Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. யூத பிரார்த்தனை மையங்களுக்கு வெளியே குவிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு படையினர் அருகம் குடாவில் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள யூத பிரார்த்தனை மையங்களுக்கு வெளியே விஷேட அதிரடிப்படையினர் ,விமானப்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/311220
  2. பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சஹீர் அஹமட்டின் அழைப்பின் பேரில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, பிராந்தியத்தில் இராணுவப் பயிற்சியை அவதானிப்பதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தலைமையகத்தில் இரு நாட்டு விமானப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இங்கு முதன்மையாக பிராந்திய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இரு நாடுகளின் விமானப்படைகளின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/197277
  3. ஆட்சியாளர்கள் குறித்து தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்கிறார் கஜேந்திரன் ஜே.வி.பி. தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் அந்தக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், பிரசாரங்களை முன்னெடுத்து தமது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். 75 வருடங்களாக ஆட்சிப் பீடத்தில் இருந்த ஐ.தே.க, ஶ்ரீலங்கா.சு.க, மொட்டுக் கட்சியினர் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நாட்டை சின்னாபின்னமாக்கி வங்குறோத்து நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள். இந்த நிலையிலே சிங்கள மக்களுக்கு நேர்மையாக செயற்பட்ட ஜே.வி.பி. யினர் பல வருடங்களுக்குப் பின் இந்நாட்டின் ஜனாதிபதியாக வந்திருக்கலாம். இவர்கள் அரச புலனாய்வுக்காரர்களுக்கு எவ்வளவு விசுவாசமாக செயற்பட்டிருப்பார்கள் என்பதையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கிலே பார்பொர்மிட் வழங்கி பெரும் இலஞ்சம் வழங்கப்பட்டதாகவும் அதனை வெளியிடப் போவதாகவும் கூறியவர்கள் அதனைப் பின்னர் ஒழித்துவிட்டார்கள். காரணம் தமக்கு நாடாளுமன்றலே பெரும்பான்மை கிடைக்காத பட்சத்திலே இந்த ஊழல் வாதிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டுமென்பதற்காக அந்த பார் லைசன்ஸ் விவகாரம் ஒழிக்கப்பட்டிருக்கிறது. அதை விட அநுரவுக்கு வாக்களிக்கக் கூடாது சங்குக்கு வாக்களிக்க வேண்டும் என்றவர்கள் தேர்தல் முடிந்து ஒரு வார காலத்துக்குள்ளே ஓடோடிச் சென்று அநுரவின் காலில் விழுந்திருக்கிறார்கள். சங்குக்கு வாக்களித்த மக்களின் கோரிக்கையை முன்வைக்கவில்லை மாறாக தமது ஊழல்களையும் பெற்றுக் கொண்ட சலுகைகளையும் வெளிப்படுத்த வேண்டாம் என்றும் தாம் நாடாளுமன்றிலே உங்களது ஆட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கியதால் தான் அது மூடி மறைக்கப்பட்டிருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/311218
  4. இஸ்ரேலுக்கு பதிலடி தருவது பற்றி முடிவெடுக்க முடியாமல் திணறும் இரான் - என்ன காரணம்? பட மூலாதாரம்,EPA எழுதியவர்,ஜெரேமி போவென் பதவி,சர்வதேச ஆசிரியர் மத்திய கிழக்கில் இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அங்கு நிலவும் போர்ப் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இரானின் தலைமைத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியும் அவரின் முதன்மை ஆலோசகர்களும் எடுத்த முக்கியமான முடிவுகளில் போர் மேலும் விரிவடைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் என்பது முக்கியமாக அமைந்தது. கடினமான முடிவுகளில் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர். இது, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்பதற்கு நேரெதிராக உள்ளது. இரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இரான் பதில் தாக்குதல் நடத்தாத பட்சத்தில் அது பலவீனமாக இருப்பது போல் தோன்றக் கூடும். அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேலின் ராணுவ பலம் மற்றும் அரசியல் உறுதிப்பாட்டால் மிரட்டப்பட்டு ஒடுக்கப்பட்டதாக தோற்றமளிக்கும். இஸ்ரேலுக்கு குறைவான அளவுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய முடிவை எடுக்க இரான் தலைவர்களும் அவர்களின் ஆலோசகர்களும் முடிவெடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்று மிரட்டல்கள்? இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்னும் பின்னும், இரானின் அதிகாரப்பூர்வ ஊடகம் வாயிலாக, இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டதாக கூறியது. இஸ்ரேலைப் போன்றே, பாதுகாப்பிற்காக திருப்பித் தாக்கும் உரிமை இருப்பதாக இரான் அறிவித்தது. ஆனால் அதன் பின்விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியிருக்கலாம். இஸ்ரேல் தன்னுடைய பாதுகாப்பிற்காக தாக்கலாம் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட பிரிட்டனின் பிரதமர் ஸ்டாமரும் இந்த நிலைப்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார். இரானின் தாக்குதலுக்கு எதிராக, தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்பதில் தெளிவாக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் "அந்த பிராந்தியத்தில் போர் சூழல் பெரிதாகக் கூடாது. அனைத்து தரப்பினரும் தாக்குதலை நிறுத்த வேண்டும். இந்த தாக்குதலுக்கு இரான் பதிலடி தரக்கூடாது" என்று ஸ்டாமர் கூறினார். அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று இஸ்ரேல் மீது இரான் தாக்குல் நடத்திய பிறகு தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி துருக்கியின் என்.டி.வி. நெட்வொர்க்கில் பேசும் போது, "இரான் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் சிவப்புக் கோட்டை மீறும் செயலாகும். அதற்கு பதில் கிடைக்காமல் போகாது," என்று கூறினார். இஸ்ரேல் தாக்குதலுக்கு சில மணி நேரத்திற்கு முன்பு, இரானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய், "இரான் மீது இஸ்ரேல் நடத்தும் எத்தகைய தாக்குதலுக்கும் முழு அளவிலான எதிர் தாக்குதல் இருக்கும்," என்று அவர் கூறினார். இஸ்ரேலின் சிறிதளவிலான தாக்குதலுக்கு இரான் பதில் தாக்குதல் நடத்தாது என்று இது தவறாக பொருள்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கினார் அவர். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேலின் அயர்ன் டோம் வான் பாதுகாப்புக் கவச அமைப்பானது இரானின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தது இரானை தடுமாறச் செய்த இஸ்ரேலின் பதில் தாக்குதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி அன்று 70 வெளிநாட்டினர் உட்பட 1,200 பேரைக் கொன்ற ஹமாஸ் தாக்குதலை இரான் ஆதரித்து வருகிறது என்று இஸ்ரேல் நம்புகிறது. இஸ்ரேல் ஒரு தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று அஞ்சிய இரான், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு முழுமையான போரை நடத்த விரும்பவில்லை என்று தொடர்ச்சியாக கூறி வந்தது. அதற்காக, இஸ்ரேலுக்கும் அதன் கூட்டாளிகளுக்கு தனது ஆதரவு ஆயுதக் குழுக்கள் வாயிலாக தொடர்ச்சியாகவும், சில நேரங்களில் கொடூர தாக்குதல்கள் மூலமாக அழுத்தம் தருவதை நிறுத்துவதற்கு இரான் தயாரானது என்று அர்த்தமாகிவிடாது. நேரடியான தாக்குதலுக்கு பதிலாக எதிர்ப்பின் அச்சு என்று வரையறுக்கப்படும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மூலமாக இஸ்ரேல் மீது இரான் தாக்குதலை நடத்தியது. ஏமனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹௌத்தி அமைப்பு, செங்கடலில் கடல் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி அதனை சீர்குலைத்தது. லெபனானில் இருந்து ஹெஸ்பொலா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது. இதனால் 60 ஆயிரம் இஸ்ரேலியர்கள் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இஸ்ரேலின் பதில் தாக்குதல் இரண்டு மடங்கு லெபனான் மக்களை வீட்டில் இருந்து வெளியேற்றியது. ஆனால் அதனையும் தாண்டி செயல்படும் முனைப்பில் இருந்தது இஸ்ரேல். இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு எல்லைப் பகுதியை விட்டு ஹெஸ்பொலா பின்வாங்காவிட்டால் உரிய பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்தது. அவ்வாறு நடக்காத போது, இரான் திட்டப்படி தன் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி தர எல்லையை கடக்க இஸ்ரேல் தீர்மானித்தது. இஸ்ரேல் நடத்திய பலமான எதிர் தாக்குதல் இரானின் இஸ்லாமிய அரசை நிலைகுலைய வைத்து, அதன் வியூகங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கியது. இதனால் தான் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலுக்கு பிறகு இரானிய தலைவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இரான் முழு போரில் ஈடுபட விரும்பவில்லை என்று காட்டிய தயக்கத்தை இஸ்ரேல் பலவீனமாக புரிந்து கொண்டது. இரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மீது அழுத்தத்தை அதிகரித்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தளபதிகள் துணிச்சலாக செயல்பட முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமானப்படை தளத்தில் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது பைடனின் திட்டம் பயனளிப்பது தெரிகிறது இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு கூடுதலாக ஜோ பைடனின் தெளிவான ஆதரவு இஸ்ரேலுக்கு உண்டு. தேவையான ஆயுதங்களை வழங்வதன் மூலம் மட்டும் ஒரு பாதுகாப்பான வளையத்தை இஸ்ரேலுக்காக அமெரிக்கா உருவாக்கவில்லை. இஸ்ரேலை பாதுகாக்க உறுதியேற்ற அமெரிக்கா, தேவையான அளவுக்கு அமெரிக்க துருப்புகள் விமானப்படை மற்றும் போர்க்கப்பல்கள் மூலமாக மத்திய கிழக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி அன்று சிரிய தலைநகரான டமாஸ்கஸில் செயல்பட்டு வந்த இரான் தூதரக கட்டடத்தின் ஒரு பகுதியை வான்வழி தாக்குதல் மூலம் அழித்தது இஸ்ரேல். இரானிய பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜஹேதி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர படையினரின் மூத்த அதிகாரிகளும் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். தங்கள் படையினர் எச்சரிக்கையுடன் இருக்க தேவையான நேரத்தை வழங்கவில்லை என்றும் இது குறித்து அறிவிக்கவில்லை என்றும் அமெரிக்கர்கள் கோபம் அடைந்தனர். ஆனாலும், ஜோ பைடன் தன்னுடைய ஆதரவை விலக்காமல் தொடர்ந்தார். ஏப்ரல் 13-ஆம் தேதி இரான் ஆளில்லா விமானங்கள், குரூயிஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்டன் ராணுவத்தினரின் உதவியுடன் அவற்றை சுட்டுவீழ்த்தியது இஸ்ரேல். தற்போது விரிவடைந்து வரும் மத்திய கிழக்குப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜோ பைடன் கூறியிருக்கிறார். இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் மூலம் பைடனின் திட்டம் பயனளிப்பது போல் தெரிகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 1200 நபர்கள் கொல்லப்பட்டனர் கோடை காலம் முதல் இஸ்ரேல் தொடர்ச்சியாக இரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது தாக்குதலை நடத்தி போரை விரிவாக்கி வந்தது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொலா மீது அது நடத்திய தாக்குதல் மிகப்பெரிய தாக்குதலாக அமைந்தது. தன்னுடைய பாதுகாப்பு கவசமாக செயல்படுவதற்காக ஹெஸ்பொலாவுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி பல ஆண்டுகளாக இரான் அதனை கட்டமைத்து வந்தது. இரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற இஸ்ரேலின் எண்ணமானது, இஸ்ரேல் எல்லையோரம் லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொலா பதில் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தால் சிதறடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த துவங்கியது இஸ்ரேல். ஹெஸ்பொலா பயன்படுத்தி வந்த பேஜர்கள் வெடிக்க வைக்கப்பட்டன. லெபனானில் ஊடுருவிய இஸ்ரேல், அந்த நாட்டை பல ஆண்டுகளாக எதிர்த்து வந்த ஹெஸ்பொலாவின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது. இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் 2500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பெய்ரூட்டில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றன. நிதி நெருக்கடியை சந்தித்து வரும் அந்த நாட்டில் இந்த தாக்குதல் 12 லட்சம் நபர்களின் இடம் பெயர்வுக்கு காரணமானது. ஹெஸ்பொலா தற்போதும் லெபானானில் இருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது அதிக எண்ணிக்கையில் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை நடத்துகிறது. ஆனாலும், தலைவர் கொல்லப்பட்டது மற்றும் ஆயுதங்கள் தீர்வதால் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் உணர்ந்துள்ளது ஹெஸ்பொலா. அதன் அனைத்து வியூகங்களும் நொறுங்கத் துவங்கிய போது தான் இரான் பதில் தாக்குதலை நடத்தியது. பதிலடி தராமல் தன்னுடைய ஆதரவு ஆயுதக் குழுக்கள் போரிட்டு உயிரிழக்க அனுமதிப்பது இஸ்ரேலுக்கு எதிரான, மேற்கத்திய படைகளுக்கு எதிரான கூட்டமைப்புக்கு தலைமையேற்று செயல்படும் தனது பொறுப்பை இரான் தட்டிக் கழிப்பதாக அமைந்துவிடும். அதனால்தான், அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று இஸ்ரேல் மீது மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியது இரான். அக்டோபர் 25, வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேல் அதற்கு பதில் தாக்குதல் நடத்தியது. பலரும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இந்த பதிலடியைத் தர இஸ்ரேல் அதிக காலம் எடுத்துக் கொண்டது. அவர்களின் ரகசிய திட்டங்கள் வெளியானதும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது. வடக்கு காஸாவில் இஸ்ரேல் பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. காஸா போரின் இருண்ட தருணம் இது என்று ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார். வடக்கு காஸாவில் இருந்து சர்வதேச கவனத்தை திசை திருப்பவே இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதா என்று வெளிநபராக என்னால் உறுதியாக தெரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் இதுவும் ஒரு பகுதியாக இருக்கலாம். