Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. சொறீலங்கா சிங்களவர்கள் தங்களுக்கான ஆட்சியாளரை தெரிவு செய்யும் தேர்தல் தான் இது என்பதை கடந்த காலங்களும் சரி தற்போதைய போட்டியாளர்களும் சரி சொல்லி நிற்கின்றன. இதனால் தமிழ் மக்களுக்கு கடந்த காலம் போல் எதிர்காலத்திலும் ஒரு விமோசனமும் இல்லை. சொறீலங்காவின் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஒற்றையாட்சிக்குள் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் தமிழர்களை வாழ் நிற்பந்தித்த இணைத்தலைமை நாடுகள்.. சர்வதேசம்.. ஹிந்தியா..சீனா.. சார்க் நாடுகள் என்று எல்லாமே தான் இந்த அவல நிலை தொடரக் காரணம். மேலும் சிங்களத் தலைமைப் பீடமேறும் தலைவர்கள் சிங்கள பெளத்த பேரினவாத வெறி பிடித்த மதகுருமாருருடன் இணைந்து செயற்படுவதே கொள்கை என்று கொண்டிருப்பதும்.. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மதிக்கக் கூடிய விளக்கத்தை தகமையை கொண்டிராததும்.. இவர்களுக்கு தமிழ் மக்கள் முக்கி முக்கி வாக்குப் போடுவதால் நன்மை கிடைக்காது. ஆனாலும்.. சாத்தானுடன் வாழ் நிற்பந்திக்கப்பட்ட நிலையில்.. சாத்தானுடன் சமரசத்துடன் வாழ்வதை தவிர வேறு வழியில்லை என்பதே தமிழ் மக்களின் நிலை இன்று சொறீலங்காவில். இது தமிழ் மக்கள் சாத்தானின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதாக அர்த்தப்படாது. இதில்.. தமிழ் பொதுவேட்பாளர்.. தமிழர்கள் சார்பில் உள்ள ஒற்றைக் கருத்தியலுக்கு.. ஆயிரம் கட்சி அமைச்சு போட்டி போடும் தமிழ் கட்சிகள் என்பன அளிக்கும் ஆளுக்கு ஆளான சிங்கள விசுவாசம் என்பதும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேவையில்லாத ஆணிகளாகும். தங்களின் சுயலாபத்தை முன்னிறத்த மக்களை பணயம் வைத்து.. ஏமாற்றும் செயல் மட்டுமே.
  2. சொறீலங்கா சனாதிபதி தேர்தல்.. நாடாளுமன்றத் தேர்தல்களால்.. தமிழர்களுக்கு ஒரு விமோசனமும் வரப் போவதில்லை. எல்லாரும் சந்தியில் சிந்து பாட வேண்டியது தான்.
  3. சமூக வலை உலகம் குப்பையாகி விட்டது. பெண்கள் ஆண்கள்..பல விதத்திலும் பணம் பார்க்க பாவிக்கிறார்கள். உடலைக் காட்டி பிழைப்பது அதிகரித்துவிட்டது.. அது உடலை விற்றுப் பிழைப்பதை விட பாதுகாப்பானது என்றாகி இருப்பதால்... பலரும் களமிறங்கி விட்டார்கள். ஆனாலும்.. வெளிநாடுகளில் இருக்கும் எம்மவர்கள் பணம் வரும் வழிமுறை உணராமல் கண்டபடிக்கும் ஊருக்கும் தெற்காசியா தென்கிழக்கு ஆசியா நோக்கியும் பணத்தை வீசிவருகின்றனர். அவர்கள் உழைப்பு தானே என்று விட்டாலும்.. இதனால் மற்றவர்களும் ஊரில் உள்ளவர்களும் தேவைக்கு அதிகமான செலவை செய்து பல அத்தியாவசிய.. சேவைகளை தேவைகளை நிறைவு செய்ய வேண்டி உள்ளது. இதில் புலம்பெயர் தமிழர்களின் தாந்தோன்றித்தனமான கண்மூடித்தனமான செலவழிப்பு போக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.
