Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. இதில் விஜய் எதிர்ப்பு எங்கே வருகிறது?? சரி நீங்கள் ஒரு உதாரணம் சொல்லுங்கோவன்....
  2. எனது பிறந்த நாளுக்கு 500 பேர் வருவார்கள் என்று மண்டபக்காரரிடம் ஒப்பந்தம் செய்து மண்டபத்தை பெற்றபோது அவர்கள் நாலைந்து பாதுகாவல்காரர்களை போடுகிறார்கள். நான் தாய்மார்கள் குழந்தைகள் உட்பட ஐயாயிரம் பேரை பிறந்த நாள் மண்டபத்திற்கு அழைக்கிறேன். சன நெருசலால் என் வீட்டிலேயே பலர் இறந்தும் காயமடைந்தும் விட்டால் எனது குடும்பம் மண்டபக்காரனையும் அவர்கள் போட்ட பாதுகாவலர்களையுமா கேள்வி கேட்கும்???
  3. அனுமதி 10 ஆயிரம் பேருக்கு. ஆனால் காவல்துறையினர் 20 ஆயிரம் பேர் வரக் கூடும் என்று தகவல் அறிந்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததாகவும் அதையும் மீறி சனம் கூட நெருசல் ஏற்பட விஜய் தான் காரணம் என்றும் அந்த தாமதத்தை அவர் வேண்டும் என்றே தனது செல்வாக்கை நிரூபிக்க செய்ததாகத் தான் இவர்கள் மட்டுமல்ல நீதிமன்றம் மற்றும் அனைத்து தமிழக ஊடகங்களும் சொல்கின்றன. இங்கே பல ஊர்வலங்கள் மற்றும் மாநாடுகள் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்கிறோம். காவல்துறை மற்றும் அரசா பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை செய்கிறது?????
  4. தாமதமாக வந்த விஜய் தான் காரணம்.. https://www.facebook.com/share/v/14PdFXjdaUp/
  5. தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஈழத்தைச் சேர்ந்த ஒரு சமூக அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார்,நடிகர் விஜய்யை நேர்காணல் செய்வதற்காக அவருடைய அலுவலகத்தோடு கதைத்து ஒரு நேரத்தை எடுத்திருக்கிறார்.குறிப்பிட்ட நேரத்துக்கு அங்கே போனபோது அங்கே விஜயினுடைய தகப்பன் இருந்திருக்கிறார். விஜய்க்கு பதிலாக அவர்தான் பதில் கூறுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நேர்காணல் விஜயின் பெயரில்தான் வரும். விஜயின் படங்கள்தான் காணப்படும். அந்த அலுவலகத்தில் நாலைந்து பேர் அமர்ந்திருந்து விஜய்யின் இலக்கத்துக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதையும் மேற்படி செயற்பாட்டாளர் கவனித்திருக்கிறார்.அவர்கள் அனைவரும் விஜய்யின் குரலில் விஜய்யின் பாணியில் விஜய்யைப் போலவே கதைக்கிறார்களாம்.அழைப்பை எடுப்பவர்கள் தமக்கு விஜய்தான் பதில் கூறுகிறார் என்று நம்புவார்கள். மேலும் நமது ஈழத்துச் செயற்பாட்டாளர் அங்கிருந்த வேளையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் கௌரவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் யார் என்றால் விஜய்க்கு தன்னுடைய அன்பை தெரிவிப்பதற்காக தன்னுடைய சுண்டு விரலை அறுத்து கூரியரில் அனுப்பியவர்.அவரை அங்கு அழைத்து கௌரவித்திருக்கிறார்கள்.அப்பொழுது நமது செயற்பாட்டாளர் விஜய்யின் தகப்பனிடம் கேட்டிருக்கிறார்…”இது போன்ற விடயங்களை நீங்கள் புரொமோட் பண்ணுவது சரியா?” என்று. அதற்கு விஜய்யின் தகப்பன் சொன்னாராம், அப்படிச் செய்ய வேண்டும். ஏனென்றால் விஜய்யின் படத்தை ஒரு முறை பார்ப்பவர் அடுத்தடுத்த படங்களையும் தொடர்ந்து பார்க்குமாறு தூண்ட வேண்டும். அப்படித் தூண்டினால்தான் படங்கள் ஓடும், அதற்கு இதுபோன்ற புரமோஷன்கள் தேவை என்று.அதாவது ரசிகரைப் பக்தராக மாற்றுவது. அதற்கு ரசிகர் செய்யும் தியாகங்களைப் புரமோட் பண்ணுவது. இது நடிகர் விஜய்யை பேட்டி காணச்சென்ற ஈழத்துச் செயற்பாட்டாளர் ஒருவருடைய தொகுக்கப்பட்ட அனுபவம்.. https://www.facebook.com/share/1CyQMi7DN3/
  6. வியாபாரம் என்று வந்து விட்டால் எதையும் செய்யலாம் என்று சிலர் முயல்கிறார்கள். அதிஷ்டவசமாக அவர்கள் தான் வெல்கிறார்கள். அநியாயமாக அவர்கள் தான் இவ்வுலகை ஆள்கிறார்கள். இதில் தமிழர்களும் இருந்து விட்டு போகட்டுமே. அவர்களையும் நம் பாதைக்கு கல் போட பயன்படுத்தலாம் என்பது தான் சரியாக இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் வீக்கம் வெடித்து சிதறலாம்.