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 1ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டு அக்டோபர் 25ம் தேதி அன்று பதில் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் போர் விரிவாக்கத்தை குறைக்கும் நடவடிக்கை பதில் தாக்குதல் நடத்தாவிட்டதால் நாம் பலவீனமாக இருப்பதாக தோன்றக் கூடும் என்று நினைத்து நாடுகள் பதில் தாக்குதல்களில் ஈடுபடுவதை நிறுத்துவது கடினம். அதுதான் நிலைமை கைமீறிப் போய் பெரும் போர்களில் கொண்டு போய் விடுகிறது. இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு பதிலடி தர இரான் தயார் நிலையில் இருக்கிறதா என்பதுதான் தற்போது கேள்வியாக எழுகிறது. அக்டோபர் 1-ம் தேதி இரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்ற இஸ்ரேலின் முடிவுக்கு அமெரிக்காவின் பைடன் அரசு ஆதரவு வழங்கியது. ஆனால் மோசமாக போர் விரிவடைவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இஸ்ரேல் இரானின் முக்கிய சொத்துகளான அணுமின் நிலையங்கள், எண்ணெய் கிடங்குகளில் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பொதுவெளியில் பைடன் கேட்டுக் கொண்டார். தாட் வான் பாதுகாப்புக் கவசத்தை பயன்படுத்தி தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று இஸ்ரேலுக்கு ஆலோசனை வழங்கினார் பைடன். அதனை ஒப்புக் கொண்டார் நெதன்யாகு. அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அன்று நடக்கும் தேர்தல் மத்திய கிழக்கில் அடுத்து என்ன நடக்கலாம் என்பதை தீர்மானிக்கும் காரணியாக அமைந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் இரானுக்குப் பதிலடியாக அதன் எண்ணெய், எரிவாயு மற்றும் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக குறைவான அக்கறையையே அவர் செலுத்துவார். இரானின் முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தாததால், பதில் தாக்குதல் நடத்துவதை டெஹ்ரான் தள்ளிப்போடலாம். இது இரு நாட்டு ராஜ்ஜிய அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு தங்களை தயார் செய்ய கால அவகாசம் கிடைக்கும். கடந்த மாதம் ஐ.நா. பொது சபையில் பேசிய போது இரானியர்கள் அணு ஒப்பந்தம் தொடர்பாக புதிய பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக கூறினர். இவை மத்திய கிழக்கிற்கு வெளியிலும் முக்கியமான நகர்வுகள். அணுகுண்டு தங்களுக்கு வேண்டும் என்ற கருத்தை இரான் இதுநாள் வரை மறுத்தே வந்துள்ளது. ஆனால் அணு ஆயுதம் தொடர்பான அதன் நிபுணத்துவமும், யுரேனிய வளமும் அணு ஆயுதங்களை பெறுவதற்கு அருகில் அதனை கொண்டு வந்துள்ளது. தங்களின் எதிராளிகளை அச்சுறுத்த இரானின் தலைவர்கள் புதிய வழிகளை தேடி வருகின்றனர். பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்துவதற்கான அணு ஆயுதங்களை உருவாக்குவது அதன் திட்டங்களில் ஒன்றாக இருக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy5ll07966do
  5. தமிழ் தலைவர்கள் அநுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியிலே போட்டியிட்டு வெல்பவர்களே அமைச்சர்களாக முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டமானது தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிதம்பரநாதன் தலைமையில் நேற்று சனிக்கிழமை (26) இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில் , அனுரகுமார திஸாநாயக்க ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர். ரணிலோ, சஜித்தோ, நாமலோ கிராமத்தில் படித்து வளர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வரிசையில் நின்று அரச வைத்தியசாலையில் மருந்து எடுத்திருப்பார்களா? இல்லை. ஏதாவது ஒரு விடயத்திற்கு வரிசையில் இருந்திருப்பார்களா? அவர்களுக்கு சாதாரண மக்களுடைய பிரச்சினை தெரியாது. ஆகவே எமது வர்க்கத்தை சேர்ந்தவர் தற்போது ஜனாதிபதியாகி இருக்கின்றார். இதிலிருக்கும் கணிசமானவர்கள் யுத்தத்தில் பாதிப்படைந்தவர்களாக இருக்கலாம். பெரும்பாலனவர்களது வீடுகள் சேதமடைந்திருக்கலாம். அதேபோல் அனுர குமார திஸாநாயக்கவின் வீடு 1979 ஆம் ஆண்டு இராணுவத்தால் தாக்கப்பட்டிருந்தது. யுத்தத்தினால் உற்றார், உறவினர்கள் உயிரிழப்புக்களை சந்தித்திருக்கலாம் அதேபோல் அனுர அவர்களது ஒரேயொரு அண்ணா டயர் கொளுத்தி கொலை செய்யப்பட்டார். யுத்தம் மிகவும் வித்தியாசமான யுத்தம். யுத்தத்தின் போது சாதாரண சிங்கள, தமிழ் மக்கள், இளைஞர்கள் தான் கொல்லப்பட்டார்கள். சிறப்பம்சம் என்னவென்றால் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புரிந்த ஒருவரே ஜனாதிபதி ஆகியிருக்கின்றார். தேசிய மக்கள் சக்தி வடமாகாணத்தில் மக்கள் மத்தியில் பதிந்து கொண்டு வருகின்றபடியால் பல கட்சிகள் அவதூறுகளை பரப்பிகொண்டு வருகின்றார்கள். சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, சிறீதரன் போன்றவர்கள் அனுர அவர்களை சந்தித்து கொண்டு வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு வங்குரோத்து அடைந்திருக்கிறார்கள் என்பதனை உணரமுடியும். அனுரவோடு படம் எடுத்த 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பார்கள். அமைச்சரவை கொடுப்பதாயின் படம் எடுத்த அனைவருக்குமே கொடுக்க வேண்டும். டீல் அரசியலில் நாம் ஈடுபட மாட்டோம். அடுத்த அரசாங்கத்தில் அடுத்த அமைச்சர்களாக பதவியேற்பதும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெறும் நேர்மையான ஊழலற்ற நபர்களே என்பதை உறுதியாக கூறுகின்றோம். எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி பிரதமர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கூட்டம் ஒன்றிற்கு வருகின்றார். அதேபோல் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வருகின்றார். அக் கூட்டங்களிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். அடுத்த 14 ஆம் திகதி தேர்தலுக்கு பின்னர் மிக வேகமாக நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துடன் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிப்போம் என மேலும் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் பிமல் ரத்னாயக்கா, வன்னி தேர்தல் தொகுதியில் முதன்மை வேட்பாளர் யோகராசா சிவரூபன், யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் மருங்கன் மோகன், கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/197261
  6. 'கூத்தாடி, கடவுள் மறுப்பு, குடும்ப அரசியல், பிளவுவாத அரசியல்' - விஜய் பேசியது என்ன? முழு விவரம் பட மூலாதாரம்,TVK 27 அக்டோபர் 2024 தமிழ்நாடு அரசியல் அரங்கில் புதுவரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு சுமார் 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அதன் கொள்கைகள் என்ன? அரசியல் எந்த பாதையில் பயணிக்கப் போகிறது? என்று நிலவிய எதிர்பார்ப்புகளுக்கு பதில் தரும் நிகழ்வாக இந்த மாநாடு அமைந்திருந்தது. ஓர் அரசியல் தலைவராக தவெக கட்சி மாநாட்டில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தனது தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜயின் முதல் பேச்சு எப்படி இருந்தது? அவர் என்னென்ன விஷயங்கள் பற்றி பேசினார்? ‘அரசியல் ஒரு பாம்பு, ஆனால்…’ தவெக மாநாட்டில் பேச்சைத் துவங்கிய விஜய், ஒரு குழந்தை தனது தாயைப் பார்த்து சிரிப்பதுபோல, தன்முன் ஒரு பாம்பு வந்தால் அதனையும் பயமின்றிப் பிடித்து விளையாடும், என்றார். "அதேபோல, அரசியல் ஒரு பாம்பு. பயமறியா ஒரு குழந்தையைப் போல அதைக் கையில் பிடித்து விளையாடுகிறேன்,” என்றார் அவர். மேலும், “அரசியலில் நான் ஒரு குழந்தை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அரசியல் பாம்பைக் கண்டு இந்தக் குழந்தைக்கு பயமில்லை,” என்றார். “அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது, இது ஒரு போர்க்களம். சீரியஸாக, ஆனால் சிரிப்போடு எண்ணங்களைச் செயல்படுத்துவதுதான் என் வழி. அரசியலில் கவனமாகக் களமாடவேண்டும். ஏனெனில், சினிமா பாடல் வெளியீட்டு நிகழ்வில் பேசியதிலிருந்து இது வித்தியாசமான மேடை,” என்றார். ‘அரசியல் மாற வேண்டும்’ பேச்சைத் துவங்கி இவற்றைச் சொன்னபிறகு, தான் உணர்ச்சிவசமாக பேசப்படும் வழக்கமான மேடைபேச்சின் பாரம்பரியத்திலிருந்து விலகி வந்துவிட்டதாகக் கூறினார் விஜய். தனது கட்சி நிர்வாகிகளின் பெயரைச் சொல்லி, ‘அவர்களே… அவர்களே…’ என்று அவர்களை அழைத்தவர், “வழக்கமான அரசியல் பேச்சுகளைப் போல அப்படி ஏன் பேசவேண்டும்? நாம் அனைவரும் ஒன்றுதான்,” என்றார். “அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாறவேண்டுமா? அரசியலும் மாற வேண்டும். மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை. இப்போது என்ன பிரச்னை, அதற்கு என்ன தீர்வு என்பதைச் சொன்னாலே மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்,” என்றார் விஜய். “இன்று இருக்கும் தலைமுறையைப் புரிந்துகொண்டால்தான் அரசியலைச் சுலபமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி நேரம் விரயம் செய்யப் போவதில்லை, ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை." என்றார். பட மூலாதாரம்,TVK ‘பெரியாரைப் பின்பற்றுவோம், ஆனால்…’ கட்சியின் கொள்கை வழிகாட்டிகள் பற்றி விஜய் பேசினார். ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார், என்ற அவர், “ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையைப் பின்பற்றுவோம்,” என்றார். “அதாவது, ஒவ்வொரு தனிமனிதரின் கடவுள் வழிபாடு என்பது அவரவர் விருப்பம். அதில் கட்சி எந்த வகையிலும் தலையிடாது. அதேநேரத்தில், பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும்," என்றார் நடிகர் விஜய். ‘பெண்களை வழிகாட்டியாகக் கொண்ட முதல் கட்சி’ அதேபோல், காமராஜரின் மதச்சார்பின்மை, நேர்மையான நிர்வாகச் செயல்பாடு, அம்பேத்கரின் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவ கோட்பாட்டை நிலைநிறுத்துவதும், சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதுமே நமது நோக்கம், என்றார் அவர். “வீரமங்கை வேலுநாச்சியாரும், த.வெ.க-வின் கொள்கை வழிகாட்டியாக திகழ்வார். பெண்களைக் கொள்கைத் தலைவராக ஏற்று வந்த முதல் கட்சி த.வெ.க தான். முன்னேறத் துடிக்கும் சமூகத்தில் பிறந்து முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அஞ்சலை அம்மாள் நமக்கு வழிகாட்டியாக இருப்பார். சொத்தை இழந்தாலும், சுயநலமின்றி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அஞ்சலை அம்மாள்," என்று விஜய் கூறினார். பட மூலாதாரம்,TVK 'நமக்கு ஏன் அரசியல்?’ மேலும் பேசிய விஜய், செயல்தான் முக்கியம் என்றும், சமரசம், சண்டை நிறுத்தத்திற்கு இடமில்லை, ஆனால் வெறுப்பு அரசியலுக்கும் இடமில்லை, என்றும் கூறினார். ஆரம்பத்தில் தானும் எல்லோரையும்போல, 'நமக்கு எதற்கு அரசியல்?’ என்றுதான் நினைத்ததாகவும் ஆனால், அப்படி நினைப்பது சுயநலம் என்றும் தெரிவித்தார். “என்னை, வாழவைத்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று யோசித்தபோது, அதற்குக் கிடைத்த விடை அரசியல்,” என்றார். கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார்? தனது கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே தனது எதிரியை அறிவித்துவிட்டதாகக் கூறினார் விஜய். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் தான் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார். “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். நாம் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?,” என்றார். “இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார். “பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி,” என்றார் விஜய். பட மூலாதாரம்,TVK ‘டீசென்ட்டான அரசியல்’ எந்த அரசியல் தனைவரையும் பெயர் குறிப்பிட்டுப் பேசாதது ஏன் என்ற கேள்வி எழும் என்று பேசிய விஜய், தான் அப்படிப் பேசாதது பயத்தால் அல்ல, தான் ‘டீசென்ட்டான அரசியல் செய்ய வந்திருப்பதாகக் கூறினார். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் பற்றி என்ன பேசினார்? மேலும், தனது அரசியல் பயணத்தில் முக்கியப் பங்காற்றப் போவது பெண்கள், என்றார் விஜய். சினிமா நடிகனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வதாகக் கூறிய அவர், "சினிமா என்றால் பாட்டு, நடனம், பொழுதுபொக்கு மட்டுமல்ல, அது தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடு, என்று அனைத்தையும் உள்ளடக்கியது," என்றார். சினிமா தான் தமிழகத்தில் சமூக-அரசியல் புரட்சிக்கு உதவியது, என்றார். “திராவிட சித்தாந்தத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது சினிமா தான்,” என்றார் விஜய். “என்னை ‘கூத்தாடி’ என்று அழைக்கின்றனர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஆகியோர் அரசியலுக்கு வந்த போதும் அவர்களை இதே பெயர் சொல்லித்தான் விமர்சித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தான் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினர்,” என்றார். அதேபோல், தான் சினிமாவுக்கு வந்தபோது தான் எதிர்கொண்ட உருவக்கேலிகளையும், அவமானங்களையும் பற்றிப்பேசினார் விஜய். “நான் சினிமாவுக்கு வந்தபோது என் தோற்றத்தை வைத்து அவமானப்படுத்தினர். ஆனால் அதுபற்றிக் கவலைப்படாமல் உழைத்து மேலே வந்தேன்,” என்றார் விஜய். ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு’ மேலும், “கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார். தனது செயல்திட்டத்தின் முக்கிய விஷயமாக, அதிகாரப் பகிர்வைக் கூறினார் விஜய். “2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்று விஜய் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp3552wgg1qo சில காணொளிக் காட்சிகள்.
