Everything posted by ஏராளன்
-
தமிழ்நாட்டில் பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர்வரிசையுடன் வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள்
கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில், ஞாயிற்றுகிழமை மஸ்ஜிதே இலாஹி- பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழா மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்றது. அந்த கிராமத்தின் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சீர்வரிசைகளுடன் சென்று, கலந்து கொண்டு திறப்பு விழாவை கொண்டாடினர். 'இறையில்ல இல்ல திறப்பு விழா' என பெயர் சூட்டிய கிராம மக்கள் கிராமம் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மூன்று மதத்தவரும் திறப்பு விழாவுக்கு அழைப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. பேனரின் ஓரத்தில் மஸ்ஜிதே இலாஹி என்று சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த போதும், எந்த மத பெயரும் குறிப்பிடாமல், “இறையில்ல திறப்பு விழா” என்று விழாவுக்கு பெயர் சூட்டியிருந்தனர். இந்த பேனர்கள் ஊர் கவுன்சிலர், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் போன்றவர்கள் சார்பாக ஊரின் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. திறப்புவிழாவுக்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஊர்வலமாக சென்றனர். இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர். கிறிஸ்தவர்கள் பாதிரியார் ரமேஷ் தலைமையில் மெழுகுவர்த்தி, பழங்களை சீர்வரிசையாக கொண்டுச் சென்றனர். சீர்வரிசை கொண்டு வந்த இருமதத்தினரையும் சாலைக்கிராமம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நைனா முகம்மது தலைமையில், ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் அல்பத்ரு வாலிபர் முன்னேற்ற சங்க நண்பர்கள் ஆரத்தழுவி வரவேற்று பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர். குளிர்பானங்கள், தண்ணீர் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். பின்னர் 150 கிடா வெட்டி 7,000 பேருக்கு அசைவ பிரியாணி வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழா, அப்பகுதி மக்களிடையே மனநெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிவாசலுக்கு உள்ளே அழைக்கப்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள் பள்ளிவாசல் கட்டுமான பணிகள் தொடங்கும் போதே திறப்பு விழாவிற்கு அனைத்து சமுதாய மக்களையும் அழைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தோம் என்கிறார் சாலைகிராமத்தை சேர்ந்த நைனா முகமத். இது குறுத்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்த பள்ளிவாசல் கட்ட துவங்கும்போதே இதன் திறப்பு விழாவில் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என எங்கள் ஜமாத் சார்பில் முடிவு செய்யப்பட்டது. பல தலைமுறைகளாக இக்கிராமத்தில் மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பாகுபாடும் இல்லை. நாங்கள் பல ஆண்டுகளாக முக்கிய நிகழ்வுகளுக்கு பள்ளிவாசலுக்குள் மாற்று சமுதாயத்தினரை அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம். எங்களுக்குள் எந்த பேதமும் கிடையாது. அதேபோல் கிறிஸ்தவ மற்றும் இந்துக்களின் பண்டிகைகள் மற்றும் முக்கிய திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்வோம். பள்ளிவாசலில் இருந்து கிராமத்தில் உள்ள இந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாயத்திற்கு உரிய மரியாதையை செய்து வருகிறோம். பள்ளிவாசல் சார்பாக திறப்பு விழாவின் அழைப்பை கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என பாகுபாடு இன்றி வழங்கினோம். அழைப்பிதழ் வழங்காவிட்டாலும் திறப்பு விழாவிற்கு அனைவரும் வந்திருப்பார்கள்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மகேஸ்வரி, எங்கள் கிராமத்தில் பண்டிகையின் போது மட்டுமல்லாமல், தினசரி நடவடிக்கையிலும் ஒன்றாக இணைந்து தான் அனைத்து மதத்தவரும் வாழ்ந்து வருகிறோம் என்கிறார். "எங்கள் ஊரில் பிரதான தொழில் விவசாயம். விவசாய பணிகளுக்கு அனைத்து சமுதாயத்தினரும் வேலைக்கு வருவார்கள். அதே போல் 100 நாள் வேலைக்கும் நாங்கள் செல்லும்போது எங்களுடன் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பலரும் வேலை செய்வார்கள். நாங்கள் அவர்களுக்கு உணவு கொடுப்பதும் அவர்களிடம் இருந்து உணவு வாங்கி சாப்பிடுவது என எந்த பேதமுமின்றி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறோம். பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு செல்லும் முன் மக்கள் அனைவரும் கோவிலில் ஒன்று கூடி சாமி கும்பிட்டு சீர்வரிசை பொருட்களை வைத்து பூஜை செய்து எடுத்துச் சென்றோம். எங்கள் ஊர் திருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். இந்துகளாகிய நாங்களும் இஸ்லாமிய, கிறிஸ்தவ விழாக்களில் கலந்து கொள்வோம். இது இன்று நேற்று அல்ல தலைமுறை தலைமுறையாகவே நடந்து வரும் ஒரு வழக்கம்" என்கிறார் மகேஸ்வரி. பள்ளிவாசல் திறப்பில் கிறிஸ்தவர்கள் சார்பாக கலந்து கொண்ட ஸ்டீபன் பிபிசி தமிழிடம் பேசினார். மற்றவர்களுக்கு தான் இது புதிதான நிகழ்வு என்றும், தங்கள் ஊரில் காலங்காலமாக நடைபெறும் ஒன்று என்று அவர் தெரிவித்தார். "இன்று எங்கள் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து பாதிரியார் தலைமையில் இந்து மக்களுடன் இணைந்து பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டோம். எங்கள் கிராமத்தின் சிறப்பே பொங்கல் விழா தான். ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகிறோம். பொங்கல் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தவரின் பண்டிகைகளையும் நாங்கள் ஒன்று கூடி கொண்டாடுவோம். திறப்பு விழாவில் பங்கேற்றது மிகுந்த மன மகிழ்ச்சியை தந்தது" என்றார் ஸ்டீபன். https://www.bbc.com/tamil/articles/cw8jwj4np21o
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
தினுர, ஷாருஜன், தருப்பதி ஆகியோரின் அபார ஆற்றல்களால் ஸிம்பாப்வேயை வென்றது இலங்கை Published By: VISHNU 22 JAN, 2024 | 04:35 PM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேக்கு எதிராக கிம்பர்லி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 39 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. தினுர கலுகஹன குவித்த அபார அரைச் சதம், ஷாருஜன் சண்முகநாதனின் அபார துடுப்பாட்டம் மற்றும் விக்கெட் காப்பு, மல்ஷா தருப்பதியின் சிறப்பான பந்துவீச்சு என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 48.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. விஷேன் ஹலம்பகே (0), புலிந்து பெரேரா (3), அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (7) ஆகிய மூவரும் ஆடுகளம் விட்டகல 5ஆவது ஓவரில் இலங்கை 3 விக்கெட்களை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. இந் நிலையில் ரவிஷான் டி சில்வா, ருசாந்த கமகே ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி தலா 31 ஓட்டங்களைப் பெற்றதுடன் 4ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதன் பின்னர் தினுர கலுபஹனவும் ஷாரஜன் சண்முகநாதனும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 71 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தினுர கலுபஹன 55 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைப் பெற்றார். ஷாருஜன் சண்முகநாதன் 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பின்வரிசையில் ரவிஷான் பெரேரா 12 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கோல் எக்ஸ்டீன் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெத்யூ ஷொன்கென் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நியூமன் நியம்பூரி 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 205 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 13.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் மழையினால் தடைப்பட்டது. சில மணித்தியாலங்களின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது 22 ஓவர்களில் 129 ஓட்டங்கள் என டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் திருத்தி அமைக்கப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 21.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. அணித் தலைவர் மெத்யூ ஷொன்கென் மாத்திரம் ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 27 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. பந்துவீச்சில் மல்ஷா தருப்பதி 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விஷ்வா ஹலம்பகே 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். விக்கெட் காப்பாளர் ஷாருஜன் சண்முகநாதன் 2 பிடிகளை எடுத்ததுடன் ஒரு ஸ்டம்ப்பையும் செய்தார். https://www.virakesari.lk/article/174540
