Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. மிருசுவில் என நினைக்கிறேன் அண்ணை. வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை 2013 ஆம் ஆண்டு கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. வாஸ் குணவர்தன மற்றும் ஏனைய பிரதிவாதிகள் தம்மை அந்த தண்டனைகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன் இன்று (08) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. மரண தண்டனை இந்தத் தீர்ப்பை நீண்ட விசாரணைக்குப் பின்னர், உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒரு உப பொலிஸ் அதிகாரி மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குவர். https://tamilwin.com/article/six-people-including-vaas-gunawardena-to-death-1723103562
  2. தொடருங்கோ அண்ணை. சுவியண்ணை கைலாசா போல இடம் தேடுறார், நல்ல தீவாகப் பார்த்து பேசி முடிச்சுக் குடுங்கோ!!
  3. 08 AUG, 2024 | 11:06 AM ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை விட்டுப் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) புதன்கிழமை காலை இடம்பெற்ற “ 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பில்” ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நான் 1970ஆம் ஆண்டு அரசியலிற்குள் நுழைந்தேன். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறேன். எனது அனுபவத்தின்படி கூறுகின்றேன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக எமது கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார். எனவே, கட்சியை விட்டுப் பிரிந்து சென்றவர்களை நாட்டிற்காகவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காகவும் கடந்த காலங்களைப் போன்று எம்முடன் இணைந்து செயற்பட நாம் அழைக்கின்றோம். இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், என் மீது நம்பிக்கை வைத்துள்ள கட்சி உறுப்பினர்களுக்கு எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகியுள்ளேன். எனவே, எமக்கு ஒத்துழைப்பு வழங்கக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களை அன்புடன் அழைக்கின்றோம். எமது வெற்றி எமது கட்சியின் வெற்றி ஆகும். ஆகவே நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள், வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு கட்சிக்காக நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ , ஜொன்ஸ்டன் பெர்னாண்டொ , ஜயந்த கொடகொட மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/190521
  4. எனக்கு யாருடனும் போட்டி கிடையாது; ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் நான் ஒருபோதும் பாதுகாக்க மாட்டேன் - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 3 08 AUG, 2024 | 10:20 AM ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற அதேவேளை, நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காகவே தான் போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்த நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றி ஆளுமைமைய வெளிப்படுத்தியுள்ளதால் தனக்கு யாருடனும் போட்டி கிடையாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கம் ஆரம்பித்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் ஆணையை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களிடம் கோருவதாகவும் தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் புதன்கிழமை (07) நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியம் அல்லது கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும், அவ்வாறு செய்தால் இலங்கைக்கு அந்த நிதியை இழக்க நேரிடும் எனவும் எனவே அனைத்து வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு உண்மையை கூற வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சிலரால் ஊழலைப் பற்றி பேச மட்டுமே முடிகிறது. ஆனால் ஊழலைத் தடுக்க பல சட்டங்களை இயற்றியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மோசடி ஊடாகச் சம்பாதித்த சொத்துகள் தொடர்பாக விசாரிப்பதற்கான சட்டமூலத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் தாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது: ''ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்திய பின்னர் முதன்முறையாக ஊடகவியலாளர்களைச் சந்திக்கத் தீர்மானித்தேன்.வேறு எவரும் முன்வராத காரணத்தினால் தான் இன்று நான் ஜனாதிபதியாக செயற்படுகின்றேன். நான் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்தேன். இலங்கையின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்றும் கூறினார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து கிரீஸ் மீள 10 வருடங்கள் ஆனது. இந்தோனேசியாவிற்கு 8 வருடங்கள் பிடித்தது. இந்த பிரச்சினையை இலங்கை எவ்வாறு தீர்க்கும் என சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த பிரச்சினையை குறுகிய காலத்தில் தீர்க்க முடியும் என்று நான் நம்பினேன். இது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடினேன். அதனால் அச்சமின்றி இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். ஆனால் என்னை ஆதரிக்க எந்த ஒரு தனிக் கட்சியும் இருக்கவில்லை. பொதுஜன பெரமுனவின் ஒரு குழு எம்முடன் இணைந்தது. மற்றொரு குழு எதிர்க்கட்சிக்கு சென்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுவும் எம்முடன் இணைந்தது. சிலர் எதிர்க்கட்சியில் இணைந்தனர். நான் கட்சியொன்றில்லாமல் ஆட்சி அமைத்து இந்தப் பொறுப்பை ஏற்றேன். இப்போது முதற்கட்ட பணிகளை முடித்துவிட்டோம். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க நாம் இப்போது வழி வகுத்துள்ளோம். அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். இந்த நாட்டின் பொருளாதார முறைமை சீர்குலைந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், வரிச்சுமை அதிகரித்ததால், சிலர் அதனைச் சுமக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் அதைச் செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுக்க முடியவில்லை. நாம் உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இல்லை என்பதே எமது நாட்டு அரசியலில் உள்ள சிக்கலாகும். ஸ்திரத்தன்மை இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. பங்களாதேஷில் நடைபெறும் விடயங்களை தொலைக்காட்சியில் பார்த்தபோது, இந்த நாட்டைக் பொறுப்பேற்றிருக்காவிட்டால் எமது நாட்டின் கதி என்னவாக இருந்திருக்கும் என்று சிந்தித்தேன். பங்களாதேஷ் பிரதமருக்கு விலகுமாறு கூறப்பட்டாலும் நிர்வாகத்தை ஏற்க எந்த நிறுவனமும் இருக்கவில்லை. இராணுவம் தலையீடு செய்ய முயன்றாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். முஹம்மது யூனுஸை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டம் பிரதமராக வருவதற்கு எம்.பி.யாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அந்த நிலை எமது நாட்டுக்கு வந்தால் என்ன நடக்கும்? எமது நாடு அதிர்ஷ்டகரமான நாடு. எப்படியாவது ஒரு அரசாங்கத்தை உருவாக்கினோம். அதனால்தான் இன்று ஜனாதிபதி தேர்தலை நடத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் எதிர்காலத்தையே நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இந்தப் பாதையில் தொடர்ந்து முன்னேறி அபிவிருத்தியடைந்த நாடாக மாறப்போகிறோமா? நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப் போகிறோமா? இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கப் போகிறோமா? இல்லையேல் பழைய அரசியலில் ஈடுபட்டு பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைந்து வரிசை யுகத்திற்கு செல்லப் போகிறோமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். முகங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாட்டைக் காப்பாற்றும் வலிமையும், கொள்கையும் தங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை தான் மக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் எதிர்காலத்தையன்றி நாட்டின் எதிர்காலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தைத் தான் தீர்மானிக்க வேண்டும். இங்கிருந்து படிப்படியாக முன்னேறுவதா, நாட்டின் பிரச்சினைகளை பலத்துடன் தீர்ப்பதா அல்லது 2022இல் இருந்த நிலைக்கு செல்வதா என்பதை முடிவு செய்ய வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனும், எமக்கு கடன் வழங்கும் நாடுகளுடனும் செய்துள்ள ஒப்பந்தங்கள் எதனையும் மீற முடியாது. தற்போதுள்ள இந்த இலக்குகள் மற்றும் வரையறைகளை மாற்ற முடியாது. அப்படி செய்தால் எமக்கு நிதி கிடைக்காது. அந்த நிலையில் நமது நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். பல்வேறு கட்சிகளும் வெவ்வேறு வாக்குறுதிகளை அளிக்கலாம். ஆனால் அவற்றை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அந்த நிலையில் வெட் வரியை அதிகரிக்க நேரிடும். அதுதான் யதார்த்தம். உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா, பொய் சொல்லி ஆட்சியைப் பிடிக்கத் தயாரா என்பதைச் சிந்திக்க வேண்டும். எனவே, அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க மக்கள் ஆணையை கோருகிறேன்" என ஜனாதிபதி தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த பதில்களும் பின்வருமாறு: கேள்வி : தம்மிக்க பெரேரா போட்டியிலிருந்து விலகிய நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவில் உள்ள பெரும்பாலானோர் உங்களுடன் இருக்கிறார்கள். ஆனால் நாமல் ராஜபக்ச கடும் போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா? பதில் : போட்டி எப்படி அமையும் என்பது தெரியவில்லை. நான் யாருடனும் மோதலுக்கு வரவில்லை. நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கையை