  7. இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் எனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை, அனுரகுமார திசநாயக்கவிற்கும் பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்படியென்றால் எங்கள் இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தேர்தலில் தோல்வியடைந்தால் என்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன், நான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி. நான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கோருவதற்காக உங்கள் முன்னால் வந்துள்ளேன். நாடு வீழ்ச்சியடைந்த போது பொறுப்பேற்க எவரும் இருக்கவில்லை. சஜித்தும் இல்லை அனுரவும் இல்லை. பிரதமராவதற்கு எவரும் இருக்கவில்லை. ஒருநாள் நிமால் லான்ச பிரதமராக தயாரா என என்னிடம் கேட்டார் நான் எப்படி என வினவினேன். அதற்கு அவர் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார், அதன் பின்னர் நான் ஜனாதிபதியை சந்திக்கசென்று சவாலை ஏற்றுக்கொண்டேன். அந்த சமயம ஜனாதிபதி பதவியை துறந்தவேளை நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்ட வேளை எவரும் இருக்கவில்லை, தற்போது தலைமைத்துவத்தை கோரும் அனைவரும் தப்பியோடினார்கள். நாங்கள் இராணுவத்தை பயன்படுத்தி இந்த நாட்டை காப்பாற்றினோம். மக்கள் அனுரகுமார திசநாயக்க மூன்று மாதங்களிற்கே பதவி வகிப்பார் என தெரிவிக்கின்றனர். நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை. அவர் தனது பதவியை தொடரவேண்டும். அவரது கட்சியிலிருந்து அரசியல் குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படுமா தெரியாது. அவ்வாறான விடயங்களை செய்யக்கூடாது. ஆனால் அவர்களின் பட்டியலை பார்த்தால் இந்த அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது. ஆகவே நாட்டிற்கு தலைமை தாங்ககூடியவர்களிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் ஜனாதிபதியால் மூன்று வருடங்கள் ஆட்சி செய்ய முடியும். அவ்வாறான சூழ்நிலை காணப்படாவிட்டால் நாட்டில் வரிசைகள் யுகம் உருவாகும். தற்போதைய தேங்காய் வரிசைகளிற்கு பதில் புதிய வரிசைகள் உருவாகும். தோல்வியடைந்தால் வீட்டில் இருக்குமாறு அனுர எனக்கு தெரிவித்தார். நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன் எனக்காக வாக்களியுங்கள் என மக்களை கேட்டுக்கொண்டிருந்தேன். பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை, அதனால் நான் தோல்வியடைந்தேன். ஆனால் எங்கள் இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை தானே 51வீதமானவர்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை. ஆகவே அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் நான் பெரும்பான்டையில்லாத முன்னாள் ஜனாதிபதி அவர் பெரும்பான்மையில்லாத ஜனாதிபதி அவரை போல எனக்கு பெரும்பான்iயில்லை. ஆகவே இதில் என்ன விசேடமானது நாங்கள் இருவரும் ஒரேமாதிரியானவர்கள். அவர் கஸ்டப்படுகின்றார் என நான் தெரிவிக்கின்றேன். https://www.virakesari.lk/article/197266
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருவின் பாலின பரிசோதனையை ஆதரிப்பதன் மூலம் இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளார். (சித்தரிப்புப் படம்) எழுதியவர், சுஷீலா சிங் பதவி, பிபிசி செய்தியாளர் இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவர் டாக்டர் ஆர்.வி. அசோகன், கரு பாலின பரிசோதனையை சட்டப்பூர்வமாக்குவது குறித்துப் பேசியிருப்பது புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கோவாவில் நடந்த ஒரு நிகழ்வின்போது டாக்டர் ஆர்.வி. அசோகன், “30 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் சட்டத்தால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது? இதன் மூலம் பாலின விகிதத்தை மாற்ற முடிந்ததா? இந்தச் சட்டம் சில இடங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று கூறினார். டாக்டர் அசோகனின் இந்தப் பேச்சு குறித்த நிபுணர்களின் கருத்துகள் பிளவுபட்டுள்ளன. ஆனால் தற்போதுள்ள சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கருவின் பாலினத்தை அறிந்து, அது பெண் குழந்தையாக இருந்தால் அதை உலகத்திற்குக் கொண்டு வருவதை உறுதி செய்யும் வகையிலான சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்றும் பிபிசியிடம் பேசிய டாக்டர் அசோகன் வலியுறுத்தினார். கருக்கலைப்பில் பலருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் பிசி-பிஎன்டிடி (கருத்தரிப்புக்கு முன் மற்றும் பிறப்புக்கு முந்தைய நோய் கண்டறிதல் நுட்பங்கள் சட்டம்) சட்டத்தின் கீழ் மருத்துவர் மட்டுமே இதற்குப் பொறுப்பாகக் கருதப்படுகிறார் என்று அவர் கூறினார். பிசி-பிஎன்டிடி சட்டத்தின் கீழ் கர்ப்ப காலத்தில் கருவின் பாலினத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் சட்டவிரோதமானது. இந்தச் சட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1994இல் கொண்டு வரப்பட்டது. ‘பாலின விகிதம் இன்னும் சமமாகவில்லை’ இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் கடந்தும் பாலின விகிதம் இன்னும் சமமாகவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ”சில பகுதிகளில் சட்டத்தைவிட சமூக விழிப்புணர்வு காரணமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிசி-பிஎன்டிடி சட்டம் மருத்துவர்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது" என்று அவர் கூறுகிறார். "நீங்கள் மகப்பேறு மருத்துவர்களிடம் அல்லது கதிரியக்க நிபுணர்களிடம் பேசினால் அவர்கள் எப்படி துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். ஒருவேளை இரண்டு அல்லது ஐந்து சதவீத மருத்துவர்கள் இதைச் செய்யக்கூடும். ஆனால் ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகிறது,” என்று டாக்டர் அசோகன் குறிப்பிட்டார். ஐஎம்ஏ தலைவர் என்ற முறையில் மருத்துவத்தின் சிறந்த கொள்கைகளை அவர் ஊக்குவிக்க வேண்டும். அதை சட்டப்பூர்வமாக்குவது பற்றிப் பேசக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பிசி-பிஎன்டிடி சட்டம் 1994ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. 2003ஆம் ஆண்டில் அது திருத்தப்பட்டு மிகவும் தீவிரமான முறையில் செயல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் நோக்கம் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் விதமாக கருக்களின் பாலினத்தைத் தெரிந்து கொள்வதை நிறுத்துவதாகும். அதேநேரம் இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. வர்ஷா தேஷ்பாண்டே மகாராஷ்டிராவில் பெண் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக 'லேக் லட்கி அபியான்' என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். கூடவே அவர் பிசி-பிஎன்டிடி-இன் இரண்டு குழுக்களிலும் உள்ளார். சட்டத்தை மாற்றுவதன் விளைவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிசி-பிஎன்டிடி சட்டத்தின் நோக்கம் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் விதமாக கருக்களின் பாலினத்தை தெரிந்துகொள்வதை நிறுத்துவதாகும் "ஐஎம்ஏ தலைவர் மனதில் வந்ததைப் பேசுகிறார். இந்தப் பதவியின் கண்ணியத்தை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்" என்று வர்ஷா தேஷ்பாண்டே பிபிசியிடம் தெரிவித்தார். "ஒரு மருத்துவர் தவறாகச் சிக்க வைக்கப்பட்டால் அவர் புகார் செய்யலாம். ஆனால் மருத்துவர்கள் கருவின் பாலின பரிசோதனை செய்கிறார்கள் என்பதுதான் உண்மை," என்றார் அவர். ‘‘சட்டத்தை மீறி இதுபோன்ற செயல்களைச் செய்யும் ஊழல் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஐஎம்ஏ தலைவர் குரல் எழுப்ப வேண்டும். அதில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று வர்ஷா தேஷ்பாண்டே கூறினார். தனது கவலையை வெளிப்படுத்திய அவர், "இந்தப் பரிசோதனை சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டால் பெண்கள் அதற்கு வரிசையில் நிற்பார்கள். அவர்கள் வீட்டுக்குக்கூட செல்லமாட்டார்கள். மருந்துகளை உட்கொண்டு கருவைக் கலைத்துவிடுவார்கள். அதிக ரத்த இழப்பு காரணமாக அவர்கள் இறக்கும் நிலையும் ஏற்படக்கூடும் அல்லது அவர்கள் கருக்கலைப்பு செய்வார்கள். இதற்கான மருந்துகள் எளிதாகக் கிடைக்கின்றன. சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள கிளினிக்குகளில் போலி வைத்தியர்கள் இப்போதுகூட ரகசியமாக இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு கருக்கலைப்பு செய்து வருகின்றனர்,” என்று குறிப்பிட்டார். மருத்துவர்கள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வதேச மக்கள்தொகை அறிவியல் கழகத்தின் பேராசிரியர் எஸ்.கே.சிங் தெரிவித்தார். ஐஎம்ஏ தலைவர் மருத்துவர்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார். ஆனால் அதை பெண்களின் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் என்று எஸ்.கே.சிங் கூறினார். பேராசிரியர் எஸ்.கே.சிங் இந்த அமைப்பின் சர்வே ரிசர்ச் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் பிரிவின் தலைவராகவும் உள்ளார். சட்டம் பற்றிய சந்தேகம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாலின விகிதத்தில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது “சமூகத்தின் பல பகுதிகளில் இப்போதும் ஒரு மகனைப் பெற்றெடுக்க வேண்டுமென்று பெண்கள் மீது அழுத்தம் உள்ளது. முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை இல்லையென்றால், கருவை பரிசோதித்து, கருக்கலைப்பு செய்யப்படுகிறது,” என்று எஸ்.கே.சிங் கூறினார். கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாலின விகிதத்தில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. 1991இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 926 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், 2011இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 943 பெண் குழந்தைகளாக அந்த விகிதம் அதிகரித்தது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4இல், 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் இருந்தபோது, கணக்கெடுப்பு-5இல் அவர்களின் எண்ணிக்கை 929 ஆக இருந்தது. (0-5 வயதுடைய குழந்தைகளின் பாலின விகிதம்) இருப்பினும், "இந்த அதிகரிப்பு மிகவும் சிறியது மற்றும் பெண் சிசுக் கொலையைத் தடுப்பதில் பிசி-பிஎன்டிடி சட்டம் பயனுள்ளதாக இல்லை" என்று டாக்டர் ஆர்.வி.அசோகன் சுட்டிக்காட்டுகிறார். "பெண் சிசுக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை மருத்துவ சமூகம் ஒப்புக்கொள்வதாக ஐஎம்ஏவின் மத்திய செயற்குழு இரண்டு வாரங்களுக்கு முன்பு இறுதி முடிவை எடுத்துள்ளது." ஆனால் பிசி-பிஎன்டிடி சட்டத்தின் தற்போதைய வடிவம் மருத்துவத் துறையில் பணிபுரிபவர்களுக்கு அநீதி இழைப்பதாக டாக்டர் ஆர்.வி.அசோகன் கூறுகிறார். ஆனால் கருவின் பாலினம் தெரிந்து அதற்குப் பிறகு தம்பதி கருக்கலைப்பு செய்தால், பெண் சிசுக்கொலையை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வி இங்கு எழுகிறது. ஏனெனில் இதுபோன்ற பல கிளினிக்குகள் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு, இதுபோன்ற கருக்கலைப்புகளைச் செய்கின்றன. பாலின விகிதம் பற்றிய கவலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் “அல்ட்ராசவுண்ட் செய்து பார்க்கும்போது அதன் அறிக்கையை டேட்டாபேஸில் பதிவேற்றி, கருவில் பெண் குழந்தை வளர்கிறது என்று சொல்லுங்கள். F படிவமும் அங்கு நிரப்பப்படுகிறது. இந்தத் தகவல்கள் அரசுக்குச் செல்கின்றன. கர்ப்பிணிப் பெண் மற்றும் கருவின் ஆரோக்கியம் குறித்து அவ்வப்போது பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கர்ப்பத்தின்போது எல்லாம் சரியாக இருந்தும் கருச்சிதைவு ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டால், அது ஏன் நடந்தது என்பது நமக்குத் தெரிந்துவிடும்,” என்று டாக்டர் ஆர்.வி.அசோகன் தெரிவித்தார். "ஒரு விஷயத்தை சொல்லுங்கள், குழந்தையின் பாலினமே தெரியாதபோது, அது பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு செய்யப்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்?" என்ற வாதத்தை அவர் முன்வைத்தார். “கரு பற்றிய தரவுகள் மாநில அரசுக்குச் செல்வதால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான அவற்றின் பொறுப்பு அதிகரிக்கிறது. இது பெண் சிசுக் கொலையைக் குறைக்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை. பெண் சிசுக்கொலை சட்டவிரோதமானது, ஆனால் கருவின் பாலினத்தை தெரிந்துகொள்வது அப்படி இருக்கக்கூடாது,” என்றார் டாக்டர் ஆர்.வி.அசோகன். அதேநேரம் “பிசி-பிஎன்டிடி சட்டத்தால் கடந்த 15 ஆண்டுகளில் பாலின விகிதத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை டாக்டர் அசோகனின் முன்மொழிவு தலைகீழாக மாற்றும் அபாயம் உள்ளது. இது கிரிமினல் சிந்தனை. டாக்டர் அசோகன் மருத்துவர்களை மட்டுமே காப்பாற்ற முயல்கிறார்" என்று குற்றம் சாட்டுகிறார் பேராசிரியர் எஸ்.கே.சிங். "இன்று ஒரு பெண்ணுக்கு இரண்டு மகள்கள் இருந்தால், அவர்களில் 63 சதவீதம் பேர் மூன்றாவது குழந்தையை விரும்புவதில்லை. தெற்கில் இது 80 சதவீதம். வடக்கில் இது 60 சதவீதம் வரை உள்ளது. இந்தச் சட்டம் செய்துள்ள உதவியால் மக்கள்தொகை ஆய்வாளர்களான நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்," என்றார் அவர். 'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்' திட்டத்தால் என்ன பயன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2015இல் பிரதமர் மோதி ’மகளைக் காப்பாற்றுங்கள், மகளைப் படிக்க வையுங்கள்’ திட்டத்தை ஹரியாணாவின் பானிபத்தில் தொடங்கி வைத்தார். "பொருளாதார நலன்களுக்காக கருவின் பாலினத்தை மருத்துவர் பரிசோதனை செய்வார். ஆனால் கருவின் உயிரைக் காப்பாற்றுவது என வரும்போது அதை அரசு செய்ய வேண்டும் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை,” என்று பேராசிரியர் எஸ்.கே.சிங் கூறினார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நாடாளுமன்றக் குழு மக்களவையில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தபோது, ’பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (மகளைக் காப்பாற்றுங்கள், மகளைப் படிக்க வையுங்கள்)’ திட்டத்தின் கீழ் 80 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தது. பிரதமர் நரேந்திர மோதி 2015ஆம் ஆண்டு இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் நோக்கம் குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்துதல், பாலின அடிப்படையிலான பாகுபாடுகளை அகற்றுதல் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும். ஆரம்பத்தில் இதற்கெனெ 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு அவ்வப்போது அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்திய சமூகத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்ற சிந்தனை இப்போது வளர்ந்து வருகிறது. ஆனால் பாகுபாட்டின் வேர்கள் மிகவும் ஆழமாக இருப்பதால், சிந்தனையில் முழுமையான மாற்றம் ஏற்பட இன்னும் காலம் எடுக்கும். பிசி-பிஎன்டிடி சட்டத்தின் காரணமாக, ஹரியாணா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளதாக வர்ஷா தேஷ்பாண்டே கூறுகிறார். 'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்’ என்பது அழகான முழக்கம். பெண் குழந்தைகள் அதிகாரம் பெற்றால் சமுதாயத்தில் மாற்றம் தெரியும். இது பெரிய பணி. ஆனால் இதற்கு மருத்துவர்களை ஏன் பொறுப்பாக்க வேண்டும்?" என்று டாக்டர் ஆர்.வி.அசோகன் கேள்வி எழுப்பினார். தனது முன்மொழிவை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாகவும், சட்டத்தை மாற்ற அரசு விரும்பவில்லை என்றால் மருத்துவர்களைப் பொறுப்பாக்கும் பிரிவை அதிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/crezdy34nrxo
