Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22881
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. வரவேற்பு விழாவில் பஸ் நகர முடியாததால் ஹெலியில் பறந்த ஆர்ஜென்டீன வீரர்கள் By SETHU 22 DEC, 2022 | 01:36 PM உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன வீரர்களுக்கு, ஆர்ஜென்டீனாவில் நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வின்போது, திறந்த பஸ் பயணத்தை இடையில் கைவிட்ட வீரர்கள் ஹெலிகொப்டர் மூலம் பறந்தனர். வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் நகர முடியாத அளவுக்கு வீதியில் மக்கள் திரண்டமையே இதற்குக் காரணம். உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணியினர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆர்ஜென்டீனாவை சென்றடைந்தனர். அன்றைய தினம் ஆர்ஜென்டீனாவில் விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டு, வீரர்களை வரவேற்பதற்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தலைநகர் புவனோஸ் அய்ரிஸின் புறநகர் பகுதியிலிருந்து, தலைநகரின் மத்திய பகுதிவரை 30 கிலோமீற்றர் தூரம் திறந்த பஸ்ஸில் வீரர்கள் பயணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மில்லியன் கணக்கான மக்கள் புவனோஸ் அய்ரிஸில் திரண்டிருந்தனர். சுமார் 40 லட்சம் பேர் பஸ் பயணம் செய்யவிருந்த வீதிகளில் திரண்டிருந்தனர் என ஆர்ஜென்டீன பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர். வீரர்கள் பயணம் செய்த பஸ் நகர முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் வீதிகளில் நிறைந்திருந்தது. மேம்பாலம் ஒன்;றின் கீழ் சென்றபோது அதன் மீது பாய்வதற்கும் ரசிகர்கள் சிலர் முயன்றனர். எதிர்பார்க்கப்பட்டதைவிட மிக மெதுவாக பஸ் நகர முடிந்தது. இதையடுத்து, வீரர்களின் பஸ் பயணம் இடையில் கைவிடப்பட்டு, ஹொலிகொப்டர் மூலம் வீரர்கள் ஆர்ஜென்டீன கால்பந்தாட்டச் சங்கத்தின் பயிற்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பினர். இதனால் புனோஸ் அய்ரிஸில் விளையாட்டுக் கொண்டாட்டங்களுக்கான மத்தியநிலையமாக விளங்கும் நினைவுச்சின்னத்துக்கு அருகில் காத்திழருந்த ரசிகர்கள், தமது நாயகர்களை காண முடியாதநிலை ஏற்பட்டது. https://www.virakesari.lk/article/143849
  2. 'அரசு மணமகளை ஏற்பாடு செய்துதரவேண்டும்' ; இந்தியாவில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் பேரணி By T. SARANYA 22 DEC, 2022 | 03:38 PM இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் பேரணி நடத்தியுள்ளனர். இந்தியாவில் சமீப காலமாக ஆண் பெண் பாலின சமநிலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. சில மாநிலங்களில் பெண்களைத் திருமணம் செய்ய வரதட்சணை கொடுக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது போல் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் இணைந்து இந்தியாவில் மகாராஷ்டிராவில் சோலாப்பூரில் பேரணி நடத்தியுள்ளனர். இந்தப் பேரணியில் அதிகமான ஆண்கள் மணமகன் போன்று ஆடையணிந்து கலந்து கொண்டனர். சிலர் மணமகன் போல் அலங்காரம் செய்து கொண்டு பேண்ட் வாத்தியங்கள் முழங்க குதிரையில் மணமகன் போல் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் தங்களுக்குத் திருமணம் செய்ய அரசு பெண் ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனுகொடுத்தனர். அவர்கள் தங்களது மனுவில், தாயின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை கண்டறிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்த ஜோதி கிராந்தி பரிஷத் நிறுவனர் ரமேஷ் இப்பேரணி குறித்து தெரிவிக்கையில், `இந்தப் பேரணியை சிலர் கிண்டல் செய்யலாம். ஆனால் ஆண் பெண்கள் விகிதாச்சாரம் மாறுபட்டு இருப்பதால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. மகாராஷ்டிராவில் ஆயிரம் ஆண்களுக்கு 889 பெண்கள்தான் இருக்கின்றனர். இதற்குக் காரணம் பெண் சிசுவதைதான். பெண் சிசுவதையைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது" என குற்றம் சாட்டினார். https://www.virakesari.lk/article/143861 சிவனே என்றிருக்காமல் என்ன விளையாட்டு இது?!
  3. விந்தணு எண்ணிக்கையில் கடும் சரிவு - 5 காரணங்களும் மீளும் வழிகளும் கட்டுரை தகவல் எழுதியவர்,ஆண்ட்ரே பீர்நாத் பதவி,பிபிசி செய்தி பிரேசில் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண்களின் விந்தணுக்களின் செறிவு கடந்த 50 ஆண்டுகளில் 51 சதவிகிதம் குறைந்துள்ளதாக சமீபத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இஸ்ரேலில் உள்ள ஹீப்ரு யூனிவர்ஸ்சிட்டி ஆஃப் ஜெருசலேம் மற்றும் அமெரிக்காவில் உள்ள மவுண்ட் சினாய் ஸ்கூல் ஆஃப் மெடிசின் இணைந்து நடத்திய ஆய்வில் கிடைத்த முக்கிய கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும். 1970களில் சராசரியாக ஒரு மில்லி லிட்டர் விந்துவில் 101 மில்லியன் உயிரணுக்கள் இருந்த நிலையில், அந்த சராசரி சமீப காலங்களில் 49 மில்லியனாக குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல், விந்தணுக்களின் தரமும் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. பெண்ணின் கருமுட்டைக்குள் நுழையும் திறன் கொண்ட உயிரணுக்களின் சதவிகிதம் சமீபத்திய தசாப்தங்களில் கணிசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. "விந்தணு இயக்க இழப்பு பெரும் தாக்கத்தைக் கொண்டுள்ளது. இந்தப் பண்பு இல்லாமல் கருத்தரிக்கும் திறன் குறைகிறது" என்கிறார் சிறுநீரக மருத்துவரும் ஆண்கள் சிறப்பு மருத்துவருமான மோசிர் ரஃபேல் ராடாஎல்லி. தொடர்ந்து மோசமடையும் இந்தச் சூழல், சுகாதார நிபுணர்களிடையே எச்சரிக்கை சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ளது. விந்தணுக்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது? அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?14 டிசம்பர் 2022 விந்து ஒவ்வாமை என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்னென்ன?20 அக்டோபர் 2022 உடலுறவில் இன்பமும் பாதுகாப்பும் - உலக சுகாதார நிறுவனம் கூறுவது என்ன?20 ஏப்ரல் 2022 "இது கவலைக்குரிய ஒன்று. ஏனென்றால் மோசமடைதலின் வேகம் அதிகரித்திருப்பதை நாங்கள் காண்கிறோம். இது எங்கு முடியும் என்று தெரியவில்லை" என்கிறார் பிரேசிலியன் சொசைட்டி ஆஃப் யூரோலஜியின் ஆண்ட்ராலஜி துறையின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் எட்வர்டோ மிராண்டா. ஆண்களின் விந்தணுக்கள் இழப்பு விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அதே ஆய்வில் 1970 மற்றும் 1990க்கு இடைப்பட்ட காலத்தில் விந்தணுக்களின் செறிவு ஆண்டுதோறும் 1.16 சதவிகிதம் குறைந்துள்ளது தெரியவருகிறது. 2000களின் தொடக்கம் முதல் இந்த விகிதம் 2.64 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது உலகளாவிய நிகழ்வாக உள்ளது. ஐரோப்பா, ஆப்ரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் மிக வேகமாக சரிவது உட்பட அனைத்து கண்டங்களிலும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை சரிவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு என்ன காரணம்? நிபுணர்கள் குறைந்தது ஐந்து காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர். இதில் நல்ல செய்தி என்னவென்றால், இந்தப் பிரச்னையிலிருந்து மீள்வதற்கு வழிகள் உள்ளன. உடல் பருமன் பட மூலாதாரம்,GETTY IMAGES உடல் பருமன் விந்தணுக்களுக்கு தொடர் தீங்கை ஏற்படுத்துகின்றன. உடலில் கொழுப்பு அதிகரிக்க வழிவகுக்கும் கொழுப்பு திசுக்களின் வளர்ச்சி, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை நேரடியாக பாதிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் ஆண் விந்தணுக்கள் உற்பத்தியில் மிக முக்கியமான ஹார்மோன்களில் ஒன்றாகும். அதிகப்படியான எடை உடலில் உள்ள பல்வேறு செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடிய ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை உருவாக்குவதாக மிராண்டா கூறுகிறார். "அதேபோல பருமனான நபரின் பிறப்புறுப்பு பகுதியில் அதிக கொழுப்பு சேரும். இது விந்தணுக்களுக்கு ஆபத்தானது” என்றும் அவர் கூறுகிறார். விந்தணுக்கள் உருவாகி, சேகரமாகும் விதைப்பை சிறப்பாக செயல்பட அதன் வெப்பநிலை உடல் வெப்பநிலையிலிருந்து1 முதல் 2 டிகிரி குறைவாக இருக்க வேண்டும். எனவேதான் விதைப்பை உடலுக்கு வெளியே உள்ளது. கொழுப்பு அதிகரிக்கும் போது இனப்பெருக்க உறுப்புகள் அதிக சுமைக்கு உள்ளாகி, சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது. உலகில் 39 சதவிகித ஆண்கள் அதிக எடையுடன் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. தவறான பழக்கங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மது, சிகரெட், மின்சிகரெட், கஞ்சா, கொக்கைன் போன்ற பொருட்களின் பயன்பாடு ஆண்களின் விந்தணுக்களை வெகுவாக பாதிக்கும். “இதில் சில பழக்கம் விந்தணுவை உருவாக்கும் கருசெல்களை நேரடியாக பாதிக்கும்" என்கிறார் மிராண்டா. மற்றவை விதைப்பைகளின் செயல்பாட்டை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியை பாதித்தல் போன்று மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உடல் தசையை அதிகரிப்பதற்காக மாத்திரைகள், ஜெல் மற்றும் ஊசி மூலம் டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக்கொள்வது மிகவும் ஆபத்து என நிபுணர்கள் கூறுகின்றனர். "இந்த சந்தை சமீபத்திய ஆண்டுகளில் பைத்தியக்காரத்தனமாகவும் திகிலூட்டும் விதமாகவும் வளர்ந்துள்ளது" என ராடேல்லி எச்சரிக்கிறார். இந்த ஹார்மோனை வெளியே இருந்து எடுத்துக்கொள்ளும் போது, இனி இயற்கையாக உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உடல் புரிந்துகொள்வதாக அவர் கூறுகிறார். இதன் காரணமாக, விதைப்பைகள் சிறுத்து, விந்தணுக்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகிறது. இதை மருத்துவ மொழியில் அஸோஸ்பெர்மியா என்பார்கள். பால்வினை தொற்று பாக்டீரியாவால் ஏற்படும் கிளமிடியா மற்றும் கோனோரியா போன்ற நோய்கள் உயிரணுக்கள் முதிர்ச்சியடையும் எபிடிடிமிஸில் வீக்கத்தை ஏற்படுத்தும். எபிடிடிமிஸில் ஏற்படும் இந்த மாற்றம் உயிரணுக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. 2020ஆம் ஆண்டில் மட்டும், கிளமிடியா நோயால் 129 மில்லியன் பேரும், கோனோரியா நோயால் 82 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரம் மதிப்பிட்டுள்ளது. சமீபத்திய தசாப்தங்களில் இந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மடியில் மடிக்கணிணி பட மூலாதாரம்,GETTY IMAGES விதைப்பை வெப்பநிலை உடலின் மற்ற பகுதிகளை விட 1 முதல் 2 டிகிரி குறைவாக இருக்க வேண்டும் என்று மேலே கூறியது நினைவிருக்கிறதா? கடந்த தசாப்தத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுகள், மடியில் வைத்து மடிக்கணினியை பயன்படுத்தும் பழக்கம் விந்தணு உற்பத்திக்கு கூடுதல் ஆபத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றன. ஏனென்றால், மடிக்கணிணியின் மின்கலன் வெப்பமடைவது விதைப்பையை வெப்பமடையைச் செய்யும். அதிக வெப்பநிலையுடன் தொடர்புடைய மற்ற பழக்கங்களும் அபாயங்களை ஏற்படுத்துவதாக மிராண்டா சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக, சூடான நீரில் நீண்ட நேரக் குளியல். தொழில்நுட்பத் துறையில் மின்காந்த அலைகள், தொலைபேசி சமிக்ஞைகள் மற்றும் வயர்லெஸ் இணையம் ஆகியவையும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். "ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஆய்வுகளில், வைஃபை மற்றும் மின்காந்த அலைகள் போன்றவை விந்தணுக்களுக்கு பாதைப்பை ஏற்படுத்தின" என்று அவர் கூறுகிறார். “ஆனால், இந்த தொழில்நுட்பங்கள் உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவது இன்னும் சாத்தியமில்லை" என்றும் மிராண்டா கூறுகிறார். மாதவிடாய் காலத்தில் அதீத ரத்தப்போக்கு யாருக்கெல்லாம் ஏற்படும்? தீர்வு என்ன?17 டிசம்பர் 2022 படுக்கை சுத்தமாக இருப்பது ஏன் அவசியம்? எத்தனை நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவேண்டும்?15 டிசம்பர் 2022 மலத்தில் வெளிப்படும் பெருங்குடல் புற்றுநோயின் முதல் அறிகுறி என்ன? எப்படி குணப்படுத்துவது?13 டிசம்பர் 2022 நாளமில்லா அமைப்பு சீர்குலைப்பான்கள் எண்டோகிரைன் சீர்குலைப்பான்கள் என்று அறியப்படும் பல நச்சு கலவைகள் குறித்தும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தப் பட்டியலில் வளிமண்டலத்தில் கண்டறியப்பட்ட மாசுக்கள், பிளாஸ்டிக் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை அடங்கும். ஏனென்றால் இந்த மூலக்கூறுகள் நம் உடலில் உள்ள ஹார்மோன்களுக்கு மிகவும் ஒத்த அமைப்பைக் கொண்டுள்ளன. ஒரு சாவி ஒரு பூட்டுக்குள் நுழைவதைப் போல, இந்தப் பொருட்கள் செல் ஏற்பிகளில் பொருந்தி சில தேவையற்ற செயல்முறைகளைத் தூண்டுகின்றன. "இந்தப் பிரச்னையின் அளவு எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அதைத் தீர்மானிக்க பல ஆய்வுகள் நடந்து வருகின்றன" என்கிறார் ராடாஎல்லி. மலட்டு உலகமாகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES சுற்றுச்சூழல் மற்றும் தனிமனித நடத்தையைத் தாண்டி உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவதன் பின்னணியில் கூடுதலாக இரண்டு உள்ளார்ந்த சிக்கல்களும் உள்ளன. அதில், முதலாவது மரபியல். குழந்தை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமத்தில் 10 முதல் 30 சதவிகிதம் ஆண் மரபணுவுடன் தொடர்புடையது என மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது, வயது முதிர்வு. 50 ஆண்டுகளில் விந்தணுக்களின் எண்ணிக்கை 51 சதவிகிதம் குறைந்தது மற்றும் கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்த வேகம் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டால், இந்த எண்ணிக்கை பூஜ்ஜியத்தை நெருங்குமா? இந்த வீழ்ச்சி விகிதம் தற்போதைய நிலைகளில் தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டு ஆண் விந்துவில் உள்ள உயிரணுக்களின் செறிவு கிட்டதட்ட பூஜ்ஜியமாக இருக்கும். ஆனால் இந்த நிலை வரும் என்று மிராண்டா நம்பவில்லை. "நிலைமை மோசமடைவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு கட்டத்தில் அது நின்றுவிடும். அநேகமாக புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் அந்த நிலையை நாம் அடைவோம்” என்று அவர் கூறுகிறார். என்ன செய்ய வேண்டும்? குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் ஆண்கள் விந்தணுக்களில் ஏற்படும் பாதிப்புகளை மாற்ற நடைமுறை வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக, சீரான உணவுப்பழக்கம் மற்றும் உடல் செயல்பாடுகள் மூலம் உடல் எடையை குறைக்கலாம். மேலும் மது, சிகரெட் மற்றும் பிற போதைப்பொருட்களை முற்றிலும் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். கர்ப்பம் தரிப்பதை நோக்கமாக கொண்டிராத உடலுறவின் போது கிளமிடியா மற்றும் கோனோரியா போன்ற தொற்றுநோய்களைத் தவிர்க்க எப்போதும் ஆணுறையைப் பயன்படுத்துவது நல்லது. இளமைப் பருவத்தில் HPV தடுப்பூசியை எடுத்துக்கொள்பவர்கள இந்த வைரஸிலிருந்தும், அது உடலில் ஏற்படுத்தும் விளைவுகளிலிருந்தும் அதிகம் பாதுகாக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறையில் அனைத்து மாற்றங்களைச் செய்த பிறகும் குழந்தை பெறுவதில் சிக்கல் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. தேசிய மற்றும் சர்வதேச வழிகாட்டுதல்களின்படி, மருத்துவரைச் சந்திப்பதற்கான காலம் பெண்ணின் வயதைப் பொறுத்தது. பழங்கள், காய்கறிகளை தோலுடன் சாப்பிடுவது நல்லதா? 