Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இல்லை, நன்மைக்காக கொண்டுவரப்பட்ட தாக அறியபடுகின்ற இத்திட்டம் சிங்களத்தின் இனவாதத்திற்கு மறைமுகமாகவும் உதவியது. அதாவது, தமிழர் தாயகத்தில் நடைபெற்று வந்த சிங்களக் குடியேற்றத்தை இது மேலும் துரிதப்படுத்தியது எனலாம். எப்படியெனில், இச்சட்டம் கொண்டுவரப்பட்டதால் பெருந்தோட்ட முதலாளிகள் முதல் நிலதாரிகளின் மேலதிக நிலங்கள் வரை அரச மயப்படுத்தப்பட்டன என்பதெல்லாம் யாவருமறிந்தது. இத்தால் அரை-நிலப்பிரபுத்துவ விளைச்சல் சமூகத்தில் இருந்து உழைப்பாளர்கள் விடுவிக்கப்பட்டனர்; சுதந்திரமான கமக்காரர்களாக மாறினர். இவர்கள் கமம் செய்வதற்கு நிலங்கள் வழங்கப்பட்டன. பலருக்கு எங்கே வழங்கப்பட்டன? தமிழீழத்தின் எல்லை ஊர்களில்..... அங்கிருந்த ஆட்களற்ற பெரும்பாலான காணிகளுக்குள் இவர்கள் குடியேற்றப்பட்டனர். இதுவும் சிங்களக் குடியேற்றத் திட்டத்திற்காக பாவிக்கப்பட்டது! (இந்தியாவிலும் இலங்கையிலும் இத்திட்டம் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது)
  2. தெரியாதே. அப்போதைய மட்டு-அம்பாறை கட்டளையாளர் கருணா. திருமலையின் கட்டளையாளர் பதுமன். இருவரில் முன்னையவர் வஞ்சகம் செய்து சிங்களத்தோடு இணைந்து கொண்டார். பின்னையவர் கருணாவோடு சேர்ந்து வஞ்சகம் செய்து புலிகளிடம் பிடிபட்டார். பிறகு சிங்களப் படைத்துறையிடம் சென்று சரணடைந்தார், 2009இல். 2013இல் விடுதலை ஆனதாக ஏதோ செய்திகள் உலவுகின்றன. பொய்மெய் தெரியாது.
  3. இனத்திற்கு இந்தியாவோடு சேர்ந்தும் (அமிர்தலிங்கம்) சிங்களத்தோடு சேர்ந்தும் (நீலன்) சவக்குழி குழிதோண்டியோருக்கு புலிகள் சவக்குழி தோண்டினர். இனத்தை சிதைக்க நினைத்தவர்களை வேரோடு பிடுங்கி எறிந்தனர் - என்றெல்லாம் எழுத ஏலும். ஆனால் அது வேண்டாம். நீலன், நீலன் என்று ஒப்பரி வைக்கிறீர்கள்... அந்த நீலன் தமிழர் அரசியலுக்கு செய்த ஒரு நல்ல விடையத்தை தானுமோ எழுதுங்கோவன், பாப்பம். குபீர்... உங்களுக்கு நீங்களே வெள்ளைப் பெயின்ரை வாளியோட தூக்கி ஊத்துங்கோ.... அப்பதான் சரியா இருக்கும்😂
  4. ஓம்... 700-800 வரையான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் காவல்துறையினர் சரணடைந்தனர். இவர்களில் சிங்களம் மற்றும் முஸ்லிம் காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழ் காவல்துறையினரில் பெரும்பாலானோர் தமிழீழ காவல்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். சில சிங்கள மற்றும் முஸ்லிம் காவல்துறையினர் தப்பித்ததாகவும் கூறப்படுகிறது.
