Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20287
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. தென்னக ரயில்வே ரயில் எஞ்சின்களில் ஒன்றில் கூட கழிப்பறை இல்லை: பெண் ஓட்டுநர்கள் அவதி பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 19 ஆகஸ்ட் 2022, 07:55 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் நாடு முழுவதும் ஓடும் ரயில் எஞ்சின்களில் 120 மின்சார ரயில் எஞ்சின்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது என ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. தென்னக ரயில்வேயில் ஒரு ரயிலில் கூட எஞ்சினில் கழிப்பறை வசதிகள் செய்யப்படாததால் ரயில் ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சமீப காலமாக ஆண்களுக்கு இணையாக பெண்கள் ரயில் எஞ்சின்களை இயக்கி வருகின்றனர். அவ்வாறு இயக்கும் போது ரயில் எஞ்சினில் கழிவறை வசதி செய்யப்படாததால் ரயில் ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் பெண் ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், ரயில் எஞ்சினில் உள்ள கழிப்பறை வசதி சம்பந்தமாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா ஆர்டிஐ மூலம் ரயில்வே அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இந்திய ரயில்வே மின்சார பிரிவு இயக்குனர் அனுராக் அகர்வால் அளித்துள்ள பதிலில், "இந்தியா முழுவதும் 120 டபுள்யு.ஏ.ஜி (W.A.G), 9 மின்சார எஞ்சின்களில் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 மின்சார ரயில் எஞ்சின்களில் கழிப்பறை வசதி அமைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. "தேஜஸ் ரயில் பராமரிப்பு செலவுத் தரவே இல்லை" - ஆர்டிஐ பதில் எல்லா சாலைகளும் சுரங்கப்பாதையானால் உலகம் இப்படித்தான் கோவை - ஷீரடி: தமிழ்நாட்டின் முதல் தனியார் ரயில் ஏன் சர்ச்சைக்குள்ளாகிறது? மிக சொற்ப எஞ்சின்களில் மட்டுமே கழிப்பறைகள் 29 ஜூலை 2019, 05 ஆகஸ்ட் 2019 ஆகிய தேதிகளில் ரயில் எஞ்சின்களில் கழிப்பறை அமைக்கும் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 120 ரயில் எஞ்சின்களில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் ஆண், பெண் ரயில் ஓட்டுனர்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "தற்போது உள்ள தரவுகளின் அடிப்படையில் 31 மே 2017 அன்று முதன் முதலாக மின்சார ரயில் எஞ்சினில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டீசல் எஞ்சின்களில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் குறித்து மற்றொரு துறைக்கு தான் தெரியும்" என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே மின்சார பிரிவு இயக்குனர் அளித்த பதிலின் அடிப்படையில் இந்தியாவில் மொத்தம் உள்ள 16 ரயில்வே மண்டலங்களில் 9 மண்டலங்களில் உள்ள குறிப்பிட்ட சில மின்சார எஞ்சின்களில் மட்டுமே கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேயில் இயங்கும் ரயில் எஞ்சின்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி செய்யப்படவில்லை என இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. "தென்னக ரயில்வே ரயில் எஞ்சின்களில் ஒன்றில் கூட கழிப்பறை இல்லை" தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்ற பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ரயில் பயணிகளின் நலனுக்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்கப்பட்டு அதற்கான பதிலும் பெறப்பட்டுள்ளது. ரயிலில் பயணிக்கும் சுமார் இரண்டாயிரம் பயணிகள் உயிர் அந்த ரயிலை இயக்கும் ரயில் எஞ்சின் ஓட்டுனர்கள் மற்றும் துணை ஓட்டுநர்கள் இருவர் கையில் தான் உள்ளது. எனவே, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்கள் ரயிலை அமைதியான மனநிலையில் இயக்க முடியும். படக்குறிப்பு, பாண்டியராஜன் திருவனந்தபுரம் கோட்டத்தில் மட்டும் 3 பெண் லோகோ பைலட்களும் 12 துணை லோகோ பைலட்கள் என மொத்தமாக 15 பெண் லோகோ பைலட்கள் ரயிலை இயக்கி வருகின்றனர். அதேபோல், தென்னக ரயில்வேயில் 6 கோட்டங்கள் என இந்தியாவில் மொத்தம் 1500 பெண் லோகோ பைலட்டுகள், 50 ஆயிரம் ஆண் லோகோ பைலட்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையில் பாதி அளவுதான் ரயில் எஞ்சின்கள் எண்ணிக்கை உள்ளது. இவர்கள் அனைவரும் சுமார் 2 முதல் 3 மணி நேரம் தொடர்ந்து ரயில்களை எந்தவிதமான இடை நிறுத்தல் இல்லாமல் இயக்க கூடியவர்கள் ஆனால் அவர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கான எஞ்சினில் வசதிகள் எதுவும் இல்லை. சரக்கு ரயில்களை பெரும்பாலான பெண்கள் ஓட்டுனர்கள் இயக்கி வருகின்றனர். அந்த ரயில் எஞ்சின்களிலும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. தென்னக ரயில்வேயில் உள்ள ஒரு ரயில் எஞ்சின்களில் கூட கழிப்பறை வசதி இல்லை என்பது தான் உண்மை" என்கிறார் பாண்டியராஜன். புல்லட் ரயில்களுக்கு ஆர்வம் காட்டும் ரயில்வே துறை ரயில் ஓட்டுனர்களை கண்டுகொள்ளாதது ஏன்? தொடர்ந்து பேசிய பாண்டியராஜன், ரயில் நிலையங்களின் கட்டமைப்புகளில் மாற்றம், ரயில் எஞ்சின்களில் உயர்தர தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ரயில்வே துறை ஏன் ரயில் பயணிகளின் பாதுகாவலனாக இருக்கக்கூடிய ரயில் எஞ்சின் ஓட்டுனர்களுக்கு முறையான ஒரு அடிப்படை செய்து கொடுக்கவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ரயில், பேருந்துகளில் தொடரும் அபாய பயணங்கள் - மாணவர்களைத் தூண்டும் உளவியல் காரணி எது? இந்தியாவில் மின்வெட்டு பிரச்னை: நிலக்கரி தட்டுப்பாடுக்கு காரணம் என்ன? தெற்கு ரயில்வே புது வழித் தடங்களுக்கு ரூ.308 கோடி, வடக்கு ரயில்வேவுக்கு ரூ.31 ஆயிரம் கோடி: சு.வெ. புகார் இந்தியாவில் மொத்தம் 16 மண்டலங்கள் உள்ளன. அதில் 9 மண்டலங்களில் மிக சொற்ப அளவில் ரயில் எஞ்சின்களில் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 7 மண்டலங்களில் ஒரு ரயில் எஞ்சினில் கூட கழிப்பறை வசதி செய்து கொடுக்கவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல் உடனடியாக தென்னக ரயில்வேயில் இயக்கப்படும் அனைத்து ரயில் எஞ்சின்களிலும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். குறிப்பாக நீண்ட தூரம் நிற்காமல் செல்லும் சென்னை- மதுரை தேஜஸ் ரயிலுக்கு உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அனைத்து ரயில் எஞ்சின்களிலும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தும் வரை ரயில் எஞ்சினுக்கு அடுத்ததாக உள்ள பெட்டியில் உள்ள கழிப்பறையை ரயில் ஓட்டுனர்கள் பயன்படுத்தும் வகையில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்" என பாண்டியராஜன் கேட்டு கொண்டார். நடுவழியில் கழிப்பறை தேடி அலையும் பெண் ஓட்டுநர்கள் ரயில் எஞ்சினில் கழிப்பறை வசதி இல்லாதது குறித்து பெண் ரயில் ஓட்டுனர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் தென்னக ரயில்வேயில் லோகோ பைலட் பணி செய்து வருகிறேன். நான் வேலைக்கு சேரும் காலங்களில் பெண் ரயில் ஓட்டுனர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது ஆண்களுக்கு இணையாக பெண் ரயில் ஓட்டுநர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆனால் லோகோ பைலட் ஆக பணிபுரியும் பெண்கள் ரயில் எஞ்சின்களில் கழிப்பறை வசதி இல்லாததால் பல்வேறு உடல் பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். பட மூலாதாரம்,DINODIA PHOTO / GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் தொடர்ச்சியாக 5 மணிநேரம் ரயில்களை இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அந்த நேரத்தில் எப்படி எங்களால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியும். சில நேரங்களில் சிக்னலுக்காக பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலைகள் ஏற்படும் அந்த நேரங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக ரயில் நிலையங்களில் இருக்கும் கழிப்பறைகள் அல்லது ரயில் பெட்டியில் உள்ள கழிப்பறை களை பயன்படுத்தி கொள்வோம். ரயில் எஞ்சினுக்கு அடுத்துள்ள பெட்டிக்கு சென்றால் அங்கு ஆண்கள் கூட்டமாக இருப்பார்கள் அதனால் கழிப்பறை பயன்படுத்த முடியாது. சில நேரங்களில் முதல் இரண்டு பெட்டிகளும் அடைக்கப்பட்டு இருக்கும் அதனால் சிறிது தூரம் நடந்து சென்று அடுத்தடுத்த பெட்டிகளுக்கு செல்ல நேரிடும். நள்ளிரவு நேரத்தில் நடுவழியில் ஒரு பெண் தனியாக இப்படி செல்லும் போது அவளுடைய மன நிலை எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். இதுகுறித்து பலமுறை ஈமெயில் மூலமாக கேள்விகள் எழுப்பியும் இதுவரை எங்களுக்கு ரயில்வே துறையில் இருந்து முறையாக பதில் கிடைக்கவில்லை. இந்திய ரயில்வே துறையில் வேலை செய்யும் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்குமே இயற்கை உபாதைகளை கழிப்பதில் பெரும் பிரச்னை உண்டு. அதில் பெண்கள் அதிகப்படியான பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். பல மணி நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் சிறுநீரகத்தில் கல் பிரச்னை ஏற்படுகிறது" என்கிறார் பெண் ஓட்டுநர். மாதவிடாய் நேரங்களில் பெண் ஓட்டுநர்கள் நிலைமை மிகவும் மோசம் தொடர்ந்து பேசிய பெண் ஓட்டுனர், "மாதவிடாய் நேரங்களில் குறிப்பிட்ட சில நேர இடைவெளியில் கழிப்பறை செல்ல வேண்டும். கழிப்பறை இல்லாததால் மாதவிடாய் நேரங்களில் பேடுகள் மாற்ற முடியாமல் பல நேரங்களில் சிறுநீர் தொற்று ஏற்பட்டு விடும். கழிப்பறை வசதி இல்லாததால் இவ்வாறான பிரச்னைகளை பெண்கள் பழக்கப்படுத்திக் கொண்டனர். தெற்கு ரயில்வே புது வழித் தடங்களுக்கு ரூ.308 கோடி, வடக்கு ரயில்வேவுக்கு ரூ.31 ஆயிரம் கோடி: சு.வெ. புகார் மிகவும் கஷ்டத்தை அனுபவித்து தான் பெண்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகிறோம். ஆனாலும் பெண் என்பதால் எந்த ஒரு இடத்திலும் தாழ்ந்து போய் விடக்கூடாது என்ற ஒரு வைராக்கியத்தில் பெண்கள் இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் ஒரு முறை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சிறுநீரை அடக்கிக் கொண்டு ரயிலை இயக்கிக் கொண்டிருந்தேன். இதனால் சிக்னலை பார்க்காமல் கடந்து வந்துவிட்டேன் எனக்கு அதற்கான தண்டனை வழங்கப்பட்டது. இது குறித்து என்னுடைய உயர் அதிகாரிகள் என்னிடம் கேள்வி எழுப்பிய போது கூட முதலில் கழிப்பறை சென்று சிறுநீர் கழித்துவிட்டு தான் அவருடைய கேள்விக்கு பதிலளித்தேன். இவ்வாறு ஒரு இறுக்கமான மனநிலையில் தான் பெண்கள் இந்த லோகோ பைலட் பணியை செய்து வருகின்றனர். விரைவில் கழிப்பறை பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய மிகப்பெரிய கோரிக்கையாக உள்ளது. ரயில்வே துறை ரயில் எஞ்சின்களில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் பெண் ரயில் ஓட்டுநர் பணியில் சேரும் ஆர்வம் காலப்போக்கில் பெண்கள் மத்தியில் குறைந்துவிடும்" என்கிறார் பெண் ரயில் ஓட்டுனர். "இது ஒன்றும் புதிய பிரச்னை அல்ல" அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் கழகம் இணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் 1990களில் ரயில்வே துறையில் பணியில் சேர்ந்தேன். அன்றிலிருந்தே இந்த பிரச்னை இருந்து வருகிறது. ஆனால் அப்போது இடைநில்லா ரயில்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் இந்த பிரச்னை பெரிய அளவில் பேசப்படவில்லை. படக்குறிப்பு, பார்த்தசாரதி தற்போது இடைநில்லா ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க பட்டுள்ளதுடன், பெண் ரயில் ஓட்டுனர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் இந்த பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறதே தவிர இது புதிய பிரச்னை அல்ல. இந்த பிரச்னை தொடர்பாக 2004ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சர் நிதீஷ் குமார் ஆலோசித்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் தீர்வு எட்டப்படவில்லை. ரயில் ஓட்டுனர்கள் உரிய இயற்கை உபாதைகளை கழிக்காததால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். ரயில் எஞ்சின்களில் கழிப்பறை இல்லாததால் சிறுநீர் கழிக்க முடியாது என்ற அச்சத்தில் ஓட்டுனர்கள் போதிய அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பெரும்பாலான ரயில் ஓட்டுனர்களுக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்படுகிறது. வயது மூப்பின் காரணமாக ஏற்படும் உடல் பிரச்னைகள் முன்னதாகவே வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. ரயில் ஓட்டுனர்களுக்கு சிக்னல்கள் மிக முக்கியமானது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில் 33 நொடிகளுக்கு ஒரு சிக்னலை கடந்து செல்கிறது. ஆனால் மன அழுத்தம் காரணமாக ஓட்டுனர்கள் அந்த சிக்னல்களை தவற விடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ரயில் எஞ்சின்களில் கழிப்பறைகள் இல்லாததால் பெரும்பாலான ரயில் ஓட்டுநர்கள் மனநலக் கோளாறுக்கு ஆளாகின்றனர். ஒரு ரயில் நிலையத்திற்குள் வருவதற்கு முன்பே பிளாட்பாரத்தில் எந்த பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்பது துல்லியமாக தெரிகிறது. அதேபோல் எஞ்சின்கள் எங்கு நிற்கும் என்பது முன்கூட்டியே தெரியும். அந்த இடத்திற்கு அருகே ரயில் ஓட்டுனர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு கழிப்பறை கட்டி வைத்தால் நிச்சயம் ரயில் ஓட்டுனர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, ரயில் எஞ்சின்களில் கழிப்பறைகளை கொண்டு வருவதற்கு முன்பு இதை ரயில்வே துறை செய்ய வேண்டும் என பார்த்தசாரதி கேட்டு கொண்டார். "கூடிய விரைவில் நடவடிக்கை" ரயில் ஓட்டுனர்களின் கழிப்பறை தேவை குறித்து ரயில்வே துறையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தென்னக ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ஆரம்பத்தில் இருந்து ரயில் எஞ்சின்களில் கழிப்பறை அமைப்பதற்கான உள்கட்டமைப்பு இல்லாமல் உள்ளது. ரயில் ஓட்டுனர்கள் தொடர்ந்து கழிப்பறை பிரச்னையை முன் வைப்பதால் ரயில் எஞ்சின்களில் கழிப்பறை அமைப்பதற்கான வடிவமைப்பு தயார் செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் கூடிய விரைவில் கழிப்பறைகளுடன் கூடிய எஞ்சின்கள் வடிவமைக்கப்பட்டு தென்னக ரயில்வேயில் அந்த எஞ்சின்கள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62591641
  2. பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு: குற்றவாளிகள் நுழைந்ததை கொண்டாடிய கிராமத்தினர் - கள நிலவரம் ராக்ஸி காக்டேகர் சாரா பி பி சி செய்தியாளர் 19 ஆகஸ்ட் 2022, 09:02 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI குஜராத்தின் மிக கொடூர குற்றங்களின் வரலாற்றில், ரந்திக்பூருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த இடம் 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கால் அறியப்பட்டது. மார்ச் 3, 2002 அன்று நடந்த குஜராத் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பில்கிஸ் பானுவின் மூன்று வயது மகளும் அடங்குவார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து, 2008-ம் ஆண்டு பாம்பே செஷன்ஸ் நீதிமன்றம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆகஸ்ட் 15, 2022 அன்று, கோத்ரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த இந்த 11 கைதிகளும் குஜராத் அரசின் மன்னிப்புக் கொள்கையின் கீழ் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் தங்கள் கிராமமான சிங்வாடாவை அடைந்ததும், உள்ளூர் மக்கள் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். பலர் தங்கள் வீடுகளில் நடனமாடியும், உரத்த இசையை இசைத்தும் கொண்டாடினர். அதேநேரம், சிலர் முகத்தில் மஞ்சள் பொட்டிட்டும் கொண்டாடினர். "என் நிம்மதியான வாழ்வை திருப்பிக் கொடுங்கள்" - 11 பேர் விடுதலை குறித்து பில்கி பானு பில்கிஸ் பானு: குஜராத் கலவரத்தில் பாலியல் வல்லுறவுக்கு எதிராக போராடிய வீரப்பெண்! விடுதலை செய்யப்பட்ட 11 பேர் கடந்த 15 ஆண்டுகளாகவும், இவர்களில் சிலர் கடந்த 18 ஆண்டுகளாகவும் சிறையில் உள்ளனர். சிங்வாடா எப்படிப்பட்ட இடம்? குஜராத்தின் சிங்வாடா கிராமம் சற்று பெரிதானது. ஆனால் நகரத்தை விடச் சிறியது. இங்கு பெரிய கடைகள் மற்றும் காவல் நிலையம் உள்ளது. பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கின் காரணமாக, இந்த கிராமம் சுற்றுவட்டாரப் பகுதியில் ஒரு வகையான பிரபலம் அடைந்திருந்தது. ஆகஸ்ட் 15 அன்று, பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நபரின் வீட்டிற்கு பிபிசி குழு சென்றடைந்தது. இங்கு இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் படங்களை பார்த்தோம். இதற்குப் பிறகு நெற்றியில் சந்தனம் பூசிய ஒருவர், எந்த நிருபருடனும் பேச விரும்பவில்லை என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பில்கிஸ் பானு ஆனால், இதற்குப் பிறகு, ஊடக விசாரணையால் தான் 15 ஆண்டுகள் சிறையில் இருந்ததாகக் கூறினார். அந்த நபரின் வீட்டில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் எம்எஸ் கோல்வால்கர் மற்றும் டாக்டர் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் படங்கள் இருந்தன. மேலும் ஆர்எஸ்எஸ் வரையறுத்த பாரத மாதா படமும் இருந்தது. குறைந்தபட்சம் இரண்டு பேர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ராதேஷ்யாம் சாஹி அவர்களில் ஒருவர். சாஹியின் மனு மீது, பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க ஒரு குழுவை அமைக்குமாறு மாநில அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்தியா டிவிக்கு பேட்டியளித்த சாஹி, அப்போதைய மத்திய அரசால், தான் தவறாகச் சிக்க வைக்கப்பட்டதாக கூறியுள்ளார். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் தான் சிக்கிக் கொண்டதாகக் கூறினார். சாஹியும் சிங்வாடா கிராமத்தில் வசிப்பவர். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான கோவிந்த் ராவல், இந்துத்துவா அமைப்புடன் தொடர்புடையவர் என்பதால் தான் சிக்கியதாக கூறியுள்ளார். வைரலான வீடியோவில், தான் விடுவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், மீண்டும் தனது வாழ்க்கையைத் தொடங்கப் போவதாகவும் சாஹி கூறியுள்ளார். கிராமவாசிகளின் கருத்து இந்தக் கிராமத்தில் வசிக்கும் பலரிடம் பிபிசி பேச முயன்றது. இவர்களில் பெரும்பாலோர், அவர்கள் செய்த செயல்களுக்குப் போதுமான தண்டனை கிடைத்ததாக நம்பினர். இப்போது அவர்களும் சிறையில் இருந்து வெளிவர உரிமை பெற்றுள்ளனர் என்றும் கருதினர். பெயர் வெளியிட விரும்பாத ஒரு கடைக்காரர், கிராமத்தில் யாரும் இதுவரை பெறாத தண்டனையை இவர்கள் பெற்றுவிட்டனர் என்கிறார். அவர்களை மும்பையில் உள்ள சிறைக்கு அனுப்பியதால், அவர்களது குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர். 2004 முதல் 2011 வரை மகாராஷ்டிராவில் உள்ள அமர்வுகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் இவர்கள் மீதான வழக்கை எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர் கோபால் சிங் சோலங்கியிடம் பிபிசி பேசிய போது, அவர்களை விடுவிப்பதில் தவறில்லை, அது அவர்களின் உரிமை என்றார். இதுபோன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது சரியானதா என்று கேட்டபோது, இங்கு தண்டனை வழங்கும் முறை சரிவரக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது, இதன் கீழ் சிறையில் உள்ளவர்கள் மீண்டும் ஒருமுறை புதிய வழியில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும் என்றார். பில்கிஸ் பானுவின் கருத்து என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கோபால் சிங் சோலங்கியின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆமதாபாத்தின் மூத்த வழக்கறிஞர் சம்சாத் பதான், இவர்களின் விடுதலை குறித்து கவலை தெரிவிக்கப்படவில்லை என்றும், இதுபோன்ற கொடூரமான வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிப்பதில் தான் கவலை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தண்டனை முடிந்த பிறகும் பலர் விடுதலைக்காகக் காத்திருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் அவற்றுக்குச் செவிசாய்க்கப்படுவதில்லை என்றும் இதுமட்டுமின்றி, கடுமையான குற்றங்களுக்காகப் பலர் பல ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர் என்றும் கூறுகிறார். ஆனால், இந்த 11 பேரின் விடுதலை குறித்து பில்கிஸ் பானு கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், தானும் தனது குடும்பத்தினரும் அச்சத்தின் நிழலில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பில்கிஸ் பானு "கடந்த 20 வருட வலி என்னை மீண்டும் ஒருமுறை உலுக்கி விட்டது. எனக்கு வார்த்தைகள் வரவில்லை. இன்னமும் நான் மரத்துப் போயிருக்கிறேன். இன்று ஒரு பெண்ணின் நீதியின் முடிவு இப்படித்தான் இருக்கிறது என்றுதான் என்னால் சொல்ல முடியும்" என்று கூறியுள்ளார். நான் என் நாட்டின் உச்ச நீதிமன்றங்களை நம்பியிருந்தேன். அமைப்பின் மீது நம்பிக்கை வைத்து மெல்ல மெல்ல என் துயரங்களுடன் வாழக் கற்றுக்கொண்டேன். இந்தக் குற்றவாளிகளின் விடுதலை என் அமைதியைப் பறித்துவிட்டது, நீதியின் மீதான நம்பிக்கையையும் நான் இழந்துவிட்டேன். இந்த வருத்தமும் நம்பிக்கையிழப்பும் எனக்கு மட்டுமல்ல, நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்காகவும் எழுகிறது." மேலும் அவர், "இவ்வளவு பெரிய மற்றும் அநியாயமான முடிவை எடுப்பதற்கு முன் எனது பாதுகாப்பை யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. இந்த முடிவை திரும்பப் பெற குஜராத் அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அச்சமின்றி அமைதியாக வாழ விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். என் மற்றும் என் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். பிபிசியிடம் பேசிய பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் ரசூல், எங்களுக்கு வீடு தருமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மாநில அரசு இந்த உத்தரவை இன்னும் நிறைவேற்றவில்லை. இன்னும் நடைமுறைகள் முடிவடையும் வரை காத்திருக்கிறோம். தண்டனையும் விடுதலையும் 2002 குஜராத் கலவரத்தின் போது, அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் ஐந்து மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு ஒரு கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது மூன்று வயது மகள் சலேஹாவும் கொடூரமாக கொல்லப்பட்டார். ஜனவரி 21, 2008 அன்று, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பில்கிஸ் பானுவை கூட்டுப் பலாத்காரம் செய்து, ஏழு குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் அவர்களது தண்டனையை பம்பாய் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. குற்றவாளிகளில் ஒருவரான ராதே ஷியாம் ஷா, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு, நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியதால், நிவாரணம் குறித்த சிக்கலைக் கவனிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த கமிட்டி இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் தண்டனையை ரத்து செய்ய ஒருமனதாக முடிவு செய்து அவர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்தது.குஜராத்தின் மிகக் கொடூரமான குற்றங்களின் வரலாற்றில், ரந்திக்பூருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த இடம் 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் பிரபலமடைந்தது. https://www.bbc.com/tamil/india-62603542
