Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் Published By: DIGITAL DESK 3 24 JAN, 2024 | 03:23 PM (எம்.நியூட்டன்) நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்று புதன்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது. ஜனநாயகத்தை அச்சுறுத்தாதே, நிகழ் நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு, ஊடகங்களை சமூக ஊடகங்களை நசுக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு போன்ற பல கோரிக்கைகள் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது. நிகழ்நிலை காப்பு சட்டமூலம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174698
  2. சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்பில் தகவல் தருவோருக்கு பண வெகுமதிகள் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். நாடு தழுவிய ‘யுக்திய’ நடவடிக்கைக்கு இணங்க பணச் சலுகைகளை அறிமுகப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்தநிலையில் தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தானியங்கி துப்பாக்கிகளுடன் (T56, AK47, M16, SAR 80, T81) சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய உதவினால் 250,000 ரூபா வழங்கப்படும். சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு தானியங்கி துப்பாக்கியை (T56, AK47, M16, SAR 80, T81) மீட்டெடுப்பதற்கு வழிவகுக்கும் தகவலுக்கு 250,000 ரூபா வழங்கப்படும். அரை தானியங்கி துப்பாக்கிகளை (பிஸ்டல்கள், 84 எஸ்எல்ஆர், ஒட்டோ-லோடிங் சொட்கன்கள்) மீட்டெடுக்க 250,000 ரூபா வழங்கப்படும். ரிவோல்வர் ரக துப்பாக்கியை வைத்திருக்கும் சந்தேக நபரை கைது செய்ய 150,000 ரூபா வழங்கப்படும். சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ரிவால்வரை மீட்டெடுப்பதற்கு 100,000 ரூபா வழங்கப்படும். ரிப்பீட்டர் ரக துப்பாக்கியை மீட்டெடுப்பதற்கு 50,000 ரூபா வழங்கப்படும். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கிகளுக்கு 15,000 ரூபா வழங்கப்படும். சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து கைக்குண்டொன்றை மீட்டெடுப்பதற்கு 25000 ரூபாயும், சந்தேகத்திற்கு இடமின்றி அதனை மீட்பதற்கு 15,000 ரூபாயும் வழங்கப்படும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை மீட்டெடுப்பது குறித்த தகவல்களுக்கு 15,000 ரூபா வெகுமதியாக வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/174698
  3. பட மூலாதாரம்,ALABAMA DEPARTMENT OF CORRECTIONS படக்குறிப்பு, 1988இல் செய்த கொலைக்காக மரணதண்டனையை எதிர்கொள்கிறார் ஸ்மித் கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன் பதவி, பிபிசி நியூஸ் 24 ஜனவரி 2024, 04:45 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் மரணதண்டனை முறைகளின் கிராஃபிக் விளக்கங்கள் உள்ளன, இது சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அமெரிக்காவின் அலபாமா சிறையில் தனது இறுதி நாட்களைக் கழித்து வருகிறார் கென்னத் யூஜின் ஸ்மித், நைட்ரஜன் வாயு மூலம் மரணம் அடையப் போகும் அமெரிக்காவின் முதல் மரணதண்டனைக் கைதி. இதுவரை பரிசோதனை செய்யப்படாத இந்த புதிய மரணதண்டனை முறை குறித்த எண்ணங்களால் நிம்மதியில்லாமல் தவிப்பதாக கூறுகிறார் ஸ்மித். கென்னத் யூஜின் ஸ்மித்துக்கு முதல்முறையாக தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்த போது, அலபாமா சிறையின் மரணதண்டனை நிறைவேற்றும் ஊழியர்களுக்கு அவரைக் கொல்ல பல மணிநேரம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பட மூலாதாரம்,ASSOCIATED PRESS படக்குறிப்பு, ஸ்மித்துக்கு, ஹோல்மன் கரெக்ஷனல் ஃபெசிலிட்டியில் உள்ள ஒரு சிறிய அறையில் மரணதண்டனை நிறைவேற்றப்படும். 'டெத் சேம்பர்' எனப்படும் மரண அறை ஹோல்மன் கரெக்ஷனல் ஃபெசிலிட்டி எனப்படும் அலபாமா சிறையின் 'டெத் சேம்பர்' என்று அழைக்கப்படும் அறையில், மரணதண்டனை விதிக்கப்பட்ட ஸ்மித்தைக் கட்டி வைத்து, அவரது உடலில் ஒரு கொடிய ரசாயன கலவையை செலுத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. காரணம், ஸ்மித்தின் உடலில் ரசாயனத்தை செலுத்த சரியான நரம்பை கண்டறிய முடியவில்லை. நேரம் நள்ளிரவைத் தாண்டியதால், அரசின் மரண உத்தரவு காலாவதியானது. ஊழியர்கள் முயற்சியைக் கைவிட்டனர். நரம்பைக் கண்டறிய எடுக்கப்பட்ட முயற்சிகளால், ஸ்மித்தின் உடலில் பல வெட்டுகள் ஏற்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள். இது நடந்தது நவம்பர் மாதம், 2022ஆம் ஆண்டில். இப்போது அலபாமா சிறை நிர்வாகம் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். இம்முறை, ஸ்மித்தின் முகத்தில் காற்று புகாத முகமூடியை மாட்டி, அதன் மூலம் நைட்ரஜன் வாயுவை செலுத்தி சுவாசிக்க வைப்பது தான் திட்டம். நைட்ரஜன் வாயுவை சுவாசிப்பதன் மூலம், உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுத் திணறி மரணமடையும் திட்டத்தை அங்கீகரித்துள்ளது அமெரிக்க அரசு. ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் இதைப் பற்றி பேசுகையில், "இதுவரை பயன்படுத்தப்படாத இந்த தண்டனை முறை மிகவும் கொடூரமான, மனிதாபிமானமற்ற ஒரு இழிவான நடத்தையாகும், இது நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறினார். மரணதண்டனையை தடை செய்ய ஸ்மித்தின் வழக்கறிஞர்கள் வைத்த கோரிக்கையை அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் நிராகரித்தது. இறுதி மேல்முறையீட்டு தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது. ஸ்மித்துக்கு வியாழக்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் ஸ்மித் செய்த குற்றம் என்ன? 1989-இல் ஒரு போதகரின் மனைவியான எலிசபெத் சென்னட்டைக் கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற இருவரில் ஸ்மித்தும் ஒருவர். கூலிப்படை மூலமாக 1,000 டாலர்கள் கூலிக்காக கொலை செய்யப்பட்டார் எலிசபெத் சென்னட். அமெரிக்காவில் மரணதண்டனைக்கு இரண்டு முறை அழைத்துச் செல்லப்பட்ட ஒரே கைதி ஸ்மித். நைட்ரஜன் வாயு மூலம் மரணத்தை எதிர்கொள்ளும் முதல் நபரும் இவரே. "உடலும் மனதும் மிகவும் பலவீனமாக, நொறுங்கி கிடப்பதைப் போல உணர்கிறேன். தொடர்ந்து எடை குறைந்து வருகிறது," என ஒரு இடைத்தரகர் மூலம் பிபிசி கேட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் ஸ்மித். அலபாமாவில் மரணதண்டனைக் கைதிகளை பத்திரிகையாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் நாங்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம், ஆனால் அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் நேர்காணலைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். "எனக்கு எப்பொழுதும் குமட்டல் உணர்வு இருக்கிறது. பேரச்சத் தாக்குகள் (Panic attacks) தொடர்ந்து உருவாகின்றன. இது நான் தினசரி எதிர்கொள்ளும் துன்பங்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. அடிப்படையில் இதுவே விகப்பெரிய சித்திரவதை," என்று