Everything posted by ஏராளன்
-
பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் காலமானார்
Published By: DIGITAL DESK 3 08 APR, 2024 | 04:36 PM யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை (08) அதிகாலை காலமானார். யாழ்ப்பாணம் - நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற கலை நிகழ்வு ஒன்றில் வயலின் இசை வழங்கிக் கொண்டிருந்த நேரம் இயலாமை ஏற்பட்டு தொடர்ந்து வீட்டிற்கு சென்ற நிலையில் இன்றையதினம் அதிகாலை காலமானார். நாச்சிமார் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள அன்னாரின் வீட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/180742
-
திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்
மின்சார சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் Published By: VISHNU 08 APR, 2024 | 07:34 PM திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை திங்கட்கிழமை (08) ஒப்புதல் அளித்துள்ளது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டமூலம் ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/180767
-
‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் நிதி நெருக்கடியிலுள்ள மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும்
6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்..! ஜனாதிபதி நிதியம் அறிவிப்பு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகையை 2024 மே முதல் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் முதல் அமுலுக்கு வரும் வகையில் மாதாந்தம் 6000 ரூபாய் வீதம் 24 தவணைகளுக்கு இந்த புலமைப்பரிசில் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல்கள் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsfund.gov.lk இல், அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல்களைப் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வீதம் 12 மாதாங்கள் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். https://thinakkural.lk/article/298463
-
ஏப்ரல் 18ஆம் திகதி இலங்கையில் ‘முருங்கை தினம்’!
ஓமண்ணை, முருங்கக்காய் கிலோ 800 போகுது. முதல் நாள் 2.5 கிலோ 1500 ரூபாவிற்கு விற்றது, இரண்டாவது 4.5 கிலோவில் அரை கிலோ கழித்து 4கிலோ 2400ரூபாவிற்கு விற்றது.
-
கணிதப் புரட்சிக்கு வித்திட்ட பூஜ்ஜியத்தை இந்தியர்கள் கண்டுபிடித்தது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாகஸ் டு சௌடோய் பதவி, பிபிசி "தி ஸ்டோரி ஆஃப் மேக்ஸ்' 4 மணி நேரங்களுக்கு முன்னர் கேள்வி: கணித உலகில் புரட்சியை ஏற்படுத்திய பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கேள்வி: பூமியின் சுற்றளவை முதலில் கணக்கிட்டவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கேள்வி: கணக்கீடுகளில் 'முடிவிலி'யை(infinity) அறிமுகப்படுத்தியவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கணிதத்தில் மேற்கத்தியர்களை விட இந்தியர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முன்னிலையில் உள்ளனர். தசம பாகம் (வருமானத்தின் பத்தில் ஒரு பங்கை அரசுக்கோ அல்லது மத வழிபாட்டுத் தலத்திற்கோ வரியாக அளித்தல்) கொடுப்பதன் பலன்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அங்கீகரித்துள்ளது. இது மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நாம் பயன்படுத்தும் தசமத்திலிருந்து இது வேறுபட்டதல்ல. இந்தியர்கள் இதை எவ்வாறு முதலில் கண்டுபிடித்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கணித முறையை உருவாக்கினர். இது 1 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டு நிறுவப்பட்டது. அவை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. அதன் பின்னர் புதிய பூஜ்ஜியம் (0) கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், கணித உலகம் தலைகீழாக மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES எண்களில் தேதிகளை கூறுவது 9 ஆம் நூற்றாண்டிலிருந்து நடைமுறைக்கு வந்ததற்கான சான்றுகள் உள்ளன. இருப்பினும், இந்த முறை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்திருக்கலாம். மத்திய இந்தியாவில் உள்ள குவாலியர் கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் முதன்முறையாக 'பூஜ்ஜியம்' குறித்த அடையாளம் பதிவானதற்கான ஆதாரம் உள்ளது. பூஜ்ஜியத்தை இந்தியா கண்டுபிடிப்பதற்கு முன் உலகில் வேறு எங்கும் பூஜ்ஜியம் என்ற கருத்தை யாரும் உருவாக்கவில்லை. பண்டைய எகிப்து, மெசபடோமியா, சீனா ஆகிய நாடுகளும் ‘மதிப்பில்லாதது' என்பது குறித்த கருத்தைக் கொண்டிருந்தன. ஆனால், அதற்கு எந்த சிறப்புச் சின்னத்தையும் பயன்படுத்தவில்லை. பூஜ்ஜியம் தேவைப்படும் இடத்தில் அந்த இடம் வெற்றிடமாகவே விடப்பட்டது. பூஜ்ஜியம் என்ற கருத்துக்கு இலக்கத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள். அதன் பிறகு கணிதத்தில் பல புதிய மாற்றங்கள் வந்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியர்கள் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தது எப்படி? பூஜ்ஜியம் எங்கிருந்து தொடங்கியது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை என்றாலும், தரையில் கற்களைக் கொண்டு கணக்கீடு செய்த போது இந்த பூஜ்ஜியம் உருவானது என்று நம்பப்படுகிறது. இந்த பூஜ்ஜிய வடிவம் கற்களை தரையில் வைக்கும்போது விழும் உருண்டையான அச்சுகளில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், கல்லின் ஒரு பகுதியை அகற்றும் போது கணக்கிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. வெறுமை மற்றும் நித்தியம் குறித்த கருத்துகள் பண்டைய இந்திய நம்பிக்கைகளில் அவற்றின் வேர்களைக் கொண்டுள்ளன. இந்து மற்றும் பௌத்த மத போதனைகளில் ‘இல்லாமை’ என்ற கருத்துக்கு இடம் உண்டு. கணிதத்திலும் பூஜ்ஜியத்தை எடுத்துவிட்டால் அதன் முடிவுகள் மாறாது. இந்திய தத்துவம் மற்றும் போதனைகளில் வெறுமை என்ற கருத்து உள்ளது. படக்குறிப்பு, பூஜ்ஜியத்தை அறிமுகப்படுத்திய பிறகு வானியல் கணக்கீடுகள் மிகவும் துல்லியமானது. பூஜ்ஜியத்திலிருந்து முடிவிலி வரை பிரபல இந்தியக் கணிதவியலாளர் பிரம்மகுப்தா 7 ஆம் நூற்றாண்டிலேயே பூஜ்ஜியத்தின் முக்கிய பண்புகளை விளக்கினார். பிரம்மகுப்தாவின் பூஜ்ஜிய எழுத்துக் கணிதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்னும் உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. 1+0=1 1-0=1 1x0=0 இருப்பினும், பிரம்மகுப்தாவின் சோதனைகளில் பூஜ்ஜியத்தை வகுத்தால் கிடைக்கும் முடிவுகள், மற்றொரு புதிய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. அவர் 1-ஐ பூஜ்ஜியத்தால் வகுத்தபோது, முடிவைக் குறிக்க 0 முதல் 9 வரையிலான இலக்கங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. பின்னர் முடிவிலி என்ற கருத்து பிறந்தது. ஆனால், அது பிரம்ம குப்தாவால் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் 12 ஆம் நூற்றாண்டில் மற்றொரு இந்திய கணிதவியலாளர் பாஸ்கரா முடிவிலியைக் கண்டுபிடித்தார். எந்த எண்ணையும் பூஜ்ஜியத்தால் வகுத்தால், கிடைப்பது முடிவிலி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூஜ்ஜியத்தால் வகுத்தால் என்ன நடக்கும் என்ற குழப்பத்திற்கு 'முடிவிலி' முற்றுப்புள்ளி வைக்கிறது. முடிவிலி உருவானது எப்படி? பாதியாக வெட்டப்பட்ட ஒரு பழம் இரண்டு துண்டுகளாகிறது. மூன்று பாகங்களாக்கினால், மூன்று துண்டுகள் உள்ளன. நீங்கள் நான்கு பகுதிகளை உருவாக்கினால், உங்களுக்கு நான்கு துண்டுகள் கிடைக்கும். நீங்கள் அதை துண்டுகளாக உடைத்துக் கொண்டே இருந்தால், அது எண்ணற்ற துண்டுகளாக இருக்கும். இதன் அடிப்படையில் பாஸ்கரா 1-ஐ பூஜ்ஜியத்தால் வகுத்தால் கிடைப்பது முடிவிலி என்று முடித்தார். ஆனால் பூஜ்ஜியத்தைப் பயன்படுத்தி கணக்கீடுகள் மேலும் சென்றன. 3 - 3 = 0. ஆனால், 3-4=? இந்த கணக்கீட்டில், முடிவு பூஜ்ஜியமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால், ஆராய்ச்சிகள் மேலும் சென்று, கடன் வாங்கி கழிப்பது என்ற கருத்து பிறந்தது. எனவே 3-4= -1 என்று கண்டறியப்பட்டது. பூஜ்ஜியம் மற்றும் தசம எண்கள் போன்றவற்றுக்கு வடிவம் மற்றும் கணக்கீடுகள் கொடுக்கப்பட்டதிலிருந்து கணித அறிவியல் பெரிதும் முன்னேறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES எக்ஸ், ஒய் இந்திய கணிதவியலாளர்கள் கணக்கீட்டின் சுருக்கமான அம்சங்களைக் கூட உடைக்கத் தொடங்கிய போது அவர்களுக்கு பல முடிவுகள் கிடைத்தன. பிரம்மகுப்தா, கடன் எண்களைக் கணக்கீடுகளுக்குள் கொண்டு வந்த பிறகு, இருபடிச் சமன்பாடுகளில் ஒவ்வொரு கணக்கீடுகளுக்கும் இரண்டு முடிவுகள் இருப்பதைக் கண்டறிந்தார். பிரம்மகுப்தாவும் இரண்டு முடிவுகளுடன் (X, Y) சமன்பாடுகளை அடையத் தொடங்கினார். மேற்கத்திய நாடுகளில் இந்த செயல்முறை 1657 வரை தொடங்கவில்லை. பிரெஞ்சுக் கணிதவியலாளரான பியரே டி பெர்மா என்பவர் மேற்கத்திய நாடுகளில் முதன் முதலில் இத்தகைய கணக்கீட்டைச் செய்தார். ஆனால், பிரம்மகுப்தா இந்தியாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த முறையைப் பயன்படுத்தினார் என்பது அவருக்குத் தெரியாது. இந்தியக் கணிதவியலாளர்களின் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் இதோடு நின்றுவிடவில்லை. இந்திய கணிதவியலாளர்கள் முக்கோணவியல் மூலம் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள். இந்தியர்கள் முக்கோணவியல் உதவியுடன் பயணத்தின் போது தூரத்தையும் வான தூரத்தையும் அளந்தனர். இந்தியக் கணிதவியலாளர்களால் பூமி, சூரியன், பூமி மற்றும் சந்திரனுக்கு இடையே உள்ள தூரத்தை முக்கோணவியல் உதவியுடன் அளவிட முடிந்தது. படக்குறிப்பு, முக்கோணவியல் அடிப்படையில் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் இடையே உள்ள தூரத்தை விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். பை உதவியுடன் பூமியின் சுற்றளவை கணக்கிட்ட ஆர்யப்பட்டர் இந்தியக் கணிதவியலாளர்கள் கணிதத்தில் மிக முக்கியமான 'பை' (π)க்குப் பின்னால் உள்ள ரகசியங்களைத் தேடிச் சாதித்திருக்கிறார்கள். ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் விட்டத்திற்கும் இடையிலான விகிதம் 'பை' எனப்படும். ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஆர்யபட்டர் 'பை' இன் மதிப்புக்கு நெருக்கமான எண்ணாக 3.1416 என வரையறுத்தார். இதன் உதவியுடன் பூமியின் சுற்றளவை 39,968 கி.மீ. என நிர்ணயித்தார். நவீன வானியலாளர்களின் கணக்கீட்டின்படி கூட, பூமியின் தற்போதைய சுற்றளவு 40,075 கி.மீ. ஆர்யபட்டாவின் அளவீட்டுக்கும் இதற்கும் இடையே உள்ள வேறுபாடு மிகவும் சிறியதாக இருப்பதால் அவர் பூமியின் சுற்றளவை துல்லியமாக அளந்தவர் என்று கூறப்படுகிறார். https://www.bbc.com/tamil/articles/cld4d0gep0ro
-
கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
சீன எல்லை பிரச்சினையைப் பேசியதால் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையிலெடுத்துள்ளது: கனிமொழி 08 APR, 2024 | 02:16 PM தூத்துக்குடி: சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் மத்தியில் ஆளும் பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசைதிருப்பும் அரசியலாகக் கையில் எடுத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் இருந்து போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தூத்துக்குடியில் திமுக வெற்றி உறுதி. இத்தனை ஆண்டு காலம் நாட்டாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பியபோதெல்லாம் அமைதி காத்த பாஜகவுக்கு தேர்தல் வந்துவிட்டதாலும், சீன எல்லைப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்புவதாலும் கச்சத்தீவு பிரச்சினை நினைவுக்கு வந்துவிட்டது” என்று சாடியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட தமிழகத்தில் இதுதொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. கச்சத்தீவை யார் தாரைவார்த்தது என்ற விவாதங்களுக்கு மத்தியில் அதை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. “கச்சத்தீவை தாரைவார்த்தது, இலங்கைத் தமிழர்கள் படுகொலையை வேடிக்கை பார்த்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசுதான். அதை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்களால் எடுக்கப்படவில்லை. இலங்கையில் போர் நடைபெற்றபோது பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசுதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், இவர்களால் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியவில்லை. அதற்கான முயற்சிகளையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மேற்கொள்ளவில்லை” என எதிர்க்கட்சிகள் கச்சத்தீவு மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருத்து தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, “கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை” என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இந்நிலையில், சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசைதிருப்பும் அரசியலாகக் கையில் எடுத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180712
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஃபாவில் இராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேல் தயாராகுகிறது Published By: SETHU 08 APR, 2024 | 01:20 PM காஸாவின் தென்பிராந்திய நகரான ரஃபாவில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய படையினர் தயாராகின்றனர் என அந்நாட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். காஸாவின் ஏனைய பிராந்தியங்களிலிருந்து இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் தென்பிராந்திய நகரான ரஃபாவில் தங்கியியுள்ளனர். காஸா தென் பகுதியில் இஸ்ரேலியப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் பேச்சாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். எனினும், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் இது தொட்ரபாக கூறுகையில், ரஃபா உட்பட எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தயாராகுவற்காக கான் யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180704
-
காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் திடீர் தாக்குதல் - டாங்கிகளை பயன்படுத்தியும் தாக்குதல்
சாம்பல் மேடாக காணப்படுகின்றது காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை - அரைகுறையாக புதைக்கப்பட்ட உடல்களை பார்க்க முடிகின்றது - உலக சுகாதார ஸ்தாபனம் Published By: RAJEEBAN 08 APR, 2024 | 12:04 PM காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை இஸ்ரேலின் சமீபத்தைய முற்றுகை மற்றும் தாக்குதல் காரணமாக சாம்பல்மேடாகியுள்ளது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் மருத்துவமனை பல உடல்களுடன் வெறும் இடிபாடாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. முற்றிலும் அழிவுண்ட நிலையில் காணப்படும் மருத்துவமனைக்கு சென்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்கள் அரைகுறையாக புதைக்கப்பட்ட உடல்கள் கைகால்கள் வெளியில் தெரியும் நிலையில் காணப்படுவதை பார்த்துள்ளனர். அழுகிய உடல்களின் துர்நாற்றத்தையும் அவர்கள் அவதானித்துள்ளனர். மருத்துவமனையில் பாரிய அழிவையும் பார்வையிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்கள் முற்றுகையின் போது இஸ்ரேலிய படையினர் மிக மோசமான நிலையில் நோயாளிகளை தடுத்துவைத்திருந்தமை அவர்களில் சிலர் உயிரிழந்தமை குறித்து அறிந்துள்ளனர். இரண்டு வாரகால நடவடிக்கையின் பின்னர் கடந்த திங்கட்கிழமை அல்சிபா மருத்துவமனையிலிருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறியிருந்தனர். இரண்டு வாரங்களாக தாங்கள் மருத்துவமனையின் உள்ளே பாலஸ்தீன தீவிரவாதிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர். மருத்துவமனைக்குள் செல்வதற்கு பல தடவைகள் முயற்சிகளை மேற்கொணட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்குள் சென்றதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. முன்னர் காசாவின் சுகாதார துறையின் முதுகெலும்பாக காணப்பட்ட அல்ஸிபதா மருத்துவமனைக்குள் நாங்கள் சென்றோம். அது தற்போது மனித உடல்களுடன் வெறும் கோதாக காணப்படுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அதனம் கெப்ரயோசிஸ் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் நோயாளிகள் எவரும் இல்லை பல ஆழமற்ற மனித புதைகுழிகள் காணப்படுகின்றன தீவிர சிகிச்சை பிரிவிற்கு வெளியே அவசரஅவசரமாக அவற்றை தோண்டியுள்ளனர் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்கு சென்றவேளை ஆகக்குறைந்தது ஐந்து உடல்களாவது அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதை அவதானித்தோம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மருத்துவமனை முற்றாக அழிந்த நிலையில் காணப்படுகின்றது உடல்களின் துர்வாசனை வீசுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர சூழ்நிலைகளிற்கான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180686
-
வடக்கில் ஒரு வருடத்தில் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Published By: DIGITAL DESK 7 08 APR, 2024 | 01:50 PM வடமாகாணத்தில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 13 பேரும், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 2 பேரும், மன்னார் பொலிஸ் பிராந்தியத்தில் 6 பேரும், வவுனியா பொலிஸ் பிராந்தியத்தில் 5 பேரும், முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்தில் 8 பேரும் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்தில் 16 பேருமாக வடக்கில் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். "நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். எங்களின் தகவல்களின்படி வருடாந்தம் 700 - 800 பேர் இவ்வாறு இறக்கின்றனர். பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180705
-
உணவு ஒவ்வாமையால் 100 பேர் பாதிக்கப்பட்டு மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதி!