மக்களிடம் முன்வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழியை காட்டவே முன்வந்துள்ளேன். அந்த கொள்கைகளை விரும்பினால் வாக்களிக்கலாம். மற்றவர்கள் சொல்வதை நான் பொருட்படுத்தப்போவதில்லை. நாமல் ராஜபக்ஷவும் பொதுஜன பெரமுனவும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்தனர். அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இரண்டு வருடங்கள் ஒற்றுமையாக பணியாற்ற இணங்கினோம். இப்போது இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளன. வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதா அல்லது முன்னிலைப்படுத்துவதா என்பதை அந்தக் கட்சி தீர்மானிக்க வேண்டும். அதற்கிணங்க, இப்போது நாம் நாட்டுக்கு உண்மைகளை சொல்ல வேண்டும். இது எனக்கான போராட்டம் அல்ல. எதிர்காலம் என்னவென்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். எனது திட்டத்தை ஏற்றால் அதற்கு வாக்களியுங்கள் அல்லது வேறொருவருக்கு வாக்களியுங்கள். கேள்வி : வாகன இறக்குமதிக்கு அனுமதியளிப்பதன் மூலம் அதற்கான வரியை அதிகப்படுத்தி ஏனைய பொருட்களுக்கான வரிகளை குறைக்க முடியுமா? பதில் : அடுத்த வருடம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்க முடியுமென நம்புகிறோம். வருமானம் ஈட்ட எமக்கு சுங்க வரி தேவைப்படுகிறது. மேலும் நமது வெளிநாட்டு கையிருப்பு போதுமான அளவை எட்டும் வரை காத்திருக்கிறோம். அப்போது வாகன இறக்குமதிக்கான வாய்ப்புகளை வழங்க முடியும். வாகன இறக்குமதியின் மூலம் கிடைக்கும் வரி வருமானம் அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய வருமான ஆதாரமாகும். கேள்வி : இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஏராளமான வேட்பாளர்கள் உள்ளனர். உங்களை மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இந்த நாட்டு மக்களுக்காக நீங்கள் என்ன வாக்குறுதியை வழங்குகிறீர்கள்? பதில் : அடுத்த 05 வருடங்களில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம். அதை செயலில் நிரூபித்துள்ளேன். இம்முறை மட்டுமல்ல, 2001ஆம் ஆண்டிலும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டையே நான் பொறுப்பேற்றேன். அப்போதும் அந்த பொறுப்பை நிறைவேற்றி இருக்கிறேன். எனவே, இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் திறன் என்னிடம் உள்ளது. ஆனால் ஏனைய வேட்பாளர்கள் வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்கிறார்கள். அந்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது என்று அவர்களிடம் கேட்க வேண்டும். பழைய அரசியல் முறையில் செயற்பட்டதாலேயே இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தேன். கேள்வி : இந்த ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரத்துடன் இருந்த இரண்டு ஜனாதிபதிகளின் புதல்வர்கள் போட்டியிடுகின்றனர். மறுபுறம் அரச அதிகாரம் கிடைக்காத இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நான்கு முனைச் போட்டியில் மற்ற வேட்பாளர்கள் உங்களுக்கு போட்டியாக அமைவார்களா? பதில் : இவை எதுவும் எனக்கு சவால் இல்லை. நான் இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக பணியாற்றுகிறேன். ஆனால் அவர்கள் தமது எதிர்காலத்திற்காக பணியாற்றுகிறார்கள். எனவே, முடிவை நீங்களே எடுக்க வேண்டும். அனுர திஸாநாயக்க எனது நல்ல நண்பர். அவருடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்தும் எதிராகவும் அரசியல் செய்துள்ளேன். ஜனாதிபதி பிரேமதாசவை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்ட போதும் நானே காப்பாற்றினேன். கேள்வி : தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் அந்த வர்த்தமானி தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. இம்முறை அந்த 1700 ரூபா கிடைக்குமா? பதில் : தொழில் அமைச்சினால் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் சிலர் அதற்கெதிராக நீதிமன்றத்திற்கு சென்றனர். தற்போது அந்த நிறுவனங்கள் தொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இலங்கையில் இன்று விவசாய பொருளாதாரம் உருவாகியிருக்கிறது. சில நிறுவனங்களினால் அந்தத் தொகையை வழங்க முடியும் என்றால் மற்றைய நிறுவனங்கள் அதைச் செய்யாமல் இருப்பது நியாயமற்றது. சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென கூறும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட காணியை சம்பள அதிகரிப்பு வழங்கும் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த தொகையை தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கஷ்டங்களுடன் வாழ்கின்றனர். அதனால் லயன் அறைகள் உள்ள பகுதிகளை கிராமங்களாக கட்மைக்க நடவடிக்கை எடுப்போம். கேள்வி : IMF உடனான திட்டத்தின் எதிர்காலம், நடைமுறைச் செயற்பாடுகள், இதன் பின்னர் நாம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? பதில் : சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதை செயல்படுத்த வேண்டும். இந்த உடன்படிக்கையை நாம் கடைப்பிடித்தால், எமக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. மாற்றுத் திட்டங்களைக் கொண்டிருப்பவர்கள் அவற்றை வௌியிட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகள் மற்றும் நியதிகள் மாற்றப்படாது. அவர்கள் ஒவ்வொரு நாடுகளுக்குமான அளவுகோள்களை கொண்டுள்ளனர். யாராவது எதையாவது இலவசமாகக் கொடுக்க முன்வந்தால், VAT வரியை 25% ஆக அதிகரிப்பதன் மூலம் அதை ஈடுசெய்யலாம் என்று எண்ணினால், புள்ளிவிவரங்களை சீரமைக்க முடியும் என்று நினைத்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுகளை எட்டலாம். ஆனால் இந்த அளவீடுகள், வருமான அளவு மற்றும் செலவு அளவுகளை எவராலும் மாற்ற முடியாது. கேள்வி : 2048 ஆகும் போது எமது நாடு வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் இவர்களில் பலர் 2048 இல் உயிருடன் இருப்பார்களா என்று பலரும் யோசிக்கலாம். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் அதற்காக என்ன செய்வீர்கள்? பதில் : இங்குள்ள பலர் 2048க்குள் ஏன் இல்லை என்று நினைக்கிறீர்கள். இன்று 40 வயதை உடையவர்கள் அப்போது 65 வயதாகுவார்கள். இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள். அப்போது இன்று இருக்கும் பெரும்பாலானவர்கள் இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும். இந்தியா 2047இலும், சீனா 2029 இலும் வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்று கூறியுள்ளன. 2048 என்று நாம் கூறுகிறோம். எனவே தமது நாடு வளர்ச்சியடைவதை விருப்பமில்லையா? 50 வருடங்களில் சிங்கப்பூர் வளர்ச்சியடைந்தது. இந்த அரசியல் முறையை நாம் மாற்ற வேண்டும். நாம் தொலை நோக்குடன் சிந்திக்க வேண்டும். பொய் சொல்வதால்தான் இன்று இந்த நிலையில் இருக்கிறோம். இதுதான் அரசியலில் உள்ள பிரச்சினை. அதனால் தான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும். தனது கட்சியில் இருந்து கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசும்போது நாட்டின் அரசியல் வீழ்ச்சியடைகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்றுப் பிரதமர். ஆட்சியைப் பொறுப்பேற்கும் படி கூறும்போது ஏன் ஓட வேண்டும்? அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு ஆட்சி கிடைத்தால் அவர் அதை ஏற்றுக்கொள்வார். மாறாக கைவிட மாட்டார். ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு கேட்டபோதும் முடியாது என்று சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். பாராளுமன்றத்தை என்னால் நிர்வகிக்க முடியும் .ஆனால் என்னால் இதனை செய்ய முடியாது என சபாநாயகர் தெரிவித்தார். கேள்வி : உங்களுக்கும் நீதிமன்றத்துக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு உள்ளதா? சபாநாயகருக்கு பிரதம நீதியரசருடன் கலந்துரையாடி பொலிஸ் மா அதிபர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அண்மையில் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இன்று வரை அது நடக்கவில்லை. பதில் : அது அவர்கள் இருவருக்கும் இடையில் நடக்க வேண்டிய ஒன்று. நான் ஒரு பரிந்துரையையே செய்தேன். இதன்போது நீதிமன்றம் ஒரு விதமான தீர்ப்பை வழங்கியது. பாராளுமன்றம் மற்றுமொரு தீர்மானத்தை எடுத்தது. அன்று நீதித்துறைக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட போது, அப்போதைய சபாநாயகராக இருந்த அனுர பண்டாரநாயக்க தீர்மானம் ஒன்றை எடுத்தார். அது அங்கேயே முடிந்தது. நான், வெளியில் இருந்து இந்த பரிந்துரையை முன்வைத்தேன். அதனை செய்யலாமா வேண்டாமா என்பது அவரவர் முடிவு. சபா நாயகரையோ, பிரதம நீதியரசரையோ நான் வற்புறுத்த முடியாது. ஜனாதிபதி என்ற வகையில் நான் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவன். பாராளுமன்றம் வழங்கிய முடிவை நான் அமுல்படுத்த வேண்டும். கேள்வி : தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள்? மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி திட்டங்கள் என்ன? பதில் : இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியையின்போது அதுபற்றி நான் தெளிவாக எடுத்துரைத்தேன். மேலும், தமிழ் எம்.பி.க்கள் மற்றும் ஏனைய கட்சிகளுடன், குறிப்பாக அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அது குறித்து கலந்துரையாடுவோம். இதை நாம் அவசரமாக செயல்படுத்த வேண்டும். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். எனவே இந்த பிரச்சினைகளை நாம் முடிக்க வேண்டும். எரிபொருள் மற்றும் மின்சாரம் இல்லாமல் வரிசையில் நிற்கும் யுகத்திற்கு நாம் யாரும் மீண்டும் செல்ல விருப்பமில்லை. கேள்வி : அடுத்த தேர்தலில் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று எவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்? பதில் : அது மக்களின் வாக்கு உரிமையைப் பயன்படுத்துவதற்கான உரிமை. பெரும்பான்மையானவர்கள் எனது முன்மொழிவுகளை ஆதரிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கும் தலைவர்கள் தேவையா அல்லது சவால்களை எதிர்கொள்ளப் பயந்து ஓடுகின்ற தலைவர்கள் தேவையா என்பதே வாக்காளர்கள் முன் உள்ள கேள்வி. கேள்வி : பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் உங்களுடன் இருப்பதால் அவர்களுடன் இணைந்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? பதில் : என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்தால், அவர்கள் மீது வழக்குத் தொடரலாம். அது எதையும் நான் நிறுத்தவில்லை.குற்றச்சாட்டு உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதா இல்லையா என்பதை வாக்காளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இதுவரை யாரும் செய்யாத வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். குற்றச் செயல்களால் சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்படும். அனைவரும் ஊழல், ஊழல் என்று கூக்குரலிட்டாலும், அதற்கு என்ன செய்வது என்று யாரும் கூறவில்லை. ஆனால் நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனது அடுத்த பயணம் ஜனாதிபதியாக வேண்டும் என்பதே. அவர்களின் அடுத்த பயணம் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே. வாக்காளர்கள் அவர்களை நிராகரித்தால், அந்தப் பிரச்சினை அத்துடன் முடிவு பெறும். எனது ஆட்சிக் காலத்தில் யாரேனும் ஒரு எம்.பி.க்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு நான் எவ்வித அழுத்தங்களையும் பிரயோக்கவில்லை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை. அரசியலில் நாம் வெவ்வேறு நபர்களுடன்செயற்படுகிறோம். அவர்கள் திருடர்களா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது சட்டம் சார்ந்த விடயமாகும். நான் பிரதமராக இருந்த காலத்தில் பல பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இறுதி முடிவு நீதிமன்றத்திடம் உள்ளது. இப்போது ஒரு அமைச்சர் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளன. நான் அதை நிறுத்தச் சொன்னேனா? நான் அதனை நிறுத்தினால் தான் அது தவறு" என்று ஜனாதிபதி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190552
  5. பங்காளதேஷில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கிறது! பங்களாதேஷில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். மேலும், இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தலைவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் குழுக்களின் பிரதிநிதிகள் கொண்ட 13 பேருடன் அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸை இடைக்கால தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் அதிபர் முகமது ஷஹாபுதீனால் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் முகமது யூனுஸ் தலைமையில் இன்று இடைக்கால அரசு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. https://thinakkural.lk/article/307515
  6. 07 AUG, 2024 | 06:53 PM (எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் வருமான வழிகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையைச் சரியாக முன்னெடுத்தால் அரச துறைகளில் இடம்பெறும் மோசடிகளைக் குறைக்கலாம் என்பதுடன் அரச வருமானத்தையும் அதிகரிக்கலாம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (07) இடம்பெற்ற அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் முன்வைத்துள்ள அரையாண்டு அரசிறை அறிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் காணப்படுகின்ற போதும் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். குறிப்பாக மின்சார சபை இலாபமடைந்துள்ளது. என்றாலும் மின் கட்டணம் செலுத்த முடியாமல் 20வீத தொழில் துறைகள் மூடப்பட்டுள்ளன. அந்த துறைகளில் ஈடுபடும் பல்வேறு தரப்பினர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் சமூக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அதேபோன்று எரிபொருள் துறையில் சிபெட்கோ, சினபோம் நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களும் இலாபமடைந்துள்ளன. அரசாங்கத்துக்கு பாரியளவில் வரி பணம் வழங்கி இருக்கிறது. இந்த வருடத்தின் இறுதி சில மாதங்களுக்குள் சுத்திகரிக்கப்பட்ட ஒக்டேன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 195ரூபாவுக்கும் டீசல் ஒரு லீட்டர் 200ரூபாவுக்கும் நிகரான விலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எஞ்சியது வரியும் இந்த நிறுவனங்களின் இலாபமுமாகும். டீசலுக்கான அதிக வரி, லாபம் பெறுவதால் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பு ஏற்படும். போக்குவரத்து என்ற விடயத்துடன் பார்க்கையில், உணவு உற்பத்திக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இந்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதன் காரணமாகப் பல துறைகள் மூடப்படுவதால் பாரிய சமூக அழிவுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. மேலும் உணவுப்பொருட்களின் விலை கட்டுப்பாட்டை விதிக்க தவறியதால் ஏற்படப்போகும் பாதிப்பு தொடர்பாக நாங்கள் இந்த சபைக்குத் தெரிவித்தோம். இதன் காரணமாக நுகர்வோர் அதிகார சபையின் தலையீட்டின் மூலம் ஓரளவு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள எங்களுக்கு முடியுமாகி இருக்கிறது. என்றாலும் இந்த கட்டுப்பாட்டை எதிர்காலத்தில் பாதுகாத்துக்கொள்ள பொதுச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் வெளிப்படைத்தன்மையுடன் இடம்பெற வேண்டும். குறிப்பாக மக்கள் சந்தையில் ஒரு பொருளை வாங்கும்போது, அந்த பொருள் எத்தனை ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக அனைத்து துறைகளையும் டிஜிடல் மயமாக்க வேண்டும். அந்த நடவடிக்கையைச்ச் சரியாக முன்னெடுத்தால் அரச துறைகளில் இடம்பெறும் மோசடிகளைக் குறைக்கலாம் என்பதுடன் அரச வருமானத்தையும் அதிகரிக்கலாம். அதேபோன்று உணவுப்பொருட்களுக்கு அதிக வரி அறவிடாமல் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கத் தேவையான வேலைத்திட்டம் அமைக்கப்பட வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை எங்களுக்கு ஏற்படுத்த முடியும் என்றார். https://www.virakesari.lk/article/190527
  7. சியாம் படுகொலை - முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபருக்கு விதித்த மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம் 08 AUG, 2024 | 10:53 AM முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் சஜின்வாஸ் குணவர்த்தன அவரது மகன் ரவிந்து குணவர்த்தன ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. 2013 இல் முகமட் சியாம் என்ற வர்த்தகரை கொலை செய்தது தொடர்பில் முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் சஜின்வாஸ் குணவர்த்தன அவரது மகன் ரவிந்து குணவர்த்தன உட்பட ஆறு பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனையை விதித்திருந்தது. இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை தள்ளளுபடி செய்துள்ளதுடன் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. https://www.virakesari.lk/article/190554
  8. நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு நாளை காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. வீதித் தடை செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும். வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். என்பதுடன் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீதித்தடைகளை அமைப்பது தொடர்பாக இன்று துறைசார் அதிகாரிகளால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது. யாழ் மாநகர ஆணையாளர் என்.கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், மாநகர சபை அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டனர். https://thinakkural.lk/article/307499
  9. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 22பேர் கட்டுப்பணம் செலுத்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு Published By: VISHNU 08 AUG, 2024 | 01:39 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை (புதன்கிழமை) 22 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 11 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சையாக போட்டியிட 10 வேட்பாளர்களும் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 11.30 மணிவரையான காலப்பகுதியில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலவகாசம் நாளையுடன் ( வெள்ளிக்கிழமை) முடிவடையவுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு ஓசல ஹேரத்தும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் ஏ.எஸ்.பி.லியககேவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாசவும், தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில் எஸ்.கே.பண்டாரநாயக்கவும், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷவும், ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், புதிய சீஹல உருமய கட்சி சார்பில் சரத் மனமேந்திரவும், ஜனசேனா முன்னணி சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன தேரரும், அருனலு மக்கள் முன்னணியின் சார்பில் கே.ஆர்.கிறிஷானும், தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திஸாநாயக்கவும், சோசலிச சமத்துவ கட்சி சார்பில் பானி விஜேசிறிவர்தன ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அதேவேளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹுணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த த சொய்சா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். மேலும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க,சரத் கீர்த்தி ரத்ன,கே.கே.பியதாஸ, ஆனந்த குலரத்ன, அக்மீமன தயாரத்ன தேரர், சிறிபால அமரசிங்க, சரத் பொன்சேகா, அன்டனி விக்டர் பெரேரா, ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், மானகே பேமசிறி ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/190543