அவர் எழுதினார். நிலைமை மேலும் மோசமாகும் முன் இந்த குறிப்பிட்ட மரணதண்டனை முறையை நிறுத்த அலபாமா அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார். நைட்ரஜன் வாயுவை உடலில் செலுத்துவது விரைவில் சுயநினைவை இழக்கச் செய்யும் என்று அரசு கூறுகிறது, ஆனால் அதற்கு எந்த நம்பத்தகுந்த ஆதாரத்தையும் அரசு முன்வைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES நைட்ரஜன் கசிவின் அபாயங்கள் இந்த மரணதண்டனை மூலம் பேரழிவு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதைக் குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் எச்சரித்துள்ளனர். வலிப்பு ஏற்பட்டு உயிர் போகாமல், கோமா நிலைக்குள் செல்வது முதல் முகமூடியிலிருந்து வாயு கசிந்து, ஸ்மித்தின் ஆன்மீக ஆலோசகர் உட்பட அறையில் உள்ள மற்றவர்களைக் கொல்லும் வாய்ப்பு கூட இருக்கிறது என எச்சரித்துள்ளனர். "ஸ்மித் இறப்பதற்கு பயப்படவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் அதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த மரண தண்டனை முறையின் மூலமாக தான் மேலும் சித்திரவதை செய்யப்படுவோமோ என அவர் பயப்படுகிறார் என்று நான் நினைக்கிறேன்," என்று அவரது ஆன்மீக ஆலோசகர் மற்றும் ரெவ் டாக்டர், ஜெஃப் ஹூட் கூறுகிறார். நைட்ரஜன் கசிவின் அபாயங்களை பட்டியலிடும் மாநிலத்தின் சட்டப்பூர்வ பொறுப்புத் துறப்பு அறிக்கையில் அவர் கையெழுத்திட்டுள்ளார். "நான் அவரிடமிருந்து பல அடி தூரத்தில் இருப்பேன், என் உயிரைப் பணயம் வைத்து இதைச் செய்கிறேன் என்று பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர். குழாயில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால், நைட்ரஜன் அறைக்குள் பரவுவதற்கு அது வழிவகுக்கும்" என்று டாக்டர் ஹூட் பிபிசியிடம் கூறினார். இந்த மரண தண்டனை முறை குறித்து விசாரணைக் குழு ஒன்று ஐ.நா.வுக்கு அறிக்கை அனுப்பியது. அதில் உறுப்பினராக உள்ள இணை ஆசிரியர் ஒருவர் இந்த முறை மிகவும் ஆபத்தானது என்று கூறுகிறார். எமோரி யுனிவர்சிட்டியின் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மயக்கவியல் துறையில் இணைப் பேராசிரியரான டாக்டர் ஜோயல் சிவோட், "அலபாமா சிறைச்சாலை அதிகாரிகள் 'கொடூரமான' மரணதண்டனைகள் மற்றும் அதன் மூலம் கிடைத்த 'பயங்கரமான' சாதனைகளுக்கு பெயர் போனவர்கள்" என்று குற்றம் சாட்டினார். "மொத்த அமெரிக்காவில் கென்னத் ஸ்மித் தான் மிக மோசமான மனிதர் என நாமே கற்பனை செய்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஏனென்றால் அலபாமா சிறைச்சாலை அவரைக் கொல்வதில் மிகவும் முனைப்பாக உள்ளது. அவரைக் கொல்லும் முயற்சியில் அவர்கள் மற்றவர்களைக் கொல்லக் கூட தயாராக இருக்கிறார்கள்" என்று டாக்டர் ஜோயல் பிபிசியிடம் கூறினார். "துப்பாக்கிச் சூடு மூலம் மரணதண்டனை பெறப்போகும் நபருக்கு அருகில் அனைத்து சாட்சிகளையும் அதிகாரிகளையும் வரிசையாக நிற்க வைப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் அனைவரையும் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என்று சொல்லி பொறுப்புத் துறப்பு பாத்திரத்தில் கையெழுத்திட சொல்கிறார்கள்" "ஏனென்றால் துப்பாக்கியால் சுடப்போகும் நபர்களுக்கு சரியாகத் சுடத் தெரியாது. அதனால் அவர்கள் உங்களையும் சுட்டுக் கொல்லும் வாய்ப்பு உள்ளது என்று சொன்னால் எப்படி இருக்கும். இதுவே நைட்ரஜன் வாயு தண்டனை முறையில் நடக்கிறது" என்று அவர் கூறினார். "நைட்ரஜன் வாயுவைப் பற்றி நாம் அறிந்தது என்னவென்றால், ஆரோக்கியமான தன்னார்வலர்கள் கொண்டு நடத்தப்பட்ட தொடக்க ஆய்வில், கிட்டத்தட்ட அனைவருக்கும், வாயுவை சுவாசித்த 15 முதல் 20 வினாடிகளில் ஒரு வலிப்பு ஏற்பட்டது," என்று அவர் கூறினார். அத்தகைய சூழ்நிலையில், ஸ்மித் சுயநினைவை இழக்கலாம் அல்லது தொடர்ச்சியான மோசமான வலிப்புகளால் பாதிக்கப்படலாம். படக்குறிப்பு, அலபாமாவில் உள்ள சிறையில் மரணதண்டனை பெற்று, தனது இறுதி நாட்களை கழித்து வருகிறார் ஸ்மித். தோல்வியில் முடிந்த மரணதண்டனை முயற்சிகள் அமெரிக்காவில் அதிகபட்ச தனிநபர் மரணதண்டனை விகிதங்களை உடைய மாகாணங்களில் அலபாமாவும் ஒன்றாகும், தற்போது அங்கு 165 பேர் மரணதண்டனைப் பெற்று சிறையில் உள்ளனர். 2018ஆம் ஆண்டு முதல், வெவ்வேறு கைதிகளுக்கு மூன்று முறை விஷ ஊசி மூலமாக மரணதண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கு அரசு பொறுப்பேற்றுள்ளது. இத்தோல்விகள் ஒரு உள் ஆய்வுக்கு வழிவகுத்தது, அதன் முடிவில் கைதிகள் மீதே குற்றம் சாட்டப்பட்டது. கடைசி நேரத்தில் மரணதண்டனையை நிறுத்தி வைப்பதற்காக, அவசர நீதிமன்ற மேல்முறையீடுகள் மூலம் கைதிகளின் உயிரைக் காப்பாற்ற வழக்கறிஞர்கள் முயன்றதாகவும் அந்த ஆய்வு கூறியது. இத்தகைய செயல்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும் என ஒரு 'தேவையற்ற காலக்கெடு அழுத்தத்தை' சிறை ஊழியர்களுக்கு ஏற்படுத்தியதாக கூறியது. இப்போது ஸ்மித்தின் தண்டனையை நிறைவேற்ற அதிக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறை கொலைகளை நிறுத்தும் அதிகாரம் கொண்ட அலபாமா ஆளுநர் கே ஐவி, நிபுணர்கள் எச்சரிக்கைகள் மற்றும் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஐ.நா.வின் கவலைகள், கைதி ஸ்மித்தின் கவலைகள் போல் ஆதாரமற்றவை என்று அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கூறியிருக்கிறது. அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "விசாரணை நீதிமன்றம் ஸ்மித்தின் கேள்விகளை ஆராய்ந்தது, பல மருத்துவ நிபுணர்களிடமிருந்து கருத்து கேட்டது, மேலும் நைட்ரஜன் ஹைபோக்ஸியா பற்றிய ஸ்மித்தின் கவலைகள் 'வெறும் ஊகம்' மற்றும் 'கோட்பாட்டு ரீதியிலானது' மட்டுமே என்று தீர்மானம் எடுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "ஜனவரி 25ஆம் தேதி அவரது மரணதண்டனையை நாங்கள் நிறைவேற்ற விரும்புகிறோம்" என கூறப்பட்டுள்ளது. நைட்ரஜன் வாயு மூலம் மரணதண்டனையை அங்கீகரிக்க ஆதரவாக வாக்களித்த குடியரசுக் கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினர் ரீட் இங்க்ராம், ஐ.நாவின் விமர்சனத்தை நிராகரித்தார். "இழிவுபடுத்துவது பற்றி எனக்குத் தெரியாது, மனிதாபிமானமற்றது பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் தண்டனை முறையை நாங்கள் மேம்படுத்துகிறோம் என்று நினைக்கிறேன். கொல்லப்பட்ட பெண்ணிற்கு அவர் செய்ததை விட இந்த தண்டனை முறை சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். மேலும், "எங்கள் ஆளுநர் ஒரு கிறிஸ்தவர். அவர் இந்த முழு விஷயத்தை குறித்தும் தீவிரமாக விவாதித்தார். இது சரியான முறை தான் என அவர் நினைக்கிறார். இது சற்று மனதை உலுக்கும் கனமான முடிவு தான், ஆனால் அது தானே சட்டம்" என்று கூறினார் ரீட் இங்க்ராம். எலிசபெத் சென்னட்டின் குடும்பத்தினரை பிபிசி அணுகியது, ஆனால் வியாழக்கிழமை வரை எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறினார்கள். 1996இல் ஒரு நடுவர் மன்றம் ஸ்மித்திற்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனையை பரிந்துரைத்தது, ஆனால் நீதிபதி அதை நிராகரித்து அவருக்கு மரணதண்டனை விதித்தார். வழக்கு விசாரணையில், எலிசபெத் கொல்லப்பட்டபோது உடனிருந்ததை ஒப்புக்கொண்ட ஸ்மித், ஆனால் அந்த கொலையில் தான் பங்கேற்கவில்லை என்று கூறியிருந்தார். https://www.bbc.com/tamil/articles/cmmg411lpymo
