Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22881
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. குசல் மென்டிஸ், வனிந்து ஹசரங்கவுக்கு புதிய பொறுப்பு ! 29 DEC, 2022 | 08:47 AM இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள 20 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் குழாம் மற்றும் இருபதுக்கு 20 இலங்கை குழாம் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கையின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணிக்கு தசுன் சானக்க தலைமை தாங்குகிறார். இதேவேளை, ஒருநாள் அணிக்கு குசல்மெண்டிஸ் உபதலைவராக செயற்படவுள்ளார். இருபதுக 20 அணிக்கு வனிந்து ஹசரங்க உபதலைவராக செயற்படவுள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இந்தியாவின் வான்கடே மைதானத்தில் ஜனவரி 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இலங்கை குழாமின் விபரம் https://www.virakesari.lk/article/144391
  2. வரலாறை சமகாலத்துடன் இணைக்கும் புழுக்கள் ஓர் மருத்துவ அதிசயம் - ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆண்ட மங்கோலிய பேரரசர் கெங்கிஸ் கானுக்கும், அமெரிக்க உள்நாட்டுப் போருக்கும், பிரிட்டிஷ் மருத்துவ சேவைக்கும் தொடர்பு இருக்கிறதா? இது என்ன மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இருக்கிறதே என்று எண்ணத் தொன்றுகிறதா? மேலே கூறிய மூன்றுமே ஒரே புள்ளியில் இணையவே செய்கின்றன. அவை தான் புழுக்கள். ஆம்... இறந்த விலங்குகளின் உடல்கள் மீதும், நாள்பட்ட புண்கள் மீதும் நெளியக் கூடிய, நீங்கள் அருவெருப்புடன் நோக்கும் அதே புழுக்கள் தான். சளி, இருமல் மருந்துகளில் ஒளிந்திருக்கும் ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவர்கள்22 டிசம்பர் 2022 கர்ப்பப்பையே இல்லாத பெண்கள் - இந்த பிரச்னை குறித்து தெரியுமா?24 டிசம்பர் 2022 மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? 26 டிசம்பர் 2022 12-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகையே ஒரு கொடியின் கீழ் கட்டி ஆளும் வேட்கையுடன் சீற்றத்துடன் புறப்பட்ட கெங்கிஸ் கான் தன்னுடன் பெரும்படையை மட்டுமல்ல, இந்த புழுக்களையும் எடுத்துச் சென்றுள்ளார். மங்கோலியர்கள் பிறந்தது முதலே அவர்களது வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து விட்ட குதிரைகள் மட்டுமல்ல, இந்த புழுக்களும்தான் கெங்கிஸ் கானின் வியக்கத்தக்க வெற்றிக்கு அடிகோலின என்றால் மிகையல்ல. பதின் பருவத்திலேயே போர்க்களம் கண்டு விட்ட கெங்கிஸ் கானின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் படை வீரர்களின் நலனில் அவர் காட்டிய அக்கறையும் ஒன்று. அந்த வகையில், போர்க்களத்தில் எதிரிகளால் காயமடையும் வீரர்களை குணப்படுத்த புழுக்களையே பெரிதும் பயன்படுத்தினார் கெங்கிஸ் கான். காயத்தின் மீது இந்த புழுக்களை அடைத்து கட்டினால் காயம் விரைந்து குணமடையும் என்பதை மங்கோலியர்கள் அப்போதே அறிந்திருந்தார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கெங்கிஸ் கான் வரலாறு நெடுகிலும் உற்று நோக்கினால், கெங்கிஸ் கான் மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நகியம்பா பழங்குடியினரும், வடக்கு மியான்மரில் மலைவாழ் மக்களும், மத்திய அமெரிக்காவில் மாயன் பழங்குடிகளும் காயங்களை குணப்படுத்த புழுக்களை பயன்படுத்தியிருப்பதை காண முடிகிறது. உலகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்க புழுக்கள் பயன்படுத்தப்பட்டாலும் கூட, மருத்துவத் துறையின் ஒட்டுமொத்த கவனத்தையும் அது ஈர்க்கவில்லை. 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வெடித்த உள்நாட்டுப் போரின் விளைவாக, இந்தப் புழுக்கள் மீண்டும் பரவலாக கவனம் பெற்றன. அப்போது, டென்வில் நகர மருத்துவமனையில் பணிபுரிந்த ஜான் ஃபார்னெ ஜாக்கரியாஸ் என்ற மருத்துவர், முதன் முறையாக உடலில் சிதைந்து போன திசுக்களை அகற்ற இந்த புழுக்களை பயன்படுத்தினார். அதன் முடிவு அவருக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக அமைந்தது. இந்த புழுக்கள் சிதைந்த திசுக்களை மட்டுமல்ல, காயங்களில் இருந்த பாக்டீரியாக்களையும் அகற்றியதை அவர் கண்டுபிடித்தார். நவீன பாக்டீரியாவியலை தோற்றுவித்த ராபர்ட் கோச், நுண்ணியிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், இன்றைய தடுப்பூசிகளுக்கு முதலில் விதை போட்டவருமான லூயி பாஸ்டர் ஆகியோரின் வருகைக்குப் பின்னர், மருத்துவத் துறையில் இந்த புழுக்களின் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES நோய்க்குக் காரணமான பாக்டீரியாக்களும், நுண் கிருமிகளும் தாமாக தோன்றுவதில்லை, அவை தொற்றாக நம்மை பற்றிக் கொள்கின்றன என்பதை கண்டுபிடித்து உலகிற்கு அவர்கள் அறிவித்தனர். சுத்தமும் சுகாதாரமுமே காயங்களையும், நோய்களையும் ஆற்ற அருமருந்து என்பதை அவர்கள் நிரூபித்தனர். நோய்த் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீயாக்களை கொன்று நோயை குணப்படுத்தும் பென்சிலினை கண்டுபிடித்ததன் மூலம், அலெக்சாண்டர் பிளமிங், மருத்துவத் துறையில் புழுக்களின் பயன்பாட்டிற்கு முடிவுரை எழுதினார். ஏனெனில், நோய்க் கிருமிகளை விரட்டியடித்து நோயில் இருந்து நம்மை காக்க ஒரு சிறிய மாத்திரையே போதும் என்றால், உடல் திசுக்களில் நெளியும் புழுக்களை விட யார் தான் விரும்புவார்? ஆனால், இந்த மாயவித்தை செய்யும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளையும் முறியடிக்க 1980-களில் புதிய வில்லன் தோன்றியது. மெத்திசிலின் ரெசிஸ்டென்ட் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரெயஸ் (Methicillin Resistant Staphylococcus Aureus) என்ற பாக்டீரியா ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தோற்கடித்தது. ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்த்து தாக்குப்பிடித்தது மட்டுமின்றி, மருத்துவமனைகள், வாழிடம், பணிபுரியும் இடம், பள்ளிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் எளிதாக மற்றவர்களுக்கு பரவியது. இதனைக் கட்டுப்படுத்த புதிய ஆயுதத்தைத் தேடிய மருத்துவ உலகத்தின் கவனம் மீண்டும் புழுக்களின் மேல் பதிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈக்களின் வாழ்க்கை சுழற்சியை விளக்கும் படம் கெலிபேரைடெ என்ற ஈக்களின் லார்வாப் பருவம்தான் இந்தப் புழுக்கள். வயிறும் மத்திய பாகமும் பிரகாசமான நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த ஈக்கள் இறந்த உடல்கள் மீது மொய்த்திருப்பதை நாம் காண முடியும். இந்த ஈக்களின் முட்டைகளில் இருந்து வெளிவரும் லார்வாப் பருவ புழுக்கள் குறுகிய காலகட்டத்திலேயே 100 மடங்கு வளர்ச்சியை எட்டுகின்றன. அதற்கான உணவு முழுமையுமே இறந்த திசுக்கள் தான். காயங்களில் உள்ள இறந்த திசுக்களை மட்டுமின்றி, அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் மெத்திசிலின் ரெசிஸ்டென்ட் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரெயஸ் பாக்டீரியாக்களையும் இந்த புழுக்கள் தின்றுவி டும். இதன் மூலம் முழு சுத்தம் பெறுவதால் காயங்கள் விரைந்து ஆறிவிடும். பிரிட்டிஷ் மருத்துவ சேவையில் இன்றும் இந்த புழுக்களின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவைக்கு உட்பட்ட எல்லா மருத்துவமனைகளிலும் காயங்களை ஆற்ற இந்த புழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காயத்தின் மீது புழுக்கள் நிரம்பிய சிறு பைகளை கொண்டு கட்டுப் போடும் சிகிச்சை முறை எனினும், நெளியும் புழுக்கள் மீதான ஒவ்வாமையைத் தவிர்க்க, சிறிய தேநீர்ப் பை அளவே கொண்ட பைகளில் இந்த புழுக்களை அடைத்து காயத்தின் மீது கட்டுகிறார்கள். அடுத்த சில நாட்களில் காயம் ஆறிய பிறகு இந்த கட்டு அவிழ்க்கப்படுகிறது. மருத்துவ உலகம் எவ்வளவோ உச்சங்களை தொட்டுவிட்ட பிறகும் கூட, காயங்களை ஆற்றுவதில் இந்த புழுக்களின் பயன்பாடு தவிர்க்க இயலாதாக தொடரவே செய்கிறது. ஆகவே, நாமும் சொல்வோம், வல்லமை மிக்க இந்த புழுக்கள் நீடூடி வாழ்க. https://www.bbc.com/tamil/articles/c2jgv8x520vo