12 டிசம்பர் 2022 கருப்பையை சுத்தம் செய்யும் 'டி அன்ட் சி' சிகிச்சை - நன்மைகளும் ஆபத்துகளும்1 அக்டோபர் 2022 எண்டோமெட்ரியோசிஸ்: பெண்களை பாதிக்கும் இந்த விநோத நிலை என்ன செய்யும்? தீர்வு என்ன?31 ஆகஸ்ட் 2022 "பெண் 35 வயதிற்குட்பட்டவராக இருந்தால், தம்பதிகள் ஒரு வருடம் வரை குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கருமுட்டை உருவாகும் காலத்தை கவனத்தில் எடுத்து வாரத்திற்கு மூன்று முறை வழக்கமான உடலுறவில் ஈடுபட வேண்டும்" என்கிறார் மிராண்டா. 35 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், ஆறு மாதங்களுக்கும் மேலாக கருத்தரிப்பதில் சிரமம் இருக்கும்பட்சத்தில் ஏற்கனவே உங்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால், கருமுட்டைகளின் இருப்பு அந்த வயதிலிருந்து விரைவாக குறையத் தொடங்குகிறது. எனவே காரணம் கண்டறிய 12 மாதங்கள் தாமதிப்பது முக்கியமான நேரத்தை வீணடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சாத்தியமான காரணங்களைக் கண்டறியவும் சிறந்த சிகிச்சைகளை பரிந்துரைக்கவும் ஆண், பெண் இருவரையுமே பரிசோதிக்க வேண்டும் என்று ராடாஎல்லி கூறுகிறார். பிரச்னை ஆண்களுக்கு இருந்தால், நிபுணர்கள் பொதுவாக விதைப்பையைப் பாதுகாக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வைட்டமின் சேர்க்கையை (supplements) பரிந்துரைக்கின்றனர். ஹார்மோன்களை ஒழுங்குப்படுத்த கூடுதல் சேர்க்கைகள் தேவைப்படலாம். சில பிரச்னைகளை மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும் என்கிறார் மிராண்டா. பாக்டீரியா தொற்றுகளுக்கு ஆண்டிபாடிக்ஸ் மூலம் சிகிச்சையளிப்பது மற்றும் இனப்பெருக்க அமைப்பில் உள்ள உடற்கூறியல் குறைபாடுகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிப்பதை அவர் உதாரணமாகக் கூறுகிறார். கடைசி முயற்சியாக செயற்கை கருத்தரித்தல் முறையை தம்பதிகள் பின்பற்றலாம். https://www.bbc.com/tamil/articles/cxrq242wexpo
  4. 26 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினம் ! By VISHNU 22 DEC, 2022 | 12:11 PM டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. 25 ஆம் திகதி நத்தார் பண்டிகை இம்முறை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகின்றமையால் மறுநாள் திங்கட்கிழமை விசேட அரசவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/143833
  5. சஜித் பிரேமதாசவால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் கையளிப்பு! By DIGITAL DESK 2 22 DEC, 2022 | 03:34 PM திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஐக்கிய மக்கள் சக்தியின் ஹுஸ்மக் (சுவாசம்)' வேலைத்திட்டத்தின் மூலம் வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொடர் பயணத்தின் 55ஆவது நிகழ்வில் பங்கேற்க இன்று வியாழக்கிழமை (டிச. 22) சஜித் பிரேமதாச திருகோணமலை மாவட்டத்துக்கு சென்றுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் வேண்டுகோளின் பேரில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சென்ற சஜித், 39 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை (Dialysis Machine) வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் ஜகத் விக்ரமசிங்கவிடம் வழங்கியுள்ளார். இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களான கபில கழுபஹன, சரத் லொரென்ஸுஹேவா, திருக்குமார், மாவட்ட முகாமையாளர்களான ஏ.எஸ்.எம். மஹரூப், பிரான்சிஸ் அந்தோணி சேகர், பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம்.நெளபர், ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் பாத்திஹ் கஸ்ஸாலி மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், வைத்தியசாலை மருத்துவர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/143859
  6. கனடாத் தமிழ் உறவுகளுக்கு கோடி புண்ணியம் கிடைக்கட்டும், நன்றியும் வாழ்த்துகளும். சமயப்பணிகளைத் தாண்டி சமூகப் பணிகளில் ஈடுபடும் ஐயா கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுக்கும் நன்றி.
  7. 'சண்டை செய்வோம்' - இறுதிப்போட்டி இடைவேளையில் எம்பாப்பேவின் உணர்ச்சிமிகு உரை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிலியன் எம்பாப்பே 2 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், அர்ஜென்டினா பிரான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியின்போது, ஆட்ட இடைவேளையில் எம்பாப்பே அணியினரிடம் உணர்ச்சி பொங்கப் பேசிய காணொளி வெளிவந்துள்ளது. அந்தப் போட்டியின் 80வது நிமிடத்தில் கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பில் தொடங்கி பிரான்ஸ் அர்ஜென்டினாவுக்கு பெரும் சவால் விடுத்தது. முதல் பாதி முடிந்தபோது லியோனெல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வெற்றியின் விளிம்பில் இருந்தது. அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை விட முன்னிலையில் இருந்தது. அதுவரை பிரான்ஸால் எதிரணியின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மெஸ்ஸியின் அணிக்குக் கடும் போட்டி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிலியன் எம்பாப்பே, அதுவரை பெரிய தாக்கத்தை போட்டியில் ஏற்படுத்தியிருக்கவில்லை. அந்த நேரத்தில், ஆட்ட இடைவேளையின்போது அவர் தனது அணியினரிடம் உணர்ச்சி பொங்கப் பேசினார். அப்போது, அவர்களால் மீண்டும் போட்டியைத் தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்பதையும் ஃபிஃபா உலகக்கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் என்பதையும் நினைவூட்டினார். கால்பந்து உலகக்கோப்பையை யாரெல்லாம் தொட முடியும்? ஃபிஃபா விதிகள் என்ன கூறுகின்றன?6 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தார் கால்பந்து உலக கோப்பை தொடர்: அரேபியர்கள், முஸ்லிம்கள் பெற்ற பலன் என்ன?20 டிசம்பர் 2022 உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியின் மறக்க முடியாத தருணங்கள்19 டிசம்பர் 2022 மேலும், “இது உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி. நம்முடைய வாழ்நாள் போட்டி,” என்று உடை மாற்றும் அறையில் வீரர்களிடம் எம்பாப்பே கூறினார். “எப்படி இருந்தாலும், இதைவிட நாம் மோசமாகிவிட முடியாது. ஆகவே, நாம் மீண்டும் களத்திற்குச் செல்வோம். அவர்களை விளையாட விடுவோம் அல்லது கொஞ்சம் தீவிரம் காட்டி சண்டையில் இறங்கி, வேறு ஏதாவது செய்வோம் நண்பர்களே! ஏனென்றால், இது உலகக்கோப்பை இறுதிப்போட்டி” எம்பாப்பே கூறுவதை அந்தக் காணொளி காட்டுகிறது. மேலும், “அவர்கள் இரண்டு கோல்களை அடித்துவிட்டார்கள். நாம் இரண்டு கோல்கள் பின் தங்கியுள்ளோம். ஆனால், மீண்டுவரலாம். நண்பர்களே, இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடியது,” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியெர் டெஸ்சாம்ப்ஸ், “உங்களுக்கு ஒரு வித்தியாசத்தைச் சொல்கிறேன். அவர்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை விளையாடுகிறார்கள். ஆனால், நாம் அப்படி விளையாடவில்லை,” என்று கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிசம்பர் 18ஆம் தேதியன்று லுசைல் மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியைத் தொடர்ந்து கோப்பை வழங்கும் விழாவில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான், கிலியன் எம்பாப்பேவுக்கு ஆறுதல் கூறினார். இரண்டாம் பாதியில் அணியால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தது என்றால் அதற்குக் காரணம் எம்பாப்பே உடை மாற்றும் அறையில் நிகழ்த்திய அந்த உரையாக இருக்கலாம். அதோடு, அவர் 80வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்ததும் அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு கோல் அடித்ததும் அணிக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது. பிறகு, மெஸ்ஸி மூன்றாவது கோலை அடித்து அர்ஜென்டினாவை முன்னிலைக்குக் கொண்டுவந்தபோது, 97வது நிமிடத்தில் எம்பாப்பே மீண்டுமொரு கோல் அடித்து அர்ஜென்டினா ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தார். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் நட்சத்திர வீரரான அவர், மூன்று கோல்களை அடித்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சாதனை செய்தார். எம்பாப்பே, 1966ஆம் ஆண்டில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் ஜெஃப் ஹர்ஸ்டின் செய்ததற்குப் பிறகு, உலககோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த இரண்டாவது நபர் என்ற சாதனையை எம்பாப்பே சாதித்தார். ஆனால், ஆட்டம் இறுதியாக பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றபோது 36 ஆண்டுகளுக்குப் பிறகு, அர்ஜென்டினா லுசைல் மைதானத்தில் கோப்பையை வென்றது. எம்பாப்பேயின் சாதனைகள் உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் எம்பாப்பே. கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஒரு கோலும் இந்தப் போட்டியில் மூன்று கோல்களும் என அவரது உலகக் கோப்பை இறுதிப் போட்டி கோல்களின் எண்ணிக்கை 4. அதேபோல உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் எம்பாப்பேக்கு கிடைத்திருக்கிறது. போட்டி தொடங்கியபோது மெஸ்ஸியும், எம்பாப்பேயும் இந்தத் தொடரில் 5 கோல்களை அடித்து சமநிலையில் இருந்தார்கள். மெஸ்ஸி முதல் கோலை பெனால்ட்டி முறையில் அடித்து தங்கக் காலணிக்கான போட்டியில் முந்தினார். ஆனால் 80 மற்றும் 81-ஆவது நிமிடத்தில் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து தனது எண்ணிக்கையை 7 ஆக உயர்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES போட்டி அப்போதும் முடியவில்லை கடைசி சில நிமிடங்கள் இருந்தபோது மெஸ்ஸி மற்றொரு கோலை அடித்து மீண்டும் இருவருக்குமான போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தார். அப்போது தங்கக் காலணி மெஸ்ஸிக்கே கிடைக்கும் என்ற நிலையும் இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் மற்றொரு கோலை அடித்து மெஸ்ஸியை முந்தினார். இப்போது தங்கக் காலணி விருது அவருக்குக் கிடைத்திருக்கிறது. 23 வயதே ஆன எம்பாப்பே ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டிகளில் அதிகக் கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ, மாரோடோனா போன்ற மாபெரும் வீரர்களை முந்திவிட்டார். இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்ததன் மூலம் அவர் பீலேயின் கோல் எண்ணிக்கையை சமன் செய்திருக்கிறார். இப்போது அவர் அடித்திருக்கும் மொத்த கோல்களின் எண்ணிக்கை 12. மெஸ்ஸி 5 உலகக் கோப்பை போட்டிகளில் அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 13. https://www.bbc.com/tamil/articles/c9e19g2m4r4o
  8. கால்பந்து உலகக்கோப்பையை யாரெல்லாம் தொட முடியும்? ஃபிஃபா விதிகள் என்ன கூறுகின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த பதினெட்டாம் தேதி நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று 36 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா அணி. பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரண்டு அணிகளும் தலா மூன்று கோல்கள் அடித்தன. இதனால் பெனால்டி ஷூட் அவுட் நடைபெற்றது. இதில் பிரான்ஸை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது அர்ஜென்டினா. எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, அர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை உறுதி செய்தார்கள். மெஸ்ஸி: பிரான்சை வீழ்த்தி கால்பந்து உலகின் அசைக்க முடியாத வீரனாக உருவெடுத்து விட்டாரா?19 டிசம்பர் 2022 கத்தார் கால்பந்து உலக கோப்பை தொடர்: அரேபியர்கள், முஸ்லிம்கள் பெற்ற பலன் என்ன?20 டிசம்பர் 2022 கத்தார் கால்பந்து மோகம்: பிரான்ஸ், அர்ஜென்டினா ஜெர்சியில் கேரள மணமக்கள்19 டிசம்பர் 2022 அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு அன்றிரவு சாத்தியமானது. அதன் பிறகு மைதானத்திலும், அர்ஜென்டினா தேசத்திலும் கொண்டாட்டங்கள் களைகட்டின. இதில் மைதானத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டங்களின் போது, சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமடைந்த சமையல் கலைஞரான சால்ட் பே என அழைக்கப்படும் நுஸ்ரெட் கோக்சே கால்பந்து உலகக்கோப்பையைக் கையில் ஏந்தியபடி புகைப்படங்களில் காட்சியளித்தார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவ தொடங்கியதும், அவரின் இந்த செயல் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கான மிக முக்கிய காரணம், கால்பந்து உலகக்கோப்பையை யாரெல்லாம் கைகளில் ஏந்த முடியும் என்ற நீண்ட கால பாரம்பரியம் ஒன்று கால்பந்து உலகில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நுஸ்ரெட் கோக்சே உலகக்கோப்பையை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்தது பல்வேறு கால்பந்து ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. இந்த புகைப்படம் இவ்வளவு விமர்சனங்களைப் பெறக் காரணமாக இருந்த அந்த விதிகள் என்னென்ன? கோப்பையை யாரெல்லாம் ஏந்தலாம் என்பது குறித்து என்ன சொல்கிறது ஃபிஃபா? பட மூலாதாரம்,GETTY IMAGES யாரெல்லாம் உலகக்கோப்பையை தொடலாம்? கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு தொடரின் அடையாளமாக பல ஆண்டுகளாகத் திகழும் இந்த கோப்பையை யாரெல்லாம் கைகளில் ஏந்தலாம் என்று ஃபிஃபா சில விதிமுறைகளை வைத்துள்ளது. இதுகுறித்து ஃபிஃபா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களில், "இந்த உலகக் கோப்பையானது ஃபிஃபா உலகக்கோப்பை தொடரை வெல்லும் அணிக்கு வழங்கப்படுகிறது. 6.142 கிலோ எடையுள்ள திடமான தங்கத்தால் ஆன இந்த கோப்பையானது, உச்சியில் உலகத்தைத் தாங்கியிருக்கும் இரண்டு மனித உருவங்களைச் சித்தரிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சின்னங்களில் ஒன்றாகவும், விலைமதிப்பற்ற அடையாளமாகவும் இருக்கக்கூடிய இந்த உலகக் கோப்பையை மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே தொட முடியும். இதற்கு முன்பு கோப்பையைக் கைப்பற்றிய வீரர்கள் மற்றும் அரசு தலைவர்கள் ஆகியோரே இதனை ஏந்த முடியும். (தற்போதைய விதிகளின்படி) அசல் கோப்பை ஃபிஃபா வசம் இருக்கும். ஃபிஃபா உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு இந்த உண்மையான கோப்பை தற்காலிகமாகவே வழங்கப்படுகிறது. பின்னர், அந்தந்த தொடருக்கான பிரத்தியேக கோப்பைகள் வழங்கப்படுகின்றன. தங்கத்தால் ஆன அசல் கோப்பைக்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட கோப்பை வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு எவ்வளவு பணம் பரிசு? பல நூறு கோடிகள் வணிகத்தைக் கொண்ட கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு அவர்கள் பெறும் இடத்தை பொறுத்து பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வோர் உலகக்கோப்பையிலும் கணிசமாக உயர்த்தப்பட்டு வரும் இந்த பரிசுத் தொகையானது இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவின் அலுவல்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை பிபிசி தமிழ் உங்களுக்காக வழங்குகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 358 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மொத்த பரிசுத்தொகை 2018ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையில் 400 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த தொகையுடன் மேலும் 40 மில்லியன் டாலரைச் சேர்த்து இம்முறை மொத்தமாக 440 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை பரிசாக வழங்கியுள்ளது ஃபிஃபா. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 3,640 கோடி ரூபாய் ஆகும். இந்த மொத்த பரிசுத்தொகையில், கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அணிக்கு சுமார் 347 கோடி ரூபாய் (42 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்படும். இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள பிரான்ஸ் அணிக்கு சுமார் 248 கோடி ரூபாய் (30 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. கடந்த 1994 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை நான்கு மில்லியன் டாலராக இருந்தது. 28 ஆண்டுகள் இடைவெளியில் இது 42 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு, கோப்பையை வென்ற அணிக்கு 35 மில்லியன் அமெரிக்க டாலரும் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. இப்பரிசுத் தொகை 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முறையே 38 மில்லியன் டாலர் மற்றும் 28 மில்லியன் டாலராக உயர்ந்தது. https://www.bbc.com/tamil/articles/c9wgvr3z34ro