08 APR, 2024 | 01:33 PM ஸ்ரீபாத நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் தோட்ட ஆலய வருடாந்த திருவிழாவின் போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களில் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 100 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிறுவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆண்கள் பலர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (7) வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட பின் இவர்கள் அனைவரும் மயக்க நிலைக்குள்ளானதாகவும் இதனையடுத்து இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் 40 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த மஸ்கெலியா பிரதேச வைத்திய நிர்வாகம் இவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/180690
-
கிளிநொச்சி - பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்
டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி மற்றும் சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது - முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன்..! Published By: DIGITAL DESK 3 08 APR, 2024 | 12:56 PM டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி மற்றும் சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகது முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் கடந்த (05)ம் திகதி மக்களின் நியாயமான போராட்டத்தை முறியடிக்க 06 பஸ்களில் மக்கள் அழைத்துவரப்பட்டனர். குறித்த விடயம் தொடர்பாக ஊடக சந்திப்பொன்றை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது முதலில் நாம் 06 பஸ்களில் வந்திருந்த மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தமிழ் மக்கள் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு காசு ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபா தருவதாகவும், அட்டை பண்னைக்கான அனுமதிபத்திரம் தருவதாகவும் பல பொய்களை கூறி பொன்னாவெளி கிராம மக்களின் போராட்டத்தை முறியடிக்கும் நோக்கிலேயே அழைத்து வரப்பட்டனர். இருப்பினும் 06 பஸ்களில் வந்திருந்த வேறு பிரதேச மக்கள் பொன்னாவெளி கிராமத்தில் இடம்பெறும் போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதற்கு அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அதேபோல் ஜெயபுரம் மற்றும் முழங்காவில் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொன்னாவெளி மக்களுக்காக தமது நேர்மையான செயற்பாட்டை செய்திருந்தனர் அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்திருந்தார். அமைச்சர் இந்த நாட்டில் வடக்கில் நம்பி ஒரு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சரின் அடாவடித்தனமான செயலாக இச் செயல் அமைந்துள்ளது. மீண்டும் பல விசேட பாதுகாப்புகளுடன் பொன்னாவெளி கிராமத்திற்கு செல்ல உள்ளதாகவும் மக்களின் உரிமைபோராட்டத்தை அடக்கு முறை மூலம் நடத்திச்செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவரது இவ்வாறான செயல் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே பாதிக்கும் வடக்கில் கடல் தொழில் அமைச்சரால் வாக்கு எண்ணிக்கை வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும் போது இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலா என்றும் எண்ணந்தோன்றுகிறது எனவும் கருத்து வெளியிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/180689
-
கனடா தேர்தலில் இந்திய தலையீடா? - மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு
08 APR, 2024 | 09:55 AM புதுடெல்லி: கனடா தேர்தலில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக அந்த நாட்டு உளவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து உள்ளது. கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்தது. இதன் காரணமாகவே தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றிபெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது. சீனா தலையீடு: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது சுமார் 11-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக சீன உளவுத் துறை பெரும் தொகையை செலவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு கனடா பொதுத்தேர்தலின்போது சீன தூதரகங்கள் சார்பில் பெரும் தொகை வாரியிறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த கனடா அரசு சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த சூழலில் கனடா தேர்தலில் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யாவின் தலையீடும் இருந்ததாக அந்த நாட்டு உளவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: கனடா பொதுத்தேர்தல்களில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டி உள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆகும். எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களிலும் இந்தியா தலையிடுவது கிடையாது. இந்த கொள்கையை நாங்கள் கண்டிப்புடன் பின்பற்றி வருகிறோம். உண்மையைச் சொல்வதென்றால் இந்தியாவின் உள்விவகாரங்களில் கனடா தொடர்ந்து தலையிட்டு வருகிறது. இந்தியா மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். கனடா அரசு நியமித்த சிறப்பு ஆணையம் வரும் மே 3-ம் தேதி தனது முதல் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் விரிவான அறிக்கையை ஆணையம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/180663
-
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் படகு விபத்து- 90 பேர் உயிரிழப்பு!
மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 90 பேர் பலி ! 08 APR, 2024 | 08:28 AM மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தின் போது படகில் சுமார் 130 பேர் வரையில் பயணித்துள்ளனர். படகு விபத்தில் நீரில் மூழ்கிய 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற படகே இவ்வாறு வித்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படகு விபத்தின் போது காணாமல்போன ஏனையவர்களை தேடும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் குறித்த படகில் அதிகபட்சம் 100 பேர் பயணிக்க முடியுமெனவும் அதில் சுமார் 130 பேர் இருந்ததாக பயணித்ததாகவும் அந்நாட்டு அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180660
-
மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்களின் வாகனத்தை இலக்குவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு - 7 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை
நிவாரணப் பணியாளர்கள் கொலை: இஸ்ரேலிய கேணல், மேஜர் பணி நீக்கம் Published By: SETHU 08 APR, 2024 | 10:06 AM காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு உத்தரவிட்ட தனது படை அதிகாரிகள் இருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸாவில் உணவுப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த, 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' எனும் அமெரிக்க தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பயணம் செய்த வாகனத்தின் மீது கடந்த திங்கட்கிழமை (01) இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 7 பேர் உயிரிழந்தமை கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இத்தாக்குதல் தவறுதலாக இடம்பெற்றது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறினார். அதேவேளை இத்தாக்குதலுக்கு தான் மன்னிப்பு கோருவதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹேர்ஸாக் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இச்சம்பவத்தில் பல்வேறு தவறுகளும் விதிமுறை மீறல்களும் இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. ஹமாஸ் உறுப்பினர்களையே இலக்குவைப்பதாக தாம் நம்பியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. மேற்படி ட்ரோன் தாக்குதலுக்கு உத்தரவிட்ட கேணல் ஒருவரும் மேஜர் ஒருவரும் பணியிலிருந்து நீக்கக்கப்பட்டுள்ளனர் எனவும் தென் பிராந்திய தளபதி உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் முறையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர் எனவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்துவது குறித்து ஆராயும் பொறுப்பு இராணுவ அட்வகேட் ஜெனரலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 3 பிரித்தானியர்கள், ஒரு அவுஸ்திரேலியர், போலந்து பிரஜையொருவர், பலஸ்தீனர் ஒருவர், அமெரிக்க–- கனேடிய இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் மேற்படி சம்பவத்தில் கொல்லப்பட்டனர். இன்றுடன் 6 மாதங்கள் பூர்த்தியாகும் காஸா யுத்தத்தில் தனது தவறுகள் தொடர்பாக இஸ்ரேல் மன்னிப்பு கோரியமை அரிதாகும். இந்த யுத்தத்தினால் காஸாவில் 33,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். அமெரிக்கா வரவேற்பு இதேவேளை, தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்டமைக்கு இஸ்ரேல் முழுமையாக பொறுப்பேற்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பெல்ஜியத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இஸ்ரேல் இச்சம்பவத்துக்கு முழுமையாக பொறுப்பேற்கின்றமை முக்கியமானது. இச்சம்பவத்துக்கு காரணமானவர்களை பொறுப்பாளிகளாக்குவதற்கு இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொள்வதாக தென்படுவதும் முக்கியமானது' என்றார். விசாரணைக்கு வலியுறுத்தல் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சுயாதீன விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிரிமினல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என போலந்து வலியுறுத்தியுள்ளது. இக்கொலைகள் தொடர்பில் இஸ்ரேல் வழங்கிய தகவல்கள் போதுமானவையாக இல்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிப்படையான, சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. காஸாவில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கும் தொண்டர்களின் பாதுகாப்புக்கும் இஸ்ரேல் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கடந்த வியாழக்கிழமை பிரதமர் நெதன்யாஹுவுடன் தொலைபேசி மூலம் உரையாடியபோது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியிருந்தார். காஸாவுக்கு மேலும் அதிக நிவாரணங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதன்பின், காஸாவுக்கு தனது எல்லைகள் ஊடான விநியோக நடவடிக்கைகளை தற்காலிகமாக அனுமதிப்பதாக இஸ்ரேல் நேற்றுமுன்தினம் அறிவித்தது. இதேவேளை, காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் நடைபெறவுள்ளன. அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளும் இதற்காக கெய்ரோ செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/180665
-
உலகின் இளைய கோடீஸ்வரர் பட்டியலில் 19 வயது மாணவி!
பிரேசிலைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர், உலகின் மிக இளம் கோடீஸ்வரராக ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் பெயரிடப்பட்டுள்ளார். 19 வயதான லிவியா வோய்க்ட் 2024 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியனர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் அவரது வருமானம் $1.1 பில்லியன் ஆகும். லத்தீன் அமெரிக்காவில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஒரே பங்குதாரராக லிவியா வோய்க்ட் இந்த பில்லியனர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 25 பில்லியனர்களும் 33 வயதுக்குட்பட்டவர்கள் என்பது சிறப்பு. https://thinakkural.lk/article/298403
-
பூநகரியில் 10 கிலோ வெடி மருந்துடன் ஒருவர் கைது
Published By: DIGITAL DESK 7 08 APR, 2024 | 09:34 AM கிளிநொச்சி - பூநகரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆபத்தான வெடிமருந்தை, மோட்டர் சைக்கிளில் கடத்தி செல்வதாக பூநகரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை மடக்கி பிடித்து கைதுசெய்தனர். குறித்த நபரிடம் இருந்து 10 கிலோ நிறையுடைய சி - 4 ரக வெடிமருந்தை பொலிஸார் மீட்டனர். அதனை அடுத்து குறித்த நபரை கைதுசெய்து பூநகரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180661
-
ஏப்ரலில் முழு சூரிய கிரகணம்!