  3. நடிகர் சித்தார்த் விளக்கம்: "இந்தி புரியுமில்ல? நாங்க எதை அகற்ற சொல்றோமோ அதுதான் விதி" - மதுரை விமான நிலைய சம்பவம் முழு விவரம் பட மூலாதாரம்,SIDDHARTH INSTAGRAM PAGE 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறிய பிறகும் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து இந்தியிலேயே பேசியதாகவும் நடிகர் சித்தார்த் சமூக ஊடகத்தில் பதிவிட்டது இணையத்தில் பேசுபொருளான நிலையில், விமான நிலையத்தில் என்ன நடந்தது என்ற விரிவான விளக்கத்தை நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் தனது பெற்றோருடன் விமானப் பயணத்திற்காக மதுரை விமான நிலையம் சென்றிருந்தபோது அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து தனது முந்தைய பதிவில் சாடியிருந்தார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரிகளால் 20 நிமிடம் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம். அவர்கள் வயதான எனது பெற்றோரின் பைகளில் இருந்து நாணயங்கள் வரை அனைத்தையும் அகற்றுமாறு கூறினார்கள். அதோடு, ஆங்கிலத்தில் பேசுமாறு கூறிய பிறகும் எங்களிடம் பலமுறை இந்தியில் பேசினார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது இந்தியாவில் இப்படித்தான் நடக்கும் எனக் கூறினர். வேலையற்றவர்கள் தங்கள் அதிகாரத்தைக் காட்டுகின்றனர்,” என தெரிவித்திருந்தார். மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்பை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எஃப் கையாளுகிறது. இருப்பினும், சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சிஆர்பிஎஃப் பிரிவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவருடைய பதிவுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்படப் பலரும் எதிர்வினையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் என்ன நடந்தது என்பதை விவரமாக விவரித்து, சித்தார்த் இன்ஸ்டாகிராமில் மீண்டுமொரு பதிவை இட்டுள்ளார். இந்தி திணிப்பு: நடிகர் சித்தார்த் போட்ட பதிவு - வைரலாகும் சம்பவம் - ஆதரவு கொடுத்த மதுரை எம்.பி28 டிசம்பர் 2022 சித்தார்த் சர்ச்சை: சாய்னா மீது விமர்சனம் - மகளிர் ஆணையம் தலையீடு10 ஜனவரி 2022 நடிகர் சித்தார்த்துக்கு கொலை மிரட்டல் - பாஜகவினர் மீது குற்றச்சாட்டு29 ஏப்ரல் 2021 மதுரை விமான நிலையத்தில் என்ன நடந்தது என்ற சித்தார்த்தின் விளக்கமான பதிவின் சாராம்சம் கீழே. “விமான நிலைய சம்பவத்துக்கு பின்னர், தங்களின் அனுபவம் குறித்து பலரும் என்னிடம் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். பல்வேறு ஊடகங்களும் என்னைத் தொடர்புகொண்டு வருகின்றன. எனது அனுபவத்தை இங்கு தெரிவிப்பது சரியாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். என் மீது வெளிச்சம் பாய்ச்சுவதை விட இந்த விவகாரத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறேன். தேவையில்லாத கவனக் குவிப்பு என் குடும்பத்தினரை மேலும் கவலை அடையச் செய்யும். மதுரை விமான நிலையத்திற்கு இதற்கு முன்னரே பலமுறை சென்று வந்துள்ளேன். ஆனால், இதுவரை இப்படி ஓர் அசௌகர்யமான சூழலை எதிர்கொண்டதில்லை. மூன்று முதியவர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் சில பெரியவர்கள் என இந்த முறை எனது குடும்பத்தினருடன் நான் பயணித்தேன். விமான நிலையத்தில் கூட்டம் இல்லாததால் போர்டிங் நேரத்திற்கு முன்பாகவே பாதுகாப்பு தொடர்பான செயல்முறைகளை முடிக்கச் சென்றோம். பாதுகாப்பு வரிசையும் ஆளின்றி இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் மட்டுமே இருந்தோம். கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்திருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படையைச் சேர்ந்த நபர், குழந்தைகளின் பாஸ்போர்ட் உட்பட எங்களின் அடையாள அட்டைகளை சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது, எனது முகத்தையும் ஆதார் அட்டையிலிருந்த என் புகைப்படத்தையும் பார்த்துவிட்டு ‘ யே தும் ஹோ’ என்று கூச்சலிட்டார். "நான்தான் அது என்றும் ஏன் இப்படிக் கேட்டீர்கள்?" என்றும் அவரிடம் கேட்டேன். அப்போது சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார். Instagram பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு பின்னர், அடுத்த நபர், "ஹிந்தி சமஜ்தே ஹை நா? (இந்தி புரியுமில்ல?) " என்று கூச்சலிட்டார். நாங்கள் பதிலளிக்கும் முன்னரே, அவர் கண்ணில் பட்ட ஐபாட், ஐஃபோன் ஆகியவற்றை வெளியே விசிறினார். பின்னர், எனது இயர்போனை எடுத்து வீசினார். ஏற்கெனவே பல்வேறு விமான நிலையங்களில், இயர்போன் போன்ற மின்சார கருவிகளை நாங்கள் திருட்டு சம்பவம் காரணமாக இழந்துள்ளதால், அவற்றை ட்ரேவில் வீச வேண்டாம் என்று அவரிடம் கூறினேன். அதற்கு இது மதுரை என்றும் இவைதான் விதிகள் என்றும் எங்களிடம் கூறப்பட்டது. முதியவர்கள் இருப்பதால் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும்படி அவரிடம் கூறினேன். பின்னர், அவர்கள் எனது அம்மாவின் பர்ஸை வெளியே எடுத்து அதன் உள்ளே நாணயங்கள் உள்ளதா என்று கேட்டனர். அவர் ஆம் என்று கூறியபோது, அவற்றையெல்லாம் வெளியே எடுக்கும்படி கூறினர். நாணயங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஸ்கேனர் கருவியில் அவை தெளிவாகத் தெரியும் என்பதால், ஏன் அவற்றை வெளியே எடுக்க வேண்டும் என்றும் நான் அவர்களிடம் கேட்டேன். "நாங்கள் எதை அகற்றக் கூறுகிறோமோ அதை அகற்ற வேண்டும். அதுதான் இந்தியாவில் விதி" என்று அவர்கள் பதில் அளித்தனர். 70 வயதைக் கடந்தவரிடம் இவ்வாறு கூறுவது சரியில்லை என்றும் ஏதாவது தவறு நடந்து விட்டதா, ஏன் இப்படி அடாவடியாகப் பேசுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். ஸ்கேனர் கண்காணிப்பில் இருந்த மற்றொரு நபர் என் சகோதரியிடம் சிரிஞ்சுகளை எடுத்துச் செல்கிறீர்களா என்று சத்தமாகக் கேட்டார். மருத்துவ விவரங்களையெல்லாம் ஏன் அவர்கள் கேட்கிறார்கள். மக்களின் தனிப்பட்ட தகவல்களை இப்படி வெளியிடுவது சரியானது தானா? பட மூலாதாரம்,@ACTOR_SIDDHARTH இவை 'துன்புறுத்தல்' என்று நான் எதிர்ப்பு தெரிவித்தேன். மேலும், "வந்ததில் இருந்து நீங்கள் கத்திக்கொண்டே இருக்கிறீர்கள்" என்று கூறியதோடு ஆங்கிலத்தில் உரையாடுமாறு கேட்டேன். அப்போது, இந்தியாவில் விதிகள் மற்றும் வரைமுறைகள் உள்ளன என்று எனக்கு பதில் கிடைத்தது. இதிலேயே 20 நிமிடங்கள் கடந்துவிட்டன. மூத்த அதிகாரியிடம் பேசுமாறு என்னிடம் கூறப்பட்டது. நான் முக கவசத்தைக் கழற்றியதும் என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர் ‘நான் உங்கள் ரசிகன். தயவுசெய்து நீங்கள் போகலாம்’ என்றார். என்னை அடையாளம் தெரிந்து நீங்கள் காட்டும் கரிசனம் எனக்குத் தேவையில்லை என்று அவரிடம் கூறினேன். என்னை அடையாளம் தெரிந்ததால் நீங்கள் மன்னிப்பு கூறினீர்கள். இதுபோன்ற இன்னல்களை எதிர்கொள்ளும் சாதாரண மக்களின் நிலை என்ன? பெரியோரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறினேன். விமான நிலையத்தைப் பாதுகாப்பது என்பது கடினமான காரியம். அதை யாரும் மறுப்பதில்லை. ஆனால் அவர்கள் செயல்பட்ட விதம் சரியல்ல. இந்த விவகாரத்தில் எனக்கு எதிராகவோ யாருக்கும் எதிராகவோ எவ்வித கொள்கைகளையும் சுமத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சிறப்பு கவனிப்பு வழங்குங்கள் என்றூ நான் கேட்கவில்லை. நான் எதிர்பார்ப்பது எல்லாம் பெரியவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே" என்று சித்தார்த் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cd1z6n5v424o
  4. முதல் டெஸ்டில் சம அளவில் மோதும் பாகிஸ்தான் -நியூஸிலாந்து 28 DEC, 2022 | 07:04 PM (என்.வீ.ஏ.) பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் கராச்சியில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளது. பாகிஸ்தான் முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 438 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து 3ஆம் நாளான இன்று புதன்கிழமை (28) ஆட்ட நேர முடிவின்போது 6 விக்கெட்களை இழந்து 440 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டொம் லெதம், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் டெவன் கொன்வே பெற்ற அரைச் சதமும் நியூஸிலாந்தின் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தியது. போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்களிலிருந்து நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது. டொம் லெதமும் டெவன் கொன்வேயும் ஆரம்ப விக்கெட்டில் 183 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கொன்வே 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து தனது 13ஆவது டெஸ்ட் சதத்தைக் குவித்த டொம் லெதம் 131 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஹென்றி நிக்கலஸ் 22 ஓட்டங்களுடன் வெளியேறினார். தனது 89ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கேன் வில்லியம்சன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 25ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து 105 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். கேன் வில்லியம்சன் 4ஆவது விக்கெட்டில் டெரில் மிச்செலுடன் 65 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் டொம் ப்ளண்டெலுடன் 90 ஓட்டங்களையும் பகிர்ந்தார். மிச்செல் 42 ஓட்டங்களையும் ப்ளண்டெல் 47 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரார் அங்மத் 143 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/144389