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES 8 ஆகஸ்ட் 2024, 01:46 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார். ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் நேற்று காலை எடையை அளவிடும் போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்தியக் குழு கூடுதல் அவகாசம் கேட்டது, ஆனால் அவரால் எடையைக் குறைக்க முடியவில்லை, எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ''அம்மா, எனக்கு எதிரான போட்டியில் மல்யுத்தம் வென்று விட்டது, நான் தோற்று விட்டேன். என் தைரியம் எல்லாம் உடைந்து விட்டது, எனக்கு இப்போது வலிமை இல்லை. குட்பை மல்யுத்தம், 2001-2024'' என தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ''நான் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். மன்னித்து விடுங்கள்'' எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். வினேஷ் போகாட் உடல் எடை அதிகரிக்க யார் காரணம்? புதிய தகவல்கள் வீராங்கனைகளுக்கு சவால் தரும் மற்றொரு பரிசோதனை - பதக்கம் இழந்த தமிழக வீராங்கனை கூறுவது என்ன? வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் - என்ன காரணம் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் “வினேஷ், தனது எடையைக் குறைக்க இரவு முழுவதும் பல முயற்சிகள் எடுத்தபோதிலும், காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கூடுதல் எடையுடன் இருந்தார்.” எனத் தெரிவித்தது. ''வினேஷ் போகாட்டின் எடை 50 கிலோ 100 கிராம் சோதனையின் போது கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு உலக மல்யுத்த சம்மேளனத்திடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது'' என்று வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேற்று பேசினார். உலகப் பிரபலங்களின் ஆதரவு பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வினேஷுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “வினேஷ் நீங்கள் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டீர்கள்” என்று கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வினேஷ், நீங்கள் எப்போதும் எங்களுக்கு வெற்றியாளர் தான். நீங்கள் இந்தியாவின் மகள் மற்றும் இந்தியாவின் பெருமை" என்று பதிவிட்டுள்ளார். சாக்ஷி மாலிக் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வினேஷ், நீ தோற்கவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்காகவும் தான் நீ போராடிக் கொண்டிருந்தாய், இன்று அவர்கள் தோற்றுவிட்டனர். இது ஒட்டுமொத்த இந்தியாவின் தோல்வி. நாடு உன்னுடன் உள்ளது. ஒரு சக வீராங்கனையாக உனது போராட்டத்திற்கும் விடாமுயற்சிக்கும் சல்யூட்" என்று பதிவிட்டுள்ளார். இந்திய மல்யுத்த வீரர்களில் பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் கடந்த ஆண்டு அப்போதைய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை பிரிஜ்பூஷன் சரண் சிங் நிராகரித்து வருகிறார். அந்த நேரத்தில் வினேஷ் போகாட் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் பெரிய முகமாகவும் இருந்தார். அவர்கள் பல மாதங்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கூறுகையில், “இந்த பெண் (வினேஷ்) அரசு அதிகாரத்துடன் போராடி களைத்துவிட்டாள்” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க மல்யுத்த வீரர் ஜோர்டன் பாரோவும் வினேஷுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வினேஷ் போகாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், ஒலிம்பிக் விதிகளை மாற்ற வேண்டியது அவசியம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். “போட்டியின் இரண்டு நாட்களிலும் எடை சோதனை செய்யப்படுகிறது அத்தகைய சூழ்நிலையில், இரண்டாவது நாளில் எடையில் ஒரு கிலோ வரை தளர்வு அளித்திருக்க வேண்டும்.” என்கிறார் ஜோர்டன். ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை எடை சோதனை நடைபெறும். அரையிறுதியில் வெற்றி பெற்ற பிறகு, இறுதிப் போட்டியாளர்கள் இருவரும் இரண்டாவது நாளில் எடை அளவை எட்டாவிட்டாலும் பதக்கங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றார். நிர்ணயிக்கப்பட்ட எடைக்குள் இருந்த வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டாலும், வினேஷ் போகாட்டுக்கே வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜோர்டன் வலியுறுத்தினார். https://www.bbc.com/tamil/articles/ce9zj48epj3o
  11. இலங்கை அணியின் வெற்றிக்கு உதவிய இந்திய வீரர் - ஜெயசூர்யா வகுத்த உத்திகள் என்னென்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இலங்கை அணியைத் தயார்படுத்துவதற்கு இந்திய வீரரின் உதவியை நாடியுள்ளார் ஜெயசூர்யா கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச அரங்கில் 27 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் செய்துவந்த ஆதிக்கத்தை அந்த அணி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்றநிலையில் இந்திய அணியை ஒருநாள் தொடரில் 2-0 என்று மண்ணைக் கவ்வவைத்து, 27 ஆண்டுகளுக்குப்பின் தொடரை இலங்கை கைப்பற்றி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டது. இலங்கை அணியில் ஆடிவரும் பல வீரர்கள் கடைசியாக இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றபோது பிறந்திருக்கவே மாட்டார்கள், அல்லது சிறிய குழந்தைகளாக இருந்திருக்கலாம். ஆனால், அவர்களை வைத்துக்கொண்டு இந்திய அணியின் ஆதிக்கத்தை இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தபின், ஒருநாள் தொடரில் வெகுண்டு எழுந்துள்ளதற்கு பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் இலங்கை அணிக்கு தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா. முன்னாள் வீரர் ஜெயசூர்யா குறித்து பெரிதாக அறிமுகம் தேவையில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரர் அதிரடியாக ஆடக்கூடிய பாணியை பிரபலப்படுத்தியவரே ஜெயசூர்யாதான். 1996ம் ஆண்டு உலகக் கோப்பை இலங்கை அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ஜெயசூர்யாவின் அதிரடியான பேட்டிங்தான். ஜெயசூர்யாவின் இந்த அதிரடி ஆட்டம் வெற்றி பெறவே அதே பாணியை நீண்டகாலத்துக்கு தொடர்ந்தார், பல அணிகளும் இதே பாணியை கையாண்டன. இன்றைய சூழலில் பல அணிகள் கையாளும் பவர்ப்ளே ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை கையாள்வது, பிஞ்ச் ஹிட்டர்களாக மாறுவது போன்ற உத்திகளை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயசூர்யா பரிசோதித்துவிட்டார். ஜெயசூர்யா போன்ற அனுபவசாலியை இலங்கை அணி பயிற்சியாளராக நியமித்தபோதே இந்திய அணிக்கு இந்தத் தொடர் சவாலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் ஜெயசூர்யா பயிற்சியில் இலங்கை அணி டி20, மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டது. டி20 தொடரை இழந்தாலும், அதில் செய்த தவறுகள் அனைத்தையும் ஒருநாள் தொடரில் திருத்திக்கொண்டு தொடரை 27 ஆண்டுகளுக்குப்பின் வென்றுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து தொடக்கத்திலேயே இலங்கை அணி வெளியேறிய உடனேயே, இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு தயாராகத் தொடங்கியது. இந்திய அணிக்கு எதிரான தொடரை மனதில் வைத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே ஜெயசூர்யாவை இடைக்கால தலைமைப் பயிற்சியாளராகவும் இலங்கை கிரி்க்கெட் வாரியம் கொண்டு வந்தது. இந்திய டி20 அணியில் இருந்து ஜாம்பவான் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றநிலையில் இந்திய அணியை வீழ்த்த இதுதான் சரியான நேரமாக இருக்கும் என நினைத்து உத்திகளை வகுத்தார். “பாம்பின் தடம் பாம்பறியும்” என்பதைப் போல இந்திய அணியை வீழ்த்த முன்னாள் இந்திய வீரர் ஒருவரின் உதவியையும், உத்திகளையும் ஜெயசூர்யா நாடினார். அந்த முன்னாள் வீரர் இந்திய அணியில் ஏராளமான இளம் வீரர்களை பட்டைதீட்டி புதிய பரிமாணத்துக்கு கொண்டுவந்தவர், ஐபிஎல் தொடரிலும் அவரின் பங்களிப்பு அளப்பரியதாக இருப்பதால் அவரின் உதவியோடு ஜெயசூர்யா இந்தியத் தொடரை எதிர்கொண்டார். ஜெயசூர்யா வகுத்த திட்டங்கள் இந்திய அணி பேட்டர்கள் பொதுவாகவே சுழற்பந்துவீச்சுக்கு எதிராக திணறக்கூடியவர்கள், பெரிதாக ரன்சேர்க்க முடியாதவர்கள். இந்திய அணியில் இருக்கும் ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ், கோலி, ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், உள்ளிட்ட பேட்டர்கள் சர்வதேச அளவில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பெரிதாக ஜொலித்ததில்லை. அதிலும் கொழும்பு பிரேமதேசா மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி. இந்த மைதானத்தில் இந்திய அணியின் பேட்டர்களை எளிதாக வீழ்த்த முடியும் என்பதை ஜெயசூர்யா புரிந்து கொண்டார். டி20 தொடர் நடந்த பல்லேகலே மைதானமும் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடியது. இந்த மைதானத்தில் இலங்கை அணியினர் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டாலும், பேட்டிங்கில் சொதப்பினர். டாப்ஆர்டர் பேட்டர்கள் தவிர மற்ற எந்த பேட்டர்களும் 3 போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படாததால் தொடரை இழக்க நேர்ந்தது. ஒருவேளை நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் ஓரளவுக்கு பேட் செய்திருந்தாலே, டி20 தொடரில் இந்திய அணிக்கு வலுவான போட்டியை இலங்கை அளித்திருக்கும். டி20 தொடரில் செய்த தவறுகளை ஒருநாள் தொடரில் திருத்திக்கொள்ள ஜெயசூர்யா முடிவு செய்து அதற்கான