  9. சளி, இருமல் மருந்துகளில் ஒளிந்திருக்கும் ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பையில் இருமல் மருந்து எடுத்துக் கொண்ட இரண்டரை வயது குழந்தை சுமார் 20 நிமிடங்களுக்கு மூர்ச்சையாகிவிட்டது. அது மருத்துவ தம்பதியின் குழந்தை என்பதால் உடனடி சிகிச்சை கிடைத்து மீண்டது. இது இந்தியாவில் குழந்தைகளுக்கு சளி, இருமல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தெற்கு மும்பையைச் சேர்ந்த மருத்துவ தம்பதியின் இரண்டரை வயது குழந்தைக்கு இருமல் அதிகமாக இருக்கவே, தாயார் இருமல் மருந்து கொடுத்துள்ளார். அந்த மருந்தை குடித்த சிறிது நேரத்திலேயே குழந்தை திடீரென மூச்சுப் பேச்சின்றி மூர்ச்சையாகிவிட்டது. குழந்தையின் சுவாசத்தையோ, இதயத் துடிப்பையோ உணர முடியாமல் போகவே, அந்த மருத்துவ தம்பதி அதிர்ந்து போய்விட்டது. அப்போது வெளிநாட்டில் இருந்து வந்திருந்த, குழந்தையின் பாட்டியும், பிரபல வலி மேலாண்மை நிபுணருமான திலு மங்கேஷிகார் எதற்கும் பதற்றப்படாமல் சாதுர்யமாக செயல்பட்டதே குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. குழந்தைக்கு இதயம், நுரையீரலை மீள உயிர்ப்பிக்கும் சி.பி.ஆர். சிகிச்சையை அவர் அளிக்க, சுமார் 20 நிமிடங்கள் மூச்சுப் பேச்சின்றி இருந்த குழந்தை மெல்ல கண் விழித்துள்ளது. இறக்கும் குழந்தைகள்: இந்தியாவில் தயாராகும் மருந்துகள் குறித்த பாதுகாப்பு அச்சங்கள்17 அக்டோபர் 2022 இந்திய இருமல் மருந்தால் இறந்த குழந்தைகள்: நீதி கேட்கும் காம்பியா தாய்மார்கள்8 அக்டோபர் 2022 இந்தியா Vs சீனா: உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை நாடாக இருப்பது வரமா, சாபமா?21 டிசம்பர் 2022 அடுத்த சில நிமிடங்களில் சிறுவனின் சுவாசம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவை மெல்லமெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. தொடர்ந்து, குழந்தைக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தம்பதியின் குழந்தைக்கு திடீரென நேரிட்ட இந்த மோசமான நிகழ்வு சாதாரண குடும்பத்தில் உள்ள குழந்தைக்கு வந்திருந்தால் இந்நேரம் என்னவாகியிருக்கும்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இயல்பாகவே எழுகிறது. குழந்தைகளுக்கு திரவ வடிவில் (Syrup) சளி, இருமல் மருந்துகள் புழக்கத்தில் இருக்கும் இந்தியாவில் அதுகுறித்த ஆய்வு அவசியமாகிறது. சளி மருந்தை குடித்ததும் குழந்தை மூர்ச்சையாக காரணம் என்ன? மும்பையைச் சேர்ந்த அந்த மருத்துவ குடும்பம், மருத்துவத் துறையின் அடிப்படைகளை ஆய்வு செய்த போது, அவர்கள் குழந்தைக்குக் கொடுத்த மருந்தில் குளோர்பெனிராமைன் மற்றும் டெக்ஸ்ட்ராமெதார்ஃபன் ஆகிய 2 வேதிப் பொருட்களும் இருந்ததைக் கண்டனர். "அமெரிக்காவில் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுபோன்ற மருந்துகளை பரிந்துரைக்கக் கூடாது என்ற எச்சரிக்கை வாசகங்கள் பாட்டிலின் லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இந்தியாவில் அதுபோன்ற எச்சரிக்கை வாசகங்கள் இல்லை. மருத்துவர்களும் பரிந்துரைக்கவே செய்கின்றனர்" என்கிறார் திலு மங்கேஷிகார். இதுகுறித்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியர் மருத்துவர் ராவணகோமகனிடம் பேசிய போது, "தொண்டை முதல் நுரையீரலின் மூச்சுக்குழல் வரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருமலுக்கான தொற்று இருக்கலாம். இருமலுக்கான காரணம் என்னவென்பதை பரிசோதனையில் கண்டுபிடித்த பின்னரே முறையான சிகிச்சை அளிக்கப்படும். உள்ளுறுப்புகளில் இருமல் தொற்று இருக்கும் போது மட்டுமே டெஸ்ட்ராமெதார்ஃபைன் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அது மூளையில் இருமலுக்குக் காரணமான ஏற்பிகள் மீது செயல்படும். இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவில் மட்டுமே, மிகச் சரியாக அதே மருந்தை மட்டுமே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். ஒரே நாளில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது மருத்துவர் குறிப்பிட்டதைக் காட்டிலும் கூடுதலாகவோ கொடுத்தால் இதுபோன்ற நிலை வரலாம்" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் சென்னையைச் சேர்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணரும், புரோமெட் மருத்துவமனை இயக்குநருமான அருண் கல்யாணசுந்தரம் பேசுகையில், "2 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு இதுபோன்ற மருந்துகளை கொடுக்கவே கூடாது. சுவாசம் குறைவது, இதயத்துடிப்பு அதிகரிப்பது போன்ற காரணங்களால் சில குழந்தைகள் மரணமடையக் கூட வாய்ப்புள்ளது," என்று எச்சரிக்கிறார். "மருத்துவர்கள் குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக கொடுப்பது, அடிக்கடி மருந்து தருவது என்பதையும் தாண்டி மருத்துவர்களின் பரிந்துரையின்றி தாமாகவே மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கிக் கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் இருக்கிறது. அது மிகவும் தவறானது. அமெரிக்காவைப் பொருத்தவரை இதுபோன்ற நிலை இல்லை. 4 வயது வரை மட்டுமல்ல, அதற்கும் மேலாக வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கும் கூட சளி, இருமல் மருந்துகள் மிகுந்த எச்சரிக்கையுடனே பரிந்துரைக்கப்படுகின்றன," என்று அவர் மேலும் கூறுகிறார். சளி, இருமல் வருவது ஏன்? உடனே மருத்துவரை அணுகுவது அவசியமா? சென்னையில் நாள்தோறும் பலநூறு குழந்தைகளை பரிசோதித்து, சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ராவணகோமகன், "இருமல் என்பது நோய்க்கிருமிகள், தூசு, காற்று மாசு போன்றவற்றில் இருந்து நம் உடலில் காப்பாற்றிக் கொள்ள இயற்கையாகவே அமைந்துள்ள பாதுகாப்பு செயல்முறை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொண்டையில் இருந்து நுரையீரலில் கடைசி பாகமான மூச்சுக்குழல் வரை எங்கு வேண்டுமானாலும் இருமல் தொற்று இருக்கலாம். இருமல் தொற்று எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்த பின்னரே மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். தொண்டையில் இருமல் தொற்று இருந்தால் சுடுதண்ணீர், தேனில் மிளகு கலந்து கொடுப்பது போன்றவற்றின் மூலமே குணப்படுத்தி விடலாம். இருமல் வரும் போதெல்லாம் மருந்தோ, சிகிச்சையோ எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. உணவோ, குடிநீரோ எடுத்துக் கொள்ள முடியாத நிலை, பேசவோ தூங்கவோ முடியாத அளவுக்கு தொடர்ந்து இருமுதல் போன்ற அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு மோசமானால் மட்டுமே இருமலுக்கு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்," என்கிறார். படக்குறிப்பு, குழந்தைகள் நல மருத்துவர் ராவணகோமகன் பொதுவாக சளி, இருமலை சாதாரண ஒன்றாக அலட்சியமாக கருதும் போக்கு நம் சமூகத்தில் நிலவுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். "தாமாகவே மருந்துக்கடைக்குச் சென்று அவர்கள் தரும் ஏதோவொரு மருந்தை குழந்தைக்கு கொடுக்கும் போக்கு அறவே கூடாது. அதேபோல், மருத்துவர் பரிந்துரைத்த மருந்து இல்லாவிட்டால், அதற்கு இணையான வேறொரு நிறுவனம் தயாரித்த மருந்தைத் தருவதாகக் கூறி மருந்துக்கடைகளில் தரும் மருந்தை வாங்கவே கூடாது. ஏனெனில், மருத்துவர் பரிந்துரைத்த மருந்தைப் போல இருந்தாலும், அந்த மருந்தில் உள்ள மூலப்பொருட்களின் கூட்டுச்சேர்க்கை, விகிதாச்சாரம் மாறுபடலாம் போன்றவை மாறுபடலாம் என்பதால் அது எதிர்மறை விளைவை உண்டாக்கிவிடும்" என்று அவர் எச்சரிக்கிறார். குழந்தைக்கு ஒவ்வாமை, பக்க விளைவு வந்தால் என்ன செய்ய வேண்டும்? "மருந்தால் குழந்தைக்கு ஒவ்வாமையோ அல்லது பக்க விளைவோ ஏற்பட்டால், அடுத்த 5 நிமிடங்களிலேயே தெரிந்துவிடும். இருமல் அதிகமாவது, மூச்சுவிட சிரமப்படுவது, வாய் வீங்குவது, முகமும், உடலும் சிவப்பாவது, உடல் முழுவதும் தடிப்புகள் தோன்றுவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் தெரியப்படுத்திவிட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவது அவசியம். ஏனெனில், மருத்துவமனைகளில் மட்டுமே அவசர நிலையை கையாள தேவையான உயிர் காக்கும் கருவிகளும் மருந்துகளும் இருக்கும்" என்று மருத்துவர் ராவணகோமகன் அறிவுறுத்துகிறார். "சளி, இருமல் வந்தால் உடனே சரி செய்துவிட வேண்டும் என்று மக்கள் அவசரம் காட்டுவது தவறு. அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருந்தால் மட்டுமே மருந்து தேவை. அதுவும் மருத்துவரிடம் சென்று முறையாக சிகிச்சை பெற வேண்டும்," என்பதே அவரது முடிவான அறிவுரை. https://www.bbc.com/tamil/articles/c72n04d1pl4o
  10. மருந்துச் செலவுக்கு வழியில்லாமல் தற்கொலை பண்ணுகிறவர்களின் அமெரிக்கா ஒரு பரிமாற்ற கல்வித்திட்டத்தின் பகுதியாக வந்திருந்த சுமார் முப்பது அமெரிக்க மாணவர்களைப் பார்த்தேன். அவர்களுக்கு வயது 25க்குள் தான் இருக்கும். பாதி பேர்களுக்கு மேல் ஆண்களும் பெண்களும் கிரைண்டர் சைஸுக்கு இருந்தார்கள். அப்போது நான் அண்மையில் பார்த்த ஒரு ஆவணப்படத்தில் இருந்து சில புள்ளிவிபரங்கள் நினைவுக்கு வந்தன. அமெரிக்க மக்கள் தொகையில் 11% நீரிழிவு நோயாளிகள். 5இல் ஒருவர் தனக்கு நீரிழிவு இருந்தும் அதை அறியாமல் இருக்கிறார். அமெரிக்க மக்கள் தொகையில் 48.9% பேர் மிக அதிகமான உடல் (obesity) எடை கொண்டவர்கள். இதற்கு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - ஐம்பது, அறுபதுகளுக்குப் பிறகு - அங்கு அறிமுகமாக துரித உணவுகள், சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் உணவுகள், ஐஸ்கிரீம், இனிப்புகள் போன்றவையும், சாப்பிடுவது ஒரு கலாச்சார நடவடிக்கையாக விளம்பரப்படுத்தப்பட்டதும் பிரதான காரணம். அந்த ஆவணப்படத்தில் இன்னொரு ஆச்சரியப்படத்தக்க செய்தியைச் சொன்னார்கள் - உலகின் வேறெந்த நாட்டையும் விட அமெரிக்காவில் டைப் 1 மற்றும் சில நேரங்களில் டைப் 2 நீரிழிவாளர்களுக்கு தவிர்க்க முடியாத மருந்தான இன்சுலினின் விலை மிக மிக அதிகம் என்பது. ஒரு மாதத்திற்கு தேவையான இன்சுலின் வாங்க இந்திய ரூபாயின் மதிப்பின் படி 80,000இல் இருந்து ஒரு லட்சம் வரை ஆகிறது. அதாவது ஒரு சராசரி அமெரிக்கனின் மாத சம்பளத்தில் 60% மேல் வெறும் இன்சுலின் வாங்கவே செலவாகிறது. நம்மூரில் இன்சுலின் விலை எவ்வளவு தெரியுமா? ரத்தத்தில் உடனடியாக வேலை செய்யும் short-acting இன்சுலினான அக்டிராபிட் போன்றவை - உங்களுக்கு மாதத்திற்கு 4-6 தேவைப்பட்டால் - சராசரியாக மாதத்திற்கு ரூ 600-900 ஆகும். (அரசு மருத்துவமனைகளில் இலவசம்.) எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். (Long acting இன்சுலினான வைலி கம்பெனி தயாரிக்கும் லாண்டஸ் தான் உலகம் முழுக்க விலை மிக அதிகம். அதன் அரசியல் ஒரு தனி கதை.) இந்த ஆவணப்படத்தில் இன்சுலின் வாங்க வழியில்லாமல் கிட்டத்தட்ட தற்கொலை பண்ணிக்கொண்ட ஒருவரைப் பற்றி சொன்னார்கள். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். மனைவி, குழந்தைகள், பெற்றோர் என பெரிய குடும்பம். வாடகை வீடு. இவருடைய வருமானத்தையே நம்பியிருக்கிறார்கள். அதனால் குடும்பத்தில் செலவுகள் ஒரு முறை அதிகமாக அவரது கையிருப்பு பணம் முதல் வாரத்திலேயே காலியாகி விடுகிறது. எல்லா பில்களையும் கட்டி வாடகையையும் செலுத்தி விடுகிறார். இன்சுலின் வாங்க பணமில்லை. அமெரிக்காவில் பெரும்பாலான மெடிக்கல் இன்சுஷரன்ஸ் திட்டங்களின் கீழ் இன்சுலின் வாங்க முடியாது. வேறுவழியின்றி இன்சுலினே போட்டுக்கொள்ளாமல் இருக்கிறேன், டயட் மூலம் பார்த்துக்கொள்கிறேன் என முடிவெடுக்கிறார். ஒரு மாதத்தில் சர்க்கரை அளவு 500, 600, 800 என எகிறிக் கொண்டு போக ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகமாகி கீட்டோ அஸிடோஸிஸ் வந்து கோமா நிலைக்குப் போய் செத்து விடுகிறார். தங்கள் மகன், தங்கள் அப்பா, தன் கணவன் இப்படி குடும்ப செலவுக்காக தன் உயிரையே பணயம் வைத்த விசயம் அவர் சாகும் வரை தமக்குத் தெரியாது என அவர்கள் நேர்முகத்தில் கவலையுடன் சொல்கிறார்கள். இன்சுலின் வாங்க பணமில்லாமல் இவரைப் போல டயட் மூலமாக சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முயலும் மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினர் அமெரிக்காவில் அதிகமாகி வருவதாக சொல்லுகிறார்கள். நிறைய பேர் மாற்று மருத்துவத்தை நாடுகிறார்களாம். என்ன செய்வது எனத் தெரியாமல் பலர் தவித்து நிற்கிறார்கள். அவர்கள் மாதம் ஒருமுறை மருந்து கம்பெனிகளின் வாசலில் போய் பதாகைகளுடன் போராடுகிறார்கள். ஒரு பெண் தன்னுடைய மருத்துவர் தனக்கு ஒரு வருடத்திற்கு தேவையான இன்சுலினை இலவசமாகத் தந்துவிட்டதாக, அது தனக்கு ஒரு வருட ஆயுளைத் தந்துள்ளதாக கண்ணீர் மல்க கூறினார். அந்த இன்சுலினானது அண்மையில் இறந்து போன ஒரு நீரிழிவு நோயாளியின் சேமிப்பில் இருந்தது. நோயாளியின் குடும்பத்தார் மருத்துவரிடம் ஒப்படைக்க அவரோ இவரைப் போல இன்சுலின் வாங்க பணமில்லாதவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார். இப்படி இன்சுலினை கடன்பெற்று உயிரை நீட்டிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அந்த பெண் தானும் தனது கணவனும் நீரிழிவாளர்கள் என்பதால் குழந்தையே பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாக சொல்லுகிறார். இன்சுலினின் விலை மிக அதிகமாக போனதற்கு மருந்து