  5. தென் ஆபிரிக்காவுடனான 2ஆவது டெஸ்டில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா By DIGITAL DESK 5 28 DEC, 2022 | 01:02 PM (என்.வீ.ஏ.) மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது. போட்டியின் 3ஆம் நாளான இன்றைய ஆட்டம் மழையினால் நிறுத்தப்பட்டபோது தென் ஆபிரிக்கா அதன் 2ஆவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதமிருக்க, இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீள்வதற்கு தென் ஆபிரிக்காவுக்கு மேலும் 371 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. போட்டியில் மேலும் 2 நாட்கள் மீதமிருப்பதால் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகத் தென்படுகிறது. போட்டியின் 3ஆம் நாளான இன்று புதன்கிழமை (28) காலை 3 விக்கெட் இழப்புக்கு 386 ஓட்டங்களிலிருந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலியா, 8 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. போட்டியின் 2ஆம் நாள் ஆட்த்தின் கடைசி கட்டத்தில் உபாதை காரணமாக தற்காலிக ஓய்வு பெற்ற டேவிட் வோர்னரும் கெமரன் க்றீனும் இன்றைய தினம் மீண்டும் துடுப்பெடுத்தாடினர். உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100ஆவது டெஸ்டில் இரட்டைச் சதம் குவித்த 2ஆவது வீரரான டேவிட் வோர்னர் மேலதிக ஓட்டம் பெறாமல் 200 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவருக்கு முன்பதாக ட்ரவிஸ் ஹெட் 51 ஓட்டங்களுடன் வெளியேறியிருந்தார். உபாதையிலிருந்து மீண்டுவந்து துடுப்பெடுத்தாடிய கெமரன் க்றீன் அரைச் சதம் பெற்றதுடன் கன்னிச் சதம் குவித்த அலெக்ஸ் கேரியுடன் 117 ஓட்டங்களை 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்தார். அலெக்ஸ் கேரி 111 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க கெமரன் க்றீன் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அவர் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்ததும் அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. நெதன் லயன் 25 ஓட்டங்களையும் மிச்செல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களையும் பெற்றனர். தென் ஆபிரிக்க பந்துவீச்சில் அன்ரிச் நோக்கியா 92 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 7 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 15 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது மழையினால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து ஆட்டம் நடைபெறாததால் 3ஆம் நாள் ஆட்டத்தில் 28 ஓவர்கள் வீசப்படவில்லை. கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/144334
  6. இந்திய இருபது - 20 அணிக்கு ஹார்திக் பாண்டியா தலைவர் ; ஒருநாள் அணிக்கு மீண்டும் ரோஹித் ஷர்மா தலைவர் By DIGITAL DESK 5 28 DEC, 2022 | 12:29 PM (என். வீ. ஏ.) இலங்கைக்கு எதிராக புதுவருடத்தில் நடைபெறவுள்ள இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்ககளை முன்னிட்டு இந்தியாவின் இருபது கிரிக்கெட் 20 அணிக்கு ஹார்திக் பாண்டியாவும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் ஷர்மாவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருபது 20 அணியின் உதவித் தலைவராக சூரியகுமார் யாதவ்வும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் உதவித் தலைவராக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிரடி துடுப்பாட்ட விக்கெட் காப்பாளர் ரிஷாப் பன்டுக்கு இரண்டு அணிகளிலும் இடம் வழங்கப்படாததுடன் பங்களாதேஷுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் தலைவராக விளையாடிய ஷிக்கர் தவான் கருத்தில் கொள்ளப்படவில்லை. விராத் கோஹ்லி, கே. எல். ராகுல் ஆகிய இருவரும் இருபது 20 குழாத்தில் இடம்பெறாதபோதிலும் ஒருநாள் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். இருபது 20 குழாத்தில் விக்கெட் காப்பாளராக அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷான் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலான வீரர்கள் 25க்கும் குறைவான போட்டிகளில் பங்குபற்றியவர்களாவர். அத்துடன் 4 வீரர்கள் முதல் தடவையாக இந்தியாவின் இருபது 20 குழாத்தில் இடம்பெறுகின்றனர். ஷுப்மான் கில், ராகுல் திருப்பதி, ஷிவம் மவி, முக்கேஷ் குமார் ஆகியோர் முதல் தடவையாக இருபது 20 குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது கிரிக்கெட் தொடர் வான்கடே (ஜனவரி 1), பூனே (ஜனவரி 5), ராஜ்கோட் (ஜனவரி 7) ஆகிய மைதானங்களில் நடைபெறும். 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் குவாஹாட்டி (ஜனவரி 10), ஈடன் கார்ட்ன்ஸ் (ஜனவரி 12), திருவனந்தபுரம் (ஜனவரி 15) ஆகிய மைதானங்களில் நடைபெறும். இந்தியாவின் இருபது 20 கிரிக்கெட் குழாம்: ஹார்திக் பாண்டியா (தலைவர்), இஷான் கிஷான், ருத்துராஜ் கய்க்வாட், ஷுப்மான் கில், சூரியகுமார் யாதவ் (உதவித் தலைவர்), தீப்பக் ஹூடா, ராகுல் திருப்பதி, சஞ்சு சம்சன், வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்த்ர சஹால், அக்ஸார் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் பட்டேல், உம்ரன் மாலிக், ஷிவம் மவி, முக்கேஷ் குமார். இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் குழாம்: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா (உதவித் தலைவர்), வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்த்ர சஹால், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல், மொஹமத் ஷமி, மொஹமத் சிராஜ், உம்ரன் மாலிக், அர்ஷ்தீப் சிங். https://www.virakesari.lk/article/144323
  7. வெளிநாடுகளில் மருத்துவம் முடித்து, இந்திய தேர்வில் தோல்வியடைந்த 73 பேர் மீது சிபிஐ வழக்கு - முழு விவரம் பட மூலாதாரம்,CBI 3 மணி நேரங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் முடித்து இந்தியாவில் மருத்துவர் ஆவதற்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ள மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 62 பேர் மற்றும் முறைப்படி இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாத 12 பேர் உள்பட மொத்தம் 73 பேருக்கு எதிராக இந்திய புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று இந்தியா முழுவதும் சிபிஐ அதிகாரிகள் 91 இடங்களில் சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி ஆகிய இரண்டு இடங்களிலும் இந்தச் சோதனை நடந்துள்ளது. மதுரை புறநகரைச் சேர்ந்த விக்னேஷ் வெள்ளைக்கண்ணு, ரஷ்யாவில் மருத்துவ முதுகலை படிப்பை 2009இல் முடித்துள்ளார். இவர் பிஹார் மருத்துவ கவுன்சிலில் 2020இல் மருத்துவராகப் பதிவு செய்துள்ளார். ஆனால், 2018இல் இந்தியாவில் நடந்த மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் வசிக்கும் சீயர்ஸ் சாமுவேல் எந்பவர் 2007இல் ரஷ்யாவில் மருத்துவ முதுகலை பட்டம் முடித்து பிஹார் மருத்துவ கவுன்சிலில் 2019இல் பதிவு செய்திருக்கிறார். ஆனால், இவர் 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த மருத்துவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்தக் காரணங்களுக்காக இந்த இருவரது வீடு மற்றும் மருத்துவ நிலையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். உண்மை வெளிவந்தது எப்படி? படக்குறிப்பு, மன்சூக் மாண்டவியா, இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் இந்திய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ கல்விக் கொள்கைத் துறை இளநிலை செயலாளர் சுனில் குமார் குப்தா கடந்த அக்டோபர் 31ஆம் தேதி இரண்டு கடிதங்களை சிபிஐ தலைமையகத்துக்கும் தேசிய மருத்துவ அறிவியல் வாரியத்துக்கும் அனுப்பியிருந்தார். அதில் இந்தியா முழுவதும் வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் முடித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற கட்டாயமாக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மருத்துவ பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதபோதும், சில மாநில மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் உதவியுடன் மருத்துவராகப் பதிவு செய்து கொண்டு பணியாற்றி வருவதாகவும் இவ்வாறு 62 பேர் கண்டறியப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இது