Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் முகமது சைரஸ் காஜி கட்டுரை தகவல் எழுதியவர், மெரில் செபாஸ்டின் பதவி, பிபிசி நியூஸ் கொச்சி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டு பாகிஸ்தான் குடிமக்களை இந்திய ஏஜென்டுகள் 2023ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மண்ணில் கொன்றதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகள் "பொய்யானவை" என்று கூறியுள்ளது. கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டிய சில மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இந்தியா அதை மறுத்துள்ளது. இந்த இரண்டு கொலைகளுக்கும் இந்திய ஏஜென்டுகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து "நம்பகமான ஆதாரங்கள்" இருப்பதாக பாகிஸ்தான் கடந்த வியாழக்கிழமை கூறியது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இதை "தீங்கிழைக்கும் இந்திய எதிர்ப்பு பிரசாரம்" என்று கூறியுள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பின்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் ராவல்கோட் நகரில் முகமது ரியாஸ் மற்றும் அக்டோபரில் சியால்கோட் நகரில் ஷாஹித் லத்தீப் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தது. அதில் ஒருவர் ஒரு மசூதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் ஒரு மசூதிக்கு வெளியே கொல்லப்பட்டார் என்று கூறியது. பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் கொல்லப்பட்டவர்கள் யார் அல்லது இந்திய அரசு அதன் பரம எதிரியின் எல்லைக்குள் கொலைகளை நடத்த ஏஜென்டுகளை அனுப்பியதாகக் கூறப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. வெளியுறவு செயலாளர் முகமது சைரஸ் காஜி இந்தக் கொலைகளை "ஏற்றுக்கொள்ள முடியாதது" மற்றும் "இறையாண்மையை மீறும் செயல்" என்று கூறினார். "இந்தப் படுகொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட இரண்டு இந்திய ஏஜென்டுகளின் தொடர்பு குறித்த ஆவண, நிதி மற்றும் தடயவியல் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன," என்றும் அவர் தெரிவித்தார். அதோடு, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறியதற்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பாகிஸ்தான் எழுப்பிய குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானை "பயங்கரவாதம், திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்டவிரோத பன்னாட்டு நடவடிக்கைகளின் மையம்," என்று விமர்சித்தது. சீக்கியர்களின் கொலைகளுடன் ஒப்பிட்ட பாகிஸ்தான் பட மூலாதாரம்,X/@MEAINDIA இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவும் பல நாடுகளும் பாகிஸ்தான் அதன் பயங்கரவாதம் மற்றும் வன்முறை கலாசாரத்தால் விழுங்கப்படும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் காஜி, "கனடாவிலும் அமெரிக்காவிலும் எழுந்த குற்றச்சாட்டுகள், சீக்கியர்களின் கொலைகள் மற்றும் கொலை முயற்சிகள் சம்பந்தப்பட்டது என்றாலும், அதேபோன்ற முயற்சிகள்தான் பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளன,” என்று கூறினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், காலிஸ்தான் அல்லது தனி சீக்கிய நாட்டிற்காக வாதிடும் நியூயார்க்கை சேர்ந்த ஓர் அமெரிக்க குடிமகனைப் படுகொலை செய்ய இந்தியர் ஒருவர் திட்டமிட்டதாகவும் அந்த சதித்திட்டத்தை முறியடித்ததாகவும் அமெரிக்கா கூறியது. இதில் குற்றம்சாட்டப்பட்ட நிகில் குப்தா ஓர் இந்திய அரசாங்க அதிகாரியால் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த அதிகாரி குறித்த விவரங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை, அதிகாரி மீது குற்றம்சாட்டப்படவும் இல்லை. படுகொலை சதித்திட்ட விவகாரத்தை இந்தியாவிடம் உயர்மட்ட அதிகாரிகளுடன் எழுப்பியதாக வெள்ளை மாளிகை கூறியது. "அமெரிக்க அரசாங்கத்தால் எழுப்பப்பட்ட பாதுகாப்பு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக" ஓர் உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக இந்தியா கூறியது. ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு சீக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டதில் இந்திய அரசாங்கத்தை இணைக்கும் "நம்பகமான" ஆதாரங்கள் இருப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய சில மாதங்களுக்குப் பிறகு இந்தச் செய்தி வந்துள்ளது. அந்தக் கொலையில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா மறுத்தது. இந்தக் குற்றச்சாட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. காலிஸ்தான் இயக்கம் 1980களில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள பஞ்சாப் மாநிலத்தை மையமாகக் கொண்ட வன்முறை கிளர்ச்சியுடன் இந்தியாவில் உச்சத்தில் இருந்தது. இது பலவந்தமாக அடக்கப்பட்டது, இப்போது இந்தியாவில் இந்தக் கோரிக்கை பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள சீக்கிய புலம்பெயர்ந்தோரிடையே இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cjmd0j41411o
  2. துருக்கியை சேர்ந்தவர் பிரபல சமையல் கலை நிபுணர் நுஸ்ரெட் கோட்சே என்ற சால்ட் பே. இவர் டுபாயில் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். அங்கு சமீபத்தில் வாடிக்கையாளர்கள் குழுவாக சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வந்த பில் தொகையை சால்ட் பே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகப்பெரிய உணவு பில்லான அதில், மொத்தம் ரூ.90 இலட்சம் பில் தொகை இருந்தது. ‘பணம் வரும்… போகும்…’ என்ற தலைப்புடன் அந்த பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அந்த பில்லில், பிரெஞ்ச் பொறியல், கோல்டன் பக்லாவா, பழத்தட்டு, துருக்கிய காபி மற்றும் சமையல்காரரின் கையொப்பம் கொண்ட இறைச்சி உணவுகள் உள்ளிட்ட பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. உணவை தவிர பல விலை உயர்ந்த பானங்களையும் அருந்தியதற்கான தொகையும் பில்லில் இருந்தது. அதோடு வாடிக்கையாளர்கள் தாராளமாக சுமார் ரூ.20 இலட்சத்தை டிப்ஸ்சாக வழங்கி இருந்ததும் பில்லில் இடம் பெற்றிருந்தது. இந்த பில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாள்தோறும் பல இலட்சக்கணக்கான மக்கள் பசியால் அவதிப்படும் போது ஒரு நேர உணவுக்காக இவ்வளவு செலவழிப்பது வெட்கக்கேடானது என ஒரு பயனரும், பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர். https://thinakkural.lk/article/289522
  3. 24 JAN, 2024 | 07:40 PM உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுத்துள்ளபடி, 'சட்டவிரோத சிகரெட் வர்த்தகம்' என்பது சிகரெட்டுகளின் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, உடைமை, விநியோகம், விற்பனை, கொள்முதல் மற்றும் எளிதாக்குதல் போன்ற சட்டவிரோத முயற்சிகளை குறிக்கிறது. சட்டவிரோத வர்த்தகம் மூன்று தயாரிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. கடத்தல் (smuggled), போலித் தயாரிப்புகள் (counterfeits) மற்றும் மலிவான / சட்டவிரோத சிகரட்டுக்கள் (வெள்ளை சிகரட்டுகள் cheap / elicits white) போன்றவையாகும். புதிய ஆதாரங்களுடன், புகையிலை நிறுவனங்கள் சிகரெட் கடத்தலில் சிக்கலாக ஈடுபட்டுள்ளன என்பதும் இது உலக அளவில் புகையிலை நிறுவனங்களால் பின்பற்றப்படும் ஒரு விரிவான உத்தி (தந்திரோபாயம்) என்பதும் இனியும் ஒரு ரகசியம் அல்ல. உலக சுகாதார அமைப்பு மற்றும் பாத் பல்கலைக்கழகத்தின் அறிக்கைகளின்படி, புகையிலை நிறுவனங்களின் உள் ஆவணங்கள் 1990களின் முற்பகுதியில், சிகரெட் கடத்தல் தொழில்துறையின் வணிக உத்தியின் மிக முக்கியமான பகுதியாக இருந்தது. 1990களின் பிற்பகுதியிலும் 2000 ஆண்டுகளின் முற்பகுதியிலும் இந்த தந்திரோபாயங்கள் அம்பலமானது. குறிப்பாக விசாரணைகள், புகைபொருள் உற்பத்திக்கு எதிரான வழக்குகள் போன்றன புகையிலை நிறுவனங்களுக்கு மிகவும் எதிர்மறையான விளம்பரத்துக்கு வழிவகுத்தது. பாரிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்தைப் பயன்படுத்தி, புகையிலை நிறுவனங்கள் தாங்கள் சிகரெட் கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் அல்ல என்பதை தெளிவுபடுத்தியது. ஆனால் தற்போதைய சான்றுகள், சட்டவிரோத சிகரெட் வர்த்தகத்தில் புகையிலை நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க, தொடர்ச்சியான குறுக்கீடுகள் ஏற்கனவே நடந்து வருகின்றன என்பதை காட்டுகிறது. பல தசாப்தங்களாக பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் தங்கள் சொந்த தயாரிப்புகளை கடத்துகின்றன. அதன் மூலம் அவர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்கின்றன. புகையிலை நிறுவனங்கள் பின்வரும் நன்மைகளைப் பெற தங்கள் தயாரிப்புகளை கடத்துகின்றனர். சிகரெட் பொருட்கள் மீதான வரி அல்லது விலை உயர்வை கட்டுப்படுத்துதல். அவர்களின் தயாரிப்புகள் சட்டபூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா என்பதை பொருட்படுத்தாமல் அதன் மூலம் லாபம் ஈட்டுதல். புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கு எதிராக வாதிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்தல். குறிப்பாக சிகரட் மீது ஏற்படுத்தும் ஒவ்வொரு கொள்கையும் சிகரெட் கடத்தலை அதிகரிக்க வழிவகுக்கிறது. கடத்தலின் விளைவாக குறையும் சாதாரண பொதுச் சந்தை விலைகள் புகையிலை தொழிலை நிறுத்துவதை தடுக்கின்றது மற்றும் மொத்த விற்பனையை அதிகரிக்கிறது. புகையிலை நிறுவனங்கள் ஏன் தங்கள் சொந்த தயாரிப்புகளை கடத்துகின்றன? சட்டவிரோத விற்பனையானது தற்போதுள்ள புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளை (பேக்கேஜிங் சட்டங்கள், விற்பனையின் வயது வரம்புகள்) பலவீனப்படுத்துகிறது. புகையிலை நிறுவனங்கள் சந்தையில் நுழைவதற்கும் ஒரு உத்தியாகவும் கடத்தலைப் பயன்படுத்துகின்றன. சிகரட் மீதான வரி அதிகரிப்பதற்கான முன்மொழிவு முன்வைக்கப்படும்போது அல்லது இலங்கையில் தற்போது நடைமுறையில் இருப்பது போல் சிறந்த வரிக் கொள்கைகள் இருக்கும்போது நாட்டில் சட்ட விரோதமான சிகரெட் வர்த்தகத்தின் அளவையும் தீவிரத்தையும் பெரிதுபடுத்துவது புகையிலை நிறுவனங்களினால் பயன்படுத்தப்படும் பொதுவான உத்தியாகும். இச்சந்தர்ப்பத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சில முக்கிய பொதுவான வாதங்கள் பின்வருமாறு: சிகரெட் வரி அதிகரிப்பு காரணமாக சட்டவிரோத புகையிலை பொருட்களின் வர்த்தகத்தை அதிகரிக்கும். ஒரு சட்டவிரோத சிகரெட் சந்தையின் இருப்பு வரி அதிகரிப்புக்குப் பிறகு