  4. ரஷ்சிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள இன்றைய காணொளியில் பிடிக்கப்பட்ட உக்ரைன் படையினர்களை காட்டினார்கள். இன்று உக்ரைன் தானாகவே ஒரு கிலோமீட்டர் அல்லது இரண்டு கிலோமீட்டர் தான் போனது என்று கூறியுள்ளது.. ஆக வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இருந்து கிழக்கு ஐரோப்பாவுக்கான எரிவாயு வழங்கல் இப்பவும் நடப்பதால்.. குறிப்பாக ஈயுவின் சொல்வழி கேட்காத ஹங்கேரிக்கும்.. இந்த பிரதேசத்தை ரஷ்சியா இராணுவ வலமற்ற பகுதியாகவே பராமரித்து வந்துள்ள நிலையில்.. அந்தப் பலவீனத்தை வைச்சு//நேட்டோ உக்ரைன் கோமாளிகளை வைத்து வெடி கொழுத்தி விளையாடி வருகின்றது. ஏலவே எரிவாயு லைனை கடலில் குண்டு வைச்சு தகர்த்தது உக்ரைன் என்றாகி விட்டது. அதனை மூடி மறைக்க அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் போட்ட நாடகம் இருக்கே சொல்லி மாளாது. இப்போது ஐரோப்பாவுக்கான எரிவாயு ஏற்றுமதியில் அமெரிக்காவே முன்னிலை வகிக்கிறது. எனி கணக்கை நீங்களே போட்டுப் பாருங்கள்... இந்த உக்ரைன் கோமாளியின் தற்கொலை முயற்சி எதற்கு என்பது புரியும். தீச்சுவாலை சொறீலங்கா படைகளின் நடவடிக்கையின் போது சொன்னவை தான் ஞாபகத்துக்கு வந்து போகிறது.
  5. உக்ரைனின் பயங்கரவாதம் அப்பட்டமாக வெளிப்பட்ட பின்னும் ஜேர்மனி வெக்கரோசமில்லாமல் உக்ரைனுக்கு வால்பிடிப்பது கேவலம். ஜேர்மனிக்கு எரிவாயு காவி வந்த பைப் லைனை வெடி வைச்சு தகர்த்தது உக்ரைன் நீரோடிகள் என்பதும்.. அதற்கு அமெரிக்க கப்பல்கள் உதவி உள்ளமையும் வெளிவந்து.. இப்போ.. பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்... ஜேர்மனி மக்களை இதர ஐரோப்பிய மக்களை பாதிக்கக் கூடிய இந்த பயங்கரவாதத் தாக்குதலை ஜேர்மனி கண்டிக்காதது ஏனோ..?!
  6. இது சாதி ஒழிக்கிறதென்று சாதி வளர்ப்பது போன்றது. புலிகளே ஆயுதங்களை மெளனித்து நீங்கி விட்ட நிலையில் 15 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில்.. இன்னும்.. புலி புலின்னு புலம்பிக் கிட்டு ஒரு கூட்டமிருக்கென்றால்.. சகோதரப் படுகொலைகளில் புலிகள் மட்டுமா ஈடுபட்டார்கள்.. ஏனையவர்கள்.. ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு துரோக அரசியலை பரிசளிக்கவில்லையா.. அவர்களுக்கு தண்டனை..??! இப்போதும்.. புலி.. பிரபாகரனை அதிகம் உச்சரிப்பவர்கள் யார் என்று பார்த்தால்.. முன்னாள் துரோகிகளும் ஒட்டுக்குழுக்களும் எதிரிகளும் தான். மக்களின் முன் மக்களின் மனங்களுக்குள் இருக்கும் அரசியல் வேட்கைக்கு விடைகாணாமல்.. புலி நீக்கம் என்பது சாத்தியமில்லை. ஏனெனில்.. புலிகள் காவிச் சுமந்தது மக்களின் மனங்கள் தேடிக் கொண்டிருந்த அந்த அரசியல் தேச விடுதலையை.. உரிமையை.. சுதந்திரத்தை. அதைப் பறிச்சு.. எதிரியின் காலடியில் மக்களை அடிமையாக மிதிபட விடும் எந்த கொள்கை கோட்பாடும்.. மக்களின் மனங்களை வெல்லாது. புலி நீக்கமும் செய்யாது. யார் என்னத்தை எழுதினாலும்... கிருபன் அண்ணர் அதை ஒட்டோ ஒட்டென்று ஒட்டினாலும் நிகழாது. அவரும் தான் காலம் காலமே ஒட்டிறார் இன்னும்.. புலி நீக்கம்.. மீளாய்வு முடியவில்லை. எனி பின் நவீனத்துவ வாதம் போல்.. புலிப் பின் நவீனத்துவம் அப்படி இப்படின்னு ஏதாவது புதிசா எழுதிப் பார்க்கச் சொல்லுங்கண்ணே.