  9. பிலிப்பைன்ஸில் கடும் மழை, வெள்ளம், மண்சரிவு - 130க்கும் அதிகமானோர் உயிரிழப்பு பிலிப்பைன்ஸ் கடும் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 130க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். டிராமி புயல் காரணமாகவே உயிரிழப்புகளும் சொத்துக்களிற்கும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன பல இடங்களில் மக்களை காப்பாற்றவேண்டிய தேவையுள்ளது ஆனால் அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிலிப்பைன்சின் வடமேற்கினை தாக்கிய புயல் காரணமாக 85 பேர் உயிரிழந்துள்ளனர் 40க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் என வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகியிருந்தது. பிலிப்பைன்ஸ் இந்த வருடம் எதிர்கொண்ட மிக மோசமான புயல் இது. மழைவெள்ளம் மண்சரிவு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளில் இருந்து உயிரிழப்புகள் குறித்த எண்ணிக்கை வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து பொலிஸார் தீயணைப்பு படையினர் உட்பட ஏனைய மீட்பு குழுவினர் மோப்பநாய்கள் சகிதம் பட்டன்காஸ் பகுதியில் உள்ள தலிசே நகரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தனது 14 வயது மகளிற்காக காத்திருந்த தந்தை மகளின் உடலை உடல்களை வைப்பதற்கான பையில் மீட்பு பணியாளர்கள் வைத்தவேளை கதறியழுதார். அது அவரது மகளின் உடல் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உடல்களை அடையாளம் காணவேண்டிய நிலையில் அதிகாரிகள் காணப்படுகின்றனர். நகரின் மத்தியில் உள்ள ஜிம் ஒன்றில் பல பிரேதப்பெட்டிகளை காணமுடிந்துள்ளது. https://www.virakesari.lk/article/197224
  10. எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக மதுரை நகரில் கடந்த 25ஆம் தேதி 15 நிமிடங்களில் 45 மி.மீ., என்ற அளவில் அதி கனமழை பதிவானது. இதனால் பல குடியிருப்புகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் வெள்ள நீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், எதிர் வரும் காலங்களில் அதீத மழை பெழிவு ஏற்பட்டால் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை மாநகராட்சியில் அதிகனமழை என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது? வெள்ளநீர் புகுந்த குடியிருப்புகளின் தற்போதைய நிலை என்ன? மதுரையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அதி கனமழை மதுரையில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. காலை நேரத்தில் வெயில் இருந்தாலும் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் தல்லாகுளத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. தொடர்ந்து தினமும் மழை பெய்தாலும், இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கைகளின்படி, வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை பல கட்டங்களாகப் பெய்த மழையால் 98 மி.மீ., மழை பதிவானது. குறிப்பாக அன்றைய தினம் மதுரை நகரில் 15 நிமிடத்தில் 45 மி.மீ., மழை பதிவானது. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) பெய்த கன மழையால் சாலை ஓரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நான்காவது வார்டு பார்க் டவுன் குடியிருப்பை மழைநீர் சூழ்ந்தது. ஆலங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டது. படக்குறிப்பு, மதுரையின் பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது இதனால், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக சர்வேயர் காலனி, ஒத்தக்கடை, காந்தி நகர் பகுதியில் மழை நீர் வீடுகளைச் சூழ்ந்துள்ளது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய அதிகனமழை பதிவாகி உள்ளதாக மதுரை மக்கள் தெரிவிக்கின்றனர். ராஜகம்பீரம், கொடிக்குளம் கண்மாய்களுக்குச் செல்லும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு அறிக்கை மதுரையில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தொடர்பாக தமிழக அரசு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மதுரையில் கனமழை பெய்ததை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது மேலும், “பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளவும், களத்திற்குச் சென்று சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் மற்றும் சங்கீதாவிற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்,” என்று அந்த அறிக்கையில் தமிழக அரசு கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் வடியத் துவங்கியுள்ள நிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் வடிகால் மற்றும் கண்மாய்களில் குப்பைகளை அகற்றி அடைப்புகளைச் சரி செய்து தண்ணீர் வடிவதற்கு ஏற்பாடு செய்து வருவதுடன், தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ‘பந்தல்குடி கால்வாய்க்கு இருபுறமும் சுற்றுச்சுவர் தேவை’ இதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் செல்லூர் பகுதியில் பெய்த மழையால் நீர் தேங்கியதாகக் கூறுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த சங்கர பாண்டியன். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், மதுரையில் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குத் துவங்கி இரவு 7 மணி வரை தொடர்ந்து அதி கனமழை பெய்தது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை விட்டு விட்டுப் பெய்தது. இதனால் செல்லூர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் தண்ணீர் புகுந்து பழுதடைந்துள்ளது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் முதியவர்கள் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இன்னும் தீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் கடைகளுக்குள் நீர் புகுந்ததால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மழை நீரில் சேதம் அடைந்தன. கடந்த 1993ஆம் ஆண்டு, அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல் மழை பெய்து செல்லூர் கண்மாய் உடைந்து பெரியளவிலான உயிரிழப்புகளும் பொருள் சேதங்களும் ஏற்பட்டன. அதன் பிறகு நேற்று பெய்த அதீத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கனமழையால் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செல்லூர், சர்வேயர் காலனி, புதூர், தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் முடக்கத்தான், ஆனையூர், சிலையனேரி உள்ளிட்ட சிறிய கண்மாய்கள் நிறைந்து செல்லூர் பெரிய கண்மாய்க்கு உபரி நீர் பாய்ந்து பந்தல்குடி கால்வாய் வழியாக வைகை ஆற்றில் சேரும். படக்குறிப்பு, மதுரையில் நீர் தேங்கி நிற்கும் ஒரு குடியிருப்புப் பகுதி இதற்காக அரை கிலோமீட்டர் தூரம் நீளமான கால்வாய்கள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கால்வாய் பகுதி முறையாகத் தூர்வாரப்படாததால், பொதுமக்கள் கால்வாயில் குப்பைகளைக் கொட்டுவதால் குப்பை மேடாக மாறி கால்வாய் பரப்பளவு குறைந்து மழை நீர் செல்ல முடியாமல் செல்லூர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. செல்லூர் கண்மாயை தூர்வாரி பராமரிக்க முதலில் ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவிக்கபட்டு பின் நிதித் தொகை ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டு, பின் அந்தத் தொகையையும் உயர்த்தி தற்போது ரூ.120 கோடி நிதி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது வரை நிதி ஒதுக்கப்படவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். செல்லூர் கண்மாயைத் தூர்வாரி இருபுறங்களும் சுற்றுச்சுவர் அமைத்து பந்தல்குடி கால்வாய்க்குச் செல்லும் வழித்தடத்தில் உள்ள குப்பைகளை அகற்றி வைகை ஆற்றில் மழை நீர் சேர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். செல்லூர் கண்மாய்க்கு ஒருபுறம் பந்தல்குடி கால்வாய் இருப்பதைப் போன்று மறுபுறம் கால்வாய் அமைப்பதற்கான பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்லூர் தாகூர் நகர் பகுதியில் நடைபெற்றது. ஆனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி கைவிடப்பட்டது. எனவே செல்லூர் கண்மாய்க்கு மறுபுறம் கால்வாய் அமைக்க உடனடி நடவடிக்கை எடுத்தால் எதிர் வரும் காலங்களில் மழை நீர் தேங்குவதால் செல்லூர் பகுதியில் பாதிப்பு ஏற்படாது என்கிறார் சங்கர பாண்டியன். பராமரிப்பில்லாமல் கிடக்கும் பிரதான கால்வாய்கள் படக்குறிப்பு, சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது பிரதான கால்வாய்கள் முறையாக தூர்வாரப் படாததால் மழை நீர் வடிய வழியின்றி செல்லூர் உள்ளிட்ட மதுரை வடக்குப் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார் மதுரை மாநகராட்சி மன்றத்தின் அ.தி.மு.க குழுத் தலைவரான சோலை எம்.ராஜா. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராஜா, மதுரையில் பந்தல்குடி, கிருதுமால், சிந்தாமணி, வண்டியூர் உள்ளிட்ட 17 பிரதான கால்வாய்கள் உள்ளன, என்றார். “இந்தப் பிரதான கால்வாய்கள் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தூர்வாரப்படாததால் வெள்ளிக்கிழமை பெய்த மழை நீர் செல்லூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் முழுமையாகத் தேங்கியுள்ளது,” என்றார். “இதுகுறித்துப் பல முறை மாமன்றக் கூட்டத்தில் தான் எடுத்துரைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தூர்வாருவதற்கு ஜே.சி.பி இயந்திரங்களைப் பயன்படுத்தினார்,” என்றார். பட மூலாதாரம்,SOLAI M RAJA படக்குறிப்பு, மதுரை மாநகராட்சி மன்றத்தின் அ.தி.மு.க குழுத் தலைவரான சோலை எம்.ராஜா மேலும், “ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு கால்வாயின் ஒருசில இடங்களில் தேங்கியிருந்த குப்பைகள், ஆகாயத் தாமரை உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் ஜே.சி.பி இயந்திரத்தால் முழுமையாகத் தூர்வார முடியாது. ஹிட்டாச்சி இயந்திரத்தைக் கொண்டு தூர்வாரும் பணி செய்தால் மட்டுமே பிரதான கால்வாய்களை முழுமையாகத் தூர்வார முடியும். ஆனால் ஹிட்டாச்சி இயந்திரம் மதுரை மாநகராட்சியில் இல்லாததால் தூர்வாரும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது,” என்றார். “மேலும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் முறையாக வீடுகளில் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்காததால் வீடுகளில் பயன்படுத்தும் குப்பைகளை பொது மக்கள் வீட்டுக்கு எதிரே உள்ள வாய்க்கால்களில் வீசில் செல்கின்றனர். அந்தக் குப்பைகள் நீர் வழித்தடங்களில் தேங்கி தண்ணீர் போக முடியாமல் தடுத்துள்ளது,” என்றார். மேலும் பேசிய அவர், “அதே போல் ஒவ்வொரு நகர் பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால் கால்வாயில் அடைத்துள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சியில் போதுமான தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால் அகற்றபடாமல் உள்ளன. இதனால் மழை நீர், வடிகால் வழியாக குளம், குட்டை உள்ளிட்டவற்றுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது,” என்றார் ராஜா. மாநகராட்சி ஆணையர் சொல்வது என்ன? படக்குறிப்பு, சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார் மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார். போர்க்கால அடிப்படையில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு மழைநீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகள் சரி செய்யப்பட்டு தண்ணீர் வடிந்து வைகை ஆற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அவர் தெரிவித்தார். மேலும், “தண்ணீர் வடியத் துவங்கியதால் குடியிருப்புப் பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் குறைந்து, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். மழைக் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க மதுரையில் உள்ள 16 பிரதான கால்வாய்கள் ஹிட்டாச்சி இயந்திரங்களைக் கொண்டு குப்பைகளை அகற்றும் மற்றும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது,” என்றார். மழைநீர் வடிகாலில் உள்ள அடைப்புகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து நடைபெற்று வருவதால் மதுரையில் கன மழை பெய்தும் பல இடங்களில் மழை நீர் தேங்கவில்லை எனக் கூறிய தினேஷ் குமார், "இதில் செல்லூர் கண்மாயில் உள்ள பந்தல்குடி கால்வாய் தூர்வாருவதற்கு நடைமுறைச் சிக்கல் இருந்ததால் மழை நீர் குடியிருப்புகளுக்குள் தேங்கி, வெளியேற முடியாமல் சிரமம் ஏற்பட்டது. தற்போது அந்தச் சிக்கல் சரி செய்யப்பட்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் வடிந்து வைகை ஆற்றில் கலந்து வருகிறது,” என்றார். பொது மக்கள் வடிகால், கால்வாய்களில் குப்பை கொட்டுவதைத் தடுப்பது மதுரை மாநகராட்சிக்கு பெரிய சவாலாக இருப்பதாகவும், குப்பைகளைச் சேகரிப்பதற்காக மாநகராட்சி கூடுதலாக 350 வாகனங்களைப் பயன்படுத்தி வருவதுடன், கூடுதலாக லாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிப்பதாகவும் கூறுகிறார் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார். இதுதொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்’ படக்குறிப்பு, மழைநீர் தேங்கியிருக்கும் பகுதியை ஆய்வு செய்யும் அதிகாரிகள் இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு அமைச்சர்கள் முகாமிட்டுப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். மேலும், "மொத்தம் 8 இடங்களில் மட்டுமே மழை நீர் சூழ்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன," எனவும் தெரிவித்திருந்தார். அமைச்சர்கள் ஆய்வு மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளரிடம் பேசுகையில், மதுரை வடக்குப் பகுதியில் கடந்த 10 நாட்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள கண்மாய்கள் நிறைந்து வைகை ஆற்றை நோக்கி வருவதால் மழை நீர் தேங்கியுள்ளது, என்றார். மேலும், கண்மாய்களில் இருந்த வரும் தண்ணீரை ஆற்றில் கலப்பதற்கு புதிய மாற்று வழிகள் செய்யப்பட்டுள்ளதால் மக்களுக்குச் சேதம் ஏற்படாது என்றார். "தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கண்மாய்கள் நிறைந்து தண்ணீர் வருவதால் மதுரையில் மழை நின்றாலும் உபரி நீர் வரத்து அதிகமாக இருப்பதால் குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீர் முற்றிலுமாக வடிய மூன்று நாட்களுக்கு மேலாகும்,” என்றார். அதோடு, “பந்தல்குடி கால்வாய்க்கு வரும் தண்ணீரின் அளவைக் குறைப்பதற்கு மாற்று வழியில் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளதால் படிப்படியாக கால்வாய்க்கு வரும் தண்ணீர் வரத்து குறையும்,” என்றும் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cy0ggrzldexo
  11. யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த முதியவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்த 79 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் நேற்று சனிக்கிழமை (26) டெங்கு ஒழிப்பு கள சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்போது அதிகாரிகள் இந்த முதியவரின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டினுள் துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில் முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார். சடலத்தை பார்வையிட்ட அதிகாரிகள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின்னர், செய்யப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின்போது மாரடைப்பு காரணமாகவே முதியவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/197234
  12. பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 12 இந்திய மீனவர்கள் கைது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 12 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகொன்றில் 12 பேரும் பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளை, அப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அந்த மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது படகினையும் கைப்பற்றினர். அதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களையும் படகினையும் மயிலிட்டி கரைக்கு கொண்டுசென்ற கடற்படையினர், கைதான மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/197219