  3. ஆர்ட்டெமிஸ்: நிலவுக்கு முதல் பயணம் செல்ல தயாராகும் நாசாவின் ராட்சத ராக்கெட் ஜொனாதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, விண்வெளி ஏவுதள அமைப்பு என்பது சந்திரனின் ஆய்வுக்கான புதிய சகாப்தத்தின் புதிய ராக்கெட் ஆகும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது புதிய ராட்சத நிலவு ராக்கெட்டை அதன் முதல் பயணத்திற்காக தயார்படுத்திவருகிறது. ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்) என அழைக்கப்படும் இந்த வாகனம், ஆகஸ்ட் 29 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள விண்வெளி பயணத்திற்காக, ப்ஃளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள 39B ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த முதல் சோதனைப்பயணத்தில் விண்வெளிவீரர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் எதிர்கால பயணங்கள், 50 ஆண்டுகளுக்குப்பிறகு முதல் முறையாக சந்திரனின் மேற்பரப்புக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும். சுமார் 100 மீட்டர்(328 அடி) உயரமான SLS, ஒரு பெரிய டிராக்டரில் ஏவுதளத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை மாலை கென்னடியில் உள்ள அதன் கட்டுமான இடத்தில் இருந்து அது நகரத் தொடங்கியது. ஆனால் மணிக்கு 1 கிமீ( 1 மைலுக்கும் குறைவு) வேகத்தில், 6.7 கிமீ (4.2 மைல்) பயணத்தை முடிக்க அதற்கு 8-10 மணிநேரம் ஆகலாம். பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, மனிதர்கள் யாரும் இந்த ராக்கெட்டில் இருக்கமாட்டார்கள். ஆனால் சென்சார்கள் நிறைந்த , மனித உருவ பொம்மைகள்(Mannequins)பயணத்தின் போது நிலைமைகளைப் பதிவு செய்யும் நாசாவிற்கு இது ஒரு முக்கிய தருணமாகும். சந்திரனில் மனிதன் கடைசியாக காலடி பதித்த அப்பல்லோ 17 இன் அரை நூற்றாண்டு ஆண்டு நிறைவை நாசா, டிசம்பர் மாதம் கொண்டாடவுள்ளது. நவீன காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தனது புதிய ஆர்ட்டெமிஸ் திட்டத்துடன் மீண்டும் களத்திற்கு திரும்பப்போவதாக நாசா கூறியுள்ளது. (ஆர்டெமிஸ், கிரேக்க கடவுள் அப்போலோவின் இரட்டை சகோதரி மற்றும் சந்திரக் கடவுளும் ஆகும்). 2030 களில் அல்லது அதற்குப்பிறகு மிக விரைவில் விண்வெளி வீரர்களுடன் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான ஒரு வழியாக, சந்திரனுக்கான இந்தப் பயணத்தை நாசா பார்க்கிறது. படக்குறிப்பு, அப்போலோவின் Saturn V ராக்கெட்டுகளை விட 15% அதிகமான உந்துசக்தியை SLS கொண்டிருக்கும். அப்போலோவின் Saturn V ராக்கெட்டுகளை விட 15% அதிகமான உந்துசக்தியை SLS கொண்டிருக்கும். இந்த கூடுதல் சக்தியுடன் மேலும் மேம்பாடுகளின் இணைப்பு காரணமாக, பூமியின் வெகுதொலைவுக்கு அப்பால் விண்வெளி வீரர்களை அனுப்புவது மட்டுமல்லாமல், அதிக உபகரணங்கள் மற்றும் சரக்குகளை கொண்டுசெல்ல முடிவதால் குழுவினர் அதிக காலத்திற்கு பூமியில் இருந்து தள்ளி வாழமுடியும். க்ரூ காப்ஸ்யூல், திறனில் ஒரு படி மேலே உள்ளது. ஓரியன் என்று அழைக்கப்படும் இது, 1960கள் மற்றும் 70களில் இருந்த கமாண்ட் மாட்யூல்களைக் காட்டிலும் அகலமானது. 5 மீ (16.5 அடி) அகலத்தில் இருக்கும் இந்த காப்ஸ்யூல் ஒரு மீட்டர் கூடுதல் அகலம் கொண்டுள்ளது. "மனிதகுலம் எப்போது சந்திரனுக்கு மீண்டும் திரும்பும் என்று கனவு காணும் நம் அனைவருக்கும் ஒரு செய்தி.' மக்களே, நாம் மீண்டும் அங்கே செல்ல இருக்கிறோம். அந்தப் பயணம், எங்கள் பயணம், ஆர்ட்டெமிஸ் 1 மூலம் தொடங்குகிறது," என்று நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் கூறினார். "விண்வெளி வீரர்களுடன் ஆர்ட்டெமிஸ் 2 இன் பயணம் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு 2024 இல் இருக்கும். ஆர்ட்டெமிஸ் 3 இன் முதல் தரையிறக்கம் 2025 இல் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார். படக்குறிப்பு, SLS அதன் ஏவுதளத்திற்கு வந்தவுடன், விண்வெளி பயணத்திற்கு அதை தயார் செய்ய பொறியாளர்களுக்கு சுமார் ஒன்றரை வாரங்கள் மட்டுமே இருக்கும். ஆர்டெமிஸ்ஸின் மூன்றாவது பயணத்தில் நிலவின் மேற்பரப்பில் முதல்முறையாக ஒரு பெண் விண்வெளிவீரர் கால்பதிப்பார் என்று நாசா உறுதியளித்துள்ளது. SLS அதன் ஏவுதளத்திற்கு வந்தவுடன், விண்வெளி பயணத்திற்கு அதை தயார் செய்ய பொறியாளர்களுக்கு சுமார் ஒன்றரை வாரங்கள் மட்டுமே இருக்கும். சீனாவின் யுவான் வாங்-5, இந்தியாவின் துருவ்: எந்த கண்காணிப்பு கப்பலுக்கு வலிமை அதிகம்? 1936ல் அழிந்துபோன டஸ்மானிய புலி இனத்தை ஜீன் எடிட்டிங் மூலம் உருவாக்க விஞ்ஞானிகள் திட்டம் வாட்ஸ்அப் குழுவில் இருந்து இனி சத்தமில்லாமல் விலகலாம் - புதிய வசதிகள் என்னென்ன? ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்கி மூன்று சாத்தியமான ஏவும் வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது சீரற்ற காலநிலை காரணமாக இந்த தேதியில் ராக்கெட்டை ஏவ முடியாவிட்டால் செப்டம்பர் 2 வெள்ளிக்கிழமை மீண்டும் முயற்சி செய்யப்படும். அது தோல்வியுற்றால், செப்டம்பர் 5 திங்கட்கிழமை மற்றொரு முயற்சியை மேற்கொள்ளலாம். கலிஃபோர்னியாவிற்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் ராக்கெட்டை திருப்பிகொண்டுவருவதற்கு முன்பாக, சந்திரனின் பின்புறத்தில் ஓரியனை சுழன்று செல்லச்செய்வதே இந்தப்பயணத்தின் நோக்கமாகும். பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது ஏற்படும் வெப்பத்தை காப்ஸ்யூலில் உள்ள வெப்பக் கவசம் தாங்குமா என்று சரிபார்ப்பதே சோதனை ஓட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு, கூம்பு வடிவ ஓரியன் காப்ஸ்யூல், ஐரோப்பிய சர்வீஸ் மாட்யூல் மூலம் விண்வெளியில் தள்ளப்படுகிறது "ஐரோப்பாவில் உள்ள 10 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் பங்களிப்பில் பணியாற்றி வருகின்றன. இது எங்களுக்கு மிகவும் முக்கியமான தருணம்" என்று ஏர்பஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சியான் கிளீவர் விளக்கினார். "ஐரோப்பிய சர்வீஸ் மாட்யூல் என்பது வெறும் பேலோட் அல்ல. அது வெறும் உபகரணமல்ல. இது மிகவும் முக்கியமான உறுப்பு. ஏனென்றால் இது இல்லாமல் ஓரியன் சந்திரனை அடைய முடியாது." நாசா SLS ஐ உருவாக்கிக் கொண்டிருக்கும் அதே நேரம், அமெரிக்க ராக்கெட் தொழிலதிபர் எலோன் மஸ்க், டெக்சாஸில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில், அதைவிடப்பெரிய வாகனத்தை உருவாக்கி வருகிறார். அவர் தனது ராட்சத ராக்கெட்டை ஸ்டார்ஷிப் என்று அழைக்கிறார். மேலும் விண்வெளி வீரர்களை சந்திரனின் மேற்பரப்பிற்கு கொண்டு செல்ல ஓரியன் உடன் அதை இணைப்பதன் மூலம் எதிர்கால ஆர்ட்டெமிஸ் பயணங்களில் இது ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சந்திரனில் காலடி பதித்த கடைசி மனிதர்: ஜீன் செர்னான் 1972 டிசம்பரில் அப்பல்லோ 17 பயணத்திற்கு தலைமை வகித்தார். SLS ஐப் போலவே, ஸ்டார்ஷிப்பும் இன்னும் சோதனை ஓட்டத்தை முடிக்கவில்லை. SLS போலல்லாமல் ஸ்டார்ஷிப், முற்றிலும் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை பயன்படுத்துவது கணிசமாக மலிவானதாக இருக்கக்கூடும். நாசா திட்டங்களை தணிக்கை செய்யும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்தின் சமீபத்திய மதிப்பீட்டில், முதல் நான்கு SLS பயணங்கள் ஒவ்வொன்றையும் செயல்படுத்த 4 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக செலவாகும் என்றும் இதை "தொடர்வது கடினம்" என்றும் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,ESA தொழில் ஒப்பந்தத்தில் செய்யப்படும் மாற்றங்கள் எதிர்கால உற்பத்திச் செலவுகளை கணிசமாகக் குறைக்கும் என்று நாசா தெரிவித்தது. https://www.bbc.com/tamil/science-62579650
  4. கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு அடுத்த வாரம் திரும்புகிறாரா? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 24ம் தேதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார். ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில், இடம்பெற்றதாக கூறப்படும் மிக் (MIC) விமான கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது. இந்த விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், எதிர்வரும் 24ம் தேதி அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார். சீன கப்பல் வருகையும், அதானி நிறுவனத்தின் இலங்கை பிரவேசமும் இலங்கையில் சீன கப்பல் - இந்திய கடல் பகுதியில் தீவிரம் அடைந்த கண்காணிப்பு 'களைக்கொல்லிக்கு' இலங்கையில் மீண்டும் அனுமதி - முன்பு தடை, இப்போது ஒப்புதல் ஏன்? நாட்டிற்கு வருகைத் தரும் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டிற்காக சேவையாற்ற எதிர்பார்த்துள்ளதாக கூறிய அவர், அரசியலில் அவர் ஈடுபட போவதில்லை எனவும் குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ஷ அரசியல்வாதி என்ற விதத்தில் திறமையானவர் கிடையாது எனவும் ஒரு நிர்வாகியாக திறமையானவர் எனவும் அவர் கூறினார். கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ம் தேதி நாடு திரும்புகின்றார் என்பதை பொறுப்புடனா கூறுகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். ''சில சந்தர்ப்பங்களில் மாற்றங்கள் வரலாம். இன்று பொறுப்புடன் கூறுகின்றேன். நாளை சில வேளைகளில் மாற்றம் வரலாம். அவர் தேதியை மாற்றினால், ஒன்றும் செய்ய முடியாது" என அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் என தெரிவித்து, மக்கள் சுமார் நான்கு மாத காலம் போராட்டங்களை நடத்தியிருந்தனர். இந்த போராட்டங்கள் வலுப் பெற்ற நிலையில், கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி கொழும்பை லட்சக்கணக்கான மக்கள் சுற்றி வளைத்து, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் வாசஸ்தலம் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து, தலைமறைவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த மாதம் 13ம் தேதி மாலைத்தீவு சென்று, அங்கிருந்து 14ம் தேதி சிங்கப்பூர் பயணமானார். சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய கோட்டாபய ராஜபக்ஷ, சிறிது காலம் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்தார். அதன்பின்னர், சிங்கப்பூரிலிருந்து கடந்த 11ம் தேதி தாய்லாந்து நோக்கி தனது மனைவியுடன் பயணித்த கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது அங்கு தங்கியுள்ளார். வெளிநாட்டில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் செலவீனங்கள் அனைத்தும், அவரது சொந்த பணத்திலேயே செலவிடப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. https://www.bbc.com/tamil/sri-lanka-62591633
  5. அந்தமான் தீவுகள்: இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பலி பீடமாக உருவானது எப்படி? வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 14 ஜூலை 2022 பட மூலாதாரம்,SUMRAN PREET 1857-ல் பஞ்சாபில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய அகமது கான் கரல் கொல்லப்பட்டு, அவரது தோழர்கள் சிலர் தூக்கிலிடப்பட்டனர். சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் 'காலா பானி' என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டனர். 'காலா பானி' என்பது பொதுவாக இந்தியத் துணைக் கண்டத்தில் தொலைதூரத்தில் உள்ள இடங்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் சொல்லாகும். நெடுந்தொலைவைக் குறிக்க 'கலா கோஸ்' போன்ற சொலவடைகள் நீண்டகாலமாகப் புழக்கத்தில் உள்ளன. நாட்டைவிட்டு கடல் கடந்து செல்லும் எவரும் 'புனித கங்கை'யிடம் இருந்து விலகிச்செல்வதால் தங்கள் சாதியைவிட்டும் சமுதாயத்தை விட்டும் விலகுவதாக பண்டைய இந்தியாவில் ஒரு நம்பிக்கை நிலவியது. அரசியல் பொருளில், காலா பானி என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவைக் குறிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கைதிகளை நாடு கடத்தி அங்கே கொண்டு சென்றனர். பேகம் ஹஸ்ரத் மஹால்: ஆங்கிலேயர்களை அலற விட்ட ஆஃப்ரிக்க அடிமையின் மகள் சாவர்க்கர்: இந்தியாவில் இவர் சிலருக்கு ஹீரோ, சிலருக்கு வில்லன் - ஏன்? எமர்ஜென்சி: இந்திரா காந்தி சிறையில் அடைத்த இரு ராணிகளின் வரலாறு ஆயிரம் தீவுகள் கொண்ட அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES கல்கத்தாவிற்கு (தற்போது கொல்கத்தா) தெற்கே 780 மைல் தொலைவில் தெற்கே உள்ள சுமார் ஆயிரம் சிறியதும், பெரியதுமான தீவுகளின் கூட்டமே 'அந்தமான், நிக்கோபார்' என்று அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரம் 'போர்ட் பிளேர்'. வரலாற்றாசிரியரும் ஆய்வாளருமான வசீம் அகமது சயீத் தனது 'காலா பானி: 1857 ஆம் ஆண்டின் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்' என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையில், "1789 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் இங்கு தங்கள் கொடியை பறக்கவிடுவதோடுகூடவே ஒரு கைதிகளின் குடியேற்றத்தையும், காலனியையும் உருவாக்க முதன்முதலில் முயற்சித்தனர். அது தோல்வியடைந்தது. 1857-ம் ஆண்டு கலவரம் வெடித்தபோது, தூக்குக்கயிறும், தோட்டாக்களும், பீரங்கிகளும் புரட்சியாளர்களின் உயிர்களைப் பறித்தன. ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால், ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி' செய்தவர்கள் மீண்டும் கிளர்ச்சி செய்யவோ அல்லது எதிர்ப்பு தெரிவிக்கவோ முடியாத வகையில் தொலைதூரத்தில் கைதிகளின் குடியிருப்பு ஒன்று தேவைப்பட்டது. இதற்காக ஆங்கிலேயர்களின் கண்கள் அந்தமான் தீவுகள் பக்கம் சென்றன. இந்த தீவுகளில் சேறு நிறைந்திருந்தது. கொசுக்கள், ஆபத்தான பாம்புகள், தேள்கள், அட்டைகள், வகை வகையான விஷப் பூச்சிகள் அங்கு இருந்தன," என்று எழுதியுள்ளார். பட மூலாதாரம்,SUMRAN PREET 1858 இல் சென்றடைந்த முதல்குழு ராணுவ மருத்துவரும், ஆக்ரா சிறை கண்காணிப்பாளருமான ஜே. பி. வாக்கர், ஜெயிலர் டேவிட் பெர்ரி ஆகியோர் மேற்பார்வையில், 'கிளர்ச்சியாளர்களின்' முதல் குழு 1858 மார்ச் 10 ஆம் தேதி ஒரு சிறிய போர்க் கப்பலில் அங்கு சென்றடைந்தது. அதே கப்பலில் கரலின் தோழர்களும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும். மேலும் 733 கைதிகள் கராச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டனர். பின்னர் இந்த செயல்முறை தொடர்ந்தது. "காலா பானி என்பது கதவுகளோ, சுவரோ இல்லாத ஒரு சிறைச்சாலை. நான்கு பக்கமும் சுவர் என்று சொன்னால் அது கடல்தான். வளாகத்தைப் பற்றிச் சொன்னால், கண்ணுக்கெட்டிய தூரம்வரை கடல்தான் பொங்கிக்கொண்டிருந்தது. சிறையில் இருந்த போதிலும் கைதிகள் சுதந்திரமாக இருந்தனர். ஆனால் தப்பிக்கும் எல்லா வழிகளும் மூடப்பட்டிருந்தன. காற்று விஷமாக இருந்தது," என்று சயீத் எழுதுகிறார். "முதல் கைதிகள் குழு அங்கு சென்றபோது, அவர்களை வரவேற்க கல்லாங்குத்தான உயிரற்ற நிலமே இருந்தது. அடர்ந்த மற்றும் வானளாவிய மரங்கள் கொண்ட காடுகள், சூரியனின் கதிர்கள் பூமியை தொடமுடியாதபடி செய்தன. திறந்த நீல வானம், விரோதமான மற்றும் நச்சு காலநிலை, கடுமையான தண்ணீர் தடுப்பாடு மற்றும் விரோத மனநிலை கொண்ட பழங்குடியினர் அங்கு இருந்தனர்." இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பலிபீடம் என்று 'அந்தமான்'அறிவிக்கப்பட வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த இந்த ஆய்வாளர் கூறுகிறார். ஆங்கிலேயர்கள், அவர்களின் அலுவலகப் பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், கைதிகளுக்கு குடிசைகள் மற்றும் தொழுவங்கள் போன்ற இடங்களும் நீண்டகாலத்திற்கு பிறகே கிடைத்தன. அங்கு வாழ்வதற்கு தரையோ, அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களோ இல்லை. நரகம் போன்ற நிலைமைகள் மழைக்காலங்களில் குடிசைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே நிலைதான். நாள் முழுவதும் கடுமையான சிறைவாசம், அயராத உழைப்பு, அட்டூழியங்களுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகி, மிகக் குறைவான உணவில் திருப்தியடைந்து தொடர்ந்து மரணம் வரை வாழ்வது கைதிகளின் தலைவிதி. அதனால்தான் ஒவ்வொரு கைதியும் மரணத்திற்காக பிரார்த்தனை செய்தார்கள். ஏனென்றால் பிரச்னைகளில் இருந்து விடுபட மரணம் மட்டுமே ஒரே வழி. இந்தியாவில் முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்திற்கு அடித்தளமிட்ட 'அடிமை' குத்புதீன் ஐபக் வாஞ்சிநாதன்: குறிக்கோள் இந்திய சுதந்திரமா? இந்து மதமா? முகலாயர்களை வீழ்த்தி டெல்லியை கைப்பற்றிய ஹேமு விக்ரமாதித்யா வரலாறு மதத்தலைவரும், காலிபின் சமகாலத்தவரும் நண்பருமான அல்லாமா ஃபஸ்ல்-இ-ஹக் கைராபாதி 1857 சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஜாமா மசூதியில் இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக 'ஜிஹாத்' ஃபத்வா (ஆணை) அளித்தார் என்று எழுத்தாளர் சாகிப் சலீம் குறிப்பிடுகிறார். கொலை மற்றும் எழுச்சிக்கு தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைராபாதிக்கு 1859 மார்ச் 4 ஆம் தேதி, காலாபானியில் ஆயுள் தண்டனை மற்றும் சொத்து பறிமுதல் தண்டனை விதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,SUMRAN PREET அந்தமான் சிறைச்சாலை 'நோய்களின் புதையல்' கைராபாதி தனது 'அசுரதல்ஹிந்தியா' என்ற நூலில் சிறைவாசத்தின் நிலைமை பற்றி எழுதியுள்ளார். அந்த புத்தகத்திலிருந்து பின்வரும் வாக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 'ஒவ்வொரு கொட்டகைக்கும் கூரை இருந்தது. அதில் துக்கங்களும் நோய்களும் நிறைந்திருந்தன. காற்று துர்நாற்றமாகவும் நோய்களின் புதையலாகவும் இருந்தது. நோய்கள், முடிவற்ற அரிப்பு, தோல் தொடர்ந்து உரிந்துகொண்டேயிருக்கும் தோல் நோய்கள் மிகவும் சாதாரணமாக காணப்பட்டன. நோயைக் குணப்படுத்தவும், ஆரோக்கியத்தைப் பேணவும், காயங்களைக் குணப்படுத்தவும் வழி இல்லை. உலகின் எந்தப் பிரச்னையும் இங்குள்ள வேதனையான பிரச்னைகளுக்கு ஈடாகாது. ஒருவர் இறந்துவிட்டால் பிணத்தை சுமக்கும் நபர் அதன் காலைப் பிடித்து இழுத்து, குளிக்கவைக்காமல், ஆடைகளைக் கழற்றி மணல் குவியலில் புதைப்பார். கல்லறை தோண்டப்படுவதில்லை அல்லது தொழுகை-இ-ஜனாஸா வழங்கப்படுவதில்லை. அடர்ந்த காட்டில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கைதிகள் ராஸ், ஹுலாக் மற்றும் சைதம் தீவுகளில் கடின உழைப்பு செய்ய உத்தரவிடப்பட்டனர். கைராபாதி மற்றும் அவரது தோழர்கள் மக்கள் வசிக்காத தீவின் காடுகளை சுத்தம் செய்யும் கடினமான வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிகளில் கூட சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். "மற்ற கைதிகள் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், சங்கிலியால் இழுக்கப்படுவதை நான் என் கண்களால் பார்க்கிறேன். ஒரு கடுமையான மற்றும் இரக்கமற்ற நபர் துன்பத்தில் வலியை உண்டாக்குகிறார். பசி மற்றும் தாகத்தில் கூட இரக்கப்படுவதில்லை. உடல் முழுவதும் காயங்களுடன், காலையும் மாலையும் கழிகின்றன. ஆன்மாவைக் கரைக்கும் வலியுடனும் வேதனையுடனும் காயங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்தக் காயங்கள் என்னை மரணத்திற்கு அருகே கொண்டுசெல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை" என்று கைராபாதி கூறுகிறார். ஃபஸ்ல்-இ-ஹக் கைராபாதி அந்தமானில் தனது இறுதி மூச்சை விட்டார். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். பெண் கைதிகள் மற்றும் திருமணம் ஹரியாணா மாநிலம் தானேசர் பகுதியை சேர்ந்தவர் ஜாஃபர் தானேசரி. முதலில் மரண தண்டனையும் பிறகு காலாபானி தண்டனையும் விதிக்கப்பட்டது. 1866 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி அந்தமான் தீவுகளின் கடற்கரையை தான் அடைந்த காட்சியை 'காலா பானி அல்மரூஃப் தவாரிக் அஜாயப்' என்ற புத்தகத்தில் இவ்வாறு விவரிக்கிறார்: 'தூரத்திலிருந்து கடலின் கரையில் கருங்கற்கள் தண்ணீரில் எருமைக் கூட்டங்கள் நீந்துவது போல் இருந்தது.' அப்போது அந்த பகுதி ஓரளவு தெளிவாக இருந்தது. காடுகளை சுத்தம் செய்வதுடன் கூடவே கைதிகள் புதிய மரங்களையும் நட்டு வருகின்றனர். முன்னதாக ஆங்கிலேய ஆட்சி பெண் கைதிகளையும் அங்கு அனுப்பத் தொடங்கியது." ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் அரசு திருமணத்தையும் பின்னர் குழந்தைகள் பிறப்பதையும் கைதிகளை சீர்திருத்துவதற்கான வழிமுறையாகக் கருதியது என்று ஹபீப் மன்சர் மற்றும் அஷ்ஃபாக் அலி ஆகியோரின் ஆராய்ச்சி கூறுகிறது. பேரரசர் பிருத்விராஜ் சௌஹான் vs முகமது கோரி: வரலாற்றில் எது கற்பனை? எது உண்மை? கண்ணகியும் எகிப்தின் இசிஸ் தெய்வமும் ஒன்றா? பண்டைய எகிப்திய மன்னரின் மூதாதையர் திராவிடரா? 200 ஆண்டுகளாகப் பாழடைந்து கிடக்கும் ஒரு ராஜஸ்தான் கிராமத்தின் கதை மெட்ராஸ், வங்காளம், பம்பாய் (மும்பை), வடமேற்கு மாநிலம், அவத் மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகளில் இருந்து, சில ஆண்டுகள் பிரிட்டிஷ் இந்தியாவின் சிறைகளில் தண்டனை அனுபவித்த பெண்கள், அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர். "போர்ட் பிளேயரில் பெண் கைதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் அனுப்பப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக பெண் கைதிகளை அனுப்பவில்லை என்றால், ஐந்து வருடங்கள் தண்டனையை அனுபவித்தபிறகு அவர்களது திருமண ஏற்பாட்டைத் தொடரமுடியாது மற்றும் அரசுக்கு நிறைய சேமிப்பை அளிக்கும் நூற்பு, நெசவு போன்ற வேலைகளைச் செய்யமுடியாது," என்று போர்ட் பிளேயரின் கண்காணிப்பாளர் இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார். சுயஉதவி கைதிகள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், குறிப்பிட்ட நாளில் பெண் கைதிகளில் ஒருவரை தேர்வு செய்து, அவர் சம்மதித்தால், அரசு அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து சட்டப்பூர்வமாக்கும். தாங்களாகவே ஏற்பாடு செய்து கொண்ட தம்பதிக்கு சுயஆதரவு கிராமத்தில் வசிக்க இடம் வழங்கப்படும். ஆனால் பெண் கைதிகளை அந்தமானுக்கு அனுப்பும் நடவடிக்கை சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 1897 ஆம் ஆண்டில், 2447 சுய ஆதரவு கைதிகளில் 363 பெண்கள் இருந்தனர். நோய் மற்றும் இறப்பு விகிதங்களும் பெண்களிடையே அதிகம். தானேசரியை மணந்த காஷ்மீரி பெண்கள் திருமணமாகாத தாய்களாகி குழந்தையைக் கொன்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டனர். பதினேழு ஆண்டுகள் பத்து மாதங்களுக்குப் பிறகு அந்தமானில் இருந்து 1883 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி தானேசரி இந்தியாவுக்குப் புறப்பட்டார். 