வணிகம் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணி தான் காரணம் என்கிறார்கள். ஏன் இவ்வளவு விலையென்றால் இருவரும் பழியை இன்னொருவர் மீது சுமத்தி தப்பிக்கிறார்கள். அரசாங்கம் இவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப் பார்த்தால் பெரும் தொகையை ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் கொடுத்து அவர்களுடைய கையைக் கட்டிப்போட்டு விடுகிறார்கள். கட்டற்ற சந்தைப் பொருளாதாரத்தின் மோசமான விளைவு இது என விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். கட்டற்ற சந்தையின் ஒரு முக்கிய பிரச்சினை அது ஆளும் அரசை விட, மக்கள் விட அதிகாரம் படைத்ததாக மாறி, மக்களின் உயிரை உறிஞ்சிக் கொல்லும் உரிமையைப் பெற்றுவிடுகிறது என்பது. இன்சுலின் ஒரு காலத்தில் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் வரமாகத் தோன்றி இன்று அமெரிக்கா போன்ற தேசங்களில் சாபமாகி விட்டது. இப்போது அம்மக்களுக்கு இருக்கும் ஒரே வழி 24 மணிநேர உண்ணாநோன்பு டயட்டை மேற்கொண்டு, சாப்பிடும் ஒருவேளையின் போதும் காய்கறி, மாமிசம் போன்ற மாவுச்சத்து இல்லா உணவை எடுத்துக்கொள்வது. இப்படிச் செய்து இன்சுலின் அளவை மிகவும் குறைவாக எடுத்துக்கொண்டு செலவை வெகுவாக குறைக்க முடியும். ஆனால் எத்தனை பேருக்கு அந்த தெளிவும் கட்டுப்பாடும் உண்டு? இந்தியாவில் மருந்து தயாரிப்பு, விற்பனை நிறுவனங்கள் ராட்சஸ வளர்ச்சி பெற்று, அரசைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இன்னும் பலம் பெறவில்லை. இங்கு நிறைய அரசு மருத்துவமனைகள் உள்ளன. அங்கு இன்சுலின் போன்ற மருந்துகள் இலவசம். ஆனால் எதிர்காலத்தில் இந்த மருந்து நிறுவனங்களும் மருத்துவமனைகளும் சேர்ந்து அரசியல்வாதிகளுக்கு நிதியளித்து அரசு மருத்துவமனைகளையும் சிறுக சிறுக மூட வைப்பார்கள். நாம் அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுத்து அதன் மூலம் தனியார் மருத்துவமனை செலவுகளை, மருந்து செலவுகளை பார்த்துக்கொள்ளும் நிலையை ஏற்படுத்துவார்கள். அதன் பிறகு சில குறிப்பிட்ட மருந்துகளின் விலைகளை இதே போல எகிற வைத்து, அவற்றை மட்டும் காப்பீட்டின் கீழ் வராமல் பார்த்துக் கொண்டு மக்களை சாகடிப்பார்கள். மருத்துவம் முழுக்க கட்டற்ற பொருளாதார சந்தையின் கீழ்வரும் அன்று இந்தியாவிலும் மருந்து நிறுவனம், விற்பனையாளர்கள், மருத்துவமனை, காப்பீட்டு நிறுவனங்களின் வலைப்பின்னல் தோன்றி நம் மென்னியைப் பிடிப்பார்கள். அன்று அமெரிக்காவைப் போல மெட்டொபொலிக் நோய்கள் இங்கு அதிகமாகி முக்கிய மருந்துகளுக்காக மாதச் சம்பளத்தில் 60% செலுத்துகிற நிலைமைக்கு மக்கள் தொகையில் பாதி பேர் ஆட்படுவார்கள். சில பத்தாண்டுகளில் இங்கு அந்நிலை வந்துவிடும். நான் பயமுறுத்தும் நோக்கில் சொல்லவில்லை - தனியார்மயமாக்கலின் சியர்கெர்ல்ஸ், சியர்பாய்ஸுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சொல்லுகிறேன். https://thiruttusavi.blogspot.com/2022/12/blog-post_19.html @Justin @ஈழப்பிரியன் @nunavilan உங்களது கருத்தை எதிர்பார்க்கிறேன்.
  11. இந்தியா Vs சீனா: உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை நாடாக இருப்பது வரமா, சாபமா? கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏப்ரல் மத்திய கால வாக்கில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை கடக்கலாம் என ஐ.நா கணித்துள்ளது. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் உள்ள சீனாவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மத்தியில் இந்தியா விஞ்சும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆசிய நாடுகளுமே ஏறைக்குறைய தலா 140 கோடிக்கு அதிகமான மக்கள்தொகையை கொண்டுள்ளன. மேலும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலான மக்களை இவை கொண்டுள்ளன. சீனாவின் மக்கள்தொகை அடுத்த ஆண்டில் இருந்து சரியக்கூடிய வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு 1 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இது இறப்பு எண்ணிக்கையை விட சிறிது மட்டுமே அதிகம். இதற்கு முக்கிய காரணம் கருத்தரிப்பு சதவீதம் அபரிமிதமாக குறைந்து வருவதே. கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கருத்தரிப்பு சதவீதமும் குறைந்து கொண்டு வருகிறது. 1950இல் 5.7 ஆக இருந்த பெண்கள் குழந்தைபெற்றுகொள்ளும் சதவீதம், தற்போது 2குழந்தைகளாக குறைந்துள்ளது. எனினும், இந்த சரிவு விகிதம் என்பது மெதுவாக உள்ளது. அப்படியென்றால், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா முந்துகிறது என்பதன் அர்த்தம் என்ன? 1950களில் இந்தியாவை கலக்கிய விம்கோ கிளப் - வியப்பூட்டும் வரலாறு19 டிசம்பர் 2022 விடுதலைக்குப் பிறகும் இந்திய அரசு தலித்துகளுக்கு பாஸ்போர்ட் வழங்காதது ஏன்?18 டிசம்பர் 2022 இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த ஆணி இதுதானா?5 மணி நேரங்களுக்கு முன்னர் மக்கள்தொகை குறைப்பில் இந்தியாவை விட சீனாவின் வேகம் அதிகம் 1973இல் 2 சதவீதம் ஆக இருந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை 1983ஆம் ஆண்டுக்குள் 1.1 சதவீதமாக சீனா குறைத்தது. இதில் பெரும்பாலானவை மனித உரிமைகளை கடுமையாக மீறியதன் மூலம் சாதிக்கப்பட்டது என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒரு குழந்தை தொடர்பாகவும் திருமணம், குழந்தைகளுக்கு இடையேயான இடைவெளி தொடர்பாகவும் அங்கு இரு வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த நூற்றாண்டாண்டின் இரண்டாம் பாதியில் ஏறத்தாழ ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அளவில் இந்தியா விரைவான மக்கள்தொகை வளர்ச்சியை கண்டது. இந்த காலகட்டத்தில் இறப்பு விகிதம் சரிந்தது, மக்களின் வாழ்நாள் அதிகரித்தது, அவர்களின் வருமானமும் உயர்ந்தது. நிறைய மக்கள்- குறிப்பாக நகரத்தில் வசிப்பவர்கள்- சுத்தமான குடிநீர், நவீன சாக்கடை வசதியை பெற்றனர். "இருப்பினும் பிறப்பு விகிதம் அதிகமாகவே இருந்தது" என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் மக்கள்தொகை ஆய்வாளரான டிம் டைசன். கடந்த 1952ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியா, முதன்முறையாக தேசிய மக்கள்தொகை கொள்கையை 1976ஆம் ஆண்டு வகுத்தது. அந்த நேரத்தில் சீனா தனது பிறப்பு விகிதத்தை குறைப்பதில் மும்முரமாக இருந்தது. ஆனால் 1975 ஆம் ஆண்டு அவசரநிலையின் போது - அடிப்படை மனித உரிமைகள் இடைநிறுத்தப்பட்ட போது - குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் லட்சக் கணக்கான ஏழைகளுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டது. இது குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எதிரான சமூகப் பின்னடைவுக்கு வழிவகுத்தது. "எமர்ஜென்சி நடக்காமல் இருந்திருந்தால் மற்றும் அரசியல்வாதிகள் அதிக செயல்திறனுடன் செயல்பட்டிருந்தால் கருவுறுதல் குறைவு இந்தியாவில் வேகமாக இருந்திருக்கும். குடும்பக் கட்டுப்பாடு விஷயத்தில் அடுத்தடுத்து வந்த அனைத்து அரசாங்கங்களும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டன," என்று பேராசிரியர் டைசன் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவுக்கு பிறகு மக்கள் தொகை திட்டங்களை அறிமுகப்படுத்திய கிழக்கு ஆசிய நாடுகளான கொரியா, மலேசியா, தைவான் மற்றும் தாய்லாந்து ஆகியவை கூட இந்தியாவுக்கு முன்னதாகவே, குறைந்த கருவுறுதல் நிலை, பிரசவத்தின்போது தாய் சேய் உயிரிழப்பு ஏற்படுவதை குறைத்தல், வருவாய் உயர்வு மற்றும் மனித வளர்ச்சி உயர்வு ஆகியவற்றை அடைந்தன. இன்னும் இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் ஏற்படவில்லை சுதந்திரத்துக்கு பிறகு 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை இந்தியா சேர்த்துள்ளது, மேலும், அடுத்த 40 ஆண்டுகளுக்கு அதன் மக்கள் தொகை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த சில தசாப்தங்களாக அதன் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது, மேலும் நாடு "மக்கள்தொகை பேரழிவு" பற்றிய மோசமான கணிப்புகளை மீறியுள்ளது. எனவே, சீனாவை விட இந்தியா அதிக மக்கள் தொகையை கொள்வது என்பது கவலையளிக்க கூடிய நிலை இல்லை என்று மக்கள் தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருவாய் உயர்வு மற்றும் சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கான மேம்பட்ட அணுகல் ஆகியவை இந்தியப் பெண்களுக்கு முன்பை விட குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள உதவியது, இது வளர்ச்சி வளைவை திறம்பட சமன் செய்துள்ளது. இந்தியாவின் 22 மாநிலங்களில் 17 மற்றும் கூட்டாட்சி நிர்வாகத்தில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒரு பெண்ணுக்கு இறந்து குழந்தைகள் என கருவுறுதல் விகிதங்கள் மாற்று நிலைகளுக்குக் கீழே குறைந்துள்ளன. ( Replacement level எனப்படும் மாற்று நிலை என்பது ஒரு நிலையான மக்கள்தொகையை பராமரிக்க புதிய பிறப்புகள் போதுமானதாக இருக்கும் என்ற நிலையாகும்) இந்தியாவின் வட பகுதியை விட தென் பகுதியில் பிறப்பு விகிதம் குறைவு வேகமாக உள்ளது. "இந்தியாவின் பல பகுதிகள் தென்னிந்தியாவைப் போல இருந்திருக்க முடியாது என்பது ஒரு பரிதாபம்" என்கிறார் பேராசிரியர் டைசன். "எல்லா விஷயங்களும் சமமாக இருப்பதால், வட இந்தியாவின் சில பகுதிகளில் விரைவான மக்கள்தொகை வளர்ச்சி வாழ்க்கைத் தரத்தை தாழ்த்தியுள்ளது" என்றும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவை முந்துவது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? ஏன் அப்படி? காரணம்... சீனா உட்பட ஐந்து நிரந்தர உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான இந்தியாவின் கோரிக்கையை வலுப்படுத்த முடியும். இந்தியா ஐ.நா.வின் ஸ்தாபக உறுப்பினராக உள்ளது மற்றும் நிரந்தர இருக்கைக்கான அதன் கோரிக்கை நியாயமானது என்று எப்போதும் வலியுறுத்துகிறது. ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் மக்கள்தொகைப் பிரிவின் இயக்குநர் ஜான் வில்மோத் கூறுகையில், “[அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால்] விஷயங்களில் உங்களுக்கு சில உரிமைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்” என கூறுகிறார். இந்தியாவின் மக்கள் தொகையியல் மாற்றமடைந்துவரும் போக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றூ கூறுகிறார், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த கே.எஸ். ஜேம்ஸ். குறைபாடுகள் இருந்தபோதிலும் ஏழைகளும் அதிகம் படிப்பறிவு இல்லாதவர்களையும் உள்ளடக்கிய ஜனநாயக நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம் “ஆரோக்கியமான மக்கள்தொகை மாற்றத்தை” நிர்வகிப்பதற்கான சில பெருமைகளை இந்தியா பெற வேண்டும் என்பது ஜேம்ஸ் கருத்தாகும். “பெரும்பாலான நாடுகள் அதிக கல்வியறிவு மற்றும் வாழ்க்கை தரத்தை அடைந்தபின்னரே இதை செய்தன” என்றும் அவர் கூறுகிறார். மற்றொரு மகிழ்ச்சியான செய்தி, உலகில் தற்போது 25 வயதுக்கு கீழ் இருப்பவர்களில் ஐந்தில் ஒருவர் இந்தியர் மற்றும் இந்தியாவில் 47 சதவீதத்தினர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் 1990 களின் முற்பகுதியில் இந்தியா தனது பொருளாதாரத்தை தாராளமயமாக்கிய பிறகு பிறந்தவர்கள். இத்தகைய இளம் இந்தியர்கள் தனித்துவமான சில குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர் என்று பொருளாதார வல்லுநரான ஸ்ருதி ராஜகோபாலன் கூறுகிறார். “இந்த இளம் தலைமுறை இந்தியர்கள் அறிவு மற்றும் நெட்வொர்க் பொருட்கள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நுகர்வோர் மற்றும் தொழிலாளர் ஆதாரமாக இருப்பார்கள். இந்தியர்கள் உலகளாவிய திறமைகளின் மிகப்பெரிய தொகுப்பாக இருப்பார்கள்," என்று அவர் கூறுகிறார். சவால்கள் என்ன? இத்தகைய மக்கள்தொகையின் பலன்களை அறுவடை செய்ய இந்தியா, வேலை செய்யும் வயதில் உள்ள இளம் தலைமுறையினருக்கு போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். ஆனால், வேலை செய்யும் வயதில் உள்ள இந்தியர்களில் வெறும் 40 சதவீதம் பேர் மட்டுமே வேலை செய்கின்றனர் அல்லது வேலை செய்ய விரும்புகின்றனர் என்று இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையம் (CMIE)கூறுகிறது. வேலை செய்யும் வயதில் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும், குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் குறைவான நேரத்தைச் செலவிடுவதால் அதிகமான பெண்களுக்கு வேலைகள் தேவைப்படும். இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையத்தின் கூற்றுப்படி, வேலை செய்யும் வயதுடைய பெண்களில் 10 சதவீதமாக மட்டுமே அக்டோபரில் தொழிலாளர் பட்டியலில் இணைந்துள்ளனர். சீனாவில் இது 69 சதவீதமாக உள்ளது. இடம்பெயர்தல் என்பது மற்றொரு சவால் ஆகும். ஏறக்குறைய 20 கோடி இந்தியர்கள் நாட்டுக்குள்ளேயே - மாநிலங்கள் இடையே மற்றும் மாவட்டங்கள் இடையே- இடம்பெயர்ந்து உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இதில், பெரும்பாலானோர் வேலைக்காக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வோர் ஆவர். “கிராமப்புறங்களில் குறைந்த ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு குறைவு போன்ற காரணங்களால் இடம்பெயர்தல் அதிகரிக்கும்போது நமது நகரங்கள் பெரிதாகும். ஆனால், இவ்வாறு இடம்பெயர்வோருக்கு சரியான வாழ்க்கை தரத்தை வழங்குவார்களா? இல்லையென்றால், அதிக குடிசைப்பகுதிகள் மற்றும் நோய்களில் போய் இது முடியும்” என்கிறார் . குழந்தைகள் திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உள்ளது என்றும் இறப்பு பிறப்பு தொடர்பாக முறையாக பதிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் உள்ளதும் கவலையளிக்க கூடியதாக உள்ளது. மக்கள்தொகை கட்டுப்பாடு" பற்றிய அரசியல் சொல்லாடல்கள் நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மையினரான முஸ்லிம்களை இலக்காகக் கொண்டதாகத் தோன்றுகிறது. உண்மையில், "இந்தியாவின் மதக் குழுக்களுக்கு இடையே குழந்தை பிறப்பதில் உள்ள இடைவெளிகள் பொதுவாக முன்பை விட மிகக் குறைவு" என்று பியூ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் வயதுமூப்பு பிரச்னை 1947இல், இந்தியாவின் சராசரி வயது 21. சொற்பமாக 5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இன்றோ சராசரி வயது 28க்கு மேல், 10%க்கும் அதிகமான இந்தியர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் குறைந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பே மாற்று நிலைகளை எட்டியுள்ளன. "உழைக்கும் வயது மக்கள்தொகை குறைந்து வருவதால், வயதான மக்களை ஆதரிப்பது அரசாங்கத்தின் வளங்களில் பெருகிவரும் சுமையாக மாறும்" என்கிறார் Whole Numbers and Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India என்ற புத்தகத்தின் ஆசிரியர் ருக்மணி எஸ். "குடும்ப கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்பட வேண்டும், மேலும் வயதானவர்கள் தனியாக வாழ்வது கவலைக்குரிய ஆதாரமாக மாறும்," என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cgldky1j52mo
  12. வடக்கிற்கும் கிழக்கிற்கும் வாய்க்கால் வெட்டவேணும்! வடக்கில் குளங்கள் 70% நிரம்பியிருக்காம், சிறுபோகம் செய்வது கடினமாம்.