  5. படகில் வெடிமருந்தைக் கொண்டுசென்று இலக்கின் மீது மோதியிடிக்கும் தொழினுட்பம் இரண்டம் உலகப்போரில் தான் ஆரம்பமானது. அதை முதன் முதல் வேற்றிகரமாக பாவித்தவர்கள் இத்தாலியர்கள் (https://en.wikipedia.org/wiki/MT_explosive_motorboat) - அடைப்படை அறிதலுக்கு பாவிக்கவும். (புலிகள் தாமாக புதுப்புனைந்தது/வடிவமைத்தது "சாச்சர்" (Suicide vest/belt/jacket or whaterver) மட்டுமே) அதே!
  6. OMG🙀🙀 திரைப்படத்தில் யாரும் எதிர்பாராத "ஒரு திரிப்பம்"
  7. எதிர்கருத்தாளர்கள் இல்லாமல் இருந்த நிலையை இப்போது இருவர் (Cruso & Isaland) போக்குகின்றனர். இந்நிலை தொடரட்டும். அப்பதான் மறந்து போன பல விடையங்களை திரும்பக் கிண்டலாம். கருத்துக்களமும் கொஞ்சம் பம்பலாக இருக்கும்.
  8. என்னே! நீலனுக்கு இத்தனை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளா...
  9. யார் அந்தக் காவாலி?...... விஜேந்திரன் என்ற பெயரில் வாழ்ந்து வந்த அப்துல் ரகுமான் என்பவராவார்.... 🔥🔥🔥
  10. தென் கொரியர்கள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களை மதிப்பதில்லை. வெள்ளையர்களையும் தம்மவர்களையுமே உயர்வாக நினைப்பர். இப்போதெல்லாம் தென்கொரியா சென்ற இந்தியர்கள் இன்ஸ்ராகிராமில் இதைக் கூறி வருத்தப்படுகின்றனர். மேலும் தாங்கள் கொரிய மொழி கதைத்தால் அதை அவர்கள் கேவலப்படுத்துவதாகவும் கூறி வேதனைப்பட்டனர். கோராவிலும் இது பற்றி பட்டறிவுப் பகிர்வுகள் உண்டு.
  11. https://www.un.org/securitycouncil/sanctions/1267/aq_sanctions_list/summaries இல்லை இல்லை. ஐநா கூட சில அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என்று பட்டியலிட்டுள்ளது... ஆனால் இதற்குள் புலிகளுமில்லை, கமாஸுமில்லை. அந்தக்காலத்திலிருந்தே தான் இரு அமைப்புகளுமில்லை.
  12. கமாஸை பயங்கரவாத இயக்கமில்லை என்று ஐநா அறிவித்துள்ளது... அப்ப இனி கமாஸிற்கு பரந்துபட்ட திறந்த ஆதரவு கிடைக்கும்!
  13. தரைக்கரும்புலி மேஜர் ஆதித்தன் 'ஆதித்தன் கரும்புலி வீணை - அவன் நரம்பெல்லாம் தலைவனின் ஆணை!' 'அன்னார் இலகு தகரி எதிர்ப்பு ஆய்தத்தால், "லோ", குறிவைக்கிறார்' இந்தப் படிமத்தை முதன்முதலில் 2005/2006 ஆம் ஆண்டு நாட்காட்டியில் கண்டனான், தமிழீழத்தில். ஆண்டு சரியான ஞாபகம் இல்லை. அதே நாட்காட்டியின் இன்னொரு மூலையில் ஒரு இயக்க அக்கா பெரிய குறட்டாலை கம்பி வெட்ட அவக்குப் பக்கத்திலை இன்னொரு இயக்க அக்கா படுத்து இருப்பா. அப்பிடியும் ஒரு படிமம் அதிலை இருந்தது. தரைக்கரும்புலி மேஜர் ஆதித்தன் பயிற்சியின் போது
  14. பின்னாளில் மூன்று உள்ளிணைப்பு மின்னோடி (IBM) கொண்ட வேவ் ரைடர் சண்டைப்படகிற்கு இவரது நினைவாக "றோசா Rosa" என்று பெயர் சூட்டப்பட்டது.