அரசாங்க வருவாய் குறைவதற்கு வழிவகுக்கிறது. ஜூலை 2023இல் சிகரெட் பொருட்களுக்கான வரி 20% மற்றும் 01 ஜனவரி 2024இல் 14%ஆக அதிகரிக்கப்பட்டதன் மூலம் மேற்கண்ட வாதங்கள் ஊடகங்களில் அதிகளவில் விளம்பரப்படுத்தப்பட்டன. இது சட்டவிரோத புகையிலை வர்த்தகம் பற்றிய உச்சகட்ட பேச்சுக்கு வழிவகுத்தது. இது சம்பந்தமாக, இலங்கையில் சில ஆய்வு அறிக்கைகளின் உள்ளடக்கங்களை கவனம் செலுத்தும்போது, ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் சிகரெட் வரி அதிகரிப்பு தொடர்பான உண்மைகளை முன்வைக்கின்றன. மேலும் ஆய்வுகள் வாசகரின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றன. அவை தெளிவாக ஒன்றுக்கொன்று தொடர்புடைய மற்றும் தவறாக வழிநடத்தும் புகையிலை நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட வாதங்கள். சிகரெட் மீதான வரி அதிகரிப்பால் நுகர்வோர் மீண்டும் மலிவு விலையில் மாற்று வழிகளுக்கு திரும்புவார்கள். இது சட்டவிரோத சிகரெட் வர்த்தகம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வரி உயர்த்தப்பட்டாலும், அரசின் வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், இலங்கையில் சிகரெட் உற்பத்திப் பொருட்களின் கடத்தல் 20%க்கும் அதிகமாக இருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. ஆனால் இந்த தரவுகள் புகையிலை நிறுவனம் மற்றும் சந்தை ஆதாரங்களால் உருவாக்கப்பட்ட தரவு என்பதுடன் தெளிவற்ற ஆதாரங்கள் இருப்பதனால் இந்த புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியது அவசியம். துரதிர்ஷ்டவசமாக, புகைபொருள் உற்பத்திக்கு சாதகமான தரவை முன்வைக்கும் போக்குடன், அத்தகைய ஆதாரங்களை நம்புவதில் சிக்கல் உள்ளது. குறிப்பிட்ட இந்த ஆய்வுகளுக்கு யார் நிதியுதவி அளித்துள்ளனர் என்பதும் சந்தேகமாக உள்ளது. மாறாக, உத்தியோகபூர்வ சுங்கப் புள்ளிவிபரங்கள் கடத்தப்பட்ட சிகரெட்டுகளில் 1%க்கும் குறைவானவை கைப்பற்றப்பட்டதாக வெளிப்படுத்துகின்றன. கடத்தல் சம்பவங்கள் மேலே குறிப்பிடப்பட்ட 20%ஆக இருந்தால், சட்டவிரோத சிகரெட் உற்பத்திப் பொருட்களின் வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதையும் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வலுவான தேவையை இது முன்வைக்கிறது. கிடைக்கக்கூடிய பிற தரவு மற்றும் தகவல்களுக்கு இணங்க, வரி மற்றும் விலை ஏற்ற இறக்கங்கள் சிகரெட் பொருட்களின் கடத்தலுக்குப் பின்னால் ஒரே ஒரு காரணியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பது சிகரெட் பொருட்கள் மீதான கலால் வரியை அதிகரித்தபோது அதனுடன் இணைத்து ஊடகங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் சட்டவிரோத சிகரட் உற்பத்தியை பெரிதுபடுத்துதல், விளம்பரம் செய்தல் தெளிவாகிறது. இந்த காரணிகளில் பல்வேறு நாடுகளுக்கு இடையே சட்டபூர்வ சிகரெட் பொருட்களின் விலையில் ஏற்படும் மாறுபாடுகள் மற்றும் சிகரெட் கடத்தலுக்கான போதுமான அபராதம் ஆகியவை அடங்கும். எனவே, சிகரெட் பொருட்களின் கடத்தலுடன் தொடர்புடைய அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றை குறைக்க தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது காலத்தின் தேவையாகும். மேற்கூறியவற்றுக்கு மேலதிகமாக, சிகரெட் / புகையிலை பொருட்கள் மீதான சட்ட விரோத வர்த்தகத்தை ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையில் 8 பெப்ரவரி 2016 அன்று இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. இதன் விளைவாக, அனைத்து ஆட்கடத்தல் மற்றும் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க செயலூக்கமான நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட வேண்டும். அதன்படி, சட்டவிரோத சிகரெட் / புகையிலை பொருட்களை அகற்றவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு என்பதை வலியுறுத்துகிறோம். தகவல் : மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) https://www.virakesari.lk/article/174739
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்சிஸ் மாவோ பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வடகொரியா குறித்து ஆய்வு செய்யும் பகுப்பாய்வர்களும், அதனை கூர்ந்து கவனித்து வரும் நிபுணர்களும் இயல்பாகவே, பதற்றத்தை உருவாக்கும் கருத்துகளை எளிதில் கூறாதவர்கள். ஆனால் அண்மையில், அவர்களில் இரண்டு பேர் வழக்கத்துக்கு மாறாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளனர். வட கொரிய நாட்டின் தலைவர் போருக்குத் தயாராகி வருகிறார் என்று தாங்கள் நம்புவதாக ஒரு குண்டு வீசியுள்ளனர். கிம் ஜாங்-உன் தென் கொரியாவுடன் இணங்குவது, மீண்டும் இணைவது என்ற வட கொரியாவின் அடிப்படை இலக்கை கைவிட்டுவிட்டதாக அவர்கள் கூறினர். அதற்கு பதிலாக, போரில் உள்ள இரண்டு சுதந்திர நாடுகளாக வட கொரியாவையும் தென்கொரியாவையும் பார்க்க வேண்டும் என அவர் விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. "1950ஆம் ஆண்டில் தனது தாத்தா செய்ததை போலவே, கிம் ஜாங்-உன் போருக்குச் செல்ல ஒரு மூலோபாய முடிவை எடுத்துள்ளார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று முன்னாள் சிஐஏ பகுப்பாளர் ராபர்ட் எல். கார்லின் மற்றும் பலமுறை வடக்கு கொரியாவுக்குச் சென்றிருக்கும் அணு விஞ்ஞானி சீக்ஃபிரீட் எஸ். ஹெக்கர் ஆகியோர் 38 நார்த் என்ற நிபுணர் தளத்தில் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளனர். இத்தகைய அறிவிப்பு வாஷிங்டன் மற்றும் சியோலில் எச்சரிக்கை மணிகளை ஒலிக்கச் செய்தது, வடக்கு கொரியாவைக் கவனிக்கும் வட்டங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியது. எனினும், பெரும்பாலான பகுப்பாளர்கள் போருக்கான வாய்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. பிபிசி ஆசியா, ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவிலிருந்து ஏழு நிபுணர்களுடன் பேசியது - அவர்களில் யாரும் இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. "கொடிய மோதலின் சாத்தியக்கூறுகள் நிறைந்த ஒரு போரில் தனது ஆட்சியையே பணயம் வைப்பது வட கொரியர்களின் இயல்பல்ல," என்று நெதர்லாந்தில் இருந்து க்ரைசிஸ் குழுவின் கொரியா கண்காணிப்பாளர் கிறிஸ்டோபர் கிரீன் கூறுகிறார். அவரும் மற்றவர்களும், வட கொரியா மேற்கத்திய சக்திகளை உரையாடலுக்கு அழைக்க விரும்புகிறது என்றும், உள்நாட்டில் அரசியல் அழுத்தங்களும் உள்ளன என்றும் குறிப்பிடுகின்றனர். ஆனால் கிம்மிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைக் கண்ணைமூடி கடந்து போக முடியாது என்பதிலும், அவரது ஆட்சி மேலும் ஆபத்தானதாக மாறிவிட்டதிலும் அவர்கள் உடன்படுகிறார்கள். போர் இன்னும் நடக்க வாய்ப்பில்லை என்று பெரும்பாலானோர் வாதிட்டாலும், சிலர் ஒரு சிறிய அளவிலான தாக்குதல் நடக்கலாம் என்று அஞ்சுகிறார்கள். பட மூலாதாரம்,KCNA இதற்கு என்ன காரணம்? வடக்கு கொரியாவின் கிம் ஜாங்-உனை நெருக்கமாகக் கவனிக்கும் மக்கள் அவரது அணு அச்சுறுத்தல்களுக்குப் பழக்கப்பட்டவர்கள், ஆனால் பியாங்யாங்கிலிருந்து வரும் சமீபத்திய செய்திகள் வேறு விதமானவை என்று சிலர் கூறுகிறார்கள். புத்தாண்டு தினத்தன்று "கொரிய தீபகற்பத்தில் எந்த நேரமும் போர் வெடிப்பதை தவிர்க்க முடியாது" என்று அறிவித்த ஆறு நாட்களுக்குப் பிறகு, அவரது ராணுவம் எல்லையில் பீரங்கி தாக்குதல்களை நடத்தியது. வடக்கு கொரியா ஜனவரி தொடக்கத்திலிருந்து புதிய திட-எரிபொருள் ஏவுகணைகளின் சோதனையையும், அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடியதாகக் கூறப்படும் நீர்மூழ்கி தாக்குதல் ட்ரோன்களையும் சோதனை செய்ததாகக் கூறுகிறது. ஐக்கிய நாடுகளின் தடைகளை வெளிப்படையாக மீறி இரண்டு ஆண்டுகளாக கிட்டத்தட்ட மாதந்தோறும் ஏவுகணைகளை ஏவுவதையும், ஆயுதங்களை உருவாக்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறது. இருப்பினும், கடந்த வாரம், தென் கொரியா உடனான இணைப்பு என்ற இலக்கை அதிகாரபூர்வமாக கைவிடுவதாக அவர் அறிவித்ததால் பலரின் புருவங்கள் சுருங்கின. தெற்கு கொரியாவுடன் மீண்டும் இணைவது என்பது வடக்கு கொரியா உருவானது முதலே அதன் சித்தாந்தத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. தற்போது அது யதார்த்தமாக கருதப்படுவதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES "இது மிகப்பெரிய விஷயம். ஆட்சியின் அடிப்படை சித்தாந்தக் கோட்பாடுகளில் ஒன்று மாறுகிறது. " என்று சியோலில் உள்ள குக்மின் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆய்வாளர் பீட்டர் வார்ட் கூறுகிறார். கிம் ஜாங்-உன் இப்போது அந்த பாரம்பரியத்தை சோதித்துப் பார்க்கவுள்ளார். ராஜதந்திர பரிமாற்றங்கள் மற்றும் எல்லை கடந்த வானொலி ஒலிபரப்புகளை மூடுவதாகவும், பியாங்யாங்கின் புறநகரில் உள்ள ஒன்பது மாடி மறு இணைப்பு (இரண்டு கொரிய நாடுகளும் இணைவது) நினைவுச்சின்னத்தை இடிப்பதாகவும் அறிவித்துள்ளார். 2001-ம் ஆண்டில், மறு இணைப்பு என்ற இலக்கை நோக்கிய தனது தந்தை மற்றும் தாத்தாவின் முயற்சிகளைக் குறிக்கும் வகையில், பாரம்பரிய கொரிய உடையில் இருக்கும் இரு பெண்கள் ஒருவரையொருவர் நோக்கி கைகளை விரிக்கும் வகையில் அந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டது. 1950ல் போருக்குச் சென்றவர் கிம் இல்-சுங் தான், ஆனால் வட கொரியர்கள் எப்போதாவது தங்கள் தெற்கு உறவினர்களுடன் மீண்டும் இணைவார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியவரும் அவரே. ஆனால் அவரது பேரன் இப்போது தென் கொரியர்களை முற்றிலும் வேறுபட்ட மக்கள் என்று வரையறுத்துள்ளார் - ஒருவேளை அவர்களை ராணுவ இலக்காக நியாயப்படுத்துவதற்காகவும் இது இருக்கலாம். முன்னாள் சிஐஏ ஆய்வாளர் ராபர்ட் எல். கார்லின் மற்றும் அணு விஞ்ஞானி சீக்ஃபிரீட் எஸ். ஹெக்கர் ஆகியோர் கிம் ஜாங்-உன் போரைத் தொடங்குவதற்கான திட்டமிட்ட நகர்வுகளை பார்க்கிறார்கள். ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இதில் உடன்படவில்லை. அமெரிக்க-சீன உறவுகளுக்கான ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் அறக்கட்டளையின் சியோங்-ஹியோன் லீ, அடுத்த மாதம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வட கொரியா மீண்டும் அனுமதிக்கவுள்ளதாகவும் போருக்காக ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் விற்பதையும் சுட்டிக்காட்டுகிறார். போர்களத்துக்குத் தயாராகினால் இவற்றை செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார். எவ்வாறிருந்தாலும், வட கொரியா தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவங்கள் மிகவும் பலமானதாக இருக்கிறது என்பது தான் வட கொரியாவை தடுக்கும் முக்கிய அம்சமாகும். "ஒரு பொதுவான போர் தென் கொரியாவில் ஏராளமானோரை கொல்லக்கூடும், ஆனால் அது கிம் ஜாங்-உன்னுக்கும் அவரது ஆட்சிக்கும் முடிவு கட்டுவதாகவும் அமைந்துவிடும்," என்று கூக்மின் பல்கலைக்கழகத்தின் வார்ட் கூறுகிறார். அதற்கு பதிலாக, சிறிய அளவிலான தாக்குதலுக்கான சூழல் உருவாகி வருகிறது என்று அவரும் மற்றவர்களும் எச்சரிக்கின்றனர். "தென் கொரியா மீதான ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடைபெறும் என்பதே என் கவலை. அத்தகைய தாக்குதல் தென் கொரிய பிரதேசம் அல்லது ராணுவப் படைகளை இலக்காகக் கொண்டு, ஒரு எல்லைக்குள் இருக்கும்," என்று கார்னெகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸின் நிபுணர் அன்கித் பாண்டா கூறுகிறார். இது எல்லைக் கோட்டில் இருந்து மேற்கே உள்ள சர்ச்சைக்குரிய தீவுகளை குண்டு வீசித் தாக்குவது அல்லது ஆக்கிரமிப்பு முயற்சியாகவும் இருக்கலாம். 2010-ம் ஆண்டில், வட கொரியா யியோன்பியோங் தீவைத் தாக்கி நான்கு தென் கொரிய ராணுவ வீரர்களைக் கொன்றது. இது தென் கொரியாவுக்கு ஆத்திரமூட்டியது. தென் கொரியாவை சோதித்து பார்க்க, அதே போன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிற நிபுணர்கள், போர் குறித்த அச்சங்களை கிம்மின் செயல்பாட்டு முறைகளின் பின்னணியில் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். "வட கொரியாவின் வரலாற்றைப் பார்த்தால், வேறு நாடுகளின் கவனத்தை ஈர்க்க விரும்பும்போது, அது பல நேரங்களில் மற்றவரை சீண்டிப் பார்க்கும். " என்று லீ சியோங்-ஹியோன் கூறுகிறார். இந்த ஆட்சி பொருளாதாரத் தடைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் 2024 ஆம் ஆண்டு அதன் எதிரிகளுக்கு தேர்தல் ஆண்டு - அமெரிக்க அதிபர் வாக்குப்பதிவு மற்றும் தென் கொரிய சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் வட கொரியா தனது சீண்டலை நடத்த எல்லா காரணங்களையும் தருகிறது என்று டாக்டர் லீ கூறுகிறார். அதிபர் ஜோ பைடன் தலைமையிலான தற்போதைய அமெரிக்க நிர்வாகம் - உக்ரேனுடனும் காஸாவுடனும் இணைந்துள்ளது. வட கொரியாவைக் கவனிக்கவில்லை, மேலும் பியோங்யாங் பொதுவாக குடியரசுக் கட்சி நிர்வாகங்களுடன் அதிக ஈடுபாட்டைக் கொண்டிருந்தது. 2019 ஆம் ஆண்டில் அணு ஆயுத நீக்க பேச்சுவார்த்தைகள் கசப்பதற்கு முன் கிம் ஜாங் உன்னும் டொனால்ட் டிரம்பும் பிரபலமாக நண்பர்களாக இருந்தனர். வட கொரிய தலைவர் முன்னாள் அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவதற்காகக் காத்திருக்கலாம். அப்போது அமெரிக்காவுடனான தென் கொரியாவின் நட்பு பலவீனமாகக் கூடும். மீண்டும் கிம்முடன் உரையாடலுக்கு வாய்ப்பு ஏற்படலாம். ரஷ்யாவுடனான வட கொரியாவின் நெருங்கிய நட்பு மற்றும் கடந்த ஆண்டு சீனாவிலிருந்து தொடர்ந்து வரும் பொருளாதார ஆதரவு அதன் துணிச்சலை அதிகரித்திருக்கலாம் என்று பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர். ரஷ்யாவிலிருந்து தனது உளவு செயற்கைக்கோள்களை ஏவுவது என்ற நீண்டகால இலக்கை அடைய தொழில்நுட்ப உதவியைப் பெற்றுள்ளது, மேலும் கடந்த ஆண்டு தலைவர்கள் உச்சிமாநாடு உட்பட பல உயர் மட்ட கூட்டங்களை இரு நாடுகளும் நடத்தியுள்ளன. வட கொரியா அதன் ராணுவ திறன்கள் மற்றும் ரஷ்யா, சீனா ஆதரவு காரணமாக அதிக நம்பிக்கையுடன் செயல்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சில நிபுணர்கள் கிம் ஜாங் உன்னின் நடவடிக்கைகள் அனைத்தும் தனது ஆட்சியை நிலைநிறுத்துவதையே குறிக்கிறது என்று கூறுகின்றனர். "இது ஆட்சி தப்புவதற்கான ஒரு சித்தாந்த சரிசெய்தல் என்று தோன்றுகிறது," என்று சியோலில் உள்ள எஹ்வா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லைஃப்-எரிக் எஸ்லி வாதிடுகிறார். "வட கொரியர்கள் தங்கள் கம்யூனிஸ்ட் நாட்டின் தோல்விகளை அதிகளவில் அறிந்திருக்கிறார்கள்." கடினமான காலக்கட்டத்தில், கிம்மின் ஏவுகணை செலவுகளை நியாயப்படுத்தவே, எதிரியை வரையறுப்பதில் கவனம் செலுத்தும் கொள்கையை அவர் பரிந்துரைக்கிறார். நாடு முழுவதும் பஞ்சம் இருப்பதாக தகவல்கள் உள்ளன. "இப்போது, நாடு மற்றும் அதன் கலாச்சாரம் வெறுமனே தீயவை என்று முத்திரை குத்தப்பட்டு, தென் கொரிய கலாச்சாரத்தை தொடர்ந்து ஒடுக்குவதற்கு இது காரணமாகிறது." என்று அவர் கூறுகிறார். "போர் எனும் மிகப்பெரிய சூதாட்டத்தை அவர் உண்மையில் விரும்பவில்லை . அதில் அவர் எதையும் பெற முடியாது, எல்லாவற்றையும் இழக்க நேரிடும்," என்று வட கொரிய அகதிகளுக்கு உதவும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான லிபர்ட்டி இன் நார்த் கொரியாவைச் சேர்ந்த ஷோகீல் பார்க் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES உள்நாட்டு இலக்குகள் அவரது அச்சுறுத்தல்கள் தனது நாட்டில் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, என்று அவர் கூறுகிறார். கடுமையான சூழ்நிலைக்கு தென் கொரியா, அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் தயாராக இருப்பது முக்கியமாகும். எனினும் வட கொரியாவின் உள்நாட்டு சூழ்நிலையையும் பரந்த புவிசார் அரசியலையும் முழுமையாக ஆராய்வது அவசியம் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். இறுதியில், வட கொரிய தலைவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து கொள்ள, அவருடன் உரையாடுவதே சிறந்த வழி என்று டாக்டர் லீ வாதிடுகிறார். "சர்வதேச சமூகம் கிம் ஜாங் உன்னுடன் பேசுவதை கிம் ஜாங் உன்னின் அச்சுறுத்தல்களுக்கு சரணடைவதாக கருதுவதில்லை. அது ஒரு இலக்கை அடைவதற்கான அவசியமான வழிமுறையாக பார்க்கப்படுகிறது," என்று அவர் கூறுகிறார். "தேவைப்பட்டால், தவறான கணிப்புகளை குறைப்பதற்கும் போரைத் தடுப்பதற்கும் எதிரி நாட்டின் தலைவரை சந்திப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்." என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c51089lz66jo
  5. உலகின் முதல் ‘நைதரசன் வாயு’ மரண தண்டனை நிறைவேற்றம் அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி சார்லஸ் சென்னட் – எலிசபெத் சென்னட். சார்லஸ் சென்னட் தன் மனைவியுடனான கருத்துவேறுபாடு காரணமாக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதற்காக கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க்கர் ஆகிய இருவரிடமும் தலா 1000 டொலர் வழங்கி, தன் மனைவியைக் கொலை செய்ய கேட்டிருக்கிறார். இருவரும், 1988ஆம் ஆண்டு எலிசபெத் சென்னட்டை கொலை செய்தனர். எலிசபெத் சென்னட் கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்தில் சார்லஸ் சென்னட் தற்கொலை செய்துக்கொண்டார். கொலை குற்றம்சாட்டப்பட கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் இருவருக்கும் மரணதண்டனை விதித்தது. இதில், ஜான் பார்க்கர்க்கு 2010இல் ஊசி மூலம் மரண தண்டனை வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு கென்னத் யூஜின் ஸ்மித் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது மரண ஊசி போடுவதற்கான நரம்பை கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட சிக்கலால், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், நேற்று nitrogen hypoxiaவால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. nitrogen hypoxia மரண தண்டனை என்பது, மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு ஒரு முகமூடி அணிவிக்கப்படும். அதில் நைதரசனை மட்டுமே சுவாசிக்கும்படியான அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். மனித வாழ்வுக்கு தேவைப்படும் ஒட்சிசனை தவித்து நைதரசனை தொடர்ந்து சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்படும். அதைத் தொடர்ந்து மரணம் நிகழும். இந்த மரண தண்டனையால் கைதிக்கு பெரும் சிரமங்கள் இருக்காது எனக் கூறப்படுகிறது. கென்னத் யூஜின் ஸ்மி மரணிக்க சுமார் 22 நிமிடங்கள் ஆனதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இதற்கு முன்னர், 1999ஆம் ஆண்டு நைதரசன் சயனைடு வாயுவைப் பயன்படுத்தி ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது, நைதரசனை வைத்து முதன்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்படிருக்கிறது. இதுபோன்ற மரண தண்டனைக்கு அமெரிக்க மனித உரிமை வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது. நன்றி – விகடன் https://thinakkural.lk/article/289466
  6. Published By: VISHNU 23 JAN, 2024 | 12:41 PM கலாநிதி ஜெகான் பெரேரா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முறையில் மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறத்தொடங்கியிருக்கிறது போன்று தெரிகிறது. ஆபிரிக்க நாடான உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தற்போது நடைபெறும் அணிசேரா நாடுகளின் 19 வது உச்சிமாநாட்டிலும் 77 நாடுகள் குழு மற்றும் சீனாவின் மூன்றாவது தெற்கு உச்சிமகாநாட்டிலும் ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் கிடைத்தது. உகண்டா ஜனாதிபதி ஜோவெரி முசவெனியின் அழைப்பின் பேரில் விக்கிரமசிங்க முக்கியமான சந்திப்புகளில் பங்கேற்றது மாத்திரமல்ல, அணிசேரா உச்சிமாநாட்டிலும் தெற்கு உச்சிமகாநாட்டிலும் உரையாற்றினார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. கம்பாலாவுக்கான தனது விஜயத்தின்போது அவர் ஆபிரிக்க பிராந்தியத்தைச் சேர்ந்த தலைலர்களுடன் இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் முக்கிய கவனத்தைச் செலுத்தியதுடன் தெற்கு உலக நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அணிசேரா இயக்கத்தின் 120 தலைவர்களும் ஒன்றாக எடுத்த படத்தில் உச்சிமகாநாட்டை நடத்தும் உகண்டா ஜனாதிபதிக்கு பக்கத்தில் முன்வரிசையில் நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது. 