  7. ரஷ்சியா - உக்ரைன் யுத்தத்தின் ஆரம்பத்தில் ரஷ்சியா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி இருந்தது. இப்போது ரஷ்சியா மீதான ஊடுருவலுக்கு பாவிக்கப்பட்ட பகுதியும்.. உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்தது. பின்னர் துருக்கியினூடாக கெஞ்சிமன்றாடி.. ரஷ்சியாவுக்குள் நுழைந்து தாக்கவோ.. ரஷ்சியாவுக்குள் தாக்குதலை நடத்தவோ மாட்டம் என்ற பொய் வாக்குறுதியை வழங்கி தான்.. ரஷ்சியப் படைகளை ரஷ்சியா தானா வெளியேற்றிக் கொள்ள சம்மதிக்கப்பட்டது. இப்போ அமெரிக்காவினதும்.. நேட்டோவினதும் தேவைக்காகவே இந்த ஊருடுவல் தாக்குதல். இதில் நேட்டோ படைகள் நேரடியாக அல்லது மறைமுகமாக செயற்படுவது தெரிந்ததே. மோல்டாவாவுக்கு ரஷ்சியா எச்சரிக்கை வழங்கி இருக்கிறது. இந்த ஊருடுவல் என்பது நேட்டோ வினது நேரடியான ரஷ்சிய ஆக்கிரமிப்புச் செயல். இதன் மூலம் உக்ரைனுக்கு எந்த நலனும் கிடைக்கப் போவதில்லை. உக்ரைன் கோமாளி சனாதிபதி அமெரிக்காவினதும் ஈயுவினதும் நேட்டோவினதும் ஆட்டத்துக்கு ஆடம் பொம்மை. நிச்சயம் ரஷ்சியா இந்த நேட்டோ ஆக்கிரமிப்புக்கு எதிராக நிச்சயம் பதில் அளிக்கும். மேலும் நேட்டோ ரஷ்சியாவுக்குள் ஊருடுவுவது இது முதல் தடவை அல்ல. ஏலவே சி ஐ ஏ ஊடாக வாக்னர் ரஷ்சிய கூலிப்படையை விலைக்கு வாங்கியும் அதன் பின்னர் ரஷ்சியாவுக்கு எதிரான அமைப்புக்கள் என்ற பெயரிலும் ஏலவே பல தடவைகள் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் ஊருடுவல் தாக்குதலை செய்துள்ளன. என்ன வாக்னர் குழுவைப் போல சட சட என்று மொஸ்கோ நோக்கி நகரலாம் என்ற கனவு பலிக்கவில்லை. டான்பாஸ் உட்பட்ட கிழக்குப் பகுதி இராணுவ நடவடிக்கை படுதோல்வியில் முடிந்தமை அமெரிக்க நேட்டோ கூட்டாளிகளுக்கு உக்ரைன் அவமானத்தையே தேடிக் கொடுத்திருந்தது. அதனால் தான் இந்த ஊடுருவலை கொஞ்சம் அகலப்படுத்தி வெற்றி விளம்பரமாக்கிக் கொண்டிருக்கிறது உக்ரைனின் கோமாளி சனாதிபதியும் அதன் கூட்டமும். ஏலவே டான்பாஸ் முழுவதுமாக ரஷ்சியாவிடம் இழக்கப்படும் நிலை தோன்றிவிட்ட நிலையில்.. அதன் கவனத்தை திருப்பமும் நேட்டோ அமெரிக்காவை ஆசுவாசப்படுத்தவும் அவர்களின் இராணுவ வெற்றி வெறித்தனத்தை இனங்காட்டவுமே இந்த தாக்குதல். இதில் இழக்கப்படும் ஒவ்வொரு அப்பாவி ரஷ்சிய உயிருக்கும் இவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும். இதனை ஏலவே பிரிட்டனை சேர்ந்த உயர் ராணுவ அதிகாரியே சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார். இந்த ஊருவலால்.. ரஷ்சிய இராணுவத்தின் தாக்குதல் திறனை குறைக்க முடியுமோ தெரியவில்லை.. ஆனால் ரஷ்சியாவை அதி கோபப்படுத்தி உக்ரைனை நாசமாக்கப் போகிறார்கள் என்று எச்சரித்திருக்கிறார் அந்த அதிகாரி. ஆனால் அமெரிக்காவோ.. கமோன்.. கிமோன் என்று உசுப்பேத்திவிட்டு இப்போ தமக்கும் இந்த ஊடுருவலுக்கும் சம்பந்தமில்லை என்கிறது. அண்மையில் தான் ரஷ்சியாவுக்குள் தாக்குதல் நடத்த பைடன் நிர்வாகம் சம்மதி அளித்ததாகச் சொல்லப்பட்டாலும்.. உக்ரைன் ஏற்கனவே பல ஊடுருவல் தாக்குதலை தானாகவும் புரொக்சியாகவும் செய்தே வந்துள்ளது.
  8. கோத்தாவை வீட்டுக்கு அனுப்பும் போது மகிந்தவோடு சேர்த்து நாமலையும் தானே அனுப்பினது. அதுக்குள்ள மறந்திட்டுதா சிங்கள சனம். ஆனால்.. தமிழ் சிங்களக் காவடிகளுக்கு எக்காலத்திலும் குறைவில்லை. என்ன டக்கிளஸ் சுமந்திரன் அங்கஜன் சித்தார்த்துக்கு போட்டி கூடிக்கிட்டே போகுது.
  9. சிங்கள படை ஆக்கிரமிப்புக்குள் முழு தமிழர் தேசமும் உள்ள நிலையில்.. இது ஒரு தேவையில்லாத ஆணி புடுங்கல். தமிழர்கள் குடைக்கு ஆதரவளிக்கலாம். மகிந்த ரணில் சஜித்.. அனுர.. சரத் கும்பலை நம்பாமல்.. பொதுமைப்பாடான சிங்கள மக்களோடு இணைந்து... லிபரல் தன்மை கொண்ட சிங்கள முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட இளையோர் வழியில்.. வாக்குப் போடலாமே.
  10. சீனாவுக்கு விலை போகக் கூடிய தீவுகள் மீது ரெம்ப கவனமா இருக்குது கழுகு. ஏற்கனவே டி காப்பேசியாவில் பிரிட்டனையே ஏமாற்றி இருக்குது இந்தக் கழுகு.
  11. அதுசரி அரியனேந்திரன் பிரித்தானியாவில் அடித்த அசைலத்துக்கு என்னானது..?!
  12. ஆமாம் ஆமாம்.. ஆனையிறவை விட்டு ஓடினது.. மாங்குளத்தில் அடி விழ ஆரம்பிச்சதும் சீனாவில் போய் பதுங்கிக் கிடந்தவர் எல்லாம்.. ஊழலை அல்ல.. சொறீலங்காவில் உள்ள எலிகளைக் கூட ஒழிக்க முடியாது. சும்மா வெறுவாய் சப்பிட்டு சிங்கக் கொடி கூட்டாளி.. சம்பந்தன் பாதையில் போய் சேர வேண்டியான். புலிகளை.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை.. ஹிந்திய- அமெரிக்க - மேற்குலகின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் சூழ்ச்சிக்குள் கொண்டு வந்த கதிர்காமர் போன்றவர்கள் தான் அழித்தார்கள் என்றால் மிகையல்ல. இதில் சர்வதேச சதியே அதிக பங்களித்தது. கோத்தாவோ.. மகிந்தவோ.. சரத்தோ.. உரிமை கோருவதில் அர்த்தமில்லை.