சூரிய கிரகண நேரத்தில் சில விலங்குகள் பதற்றமடையும்போது, ஆமைகள் இனச்சேர்க்கையில் ஈடுபடுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூரிய கிரகணம் கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்கி அட்கின்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சூரிய கிரகணம் எப்போதுமே மனிதர்களுக்கு ஆச்சரியமூட்டும் நிகழ்வாகவே உள்ளது. ஆனால், விலங்குகளின் உலகத்தில் ஒரு பகலின் குறிப்பிட்ட பகுதி இரவாக மாறும் நேரத்தில் அவை என்ன மாதிரியான உணர்வை எதிர்கொள்கின்றன? இந்த நாளில் சந்திரன் சூரியனை மறைப்பதன் காரணமாக ஒட்டுமொத்த வானமும் இருளால் சூழப்படுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும்போது குறிப்பிட்ட நேரமே அது நீடிக்கும் என்றாலும், மனிதர்களிடம் உணர்ச்சிபூர்வமான ஆச்சரிய உணர்வை அது உண்டாக்குகிறது. ஆனால், இதே நிகழ்வு விலங்குகள் மத்தியில் என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை கணிப்பது கடினம். தூக்கம், உணவு தேடுதல் மற்றும் வேட்டையாடுதல் என விலங்குகளின் அன்றாட செயல்பாடுகளும் 24 மணிநேர உயிரியல் நேரத்தின்படியே கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கிரகணம் ஏற்படும் நேரத்தில் இந்த செயல்பாட்டு முறை எப்படி பாதிக்கப்படுகிறது என்பது குறித்து பெரிய அளவில் எந்த ஆய்வும் செய்யப்பட்டதில்லை. காரணம் இந்த நிகழ்வுகள் பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நிகழும் ஒன்று. அதே சமயம் அனைத்து விதமான விலங்குகளும் ஒரே மாதியான எதிர்வினைகளை வெளிப்படுத்துவதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 100 ஆண்டுகளுக்கு முன்பு நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் ஒருவர் சூரியன் மறைவதை சோதனைக்கு உட்படுத்தினார். “ஒளி என்பது தாவரங்கள் முதல் விலங்குகள் வரை அனைத்தின் மீது தாக்கம் செலுத்தும் ஒன்று. உயிரியலாளர்களாக நம்மால் எப்போதும் சூரியனை ஒளி தராமல் நிறுத்த முடியாது, ஆனால் இயற்கை அதுவாகவே அந்த பணியை செய்கிறது” என்கிறார் ஸ்வீடனை சேர்ந்த லண்ட் பல்கலைக்கழக நடத்தை சூழலியல் நிபுணர் சிசிலியன் நில்சன். 100 ஆண்டுகளுக்கு முன்பு நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் ஒருவர் சூரியன் மறைவதை சோதனைக்கு உட்படுத்தினார். 1932இல் நடந்த சூரிய கிரகணத்தின் போது விலங்குகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்வதற்காக வில்லியம் வீலர் உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து பொதுமக்களை பணியமர்த்தினார். அதில் அவர் 500க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை பதிவு செய்தார். அவர்கள் ஆந்தைகள் கூச்சலிடத் தொடங்குவது மற்றும் தேனீக்கள் தங்கள் கூட்டிற்குத் திரும்புவது உள்ளிட்ட பறவைகள், பாலூட்டிகள், பூச்சிகள் மற்றும் தாவரங்களில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரகணத்தின் போது வேறு ஏதாவது மர்மமான நிகழ்வுகள் நடக்கிறதா என்று கண்காணிக்க மக்களுக்கும் ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆகஸ்ட் 2017 இல், இரண்டு நிமிடங்கள் மற்றும் 42 வினாடிகளுக்கு சூரியனின் கதிர்களை மறைக்கும் ஒரு கிரகணம் நிகழ்ந்த போது விஞ்ஞானிகள் மீண்டும் இந்த பரிசோதனையை செய்தனர். இந்த முறை, மேலும் ஆச்சரியமான முடிவுகள் கிடைத்தன. இருள் நெருங்க நெருங்க, ஒட்டகச் சிவிங்கிகள் பதற்றத்துடன் ஓடின. தெற்கு கரோலினா உயிரியல் பூங்காவில் ஆமைகள் இனச்சேர்க்கை செய்தன. மேலும் ஓரிகான், இடாஹோ மற்றும் மிசோரி மாநிலங்களில் வண்டுத்தேனீக்கள் (Bumble bee) ஒலி எழுப்புவதை நிறுத்திவிட்டன. இந்நிலையில் அடுத்த சூரிய கிரகணம் திங்கள்கிழமை (ஏப்ரல் 😎 அன்று நிகழவிருக்கும் நிலையில், அது மீண்டும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மெக்ஸிகோவிலிருந்து மெய்னே வரையிலான ஒரு குறுகிய நிலப்பரப்பில், விஞ்ஞானிகள் முழுமையான கிரகணப் பாதையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு ஏதாவது மர்மமான நிகழ்வுகள் நடக்கிறதா என்று கண்காணிக்க மக்களுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரகணத்தின் போது ஒவ்வொரு விலங்குகளும் வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றின. 'மிருகக்காட்சிசாலையே அன்று வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது’ தெற்கு கரோலினாவில் உள்ள ரிவர்பேங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் விஞ்ஞானி ஆடம் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ் கூறுகையில்,“ஆரம்பத்தில் மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகளுக்கு 2017இல் ஏற்பட்ட கிரகணத்தால் தாக்கம் ஏற்படாது என்றே கருதினோம்” என்று கூறினார். அன்று கிரகணத்திற்கு முன்பும், பின்பும் 17 உயிரினங்களின் நடவடிக்கைகளை கவனிப்பதற்காக பயிற்சி பெற்ற ஆய்வாளர்களும், மக்களும் அங்கு கூடியிருந்தனர். “ஆனால், கிரகணத்தின் போது மிருகங்கங்களின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளால் அன்றைய நாள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மாறிவிட்டது. அங்கிருந்த மக்கள் அனைவரும் ஆரவாரமாக இருந்தனர்.” அங்கிருந்த முக்கால்வாசி விலங்குகள் ஏதோ அற்புதமான மற்றும் வாழ்க்கையையே மாற்றப்போகும் நிகழ்வை எதிர்கொள்வது போன்ற நடவடிக்கைகளை வெளிப்படுத்தின என்று கூறுகிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். இந்த கலவையான எதிர்வினைகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டது. அதில் சாதாரணமாக இருந்த விலங்குகள், தங்கள் மாலை நேர நடைமுறைகளைச் வழக்கமாக செய்தவை, கவலை அல்லது புதுமையான நடத்தைகளைக் காட்டியவை என பிரிக்கப்பட்டன. கிரிஸ்லி கரடிகள் போன்ற சில விலங்குகள் ஒரு அரிய பிரபஞ்ச நிகழ்வை அனுபவிப்பதில் முற்றிலும் ஆர்வமில்லாமல் இருந்தன. "கிரகணம் முழுமையாக நிகழும் போது போது அவை உண்மையில் தூங்கிக்கொண்டும், இயல்பாகவும் இருந்தன," என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். "ஒட்டுமொத்தத்தில் அவற்றில் ஒன்று தலையை குனிந்துகொண்டு என்ன நடந்தால் எனக்கென்ன கவலை என்பது போல இருந்ததாக," அவர் கூறுகிறார். "மறுபுறம் இரவுநேரப் பறவைகள் மிகவும் குழப்பமான மனநிலையில் காணப்பட்டன. தவளைகளின் தோற்றம் அழுகிய மரத்தின் பட்டைகளை போல இருந்தது” என்று கூறினார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். இரவு நேரங்களில் உணவுகளை தேடுவதற்காக பறவைகள் தங்களது உடலை மறைத்துக் கொள்வது போல, கிரகணத்தின் உச்சத்திலும் அதையே செய்தன. கிரகணம் முடிந்த பிறகு மரக்கிளையில் தங்களது வழக்கமான இடங்களுக்கு அவை நகர்ந்து விட்டன என்று கூறுகிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "நிதானமான விலங்குகளான ஒட்டகச்சிவிங்கிகள், காடுகளில் வேட்டையாடப்படும் போது ஓடுவது போல் திடுக்கிட்டு ஓட ஆரம்பித்தன." இனச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆமைகள் இதில் சோகம் என்னவெனில், கிரகணத்தின் போது சில விலங்குகள் கவலை மற்றும் துன்பமாக இருப்பது போன்ற அறிகுறிகளைக் காட்டின. "பொதுவாகவே நிதானமான விலங்குகளாக கருதப்படும் ஒட்டகச்சிவிங்கிகள், காடுகளில் வேட்டையாடப்படும் போது ஓடுவது போல் திடுக்கிட்டு ஓட ஆரம்பித்தன. இது டென்னசியில் உள்ள நாஷ்வில்லி மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒட்டகச்சிவிங்கிகளின் நடவடிக்கையை பிரதிபலித்தது. ஆனால் இவற்றில் கலாபகோஸ் ராட்சத ஆமைகளே விசித்திரமான நடத்தையைக் கொண்டிருந்தன. "பொதுவாக, ஆமைகள் மிகவும் சாதுவாக அமர்ந்திருக்கும். அவை மிகவும் உற்சாகமாக இருக்கும் விலங்குகள் அல்ல," என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். இருப்பினும், கிரகணம் உச்சமடையும் வேளையில் அவை வேகமாக ஒன்றுக்கொன்று இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக கூறுகிறார் அவர். கிரகணத்தை பார்த்து விலங்குகள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதை உற்றுநோக்க மிருகக்காட்சிசாலை ஒரு தனித்துவமான சூழலாக இருந்தபோதிலும், அதில் குறைபாடுகளும் இருந்தன. "கிரகணம் உற்சாகத்தை தரக்கூடியது என்பதால், அன்று மக்கள் மிகவும் பரபரப்பாகவும் சத்தமிட்டுக்கொண்டும் இருந்தனர்" என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரகணத்தின் போது