  13. ஒக்டோபர் 19 - 24க்கு இடையில் அறுகம் குடாவில் தாக்குதல் நடத்த திட்டம் - மாலைதீவு பிரஜையும் கைது - இருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம் - விசாரணைகள் தீவிரம் ஒக்டோபர் 19ம் திகதிக்கும் 24ம் திகதிக்கும் இடையில் அறுகம்குடாவில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ள சண்டே டைம்ஸ் சந்தேகநபர்களில் இருவர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளது. சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது. இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அறுகம் குடாவில் உள்ள அவர்களது வழிபாட்டுதலத்தில் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய பெரும் ஆபத்தை பொலிஸார் தடுத்துநிறுத்தியுள்ளனர். ஓக்டோபர் 19 முதல் 24 ம் திகதி இந்த தாக்குதலிற்கு திட்டமிட்டிருந்தனர். இந்த வாரத்தில் இஸ்ரேலியர்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறவிருந்தது என புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. வெளிநாடொன்று இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு எவ்வளவு தூரம் ஆதரவு வழங்கியது எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொள்வதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. காசாவிலும் லெபனானிலும் இஸ்ரேலின் தாக்குதலிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதே அறுகம் குடா தாக்குதல் நோக்கம். காசாவிலும் லெபனானிலும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்ய்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னரே இந்த யுத்தம் ஆரம்பமானது. இந்த தாக்குதலில் 1200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் அனேகமானவர்கள் பொதுமக்கள் 250க்கும் அதிகமானவர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அறுகம்; குடாவிற்கு அருகில் உள்ள முஸ்லீம் கிராமங்களிற்கு ஏற்பட்டிருக்ககூடிய பாதிப்பே இந்த தாக்குதலின் மிக ஆபத்தான விளைவாகயிருந்திருக்க கூடும். அறுகம்குடாவிற்கு அருகில் உள்ள நகரம் பொத்துவில் இங்கு பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள். மிகவும் பிரபலமான கரையோர சுற்றுலாத்தளத்திலிருந்து இந்த நகரம் 3.8 மைல் தொலைவில் உள்ளது. இந்த தாக்குதலை முஸ்லீம்களே மேற்கொண்டனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் உண்மையான குற்றவாளிகள் அல்லது சூத்திரதாரிகள் குறித்து கவனம் திரும்பியிருக்காது. ஆகக்குறைந்தது சிறிது நேரத்திற்காவது. இஸ்ரேலியர்கள் அதிகளவில் செல்லும் தென்பகுதியின் கரையோர நகரங்களான அஹங்கம அகுங்க போன்றவற்றிலும் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது. யூதர்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டங்களை ஒக்டோபர் முதல் வாரத்தில் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர். எனினும் அவ்வேளை அவர்களிற்கு கிடைத்த தகவல்கள் போதுமானவையாக காணப்படவில்லை தெளிவற்றவையாக காணப்பட்டன. இதன் காரணமாக சந்தேகநபர்கள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கொழும்பின் புறநகர் பகுதியிலிருந்து ஒருவரும் வடக்கிலிருந்து ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர் மூன்றாவது நபர் மாலைதீவை சேர்ந்தவர். இவர் மாலைதீவு தந்தைக்கும் இலங்கை தாய்க்கும் பிறந்தவர். இவர்கள் அனைவரும் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சிங்களம் பேசக்கூடிய மாலைதீவை சேர்ந்த நபரிடமிருந்து இரண்டு கையடக்கதொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர். இதில் பலரின் விபரங்கள் காணப்படுகின்றன. வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ள இருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். அவர்கள் பல தடவை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை சிறைச்சாலையொன்றில் பல குற்றங்களிற்காக தண்டனை அனுபவித்து வந்தவர்கள். பாதுகாப்பு செயலாளர் எயர் மார்ஷல் சம்பத்து யாகொன்த இந்த வாரம் மாலைதீவு தூதுவருடன் மாலைதீவை சேர்ந்த சந்தேகநபர் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இதேவேளை தெகிவளையில் உள்ள இஸ்ரேலின் துணைத்தூதுவரின் இல்லத்திற்கு அருகே நடமாடிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197215
  14. லூயிஸ், ரதஃபர்ட் அதிரடிகளால் மே. தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி; ஒருநாள் தொடர் 2 - 1 என இலங்கை வசமானது (நெவில் அன்தனி) கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (26) நடைபெற்ற மிகவும் பரபரப்பான 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 8 விக்கெட்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது. ஏற்கனவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பறிகொடுத்திருந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்த வெற்றி ஆறுதல் அளித்திருக்கும் என்பது நிச்சயம். இப் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றியை ஏற்கனவே உறுதிசெய்துகொண்டிருந்த இலங்கை 2 - 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்றியது. இலங்கைக்கான கிரிக்கெட் விஜயத்தை தம்புள்ளையில் ரி20 வெற்றியுடன் ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அதன் பின்னர் 2 ரி20 போட்டிகளிலும் 2 ஒருநாள் போட்டிகளிலும் தோல்விகளைத் தழுவி இப்போது கடைசிப் போட்டியில் வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது. ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் உபாதைக்கு மத்தியிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி வெற்றி ஓட்டங்களுடன் சதத்தைப் பூர்த்தி செய்த எவின் லூயிஸும் அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்ற ஷேர்ஃபேன் ரூதஃபர்டும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதை உறுதிசெய்தனர். மழை காரணமாக நாணய சுழற்சி தாமதிக்கப்பட்ட போதிலும் போட்டி சரியான நேரத்திற்கு ஆரம்பித்தது. உபாதையிலிருந்து முழுமையாக குணமடைந்த பெத்தும் நிஸ்ஸன்க மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் நிஷான் மதுஷ்கவுக்கு விடுகை வழங்க்பபட்டது. பந்துவீச்சில் துனித் வெல்லாலகே நீக்கப்பட்டு நிஷான் மதுஷன்க இணைத்துக்கொள்ளப்பட்டார். மழையினால் ஆட்டம் 5 மணித்தியாலங்களுக்கு மேல் தடைப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடர்ந்து நடைபெற்றபோது 23 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் இலங்கை 3 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 23 ஓவர்களில் 193 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு அமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 22 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது. எவின் லூயிஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மூன்று இணைப்பாட்டங்களில் பங்கேற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார். ஆரம்ப வீரர் ப்றெண்டன் கிங் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது 5.4 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 36 ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் எவின் லூயிஸ், அணித் தலைவர் ஷாய் ஹோப் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷாய் ஹோப் 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (108 - 2 விக்.) எனினும் எவின் லூயிஸ், ஷேர்ஃபேன் ரதஃபர்ட் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடி மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதை உறுதிசெய்தனர். எவின் லூயிஸ் 61 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 102 ஓட்டங்களுடனும் ஷேர்ஃபேன் ரதஃபர்ட் 26 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 50 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். எவின் லூயிஸ் தனது 4ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் அவற்றில் 3 சதங்கள் இலங்கைக்கு எதிராக குவிக்கப்பட்டவையாகும். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 17.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் 81 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அவிஷ்க பெர்னாண்டோ 34 ஓடட்ங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் மழை பெய்ததால் பிற்பகல் 3.42 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது. மழை ஒய்ந்த பின்னர் ஆட்டம் இரவு 8.50 மணிக்கு மீண்டும் தொடர்ந்தபோது அணிக்கு 23 ஓவர்கள் என அறிவிக்கப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது அதிரடியில் இறங்கிய குசல் மெண்டிஸ் தொடர்சியாக 4 பவுண்டறிகளை விளாச இலங்கையின் ஓட்ட வேகம் அதிகரித்தது. அணியில் மீண்டும் இணைந்த பெத்தும் நிஸ்ஸன்க 56 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அவரும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 26 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அடுத்து களம் நுழைந்த அணித் தலைவர் சரித் அசலங்க ஓட்ட வேகத்தை அதிரிக்க விளைந்து சிக்ஸ் ஒன்றை மட்டும் விளாசி ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 22 பந்துகளில் 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆட்டநாயகன்: எவின் லூயிஸ், தொடர்நாயகன்: சரித் அசலன்க. https://www.virakesari.lk/article/197206
  15. படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட 32 வயதான ஜோத்ஸ்னா ஆகஸ்ட் 28-ஆம் தேதி காணாமல் போனார் கட்டுரை தகவல் எழுதியவர், பாக்யஶ்ரீ ராவத் பதவி, பிபிசி மராத்திக்காக 26 அக்டோபர் 2024 பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொலை செய்துவிட்டு அதனை மறைக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். நாக்பூரில் காதலித்த பெண்ணை கொன்று புதைத்து, அந்த இடத்தை சிமெண்ட் வைத்து அந்த நபர் அடைத்துள்ளார் என்று காவல்துறை கூறியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் ஆவார். நாக்பூரில் உள்ள பெல்டரோடி காவல்துறையினர் குற்றம்சுமத்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. நடந்தது என்ன? கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஜோத்ஸ்னா பிரகாஷ் அக்ரே (32), குற்றம்சாட்டப்பட்டுள்ளவரின் பெயர் அஜய் வான்கடே (34). ஆகஸ்ட் 28-ஆம் தேதி அன்று ஜோத்ஸ்னா காணாமல் போனார். அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக 55 நாட்களுக்குப் பிறகு காவல்துறை கூறியுள்ளது. புட்டிபோரி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே அமைந்துள்ள புதர் மண்டிய பகுதியில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் அந்த பெண்ணின் உடலை புதைத்திருக்கிறார் என்று காவல்துறை கூறியுள்ளது. பெரிய குழி ஒன்றைத் தோண்டி அதில் அந்த பெண்ணின் உடல் போடப்பட்டுள்ளாது. அதன் மேல் ப்ளாஸ்டிக் விரிக்கப்பட்டு அதில் கற்கள் கொட்டப்பட்டிருக்கிறது. இறுதியில் சிமெண்ட் கலவை கொண்டு அந்த குழி மூடப்பட்டுள்ளது. ஜோத்ஸ்னாவின் உடலை கைப்பற்றிய காவல்துறை உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளது. காவல்துறை இந்த வழக்கில் துப்பு துலக்கியது எப்படி? ஜோத்ஸ்னா உடல் எப்படி கிடைத்தது? காவல்துறை துணை ஆணையர் ராஷ்மிதா ராவ் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கொலை குறித்த முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். 32 வயதான ஜோத்ஸ்னா அக்ரே, கலமேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர். நாக்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த ஜோத்ஸ்னா எம்.ஐ.டி.சியில் அமைந்திருக்கும் டி.வி.எஸ். நிறுவன ஷோரூமில் அவர் பணியாற்றி வந்துள்ளார். ஆகஸ்ட் 28-ஆம் தேதி அன்று மாலை 8.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அடுத்த நாள் காலை வரை வீடு திரும்பவில்லை. ஜோத்ஸ்னாவின் சகோதரர் ரித்தேஸ்வர் அக்ரே தன்னுடைய சகோதரியை காணவில்லை என்று பெல்டரோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகார் அடிப்படையில் காணாமல் போன நபர் குறித்து வழக்கை பதிவு செய்தது காவல் நிலையம். அதன் பிறகு காவல்துறையினர் ஜோத்ஸ்னாவின் செல்போன் இருக்கும் இடத்தை கண்டறிந்தது. அவருடைய போன் ஐதராபாத்தில் கண்டறியப்பட்டது. படக்குறிப்பு, நாக்பூரில் உள்ள பெல்டரோடி காவல்துறையினர் குற்றம்சுமத்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பல நாட்கள் ஆன பிறகும் தன்னுடைய சகோதரியை காணவில்லை என்ற காரணத்தால் ரித்தேஸ்வர் மீண்டும் காவலர்களை நாடினார். அப்போது தன்னுடைய சகோதரி கொல்லப்பட்டிருக்கலாம் என்று தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியது காவல்துறை. ஜோத்ஸ்னாவின் போனிற்கு அழைப்பு விடுத்த போது கனரக வாகன ஓட்டுநர் அந்த அழைப்பிற்கு பதில் அளித்தார். தன்னுடைய வாகனத்தில் அந்த செல்போன் கிடந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். பெல்டரோடி காவல் நிலையத்திற்கு நேரில் வருமாறு அவரிடம் கூற நேரில் வந்து ஜோத்ஸ்னாவின் போனை காவல்துறையிடம் கொடுத்துள்ளார் அவர். காவல்துறையினர் அதில் வந்த அழைப்புகள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். பாபநாசம் படத்தில் வருவது போன்று அவருடைய போனை லாரியில் வீசி, காவல்துறையினரின் கவனம் திசை திருப்பப்பட்டுள்ளது. போனை வைத்து விசாரிக்க துவங்கும் போது அந்த நபர் பயணித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிம்பம் உருவாகும். அழைப்புகளை ஆய்வு செய்ததில் அஜய் வான்கடே மற்றும் ஜோத்ஸ்னாவுக்கு இடையேயான தொடர் அழைப்புகள் கண்டறியப்பட்டன. பணப் பரிமாற்றம் நடந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட ஜோத்ஸ்னா விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை காணாமல் போன ஜோத்ஸ்னா மற்றும் குற்றவாளியும் ஒரே இடத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையின் போது காவல்துறையினர் பேசா சவுக் பகுதியில் இருந்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அங்கே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஜோத்ஸ்னாவின் சடலம் இடமாற்றம் செய்யப்பட்டது சி.சி.டி.வி. காட்சியில் பதிவானது. காரின் உரிமையாளர் யார் என்று தேடும் போது அது அஜய்யின் கார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜயை தேடும் பணியை தீவிரமாக்கியது காவல்துறை. இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து புனேவில் நீரிழிவு நோய்க்காக அஜய் சிகிச்சை எடுத்து வந்தார். மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை அவரை விடுவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. ஆனால் அஜய் அங்கிருந்து உடனே தப்பித்துவிட்டார். நாக்பூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறும் முயற்சியில் அஜய் ஈடுபடவே, காவல்துறையின் சந்தேகம் வலுவடைந்தது. நாக்பூர் நீதிமன்றம் அஜயின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்டது. அக்டோபர் 18-ஆம் தேதி அன்று அஜய் காவல்துறையிடம் சரணடைந்தார். பிறகு ஜோத்ஸ்னா கொலை செய்ததையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அஜயின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு ரயில்வே தண்டவாளத்தின் அருகே புதைக்கப்பட்டிருந்த ஜோத்ஸ்னாவின் உடலை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். படக்குறிப்பு, ஜோத்ஸ்னாவின் உடல் புதைக்கப்பட்ட இடம் ஜோத்ஸ்னா கொலை பற்றி காவல்துறை கூறுவது என்ன? நாக்பூர் முனிசிபல் கார்ப்பரேஷனில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியின் மகன் அஜய். இந்திய ராணுவத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மருந்தாளராக அவர் இருந்து வருகிறார். தற்போது நாகலாந்தில் அவர் பணியில் இருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான அஜய் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்ள பெண் தேடி வந்தார். அப்போதுதான் திருமண இணையம் மூலமாக ஜோத்ஸ்னா அவருக்கு பரிச்சயமாகியுள்ளார். ஜோத்ஸ்னாவும் விவாகரத்தானவர். பெண் பார்க்கும் நிகழ்வானது ஜோத்ஸ்னா வீட்டில் நடைபெற்றது. அந்த திருமணம் சில காரணங்களுக்காக நடைபெறாமல் போனது. ஆனால் இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இதற்கிடையில் அஜய்க்கு மே மாதம் மூன்றாவது முறையாக திருமணம் நடைபெற்றது. ஜோத்ஸ்னா காணாமல் போன நாளனறும் கூட அஜயுடன் பேசியுள்ளார். அஜயை பார்ப்பதற்காகவே அவர் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜோத்ஸ்னா மட்டுமின்றி வேறு சில பெண்களுடனும் அஜய் தொடர்பில் இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது இந்த நடத்தையே கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஜோத்ஸ்னா கொலைக்கான உண்மையான காரணம் என்ன? அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்? என்பது குறித்து தொடர்ச்சியாக விசாரணை செய்து வருகிறது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று துணை ஆணையர் ராஷ்மிதா ராவ் கூறுகிறார். நீரிவு நோயால் அவதிப்பட்டு வரும் அஜய் எந்த நேரத்திலும் சர்க்கரை அளவு அதிகரித்து மயங்கிவிட வாய்ப்புகள் உண்டு என்று கூறுகின்றனர் காவல்துறையினர். இதனால், விசாரணையை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஜோத்ஸ்னா கொலைக்கு முன்னதாக பாபநாசம் படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்? பாபநாசம் படத்தைப் பார்த்தே இந்த கொலையை செய்தீர்களா? என்பன போன்ற கேள்விகளை கேட்கவிருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். ஆதாரங்களை அழிப்பதற்காக பெரிய குழி தோண்டி அதில் அந்த பெண்ணின் உடலை அஜய் போட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் இந்த கொலையை அவர் தனியாக செய்தாரா அல்லது யாராவது அவருக்கு உதவினார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9wrk01qz97o