1872 இல் போர்ட் பிளேயருக்கு பயணம் செய்த இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் மேயோ ஒரு கைதியால் கொல்லப்பட்டபோது அவர் அங்குதான் இருந்தார். பட மூலாதாரம்,AFP தப்பிக்க முயன்றவர்கள் தூக்கிலிடப்பட்டனர் தானாபூர் கன்டோன்மென்ட் கலகத்தின் கைதியான நாராயண், அங்கிருந்து தப்பிக்க முயன்ற முதல் நபர். அவர் பிடிபட்டார். டாக்டர் வாக்கர் முன் கொண்டு வரப்பட்டு தூக்கிலிடப்பட்டார். 1868 மார்ச்சில், 238 கைதிகள் தப்பிச் செல்ல முயன்றதாக 'தாரிக்-இ-அந்தமான் ஜெயிலில்' எழுதப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்குள் அவர்கள் அனைவரும் பிடிபட்டனர். ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 87 பேரை தூக்கிலிட வாக்கர் உத்தரவிட்டார். தூக்கு தண்டனை பற்றிய செய்தி கல்கத்தாவை எட்டியதும், பேரவைத் தலைவர் ஜே.பி.கிராண்ட் இதற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதினார். 'தூக்கிலிடப்பட்டதற்கான காரணங்களை என்னால் ஏற்க முடியவில்லை," என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், வாக்கர், அரசு வழக்கிலிருந்து தப்பினார். கிராண்டின் உத்தரவின் பேரில், கைதிகள் இனி ஒருபோதும் தப்பிக்க முடியாதபடியும், பொதுமக்களைத் தூண்டிவிட முடியாதபடியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆயினும்கூட, கைதிகளான மஹ்தாப் மற்றும் சேத்தன் 1872 மார்ச் 26 ஆம் தேதி தப்பிச்சென்றனர். வங்காள விரிகுடாவில் தாங்களே தயாரித்த படகுகள் மூலம் 750 மைல்கள் பயணம் செய்தனர். தாங்கள் மீனவர்கள் என்றும் தங்கள் படகு சேதமடைந்துள்ளது என்றும் ஒரு ஆங்கிலேய கப்பல் பணியாளர்களை நம்பவைத்தனர். இறுதியில் அவர்கள் லண்டனில் உள்ள Stranger's Home for Asiatics இல் விடப்பட்டனர். இருவருக்கும் உணவு, உடை மற்றும் படுக்கை வழங்கப்பட்டது, ஆனால் அவர்கள் தூங்கும் போது, உரிமையாளர் கர்னல் ஹியூஸ், அவர்களை படம் எடுத்து அரசுக்கு அனுப்பினார். மஹ்தாப் மற்றும் சேத்தன் மறு நாள் காலையில் எழுந்தபோது, தாங்கள் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருப்பதை கண்டனர். சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் இந்தியாவுக்குச் செல்லும் கப்பலில் ஏற்றப்பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சுதந்திர இயக்கம் வேகம் பெற்றது. இதனால் அந்தமானுக்கு அனுப்பப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து, பலத்த பாதுகாப்பு சிறைக்கான தேவை உணரப்பட்டது. சிறைச்சாலையை கட்டிய கைதிகள் 1889 ஆகஸ்டில், பிரிட்டிஷ் உள்துறைச் செயலர் சார்லஸ் ஜேம்ஸ் லாயலிடம், போர்ட் பிளேயரில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பற்றிய ஆராய்ச்சிப் பணியும் ஒப்படைக்கப்பட்டது. 1890 இல் பாகிஸ்தானில் லயால்பூர் இவர் பெயரில்தான் அமைந்தது. 1979 இல், பைசலாபாத் என அது மறுபெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகளுக்கு நாடு கடத்தப்படும் தண்டனை அதன் நோக்கத்தில் தோல்வியடைந்துவிட்டதாகவும், இந்திய சிறைகளுக்குச் செல்வதைக்காட்டிலும் குற்றவாளிகள் அந்தமான் செல்வதை விரும்புவதாகவும் சார்ல்ஸ் லாயல் மற்றும் பிரிட்டிஷ் அரசின் அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.எஸ். லேத் ஃப்ரீஸ், ஒரு முடிவை எட்டினர். சார்ல்ஸ் லாயல் மற்றும் லேத்ஃப்ரீஸ், நாடுகடத்தப்படும் தண்டனையில் ஒரு தண்டனை காலம் சேர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தனர். கைதிகள் வந்துசேர்ந்தவுடனே கடுமையான தண்டனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இதன் காரணமாகவே செல்லுலார் சிறைச்சாலை உருவானது. இது 'ஒரு தொலைதூர தண்டனை மையத்திற்குள் 'நாடுகடத்தப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடம்' என்று விவரிக்கப்பட்டது என்று எலிசன் பாஷ்ஃபோர்ட் மற்றும் கரோலின் ஸ்ட்ரேஞ்ச் தெரிவிக்கின்றனர். செல்லுலார் சிறைச்சாலையின் கட்டுமானம் 1896 இல் தொடங்கியது. பர்மாவிலிருந்து செங்கற்கள் வந்தன. சிறையில் அடைபட வேண்டிய அதே கைதிகளால் கட்டுமானம் நடந்தது என்பது இங்குள்ள ஒரு முரண்பாடான விஷயமாகும். செல்லுலார் சிறைச்சாலை 1906 இல், ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. பதிமூன்றரை அடி நீளமும், ஏழடி அகலமும் கொண்ட எழுநூறு அறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள், சிறையின் நடுவே ஒரு கோபுரத்தின் மீதிருந்து கடுமையாக கண்காணிக்கப்பட்டனர். சிறை அறைகளில் காற்று கூட வராத வகையில், வெளிச்சம் வர இடம் வைக்கப்பட்டிருந்தது. காலை, மதியம், மாலை சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் என நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதைத்தவிர யாருக்காவது தேவை ஏற்பட்டால் காவலாளிகளின் அடிஉதை கிடைக்கும். ஆங்கிலேயர்கள் யாரை வேண்டுமானாலும் தூக்கிலிட ஏதுவாக 'தூக்குதண்டனை இடமும்' கட்டப்பட்டது. பட மூலாதாரம்,SUMRAN PREET பல புரட்சியாளர்கள் இங்கு தங்கியிருந்தனர் கைதிகளை உளவியல் ரீதியாக சித்திரவதை செய்வதற்காக ஜெயிலர், சிறைக்கொட்டடியைப் பூட்டி, சாவியை உள்ளே வீசி எறிவார். சிறைச்சாலைக்குள் இருந்து கைதிகள் பூட்டுக்கு அருகே செல்ல முடியாத வகையில் பூட்டுகள் அமைந்திருந்தன. சிறைக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் ஒரு மரக் கட்டில், ஒரு அலுமினியத் தட்டு, இரண்டு பாத்திரங்கள் அதாவது ஒன்று தண்ணீர் குடிப்பதற்கும் மற்றொரு மலம் கழிக்கும் போது பயன்படுத்துவதற்கும் மற்றும் ஒரு கம்பளி போர்வை மட்டுமே இருந்தன. பெரும்பாலும் கைதிகளுக்கு அந்த சிறிய பாத்திரம் போதுமானதாக இல்லை. அதனால் அவர்கள் அறையின் மூலையில் மலம்கழிக்க வேண்டியிருந்தது. பின்னர் தங்கள் சொந்த கழிவுகளுக்கு அருகில் படுத்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் காலனித்துவ அரசு அரசியல் கைதிகளை தனித்தனியாக வைத்திருப்பதை உறுதிசெய்ய விரும்பியதால் Quaid-e-solitude (தனிமைச்சிறை) நடைமுறைக்கு வந்தது. அரசியல் கைதிகளில் ஃபஸ்ல்-இ-ஹக் கைராபாதி, யோகேந்திர சுக்லா, படுகேஷ்வர் தத், பாபா ராவ் சாவர்க்கர், விநாயக் தாமோதர் வீர் சாவர்க்கர், சசீந்திர நாத் சான்யால், ஹரே கிருஷ்ண கோனார், பாய் பர்மானந்த், சோஹன் சிங், சுபோத் ராய் மற்றும் திரிலோகி நாத் சக்ரவர்த்தி, மெஹமூத் ஹஸன் தேவபந்தி, ஹுசைன் அகமது மதனி மற்றும் ஜாபர் தானேசரி ஆகியோரின் பெயர்கள் பிரபலமானவை. மரணத்தின் முகத்தில் 1911-1921க்கு இடையில் சிறையில் அடைக்கப்பட்ட தாமோதர் சாவர்க்கர் விடுதலைக்குப் பிறகு தான் எதிர்கொள்ள வேண்டியிருந்த பயங்கரமான நிலைமைகளைப் பற்றி எழுதினார். கடுமையான ஜெயிலர் டேவிட் பெர்ரி தன்னை 'லார்ட் ஆஃப் போர்ட் பிளேயர்' என்று அழைத்துக் கொண்டார் என்று சாவர்க்கர் எழுதினார். "சிறையின் கதவுகள் மூடப்பட்டவுடன், தாங்கள் 'மரணத்தின் வாய்க்குள்' சென்றுவிட்டதாக கைதிகள் உணர்ந்தார்கள்." தனது மூத்த சகோதரரும் இதே சிறையில்தான் உள்ளார் என்பது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் சாவர்க்கருக்கு தெரியவந்தது. 'பிரிட்டிஷ் அரசு, இந்திய எதிர்ப்பாளர்களையும் கிளர்ச்சியாளர்களையும் ஒரு 'சோதனை'அடிப்படையில் காலனித்துவ தீவுக்கு அனுப்பியது. இதன்கீழ் சித்திரவதை, மருந்து பயன்பாடு, கட்டாய உழைப்பு மற்றும் பலருக்கு மரணம் ஆகியவை அடங்கும்," என்று 2021 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாளிதழான 'தி கார்டியன்' நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மருந்துகள் அளிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டன. இதன் காரணமாக பலர் நோய்வாய்ப்பட்டனர் மற்றும் பலர் தங்கள் உயிரை இழந்தனர். இந்த ஆய்வுக்காக, கேத்தி ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி ஆகியோர் அரசு பதிவுகளை ஆராய்ந்தனர். சிறையிலிருந்து வெளியே வந்தவர்களிடம் பேசினர். செல்லுலார் சிறையில், பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை பெற்ற ,நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கைதிகள், கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM படக்குறிப்பு, விநாயக் தாமோதர் சாவர்க்கர் 1909 மற்றும் 1931க்கு இடையில், செல்லுலார் சிறைச்சாலையின் ஜெயிலராக இருந்த டேவிட் பெர்ரி புதிய முறைகளில் தண்டிப்பதில் நிபுணராகக் கருதப்பட்டார். ராணியின் எதிரிகளை தூக்கிலிடாமல் அல்லது சுட்டுக்கொல்லாமல், சித்திரவதை மற்றும் வெட்கக்கேடான அட்டூழியங்கள் மூலம் அவர்களை முடித்துவைப்பது தனது தலைவிதியில் எழுதப்பட்டுள்ளதாக டேவிட் பெர்ரி கூறினார். மாவு இயந்திரங்களை இயக்குவது, எண்ணெய் ஆட்டுவது, கற்களை உடைப்பது, மரம் வெட்டுவது, ஒருவாரம் வரை கைவிலங்கு கால்விலங்கு பூட்டி நிற்கவைப்பது, தனிமை சிறை, நான்கு நாட்கள்வரை பட்டினி போடுவது போன்றவை இதில் அடங்கும். எண்ணெய் பிரித்தெடுத்தல் மிகவும் வேதனையாக இருந்தது. சுவாசம் விடுவது பொதுவாக மிகவும் கடினமாக இருந்தது, நாக்கு வறண்டு போகும். மூளை உணர்ச்சியற்றுப் போய்விடும். கைகளில் கொப்புளங்கள் ஏற்படும். எழுத்தாளர் ராபின் வில்சன், பெங்காலி கைதியான சுஷீல் தாஸ்குப்தாவின் மகனைச் சந்தித்தார்.1932 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் கோரியதற்காக கைது செய்யப்பட்டு அந்தமான் தீவுகளுக்கு அனுப்பப்பட்டபோது சுஷீலுக்கு 26 வயது. "கொளுத்தும் வெயிலில் ஆறு மணி நேரம் கடின உழைப்புக்குப் பிறகு, அவரது கைகள் தனது சொந்த ரத்தத்தில் வர்ணம் பூசப்பட்டிருக்கும். நார் தயாரிப்பதில் அன்றைய இலக்கைஎட்ட, தேங்காயை அடித்தடித்து அவரது உடல் சோர்வடையும். அவரது தொண்டை வறண்டு முள்ளாக மாறியிருக்கும். சோம்பலுக்கு பயங்கர தண்டனைகள் வழங்கப்பட்டன. அவர்கள் கழிப்பறைக்கு செல்லும் நேரம் குறித்தும் கண்டிப்பு நிலவியது. எந்த கைதியும் மலம் கழிக்க காவலரின் அனுமதிக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். கைதிகள் அடிமைகளைப் போல வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிலருக்கு பைத்தியம் பிடித்துவிடும். மற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள்" என்று தாஸ்குப்தாவின் மகன் குறிப்பிட்டார். பழங்கால ரோமாபுரி நகரின் ஆண், பெண் எலும்புக்கூடுகளில் கிடைத்த ரகசியம் “பறையா” என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற மூன்று பிரிட்டிஷ் பெண்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்து பூஷண் ராய், எண்ணெய் ஆலையின் முடிவில்லாத உழைப்பால் சோர்ந்துபோய், தனது கிழிந்த குர்தாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எண்ணெய் ஆலை என்ற நரகத்தில் கைதிகள் உழன்றுகொண்டிருக்கும் அதேநேரம் பெர்ரி மற்றும் பிற பிரிட்டிஷ் அதிகாரிகள் ராஸ் தீவில் உல்லாசமாக இருப்பார்கள். பெர்ரியின் அதிகாரபூர்வ தலைமையகத்தின் மற்ற கட்டிடங்களில் அவரது சொந்த டென்னிஸ் மைதானம், நீச்சல் குளம் மற்றும் அதிகாரிகளுக்கான கிளப்ஹவுஸ் ஆகியவை இருந்தன. கைதி உல்ஹாஸ்கர் தத் மிகவும் சித்திரவதை செய்யப்பட்டார். அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் தீவின் ஒரு பகுதியில் மனநல காப்பகத்தில் 14 ஆண்டுகள் வைக்கப்பட்டார். தத்தின் தந்தை தனது மகனுக்கு என்ன நேர்ந்தது என்று இந்திய வைஸ்ராய்க்கு பலமுறை கடிதம் எழுதியும் பதில் கிடைக்கவில்லை. மேலும் எட்டு கடிதங்களுக்குப் பிறகு, இறுதியாக அந்தமான் தீவின் தலைமை ஆணையரிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் கிடைத்தது."மலேரியா தொற்று காரணமாக நோயாளிக்கு பைத்தியம் பிடித்துள்ளது. தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளது" என்று அதில் எழுதப்பட்டிருந்தது. கைதிகளின் கிளர்ச்சி இத்தகைய அட்டூழியங்களை எதிர்த்து கைதிகள் கிளர்ச்சி செய்தனர். 1930 களின் முற்பகுதியில், செல்லுலார் சிறைச்சாலையின் சில கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1933 மே மாதம் கைதிகளின் உண்ணாவிரதம் சிறை நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்தது. இந்திய அரசின் உள்துறை பதிவுகளில், மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் தலைமை ஆணையர்கள் வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்வினையைப் பார்த்ததாக, கேத்தி ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி குறிப்பிடுகின்றனர். "உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் பாதுகாப்புக் கைதிகள் தொடர்பாக, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். உயிருடன் இருக்க வேண்டிய கைதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கக் கூடாது. அவர்களை தடுக்க கைகளைப் பயன்படுத்துவது சிறந்த வழியாகும். அவர்கள் எதிர்த்தால், இயந்திர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று அந்தப்பதிவில் கூறப்பட்டிருந்தது. தாங்கள் நடத்தப்படும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 33 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பகத் சிங்கின் கூட்டாளியான மகாவீர் சிங், லாகூர் சதி வழக்கில் தண்டனை பெற்ற மோகன் ராகேஷ், ஆயுதச் சட்ட வழக்கில் தண்டனை பெற்ற கிஷோர் நாமாதாஸ் மற்றும் மோகித் மொய்த்ரா ஆகியோர் இதில் அடங்குவர். கட்டாய உணவு கொடுத்ததால் மூவர் இறந்தனர். வலுக்கட்டாயமாக உணவளிக்க முயற்சித்தபோது பால் அவர்களது நுரையீரலில் நுழைந்தது. இதன் விளைவாக அவர்களுக்கு நிமோனியாவை ஏற்பட்டு இறந்தனர் என்று ஆர்.வி.ஆர்.மூர்த்தி கூறுகிறார். அவர்களது உடல்கள் கற்களால் கட்டப்பட்டு தீவைச் சுற்றியுள்ள நீரில் மூழ்கடிக்கப்பட்டன. பட மூலாதாரம்,SUMRAN PREET அந்தமான் தீவுகளை கைப்பற்றிய ஜப்பான் 1941-ம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டத., சுனாமி வந்திருக்கலாம். ஆனால் உயிர், உடைமை சேதம் குறித்த புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஜப்பான், 1942 மார்ச் மாதம் அந்தமான் தீவுகளை ஆக்கிரமித்தது. அதன்பிறகு செல்லுலார் சிறையில், ஆங்கிலேயர்கள், ஆங்கிலேய ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் இந்தியர்கள், பின்னர் இந்திய சுதந்திரத்தின் உறுப்பினர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு வன்முறையில் பலர் பலியாகி கொல்லப்பட்டனர் என இக்பால் சிங் எழுதுகிறார். . 1944 ஜனவரி 30 ஆம் தேதி ஜப்பானியர்கள் 44 உள்ளூர் கைதிகளை செல்லுலார் சிறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்று, லாரிகளில் ஏற்றி ஹம்ப்ரேகஞ்சிற்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஏற்கனவே பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்களுக்கு உளவு பார்த்ததான சந்தேகத்தின் பேரில் அவர்கள் தோட்டாக்களால் துளைக்கப்பட்டனர். உடல்களை அதே பள்ளத்தில் தூக்கி எறிந்து, மேலிருந்து மண்ணைக் கொட்டி பள்ளம் மூடப்பட்டது. உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, வேலை செய்ய முடியாத வயதான கைதிகளை 'முடித்துவிட' ஜப்பானியர்கள் முடிவு செய்தனர்,"என்று வாசிம் அகமது சயீத் எழுதுகிறார். " 1945 ஆகஸ்ட் 13 ஆம் தேதி 300 இந்தியர்கள் மூன்று படகுகளில் ஏற்றப்பட்டு மக்கள் வசிக்காத தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். படகுகள் கரையிலிருந்து தூரத்தில் இருந்தபோது, கைதிகள் கடலில் குதிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்,"என்று டேவிட் மில்லர் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நீரில் மூழ்கினர் மற்றும் கரையை அடைந்தவர்கள் பசியால் இறந்தனர். ஆறு வாரங்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் உதவிப் பணியாளர்கள் வந்தபோது, 11 கைதிகள் மட்டுமே உயிருடன் இருந்தனர். அடுத்த நாள், 800 கைதிகள் மக்கள் வசிக்காத மற்றொரு தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் கரையோரம் விடுவிக்கப்பட்டனர். கரைக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரும் சுடப்பட்டனர். பின்னர் ராணுவ வீரர்கள் வந்து இறந்தவர்களின் உடல்களை எரித்து அடக்கம் செய்தனர். 1945 அக்டோபரில் ஜப்பானியர்கள் ஐக்கியப் படையிடம் சரணடைந்தனர். மேலும் அந்தமான் தீவுகள் மீண்டும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இம்முறை பாதிக்கப்பட்டவர்களில் ஜப்பானியர்களும் அடங்குவர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்கள், 1945 அக்டோபர் 7 ஆம் தேதி தண்டனைக்காக கட்டப்பட்ட இந்த குடியேற்றத்தை அழித்து, கைதிகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளுக்கு அனுப்பினர். 1860 ஆம் ஆண்டு முதல் சுமார் 80 ஆயிரம் இந்தியர்கள் தண்டனையாக அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர் என்று பதிவுகள் கூறுகின்றன. பெரும்பாலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் வங்காளம், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெரும்பாலும் இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் எல்லா சாதிகள், சமூகங்களைச் சேர்ந்தவர்கள். 1957ஆம் ஆண்டு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சுதந்திரப் போராட்டத்தின் நினைவாக நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில், கிளர்ச்சியாளர் சாஹிர் லூதியான்வி, 'சுதந்திரப் போரில் சாமானியர்கள் கொல்லப்பட்டதற்கு பிரிட்டன் மன்னிப்புக் கேட்காவிட்டாலும்கூட, காலா பானி அட்டூழியங்களுக்காக துணைக் கண்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறியிருந்தார். https://www.bbc.com/tamil/india-62140248
  6. காஷ்மீரி பண்டிட் சுனில் குமார் கொலை - கிராம முஸ்லிம்கள் சொல்வது என்ன? மாஜித் ஜஹாங்கீர் ஸ்ரீநகரில் இருந்து பிபிசி இந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,IMRAN ALI படக்குறிப்பு, சுனில் குமார் "எனக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இப்போது அவர்களை யார் வளர்ப்பார்கள்? என் கணவரை கொன்றவர்களுக்கும் இதே கதி ஏற்பட வேண்டும். என் கணவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். வீட்டை விட்டுச்சென்ற 10 நிமிடங்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அவரை கொன்று விட்டார்கள் என்று நான் அலறினேன். என் அம்மாவும் மகள்களும் பட்டாசு சத்தம் என்று சொன்னார்கள. நாங்கள் பின்னர் அங்கு சென்றபோது அவர் கீழே கிடந்தார். அதன் பிறகு எனக்கு எதுவுமே தெரியாது." சுனிதா தனது கணவரின் உடலுக்கு அருகே அமர்ந்தபடி அழுது கொண்டே இவ்வாறு கூறினார். அவரது உறவினர்கள், சுனிதாவின் அருகில் அமர்ந்திருந்த பெண்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். ஆனால் இந்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை. தெற்கு காஷ்மீரின் சோஃபியான் மாவட்டம் சோட்டிபுரா கிராமத்தில் வசித்துவந்த சுனில் குமார் செவ்வாய்க்கிழமையன்று தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் சுனில் குமாரின் மூத்த சகோதரர் பீதாம்பர் நாத் பலத்த காயம் அடைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலைக்கு பயங்கரவாதிகளே காரணம் என போலீசார் கூறுகின்றனர். பட மூலாதாரம்,IMRAN ALI படக்குறிப்பு, சுனில் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க சோட்டிபுரா கிராமத்திற்கு வந்த மக்கள் கிராமத்தில் எத்தனை பேர் இந்துக்கள்? சுனில் குமாரின் குடும்பத்தைத் தவிர மேலும் இரண்டு பண்டிட் குடும்பங்கள் சோட்டிபுரா கிராமத்தில் வசிக்கின்றன. இரு குடும்பங்களும் நெருங்கிய சொந்தம். இந்த மூன்று வீடுகளிலும் மொத்தம் 16 பேர் வசிக்கின்றனர். சுனில் குமார் மற்றும் அவரது சகோதரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, அவர்கள் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். பில்கிஸ் பானோ வழக்கு: விடுவிக்கப்பட்ட 11 கூட்டுப் பாலியல் வல்லுறவு கைதிகளுக்கு ஆரத்தி வரவேற்பு சரியா? சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல்: இந்தியா ஏன் மெளனம் காக்கிறது? டெல்லியில் நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன? சுனில் குமார் கொலைக்குப் பிறகு சோட்டிபுரா கிராமத்தில் ஆழ்ந்த அமைதி நிலவுகிறது. எல்லா இடங்களிலும் ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராமத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. காஷ்மீர் பிரிவு காவல்துறை ஆணையர் பாண்டுரங் கே பால், சுனில் குமாரின் வீட்டிற்கு வந்தபோது குடும்பத்தினரின் கோபம் அதிகரித்தது. சுனில் குமாரின் குடும்பத்தைச் சேர்ந்த அனில் குமார், பாண்டுரங் கே.பாலின் வழியை மறித்து அவரை மேலே செல்ல அனுமதிக்கவில்லை. "நான் அனில் குமார். நான்கு மாதங்களுக்கு முன் என் மற்றொரு சகோதரர் தாக்கப்பட்ட போது உங்களிடம் வந்தேன். எங்களுடைய உயிரைப் பாதுகாக்க ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னேன்.என்னால் எதுவும் செய்ய முடியாது என்று நீங்கள் சொன்னீர்கள்.என் கையில் எதுவும் இல்லை நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருங்கள் என்று கூறினீர்கள்," என்று அனில் குமார், பாண்டுரங் கே பாலிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,IMRAN ALI படக்குறிப்பு, சுனில் குமாரின் இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யும் கிராம மக்கள் கோபமடைந்த அனில் குமார், பாண்டுரங் கே. பாலிடம், "இன்று என்ன செய்ய இங்கு வந்துள்ளீர்கள். பதில் கூறுங்கள்" என்று சொன்னார். பின்னர் அனில் குமாரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பிறகுதான் காவல்துறை அதிகாரி பால், சுனில் குமாரின் வீட்டிற்குள் நுழைய முடிந்தது. குடும்பத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்த காவல்துறை ஆணையர், கடந்த முறை சுனில் குமாரின் சகோதரர் பால் கிருஷ்ணா தாக்கப்பட்டபிறகு வீட்டின் அருகே காவலர்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறினார். கூடவே பயங்கரவாதத்தை இன்னும் சில காலம் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அனில் குமாரின் ஒன்றுவிட்ட சகோதரர் பால் கிருஷ்ணா, அதே கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் அருகே தீவிரவாதிகளால் சுடப்பட்டார்.ஆனால் அவர் உயிர் பிழைத்தார். அனில்குமார் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு எந்த ஊடகவியலாளரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. பட மூலாதாரம்,IMRAN ALI சுனில் குமாரின் குடும்பம் எப்போதுமே காஷ்மீரை விட்டுச்செல்லவில்லை. இரத்தக்களறி உச்சத்தில் இருந்தபோதும்கூட இந்த குடும்பம் காஷ்மீரை விட்டு வெளியேறவில்லை. சுனில்குமார் விவசாயம் செய்து வந்தார். சுனில் குமாருக்கு நான்கு மகள்கள் மற்றும் மனைவி உள்ளனர். சுனில் குமாரின் வீட்டுக்கு ஆறுதல் கூற அப்பகுதி மக்கள் திரளாக வந்து கொண்டிருந்தனர். அண்டை வீட்டுப் பெண் ஷாஹினா சுனில் குமாரின் வீட்டிற்கு வந்தார். பட மூலாதாரம்,IMRAN ALI படக்குறிப்பு, ஷாஹினா "அவரது மரணத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அவர் தனது அண்டை வீட்டாருடன் மிகவும் நல்ல உறவைக் கொண்டிருந்தார். அவரது மரணத்தால் நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளோம். நாங்கள் ஒரு நல்ல அண்டை வீட்டாரை இழந்துவிட்டோம்."என்று ஷாஹினா பிபிசியிடம் தெரிவித்தார். சோட்டிபுரா கிராமத்தைச் சேர்ந்த பல முஸ்லிம்கள் சுனில் குமாரின் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இறுதிச் சடங்குகளின் எல்லா பொறுப்புகளையும் குடும்பத்தினருடன் இணைந்து அப்பகுதி முஸ்லிம்கள் நிறைவேற்றினர். அவர்களின் உறவினர் காலமானதுபோல அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். சுனில் குமாரின் பக்கத்து வீட்டுக்காரரான முதாசிர் அகமது லோன், "சுனில் குமாரின் கொலை மிகவும் வருத்தமளிக்கிறது. நாங்கள் அதை அங்கீகரிக்கவில்லை," என்றார். காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக, காஷ்மீரி பண்டிட்டுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் திரும்பிய காஷ்மீரி பண்டிட் ராகுல் பட் கொல்லப்பட்டதை அடுத்து, காஷ்மீரில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான காஷ்மீரி பண்டிட்டுகள் தெருக்களில் போராட்டம் நடத்தினர். காஷ்மீரி பண்டிட்டுகளின் இடைத்தங்கல் முகாம்களுக்குள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் காஷ்மீரி அல்லாதவர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீரி பண்டிட்டுகளை காஷ்மீரை விட்டு வெளியேற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்பிற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு உறுதி அளித்தது. அரசின் இந்த உத்தரவாதத்திற்குப் பிறகுதான், பிரதமர் பேக்கேஜின் கீழ் பணிபுரியும் ஆயிரக்கணக்கான காஷ்மீரி பண்டிட்டுகள் தங்கள் ஆர்ப்பாட்டங்களை கைவிட்டனர். https://www.bbc.com/tamil/india-62583065