சிலந்திகள் தங்களது வலையை அழித்துக் கொண்டன. விரிவான தரவு சோதனை அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரை பரவியுள்ள சுமார் 143 வானிலை நிலையங்களில் கிடைத்த தரவுகளைப் பயன்படுத்துவதே தரவு சார்ந்த அணுகுமுறை. "எங்களிடம் எப்போதும் வானத்தை கண்காணிக்கும் இந்த நெட்வொர்க் உள்ளது, இது இந்த அரிய நிகழ்வுகளை பெரிய அளவில் ஆராய ஒரு சிறந்த வாய்ப்பாகும்" என்று அந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய நில்சன் கூறுகிறார். சூரியன் மறையும் போது ஒளியின் மாற்றத்தை தவறாக நினைத்துக் கொண்டு, பறவைகள் மற்றும் பூச்சிகள் வானத்திற்கு திரண்டு வருமா என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டனர். இருப்பினும், கிரகணத்தின் இருளில் பறவைகளைக் கண்டுபிடிப்பது கடினம். எனவே அங்கு தான் வானிலை நிலையங்கள் உதவி செய்கின்றன. நில்ஸன் கூறுகையில், "தனிப்பட்ட பறவைகளைக் கண்காணிப்பதற்குப் பதிலாக, காற்றில் உள்ள உயிரியல் பொருட்களின் அளவை ஒட்டுமொத்தமாக அளவிடுகிறோம்" என்கிறார். ஒரு எளிய ரேடாரின் உதவியோடு பறவைகள் மற்றும் மேகங்கள் ஆகியவற்றை தனித்தனியாக மதிப்பிடுகிறோம். சூரியன் மறையும் போது, வானத்தில் செயல்பாடு பொதுவாக உச்சத்தை அடைகிறது. பறவைகள் தங்கள் இரவு நேர இடம்பெயர்வுகளைத் தொடங்குகின்றன. ஆனால் நடுப்பகலில் ஒரு அசாதாரணமான இருள் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான அறிகுறியாக செயல்படுமா? "உண்மையில் வானில் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை நாங்கள் கண்டோம். பெரும்பாலான பறவைகள் கிரகணம் முடியும் வரை தரைக்கு சென்றுவிட்டன அல்லது பறப்பதை நிறுத்தி விட்டன. இதில் ஒரு கோட்பாடு என்னவென்றால், ஒரு புயல் நெருங்கி வரும் போது அவை என்னை செய்யுமோ, அதையே தான் கிரகணத்தின் போதும் அவை செய்தன" என்று நில்ஸன் கூறுகிறார். இரண்டாம் கட்ட விளைவுகள் பறவைகளின் முக்கியமான கூடு கட்டும் தளமாகவும், புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு இடைநிறுத்தப் புள்ளியாகவும் உள்ள நெப்ராஸ்காவின் பிளாட் நதி பள்ளத்தாக்கில், 2017 கிரகணத்தில் ஏற்பட்ட நடத்தை போக்குகளை தனிமைப்படுத்திப் பார்ப்பது எளிதாக இருந்தது. வனவிலங்குகளைக் கண்காணிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று இயற்கை பாதைகளில் டைம்-லேப்ஸ் கேமராக்கள் மற்றும் ஒலிக் கருவிகளை பொருத்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெஸ்டர்ன் மெடுலார்க்ஸ் பறவைகள் 95% தெளிவற்ற நிலைக்கு சென்றன அல்லது ஒருகட்டத்தில் மொத்தமாக பறப்பதை நிறுத்திவிட்டன. இருப்பினும், பறவைகள் பல்வேறு வழிகளில் எதிர்வினையாற்றின என்று கீர்னியில் உள்ள நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் எம்மா பிரின்லி பக்லி கூறுகிறார். வெஸ்டர்ன் மெடுலார்க்ஸ் பறவைகள் 95% கிரகணத்தின்போது மழுங்கடிக்கப்பட்ட நிலைக்கு சென்றன அல்லது ஒருகட்டத்தில் மொத்தமாக பறப்பதை நிறுத்திவிட்டன. மறுபுறம், அமெரிக்க கோல்ட்ஃபின்ச் மற்றும் சாங் ஸ்பாரோஸ் சிட்டுக்குருவிகள் கிரகண உச்சத்தின்போது சத்தமிடுவதை அதிகரித்தன என்று அவர் கூறுகிறார். மனிதர்களைப் போலவே, விலங்குகளும் கிரகணங்களின் போது வெவ்வேறு வழிகளில் எதிர்வினையாற்றுகின்றன. சில ஆய்வுகளில், மீன்கள் அடைக்கலம் தேடி ஓடின, சிலந்திகள் தங்களது வலைகளை அழித்தன. மிகச் சமீபத்திய பரிசோதனையில், கிரகணத்தின் போது தேனீக்கள் ஒலியெழுப்புவதை நிறுத்தி விடுகின்றன. ஆனால் அனைத்து மாற்றங்களுக்கும் நாம் ஒளியை காரணமாக கூற முடியாது, முழு கிரகணத்தால் ஏற்படும் இரண்டாம் நிலை விளைவுகளும் இருக்கின்றன என்று கூர்கிறார் பிரின்லி பக்லி. நெப்ராஸ்காவில், வெப்பநிலை சுமார் 6.7 டிகிரி செல்சியஸ் (12 எஃப்) குறைந்து, ஈரப்பதம் 12% உயர்ந்தது. இது ஒரு குறுகிய காலத்திற்குள்ளான கடுமையான மாற்றமாகும். "அங்கு குறைந்த சூரிய ஒளி உள்ளது, இதன் விளைவாக சுற்றுப்புற வெப்பநிலை குறைகிறது, மேலும் இது காற்றில் ஏற்படும் மாற்றங்களால் அதிகரிக்கிறது" என்று அவர் கூறுகிறார். இந்நிலையில், மாற்றத்திற்கான துல்லியமான காரணத்தை கூறுவது கடினம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த முறை சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க அதிக மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மக்களின் பங்கேற்பு இந்த ஏப்ரல் மாதத்தில், வட கரோலினாவில் உள்ள ரிவர்பேங்க் மிருகக்காட்சிசாலை அதிக பொது மக்களுடன் கிரகணம் குறித்த தங்கள் கண்காணிப்பை விரிவுப்படுத்தியுள்ளது. "சிலர் இதை மிகவும் அமைதியாக, தனியாக செய்ய விரும்புகிறார்கள். சிலர் தங்கள் நண்பர்களுடன் இதைச் செய்ய விரும்பலாம் அல்லது சிலர் ஏதாவது ஒருவகையில் பங்களிக்க விரும்பலாம்" என்று ஹார்ட்ஸ்டோன்-ரோஸ் கூறுகிறார். சூரிய கிரகண சஃபாரி திட்டம் ஆயிரக்கணக்கான மக்களை விலங்குகளின் நடத்தையைக் கவனிக்க ஊக்குவிக்கிறது. இருப்பினும் அவர்கள் உயிரியல் பூங்காக்களையும் தாண்டி, இதில் பண்ணை விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை இணைக்க விரும்புகிறார்கள். அக்டோபர் 2023 வருடாந்திர கிரகணத்திலிருந்து ஆரம்பக்கட்ட தரவுகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது. மொத்த சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், வருடாந்திர கிரகணம் என்பது சந்திரன் சூரியனை ஓரளவு மட்டுமே மறைக்கும். இதையே சிலர் ஒரு ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கின்றனர். நாசா எக்லிப்ஸ் சவுண்ட்ஸ்கேப்ஸ் திட்டத்தை நடத்தி வருகிறது. இதில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 1,000 தரவு சேகரிப்பாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பங்கேற்பாளர்கள் ஆடியோமோத்ஸ் எனப்படும் சிறிய தரவு ரெக்கார்டர்களைப் பயன்படுத்தலாம், அவை மூன்று ஏஏ பேட்டரிகளின் அளவு கொண்டவை. இந்த ஆடியோ தரவு ரெக்கார்டர்கள் கிரகணத்தின் போது வனவிலங்குகளிடமிருந்து வரும் ஒலிகளை பதிவு செய்யும். "குறிப்பாக ஒலிகள் விலங்குகள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம்" என்று கூறுகிறார் ஹென்றி ட்ரே விண்டர். இவர் ஒரு சோலார் இயற்பியலாளர். அசாதாரண தூண்டுதல்களுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றும் விதம், மனிதனால் தூண்டப்படும் இடையூறுகளைப் பற்றிய புரிதலை வழங்கக்கூடும் என்று விண்டர் கூறுகிறார். "மரம் வெட்டுதல் அல்லது இரவு முழுவதும் விளக்குகள் ஒளிரும் கட்டுமான தளங்கள் காரணமாக ஒரு பகுதியில் எழும் உரத்த ஒலிகளின் விளைவை நீங்கள் கேட்கலாம்". 2044க்கு முன்பாக அமெரிக்காவில் தெரியும் கடைசி முழு சூரிய கிரகணம் இதுவாகும். எனவே பல மக்கள் விலங்குகள் மீதும் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c3g50d876d8o
-
வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது
Published By: VISHNU 08 APR, 2024 | 01:39 AM வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இன்று (07.04.2024) காலை குறித்த ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் கடந்த (03.04) அன்று பாடசாலை முடிந்து வீட்டிற்குச் சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாகத் தெரிவித்துள்ளான். இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனைத் தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்குக் கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த ஆசிரியை 'உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார். காயமடைந்த சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமையுடன் பொலிஸாரிடமும் முறைப்பாடு அழிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாகச் சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியை கைது செய்யப்படாமையினால் சமூக வலைத்தளங்களில் பொலிஸாருக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருந்தன. இந்நிலையில் வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் இன்று காலை குறித்த ஆசிரியரைக் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/180657
-
காஸாவில் போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவு: ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?