1976 ஆண்டு கொழும்பில் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்க அணிசேரா நாடுகளின் உச்சிமகாநாட்டை நடத்தியபோதே இறுதியாக இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் கிடைத்தது. சர்வதேச பொருளாதார நீதிக்கு கோராக்கை விடுத்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் நடத்திய ஒரு முக்கியமான மகாநாடாக அது அமைந்தது. அந்த நேரத்தில் இலங்கை சர்வதேச அரங்கில் பொருளாதார கொள்கையில் உதாரணம் வகுக்கும் ஒரு நாடாக விளங்கியது. சமத்துவத்துடனான அபிவிருத்திக்கான சாத்தியப்பாட்டை வெளிக்காட்டியது. ஏனைய பல நாடுகளையும் விட உயர்ந்த ஆள்வீத வருமானத்துடன் தரம்வாய்ந்த பௌதீக வாழ்க்கைக் குறிகாட்டியில் முன்னிலையில் இலங்கை அன்று விளங்கியது. உச்சிமகாநாட்டில் ஜனாதிபதி விக்கிரமசிங்க நிகழ்த்திய உரை முன்னுதாரணமானதாக அமைந்ததுடன் அங்கு கூடியிருந்த உலகத் தலைவர்களின் பெரும் மதிப்பையும் பெற்றது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அக்கறைக்குரிய இரு முக்கிய பிரச்சினைகளை அவர் தனதுரையில் மிகவும் துணிச்சலான முறையில் கையாண்டார். மத்திய கிழக்கில் காசா போர் நெருக்கடிக்கும் தெற்கு உலகம் மீதான வடக்கு உலகின் தொடர்ச்சியான ஆதிக்க்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர் உரையாற்றினார். காசா பள்ளத்தாக்கின் மனிதாபிமான நெருக்கடியையும் இலங்கையில் இனமோதலைக் கையாண்டதில் தனக்கு இருக்கும் அனுபவங்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பெருவாரியான தீர்மானங்களுக்கும் இந்த அணிசேரா உச்சிமாநாட்டின் பிரகடனத்துக்கும் இசைவான முறையில் மேற்கு ஆற்றங்கரை, காசா பள்ளத்தாக்கு மற்றும் கிழக்கு ஜெரூசலேம் ஆகியவை பாலஸ்தீன அரசின் எல்லைகளுக்குள் வருவதை அங்கீகரிக்கவேண்டும் என்றும் காசாவின் இனரீதியான குடிப்பரம்பலில் மாற்றம் இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார். மதிப்பாய்வுடனான அணுகுமுறை அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேச கடற்படையில் இணைந்து கொள்வதற்கு இலங்கையின் போர்க்கப்பல்களை செங்கடலுக்கு அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்த சர்ச்சைக்குரிய தீர்மானத்துக்கு பிறகு இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை சாந்தப்படுத்துவதற்கு பெருமளவு உதவக்கூடியதாக ஜனாதிபதியின் உச்சிமகாநாட்டு உரை அமைந்தது. சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்காக ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இலங்கைக் கடற்படைக் கப்பல்களை அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் இலங்கையில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் அவரைச் சந்தித்துப் பேசவேண்டிய அவசியத்தை உருவாக்கியது. சனத்தொகையில் கால்வாசிக்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஒரு நாட்டைப் பொறுத்தவரை பெரும் செலவுபிடிக்கிற ஒரு கடற்படை நடவடிக்கையில் இறங்குவது கட்டுப்படியாகாத ஒன்று என்று கடுமையான விசனமும் வெளிப்படுத்தப்பட்டுவருகிறது. அத்துடன் பாலஸ்தீனப் போராட்டத்துக்கு உணர்ச்சிபூர்வமாக ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் இலங்கை முஸ்லிம் மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும் ஜனாதிபதியின் தீர்மானம் அமைந்தது. நாட்டின் நலன்களை சர்வதேச சமூகத்தின் முன்னால் முன்னுரிமைப்படுத்தும் அக்கறை காரணமாகவே ஜனாதிபதி பெருவாரியன வெளிநாட்டுப் விஜயங்களை மேற்கொள்கிறார் என்று அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்றுவருவதற்கு ஒரு நியாயப்பாட்டை அவரின் சீடர்களில் ஒருவரான ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன முன்வைக்கிறார். மேலதிக செலவினங்கள் நாட்டுக்கு கட்டுப்படியாகாத ஒரு நேரத்தில் பெருமளவு பணத்தை ஜனாதிபதி செலவுசெய்கிறார் என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது. ஒன்றரை வருட காலத்தில் நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தப் பாதையில் நகர்த்துவதற்கான தனது முயற்சிகளின் விளைவாக இலங்கைமீது உலகின் கவனத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க திருப்பியிருப்பதாகவும் அதற்காக தனது வெளிநாட்டு விஜயங்களை அவர் பயனுறுதியுடைய முறையில் பயன்படுத்தியிருப்பதாக அபேவர்தன கூறுகிறார். உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் போன்ற சர்வதேச நிறுவனங்களினதும் பல்வேறு நாடுகளினதும் ஆதரவுடன் இலங்கையை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். நாட்டுக்கு உச்சபட்ச பயன்களைப் பெறுவதற்காக செங்கடலுக்கு மதிப்பாய்ந்த ஒரு வெளியுறவுக் கொள்கையை ஜனாதிபதி கடைப்பிடிக்கிறார் என்று தெரிகிறது. கடற்படையை அனுப்பும் தீர்மானத்தில் இருந்து ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உகண்டாவில் அணிசேரா நாடுகளின் உச்சிமகாநாட்டில் ஜனாதிபதியின் உரையின் முற்பகுதியைப் போன்றே பிற்பகுதியும் நிச்சயம் பாராட்டவேண்டியதாக இருக்கிறது.அணிசேரா நாடுகள் குழுவுக்கு அறிவுத்திறனுடைய தலைமைத்துவம் ஒன்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வடக்கு - தெற்கு பிளவு குறித்தும் தெற்கு உலகம் தன்முனைப்புடன் செயற்படவேண்டிய அவசியம் குறித்தும் அவர் உணர்ச்சியைக் கிளறும் வகையில் பேசினார். "எமது உறுப்பு நாடுகள் இனிமேலும் பலவீனமான அரசுகளின் ஒரு குழுவாக இல்லை.ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களின் சில நாடுகளின் துரித முன்னேற்றம் மற்றும் பொருளாதார மேம்பாட்டின் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டது எனபதை நாம் அங்கீகரிக்கவேண்டும்.2050 ஆம் ஆண்டளவில் உலகின் பத்து முன்னணி பொருளாதாரங்களில் பெரும்பாலானவை அணிசேரா இயக்கத்துக்கு சொந்தமானவையாக விளங்கும்.அவை தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராக வேண்டும் " என்று விக்கிரமசிங்க தனதுரையில் கூறினார். நம்பிக்கையை வென்றெடுத்தல் அணிசேரா உச்சிமகாநாட்டில் பங்கேற்ற 120 நாடுகளில் அனேகமாக அரைவாசி நாடுகள் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை என்கிற அதேவேளை அவற்றின் ஆதரவு இலங்கைக்கு தேவை என்பதை கருத்திற் கொண்டதாகவே கம்பாலாவில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமைந்தன. " இலங்கையில் நல்லிணக்கம், பொறப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்" என்ற தொனிப்பொருளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 46/1, 51/1 தீர்மானங்களின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் எதிர்வரும் மார்ச்சிலும் பிறகு செப்டெம்பரிலும் பேரவையின் கூட்டத்தொடர்களில் ஆராயப்படவிருக்கிறது. உள்நாட்டுப்போர் 2009 ஆண்டில் முடிவுக்கு வந்த பிறகு இலங்கை மனித உரிமைகள் பேரவையின் அறிவுறுத்தல்களுக்கு உள்ளாகிவருகிறது. பேரவையில் ஒரு தடவை மாத்திரம் வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. போருக்கு பின்னரான பிரச்சினைகளை கையாளுவதில் இலங்கை அக்கறையுடன் செய்படுவதாக கலாநிதி தயான் ஜெயதிலக தலைமையிலான இராஜதந்திரிகள் குழுவினரால் தெற்கு உலகின் நாடுகளை நம்பவைக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு தீர்மானங்கள் மீதான சகல வாக்கெடுப்புக்களிலும் இலங்கை தோல்வி கண்டது. மனித உரிமைகள் பேரவைக்கு அளித்தை உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியதே அந்த தோல்விகளுக்கான காரணமாகும். தற்போது போருக்கு பின்னரான நீதியைப் பொறுத்தவரை இலங்கை நிறைவேற்றுவதற்கு பல உறுதிமொழிகள் இருக்கின்றன. இலங்கையில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் உறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறியதனால் சர்வதேச மனித உரிமைகள் சமூகம் " இலங்கையில் இடம்பெற்ற மனித பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான உரிமை மீறல்கள் தொடர்பில்ஆராய்ந்து தகவல்களையும் சான்றுகளையும் திரட்டுவதற்கும் எதிர்காலப் பொறுப்புக் கூறலுக்கான செயன்முறைகளுக்கு சாத்தியமான தி்ட்டங்களை வகுப்பதற்கும் பலியானவர்களுக்கும் உயிர்தப்பியவர்களுக்கும் நீதி கிடைப்பதற்காக குரல்கொடுப்பதற்கும் தகுதிவாய்ந்த நியாயாதிக்கமுடைய உறுப்புநாடுகளில் பொருத்தமான நீதிச் செயன்முறைகளை முன்னெடுப்பதற்கும் உதவியாக ஜெனீவாவில் சர்வதேச தரவு திரட்டல் பிரிவு ஒன்றை அமைத்திருக்கிறது. ஆனால், உகண்டாவில் ஜனாதிபதி முன்னெடுத்த ஆதரவு திரட்டும் முயற்சிகளுக்கு பிறகு இலங்கை மீண்டும் ஒரு தடவை (2009 ஆம் ஆண்டில் இடம்பெற்றதைப் போன்று) மனித உரிமைகள் பேரவையின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறக்கூடியதாக இருக்கும். காசா பள்ளத்தாக்கில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இயலாமற்போன சூழ்நிலைகளில் ஐக்கிய நாடுகளின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டிருக்கின்றமையால் இலங்கை தற்போது சர்வதேச ரீதியில் ஆதரவைத் திரட்டும் பணிகள் சுலபமாகிவிட்டன எனலாம். இந்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றின் மூலமாக நல்லிணக்கப் பொறிமுறைகளை குறிப்பாக தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை அமைக்கும் செயன்முறைகளைை முன்னெடுப்பதில் வெற்றிகாணமுடியும் என்று அரசாங்கம் இரண்டு மடங்கு நம்பிக்கையுடன் இருக்கிறது. உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் இப்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் இந்த முன்முயற்சிகள் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கத் தவறுவதற்கு வாய்ப்பில்லை. அரசாங்கம் சர்வதேச அரங்கில் அதன் போராட்டங்களை ஒவ்வொன்றாக வென்றுகொண்டு வருகிறது. ஆனால் நாட்டுக்குள் மக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் அரசாங்கத்தினால் வென்றெடுக்க இயலுமா என்பது முக்கியமான கேள்வி. பிரதான தமிழ்க் கட்சியின் புதிய தலைவர் தேர்தலில் மிதவாத வேட்பாளரின் தோல்வி மேலும் பல விடயங்களைச் செய்யவேண்டிய தேவையை உணர்த்திநிற்கிறது. https://www.virakesari.lk/article/174594
  7. மறைந்த சனத் நிஷாந்தவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்கள்: விசாரணை முன்னெடுப்பு முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்களை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களே இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனிநபர்கள் இதுபோன்ற அவதூறான கருத்துக்களை தொடர்ந்து மற்றும் போலி கணக்குகளின் கீழ் பதிவிடுவது கண்டறியப்பட்டது. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் போன்ற ஏனைய நிகழ்வுகளுடன் இந்தச் சம்பவமும் சமூக ஊடகங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார். https://thinakkural.lk/article/289491