  7. எடப்பாடி - ஓபிஎஸ் சர்ச்சையில் அதிமுக: ஒன்றிணைந்து செயல்பட ஓ.பி.எஸ் அழைப்பு: நிராகரித்து நீதிமன்றம் சென்றார் எடப்பாடி முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்புடன் இணைந்து செயல்பட ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில், அதை நிராகரித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, நேற்று வெளியான தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அ.தி.மு.கவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓ. பன்னீர்செல்வம். அந்த செய்தியாளர் சந்திப்பில், எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கும் பொருந்துமெனவும் அவர் குறிப்பிட்டார். "அ.தி.மு.கவை தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கினார் எம்.ஜி.ஆர். 30 வருடங்கள் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் இருக்கும்போது 15 லட்சம் தொண்டர்கள் கொண்ட இயக்கத்தை, ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக மாற்றினார். 16 ஆண்டு காலம் முதலமைச்சராகவும் இருந்தார். அ.தி.மு.க. ஒன்றுபட்டு நின்றபோது, அதை வெல்ல எந்தக் கட்சியும் இல்லை என்ற நிலையை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கினார்கள். எங்களுக்குள் பிளவு ஏற்படும்போது தான் தி.மு.க ஆளும் சூழல் ஏற்பட்டது. இன்றும் அந்தச் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால், எங்களுக்குள் ஏற்பட்ட இந்தப் பிரச்சனையால் ஒரு அசாதாரணமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் எங்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு கழகம் ஒன்றுபட வேண்டும். எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தியாகங்களைச் செய்தார்களோ, அதனை எண்ணி, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும். அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அது எப்படியிருந்தாலும் பரவாயில்லை. தொண்டர்கள் இந்தக் கழகம் ஒன்றுபட வேண்டுமென நினைக்கிறார்கள். எந்தக் கசப்புகளையும் யாரும் மனதில் வைக்காமல் தூக்கியெறிய வேண்டும். கழகத்தின் ஒற்றுமையே பிரதானமாக இருக்க வேண்டும். அதிமுக சர்ச்சை: ஜூன் 23 பொதுக்குழுவுக்கு முந்தைய நிலையே நீடிக்கும் - உயர் நீதிமன்றம் எடப்பாடி - ஓபிஎஸ் பலப்பரீட்சையில் சிக்கிய அதிமுகவுக்கு இனி என்ன ஆகும்? டெல்லியில் நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன? எம்.ஜி.ஆரை தி.மு.கவிலிருந்து வெளியேற்றியதால் அ.தி.மு.க. உருவானது. அதற்குப் பிறகு, தி.மு.கவா, அ.தி.மு.கவா என்ற நிலை வந்தபோது, அதிமுகவே அதிக வாய்ப்பைப் பெற்றது. இப்போது தி.மு.க. ஆள்கிறது. எங்களைப் பொறுத்தவரை, உரிய எதிர்க்கட்சியாக, எதிர்த்துக் குரல் கொடுக்கும் கட்சியாக அ.தி.மு.க. இருக்கும். எங்களோடு 50 ஆண்டு காலம் இணைந்து செயல்பட்ட தொண்டர்கள் மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும். கடந்த நான்கரை ஆண்டு காலம் அன்பு சகோதரர் எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவரோடு ஒற்றுமையாகப் பயணித்திருக்கிறோம். பல்வேறு ஜனநாயகக் கடமைகளை ஆற்றியிருக்கிறோம். அந்த நிலை மீண்டும் வர வேண்டும். ஜெயலலிதா இறந்த பிறகு, தர்மயுத்தம் துவங்கப்பட்டு அதற்குப் பின்னால் கழகத்தின் உயர்மட்ட தலைவர்கள், தொண்டர்களின் கருத்துப்படி கூட்டுத் தலைமையாகச் செயல்படும் என்பதுதான் எங்கள் கொள்கையாக இருந்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டோம். எந்தக் குறையும் அவரிடமும் இல்லை என்னிடமும் இல்லை. ஆக, இரட்டைத் தலைமை என்பது அல்ல, கூட்டுத் தலைமைதான் இந்த இயக்கத்தை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வெற்றிகரமாக நடத்திச் சென்றது. இந்த இணைப்பு தான் தொண்டர்களின் எண்ணமாகவும் பொதுமக்களின் எண்ணமாகவும் இருக்கிறது," என்று தெரிவித்தார். ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும்போதே, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி கே. பழனிசாமி நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த தகவல் வெளியானது. அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பட மூலாதாரம்,GETTY IMAGES அதற்குப் பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், "எங்கள் எண்ணம், செயல் எல்லாம் இணைப்புதான். எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு - வெறுப்பு ஏதும் இல்லை. இதற்கு முன்னால் நடந்தவை நடந்தவையாகவே இருக்கும். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இந்த இயக்கத்தை வளர்க்கப் பாடுபட்டவர்கள், ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், ஜெயலலிதா காலத்தில் தூணாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்துக் கொண்டு கழகம் வெற்றிபெற வேண்டும்," என்றார். அந்தப் பட்டியலில் சசிகலா, தினகரன் இருக்கிறார்களா என்று கேட்டபோது, "அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்" என்றார் ஓ. பன்னீர்செல்வம். அவர்கள் பெயரைச் சொல்ல ஏன் தயங்குகிறீர்கள் எனக் கேட்டபோது, "அதில் சின்னம்மாவும் (வி.கே. சசிகலா) இருக்கிறார், டிடிவி தினகரனும் இருக்கிறார்" என்று தெரிவித்தார். இதற்கிடையில், அ.தி.மு.க. விவகாரம் குறித்து நேற்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் எடப்பாடி கே. பழனிச்சாமி மேல் முறையீடு செய்திருக்கிறார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வழக்கை திங்கட்கிழமை விசாரிப்பதாகக் கூறியிருக்கிறது. இதற்கிடையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பிடம் கொடுத்ததற்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, சாவியைக் கொடுத்த விவகாரத்தில் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. விரிவாக விசாரிக்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறிவிட்டது. எதிர் மனுதாரர்கள், சீல் வைத்த தமிழ்நாடு வருவாய்த் துறை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், இரட்டை இலையை முடக்க வேண்டுமெனக் கோரி ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பட மூலாதாரம்,AIADMK TWITTER எடப்பாடி கே. பழனிச்சாமி சொல்வது என்ன? ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து சிறிது நேரத்திற்குப் பிறகு எடப்பாடி கே. பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். "இந்த இயக்கத்தை சிலர் தங்கள் வசம் கொண்டுபோக நினைக்கிறார்கள். அதைத் தடுக்கும்போதுதான் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்திருந்தோம். 2017ல் இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்தோம். அதற்குப் பிறகு பொதுக் குழு உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுசெய்யப்பட்டனர். சட்ட விதிகள் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. ஆகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்பட்டனர். இதற்குப் பிறகு கழகத்தின் அமைப்புத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பொதுக் குழு உறுப்பினர்களால் அல்லாமல் பொது உறுப்பினர்களால் தேர்வுசெய்ய வேண்டுமென விதிகளை மாற்றினோம். அந்த விதி மாற்றத்தை அடுத்து கூடுகின்ற பொதுக் குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த விதிமாற்றத்தை பொதுக் குழுவில் ஒப்புதல் பெறவில்லை. ஆகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது காலாவதியாகிவிட்டது. பொதுக் குழுவின் 2,663 பேர் தேர்வுசெய்தால் போதுமான என எங்களிடமிருந்து பிரிந்து நிற்பவர்கள் கேட்கிறார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் தேர்வுசெய்யப்பட்டவர்கள். யாரும் நியமன உறுப்பினர்கள் அல்ல. ஒற்றைத் தலைமை வேண்டுமென்ற கருத்தை பொதுமக்கள், தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள். ஜூன் 23ஆம் தேதி பொதுக் குழு கூட்டப்படும் என அறிவித்தோம். இதற்கிடையில் ஜூன் 14ஆம் தேதி தலைமைக் கழகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அங்கும் தொண்டர்கள் நிர்வாகிகளிடம் ஒற்றைத் தலைமை குறித்து தெரிவித்தார்கள். யார் அந்த ஒற்றைத் தலைமை என்பது விவாதிக்கப்படவில்லை. அங்கே ஓ. பன்னீர்செல்வமும் இருந்தார். இதற்கிடையில், அந்தப் பொதுக் குழுவில் பிரச்சனை ஏற்படும் அனுமதிக்கக்கூடாது என காவல்துறைக்கும் மண்டபத்திற்கும் கடிதம் எழுதியிருக்கிறார். இது எவ்விதத்தில் நியாயம்? பொதுக் குழுவிற்கு தடையாணை பெற கட்சியின் ஒருங்கிணைப்பாளரே போகிறார். இதெல்லாம் சரியா? " என்று எடப்பாடி கேள்வி எழுப்பினார். அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்கவேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு தமிழ்நாடு அரசியல்: டிடிவி தினகரனின் அரசியல் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்? நரேந்திர மோதிக்கு ஸ்டாலின் எழுதிய ரகசிய கடிதம் - இபிஎஸ் டெல்லி வருகையில் என்ன நடந்தது? ஓ. பன்னீர்செல்வம் விடுத்திருக்கும் அழைப்பு குறித்து கேட்டபோது, "அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார், தர்மயுத்தம் சென்றார். யார் அழைத்து சென்றார்? அவருக்கு பதவி வேண்டும். பதவியில்லாமல் இருக்க முடியாது. உழைப்பு கிடையாது. ஆனால், பதவி மட்டும் வேண்டும். குடும்பத்திலிருப்பவர்கள் பதவி பெற வேண்டும். மகன் எம்.பியாகி மந்திரியாக வேண்டும். மற்றவர்கள் எப்படிப் போனாலும் கவலையில்லை. இணைய வேண்டும் என்கிறார். தவிர, ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 2017ல் எப்படிக் கூட்டப்பட்டதோ அதேபோலத்தான் இப்போதும் கூட்டப்பட்டது. அவர் அங்கே வந்திருக்க வேண்டும். மாறாக அவர் நீதிமன்றத்திற்குச் சென்றார். 9 மணிக்குக் கூட்டம் என்றால் எட்டரை மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்து கேட்டை உடைத்தார். பிரதான கதவை ரவுடிகளை வைத்து உடைக்கிறார். எல்லா அறைகளையும் உடைத்து கம்ப்யூட்டர்களை உடைத்து, முக்கியமான பொருட்களை திருடிச் சென்றார். சொத்துப் பத்திரங்களை எடுத்துச் சென்றார். இவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும். இதனை தலைமைக் கழக நிர்வாகிகள் தடுக்கும்போது, அவர்களை அடித்து உதைத்தார்கள். இன்னும் வழக்குகளை சந்திக்கிறார்கள். கட்சியில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி செயல்பட்டால், அவரோடு எப்படி செயல்பட முடியும். சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அனைத்துப் பொறுப்பார்களும் என்னை முதல்வராக அறிவிக்கிறார்கள். ஆனால், இவர் ஏற்க மறுத்தார். 15 நாள் தொலைக்காட்சிகளில் விவாதமாக ஆனது. இதனால் 3 சதவீத ஓட்டில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். இவரால்தான் அது நடந்தது. தேர்தல் முடிந்த பிறகு யார் எதிர்க்கட்சித் தலைவராவது என்ற விவகாரம். கூட்டம் கூடியபோது 66 பேர் என்னை ஆதரிக்கிறார்கள். 3 பேர் அவரை ஆதரித்தார்கள். இவர் அதை ஏற்க மறுத்தார். இப்படியிருந்தால் கட்சியை எப்படி பொதுமக்கள் ஏற்பார்கள்? அதனால்தான் ஒற்றைத் தலைமை வேண்டுமென கேட்கப்பட்டது. இது தவிர, தி.மு.கவோடு தொடர்பில் இருக்கிறார். இவருடைய மகன் எம்பி, ஸ்டாலினைச் சந்தித்து சிறப்பான ஆட்சி நடக்கிறது என்று கூறினார். இது தொண்டர்களிடம் மனச் சோர்வு ஏற்பட்டது. இதை எப்படி ஏற்க முடியும். இதனால்தான் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்தது. நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை. சொந்தக் காலில் நிற்க வேண்டுமென நினைக்கிறேன். 1974லில் இருந்து படிப்படியாக மேலே வந்தேன். ஒரே கட்சியில் இருக்கிறேன். பட மூலாதாரம்,GETTY IMAGES 1989ல் ஜெயலலிதாவுக்கு எதிராக நின்ற வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஏஜென்டாக இருந்தார் ஓ. பன்னீர்செல்வம். இவர் எப்படி விசுவாசியாக இருக்க முடியும்? இருவரும் இணைந்து பொதுக் குழுவைக் கூட்ட வேண்டுமென்கிறது நீதிமன்றம். அப்படியானால் பொதுக் குழுவிற்குத்தான் அதிகாரம் என்பதை ஏற்கிறார்களா? நாங்கள் மேல் முறையீடு செய்திருக்கிறோம். அதில் எல்லாம் வெளிவரும். ஓ.பி.எஸ்சைப் பொறுத்தவரை பதவிக்கு வர வேண்டுமென்ரால் என்ன வேண்டுமானாலும் சொல்வார். இல்லாவிட்டால் தர்மயுத்தம் என்பார். அப்போது யாரும் வேண்டாம் என்பார். பதவி வேண்டுமென்றால் எல்லோரையும் சேர்ப்போம் என்பார். இங்கிருக்கும் நிர்வாகிகள் அவரோடு 15 நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர் ஒத்துவரவில்லை. பெரும்பான்மை நிர்வாகிகள் நினைப்பதை பிரதிபலிக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சிக்கு வர முடியும். ஒற்றைத் தலைமைக்கு அவர் ஏற்க மறுக்கிறார். அதை ஏற்றுக் கொண்டு, பொதுக் குழுவுக்கு வந்து பாருங்கள். நீதிமன்றமே அதைத்தானே சொல்கிறது. பொதுக் குழுதான் உச்சபட்ச அதிகாரம் படைத்தது. ஆனால், அங்கே வர மறுத்து கட்சி அலுவலகத்தை உடைக்கிறார். எம்.ஜி.ஆரால் கொடுக்கப்பட்ட மாளிகையை உடைத்து உள்ளே போனவர் இறந்து போனார். இன்னொருவர் ஜெயலலிதாவின் அறையை உடைத்தவர் இரண்டு கால்களும் உடைந்து கிடக்கிறார்." என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62588045
  8. நெல்லை கண்ணன் மரணம்: இலக்கியம், அரசியல் உலகில் 50 வருட பயணம் 18 ஆகஸ்ட் 2022, 08:39 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER பேச்சாளரும், காங்கிரஸ் பிரமுகருமான நெல்லை கண்ணன் காலமானார். பெயரின் முன்னொட்டு காட்டுவதைப் போல, தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் ந.சு.சுப்பையாப் பிள்ளை, முத்து லக்குமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் நெல்லைக் கண்ணன். காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டுவந்த இவர், காமராஜர் போன்ற தலைவர்களோடு பழகியவர். பழந்தமிழ் இலக்கியங்களில் அறிமுகமும், அறிவும் உள்ள நெல்லைக் கண்ணன் தனது ஆற்றொழுக்கான தமிழ்ப் பேச்சால் பலர் உள்ளங்களைக் கவர்ந்தவர். அதே நேரம், அரசியல் தொடர்பாகப் பேசும்போது சர்ச்சையாகவும் பேசக்கூடியவர். தமது சர்ச்சைப் பேச்சுகளால் வெவ்வேறு காலகட்டங்களில் முரண்பட்ட அரசியல் முகாம்கள் பலவற்றைப் பகைத்துக் கொண்டவர். சமீபத்தில் ஏற்பட்ட அப்படி ஒரு சர்ச்சையில், 2020 ஜனவரியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அமித் ஷா ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்துப் பேசியதாகக் கூறி தமிழ்நாடு அரசால் கைது செய்யப்பட்டார். கடந்த காலங்களில் திமுக தலைவர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாகவும் இவர் மீது குற்றம் சாட்டுவோர் உண்டு. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 நெல்லை கண்ணன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன் அவர்கள், விழா மேடையிலேயே, என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன். 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினிய நெல்லை கண்ணன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 "நெல்லை கண்ணன் 1970இல் அறிமுகம். மாணவர் காங்கிரஸ், ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்ட அரசியல் என இவரோடு காமராஜர் காலத்தில் பயணித்ததுண்டு. சென்னை சட்டக்கல்லூரி பிராட்வே எம்யூசி விடுதியில் எனது அறைக்கு வருவார். 1979 முதல் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ஆழ்ந்த இரங்கல்," என்று திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 1970களில் தொடங்கி தமிழ் மேடைகளில் நெல்லை கண்ணனின் குரல் ஒலித்தது வந்தது. பாற்கடல் போல் தமிழ் மொழியில் புலமை பெற்றிருந்தார், அவரை பலர் 'தமிழ்க்கடல்' என்று அழைத்து வந்தனர். தமிழ் மீது தீராத பற்று கொண்டவர். அவர் வீடு முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருக்கும். தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்த அவர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். 75 வயதை நெருங்கும் நிலையிலும் பேச்சாற்றலும் நினைவாற்றலும் இவரது பேச்சில் இலக்கிய நயமும் சிறப்பாக இருந்தது. கண்ணதாசன் பிறந்தநாள்: காலத்தைக் கடந்து ஒலிக்கும் கவிஞரின் பாடல்கள் கண்ணகியும் எகிப்தின் இசிஸ் தெய்வமும் ஒன்றா? பண்டைய எகிப்திய மன்னரின் மூதாதையர் திராவிடரா? “பறையா” என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை முக்கிய அரசியல் தலைவர்களுடன் நட்பு இலக்கியவாதியும், பிரபல பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் அவார். தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள், ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருடன் நட்பாக இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர். 1992 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலின்போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நெல்லையில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குடன் இருந்த நெல்லை கண்ணன், 1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட போது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டார். 2001-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா இவருக்கு ஒரு கார் பரிசளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், நெல்லை கண்ணன் அதிமுகவில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. ஓர் ஆண்டு இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். அரசியலில் மிகப் பெரிய பதவிக்கு அவரால் வர முடியவில்லை. மோதியை விமர்சித்த நெல்லை கண்ணன் இந்தியக் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக நெல்லை மேலப்பாளையத்தில், நடைபெற்ற மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை இழிவாக பேசியதாகவும், இஸ்லாமியர்களிடம் வன்மத்தை தூண்டியதாகவும் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, நெல்லை காவல்துறையினரால் 2020 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று இரவில் பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். பின்னர் திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், நெல்லை கண்ணனை 14 நாட்கள் வரை நீதிமன்றக் காவலில் வைத்திருந்தது. "79 வயது கிழவன் நொந்து போய் உள்ளேன்" என ஸ்டாலினுக்குபேஸ்புக் பக்கத்தில் பதிவு பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, நிகழ்ச்சி ஒன்றில் மு.க.ஸ்டாலின், தொல். திருமாவளவன், வைகோ உள்ளிட்டோருடன் நெல்லை கண்ணன். கடந்த மே மாதம் நெல்லை கண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில், '79 வயதுக் கிழவன் நொந்து போய் உள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை' என பதிவிட்டிருந்தார். அது அரசியல் வட்டாரத்தில் பலராலும் பேசும் பொருளாக மாறியது. அவர் பேஸ்புக் பதிவில், 'வேறு வழியில்லை எழுத வேண்டியிருக்கிறது. மிகச் சிறப்பான முதல்வர் என உலகம் போற்றுகிறது. அதனை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. விருது வழங்கும் விழாவில் என்னை தானே பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்து என்னிடம் காட்டிய தாயுள்ளத்தை உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன். அன்று என் கரங்களைப் பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு, 'இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது' என்றார். இனி நான் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். என்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார். இன்று ஒரு கடிதத்திற்கும் கூட விடை இல்லை. நேரில் பேச அனுமதிக்கவில்லை. 79 வயது கிழவன் நொந்து போய் உள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை. அவரது உதவியாளர் வெண்ணந்தூர் தினேஷ் அனுமதிக்க மறுக்கிறார். இதனாலேயே இறந்து போகலாம் எனக் கருதுகிறேன். மரணம் தானே உறுதி' என்று குறிப்பிட்டிருந்தார். https://www.bbc.com/tamil/india-62589103