  13. நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது - வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் எச்சரிக்கை By VISHNU 21 DEC, 2022 | 03:13 PM காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது. கண்துடைப்புக்காக மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக மன்னாரில் இருந்து அகற்ற வேண்டும். அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒன்றினைந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று புதன்கிழமை (21) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக இவ்வளவு காலமும் நீதி அமைச்சர் கூறி வருகிறார். எங்களுக்கு இந்த இழப்பீடு வேண்டாம் என்று நாங்கள் கூறி வந்தோம். காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளும், பிள்ளைகளுமே எமக்கு வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகின்றோம். அரசாங்கத்திடம் பல தடவைகள் கதைத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இழப்பீட்டை வழங்கி எங்களை திசை திருப்ப பார்க்கின்றார்கள். இங்கே ஒன்றும் நடக்கவில்லை என்று காட்டும் வகையிலும் ஐ.நாவிற்கு தமது அறிக்கைகளை வழங்க காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு இழப்பீடு வழங்க முயற்சிக்கின்றனர். நாங்கள் இழப்பீட்டிற்காக இவ்வளவு காலமும் போராடவில்லை. எமது உறவுகளுக்காகவும், அத்தனை உயிர்களுக்காகவுமே நாங்கள் போராடி வருகிறோம். எமது பிள்ளைகளுக்கும், உறவுகளுக்கும் என்ன நடந்தது என்று முதலில் கூறுங்கள். அரசாங்கத்திடம் ஒப்படைத்த பிள்ளைகளையும்,உறவுகளையுமே நாங்கள் கேட்கிறோம்.அவர்களுக்கு என்ன நடந்தது?என்றே கடந்த 15 வருடங்களாக கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.எமது உறவுகளை திருப்பி தாருங்கள் என்று கேட்கின்றோம்.ஆனால் அதை பற்றி கதைக்கிறார்கள் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (ஓ.எம்.பி) பற்றி கதைக்கிறார்கள், நஷ்ட ஈடு பற்றி கதைக்கிறார்கள். மரண சான்றிதழ் வழங்குவதாக கூறுகிறார்கள். நாங்கள் எதையும் கேட்கவில்லை. எமது உறவுகளையும் பிள்ளைகளையுமே கேட்கின்றோம். சுமார் 2200 நாட்களாக மழைக்கும் வெயிலுக்கும் இடையில் நின்று போராடி வருகிறோம். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 148 பேர் இதுவரை மரணித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நஷ்ட ஈடு தருவதாக கூறுகிறார்கள். நாங்கள் இலங்கை அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம். எங்களுக்கு நஷ்ட ஈடு தர நீதி அமைச்சருக்கு என்ன அருகதை உள்ளது? நீதியமைச்சர் மன்னார் பக்கம் வராமல் இருப்பது அவருக்கு நல்லது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது. கண் துடைப்புக்காக மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக மன்னாரில் இருந்து அகற்ற வேண்டும். அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒன்றினைந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். எங்களினால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். சுமார் 2 ஆயிரம் நாட்களாக போராடுகின்ற எமக்கு அதை செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? எனவே இனி வரும் காலங்களில் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறுவதை நிறுத்துங்கள். என அவர் எச்சரிக்கை விடுத்தார். https://www.virakesari.lk/article/143747
  14. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த ஆணி இதுதானா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகமெங்கும் நடக்கும் மிக முக்கியமான அகழாய்வுப் பணிகளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உறுதி செய்ய நடத்தப்படும் பணிகளும் ஒன்று. அப்படி நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக கண்டறியப்பட்ட இயேசு கிறிஸ்து அணிந்து இருந்தாகக் கூறப்படும் அங்கி சமீபத்தில் ஜெர்மன் நாட்டின் டிரியர் நகரில் உள்ள புகழ்பெற்ற புனித பீட்டர் தேவாலயத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்த அங்கியை இங்கிருக்கும் மக்கள் கிறிஸ்துவின் புனித ஆடையாகக் கருதி வழிபடுகின்றனர். கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டு இருக்கும் இந்தப் பழைய அங்கி, 1,500 ஆண்டுகளாக இந்த தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது. இயேசு கிறிஸ்து பயன்படுத்தியது என்று நம்பப்படும் இந்த அங்கியை பொதுமக்களால் நாள்தோறும் பார்க்க முடியாது. ஒரு சில தசாப்தங்களுக்கு ஒரு முறை பொது மக்கள் பார்வைக்காக இந்த அங்கி வெளியே வைக்கப்படுகிறது. இயேசுவின் ஆடையுடன் வழிபாடு படக்குறிப்பு, இயேசு அணிந்திருந்த ஆடை என்று கூறப்படும் ஆடை. மழை, பனி போன்ற கடுமையான வானிலையையும் பொருட்படுத்தாமல் இயேசுவின் இந்த நினைவுச் சின்னத்தைப் பார்க்க, வழிபாடு நடத்த இந்த தேவாலயத்திற்கு ஏராளமான மக்கள் வருகின்றனர். இது போன்ற மத நினைவு சின்னங்கள், மனிதர்களால் கண்டறியப்பட்ட தொல்லியல் கண்டுபிடிப்புகளில் மிகவும் பழைமையானது என்கிறார், வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் ரிச்சர்டு மைல்ஸ். இங்கு வரும் யாத்ரீகர்களும் இயேசுவின் இந்த அங்கியை ஓர் உடையாகப் பார்க்காமல், மிகவும் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னமாகக் கருதுகின்றனர் எனவும் ரிச்சர்டு மைல்ஸ் தெரிவித்தார். தமிழர் தேவசகாயத்துக்கு புனிதர் நிலை - நீண்ட இழுபறிக்கு பிறகு அங்கீகாரம், யார் இவர்?15 மே 2022 இஸ்ரேல் – பாலத்தீனம்: நூறாண்டுகளாகத் தொடரும் சண்டைக்கு என்ன காரணம்?6 ஆகஸ்ட் 2022 இந்தியா வந்த ரஷ்யரை மதம் மாற கட்டாயப்படுத்திய பழங்கால வரலாறு தெரியுமா?27 மார்ச் 2022 1,500 ஆண்டுகள் பழமையான ஆணி படக்குறிப்பு, ஆணி வைக்கப்படும் உறை (மேலே) மற்றும் இயேசுவை சிலுவையில் அறையப் பயன்படுத்தப்பட்ட ஆணி என்று கூறப்படும் ஆணியின் படம். திரியர் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற இந்த தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு தொடர்புடைய இந்த நினைவுச் சின்னம் மட்டுமின்றி, வேறொரு முக்கியமான பொருளும் வைக்கப்பட்டு இருக்கிறது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் ஏற்றி அறையப் பயன்படுத்திய ஆணிகளில் ஒன்றாகக் கருதப்படும் பழைமையான ஓர் ஆணி இங்கு பல நூறு ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வரலாற்று ஆசிரியரான ரிச்சர்டு மைல்ஸ் இந்த ஆணியைக் கையில் தொட்டுப் பார்த்து 'இது மிகவும் அசாதாரணமான ஒன்றாக' இருப்பதாகக் கூறுகிறார். பார்ப்பதற்கு எளிமையான ஒன்றாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப் பயன்படுத்திய ஆணிகளில் ஒன்றான இதனை காணும் மத நம்பிக்கை மிக்க நபர்களுக்கு உணர்ச்சிபூர்வமான தருணமாக அமையும் என்கிறார். இது போன்ற மத நினைவுச் சின்னங்கள் மூலமாக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய தருணங்களின் உணர்வுகளை மீண்டும் உணர முடியும். ஒரு தொல்பொருள் ஆய்வாளராக எனக்கு இந்தப் பொருட்கள் மிகவும் விலை மதிப்பற்றவை. ஆனால் இந்த மத நினைவுச் சின்னங்கள் மக்களிடையே மத ரீதியாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. இயேசு வாழ்ந்த வீடு? பட மூலாதாரம்,K.A.DARK இயேசு கிறிஸ்து தொடர்பான அகழாய்வில் ஈடுபட்டு இருந்த ரீடிங் பல்கலைக்கழக பேராசிரியர் கென் டார்க், கடந்த 2020ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்து குழந்தைப் பருவத்தின் போது வாழ்ந்த வீடு என்று கூறப்படும் வீடு முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று அவர் கண்டறிந்தார். இஸ்ரேல் நாட்டின் நசரத் நகரத்தில் அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்ட போது இது உள்ளது. அந்த வீடு இயேசு கிறிஸ்து, மேரி, ஜோசஃப் ஆகியோர் வாழ்ந்த வீடு என்று முதலில் 19ஆம் நூற்றாண்டில் கூறப்பட்டது. 1930களில் அதை வல்லுநர்கள் மறுத்தனர். 2006 முதல் 14 ஆண்டுகள் அப்பகுதியில் ஆய்வு செய்த பேராசிரியர் கென் டார்க், அது இயேசு கிறிஸ்துவின் வீடுதான் என்று நிறுவ ''இன்னும் வலுவான ஆதாரங்கள் தேவை'' என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cl4g4dv3nd6o
  15. வட மாகாண விளையாட்டு விழா : வவுனியா மாணவனுக்கு தங்கம், வெள்ளி By DIGITAL DESK 2 20 DEC, 2022 | 05:16 PM வட மாகாண விளையாட்டு விழாவில் வவுனியா மாவட்டத்தைச் செர்ந்த சசிகுமார் டனுசன் ஒரு தங்கம் உட்பட 2 பதக்கங்களை வென்று பலத்த பாராட்டைப் பெற்றார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சசிகுமார் டனுசன் வென்றெடுத்தார். 1,500மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள், 37.00 செக்கன்களில் ஓடி முடித்து சசிகுமார் டனுசன் வெற்றிபெற்றார். இப் போட்டிக்கு முந்தைய தினத்தன்று நடைபெற்ற 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள், 09.9 செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாம் இடத்தைப் பெற்றார். https://www.virakesari.lk/article/143670
  16. சொந்த மண்ணில் முதல் தடவையாக டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வி By SETHU 20 DEC, 2022 | 12:00 PM கராச்சியில் இன்று நிறைவடைந்த பாகிஸ்தானுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து 3-0 விகிதத்தில் வென்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரொன்றில் 3 போட்டிகளிலும் தோல்வியுற்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். கடந்த 17 வருடங்களின் பாகிஸ்தானில் முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய இங்கிலாந்து அணி 3:0 விகிதத்தில் வென்றுள்ளது. கராச்சியில் நடைபெற்ற 3 ஆவது போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 304 ஓட்டங்களையும் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 354 ஓட்டங்களையும் பெற்றன. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 216 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. இதனால் இங்கிலாந்துக்கு 176 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணியிக்கப்பட்டது. போட்டியின் 4 ஆவது நாளான இன்று காலை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வென்றது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களில் பென் டக்கெட் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களைப் பெற்றார். ஸாக் க்ராவ்லி 41 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர். 3 ஆவது போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் இங்கிலாந்து வீரர் ஹரி புரூக் தெரிவானார். https://www.virakesari.lk/article/143610
  17. ரயில்வே வேலைவாய்ப்பு மோசடி: 28 தமிழர்களை ரயில்களை எண்ணச் செய்த கும்பல் - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் 46 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை சேர்ந்த 28 இளைஞர்களை ரயில்வேயில் வேலைக்கு பயிற்சி எனக் கூறி, ஒரு மாதமாக டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்களை எண்ண விட்டு ஏமாற்றிய சம்பவம் நடந்திருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுப்புசாமி (78), டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் டெல்லி ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு பரிசோதகர்கள், ரயில் போக்குவரத்து உதவியாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேரிடம் இருந்து சுமார் ரூ.2.67 கோடி வரை பண மோசடி செய்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகாரில் தமிழ்நாட்டின் மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் ரயில்வே துறையில் வேலைக்காக ரூ.2 லட்சம் ரூபாய் முதல் ரூ.24 லட்சம் வரை பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மோசடி நடந்தது எப்படி? பிடிஐ செய்தி முகமையுடன் தொலைபேசியில் பேசிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான சுப்புசாமி, தனது பகுதியில் வசிக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான விளம்பரங்களை பகிர்வது, அரசு வேலை பெற உதவுவது என பல்வேறு உதவிகளை செய்து வந்தேன். அப்படி செய்து வரும் போது, கோவையை சேர்ந்த சிவராமன் என்பவர் தனக்கு அறிமுகம் ஆனதாக கூறினார். சிவராமன் டெல்லியில் உள்ள எம்பி குடியிருப்பில் வசித்து வருவதாகவும், பல்வேறு துறை அமைச்சர்களுடன் தனக்கு நெருக்கம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ரயில்வே துறையில் தனக்கு தெரிந்த உயர் அதிகாரிகளை அணுகி, வேலை பெற்றுத்தர உதவுவதாக உறுதி அளித்துள்ளார். அதனை நம்பி முதல் கட்டமாக 3 பேருக்கு வேலையை பெற்றுத்தர டெல்லிக்கு வந்து சிவராமனை சந்தித்துள்ளார் சுப்புசாமி. கொரோனா வைரஸ்: சீனாவில் நிரம்பி வழியும் மயானங்கள்; பிணங்களை எரிக்கக் குவியும் கூட்டம்3 மணி நேரங்களுக்கு முன்னர் 10,500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த 97 வயது மூதாட்டிக்கு வெறும் 2 ஆண்டு சிறை4 மணி நேரங்களுக்கு முன்னர் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த ஆணி இதுதானா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 25 பேரிடம் ரூ. 