திட்டங்களை வகுத்தார். அதில் குறிப்பானது நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்துவது. இதற்காக ஆல்ரவுண்டர் வெனித் வெலாகலேவை அணிக்குள் கொண்டு வந்தார், ஹசரங்காவுக்கு காயம் ஏற்படவே அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளரான வேன்டர்சேவையும் அணிக்குள் சேர்த்தார். இவர்கள் இருவருமே இந்திய அணிக்கு எதிரான வெற்றிக்கு முக்கியத் துருப்புச் சீட்டாக அமைந்தனர். அதிலும் வெனித் வெலாகலே நடுவரிசை பேட்டிங்கை ஸ்திரப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். டி20 தொடரில் நடுவரிசை பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தநிலையில், ஒருநாள் தொடரில் வெலாகலே பொறுப்புடன் பேட் செய்து இலங்கை அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுத் தந்தார். அது மட்டுமல்லாமல் கடைசி ஓவர்கள்வரை வெலாகலே களத்தில் இருந்ததால், ஸ்கோர் உயர்வதிலும் இலங்கைக்கு சிக்கல் இல்லாமல் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை அணியில் வெலாகலேவை கீழ்நடுவரிசையில் களமிறக்கியபின் இலங்கை அணியின் பேட்டிங் ஸ்திரமடைந்தது தெளிவாகத் தெரிந்தது. அடுத்ததாக ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது என்பதால், அணியில் இரு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதற்குப் பதிலாக பெர்னான்டோவை மட்டும் வைத்து ப்ளேயிங் லெவனை உருவாக்கி, சுழற்பந்துவீச்சாளர்களை அதிகமாக வைத்து களமிறக்க வைத்தார். பெர்னான்டோ ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முழுநேர வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்புத் தரப்படவில்லை. தொடக்கத்திலிருந்தே விதவிதமான சுழற்பந்துவீச்சாளர்களின் தாக்குதலை தொடுத்து இந்திய பேட்டர்களை நிலைகுலைய வைப்பதுதான் ஜெயசூர்யாவின் திட்டமாக இருந்தது. வேகப்பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் எளிதாக விளையாடிவிடுவார்கள் ஆனால், இடதுகை சுழற்பந்துவீச்சு, ஆஃப்ஸ்பின், லெக் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின் போன்ற பல்வேறு வகையான பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் எதிர்கொண்டு விளையாடுவதில் சிக்கலைச் சந்திப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு இந்த திட்டத்தை ஜெயசூர்யா செயல்படுத்தினார். ஜெயசூர்யாவின் திட்டத்துக்கு கைமேல் பலன் கிடைத்து. இந்தத் தொடரில் இந்திய அணி 27 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சில் மட்டுமே இழந்தது. ஒட்டுமொத்தத்தில் இந்தத் தொடரில் 43 விக்கெட்டுகளை இரு அணிகளும் சுழற்பந்துவீச்சில் மட்டுமே இழந்தன. அந்த அளவு சுழற்பந்துவீச்சாளர்கள் கொழும்பு ஆடுகளத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்திய அணியில் தற்போது இடம் பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக் ஆகியோர் இலங்கை கொழும்பு மைதானத்தில் அதிகமாக விளையாடி அனுபவம் இல்லாதவர்கள். அந்த மைதானத்தின் தன்மை, விக்கெட்டின் தன்மை, எப்படி விக்கெட் செயல்படும், எந்த ஓவர்களுக்குப்பின் விக்கெட்டின் தன்மை எப்படி மாறும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசினாலும் கொழும்பு ஆடுகளத்தின் தன்மையை இலங்கை பந்துவீச்சாளர்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே அறிந்திருந்தனர். இவை அனைத்தும் இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் காரணிகளை பயன்படுத்திக்கொண்டு இந்திய அணி பலத்தையே, அந்த அணிக்கு எதிராக பலவீனமாக ஜெயசூர்யா மாற்றினார். சர்வதேச அரங்கில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பெரிதாக மதிக்கக்கூடியதாக, அச்சுறுத்தக்கூடியதாக இருந்து வருகிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதே சுழற்பந்துவீச்சை பயன்படுத்தி, இந்திய பேட்டர்களை திணறவைத்து, ஜெயசூர்யாவின் உத்திகள் ஒருநாள் தொடரை வென்றுள்ளன. இதில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இருந்தாலும், செட்டில் ஆனபின்புதான் எந்த பந்துவீச்சையும் வெளுக்கும் தன்மைஉடையவர்கள். மற்றவகையில் இருவருமே சுழற்பந்துவீச்சுக்கு பலமுறை விக்கெட்டை இழந்துள்ளனர், அதிலும் விராட் கோலி, லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஏராளமானமுறை விக்கெட்டை இழந்துள்ளார். இந்த விஷயத்தையும் ஜெயசூர்யா கணக்கில் வைத்து, ரோஹித், கோலிக்கு எதிராக சுழற்பந்துவீச்சு ஆயுதத்தை பயன்படுத்தினார். கோலிக்கு எதிராக சுழற்பந்துவீச்சு உத்தி நன்கு பலன் கொடுத்தது. இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை, 3 ஆட்டங்களிலும் கோலி காலை நகர்த்தால் ஆடி விக்கெட்டை இழந்தார். ரோஹித் சர்மா வழக்கம்போல் அதிரடியான ஆட்டத்தைக் கையாண்டாலும் அவரின் பலவீனத்தை அறிந்து அவரையும் சுழற்பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர். சீனியர் வீரர்களுக்கு எதிரான உத்திகள் வெற்றியானதால், அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு எதிராக உத்திகளை வகுப்பது ஜெயசூர்யாவுக்கு எளிதாக இருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர், சாம்ஸன், ராகுல் ஆகியோர் உள்நாட்டு மைதானங்களில் சுழற்பந்துவீச்சை சிறப்பாக கையாண்டு விளையாடியுள்ளார்கள். ஆனால், வெளிநாடுகளில்நடந்த டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இவர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை. இந்த தவலை வைத்து நடுவரிசை பேட்டிங் வரிசையை சிதைக்க திட்டம் வகுக்கப்பட்டது. குறிப்பாக வெலாகலே, வேண்டர்சே ஆகியோரின் சுழற்பந்துவீச்சை இதுவரை இந்திய பேட்டர்கள் எதிர்கொண்டது இல்லை. இந்திய பேட்டர்களுக்கு எதிராக புதிய சுழற்பந்துவீச்சாளர்களைப் பந்துவீசச் செய்து திணறவைத்து, விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தியது இலங்கை அணி. 2வது ஒருநாள் ஆட்டத்தில் வேண்டர்சே 6 விக்கெட்டுகளையும், 3வதுஆட்டத்தில் வெலாகலே 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது கவனிக்கத்தக்கது. யார் அந்த இந்திய வீரர் அது மட்டுமல்லாமல் இந்திய அணியை வீழ்த்துவதற்காக இந்திய முன்னாள் வீரர் ஒருவரின் உதவியையும் ஜெயசூர்யா கேட்டுப் பெற்றுள்ளார். அந்த வீரரும் ஜெயசூர்யாவுக்கு தேவையான ஆலோசனைகளையும், உத்திகளையும் வகுத்துக் கொடுத்துள்ளார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரியான் பராக், ஜூரெல், சாம்ஸன், கெய்க்வாட், சுப்மான் கில் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் அவரின் பயிற்சிப் பட்டறையில் இருந்து பட்டைத் தீட்டப்பட்டு வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஜூபின் மினோ பருச்சா என்ற முன்னாள் வீரர்தான் ஜெயசூர்யாவுக்கு உதவியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES மகாராஷ்டிரா அணிக்காக முதல்தரப் போட்டிகளிலும், ரஞ்சிக் கோப்பையிலும் ஆடியுள்ள பரூச்சா, இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஆனால், அதிகமான கிரிக்கெட் அனுபவத்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர்திறன் இயக்குநராக 2008 முதல் 2015வரை செயல்பட்டார். அதன்பின் 2018ம் ஆண்டிலிருந்து மீண்டும் அந்த அணியின் இயக்குநராக பருச்சா இருந்து வருகிறார். நாக்பூரில் இருந்து 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலேகான் நகரில்தான் பரூச்சா, வேர்ல்ட் கிரிக்கெட் அகாடெமியை நிறுவி ஏராளமான இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். இந்த அகாடெமியில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் மைதானங்களின் மாதிரிகளும் அமைக்கப்பட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் பவுன்ஸர் விக்கெட், சென்னையில் இருக்கும் செம்மண் ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என ஏராளமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு எந்தெந்த வீரர்களுக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றாற்போல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அகாடெமியில் இருந்துதான் ஜெய்ஸ்வால், சாம்ஸன், துருவ் ஜூரெல், ரியான் பராக், சுப்மான் கில் உள்ளிட்ட ஏராளமான இளம் வீரர்கள் தங்களின் பேட்டிங் திறனை மெருகேற்றிக் கொண்டுள்ளனர். இந்த அகாடெமியை நடத்தும் பரூச்சாதான் இலங்கை பயிற்சியாளர் ஜெயசூர்யாவுக்கு தேவைாயான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், பந்துவீச்சு, பேட்டிங்கில் புதியதொழில்நுட்பங்கள், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES இது குறித்து ஜெயசூர்யா சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ இலங்கை டி20 லீக் முடிந்தவுடனேயே நாங்கள் பயிற்சியைத் தொடங்கிவிட்டோம். இந்திய அணியில் ரோஹித் சர்மா, கோலி, ஜடேஜா ஆகிய 3 பெரிய வீரர்கள் ஓய்வு அறிவித்தநிலையில், இந்திய அணியை ஆதிக்கம் செய்து வெல்ல இதுதான் சரியான நேரம் என்று நினைத்தேன். இதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர்திறன் இயக்குநர் ஜூபின் பருச்சா உதவியை நாடினேன் அவரின் ஆலோசனைகளை கேட்டேன். இலங்கை வீரர்களுக்கு ஏறக்குறைய 6 நாட்கள் பருச்சா பயிற்சிஅளித்து, தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார், நவீன காலத்தில் பேட்டிங், பந்துவீச்சில் இருக்கும் மாற்றங்கள், உத்திகளையும் வழங்கினார்." "இதை வைத்துக்கொண்டு டி20 தொடர் தொடங்க 2 நாட்கள் முன்புவரை கண்டி நகரில் பயிற்சியில் இருந்தோம். பரூச்சாவுடன் நாங்கள் செலவிட்ட 6 நாட்களும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது, வீரர்களும் ஏராளமான அம்சங்களை, நுணுக்கங்களை பரூச்சாவிடம் இருந்து கற்றனர்” எனத் தெரிவித்தார் https://www.bbc.com/tamil/articles/ced10zpqxjxo
  12. ஐ ஆம் வெயிட்டிங்!! ஏதும் கண்காணிப்பாளர் வேலை இருந்தால் சொல்லுங்கோ அண்ணை! 24 மணித்தியாலமும் கண்ணுக்கை எண்ணைவிட்டுக் கண்காணிப்பேன்!!