தவிர வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் முடித்த 11 பேர் முறையாக இந்தியாவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் தங்களுடைய முந்தைய கல்வித் தகுதியை மட்டும் வைத்து மாநில மருத்துவ கவுன்சில்களில் பதிவு செய்து கொண்டுள்ளதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் மருத்துவம் முடித்து, இந்திய தேர்வில் தோல்வியடைந்த 73 பேர் மீது சிபிஐ வழக்கு - முழு விவரம்4 மணி நேரங்களுக்கு முன்னர் நடைபயிற்சி பிரியரா? இந்த காலடிகள் கணக்கு யோசனை உங்களுக்குதான்2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் 'தூய ஆரிய' ஆண்களிடம் கர்ப்பம் தரிக்க ஜெர்மானிய பெண்கள் வந்தார்களா?28 டிசம்பர் 2022 91 இடங்களில் சோதனை இது குறித்து இந்திய புலனாய்வுத் துறையிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து கைலாஷ் சாஹு என்ற காவல் துணை கண்காணிப்பாளரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டு அவரது தலைமையிலான குழுவினர் இன்று நாடு முழுவதும் 91 இடங்களில் சோதனை நடத்தினர். வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் முடித்த இந்தியர்கள் பலரும் யுக்ரேன், ரஷ்யா, ஆர்மேனியா, சீனா, நேபாளம், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், ருமேனியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் 2000 முதல் 2020ஆம் ஆண்டுக்கு இடையே படித்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. மருத்துவ கவுன்சில் ஊழியர்கள் மீதும் வழக்கு இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ செய்தித்தொடர்பாளர் கவுரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "இந்திய மருத்துவப் பணி விதிகளுக்கு முரணாக முறைகேடாகப் பதிவு செய்து கொண்டுள்ள 73 பேருக்கு உதவியதாக தேசிய மருத்துவ கவுன்சில், அசாம், பிகார், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, டெல்லி ஆகிய இடங்களில் உள்ள மருத்துவ கவுன்சிலில் பணியாற்றி வரும் பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் பெயரிலும் இந்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது," என்று கூறினார். "இந்த சோதனையின்போது மருத்துவர் தொழிலில் சேருவதற்காகப் போலியாகச் சிலர் வாங்கிய மருத்துவ பதிவுச் சான்றிதழ்கள், பட்டப்படிப்பு சான்றிதழ்களையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்," என்று சிபிஐ செய்தித்தொடர்பாளர் கவுர் தெரிவித்தார். வெளிநாட்டில் மருத்துவம் முடித்தவர்களுக்கு இந்தியாவில் என்ன கட்டுப்பாடு? இந்தியாவை பொறுத்தவரை எந்தவொரு வெளிநாட்டில் மருத்துவ பட்டம் முடித்திருந்தாலும், இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டுமானால், அவர்கள் தகுதிகாண் தேர்ச்சி ஒழுங்குமுறை சட்டம்-2002இன்படி எஃப்எம்ஜிஇ எனப்படும் வெளிநாடு மருத்துவ பட்டம் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2002ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகு இத்தகைய மாணவர்கள் இந்தத் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலில் தங்களைப் பதிவு செய்து கொண்டு மருத்துவர் தொழிலை மேற்கொள்ள முடியும். முன்னதாக, இந்தத் தேர்வை நடத்தும் அமைப்பான தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (என்பிஇஎம்எஸ்) தேர்வு முடிவுகளை மாநில மருத்துவ கவுன்சிலுக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அனுப்பி வைக்கும். அதன் அடிப்படையிலேயே மருத்துவர்களுக்கான பதிவு எண் வழங்கப்படும். இந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் கவனத்துக்கு வராமலேயே சில மாநிலங்களில் உள்ள மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் உதவியுடன் சிலர் முறைகேடாக தங்களை மாநில மருத்துவ கவுன்சிலில் மட்டும் பதிவு செய்துகொண்டு மருத்துவராகப் பணியாற்றி வருவது தெரிய வந்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c3g9qz73g8po
  8. அமெரிக்காவின் உறைபனி ஏரியில் விழுந்து இந்தியாவை சேர்ந்த மூவர் உயிரிழப்பு By RAJEEBAN 29 DEC, 2022 | 12:34 PM அமெரிக்காவின் உறைபனி ஏரியில் விழுந்து இந்தியாவை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தற்போது கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. அதிலும் அமெரிக்காவில் ‘பாம்ப்’ புயலால் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இதுவரை 32க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிலர் காரிலேயே உறைந்து உயிரை விட்டுள்ளனர். டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ ஆகிய மாகாணங்களில் விமான போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பாலபர்ரகு பகுதியை சேர்ந்த நாராயணா (40), ஹரிதா (36) தம்பதியினர் தங்களது 2 மகள்களுடன் அங்குள்ள அரிசோனா மாகாணத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வந்தனர். தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், கடந்த திங்கட்கிழமை நாராயணா தனது மனைவிமற்றும் பூஜிதா (12), ஹர்ஷிதா (10) ஆகிய இரு மகள்களுடன் கோகோனினோ பகுதியில் உறைந்த நிலையில் இருக்கும் உட்ஸ் கேன்யன் ஏரியை பார்வையிட காரில் சென்றனர். அவர்களுடன் கோகுல்(47) என்பவரும் உடன் சென்றிருந்தார். ஏரியின் உறைபனியில் ஏறி நின்று அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அதன்பின் நாராயணா, கோகல் மற்றும் ஹரிதா ஆகிய மூன்று பேரும் உறைந்த ஏரியில் நடந்து சென்றனர். பூஜிதா, ஹர்ஷிதா ஆகியோர் காரில் இருந்தனர். உறைந்த ஏரியில் ஐஸ்கட்டி திடீரென உடைந்ததால், 3 பேரும் ஏரியில் மூழ்கினர். காரில் இருந்த மகள்களின் கண் முன் இவர்கள் ஏரியில் மூழ்கினர். இச்சம்பவத்தை கேள்விபட்டதும் உட்ஸ் கேன்யன் ஏரிக்கு மீட்பு குழுவினர் சென்று ஹரிதாவை மட்டும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.நீரில் மூழ்கிய நாராயணா மற்றும் கோகுலை மீட்பு குழுவினர் சடலங்களாக நேற்று முன்தினம் மீட்டனர். குண்டூரில் உள்ள நாராயணாவின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் தகவலறிந்து கதறி அழுதனர். இது குறித்து நாராயணாவின் தந்தை வெங்கடசுப்பாராவ் கூறியதாவது: சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நாராயணா, எம்எஸ் படித்து முதலில் மலேசியாவில் வேலை செய்தார். அதன் பின்னர் அமெரிக்காவில் வேலை கிடைத்தது. கடந்த ஜூன் மாதம் மூத்த மகள் பூஜிதா தொடர்புடைய ஒரு விழா இங்கு தான் நடந்தது. அதற்கு அனைவரும் வந்திருந்தனர். அதுவே கடைசி. சில நாட்களுக்கு முன் என்னுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அமெரிக்காவில் உறைபனி குறித்தும் பேசினார். எங்கள் பகுதியில் அதிகம் பாதிப்பு இல்லை பயப்பட வேண்டாம் என்றார். ஆனால், இப்படி ஆகி விட்டது என கூறி அழுதார். https://www.virakesari.lk/article/144431
  9. ரஷ்யாவின் 54 ஏவுகணைகளை இன்று சுட்டு வீழ்த்தியதாக யுக்ரைன் தெரிவிப்பு By SETHU 29 DEC, 2022 | 04:55 PM ரஷ்யா இன்று ஏவிய 54 ஏவுகணைகளை தான் சுட்டு வீழ்த்தியதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது. யுக்ரைன் மீது இன்று தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை ரஷ்யா இன்று நடத்தியது. இந்நிலையில், ரஷ்ய ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை தான் சுட்டு வீழ்த்தியதாக யுக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது. 'இன்று 69 ஏவுகணைகள் ஏவப்பட்டன. எதிரிகளின் 54 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன' என யுக்ரையின் பிரதம படைத்தளபதி ஜெனரல் வலேரி ஸலுஸ்னி கூறியுள்ளார். ரஷ்யா இன்று 120 இற்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவியதாக யுக்ரைன் ஜனாதிபதியின் பேச்சாளர் மிகாய்லோ பொடிலியாக் முன்னர் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/144471