  9. ஃபிஃபாவின் தடையால் இந்திய கால்பந்து வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு? ஜானவி மூலே பிபிசி மராத்தி 17 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,INDRANIL MUKHERJEE/AFP படக்குறிப்பு, ஃபிஃபாவின் இடைநீக்க நடவடிக்கையால் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. "உலக கோப்பைக்காக நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் அணியில் இடம் பெறவில்லை, ஆனால் விளையாட்டுகளைப் பார்க்கப் போகிறேன். உலக கோப்பையை நடத்துவது நம் நாட்டிற்கு ஒரு பெரிய கெளரவம். ஆனால் இப்போது அது நடக்காது என்ற நிலை வந்திருப்பது என்னை வருத்தப்படுத்துகிறது." அகில இந்திய கால்பந்தாட்ட அமைப்பு மீதான ஃபிபாவின் தடை நடவடிக்கை குறித்து கேட்டபோது, மும்பையில் 17 வயது கால்பந்தாட்ட வீராங்கனையான சாய் இப்படித்தான் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். U-17 எனப்படும் பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிர் கால்பந்து உலக கோப்பையை நடத்துவதற்கான உரிமையை இந்தியா பெற்றதிலிருந்து சாயைப் போன்ற இளம் கால்பந்து வீராங்கனைகளில் பலர் மகிழ்ச்சியாகவும் ஆவலுடனும் காத்திருந்தனர். ஆனால் உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபா தற்போது இந்திய கால்பந்து விளையாட்டின் நிர்வாக அமைப்பான அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) இடைநீக்கம் செய்துள்ளது. இது இந்திய வீராங்கனைகளின் உற்சாகத்தை குலைத்ததுடன் 2022 அக்டோபரில் நடைபெறவிருக்கும் போட்டியில் அணியின் பங்கேற்பையும் கேள்விக்குரியதாக்கி விட்டது. 'மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கு' காரணமாக ஃபிபா இந்தியாவை இடைநீக்கம் செய்துள்ளது, ஆனால் இந்தத் தடையின் விளைவுகள் வீரர்களுக்கு கடுமையானதாக இருக்கலாம்," என்கிறார் சாய். "இது ஒரு உலக கோப்பை என்பதால், விளையாட்டுக்கு அதிக ஊக்கம் கிடைத்திருக்கும். அனைவரின் பார்வையும் இந்தியா மற்றும் இந்திய வீரர்கள் மீது இருந்திருக்கும். இந்த துறையில் விளையாட விரும்பும் மற்ற பெண்களுக்கும் அது ஊக்கம் கொடுத்திருக்கும், பலர் கால்பந்து விளையாட்டைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள், தாங்களும் உலக கோப்பையில் விளையாடலாம் என்ற எண்ணத்தை விளையாட்டை பார்ப்பவர்களுக்கு கொடுத்திருக்கும். ஆனால் இது எதுவும் இப்போது நடக்கப் போவதில்லை," என்கிறார் சாய். இந்த தடங்கல்களுக்கு மத்தியிலும் சாயைப் போன்ற வீராங்கனைகள், தொடர்ந்து கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்துகிறார்கள். இத்தகைய நடவடிக்கை, கால்பந்து அணி மீதான நன்மதிப்பை குலைத்து விடும் என்ற கவலையை இந்த வீராங்கனைகள் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த தர்மசங்கடம் ஏன் வந்தது? இந்தியா இன்னும் இந்தப் போட்டியை நடத்துவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? FIFA ஏன் AIFFஐ இடைநீக்கம் செய்தது? FIFA சட்டங்களின்படி, சுயாட்சிக் கொள்கை அவசியம். அதாவது, கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள அணி மீது அரசியல் அல்லது சட்டரீதியான தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். இந்த விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்ட முதல் நாடு இந்தியா அல்ல. பெனின், குவைத், நைஜீரியா, இராக் போன்ற நாடுகள் மீதும் கடந்த காலங்களில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாகோஸ் கால்பந்து அணி: சொந்த நாட்டில் இதுவரை கால் வைக்காத வீரர்கள் "இலங்கையில் யாரும் உதவவில்லை" - 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த யுபுன் அபேகோ கடந்த ஆண்டு, இதே விதியின் கீழ் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டது. ஜிம்பாப்வே மற்றும் கென்யா மீதான தடை அமலில் இருந்த வேளையில் கடந்த ஜூலை மாதம் அந்தத் தடை நீக்கப்பட்டது. இந்தியாவில், அகில இந்திய கால்பந்தாட்ட கூட்டணிப்பில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கோலோச்சி வருபவர் முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான பிரஃபுல் படேல். இவர்தான் ஃபிபா கவுன்சிலில் இந்திய பிரதிநிதி ஆக இருந்தவர். நான்கு ஆண்டுகள் கொண்ட AIFF தலைவர் பதவிக்காலத்தை தொடர்ச்சியாக மூன்று முறை வகித்தவர் பிரஃபுல் படேல். ஆனால், இந்திய தேசிய விளையாட்டு கோட்பாட்டின்படி மீண்டும் அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறவில்லை. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பிரஃபுல் படேல் பிரஃபுல் படேலின் பதவிக்காலம் 2020இல் முடிவடைந்தது. ஆனால், அதன் பிறகு தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கிடையில், AIFFஇல் அங்கமாக உள்ள டெல்லி கால்பந்து சங்கம், பிரஃபுல் படேல் தலைமையிலான குழு சட்டவிரோதமாக ஏஐஎஃப்எஃப் நிர்வாகத்தில் தொடர்வதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்திய உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு மே மாதம் AIFFஐ கலைத்து, கால்பந்து விளையாட்டை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட நிர்வாகிகள் குழுவை நியமித்தது.இந்த குழு AIFF அரசியலமைப்பை திருத்துவதற்கும் தேர்தல்களை நடத்துவதற்கும் பணிக்கப்பட்டது. இதன்படி, FIFA மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC), தமது பொதுச் செயலாளரான வின்ட்சர் ஜான் தலைமையிலான குழுவை இந்தியாவிற்கு அனுப்பியது. இந்திய கால்பந்தாட்டத்தின் பல்வேறு பங்குதாரர்களுடன் அக்குழு கலந்துரையாடியது. இறுதியில், இந்திய கூட்டமைப்பு மீது ஃபிஃபா தடை விதித்தது. "AIFF நிர்வாகத்தை ஏற்றுக்கொள்வதற்கு உரிய நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டால் மட்டுமே இந்தத் தடை தளர்த்தப்படும்" என்று FIFA திங்கள்கிழமை அறிக்கை மூலம் தெரிவித்தது. இடைநீக்கம் இந்திய கால்பந்தை எவ்வாறு பாதிக்கும்? இந்தியாவில் 23.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கால்பந்து விளையாட்டை பார்க்கிறார்கள், மீடியா கன்சல்டிங் நிறுவனமான ஓர்மேக்ஸ் கணக்கெடுப்பின்படி, இந்த விளையாட்டில் இந்தியர்கள் மீதான காதல் சமீபத்திய காலங்களில் அதிகரித்து வருகிறது. ஆனால் ஃபிஃபாவின் இடைநீக்கம் இந்த விஷயத்தில் ஒரு பின்னடைவாக இருக்கலாம். காரணம், இந்த தடை நடவடிக்கையால் இந்தியா எந்த சர்வதேச போட்டிகளையும் நடத்த முடியாது. அந்த போட்டிகளிலும் இந்திய அணியால் பங்கேற்க முடியாது, இந்திய கால்பந்து கிளப்புகள் எந்த வெளிநாட்டு வீரரையும் ஒப்பந்தம் செய்ய முடியாது. அதே சமயம், உள்நாட்டுப் போட்டிகளுக்கு இடைநீக்கம் பொருந்தாது. அந்த வகையில் இந்தியாவில் மகளிர் கால்பந்து அணி மீது இந்த நடவடிக்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 2020ஆம் ஆண்டு U-17 மகளிர் உலக கோப்பையை இந்தியா நடத்தவிருந்தது, ஆனால் கொரோனா தொற்று காரணமாக அந்தப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அந்தப் போட்டியை இந்த ஆண்டு அக்டோபர் 11 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டது. போட்டியை நடத்தும் நாடு என்ற காரணத்தால் இந்தியாவுக்கு இந்த போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்போது இடைநீக்க நடவடிக்கை காரணமாக, இளம் இந்திய மகளிருக்கு கால்பந்தாட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது. 'நம்பிக்கை இன்னும் இருக்கிறது' படக்குறிப்பு, மும்பையில் உள்ள கூப்பரேஜ் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் விளையாடும் கால்பந்து வீராங்கனைகள் பெங்களூரைச் சேர்ந்த கால்பந்து ரசிகையான அமிஷா கான், எனக்கு நம்பிக்கை இன்னும் இருக்கிறது," என்கிறார். "இந்தியாவில் மகளிர் கால்பந்துக்கு அதிக ரசிகர்கள் இல்லை, ஆனால் சமீப காலங்களில் விஷயங்கள் மாறிவிட்டன. பாலா தேவி போன்ற வீராங்கனைகளைப் பார்த்து நாங்கள் உற்சாகமாக இருந்தோம். இந்தியாவில் நிறைய பேர் கால்பந்தை விரும்புகிறார்கள். எனவே FIFA இதை பரிசீலிக்கும் என்று நினைக்கிறேன், இந்தத் தடை தொடராது என்று நம்புகிறேன்,," என்கிறார் அமிஷா. மும்பைக்கு அருகில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் வாழும் மும்ப்ராவில் இளம் பெண்களுக்கு கால்பந்து பயிற்சி அளிக்கும் ஒரு அமைப்பான 'பார்ச்சம்'-ன் இணை நிறுவனர் சபா கான் - தங்கள் வீரர்கள் எவ்வளவு மனமுடைந்து போயிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறார். "சமீபத்தில் அவர்கள் போட்டிக்கான முதல் டிக்கெட்டுகளை எங்களுக்கு வழங்கினர். இந்த போட்டி இந்தியாவில் உள்ள பெண்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. இது ஒரு உலக கோப்பை விளையாட்டு, கால்பந்தில் பெண்களுக்கு அளிக்கும் சட்டபூர்வ அங்கீகாரம் முக்கியம்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பாய்ச்சுங் பூட்டியா இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கால்பந்து நட்சத்திரமுமான பாய்ச்சுங் பூட்டியா சமீபத்தில் ஊடகங்களிடம் பேசும்போது "இது மிகவும் துரதிருஷ்டவசமானது. , இந்திய கால்பந்து கூட்டமைப்பைத் தடை செய்வதற்கான ஃபிஃபாவின் முடிவு கடுமையானது," என்று கூறுகிறார். "அதே நேரத்தில் நமது அமைப்பை சரிசெய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக நான் உணர்கிறேன். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) அதன் 85 ஆண்டுகால வரலாற்றில் FIFAவால் தடைசெய்யப்படுவது இதுவே முதல் முறை. அந்த அமைப்புக்கு உரிய தேர்தல் நடத்தப்பட்டவுடன் இடைநீக்கம் விரைவில் நீக்கப்படும் என நம்புகிறேன்," என்று பாய்ச்சுங் தெரிவித்தார். இதற்கிடையே, FIFA அமைப்பு, "இந்தியாவில் உள்ள இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் நாங்கள் ஆக்கபூர்வ தொடர்பில் உள்ளோம். இந்த விஷயத்தில் சாதகமான முடிவை அடைய முடியும் என்று நம்புகிறோம்," என்று கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/sport-62582568
  10. மு.க. ஸ்டாலின் நரேந்திர மோதிக்கு அளித்த 'அந்த' பெட்டியில் இருந்தது என்ன? 20 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ் மரபு விதைகள் அடங்கிய பேழையை பரிசாக அளிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தபோது, அவருக்கு தமிழ்நாட்டின் மரபான தானியங்கள் அடங்கிய பெட்டியை பரிசளித்திருக்கிறார். அந்தப் பெட்டிக்குள் என்னென்ன தானியங்கள் இருந்தன? அவற்றின் முக்கியத்துவம் என்ன? டெல்லிதக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலையில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் மாலையில் பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அவற்றின் ஒவ்வொரு விதை குரித்தும் கேட்டறிந்த பிரதமர் அவற்றை பிரதமர் இல்ல வளாக தோட்டத்தில் விதைப்பதாக கூறினார். தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி வகைகளும் பலவகை சிறு தானியங்களும் தற்போதும் பயிரிடப்படுகின்றன. இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தானியங்களின் தொகுப்பைத்தான் பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். அந்த தானிய பெட்டகத்தில் மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், கருப்புக்கவுனி, சீரக சம்பா, குடவாழை ஆகிய அரிசி வகைகளும் கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களும் அடங்கியிருந்தன. டெல்லியில் நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க. ஸ்டாலின்: "திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன்" பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – மு.க.ஸ்டாலின் இந்த தானியங்களின் சிறப்பு என்ன? சிவப்பு நிறத்தில் உள்ள மாப்பிள்ளை சம்பா ஆன்ட்டி ஆக்சிடன்ட் தன்மை கொண்டது. குள்ளக்கார் என்ற அரிசி பாலூட்டும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் பெண்களுக்கும் ஊட்டம் தரக்கூடியது. கருப்புக் கவுனி அரிசியைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக அரசர்களுக்காக மட்டுமே பயிரிடப்பட்ட அரிசி அது. ஆந்தோசயனைன் நிறைந்த அந்த அரிசி புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. சீரக சம்பா அரிசியைப் பொறுத்தவரை, பாலாற்றங்கரையில் பரவலாகப் பயிரிடப்படும் அரிசி. தனித்துவமான நறுமணத்தையும் சுவையையும் கொண்ட அரிசி இது. குடவாழை என்ற அரிசியும் சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். இந்த அரிசி தோலுக்கு பொலிவை அளிக்கக்கூடியது. டெல்டா மாவட்டங்களில் விளையக்கூடியது. சிறுதானியங்களில் கம்பு என்று அழைக்கப்படும் தானியம், அருந்தானியங்களின் அரசன் என்று கூறப்படுகிறது. அரிசியை விட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கொண்டது இந்த தானியம். மிக மெதுவாகவே சக்தியைவெளிவிடும் என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த அரிசி இது. வரகு என்ற தானியமும் கம்பைப் போலவே லோ கிளைசமிக் இன்டெக்ஸ் கொண்ட தானியம்தான். இலக்கியத்தில் தமிழ் மூதாட்டி அவ்வை கேட்டு உண்ட தானியமாக இது குறிப்பிடப்படுகிறது. சாமை என்பது பழங்குடி மக்களின் முக்கியமான தானியங்களில் ஒன்று. மருத்துவ குணமிக்க சிறுதானியம். பொன்னிறம் கொண்ட தினை என்ற தானியம் கண்களுக்கு நல்லது. வளரும் குழந்தைகளுக்கும் நலம் தரக்கூடியது. கேழ்வரகு இரும்பும் கால்சியமும் நிறைந்த ஒரு தானியம். தாய்ப்பாலுக்கு அடுத்ததாக தரப்பட வேண்டிய முதல் திட உணவு இதுதான் என பாரம்பரிய மருத்துவர்கள் கருதுகின்றனர். https://www.bbc.com/tamil/india-62580913
  11. குஜராத் பில்கிஸ் பானோ வழக்கு: விடுவிக்கப்பட்ட 11 கூட்டு பாலியல் வல்லுறவு கைதிகளுக்கு ஆரத்தி வரவேற்பு சரியா? ராகவேந்திர ராவ் மற்றும் தேஜஸ் வைத்யா பிபிசி செய்தியாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நாளில், குஜராத்தில் பில்கிஸ் பானோவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, வேறு 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் மன்னிப்பு வழங்கப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவை கூட்டுப் பலாத்காரம் செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்த 11 பேரும் கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கைதிகளின் தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக, ஜூன் மாதம் எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. அதில் ஆயுள் தண்டனை மற்றும் பலாத்கார வழக்குகளில் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் மன்னிக்கப்படக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அவர்களின் தண்டனையை ரத்து செய்யும் முடிவை குஜராத் அரசு எடுத்துள்ளது. இந்திய சுதந்திரத்தின் 76வது ஆண்டு சுதந்திர அமிரித் மஹோத்சவின் போது, சில வகை கைதிகளின் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் ஜூன் 10ம் தேதி எல்லா மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியிருந்தது. அவை மூன்று கட்டங்களாக: 15 ஆகஸ்ட் 2022 , 26 ஜனவரி 2023 மற்றும் மூன்றாம் கட்டமாக 15 ஆகஸ்ட் 2023 அன்றும் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனுடன் எந்தெந்த வகை கைதிகளின் தண்டனையை மன்னிக்க முடியாது என்றும் கூறப்பட்டது. இதில் பாலியல் வல்லுறவு குற்றவாளிகள் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அடங்குவர். ஆனால் விஷயம் இத்துடன் முடியவில்லை. பட மூலாதாரம்,CHIRANTANA BHATT குஜராத்தின் 2014 மன்னிப்புக் கொள்கை 2014, ஜனவரி 23 ஆம் தேதி குஜராத் உள்துறை அமைச்சகம், மன்னிப்பு மற்றும் முன்கூட்டிய விடுதலைக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளை வெளியிட்டது. அதில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களின் கும்பல் கொலை மற்றும் பாலியல் வல்லுறவு அல்லது கூட்டுப் பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம், 1946இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிகளின் தண்டனையை மன்னிக்கவோ அல்லது முன்கூட்டியே விடுதலை செய்யவோ முடியாது என்றும் இந்தக் கொள்கை கூறுகிறது. 1946-ம் ஆண்டு டெல்லி சிறப்புக் காவல் ஸ்தாபனச் சட்டத்தின் கீழ், இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மத்தியப் புலனாய்வு கழகம் சிபிஐ க்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பில்கிஸ் பானோ வழக்கை சிபிஐ விசாரித்து 11 பேரை குற்றவாளிகள் என்று நிரூபித்தது. குஜராத் கலவரம்: பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கினால் வரலாறு மாறிவிடுமா? குஜராத் கலவரம்: டீஸ்டா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமாரிடம் தனிப்படை விசாரணை குஜராத் கலவரம்: "நரேந்திர மோதி வலியில் தவித்தார்" - அமித் ஷா பேட்டி பட மூலாதாரம்,CHIRANTANA BHATT படக்குறிப்பு, பில்கிஸ் பானோ தனது குடும்பத்துடன் 1992 கொள்கையின் கீழ் வழங்கப்பட்ட மன்னிப்பு இது குறித்து குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலர் (உள்துறை) ராஜ்குமாரிடம் பிபிசி பேசியது. "இது முன்கூட்டிய விடுதலை விவகாரம் அல்ல. இதில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 14 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் யார் வேண்டுமானாலும் மன்னிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். 2014 இன் கொள்கையின்படி அவர்கள் மன்னிப்பு பெற முடியாது. எனவே இந்த விவகாரம் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நாளில் நடைமுறையில் இருந்த கொள்கையின் கீழ் நீங்கள் முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது." "தண்டனை வழங்கப்பட்டபோது,1992 ஆம் ஆண்டின் கொள்கை அமலில் இருந்தது," என்று ராஜ்குமார் மேலும் கூறினார். "அந்தக் கொள்கையில் எந்த வகைப்பாடும் இல்லை. தண்டனையின் பிரிவுகள் தொடர்பான வகைப்பாடும் இல்லை. 14 ஆண்டுகள் நிறைவடைந்தால் இதுபோன்ற விவகாரங்களை பரிசீலிக்க முடியும் என்று மட்டுமே அந்தக்கொள்கை கூறுகிறது. 2014 ஆம் ஆண்டின் கொள்கை இந்த வழக்கிற்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் கண்டறிந்துள்ளது,"என்றார் அவர். "இந்த விவகாரம் சிபிஐயால் விசாரிக்கப்பட்டதால், இந்த வழக்கில் எந்த அரசு மன்னிப்பு அளிக்கமுடியும், அதாவது மத்திய அரசா மாநில அரசா என்று குஜராத் அரசு இந்திய அரசிடம் ஆலோசனை நடத்தியது," என்று ராஜ் குமார் மேலும் கூறினார். "இந்த வழக்கில் மன்னிப்பு விஷயம் தொடர்பாக மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது," என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES 2014 ஆம் ஆண்டின் மன்னிப்புக் கொள்கையை புறந்தள்ள முடியுமா? குஜராத் மாநிலஅரசு 2014-ம் ஆண்டு கொள்கையை புறந்தள்ளி, 1992-ம் ஆண்டின் கொள்கையை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியது சரியா? இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள, வழக்கறிஞரான மெஹ்மூத் பிராச்சாவிடம் பேசினோம்.அவர் டெல்லி கலவரம் போன்ற முக்கியமான வழக்குகளுடன் தொடர்புடையவர். கூட்டுப்பாலியல் வன்புணர்வை உதாரணமாகக் கூறிய அவர், முன்பு இதற்கான தண்டனை மரணதண்டனையாக இருக்கவில்லை.ஆகவே யாரேனும் கூட்டுப் பலாத்காரம் செய்து பின்னர் கூட்டுப் பலாத்காரத்தின் வரையறையும் தண்டனையும் மாற்றப்பட்டால் அது முந்தைய விவகாரங்களுக்குப்பொருந்தாது என்றார். எளிமையாகச் சொன்னால், இப்போது சட்டம் மாறிவிட்டது என்பதால் முன்பு குற்றம் இழைத்த கூட்டு பாலியல் வன்புணர்வு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க முடியாது. குற்றம் செய்யும் போது இருந்த சட்டத்தின் படிதான் தண்டனை வழங்கப்படும். ஆனால் மன்னிப்பு விஷயத்தில் அப்படி இல்லை என்கிறார் பிராச்சா. "எந்த காரணத்திற்காகவும் அளிக்கப்படும் மன்னிப்பு என்பது ஒரு செயல்முறை. நீங்கள் செயல்முறையை மாற்றலாம் மற்றும் அது பின்னோக்கி விளைவை ஏற்படுத்தலாம். எனவே குற்ற மன்னிப்பு ,செயல்முறையின் ஒரு அம்சமாகும். குற்றத்திற்கான தண்டனையை அது அடிப்படையில் மாற்றாது." என்று மெஹ்மூத் பிராச்சா கூறுகிறார். ஒரு குறிப்பிட்ட காலம் தண்டனையை முடித்த பின்னரே மன்னிப்பு தொடர்பான கேள்வி எழும். இந்த விஷயத்தில் எந்த சட்ட நிபந்தனையும் மீறப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். "மன்னிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியிருந்தால்மட்டுமே மன்னிப்பு குறித்த கேள்வி எழுகிறது. அன்று அமலில் உள்ள மன்னிப்புச் சட்டத்தின் அடிப்படையில், மன்னிப்புக்கான விண்ணப்பம் முடிவு செய்யப்பட வேண்டும்" என்று அவர் கூறுகிறார். பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகளின் மன்னிப்பு குறித்துப்பேசிய பிராச்சா,"2014க்குப் பிறகு மன்னிப்பு கோரி விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருந்தால், 2014ன் கொள்கையே வழிகாட்டும் கொள்கையாக இருந்திருக்க வேண்டும்,"என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES விவகாரம் என்ன? 2002 குஜராத் கலவரத்தின் போது, அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோ ஒரு கும்பலால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். அவரது மூன்று வயது மகள் சலேஹாவும் கொடூரமாக கொல்லப்பட்டார். 2008 ஜனவரி 21 ஆம் தேதி மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பில்கிஸ் பானோவை கூட்டுப் பலாத்காரம் செய்து, ஏழு குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் இந்த தண்டனையை பம்பாய் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. குற்றவாளிகளில் ஒருவரான ராதே ஷ்யாம் ஷா, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்தபிறகு நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். குற்ற மன்னிப்பு அளிப்பது பற்றி ஆராயுமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் தண்டனையை ரத்து செய்ய ஒருமனதாக முடிவு செய்து அவர்களை விடுதலை செய்யுமாறு இந்தக்கமிட்டி பரிந்துரைத்தது. இறுதியாக இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 குற்றவாளிகளும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுவிக்க, குஜராத் அரசின் கமிட்டி எப்படி முடிவு செய்தது என்பது தனக்குப் புரியவில்லை என்கிறார் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் பியோலி ஸ்வதீஜா. "குஜராத் அரசுதான் மன்னிப்பு குறித்து முடிவு செய்ய முடியும் என்று உச்சநீதிமன்றம் கூறியதை அடுத்து குஜராத் அரசு அமைத்த குழுவிற்கு அதிகாரம் இருந்தன. ஆனால் கமிட்டி அந்த அதிகாரங்களை கண்மூடித்தனமாக பயன்படுத்தியிருக்கக்கூடாது. குற்றத்தின் தன்மை என்ன என்பதை கமிட்டி பார்த்திருக்க வேண்டும். கைதியின் நடத்தை எப்படி இருக்கிறது என்பது மட்டுமல்ல, குற்றத்தின் தன்மை என்ன என்பதையும் பார்க்க வேண்டும். குற்றத்தின் தன்மையை பார்த்திருந்தால், மனசாட்சி உள்ள ஒரு குழு இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்திருக்க முடியும் என்று தெரியவில்லை,"என்று அவர் குறிப்பிட்டார். குஜராத் கலவர வழக்கு: 'நான் நரேந்திர மோதியை மன்னிக்கவே மாட்டேன்' குஜராத் கலவர வழக்கு: நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார் பாஜக தலைவர் குஜராத் படுகொலை: குற்றவாளிகளுக்கு ஜாமின் கிடைப்பது எப்படி? பிரதமரை சாடும் எதிர்க்கட்சிகள் இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரின் விடுதலையை "எதிர்பாராதது" என்று வர்ணித்த காங்கிரஸ், பிரதமர் மீது நேரடித் தாக்குதலை தொடுத்துள்ளது. "பிரதமர் செங்கோட்டையில் இருந்து பெரிய பெரிய விஷயங்களை பேசினார்... மகளிர் பாதுகாப்பு, மகளிர் மரியாதை, மகளிர் சக்தி... என வார்த்தை பிரயோகம் செய்தார். சில மணி நேரம் கழித்து குஜராத் அரசு இத்தகைய ஒரு முடிவை எடுத்துள்ளது. இது எதிர்பாராதது, முன்னெப்போதும் நடந்திராதது," என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறினார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளனர். அவர்களின் நல்ல நடத்தை மற்றும் குற்றத்தின் தன்மை ஆகியவையே அவர்கள் விடுதலைக்கான காரணங்களாகும் என்று கூறிய குஜராத் அரசின் அறிக்கையை கேரா கடுமையாக விமர்சித்தார். "குற்றத்தின் தன்மையைப் பற்றி நாம் பேசினால், அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கும் பிரிவின்கீழ் கூட்டு பாலியல் வன்புணர்வு வராதா? இந்தக்குற்றத்திற்கு எவ்வளவு கடுமையான தண்டனை வழங்கப்பட்டாலும் அது குறைவுதான் என்றே கருதப்படுகிறது,"என்று குறிப்பிட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேர் சிறையில் இருந்து விடுதலையான பிறகு வெளியான படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்பாகவும் காங்கிரஸ் பிரதமரை சாடியது. "விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு ஆரத்தி எடுக்கப்படுவதையும், திலகம் இடப்படுவதையும், வாழ்த்துகள் கூறப்படுவதையும் நாம் பார்த்தோம். இதுதான் அம்ரித் மஹோத்சவா? இதுதான் பிரதமரின் பேச்சு மற்றும் செயல்பாட்டிற்கு இடையிலான வித்தியாசமா? அவரது சொந்த அரசுகளே பிரதமரின் பேச்சைக் கேட்பதை நிறுத்திவிட்டனவா அல்லது பிரதமர் நாட்டுக்கு ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு தொலைபேசியை எடுத்து தனது மாநில அரசுகளுக்கு வேறு எதையோ சொல்கிறாரா."என்று காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார். https://www.bbc.com/tamil/india-62579477