2.67 கோடி வசூல் பட மூலாதாரம்,GETTY IMAGES சிவராமன் மூலமாக சுப்புசாமிக்கு, டெல்லியில் உள்ள வடக்கு ரயில்வேயின் உதவி இயக்குநர் என்று கூறிக்கொண்டு அறிமுகமாகியுள்ளார் விகாஸ் ராணா. அவர் முதல் கட்டமாக அழைத்து வரப்பட்ட 3 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தமிழகத்தில் விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்த பலருக்கும் தெரியவர மேலும் 25 பேர் வேலைக்காக சுப்புசாமியிடன் பணம் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்த 28 பேருக்கும் முதல் கட்டமாக டெல்லி கன்னாட் பிளேஸ் (Connaught Place) பகுதியில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று இருக்கிறது. அதைத் தொடர்ந்து டெல்லி சங்கர் மார்கெட் பகுதியில் உள்ள வடக்கு ரயில்வேயின் இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடந்துள்ளன. இந்த பணிக்காக விண்ணப்பித்த 28 பேரில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி முடித்தவர்கள். மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் முடிந்த பிறகு 28 பேரையும் அழைத்து கொண்டு, ரயில்வே உயர் அதிகாரி என்று கூறிய விகாஸ் ராணேவும் அவரது கூட்டாளியான தூபேவும் டெல்லியில் உள்ள பரோடா ஹவுஸிற்கு அழைத்து சென்று, பயிற்சிக்கான பணியாணையை வழங்கி அதனுடன் பயிற்சி கையேடும் வழங்கியுள்ளனர். பயிற்சி முடிந்த பிறகு வேலைக்கான பணியாணையை வழங்குவதாக ராணாவும் அவரது கூட்டாளியான தூபேவும் உறுதி அளித்துள்ளனர். பயிற்சிக்கான ஆனையை பெற்றுக்கொண்ட 28 பேரில் ஒருவரான மதுரையை சேர்ந்த செந்தில் குமார் கூறும் போது, "தினசரி 8 நேரம் டெல்லி ரயில் நிலையத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டதாகவும், அங்கு இருக்கும் மற்ற ரயில் நிலைய அதிகாரிகளிடம் இந்த தகவலை தெரிவிக்கக் கூடாது என்று தங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தன," என பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார். ரயில்களை கணக்கெடுத்த இளைஞர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த ஜூன் முதல் ஜூலை மாதம் வரை ஒவ்வொரு நடைமேடைக்கும் தினசரி வந்து செல்லும் ரயில்கள் மற்றும் அவற்றின் பெட்டிகளை 8 மணி நேரம் எண்ணியதாகவும் அவர் கூறினார். பயிற்சிக்கு பின்னர் விகாஸ் ராணவை சந்திக்க அவரது அலுவலகம் செல்லும் போது சந்தேகம் ஏற்பட்டது. பணம் பெற்றது முதல், பயிற்சிக்கான ஆணை வழங்கியது வரை ஒவ்வொரு முறையும் ராணாவை சந்திக்கச் செல்லும் போது ரயில்வே துறையின் அலுவலகத்துக்கு வெளியே வைத்தே தமிழக இளைஞர்களை பார்த்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவர் வழங்கிய சான்றிதழ்களை சரிபார்த்த போது, 28 பேருக்கும் போலி பணியாணைகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தாக அவர் தெரிவித்தார். உடனடியாக சுப்புசாமியிடம் தகவலை தெரிவித்த பிறகு அவர் மூலமாக காவல்துறையிடம் புகார் அளிக்க 'ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்' முடிவு செய்துள்ளனர். விசாரணை தொடங்கிய போலீஸ் பட மூலாதாரம்,DELHI POLICE EOW இதையடுத்து டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் சுப்புசாமி அளித்த புகாரில் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 28 பேரிடம் ரூ. 2.67 கோடி ரூபாய் பெற்று விகாஷ் ராணாவும் அவரது கூட்டாளிகளும் ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். மேலும், தங்களது பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறும் சுப்புசாமி புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையை தொடங்கி வேலை வாய்ப்பு மோசடி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வேதுறை பதில் டெல்லி ரயில்வே துறையின் பெயரை பயன்படுத்தி நடந்த வேலை வாய்ப்பு மோசடி தொடர்பாக பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய, ரயில்வே அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் யோகேஷ் பவேஜா, ரயில்வே துறைக்கான பணியிடங்கள் அனைத்தும் அந்த துறையின் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படுவதாகவும் வேலைவாய்ப்பு தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் இளைஞர்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckr7rgd8xj2o
  18. வடகொரியாவில் 11 நாட்களுக்கு பொது மக்கள் சிரிப்பதற்கு தடை By DIGITAL DESK 2 21 DEC, 2022 | 04:32 PM பொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடையை வடகொரியாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு சாதாரணமாக வெளிநாட்டினர் நுழைய முடியாதவாறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. விசித்திரமான சர்வாதிகார சட்டங்கள் அமுலில் உள்ளன. வடகொரியாவின் தற்போதைய ஜனாதிபதியாக கிம் ஜாங்-வுன் உள்ளார். அவரது கண் அசைவை மீறி அங்கு ஒரு எறும்பு கூட சுதந்திரமாக செயல்பட முடியாது. அந்த அளவிற்கு கடுமையான விதிகளும் தண்டனைகளும் அமுலில் உள்ளன. இந்நிலையில், வடகொரியால் வசிக்கும் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தந்தை கிம் ஜாங்-இல்லின் பத்தாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, டிசம்பர் 17ஆம் திகதி முதல் 11 நாள்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, இந்த 11 நாள்களுக்கும் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது என்று மிகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகாலமாக துக்க நாள்களில் இந்த தடை உத்தரவு அமுலில் இருப்பது பலரும் அறிந்ததே. அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது. 11 நாள்களுக்குப் பிறகே அவரது இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்றும் மிகக் கொடுமையான தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன. https://www.virakesari.lk/article/143767
  19. கொரோனா வைரஸ்: சீனாவில் நிரம்பி வழியும் மயானங்கள்; பிணங்களை எரிக்கக் குவியும் கூட்டம் பெட்ரா சிவிக் பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கோவிட் பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் திணறிவருகிறது சீனா. சீனா முழுவதுமுள்ள தகனக் கூடங்களுக்கு இறந்த உடல்கள் அதிக அளவில் கொண்டுவரப்படுவதால், கூட்டத்தைச் சமாளிக்க அவற்றின் ஊழியர்கள் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர். சீன அரசாங்கம் தனது கடுமையான 'ஜீரோ-கோவிட்' நடவடிக்கைகளை நீக்க முடிவு செய்ததை அடுத்து, எரிப்பதற்காகக் கொண்டுவரப்படும் உடல்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க முடியாமல், சீனா முழுவதும் உள்ள தகனக் கூடங்கள் திணறி வருகின்றன என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி முகமையில் பணிபுரியும் பெய்ஜிங் பத்திரிகையாளர் டேக் காங், டோங்ஜியாவோ பகுதியில் கோவிட் இறப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட தகனக் கூடம் மற்றும் இறுதிச் சடங்கு மண்டபங்களைப் பார்வையிட்டார். பெய்ஜிங்கிலிருந்து பிபிசியிடம் காங் பேசுகையில், "சவப்பெட்டிகள் தொடர்ந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டே இருந்ததால் ஒன்று அல்லது இரண்டு டஜன் பேர் வெளியே காத்துக்கொண்டிருந்தனர்," என்கிறார். இறுதிச் சடங்கு மண்டபங்களைச் சுற்றியிருந்த கடைக்காரர்களிடம் அவர் பேசியபோது, அங்கு தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதாக அவர்கள் கூறினர். "வழக்கமாக ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு டஜன் உடல்கள் எரியூட்டப்படுவதற்கு மாறாக தற்போது தினமும் 50 முதல் 100 உடல்கள் வரை எரியூட்டப்படுவதாக அங்கிருந்த ஒருவர் குறிப்பிட்டுக் கூறினார்," என்கிறார் காங். கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி? கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி? கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான விளக்கம் 2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பெய்ஜிங்கில் மட்டுமே இந்த இறுதிச் சடங்கு மண்டபங்கள் இப்படிப் பரபரப்பாக இல்லை. நாட்டின் வடகிழக்கிலிருந்து அதன் தென்மேற்கு வரை பல இடங்களில் இறப்பு எண்ணிக்கையைச் சமாளிக்க தகனம் செய்யும் ஊழியர்கள் போராடி வருவதாகத் தெரிவிக்கிறது ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம். பெய்ஜிங்கின் வடகிழக்கில் 700 கி.மீ. தொலைவில் உள்ள ஷென்யாங் நகரில், இறந்தவர்களின் உடல்கள் ஐந்து நாட்கள் வரை புதைக்கப்படாமல் விடப்படுவதாக ஓர் இறுதிச் சடங்கு மையத்தில் பணிபுரியும் ஊழியர் கூறினார். மேலும், "தகனக் கூடங்கள் இங்கு முற்றிலும் நிரம்பியுள்ளன. இதுபோன்ற ஒரு வருடத்தை நான் பார்த்ததே இல்லை," என்கிறார் அந்த ஊழியர். அதேநேரம், கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை விவரிக்கவே முடியாது என்கிறார் காங். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பெய்ஜிங்கில் உள்ள டோங்ஜியாவோ தகனக் கூடம் முன்பு இறந்த உடல்களை எரிக்க கார்களில் காத்திருக்கும் மக்கள் கடந்த திங்களன்று இரண்டு இறப்புகளும் செவ்வாயன்று ஐந்து இறப்புகளுமே கோவிட் காரணமாக ஏற்பட்டன என்கின்றனர் சீன அதிகாரிகள். கடந்த சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக கொரோனா இறப்பு பதிவு செய்யப்பட்டது இதுவே முதன்முறை. பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு சில கடினமான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை டிசம்பரில் சீனா நீக்கியது. இதனால் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மக்கள்தொகை கொண்ட சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. சீனா முழுவதும் உள்ள தகனக் கூடங்களில் என்ன நடக்கிறது? டோங்கிஜாவோ நகருக்கு காங் சென்றுவந்த இரு நாட்களுக்கு பிறகும் சாலையில் இறந்தவர்களைத் தாங்கிச் செல்லும் வாகனங்கள் மற்றும் கார்கள் அணிவகுத்து நின்றதாக செய்தி வெளியிட்டது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை. தொடர்ந்து தகனம் செய்யப்பட்ட உடல்கள் காரணமாகச் சூழ்ந்திருந்த புகைக்கு மத்தியிலும் டோங்கிஜாவோ பகுதிக்கு வெளியே சுமார் 30 வாகனங்கள் காத்துக்கிடந்தன. அங்கிருக்கும் தகனக் கூடங்களுக்கு வெளியே தங்களது அன்புக்குரியவர்களின் மிச்சங்களுக்காகக் காத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களைக் காண முடிகிறது. சில தகன மேடைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கி வருவதாக ப்ளூம்பெர்க் மற்றும் ஸ்கை நியூஸ் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "சமீபத்திய நாட்களில் கொண்டுவரப்பட்ட உடல்களின் எண்ணிக்கை முன்பைவிட பல மடங்கு அதிகம்" என்று சீனாவின் தென்மேற்கில் உள்ள சோங்கிங்கில் உள்ள ஒரு தகனக் கூடத்தின் ஊழியர் ஏ.எஃப்.பி-யிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES அதுமட்டுமல்லாது, பல தகனக் கூடங்களில் உடல்களை வைப்பதற்கான குளிர்பதனக் கிடங்குகள் நிரம்பிவிட்டதாகக் கூறுகிறார் பெயரைத் தெரிவிக்க விரும்பாத ஊழியர் ஒருவர், "இது கோவிட் தொடர்பானதா என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. அப்படியிருந்தால் இதுகுறித்து நீங்கள் பொறுப்பான தலைவர்களிடம் கேட்க வேண்டும்," என்கிறார். வேகமெடுக்கும் கொரோனா பரவல் "கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக பரிசோதனை முடிவினை பெற்ற தங்களது உறவினர்கள் இறந்துவிட்டதாகக் கூறும் நபர்களிடம் பேசினேன். இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் கோவிட் காரணமாக எந்தவித அதிகாரப்பூர்வ இறப்பும் பதிவுசெய்யப்படவில்லை. கோவிட் இறப்புகளை சீனா கணக்கிடும் விதம் கொஞ்சம் தந்திரமானது," என்று காங் கூறினார். 2019இன் பிற்பகுதியில் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடங்கியதில் இருந்து சீனா 5,242 கோவிட் இறப்புகளையே பதிவு செய்துள்ளது. இது உலகளாவிய கணக்கின்படி மிகக் குறைவான இறப்பு எண்ணிக்கை ஆகும். ஆனால், கோவிட் பாதிப்புக்குப் பிறகு நிமோனியா அல்லது சுவாசக் கோளாறு ஆகியவற்றால் இறப்பவர்களின் கணக்கு மட்டுமே கோவிட் இறப்புகளாகக் கருதப்படும் எனச் சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "கோவிட் பாதிக்கப்பட்ட பின் மாரடைப்பு அல்லது இதய நோய் ஏற்பட்டு இறப்பு ஏற்பட்டால் அது கோவிட் இறப்பு என்ற வகைப்பாட்டில் வராது" என்று பீக்கிங் பல்கலைக்கழக தலைமை மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு தலைவர் வாங் குய்கியாங் கூறினார். சீனாவை மேலும் 3 கொரோனா அலைகள் தாக்க வாய்ப்பு- இந்தியாவுக்கு அதனால் என்ன பாதிப்பு- உலகில் முதன்முறையாக குழந்தையின் இதய செயலிழப்புக்கு ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை மாதவிடாய் காலத்தில் அதீத ரத்தப்போக்கு யாருக்கெல்லாம் ஏற்படும்- தீர்வு என்ன- தற்போதைய கோவிட் அலைக்கு மத்தியில் வைரஸின் புதிய கொரோனா வைரஸ் திரிபுகள் உருவாகக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "வைரஸின் பரவும் திறன் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் திறன் ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் அதிகரிக்கும் என்பது ஒப்பீட்டளவில் சாத்தியமில்லை" என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அதிகாரி சூ வென்போ கூறினார். கட்டாய கொரோனா பரிசோதனை விதிமுறை தளர்த்தப்பட்டதால் சீனாவின் கோவிட் தொற்று எண்ணிக்கையைக் கண்காணிப்பது கடினமாக்கியுள்ளது, எத்தனை பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்பதைக் கணக்கிடுவது இப்போது சாத்தியமற்றது என்று அதிகாரிகள் கடந்த வாரம் ஒப்புக்கொண்டுள்ளனர். "இறுதிச் சடங்கு ஒன்றிலிருந்தவர்களில் ஒருவர் இறப்புச் சான்றிதழில் மரணத்திற்கான காரணம் கோவிட் எனக் குறிப்பிடப்படாமல் நிமோனியா என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறினார்" என்று காங் கூறினார். 2023-ல் பத்து லட்சம் இறப்புகள் எனக் கணிப்பு இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் ஏவல்யூவேஷன் (IHME) எனும் நிறுவனத்தின் புதிய கணிப்பின்படி, கோவிட் கட்டுப்பாடுகள் திடீரென நீக்கப்படுவதால் 2023ஆம் ஆண்டு அதிக பரவல் ஏற்பட்டு உலகளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS/XIAOYU YIN படக்குறிப்பு, மருந்து கடைகளுக்கு வெளியே காத்திருக்கும் டெலிவரி நிறுவன ஊழியர்கள் IHME என்பது அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு சுயாதீனமான உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மையமாகும். ஏப்ரல் 1, 2023க்குள் 3,22,000 இறப்புகள் வரை ஏற்படும் என்றும், அதே தேதியில் நோய்த்தொற்று உச்சத்தை எட்டும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகும் பரவல் தொடர்ந்து இருக்கும் என ஆய்வு கணித்துள்ளது. "சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையானது வைரஸின் முந்தைய திரிபுகளைக் கையாள்வதில் பலனளித்தது. ஆனால், ஒமிக்ரான் வகை திரிபுகளில் இது அதிக பலன் தராது," என்று IHME இயக்குநர் கிறிஸ்டோபர் முர்ரே கூறுகிறார். ஹாங்காங்கில் சமீபத்தில் ஏற்பட்ட ஒமிக்ரான் பரவல் குறித்த தரவுகளின் அடிப்படையில் இந்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. "வுஹானில் ஏற்பட்ட முதல் அலையின் போது பெரிய அளவில் இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இறப்பு விகிதம் குறித்த தகவல்களைப் பெற ஹாங்காங்கை தேர்ந்தெடுத்தோம்," என்கிறார் முர்ரே. ஆனால் சீன மருத்துவமனைகள், அடுத்த அலை குறித்து இப்போதைக்கு அச்சப்படவில்லை என்றே தோன்றுகிறது. பெய்ஜிங்கில் மருத்துவமனை ஒன்றைப் பார்வையிட்ட காங், "பெரிய கூட்டநெரிசலுக்கான அறிகுறிகள் எதுவும் இங்கு காணப்படவில்லை. ஆனால் நிச்சயமாக, பெய்ஜிங்கை வைத்து மட்டும் சீனாவின் ஒட்டுமொத்த நிலையைக் கணக்கிட முடியாது. ஏனென்றால், ஒட்டுமொத்த சீனாவிலும் சிறந்த மருத்துவ கட்டமைப்புகளைக் கொண்டது பெய்ஜிங்தான்," என்கிறார். https://www.bbc.com/tamil/global-64049902