  10. பணவீக்கம், பொருளாதார ஸ்திரமின்மையால் இலங்கை தொழில்முயற்சிகள் அதிகரித்துச் செல்லும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன - கேப்ரியல் கிரா By DIGITAL DESK 2 29 DEC, 2022 | 05:31 PM “சமீபத்திய உலகளாவிய விநியோகச் சங்கிலி தடங்கல்கள், அதிகரித்த எரிசக்திச் செலவுகள், நிலையற்ற பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஆகியவற்றின் காரணமாக இலங்கை தொழில்முயற்சிகள் அதிகரித்துச் செல்லும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. அவற்றுள் சில அழுத்தங்களை இந்த விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதி தணிப்பதுடன் MSMEs தமது செயற்பாட்டு மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் உதவுகிறது.” என USAID இன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் Gabriel Grau தெரிவித்தார். உணவுத் துறையில் உள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு (MSMEs) மூலதனத்திற்கான அணுகலை வழங்குவதற்கு உதவிசெய்யும் ஒரு புத்தாக்க விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதியினை உருவாக்குவதற்காக Keells Supermarkets மற்றும் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) ஆகியவற்றுடன் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பானது (USAID) ஒருங்கிணைந்து பணியாற்றுகிறது. இந்த வசதியானது மூலதனத்திற்கான அணுகலை அதிகரிப்பதன் ஊடாக கொவிட்-19 பெருந்தொற்றின்போது உருவாகி நாட்டின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியால் மேலும் மோசமடைந்த விநியோகச் சங்கிலித் தடங்கல்களை குறைக்கிறது. “விநியோகச் சங்கிலிகளுக்கான நிதியளிப்பு முயற்சியில் USAID மற்றும் HNB ஆகியவற்றுடன் ஒன்றிணைவதானது, தற்போதைய நெருக்கடியின் போது MSMEs மூலதனத்தை அணுகுவதற்கான வாய்ப்பினைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். எமது பங்குதாரர்களுக்கு ஒரு பொதுவான மதிப்பீட்டினை உருவாக்குதல், உள்நாட்டு பொருளாதாரத்திற்கு உதவி செய்தல், மற்றும் உற்பத்திப் பொருட்கள் எமது வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய எங்களது இலக்குகளுக்கு இந்த வசதி உதவியாய் அமைகிறது.” என Keells Supermarkets இனது தாய் நிறுவனமான John Keells Holdings இனது தலைவர் சரித்த சுபசிங்க தெரிவித்தார். இந்த வசதியானது போட்டித்தன்மைவாய்ந்த நிலையான வட்டி விகிதத்தைக் கொண்ட நிதியுதவியை MSME களுக்கு வழங்குகிறது. இந்த வசதியானது அது செயற்பட்ட முதல் வாரங்களில் எட்டு விநியோகஸ்தர்களுக்கு மொத்தம் 430,000 அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கியது. ஆறு மாதங்களில் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனைப் பெற்றுக் கொள்வதற்கு கிட்டத்தட்ட 100 MSMEகளுக்கு உதவிசெய்வதற்கு பங்காண்மை திட்டமிட்டுள்ளது. “உணவுத் துறையில் MSME களுக்கு இது போன்ற ஒரு புத்தாக்க நிதியியல் தீர்வை வழங்குவதற்காக Keells உடன் ஒன்றிணைவதானது HNBஇற்குக் கிடைத்த ஒரு பாக்கியமாகும். வியாபாரங்கள் தொடர்ந்து சீராக இயங்குவதற்காக MSMEs மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்தல், சம்பளங்களை வழங்குதல் மற்றும் ஏனைய குறுகிய கால செலவுகளை மேற்கொள்தல் போன்ற அவர்களின் செயற்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இது உதவி செய்யும். MSMEகள் தமது வணிக நோக்கங்களை அடைவதற்கு இது மேலும் வலுவூட்டும் என நாம் நம்புகிறோம். இந்த முயற்சியில் HNB உடன் ஒன்றிணைந்ததற்காக USAID மற்றும் Keells ஆகிய இரண்டிற்கும் நாம் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என SME மற்றும் சில்லறை வங்கியியல் பிரிவிற்கான HNB இன் பிரதிப் பொது முகாமையாளர் சஞ்சய் விஜேமான்ன தெரிவித்தார். “சமீபத்திய உலகளாவிய விநியோகச் சங்கிலி தடங்கல்கள், அதிகரித்த எரிசக்திச் செலவுகள், நிலையற்ற பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஆகியவற்றின் காரணமாக இலங்கை தொழில்முயற்சிகள் அதிகரித்துச் செல்லும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. அவற்றுள் சில அழுத்தங்களை இந்த விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதி தணிப்பதுடன் MSMEs தமது செயற்பாட்டு மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் உதவுகிறது.” என USAID இன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் Gabriel Grau கூறினார். https://www.virakesari.lk/article/144464
  11. டெஸ்லாவை சரிவிலிருந்து காக்க ஈலோன் மஸ்க் ட்விட்டர் தலைமை பதவியை கைவிட வேண்டுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,மோனிகா மில்லர் பதவி,பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவில் ஏற்பட்டுள்ள உற்பத்தி தாமதம் குறித்த கவலைகள் காரணமாக ஆப்பிள் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை ஆப்பிள் பங்குகள் கண்டுள்ளன. இதேபோல், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய உச்சத்தில் இருந்த டெஸ்லாவின் பங்குகள், அதனுடன் ஒப்பிடும்போது 73% வீழ்ச்சியை தற்போது சந்தித்துள்ளன. கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வாரக்கணக்கான ஊரடங்கு காரணமாக சீனாவில் உற்பத்தியைத் தொடர நிறுவனங்கள் சிரமப்படுகின்றன. தற்போது, பல ஆண்டுகளாக அமலில் இருந்த கட்டுப்பாடுகளை சீனா விலக்கிக்கொண்ட நிலையில், தொழிலாளர்கள் நெருக்கடியை நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. 2023ஆம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி முதல் பயணிகளுக்கான கடுமையான தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதாக சீனா அறிவித்துள்ளதை, 2023ஆம் ஆண்டில் விநியோகச் சங்கிலி இயக்கம் எளிதாக இருக்கும் என்பதற்கான சாத்தியக் கூறாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், கூடுதல் வட்டி விகிதம் உயர்வு, சர்வதேச பெருளாதார மந்தம், யுக்ரேனில் தொடரும் போர் ஆகியவை குறித்தும் சர்வதேச முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர். எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருந்து பல லட்சம் சம்பாதிக்கும் நபர்9 மணி நேரங்களுக்கு முன்னர் புதினை விமர்சித்ததால் கொலையா? சர்ச்சைக்குரிய ரஷ்ய தொழிலதிபர், ஒடிஷா ஹோட்டலில் பிணமாக மீட்பு28 டிசம்பர் 2022 ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையர்கள் உள்ளிட்ட 27 பேர் ருமேனியாவில் கைது8 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது, முக்கிய உற்பத்தி மையங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி மீண்டும் அதிகரிக்க நேரம் எடுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "உற்பத்தி ஆலைகள் அமைந்துள்ள பகுதிகளில் கொரோனா அலை ஏற்பட்டுள்ளதால் 4 முதல் 6 வாரங்கள் வரை பணியாளர்கள் பற்றாக்குறையை தொழிற்சாலைகள் எதிர்கொள்ளப் போகின்றன. சீன புத்தாண்டிற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஜனவரி இறுதியில் தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பி விடுவார்கள்" என்று தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் சைமன் பாப்டிஸ்ட் கூறுகிறார். பிப்ரவரி இறுதிவரை உற்பத்தி மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பக் கூடிய சாத்தியம் இல்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். "ஐபோன் சிட்டி" என்று அழைக்கப்படும் ஜாங்ஜோ ஆலையில் ஏற்பட்ட உற்பத்தி தாமதங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் சப்ளையர் ஃபாக்ஸ்கானை பாதித்தது. 2021ஆம் ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடும்போது நவம்பரில் அதன் வருவாய் 11% குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த வாரம், சீனாவில் கோவிட் நோய்ப்பரவல் அதிகரித்ததால் டெஸ்லாவின் ஷாங்காய் உற்பத்தி ஆலை உற்பத்தியைக் குறைத்ததாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது. ஆனால், சீனா மற்றும் வட அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கியதில், நிறுவனத்தின் மந்தமான விற்பனை தெளிவாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் டெஸ்லா தலைமை நிர்வாகி ஈலோன் மஸ்க் குறித்தும் முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதத்தில் ட்விட்டரை ஈலோன் மஸ்க் தன்வசப்படுத்தினார். அதன் பின்னர், சமூக ஊடக தளத்தை நடத்துவதற்கே தனது நேரத்தில் பெரும்பகுதியை அவர் செலவிடுகிறார். இந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட கவனச் சிதறலே டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி அடைந்ததற்கான மற்றொரு காரணம் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ட்விட்டரின் தலைவராக தானே தொடரலாமா என்று கடந்த வாரம் பயனாளர்களிடம் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியிருந்தார். அதில், பெரும்பாலானோர் வேண்டாம் என்பதைத் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, தகுந்த மாற்று நபர் கிடைத்தால் தான் பதவி விலகுவேன் என்று ஈலோன் மஸ்க் அறிவித்தார். தற்போது அவர் முதலீட்டாளர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்களின் நம்பிக்கையை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cn0yg8xw11zo
  12. பிரதமரின் பாதுகாப்பு வாகனத் தொடரணி(convoy) ஆங்கில உச்சரிப்பை தமிழ்நாட்டில் இவ்வாறே குறிக்கின்றனர்.