  4. காசாவில் கடும் மோதல்கள் தொடர்கின்றன - ஒரேநாளில் 24 இஸ்ரேலிய படையினர் பலி Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 04:14 PM காசாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற மோதலில் 24 படையினரை இழந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டிடங்களிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த இஸ்ரேலிய டாங்கிகளை இலக்குவைத்து பாலஸ்தீன போராளிகள் ஆர்பிஜி தாக்குதலை மேற்கொண்டதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கட்டிடமொன்றை அழிப்பதற்காக கண்ணிவெடிகளை வைத்துவிட்டு இஸ்ரேலிய படையினர் காத்திருந்தனர் அவ்வேளை ஆர்பிஜி விழுந்து வெடித்ததில் கட்டிடத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். மத்திய காசாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/174629
  5. வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள நகரம் ஹவுட்டன் லெ ஸ்ப்ரிங். ஹவுட்டனில் வசித்து வருபவர் சூ வெஸ்ட்ஹெட். அவருக்கு தற்போது 108 வயது ஆகிறது. தனது 12-ஆவது வயதில் உடல்நலம் பிரச்சினையால் அவதிப்பட்ட வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரக நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 25 ஆவது வயதில் டயாலிசிஸ் செய்து கொள்ள தொடங்கினார். நீண்ட சிகிச்சைக்கு பிறகும் அவருக்கு நோய் தீரவில்லை. 1970களின் தொடக்கத்தில் வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரகத்துறை சிகிச்சை நிபுணர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். 1973 இல் வெஸ்ட்ஹெட்டின் தாயார் ஆன் மெட்கால்ஃப் சிறுநீரகம் தர முன்வந்ததையடுத்து முறையான பரிசோதனைக்கு பின்னர் அறுவை சிகிச்சை நடந்து தாயாரின் சிறுநீரகம், வெஸ்ட்ஹெட்டிற்கு பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை ரோயல் விக்டோரியா மருத்துவமனையில் நடந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், அடுத்த 5 வருடங்களுக்கு கூட தான் உயிருடன் இருக்க முடியும் என வெஸ்ட்ஹெட் அப்போது நம்பவில்லை. ஆனால், 50 வருடங்கள் கடந்தும், எந்தவிதமான சிறுநீரக சிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார், வெஸ்ட்ஹெட். இந்த நிகழ்வு, தற்போது வெஸ்ட்ஹெட்டிற்கு உடல்நல மேற்பார்வையும் ஆலோசனையும் வழங்கி வரும் சண்டர்லேண்ட் ரோயல் மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு வந்திருந்த வெஸ்ட்ஹெட்டுடன் உரையாடிய அங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவமனை பணியாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மக்கள் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். https://thinakkural.lk/article/289077
  6. Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 04:59 PM ஆபிரிக்க நாடான கமரூனில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்களன்று கமரூனின் தலைநகாரான யவுண்டே அருகே உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா என்ற பெண் குழந்தைக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 600,000 பேர் மலேரியாவால் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 80 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கமரூன் அரசாங்கம், ஆறு மாதங்கள் நிறைவடைந்த அனைத்து குழந்தைகளுக்கும் RTS,S தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது. மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மொத்தம் நான்கு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். எனவே, தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் முறையை பெற்றோர்களுக்கு இலகுப்படுத்தும் வகையில் மற்றைய வழக்கமான குழந்தை பருவ தடுப்பூசிகள் போடப்படும் அதே நேரத்தில் குறித்த தடுப்பூசியும் போடப்படும் என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். கென்யா, கானா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. அங்கு தடுப்பூசி மூலம் மலேரியா உயிரிழப்புகள் 13 சதவீதம் குறைந்துள்ளது என யுனிசெப் தெரிவித்துள்ளது. தடுப்பூசி குறைந்தது பாதிக்கப்பட்ட 36 சதவீதமானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அறியப்படுகிறது. அதாவது, மூன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த தடுப்பூசி சந்தேகத்திற்கு இடமின்றி உயிர் காக்கும் ஒரு நிவாரணமாக இருந்தாலும், இது ஒரு மந்திர ஆயுதம் அல்ல என கென்யாவின் மலேரியா நோய்த் தடுப்பு சபையின் வைத்திய நிபுணர் வில்லிஸ் அக்வாலே தெரிவித்துள்ளார். ஆனால் வைத்தியர்களுக்கு இது மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் நுளம்பு வலைகள் மற்றும் மலேரியா மாத்திரைகளுடன் ஒரு முக்கியமான மருந்தாகும். எனவே, இந்த மூன்றையும் ஒன்றாகப் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு மலேரியாவிலிருந்து 90 சதவீத பாதுகாப்பை அளிக்கும் என்று இங்கிலாந்து தலைமையிலான ஆய்வு ஒன்று மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. "மலேரியா நோயாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் திறன் மற்றும் நோயை அகற்றுவதை துரிதப்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது" என கமரூனில் தடுப்பூசி வெளியீட்டை வழிநடத்தும் வைத்தியர் ஷாலோம் என்டோலா தெரிவித்துள்ளார். RTS,S தடுப்பூசியின் தயாரிக்க பிரித்தானிய மருந்து தயாரிப்பாளரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கேவிற்கு 30 வருடங்கள் ஆகியுள்ளது. நுளம்புகளால் பரவும் நோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் கமரூனில் தடுப்பூசி அறிமுகம் ஒரு வரலாற்று தருணம் என தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளது. இதேவேளை, இம்மாத தொடக்கத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வு இடம் பெற்றுள்ளது. அதாவது, 50 வருட கால வரலாற்றில் உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக மலேரியா நோய் இல்லாத முதல் துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடாக கேப் வெர்டே அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/174612