  20. 10,500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த 97 வயது மூதாட்டிக்கு வெறும் 2 ஆண்டு சிறை கட்டுரை தகவல் எழுதியவர்,பால் கிர்பி மற்றும் ராபர்ட் கிரீனால் பதவி,பிபிசி செய்திகளுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, இம்கார்ட் ஃபியூஷ்னர் அடால்ஃப் ஹிட்லரின் நாஜி வதை முகாம் கமாண்டரிடம் செயலாளராக பணியாற்றிய பெண் ஒருவர் 10,500 கொலைகளில் உடந்தையாக இருந்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 97 வயதான இம்கார்ட் ஃபியூஷ்னர் ஜெர்மனியின் ஸ்டுட்ஹாஃப் நகரில் இருந்த நாஜி வதை முகாமில் தனது பதின்ம வயதில் 1943 முதல் 1945 வரை தட்டச்சராக பணிபுரிந்துள்ளார். நாஜி குற்றங்களுக்காக கடந்த சில தசாப்தங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் பெண் இவர்தான். இவருக்கு இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர் உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. சிவில் பணியாளராக இருந்த போதிலும் வதை முகாம்களில் என்ன நடக்கிறது என்பதை முற்றிலும் அறிந்தவராகவே அவர் இருந்தார் என்பதை நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் நிலவிய மோசமான சூழலால் யூதர்கள், யூதர் அல்லாத போலந்து குடிமக்கள், போரில் பிடிபட்ட சோவியத் வீரர்கள் உள்ளிட்ட 65 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. 10,505 பேர் கொல்லப்பட உதவியாகவும், மேலும் 5 பேரின் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாகவும் இம்கார்ட் ஃபியூஷ்னர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளன. அப்போது அவர் 18 அல்லது 19 வயது மட்டுமே நிரம்பியவர் என்பதால் சிறப்பு சிறுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். தற்போதைய போலந்தின் டான்ஸ்க் நகருக்கு அருகே ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் அடைபட்டிருந்த ஆயிரக் கணக்கானோரை கொலை செய்ய 1945ம் ஆண்டு முதல் விஷவாயு மூலம் கொல்வது உள்பட பல முறைகள் பின்பற்றப்பட்டன. நாஜிக்களிடம் இருந்து தப்பிக்கப் பதுங்கிய பெண்ணின் டைரி- லட்சக்கணக்கில் விற்பனையானது ஏன்?3 மே 2022 ஹிட்லர் உலகப் போரை தொடங்கிய தருணம் எப்படி இருந்தது?28 பிப்ரவரி 2022 ஹிட்லருக்காக 'ஆரிய' கர்ப்பிணிகள் பிரசவித்த பல ஆயிரம் குழந்தைகள் - அதிகம் அறியப்படாத வரலாறு30 செப்டெம்பர் 2022 வடக்கு ஜெர்மனியில் உள்ள இட்ஸெஹோ நகர நீதிமன்றம், வதை முகாமில் இருந்து உயிருடன் மீண்டவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தது. அவர்களில் சிலர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்துவிட்டனர். 2021-ம் ஆண்டு செப்டம்பரில் விசாரணை தொடங்கிய போது, ஓய்வுக்கால இல்லத்தில் இருந்து தப்பிவிட்ட இம்கார்ட் ஃபியூஷ்னரை ஹம்பர்க் நகர தெருவில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் நாஜி கொலைக் கருவியாக செயல்பட்டதாக 1955-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட அதன் கமாண்டர் பால் வெர்னர் ஹோப்பே 5 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். நாஜி வதை முகாமில் காவலராக பணிபுரிந்ததே அங்கு நடந்த கொலைகளுக்கு உடந்தையாக இருந்தது தான் என்று ஜான் டெம்ஜான்ஜூக் வழக்கில் தீர்ப்பு வெளியானதும், 2011-ம் ஆண்டுக்குப் பிறகு அதுபோன்ற ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. அந்த தீர்ப்புதான் சிவில் பணியாளரான இம்கார்ட் ஃபியூஷ்னரை விசாரணைக் கூண்டில் ஏற்றியது. வதை முகாம் கமாண்டரிடம் நேரடியாக பணியாற்றிய அவர், வதை முகாமில் அடைபட்டிருந்த கைதிகள் மீதான அனைத்து நடவடிக்கைகளிலும் தொடர்புடையவராக இருந்தார். பட மூலாதாரம்,HOLOCAUST EDUCATIONAL TRUST படக்குறிப்பு, 2017ல் வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியுடன் ஸ்டுட்ஹாஃப் நகருக்கு திரும்பிய மன்ஃப்ரெட் கோல்ட்பெர்க் விசாரணையின் போது, அவர் தமது மௌனத்தைக் கலைக்கவே 40 நாட்களாயின. ஒரு நாள் திடீரெனப் பேசிய அவர், "நடந்த விஷயங்களுக்காக என்னை மன்னியுங்கள்" என்று கூறினார். "ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் அந்த நேரத்தில் இருந்தமைக்காக வருந்துகிறேன் என்று மட்டுமே இப்போதைக்கு என்னால் கூற முடியும்" என்றார் இம்கார்ட் ஃபியூஷ்னர். ஹோப்பெயின் அலுவலகத்தில் பணிபுரிந்த பல தட்டச்சர்களுள் அவரும் ஒருவர் என்பதால், அவருக்கு என்ன தெரியும் என்பது குறித்த சந்தேகங்கள் இருப்பதை கருத்தில் கொண்டு இம்கார்ட் ஃபியூஷ்னரை விடுவிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஹிட்லரின் எஸ்.எஸ். படைப் பிரிவுத் தலைவராக பணிபுரிந்த ஹெய்ன்ஸ் ஃபுர்ஷிஸ்டம் என்பரை அவர் மணம் புரிந்தார். இருவரும் ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில்தான் சந்தித்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. வடக்கு ஜெர்மனியில் உள்ள சிறிய நகரில் அரசு அலுவலராக அவர் பணிபுரிந்தார். அவரது கணவர் 1972-ம் ஆண்டு மரணம் அடைந்தார். வதைமுகாமில் இருந்து உயிருடன் மீண்ட ஜோசஃப் சாலமோனோவிச், நீதிமன்றத்தில் விசாரணையின் போது நேரில் சென்று சாட்சியம் அளித்தார். 1944-ம் ஆண்டு அவரது தந்தை விஷ ஊசி செலுத்தி கொல்லப்படும் போது அவர் 6 வயது சிறுவனாக இருந்தார். விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அலுவலகத்தில் வெறுமனே அமர்ந்து கொண்டு, என் தந்தையின் இறப்புச் சான்றிதழ் மீது முத்திரை இடுபவராக இருந்தாலும் கூட அங்கு நடந்த ற்றங்களில் இம்கார்ட் ஃபியூஷ்னருக்கு மறைமுகமாக தொடர்பு உண்டு" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வியன்னாவில் இருந்து வடக்கு ஜெர்மனியில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியம் அளித்த ஜோசஃப் சாலமோனோவிச் ஸ்டுட்ஹாஃப் வதைமுகாமில் இருந்து மீண்ட மன்ஃபிரெட் கோல்ட்பெர்க் என்பவரோ, தீர்ப்பளிக்கப்பட்ட நேரம் தான் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறுகிறார். பிபிசியிடம் பேசிய அவர், "97 வயது மூதாட்டியை சிறையில் அடைக்க முடியாது என்பதை முன்கூட்டியே தெரியும் என்பதால் இதனை ஒருவித அடையாள தீர்ப்பாகவே கருத முடியும்" என்று கருத்து தெரிவித்தார். "காலம் கடந்ததாக இருப்பினும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் இது அமைய வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நடந்த குற்றங்களுக்காக நடந்த கடைசி விசாரணை இம்கார்ட் ஃபியூஷ்னருடையதாகவே இருக்கும். ஸ்டுட்ஹாஃப் வதை முகாமில் நாஜிக்கள் புரிந்த கொடூர குற்றங்கள் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் அண்மையில் முடிவுக்கு வந்தன. அந்த வதை முகாமில் காவலராக பணிபுரிந்த ஒருவருக்கு அங்கு நடந்த குற்றங்களில் தொடர்பு இருக்க வாய்ப்புகள் அதிகம் என்ற போதிலும் அவர் தற்போது விசாரணைக்கு உகந்த நிலையில் இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. 5 ஆயிரம் கொலைகளுக்கும் மேல் உடந்தையாக இருந்ததாக எஸ்.எஸ். முகாம் காவலர் புரூனோ டேவுக்கு 2020-ம் ஆண்டு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2011-க்குப் பிந்தைய நாஜி குற்ற வழக்குகள் ஜான் டெமியாநியூக் - சோபிபோர் வதை முகாமில் 28,000 க்கும் மேற்பட்ட யூதர்கள் கொலையில் உடந்தையாக இருந்தமைக்காக 2011ல் 5 ஆண்டு தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் மேல்முறையீட்டின் பேரில் விடுவிக்கப்பட்ட அவர், அடுத்த ஆண்டே தனது 91-வது வயதில் இறந்தார். ஆஸ்கர் கிரானி - ஆஷ்விட்ஸில் வதை முகாமில் புத்தகக் காப்பாளரான இவர், 3 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதற்கு உடந்தையாக இருந்தார் என்று 2015ல் தண்டிக்கப்பட்டார். ஆனால், அவர் ஒருபோதும் சிறைக்குச் செல்லவில்லை, மேல்முறையீட்டு மனு விசாரணையின் போதே 2018ல் தனது 96 வயதில் இறந்துவிட்டார். ரெய்ன்ஹோல்ட் ஹானிங் - அவுஷ்விட்ச் வதை முகாமில் எஸ்.எஸ். காவலராக இருநத இவர், யூதர் படுகொலைக்கு உதவி புரிந்ததாக 2016ல் தண்டனை பெற்றார். ஆனால், மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த போதே அடுத்த ஆண்டு தனது 95-வது வயதில் மரணமடைந்தார ஃபிரெட்ரிக் கார்ல் பெர்ஷே - நோ யெங்காமே வதை முகாமின் முன்னாள் காவலரான இவர், பிப்ரவரி 2021ம் ஆண்டு அவரது 95 வயதில் அமெரிக்காவில் இருந்து ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஜெர்மன் வழக்குரைஞர்கள் கைவிட்டனர். அவரது தற்போதைய கதி என்னவென தெரியவில்லை. ஜோசப் எஸ் - சாக்சென்ஹவுசன் வதை முகாமில் 3,500 க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொலைக்கு உதவி புரிந்ததாக 2022ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 101 வயதான அவர், ஜெர்மனியில் நாஜி கால போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட மூத்த நபர் ஆவார், ஆனால் வயது மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பில்லை. https://www.bbc.com/tamil/articles/cgldl55k28zo
  21. பாகிஸ்தானில் பலரை பணய கைதிகளாக வைத்திருந்த 33 தீவிரவாதிகளை கொன்று காவல் நிலையத்தை மீட்ட படையினர் 20 டிசம்பர் 2022 பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அந்நாட்டின் தொலைதூர பகுதியில் உள்ள காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரை பணய கைதிகளாக வைத்திருந்த தீவிரவாதிகள் 33 பேரைக் கொன்று அந்த இடத்தை மீட்டிருக்கிறார்கள். வட மேற்கு பன்னு மாவட்டத்தில் உள்ள இந்த காவல் வளாகத்தை அதனுள்ளே இருந்த பாகிஸ்தான் தாலிபன் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் அதனுள்ளே இருந்தனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிஃப் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், தீவிரவாதிகளால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சிறப்புப் படையைச் சேர்ந்த இருவர் பலியானதாகவும் தெரிவித்தார். நடந்த சண்டையில் 10 முதல் 15 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். TTP என்று அழைக்கப்படும் பாகிஸ்தானிய தலிபான் இயக்கத்தினர் காவல் நிலைய தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. கடந்த மாதம் அரசாங்கத்துடனான சண்டை நிறுத்த முடிவை முறித்துக் கொண்டு ஆயுதக் குழுவினர் தங்களுடைய தாக்குதல்களை தொடர்ந்தனர். அரசு தரப்பும் ஆயுததாரிகளும் கடந்த பல ஆண்டுகளாகவே மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். டிடிபி என்ற இந்த ஆயுதக் குழு 2007இல் உருவானது. இதைத்தொடர்ந்து 2014இல் நடந்த ஒரு ராணுவ நடவடிக்கை மூலம் இந்த குழு ஒடுக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு அதன் உறுப்பினர்கள் தலைதூக்கத் தொடங்கினர். ஆப்கானிஸ்தான் தாலிபன்களிடம் இருந்து இந்த குழு தனித்து இயங்கி வருகிறது. அதே சமயம், 2020இல் அமெரிக்காவுடன் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு ஆப்கன் தாலிபன்கள் ஒப்புக்கொண்டு, கடந்த ஆண்டு அந்நாட்டின் கட்டுப்பாட்டை தங்கள் வசமாக்கிக் கொண்டது முதல் பாகிஸ்தான் தொலைதூர பகுதியில் டிடிபி ஆயுததாரிகளின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. இலங்கையில் கோட்டா நியமித்த ஜனாதிபதி செயலணியை கலைத்த ரணில் - என்ன நடந்தது?20 டிசம்பர் 2022 சீனாவை மேலும் 3 கொரோனா அலைகள் தாக்க வாய்ப்பு: இந்தியாவுக்கு அதனால் என்ன பாதிப்பு?20 டிசம்பர் 2022 பழங்குடியினரை ஏமாற்றும் பாமாயில் ஆலைகள் - பிபிசி புலனாய்வில் அதிர்ச்சி தகவல்20 டிசம்பர் 2022 ஆப்கனிலும் பாகிஸ்தானிலும் உள்ள இந்த இரண்டு குழுக்களும் கடும்போக்கு இஸ்லாமியவாத சித்தாந்தத்தை கடைப்பிடிப்பவை. இந்த குழுவினர் பணயக்கைதிகளை சிறைப்பிடித்த பகுதி இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. பட மூலாதாரம்,FARHATULLAH நடந்த சம்பவத்தை நாடாளுமன்றத்தில் விவரித்த அமைச்சர் ஆசிஃப், 33 தீவிரவாதிகளும் வெவ்வேறு ஆயுத குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், பயங்கரவாத எதிர்ப்புப்படை வளாகத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். அதில் ஒரு தீவிரவாதி பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளியின் தலையில் செங்கலால் தாக்கி அவரது ஆயுதத்தை பறித்த பின்னர் அந்த வளாகத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பணயக்கைதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக தீவிரவாதிகள் தாங்கள் பாதுகாப்பாக வெளியேற கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் மோதல் முற்றி கடைசியில் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. பணயக்கைதிகளை பிடித்திருந்தவர்கள், தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, உள்ளூர் நேரப்படி நள்ளிரவைக் கடந்த 12:30 மணிக்கு (07:30 GMT) காவல் நிலையத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட ராணுவ கமாண்டோக்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி சம்பவ பகுதியில் வெடிச்சத்தங்களும் துப்பாக்கியால் சுடும் சத்தமும் கேட்டதாக சம்பவ பகுதிக்கு அருகே இருப்பவர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,FARHATULLAH இந்த சண்டையின் முடிவில் "அனைத்து பயங்கரவாதிகளும்" கொல்லப்பட்டு விட்டதாகவும், பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆசிஃப் நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், விடுவிக்கப்பட்ட பணய கைதிகளின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை. பட மூலாதாரம்,FARHATULLAH இந்த கொடிய சம்பவம் கைபர் பக்தூங்வா மாகாண அரசாங்கத்தின் "முழு தோல்வியின் வெளிப்பாடு" என்று அமைச்சர் ஆசிஃப் குற்றம்சாட்டினார். தாக்குதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, சம்பவ பகுதியில் இருக்கும் பள்ளிகள், வணிக நிறுவனங்கள், சாலைகள் செவ்வாய்க்கிழமை முழுமையாக மூடப்பட்டிருந்தன. பல இடங்களில் போலீஸ் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டன. பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடக்கும் வேளையில், தொலைதூர பகுதியில் இந்த சண்டை நடந்துள்ளது. முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை பன்னுவின் மற்றொரு இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு போலீசார் கொல்லப்பட்டனர். https://www.bbc.com/tamil/articles/c99g97e4v71o