  8. காசா யுத்தம் : இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடலாம் Published By: RAJEEBAN 26 JAN, 2024 | 10:59 AM காசாவில் இஸ்ரேல் யுத்த குற்றங்களில் ஈடுபடுவதாக தெரிவித்து தென்ஆபிரிக்கா தாக்கல் செய்துள்ள மனு மீதான தனது தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. காசாவில் இஸ்ரேல் இராணுவநடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என ஐக்கியநாடுகளின் நீதிமன்றம் உத்தரவிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனுதொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வேளை இரண்டு தரப்பினரும் தமது தரப்பு வாதங்களை முன்வைத்திருந்தனர். சர்வதேசநீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம் இல்லை என்ற போதிலும் இந்த தீர்ப்பு அரசியல்முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படலாம். பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் தென்னாபிரிக்கா இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கைகளை இடைநிறுத்தவேண்டும் என்பது உட்பட 9 இடைக்கால உத்தரவுகளை நீதிமன்றம்பிறப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/174821
  9. 26 JAN, 2024 | 06:38 PM (இராஜதுரை ஹஷான்) மூன்று பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை திறைச்சேரிக்கு செலுத்தியுள்ளோம். பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த லிட்ரோ நிறுவனம் தற்போது இலாபமடைந்துள்ளது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் உள்ள லிட்ரோ நிறுவனத்தின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் லிட்ரோ நிறுவனம் ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு 1.5 பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை செலுத்தியுள்ளோம். தற்போது 1.5 பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம் ஊடாக திறைச்சேரிக்கு செலுத்தியுள்ளோம். லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பதவியேற்கும்போது நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. முறையான முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாக நிறுவனம் தற்போது இலாபமடைந்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டரின் பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியை முகாமைத்துவம் செய்து எரிவாயு சிலிண்டரின் விலையை ஸ்திரமான நிலையில் பேணுகிறோம். எரிவாயு விலை அதிகரிப்பால் நிறுவனத்துக்கு சொற்பளவிலான இலாபமே கிடைக்கப் பெறுகிறது என்றார். https://www.virakesari.lk/article/174878
  10. அதிபர் சேவையில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் நியமிக்கப்பட்டுள்ள குழு, அதன் அறிக்கையை நேற்று அமைச்சரிடம் கையளித்தது. சம்பள திருத்தம் மற்றும் சம்பள முரண்பாடுகளை களைதல், அதிபர்களின் கொடுப்பனவை 6,000 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவாக அதிகரித்தல், அரசசேவை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தொடர்பாடல் பயணச் செலவு, வாகனம், வீடு உள்ளிட்ட கொடுப்பனவுகள் மற்றும் தூரப் பிரதேசங்களில் கடமையாற்றும் அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவு தொடர்பாக 6 முக்கிய விடயங்கள் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தற்போது 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணப்படும் அதிபர் சேவை தரம் III, II, I க்கு உட்பட்ட அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் உப அதிபர்கள், சேவைகளை பாடசாலை கட்டமைப்பின் புதிய தேவைகளை கவனத்திற்கொண்டு அதிபர்களுக்கான அதி உயர் தரத்தை உருவாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, அதனூடாக சேவை யாப்பு திருத்தம் மூலம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், கல்வித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/289442
  11. சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்கமறியல்! 26 JAN, 2024 | 09:58 PM இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெலிசர நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் பலியான சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார். https://www.virakesari.lk/article/174886
  12. யாழில் நிகழ்நிலை காப்பு சட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் பற்றிய தெளிவூட்டல் தொடர்பான கலந்துரையாடல் 26 JAN, 2024 | 05:29 PM நிகழ்நிலை காப்பு சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டமூலம் பற்றி தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் யாழ் ஊடக மையம் மற்றும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன்போது இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார், உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் துமிந்த சம்பத், சட்டத்தரணி கு.ஐங்கரன், காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/174863
  13. சனத் நிஷாந்தவின் மறைவு முழு நாட்டுக்கும் பேரிழப்பு! - மஹிந்த ராஜபக்க்ஷ அனுதாபம் Published By: VISHNU 26 JAN, 2024 | 06:42 PM (இராஜதுரை ஹஷான்) இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு எமது கட்சிக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பு. புத்தளம் மாவட்டம் சிறந்த தலைமைத்துவத்தை இழந்து விட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் கொழும்பில் உள்ள மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆளும் மற்றும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பூதலுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு எமது கட்சிக்கு மாத்திரமல்ல நாட்டுக்கும் பேரழிப்பு. அச்சம் என்பது அறியாதவர். பல சவாலான சந்தர்ப்பத்திலும் முன்னின்று செயற்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டம் சிறந்த தலைமைத்துவத்தை இழந்து விட்டது என்றார். https://www.virakesari.lk/article/174855
  14. உடல் நலக்குறைவால் சாந்தன் வைத்தியசாலையில் அனுமதி! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த சாந்தன், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி அரச மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 54 வயதான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சுதந்திர ராஜா என்ற இயற்பெயர் கொண்ட சாந்தன், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். எனினும், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், அவருடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் கிடைத்த பின் அனுப்புவதற்கான நடைமுறைகள் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சாந்தனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாந்தனுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு அவதியுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக திருச்சி முகாமில் இருக்கும் சாந்தன், சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்குமாறு பிரதமர் மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை துணை தூதர், வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பலருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த 32 வருடங்களாக தனது தாயாரைப் பார்க்கவில்லை எனவும் அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவரோடு கூட வாழ விரும்புவதாகவும் ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு, நிலுவையில் உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/289474
  15. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை! 26 JAN, 2024 | 12:00 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 16 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 'சி' குழுவில் இடம்பெறும் இலங்கை, சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது. ஆபிரிக்க நாடுகளான ஸிம்பாப்வேயை டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 36 ஓட்டங்களாலும் நமிபியாவை 77 ஓட்டங்களாலும் வெற்றி கொண்டதன் மூலம் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை முன்னேறியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளைத் தொடர்ந்து தனது குழுவில் இடம்பெறும் பலம்வாய்ந்த அவுஸ்திரேலியாவை கிம்பர்லியில் நாளை சனிக்கிழமை (27) நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் இலங்கை எதிர்த்தாடவுள்ளது. இரண்டு அணிகளும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெற்றுவிட்டதால் கடைசி லீக் போட்டி முடிவு இரண்டு அணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. இந்த வருட இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் றோயல் கல்லூரி வீரர் சினேத் ஜயவர்தனவின் தலைமையிலான இலங்கை அணி பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. ஸிம்பாப்வே அணிக்கு எதிரான தனது ஆரம்பப் போட்டியில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான தினுர கலுபஹன (60), ஷாருஜன் சண்முகநாதன் (41 ஆ.இ.), ரவிஷான் டி சில்வா (31), ருசந்த கமகே (31) ஆகியோர் நிதானமாகத் துடுப்பெடுத்தாடியதன் பலனாக இலங்கை 204 ஓட்டங்களைப் பெற்றது. மல்ஷா தருப்பதி 4 விக்கெட்களையும் ருவிஷான் பேரேரா, விஷ்வா லஹிரு ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றி ஸிம்பாப்வேயை 89 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர். நமிபியாவுக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் இலங்கை பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட து. எனினும், சுப்புன் வடுகே மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்று இலங்கை 133 ஓட்டங்களை மொத்த எண்ணிக்கையாக பெற உதவினார். பந்துவீச்சில் ருவிஷான் பெரேரா, விஷ்வா லஹிரு ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் தினுர கலுபஹன 2 விக்கெட்களையும் கைப்பற்றி நமிபியாவை 56 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி இலங்கையை 77 ஓட்டங்களால் வெற்றிபெற உதவினர். இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை இளையோர் அணியின் ஆட்டத்திறன்கள் திருப்திகரமாக அமையவில்லை. இந் நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் இலங்கை அணி சகல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்த வேண்டிவரும். இக் குழுவில் ஸிம்பாப்வேயை 225 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா, 2ஆவது போட்டியில் நமிபியாவிடம் கடும் சவாலை எதிர்கொண்டு 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது. எனவே, நமிபியாiவிட திறமையாக இலங்கை பந்துவீசினாலன்றி அவுஸ்திரேலியாவை வெற்றிகொள்வது இலகுவல்ல. இது இவ்வாறிருக்க, ஏ குழுவிலிருந்து இந்தியாவும் பி குழுவிலிருந்து இங்கிலாந்தும், டி குழுவிலிருந்து பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளும் சுப்பர் சிக்ஸில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டுள்ளன. https://www.virakesari.lk/article/174830
