையில் முழுமையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அதேபோல் தற்போது முறையற்று கிடக்கும் இலங்கை பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தும் போது, முறையற்ற பொருளாதாரத்திற்குள் தங்கியிருக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். இலங்கையில் தற்போது காணப்படும் நெருக்கடி, வேலைத்திட்டங்களுக்கான செலவிடப்படும் காலப்பகுதி, மோசடி உள்ளிட்ட காரணங்களால் முதலீடுகளை நடத்திச் செல்வதில் காணப்படும் தடைகள் குறித்தும் தீர்க்கமாக ஆராயப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் இலகுவான மற்றும் மோசடியற்ற, செயற்திறன் மிகுந்த பொறிமுறைக்குள் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இலங்கை வங்கிச் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமால் தேவரதந்திரி, கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் /தலைமை நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க, நேஷ்ன் டிரஸ்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்த குணதிலக்க, சம்பத் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அயோத்யா இத்தவல, ஹட்டன் நெஷனல் வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி தமித் பல்லேவத்த, செலான் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர, NDB வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெழும் எதிரிசிங்க, Deutsche வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரஞ்சன் பிகுராடோ, இந்திரஜித் போயகொட (SLBA ) உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/197453
-
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கும் தாக்குதல் நடத்த போவதாக எச்சரிக்கை; நீதிமன்ற வளாகம் தீவிர பாதுகாப்பு கண்காணிப்பில்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/311299
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
அஞ்சல் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை தவிர்ந்து, அடுத்த மாதம் 4 ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. முப்படை முகாம்களிலும், அனைத்து அரச நிறுவனங்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் 4 ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக அடுத்த மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/311292