-
லெனின் பிறப்பால் மேதையா? மூளையை 30,953 பாகங்களாக பிரித்து செய்த ஆய்வு முடிவு என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லெனின் மூளையை அவரது மரணத்திற்குப் பிறகு பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அகற்றினர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு மேதை பிறக்கிறாரா அல்லது உருவாக்கப்படுகிறாரா? இந்த மர்மம் பல நூற்றாண்டுகளாக தத்துவவாதிகளையும் விஞ்ஞானிகளையும் கவர்ந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தில் இருந்து இந்த மர்மத்தை அவிழ்க்க ஆய்வாளர்கள் முயன்றனர். சோவியத் ஒன்றியத்தின் நிறுவனரான லெனின் என்று அழைக்கப்படும் விளாடிமிர் இலிச் உல்யனோவின் மரணம் வாயிலாக ஆய்வாளர்கள் அக்கேள்விக்கு விடை தேட முயன்றனர். ஜனவரி 21, 1924. லெனின் மரணத்திற்குப் பிறகு, அவருக்கு சிகிச்சையளித்த சில மருத்துவர்கள், அவருடைய "மேதைமை" எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன், அவருடைய மூளையை அகற்றி பாதுகாக்கவும் ஆராயவும் யோசனை ஒன்றை முன்மொழிந்தனர். இந்த யோசனை சோவியத் உயர் மட்ட தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நோக்கத்துடன் நிறுவனமும் உருவாக்கப்பட்டது. நூற்றாண்டுக்குப் பிறகு லெனினின் மூளை எங்கே உள்ளது, அந்த ஆய்வின் முடிவுகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க, இதுகுறித்து ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் பிபிசி முண்டோ பேசியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மூளை பற்றிய ஆய்வில் மிக முக்கியமான நிபுணர்களில் ஒருவராக இருந்த ஜெர்மன் மருத்துவர் ஆஸ்கர் வோக்ட், லெனின் மூளையை ஆய்வு செய்ய அழைக்கப்பட்டார். பதப்படுத்தப்பட்ட லெனின் மூளை "சுகாதார அமைச்சர் நிகோலாய் செமாஷ்கோ மற்றும் ஸ்டாலினின் உதவியாளர் இவான் டோவ்ஸ்டுகா ஆகியோர், லெனின் மூளையை ஆய்வுக்காக பெர்லினுக்கு அனுப்ப முன்மொழிந்ததில் இருந்து இக்கதை தொடங்குகிறது," என்கிறார் அமெரிக்க வரலாற்றாசிரியர் பால் ரோட்ரிக் கிரிகோரி. "லெனின் மூளை மற்றும் சோவியத் ரகசிய ஆவணக் காப்பகங்களிலிருந்து சில கதைகள்" (Lenin's Brain and Other Stories from the Soviet Secret Archives) என்ற புத்தகத்தை எழுதியுள்ள பால் ரோட்ரிக், லெனின் இறந்த நேரத்தில், ரஷ்யாவில் நரம்பியல் நிபுணர்கள் இல்லை என்று குறிப்பிட்டார். எனவே, பிரேத பரிசோதனையில் அகற்றப்பட்ட மூளை, ஃபார்மால்டிஹைடு எனும் ரசாயனம் சேர்த்து பதப்படுத்தப்பட்டது. லெனின் மூளையை ஆய்வு செய்ய சோவியத் அதிகாரிகள் ஜெர்மன் மருத்துவர் ஆஸ்கர் வோக்ட்டை (1870-1959) அழைத்தனர். வோக்ட் ஒரு புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர். அவர் மூளை ஆராய்ச்சிக்கென பேரரசர் வில்லியம் இன்ஸ்டிட்யூட்-ஐ நிறுவினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லெனின் மூளை 30,000-க்கும் மேற்பட்ட பாகங்களாக வெட்டப்பட்டு, அவை கண்ணாடித் தகடுகளில் வைக்கப்பட்டு, சில ஆய்வுக்காக சாயங்கள் பூசப்பட்டன. "அப்போது ஜெர்மனியில் அறிவியல் துறை சிறந்து விளங்கியது. மேலும், நோபல் பரிசு பெற்றவர்கள் அதிகமாக இருந்தனர்" என்று சலமன்கா பல்கலைக்கழகத்தில் (ஸ்பெயின்) நியூரோபயாலஜி பேராசிரியர் ஜோஸ் ரமோன் அலோன்சோ பிபிசி முண்டோவிடம் விளக்கினார். "அப்போது அந்த பணியை ஏற்க வோக்ட்டுக்கு சில தயக்கம் இருந்தபோதிலும், ஜெர்மன் அரசாங்கம் அப்பணியை ஏற்குமாறு அவரை வற்புறுத்தியது. அந்த நேரத்தில், ஜெர்மனி சோவியத் ஒன்றியத்துடன் நல்ல உறவைப் பேணுவதில் ஆர்வமாக இருந்தது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஆயுதங்களை தயாரிப்பதில் ஜெர்மனிக்கு இருந்த தடையை நீக்க சோவியத் ஒன்றியத்தின் உறவு தேவைப்பட்டது," என்கிறார், தனது "ஹிஸ்டரி ஆஃப் பிரெய்ன்" (History of the Brain) புத்தகத்திற்காக இதுகுறித்து ஆய்வு செய்த ஜோஸ் ரமோன் அலோன்சோ. இருப்பினும், லெனின் மூளையை பெர்லினுக்குக் கொண்டு செல்லும் திட்டம் கைவிடப்பட்டது. "வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றால் தன்னால் இந்த ஆய்வை கட்டுப்படுத்த முடியாது என்பதால், அதில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை" என்று அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஹூவர் இன்ஸ்டிட்யூட் பேராசிரியர் கிரிகோரி விளக்கினார். சோவியத் ஒன்றியத்தின் சந்தேகங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லெனின் மேதையா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பணியை வெளிநாட்டவரின் கைகளில் விடுவது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. இதற்கு சோவியத் தலைமை தரப்பிலிருந்து ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், வோக்ட் இறுதியில் ஆய்வில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். மேலும், லெனின் மூளையின் பிரிக்கப்பட்ட 30,953 பாகங்களில் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது. அதை ஜெர்மனியில் உள்ள தனது ஆய்வகத்திற்கு அவர் எடுத்துச் செல்லலாம் என்றும் கூறப்பட்டது. பதிலுக்கு, அவர் நரம்பியல் துறையில் ரஷ்ய மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், ரஷ்ய மூளை நிறுவனம் (இன்றைய ரஷ்ய மருத்துவ அறிவியல் அகாடமி) உருவாக்கத்தை வழிநடத்தவும் ரஷ்யா கேட்டுக்கொண்டது. இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு, நாஜி ஆட்சியுடன் வோக்ட் கொண்டிருந்த மோதல்களால், ஜெர்மனியில் தன் பதவிகளை இழந்தது மட்டுமல்லாமல், ஸ்டாலினை விட்டு விலகுவதற்கும் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க வரலாற்றாசிரியர் ஜோஸ் ரமோன் அலோன்சோ கூறினார். வெளிநாட்டு தலையீடு பற்றிய சோவியத் சந்தேகங்கள் நியாயமானதாகத் தோன்றியது. அதனால்தான், கிட்டத்தட்ட இரண்டாம் உலகப் போரின் முடிவில், வோக்ட்டின் கைகளில் இருந்த லெனினின் மூளையின் ஒரு பாகத்தை மீட்க மாஸ்கோ ஒரு ரகசிய நடவடிக்கையைத் தொடங்கியது என்று பெல்ஜிய ஆராய்ச்சியாளர்கள் எல். வான் போகார்ட் மற்றும் ஏ. டெவல்ஃப் தெரிவித்தனர். "வோக்ட் வைத்திருந்த லெனின் மூளையின் பாகம், அமெரிக்காவின் கைகளுக்கு சென்றுவிடும் என சோவியத் அஞ்சியது. அமெரிக்கா அதைப் பயன்படுத்தி, ’லெனின் சிபிலிஸால் அவதிப்பட்டார்’ அல்லது ’அவர் மேதையே இல்லை’ என்று கூறி அவரை இழிவுபடுத்தலாம் என சோவியத் சந்தேகித்தது" என்று பேராசிரியர் ஜோஸ் ரமோன் அலோன்சோ விளக்கினார். லெனின் மூளையில் என்ன இருக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாஜிக்கள் லெனினை நோயுற்றவராகவும் குற்றவாளியாகவும் சித்தரித்து, அவரது மூளை ஓட்டைகளை கொண்டிருந்ததால் "சுவிஸ் சீஸ்" (Swiss Cheese) போல இருப்பதாகக் கூறினர். 1920களின் பிற்பகுதியில், வோக்ட் தனது ஆய்வுகளின் ஆரம்ப முடிவுகளை ஐரோப்பாவில் தொடர்ச்சியான விரிவுரைகள் வாயிலாக வெளிப்படுத்தத் தொடங்கினார். "லெனின் பெருமூளைப் புறணியின் அடுக்கு III-ன் நியூரான்கள் விதிவிலக்காக பெரிதாகவும் ஏராளமானதாகவும் இருந்தன" என்று அவர் இந்த விரிவுரைகளில் கூறினார். இது லெனினின் "சுறுசுறுப்பான மனம்" மற்றும் "கருத்துகளை மிக விரைவாக தொடர்புபடுத்தும் திறன் மற்றும் அவரது யதார்த்த உணர்வை" விளக்குவதாக, வோக்ட் கருதினார். அதேசமயம், மூளையின் அடுக்கு நியூரான்கள் பெரிதாக இருப்பது, மன வளர்ச்சி குன்றிய தன்மையின் குணாதிசயங்கள் என்று அக்கால மற்ற வல்லுநர்கள் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக, கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் ஸ்டாலினை எச்சரித்திருந்தார். "வோக்ட்-ன் கண்டுபிடிப்புகள் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால், லெனின் மூளை தனித்துவமானது மற்றும் விதிவிலக்கானது என, ரஷ்யர்கள் கேட்க விரும்புவதை அவர் சொன்னார் என்று நம்பப்படுகிறது" என்று அலோன்சோ கூறினார். "சோவியத் அதிகாரிகள் லெனின் சிறந்த மேதை என்று நம்பினர். மேலும், அவரது மூளைக்கு சிறப்புத் தன்மைகள் இருப்பதாகவும் , வேறு எந்த மனிதனைப் போலவும் அவருடைய மூளை இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப தனித்துவமான ஒன்று அதில் இருப்பதாகவும் அவர்கள் நம்பினர்" என்று ஜோஸ் ரமோன் அலோன்சோ கூறினார். மூளையின் அமைப்பு (அளவு மற்றும் வடிவம்) மற்றும் மக்களின் நுண்ணறிவுக்கு இடையே நேரடி தொடர்பு இருப்பதாக வோக்ட் நம்பினார். மூளைக்கும் அறிவுக்கும் தொடர்பு உண்டா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சோவியத் தலைவர்கள் லெனினை ஒரு மேதை என்றுகூறி அவரது மூளையை ஆய்வு செய்து அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முயன்றனர். மக்களைக் கட்டுப்படுத்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்தவர் அல்லது தன் தாயார் இறக்கும் வரை அவரை சார்ந்தே வாழ்ந்தவர் அறிவு ரீதியாக உயர்ந்தவராகக் கருதப்பட முடியுமா? சோவியத் குறித்த வரலாற்றாசிரியர்கள் இந்த