  7. நான் lyca, Lebara என்பதை குறிப்பிட்டதற்கு காரணம் அவர்கள் எனக்கு பக்கத்தில் இருந்து வீங்கியவர்கள் என்பதால் மட்டுமே.
  8. இங்கே சிக்கல் என்னவென்றால் விமர்சனத்தை எதிர்பார்த்து தான் அந்த அம்மா வீட்டுச் செய்தியை ஊர்ச்செய்தியாக்கினார். ஆனால் என்ன தனியே அவா எதிர் பார்த்த வகையான விமர்சனம் வரவில்லை. புதுமை என்று கொண்டு வந்து அவாவுக்கு ஏற்ற விமர்சனங்களை எதிர்பார்ப்பதும் அக்கா இன்னும் பல மைல் தூரம் பின்தங்கிய நிற்கிறா என்று மட்டும் தெரிகிறது.
  9. இவர்கள் போன்ற திடீர் வீக்க நபர்கள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. Lyca, Lebara உட்பட.
  10. நான் நினைக்கிறேன் விஜய் வந்து சீமானின் வாக்கு வங்கியை முன் தள்ளி செய்திருக்கிறார். ஒரு அரசியல் கட்சி, அதன் தலைமை, அதன் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதை உணர்த்துவதனூடாக எப்படி இருக்க வேண்டும் என்று சீமானின் தலைமை அதன் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மற்றும் மக்கள் என்பதை உதாரணமாக்கி செல்கிறார். நன்றி வணக்கம் விஜய்.
  11. இது போன்று தமிழர்களை கையாள முடிவது தான் ஜேவிபியின் இன்றைய உச்ச நிலைக்கு காரணம். சிங்களவருக்கு ஒரு முகமும் தமிழர்களுக்கு ஒரு முகமும் காட்டி வசியம் செய்து கொண்டே தமிழர்களுக்கு ஏதாவது சிறிய நிம்மதி கிடைத்தால் கூட தமது சுய சிங்கள இனவாதத்தை முழுமையாக தமிழர்கள் மீது மட்டும் கக்க நசிக்க தயங்கியதே இல்லை.
  12. வழக்கை விசாரித்து முடித்து வையுங்கள் என்று வழக்கிட்டவரே சீமான் தான். எனவே தன்னிடம் எதை கேட்டாலும் செய்ய தயாராகவே வழக்கை தொடர்ந்து இருப்பார். போன தடவை விஜயலட்சுமி முரண்டு பிடித்து தொடர விரும்பினார். ஆனால் நீதிபதி அவருக்கு குட்டு வைத்து வழக்கை சமமாக்கினார். அடுத்த தடவை விஜயலட்சுமி இறங்கி வந்து நீதிபதியின் கோரிக்கையை ஏற்று சீமான் விரும்பியபடி கேட்டபடி இனி என்னை தொந்தரவு செய்ய கூடாது என்று வழக்கை முடித்து மூடிவிட்டார். இதை வைத்து கூத்தாட்டம் போட்ட அனைவருக்கும் வாயில் பூட்டு. இனி வெறும் வாயில் கூட சீமான் என்று வரக்கூடாது என்பது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். ஆனால் கம்பி எண்ண முடியாது அல்லவா.