  7. திடீரென சரிந்து வீழ்ந்த புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வீடு Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 03:45 PM தமிழ்நாட்டில் புதுச்சேரியில் திங்கட்கிழமை வாய்க்காலில் தோண்டப்பட்ட பள்ளத்தின் காரணமாக புதிதாக 3 மாடி கட்டிமுடிக்கப்பட்ட வீடொன்று திடீரென சரிந்து வீழ்ந்து தரைமட்டடமாகியுள்ளது. புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த நிலையிலேயே இவ்வாறு குறித்த வீடு இடிந்து விழுந்துள்ளது. தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. புதுச்சேரியில் நகரத்தின் வாய்க்காலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இன்று மதியம் பெக்கோ இயந்திரம் மூலம் வாய்க்காலின் பக்கவாட்டு பகுதி சீரமைக்கப்பட்டு சுவர் எழுப்புதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக வாய்க்காலின் மண் அகழும் பகுதியில் ஜேசிபி இயந்திரம் ஈடுபட்டது. இதனால் வாய்க்கால் ஓரம் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிர்வு ஏற்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், திடீரென அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனை சற்றும் எதிர்பாராத அதன் அருகே நின்றிருந்த பொதுமக்கள், பொலிஸார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் அங்கிருந்து ஓடினார்கள். குறித்த வீட்டுக்கு இன்னும் சில தினங்களில் புதுமனை புகுவிழா நடைபெற இருந்தது. இந்நிலையில் குறித்த புது வீடு சரிந்து வீழ்ந்துள்ளது. வீடு கட்டுமான பணி நிறைவு பெற்றும் கிரகப்பிரவேசம் நடக்காததால் வீட்டின் உள்ளே எவரும் இருக்கவில்லை. வெளியே நின்று இருந்தவர்களும் ஓடியதால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதிகப்படியான மணல் அள்ளியதன் காரணமாக வீடு இடிந்து விழுந்ததாக குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/174622
  8. ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற இஸ்ரேல் அனுமதி? சிஎன்என் செய்தி Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 02:14 PM பரந்துபட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸ் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கும் யோசனையொன்றை இஸ்ரேல் முன்வைத்துள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகள் இதனை சி.என்.என்னிற்கு தெரிவித்துள்ளன. காசாவில் யுத்தம் நான்கு மாதங்களாக நீடிக்கின்ற போதிலும் ஹமாஸ் அமைப்பினை முற்றாக அழிக்க முடியாத நிலையில் இஸ்ரேல் உள்ள சூழ்நிலையிலேயே இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் இதுவரை ஹமாசின் முக்கிய தலைவர்கள் எவரையும் கைதுசெய்யவில்லை, ஹமாசின் போரிடும் திறன் மிக்க 70 வீதமான உறுப்பினர்கள் இன்னமும் உயிருடன் உள்ளனர் என இஸ்ரேல் மதிப்பிட்டுள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே ஒக்டோபர் தாக்குதலின் சூத்திரதாரிகள் என கருதப்படும் ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதற்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது. காசாவிலிருந்து ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் வெளியேறினால் ஹமாஸ் அமைப்பின் காசா மீதான பிடியை அது பாதிக்கும் மேலும் வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் தொடர்ந்தும் இலக்குவைக்கமுடியும் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்திற்கு வெளியே பல மத்தியகிழக்கு நாடுகளில் ஹமாஸ்தலைவர்கள் வசிக்கின்றனர். இதேவேளை இஸ்ரேலின் இந்த யோசனையை ஹமாஸ் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என சிஎன்என் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/174615
  9. கைதி பற்களை உடைத்ததாக புகார் - அம்பை ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களின் பற்களை கற்களால் உடைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அம்பாசமுத்திரம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கு நிலுவையில் இருக்கும்போது இடைநீக்கம் ரத்துசெய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன? திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் துணைச் சரகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றி வந்தவர் பல்வீர் சிங். இவர் அங்கே ஏ.எஸ்.பியாக பணியாற்றி வந்த காலகட்டத்தில், அந்தச் சரகத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களுக்கு வரும் விசாரணைக் கைதிகளை தாக்கியதாகவும், அவர்களின் பற்களைப் பிடுங்கியதுடன் வேறு பல துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் 2023 மார்ச் மாதம் மிகப் பெரிதாக வெடித்தது. பணியாளர் தேர்வாணய விதிகள் என்ன சொல்கின்றன? யுபிஎஸ்சி மூலம் அகில இந்தியப் பணிகளில் சேர்பவர்களுக்கான ஒழுங்கு விதிமுறைகள், குற்றம் சாட்டப்படும் ஒரு அதிகாரி எவ்வளவு காலகட்டத்திற்கு இடைநீக்கத்தில் இருக்கலாம் என்பதை வரையறுக்கிறது. அதன்படி, "ஊழல் தவிர்த்த பிற குற்றங்களை எதிர்கொள்ளும் அதிகாரி, ஓராண்டிற்கு மேல் இடைநீக்கத்தில் வைக்கப்பட முடியாது. அந்த கால கட்டத்திற்குள் விசாரணையை முடித்து, உரிய நடவடிக்கைகளுக்கான ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும். இடைநீக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டிற்குள், இந்த நடவடிக்கைகள் நிறைவடையவில்லையெனில், அந்த அதிகாரியின் இடைநீக்கம் தானாகவே ரத்தாகிவிடும்". ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அதிகாரிகளை மட்டும் இரண்டாண்டுகளுக்கு இடைநீக்கத்தில் வைத்திருக்கலாம். தமிழ்நாடு அரசு ரகசியம் காப்பது ஏன்? என கேள்வி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கையை எடுத்து, உரிய அறிக்கையைத் தாக்கல் செய்யாதது யார் தவறு எனக் கேள்வியெழுப்புகிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன். "இடைநீக்கத்திற்கு கால வரம்பு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த காலகட்டத்திற்குள் உரிய நடவடிக்கையை எடுக்காதது யார் தவறு? முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் துறை இது. அவர் பதில் அளிப்பாரா? தேர்தல் வரும்போது என்னவெல்லாம் சொன்னார்களோ அதற்கு மாறாகச் செயல்படுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி அமுதா அளித்த அறிக்கை ஏன் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது? அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு ஒன்பது மாதங்களாகியும் எந்த நடவடிக்கை முடிவும் ஏன் எடுக்கப்படவில்லை? இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டது. அது தொடர்பாக இப்போதுவரை அரசு பதிலளிக்கவில்லை. இதுபோல 1990களின் துவக்கத்தில் தூத்துக்குடியில் ஏடிஎஸ்பியாக இருந்த ஒரு அதிகாரி மீது சரியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான், அவர் தொடர் தவறுகளில் ஈடுபட்டுக் கொண்டே சென்றார். இந்த அதிகாரியும் அப்படி ஆகிவிடுவாரோ என்ற அச்சம் இருக்கிறது. அமுதா அளித்த அறிக்கை வெளியில் வரவில்லை, காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியில் வரவில்லை, ஆனால் இடைநீக்கம் குறித்த செய்திகள் மட்டும் கசிய விடப்படுகின்றன என்றால் என்ன அர்த்தம்? இந்த அரசு யார் பக்கம் இருக்கிறது?" எனக் கேள்வியெழுப்புகிறார் ஹென்றி திஃபேன். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பல்வீர் சிங் 2020ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றவர். தமிழ்நாடு பிரிவில் இடம்பெற்ற அவர், அம்பாசமுத்திரத்தில் பயிற்சி ஏஎஸ்பியாக பணியாற்றி வந்த காலகட்டத்தில் இந்த விவகாரம் வெடித்தது. https://www.bbc.com/tamil/articles/cqv6e46x152o