  16. (லியோ நிரோஷ தர்ஷன்) பிரிக்ஸ் அமைப்பின் இணைவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சாதகமான பதலளிப்புகளை உறுப்பு நாடுகள் வழங்கியுள்ளன. இதன் முன்னேற்றங்கள் குறித்து முழுமையான அறிவிப்பை, வெளிவிவகார செயலாளர் ஹரினி விஜேவர்தன நாட்டுக்கு வழங்குவார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வீரகேசரிக்கு தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்பில் சீனாவுடனான இந்தியாவின் ஈடுபாடு இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது. இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பில் இலங்கையை இணைத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக உள்ளன. இந்தியா ஊடாக தெற்காசியாவை அணுகும் அமெரிக்காவின் முக்கிய பங்காளியாக டெல்லி இப்போது உள்ளது. மறுபுறம் பிரிக்ஸ் உறுப்பினராக இந்தியா உள்ளதுடன், சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளைப் பேணுகிறது. உலகாளாவிய கிழக்கில் நிகழ்ந்து வரும் பொருளாதார மாற்றத்தை இந்தியா அவதானித்து, அதைச் சாதகமாக்க முயல்கிறது. இந்த நிலைப்பாடு இலங்கைக்கும் பயனளிப்பதாக அமையும் என்பது பொருளாதார நிபுணர்களின் எதிர்வுக்கூறலாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரிக்ஸ் உறுப்புரிமையில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேவேளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பிரிக்ஸ் நாடுகளின் ஆதரவை கோரியுள்ளார். ஆனால் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இந்த முடிவு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மாத்திரம் எடுக்கப்படவில்லை. முந்தைய அமைச்சரவை இந்த முடிவை அங்கீகரித்திருந்தது. அனைத்து இராஜதந்திர தளங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்த பின்னர், இந்தியாவின் உத்தியோகபூர்வ ஒப்புதலுடன் இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் இணையும்போது, எந்தவொரு மோதலையும் வளர்க்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என்பதை மேற்கு நாடுகளுக்கு உணர்த்துகிறது. மேலும் இலங்கையின் நீண்டகால அணிசேராக் கொள்கையினை உறுதியாக நிலைநிறுத்தவும் முடிகிறது. எவ்வாறாயினும் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் சமீபத்தில் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ளன. இலங்கை, இந்தோனேசியா மற்றும் அர்ஜென்டினா உட்பட 30 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த அமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. 2028 ஆம் ஆண்டில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் அவசியத்தை எதிர்கொள்வதால், பொருளாதார வளர்ச்சியின் அவசரத் தேவை உள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு, நிலையான கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அவசியமான மூலோபாய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு நாட்டிற்கு மூலதனம் தேவைப்படுகிறது. பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை செய்து கொள்ளும் ஒப்பந்தம், உத்தேசிக்கப்படுகின்ற மூலதனத்தில் குறிப்பிட்டளவை பெறுவதற்கு உதவும். https://www.virakesari.lk/article/197210
  17. நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் வடக்கு ரயில் சேவை கொழும்பு – கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான வடக்கு ரயில் சேவை நாளை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரதத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதால் ரயில் மார்க்கத்தின் ஊடான கடவுப் பாதைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. https://thinakkural.lk/article/311187
  18. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது பிரத்தியேக செயலாளரே குறித்த வாகனத்தை வீட்டின் வாகன தரிப்பு கராஜூக்கு கொண்டு வந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸில் சாட்சியமளித்துள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான – எம்புல்தெணிய மண்டப வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்ததுடன், குறித்த வீட்டிற்குச் சென்று வாகனத்தை சோதனையிட்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மனைவியிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேற்படி வீட்டில் முன்னாள் அமைச்சரின் மனைவியின் தாயார் வசிப்பதாகவும், சில தினங்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர், குறித்த காரை 3 வாரங்களுக்கு முன்பு கராஜுக்கு கொண்டு வந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாவிகள் இல்லாத சொகுசு கார் மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று அரச பரிசோதகர் வாகனத்தை சோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் அதன் பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/311189
  19. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில்தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலிமாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று இடம்பெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள் 1 சுயேட்சை குழு ஆகிய போட்டியிட்டன. தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி - 17,295 (15), ஐக்கிய மக்கள் சக்தி - 7,924 (06) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 3,597 (03) பொதுஜன ஐக்கிய முன்னணி-2612(02) சுயேட்சை குழு-2568( 02) பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி-1350( 01) தேசிய மக்கள் கட்சி - 521 (01) https://www.virakesari.lk/article/197205
  20. அறுகம் குடா தாக்குதல் திட்டத்திற்கு வெளிநாட்டு ஆதரவு? – நிதி பயிற்சி வழங்கப்பட்டதா என விசாரணை வெளிநாடொன்றின் ஆதரவுடனேயே அறுகம் குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டதாக தெரிவித்துள்ள சண்டே டைம்ஸ் ஒக்டோபர் 19 முதல் 24ம் திகதிக்குள் இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அறுகம் குடாவில் உள்ள அவர்களது வழிபாட்டுதலத்தில் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய பெரும் ஆபத்தை பொலிஸார் தடுத்துநிறுத்தியுள்ளனர். ஓக்டோபர் 19 முதல் 24 ம் திகதி இந்த தாக்குதலிற்கு திட்டமிட்டிருந்தனர், இந்த வாரத்தில் இஸ்ரேலியர்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறவிருந்தது என புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. வெளிநாடொன்று இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு எவ்வளவு தூரம் ஆதரவு வழங்கியது? எவ்வளவு நிதி வழங்கப்பட்டது? என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொள்வதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டனவா? என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. https://www.virakesari.lk/article/197208
  21. தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட் - விஜய் சொல்ல வருவது என்ன? பட மூலாதாரம்,TVK IT WING/X படக்குறிப்பு, மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட் விவாதங்களை எழுப்பியுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 27 அக்டோபர் 2024, 02:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கட்சி தொடங்கி சுமார் 9 மாதங்களுக்குப் பின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அதன் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். மாநாடு நடைபெறும் இடத்தில் பல்வேறு தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்களின் கட்-அவுட்கள் இடம் பெற்றிருப்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது. இந்த கட்-அவுட்கள் விஜயின் கொள்கைகளை ஓரளவு தெளிவுபடுத்தும் விதமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், இன்னும் தெளிவு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒவ்வொரு கட்-அவுட்டுக்கும் நோக்கம் இருக்கிறது, அதைத் தங்கள் கட்சியின் தலைவர் கூறினால்தான் அந்நோக்கம் நிறைவேறும் என்கின்றனர், தமிழக வெற்றிக் கழகத்தினர். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்-அவுட்கள் குறித்துப் பரவலாக பேசப்படுவது ஏன்? விஜய் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். அதுகுறித்து, விஜய் நேரடியாகத் தெரிவிக்காமல், அறிக்கை வாயிலாக அதன் அறிவிப்பு வந்தது. பிறகு, ஆகஸ்ட் 22ஆம் தேதி, கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. இரு நிகழ்வுகளுக்கும் இடையே, விஜய் தன் அரசியல் கொள்கை, நிலைப்பாடு குறித்து நேரடியாக ஊடகங்களிடம் பேசவில்லை. எனினும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை, விமானப் படை சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் போன்ற பிரச்னைகள் குறித்த தனது கருத்தை அறிக்கைகள் வாயிலாகத் தெரிவித்து வந்தார். இந்தப் பின்னணியில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு தமிழக அரசியல் தளத்தில் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பைப் பார்க்க வேண்டியுள்ளது. கட்சி தொடங்கி, இத்தனை மாதங்கள் கழித்து அவர் என்ன பேசப் போகிறார் என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளாரா? விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு அக்கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கட்சியின் சார்பாக செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட்கள் குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்கிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஒருபுறம் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவே விஜய் நிற்பது போன்று கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்-அவுட்களை வைத்திருப்பதன் மூலம் விஜய் சொல்ல வருவது என்ன? அவர் தனது நிலைப்பாட்டை தெளிவாக்கியுள்ளாரா என்பதை அறிய அரசியல் நோக்கர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. பட மூலாதாரம்,X/ACTORVIJAY படக்குறிப்பு, பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து ஏற்கெனவே பேசியுள்ளார் விஜய் (கோப்புப்படம்) “இதுதான் என் கொள்கை என்பதை அவர் முழுமையாகத் தெளிவுபடுத்தவில்லை. கட்-அவுட்கள் வாயிலாக தமிழ் தேசியம், திராவிடம், தேசியம் மூன்றையும் அவர் முழுமையாக, தெளிவாக முன்னிறுத்தவில்லை. அவர் ஒருவேளை திராவிடம்தான் தனது கொள்கை என்று நினைத்திருந்தால், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை எழுந்தபோது ஆளுநரைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் பெரியார், சமூக நீதிக்காக அம்பேத்கர், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காமராஜர் கட்-அவுட்களை வைத்திருக்கலாம் என ப்ரியன் கருதுகிறார். ஆனால், “பெரியார் கட்-அவுட் வைத்திருப்பதால் கடவுள்-மறுப்பு கொள்கையில் அவரின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை” என்கிறார் ப்ரியன். “எனினும், புதிதாக கட்சி தொடங்குபவர்கள், இன்றைய சூழலில் பெரியாரை முன்னெடுப்பதற்குப் பெரிதும் தயங்குவர். ஆனால், அவரை தைரியமாக முன்னெடுத்ததற்குப் பாராட்ட வேண்டும்.” கடந்த இரண்டு ஆண்டுகளாக, விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக நிகழ்ச்சி நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் அப்படி நடைபெற்ற கல்வி நிகழ்ச்சியில், ‘பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள்’ என்று ஏற்கெனவே கூறியிருந்தார். பெரியாரின் பிறந்த நாளன்று பெரியார் திடலுக்குச் சென்று அவருடைய சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தினார். மேலும், நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு குறித்தும் அவர் பேசியுள்ளார். பட மூலாதாரம்,LOYOLAMANI/X படக்குறிப்பு, சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்த தனது நிலைப்பாட்டை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோருக்கு கட்-அவுட்கள் வைத்திருப்பதன் ‘அரசியல் கணக்கு’ குறித்து விளக்கினார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி. “கட்-அவுட்கள் ஓரளவு தெளிவாக இருப்பதாக நினைக்கிறேன். தான் குறிவைக்கும் வாக்கு வங்கியை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அம்பேத்கர் மூலம் தலித் வாக்கு வங்கியை குறிவைக்கிறார். பெரியார் மூலம் சமூக நீதியை முன்னிறுத்துகிறார். காமராஜரை முன்னிறுத்துவதன் வாயிலாக, காங்கிரஸ் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை குறிவைக்கிறார். வேலுநாச்சியார் மூலமும் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கி குறிவைக்கப்படுகிறது,” என்கிறார் அவர். எம்ஜிஆர், அண்ணா இடம்பெறாதது ஏன்? மறைந்த தலைவர்கள் அண்ணா, எம்ஜிஆர் குறித்து நேர்மறையான கருத்துகளைக் கூறி வரும் விஜய், அவர்களுக்கு கட்-அவுட் வைக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், அவ்விரு தலைவர்களுக்கும் கட்-அவுட் வைத்தால் விஜய் தனது தனித்தன்மையை நிரூபிக்க முடியாது என்கிறார் ப்ரியன். ஏற்கெனவே, விஜய் திரைப்படங்களில் எம்ஜிஆர் பாடல்கள், அவர் குறித்த குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தவெக கொடி பாடலில், எம்ஜிஆர், அண்ணாவின் படங்கள் பின்னணியில் இடம் பெற்றிருந்தன. மேலும், செப்டம்பர் 15 அன்று அண்ணாவின் பிறந்த நாளன்று அவரை நினைவுகூர்ந்து விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். இருப்பினும், “அண்ணா, எம்ஜிஆருக்கு கட்-அவுட் வைப்பது நியாயமும் இல்லை. அண்ணா ஆரம்பித்த கட்சியும் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியும் ஏற்கெனவே தமிழகத்தில் உள்ளது. இவர்களை முன்னிறுத்தி வாக்கு கேட்பதாக அக்கட்சியினர் சொல்லிவிடக்கூடாது என்பதால் தவிர்த்திருக்கலாம்” என்கிறார் ப்ரியன். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் கட்-அவுட்களை வைத்திருப்பதாக ப்ரியன் கூறுகிறார். பட மூலாதாரம்,𝗧𝗩𝗞 𝗜𝗧 𝗪𝗜𝗡𝗚/X படக்குறிப்பு, தமிழ் மன்னர்களுக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளதை விமர்சிக்கிறார், பத்திரிகையாளர் மணி இதுதவிர, தமிழ்த்தாய், சேர, சோழர், பாண்டிய மன்னர்களுக்கும் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநாட்டு பந்தலின் நுழைவுவாயிலில் சுதந்திர போராட்ட வீரர்கள், சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன், மன்னர் பெரும்பிடுகு முத்தரையர், தீரன் சின்னமலை, மன்னர் பூலித்தேவன், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன் உள்ளிட்டோரின் கட்-அவுட்களும் வைக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. “சேர, சோழ, பாண்டியர்களின் கட்-அவுட்களை வைத்திருப்பது, தமிழ் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விஷயமாக உள்ளது. கட்-அவுட்களில் இடம்பெற்றுள்ள சில தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்களை குறிப்பிட்ட சாதியினர் கொண்டாடுகின்றனர் என்பதற்காக அவர்களை சாதி ரீதியானவர்கள் என முத்திரை குத்துவது சரியில்லை. தமிழ் மன்னர்களை முன்னெடுத்ததால் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழ்த் தேசியம் என்று இதைச் சொல்ல முடியாது. ஏனெனில், சீமான் பெரியாரை ஏற்றுக்கொள்ளவில்லை” என்கிறார், ப்ரியன். சிந்தனையில் தெளிவின்மையா? ஆனால், மன்னர்களுக்கு கட்-அவுட் வைத்திருப்பது குறித்த ப்ரியனின் இந்தக் கருத்துடன் முரண்படும் பத்திரிகையாளர் ஆர். மணி, அதைக் கடுமையாக விமர்சிக்கிறார். “மன்னர்களுக்கு கட்-அவுட் வைத்தது அபத்தமாக இருக்கிறது. ஜனநாயகத்தில் மன்னர்களுக்கு எந்த வேலையும் இல்லை. இது, சிந்தனையில் தெளிவின்மையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார். “எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என நினைத்தால் அவரால் வெல்ல முடியாது. தெளிவான பாதை இருக்க வேண்டும். யார் மனதும் கோணக்கூடாது என நினைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தால் அவர் படுதோல்வியைச் சந்திப்பார்," என்று விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் மணி, ஒருவேளை அவருக்கு போகப் போக தெளிவு வரலாம் எனக் கருதுவதாகக் கூறுகிறார். பட மூலாதாரம்,TVK HQ படக்குறிப்பு, விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியபோது தமிழக வெற்றிக் கழகம் இந்த கட்-அவுட்கள் மூலம் உணர்த்த முயலும் செய்தி என்னவென்று பிபிசி தமிழிடம் பேசிய தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி, "இவை அனைத்தையும் பற்றி விஜய் இன்று மாநாட்டில் பேசுவார்," என்று தெரிவித்தார். "பெரியார், அம்பேத்கர், காமராஜர் சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் போராடியவர்கள். அதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். விஜய் இந்தத் தலைவர்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்” என்றார். மேற்கொண்டு பேசியவர், "பெண் விடுதலை இல்லை என்றால் சமூக விடுதலை இல்லை. பெண்கள் அதிகாரத்திற்கு வந்தால்தான் சமூக விடுதலை கிடைக்கும். பெண் தலைவர்கள், போராளிகளை அடையாளப்படுத்தி, பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வியை வலியுறுத்தும் விதமாக அவர்களின் கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன" என்றார். இந்த கட்-அவுட்கள் பிரதிபலிக்கும் செய்தியைப் பார்த்தால், அவை ஒரு "ஒட்டுமொத்த கலவையாக" இருப்பதாகவும், "அரசியலில் விஜயின் எண்ண ஓட்டம் என்னவென்பதைக் காட்டும் வகையில் இல்லாமல், அவர் குழப்பமான மனநிலையில் இருப்பதாகவே காட்டுவதாகவும்" கூறுகிறார் ப்ரியன். ஆனால், "இது கலவையாக இல்லை, ஒரு கொள்கையாக இருக்கிறது" என்று கூறும் லயோலா மணி, ஒவ்வொரு தலைவர் குறித்தும் விஜய் கூறும்போது அதன் நோக்கம் சென்று சேரும் எனவும், மன்னர்களை முன்னிலைப்படுத்தியதன் நோக்கத்தையும் அவர் மாநாட்டில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம்,TVK IT WING/X மற்ற கட்சிகளுக்கு உணர்த்துவது என்ன? மற்ற அரசியல் கட்சிகள் மீது மாநாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? “திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மீது தவெக மாநாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அக்கட்சியின் கொள்கைகள்தான் தீர்மானிக்கும்” என்கிறார் ப்ரியன். வக்பு வாரியம், சாதிவாரி கணக்கெடுப்பு, ஒரே நாடு-ஒரே தேர்தல் உள்ளிட்ட சமகால பிரச்னைகள் குறித்து அவருடைய நிலைப்பாட்டை வைத்துதான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார் அவர். “தனது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான் என விஜய் கூறியிருப்பதால், திமுகவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால்தான், தன்னை நிலைநிறுத்த முடிகிறதோ இல்லையோ, ஓரளவுக்குத் தாக்கத்தையாவது ஏற்படுத்த முடியும்” என்கிறார் பத்திரிகையாளர் மணி. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cd7nn3pxgepo
  22. (புருஜோத்தமன் தங்கமயில்) இளையோருக்கும் பெண்களுக்குமான அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிற குரல்கள் தேர்தல் காலங்களில் அதிகமாக கேட்பதுண்டு. இம்முறையும் வேட்புமனுத் தாக்கல் முடியும் நாள் வரையில், அந்தக் குரல்கள் பலமாகவே கேட்டன. அதிலும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இளையோருக்கும் பெண்களுக்குமான இடத்தை பிடித்து வைத்துக் கொண்டு, பெருந்தடையாக இருக்கும் மூத்த அரசியல்வாதிகளும்கூட அந்தக் குரல்களை எழுப்பினர்கள் என்பதுதான் வேடிக்கையானது. வழக்கமாக மூத்த – பழுத்த அரசியல்வாதிகளினால் நிறையும் இலங்கையின் தேர்தல் களம், ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியோடு இளையோர், புதியவர்களுக்கான களமாக இம்முறை மாறியிருக்கின்றது. அதன் பிரதிபலிப்புக்களை, தமிழ்த் தேசிய அரசியல் களமும் ஓரளவு உள்வாங்கியிருக்கின்றது. பெண்களுக்கான அரசியல் – தேர்தல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில், தமிழ்த் தேசியக் கட்சிகளோ அமைப்புக்களோ போதிய அக்கறையை வெளிப்படுத்துவதில்லை. அண்மையில் கூடிக் கலைக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் கூட, பெண்களுக்கான பிரதிநித்துவம் என்பது பூச்சியமாக காணப்பட்டது. கட்டமைப்புக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பதின்நான்கு பேரும் ஆண்கள். அதிலும், மூத்தவர்கள். ஒரு பெண்ணைக் கூட இணைக்கவில்லையே என்கிற எந்தவித ஆதங்கமோ அங்கலாய்ப்போ கூட அவர்களிடம் இருக்கவில்லை. ஒருவித ஆணாதிக்க மனநிலையோடு நின்று விடயங்களை அணுகி, கீழே போட்டுடைத்து ஓய்ந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போதும், ஒப்புக்காகவே பெண்களை இணைத்துக் கொள்ளும் நிலை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் காணப்பட்டது. வெற்றிபெறக் கூடிய, பாராளுமன்ற அரசியலில் பங்களிக்கக் கூடிய பெண்களை உள்வாங்கி, அவர்களுக்கான அங்கீகாரத்தைக் கொடுப்பது சார்ந்து தமிழ்க் கட்சிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பெண்களை வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கவில்லை என்றால், விமர்சனங்கள் எழும், அதனைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே வெற்றிக்கு அண்மையில் வரமுடியாத பெண்களை உள்வாங்குவதில் குறியாக நின்றிருக்கின்றன. இது, தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடங்கி அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் பொருந்தும். இலங்கை உள்ளிட்ட தென் ஆசிய நாடுகளில் பெண்களில் அரசியல் வருகை என்பது, பெரும்பாலும் அனுதாப அலையை வாக்குகளாக மாற்றுவதற்காகவே நிகழ்ந்திருக்கின்றன. உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறீமாவோ பண்டாரநாயக்க தொடங்கி, அவரின் மகள் சந்திரிக்கா குமாரதுங்க உட்பட, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கடந்த காலங்களில் அழைத்து வரப்பட்ட சசிகலா ரவிராஜ், அனந்தி சசிதரன் வரையில் அதுதான் வரலாறாக இருந்திருக்கிறது. இந்தப் பெண்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் அரசியல் ரீதியாக படுகொலை செய்யப்பட்டிருப்பார்; காணாமல் ஆக்கப்பட்டிருப்பார் அல்லது பதவியில் இருக்கும் போது உயிரிழந்திருப்பார். அப்படியான சூழலில், இந்தப் பெண்களைக் காட்டி அனுதாப வாக்குகளைத் திரட்டுவதுதான் இந்தக் கட்சிகளின் பிரதான வேலையாக இருந்திருக்கின்றன. இந்தியாவின் இரும்பு மனுசியாக பார்க்கப்படும் இந்திரா காந்தியே, அப்படியான அரசியல் வாரிசுதான். இதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மட்டுமே, அவரின் அரசியல் குருவான எம்.ஜி.ஆரையே கட்சிக்குள் எதிர்த்து நின்று தனித்துவமாக எழுந்து ஆட்சி அதிகாரம் பெற்றவர். அவர் மீது அனுதாப அலைக்கான அடையாளத்தை ஒட்ட வேண்டியதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2015 பொதுத் தேர்தல் காலத்தில் சசிகலாவை தேர்தல் அரசியலுக்கு அழைத்துவர முயன்றது. குறிப்பாக, மறைந்த இரா.சம்பந்தனின் யோசனையில் அதற்கான வேலைகளில் எம்.ஏ.சுமந்திரன் ஈடுபட்டார். அது, பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அடிப்படையாக கொண்ட அழைப்பல்ல, மாறாக படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மீதான அனுதாபத்தினை வாக்குகளாக மாற்றும் உத்தி சார்ந்தது. அடிப்படையில், அப்படியான நிலை என்பது அபத்தமானது. அதனால், ஒருபோதும் பெண்களுக்கான பிரதிநிதித்துவப் பங்களிப்பு காக்கப்படுவதில்லை. அதில், பெரும்பாலானவை, வெற்றுக்கனவுகளாவே முடிந்து போயிருக்கின்றன. அனுதாப அலைக்காக அரசியலுக்குள் உள்வாங்கப்பட்ட ஒருசில பெண்கள், தேர்தல் அரசியலுக்குள் வென்று, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஆட்டுவிக்கும் கருவிகளாக அந்தப் பெண்கள் இருந்தார்களா என்றால், அதன் பதில் எதிர்மறையானது. பெண்களின் அரசியல் பங்களிப்பு, அதனூடான பிரதிநித்துவம் என்பது இயல்பாக நிகழ வேண்டும். அதற்கான வாய்ப்புக்களை தடுக்காது, அனுமதிப்பதுதான் கட்சிகள் செய்ய வேண்டிய முதல் வேலை. இம்முறை தேர்தல் களத்தில், தேசிய மக்கள் சக்தியில்தான் கிட்டத்தட்ட 20 வீதமான வேட்பாளர்கள் பெண்கள். அவர்களினால்கூட குறைந்தது 35 வீதத்தைத் தாண்டிய வேட்பாளர் நியமனத்தை பெண்களுக்கு வழங்க முடியவில்லை. ஏனைய கட்சிகளை நோக்கினால், 10 வீதமளவில்தான், ஒப்புக்காக பெண்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றன. அதிலும், தமிழரசுக் கட்சியின் நியமனக்குழுவின் சார்பில் பேசிய சுமந்திரன், தகுதியுள்ள பெண் வேட்பாளர்களைத் தேடுவதில் சிக்கல் இருப்பதாக ஊடகங்களில் தெரிவித்தமை ஒரு மோசமான முன்னுதாரணம். ஏனெனில், அடுத்த நாளே, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் போது, அதில் உள்ளடக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்பட்டது. அது, தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்கான பட்டியல் வெளியானதும் அதிகமாகவே பிரதிபலித்தது. குறிப்பாக, வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட கிருஷ்ணவேணி ஶ்ரீதரன் (கிட்டு) மற்றும் சுரேக்கா சசீந்திரன் தொடர்பில் எதிர்மறைக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. கிட்டு என்கிற கிருஷ்ணவேணியின் கள அரசியல் பங்களிப்பு என்பது திடீரென ஒருநாளில், சுமந்திரன் வேட்பாளர் பட்டியலை வாசித்ததும் உருவானதல்ல. அவருக்கான கடந்த கால அரசியல் வரலாறு கனதியானது. தமிழ்த் தேசிய அரசியலில், 2004 பொதுத் தேர்தலிலேயே, பாராளுமன்ற பிரதிநித்துவத்தைப் பெற்றிருக்கக் கூடிய ஒருவராக அவர் இருந்தார். அதனை, அன்றைக்கு கூட்டமைப்பின் பிதாமகர்களாக இருந்து, அரசியலை இயக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளே செய்யத் தலைப்பாட்டார்கள் என்பதுதான் உண்மை. கிட்டு தமிழ்த் தேசிய கள அரசியலுக்குள் அரங்கச் செயற்பாடுகள் ஊடாக வந்தவர். கெடுபிடியான 2000களின் ஆரம்பத்தில், சிதம்பரநாதனின் அரங்கச் செயற்பாட்டுக்குழுவில், முக்கிய இளைஞியாக நின்று கவனம் பெற்றவர். அவர்களின் அரங்கச் செயற்பாடுகளும் சேர்ந்துதான் ‘பொங்கு தமிழ்’ என்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிக்கு வித்திட்டது. அதிலும், களச் செயற்பாட்டாளராக கிட்டுவின் பங்களிப்பு அதிகம். அன்றிலிருந்து, புலிகளின் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் கூறுகளில் பங்களித்து, தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கியவர். அவர், 2004 பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக உள்வாங்கப்பட்ட போது, தன்னுடைய இளைய வயதினைக் காட்டி ஒதுங்கினார். அந்த இடத்தில்தான், பத்மினி சிதம்பரநாதன் வேட்பாளராக பிரதியிடப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரானார். முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னரான காலத்திலும் அவரை, தேர்தல் அரசியலுக்குள் அழைத்து வருவது சார்ந்து கூட்டமைப்பு, குறிப்பாக தமிழரசுக் கட்சி அக்கறை காட்டியது. 2015 பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலுக்குள் கிட்டுவை உள்வாங்குவதற்கான பேச்சுக்களில் சுமந்திரன் ஈடுபட்டார். 2020 பொதுத் தேர்தல் காலத்திலும் அது தொடர்ந்தது. ஆனால், அப்போதெல்லாம் மறுத்துரைத்த கிட்டு, தற்போது தேர்தல் களம் வந்திருக்கிறார். அப்படியான நிலையில், ‘தகுதியான பெண் வேட்பாளர்கள் இல்லை என்று ஊடகங்களில் நேற்று அறிவித்தோம், இன்று கிடைத்திருக்கிறார்கள்..’ என்று சுமந்திரன் கூறியமை அவசியமில்லாத ஒன்று. அவர், வேட்பாளர் பட்டியலில் கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களுக்காக கிட்டுவை, உள்வாங்கப் பேச்சுக்களை நடத்திய ஒருவர். அதனை, வெளிப்படையாக அறிவித்திருந்தால், எதிர்மறை விமர்சனங்கள் குறைந்திருக்கும். சசிகலாவின் தொலைக்காட்சிப் பேட்டியொன்று கடந்த வாரம் ஒளிபரப்பானது. அதில், தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பிலான சசிகலாவின் பார்வை எவ்வளவு குறுகியது என்பது அப்பட்டமாக வெளிப்பட்டது. அந்தப் பேட்டி முழுவதும், தமிழரசுக் கட்சிக்காரர்கள், அனுதாப வாக்குகளுக்காக அன்றி, வேறெந்த தேவைக்காகவும் சசிகலாவை அரசியலுக்கு அழைக்கவில்லை என்பது புரிந்தது. அவரிடம் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் தொடர்பில் எந்தவித புரிதலும் இல்லை. அரசியலை, பதவிகளுக்கான கட்டமாகவே பார்க்கும் தன்மை வெளிப்பட்டது. தான் பிரதிநிதித்துவம் செய்யப்போவதாக கூறும், தென்மராட்சியின் தேவைகள், அத்தியாவசியங்கள் தொடர்பிலேயே விளக்கமற்று இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அவர், அதன் பின்னரான அரசியல் செயற்பாட்டுக் களத்தில் எந்தவித பங்களிப்பையும் செய்யவில்லை என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். ரணிலுடனான சந்திப்பு, பெண்களுக்காக வேட்பாளர் நியமனம் உறுதிப்படுத்தலுக்கான சந்திப்பு என்று ஒருசில நிகழ்வுகளில் பங்களித்தமையைத் தாண்டி, அவருக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் அற்றே இருந்திருக்கிறார். அப்படியான நிலையில், கிட்டு போன்றவர்களின் கடந்த கால கள அரசியல் பங்களிப்பை, வெளிப்படையாக அறிவித்து, இந்தத் தேர்தல் அரசியலுக்கு அழைத்துவரப் பட்டமைக்கான காரணங்களை தமிழரசுக் கட்சி விளக்கியிருக்க வேண்டும். ஏனெனில், கிட்டு வேட்பாளராக அறிமுகப்படுத்தப்படும் போதே, அவர் சுமந்திரனின் வெற்றிக்காக களமிறக்கப்பட்டவர் என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டமையானது அவசியமற்றது. தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், கிட்டுவின் உரை அதனைப் பிரதிபலித்தது. இன்னொரு பக்கத்தில், சுரேக்காவின் வேட்பாளர் நியமனம் பற்றி சமூக ஊடகங்கள் மிகமோசமான கண்ணோட்டத்தில் விடயங்களை அணுகின. இரண்டாந்தர சிந்தனைகள் தொடங்கி, சாதிய அடையாளம் பூசி அவதூறுகளைப் பரப்பியமை வரையில் நடந்தன. அதுவும், தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவதாகக் காட்டிக் கொள்ளும் தரப்பினர், அவற்றைச் செய்தார்கள் என்பதுதான், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. சுரேக்காவின் அரசியல் அணுகுமுறை - கல்வித் தகைமைகள் தொடர்பில் ஆராயப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால், அவரின் சாதியப் பின்னணி, ஆராயப்பட்டு அதற்கு அர்த்தம் கற்பிக்கப்படுவதனை ஒருபோதும் அரசியல் விமர்சனமாக கருத முடியாது. விடுதலைக்காக போராடும் சமூகம், தன்னுள் காணப்படும் சாதிய, பெண் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நின்று போராட வேண்டும். மாறாக, தடித்த சாதிய, ஆணாதிக்கத் தனத்தில் நின்று அரசியலை அணுகுதல், அதுவும் தமிழ்த் தேசிய அரசியலை அணுகுதல் என்பது, எமக்காக போராடி மாண்ட ஆயிரமாயிரம் உறவுகளை கேலிப்படுத்துவது போன்றது. தமிழரசுக் கட்சி ஜனநாயகப் பாராம்பரியத்துக்குள்ளால் வந்து நிற்கும் கட்சி. ஏனைய முன்னாள் ஆயுத இயக்கங்கள் போன்றதல்ல. அந்த இயக்கங்களில் இருந்த பெண்கள், அந்த இயக்கங்கள் அரச ஆதரவுக் குழுக்களாக இயங்க ஆரம்பித்த தருணத்திலேயே, விலகிக் கொண்டு விட்டார்கள். அந்த இயக்கங்கள் முழுவதுமாக ஆண்களினால் ஆட்சி செலுத்தப்படுவது. ஆனால், தமிழரசுக் கட்சி ஓர் ஆயுத இயக்கமல்ல. அதனை, 2004களில் மீட்டெடுத்துக் கொடுத்த புலிகள், பெண்களுக்கான பிரதிநித்துவம் தொடர்பில் அக்கறையோடு இயங்கிய போராட்ட இயக்கம். அப்படியான நிலையில், பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை காப்பதற்கான முயற்சிகளில் ஆக்கபூர்வமாக இயங்க வேண்டியது, தமிழரசுக் கட்சியின் கடமை. அதனை, அந்தக் கட்சி இதுவரையும் செய்யவே இல்லை. தேர்தல்கள் வந்தால் மாத்திரம், ஒப்புக்காக பெண் வேட்பாளர்களைத் தேடுவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கட்சிக் கட்டமைப்புக்குள் முதலில் குறைந்தது 30 வீதமான அளவு, பிரதிநிதித்துவத்தை வழங்கி பெண்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும். அப்படியான அங்கீகாரம், பெண்களை கட்சி – கள அரசியலுக்குள் அழைத்து வருவதற்கான உந்துதலை வழங்கும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத் திருத்தத்தின் வழியாக, உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களில் பிரதிநிதித்துவம் ஓரளவு காக்கப்பட்டது. அதனால், சில பெண்களுக்கான களம் திறந்தது. குறிப்பாக, ஒரு உள்ளூராட்சி மன்றதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் முப்பது வீதமளவில் பெண்கள் இருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனால், வட்டாரங்களில் நேரடியாக பெண்கள் வெற்றிபெறவில்லை என்றாலும், விகிதாரச முறையில் ஆசனங்களை வென்ற கட்சிகள் பெண்களுக்கு அவற்றை ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால், நேரடியாக வட்டாரங்களை வெல்ல முடியாத கட்சிகள், பெண்களை நியமிக்க வேண்டி வந்தது. அதுவும், விரும்பி நிகழ்ந்தது அல்ல. மாறாக, சட்டம் போட்டுச் செய்யப்பட்டது. அந்தச் சூழல், சில பெண்களை அரசியலுக்குள் அழைத்து வந்தது. ஆனாலும், அவர்களில் எத்தனை பேரை, கள அரசியல் எடுத்துக் கொண்டது அல்லது உள்வாங்கியது என்ற கேள்வி முக்கியமானது. அர்த்தமுள்ள அரசியல் என்பது, அனைத்துக் கட்டங்களிலும் திறக்க வேண்டும். அதனை, தொடர்ச்சியாக போராடும் சமூகக் கூட்டமான தமிழர்கள், அர்ப்பணிப்போடு ஏற்றுச் சுமக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியலில் வெற்றுக் கட்டங்கள் உருவாகும். அதனை, கானல் வெளி நிரப்பும். அப்போது, மக்கள் தமிழ்த் தேசிய அரசியல் மீது நம்பிக்கையிழப்பார்கள். பெண்களை வாக்களிக்கும் இயந்திரங்களாகவோ, அனுதாப அலைக்கான கருவிகளாகவோ மாத்திரம் பார்க்காமல், அரசியலின் பெருங்கூறாக உள்வாங்க வேண்டும். அதுதான், பெண்களுக்கான அரசியல் பங்களிப்பையும் பிரதிநிதித்துவத்தையும் உண்மையாக உறுதி செய்யும். -காலைமுரசு பத்திரிகையில் ஒக்டோபர் 20, 2024 வெளியான பத்தி. http://maruthamuraan.blogspot.com/2024/10/blog-post_20.html
  23. Tuesday, October 15, 2024 காமேச்வரன் தன்னுடைய சிறு வயதிலேயே அன்னையை இழந்து, பின்னர் தந்தை கல்யாணம் செய்துகொண்ட சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரயிலில் அவனை சந்திக்கும் வத்சன் என்பவர் அவனைக் கூட்டிச்செல்கிறார. அவருக்கு சமையல் கலை தெரியும் என்பதால் ஒரு கோவிலில் சமைக்கும் வேலை அவருக்கு. அவருடனேயே தங்கி கொள்ளும் காமேச்வரன், சமையலைக் கற்றுகொண்டு அவரையே குருவாக எண்ணிக் கொள்கிறான். அவரின் இறப்புக்கு பின்னர் அவனுடைய நினைவுகளில் அவர் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார். காமேச்வரன் இப்பொழுது காசி, பத்ரிநாத் எனச் செல்லும் யாத்ரிகர்களுக்கு சமைப்பவனாக தனி ரயிலில் வேலைக்கு இருக்கிறான். அவன் சமையலை அனைவரும் புகழ்கிறார்கள். அப்படி ஒரு பயணத்தில்தான் ரங்கமணி அம்மாள், ஜோதிடர் முத்துசாமி என அவனுக்கு அறிமுகமாகிறார்கள். ரங்கமணி அம்மாவுக்கு கணவர் இல்லை. கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே கணவனை இழக்கிறார். குழந்தை இல்லாததால் தன்னுடைய மாமியார் சுவீகாரம் எடுத்துக் கொள்ள வற்புறுத்துவதால் சொந்தத்தில் துரை என்பவனை மகனாக ஏற்றுக் கொள்கிறார். ரங்கமணி கணவரின் குடும்பத்தில் சில தலைமுறைகளாகவே குழந்தை பாக்கியம் இல்லை. அதற்கு ஒரு கதையும் சொல்கிறார்கள். இப்பொழுது துரைக்கு திருமணம் ஆகி ஏழாண்டுகள் கழிந்தும் குழந்தை இல்லை. யாத்திரை ரயிலில் போகும்பொழுது எங்களின் குடும்பத்துக்கு பிடித்த பாவம் போகுமா, குழந்தை பாக்கியம் கிடைக்குமா என ஜோதிடர் முத்துசாமியிடம் ரங்கமணி அம்மாள் ஜோசியம் கேட்கிறார். ஜோசியம் பார்க்கும் முத்துசாமி, துரைக்கு புத்திர பாக்கியம் இல்லை, ஆனால் அவனின் மனைவி பங்கஜத்துக்கு பாக்கியம் உண்டு என்கிறார். ரங்கமணி அம்மாள் ஜோதிடரை வியந்து பார்க்கிறாள். பக்தியும், நல்ல அழகும் உள்ள இளைஞன் காமேச்வரனை தனது வீட்டுக்கு அழைக்கிறாள் ரங்கமணி. ரங்கமணிக்கு அவன் மேல் ஏற்பட்ட பிரியம் என்ன வகையானது என்பதை நாவல் விளக்கவில்லை. தான் அடையாத ஒன்றை தன் மருமகள் அடையட்டும் என்ற எதிர்பார்ப்பா என்பதும் அப்படியே. தனது தத்து பிள்ளையாக என் வீட்டில் வந்து இருந்து, உன்னுடைய பூஜைகளை நடத்து என அழைக்கிறாள். முன்பே ஒரு பிள்ளை உங்களுக்கு இருக்க, நான் அங்கே வந்து இருந்தால் பிரச்சினை வரும், என்னால் உங்கள் சொல்லையும் தட்ட முடியாது.. வேண்டுமானால் ஒரு சமையல்காரனாக நான் வந்து இருக்கிறேன் என்கிறான் காமேச்வரன். எப்படியோ நீ வந்து இருந்து, உன்னால் சில நல்ல விஷயங்கள் நடந்தால் நல்லதே என்கிறாள் ரங்கமணி. துரையின் மனைவி பங்கஜத்துக்கு காமேச்வரன் மேல் மோகம் தோன்றியது போல் இருந்தாலும், அவள் தனது கணவனை நேசிக்கிறாள். சக்தி உபாசகனாக இருக்கும் காமேச்வரனை அவள் மிகவும் மதிக்கிறாள். மாமியார் ரங்கமணியின் நோக்கம் புரிந்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல் துரையுடன் நெருங்குகிறாள். இதற்கு முன்னரே இருவரும் கணவன் மனைவி என்றாலும், இப்பொழுதுதான் காதல் செய்வது போல பழகுகிறார்கள். அதன் விளைவாக பங்கஜம் தாய்மை அடைகிறாள். அதற்கு முன்பாகவே காமேச்வரன் பிடி அரிசி என்ற திட்டத்தின் மூலம் ஊரில் உள்ள பள்ளியில் பயில வரும் குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுக்கிறான். அதற்காக எல்லோரிடமும் உதவி கேட்கிறான். அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் அவனுக்கு உதவுகிறார்கள். தொடர்ந்து ரங்கமணி அம்மாவின் வீட்டில் பூஜை செய்கிறான், ஊரில் உள்ள சிலர் அவனிடம் வந்து குங்குமம் வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் ஊரில் உள்ளோர் வதந்தியை கிளப்புகின்றனர். பங்கஜம் தாய்மை அடைய காரணம் காமேச்வரன் தான் என பேசுகின்றனர். இதை அறிந்த காமேச்வரன், ஜோசியர் முத்துசாமியிடம் சென்று கேட்கிறான். அவரோ, உண்மையாய் நடந்தால் என்ன, நடந்தது போல பேச்சு கிளம்பினால் என்ன இரண்டும் ஒன்றுதான். ஜோசியர்களைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் ஒரு விளக்கம் சொல்வார்கள். அப்படிச் சொன்னீர்களே, இப்படியாகி விட்டது என்றால் அதற்கும் ஒரு காரணம் சொல்லி தான் சொன்னதே சரி என்று நிற்பார்கள். காமேச்வரன் பின்னர் தான் ரங்கமணி வீட்டை விட்டு போக முடிவு செய்கிறான். முன்பு செய்த வேலையான ரயிலில் சமைக்கும் வேலைக்கு திரும்ப போகிறான். அத்தனை வருடங்களாக திருமணத்தை தள்ளிப் போட்ட காமேச்வரன், தனக்குப் பெண் பார்க்குமாறு ரயில் யாத்திரையை நடத்தும் நாயுடுவிடம் சொல்கிறான். ஒரு நல்ல விஷயம் நடக்கிறதென்றால் அதற்கு காரணம் நம்மைச் சுற்றியும் நடக்கும் நல்ல நிகழ்வுகள் மற்றும் நல்ல மனிதர்களே என்பதை நளபாகம் நாவல் சுட்டிக் காட்டுகிறது. ஆன்மிகம், பக்தி என்று ஒருபக்கம் இருந்தாலும் நாம் மனிதர்கள் மேல் வைக்கும் அன்பே நம்மை கடைத்தேற்றுகிறது. யார் செய்த பாவமோ என்று நாம் நினைக்கும் அனைத்தும் அந்த அன்பின் முன்னால் அழிந்து போகின்றன. http://ippadikkuelango.blogspot.com/2024/10/nalapakam.html
  24. சி.சிவகுமாரன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்பது மாகாணங்களிலும் 31 பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ள தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியலிலும் நான்கு பெண்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. இலங்கை அரசியலில் பாலின சமத்துவம் என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் இந்த செயற்பாடு நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் விசேடமான அம்சம் என்னவெனில் பலர் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாது தேசிய மக்கள் சக்தியில் நேரடியாக இணைந்து கொண்டவர்களாக உள்ளனர். அதிகமான பெண்கள் சட்டத்தரணிகளாகவும் கல்வியலாளர்களாவும் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் போது தனது பிரசாரத்தில் தேசிய மக்கள் சக்தியானது, தாம் ஆட்சியமைத்தால் பெண்களுக்கு அரசியலில் சமவாய்ப்பை வழங்குவோம் என மக்கள் மத்தியில் வாக்குறுதியை வழங்கியிருந்தது. அதில் பிரதானமாக, பெண் ஒருவரையே நாம் பிரதமராக நியமிப்போம் என்று வாக்குறுதியும் அடங்கும். ஏனென்றால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர்களாக களமிறங்கிய 38 பேரும் ஆண்களாகவே இருந்தனர். இறுதியாக 2019 ஆம் ஆண்டே பெண் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்தார் (அஜந்தா பெரேரா) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய கல்வியியலாளர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமராக்கினார். இவர் இலங்கையின் மூன்றாகவது பெண் பிரதமராக விளங்குகின்றார். இதற்கு முன்னதாக சிறிமா பண்டாரநாயக்க இலங்கையில் மாத்திரமல்லாது உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர். இரண்டாவதாக அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயக்க பிரதமராக விளங்கினார். ஹரிணி அமரசூரிய அநுரவின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியவர். எந்த அரசியல் பின்புலமும் இல்லாத அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை தலைவராகவும் விரிவுரையாளராகவும் விளங்கியவர். ஹரிணி அமரசூரிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டதை நாட்டின் பெண்வர்க்கத்தினர் வரவேற்றுள்ளனர். காரணம் அவர் கல்வித்துறை சார்ந்த ஒருவராக விளங்குகிறார். இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல்களிலும் துறை சார்ந்த பெண்களை களமிறக்குவதில் தேசிய மக்கள் சக்தி மும்முரமாக ஈடுபட்டது. அதன் படி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தனது பட்டியலில் பெண்களை தெரிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்தி. மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்தில் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சமன்மலி குணசிங்க, ராய் கெளி பல்தசரர், கலாநிதி கெளசல்யா ஆரியரத்ன, சட்டத்தரணி சாமனி குணசேகர ஆகியோரும், கம்பஹா மாவட்டத்தில் ஹேமாலி வீரசேகர சாமரிகா ஜயசிங்கவும், களுத்துறை மாவட்டத்தில் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹாச்சி ,ஒஷானி உமங்கா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். மத்திய மாகாணம் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, குமுதினி அபேகுணவர்தனவும் மாத்தளை மாவட்டத்தில் தீப்தி நிரஞ்சனி வாசலகே மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் செல்வி கலைச்செல்வி, சட்டத்தரணி தர்ஷனி திலகரத்ன ஆகியோரும் போட்டியிடுகின்றனர். தென்மாகாணம் தென்மாகாணத்தின் காலி மாவட்டத்தில் அனுஷா நிமாலி சருக்காலி சட்டத்தரணி ஹசாரா நயனதாரா , மாத்தளை மாவட்டத்தில் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரலதா கருணாரத்ன ஆகியோர் போட்டியிடுகின்றனர். கிழக்கு மாகாணம் திகாமடுல்ல மாவட்டத்தில் முத்துமணிகே ரத்வத்தே, மட்டக்களப்பு மாவட்டத்தில் செல்லப்பெருமாள் வனிதா திருகோணமலை மாவட்டத்தில் ஷீலா கருணாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர். வடமத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டத்தில் லெப்டினட் உதேனிகா சஞ்சீனி விஜேவந்த சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டத்தில் சட்டத்தரணி சகாரிகா கங்கானி அதாவுத மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சட்டத்தரணி நிலுஷா லக்மாலி கமகே. ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் சட்டத்தரணி உபக்சா விஜேதுங்க , அம்பிகா சாமிவேல். மொனராகலை மாவட்டத்தில் சதுரி கங்கானி வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில் சமிலா பிரசாதினி ரத்னவர்தன, சட்டத்தரணி கீதா ரத்னகுமாரி ஹேரத். புத்தளம் மாவட்டத்தில் சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க. வட மாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெண்ணிலா ரோசலிங்கம் வன்னி மாவட்டத்தில் பாத்திமா ஹாஜிஸ்தா. தேசிய பட்டியல் இதே வேளை தேசிய பட்டியலில் நான்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். பேராசிரியர் வசந்தா சுபசிங்க சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சமிலா குமுது பீரிஸ், பெனிதா பிரிஷாந்தி ஹெட்டிதந்ரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இப்பட்டியலில் 11 சட்டத்தரணிகள் இடம்பெற்றுள்ளமை முக்கிய விடயம். ஏனைய தேசிய கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் பெண்களுக்கு பெரிதாக இடம் வழங்காத நிலையில் தேசிய மக்கள் சக்தி சகல மாவட்டங்களிலும் பெண்களை நிறுத்தியுள்ளது. 1931 ஆம் ஆண்டிலிருந்து இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வரை பார்க்கும் போது 60 பெண்கள் மாத்திரமே இலங்கை பாராளுமன்றத்தை அலங்கரித்துள்ளனர். மேலும் கடந்த மூன்று பாராளுமன்றங்களிலும் 13 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்துள்ளனர். இது மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 5.7 வீதம் மாத்திரமே. உலகில் பெண்களை தலைவர்களாக கொண்ட நாடுகள் இருபதுக்கும் அதிகமாகவுள்ளன. குறித்த நாடுகளில் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐம்பது வீதத்துக்கும் அதிகமானோர் பெண்களாக உள்ளனர். ஆனால் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான பெண் சனத்தொகை விகிதாசாரத்தை கொண்டிருக்கும் இலங்கையில் இந்நிலைமை தலைகீழாக உள்ளது. எனினும் இலங்கை அரசியலில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/197190

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.