  13. உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் - நூற்றிற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன By RAJEEBAN 29 DEC, 2022 | 02:56 PM உக்ரைன் நகரங்களின் மீது ரஸ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. வியாழக்கிழமை காலை உக்ரைன் நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா 100க்கும் அதிகமான ஏவுகணைகளை செலுத்தியதை தொடர்ந்து ரஸ்யாவின் பல நகரங்களில் ஏவுகணை எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலித்தன. உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். தலைநகர் உட்பட பல நகரங்களில் ஏவுகணை வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ஏவுகணை அலை தாக்குதல் என ஜனாதிபதியின் ஆலோசகர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். கீவ் ஒடசா உட்பட பல நகரங்களில் ஏவுகணை வெடிப்பு சத்தங்கள் கேட்டன என ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார். எரிசக்தி உட்கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஓடேசா உட்பட பல பிராந்தியங்களில் மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ரஸ்யாவின் சமாதான திட்டத்தை உக்ரைன் நிராகரித்த பின்னரே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஸ்யா ஆக்கிரமித்ததை உக்ரைன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ரஸ்யா தனது சமாதான திட்டத்தில் தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/144449
  14. ரொய்ட்டரின் இந்த வருடத்திற்கான சிறந்த ஆர்ப்பாட்ட படங்களில் மூன்று அரகலய படங்கள் By RAJEEBAN 29 DEC, 2022 | 04:24 PM ரொய்ட்டர் செய்திச்சேவையின் இந்த வருடத்திற்கான புகைப்படங்களில் கொழும்பில் அரகலய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட மூன்று படங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. மே 19 ஜூலை 9 மற்றும் 13ம் திகதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது எடுக்கப்பட்ட மூன்று படங்களை ரொய்ட்டர் தெரிவு செய்துள்ளது. 2022 உலகின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் 48 புகைப்படங்களை ரொய்ட்டர் தெரிவு செய்துள்ளது. https://www.virakesari.lk/article/144463
  15. கேள்வியை விளங்கி எழுதவில்லை, அதுக்கேன் செருப்பைத் தூக்குறியள்?!😀 பிரியாவையோ பவானியையோ பிடிக்குமோ?🤭 நான் பிறந்தமாதம் டிசம்பர்.
  16. உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் மரணம்: “இந்திய இருமல் மருந்துதான் காரணம்” என்று குற்றச்சாட்டு பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மேரியோ பயோடெக் தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல்கட்ட பரிசோதனையில் ஒரு தொகுதி மருந்தில் எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் இருப்பது தெரிய வந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு டோக்-1 மேக்ஸ் சிரப் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வழங்கப்பட்டது. அவர்கள் உட்கொள்ளும் அளவு, குழந்தைகளுக்குரிய நிலையான அளவைவிட அதிகமாக இருந்தது. காம்பியாவில் வேறு ஓர் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளுடன் குழந்தைகளின் உயிரிழப்புகளை இணைத்த குற்றச்சாட்டு வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, உஸ்பெகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டு வந்துள்ளது. இதுகுறித்த கருத்தைத் தெரிந்துகொள்ள பிபிசி முயன்றது. ஆனால், இந்திய சுகாதார அமைச்சகமும் மேரியோன் பயோடெக் நிறுவனமும் இன்னும் பதிலளிக்கவில்லை. ராய்ட்டர்ஸ் ஓர் அரசாங்க ஆதாரத்தை மேற்கோள் காட்டி, “சுகாதார அமைச்சகம் இந்த விஷயத்தைக் கவனித்து வருவதாகக் கூறியுள்ளது. தற்காலிகமாக சிரப் தயாரிப்பை நிறுத்தியுள்ளதாக மேரியோன் பயோடெக் நிர்வாகி ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் அதன்படி நிறுவனத்தின் நடவடிக்கை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காம்பியா குழந்தைகள் சாவுக்கு இந்திய இருமல் மருந்துகள் காரணமா? WHO எச்சரிக்கை6 அக்டோபர் 2022 இந்தியாவில் புதிய மருந்துக்கான ஒப்புதல் பெறும் வழிமுறைகள் என்னென்ன?25 ஜூன் 2020 மருந்து எதிர்ப்புத் திறன் காரணமாக லட்சக்கணக்கில் ஏற்படும் உயிரிழப்புகள் - அதிர்ச்சி அறிக்கை21 ஜனவரி 2022 மேரியோன் பயோடெக் டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டாவில் உள்ளது. அதன் இணையதளம் தற்போது செயலிழந்துள்ளது. ஆனால், நிறுவனத்தின் லிங்க்ட்-இன் பக்கம், அந்த நிறுவனம் 1999இல் நிறுவப்பட்டது என்றும் அதன் தயாரிப்புகள் “மத்திய ஆசிய நாடுகள், மத்திய மற்றும் தென்னமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகமாக உள்ளன” என்றும் கூறுகிறது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சில மருந்து நிறுவனங்களின் தாயகமாக உள்ளதால், “உலகின் மருந்தகம்” என்று அழைக்கப்படுகிறது. மேலும், வளரும் நாடுகளின் மருத்துவத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. டிசம்பர் 27ஆம் தேதியிட்ட உஸ்பெக் அமைச்சக அறிக்கை, 2012 முதல் நாட்டில் டோக்-1 மேக்ஸ் மாத்திரைகளும் சிரப் மருந்துகளும் விற்பனை செய்யப்படுவதாகக் கூறுகிறது. “உயிரிழந்த குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, இந்த மருந்தை வீட்டில் 2-7 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 3-4 முறை, 2.5-5 மில்லி என்ற அளவில் எடுத்துக்கொண்டது கண்டறியப்பட்டது. இது குழந்தைகளுக்கான மருந்தின் நிலையான அளவைவிட அதிகம்,” என்று அமைச்சகம் கூறியது. உயிரிழப்புகள் எந்த நேரத்தில் நிகழ்ந்தன என்பதை அறிக்கை குறிப்பிடவில்லை. பிபிசி மானிட்டரிங் பிரிவு, டிசம்பர் 23ஆம் தேதியன்று, Gazeta.uz என்ற செய்தி இணையதளத்தை மேற்கோள் காட்டி, உஸ்பெக் அதிகாரிகள் “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்திய சமர்கண்ட் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டதை” விசாரித்து வருகின்றனர் எனத் தெரிவித்தது. பட மூலாதாரம்,WHO டிசம்பர் 26ஆம் தேதியன்று, Podrobno.uz செய்தி இணையதளம் மூன்று வயதுக்குட்பட்ட 15 பேர் உட்பட 21 குழந்தைகள், “செப்டம்பர், டிசம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து டோக்-1 மேக்ஸை எடுத்துக்கொண்டதால் ஏற்பட்டதாகக் கூறப்படும்” கடுமையான சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெற்றதாகக் கூறியது. அந்த நோயாளிகளில் மூவர் குணமடைந்துள்ளனர். டோக்-1 மேக்ஸ் மருந்தில் எத்திலீன் கிளைகோல் இருப்பதாக முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது. அக்டோபரில் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய எச்சரிக்கையை விடுத்தது. அதோடு காம்பியாவில் சிறுநீரக பாதிப்புகளால் 66 குழந்தைகள் உயிரிழந்த விஷயத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகளைத் தொடர்புபடுத்தியுள்ளது. இருமல் மருந்தின் மாதிரிகள் மீதான சோதனைகள், அதில் நச்சுப் பொருட்களான டைதிலீன் கிளைகோல், எத்திலீன் கிளைகோல் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருப்பதைக் காட்டியது. இந்திய அரசும் மெய்டன் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனமும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. டிசம்பரில் இந்தியா, நான்கு இருமல் மருந்துகளின் சோதனைகள் விவரக் குறிப்புகளுடன் இணங்குவதைக் காட்டியதாகக் கூறியது. மேலும் ஓர் அரசாங்க அதிகாரி பிபிசியிடம், உலக சுகாதார அமைப்பு இருமல் மருந்துகளைக் குறை கூறுவதில் மட்டுமீறிய நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார். ஆனால், எடுக்கப்பட்ட நடவடிக்கையில் தான் உறுதியாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியது. கடந்த வாரம், காம்பியாவில் உள்ள நாடாளுமன்றக் குழு பல வாரங்கள் விசாரணைக்குப் பிறகு மெய்டன் ஃபார்மாசூட்டிகல்ஸ் மீது வழக்குத் தொடர பரிந்துரைத்தது. அந்தக் குழு நாட்டிலுள்ள அந்த நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் தடை செய்வதற்கும் பரிந்துரைத்தது. https://www.bbc.com/tamil/articles/cyew95zk3j2o
  17. நன்றி கிருபன் அண்ணை இணைப்பிற்கு.
  18. மணிவண்ணன் அவர்கள் மீதான ததேமமுன்னணியின் குற்றச்சாட்டு வலுவிழக்கிறது.