  12. டஸ்மானிய புலி இனத்தை மீட்க விஞ்ஞானிகள் திட்டம்: 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கை ஜீன் எடிட்டிங், ஸ்டெம் செல் மீட்குமா? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் உயிரியல் பூங்காவில் இருந்த டஸ்மானியப் புலி. இந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை. 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டஸ்மானியன் புலி இனத்தை, ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீட்க அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டஸ்மானியன் புலி என்று அழைக்கப்படும் இந்த உயிரினத்தின் முறைப்படியான பெயர் 'தைலசைன்' என்பதாகும். இந்த இனத்தில் மிச்சம் இருந்த கடைசி விலங்கு 1930களில் இறந்துபோனது. ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இன்னும் 10 ஆண்டுகளில் முதல் தைலசைன் விலங்கினை உருவாக்கி காட்டில் விட முடியும் என்று இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள வல்லுநர்கள் கூறுகிறார்கள். அழிந்த உயிரினங்களை மீட்கும் இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே உள்ளதுதான் என்கிறார்கள் இவர்கள். ஆனால், அழிந்துபோன உயிரினத்தை மீட்பது சாத்தியமா என்பது குறித்து மற்ற விஞ்ஞானிகள் சந்தேகம் கொள்கிறார்கள். இதெல்லாம் அறிவியல் புதினம் போன்ற கற்பனையே என்பது அவர்களது கருத்து. பல லட்சம் ஆண்டுகள் முன்பு அழிந்த மாமத யானைகளை மீண்டும் உருவாக்கும் முயற்சி எச்.ஐ.வி. தொற்றிய நோயாளி உடலில் இருந்து கிருமிகள் முழுமையாக அகற்றம் உடலின் மேற்பகுதியில் புலிக்கு உள்ளதைப் போல கோடுகள் இருப்பதால் இந்த விலங்குக்கு டஸ்மானியன் புலி என்ற புனைபெயர் வந்தது. ஆனால், உண்மையில் இது மர்சூபியல் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பைம்மா இனத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். ஆஸ்திரிலியாவில் பெரிதும் காணப்படும் பைம்மா பாலூட்டி இன விலங்குகளுக்கு வயிற்றின் வெளிப்புறம் பை போன்ற ஒரு அமைப்பு இருக்கும். கங்காருவுக்கு இருக்குமே அதைப் போன்ற இந்தப் பையில் இந்த விலங்குகள் தங்கள் குட்டிகளை வைத்து வளர்க்கும். எப்படி மீண்டும் உருவாக்குவார்கள்? பட மூலாதாரம்,MARK GARLICK/SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, மரபணுவில் பட்டி டிங்கரிங் - வரைகலை டஸ்மானிய புலி இனத்தைப் போலவே இருக்கும் வாழும் பைம்மா இன விலங்கு ஒன்றின் டி.என்.ஏ.வை எடுத்து அதை ஜீன் எடிட்டிங் முறையில் மாற்றியமைத்து அழிந்துபோன டஸ்மானிய புலிகளை மீண்டும் உருவாக்குவதற்கு அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இப்படி உருவாக்கப்படும் விலங்கு மிகச்சரியாக டஸ்மானிய புலியாகவோ அல்லது அதைப் போல மிக நெருக்கமாகக் காணப்படுவதாகவோ இருக்கும் என்கிறார்கள் அவர்கள். பல விஞ்ஞானத் தடைகளை உடைத்துதான் இந்த விலங்கினை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டியிருக்கும். அப்படி அதை செய்து முடிக்கும்போது அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். "கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வேட்டையாடி அழிக்கப்பட்ட இந்த தைலசைன் இனக் குட்டி ஒன்றை 10 ஆண்டுகளில் உயிரோடு உருவாக்கிவிட முடியும் என்று நம்புகிறேன்," என்கிறார் இந்த ஆய்வுத் திட்டத்துக்குத் தலைமை ஏற்கும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆன்ட்ரூ பாஸ்க். ஆஸ்திரேலியாவுக்கு பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வந்து சேர்ந்ததில் இருந்து டஸ்மானியப் புலிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. டிங்கோஸ் எனப்படும் ஒரு காட்டு நாய் இனம் உருவானபோது மீண்டும் இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது. நடந்து முடிந்தால் பெரிய அதிசயம் கடைசியாக டஸ்மானிய தீவில் மட்டுமே இந்த விலங்குகள் சுதந்திரமாகத் திரிந்தன. ஆனால், அங்கேயும் பிறகு வேட்டையாடி அழிக்கப்பட்டன. ஹோபர்ட் உயிரியல் பூங்காவில் இருந்த உலகின் கடைசி டஸ்மானியப் புலி 1936ல் இறந்தது. இந்த டஸ்மானியப் புலிகளை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றால், அழிந்துபோன பிறகு மீட்டெடுக்கப்படும் முதல் உயிரினமாக டஸ்மானியப் புலி இனம் இரு்கும். ஆனால், இந்த திட்டத்தில் இடம்பெறாத பல விஞ்ஞானிகள் இதற்கான சாத்தியம் குறித்து சந்தேகம் கொண்டுள்ளார்கள். பட மூலாதாரம்,ANDREW BROOKES/GETTY "அழிந்த உயிரினத்தை மீட்டெடுப்பது என்பது ஒரு கற்பனைக் கதை," என்று சிட்னி மார்னிங் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பழங்கால டி.என்.ஏ. தொடர்பான ஆஸ்திரேலிய மையத்தை சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜெரமி ஆஸ்டின். "இந்த திட்டம் விஞ்ஞானிகளுக்கு ஊடக வெளிச்சம் தருவதே தவிர, உண்மையில் காத்திரமான அறிவியல் பணி தொடர்பானது அல்ல" என்றும் அவர் கடுமையான மொழியில் விமர்சித்துள்ளார். டஸ்மானியப் புலிகளை மீட்டெடுக்கும் யோசனை 20 ஆண்டுகளாக உள்ளதுதான். 1999ல் ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் இந்த விலங்கை குளோன் செய்யும் திட்டத்தை தொடங்கியது. இந்த விலங்கின் மாதிரிகளில் இருந்து டி.என்.ஏ.வை பிரித்தெடுக்கவும், மறு கட்டுமானம் செய்யவும் பல முயற்சிகள் விட்டுவிட்டு நடந்தன. டஸ்மானிய புலிகளை மீட்கும் தற்போதைய திட்டத்தை மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் டெக்சாஸ் நகரில் இருந்து இயங்கும் கொலோசல் நிறுவனமும் இணைந்து செயல்படுத்த உள்ளன. பல ஊழிகளுக்கு முன்பு அழிந்துபோன மாமத யானைகளை உயிரோடு மீட்பதற்கு ஒரு திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது கொலாசஸ் நிறுவனம். ஆனால், இந்த முயற்சியில் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. https://www.bbc.com/tamil/science-62572295
  13. எஸ்ரா மில்லர்: மனநல சிகிச்சையை நாடுவதாக வெளிப்படையாக அறிவித்த சூப்பர் ஹீரோ - தயக்கம் உடைகிறதா? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எஸ்ரா மில்லர் ஹாலிவுட்டில் டி.சி காமிக் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் எஸ்ரா மில்லர் தனக்கு ஏற்பட்டுள்ள "சிக்கலான மனநல பிரச்னைகளுக்காக" சிகிச்சையை நாடியுள்ளதாக அறிவித்துள்ளார் என்கிறன ஊடகச் செய்திகள். தன்னுடைய சமீபத்திய நடவடிக்கைகளால் "வருத்தம்" அடைந்தவர்களிடம் தான் மன்னிப்பு கோருவதாக, பால்புதுமையரான எஸ்ரா மில்லர் தெரிவித்துள்ளார். 29 வயதான எஸ்ரா மில்லர் மீது, சமீபத்தில் அமெரிக்காவின் வெர்மாண்ட் மாகாணத்தில் வீடு புகுந்து திருடியதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், ஹவாயில் இருமுறை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஜஸ்டிஸ் லீக், பேட்மேன் Vs சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ், சூசைட் ஸ்குவாட், ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது தற்காலிகமாக துன்புறுத்தல் தடுப்பு உத்தரவின் கீழ் உள்ள 12 வயது சிறுமி ஒருவரிடம் தேவையற்ற முறையில் நடந்துகொண்டதாகவும், 18 வயது பெண்ணை மூளைச்சலவை செய்ததாகவும் எஸ்ரா மில்லர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. மனச்சோர்வுக்கு உண்மையில் மருந்துகள் தீர்வு அளிக்குமா? - ஆய்வு எழுப்பும் கேள்விகள் தூக்கமின்றி தவிக்கிறீர்களா? - இந்த 6 வழிகளைப் பின்பற்றுங்கள் உணவு வேட்கைக்கும் மன அழுத்தத்திற்கும் என்ன தொடர்பு? எப்படி தடுக்கலாம்? மனநல பிரச்னைகளுக்கு சிகிச்சையை தொடங்கியதாக அறிவித்து எஸ்ரா மில்லர் வெளியிட்ட அறிக்கையில், "தீவிரமான நெருக்கடி காலத்தை சமீபமாக எதிர்கொண்டு வரும் நிலையில், நான் சிக்கலான மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை தற்போது புரிந்துகொண்டுள்ளேன். அவற்றுக்கு தற்போது சிகிச்சையை தொடங்கியுள்ளேன். "என்னுடைய கடந்த கால நடவடிக்கைகளால் வருத்தம் அடைந்தவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். ஆரோக்கியமான, பாதுகாப்பான, ஆக்கபூர்வமான வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள நான் உறுதி பூண்டுள்ளேன்." என அவர் தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டில் புகழ்வாய்ந்த சூப்பர் ஹீரோவாக உள்ள எஸ்ரா மில்லர், மனநல பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுப்பதை பொது வெளியில் அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, கடந்த 2015ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், தான் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார். சிறந்த நடிப்பு, சர்வதேச விருதுகள் மற்றும் பாராட்டுகள் ஆகியவற்றுக்காக அறியப்படும் தீபிகா, ஒருநாள் காலை தான் தூங்கி எழுந்தபோது, தனது வாழ்க்கை அர்த்தமற்று இருப்பதை போன்று உணர்ந்ததாகவும், அதை நினைத்து அடிக்கடி கதறி அழுததாகவும் கூறுகிறார். மேலும், தனக்கு தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். தொடர்ந்து தான் எதிர்கொண்ட மனநல பிரச்னைகள் குறித்து பொதுவெளியில் பேசுபவராக தீபிகா படுகோனே உள்ளார். அதேபோன்று, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் தான் பதற்றம் தொடர்பாக சிகிச்சை எடுப்பதாக கூறியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "தயக்கம் நீடிக்கிறது" பிரபலங்கள் பலரும் இதனை பொதுவெளியில் பேசத்துணிந்துள்ள நிலையில், இது குறைவான விகிதம்தான் என்றும், நடுத்தர குடும்பங்களில் மனநல பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுப்பது இன்னும் தயக்கத்திற்கு உரிய ஒன்றாகவே கருதப்படுகிறது என்றும் கூறுகிறார், சென்னையை சேர்ந்த மனநல ஆலோசகர் சுஜாதா. பாராட்டுகளைவிட விமர்சனங்களின் நினைவுகள் ஆயுள் முழுதும் நம்மோடு வருவது ஏன்? உங்கள் மனநலனை மேம்படுத்த சமையல் உதவுமா? - 'குக்கிங் தெரபி' பற்றி உங்களுக்குத் தெரியுமா? காதலா, காமமா - உங்களுக்கு வந்திருப்பது என்ன? பிரேக்-அப் ஏன் நடக்கிறது? அறிவியல் விளக்கம் பிபிசி தமிழின் நந்தினி வெள்ளைச்சாமியிடம் பேசிய அவர், "மனநல பிரச்னையை பொதுவெளியில் பேசுவதில் இன்னும் தயக்கங்கள் நிலவுகின்றன. உடல்நல பிரச்சனையைப் போன்று மனநல பிரச்னைகளை பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை. அதன் முக்கியத்துவத்தை பலரும் ஏற்பதில்லை, அதற்கான விழிப்புணர்வு இல்லை. அதிலும் நடுத்தர குடும்பங்களில் இளம் வயதினருக்கு ஏற்படும் மனநல பிரச்னைகளை குடும்பத்தினர் புரிந்துகொள்வதில்லை. "கேட்பதெல்லாம் வாங்கி கொடுக்கிறோம், அவர்களுக்கு என்ன குறை" என்று பிள்ளைகளின் மனநல பிரச்னைகளை புரிந்துகொள்ளாத பெற்றோர் இருக்கின்றனர். மனநல ஆலோசகரிடம் செல்வதையே பிரச்னையாக கருதுபவர்கள் உள்ளனர். உடல்நல பிரச்னைகளுக்கு பரிதாபப்படுகின்றனர், ஆனால், இளம் வயதினர் யாருக்காவது மன அழுத்தம் இருந்தால் அவர்களை மற்றவர்கள் விமர்சிப்பதுதான் தொடர்கிறது. பரிதாபப்படுவது, விமர்சிப்பது இரண்டுக்குமான வித்தியாசம் இருக்கிறது. விமர்சிப்பதால் ஏற்படும் பயம்தான் மனநல பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுக்க விடாமல் தடுக்கிறது" என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES "சிகிச்சைகளை தொடர்வதில் சிக்கல்" மனநல சிகிச்சைக்கு சென்றாலும் அதனை தொடர்வதிலும் சிக்கல்கள் நீடிப்பதாக கூறுகிறார் சுஜாதா. "சிகிச்சையை தொடர்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. பெருநகரங்களில் ஒரு அமர்வுக்கு 750 ரூபாய்க்கு குறைவாக எந்த மனநல ஆலோசகரும் கட்டணம் வசூலிப்பதில்லை. பிரபலமான ஆலோசகர் என்றால் 1,500-2,000 ரூபாய் வரை வாங்குகின்றனர். இதற்கு நான் செலவு செய்ய வேண்டுமா என்ற எண்ணம் ஏற்படுகின்றது. இதனால், ஒரே அமர்வில் சரியாகிவிட வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் அப்படி நடப்பதில்லை. தொடர் சிகிச்சைகளில்தான் தீர்வு ஏற்படும் என்றாலும், பாதிக்கப்பட்டோர் சிகிச்சையைத் தொடர்வது பல நேரங்களில் நடப்பதில்லை. மாத்திரைகள் மூலம் சரிசெய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர்" என தெரிவிக்கிறார் சுஜாதா. குடும்பங்களில் பகிர்ந்துகொள்ள முடியாத நிலையில், தினந்தோறும் அதன் தீவிரம் அதிகமாகும்போது நிச்சயம் மனநல ஆலோசகரை அணுக வேண்டும் என அறிவுறுத்துகிறார் சுஜாதா. https://www.bbc.com/tamil/global-62574467
  14. நண்பன் வீட்டுக் கதிரையில் அமர்ந்து அமரர் ஆனார் எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பனின் வீட்டுக்கு வந்து கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார். உடனடியாக வீட்டார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிக்கையிட்டனர். (R) https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/நணபன-வடடக-கதரயல-அமரநத-அமரர-ஆனர/71-302493
  15. அதிமுக விவகாரத்தில் எடப்பாடிக்கு பின்னடைவு: ஜூன் 23 பொதுக்குழுவுக்கு முந்தைய நிலையே நீடிக்கும் - உயர் நீதிமன்றம் உத்தரவு 17 ஆகஸ்ட் 2022, 07:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிமுகவில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்று இன்று புதன் கிழமை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தகராறில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய பின்னடைவாக வந்துள்ளது. ஜூன் 23 பொதுக்குழுவில்தான் தமிழ்மகன் உசேனை அதிமுக அவைத்தலைவராக்கும் தீர்மானம் நிறைவேறியது. அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகுதான் அவர் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்கும் என்று அறிவித்தார். அந்த இரண்டாவது பொதுக்குழுவில்தான் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அத்துடன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாகவும் எடப்பாடி அணி இந்த இரண்டாவது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக ஜூன் 23 பொதுக்குழுவில் நடந்தது என்ன? அவைத்தலைவர் நியமனம், ஓபிஎஸ் வெளிநடப்பு... அதிமுக ஜுலை 11 பொதுக்குழுவில் நடந்தது என்ன? இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு, ஓபிஎஸ் நீக்கம் அதிமுகவில் நடந்த மொத்த தலைமை மாற்றக் குழுப்பங்களுக்கும் அடிப்படையாக அமைந்தது ஜூன் 23 பொதுக்குழுதான். அது நடந்ததே செல்லாது என்று கூறத்தக்க வகையில் வந்துள்ள இந்த தீர்ப்பு அதற்குப் பிறகு நடந்த எல்லா மாற்றங்களையும் இல்லாமல் செய்யும் வகையில் இருக்கும் என்று தோன்றுகிறது. பின்னணி என்ன? ஜுன் 23ம் தேதி பொதுக்குழுவில் சர்ச்சைக்குரிய முறையில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்பாடுகளை செய்து வந்தது. இதற்கு எதிராக பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்துவும் ஓ. பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஜூலை 11ஆம் தேதி காலை பொதுக்குழு கூடுவதற்கு சிறிது நேரம் முன்னதாக வழங்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பில் பொதுக் குழுவை நடத்த அனுமதி அளித்தது உயர் நீதிமன்றம். ஆனால், வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. ஜூலை 11 பொதுக் குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வுசெய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தப் பொதுக் குழுக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வந்தார். அவர் முன்பாக இருதரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்து வந்தனர். இந்தப் பொதுக் குழுக் கூட்டம் விதிகளின்படி நடத்தப்படவில்லையெனவும் பொதுக் குழுவைக் கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் ஆனால், இந்த பொதுக் குழுக் கூட்டம் தலைமை நிலைய நிர்வாகிகளால் கூட்டப்பட்டதாகவும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டது. வெடி வெடித்து கொண்டாட்டம் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பில் வழக்குரைஞர் விஜய் நாராயணன் ஆஜரானார். விதிப்படியே பொதுக் குழு கூட்டப்பட்டதாகவும் ஜூலை 11ல் பொதுக் குழு கூட்டப்படும் என ஜூன் 23ஆம் தேதியே அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஜூலை 1ஆம் தேதி பொதுக் குழு நிர்வாகிகளுக்கு தகவல் அறிவிக்கப்பட்டது என்றும் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டதால் கூட்டப்படும் கூட்டங்களுக்கு 15 நாள் முன்னறிவிப்பு அவசியமில்லை என்றும் அவர் வாதிட்டார். 2,400க்கும் மேற்பட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதாலேயே சிறப்பு பொதுக் குழுவை நிர்வாகிகள் கூட்டினர். இதில் விதிமீறல் ஏதுமில்லை என அவர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பின்படி, அ.இ.அ.தி.மு.கவில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. பொதுக் குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவருமே இணைந்துதான் கூட்டவேண்டுமென்றும் சட்ட ஆணையர் ஒருவரை நியமித்து இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டுமென்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தீர்ப்பின் ஒரு பகுதி மட்டுமே வெளியாகியிருப்பதால், சட்ட ஆணையரை யார் நியமிப்பது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. முழு தீர்ப்பும் இன்று மாலை வெளியாகும்போது, இதில் ஒரு தெளிவு கிடைக்கும். தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், "இது எங்கள் தரப்புக்குக் கிடைத்த வெற்றி. கழகத்தின் சட்ட விதிகளுக்கு கிடைத்த வெற்றி. ஜூன் 23ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. இரண்டு பதவிகளுமே செயல்பாட்டில் உள்ளன. மேலும், அந்தக் கூட்டத்தில் எவ்வித திருத்தமும் முன்வைக்கப்படவில்லை, நிராகரிக்கப்படவும் இல்லை. கட்சியை ஒருங்கிணைப்பாளர்தான் வழிநடத்த முடியும் என ஒருங்கிணைப்பாளர் எடுத்துவைத்த வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது" என்று தெரிவித்தார். இந்தத் தீர்ப்பையடுத்து ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டின் முன்பாக அவரது ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் தீர்ப்பு எடப்பாடி கே. பழனிசாமிக்கு எப்படிப் பின்னடைவு? முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் செய்தியாளர் சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பு, எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்புக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாகப் பிளவுபட்டு, மீண்டும் சேர்ந்த பிறகு, ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். ஆனால், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கட்சியைத் தன்வசம் கொண்டுவர விரும்பிய எடப்பாடி கே. பழனிசாமி, ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில், அது குறித்த தீர்மானத்தைக் கொண்டுவர விரும்பினார். பட மூலாதாரம்,AIADMK TWITTER ஆனால், இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அந்தக் கூட்டத்திலிருந்து அவர் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டா். இதற்குப் பிறகு மீண்டும் ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கலந்துகொள்ளாத இந்தப் பொதுக் குழுக் கூட்டத்தில், எடப்பாடி கே. பழனிசாமி கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்படுவதாகவும் கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வுசெய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.கவின் விதிகளின்படி, தொண்டர்களேதான் நேரடியாகத் தலைவர்களைத் தேர்வுசெய்ய வேண்டுமென்பதால், விரைவில் அதற்கான தேர்தல் நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியைவிட்டு நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அந்தப் பொதுக் குழு நடந்த தினத்தன்று அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் புகுந்தனர். அதற்கு எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இரு தரப்புக்கும் இடையில் வன்முறை வெடித்தது. அந்தக் கட்டடம் மூடி சீல் வைக்கப்பட்டது. இதன் பிறகு ஒரு உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்பின்படி அந்தக் கட்டடம் எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. பொதுக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்; கட்சித் தலைமையகமும் அவர் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆகவே, கட்சியின் ஒரே தலைமையாக தான் உருவெடுக்க முடியுமென அவர் நினைத்திருந்த நிலையில், வெளிவந்திருக்கும் தீர்ப்பு அவருக்கு பின்னடைவை அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பின்படி, கட்சியின் இடைக் காலப் பொதுச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டது செல்லாது. முன்பிருந்ததைப் போலவே ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிச்சாமியுமே தொடர்வார்கள். கட்சி பொதுக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தங்கள் வசம் இல்லாத நிலையில், கட்சியைவிட்டு நீக்கப்பட்டு, கட்சித் தலைமையகமும் பறிபோன நிலையில் இருந்த ஓ. பன்னீர்செல்வம் தரப்பிற்கு இந்தத் தீர்ப்பு புத்துயிர் அளித்துள்ளது. ஆனால், ஒரு எதிர்க்கட்சியாக அரசுக்கு எதிராக விமர்சனங்களை இருதரப்பு எப்படி முன்வைக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். தவிர, அரசுக்கு எதிரான போராட்டங்களை எந்தத் தரப்பு அறிவித்து, நடத்தும் என்பதும் கேள்விக்குரியதுதான். தற்போதைய சூழலில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்ற அமர்விடம் மேல் முறையீடு செய்யுமெனத் தெரிகிறது. https://www.bbc.com/tamil/india-62573346