  13. Published By: DIGITAL DESK 7 07 AUG, 2024 | 08:36 PM (எம் ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கில் சீன இராணுவத்தை நிலைநிறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சீன இராணுவத்தின் பிரவேசத்தை அரசாங்கம் அனுமதிக்கிறதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற 'அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை' தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மன்னார் வைத்தியசாலையில் மதியராஜன் சிந்துஜா மரணம் தொடர்பில் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர்களிடம் பேசியபோது விசாரணைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டார். ஆனால் இந்த விசாரணை ஆட்களை மாற்றும் விசாரணையாக இருக்க கூடாது. நீதியான விசாரணையின் ஊடாக சம்பந்தப்பட்டவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாக உள்ளது. இதேவேளை 9 வைத்தியர்கள் எங்களின் வைத்தியசாலைக்கு வரவுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வைத்தியசாலைக்கு வருவது கடினமானதாக இருக்கும்.இதேவேளை இந்திய டோலர் படகுகளின் வருகைகளால் எமது மீனவர்கள் கடந்த பல தசாப்தங்களாக துன்பங்களை எதிர்நோக்குகின்றனர். இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான டோலர் படகுகள் வருவதால் எமது மீனவர்கள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். நியாயமான முறையில் எமது மீனவர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள வேண்டும்.மீனவர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். எமது மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விடயத்தில் தமிழ்நாட்டு அரசு நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதுடன் அதற்கு அவர்கள் உரிய ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். இந்திய அரசாங்கமும் தமிழ்நாடு அரசும் அவர்களின் மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடி துறையில் ஊக்கப்படுத்தி எமது மீனவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக் கேட்கும் நாடாக இந்தியாவை நாங்கள் கருதுகின்றோம். இதனால் எமது நம்பிக்கையின் படி மீனவர் விடயத்தில் நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் சீனா எமது மீனவர்களை தம்வசப்படுத்த பல யுக்திகளை கையாளுகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அத்துடன் சீன இராணுவம் எமது தேசத்துக்கு வரவுள்ளதாக செய்திகளும் வருகின்றன. ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் இராணுவத்தினரால் பட்ட அனுபவங்கள் உள்ளன. அத்துடன் துப்பாக்கி சத்தங்கள் இல்லாவிட்டாலும் போர் சூழலில் இருப்பதை போன்றே மக்கள் இருக்கின்றனர். எமது வரலாற்றை சிதைக்க வேண்டும் என்ற வகையில் நடவடிக்கை எடுப்பதை போன்று தெரிகிறது. அரசின் முப்படையினரின் ஆக்கிரமிப்புடன் உள்ள வடக்கு, கிழக்கில் புதிதாக சீன இராணுவம் வருவது எதற்கு? இதனை அரசாங்கம் அனுமதிக்கின்றதா? இந்த விடயத்தை நாங்கள் எதிர்ப்பதுடன், இதனை ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டோம். எமது மீனவர்களை சீனா தன்வசப்படுத்தும் முயற்சிகளையும் ஏற்க முடியாது. இதேவேளை வன்னி மாவட்டத்தில் குறிப்பாக வவுனியா மாவட்டம் படுகொலைகள் நிறைந்த மாவட்டமாக மாற்றமடைந்துள்ளது. அண்மையில் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருந்தார். பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் என்ன செய்கின்றனர். வன்னி மாவட்டத்தில் பொலிஸாரின் நடவடிக்கை முறையாக இல்லை. சிவில் பிரஜை ஒருவர் முறையிட்டால் அதனை தட்டிக்கழிக்கும் நிலைமை உள்ளது. இங்கு நடக்கும் அநீதிகளை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.அத்துடன் மன்னாரில் எல்.ஆர்.சி காணிகள் வெளி மாவட்டத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. மன்னார் மாவட்ட மக்களுக்கு இந்த காணிகள் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/190509
  14. அண்ணை போட்டியாளர்கள் கூடவாக இருப்பதால் ஓபத்து போட்டுத்தான் பொதுவேட்பாளர் கண்டடையப்படுவாரோ?!
  15. 27 ஆண்டு வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி - இந்தியாவின் பலத்தையே பலவீனமாக மாற்றிய இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 50 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச அரங்கில் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்துள்ளது. கொழும்பு பிரமதேசா அரங்கில் இன்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை இலங்கை அணி பெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்தது. 249 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்களில் சுருண்டு 110 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி 27 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணிக்கு எதிராக வென்றுள்ளது. கடைசியாக 2005ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்திய அணியிடம் இலங்கை அணி ஒருநாள் தொடரை பறிகொடுத்து வந்தநிலையில் அதற்கு 2024ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இலங்கை அணி சிறப்பான தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி சிறப்பான தொடக்கம் கண்டது. டாப் ஆர்டர் பேட்டர்கள் நிசாங்கா(45), பெர்னான்டோ(96), குஷால் மென்டிஸ்(59) ஆகியோரே கணிசமாக ரன் குவித்தனர். மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை. 171 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி அடுத்த 28 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. 171 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த இலங்கை அணி 199 ரன்கள் சேர்த்தபோது 6வது விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. இலங்கை அணி ஸ்கோர் ஒரு கட்டத்தில் 180 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 250 ரன்களுக்குள் மட்டுமே சேர்த்தது. இலங்கை அணி இந்த ஸ்கோரை எட்டுவதற்கு தொடக்க ஆட்டக்காரர் பெர்னான்டோ 96 ரன்கள் சேர்த்ததுதான் முக்கியக் காரணம். இது தவிர 49வது ஓவர் வரை களத்தில் இருந்த குஷால் மென்டிஸ் 59 ரன்கள் சேர்த்ததும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருந்தது. வினேஷ் போகாட் உடல் எடை அதிகரிக்க யார் காரணம்? புதிய தகவல்கள்5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய காகங்களை கொடிய பறவையாக கருதும் கென்யா - 10 லட்சம் காகங்களை கொல்லும் முடிவு ஏன்?3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சிராஜ் மோசமான பந்துவீச்சு இந்திய அணியின் பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் சிறப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜை மட்டுமே நம்பி களமிறங்கிய இந்திய அணி கையைச் சுட்டுக்கொண்டது. டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்தே ஃபார்மில் இல்லாமல் இருந்த சிராஜை ஒருநாள் தொடரில் திணறவே செய்தார். இந்த ஆட்டத்தில் 9 ஓவர்கள் வீசிய சிராஜ் 78 ரன்களை வாரி வழங்கினார். இதில் 3 சிக்ஸர்கள், 9பவுண்டரிகளை அடிக்கவிட்டு ஓவருக்கு 9 ரன்களை வாரிக் கொடுத்தார். இலங்கை அணியிலும் பெர்னான்டோ எனும் வேகப்பந்துவீச்சாளரை மட்டும் வைத்து அந்த அணி களமிறங்கியது. அவர் ஓரளவு கட்டுக்கோப்புடன் பந்துவீசினார். இலங்கை அணி சேர்த்த ஸ்கோரில் சிராஜ் மட்டும் 33 சதவீத ரன்களை வாரிக் கொடுத்துள்ளார். இதில் பெர்னான்டோ மட்டும் 38 ரன்களை சிராஜ் ஓவரில் விளாசினார். மற்ற வகையில் சுழற்பந்துவீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஓவருக்கு 3 ரன்ரேட்வீதம் வழங்கினர். முதல் போட்டியில் அறிமுகமாகிய ரியான் பராக் 9 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அக்ஸர் படேலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். ஷிவம் துபே 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே வழங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிவு சவாலான இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித் சர்மா (35), விராட் கோலி (20), ரியான் பராக்(15), வாஷிங்டன் சுந்தர்(30) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். இதில் கடைசி நேரத்தில் வாஷிங்டன் இன்னிங்ஸ் மட்டும் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு சற்று அழுத்தத்தை கொடுத்தது, அவரை ஆட்டமிழக்கச் செய்ய மட்டுமே சிறிது சிரமப்பட்டனர். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்திய பேட்டர்கள் 9 பேரும் சுழற்பந்துவீச்சுக்கு இரையாகினர். சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் மோசமான ஃபார்மில் உள்ளனர். அதிலும் சுப்மான் கில் டி20 தொடரிலும் சிறப்பாக ஆடவில்லை, ஒருநாள் தொடரிலும் பேட்டிங்கில் சொதப்பினார். நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கிய ரிஷப் பந்த் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்வதேச போட்டியில் அறிமுகமான ரியான் பராக்(15) ரன்னில் பெவிலியன் திரும்பினார். பட மூலாதாரம்,GETTY IMAGES நட்சத்திர பேட்டர் விராட் கோலி இந்தத் தொடர் முழுவதும் சுழற்பந்துவீச்சுக்கு விக்கெட்டை பறிகொடுத்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல் போட்டியிலிருந்து மோசமாக விளையாடி பைனலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், இந்த ஒருநாள் தொடர் முழுவதும் கோலியின் இயல்பான பேட்டிங் வெளிப்படவில்லை. இந்திய அணி 52 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. ஆனால், அடுத்த 49 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது. வெலாகலே பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை இந்திய பேட்டர்கள் இழந்தனர். அதிலும் வெலாகலே வீசிய 13வது ஓவரில் மட்டும் ஸ்ரேயாஸ், அக்ஸர் படேல் ஆகிய இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் இந்திய பேட்டர்கள் விக்கெட்டை பறிகொடுத்ததால் அணி தோல்வியை நோக்கி பயணித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியை சிதைத்த பெருமை இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் வெலாகலே, வேன்டர்சே, தீக்சனா ஆகியோரையே சாரும். இதில் வெலாகலே மட்டும் 5.1 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீக்சனா, வேன்டர்சே தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பேட் செய்தார். இரு அரைசதங்களை முதல் இரு போட்டிகளில் பதிவு செய்த ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் 35 ரன்கள் சேர்த்து தனது நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார். ஆனால், இந்தத் தொடர் முழுவதும் ரோஹித் சர்மாவுக்கு ஒத்துழைத்து சுப்மான் கில், விராட்கோலி, உள்ளிட்ட எந்த பேட்டரும் ஆடவில்லை, பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் பலத்தையே பலவீனமாக்கிய இலங்கை இந்திய பேட்டர்கள் பொதுவாக சுழற்பந்து வீச்சில் ரன் குவிக்கக் கூடியவர்கள். சர்வதேச அளவில் சாதித்த சுழற்பந்து வீச்சாளர்கள் கூட இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச திணறவே செய்துள்ளனர். ஆனால், அந்த பலத்தையே இலங்கை அணி இன்று இந்தியாவின் பலவீனமாக மாற்றியுள்ளது. இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய பேட்டர்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்துள்ளனர். மூன்று ஆட்டங்களிலும் தலா 9 விக்கெட் வீதம் மொத்தம் 27 விக்கெட்டுகளை இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர். ரோஹித், கோலி உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் கூட இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு இரையாயினர். இரண்டாவது ஆட்டத்தில், வேன்டர்சே பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை இந்திய பேட்டர்கள் பறிகொடுத்தனர், இந்த ஆட்டத்தில் வெலாகலே பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை இந்திய பேட்டர்கள் இழந்தனர். 1997ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றி இருந்தது. அந்த சமயத்தில் சுழற்பந்துவீச்சாளர் வெலாகலே பிறக்கவே இல்லை. ஆனால், இப்போது அவரின் தரமான சுழற்பந்துவீச்சால் 27 ஆண்டுகளுக்குப்பின் ஒருநாள் தொடரை இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி வென்றுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா தோல்விக்கு என்ன காரணம்? இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங், அனுபவமில்லாத வீரர்கள், வெளிநாட்டு மைதானங்களில் தரமான சுழற்பந்துவீச்சை விளையாட போதிய பயிற்சியில்லாதது ஆகியவைதான் காரணம். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் பொறுப்பேற்ற முதல் தொடர் இதுவாகும். இதில் டி20 தொடரை வென்றபோதிலும் ஒருநாள் தொடரை மோசமாக இந்திய அணி இழந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜெயசூர்யா அன்றும், இன்றும் கடைசியாக கடந்த 1997 ஜூலை மாதம் இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை இலங்கை வென்றிருந்து. அதன்பின் இப்போது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றி தங்களின் தாகத்தை தீர்த்துக்கொண்டது. 1997ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது. இதில் முதல் ஆட்டத்தில் 2 ரன்களில் வெற்றியை இந்திய அணி கோட்டைவிட்டது. 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை இலங்கை அணி தோற்கடித்தது. 3வது ஒருநாள் ஆட்டம் மழையால் நடக்காமல் போகவே மறுநாள் நடந்தது. இந்த ஆட்டத்திலும் இந்திய அணி 9 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த 3 போட்டிகளிலும் பேட்டிங்கில் 210 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜெயசூர்யா தொடர் நாயகன் விருது வென்று இலங்கை அணி தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். இலங்கை அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜெயசூர்யா கால் நூற்றாண்டுக்குப்பின் ஒருநாள் தொடரை பெற்றுக்கொடுத்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cqjlryd1d9wo
  16. உங்கள் தலைமையில் கைலாசா போல ஒரு நாட்டை உருவாக்குவம் என்று கேட்டால் நித்தி வழியில் நடப்போம் என துடிக்கிறீர்களே!!
  17. புரிந்துகொள்கிறேன் அண்ணை.
  18. எனது தந்தை இதற்கு எதிர்மாறு! தொழிலாளர் நியாயமன்றில் சாதரண எழுதுவினைஞராக கடமையாற்றியபோது தொழிலாளர் நியாயமன்றின் நீதிபதி தனது தனிப்பட்ட வேலைகளுக்கு மன்றின் அலுவலக உதவியாளரை உபயோகித்தமையை சுட்டி எதிர்த்தமையால் 8 ஆண்டுகள் வேலையால் இடைநிறுத்தப்பட்டு பழிவாங்கப்பட்டார். எனினும் வழக்காடி வெற்றிபெற்று மீளப்பணியில் இணைந்து சிரேஸ்ட எழுதுவினைஞராகவும் பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். தன்னளவில் நேர்மையாகவும் தனக்குத் தெரிய ஊழல்கள் இடம்பெறாத வண்ணமும் பார்த்துக் கொண்டார். வேலை நேரத்தில் அலுவலகத்தில் இருப்பதை கட்டாயமாகப் பின்பற்றுவார். பிழை என்றால் நேரடியாகவே கண்டித்துவிடுவார். இதனால் மேலதிகாரிகளில் இருந்து சிற்றூழியர் வரை அவரில் அச்சம் கலந்த மரியாதை வைத்திருந்தார்கள்.
  19. பிணையில் விடுதலையான வைத்திய அர்ச்சுனாவுக்கு மக்கள் அமோக வரவேற்பு! மன்னார் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் புதன் (7) நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ஜுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை வழங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அத்து மீறி நுழைந்து கடமைக்கு இடையூரை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் மன்னார் போலீஸ் நிலையத்தில் வைத்தியசாலை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வைத்தியர் அர்ச்சுனா மன்னார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வைத்தியர் சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது அவரை இன்றைய தினம் 7ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் அருச்சுனா மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார். வைத்தியர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அண்ரன் புனித நாயகம் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். மன்னார் நீதவானின் நிபந்தனையின் அடிப்படையில் தலா 50,000 ரூபாய் பிணையில் செல்ல அனுமதித்தார். இந்த நிலையில் மன்றில் இருந்து வைத்தியர் வெளியேறிய போது மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி வரவேர்த்தனர். பின்னர் மன்னார் மாவட்ட மக்கள் வைத்தியரை மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். மன்னார் – தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவமானது கடந்த 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா வயது (27) என தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் மரணத்தின் போது சம்பவ தினம் விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையிலேயே வைத்தியர் அர்ச்சுனா மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அங்கு கடமைக்கு இடையூரைக்கு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/307502
  20. Published By: DIGITAL DESK 7 07 AUG, 2024 | 06:48 PM இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுகளும் மீனவர்களும் இணங்கிய ஒப்பந்ததை நடைமுறைபடுத்துங்கள் அதுமட்டுமன்றி இந்திய மீனவர்கள் வடபகுதிக்கு நேரில் வந்து எமது வாழ்கை முறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கு விரைவான ஏற்பாடுகளை செய்யுமாறு யாழ்.மாவட்ட கடற்மொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் முன்னாள் தலைவரும் அகில இலங்கை மீனவ மக்கள் தொழில் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தொரிவித்தார். இலங்கை இந்திய பிரதிநிதிகள் இடையே சந்திப்பை ஏற்படுத்தி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காணப்படும் என இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் என்.ஜெய்சங்கர் உறுயளித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறைகளால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவது மட்டுமன்றி ஒட்டுமொத்த வடக்கிற்கான வாழ்வாதாரம் பொருளாதரம் பாதிக்கப்படுகின்றது கடற்தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு செல்லவேண்டிய சூழலே தோன்றியுள்ளது. இந்திய மீனவர்களது அத்துமீறல்களை நிறுத்தக்கோரி போராட்டங்கள் கோரிக்கைகள் என பலவிதமான போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டோம். பல கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 2016 ஆம் ஆண்டு இருதரப்பு போச்சுவார்த்தையில் பல இணக்கம் காணப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தினாலே தீர்வினை ஏட்டக்கூடியதாக இருக்கும். 2016 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட தீர்மானங்களில் குறிப்பாக இழுவைமடி தொழில் முறைக்கான மாற்றத்தினை துரிதமாக மேற்கொள்ளுதல், ரோந்து நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்கான சாத்தியங்களை ஆராய்தல், கைதான மீனவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை கடினமாக்குதல், கைதான மீன்பிடி படகுகளை விடுவிக்கும் பிரச்சினைகள் குறித்து ஆழமாக அவதானம் செலுத்துதல் போன்றன இணக்கம் காணப்பட்டது. இவற்றை நடைமுறைபடுத்தினாலே மீனவர்கள் பிரச்சினைகளை குறைத்துகொள்ள முடியும். இது மட்டுமன்றி தமிழ்நாட்டு மீனவர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு விஐயம் செய்து எமது மீனவர்களது வாழ்வாதாரங்களை அறிவதற்கு கலந்துரையாடலை மேற்கொள்வதன் மூலமும் இந்த பிரச்சினைகளை அவர்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் இது எவ்வாறு இருப்பினும் வெகு விரைவில் ஒரு தீர்வினைக்கண்டு வடகிழக்கு மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வினை கண்டுக் கொள்ள இந்தியா உதவி செய்யவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/190531
  21. அண்ணை நான் உக்ரேனிய ஆதரவாளனோ ரஸ்யாவிற்கு எதிர்ப்பாளனோ அல்ல. அப்பாவி மக்களின் சாவினை ஆதரிக்காதவன்.