  15. வேலாயுதம் வசந்தி என்ற இயற்பெயர் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தமிழீழ மண் மீட்புப் போரிலே இணைந்து கொண்டார். விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறப்பு பயிற்சிகளை திறமையாக செய்து முடித்தார்.மகளிர் நாங்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற செயல் வடிவம் மூலம் பயிற்சி ஆசிரியர்களுக்கு பல முறை நிரூபித்துக் காட்டினார். மகளிர் பிரிவில் இவரது அசாத்தியமான திறமை தேசியத் தலைவரின் பார்வைக்கு அறிவிக்கப்படுகிறது.அந்த சூழ்நிலையில் கடற்புலிகளின் கப்பலுக்கான விநியோக நடவடிக்கைக்கு மகளிர் அணி கட்டாயமாக பங்கு கொள்ள வேண்டிய தேவை இருந்தது. இந்த விநியோக நடவடிக்கைக்காக கடற்புலிகளின் சிறப்பு தளபதியால் லெப் கேணல் றோசாவை உள்வாங்க சிறப்பு தகமைப் பரீட்சை வழங்கப்பட்டது. இந்த தகமைப் பரீட்சையில் அதிகூடிய திறமையை வெளிப்படுத்தி அந்த கப்பல் விநியோக அணிக்கு பொறுப்பாளராக சிறப்பு தளபதியால் நியமிக்கப்பட்டார். லெப் கேணல் றோசாவாலே போராட்ட வரலாற்றில் மகளிர் அணி முதன்முதலாக வெற்றிகரமாக கப்பலுக்கான விநியோக நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு சாதனைத் தடம் பதித்தார். இவருடைய திறமை பல சண்டைக்களங்களில் கடற்பரப்பில் ஈடுபடுத்தியது. ஒரு தொகுதி இராணுவ தளபாடங்கள் இடம்மாற்றும் நடவடிக்கை ஒன்றில் 18-04-1998 அன்று திருமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இவரை இந்நாளில் நெஞ்சில் நிறுத்தி இவரோடு வீரச்சாவடைந்த அனைத்து மாவீர மறவர்களுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம். உங்கள் விடுதலை வேட்கை என்றும் எங்களை வழிநடத்தி போராட்டப் பாதையில் வீறுகொண்டு பயணிக்க வழிவகுக்கும். https://www.tamilarul.net/2022/04/18_01976124944.html
  16. புலிகள் யாரென எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்தியம்பும் பாடல் பாடலிற்கான கொழுவி: வேங்கை மாவீரரெல்லாம் பாடலாசிரியர்: கோ.கோணேஸ் Composed by: சிறீகுகன், 1997-1998, Mangkulam Singer: எஸ். ஜி. சாந்தன் "வேங்கை மாவீரரெல்லாம் சரித்திரவான்கள்" எனத் தொடங்கும் இப் பாடலின் வரிகள்: பல்லவி: வேங்கை மாவீரரெல்லாம் சரித்திரவான்கள், வேலுப்பிள்ளை பிரபாகரன் சொல் நடந்தார்கள்! அனுபல்லவி தம் இனிய நாளையெல்லாம் தந்தார் அன்று - அதில் நாளை எங்கள் சந்ததிகள் வாழ்வாரென்று! சரணம்: மாண்டவர்கள் மீண்டுமினிப் பிறப்பதில்லையே - எங்கள் மாவீரர் புகழ் மண்ணில் இறப்பதில்லையே! தமக்காக இவர்கள் என்றும் வாழ்ந்ததுமில்லை - இவர் தாள்போற்ற மறுப்பவனும் தமிழனுமில்லை! பொய், களவு, மது, மாது, புகை, சூது - என்றும் புன்செயல்கள் இல்லை இவர் ஒருபோதும். பொன் பொருளில் ஆசையில்லை இவர்களுக்கு புகழ் கொடுத்தார் ஈன்று பெற்ற தாய்களுக்கு! தன்மானத் தமிழர்களாய் பிறந்தார்கள் - ஏற்றத் தாழ்வின்றி ஒரு குலமாய் சிறந்தார்கள். உண்மையான இறைவன் இவர்கள் தானே - எங்கள் உரிமைக்காய் ஈடுவைத்த மறவர்கள் தானே!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.