  16. தாய்லாந்தில் பதற்றம்: 17 இடங்களில் குண்டுவெடிப்பு தென் தாய்லாந்தில் புதன்கிழமை (17 ) குறைந்தது 17 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் எழுவர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல்கள் செவ்வாய்க்கிழமை (16 ) பின்னிரவுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் சில குண்டு வெடிப்புத் தாக்குதல்கள், தீயை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களில் உள்ள அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள், ஒரு பெட்ரோல் நிலையம் ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் அந்நாட்டு பொலிஸாரும் இராணுவமும் வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தாய்லாந்தின் தெற்குப் பகுதிகள் சிலவற்றில் பல ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/தயலநதல-பதறறம-17-இடஙகளல-கணடவடபப/175-302501
  17. Sleep Issues: தூக்கத்தில் சுவாச அடைப்பு Sleep Apnea பற்றி உங்களுக்கு எந்த அளவு தெரியும்? Dr Explains
  18. 'களைக்கொல்லிக்கு' இலங்கையில் மீண்டும் அனுமதி - முன்பு தடை, இப்போது ஒப்புதல் ஏன்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்குக்குக் காரணமானது எனக்கூறி - தடை செய்யப்பட்டிருந்த 'கிளைபொசேட்' (Glyphosate) எனும் களை நாசியை இறக்குமதி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் இலங்கை அரசு மீளவும் அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் வெளியான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க, இம்மாதம் 05ஆம் தேதியிலிருந்து மேற்படி களை நாசினிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிளைபொசேட் இறக்குமதிக்கு - பூச்சிக்கொல்லி பதிவாளரின் பரிந்துரையின் கீழ், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமத்தை வழங்குவார் எனவும் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், சில மாவட்டங்களில் கிளைபொசேட் பயன்பாட்டுக்கும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. இதன்படி அனுராதபுரம், பொலன்நறுவை, குருணாகல், மொனராகலை மற்றும் பதுளை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கிளைபொசேட் (Glyphosate) தடைசெய்யப்பட்டது. 2015ஆம் ஆண்டு இந்தத் தடையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. கிளைபொசேட் நாசினிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் தேயிலை மற்றும் ரப்பர் செய்கையின்போது இதைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளுமாறு அரசு அறிவித்ததைத் அடுத்து, கிளைபொசேட் உள்ளிட்ட ரசாயன நாசினிகள் மற்றும் யூரியா உரம் போன்றவற்றுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டது. சிறுநீரக நோய் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு கிளைபொசேட் (Glyphosate) காரணமாக அமைகிறது என்று அதைத் தடை செய்தபோது அரசு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எறும்புகளால் கால்நடைகளை இழக்கும் திண்டுக்கல் கிராமம்: அச்சத்தில் பொதுமக்கள் - கள நிலவரம் தாவரங்கள் உண்மையில் மனிதர்களிடம் பேசுமா? அறிவியல் கூறுவது என்ன? கமத்(விவசாயம்) தொழில் அமைச்சு 2015ஆம் ஆண்டு வெளியிட்ட எழுத்து மூல செயலாற்றுகை அறிக்கைக்கு அப்போதைய கமத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க வழங்கிய செய்தியில், "விவசாய செய்கை பிரதேசங்களில், பரவலாகப் பரவி வரும் சிறுநீரக நோய் தொடர்பில் பலதரப்பட்ட தரப்பினர்கள் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில், இவ்விடயம் தொடர்பில் இந்த வருடத்தில் மிக முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டது. அதாவது, விவசாயச் செய்கையின் போது பரவலாகப் பாவிக்கும் கிளைபொசெட் களை நாசினி இறக்குமதி முற்றாகத் தடைசெய்யப்பட்டதே அத்தீர்மானமாகும். எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி, எடுக்கப்பட்ட மிக முக்கியமானதும் உறுதியானதுமான இந்தத் தீர்மானம் மக்களின் வரவேற்புக்கு உட்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த களைக்கொல்லிக்கான தடையையே - தற்போது ரணில் அரசாங்கம் நீக்கியுள்ளது. கிளைபொசேட் (Glyphosate) உள்ளடங்கிய மேற்படி நாசினி, 'தெரிந்தழியா' அல்லது 'சர்வ' களை கொல்லி வகையைச் சேர்ந்ததாகும். 'ரவுண்டப்' எனும் வர்த்தகப் பெயரில் இலங்கையில் அறியப்பட்ட இந்தக் களைக்கொல்லி, நெற்செய்கையின் போது - உழவுக்கு முன்னர் நிலத்துக்கு விசிறப்படுகிறது. இதனால் அனைத்து வகை களைகளும் இறந்து போகும். விவசாயிகள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நிலையில், கிளைபொசேட் (Glyphosate) களை நாசினிக்கான தடை நீக்கப்பட்டமை மகிழ்ச்சியான விடயம் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சரிபுடீன். கிளைபொசேட் தடைசெய்யப்பட்ட பின்னர், நெல் வயல்களில் பண்டிச் சம்பா (நெற் பயிர் போன்றது) கிலுகிலுப்பான் மற்றும் முட்டைச் சல்லு போன்ற களைகளின் பெருக்கம் அதிகரித்து விட்டதாகவும் இதனால் நெல் விளைச்சல் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். படக்குறிப்பு, சரிபுடீன், விவசாயி கிளைபொசேட் தடைசெய்யப்பட்ட காலத்தில், தமது நெல் வயல்களில் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகக் கூறும் சரிபுடீன், "நிலத்தில் அதிக தடவை உழவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதோடு, கூலியாட்களைக் கொண்டு களையெடுக்க வேண்டியிருந்தது" எனவும் குறிப்பிட்டார். இதனால், தமக்கு அதிக செலவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார். கிளைபொசேட் தடைசெய்யப்பட்டதை அடுத்து, அதற்குப் பதிலீடாக விவசாயிகள் 'சர்ஃப் எக்செல்' (Surf excel) சலவைத் தூளுடன் யூரியாவை கலந்து பயன்படுத்தியதாக சரிபுடீன் கூறினார். அதேபோன்று 'அஜினோமோட்டோ'வுடன் (Ajinomoto) எம்சிபிஏ எனும் களை நாசினியைக் கலந்து பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டார். "வயலை அண்டியும் வாய்க்காலிலும் அதிகளவு புற்கள் வளரும் போது, அங்கு பாம்புகள் மற்றும் அபாயகரமான பூச்சி வகைகள் காணப்படும். அதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டது. கிளைபொசேட் தெளிக்கும் போது மேற்சொன்ன இடங்களிலுள்ள புற்கள் முற்றாக அழிந்து விடும். பாம்பு, பூச்சிகளின் தொல்லையும் இருக்காது" எனவும் சரிபுடீன் தெரிவித்தார். கடுமையான விளைச்சல் வீழ்ச்சி படக்குறிப்பு, ஃபிர்தெளஸ், விவசாயி இதேபோன்று, களைகளின் பெருக்கத்தால் தனது வயலில் நெல் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக, அம்பாறை மாவட்டம் - அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ. பிர்தௌஸ் கூறுகின்றார். "பண்டிச் சம்பாவை கட்டுப்படுத்துவதற்கு கிளைபொசேட் சிறந்த களை நாசினி. இது தடைசெய்யப்பட்டதை அடுத்து, பண்டிச் சம்பாவின் பெருக்கம் அதிகரித்தது. இதனால் சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு 40 தொடக்கம் 45 மூடைகள் விளையும் எங்கள் வயலில், இம்முறை 21 மூடைகளே கிடைத்தன" என்கிறார். 56 வயதுடைய பிர்தௌஸ் - அவரின் 12ஆவது வயதிலிருந்து விவசாயத்தில் ஈடுபடுவதாகவும் 13 வருடங்கள் 'வட்டானை'யாக (நெற் காணிகளை கண்காணிப்பவர்) கடமையாற்றி வருவதாகவும் கூறுகின்றார். மறுபுறமாக, கிளைபொசேட் (Glyphosate) பயன்படுத்தும் போது சில பாதகங்கள் ஏற்படுவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கிளைபொசேட் பிரயோகிக்கும் போது அனைத்து விதமான களைகளும் புற்பூண்டுகளும் அழிவடைவதால், விலங்குகளுக்குத் தேவையான புற்கள் கூட அழிந்து போகும் நிலை ஏற்படும் என்று இப்பகுதியிலுள்ள விவசாயி ஏ.எம். நளீம் குறிப்பிடுகின்றார். அனைத்து களைகளுக்கும் பயன்படுத்துவது உசிதமல்ல கிளைபொசேட் களைக்கொல்லிக்கான தடை நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் - பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிடுகையில், தடை நீக்கப்பட்ட போதிலும் அதை மட்டுப்பாட்டுடன் பயன்படுத்துமாறு கூறினார். படக்குறிப்பு, கலீஸ், மாவட்ட விவசாய பணிப்பாளர் "கிளைபொசேட் களைக்கொல்லியில் காட்மியம், ஆர்சனிக் போன்ற பார உலோகங்கள் உள்ளன. இவை நிலத்தடி நீருடன் சேரும். மண்ணின் கட்டமைப்பையும் இவை மாற்றக் கூடியவை. இதனால்தான் இது தடைசெய்யப்பட்டது" என அவர் விவரித்தார். "பார உலோகங்கள் சிறுநீரக நோயை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ஆனால், கிளைபொசேட் இல்லாமல் பயிர் செய்கையில் - புல்லைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இதைப் பயன்படுத்த வேண்டும்," எனவும் அவர் குறிப்பிட்டார். களைகளை இலகுவாகக் கட்டுப்படுத்துவதற்கு கிளைபொசேட் பயன்படுவதால் விவசாயிகள் இதை வரவேற்கின்றனர் எனக் கூறும் அவர், இந்த களைக்கொல்லியை அபரிமிதமாகப் பயன்படுத்தாமல் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது சிபாரிசு செய்யப்பட்ட அளவில், தேவையான போது மட்டும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார். இல்லாவிட்டால் சிறுநீரக நோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனவும் எச்சரித்தார். "கிழங்கு வகைக் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு கிளைபொசேட் களைக்கொல்லியைப் பயன்படுத்தலாம். மாறாக சிறிய வகைக் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இதைப் பயன்படுத்துவது உசிதமானதல்ல," எனவும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கலீஸ் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/sri-lanka-62567723
  19. லிட்டில்ஃபெதர்: நடிகையிடம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் அகாடமி; என்ன காரணம்? 16 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்கர் மேடையில் கேலி செய்யப்பட்ட அமெரிக்க பூர்வகுடி செயல்பாட்டாளரும் நடிகையுமான சசீன் லிட்டில்ஃபெதரிடம் ஆஸ்கர் அகாடமி மன்னிப்பு கேட்டுள்ளது. 'தேவையற்ற, நியாயமில்லாத கொடுமை' லிட்டில்ஃபெதருக்கு நடந்ததாக அகாடமி தனது மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. திரைத்துறையில் புரையோடியிருந்த புறக்கணிப்புகளையும் இனவெறுப்பையும் காட்டுவதாக இந்தச் சம்பவம் அமைந்தது. ஆஸ்கர் மேடையில் என்ன நடந்தது? தி காட்பாதர் திரைப்படத்தில் நடித்ததற்காக பிரபல நடிகர் மார்லன் பிராண்டோவுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த விருதைப் பெறுவதற்கு மார்லன் பிராண்டோ விரும்பவில்லை. அமெரிக்காவின் சினிமா துறையில் பூர்வகுடி அமெரிக்கர்களை தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி தனக்கு அறிவிக்கப்பட்ட விருதை மார்லன் பிராண்டோ நிராகரித்தார். திப்புசுல்தான் இந்துக்களின் கதாநாயகனா, வில்லனா? தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே. சிக்கிய 'லட்சுமிகாந்தன் கொலை'- வெப் தொடரின் கதை என்ன? தூக்கத்திலேயே மாரடைப்பு யாருக்கெல்லாம் ஏற்படும்? எப்படி முன்கூட்டியே அறிவது? அவருக்குப் பதிலாக மேடையேறி அந்த விருதை நிகாரிப்பதற்காக லிட்டில்ஃபெதர் ஆஸ்கர் மேடைக்கு வந்தார். அது 1973ஆம் ஆண்டு. அந்தக் காட்சி தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்போது 26 வயதான லிட்டில்ஃபெதரை கூடியிருந்தவர்கள் கேலி செய்தார்கள். திரை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டார். அந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது லிட்டில்ஃபெதருக்கு வயது 75. ஆஸ்கர் அகாடமி மன்னிப்புக் கோரியிருப்பது பற்றிக் கேட்டபோது, "இதைக் கேட்கும் நாளைக் காணும் வரையில் நான் வாழ்வேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை," என்று அவர் ஹாலிவுட் ரிப்போர்ட்டரிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2010-ஆம் ஆண்டில் லிட்டில்ஃபெதர். ஆஸ்கர் அகாடமியிடம் இருந்து மன்னிப்புக் கிடைக்கும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். ஆஸ்கர் மேடையில் லிட்டில்ஃபெதர் பேசிய அந்த 60 நொடிகள் நீடித்த உரை தான் ஆஸ்கர் நேரலையில் பேசப்பட்ட முதல் அரசியல் உரை. அதன் பிறகு இன்று வரைக்கும் ஆஸ்கர் மேடை அவ்வப்போது அரசியல் மேடையாகிவிடுகிறது. பூர்வகுடி நடிகையைக் கேலி செய்தது ஏன்? 1973ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டபோது மார்லன் பிராண்டோவுக்கு பதிலாக லிட்டில் வருவதையே பலரும் வியப்போடு பார்த்தார்கள். பூர்வகுடி அமெரிக்கர்களின் பாரம்பரிய உடையில் அவர் வந்திருந்தார். காட்ஃபாதர் திரைப்படத்துக்காக மார்லன் பிராண்டோவுக்கு விருது வழங்கப்படுவதாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர் மூர், நடிகை லிவ் உல்மன் ஆகியோர் அறிவித்தனர். விருதை எடுத்து அதை வழங்குவதற்காக மேடையில் காத்திருந்தனர். மேடைக்கு வந்த லிட்டில்ஃபெதர் விருதைப் பெறுவதற்கு மறுத்துவிட்டு உரையைத் தொடங்கினார். தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், மார்லன் பிராண்டோ கேட்டுக் கொண்டதன்படி அவருக்குப் பதிலாக வந்திருப்பதாகவும் விருதை நிராகரிக்குமாறு அவர் கூறியதாகவும் தெரிவித்தார். உண்மையில் மார்லன் பிராண்டோ சற்று நீளமான உரையைத் தயாரித்து வழங்கியிருந்தார். ஆனால் விருதை நிராகரிப்பது தொடர்பாக 60 நொடிகள் பேசினால் போதும் என்று ஆஸ்கர் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறியதைத் தொடர்ந்து எழுதி வைத்திருந்த நீண்ட உரையைத் தவிர்த்துவிட்டு சுருக்கமாகப் பேசினார் லிட்டில்ஃபெதர். பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்த விருதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை வருத்தத்துடன் கூறுகிறேன்" என்று அவர் கூறியபோது பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த விருதை மார்லன் பிராண்டோ ஏற்றுக் கொள்ள முடியாததற்குக் காரணம், "பூர்வகுடி அமெரிக்கர்களை திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தவறாகச் சித்தரிக்கப்படுவதும் முழங்காலிடவைத்த சமீபத்திய நிகழ்வுகளும்தான்" என்று லிட்டில்ஃபெதர் தனது உரையில் குறிப்பிட்டார். அந்தக் காலகட்டத்தில் பூர்வகுடி அமெரிக்கர்களை சில பாதுகாப்பு அதிகாரிகள் தாக்கிய சம்பவத்தை அவர் இந்த வகையில் நினைவுகூர்ந்தார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே பார்வையாளர்களாக இருந்த திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கேலி செய்யும் விதமாக ஆர்ப்பரித்தனர். ஆயினும் சில நொடிகள் இடைவெளிவிட்டு தனது உரையைத் தொடர்ந்தார் லிட்டில்ஃபெதர். உரை முடிந்ததும் இரண்டு காவலர்கள் தன்னை பாதுகாப்புடன் வெளியே கொண்டு வர வேண்டியிருந்தது என்று 2020-இல் பிபிசிக்கு அளித்த பேட்டியில் லிட்டில்ஃபெதர் குறிப்பிட்டிருந்தார். "அப்போது மேடையின் பின்புறம் இருந்த நடிகர் ஜான் வெய்ன் என் மீதும் மார்லன் பிராண்டோ மீதும் ஆவேசமாக இருந்தார். விட்டால் என்னை அவரே மேடையை விட்டு இழுத்திருப்பார். நல்லவேளையாக அவரை ஆறு பாதுகாவலர்கள் பாதுகாத்தார்கள்" என்று லிட்டில்ஃபெதர் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். முதல் உறவில் 'கன்னித் திரையை' தேடும் கணவர்கள்: கொதிக்கும் பெண்கள் கன்னித்திரை என்பது என்ன? உண்மையும் கட்டுக்கதைகளும் பாலுறவு உச்சநிலையில் எல்லாப் பெண்களும் திரவத்தை வெளியேற்றுகிறார்களா? மேடையில் இருந்து நடந்து செல்லும்போது அமெரிக்கப் பூர்வகுடிகளை இழிவுபடுத்தும் வகையிலான சைகையைச் சிலர் செய்ததாகவும் லிட்டில்ஃபெதர் நினைவு கூர்கிறார். மார்லன் பிராண்டோ சார்பில் லிட்டில்ஃபெதர் மேடை ஏறியதையும் விருதை நிராகரித்ததையும், அவரைக் கூடியிருந்த திரை உலகினர் நிராகரித்ததையும் எட்டரை கோடி மக்கள் தொலைக்காட்சி மூலமாக நேரலையில் பார்த்தார்கள். ஆஸ்கர் மேடையைத் தாண்டியும் அவமதிப்பு லிட்டில்ஃபெதருக்கு நடந்த அந்தக் கொடுமை ஆஸ்கர் மேடையுடன் முடிந்துவிடவில்லை. அந்த நிகழ்வு நடந்த பிறகும் அவர் பொதுவெளியில் பல அவமதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. லிட்டில்ஃபெதர் உண்மையில் ஒரு பூர்வகுடி அமெரிக்கரே கிடையாது. சினிமாவில் தமக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியோர் உரையை நிகழ்த்துவதற்கு அவர் ஒப்புக்கொண்டார் என்று பல ஊடகங்கள் கூறின. இன்னும் சிலர் அவர் மார்லன் பிராண்டோவின் பாலியல் துணையாக இருக்கலாம் என்றும் கூறினார். ஆனால் அவை அனைத்தும் பொய்யானவை என்று லிட்டில்ஃபெதர் தனது பிபிசி பேட்டியில் கூறினார். அமெரிக்கப் பூர்வகுடிகளின் வரலாறு என்ன? ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பு அமெரிக்காவில் வாழ்ந்த மக்கள் இன்றும் அமெரிக்க கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசித்து வருகிறார்கள். சமீபத்திய கணக்குப்படி 500-க்கும் மேற்பட்ட பூர்வகுடி இனங்கள் அமெரிக்காவில் வசித்து வருவதாக மதிப்பிடப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இவர்கள் சுமார் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்போது அமெரிக்கா என்று அறியப்படும் பிரதேசத்தில் வசித்து வருகிறார்கள். 16-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வந்த பிறகு பூர்வகுடிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வன்முறைகள், தாக்குதல்கள், இடம்பெயர்வு ஆகியவற்றுடன் அடிமையாக்கப்படுவது போன்ற காரணங்களால் பூர்வகுடி இனங்கள் பாதிக்கப்பட்டன. 1920கள் வரைக்கும் பூர்வகுடி அமெரிக்கர்களுக்கு பெரும்பான்மையான அமெரிக்க மாநிலங்கள் வாக்குரிமை வழங்கவில்லை. அந்த பாரபட்சம் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரைகூட சில மாநிலங்களில் நீடித்து வந்தது. இதை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன. "50 ஆண்டுகள்தானே ஆகிறது" ஆஸ்கர் அகாடமியின் தலைவர் டேவிட் ரூபின் லிட்டில்ஃபெதருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியிருக்கிறார். அது அகாடமியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 45வது அகாடமி விருதுகள் விழாவில் லிட்டில்ஃபெதர் பேசியது "மரியாதையின் அவசியத்தையும் மனித கண்ணியத்தின் முக்கியத்துவத்தையும் நமக்குத் தொடர்ந்து நினைவூட்டுகிறது" என்று மன்னிப்புக் கடிதத்தில் ரூபின் குறிப்பிட்டிருக்கிறார். அகாடமி அருங்காட்சியகம் சார்பில் வரும் செப்டம்பரில் ஒரு நிகழ்வை நடத்த இருக்கிறது. அதில் லிட்டிலஃபெதர் பங்கேற்று, 1973-ஆம் ஆண்டில் தமக்கு நேர்ந்த அனுபவம் தொடர்பாகவும் திரையில் பூர்வகுடிகளின் எதிர்காலம் பற்றியும் பேச இருக்கிறார். அகாடமி மன்னிப்பு கேட்டதற்கு பதிலளித்திருக்கும் அவர், "அமெரிக்கப் பூர்வகுடிகள் பொறுமையானவர்கள். 50 ஆண்டுகள்தானே ஆகியிருக்கிறது" என்று குறிப்பிட்டார். நகைச்சுவை உணர்வை வைத்திருப்பது "எங்கள் உயிர் வாழும் முறை" என்றும் லிட்டில்ஃபெதர் கூறினார். https://www.bbc.com/tamil/arts-and-culture-62566398