கூற்றை புறக்கணித்தாலும் அவர் சிறந்த நினைவாற்றல் கொண்டவர் என்றும் ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்ததாகவும், ஒரு மணிநேரத்தில் ஒரு செய்தித்தாளுக்கு கட்டுரை எழுதவும் அவரால் முடிந்தது என கூறுகின்றனர். லெனினின் "மேதைமை"யின் வேரைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்தன. ஏனென்றால், மற்ற மனித மூளைகளும் ஆய்வுக்குத் தேவையாக இருந்தது. அப்போதுதான் அவற்றை லெனின் மூளையுடன் ஒப்பிட முடியும். மருத்துவ அறிவியல் அகாடமியின் அலமாரிகளில் இப்போது லெனின் மூளை மட்டுமல்ல, உடலியல் நிபுணர் இவான் பாவ்லோவ், ஏரோநாட்டிகல் பொறியாளர் கான்ஸ்டான்டின் சியோல்கோவ்ஸ்கி மற்றும் எழுத்தாளர் மக்சிம் கார்க்கி ஆகியோரின் மூளையும் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பத்து சாதாரண குடிமக்களின் மூளைகளுடனும் லெனின் மூளை ஒப்பிடப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இது 63 பக்கங்கள் கொண்டது. தற்போது அறிக்கை மோசமான நிலையில் உள்ளது. மேலும், அதில் அறிவியல் ரீதியான பல வார்த்தைகள் உள்ளன. லெனின் நான்கு முறை பக்கவாதம் ஏற்பட்டிருந்தாலும், தன் இறுதி நாட்கள் வரை ஒரு மேதையாக இருந்தார் என அறிக்கை முடிவு செய்துள்ளது" என்று கிரிகோரி கூறினார். "இந்த ஆவணத்தைப் படிப்பது நகைச்சுவையாக இருந்தது. ஏனென்றால் ஆய்வாசிரியர்கள் தான் அடைய விரும்பிய முடிவுக்காக விஷயங்களை தேடியதாக தோன்றியது" என்று அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1922 முதல் லெனினுக்கு குறைந்தது நான்கு முறை பக்கவாதம் ஏற்பட்டது. லெனின் மூளையில் சில தனித்தன்மை வாய்ந்த இயல்புகள் இருப்பதாக சோவியத் ஆய்வாளர்கள் உறுதியளித்தனர். அந்த இயல்புகள் "மிகுதியான அறிவுசார் திறன்கள்" கொண்ட ஒருவருக்கு தகுதியானவை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அலோன்சோ வோக்ட் அவருக்குப் பின் வந்தவர்களின் கண்டுபிடிப்புகளை நிராகரித்தார். "மூளையின் அளவு அல்லது வடிவத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. பெரிய மூளை கொண்டவர்கள் சிறந்த கலை அல்லது அறிவியல் படைப்புகளை விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் சிறிய மூளை கொண்டவர்களும் உள்ளனர்” என்று அவர் விளக்கினார். “அறிவு என்றால் என்ன என்பதையே நாம் இக்காலத்தில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் அலோன்சோ. "(ஓவியர் வின்சென்ட்) வான்கா ஒரு கலை மேதையாகக் கருதப்படுகிறார், ஆனால் அவர் பல பிரச்னைகளைக் கொண்டவர். வரலாற்றில் சிறந்த விஞ்ஞானியாகக் கருதப்படும் ஐசக் நியூட்டனுக்கும் இதேதான் நடந்தது. அவருக்கு நண்பர்களே இல்லை. பணம் இருந்தபோதிலும், கிட்டத்தட்ட துன்பத்தில் வாழ்ந்தார்" என்று அலோன்சோ தெரிவித்தார். உருவ வழிபாட்டை ஆதரித்த தலைவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷியன் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸில், லெனின் மூளையின் மாதிரி மெழுகு வடிவில் உள்ளது. 1991-ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு, லெனின் மூளையைப் பாதுகாத்த அல்லது ஆய்வு செய்த சில விஞ்ஞானிகள் அதிகாரபூர்வ பதிப்பைத் தவிர வேறு சில கருத்துகளையும் வழங்கத் தொடங்கினர். "மூளைக்கு என சிறப்பு எதுவும் இல்லை என்று மட்டுமே நாம் இதிலிருந்து ஊகிக்க முடியும்” என்று லெனினின் மூளையை பாதுகாக்கும் மையத்தின் இயக்குநராக இருந்த டாக்டர். ஒலெக் அட்ரியானோவ் 1993-ல் ஒப்புக்கொண்டார். "அவர் ஒரு மேதை என்று நான் நினைக்கவில்லை" என்று ரஷ்ய விஞ்ஞானி பிரிட்டிஷ் பத்திரிகைகளிடம் தெரிவித்தார். சோவியத் ஒன்றியத்தின் நிறுவனர் வாரிசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஸ்டாலின் முயன்ற ஆயுதங்களில் லெனின் மூளை பற்றிய ஆய்வும் ஒன்றாகும் . "லெனின் இறந்தவுடன் தொடங்கிய அதிகாரப் போராட்டத்தில் தனது நிலையை வலுப்படுத்த லெனின் மேதைமையை நிரூபிக்க நினைத்தார்" என்று கிரிகோரி மேலும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்தை பெறுவதற்கான ஸ்டாலினின் உத்தியின் ஒரு பகுதியாக லெனினின் இறவா நிலை இருந்தது. ஆனால், லெனின் மூளையை மட்டும் ஸ்டாலின் அதிகாரத்திற்கான போரில் பயன்படுத்தவில்லை. தனது முன்னோடி மற்றும் அவரது குடும்பத்தினரின் விருப்பங்களைப் புறக்கணித்து, கிரெம்ளின் சுவர்களின் கீழ் கட்டப்பட்ட கல்லறையில் ஒரு துறவியின் உடலை போன்று லெனின் உடலை பாதுகாக்கவும், பகிரங்கமாகக் காட்டவும் முடிவு செய்தார். அந்த இடம் இன்றும் உள்ளது. இருப்பினும், கியூப வரலாற்றாசிரியர் அர்மாண்டோ சாகுவேடா போன்ற வல்லுனர்கள், லெனினே தனது தெய்வீக செயல்முறைக்கு உயிர் கொடுத்தார் என்று நம்புகிறார்கள். "லெனின் சோவியத் சர்வாதிகார அரசை உருவாக்கியவர்" என்று அவர் கூறினார். "தலைவர்கள் சொல்வது ஒன்று, நடைமுறையில் நடப்பது இன்னொன்று. லெனின், பிடல் காஸ்ட்ரோ அல்லது மாவோ சே துங் போன்ற தலைவர்கள் அனைவரும் தங்களைச் சுற்றி ஆளுமை வழிபாட்டை விரும்பவில்லை என்று சொன்னார்கள். ஆனால், அது வெறும் வார்த்தைகள் தான். வாழ்நாள் முழுவதும் அவர்கள் தங்கள் உருவ வழிபாட்டை ஆதரித்தனர். அது அவர்களின் மரணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது," என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cek7z8pkyxvo
-
ஜேர்மனில் 5 வருடங்கள் வசிப்போருக்கு பிரஜாவுரிமை, இரட்டைப் பிரஜாவுரிமைக்கும் அனுமதி!
22 JAN, 2024 | 03:02 PM ஜேர்மனியில் பிரஜாவுரிமையைப் பெறுவதற்கான விதிகளை தளர்த்தும் புதிய சட்டத்திருத்தங்கள் அந்நாட்டுப் பாராளுமன்றத்தினால் கடந்தவாரம் அங்கீகரிக்கப்பட்டன. புதிய சட்டத்திருத்தத்தின்படி, ஜேர்மனியில் சட்டபூர்வமாக 5 வருடங்கள் வசிப்போர் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இதுவரை 8 வருடங்களின் பின்னரே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியுமாக இருந்தது. அதேவேளை, விசேட ஒருங்கிணைப்பு அடைவுமட்டங்களை பூர்த்தி செய்வோர் இதுவரை 6 வருடங்களில் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர். இக்காலவரம்பு தற்போது 3 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை அத்துடன் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்ஸர்லாந்தை தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜேர்மன் பிரஜாவுரிமையை பெறும்போது தமது முந்தைய நாட்டின் பிரஜாவுரிமையை கைவிட வேண்டியிருந்தது. சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது இவ்விதி தளர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் தம்பதிகளில் ஒருவர் சட்டபூர்வமாக 5 வருடங்கள் ஜேர்மனியில் வசித்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஜேர்மன் பிரஜாவுரிமை கிடைக்கும். கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மன் பாராளுமன்றத்தில் இச்சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, 639 எம்.பிகள் ஆதரவாகவும் 234 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 23 பேர் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. ஜேர்மனி சான்ஸ்லர் ஒலாவ் சோல்ஸின் சமூக ஜனநாயகக் கட்சி, சுதந்திர ஜனநாயகக் கட்சி மற்றும் கிறீன் கட்சி ஆகியன இணைந்த ஆளும் கூட்டணி இப்புதிய சட்டமூலத்துக்கு ஆதரவளித்தன. பழைமைவாத கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் கிறிஸ்தவ சமூக ஒன்றியக் கட்சி, ஜேர்மனிக்கான மாற்றுக் கட்சி ஆகியன எதிராக வாக்களித்தன. இச்சட்டமூலம் அமுலுக்கு வருவதற்கு ஜனாதிபதி பிராங் வோல்ட்டர் ஸ்டேய்ன் மேயர் கையெழுத்திட வேண்டும். தொழிலாளர் பற்றாக்குறைக்கு மத்தியில், திறன்கொண்ட தொழிலாளர்களை ஈர்ப்பதற்கு இச்சட்டத்திருத்தங்கள் உதவும் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி பயீசர் தெரிவித்துள்ளார். 'உலகெங்கும் உள்ள தகுதியான மக்களுக்கு அமெரிக்கா, கனடாவைப் போன்று நாம் வாய்ப்பு வழங்க வேண்டும்' என அவர் கூறியுள்ளார். எனினும், இச்சட்டத்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிக் எதிர்ப்பு தெரிவித்துள்ன. இம்மாற்றங்கள் பிரஜாவுரிமையின் பெறுமதியைக் குறைக்க வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. விரைவான நாடு கடத்தல் இதேவேளை, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை விரைவாக நாடுகடத்துவதற்கான சட்டத்திருத்தங்களுக்கும் ஜேர்மனி பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை அங்கீகாரம் அளித்தது ஜேர்மனியில் வசிக்கும் 8.44 கோடி மக்களில் 1.2 கோடிக்கும் (14 சதவீதம்) அதிகமானோருக்கு ஜேர்மன் பிரஜாவுரிமை இல்லை எனவும், அவர்களில் 53 இலட்சம் பேர் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் ஜேர்மனியில் வசிக்கின்றனர் எனவும் ஜேர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/174514
-
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா துப்பாக்கிச் சூட்டில் பலி!