  22. வழி எங்கும் ரசிகர்கள்...அர்ஜென்டினாவின் சாலையில் கோப்பையுடன் ஊர்வலமாக சென்ற அணியினர் | Messi | FIFA
  23. சீனாவை மேலும் 3 கொரோனா அலைகள் தாக்க வாய்ப்பு: இந்தியாவுக்கு அதனால் என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, உலகையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கிப் போட்டிருந்த கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மீண்டும் குறிவைத்துள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் 3 கொரோனா அலைகள் சீனாவைத் தாக்கக் கூடும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பாதிப்பு தென்படத் தொடங்கிய சிறிது காலத்திலேயே நாடு முழுவதும் வெகுவேகமாக பரவிவிட்டது. அதன் உச்சக்கட்டமாக ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி வந்தனர். பொது முடக்கம், கொரோனா பரிசோதனை, கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமூச்சாக அமல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. கொரோனா வைரஸ் புதிய வகை நம்மை எந்த அளவுக்கு பாதிக்கும்?28 டிசம்பர் 2020 கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்13 ஜூன் 2022 கொரோனா உயிரிழப்புகளை அதிகம் சந்தித்த இந்தியா - உலக சுகாதார அமைப்பு5 மே 2022 அதிவேகத்தில் பெருகிவிட்ட கொரோனா நோயாளிகளை கையாள முடியாமல் நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பும் திணறிப் போனது. நாடு முழுவதும் ஆங்காங்கே மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகிய பிரச்னைகள் எழுந்தன. குறிப்பாக, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் மருத்துவக் கட்டமைப்பின் பலவீனம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. படுக்கைகள், மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் திண்டாடிய வீடியோக்கள் வெளியாகி காண்போரை கலங்கடித்தன. படக்குறிப்பு, கோப்புப் படம் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த, சிறந்த மருத்துவக் கட்டமைப்பு கொண்ட அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கூட கொரோனா வைரசை சமாளிக்க முடியாமல் திண்டாடி விட்டன. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அளித்துள்ள தரவுகளின்படி, உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 13.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்காகவும், நிவாரணப் பொருட்களை வாங்கவும் மக்கள் ஆயிரக்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததை காண முடிந்தது. ஐரோப்பிய நாடுகளில், மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாததால், கொரோனா நோயாளிகள் பலரும் ஆங்காங்கே பூங்காக்களில் சிகிச்சை பெற நேரிட்டது. சில இடங்களில் கொரோனா நோயாளிகள் தங்களது வீட்டில் இருந்தே படுக்கைகளை கொண்டு வந்து பயன்படுத்தியதும் கூட நடந்தேறியது. பல இடங்களில் விளையாட்டு மைதானங்கள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் ஆய்வகம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை முழுமையாக முடித்து கொரோனா தடுப்பூசியை முதல் நாடாக பிரிட்டன் அங்கீகரித்து, மக்களுக்கு பயன்பாட்டிற்கு விட்டது. அதனை பின்பற்றி, உலகின் பிற நாடுகளும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் துரிதமாக செலுத்த தலைப்பட்டன. ஆக்ஸ்போர்ட் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு, உள்நாட்டிலேயே தயாரான கோவாக்சின் தடுப்பூசிகளைக் கொண்டு, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கிய இந்தியா, அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளையும் பெருமளவில் பயன்படுத்தியது. உலகம் முழுவதுமே கோர தாண்டவமாடிய கொரோனாவின் தாக்கம், தடுப்பூசி பயன்பாட்டிற்குப் பிறகே மெல்லமெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியது. கொரோனா பரவல் இனி கட்டுக்குள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்திய பிறகே இந்தியா உள்பட ஒவ்வொரு நாடும் பொது முடக்க கட்டுப்பாடுகளை படிப்படியாக விலக்க முன்வந்தன. அதன் தொடர்ச்சியாக, இன்று பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டதால், மக்கள் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர் என்றே சொல்லலாம். கொரோனாவை கட்டுப்படுத்த சீனா கடைப்பிடித்த வழிமுறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் உலகமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கையில், சீனாவைப் பொருத்தவரை ஒப்பீட்டளவில் நிலைமை மேம்பட்டதாகவே இருந்தது. அமெரிக்கா, இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான கொரோனா பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படும் போது, சீனாவில் அந்த எண்ணிக்கை மிகவும் சொற்பமாகவே இருந்தது. அதற்கு மிக முக்கிய காரணம், ஜீரோ கோவிட் பாலிசி என்ற பெயரில் சீனா கண்டுபிடித்த மிகக் கடுமையான கட்டுப்பாடுகளே. அதன்படி, ஓரிருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டாலே, அந்த பகுதி முழுமையாக சீல் வைக்கப்பட்டது. பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. உணவு விற்பனை அல்லாத மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக பல நாட்கள் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகே இந்த கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுப்பாடுகளை கைவிட்ட சீனா தினமும் லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்புகளை கண்ணுற்ற உலகின் பிற நாடுகள் அதில் இருந்து மீண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் சீனாவிலோ கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் தொடரவே செய்தன. இதனால் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி இல்லாமல் போகவே, அது வேலைவாய்ப்புச் சந்தையிலும் எதிரொலித்தது. சீனாவில் இளைஞர்களிடையே வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. இதனால் ஜீரோ கோவிட் பாலிசி என்ற கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே கிளர்ச்சியில் இறங்க அரசு இறங்கிவந்தது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்ட சீன அரசு, மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க உதவும் செல்போன் செயலி பயன்பாட்டையும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்திவிட்டது. சீனாவில் 6 மாதத்துக்கு பின் மீண்டும் கொரோனா மரணங்கள்: 'ஜீரோ-கோவிட்' கொள்கை தோற்றுவிட்டதா?22 நவம்பர் 2022 சீனாவில் பிபிசி செய்தியாளர் கைது: கொரோனாவில் இருந்து காப்பாற்ற என விளக்கம்29 நவம்பர் 2022 கடும் கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் தீவிரமடையும் போராட்டம்27 நவம்பர் 2022 சீனாவில் மீண்டும் உச்சத்தில் கொரோனா பரவல் ஜீரோ கோவிட் பாலிசி தளர்த்திக் கொள்ளப்பட்டதுமே சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அங்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரே நாளில் 2,097 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது ஒப்பீட்டளவில் குறைவானதாக தெரிந்தாலும், சீனாவில் கடந்த ஏப்ரல் மாத உச்சத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்தான். கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, கொரோனா பரிசோதனைகள் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டதை சுட்டிக்காட்டும் நிபுணர்கள், உண்மையில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். படக்குறிப்பு, சீனாவில் கொரோனா பரவல் குறித்த ஜான்ஸ் ஹாகின்ஸ் பல்கலைக் கழகம் வெளியிட்ட தரவு. “தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பு வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கக் கூடும். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 21-ம் தேதி முதல் சீனப் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாட, பணிபுரியும் இடங்களில் இருந்து கோடிக்கணக்கான சீனர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். சுமார் ஒரு வார காலம் நீடிக்கும் இந்த கோடிக்கணக்கான மக்களின் இடப்பெயர்வு கொரோனா இரண்டாம் அலைக்கு வழிவகுக்கலாம். புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு பிப்ரவரி இரண்டாம் பாதியில் இருந்து மார்ச் முதல் பாதி வரை சொந்த ஊரில் இருந்து பணிபுரியும் இடங்களுக்கு சீனர்கள் பயணப்படுவார்கள். இந்த நேரத்தில் கொரோனா மூன்றாவது அலை வரக்கூடும்,” என்று தொற்றுநோயியல் நிபுணரான வூ சூன்யு கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் சீனாவில் இந்த ஆண்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிடும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், வூ சூன்யு கருத்து மிகுந்த கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணரும், உலக சுகாதார அமைப்பின் கொரோனா மருத்துவ நிபுணர் குழு உறுப்பினருமான எரிக் ஃபைகல்-டிங்கின் கணிப்பு அச்சம் தருவனவாக உள்ளது. “அடுத்த 90 நாட்களில் சீன மக்கள் தொகையில் 60 சதவீதம் அதாவது உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகக் கூடும், இதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும்”என்பது அவரது கணிப்பு. வேகமாக அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளை சமாளிக்க முடியாமல் சீன மருத்துவமனைகள் திணறும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், “இது தொடக்கம்தான்” என்று குறிப்பிட்டுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 உலகிற்கே நிவாரணம் தந்த கொரோனா தடுப்பூசிகள் சீனாவிற்கு பலன் தரவில்லையா? சீனாவில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. எனினும், 80 வயதிற்கும் அதிகமானோரில் பாதிக்கும் குறைவாகவே 3 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கொரோனாவால் கடும் பாதிப்புகளுக்கு இலக்காவது இந்த வயதுப் பிரிவினரே. சீனாவில் மக்களுக்கு போடப்பட்ட அனைத்து தடுப்பூசிகளுமே உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டவை ஆகும். கொரோனாவை எதிர்கொள்வதில் மற்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளைக் காட்டிலும் அவை குறைந்த செயல்திறனையே வெளிப்படுத்தியுள்ளன. ஆகவேதான், 90 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் கூட, கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிவேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள் பற்றாக்குறையாகி விட்டதால், மருத்துவமனைகளுக்கு வெளியே கார்களில் வைத்தே பலருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காரில் இருக்கும் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படும் காட்சிகள் சீன சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் சீனர்கள் சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியிருப்பதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் காய்ச்சல் மருந்தான ஐபுபுரூஃபென் மற்றும் குளிர்கால மருந்துகள், கொரோனா பரிசோதனை உபகரணங்களை சீனர்கள் அவசரஅவசரமாக வாங்கி சேமிப்பில் வைக்கின்றனர். வீட்டு வைத்தியத்தில் உதவும் எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற விட்டமின் சி நிரம்பிய கனிகள் எந்த கடையிலும் கிடைப்பதில்லை. இணையவழி வர்த்தக நிறுவனங்களிலும் கூட இருப்பு இல்லை. குளிர் மற்றும் காய்ச்சல் மருந்துகள், விட்டமின்கள், வலி நிவாரணிகளை மக்கள் வாங்கிக் குவிப்பதால் பெரும்பாலான மருந்துக்கடைகளில் அவை முற்றிலுமாக தீர்ந்துவிட்டன. அவற்றை அடுக்கும் அலமாரிகள் காலியாக காட்சி தருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் சீனாவில் கொரோனா அதிகரிப்பால் உலகிற்கு என்ன பாதிப்பு? சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டதால் ஒட்டுமொத்த உலகமும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. ஏனெனில், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும், இரண்டாவது பெரிய பொருளாதார வலிமையும் கொண்ட சீனாவிற்கு ஏற்படும் பாதிப்பு உலகம் முழுமையும் எதிரொலிக்கும் ஆபத்து இருப்பதே அதற்குக் காரணம். சீனாவில் மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா எதிரொலியாக, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவாக, 2.7 சதவீதமாகவே இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. உள்நாட்டில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க மருந்து, மாத்திரைகள் ஏற்றுமதியை சீனா நிறுத்திவைக்கக் கூடும் என்பதால் உலகின் பிற இடங்களில் அவற்றிற்கு தட்டுப்பாடு வரும் ஆபத்து உருவாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களுள் ஒன்றாக சீனா திகழ்வதால், அங்குள்ள தொழிற்சாலைகள் முடங்குவது பிற நாடுகளிலும் தொழிற்துறையில் மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் எல்லாவற்றிற்கும் மேலாக, “கொரோனா வைரஸ் வீரியத்துடன் பரவிக் கொண்டிருக்கும் போது எந்நேரமும் உருமாறி, உலகின் பிற நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸின் கூற்று நம்மை பயமுறுத்துவதாக அமைந்துள்ளது. “கொரோனா வைரசால் மீண்டும் எழுந்துள்ள அச்சுறுத்தலை சீனாவால் திறம்பட எதிர்கொள்ள முடியும். கொரோனாவை எதிர்க்கும் வல்லமையுடன் சீனா திகழ்வது அந்நாட்டிற்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்குமே நன்மை பயக்கும்” என்கிறார் நெட் பிரைஸ். https://www.bbc.com/tamil/articles/c03n36zdygyo
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.