  16. Published By: VISHNU 26 JAN, 2024 | 03:48 PM ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில், இன்று வெள்ளிக்கிழமை (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.பொது நூலகத்தில் இருந்து பேரணியாக யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/174852
  17. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் மருத்துவமனையில் சேர்க்கக் கோரி மனு தாக்கல் Published By: RAJEEBAN 26 JAN, 2024 | 10:27 AM சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலையான சாந்தன் தன்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான சாந்தன் கடந்த 2022-ல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட்டார். அவர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயாரை உடனிருந்து கவனிக்க வேண்டியுள்ளதால் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க உத்தரவிடக்கோரி சாந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சாந்தனிற்கு கல்லீரல் சிறுநீரகபாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது இதனால் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமை மையம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலையான சாந்தன் இலங்கைக்கு திரும்புவதற்காக விசா போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றார், திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனிற்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் திருச்சி சிறப்பு முகாமில் எடுக்கப்படாததால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமைகள் மையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கால்கள் வீங்கியுள்ளன கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ள து எனினும் இரண்டுமாதங்களாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை இதனால் அவர் உயிருக்கு போராடுகின்றார் என்பதால் அவரை காப்பாற்றவேண்டும் என சிறைக்கைதிகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/174816
  18. காற்றில் வரும் கீதமே: பவதாரிணி பாடிய மறக்க முடியாத 10 பாடல்கள் பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணியின் குரல் தனித்துவமானது. 1984ஆம் ஆண்டு முதல் பாடிவரும் பவதாரிணி பாடிய மறக்க முடியாத சில பாடல்களின் பட்டியல் இது. 1. மஸ்தானா, மஸ்தானா பவதாரிணி 1984ஆம் ஆண்டில் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ படத்திலேயே அறிமுகமாகிவிட்டார் என்றாலும், 1995ல் வெளியான ராசய்யா படத்தில் அவர் பாடிய இந்தப் பாடல்தான், தமிழ் திரைப்பட இசை ரசிகர்களை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அவருடைய பல பாடல்களோடு ஒப்பிட்டால், இந்தப் பாடல் அவ்வளவு சிறப்பான பாடல் இல்லைதான். ஆனால், இந்தப் பாடலில் ஒலித்த பவதாரிணியின் குரல், பாடலை கவனிக்க வைத்தது. அவருடைய குரலில் ஒரு குழந்தைத்தனமும் வசீகரமும் இருந்தது. இந்தப் பாடலுக்கு பிரபுதேவாவும் ரோஜாவும் நடித்திருந்தனர். பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA 2. நதியோடு வீசும் தென்றல் 1995ல் விஜயகாந்த் சங்கீதா நடித்து வெளியான திரைப்படம் அலெக்ஸாண்டர். இந்தப் படத்தில் இருந்த சண்டைக் காட்சிகளின் சத்தத்திற்கு நடுவே ஒலித்த இந்த மெல்லிய, அழகான பாடல், பெரிதாக கவனிக்கப்படவில்லை. "நதியோடு வீசும் தென்றல் மலரோடு பேசுமா, மலராத பூக்கள் இன்று அதைக் கேட்கக்கூடுமா?" என்ற துவங்கும் இந்தப் பாடலில் உன்னிகிருஷ்ணனும் பவதாரிணியும் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியிருப்பார்கள். வெளியாகி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகியும் புதிதாக ஒலிக்கும் பாடல் இது. இந்தப் பாடலுக்கு இசை கார்த்திக் ராஜா. 3. ஒரு சின்ன மணிக் குயிலு 1996ல் கட்டப் பஞ்சாயத்து என்று ஒரு படம் வெளியானது. இப்போது பலரும் மறந்துவிட்ட இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் இது. பாடலை அருண்மொழியும் பவதாரிணியும் இணைந்து பாடியிருந்தார்கள். கார்த்திக் - கனகா இந்தப் பாடலுக்கு நடித்திருந்தார்கள். படத்தின் பெயர் பலருக்கும் மறந்துவிட்டாலும் பாடல் இன்னமும் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கிறது. பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா. பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA 4. இது சங்கீதத் திருநாளோ 1997ஆம் ஆண்டில் வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட். இளையராஜாவின் இசையில் வெளியான அந்தப் படத்தில் டைட்டில் பாடலாக இடம்பெற்றிருந்த "இது சங்கீதத் திருநாளோ" பாடல், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. இளையராஜாவின் இசையையும் தாண்டி, பவதாரிணியின் குரலும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. 5. என் வீட்டு ஜன்னல் எட்டி பாலுமகேந்திரா இயக்கத்தில் 1997ல் வெளிவந்த ராமன் அப்துல்லா படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாலுமகேந்திரா இயக்கிய படங்களில் இது கவனிக்கத்தக்க ஒரு படமாக அமையவில்லை. ஆனால் பவதாரிணியும் அருண் மொழியும் பாடியிருந்த இந்த ஒரு பாட்டு, படத்தின் பெயரை மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசென்றது. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பாடல் ஹிட்டானது. இப்போதும் எங்கேயாவது இந்தப் பாடல் ஒலிக்கும்போது, வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து, சில நொடிகள் பாடலை ரசித்துச் செல்கிறார்கள். பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA 6. தவிக்கிறேன்.. தவிக்கிறேன் பிரபுதேவாவும் சிம்ரனும் நடித்து 'டைம்' என்ற திரைப்படம் 1999ல் வெளிவந்தது. கீதா கிருஷ்ணா என்பவர் படத்தை இயக்கியிருந்தார். ராதிகா சௌத்ரி, மணிவண்ணன், அம்பிகா, நாசர் என ஏகப்பட்ட நடிகர்கள் படத்தில் இருந்தார்கள். ஆனால், படம் யார் நினைவிலும் தங்கவில்லை. ஆனால், இந்தப் படத்தில் இருந்த இந்தப் பாடல், எல்லோர் மனதிலும் தங்கிவிட்டது. இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடலில் பல இடங்களில் பவதாரிணியின் குரல் அட்டகாசம் செய்திருக்கும். வீடியோ காட்சியில்லாமல் பாடலைக் கேட்பது நன்று. 7. மயில் போல பொண்ணு ஒன்னு 2000வது ஆண்டில் வெளியான பாரதி திரைப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதில் 9 பாடல்கள் பாரதியின் பாடல்கள்தான். ஒரு பாடலை புலமைப்பித்தனும் ஒரு பாடலை மு. மேத்தாவும் எழுதியிருந்தனர். மு. மேத்தா எழுதிய இந்தப் பாடலை பவதாரிணி பாடியிருந்தார். ஒரு குழந்தை பாடுவதைப் அமைந்திருக்கும் இந்தப் பாடல், கேட்போரை மயங்கச் செய்தது. "குயில் போல பாட்டு ஒன்னு, கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல, அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல" என அந்தப் பாடலில் வரும் வரிகளைப் போலவே, நீண்ட மயக்கத்தைத் தந்த பாடல் அது. இந்தப் பாடல், சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும் பவதாரிணிக்குப் பெற்றுத் தந்தது. 8. தென்றல் வரும் வழியை 2001ல் வெளிவந்த ப்ரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல், ஹரிஹரனுடன் இணைந்து பவதாரிணி பாடிய மற்றொரு சூப்பர் ஹிட் பாடல். இந்தப் பாடலில் நடுநடுவே வரும் பவதாரிணியின் ஹம்மிங், இந்தப் பாடலில் மற்றும் ஒரு போனஸ். பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA 9. காற்றில் வரும் கீதமே ஒரு நாள் ஒரு கனவு படத்தில் சாஸ்த்ரீய இசையில் அமைந்த இந்தப் பாடல், முதல் முறை கேட்கும்போதே மனதைக் கவரக்கூடிய பாடல். இந்தப் பாடலை அந்தப் படத்தில் இரண்டு இடங்களில் பாடியிருப்பார் பவதாரிணி. ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் போன்றோரும் இணைந்து பாடியிருந்தாலும் பவதாரிணியின் குரல் தனித்து ஒலிக்கும். தான் பாடிய பாடல்களிலேயே தனது தந்தை இளையராஜாவுக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று என பவதாரிணி இந்தப் பாடலைக் குறிப்பிட்டிருந்தார். 10. தாலியே தேவையில்லை 2006ல் வெளிவந்த தாமிரபரணி படத்தில் இடம்பெற்ற 'தாலியே தேவையில்லை' பாடல் ஒரு சுமாரான பாடல்தான். ஆனால், ஹரிஹரனுடன் இணைந்து ஒலித்த பவதாரிணியின் குரல் அந்தப் பாடலை ஒரு நல்ல உயரத்திற்கு எடுத்துச் சென்றது. இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. பாடல்களைத் தவிர, பல பாடல்களில் பவதாரிணியின் ஹம்மிங் கவனிக்கத்தக்கதாக இருந்தது. உதாரணமாக, காதலுக்கு மரியாதை படத்தில் 'தாலாட்ட வருவாளா.." பாடலிலும் "முத்தே முத்தமா.." பாடலிலும் "தென்றல் வரும் வழியில்" பாடலிலும் இவரது ஹம்மிங் கவனிக்க வைத்தது. உல்லாசம் படத்தில் வரும் முத்தே முத்தம்மா பாடலைப் பாடியவர் ஸ்வர்ணலதா. ஹம்மிங் மட்டும் பவதாரணி. பவதாரிணி தனது பெரும்பாலான பாடல்களை ஹரிஹரனுடன் இணைந்தோ, அருண்மொழியுடன் இணைந்தோதான் பாடியிருந்தார். மேலே சொன்ன பாடல்களைத் தவிர, அரவிந்தன் (1997) படத்தில் இடம்பெற்ற "காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்" பாடலும் தேடினேன் வந்தது (1997) "ஆல்ப்ஸ் மலை காற்றுவந்து நெஞ்சில் கூசுதே" பாடலும் கவனிக்கத்தக்க பாடல்களாக அமைந்தன. https://www.bbc.com/tamil/articles/c131l1m512zo
  19. கொலைக் குற்றவாளிக்கு நைட்ரஜனை செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றிய அமெரிக்கா பட மூலாதாரம்,WHNT/CBS 24 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் கொலைக் குற்றவாளி கென்னத் யூஜின் ஸ்மித்துக்கு நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக், 58 வயதான ஸ்மித் தனக்கு எதிரான மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளில் தோல்வியடைந்தார். 2022 ஆம் ஆண்டில், ஸ்மித்துக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்தது. மரண தண்டனை தகவல் மையத்தின்படி, உலகில் எங்கும் நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் ஸ்மித் ஆவார். முகமூடி மூலம் நைட்ரஜனை செலுத்தினால் அவர் வாந்தியில் மூச்சுத் திணறல் ஏற்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அது சித்திரவதைக்கு சமம் என்று ஐ.நா. தெரிவித்திருந்தது. இதுவரை பரிசோதனை செய்யப்படாத இந்த புதிய மரணதண்டனை முறை குறித்த எண்ணங்களால் நிம்மதியில்லாமல் தவிப்பதாக ஸ்மித் பிபிசியிடம் கூறியிருந்தார். https://www.bbc.com/tamil/articles/cmmg411lpymo