  10. ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது மீண்டும் அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் - கடும் எச்சரிக்கை Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 11:02 AM யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை இலக்குவைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலத்தடி சேமிப்பகங்கள் அவர்களின் ஏவுகணை மற்றும் கண்காணிப்பு நிலைகள் மீது எட்டுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அவசியமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக கூட்டறிக்கையொன்று தெரிவித்துள்ளது. செங்கடலில் பதற்றத்தை தணித்து இயல்புநிலையை உருவாக்குவதே எங்களின் நோக்கம் உலகின் மிகவும் முக்கியமான நீர்நிலையில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் உயிர்களையும் சுதந்திரமாக வர்த்தகம் நடைபெறுவதையும் பாதுகாக்க நாங்கள் தயங்கமாட்டோம் என்ற எங்களின் எச்சரிக்கையை ஹெளத்தி தலைமைத்துவத்திற்கு மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றோம் என அமெரிக்காவும் பிரிட்னும் தெரிவித்துள்ளன. யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள எட்டாவது தாக்குதல் இது .பிரிட்டனுடன் இணைந்து மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. யுஎஸ்எஸ் ஐஸ்னோவரிலிருந்து சென்ற விமானங்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளன. https://www.virakesari.lk/article/174589
  11. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை இந்த மாதம் முதல் 35,000 ரூபா முதல் 70,000 ரூபா வரை அதிகரிப்பதாக அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது. எவ்வாறாயினும், குறித்த மேலதிக கொடுப்பனவை வழங்காதிருப்பதற்கு தற்சமயம் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதன் அடிப்படையில், தாம் நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம், வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா மேலதிக கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென கோரி, தாதியர்கள், ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் என சுமார் 70இற்கும் அதிகமான மருத்துவ துறைசார் தொழிற்சங்கத்தினர் அண்மையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். https://thinakkural.lk/article/289123
  12. கமின்ஸ் தலைமையிலான 2023இன் ஐசிசி உலக டெஸ்ட் அணியில் திமுத் கருணாரட்ன 23 JAN, 2024 | 04:26 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவின் தைரியம் மிக்க அணித் தலைவர் பெட் கமின்ஸ் தலைமையில் பெயரிடப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக டெஸ்ட் அணியில் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரட்ன பெயரிடப்பட்டுள்ளார். ஐந்து அவுஸ்திரேலிய வீரர்களை உள்ளடக்கிய ஐசிசி உலக டெஸ்ட் அணியில் ஆரம்ப வீரர்களில் ஒருவராக திமுத் கருணாரட்ன பெயரிடப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகியவற்றில் அதீத திறமையை வெளிப்படுத்தியவர்களில் அதிசிறந்தவர்கள் இந்த அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரட்ன 2 சதங்கள், 3 அரைச் சதங்கள் உட்பட 60.8 என்ற சராசரியுடன் 608 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். நியூஸிலாந்துக்கு எதிராக நியூஸிலாந்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 அரைச் சதங்கள் குவித்ததன் மூலம் திமுத் கருணாரட்னவின் அபார ஆற்றல் வெளிப்பட்டது. இந்த அடிப்படையிலேயே ஐசிசி உலக டெஸ்ட் அணியில் அவர் பெயரிடப்பட்டுள்ளார். இதேவேளை, ஐசிசி உலக டெஸ்ட் அணித் தலைவராக பெட் கமின்ஸ் பெயரிடப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அவுஸ்திரேலியாவை சம்பியனாக வழிநடத்தியவர் பெட் கமின்ஸ் ஆவார். அத்துடன் இங்கிலாந்துடனான ஆஷஸ் தொடரையும் தக்கவைத்துக்கொள்ள அவுஸ்திரேலிய அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார். இவற்றைவிட கடந்த வருடம் வேகப் பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற மைல்கல் சாதனையையும் பெட் கமின்ஸ் தனதாக்கிக்கொண்டார். அவர் 11 போட்டிகளில் 42 விக்டெக்களை மொத்தமாக கைப்பற்றியிருந்தார். ஐசிசி உலக டெஸ்ட் அணி விபரம் உஸ்மான் கவாஜா (அவுஸ்திரேலியா), திமுத் கருணாரட்ன (இலங்கை), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), ட்ரவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), ரவிந்த்ர ஜடேஜா (இந்தியா), அலெக்ஸ் கேரி (விக்கெட் காப்பாளர் - அவுஸ்திரேலியா), பெட் கமின்ஸ் (தலைவர் - அவுஸ்திரேலியா), ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா), மிச்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா), ஸ்டுவட் ப்றோட் (இங்கிலாந்து). https://www.virakesari.lk/article/174632 ஐசிசி ஆடவர் ஒருநாள் அணியில் இந்தியர்கள் ஆதிக்கம் Published By: VISHNU 23 JAN, 2024 | 08:44 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் ஷர்மா தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். அந்த அணியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ரோஹித் ஷர்மாவுடன் ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, மொஹமத் சிராஜ், குல்தீப் யாதவ், மொஹமத் ஷமி ஆகிய இந்திய வீரர்கள் அறுவர் இந்த அணியில் இடம்பெறுகின்றனர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, கடந்த வருட 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகவும் அபாரமாக விளையாடி லீக் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியீட்டியது. அரை இறுதியிலும் இந்தியா வெற்றியீட்டியிருந்தது. ஆனால், இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2023ஆம் ஆண்டில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற ஷுப்மான் கில் (1584), விராத் கோஹ்லி 1377), ரோஹித் ஷர்மா (1255) ஆகிய மூவரும் துடுப்பாட்ட வரிசையில் முதல் நால்வரில் இடம்பெறுகின்றனர். கடைநிலையில் சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் (49 விக்கெட்கள்), வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமத் சிராஜ் (44), மொஹமத் ஷமி (43) ஆகிய இந்திய பந்துவீச்சாளர்கள் மூவர் இடம்பெறுகின்றனர். இந்த அணியில் இடம்பெறும் மூவரைத் தவிர மற்றைய அனைவரும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியவர்களாவர். ஐசிசி ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணி ரோஹித் ஷர்மா (தலைவர் - இந்தியா), ஷுப்மான் கில் (இந்தியா), ட்ரவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), விராத் கோஹ்லி (இந்தியா), டெரில் மிச்செல் (நியூஸிலாந்து), ஹென்றிச் க்ளாசென் (தென் ஆபிரிக்கா), மார்கோ ஜென்சென் (தென் ஆபிரிக்கா), அடம் ஸம்ப்பா (அவுஸ்திரேலியா), மொஹமத் சிராஜ் (இந்தியா), குல்தீப் யாதவ் (இந்தியா), மொஹமத் ஷமி (இந்தியா) https://www.virakesari.lk/article/174649