22 JAN, 2024 | 09:12 PM பெலியத்தை பிரதேசத்தில் இன்று (22) காலை ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 6 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழும் தென் மாகாண குற்றப் பிரிவு, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு, தங்காலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆகியோரின் கீழும் இந்த பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் இந்த பொலிஸ் குழுக்கள் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. https://www.virakesari.lk/article/174568
-
இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்கு அழுத்தமளியுங்கள் : புதிய இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை
Published By: VISHNU 22 JAN, 2024 | 07:47 PM ஆர்.ராம் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு அழுத்தமளிக்குமாறு இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், வடக்கு,கிழக்கு மாகணங்களின் சபைகளுக்காகவாவது தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துமாறு கோரியதோடு, அதற்கு இலங்கை அரசாங்கம் நிதியில்லை என்று கூறுமாக இருந்தால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் திங்கட்கிழமை (22) பிற்பகல் 4மணிக்கு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசியக் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும், சிரேஷ்ட தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் மாவை.சோ.சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், வினோநோதராதலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/174564
-
பாடசாலைகளிலேயே மாணவர்களுக்கு தொழிற்கல்வி
Published By: DIGITAL DESK 3 22 JAN, 2024 | 06:41 PM இவ்வருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி உட்பட தகவல் தொழில்நுட்பம் பற்றிய அறிவுடன் தொழில் கல்வியை கற்பிக்கும் வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். உயர்தரக் கல்வியினை நிறைவு செய்யும் மாணவர்களை தொழில் கல்வியை நோக்கி வழிநடத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 299 பாடசாலைகளில் இந்தத் தொழிற்பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இவ்வருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்கள் பெப்ரவரி 9 ஆம் திகதிக்கு முன்னர் இந்தத் திட்டத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலகங்களின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/174537
-
இலங்கையில் 20 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிப்பு : 35 வயதுக்கு மேற்பட்டோரில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் - ரமேஷ் பதிரண
22 JAN, 2024 | 07:44 PM இலங்கையில் 91வீத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். தட்டம்மை நோய் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்கியதையடுத்து, இவ்வாறான தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பதிரண, “நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே இந்த ஆண்டின் முக்கிய எதிர்பார்ப்பாகும். ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு மிகவும் தரமான சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவசியமான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. தொற்றா நோய்கள் தொடர்பில் இலங்கை பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. 20 வீதத்துக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய பிராந்தியத்தில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகளவில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ள நாடாகவும் இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல்களில் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்கள் அடங்குகின்றன. மேலும், வேகமாக முதுமையடையும் மக்கள் தொகை கொண்ட நாடென்ற வகையில், நினைவாற்றல் குறைபாடு, கண் நோய்கள், எலும்பு நோய்கள் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, தொற்றாத நோய்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வேகமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த விசேட அவதானத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையினரின் ஆதரவு கிடைத்துள்ள போதிலும், இது தொடர்பாக பொதுமக்களின் ஆதரவு இப்பொழுதுள்ளதை விடவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது அதிகரித்து வரும் தட்டம்மை நோயைத் தடுக்க பல்வேறு விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம். கடந்த சில வாரங்களில், 91 வீத குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை ஏற்ற முடிந்தது. அத்துடன், தற்போதுள்ள மருந்துப் பற்றாக்குறையை போக்குவதற்கு பெருமளவிலான அத்தியாவசிய மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருந்து தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில், மருத்துவ விநியோகத் துறையையும், கொள்முதல் செயல்முறையையும் வெளிப்படையானதாக மாற்ற ஒன்லைன் முறையைப் பயன்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக ஏற்கனவே மொரட்டுவை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களின் கணினி துறைகளுடன் சுகாதார அமைச்சு கலந்துரையாடி வருகிறது” என்றும் அமைச்சர் ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/174554
-
தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதை தடுக்கக் கோரி பேராயர் மனு : விசாரணை 31இல்!
22 JAN, 2024 | 05:59 PM பதில் பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதைத் தடுக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்தார். இந்நிலையில் இந்த மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. https://www.virakesari.lk/article/174543
-
சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 47 பேர்- மீட்புப்பணிகள் தீவிரம்
சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஜாவோடோங் நகரில் உள்ள லியாங்சுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான வீடுகள் மண்ணில் புதைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. புதைந்த வீடுகளில் சிக்கியிருந்த 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், 18 குடும்பங்களைச் சேர்ந்த 47க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் 200 மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. நிலச்சரிவுக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. குறித்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/288969
-
ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?
அயோத்தி ராமர் கோவில்: நீதித்துறைக்கு நன்றி தெரிவித்த மோதி பட மூலாதாரம்,ANI 22 ஜனவரி 2024, 03:34 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று (ஜன. 22) கோலாகலமாக நடைபெற்றது. இன்று மதியம் 12.30 மணி அளவில் இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ‘ராம் லல்லா’ எனப்படும் பாலராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னர் அச்சிலையின் கண்களை மூடியிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மதியமே, 1.28 மணியளவில், 51 அங்குல ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டது. முன்னதாக, அயோத்தி ராமர் கோவிலுக்கு பூஜை பொருட்கள், பட்டு வஸ்திரங்களுடன் வந்த பிரதமர் மோதி, அங்கு சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார். இந்த வழிபாட்டில் மோதிக்கு அருகே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். மேலும், இவர்கள் தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 15 பேரும் கலந்துகொண்டனர். அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா வீடியோ அயோத்தி ராமர் கோவிலும் இந்திய அரசியலும் - எனும் தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் மணி மற்றும் எழுத்தாளர் ராம்கி ஆகியோர், பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுடன் கலந்துரையாடியதை இங்கே காணுங்கள். பட மூலாதாரம்,ANI நீதித்துறைக்கு நன்றி தெரிவித்த மோதி ராமர் சிலை பிரதிஷ்டைக்குப் பிறகு கோவில் வளாகத்தில் குழுமியிருந்தவர்களை நோக்கிப் பேசிய பிரதமர் மோதி, “பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு, துறவு, தவம், தியாகம் முடிந்து ராமர் இங்கு வந்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மக்கள் இந்நாளை நினைவில் வைத்துக்கொள்வார்கள்” என தெரிவித்தார். அயோத்தி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன என்று குறிப்பிடாமல், நீதித்துறைக்கு மோதி நன்றி தெரிவித்தார். இந்திய நீதித்துறை நீதியின் மாண்பை காத்ததாக அவர் கூறினார். பாலராமரின் கண்கள் திறந்து வைக்கப்பட்ட பின்னர் அயோத்தி ராமர் கோவிலை சுற்றி ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டு, அயோத்திக்கு வரவழைக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்கள் இந்நிகழ்வை முன்னிட்டு இசைக்கருவிகளை வாசித்தனர். ஜனவரி 23 ஆம் தேதிக்கு பின், அயோத்தியில் உள்ள ராமரை அனைவரும் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். கோவிலின் சிறப்பம்சங்கள் நிகழ்வுக்கு முன்னதாக, பிரபலர் இசைக்கலைஞர்கள் சோனு நிகம், சங்கர் மகாதேவன், அனுராதா பட்வால் உள்ளிட்டோர் ராம பஜனை பாடினர். பின்னர், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் அயோத்தி ராமர் கோவில் குறித்து பல தகவக்களை வழங்கினார். அதன்படி, கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்லைக் கொண்டு ராமர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையை வடிவமைத்தவர் மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ். இந்த கோவிலின் அடித்தளம் 14 மீட்டர் ஆழம் கொண்டது. ஆயிரம் ஆண்டுகளானாலும் கோவில் வலுவாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கோவிலில் சுமார் 25,000 பேர் தங்கள் காலணிகள், மொபைல் போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கென மையம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. கோவில் கட்டமைப்புக்காக பல்வேறு நிபுணர்களும் உதவியுள்ளனர். பட மூலாதாரம்,ANI இந்நிகழ்வுக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பல்வேறு துறை பிரபலங்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்துள்ளனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் மத சடங்குகள், யாகங்கள், ஹோமங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அயோத்தி 'இந்துக்களின் வாடிகன்' ஆகிறதா? வளர்ச்சிக்கு நடுவே இழையோடும் அதிருப்தி21 ஜனவரி 2024 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அயோத்தியில் ரஜினிகாந்த் யாரெல்லாம் கலந்து கொண்டனர்? அயோத்தி ராமர் கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் கலந்துகொண்டார். ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு அவர் அயோத்தி சென்றடைந்தார். அதேபோன்று, நடிகர் தனுஷும் இந்நிகழ்வில் பங்கேற்றார். மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கங்கனா ரனாவத், விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தினர், கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி. தேவகவுடாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். மத்திய அமைச்சர்கள் பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்து கோவில்கள், பொது இடங்களில் நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?20 ஜனவரி 2024 ராமர் கோவில் குடமுழுக்கு நெருங்கும் நேரம் அயோத்தி இஸ்லாமியர்களின் மனநிலை என்ன?19 ஜனவரி 2024 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கங்கனா ரனவத் பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த விழாவை முன்னிட்டு அயோத்தியில் தீவிர பாதுகாப்புப் பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 10,000 சிசிடிவி கேமராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் ஆகியவை கண்காணிப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி முக்கியமான இடங்களில் முள்கம்பி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் சிலையை மோதி பிரதிஷ்டை செய்வதை எதிர்ப்பது ஏன்? - பிபிசிக்கு சங்கராச்சாரியார் பேட்டி17 ஜனவரி 2024 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்துள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். கூடார நகரம் அதிகளவிலான துறவிகள் மற்றும் விருந்தினர்கள் அயோத்திக்கு வந்தடைந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தீர்த்த க்ஷேத்ர புரம் என்ற பெயரில் தற்காலிக நகரம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை. இந்த தீர்த்த க்ஷேத்ர புரத்திற்கு விஷ்வ இந்து பரிஷத்தின் இணை செயலாளர் கோடீஸ்வர ஷர்மா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவர் கூறுகையில், “அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். இன்னமும் கோவில் கட்டுமானம் முழுமையடையாததால், இங்கு இருக்கும் இடத்திற்கு ஏற்ப 8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர். அதில் 4000 துறவிகளும் அடங்குவர். கோவில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களோடு சேர்த்து, நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். துறவிகள் மற்றும் அவர்களோடு வருபவர்களுக்கென்று கூடார நகரம் என்ற பெயரில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார். அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியும் பணிகள் இன்னும் தொடங்காதது ஏன்?14 ஜனவரி 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனவரி 23 ஆம் தேதிக்குப் பிறகு அதிகளவில் மக்கள் வரத்தொடங்குவார்கள் என்பதால், அயோத்தியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளை 120 படுகைகள் கொண்ட ஒரு மருத்துவமனையாகவும், 350 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல, அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இருந்து அயோத்திக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்க உள்ளதாகவும் உத்தரப் பிரதேச மாநில சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் முகேஷ் மெஷ்ராம் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். அயோத்தி பகுதியில் மக்களுக்குத் தேவையான சுகாதார கட்டமைப்பையும் வலுப்படுத்தவுள்ளதாக மத்திய அரசு கூறியிருந்தது. தமிழ்நாட்டில் என்ன நிலை? தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்நிகழ்வை நேரலை செய்ய தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் குற்றச்சாட்டு எழுப்பினர். இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை இன்று காலை நடைபெற்றது. அப்போது, இந்நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பவோ, பூஜைகள், அர்ச்சனைகள், பஜனைகள் மேற்கொள்ளவோ, அன்னதானம் வழங்கவோ எவ்வித கட்டுப்பாடுகளும் தடையும் இல்லை எனவும் இந்த மனுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. சம்பந்தப்பட்ட இடங்களில் வேறு பல சமூகத்தினர் வசிப்பதாகக் கூறி அனுமதி மறுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது. அதேபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ராமர் கோவில் திறப்பு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய தடை விதித்த வாய்மொழி உத்தரவை யாரும் கடைபிடிக்க வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES காஞ்சிபுரத்தில் மீண்டும் எல்.இ.டி திரை உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இந்நிகழ்வை நேரலையாக ஒளிபரப்புவதற்கு எல்.இ.டி திரைகள் மீண்டும் பொருத்தப்பட்டு நேரலையாக ராமர் கோவில் நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். முன்னதாக, காமாட்சி அம்மன் கோவிலில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட எல்.இ.டி திரையை "அனுமதி பெறாமல் வைக்கப்பட்டது" என கூறி அதை காவல்துறையினர் அகற்றியிருந்தனர். இதனை நிர்மலா சீதாராமன் கண்டித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cyejnlynex4o
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் : பங்களாதேஷை இலகுவாக வெற்றிகொண்டது இந்தியா Published By: VISHNU 21 JAN, 2024 | 10:25 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக ப்ளூம்ஃபொன்டெய்ன் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியா 81 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்பத்தில் 2 விக்கெட்கள் குறுகிய நேரத்தில் சரிய இந்தியா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (31 - 2 விக்.) ஆனால், ஆரம்ப வீரர் ஆதர்ஷ் சிங் 76 ஓட்டங்களையும் அணித் தலைவர் உதய் சஹரான் 64 ஓட்டங்களையும் பெற்று அணியை சிறந்த நிலையில் இட்டனர். அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலப்படுத்தினர். மத்திய வரிசையில் சச்சின் தாஸ் (26 ஆ.இ.), ப்ரியன்ஷு மோலியா (23), அரவெல்லி அபினாஷ் (23) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் மாறுப் ம்ரிதா 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மொஹமத் ஷிஹாப் ஜமெஸ் 54 ஓட்டங்களையும் அரிஃபுல் இஸ்லாம் 41 ஓட்டங்களையும் பெற்றதுடன் 5ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் சவ்மி பாண்டே 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முஷீர் கான் 35 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஆதர்ஷ் சிங் ஞாயிற்றுக்கிழமை (21) போட்டிகள் இலங்கை எதிர் ஸிம்பாப்வே (ஏ குழு - கிம்பர்லி) நேபாளம் எதிர் நியூஸிலாந்து (டி குழு - ஈஸ்ட் லண்டன்) https://www.virakesari.lk/article/174430
-
சிசிடிவி அபராத முறைக்கு பேருந்து சங்கம் எதிர்ப்பு!
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் நோக்கில் இலங்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள CCTV நிகழ்ச்சி இன்று (ஜனவரி 22) முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, கொழும்பில் உள்ள 33 முக்கிய இடங்களில் பொலிஸாரின் சிசிடிவி கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அடையாளம் காணப்படவுள்ளனர். முதல் நடவடிக்கையாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களின் அபராதத் தாள்கள் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பப்படும். இதேவேளை, கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் பொலிஸாரின் சிசிடிவி திட்டத்திற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பஸ்களை ஒழுங்குபடுத்த வேண்டுமாயின் பஸ் முன்னுரிமைப் பாதை சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார். முச்சக்கர வண்டிகள் உட்பட ஏனைய வாகனங்கள் பஸ் பாதையில் பயணிப்பதால் பஸ்களை இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/288959
-
VAT இல்லா கடைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் பந்துல
பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) பற்றிய தவறான கருத்துக்கள் வரிசைப்படுத்தப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் VAT இல்லா கடைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்து நுகர்வோர் பொருட்களும் VAT வரிக்கு தகுதியானவை என பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுவதாகவும், அதுவே விலை உயர்வுக்கு காரணம் என்றும் அமைச்சர் கூறினார். VAT இல்லா கடைகளை நிறுவுவதற்கு பொருத்தமான இடங்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு (RDA) தெரிவு செய்வதற்கு இது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில், போட்டி மற்றும் நியாயமான முறையில் ஈடுபடத் தயாராக உள்ளவர்களுக்காக VAT இல்லா பொருட்களான காய்கறிகள், அரிசி, குழந்தை பால் மாவு போன்றவற்றிற்காக நாடு முழுவதிலும் உள்ள கடைகளின் வலையமைப்பை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/288954
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
பாகிஸ்தானின் வெற்றியை ஷாஸெய்ப் கான், உபைத் ஷா இலகுவாக்கினர் Published By: VISHNU 21 JAN, 2024 | 10:16 AM (நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஈஸ்ட் லண்டன் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20) நடைபெற்ற டி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் ஷாஸெய்ப் கான் குவித்த அபார சதம், உபைத் ஷா பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன பாகிஸ்தானை 181 ஓட்டங்களால் அமோக வெற்றி அடையச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 284 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் ஷாஸெய்ப் கான் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்தார். இதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் பாகிஸ்தான் சார்பாக ஆரம்ப வீரராக சதம் குவித்த நான்காவது வீரரானார். இதற்கு முன்னர் பாபர் அஸாம் (2002இல் 2 தடவைகள்), இமாம் உல் ஹக் (2004), ஹசீபுல்லா கான் (2022இல் 2 தடவைகள்) ஆகியோர் ஆரம்ப வீரர்களாக பாகிஸ்தான் சார்பாக சதம் குவித்திருந்தனர். இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 13ஆவது ஓவரில் பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கை 48 ஓட்டங்களாக இருந்தபோது 2ஆவது விக்கெட் சரிந்தது. ஆனால், ஆரம்ப வீரர் ஷாஸெய்ப் கான், அணித் தலைவர் சாத் பெய்க் ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். சாத் பெய்க் 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 55 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு விக்கெட் சரிந்தது. (151 - 4 விக்.) இந்நிலையில் ஷாசெய்ப் கானுடன் ஜோடி சேர்ந்த ரியாஸ் உல்லா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அவர் 46 ஓட்டங்களைப் பெற்றார். (235 - 6 விக்.) மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷாசெய்ப் கான் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைக் குவித்தார். பின்வரிசையில் உபைத் கான் 22 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் காலித் அஹ்மத 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பஷிர் அஹ்மத் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 26.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. நுமான் ஷா (26), சொஹெய்ல் கான் ஸுமாட்டி (20), ரஹிமுல்லா ஸுமாட்டி (20), ஹசன் ஈசாக்கில் (19) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் உபைத் கான் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் ஸீஷான் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஷாஸெய்ப் கான் https://www.virakesari.lk/article/174428
-
க.பொ.த சாதாரண தர பரீட்சை - 2023 தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு 22 JAN, 2024 | 05:08 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுதராதர சாதாரண பரீட்சை - 2023க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சாத்திகள் தத்தமது பாடசாலை ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பிக்க முடியும். இவ்வாண்டிலிருந்து பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் சகல தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை அற்ற 15 வயதுக்குட்பட்ட தனிப்பட்ட பரீட்சாத்திகள் சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற எதிர்பார்த்தால் அவர்கள் விண்ணப்பிப்பதற்கு பரீட்சை திணைக்களத்துக்கு வருகை தர வேண்டியது கட்டாயமாகும். இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்துக்குள் பிரவேசித்து உரிய வழிகாட்டல்களை அறிந்து கொள்ள முடியும். பெப்ரவரி 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பத்துக்காக காலம் நிறைவடையும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/174527
-
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சம்பாதித்த பெண் கைது
22 JAN, 2024 | 02:36 PM அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சம்பாதித்தமை தொடர்பில் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்ட நபர் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவராவார் என பொலிஸார் தெரிவித்தனர் . இவரிடமிருந்து சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/174512
-
அமெரிக்க தூதர் ஜூலி சாங் சிவனொளிபாதமலை சென்று வழிபட்டார் !