  20. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்க சுரங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்த நாட்டில் தென்மேற்கில் கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். திடீரென தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து சிக்கி கொண்டனர். உடனே மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான கரீம் பெர்தே கூறும்போது, இந்த விபத்து ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க இந்த கைவினைஞர் சுரங்கத்துறையை அரசு ஒழுங்குப்படுத்தும் என்றார். ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் சுரங்க பணிகளில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/289344
  21. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார் பட மூலாதாரம்,X ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பவதாரிணி அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு லங்கா மருத்துவமனைக்கு வந்தார் இளையராஜா இலங்கையில் அவர் பித்தப்பை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அது கடைசி நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசியிடம் பேசிய திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று மாலை 5:20 மணியளவில் பவதாரிணி உயிரிழந்ததாகவும் அவரது உடலை நாளை சென்னை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பு லங்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பில் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள இளையராஜா, மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது. ராமன் அப்துல்லா, தாமிரபரணி, புதிய கீதை உள்ளிட்ட படங்களில் அவர் பாடியுள்ளார். பவதாரிணி பாடிய முக்கியமான பாடல்கள் பட மூலாதாரம்,X பவதாரிணி பல முக்கியமான பாடல்களைப் பாடியுள்ளார். பிரபுதேவா நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் வரும் மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் அவர் பாடகியாக அறிமுகமானார். எம்.குமரன் படத்தில் வரும் அய்யோ அய்யோ பாடல், தாமிரபரணி படத்தின் தாலியே தேவையில்ல பாடல் போன்ற ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் பவதாரிணி. அதேபோல், காதலுக்கு மரியாதை படத்தில் வரும் என்னைத் தாலாட்ட வருவாளா, ஆயுத எழுத்து படத்தின் யாக்கைத் திரி, காக்க காக்க படத்தின் என்னைக் கொஞ்சம் மாற்றி போன்ற தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பாடல்களை அவர் பாடியுள்ளார். இளையராஜா மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரது இசையிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரெண்ட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இந்தியில் ரேவதி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ஃபிர் மிலெங்கே என்ற படத்திலும் இசையமைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 1991-ஆம் ஆண்டு இளையராஜா உருவாக்கிய ராஜாவின் ரமணமாலை என்ற இசைத் தொகுப்பில் ஆராவமுதே என்ற பாடலை பவதாரிணி பாடினார். அலெக்சாண்டர், கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை, டைம், பாரதி, அழகி, பிரெண்ட்ஸ், ஒரு நாள் ஒரு கனவு, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தாமிரபரணி, நாளைய பொழுதும் உன்னோடு, உளியின் ஓசை, தனம், கோவா, மங்காத்தா, அனேகன் ஆகிய தமிழ்ப் படங்களில் இடம்பெற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் அமிர்தம், இலக்கணம், மாயநதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரிணி, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவருக்கு இரங்கல் தெரிவித்து பின்னணிப் பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “எனக்குத் தெரிந்த நல்ல மனிதர்களில் பவதாரிணி இளையராஜாவும் ஒருவர். பத்திரமாகப் போய் வா, அன்புப் பெண்ணே!” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் தைரியத்துடன் இருக்க நான் வேண்டிக்கொள்கிறேன். இது மிகவும் மனதை உடைக்கும் செய்தி” என்றும் குறிப்பிட்டுள்ளார். “பதவாரிணியின் குரலில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும். அவரது குரல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான குரல். இவ்வளவு இளம் வயதில் இப்படிப் பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று தெரிவித்தார் இசையமைப்பாளர் தினா. பாடகி பவதாரிணியின் குரல் மிகவும் மென்மையானது, தனித்துவமானது என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,X அவரது மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். “பின்னணிப் பாடகி பவதாரிணியின் மரைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிரது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று எல்.முருகன் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். பவதாரிணியின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் பவதாரிணியின் மறைவுச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். “இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது,” என்று புகழாரம் சூட்டியுள்ளார். பட மூலாதாரம்,X மேலும், “இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும் பவதாரிணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,X "இசைஞானி இளையராஜா அவர்களின் புதல்வியும் இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மருத்துவர் அய்யா அவர்களின் விருப்பப்படி தயாரிக்கப்பட்ட இலக்கணம் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவர் அவர். அவரை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c3g3e0yxly2o
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே வீடியோ மூலம் 2.79கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ள யூடியூபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகவும் பிரபலமான யூட்யூபரான மிஸ்டர்.பீஸ்ட் எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட ஒரே வீடியோ மூலம் 2.79கோடி ரூபாய் வருமானம் பெற்றிருப்பதாக கூறி உலகை ஆச்சரிய பட வைத்துள்ளார். முன்னதாக எக்ஸ் நிறுவனம் தங்களது விளம்பர வருமானத்தில் இருந்து சிறிய பகுதியையே பகிர்ந்து கொள்வதால் அந்த தளத்தில் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் எந்த பலனும் இல்லை என்று கூறியிருந்தார் அவர். ஆனால், கடந்த வாரம் எக்ஸ் குறித்த தனது கருத்தை மாற்றி கொண்டார். காரணம் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பழைய வீடியோ ஒன்று இது வரை 16 கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. 2022 அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அந்நிறுவனத்தை லாபமீட்டும் நிறுவனமாக மாற்ற பல்வேறு உத்திகளை செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க். அதில் உயர்நிலையில் உள்ள க்ரியேட்டர்ஸ்களுடன் விளம்பர வருவாயை பகிர்ந்து கொள்ளும் திட்டமும் அடங்கும். யூட்யூப் போன்ற இதர தளங்களும் இதை ஏற்கனவே செய்து வருகின்றன. ஆனால், எக்ஸ் தளத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் மஸ்க் இந்த திட்டத்தை செயல்படும் ஒன்றாக பார்க்கவில்லை. போலி செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தொடர்ந்து விளம்பரதாரர்களிடம் மஸ்க் உரசல் போக்கை கடைப்பிடித்து வருவதால் தொடர்ந்து எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாயும் வீழ்ச்சி நிலையில்தான் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யூட்யூப் சேனலான ‘மிஸ்டர் பீஸ்ட்’ - க்கு 23 கோடியே 40 லட்சம் பின்தொடர்பவர்கள் (Subscribers) உள்ளனர். யார் இந்த மிஸ்டர் பீஸ்ட்? மிஸ்டர் பீஸ்ட்டின் உண்மையான பெயர் ஜிம்மி டொனால்ட்சன். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் யூட்யூப் வழியாக மில்லியன்கணக்கான டாலர்களை சம்பாதித்து வருகிறார். அதே சமயம் அதில் ஒரு பகுதியை நன்கொடையாகவும் தருகிறார். இவரது பிரதான யூட்யூப் சேனலான ‘மிஸ்டர் பீஸ்ட்’ - க்கு 23 கோடியே 40 லட்சம் பின்தொடர்பவர்கள் (Subscribers) உள்ளனர். இவருக்கு மேலும் நான்கு சேனல்களும் உள்ளது. அதில் ‘மிஸ்டர் பீஸ்ட்’-க்கு 3 கோடியே 63 லட்சம், ‘பீஸ்ட் ரியாக்ட்ஸ்’ - க்கு ஒரு கோடியே 19 லட்சம், ‘மிஸ்டர் பீஸ்ட் கேமிங்’ சேனலுக்கு 4 கோடியே 14 லட்சம் மற்றும் ‘பீஸ்ட் பிலான்த்ரோபி’-க்கு 2 கோடியே 12 லட்சம் பின்தொடர்பவர்கள் வீதம் உள்ளனர். மேலும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 4 கோடியே 93 லட்சம் மற்றும் எக்ஸ் தளத்தில் 2 கோடியே 71 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். எக்ஸ் தளத்தில் இவரது பதிவுகளை 100 கோடி பார்வையாளர்கள் பார்த்தாலும் , அவருக்கு சரியாக வருமானம் கிடைப்பதில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார் அவர். ஆனால் பின்னதாக அவரது வீடியோக்களில் ஒன்று எக்ஸ் தளத்தில் எவ்வளவு சம்பாதிக்கும் என்று பார்க்க ஆர்வமாக உள்ளதாக கூறி ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். அதன் பின்பு அந்த வீடியோவின் பார்வையாளர்கள் மற்றும் வருவாய் குறித்து பதிவிடப் போவதாக தெரிவித்திருந்தார் அவர். அப்படி அவர் வெளியிட்ட உண்மைதான் உலகையே உலுக்கியுள்ளது. அந்த வீடியோவால் தனக்கு எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பதை அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில். “விளம்பரதாரர்கள் இந்த வீடியோ மக்களின் கவனத்தை ஈர்ப்பதை பார்த்திருக்க வேண்டும். அதற்கு பின் இதில் முதலீடு செய்துள்ளார்கள். அதனாலேயே நான் இவ்வளவு சம்பாதித்திருக்கலாம்” என்றும் எழுதியுள்ளார். மேலும் அவர் ஏற்கெனவே செய்தது போல, இந்த வருவாயையும் 10 அறிமுகமில்லாத நபர்களுக்கு பிரித்து கொடுப்பதாக கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்ஃப்ளியுன்ஸர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இணைய பிரபலங்கள் இணையம் வழியாக அதிக பணம் சம்பாதிக்கின்றனர். இதுவே மிஸ்டர் பீஸ்ட்டாக இல்லாமல், வேறு யாராவதாக இருந்திருந்தால் இவ்வளவு வருவாய் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர். “2.79 கோடி வருவாய் பெற்றுள்ளதாக அவர் கூறுகிறார். வீடியோவுக்கு இந்த வருவாய் நல்லதுதான். ஆனால், இந்தளவுக்கு வருவாய் பெறுவதற்கு, உங்கள் பதிவுக்கு பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் (Traffic) கொண்டிருக்க