  13. பெலியத்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம்: மேலதிக தகவல்கள் பொலிஸாரினால் அறிவிப்பு நேற்று இடம்பெற்ற பெலியத்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புள்ளதா என பொலிஸார் விசாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்காலையில் இடம்பெற்ற மூவர் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூட்டு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு தங்காலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள், வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக டிபென்டரில் பயணித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. பெலியத்த வெளியேறும் இடத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறிய அவர்கள், சிற்றுண்டி சாப்பிடுவதற்காக வீதியோரம் நின்றிருந்தபோது, பிராடோ ரக ஜீப்பில் வந்த கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. டிஃபென்டரின் சாரதி தனது இருக்கையிலேயே இறந்துவிட்டார், ஏனைய நான்கு பயணிகள் வாகனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள கடைக்குள் ஓடினார்கள், அங்கு அவர்கள் சந்தேக நபர்களால் துரத்திச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டனர். காயமடைந்த ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ‘அபே ஜனபல பக்ஷய’ தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதுடன், 2022 தங்காலை கொலைச் சந்தேக நபர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடங்குவார். மறைந்த சமன் பெரேராவின் வீட்டில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் தகவலின் பேரில் நேற்று பொலிஸார் சோதனையிட்ட போதிலும் ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. https://thinakkural.lk/article/289068
  14. சமூக ஊடகங்களில் ஆபாசபடங்கள் பல மடங்காக அதிகரிப்பு; சைபர் குற்றங்களும் மிகவும் அதிகம்; இதற்காகத்தான் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் - டிரான் அலஸ் Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 02:37 PM கடந்த வருடம் சமூக ஊடகங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேலான நிர்வாணப்படங்கள் பரிமாறப்பட்டன என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 8000 சைபர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 2024 இன் முதல்வாரங்களில் சமூக ஊடகங்களில் 500க்கும் மேற்பட்ட ஆபாசபடங்களை தங்களிடையே பரிமாறிக்கொண்டுள்ளனர். கடந்த வருடம் 6690 இணையவழி குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்த புள்ளிவிபரங்கள் சிஐடியினரால் பதியப்பட்டவை மாத்திரமே வெளிவராத சம்பவங்கள் பல இருக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தையும் கிளர்ச்சிகள் இனமத ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குழப்பங்களை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டவை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை பயன்படுத்தி எவரையும் பழிவாங்கும் நோக்கமில்லை எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/174613
  15. பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் , அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்களை தெரிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் , குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரம் ஆறாம் தரத்திற்கு மாணவகளை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு நடைபெறும் எனவும் குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த. மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் (உயர்தரம் உட்பட) பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், அந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின், அதிபர்களின் நேர்காணலின் மூலம் மாணவர்களின் பட்டியலை கல்வி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/289175
  16. 22 ஜனவரி 2024 புதுச்சேரியில் மூன்று அடுக்கு மாடி கட்டடம் சரிந்து விழுந்தது. கட்டி ஒரு மாதமே ஆன நிலையில், புதுமனை புகுவிழா கூட நடைபெறவில்லை. புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி. கணவர் ரங்கநாதன் உயிரிழந்த நிலையில், இவர் தனது மகள் சித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள் அதே பகுதியில் அரசு இலவசமாக கொடுத்த பட்டா இடத்தில் மூன்று மாடி வீடு கட்டி வந்தனர். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிந்த நிலையில், வருகின்ற 26 ஆம் தேதி வீட்டின் புதுமனை புகுவிழா நடத்த சாவித்திரி திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே அந்த வீட்டின் அருகே செல்லும் வாய்காலுக்கு சுவர் கட்டும் பணி கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்திரி வீட்டருகே வாய்கலுக்கு சுவர் கட்டுவதற்காக ஆழமாக பள்ளம் எடுக்கப்பட்டது. அப்போது புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி வீடு லேசாக சாய்ந்து காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சாவித்திரி இதுதொடர்பாக வாய்க்கால் சுவர் கட்டும் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டு வந்தார். இந்நிலையில் இன்று வீடு மிக மோசமாக சாய்ந்தவாறு காணப்பட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர், ஆகியோர் வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய வந்து பேசிகொண்டிருந்தபோது வீடு திடீரென முற்றிலுமாக சரிந்து விழுந்தது. அப்போது அங்கு இருந்தவர்கள் ஓட்டம் பிடித்ததால் யாருக்கும் உயிர் சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை. தொடர்ந்து வீடு இடிந்து விழுந்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவவும், அதற்கு பின்னரே வீடு அதிக உயரத்தில் தரமன்றி கட்டப்பட்டதால் சரிந்து விழுந்ததா? அல்லது வாய்க்காலுக்கு பள்ளம் எடுத்ததால் விழுந்ததா என தெரியவரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/czvqlzee1jro