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் சிவனொளிபாதமலை சென்று வழிபட்டுள்ளார். இப்பயணத்தின் சிறந்த பகுதி இலங்கையர்களுடனான அன்பான சந்திப்புகள் என குறிப்பிட்டுள்ள ஜூலி சாங் தொலைதூரத்தில் இருந்து பயணிக்கும் இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார். தேநீர் அருந்தும் போது இடம்பெற்ற உரையாடல்களும், தமக்கு அவர்கள் காட்டிய கரிசனைகளும் இலங்கையர்களின் மீதான தனது மதிப்பை அதிகரித்துள்ளதாக அவர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/288921
-
பாலத்தீனம்: அமெரிக்காவுடன் முரண்படும் இஸ்ரேல் - பைடன் யோசனையை நெதன்யாகு நிராகரித்தது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் லோவென் ஜெருசலேமிலிருந்து மற்றும் சான் செடோன் பதவி, பிபிசி 21 ஜனவரி 2024 பாலத்தீன தனி நாட்டை உருவாக்கும் யோசனையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் நிராகரித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசிய சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனி பாலத்தீன நாட்டை உருவாக்கும் யோசனையை பெஞ்சமின் ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுட்டிக்காட்டியிருந்தார். நெதன்யாகுவின் இக்கருத்துகள் அமெரிக்காவுடனான பிளவை ஆழப்படுத்துவதாகத் தோன்றுகிறது. பாலத்தீன பிரச்னையில் இரு நாடுகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இஸ்ரேல் - பாலத்தீன நீண்ட கால பிரச்னைக்கு ”இரு நாடுகள் தீர்வு” முன்வைக்கப்படுகிறது. இதில், பாலத்தீன தனிநாடு வலியுறுத்தப்படுகிறது. பாலத்தீன தனி நாட்டை அமைப்பது நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாதது என அமெரிக்கா நம்புகிறது. ஆனால், இந்த விவகாரத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் “வெவ்வேறு விதங்களில் பார்ப்பதாக” கடந்த வாரம் வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டது. ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு இரு தலைவர்களும் முதல் முறையாக தொலைபேசி வாயிலாக பேசினர். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் “இரு நாடுகள்” தீர்வு எட்டப்படுவதற்கு இன்னும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்தார். "இரு நாடுகள் தீர்வில் பல வகைகள் உள்ளன. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பல நாடுகளுக்கு சொந்த ராணுவம் இல்லை," என்று அவர் கூறினார். மீண்டும் உறுதிப்படுத்திய நெதன்யாகு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆனால், தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியில், ‘இரு நாடுகள்’ தீர்வு மீது தனக்கிருக்கும் எதிர்ப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்தி வந்துள்ள நெதன்யாகு, மீண்டும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ஹமாஸ் அழிக்கப்பட்ட பின்னர், காஸா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது பாலத்தீன இறையாண்மை கோரிக்கைக்கு முரணானது. காஸா மீதான பாதுகாப்பு கட்டுப்பாட்டை இஸ்ரேல் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான உரையாடலில், பிரதமர் நெதன்யாகு தனது கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரைப் பகுதியையும் உள்ளடக்கிய பகுதியான ஜோர்டானின் மேற்கே இஸ்ரேல் "பாதுகாப்புக் கட்டுப்பாட்டை" வைத்திருக்க வேண்டும் என்று சனிக்கிழமையன்று பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ் நெதன்யாகுவின் அறிக்கை "ஏமாற்றம் அளிப்பதாக" இன்று (ஜன. 21) கூறினார். ஆனாலும் அவருடைய கருத்து ஆச்சரியமளிக்கவில்லை என கிரான்ட் ஷாப்ஸ் தெரிவித்தார். நெதன்யாகுவின் கருத்துகள், காஸா நெருக்கடியைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ள ராஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைகளையும் அமைதி செயல்முறைகளுக்கான நம்பிக்கையையும் குறைக்க வழிவகுக்கும். காஸாவிற்குள் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இன்னும் 130 பணயக் கைதிகளின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், இஸ்ரேலில் சொந்த மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்திருக்கும் மத்தியிலும் நெதன்யாகு போரை தொடர்வதை ஆதரிக்கிறார். இதன் மூலம் மற்ற நாடுகளிடமிருந்து இஸ்ரேல் தனிமைப்பட்டு வருவதையும் நெதன்யாகு அதிகரித்து வருகிறார். அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுள் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். மேலும் 240 பேரை பணயக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றது. இன்னும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமையன்று டெல் அவிவில் கூடி, பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக தற்காலிக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். இஸ்ரேல் மக்களின் கோரிக்கை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பணயக்கைதிகளை விடுவிக்க தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு இஸ்ரேல் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அக்டோபர் 7-ம் தேதி பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட ஒருவரின் உறவினரான கில் டிக்மேன் கூறுகையில், "அன்புள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நீங்கள் அவர்களை (பணயக்கைதிகளை) மீண்டும் இங்கு கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்தார். "நீங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இஸ்ரேல் குடிமக்களுக்கு வெற்றியை கொண்டு வர முடியும் என்று எங்களுக்குத் தெரியும். பணயக்கைதிகளை இஸ்ரேலுக்கு அழைத்து வாருங்கள்" என்றார். கான் யூனிஸில் பதுங்கி இருப்பதாக நம்பப்படும் ஹமாஸின் உயர்மட்ட அதிகாரிகளைத் தேடுவதாகக் கூறி இஸ்ரேலியப் படைகள் தெற்கு காஸாவுக்குள் நுழைந்துள்ளன. கான் யூனிஸில் பணயக்கைதிகளை வைத்திருக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு சுரங்கப்பாதையை தாங்கள் சோதனை செய்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன. இருப்பினும் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்ட போது அவர்கள் அங்கு இல்லை. இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் கவனம் இப்போது தெற்கு காஸாவை நோக்கி உள்ளது. இஸ்ரேல் தனது படையினரையும் பீரங்கிகளையும் தெற்கே முன்னேற்ற முயன்றபோது ஹமாஸ் குழுவினர் முன்னேறியதால், வடக்கு நகரமான ஜபாலியாவைச் சுற்றி மீண்டும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் காஸா மீது தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்களில், ஹமாஸை விட மேம்பட்ட இஸ்ரேல் ராணுவம் இன்னும் அப்பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க எதிர்ப்பை எதிர்கொள்கிறது. அக்டோபர் 7 முதல் அப்பிரதேசத்தில் 25,105 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 60,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் காஸாவை நிர்வகிக்கும் ஹமாஸின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது. https://www.bbc.com/tamil/articles/c90458vykq7o
-
பொதுமக்களுக்கு எச்சரிக்கை : பொலிஸார் போன்று தொலைப்பேசியூடாக உரையாடி பண மோசடியில் ஈடுபடும் கும்பல்!
Published By: NANTHINI 22 JAN, 2024 | 11:37 AM நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பல வீடுகளிலுள்ள தொலைப்பேசிகளுக்கு அழைப்பெடுத்து, தம்மை பொலிஸார் எனக் கூறி, ஏமாற்றி பணம் பறிக்க முற்படும் கும்பலொன்று தலைமறைவில் இயங்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, முல்லேரியா, நவகமுவ பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு இதுபோன்ற அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் எனக் கூறி பணம் பறிக்க அழைப்பு விடுக்கப்படுவது தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/174499
-
ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அயோத்தியில் கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜனவரி 22ஆம் தேதி நடக்கவுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அயோத்தியில் கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று நடக்கும் நிலையில் அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துறவிகள் மற்றும் விருந்தினர்கள் அயோத்திக்கு வந்தடைந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தீர்த்த க்ஷேத்ர புரம் என்ற பெயரில் தற்காலிக நகரம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை. இந்த தீர்த்த க்ஷேத்ர புரத்திற்கு விஷ்வ இந்து பரிஷத்தின் இணை செயலாளர் கோடீஸ்வர ஷர்மா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முப்பது வருடங்களுக்கும் மேலாக அயோத்தியுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் ராமர் கோவில் பணிகளை மிக நெருக்கமாக கவனித்து வருவதாகவும், தற்போது ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் ராமர் கோவில் கட்டுமானங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள், ராமர் சிலை தேர்வு குறித்து பிபிசியிடம் பேசியுள்ளார் கோடீஸ்வர ஷர்மா. பட மூலாதாரம்,SHRI RAM JANMBHOOMI TEERTH KSHETRA படக்குறிப்பு, சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர். கேள்வி : அயோத்தி ராமர் கோவிலின் கட்டிடக்கலை வடிவமைப்பின் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்க முடியுமா? கோடீஸ்வர ஷர்மா : ராமர் கோவில் கட்டுமான பணிகள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மத்திய அரசால் அமைக்கப்பட்ட அறக்கட்டளையால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளையே கட்டுமான பணிகளுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் பொறுப்பு. கோவில் வடஇந்திய பாணியில்(style) கட்டப்பட்டுள்ளது. சோம்நாத் மற்றும் துவாரகா ஆகிய கோவில்களும் இதே பாணியில்தான் கட்டப்பட்டுள்ளன. சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர். 