வேண்டும்” என்று கூறுகிறார் W மீடியாவின் கார்ஸ்டென் வைட். இன்ஃப்ளூயன்ஸர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இணைய பிரபலங்கள் இணையம் வழியாக அதிக பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், அது அவர்களின் பிரபலத்தன்மையை பொறுத்தது. அனைவராலும் இந்தளவு பணத்தை சம்பாதிக்க முடியாது. அவர்களின் வருவாய் குறித்த தகவல் பொதுவெளியிலும் கூட கிடைப்பதில்லை. இணைய நிறுவனங்களும் தனித்துவமான கன்டன்டுகளுக்காக இவர்களுக்கு சிறப்பு கட்டணம் வழங்குவதாக நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வீடியோக்களை உருவாக்க கோடிகளில் பணம் செலவழிப்பதாக கூறுகிறார் அவர். இந்த வருவாயால் ஏற்படும் தாக்கம் என்ன? மிஸ்டர் பீஸ்ட் ஓர் ஆண்டில் 54 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 440 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டியுள்ளதாக நவம்பர் 2022இல் செய்தி வெளியிட்டது போர்ப்ஸ் இதழ். அதிலிருந்து மிஸ்டர் பீஸ்ட்டை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக அதிகரித்துள்ளது. தற்போது அவரது ஆண்டு வருமானம் 233 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இவர் மிகவும் பிரபலமாக இருப்பதால் பல நிறுவனங்களும் இவருடன் இணைந்து பணியாற்றுகின்றன. தான் வீடியோக்களை உருவாக்க கோடிகளில் பணம் செலவழிப்பதாக கூறுகிறார் அவர். இவர் இந்த முறை அவர் பெரிய ஸ்ட்ரீமிங் தளத்தோடு முக்கியமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட போவதாகவும் கூறப்படுகிறது. எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ, செப்டம்பர் 2023-லேயே யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் வெவ்வேறு கார்களின் விலை குறித்து அவர் பேசியுள்ளார். தற்போது வரை, அந்த வீடியோவை யூட்யூபில் 22 கோடி பேர் பார்த்துள்ளனர். இவரது பெரும் பகுதி வருமானம் இது போன்ற யூட்யூப் வீடியோக்கள் வழியாகவே வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய கன்டென்ட்டுகள் மட்டுமே எக்ஸ் தளத்தில் வருவாய் ஈட்ட முடியும். இது போன்ற இன்ஃப்ளியுன்ஸர்களின் வருமானத்தை மதிப்பிடும் தளமான Vierism, யூடியூபில் பதிவிடப்படும் மிஸ்டர் பீஸ்ட்டின் ஒரு வீடியோ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் ஈட்டுவதாக மதிப்பிட்டுள்ளது. ஆனால், புதிய கன்டென்ட்டுகள் மட்டுமே எக்ஸ் தளத்தில் வருவாய் ஈட்ட முடியும். "எதிர்காலத்தில் எக்ஸ் தளத்தின் வருவாய் எங்கு செல்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமானது" என்று கூறுகிறார் Vierism தளத்தின் நிறுவனர் ஜென்னி சாய். தற்போது வரையில் எக்ஸ் தளத்தில் உள்ள 'இம்ப்ரெஷன்' என்றால் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறுகிறார் நெபுலாவின் தலைமை நிர்வாகி டேவ் விஸ்குல். நெபுலா என்பது உலகின் பிரீமியம் ஸ்ட்ரீமிங் தளமாகும். ஆனால், தற்போது இன்ஃப்ளியுன்ஸர்கள் எக்ஸ் தளத்தையும் முக்கியமானதாக எடுத்து கொள்ள முடியும் என்கிறார் அவர். “நீங்கள் ஏற்கனவே யூட்யூபுக்காக வீடியோக்களை உருவாக்குகிறீர்கள் என்றால், தற்போது அதை எக்ஸ் தளத்திலும் பதிவேற்ற முடியும். அதில் என்ன ஆகி விடப்போகிறது?” என்று கேட்கிறார் டேவ் விஸ்குல். ஆனால், இணையத்தில் பிரபலமாக இல்லாதவர்கள் பெரும்பணம் ஈட்டுவது எளிதல்ல என்றும் கூறுகின்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எலான் மஸ்க் ஆஷ்விட்ஸ் முகாமுக்கு பயணம் சென்றுள்ளார். பிபிசி தொழில்நுட்ப ஆசிரியர் ஜோய் க்ளீன்மேன் கூறுவது என்ன? இணையத்தில் உள்ள பெரும்பான்மையான க்ரியேட்டர்களால் மிஸ்டர் பீஸ்ட்டின் வருவாய்க்கு அருகில் கூட வர முடியாது. அவரை போல் உலகளவிலான ஊடகங்களின் வெளிச்சத்தையும் பெற முடியாது. தனது வருமானத்திற்கும் எக்ஸ் தளத்தில் உள்ள பயனர்களின் அனுபவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மிஸ்டர் பீஸ்ட்டே கூறுகிறார். ஆனால் இந்த எண்ணிக்கை எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லிண்டா யாச்சரினோவை நிச்சயம் மகிழ்விக்கும். விளம்பர வணிக உலகில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்த பிறகு கடந்த வருடம் எக்ஸ் தளத்தில் இணைந்தார் அவர். தனிப்பட்ட முறையில் எக்ஸ் தளத்தின் மீதான பிம்பத்துடன் அவர் போராட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தளத்திலும் விளம்பரங்கள் சிறப்பாக செயலாற்ற தொடங்கியதன் பிறகு அவர் உற்சாகமடைந்திருப்பார். யூத மக்களுக்கு எதிரான கன்டன்டுகளை எக்ஸ் தளம் எவ்வாறு கையாள்கிறது என்று உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கும் சமயத்தில், கடந்த வாரம் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் ஆஷ்விட்ஸ் முகாமுக்கு பயணம் சென்றுள்ளார். இதுவே எக்ஸ் தளத்தின் முக்கியமான விளம்பரதாரர்கள் பலரும் கவலைப்படும் விஷயம். மேலும் மஸ்க் உடனடியாக சரி செய்ய வேண்டிய பிரச்னையும் கூட. சமீப காலமாகவே ஒரு பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனத்துடன் தனது நிகழ்ச்சிக்காக மிஸ்டர் பீஸ்ட் பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அது மட்டும் உண்மையென்றால், தற்போது எக்ஸ் தளத்தில் அவர் செய்திருக்கும் இந்த சோதனை, அவருக்கு அதிகமான வருவாயை பெற்றுத்தர வாய்ப்புள்ளது. https://www.bbc.com/tamil/articles/c51v9v0270ro
  23. இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. மறைந்த இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் இன்று மாலை 5.30 மணி வரை பொரளை ஜயரத்னவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதேவேளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இறக்கும் போது சனத் நிஷாந்தவிற்கு 48 வயது. https://thinakkural.lk/article/289377
  24. அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் காஃபீல்ட் சோபஸ் விருதை பெட் கமின்ஸ் வென்றெடுத்தார் 25 JAN, 2024 | 06:45 PM (நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரருக்கான சேர் காஃபீல்ட் சோபஸ் விருதை அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ் வென்றெடுத்தார். உற்சாகம் மற்றும் உத்வேகம் ஆகியவற்றுடன் கடந்த வருடம் முழுவதும் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்திய பெட் கமின்ஸ், தனது அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார். பெட் கமின்ஸின் தலைமையின் கீழ் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, தொடர்ந்து ஆஷஸ் தொடரைத் தக்கவைத்துக்கொண்டது. அத்துடன் நின்றுவிடாமல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட்டில் தோல்வி அடையாத அணியாக சம்பியனாகி 6ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சூடியிருந்தது. 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெட் கமின்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் கிரிக்கெட் அரங்கில் அவுஸ்திரேலியா அணி உச்சத்தை எட்டியது. அவரது மிகத் திறமையான ஆளுமை, பொறுமை, கட்டுப்பாடு, சிறந்த பண்பு என்பன ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தனது சக வீரர் ட்ரவிஸ் ஹெட், இந்திய வீரர்களான விராத் கோஹ்லி, ரவிந்த்ர ஜடேஜா ஆகியோரும் அதிசிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் பெட் கமின்ஸின் ஆட்டத் திறன், ஆளுமை, தலமைத்துவம் அனைத்தும் உயர்ந்திருந்தது. கடந்த வருடம் 24 போட்டிகளில் 422 ஓட்டங்ளைப் பெற்ற அவர் 59 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். அதிசிறந்த கிரிக்கெட் பருவ காலத்தைக் கொண்டிருந்த பெட் கமின்ஸ் அனைவரினதும் பாராட்டுதல்களை வென்றெடுத்தார். இந்தியாவுக்கு எதிராக கடந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற போடர் - காவஸ்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடர், பெட் கமனின்ஸின் அவுஸ்திரேலியாவுக்கு சிறப்பாக அமையவில்லை. ஆனால், அதன் பின்னர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சம்பியனான அவுஸ்திரேலியா, தொடர்ந்து ஆஷஸ் தொடரை தக்கவைத்துக்கொண்டது. வருட பிற்பகுதியில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அனைத்துப் போட்டிகளிலும் அற்புதமாக விளையாடிய அவுஸ்திரேலியா, இறுதிப் போட்டியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய பார்வையாளர்கள் முன்னிலையில் வெற்றிகொண்டு உலக சம்பியனானது. அந்த இறுதிப் போட்டியில் பெட் கமின்ஸ் அணியை வழிநடத்திய விதம், பிரயோகித்த வியூகங்கள், பந்துவீச்சாளர்களைக் கையாண்ட விதம் என்பன சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தன. ஆஷஸ் தொடரிலும் உலகக் கிண்ண கிரிக்கெட்டிலும் இக்கட்டான வேளைகளில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவை வெற்றபெறச் செய்தவர் பெட் கமின்ஸ். வருட இறுதியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்த பெட் கமின்ஸ் அந்தத் தொடரைக் கைப்பற்றி வருடத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்திருந்தார். https://www.virakesari.lk/article/174804
  25. 'யுக்திய' நடவடிக்கை : தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் உட்பட மூவர் காத்தான்குடியில் கைது 25 JAN, 2024 | 04:10 PM தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் உட்பட இருவர் யுக்திய போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, அதே பிரதேசத்தில் மற்றுமொருவர் 860 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதாகியுள்ளார். தற்போது நாடு முழுவதும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரையின் கீழ், 'யுக்திய' போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் 2 கிராம் 960 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடி அமானுல்லா வீதியில் வைத்து 32 வயதுடைய இளைஞர் ஒருவரும், 2 கிராம் 480 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, கர்பலா பிரதேசத்தில் வைத்து 860 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க குறிப்பிட்டார். கைதான மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான மூவரில் புதிய காத்தான்குடியை சேர்ந்த சந்தேக நபர் மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவுக்கமைய, ஏழு நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். ஏனைய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/174786

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.