  17. மதுபோதையில் குழப்பம் விளைவித்த மக்ஸ்வெல் வைத்தியசாலையில் அனுமதி; விளக்கம் கோருகின்றது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 10:33 AM அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல் ஹோட்டலொன்றில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மதுபோதை காரணமாக இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்தே மக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிலெய்டில் பிரெட்லீ கலந்துகொண்ட இசைநிகழ்ச்சியொன்றை பார்வையிடுவதற்கு மக்ஸ்வெல் சென்றிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. என்ன நடந்தது என்பது குறித்த விபரங்கள் முழுமையாக வெளியாகாத போதிலும் அம்புலன்ஸ் அழைக்கப்பட்டது மக்ஸ்வெல் மருத்துவமனைக்கு அதில் அழைத்துசெல்லப்பட்டார் என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. மெல்பேர்ன் ஸ்டார் அணியின் பிபிஎல் போட்டிகளின் பின்னர் மக்ஸ்வெல்; அடிலெய்டில் பிரபலங்களின் கோல்ப் போட்டிகளிற்காக தங்கியிருந்தார். இதேவேளை மேற்கிந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணியிலிருந்து கிளென் மக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளார். எனினும் இதற்கும் அடிலெய்ட் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. வாரஇறுதியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அறிந்துள்ளோம் மேலதிக தகவல்களை கோரியுள்ளோம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் தெரிவித்துள்ளது. தலைசுற்றுபோன்ற ஒன்றினால் மக்ஸ்வெல் பாதிக்கப்பட்டாரா என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாடடுச்சபையின் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்ஸ்வெலிற்கு ஏற்கனவே இவ்வாறான பாதிப்பு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடந்த சம்பவம் குறித்து மக்ஸ்வெல் அவமானமடைந்தவராக உணர்கின்றார் என அவரது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அவர் சனிக்கிழமை வலி மற்றும் வேதனையால் பாதிக்கப்பட்டார் மீண்டும் மெல்பேர்னிற்கு சென்று அவர் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார் என முகாமையாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/174580
  18. பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஜனவரி மாதம் முதல் 2000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் ஊடாக இக்கொடுப்பனவை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதுவரையில் பயனடைந்த 16,146 பேருக்கு, அதாவது பிரிவேனா, சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் என 16,146 பேருக்கு இந்தப் பணம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/289025
  19. இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்த ஆண்டு கண்டியில் கிளை வளாகத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் ஐஐடிகளின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும், அதே நேரத்தில் புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பரில் 2024 வரவு -செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சினால் கல்வியாளர்கள் குழுவொன்றை மெட்ராஸ் ஐஐடிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார். வளாகத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் இலங்கைக்கு ஐஐடியில் இருந்து குழு வருவதற்கு முன்னதாக இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள். ஐஐடி மெட்ராஸ் குழு இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அதன் பாடநெறிகள் மற்றும் கண்டி கிளை வளாகத்தை நிறுவுவதற்கான செயல்முறையைத் தொடங்கும் அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் செய்து ஐஐடி-மெட்ராஸுடன் இலங்கையில் வளாகத்தை நிறுவுவது குறித்து கலந்துரையாடியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விஜயத்தின் போது அமைச்சர் பிரேமஜயந்த ஐஐடி மெட்ராஸ் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும். https://thinakkural.lk/article/289063
  20. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் அரசாங்கத்தை மேலும் ஏதேச்சதிகார தன்மை வாய்ந்ததாக மாற்றும் - எரான் Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 10:33 AM நாடாளுமன்றத்தில் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மக்களின் பேச்சுசுதந்திரத்திற்கு பாரிய அடியாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பெண்கள் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதே இந்த சட்டத்தின் நோக்கங்களில் ஒன்று என அரசாங்கம் தெரிவிக்கின்றது எனினும் அந்த சட்டமூலத்தில் பெண்கள் சிறுவர்கள் என்ற வார்த்தையே இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பொலிஸார் நீதிமன்ற உத்தரவின்றி பத்திரிகையாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் மொபைல்போன்களை பறிமுதல் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டமூலத்தில் ஜனநாயக விரோத அம்சங்கள் உள்ளன இந்த சட்டமூலம் மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் எனவும் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் நேரடிகண்காணிப்பின் கீழ்; ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனையையும் இந்த சட்ட மூலம் முன்வைக்கின்றது இதுவரை காலம் நீதிமன்றங்கள் அனுபவித்த அதிகாரங்கள் எதிர்காலத்தில் இந்த ஆணைக்குழுக்களிற்கு வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் அரசாங்கத்தை மேலும் அதிகளவு ஏதேச்சாதிகார தன்மை வாய்ந்ததாக மாற்றும் மக்களின் உரிமைகளிற்கு இது எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/174583
  21. தினேஷ் ஷாப்டரின் தொலைபேசி சிம் அட்டையை மனைவியிடம் ஒப்படைப்பது தொடர்பில் நீதிவானின் தீர்மானம்! Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 10:30 AM கொலை செய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்க தொலைபேசியின் சிம் அட்டையை அவரது மனைவியிடம் ஒப்படைப்பது தொடர்பான கோரிக்கை அரசாங்க இராசாயன பகுப்பாய்வு பிரிவினரின் அறிக்கை கிடைத்த பின்னர் பரிசீலிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷண கெக்குணுவெல தெரிவித்துள்ளார். தனது கணவர் கொல்லப்படுவதற்கு முன்னர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்தைக் காட்டும் புதிய சிம்கார்டைப் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தினேஷ் ஷாப்டரின் மனைவி விடுத்த கோரிக்கை தொடர்பிலேயே நீதிவான் மேற்கண்டவாறு தெரிவித்தார். தினேஷ் ஷாஃப்டரின் கொலை தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் எனவே, அவரது மனைவிக்கு புதிய சிம் கார்டை வழங்கும் கோரிக்கையை நிராகரிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்தபோதே நீதிவான் இந்த அறிவிப்பை விடுத்தார். https://www.virakesari.lk/article/174582
  22. யாழ். நெடுந்தீவில் 06 தமிழக மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 10:01 AM யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 தமிழக மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த கடற்படையினர், இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்டு இருந்த தமிழக மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களின் இரண்டு படகுகளையும் மீட்டு இருந்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/174577