1991 ஆம் ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வழிகாட்டுதலின் பேரில், இந்த கோவிலின் மாதிரி உருவாக்கப்பட்டது. அதன் படியே சிற்பங்கள் செதுக்கப்பட்டன. அதற்கு பிறகு, அறக்கட்டளை பொறுப்பேற்று, முதலில் உருவாக்கப்பட மாதிரியில் சிறிய மாற்றங்கள் செய்து கோவிலை கட்டியுள்ளது. மேலும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பிறந்த இடத்திற்கு அருகில் சராயு நதி ஓடியது. அந்த நதி இன்றும் பூமிக்கு அடியில் பாய்ந்து கொண்டிருக்கிறது. நிலநடுக்கங்களை தாங்கும் வகையிலும், 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் அளவிலும் இந்த கோவிலின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, 8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர். கும்பாபிஷேக நிகழ்வில் எத்தனை மக்கள் பங்கேற்பார்கள்? அதற்கான ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது? கோடீஸ்வர ஷர்மா : அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். இன்னமும் கோவில் கட்டுமானம் முழுமையடையாததால், இங்கு இருக்கும் இடத்திற்கு ஏற்ப 8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர். அதில் 4000 துறவிகளும் அடங்குவர். கோவில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களோடு சேர்த்து, நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். துறவிகள் மற்றும் அவர்களோடு வருபவர்களுக்கென்று கூடார நகரம் என்ற பெயரில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரபலங்கள் தங்குவதற்கு அயோத்தி மற்றும் ஃபைசாபாத் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், ஆசிரமங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு 30 - 35 உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள கோவிலில் 19ஆம் தேதி மாலையோடு தரிசனம் நிறுத்தப்பட்டு சிலைகளை அங்கிருந்து புதிய கோவிலுக்கு மாற்றுவதற்கான சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் 20, 21, 22 ஆகிய தேதிகள் தரிசனம் கிடையாது. 22ஆம் தேதி சிலை பிரதிஷ்டை செய்த பிறகு, விருந்தினர்களுக்கு மட்டும் தரிசனம் அனுமதிக்கப்படும். 23ஆம் தேதி காலை முதல் பொது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பட மூலாதாரம்,CHAMPAT RAI படக்குறிப்பு, 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடம் 72 ஏக்கர் இருந்தபோதிலும், கோவில் 2.7 ஏக்கரில் ஒரு மூலையில் கட்டப்பட்டுள்ளது ஏன்? கோடீஸ்வர ஷர்மா : ஒட்டுமொத்த காலியிடத்தில் கட்டுமான பணி நடக்கவில்லை. இந்த 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. அங்கு கோவில் கட்டப்படுகிறது. அதோடு சேர்த்து பிற கோவில்கள் மற்றும் உபகோவில்களும் இங்கு கட்டப்படும். முதலில் கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. மீதி இருக்கும் இடத்தில் யாத்திரைக்கான அமைப்புகள், அன்னதான மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை அறக்கட்டளையின் மூலம் கட்டப்படும். சிலை பிரதிஷ்டைக்கான தினமாக ஜனவரி 22 தேர்வு செய்யப்பட்டது ஏன்? கோடீஸ்வர ஷர்மா : ஜோதிடம் மற்றும் ஆகம சாஸ்திரங்களின் படி சிறந்த முகூர்த்தம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 22ஆம் தேதி 12.22 முதல் 12. 40 வரை நல்ல நேரம் என்பதை நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது. பால ராமரின் சிலையை நிறுவது ஏன்? கோடீஸ்வர ஷர்மா : முற்காலத்தில் இருந்தே பால ராமரின் சிலை உள்ளது. அயோத்தி ராமர் பிறந்த பகுதியாக கருதப்படுவதால், அங்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது. அந்த சிலையின் தோராயமான உயரம் நான்கரை அடி இருக்கும். முன்பு வழிபாடு செய்யப்பட்டு வந்த ராமர் மற்றும் அன்னதம்முவின் சிலைகளும் இங்கு உள்ளன. முதல்தளத்தில் ராம்தர்பார் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாம் வழிபடும் படங்களில் இருப்பது போன்று ராமர், சீதா, லக்ஷ்மணன், ஹனுமான், பரதன் மற்றும் சத்ருகன் ஆகியோரை வழிபடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரிய திலகத்தை கருத்தில்கொண்டு, ராம நவமி நாளில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் படும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் சிமெண்ட் மற்றும் இரும்பு பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்டுள்ளதாக அறக்கட்டளை சொல்கிறதே, அதற்கான காரணங்கள் என்ன? கோடீஸ்வர ஷர்மா : அனைத்து புராதன கோவில்களும் கற்களால் தான் கட்டப்பட்டுள்ளன. 1,000, 1,200, 1,500 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில்கள் கூட இன்றும் உறுதியாக நின்று கொண்டிருக்கின்றன. ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் மற்றும் ராமப்பா ஆகிய கோவில்களும் கற்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளன. கற்களின் ஆயுள் நீடித்து கொண்டே இருக்கும். இரும்பு துருப்பிடித்து கெட்டு போய்விடும். இதனால், கோவில் கட்டுமானத்தில் சிமென்ட், இரும்பு பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கேற்றவாறு கட்டப்பட்டுள்ளது. சோம்நாத், துவாரகா மற்றும் ராமேஸ்வரம் கோவில்களும் கூட கல்லால் ஆனவை. கட்டுமானம் முடிக்கப்படுவதற்கு முன்பே கோவில் திறக்கப்படுவதாக விமர்சனம் எழுகிறதே, விஎச்பியின் சார்பில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? கோடீஸ்வர ஷர்மா : 1951ஆம் ஆண்டு கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே சோம்நாத் கோவிலை ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்தார். நமது நாட்டில் இவை அனைத்தும் வாஸ்து மற்றும் கோயில் சாஸ்திரங்களின்படியே நடக்கிறது. எதுவும் அறிவியலற்ற முறையில் செய்யப்படுவதில்லை. அனைத்துமே முறைப்படி மட்டுமே செய்யப்படுகிறது. இந்த விமர்சனங்களுக்கு கோவில் தொடர்பானவர்கள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cv27rddn21do
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
அஹ்மத் பந்துவீச்சிலும் மெக்கின்னி துடுப்பாட்டத்திலும் அபாரம்; ஸ்கொட்லாந்தை கவிழ்த்தது இங்கிலாந்து Published By: VISHNU 21 JAN, 2024 | 10:08 AM (நெவில் அன்தனி) ஸ்கொட்லாந்துக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண பி குழு போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. ஸ்கொட்லாந்தை 174 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இங்கிலாந்து 23.4 ஓவர்கள் மீதம் இருக்க 3 விக்டெக்களை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பர்ஹான் அஹ்மதின் துல்லியமான பந்துவீச்சு, அணித் தலைவர் பென் மெக்கின்னியின் அபார துடுப்பாட்டம் என்பன இங்கிலாந்தின் வெற்றியை சுலபமாக்கின. ஜேட்ன் டென்லி, பென் மெக்கின்னி ஆகிய இருவரும் 94 பந்துகளில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். பென் மெக்கின்னி 68 பந்துகளில் 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 88 ஓட்டங்களையும் ஜேட்ன் டென்லி 40 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட நோவா தெய்ன் 22 ஓட்டங்களையும் லூக் பென்கின்ஸ்டீன் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் ஹம்சா ஷெய்க் ஆட்டம் இழக்காமல் 6 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இப்ராஹிம் பைஸால் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 174 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜெமி டன்க் (40), அணித் தலைவர் ஓவென் கல்ட் (48) ஆகிய இருவரே திறமையை வெளிப்படுத்தினர். அடுத்த அதிகப்பட்ச எண்ணிக்கையாக 26 உதிரிகள் கிடைத்தது. பந்துவீச்சில் பர்ஹான் அஹ்மத் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் லூக் பென்கென்ஸ்டீன் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பென் மெக்கின்னி https://www.virakesari.lk/article/174427
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது எறிகணை தாக்குதல் - 27 பேர் பலி Published By: RAJEEBAN 22 JAN, 2024 | 07:54 AM ரஸ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மிகவும் மும்முரமான சந்தையில் பயங்கரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பிராந்தியத்தின் ரஸ்ய சார்பு தலைவர் டெனிஸ் புஸ்சிலின் தெரிவித்துள்ளார். அவர் உக்ரைனே இந்த தாக்குதலை மேற்கொண்டது என குற்றம்சாட்டியுள்ளார். எனினும் அந்த பகுதியில் செயற்படும் உக்ரைன் இராணுவத்தினர் இதனை நிராகரித்துள்ளனர். அழிக்கப்பட்ட கடைகளையும் அவற்றின் முன்னால் சடலங்களையும் காண்பிக்கும் படங்களை ரொய்ட்டர் வெளியிட்டுள்ளது. எறிகணைவருவதை சத்தத்தின் மூலம் அறிந்துகொண்ட நான் கடைக்குள் பதுங்கிக்கொண்டேன் என உயிர்பிழைத்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். புகைமண்டலத்தையும் மக்கள் அலறுவதையும் பெண் ஒருவர் அழுவதையும் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/174486
-
இரான் நடத்திய தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கு சந்திக்கப் போகும் ஆபத்துகள்
பட மூலாதாரம்,IRANIAN ARMY/WANA/REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், லீஸ் டூசெட் பதவி, சர்வதேச தலைமை செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது நாம் இருக்கும் காலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் காலம். கடந்த வாரம், இதுவரை நடந்திராத வகையில், இரான் தனது அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லையில் உள்ள சில பகுதிகளில் திடீரென ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு, பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. அப்போது, அது ஏற்கெனவே பதற்றமாக உள்ள எல்லை வழியாக இரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவம், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் ஏற்கெனவே பதற்றத்தால் சூழப்பட்டுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் பிரச்னையை அதிகரித்தது. இதில், இரானின் நோக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. அது, இதன் மூலம் நாட்டிற்குள் உள்ள தனது மக்களுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதுதான். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் சர்வதேச மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களின் பேராசிரியரான வாலி நாஸ்ர் பேசுகையில், "இரான் தனது ராணுவத்தில் ஏவுகணைகள் இருப்பதை மட்டுமல்ல, அவற்றைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதையும் இந்தத் தாக்குதல்கள் மூலம் காட்டியுள்ளது," என்றார். "காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், இரானின் இந்தச் செயல்பாடு, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஒரு செய்தியாக இருக்கலாம்." மற்ற ஆய்வாளர்களைப் போலவே, வாலி நாஸ்ரும், "இந்த நேரத்தில் இரான் மேலும் பதற்றத்தை அதிகரிக்க விரும்பாது,” என நம்புகிறார். பதற்றம் பரவுவதற்கான வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காஸா மீது பதில் தாக்குதல்களை நடத்தியது. இந்த மோதல், மூன்று மாதங்கள் ஆகியும் நிற்கவில்லை. இதற்கிடையில், இந்தப் பதற்றம் இஸ்ரேல் மற்றும் காஸாவை தாண்டி அப்பகுதி முழுவதும் பரவக்கூடும் என்ற கவலைகள் எழுப்பப்பட்டன. இதற்கிடையில், லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடந்தன. ஏமனில் இருந்து ஹூத்தி ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்கத் தொடங்கினர். ஆனால் இரானோ, அதன் முக்கிய நட்பு சக்தியான ஹிஸ்புல்லாவோ, இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்காவோ இந்த விஷயத்தை அதிகரிக்க விரும்பவில்லை. மத்திய கிழக்கில் உள்ள இரான், அதன் நட்பு சக்திகளைக் கொண்டு, ஒரு பிணாமி யுத்தமாக இந்த மோதலை நடத்தி வருகிறது. மத்திய கிழக்கில், இரானின் நிலைப்பாடு மி முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அந்தப் பிராந்தியத்தில், பல்வேறு நாடுகளில் உள்ள ஆயுதக் குழுக்கள் இரானின் ஆதரவுடன் செயல்படுகின்றன. காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹூத்தி குழுக்கள், இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் ஆகியவை அனைத்தும் இரானின் ஆதரவுடன் இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்களில் பெரும்பாலானனவை மேற்கத்திய நாடுகளால் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் ராணுவ பலமே இரான் வழங்கும் ஆயுதங்களும், பயிற்சிகளும்தான். இருந்தபோதிலும், இந்த ஒவ்வொரு குழுக்களுக்கும் தங்களுக்கென தனியான குறிக்கோள்களும், நோக்கமும் உள்ளன. சமீப காலமாக, இந்தக் குழுக்குள் அனைத்தும் தீவிரமாகச் செயல்படுகின்றன. இவை சில நேரங்களில், அந்தப் பிராந்தியத்தில் உள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது. அதனால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பழிவாங்கும் நடவடிக்கையை அவர்கள் எதிர்கொள்ளாமல் இருக்க, இந்த அச்சுறுத்தல்களைக் குறைக்கவும் அவர்கள் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இரான்-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர் பாகிஸ்தானின் எல்லையை முதலில் தாக்கிய பின், அண்டை நாடுகளான இரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் தொடங்கியது. இதில், இரான், பாகிஸ்தான் மீது மட்டும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தவில்லை. அது தனது நட்பு நாடுகளான இராக் மற்றும் சிரியா மீதும் தாக்குதல் நடத்தியது. இரான் அதைச் சுற்றியுள்ள நாடுகள்தான் எதிர்ப்பில் இருந்து காக்கும் நாடுகள் என்பதைப் புரிந்திருக்க வேண்டும். இரானின் இந்த அதிநவீன, அதி தீவிர படை, இராக்கின் வடக்கில் உள்ள சூர்திஸ்தான் பகுதியில் பல ஏவுகணைகளை ஏவியும், ட்ரோன்களை ஏவியும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் புலனாய்வு மையத்தைக் குறிவைத்துதான் இந்தத் தாக்குதல்களைள் நடத்தியதாக இரான் தெரிவித்துள்ளது. அதைத் தவிர, ஐஸ்(இஸ்லாமிய அரசு) உட்பட சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், இரான் எதிர்ப்பு பயங்கரவாத குழுக்களைக் குறிவைத்ததாகவும் இரான் தெரிவித்தது. இரானின் கூற்றுப்படி, அதன் ஒவ்வொரு நடவடிக்கைக்குப் பின்னாலும், ஒரு எதிர்வினை காரணமாக இருந்தது. பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு விளக்கமளித்த இரான், தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள இரான் வம்சாவளியைச் சேர்ந்த பலூச் கிளரச்சியாளர்களைக் குறிவைத்ததாக இரான் கூறியது. "தாக்குதல் தவிர்க்க முடியாதது" என்று தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான செயத் முகமது மராண்டி கூறுகிறார். கடந்த மாதம் இரானின் சிஸ்தான்-பலூசிஸ்தானில் நடந்த தாக்குதலில் 22 இரான் போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். இரானின் தெற்குப் பகுதியில் பலூச் தேசியவாதிகளின் தளங்கள் இருப்பதாக இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அவற்றை 'பயங்கரவாதிகளின் மறைவிடங்கள்' என பாகிஸ்தான் கூறியது. பல தசாப்தங்களாக எல்லையின் இருபுறமும் பதற்றம் நீடித்தது, ஆனால் இப்போது அது அதன் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இரான் தலைவர்களுக்கு கடினமான காலம் பட மூலாதாரம்,IRIB இராக் மற்றும் சிரியா, காஸாவிற்கு அருகில் உள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது மோதல் நிலவி வருகிறது. பேராசிரியர் மராண்டி பேசுகையில், "இராக் மற்றும் சிரியாவில் நடந்த தாக்குதல்கள், கெர்மானில் நடக்கும் சம்பவங்களுக்கான பதில்" என்றார். கடந்த மாதம் அங்கு நடந்த ஒரு அரசியல் படுகொலையை அவர் குறிப்பிடுகிறார். இங்கே, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் மூத்த நபரான சையத் ராசி மொசாவி படுகொலை செய்யப்பட்டார். இந்த மாதத் தொடக்கத்தில் காசிம் சுலைமானியின் கல்லறை மீது இரட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இராக்கில் ட்ரோன் தாக்குதலில் அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரானின் உயர்மட்ட தளபதி சுலைமானி. இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றது. 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நடந்த மிக ஆபத்தான தாக்குதல் இது. இந்தப் பிராந்தியத்தைப் பற்றி விரிவான பகுப்பாய்வு செய்த அம்வாஸ் மீடியாவின் ஆசிரியர் முகமது அலி ஷபானி, "இந்தத் தாக்குதலுக்குக் கூடுதலாக, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தளபதிகள் கொல்லப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இரான் மீது அழுத்தம் இருந்தது," என்றார். மேலும், இனிவரும் காலங்களில் மேலும் பதற்றமான சூழலை காண்போம், என்றார். இரானில் அதிகாரத்தில் இருக்கும் உச்ச மதத் தலைவர்களுக்கு இது கடினமான நேரம். ஏனெனில் நாட்டில் பெண்கள் அதிக சுதந்திரம் கோரி பெரிய இயக்கங்களை நடத்தினர். சர்வதேச தடைகளால் இரானின் பொருளாதாரமும் அழுத்தத்தில் உள்ளது. ஊழல் வழக்குகள் மற்றும் தவறான நிர்வாகத்தால் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. இந்த மோதலில் பல முரண்பாடுகள் உள்ளன. அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் பதற்றம் கொண்டுள்ளது. இருவரும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இப்போது இரானின் வியூகம் என்னவாக இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES எதிரிப் படைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக இரு தரப்பிலும் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. கடந்த வாரம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் அச்சுறுத்தல் அதிகரித்து வருவது தெரிகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட முனைகளில் பதற்றம் ஏற்பட்டால், பிராந்தியத்தில் நீண்ட கால மோதல் ஏற்படலாம். இராக்கில் உள்ள இரான் தளங்கள் மீது அமெரிக்காவின் தாக்குதல்களால் இரானின் முக்கியமான உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கடலில் முக்கியமான கடல் வழித்தடங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை பென்டகன் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கையிருப்பில் நான்கில் ஒரு பங்கு அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES இருந்தபோதிலும், இரானும் அதன் நட்பு நாடுகளும் தோல்விகளைவிட வெற்றிகளைப் பெறுவதாக நம்புகின்றன. காஸாவில் பாலத்தீனர்களுடன் நிற்பது வளைகுடா நாடுகளில் இரானின் புகழை அதிகப்படுத்தியுள்ளது. ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களை தற்போது உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச விவகாரங்கள் தொடர்பான சிந்தனைக் களமாகச் செயல்படும் சத்தம் ஹவுஸில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கான திட்ட இயக்குநராக இருக்கிறார் சனம் வகில், "இரான் ஒரு பரந்த விளையாட்டை விளையாடுகிறது. காஸாவை கைப்பற்றிய பிறகு இஸ்ரேல் இன்னும் ஆக்ரோஷமாக மாறக்கூடும் என்று உணர்கிறது. எனவே அதுவொரு நீண்ட போரை எதிர்பார்க்கிறது, தயாராகிக் கொண்டிருக்கிறது," என்றார். இரானின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று அமெரிக்காவை அதன் கொல்லைப்புறத்தில் இருந்து விலக்கி வைப்பது. மேலும், அது இஸ்ரேல், அமெரிக்காவுடன் நேரடி மோதலைத் தவிர்க்க வேண்டும். https://www.bbc.com/tamil/articles/ce5j85rjl4no
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகிறார் சிறிதரன் Published By: VISHNU 21 JAN, 2024 | 01:38 PM இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருடன் தலைமைப் பதவிக்காக போட்டியிட்ட சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் அவருக்கு உதவியாளர்களாக வடக்கு, கிழக்கு மாகணங்களின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த எண்மர் செயற்பட்டனர். இந்நிலையில் குறித்த வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு அங்கத்தவர்களும் மாவட்டங்களில் இருந்து பொதுச்சபைக்கு வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தைக் கொண்டவர்கள் வாக்களித்தனர். அதன்படி, இன்று 21 ஆம் திகதி ததிருகோணமலை நகரமண்டபத்தில் இடம் பெற்ற வாக்களிப்பில் 327 பேர் கலந்துகொண்டனர். முன்னதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கான வேட்பு மனு கோரப்பட்டபோது கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனும் விண்ணப்பங்களை செய்திருந்தனர். எனினும் கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் போட்டியின்றி தலைமைத்தெரிவு நடைபெறவேண்டுமென்று கருத்து வலியுறுத்தப்பட்டதை அடுத்து மூன்று வேட்பாளர்கள் இடையேயும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் புதிய தலைமைக்கு வாக்கெடுப்பை நடத்துவதே பொருத்தமானது என்ற தீர்மானம் இறுதியானது. இந்நிலையில் அண்மைய நாட்களில் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமைக்கு போட்டியிடும் சக வேட்பாளரான சிறீதரனை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளதன் காரணமாக சுமந்திரன் மற்றும் சிறீதரன் இடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சீனித்தம்பி யோகேஸ்வரனும் தனது வாக்கை சிறிதரனுக்கு அளித்துள்ளார். https://www.virakesari.lk/article/174449