  13. அதைவிட விஜய் + விஜயலட்சுமி (பெயர் கூட தூக்கலாக இருக்குதல்ல) வைத்து நாம் தமிழர் வாக்கு வடை போச்சே என்றவர்களுக்கு .... படுத்த இருவரும் படுத்த நாங்கள் தான் ஆனால் இனி வெளியே சொல்லமாட்டம் என்று இருவரும் ஒத்துக்கொண்டு பிரிந்து சென்றாலும் இங்கே பல்லுப் போனாலும் நானும் பழசல்ல என்றபடி சில பெரிசுகள்.....???
  14. இப்ப இங்கே சிலர் தரையில் கிடந்து தலையில் அடித்து அழுவது சீமான் என்ற நபர் மீது இனி புழுதி வார வழியில்லை என்று தானே.
  15. எனக்கு தெரியும் நீங்கள் மண் குதிரையை நம்பி பந்தயம் கட்டுகிறீர்கள் என்று. 🤣
  16. இனி விஜய்க்கு அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் இடம் இல்லை. ஆகக் கூடியது காமெடியனாக வேண்டுமானால் நடிக்கலாம் தனது பணத்தில்.
  17. https://www.facebook.com/share/19ukjrCRGY/ என்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் ஒத்திவைப்பு! தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டது. கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். இதற்கிடையே, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜோதிராமன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர்: அதிகளவில் மக்கள் போக்குவரத்து இருக்கும் பகுதி என்பதாலும், குறுகிய சாலை என்பதால் இருபக்கமும் மறைக்கும் நிலை வரும் எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டிருக்க வேண்டும். வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கோரிய போது காவல்துறை இதனை செய்திருக்கலாம். எங்களுக்கு அது குறித்து தெரியவில்லை. ஒட்டுமொத்த மக்களும் கூடிய நிலையில் காவல்துறை தடியடி நடத்தியுள்ளனர். ஒரு நாளைக்கு முன்பாகவே வேறு இடத்தில் நடத்த அனுமதி கோரி முறையிட வந்தோம். அன்று நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அன்று முறையிட இயலவில்லை. அதனால் வேலுச்சாமிபுரத்தில் நடத்தும் நிலை வந்தது. மனுதாரர்கள் மீது பதியப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஜாமின் வழங்கக்கூடியவையே. மரணத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மதியழகன் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் குற்றம் செய்யவில்லை, காவல்துறையே தவறிவிட்டது. நீதிபதி: உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையையே நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனும் போது அதற்கான பொறுப்பு வேண்டும் தானே? அரசுத்தரப்பு வழக்கறிஞர்: இது முன் ஜாமின் வழக்கே. மரணத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லை என கூறுகிறார்கள். 304 (A) பிரிவிலேயே வழக்கு பதியப்பட்டுள்ளது. சிலர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 105 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கூட்டநெரிசலுக்கு காரணமானவர் யார் என கண்டறிய விசாரணை அவசியம். அது தற்போது தொடக்க நிலையிலேயே உள்ளது. மனுதாரர்கள் இருவரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இரவு 7 மணிக்கு துயர சம்பவம் நிகழ்ந்தது. கட்சியினரால் தான் அவர்களின் தொண்டர்களைக் கட்டுப்படுத்த இயலும். அது போன்ற அறிவிப்பை அவர்கள் செய்யவில்லை. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர் நீரிழப்பின் காரணமாகவே உயிரிழந்ததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. தலைமறைமாவது ஏற்கத்தக்கதல்ல. விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும். கேரவனில் 4 மூலைகளிலும் சிசிடிவி இருக்கும். அவற்றை வழங்க வேண்டும். விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. இந்த நிலையில் முன் ஜாமின் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே முன் ஜாமின் வழங்கக்கூடாது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன், முன் ஜாமீன் மனுக்களை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளார். #TVK | #Vijay | #TVKVijay | #NAnand | #Karur | #Nirmalkumar | #LatestNews | #TNNews
  18. https://www.facebook.com/share/v/19ip5pJTWa/ போற போக்க பார்த்த ஒருத்தனுக்கும் ஜாமீன் கிடைக்காது போல விஜய்-க்கு விழுந்த அடிமேல் அடி - நீதிமன்றத்தின் 10 கண்டனங்கள்
  19. மிகச் சரியான நடவடிக்கை. உண்மை எல்லோருக்கும் தெரியும். வெளிக் கொண்டு வரட்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.