  13. மோடியை விட கோத்தா மிகவும் பொருந்தி வருவார்.
  14. கடந்த 15 ஆண்டுகளாக ஒரு வன்முறையும் புலிகளால் பதிவாகாத நிலையில்.. ஐரோப்பிய ஒன்றிய சாணக்கியவான்கள் இன்னும் தடை போடினம் என்றால்.. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைந்தெடுத்த காடைத்தனம் அப்பட்டமாகவே தெரிகிறது. இதில் புலிகளின் சொத்து முடக்கமே முக்கிய குறிக்கோள். அதையும் பறிச்சு உக்ரைனுக்கு படைப்பாங்கள் ஆக்கும். கவனிக்கவும் ரஷ்சியாவில் ரஷ்சிய பிராந்தியங்களில் புலிகளுக்கு தடை இல்லை. புலிகள் தப்பானவர்களை நண்பர்கள் என்று நம்பியதன் விளைவும் தான் 2009 மே பேரழிவு கூட்டு இன அழிப்புக்கு முக்கிய காரணம். ஏலவே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என்ற சிவில் தொண்டு அமைப்பு மீதான தடையும் தொடருது. ஆக மொத்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம்.. ஒரு கொஞ்சம் கூட சனநாயகத்தன்மை அற்று.. தமிழ் மக்கள் மீதான எந்தக் கருசணையும் அன்று தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. இதில தமிழர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடாவடித்தனமான உக்ரைன் போர் ஆதரவுக்கு ஒத்தூதுதிக்கொண்டு இருக்கிறார்கள். ஹிந்தியாவை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம்.. எனி அமெரிக்கா.. பிரிட்டனுன்னு தடை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இவங்கள் எல்லாம் கள்ள மெளனம் காக்கிறாங்கள். இணைத்தலைமை என்று வந்து புலிகளை உளவு பார்த்தவை எல்லாம் இப்ப கப் சிப்.
  15. முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் வை கோ ஐயா. 2009 மே க்குப் பின்னான கசப்பான அனுபவங்களை மறந்து.. தேசிய தலைவர் மீது கொண்டிருந்த தார்மீக ஆதரவுக்கு மதிப்பளித்து வை கோ ஐயா மட்டுமல்ல.. தமிழக நேச சக்திகள் எல்லோரும் ஈழத்தமிழர் விடயத்தில்.. ஒருங்கிணைந்து செயற்படுதல் அவசியம். உள்ளூர் அரசியலில் எப்படியான அணுகுமுறைகளை கொண்டிருந்தாலும்.
  16. இது பற்றி டக்கிளசின் வாலுகள் கப்சிப். கடற்புலிகள் இருந்தப்போ வராத சிக்கல்கள் எல்லாம் இப்ப வருகுது என்றால்.. தூண்டி விடுறவையை பற்றி சிந்தித்துப் பார்த்து அப்பாவி மீனவர்கள்... இந்த அதிகார வர்க்கத்தின் அரசியல் ஆதாயத்துக்குள் விலை போகாத வகையில் வளப்பயன்பாட்டை பகிர்ந்து மேன்மை பெறுவது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்.