  19. எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருந்து பல லட்சம் சம்பாதிக்கும் நபர் பட மூலாதாரம்,MORIMOTO_SHOJI/INSTAGRAM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று கூறும் வடிவேலுவின் நகைச்சுவையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்... அதேபோல ஜப்பானில் ஒரு மனிதர் சும்மா இருக்கிறார். அதை சேவையாகவும் வழங்கி வருகிறார். "என்னடா இது?" என்று நீங்கள் புருவத்தை உயர்த்துவது புரிகிறது. சும்மா இருந்தே பல ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு ஜப்பானிய மனிதரைப் பற்றிய கதைதான் இது. “நீ மட்டும்தான் எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கிறாய் என்று எல்லாரும் சொல்வார்கள். எனவே அதையே ஒரு சேவையாக வழங்க நான் முடிவு செய்துவிட்டேன்,” என்கிறார் ஜப்பானை சேர்ந்த ஷோஜி மோரிமோட்டோ. ஜப்பான் தலைநகர் டோக்யோவை சேர்ந்த இவர் வாடிக்கையாளர்களுக்கு விநோதமான சேவை ஒன்றை வழங்கி வருகிறார். அமெரிக்காவை புரட்டிப் போடும் 'வெடிகுண்டு சூறாவளி' என்றால் என்ன?28 டிசம்பர் 2022 மகளை உலகுக்குக் காட்டிய வடகொரிய அதிபர் கிம் - புகைப்படங்களால் எழும் புதிய கேள்விகள்19 நவம்பர் 2022 'அன்று நரகத்தைப் பார்த்தோம்' - ஹிரோஷிமா அணுகுண்டுக்குத் தப்பிய பெண்களின் அனுபவங்கள்6 ஆகஸ்ட் 2022 அதாவது எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதற்காக இவரை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். ஜப்பானின் ‘டு நத்திங் கை’ (Do – nothing guy) என்று அழைக்கப்படும் இவர், இந்த சேவைக்காக கட்டணத்தையும் வசூலிக்கிறார். “எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதற்காக மக்கள் என்னை வாடகைக்கு எடுப்பார்கள். எனது வாடிக்கையாளர்களுடன் செல்லும்போது தேவையானவற்றிற்கு மட்டும் பதில் கூறுவேன். உணவு விடுதிகளுக்கு கூட்டிச் சென்றால் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்பேன்,” என்கிறார் ஷோஜி உங்களுக்கு உங்கள் வாடிக்கையாளர்கள் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்காதா என்று கேட்டால் இல்லை என்கிறார் ஷோஜி. “நிச்சயமாக நானாக எந்தப் பேச்சையும் தொடங்க மாட்டேன்,” என்கிறார் அவர். ஷோஜியின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் அவரை வாடகைக்கு எடுத்ததற்கு ஒவ்வொரு காரணங்களைச் சொல்கின்றனர். புதியதாகத் திறக்கப்பட்ட தனது கஃபேவில் ஆட்கள் பெரிதாக வரவில்லை என்பதால் ஷோஜியின் சேவையை அணுகி அவரை கஃபேவில் அமர வைத்து உணவு வழங்கியுள்ளார் வாடிக்கையாளர் ஒருவர். அதேபோல தனியாகச் செல்ல விரும்பாத இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், ஒன்றாகச் சேர்ந்து உணவு உண்ணவும் ஷோஜியின் சேவையைப் பலர் அணுகியுள்ளனர். “பொதுவாக தனியாகச் செல்லக் கடினமாக இருக்கும் இடங்களுக்கு என்னை அழைத்து செல்வர். அதேபோல தனது நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்று நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பாத சில செய்திகளை என்னிடம் பகிர்ந்து கொள்ள எனது சேவையை அணுகுவார்கள்,” என்கிறார் ஷோஜி. இது சும்மா இருக்கும் சேவை என்றாலும் தனது சேவைக்கு கட்டணம் வசூலிக்கிறார் ஷோஜி. ஒரு முறை அவரது சேவையை அணுகுவதற்கு 10 ஆயிரம் யென் அல்லது 85 அமெரிக்க டாலர்களை வசூலிக்கிறார் அவர். இது இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரம் ரூபாய். பட மூலாதாரம்,GETTY IMAGES இதோடு சேர்த்து பயணக் கட்டணத்தையும் வழங்க வேண்டும். அதேபோல வாடிக்கையாளர்கள் எங்கேனும் கூட்டிச் சென்றால் அங்கே ஆகும் செலவுகளை அவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். தனது இந்த சேவையில் சில நேரங்களில் சில உணர்ச்சிகரமான அனுபவங்களும் ஷோஜிக்கு நேர்ந்துள்ளது. “ஒரு வாடிக்கையாளரின் காதலர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். அவரின் ஞாபகத்தால் துயரப்பட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர் என்னை அழைத்து அவரது காதலருடனான நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். தனது காதலர் வழக்கமாக அணியும் தொப்பியை என்னிடம் கொடுத்து என்னை வழி அனுப்பி வைக்கச் சொன்னார்” என்கிறார் ஷோஜி இம்மாதிரியாக பல காரணங்களுக்காக ஆண்கள் பெண்கள் என இருபாலரும் ஷோஜியை அணுகுகின்றனர். அதில் பொதுவான ஒரு காரணம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுடன் இருக்க ஒரு துணை வேண்டும் என்பதுதான். ஷோஜியின் முன்னாள் மேலாளர்தான் இந்த சேவையை தொடங்குவதற்குத் தூண்டுதலாக இருந்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES “பொதுவாக என்னால் ஒரு குழுவாகச் சேர்ந்து சரியாக பணி செய்ய இயலாது. நான் வேலை பார்த்த இடத்தில் என்னுடைய மேலாளார், நீ இங்கிருந்தாலும் இல்லை என்றாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்றார். அப்போது சும்மா இருந்து கொண்டே ஏன் நம்மால் உருப்படியாக எதையும் செய்ய முடியாதா என யோசித்தேன். அப்போதிலிருந்து என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்,” என்கிறார் ஷோஜி. ஷோஜியின் சேவையை ஒருமுறை அணுகியவர்கள் மீண்டும் மீண்டும் அவரின் சேவையை அணுகவும் செய்கிறார்கள். அப்படி ஒருவர்தான் கொடாமி இஷிஹாரா. தனது பிறந்தநாளன்று ஷோஜியின் சேவையை அணுகிய இவர், தனது தோலில் சூரிய ஒளி பட்டால் சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் தனது நண்பர்கள் அது குறித்து கவலை கொள்வார்கள், எனவே தனது பிறந்தாளுக்கு வெளியில் செல்ல ஷோஜியின் சேவையை அணுகியதாகக் கூறுகிறார். ஷோஜிக்கு இந்த ‘சேவைப் பணி’ பல புதிய கண்ணோட்டங்களையும் வழங்கியுள்ளது. “இந்த சேவையை நான் தொடங்குவதற்கு முன்பு சாலையில் நடந்து செல்லும் மக்களைப் பார்த்தால் அவர்கள் இந்த சமூகத்துடன் ஒன்றி வாழ்கிறார்கள் என்னால் தான் அது முடியவில்லை என்று நினைப்பேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பல பிரச்னைகள் உள்ளன என்பதை இப்போது நான் புரிந்து கொண்டேன்,” என்கிறார் ஷோஜி. “தனிமையாக உணர்பவர்கள் என்னை அதிகம் வாடகைக்கு எடுக்கின்றனர்,” என்று கூறும் ஷோஜி, சும்மா இருந்தாலும் பிஸியாகவே இருக்கிறார். ஆம். ஒரு நாளைக்கு மூன்று வாடிக்கையாளர்களை ஷோஜி சந்திக்கிறார். சும்மாவே இருந்தால் வெறுமையாக இருக்காதா, ஒவ்வொரு நாளும் எப்படி உணர்கிறீர்கள் என்று ஷோஜியிடம் கேட்டால், “இந்த சேவையைத் தொடங்கிய பிறகு நான் பலவிதமான மனிதர்களைச் சந்தித்து வருகிறேன். அதில் அனைவரும் இந்த சமூகத்திற்கு ஏதேனும் பயனுள்ளதைச் செய்கிறார்களா என்று கேட்டால் நான் இல்லை என்றுதான் சொல்வேன். அனைத்து விதமான மனிதர்களும் சேர்ந்ததுதானே இந்த சமூகம்,” என்று தனது சேவையைத் தொடங்குகிறார் ஷோஜி. https://www.bbc.com/tamil/articles/c3g4ee799v2o
  20. வியட்நாமிலிருந்து தாயகத்துக்கு அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் - குடிவரவு அதிகாரிகள் விசாரணை பட மூலாதாரம்,GETTY IMAGES 28 டிசம்பர் 2022 இலங்கை பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டை விட்டு வெளியேறி, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 151 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். வியட்நாமிலிருந்து விசேட விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர்கள், இன்று அதிகாலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு தாயகம் திரும்பியவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஹங்சிகா குமாரசிங்க தெரிவித்துள்ளார். நாடு திரும்பியவர்கள் மத்தியில், 9 பெண்களும் அடங்குவதாக அவர் கூறியுள்ளார். நாடு திரும்பிய விருப்பம் தெரிவித்த நிலையிலேயே, இவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறி, கடல் மார்க்கமாக கனடா நோக்கி பயணிக்க முயற்சித்து, வியட்நாமில் மீட்கப்பட்ட மேலும் இலங்கையர்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகதிகளுக்காக சர்வதேச அமைப்பு, வெளிவிவகார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை போலீஸாரின் தலையீட்டில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நாளுக்கு நாள் எதிர்நோக்கி வருகின்ற பொருளதார நெருக்கடி காரணமாக, நாட்டிலிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது. அதேபோன்று, சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாகவும், வெளிநாடுகளை நோக்கி இலங்கையர்கள் செல்கின்றனர். நாய்க்கு பாலியல் துன்புறுத்தல்: குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஹிருணிகா முறைப்பாடு27 டிசம்பர் 2022 அமெரிக்க டாலர் கையிருப்பு கரைந்தது: இந்திய ரூபாய் இலங்கைக்கு உதவுமா?24 டிசம்பர் 2022 இலங்கையில் கோட்டா நியமித்த ஜனாதிபதி செயலணியை கலைத்த ரணில் - என்ன நடந்தது?20 டிசம்பர் 2022 நடுக்கடலில் தவித்த இலங்கையர்கள் இவ்வாறு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய 303 இலங்கையர்கள், மியன்மார் வழியாக கனடா நோக்கி செல்ல முயற்சித்திருந்தனர். இவ்வாறு கடல் மார்க்கமாக சென்றுக்கொண்டிருந்த தருணத்தில், அவர்கள் பயணித்த கப்பல் விபத்துக்குள்ளாகியிருந்தது. இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் இலங்கை கடற்படையின் மீட்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை மீட்பு மையங்களுக்கு, இலங்கை