  22. வங்கதேசத்தை வழிநடத்தப் போகும் இந்த 'ஏழைகளின் வங்கியாளர்' யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாட்டின் குறுங்கடன் பயன்பாட்டின் முன்னோடி என பலரால் பாராட்டப்பட்ட பேராசிரியர் யூனுஸை, ஒரு பொது எதிரியாகக் கருதினார் ஹசீனா கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி எங் மற்றும் ஜியான்லூகா அவாக்னினா பதவி, பிபிசி செய்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்றவரும், ஷேக் ஹசீனாவின் நீண்டகால அரசியல் எதிரியுமான முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீனா பதவி விலக வேண்டும் என்று பல வாரங்களாக வங்கதேசத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேறிய அடுத்த நாளே, 84 வயதான முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் குறுங்கடன் பயன்பாட்டின் முன்னோடி என பலரால் பாராட்டப்பட்ட பேராசிரியர் யூனுஸை, ஒரு பொது எதிரியாகக் கருதினார் ஹசீனா. யூனுஸ் மீது பல வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆறு மாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட வழக்கு ஒன்றில், மேல் முறையீடு செய்து, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார் யூனுஸ். ‘அரசியல் ரீதியாக என் மீது போடப்பட்ட வழக்கு’ என்று யூனுஸ் அதை விவரித்திருந்தார். வங்கதேச மாணவர்களின் அழுத்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேசப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய மாணவர்கள், ராணுவம் தலைமையிலான ஒரு அரசாங்கத்தை ஏற்க மறுத்து, பேராசிரியர் யூனுஸ் இடைக்கால அரசை வழிநடத்த வேண்டுமென அழுத்தம் கொடுத்தனர். அதிபர் முகமது ஷஹாபுதீன், இராணுவத் தலைவர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பேராசிரியர் யூனுஸை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. "இவ்வளவு தியாகம் செய்த மாணவர்கள் இந்த இக்கட்டான தருணத்தில் அரசை வழிநடத்துமாறு என்னைக் கோரும் போது, நான் எப்படி மறுக்க முடியும்?" என பேராசிரியர் யூனுஸ் கூறியிருந்தார். மருத்துவ சிகிச்சைக்காக பாரிஸ் சென்றுள்ள யூனுஸ், உடனடியாக டாக்கா திரும்புவதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். வங்கதேசத்தில் ஜூலை மாதத் தொடக்கத்தில் சிவில் சர்வீஸ் வேலைகளில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளுடன் தொடங்கிய போராட்டங்கள், ஒரு மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக மாறியது. அரசுப் படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. திங்கட்கிழமை மட்டும், நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது வங்கதேசத்தின் கறுப்பு நாளாக அமைந்தது. நூற்றுக்கணக்கான காவல் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வங்கதேசத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஷேக் ஹசீனா தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை போராட்டக்காரர்கள் தாக்கி சூறையாடுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு இந்தியா சென்றார். இதன் மூலம் அவரது 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. கடந்த பத்தாண்டுகளில் ஒருபுறம் வங்கதேசத்தின் பொருளாதாரம் வளர்ந்தாலும், மறுபுறம் முன்னாள் பிரதமர் ஹசீனா தன்னை விமர்சிப்பவர்களை அடக்கி ஒடுக்கி, அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்ததாக அதிக விமர்சனங்களுக்கு ஆளானார். முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் சமூக ஆர்வலர் அஹ்மத் பின் குவாசெம் போன்றோர் ஹசீனா அவசரமாக வெளியேறிய உடனேயே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஹசீனா ஆட்சியில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் சாத்தியமில்லை என்று கூறி, 2014 மற்றும் 2024ஆம் ஆண்டு தேர்தல்களைப் புறக்கணித்த பிரதான எதிர்க்கட்சியான ‘பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின்’ தலைவர் தான் கலீதா ஜியா. 78 வயதான அவர் 2018இல் ஊழல் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுகள், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் கூறியிருந்தார். சமூக ஆர்வலர் குவாசெம் 2016ஆம் ஆண்டு காவலில் வைக்கப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. ஹசீனாவின் பதவிக்காலத்தில் அரசால் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்களில் குவாசெமும் ஒருவர். 'ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுபவர்’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஷேக் ஹசீனா மற்றும் யூனுஸ் (வலது ஓரம் இருப்பவர்) (2008- கோப்புப் படம்) தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக ஜனவரியில், பேராசிரியர் யூனுஸுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஹசீனாவின் கோபத்திற்கு ஆளானவர்களில் தானும் ஒருவர் என்று கூறியுள்ளார். இதற்கு முன்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு வங்கதேசத்தின் அரசியல்வாதிகள் குறித்து அவர் அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. 1983ஆம் ஆண்டில், அவர் கிராமின் வங்கியைத் தொடங்கினார். இது ஏழை மக்களுக்கு சிறு தொழில்களைத் தொடங்குவதற்கான குறுங்கடன்கள் மற்றும் நீண்ட காலக் கடன்களை இந்த நிதியமைப்பு வழங்குகிறது. அதன் பின்னர் இந்த திட்டம் உலகம் முழுவதும் பரவியது. அவர் வரி ஏய்ப்பு செய்ததாகவும், கட்டாய ஓய்வு வயதைத் தாண்டி கிராமின் வங்கியில் பணியாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார், இதனால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இவை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என்று பேராசிரியர் யூனுஸ் கூறினார். "மிகவும் ஏழ்மையானவர்கள் கூட தங்களுக்கான வளர்ச்சியை உழைப்பின் மூலம் அடைய முடியும்" என்பதைக் காட்டினார் என 2006ஆம் ஆண்டு வங்கியுடன் இணைந்து அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் சர்வதேச அளவில் ‘ஏழைகளுக்கான வங்கியாளர்’ என்று அறியப்பட்டார், ஆனால் ஹசீனா அவரை 'ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுபவர்’ என்று அழைத்தார் மற்றும் அவரது வங்கி அதிக வட்டி விகிதங்களை வசூலிப்பதாக குற்றம் சாட்டினார். ஹசீனாவுடனான பகையின் தோற்றம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஒரு அரசியல் கட்சியை அமைப்பதற்கான யூனுஸின் தோல்வி முயற்சிகள் தான் காரணம் என்று பலர் நம்புகிறார்கள். ஹசீனாவின் இறுதி இலக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES ஹசீனா இன்னும் இந்தியாவில் இருக்கிறார், ஆனால் அதுதான் அவரது இறுதி இலக்காக இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் நெருங்கிய நண்பர் என்ற போதிலும் அது சாத்தியமில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வங்கதேசத்துடன் 4,096-கிமீ (2,545-மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, டாக்காவில் அமையவுள்ள புதிய அரசாங்கத்திடமிருந்து விலகி இருக்காது. எல்லையில் கூடுதல் படைகளை நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பேராசிரியர் யூனுஸின் நியமனம் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர், வங்கதேசத்தில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென உலகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். "இடைக்கால அரசு எடுக்கும் எந்த முடிவும், ஜனநாயகக் கொள்கைகளை மதிக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் மற்றும் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டும்," என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறினார். ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி பென்னி வோங், ‘வன்முறையில் இருந்து விலகி இருக்குமாறும், உலகளாவிய உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும்’, வங்கதேசத்தின் அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/clynlrvvv3do
  23. அண்ணை ரஸ்யாவிற்குள் ஊடுருவும் அளவிற்கு எல்லைப் பாதுகாப்பு பலவீனமாக இருந்திருக்கே!
  24. அண்ணை மகிந்த ஐயாவின் வடக்கிற்கான இணைப்பாளராக முன்னர் இருந்ததாக நினைவு.
  25. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 வருடங்களின் பின்னர் கைப்பற்றி வரலாறு படைத்தது இலங்கை Published By: VISHNU 07 AUG, 2024 | 08:34 PM (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில் 27 வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்தது இலங்கை. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (07) நடைபெற்ற 3ஆவதும் தீர்மானம் மிக்கதுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 110 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது. இதன் மூலம் தொடரை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை கைப்பற்றியது. அப் போட்டியில் இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது. அவிஷ்க பெர்னாண்டோ 96 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 45 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 26.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ரோஹித் ஷர்மா (35), விராத் கோஹ்லி (20), ரியான் பராக் (15), வொஷிங்டன் சுந்தர் (30) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்ட நாயகன்: அவிஷ்க பெர்னாண்டோ தொடர் நாயகன்: துனித் வெல்லாலகே https://www.virakesari.lk/article/190538

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.