  17. விட்டால் தமிழர்கள் தான் ஆக்கிரமிப்பாளர்கள் சிங்களவர்கள் நல்லவர்கள் என்று சொன்னாலும் சொல்லுவீங்க போல இருக்கே. உக்ரைன் ரஷ்சியாவின் ஒரு பகுதி 1990 வரை. சோவியத் உடைவின் போது தனிநாடானது. இப்போ சோவியத்தில் இருந்து உடைத்த அத்தனை நாடுகளையும் நேட்டோவில் இணைச்சாச்சு. உக்ரைன் தான் பாக்கி. நேட்டோ விரிவாக்கமே தான் ரஷ்சிய- உக்ரைன் போருக்கான முக்கிய மறைமுகக் காரணம். நேரடிக்காரனம்.. டான்பாஸ் பிராந்திய மக்களின் சுயநிர்ணய உரிமையை பறித்து உக்ரைனின் ஆக்கிரமிப்புக்குள் வைத்திருக்க முனைந்தது. இதில்.. ரஷ்சியாவினது உக்ரைன் மீதான போர் எப்படி ஆக்கிரமிப்பாகும். மேற்கு ஐரோப்பாவிற்கும் நேட்டோவுக்கும் நன்மையில்லாமலா இவ்வளவு கோடிகளை ஐரோப்பிய ஒன்றியமும்.. பிரிட்டனும்.. அமெரிக்காவும் கொட்டிக் கொடுக்கினம்..??! எதுஎப்படியோ.. நீங்கள் பிரஞ்சு எஜமானர்கள் வாய்வழி வருவதே சத்தியம் என்று நம்பும் மட்டும் நீதி எதுவென்று விளங்கிக் கொள்வதில் சிரமம் இருக்கும். மேற்குலகின் சொத்துக்களும் ரஷ்சியாவில் உள்ளன. ஆனால் ரஷ்சியா இவர்கள் அளவுக்கு மட்டமான காரியம் செய்யவில்லை. இன்றுவரை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திடம் இருந்து சுருட்டிய காசையும் ஐரோப்பிய ஒன்றியம் விடுவிக்கவில்லை.. தமிழர்களின் பேரழிவின் போது கூட ஐரோப்பிய ஒன்றியமோ அமெரிக்காவோ உதவி அளிக்கவில்லை. ஆனால்.. சொறீலங்காவுக்கு வாரி வழங்கினதும் இல்லாமல்.. இப்போ வரிச்சலுகளையும் அளிக்கினம்.. சொறீலங்காவை பொருண்மிய நெருக்கடியில் இருந்து மீட்க. இப்படியாப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திடம்.. நீதி நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாது. தமக்கான அடிமைக் கூலிகளை கூட அமர்த்தி வைக்க.. அகதி அந்தஸ்தை பாவிக்கினம்.
  18. லேபர் தான் முன்னரும் கிழக்கு ஐரோப்பாவை பிரிட்டனுக்குள் திறந்து விட்டு 14 ஆண்டுகள் காணாமல் போனவை. மீண்டும் பழைய குருடி கதவை திறவடி கதை தான். திருந்தாத ஜென்மங்கள். ஏலவே லண்டன் மும்பை.. கராச்சி ரேஜ்சுக்கு வந்திட்டுது. எனி லண்டனிலையே ருவாண்டாவை கொண்டு வந்திடுவாங்கள்.
  19. உழைப்பால் உயர்ந்த தமிழனுக்கு பெருமை சேர்த்த பிரான்ஸ் மக்களுக்கும் தர்சனுக்கும் ஒலிம்பிக் பிரான்ஸ் ஒழுங்கமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  20. ரம்பும் அவரின் உப சனாதிபதி வேட்பாளரும்.. உக்ரைன் போருக்கு தாம் ஆதரவில்லை என்பதான சமிக்ஞயை காட்டி விட்டார்கள். அதனால் மேற்குலக ஊடகங்கள் மாக்கு மாக்கென்று பைடனை தாங்கின. அவரோ தன் வாயாலேயே உளறிக் கொட்டிட்டு போயிட்டார். புட்டினிடம் மண்டியிட மாட்டன் என்ற பைடன்.. இப்ப மண்டியிட வாய்ப்பே இல்லாத வெத்து பைடனாகி விட்டார். இப்போ கமலா ஹரிஸ் என்ற இன்னொரு இப்புச் சப்பற்றதை தலையில் வைச்சுக் கொண்டாடினம். இதனால்.. ரம் ஆதரவுக்கு வீழ்ச்சி வருமாப் போல தெரியவில்லை. ரம் படுகொலை முயற்சியில்.. உக்ரைன் மறைமுக பங்களிச்சிருக்கலாம்.