கட்டுரை தகவல் எழுதியவர், மெரிலின் தாமஸ் மற்றும் ஜேக் ஹார்ட்டன் பதவி, பிபிசி வெரிஃபை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் 7 அன்று காஸா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, சுமார் 1200 பேரைக் கொன்றனர், நூற்றுக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். இத்தாக்குதல் நடந்து ஆறு மாதங்களாகி விட்டன. இதற்குப் பதிலடியாக, பணயக் கைதிகளை ஹமாஸ் பிடியிலிருந்து விடுவித்து அவர்களை வீடு திரும்பச் செய்வோம் என்றும் “ஹமாஸை அழித்து ஒழிப்போம்” என்றும் இஸ்ரேல் உறுதியளித்தது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடரும் போரில், குறைந்தது 33,000 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் காஸா பகுதியின் பெரும்பகுதி அழிக்கப்பட்டதாகவும், ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றதுடன், காஸாவில் பூமிக்கடியில் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தும் பரந்த சுரங்கப்பாதை வலையமைப்பை அழித்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது. பிபிசி வெரிஃபை (BBC Verify) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்தது. மேலும், இஸ்ரேலின் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்தது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, யாஹ்யா சின்வார் உட்பட பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் காஸாவில் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது. எத்தனை ஹமாஸ் தலைவர்கள் இறந்தார்கள்? அக்டோபர் 7 ஆம் தேதிக்கு முன்னர், காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 30 ஆயிரம் பேர் இருந்ததாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தளபதிகளை மேற்கோள் காட்டி கூறப்பட்டது. ஹமாஸின் மிகப்பெரிய தலைவர் இஸ்மாயில் ஹனியா உட்பட பல மூத்த அரசியல் பிரமுகர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆனால், அதன் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பலர் காஸாவிற்குள் இருப்பதாக நம்பப்படுகிறது. போர் தொடங்கியதில் இருந்து சுமார் 13 ஆயிரம் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தரவு எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை. கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் தலைவர்களின் பெயர்களையும் இஸ்ரேல் வெளியிட்டது. அக்டோபர் மாதம் முதல் இதுபோன்ற 113 பேரின் பெயர்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் போரின் முதல் மூன்று மாதங்களில் உயிரிழந்தனர். இதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் வரை காஸாவில் எந்த மூத்த ஹமாஸ் தலைவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை. மார்ச் 26 அன்று, ஹமாஸின் ராணுவப் பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசாவை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இஸ்ரேலில் மிகவும் தேடப்படும் நபராகக் கருதப்படும் இசா, இப்போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட ஹமாஸின் மூத்தத் தலைவர் ஆவார். அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாக அமெரிக்கா கூறியது. ஆனால் ஹமாஸ் இசாவின் மரணத்தை உறுதிப்படுத்தவில்லை. கொல்லப்பட்ட மூத்த ஹமாஸ் தலைவர்களின் பெயர்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. ஆனால், இவர்கள் ஹமாஸின் உறுப்பினர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. இப்பட்டியலில் ஹமாஸ் குழுவில் அல்லாதவர்கள் சிலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவர்களுள் ஒருவர் ஒருவர் முஸ்தஃபா துரையா. இவர், தெற்கு காஸாவில் சுயாதீன பத்திரிக்கையாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது, ஜனவரி மாதம் அவரது வாகனம் இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளானது. மேலும், இப்பட்டியலில் சிலரது பெயர்கள் இருமுறை குறிப்பிடப்பட்டிருந்தன. அதனால், அவர்களின் பெயர்களை மொத்த எண்ணிக்கையில் சேர்க்கவில்லை. காஸாவிற்கு வெளியே உள்ள ஹமாஸின் அரசியல் தலைவரான சலே அல்-அரூரி இந்த ஆண்டு ஜனவரியில் பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றது. எனினும், யாஹ்யா சின்வார் உட்பட காஸாவில் உள்ள பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புவதாக நாங்கள் பேசிய நிபுணர்கள் தெரிவித்தனர். “ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களை இஸ்ரேல் ராணுவத்தால் அடைய முடியவில்லை” என, சர்வதேச நெருக்கடிக் குழுவில் இஸ்ரேல்-பாலத்தீன விவகாரங்கள் குறித்த மூத்த ஆய்வாளர் மைரவ் சோன்ஸ்சீன் கூறினார். "ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்து அப்பிரதேசத்தை விடுவிப்பதையும் இஸ்ரேலால் இன்னும் சாதிக்க முடியவில்லை" என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,REUTERS காஸாவில் எத்தனை பணயக்கைதிகள் எஞ்சியுள்ளனர்? இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 7 ஆம் தேதி 253 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இவர்களுள், தனித்தனி ஒப்பந்தங்கள் அல்லது கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களின் கீழ் 109 பேர் விடுவிக்கப்பட்டனர். மூன்று பேரை இஸ்ரேல் ராணுவம் நேரடியாக ராணுவ நடவடிக்கை மூலம் காப்பாற்றியது. பணயக் கைதிகள் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்ட மூவரும் இவர்களில் அடங்குவர். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுள் உயிருடன் உள்ளவர்களில், இளையவரின் வயது 18 என்றும், மூத்தவரின் வயது 85 என்றும் கூறப்படுகிறது. மீதமுள்ள 130 பணயக்கைதிகளில், இஸ்ரேலின் கூற்றுப்படி, 34 பேர் இறந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட பணயக்கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியாது. ஹமாஸால் பிடிக்கப்பட்ட இரண்டு இளம் பணயக்கைதிகள் ஏரியல் மற்றும் ஃபிர். இருவரும் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நேரத்தில், முறையே 4 வயது மற்றும் 9 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. இருவரும் இப்போது இவ்வுலகில் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் மரணம் உறுதி செய்யப்படவில்லை. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஹமாஸ் தனது சுரங்கப்பாதை வலையமைப்பு 500 கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளதாக கூறுகிறது, எனினும் இதை உறுதிப்படுத்த முடியாது. ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பு எந்தளவுக்கு அழிக்கப்பட்டது? ஹமாஸை அழிப்பதாக உறுதியளித்ததோடு, காஸாவில் பூமிக்கடியில் அக்குழுவினரின் மிகப்பெரிய சுரங்கப்பாதை வலையமைப்பையும் அழிப்பதாக இஸ்ரேல் உறுதியளித்தது. ஹமாஸ் இந்த சுரங்கப்பாதைகள் வழியாக உணவு மற்றும் மக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ், "காஸா முனையை பொதுமக்களுக்கான ஒரு அடுக்கு என்றும், மற்றொரு அடுக்கு ஹமாஸ் என்றும் நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஹமாஸ் உருவாக்கிய அந்த இரண்டாவது அடுக்கை அடைய முயற்சிக்கிறோம்" என கடந்த அக்டோபரில் தெரிவித்தார். காஸாவின் சுரங்கப்பாதை வலையமைப்பு சுமார் 500 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது என்று ஹமாஸ் முன்னதாக கூறியிருந்தது. இருப்பினும், இந்த தகவலை சுயாதீனமாக சரிபார்க்க வழி இல்லை. இதுவரை எத்தனை சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டுள்ளன, அவை மொத்த எண்ணிக்கையில் எவ்வளவு என்று இஸ்ரேல் ராணுவத்திடம் கேட்டோம். அதற்கு, "காஸாவில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை பெருமளவில் அழித்துள்ளதாக" இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஹமாஸ் சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை இஸ்ரேல் ராணுவம் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் அடியில் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியின் வீடியோ காட்சிகளை நவம்பரில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. இஸ்ரேல் ராணுவத்தின்படி, அது ஹமாஸின் கட்டளை மையமாக பயன்படுத்தப்பட்டது. இஸ்ரேல் ராணுவம் இதுவரை எத்தனை நீண்ட சுரங்கப்பாதைகளை கண்டறிந்துள்ளது என்பதை அறிய, காஸாவின் சுரங்கப்பாதைகள் தொடர்பாக அக்டோபர் 7, 2023 மற்றும் மார்ச் 26, 2024 வரை அதன் சமூக ஊடக தளங்களிலும், டெலிகிராமிலும் வெளியிடப்பட்ட செய்திகளை பிபிசி சரிபார்த்தது. இதில், 198 செய்திகளில், சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் இருந்தன. மற்றொரு 141 செய்திகள், சுரங்கப்பாதையை அழித்தது அல்லது செயலிழக்கச் செய்தது குறித்துக் கூறுகின்றன. இந்த செய்திகளில் பெரும்பாலானவை சுரங்கப்பாதைகளின் இருப்பிடம் தொடர்பான துல்லியமான விவரங்களை வழங்கவில்லை. எனவே, இஸ்ரேல் ராணுவம் எத்தனை சுரங்கங்களை கண்டுபிடித்தது அல்லது அழித்தது என்பதை உறுதிப்படுத்த முடியாது. காஸாவில் பூமிக்கடியில் உள்ள இந்த வலைப்பின்னல் அமைப்பிலான சுரங்கப்பாதை பாதைகளில் வெவ்வேறு அளவுகளில் அறைகள், அத்துடன் சுரங்கப்பாதை மேற்பரப்பை சந்திக்கும் ஒரு புள்ளி உட்பட பல கூறுகளால் ஆனது. நாங்கள் பகுப்பாய்வு செய்த செய்திகளில், 36 செய்திகள், மொத்தம் 400 சுரங்கவாயிற்குழிகள் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இஸ்ரேலின் ரீச்மேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சுரங்கப்பாதை வழி போர்களில் நிபுணருமான டாக்டர். டாப்னே ரிச்மண்ட், ஒரு சுரங்கவாயிற்குழியை சுரங்கப்பாதையுடன் ஒன்றாக தொடர்புப்படுத்துவது தவறாக வழிநடத்தும் என்று கூறுகிறார். இந்த சுரங்கவாயிற்குழிகளை அழித்த பிறகும் சுரங்கப்பாதை வலையமைப்பு அப்படியே உள்ளது என்று அவர் கூறுகிறார். "இந்தப் போரில் சுரங்கப்பாதைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவில் பெரும்பாலான கட்டடங்கள் அழிக்கப்பட்டன. பாலத்தீனர்களுக்கு ஏற்பட்ட இழப்பு காஸாவில் வாழும் பாலத்தீனர்கள் இஸ்ரேலின் போர் நோக்கங்களுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று. ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏப்ரல் 5 அன்று அமைச்சகம் வெளியிட்ட தரவின் படி, கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதைக் காட்டுகிறது. ஹமாஸ் இலக்குகளை அழிக்க இஸ்ரேலிய படைகளின் முயற்சிகளுக்கு மத்தியில் பலர் இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காஸாவில் உள்ள 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குடியிருப்புப் பகுதிகள் பாழடைந்து, பரபரப்பாக இருந்த சாலைகள் தற்போது ஒன்றும் இல்லாமல் ஆகியுள்ளன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 7 முதல், காஸாவின் 56 சதவீத கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் இடிக்கப்பட்டுள்ளன என்று செயற்கைக்கோள் தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது. போர் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகும், இஸ்ரேல் தனது போர் நோக்கங்களை அடைந்துவிட்டதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. https://www.bbc.com/tamil/articles/c19x999dmlzo
-
கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு
Published By: VISHNU 07 APR, 2024 | 10:33 PM கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவிற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்குமான எல்லைப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் தமது விவசாயத்தை அழித்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறை வைத்து காலபோகம் சிறுபோகம் செய்து வரும் விவசாயிகளின் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கின்றனர். 30அடி ஆழத்திலிருந்த ஆற்றுப்பகுதி தற்பொழுது 50அடிக்கும் மேலாக மணல் அகழ்வால் பாதிப்படைந்துள்ளது. இதனால் அருகில் உள்ள வயல் நிலங்கள் இடிந்து விழுவதாகவும் தமது விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் பல தடைவைகள் புதுக்குடியிருப்பு பொலிசாரிடமும் தர்மபுர பொலிசாரிடமும் முறைப்பாடு செய்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும தமக்கான வாழ்வாதார நிலங்களை பாதுகாத்து தருமாறு கேட்டு நிற்கின்றனர். https://www.virakesari.lk/article/180651
-
ஏப்ரலில் முழு சூரிய கிரகணம்!