  23. கொழும்பில் சிசிரிவி கமரா மூலம் கண்காணிக்கப்பட்ட 125 போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எச்சரிக்கை! Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 11:51 AM கொழும்பிலுள்ள வீதிகளில் நேற்று திங்கட்கிழமை (22) சிசிரிவி கமரா மூலம் கண்காணிக்கப்பட்ட 125 போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சிசிரிவி கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னோடித் திட்டம் நேற்று ஆரம்பமானது. அதன்படி, கொழும்பில் சிசிரிவி கமரா மூலம் 125 போக்குவரத்து விதிமீறல்கள் இனங்காணப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட நடவடிக்கையாக அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இனங்காணப்பட்ட விதி மீறல்களில் பிரதானமாக பாதையை மாற்றியமை மற்றும் தரிப்பு பகுதிகளில் நிறுத்தாமல் வாகனம் செலுத்தியமை போன்ற தவறுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/174596
  24. பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை : பொலிஸாரால் வெளிப்படுத்தப்பட்ட மேலதிக தகவல்கள்! Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 11:24 AM தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை நுழைவாயிலுக்கு அருகில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பெலியத்த பொலிஸார் வெளியிட்டுள்ளனர். திங்கட்கிழமை (22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்தச் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் வெள்ளை நிற டிபென்டரில் சென்று கொண்டிருந்தபோது காலை உணவுக்காக டிபென்டர் நிறுத்தப்பட்டபோதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பச்சை நிற வாகனத்தில் வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சமன் பெரேரா உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சமன் பெரேரா, கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் தங்காலை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்த எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா அம்பலாங்கொடையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளராவார். ரி-56 ரக துப்பாக்கியே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/174592
  25. 2023 க்கான ஐ.சி.சி. மகளிர் ரி20 அணியின் தலைவியாக சமரி அத்தபத்து Published By: VISHNU 22 JAN, 2024 | 05:33 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அணிக்கு இலங்கையின் சமரி அத்தப்பத்து தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டம், பந்துவீச்சு அல்லது சகலதுறைகளில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்கள் ஐசிசி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு அணியை ஐசிசி இன்று திங்கட்கிழமை (22) அறிவித்தது. கேப் டவுனில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 50 பந்துகளில் 68 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் சமரி அத்தப்பத்து 2023க்கான தனது கிரிக்கெட் பருவகாலத்தை சிறப்பாக ஆரம்பித்தார். அவரது துடுப்பாட்ட உதவியுடன் தென் ஆபிரிக்காவை முற்றிலும் எதிர்பாராத விதமாக 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டிருந்தது. அவர் கடந்த வருடம் 130.91 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 470 ஓட்டங்களை ரி20 கிரிக்கெட் போட்டிகளில் குவித்திருந்தார். இதில் 15 சிக்ஸ்கள் அடங்கியிருந்தன. நியூஸிலாந்துக்கு எதிராக கொழும்பில் வருடத்தின் மத்திய பகுதியில் நடைபெற்ற ரி20 போட்டி ஒன்றில் சமரி அத்தப்பத்து 47 பந்துகளில் 80 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 141 ஓட்டங்களை 10 விக்கெட்களும் மீதமிருக்க இலங்கை கடந்து அபார வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்ற ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை வெற்றி பெறுவதற்கு சமரி அத்தப்பத்து பெரும் பங்காற்றி இருந்தார். ஐசிசி மகளிர் ரி20 கிரிக்கெட் அணி விபரம் (துடுப்பாட்ட வரிசையில்) சமரி அத்தபத்து (தலைவர் - இலங்கை), பெத் மூனி (விக்கெட் காப்பாளர் - அவுஸ்திரேலியா), லோரா வுல்வார்ட் (தென் ஆபிரிக்கா), ஹேய்லி மெத்யூஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), நெட் சிவர் ப்ரன்ட் (இங்கிலாந்து), அமேலியா கேர் (நியூஸிலாந்து), எலிஸ் பெரி (அவுஸ்திரேலியா), ஏஷ;லி கார்ட்னர் (அவுஸ்திரேலியா), தீப்தி ஷர்மா (இந்தியா), சொஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), மெகான் ஷ_ட் (அவுஸ்திரேலியா) https://www.virakesari.lk/article/174551 2023க்கான ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் அணியின் தலைவர் சூரியகுமார் யாதவ் Published By: VISHNU 22 JAN, 2024 | 07:14 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அணிக்கு இந்திய அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். இதற்கு அமைய ஐசிசி மகளிர் மற்றும் ஆடவர் ரி20 தெரிவு அணிகளுக்கு உப கண்டத்தைச் சேர்ந்த இருவர் முதல் தடவையாக பெயரிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஐசிசி மகளிர் ரி20 கிரிக்கெட் அணிக்கு இலங்கையின் சமரி அத்தபத்து தலைவராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் அணித் தலைவராக பெயரிடப்பட்டுள்ள சூரியகுமார் யாதவ், கடந்த வருடம் 17 இன்னிங்ஸ்களில் 733 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 2 சதங்களும் 5 அரைச் சதங்களும் அடங்குவதுடன் அவரது ஸ்ட்ரைக் ரேட் 155.95 ஆகும். கடந்த வருடம் அதிசிறந்த ஐசிசி ரி20 கிரிக்கெட் வீரர் விருதை வென்றெடுத்த சூரியகுமார் யாதவ் இந்த வருடமும் அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குகிறார். வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கைக்கு எதிராக 36 பந்துகளில் 51 ஓட்டங்களையும் 51 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 112 ஓட்டங்களையும் குவித்த யாதவ், வருட இறுதியில் இந்திய அணியின் பதில் அணித் தலைவராக செயற்பட்டார். ரோஹித் ஷர்மா ஓய்வெடுத்ததால் அவரிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வருட இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 42 பந்துகளில் 80 ஓட்டங்களையும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 36 பந்துகளில் 56 ஓட்டங்களையும் 56 பந்துகளில் 100 ஓட்டங்களையும் குவித்திருந்தார். 2023ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் அணி விபரம் துடுப்பாட்ட வரிசையில் : யஷஸ்வி ஜய்ஸ்வால் (இந்தியா), ஃபில் சோல்ட் (இங்கிலாந்து), நிக்கலஸ் பூரண் (விக்கெட் காப்பாளர் - மேற்கிந்தியத் தீவுகள்), சூரியகுமார் யாதவ் (தலைவர் - இந்தியா), மார்க் சப்மன் (நியூஸிலாந்து), சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), அல்பேஷ் ராம்ஜனி (உகண்டா), மார்க் அடயா (அயர்லாந்து), ரவி பிஷ்னோய் (இந்தியா), ரிச்சர்ட் ங்கராவா (ஸிம்பாப்வே), அர்ஷ்தீப் சிங் (இந்தியா). https://www.virakesari.lk/article/174558

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.