  21. சம்பந்தன் எந்த ஒரு முள்ளிவாய்க்கால் நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை. சொந்த இனப்படுகொலையை.. பயங்கரவாத அழிப்பாக நியாயப்படுத்தி இனப்படுகொலையாளர்களைக் காப்பாற்றிய ஒரு கயவர். தெந்தமிழீழத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றக் கிடைத்த சேவையையும் இஸ்லாமிய தமிழர்களுக்கு தாரை வார்த்தது தான் செய்த துரோகம். அவர்கள் தங்களை இஸ்லாமிய தமிழர்களாக இப்போ கருதுவதில்லை. அரபு முஸ்லிம்களாகவே கருதி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களுக்கு நாட்டுக்கு வெளியில் இருந்து கடும்போக்கு இஸ்லாமியர்களிடம் இருந்தும் இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் உதவி வருகிறது. மேலும் சிங்கக் கொடியை எரித்த பூமியில் இருந்து தெரிவான சம்பந்தன்.. சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சு.. சொந்த மக்களின் பூமியையும் அந்நிய ஆக்கிரமிப்புக்குள்ளாகி செய்தது தான் தீபாவளி அரசியல். இப்படியாப்பட்ட தோற்றுப் போன ஒரு அரசியல்வாதியான சம்பந்தனுக்கு மக்களின் ஆழ் மனதில் அடைந்து கிடக்கும் அரசியல் ஆசைகளை புரிந்து கொள்ளவோ.. அதனை தாமும்... தாங்கி நின்று முன்னெடுத்துச் செல்லும் சாணக்கியமோ கிடையாது. அவரின் தற்போதைய வாரிசுகளுக்கும் அது கிடையாது.
  22. 1997 இல் உருவாக்கப்பட்ட ரஷ்சியாவின் Kaspersky சைபர் செக்குரிட்டி மென்பொருளுக்கு அமெரிக்காவில் தடை. நேற்று அது அமெரிக்காவில் இருந்து வெளியேறிவிட்டது. இன்று.. உலகமே பெரிதும் அறியப்படாதிருந்த அமெரிக்க.. crowdstrike க்கு பயங்கர விளம்பரம். ஒரே நாளில் உலக அறிமுகம். இணையத்தை 1990 களில் அமெரிக்க இராணுவப் பாவனையில் இருந்து வியாபார மற்றும் உளவு நோக்கத்திற்காக திறந்துவிட்ட போதே.. ஒரு நாள் இது நிகழும் என்று அப்பவே எதிர்வு கூறியோர் பலர். மக்களை மந்தைகளாக்கி மேற்குலகின் வழியில் கொண்டு சென்றவர்களுக்கு கிடைத்த வெற்றி இது. இந்த இடத்தில் புலிகளை நினைவு கூறுவது சிறப்பு.. புலிகள் தந்தி இல்லாத தொலைபேசிகளை பாவிப்பினும்.. தந்தி உள்ளதையும் மீளமைத்து பாவித்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் பல ஆபத்துக்களில் இருந்து தப்ப முடிந்தது. எப்போது அவர்கள் மேற்குலக சற்றலைட்டுக்கள் சார்ந்த தொழில்நுட்பத்துக்குள் நுழைந்தார்களோ.. அப்பவே அவர்கள் இலகுவாக இலக்கு வைக்கப்பட்டுவிட்டார்கள்.
  23. முள்ளிவாய்க்காலில் பயிற்சி எடுத்த இஸ்ரேல் காசாவில் கச்சிதமாகப் பயன்படுத்துது போல. பாதுகாப்பு வலயங்களை அறிவித்துவிட்டு அங்கு மக்களைக் கூட வைச்சுக் கொல்கிறது. இது கமாஸூக்கு எதிரான போராகத் தெரியவில்லை. பலஸ்தீன இன அழிப்பு தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. என்ன பலஸ்தீனர்கள்.. ஈழத்தமிழர் மீதான சிங்கள... இன அழிப்புப் பற்றி.. எந்த அக்கறறையும் கருசணையும் இன்றி.. கொழும்பு வந்து மகிந்தவுக்கு மாலை போட்டுச் சென்றதையும் தாண்டி....
  24. பிபிசி தமிழ் வழமை போல்.. நாம் தமிழரை இட்டு குறைத்து மதிப்பிட்டு தான் செய்தி வெளியிட்டு வருகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.