இன்று முழுமையான சூரிய கிரகணம் 08 APR, 2024 | 10:14 AM முழுமையான சூரிய கிரகணம் இன்று (8) திங்கட்கிழமை தோன்றவுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழுமையான சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது. அரிதாகவே இந்த முழுமையான சூரியகிரகணம் தோன்றும். இந்த முழு சூரிய கிரகணத்தை கண்டுகளிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு இல்லை. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் வசிக்கும் மக்கள் இந்த முழு சூரிய கிரகணத்தை கண்டுகளிக்க முடியும். இலங்கை நேரப்படி இந்த முழு சூரிய கிரகணமானது இன்று (8) இரவு 9.12 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை (9) பிற்பகல் 2.22 மணி வரை தோன்றும். இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் என நாசா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/180668
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
காற்றில் பறந்தபடி லக்னோ வீரர் பிடித்த மாயாஜால கேட்ச்; குஜராத் அணி செய்த தவறுகள் என்னென்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லக்னோவின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இல்லாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி, லக்னோ அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் இரண்டாவது வது வெற்றியைப் பெற்றுள்ளது. லக்னோவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் எனும் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்து 33 ரன்களில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் வெற்றி ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் அறிமுகமானபின், குஜராத் டைட்டன்ஸ் அணியை லக்னோ அணி ஒருமுறை கூட வீழ்த்தியதில்லை. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை வென்று லக்னோ அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அது மட்டுமல்லாமல் லக்னோ அணி இதுவரை 160 ரன்களுக்கு மேல் அடித்து அந்த ஆட்டத்தில் தோற்றதில்லை என்ற சாதனையை வைத்திருந்தது. அதை நேற்றைய ஆட்டத்திலும் அந்த சாதனையைத் தக்கவைத்தது. அது மட்டுமல்லாமல் லக்னோ அணி இதுவரை முதலில் பேட் செய்த போட்டிகளில் 80 சதவீதத்துக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது, எதிரணியை இலக்கை எட்டவிடாமல் செய்து வெற்றி பெறுவதை சவாலாக வைத்திருக்கிறது. அந்த சவால் நேற்றும் தொடர்ந்து லக்னோ அணி தனது சாதனையைதக்க வைத்தது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி 4 போட்டிகளில் 3 வெற்றி ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.நிகர ரன்ரேட்டும் 0.775 என்று ஏற்றத்துடன் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது, நிகர ரன்ரேட்டும் மைனஸ் 797 ஆகச் வீழ்ந்துள்ளது. லக்னோ ஆடுகளம் பேட்டர்களுக்கு உகந்த விக்கெட்டைக் கொண்டது. இந்த மைதானத்தில் 163 ரன்கள் என்பது சேஸிங் செய்துவிடக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், அந்த ஸ்கோரை அடித்து, குஜராத் அணியை டிபெண்ட் செய்துள்ளனர் லக்னோ பந்துவீச்சாளர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்விக்கு காரணம் என்ன? அதிரடியான தொடக்கத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த குஜராத் டைட்டன்ஸ் அணி 54 ரன்கள்வரை விக்கெட் இழப்பின்றி பயணித்தது. ஆனால், அடுத்த 48 ரன்களுக்குள் சீட்டுக்கட்டு சரிவதுபோல் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் குழிக்குள் விழுந்தது. குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில்(19), சுதர்சன்(31) ஆகியோர் தவிர நடுவரிசையில் ஒரு பேட்டர்கூட நிலைக்கவில்லை. நடுவரிசை பேட்டர்களின் ‘ஷாட்கள்’ தேர்வு நேற்றைய ஆட்டத்தில் படுமோசமாக இருந்தது, விக்கெட்டுகளை எளிதாக லக்னோ அணிபந்துவீச்சாளர்களுக்கு தூக்கிக் கொடுத்து பெவிலியன் சென்றனர். திவேட்டியா(30) வெற்றிக்காக தனி ஒருவனாகப் போராடியும் பலன் இல்லை. ஒட்டுமொத்தத்தில் பேட்டர்களின் தோல்விதான் குஜராத் அணியை வீழ்ச்சியில் தள்ளியது. அது மட்டுமல்ல டேவிட் மில்லர் காயத்தால் அணியில் இடம் பெறாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு, நடுவரிசையிலும் பள்ளத்தை ஏற்படுத்தி ஆங்கர் ரோல் இல்லாத வெற்றிடத்தை ஏற்படுத்தியது. குஜராத் அணியின் திறமையான பல வீரர்கள் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளனர். அவர்களை இதுபோன்ற நேரத்தில் களமிறக்கி பரிசோதிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடுவரிசைக்கு ஆங்கர் ரோல் செய்யக்கூடிய அனுபவமான பேட்டர் வில்லியம்சனைத் தவிர யாரும் இல்லை. ஆல்ரவுண்டரான அபினவ் மனோகர் இதுவரை வாய்ப்புத் தரவில்லை, ஆஸ்திரேலியாவின் “சிறந்த ஃபினிஷர்” எனக் கூறப்படும் விக்கெட் கீப்பர் மேத்யூ வேடை, பரத்துக்குப் பதிலாகச் சேர்த்திருக்கலாம் என்றும் விமர்சிக்கப்படுகிறது. அதேபோல ஆல்ரவுண்டர் ஓமர்சாய்க்கு ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்புத் தரப்பட்டது. குஜராத் அணியில் நேற்றைய ஆட்டத்தில் வில்லியம்ஸனுக்குப்பின், களத்தில் நிலைத்து ஆடுவதற்கு அனுபவமான பேட்டர், சர்வதேச அனுபவம் கொண்ட பேட்டர் யாருமில்லை. பேட்டர்கள் இல்லாமல் பந்துவீச்சாளர்களை மட்டும் தேர்ந்தெடுத்தது அந்த அணிக்கு எதிராகவே அமைந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘நல்ல ஆடுகளம், பேட்டிங் மோசம்’ குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ லக்னோ மைதானம் பேட்டர்களுக்கு உகந்த நல்ல விக்கெட். ஆனால், எங்களின் மோசமான பேட்டிங்தான் தோல்விக்கு காரணம். நன்றாகத் தொடங்கி, நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தோம், அதிலிருந்துஎங்களால் மீள முடியவில்லை. எங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, 163 ரன்களில் கட்டுப்படுத்தினர்.” “180 வரை எதிர்பார்த்தோம் ஆனால், அதற்குள் சுருட்டிவிட்டனர். எந்த நேரத்திலும்ஆட்டத்தை திருப்பக்கூடிய மில்லர் காயத்தால் இல்லாதது பெரிய பின்னடைவு. இந்த இலக்கு அடைந்துவிடக்கூடியதுதான், ஆனால், பவர்ப்ளேயின் கடைசி ஓவரில்நான் ஆட்டமிழந்திருக்கக் கூடாது. உமேஷ் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார், நல்கன்டேயின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது” எனத் தெரிவித்தார் கட்டுக்கோப்பான பந்துவீச்சு லக்னோ அணி 160 ரன்களுக்கு மேல் குவித்து இதுவரை தோல்வி அடைந்தது இல்லை என்ற வரலாற்றை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. இந்த ஆட்டத்தில் லக்னோவின் “வேகப்புயல்” மயங்க் யாதவ் ஒரு ஓவர் வீசியநிலையில் காயத்தால் போட்டியிலிருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், அதை சமாளித்து மற்ற பந்துவீச்சாளர்களை வைத்து கேப்டன் ராகுல் வெற்றியை நோக்கி வழிநடத்தினார். அதிலும் குறிப்பாக யாஷ் தாக்கூர், குர்னல் பாண்டியா, ரவி பிஸ்னோய், நவீன் உல்ஹக் ஆகிய 4 பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியின் பேட்டிங் வரிசையை உலுக்கிஎடுத்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டநாயகன் தாக்கூர் குறிப்பாக யாஷ் தாக்கூர் தனது ஐபிஎல் வாழ்க்கையில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அற்புதமாகப் பந்துவீசிய தாக்கூர் 3.5 ஓவர்கள் வீசி அதில் ஒரு மெய்டன் 30 ரன்கள், 14 டாட்பந்துகள் எடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். வெற்றிக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய பேட்டர்கள் கில், திவேட்டியா, விஜய் சங்கர் என பேட்டர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிப்பாதை அமைத்தது யாஷ் தாக்கூர் பந்துவீச்சுதான். குருணல் பாண்டியாவின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் குஜராத் பேட்டர்களின் கைகளைக் கட்டிப்போட்டது என்று கூறலாம். 