  20. சீனாவின் யுவான் வாங்-5, இந்தியாவின் துருவ்: எந்த கண்காணிப்பு கப்பலுக்கு வலிமை அதிகம்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்தியாவின் ஐஎன்எஸ் துருவ் (இடது), சீனாவின் யுவான்வாங் 5 (வலது) இந்தியப் பெருங்கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வந்திருப்பது, அண்டை நாடான இந்தியாவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் தருவதை இந்திய வெளியுறவுத்துறை தவிர்க்கிறது. அதே சமயம், சீன கப்பலின் தன்மையைக் கருத்தில் கொண்டு அதை ஒருவித சந்தேக பார்வையுடனேயே இந்திய உளவு அமைப்புகள் கவனித்து வருகின்றன. இந்த சீன கப்பல் பற்றி சமீப வாரங்களில் மிக அதிகமாகவே சர்வதேச ஊடகங்களும், இந்திய, இலங்கை ஊடகங்களும் செய்திகளையும் தகவல்களையும் வெளியிட்டுள்ளன. உண்மையில் அந்த கப்பலில் எத்தகைய வசதிகள் உள்ளன என்பதும், அதன் அறிவியல், தொழில்நுட்ப திறன்களும் முழுமையாக அறியப்படவில்லை. சீன கப்பலுக்கு நிகரான வசதிகளை கொண்ட கப்பல் இந்தியாவிலும் உள்ளதா என்று பலரும் சமூக ஊடகங்களில் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு விடை பகுதியளவில் 'ஆமாம்' என்பதே. ஆனால், அந்த கப்பல் பற்றிய தகவல்கள் பொதுவெளியில் அதிகமாக இல்லை. சீனாவில் 'செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக் கப்பல்' என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 'யுவான்வாங்-5' கப்பல், செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் திறனையும் ஏவுகணையை ஏவும் வசதியையும் கொண்டுள்ளது. சீனாவின் 'யுவான் வாங்' கப்பல் இலங்கைக்கு வந்தது சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா? அதுபோல, இந்தியாவில் கடந்த ஆண்டு கடற்படை சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கப்பலின் பெயர் துருவ். இது கடல் பகுதியில் இருந்தபடி இந்தியாவை நோக்கி வரும் ஏவுகணைகளை முன்கூட்டியே கண்காணித்து போர் கப்பல்களை எச்சரிக்கும் திறன் கொண்டுள்ளது. மேலும், இந்திய வான்பரப்பில் உள்ள செயற்கைக்கோள்கள், இந்தியாவை நோக்கி நடக்கும் வான் கண்காணிப்புகளை கண்டறிந்து இந்திய விண்வெளித்துறையையும் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையையும் எச்சரிக்கும் வகையில் துருவ் தயாரிக்கப்பட்டுள்ளது. பல வடிவங்களில் யுவான்வாங் கப்பல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள யுவான் வாங் - 5 கண்காணிப்புக் கப்பல் யுவான்வாங் என்ற சொல்லுக்கு சீன மொழியில் "நீண்ட பார்வை" அல்லது "தூர நம்பிக்கை" என்று பொருள் கூறப்படுகிறது. யுவான்வாங் என்பதற்கு நீடித்த ஆசை என்ற பொருளும் இருக்கிறது. சீன அரசாங்கம், கடல்சார் வான்பரப்பை கண்காணிக்கும் கப்பல்களுக்கு யுவான் வாங் என்று பெயர் சூட்டியிருக்கிறது. அந்த வகையில் யுவான் வாங் ரகத்தில் நான்கு கப்பல்களை சீனா வைத்துள்ளது. ஒவ்வொரு கப்பலிலும் வெவ்வேறு டிஷ்களுடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆன்டனாக்கள், ராடார் மற்றும் ஸ்கேனர் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. யுவான்வாங் 3, யுவான்வாங் 5, யுவான்வாங் 6, யுவான்வாங் 7 என அந்த கப்பல்கள் குறிப்பிடப்படுகின்றன. உலக அளவில், சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே இதுபோன்ற செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் விண்வெளி ஆய்வுக்கப்பல்கள் உள்ளன. அமெரிக்காவிடம் இதுபோல 23 கப்பல்கள் உள்ளன. சீன கப்பல் வரும் முன்பே இலங்கைக்கு இந்தியா வழங்கிய கண்காணிப்பு விமானம் சீன கப்பல் ஆகஸ்ட் 16இல் வர இலங்கை போட்ட நிபந்தனைகள் - இந்திய நிலைப்பாடு என்ன? சீனா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஷென்சோ விண்வெளி திட்டத்தின் அங்கமாக அதன் விண்வெளி வீரர்களுக்கு உதவியாக யுவான்வாங் கப்பல்களை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்புவதற்காக வடிவமைத்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. அந்த வகையில், 1977ம் ஆண்டிலேயே இந்த ரக கப்பல்கள் தயாரிக்கப்பட்டாலும், அவை தமது சொந்த கடல் பரப்பைத் தாண்டி பிற கடல் பிராந்தியங்களில் இருந்து கொண்டு சர்வதேச செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை கண்காணிக்க 1986க்குப் பிறகு பயன்படுத்தப்பட்டன. அப்போது யுவான்வாங் 1, 2 ரக கப்பல்கள் பயன்பாட்டில் இருந்தன. 1995இல் யுவான்வாங் 3 ரகத்தில் இரண்டு கப்பல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. இதன் பிறகு 1999இல் யுவான்வாங் 4 கப்பல் சீன செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை கண்காணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2007இல் யுவான் வாங் ரகத்தில் மேலும் இரண்டு கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. இந்த வரிசையில் யுவான்வாங் 5 மற்றும் 6 ரக கப்பல்கள் ஷென்சோ திட்டத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு பெருங்கடல்களின் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வகையில், யுவான் வாங் கண்காணிப்பு கப்பல்கள் "மூன்று பெருங்கடல்களுக்கு" செயற்கைக்கோள் ஏவுதலுக்கு முந்தைய பரிசோதனை முறையிலான ஆய்வுப் பணிகளுக்கு உதவ அனுப்பப்படுகின்றன. கடல் எல்லைகளைக் கடக்கும் யுவான்வாங் கப்பல்கள் பட மூலாதாரம்,PMD SRI LANKA குறிப்பாக, மேற்கு பசிஃபிக் பெருங்கடல், தெற்கு பசிஃபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியாவின் மேற்கு இந்திய பெருங்கடல், தெற்கு அட்லான்டிக் பெருங்கடல் ஆகியவற்றுக்கு இந்த கப்பல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ரக கப்பல் முதல் முறையாக 1999ஆம் ஆண்டு நம்பரில் பெருங்கடல்களுக்கு செலுத்தப்பட்டன. அப்போது அதன் முதலாவது, இரண்டாவது வரிசைகள் பசிஃபிக் கடலுக்கு அனுப்பப்பட்டன. யுவான்வாங் 4 ரக கப்பல் இந்திய பெருங்கடலுக்கும் ஆஸ்திரேலியாவின் ஃப்ரெமான்டல் துறைமுகத்துக்கும் அனுப்பப்பட்டது. யுவான்வாங் 3 ரக கப்பல், டர்பனுக்கும் பிறகு அங்கிருந்து அட்லான்டிக் கடல் பகுதிகளுக்கும் அந்த கப்பல் செலுத்தப்பட்டது. இதில் யுவான்வாங் 4 கப்பல், 2007ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதன் மீது நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு கப்பல் ஒன்று மோதியது. அதில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு அது பயிற்சிக்கான இலக்கு கப்பலாக மாற்றப்பட்டது. 2010இல் நடந்த சோதனையின்போது ஜியாங்யின் துறைமுக தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது டிஎஃப்21 பாலிஸ்டிக் ஏவுகணை கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணையின் மூலம் இலக்கு கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது. முன்னதாக, 2007இல் யுவான்வாங் 5 மற்றும் யுவான்வாங் 6 ரக மூன்றாம் தலைமுறைக்கான கப்பல்களை சீன கப்பல் கட்டுமான தொழில் கழகம் உருவாக்கியது. இதில் யுவான்வாங் 5 ரக கப்பல் செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் தேவைப்பட்டால் ஏவுகணை செலுத்தும் கப்பலாக இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது. யுவான்வாங் 6 ரக கப்பல், இன்டர்நெட் சேவைக்கு பயன்படும் கடலடி கண்ணாடி இழை வடம் அமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் அதன் கசிவுகளை தடுக்கும் திறன்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இருந்து சுமார் மூன்று லட்சம் பேர் வரை வசிக்கக் கூடிய நகருக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்த வரிசையில் யுவான்வாங் 7, யுவான்வாங் 21, 22 ஆகிய கப்பல்கள் உள்ளன. அவை சீன செயற்கைக்கோள் கடல்சார் கண்காணிப்புத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. யுவான்வாங் 21, 22 போன்ற கப்பல்கள், சீனாவின் லாங்மார்ச் ராக்கெட்டுகளை சுமந்து வர பயன்படுத்தப்பட்டாலும், அவற்றின் நடமாட்டம் மற்றும் சேவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. நோக்கம் என்ன? இதில், சீனாவின் யுவான் வாங்-5 செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக் கப்பல்தான் இப்போது, இலங்கையின் சீன நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தற்போது நங்கூரமிட்டுள்ளது. அங்கு அந்த கப்பலுக்கு எரிபொருள் நிரப்பவும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒரு வார காலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் நீளம் 220 மீட்டர். அகலம் 25.2 மீட்டர். 25 ஆயிரம் டன் பொருட்களை கையாளும் திறன் கொண்ட இந்த கப்பலால் அதிகபட்சமாக மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லமுடியும். பல கப்பல்களில் இடம்பெற்ற வடிவங்களை ஒருசேர தன்னுள் கொண்டதாக இந்தக் கப்பல் இருக்கிறது. சீனா சமீபத்திய மாதங்களிலோ வாரங்களிலோ ஷென்ஸோ ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு செலுத்தாத நிலையில், இந்த யுவான்வாங் 5 ரக கப்பல் எந்த நோக்கத்துக்காக பெருங்கடல் பயணத்தை மேற்கொண்டுள்ளது என்பதை சீனா விளக்கவில்லை. இது அடிப்படையில் ஒரு போர் கப்பல் கிடையாது. ஆனால், போர் கப்பல்களுக்கு மூளையாகவும் தொழில்நுட்ப ஆற்றலை வழங்கக் கூடியதாகவும் திகழ்கிறது. அந்த நாட்டைப் பொறுத்துவரை, இதுவொரு வழக்கமான பரிசோதனை அளவிலான கடல் வழி பயணம் என்றே ஆரம்பம் முதல் கூறப்படுகிறது. இந்தியாவின் துருவ் - சிறப்பம்சங்கள் என்ன? பட மூலாதாரம்,INDIAN NAVY சீனாவிடம் யுவான்வாங் தொடர்களில் பல வகை கப்பல்கள் இருந்தாலும், இந்தியாவில் அதன் பாதுகாப்பு தேவைக்காக செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்ட ஒரே கப்பலாக 'ஐஎன்எஸ் துருவ்' உள்ளது. இந்த கப்பல் 2021ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் நாட்டுடைமையாக்கப்பட்டது. இது முழுக்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ, இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான என்டிஆர்ஓ ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டியெழுப்பட்டது. விசாகப்பட்டினத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பல், இந்திய கடற்படை சேவைக்காக இயக்கப்படுகிறது. அங்குதான் இதன் இயங்குதளமும் கட்டுப்பாட்டு மையமும் உள்ளது. இந்த கப்பலை இந்திய கடற்படை, என்டிஆர்ஓ, டிஆர்டிஓ ஆகியவற்றைச் சேர்ந்த கூட்டுக்குழு இயக்கி வருகிறது. இந்த கப்பலில் டிஆர்டிஓ உருவாக்கிய அதிநவீன ரேடார் (ஏஇஎஸ்ஏ) சாதனங்கள் உள்ளன. இது பல்வேறு அலைவரிசைகளை ஸ்கேன் செய்யவும், இந்தியாவை கண்காணிக்கும் உளவு செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் இந்தியாவின் கடல் பிராந்தியத்தில் நடத்தப்படும் ஏவுகணை சோதனைகளை கண்காணிக்கவும் உதவுகிறது. ஐஎன்எஸ் துருவ் என அழைக்கப்படும் இந்த கப்பல், அணு ஆயுத ஏவுகணைகளை நீண்ட தூரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்டது. இது இந்திய பசிஃபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணித்து கடற்படையை எச்சரிக்கவும் கடல் படுகைகளை வரைபடமாக்கும் திறனையும் துருவ் கொண்டுள்ளது. சென்சார்கள் நிரம்பிய மூன்று குவிமாட வடிவ ஆன்டெனாக்களின் சிறப்பு கண்காணிப்பு அமைப்புகளைக் கொண்டுள்ள இந்த கப்பலின் எடை 5,000 டன் ஆகும். முதல் முறையாக இந்த கப்பலின் திறன் 2018ஆம் ஆண்டில் விரிவாக சோதிக்கப்பட்டது. இந்த கப்பலில் இருந்து 14 மெகாவாட் மின் சக்தியை தயாரிக்க முடியும். இது எதிரி ஏவுகணைகளை கண்காணிப்பதுடன், உள்நாட்டில் நடத்தப்படும் ஏவுகணைகளின் வழக்கமான சோதனைகளின் தரவை துல்லியமாக வழங்குவதற்கும் உதவுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் மேக் இன் இந்தியா திட்டத்தின்படி இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை கூறுகிறது. இந்த திட்டத்துக்காக ரூ.725 கோடி வரை செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், அது பற்றிய அலுவல்பூர்வ தகவல்களை இந்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. இத்தகைய வசதிகளுடன் கூடிய கப்பல்கள் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன. ஒப்பீட்டளவில் சீனாவின் யுவான்வாங் தொடர் வரிசை கப்பல்களுக்கு இது நிகரில்லை என்றாலும் தற்போது இலங்கை வந்துள்ள யுவான்வாங் 5 ரக கப்பலில் உள்ள அதே நவீன செயற்கைக்கோள், ஏவுகணை கண்காணிப்பு வசதிகளை துருவ் கப்பல் கொண்டுள்ளது. துருவ் ஒரு போர் கப்பல் கிடையாது. அது போர் கப்பல்களுக்கும் இந்திய பாதுகாப்புத்துறைக்கும் உதவும் வகையிலான தொழில்நுட்ப ஆதாரவை மட்டுமே வழங்கும். https://www.bbc.com/tamil/india-62569488
  21. பெற்றோர் பராமரிப்பு: வயதான தந்தையை பராமரிக்க தவறிய மகனின் சொத்து உரிமைகள் ரத்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAPEEPONG PUTTAKUMWONG / GETTY IMAGES (இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (17/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) வயதான தந்தையை பராமரிக்கத் தவறிய மகனின் சொத்து உரிமைகளை ரத்து செய்து கும்பகோணம் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கல்லுக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 72). இவரது மகன் வைத்தியலிங்கம். மனைவியை இழந்த சண்முகம் தனது ஒரே மகனான வைத்தியலிங்கத்தை சிரமப்பட்டு வளர்த்து திருமணம் செய்து வைத்ததாகவும் பின்னர் அவர் மகன், மருமகளுடன் திருநாகேஸ்வரம் கல்லுக்காரத் தெரு பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்ததாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது. இந்தநிலையில் வைத்தியலிங்கம் தனது தந்தை சண்முகத்திடமிருந்து சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு தனது தந்தையை முறையாக பராமரிக்காமல் இருந்து வந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் மற்றும் திருவிடைமருதூர் போலீசாரிடம் சண்முகம் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வைத்தியலிங்கத்திற்கு அறிவுரை கூறி தந்தையை முறையாக பார்த்துக் கொள்ளுமாறு அனுப்பியதாகவும் ஆனாலும் வைத்தியலிங்கம் தொடர்ந்து சண்முகத்தை துன்புறுத்தி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சண்முகம் கும்பகோணம் கோட்டாட்சியரிடம் புகார் கொடுத்தார். சொத்து ரத்து புகாரின்பேரில், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, கும்பகோணம் தாசில்தார் மற்றும் தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், வைத்தியலிங்கம் தனது தந்தையின் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அவரை முறையாக பராமரிக்காமல் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியது உண்மை என தெரிய வந்தது. இதுகுறித்து கோட்டாட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் தொடரும் முதியோர் கொலைகள்: முதியோர் நிலை என்ன? அரசு செய்வது என்ன? பாட்டியை தீக்கிரையாக்கிய பேத்திகள் - நெல்லையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் 95 வயது முதியவரை கட்டிலோடு தூக்கி தெருவில் வைத்துவிட்டு வீட்டை இடித்த அதிகாரிகள் அந்த அறிக்கையின் அடிப்படையில் சண்முகத்திடம், வைத்தியலிங்கம் எழுதி வாங்கிய உயில் பத்திரத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் லதா நடவடிக்கை எடுத்தார். பின்னர் அந்த சொத்தின் ஆவணங்கள் சண்முகத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-62572057
  22. ஆதித்த கரிகாலன் உண்மையில் கொன்றது யார்? Aditya Karikalan Death Mystery Revealed | Deep Talks Deepan
  23. இதய நோய், ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவுமா டார்க் சாக்லேட்? - ஆய்வுகள் சொல்வது என்ன? ஜெஸ்ஸிகா பிராட்லி பிபிசி ஃப்யூச்சர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதர்கள் பல நூறு ஆண்டுகளாக சாக்லேட் வகைகளைச் சாப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில் சாக்லேட் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா கெட்டதா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. "பனாமாவிலுள்ள சான் ப்ளாஸ் தீவுகளில் வாழும் குனா இந்தியர்கள் போன்ற மக்களின் கலாசாரங்களில் சாக்லேட் ஒரு பகுதியாக உள்ளது. மேலும், அவர்களுக்குக் குறைந்த ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு போன்றவை குறைவான அளவில் உள்ளன," என்று அமெரிக்க புற்றுசோய் கூட்டமைப்பின் தொற்றுநோயியல் ஆராய்ச்சி பிரிவின் மூத்த அறிவியல் இயக்குநரான மர்ஜி மெக்கல்லோ கூறுகிறார். அதிகப்படியான உப்பு, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்ற அறிவியல் கருத்துக்கு மாறாக, அவர்கள் தங்கள் உணவில் ஒரு சராசரி அமெரிக்கர் சேர்ப்பதை விட அதிகளவு உப்பு சேர்த்துக்கொள்கிறார்கள். குனா இந்தியர்கள் தினசரி என்ன சாப்பிடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களை நேரில் சென்று சந்தித்தார். அவர்கள் நான்கு கப் கக்காவ் (வெப்ப மண்டல அமெரிக்காவில் வளரும் தாவரம், இது கோகோ தயாரிக்கப் பயன்படுகிறது) தண்ணீர் மற்றும் சிறிதளவு சர்க்கரை கலந்த கோகோவை தினமும் உட்கொள்வதை அவர் கவனித்தார். டார்க் சாக்லேட்டில் இந்த கக்காவின் அளவு 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. ‘பிரேக்-அப்’பில் இருந்து மீள உதவும் பயிற்சியாளர் - பெண்களுக்கு கொடுக்கும் முக்கிய டிப்ஸ் வெட்டுக்கிளிகள் உண்மையில் மாட்டிறைச்சிக்கு மாற்றாக முடியுமா? உணவு டெலிவரி செய்த பள்ளிச் சிறுவன் - ஜொமாட்டோ நிறுவனம் அளித்த விளக்கம் என்ன? டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா? பல்வேறு அவதானிப்பு ஆய்வுகள், டார்க் சாக்லேட்டின் இதய நன்மைகளைப் பற்றிக் கூறுகின்றன. ஓர் ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் 20,000 பேரின் உணவுப் பழக்கம் மற்றும் அவர்களுடைய ஆரோக்கியத்தை அவதானித்தார்கள். அதன்மூலம், 100 கிராம் சாக்லேட்டை ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்வது இதய நோய் மற்றும் மாரடைப்புக்கான அச்சுறுத்தலைக் குறைப்பதாகக் கண்டறிந்தார்கள். கோகோ சப்ளிமென்ட் மற்றும் மல்டிவைட்டமின் விளைவுகளின் ஆய்வு (Cocoa Supplement and Multivitamin Outcomes Study), 21,000 பேரை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டது. தினசரி 400 முதல் 500 மில்லிகிராம் கோகோ ஃபிளாவனால் (cocoa flavanol) இருக்கக்கூடிய சப்ளிமென்ட்களை (ஊட்டச்சத்துக்காக உட்கொள்ளப்படும் பொருட்கள்) எடுத்துக்கொள்வது ரத்த அழுத்தம் மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைப்பதன் மூலம், இதய நோயால் உயிரிழக்கும் அபாயத்தைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்த ஃபிளாவனாய்டுகளின் அளவு டார்க் சாக்லேட்டில் தேநீரை விட நான்கு மடங்கு அதிகமாக இருக்கலாம். ஆனால், உற்பத்தி செயல்பாட்டின்போது, ஃபிளாவனாலின் அளவு குறைவதாக ஓர் ஆய்வு காட்டுகிறது. அதன்விளைவாக, டார்க் சாக்லேட்டில் எவ்வளவு கோகோ ஃபிளாவனால் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பலனளிக்கும் என்ற முழு விவரம் இல்லை என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் உணவு அறிவியல் பேராசிரியராக இருக்கும் குன்டெர் குன்லே. சாக்லேட் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாகக் கவலைப்படுபவர்கள், அதை முழு முற்றாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். டார்க் சாக்லேட்டில் பொதுவாக சர்க்கரையும் உள்ளது. ஆனால், பால் சாக்லேட்டில் உள்ள விகிதத்தைவிட அதிக சதவீதம் கோகோ கொண்ட சாக்லேட்டை தேர்ந்தெடுப்பது, அதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக அமையும். பட மூலாதாரம்,GETTY IMAGES இதய நோயைத் தடுக்க சாக்லேட் சாப்பிடுவதை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படையாகப் பரிந்துரைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து டார்க் சாக்லேட் சாப்பிடுவது நம் உடல்நலத்தில் நன்மைகளை ஏற்படுத்தும் என்றும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதாகவும் ஓர் ஆய்வறிக்கையின் முடிவு கூறுகிறது. பலவிதமான உணவுப் பொருட்களில் ஃபிளாவனால்கள் இருக்கின்றன என்றாலும், டார்க் சாக்லேட் ஆரோக்கியமான உணவுகள் பட்டியலில் பொருந்தக்கூடியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டார்க் சாக்லேட்டின் இருண்ட பக்கம் டார்க் சாக்லேட்டுகள் நன்மை பயப்பதாக தான் நினைக்கவில்லை என்கிறார் குன்லே. ஐரோப்பிய உணவு தர நிர்ணய ஆணையம், 200 மில்லிகிராம் கோகோ ஃபிளாவனாய்டுகள் அல்லது 10 கிராம் டார்க் சாக்லேட் உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறுகிறது. ஆனால், ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லி கிராம் அளவு ஃபிளாவனாய்டு எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அது 30 கிராம் அளவுக்கு இருக்கக்கூடிய ஒரு சிறு டார்க் சாக்லேட்டுக்கு நிகரானது. சாக்லேட்டுகளில் ஃபிளாவனால் அளவை அதிகர்ப்பதற்கான எந்த முயற்சியும் அவற்றை ஓர் 'ஆரோக்கியமான உணவாக' மாற்றும் என்று தான் கருதவில்லை என்கிறார் குன்லே. சாக்லேட்டில் கோகோ ஃபிளாவனால் சேர்ப்புகளின் விளைவுகளைச் சோதிப்பதில் கவனம் செலுத்தப்படுவதில், டார்க் சாக்லேட்டிலுள்ள சர்க்கரை, நிறை கொழுப்பு (Saturated fat) போன்ற மற்ற கூறுகள் தவிர்க்கப்படுகின்றன. டார்க் சாக்லேட்டில் பெரும்பாலும் கோகோ வெண்ணெய் கலக்கப்படுகிறது. இதில் அதிகமான கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்புக்கு இதய நோய் அபாயத்துடன் தொடர்புள்ளது. "சாக்லேட்டில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கோகோ வெண்ணெயில் இருந்து வருகின்றன. கோகோ வெண்ணெயில் உள்ள கொழுப்பில் மூன்றில் ஒரு பங்கு நிறை கொழுப்பு. அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது," என்கிறார் வடக்கு ஐயர்லாந்தின் தலைநகரான பெல்ஃபாஸ்டில் இருக்கும் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் பயாலஜிகல் சயின்சஸ் பேராசிரியர் ஏடின் காஸ்ஸிடி. பட மூலாதாரம்,GETTY IMAGES "சாக்லேட்டில் அதிகளவு கோகோ ஃபிளாவனாய்டு இருந்தால் அது ஆரோக்கியமானது. ஆனால், அது அதிகளவில் சேர்க்கப்படும்போது, அந்த சாக்லேட்டின் சுவை கசப்பாக இருக்கும். சாக்லேட்டின் சுவை கசப்பாக இருந்தால் அதைச் சந்தைப்படுத்துவது மிகவும் கடினம். கோகோவின் நன்மைகளுக்கும் சுவையானதாக மகிழ்ந்து ருசிக்கக்கூடியதாக மாற்ற எதைச் சேர்க்க வேண்டும் என்பதற்கும் இடையே முரண்பாடு நிகழ்கிறது," என்கிறார் ஆஸ்டன் மெடிக்கல் ஸ்கூலில் உணவியல் வல்லுநராக இருக்கும் டுவேன் மெல்லோர். ஃபிளாவனாய்டுகளை உடல் எடுத்துக்கொள்வதை எளிதாக்க ஏதுவாக, கொழுப்பு மற்றும் சர்க்கரை சாக்லேட்டில் சேர்க்கப்படுகிறது. "இந்த ஃபிளாவனால்கள் மிகவும் சிக்கலான கரிம சேர்மங்களாக உள்ளன. ஆகவே, அவற்றோடு சர்க்கரையைச் சேர்ப்பதன் மூலம் உடலுக்கு எளிதில் கிடைக்க வழி செய்யலாம்," என்றும் மெல்லோர் கூறுகிறார். இருப்பினும், ஒருவர் எவ்வளவு கோகோ ஃபிளாவனால்களை டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் பெறுகிறார் என்பதைக் கண்டறிவதற்கான வழிகள் எதுவும் இதுவரை இல்லை. "சாக்லேட் ஆரோக்கியமான உணவுப்பொருள் அல்ல. பெரும்பாலான சாக்லேட்டுகளில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கருத்தில் கொண்டு, அதிகப்படியாக அதை உண்பதால் ஏற்படும் பாதகமான விளைவுகளோடு ஒப்பிடும்போது, ஃபிளாவனால்கள் மூலம் கிடைக்கும் நன்மையும் மிகக் குறைவாகவே இருக்கும்," என்கிறார் குன்லே. பட மூலாதாரம்,GETTY IMAGES உடல்நல நன்மைகளைக் குறைக்காமல் தயாரிக்கும் முயற்சி சுவையைக் கைவிடாமல் அதேவேளையில், அதில் கிடைக்கும் உடல்நல நன்மைகளையும் தரக்கூடிய வகையில் அதிக கோகோ உள்ளடக்கத்தைக் கொண்ட சாக்லேட் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடும் சிறு சிறு சாக்லேட் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. ஃபயர்ட்ரீ என்ற சாக்லேட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்டின் ஒடேர், "கோகோ பீன்ஸ் பசிபிக்கில் இருக்கும் சாலமன் தீவுகளில் வளர்க்கப்பட்டு, அவற்றின் ஓடுகளை உடைத்து, உள்ளிருக்கும் கோகோ பீன்ஸ்களை ஆறு நாட்கள் நொதித்தல் செயல்முறைக்கு உள்ளாக்கி, பிறகு அவற்றைக் காய வைத்த பிறகு விவசாயிகள் பிரிட்டனுக்கு அனுப்புகிறார்கள். அங்கு அவற்றை வறுத்து பயன்படுத்துகிறோம்," என்கிறார். பீன்ஸ் ஓடுகளைப் பிரிக்காமல் முழுவதுமாக வறுக்கும்போது அதிக நேரத்திற்கு அவற்றைச் சூட்டிலேயே வைத்திருக்க வேண்டும். காய்கறிகளை நீண்ட நேரத்திற்கு வெப்பத்தில் சமைக்கும்போது அவற்றிலுள்ள ஊட்டச்சத்துகளும் குறையத் தொடங்குகின்றன. டார்க் சாக்லேட் விஷயத்திலும் அப்படியே இருந்தால், அதிலுள்ள நன்மைகளும் குறையும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, ஓடுகளைப் பிரித்துவிட்டு வறுப்பதன் மூலம் குறைவான நேர்த்திற்கு வெப்பத்தில் வைத்தால் போதும். அதன்மூலம் அதிலுள்ள நன்மைகளும் பெரியளவில் குறையாமல் இருக்கலாம். இதில் இன்னும் ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கான ஃபிளாவனால்களை எடுத்துக்கொள்வது குறித்துப் பேசியபோது, "அதிகப்படியான கலோரிகளை தவிர்ப்பதாக இருந்தால், ஒரு வாரத்தில் பல முறை அதிக சதவீதத்தில் டார்க் சாக்லேட் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், அதை அதிகமாகச் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவாகக் கருதக்கூடாது. சரியான அளவில் கக்காவ் அதிகமுள்ள சாக்லேட் உடன் தேநீர், பெர்ரி, திராட்சை போன்ற பழங்கள் மூலமாகவும் ஃபிளாவனால்களை எடுத்துக்கொள்ள முயலவேண்டும்," என்றார் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் பேராசிரியராக இருக்கும் ஜோஆன் மேன்சன். https://www.bbc.com/tamil/global-62553650
  24. 1000 வருடங்களுக்கு முன் எப்படி தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது தெரியுமா? [ With Subtitle ]
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.