கடற்படை தகவல்களை பரிமாறியுள்ளது. இலங்கை கடற்படையின் தகவலை அடுத்து, விரைந்து செயற்பட்ட சிங்கப்பூர் அதிகாரிகள், அகதிகளுடன் மூழ்கும் அபாயத்திலிருந்த கப்பலை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து, இந்த கப்பலுக்கு அருகாமையில் பயணித்த ஜப்பானுக்கு சொந்தமான கப்பலொன்றிற்கு கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி தகவல் பரிமாற்றப்பட்டதை அடுத்து, குறித்த அகதிகள் ஜப்பானுக்கு சொந்தமான கப்பலினால் மீட்கப்பட்டு, வியட்நாம் அதிகாரிகளிடம் நவம்பர் மாதம் 08ம் தேதி ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அகதிகளை தாம் பாதுகாப்பாக மீட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கை கடற்படைக்கு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்ததாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அகதிகள் எங்கிருந்து சென்றார்கள்? பட மூலாதாரம்,SUNDARALINGAM GIRIDARAN பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்தவர்கள், தமது பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்து, அதனூடாக கிடைத்த பயணத்தை கொண்டு சட்டவிரோதமாக கனடா நோக்கி செல்ல தயாராகியுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தும் தமிழ் மொழி பேசக்கூடிய பிரதான முகவர் ஒருவரின் உதவியுடன், ஏனைய முகவர்களின் ஒத்துழைப்புடனும் இவர்கள் இவ்வாறு அகதிகளாக கனடாவை நோக்கி செல்ல முயற்சித்துள்ளனர். கனடா செல்லும் அகதி ஒருவரிடமிருந்து தலா 5000 அமெரிக்க டாலர் அறவிடப்பட்டதாக கப்பலில் பயணித்த அகதியின் சகோதரன் பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். குறித்த இலங்கையர்கள் உரிய வகையில் விஸாக்களை பெற்று, விமானத்தின் மூலம் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக மியன்மார் நோக்கி பயணித்துள்ளனர். முகவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 5000 அமெரிக்க டாலரின் ஊடாக, விமான பயணச் சீட்டுக்கள், விஸா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார். இந்த நிலையில், மியன்மார் நோக்கி சென்ற இலங்கையர்கள், அங்கிருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 10ம் தேதி கனடா நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். சுமார் 28 நாட்கள் கடல் சீற்றம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்த குறித்த கப்பலில், அண்மையில் தூவாரமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, கப்பலுக்குள் நீர் பிரவேசித்துள்ள நிலையில், கப்பல் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்த நிலையிலேயே, குறித்த கப்பலில் பயணித்த அகதிகள், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். இதையடுத்தே, குறித்த படகில் பயணித்த அகதிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அகதியொருவர் தற்கொலை பட மூலாதாரம்,REFUGEES SRI LANKA வியட்நாமிலுள்ள முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி ஒருவர் கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி உயிரிழந்திருந்தார். நாடு திரும்ப விருப்பமில்லாத நிலையில், இரண்டு இலங்கையர்கள் முகாமிற்குள் கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி தற்கொலை முயற்சியை மேற்கொண்ட பின்னணியில், அவர்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர்;, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கைக்கு மீள அனுப்பும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்த நிலையில், தன்னால் மீண்டும் தாயகத்துக்குத் திரும்ப முடியாது என்று கூறி அந்த அகதி உயிரை மாய்த்துக் கொண்டதாக வியட்நாம் முகாமிலுள்ள மற்றொரு அகதி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். உயிரிழந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் அண்மையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டிருந்தன. வியட்நாமிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இலங்கையர்களில் பலர், மீள இலங்கைக்கு திரும்ப முடியாது என கூறி வருவதாக தெரிய வருகின்றது. எனினும், ஏனையோரையும் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இலங்கைக்கு வருகைத் தந்தவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cpel1jpkdzno
  21. தோனியின் மகளுக்கு தனது கையெழுத்துடன் ஆர்ஜென்டீன அங்கி அனுப்பிய மெஸி By SETHU 28 DEC, 2022 | 11:38 AM ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் தலைவர் லயனல் மெஸி, தான் கையெழுத்திட்ட, ஆர்ஜென்டீன அணியின் அங்கியொன்றை இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான மஹேந்திர சிங் தோனியின் மகளுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பிரான்ஸை தோற்கடித்து ஆர்ஜென்டீனா சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மெஸியின் கையெழுத்து கொண்ட ஆர்ஜென்டீன அணியின் அங்கி தனக்கு கிடைத்ததை எம்.எஸ். தோனியின் மகளான ஷிவா சிங் தோனி(7) சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளார். மேற்படி அங்கியில் கையெழுத்திடுள்ள லயனல் மெஸி, Para Ziva என எழுதி கையெழுத்திட்டுள்ளார். இதற்கு ஸ்பானிய மொழியில் 'ஷிவாவுக்கு' என அர்த்தமாகும். லயனல் மெஸியும் எம்.எஸ். தோனியும் ஏற்கெனவே பரஸ்பர அபிமானம், மரியாதையை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/144314
  22. மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதியிடம் டக்ளஸ் வலியுறுத்தல் 28 DEC, 2022 | 06:58 PM ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், குறித்த கலந்துரையாடலில் அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் அரசியல் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலும் இரட்டை வகிபாகத்தினை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 13 ஆம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட போது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக ஈ.பி.டி.பி. வலியுறுத்தி வருகின்ற வழிமுறையையே தற்போது ஏனைய தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றமை தன்னுடைய அரசியல் பயணத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/144388
  23. மின்கட்டணத்தை 4 ஆம் திகதி அதிகரித்தால் போராட்டம் வெடிக்கும் - மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை By DIGITAL DESK 2 28 DEC, 2022 | 07:00 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணத்தை 4 ஆம் திகதி அதிகரித்தால் அரசாங்கத்திற்கு எதிராக பல இலட்ச மக்களை ஒன்றிணைத்து வீதிக்கு இறக்குவோம். மின்கட்டணத்தை செலுத்த முடியாதவர்களின் மின்விநியோகத்தை துண்டிக்கும் சேவையில் இருந்து விலகியுள்ளோம். இராணுவத்தை கொண்டு அரசாங்கம் மின்சாரத்தை துண்டித்துக் கொள்ளட்டும் என மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். மின்கட்டண உயர்வு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மக்கள் மீது கொண்டுள்ள வெறுப்பை மின்கட்டண அதிகரிப்பு ஊடாக தீர்த்துக் கொள்கிறார்.நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டில் பெரும்பாலானோர் தமது பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள். மின்சார சபையின் நட்டத்திற்கு நாட்டு மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது. மின்சார சபையின் சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதால் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளது என அரசாங்கம் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது. நெருக்கடியான சூழ்நிலையை கருத்திற் கொண்டு இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் பல உரிமைகளை விட்டுக் கொடுத்துள்ளார்கள். அடுத்த மாதம் 04ஆம் திகதி மின்கட்டணத்தை நிச்சயம் அதிகரிப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தான்தோன்றித்தனமாக குறிப்பிட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தற்போதைய மின்கட்டண அதிகரிப்பை 74 இலட்ச மின் பாவனையாளர்களினால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் மீண்டும் மின்கட்டண அதிகரிப்பை மக்கள் எவ்வாறு தாங்கிக் கொள்வார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கவில்லை மாறாக மக்களிடம் மிகுதியாக இருப்பதையும் பறித்துக் கொள்கிறது. அமைச்சர் குறிப்பிட்டதை போன்று எதிர்வரும் 04 ஆம் திகதி மின்கட்டணத்தை அதிகரித்தால் பல இலட்சம் மக்களை ஒன்று திரட்டி அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறக்குவோம். அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படும் தரப்பினர் தொடர்ந்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டு வீடுகளில் இருக்கட்டும். மின்சார கட்டணத்தை செலுத்தாத தரப்பினரது மின்விநியோகத்தை துண்டிக்கும் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளோம். உணவு தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மின் விநியோகத்தை எங்களால் துண்டிக்க முடியாது. இராணுவத்தை கொண்டு அரசாங்கம் அந்த சேவையை செய்துக் கொள்ளட்டும் என்றார். https://www.virakesari.lk/article/144379
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.