4ஓவர்கள் வீசிய குர்னல் பாண்டியா 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் 13 டாட்பந்துகள் உள்பட ஒரு பவுண்டரி,சிக்ஸர்கூட அடிக்கவிடாமல் பந்துவீசியது சிறப்பாகும். அதிலும் குஜராத்தின் ஆபத்தான பேட்டர் சாய் சுதர்ஷன் விக்கெட்டை வீழ்த்தி குர்னல் பாண்டியா ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன்பின் நடுவரிசை பேட்டர்கள் பிஆர் சரத், நல்கன்டே இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரவி பிஸ்னோய் நேற்றைய ஆட்டத்தில் 2 ஓவர்கள் மட்டுமே வீசினாலும், அவர் விக்கெட் எடுத்தவிதம், கேட்ச் பிடித்தவிதம் அணிக்கு வலுவாக அமைந்துவிட்டது. வில்லியம்ஸன் அடித்த ஷாட்டை ஸ்பைடர் போல் காற்றில் பறந்து, அந்தரத்தில் 52மைக்ரோ வினாடிகள் இருந்து ஆகச்சிறந்த கேட்சைப் பிடித்தார். வில்லியம்ஸன் விக்கெட்டை எடுத்தது குஜராத் அணியின் முதுகெலும்பை உடைத்தது போன்றதாகிவிட்டது, லக்னோ அணியும் பாதி வெற்றியை அடைந்த மனநிறைவை பிஸ்னோய் ஏற்படுத்திக் கொடுத்தார். 163 ரன்கள் என்பது வலுவான பேட்டர்கள் இருந்திருந்தால் லக்னோ போன்ற அருமையான விக்கெட்டில் எளிதாக சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த குறைவான ஸ்கோரை வைத்துக் கொண்டு டிபெண்ட் செய்து லக்னோ வெற்றி பெற பந்துவீச்சாளர்கள் உழைப்பு முக்கியக் காரணம். பட மூலாதாரம்,GETTY IMAGES ராகுல்,ஸ்டாய்னிஷ் பொறுப்பான பேட்டிங் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீகாக்கிற்கு நேற்று 100-வது ஐபிஎல் ஆட்டமாகும். முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து அதிரடியாகத் தொடங்கி, அடுத்த ஓவரில் பேட்டில் எட்ஜ் எடுத்து உமேஷ் யாதவ் ஓவரில் டீகாக்(6) விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த படிக்கல்(7) தொடர்ந்து 4வதுமுறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து லக்னோ அணி நிர்வாகத்துக்கு ஏமாற்றம் அளித்தார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறியது. 3வது விக்கெட்டுக்கு கேப்டன் ராகுல், ஸ்டாய்னிஷ் சேர்ந்து அணியை மெல்லச் சரிவிலிருந்து மீட்டனர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 73ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கேப்டன் ராகுல் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பெரிதாக கவலைப்படாமல் நிதானமாக ஆடி 31 பந்துகளில் 33 ரன்னில் நல்கன்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நீண்டகாலத்துக்குப்பின் ஸ்டாய்னிஷ் அற்புதமான இன்னிங்ஸை நேற்று ஆடினார். ஆங்கர் ரோல் எடுத்து ஆடிய ஸ்டாய்னிஷ் 40 பந்துகளில் அரைசதம் அடித்து, 58 ரன்னில் நல்கன்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பூரன், பதோனி பங்களிப்பு கடைசி நேரத்தில் நிகோலஸ் பூரன்(32), பதோனி(20) அருமையான கேமியோ ஆடி ரன்ரேட்டை உயர்த்தினர். பூரன் டெத் ஓவர்களில் அடித்த 3 சிக்ஸர்களும், பதோனி அடித்த 3 பவுண்டரிகளும் லக்னோ அணியை பெரிய சரிவிலிருந்து மீட்டது. இருவரும் கடைசி நேரத்தில் சேர்த்த 52 ரன்கள் லக்னோ அணியை 163 ரன்கள் எனும் கவுரமான ஸ்கோருக்கு கொண்டு செல்ல உதவியது. ஒருவேளை பூரன், பதோனி நிலைக்காமல் இருந்திருந்தால், லக்னோ அணி 120 ரன்களுக்குள் சுருண்டிருக்கும் வாய்ப்பிருந்தது. https://www.bbc.com/tamil/articles/ce9780z7m21o
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
டெல்ஹியை வீழ்த்தி முதலாவது வெற்றிப் புள்ளிகளை சம்பாதித்தது மும்பை Published By: VISHNU 07 APR, 2024 | 09:07 PM (நெவில் அன்தனி) டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 20ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸை 26 ஓட்டங்களால் வீழ்த்திய மும்பை இண்டியன்ஸ் இந்த வருடம் முதலாவது வெற்றி புள்ளிகளை சம்பாதித்தது. ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான், அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்களும் ஜெரால்ட் கொயெட்ஸி, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் மும்பையின் முதலாவது வெற்றிக்கு வழிவகுத்தன. அதேவேளை, உபாதையிலிருந்து மீண்டுவந்து மும்பை அணியில் தனது முதலாவது போட்டியில் இம்ப்பெக்ட் வீரராக விளையாடிய சூரியகுமார் யாதவ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். அது அவருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 234 ஓட்டங்களைக் குவித்தது. ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான் ஆகிய இருவரும் 7 ஓவர்களில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ரோஹித் ஷர்மா 27 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 49 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்க சூரியகுமார் யாதவ் ஓட்டம் பெறாமல் வந்தவழியே திரும்பிச் சென்றார். மறுபக்கத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இஷான் கிஷான் 23 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார். திலக் வர்மா 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். (121 - 4 விக்.) இந் நிலையில் ஹார்திக் பாண்டியாவும் டிம் டேவிடும் 5அவது விக்கெட்டில் 31 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஹார்திக் பாண்டியா 33 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து டிம் டேவிடும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 13 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். டிம் டேவிட் 21 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் உட்பட 45 ஓட்டங்களுடனும் ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 39 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அன்ரிச் நோக்யா 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 235 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. மொத்த எண்ணிக்கை 25 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் வோர்னர் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க டெல்ஹியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆனால், ப்ரித்வி ஷா, அபிஷேக் பொரெல் ஆகிய இருவரும் 2 ஆவது விக்கெட்டில் 49 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அபிஷேக் பொரெல், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் 29 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து மும்பைக்கு சிறு திகிலைக் கொடுத்தனர். அபிஷேக் பொரெல் 31 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சீரான இடைவேளியில் விழ, மறுபக்கத்தில் தனி ஒருவராக ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் சரமாரியாக ஓட்டங்களைக் குவித்தார். 25 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 71 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஜெரால்ட் கொயெட்ஸி 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ரொமாரியோ ஷெப்பர்ட். https://www.virakesari.lk/article/180650
-
விடுமுறை தொடர்பில் அரச பணியாளர்களுக்கான விசேட அறிவித்தல்
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான விடுமுறைக்கு அமைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி சபையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில், அனர்த்தம் மற்றும் அவசர அத்தியாவசியப் பணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை இவ் விடுமுறைக் காலத்தில் இடையூறு இன்றி பராமரிக்கும் வகையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/298383
-
ஏப்ரல் 18ஆம் திகதி இலங்கையில் ‘முருங்கை தினம்’!
தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின்இறுதி மங்கள சடங்கான மரக்கன்றுகள் நடும் தினம் ஏப்ரல் 18 ஆம் திகதியாகும். இதனை சுதேச மருத்துவ அமைச்சு ‘முருங்கை தினம்’ என்று பெயரிட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.. நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஏப்ரல் 4 ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது… ” சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களின் கடைசி மங்கள சடங்குகளான மரங்கள் நடும் நிகழ்வு ஏப்ரல் 18 அன்று ஆகும் . சுதேச மருத்துவ அமைச்சு அந்த நாளை ‘முருங்கை தினம்’ என்று பெயரிட்டுள்ளது. அன்றைய தினம், அனைத்து மக்களையும் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் முருங்கை செடியை நாட்டுமாறு அழைப்பு விடுக்கிறோம் , இது மிகவும் சத்தானது மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்டது என குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/298385