Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான். அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ.
  2. இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது. இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை. அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச். ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன.
  3. தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள். வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி.
  4. பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார். தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு. அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது. பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல. கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை. ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல. அண்ணரும் சாட்சி. மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம். உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட. இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம். இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ.
  5. ISIS அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அமைப்பு.. சிரியாவின் ஆசாத் அரசுக்கு எதிராக என்பதை சாதாரண பள்ளிக் குழந்தைகள் கூட அறியும். யாழ் கள புட்டின் எதிர்ப்பாளர்கள் அறியாதது போல இருப்பது அவர்களின் பலவீனம். ஐ எஸ் ஐ எஸின் பிற்காலப் போக்கறிந்து.. அதற்குப் போட்டியாக அமெரிக்கா இதர குழுக்களை ஊக்குவிக்க முயன்றமையால் வெடித்தது ஐ எஸ் ஐ எஸ் - அமெரிக்க + மேற்குலக அடிபாடு. இப்போ.. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் கடும் இஸ்லாமிய மதவாதப் பயங்கரவாத நிலைப்பாட்டு தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில்..சிரிய அரசுக்கு ஆதரவான ரஷ்சியாவின் தாக்குதலாலும்.. ஈரானின் தாக்குதலாலும் கூட.. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் எஞ்சியுள்ள அமெரிக்க சி ஐ ஏ விசுவாசிகளை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் உக்ரைனும் ரஷ்சியாவுக்குள் ஊடுருவித் தாக்க பயன்படுத்தி இருக்கலாம். அதற்கான சாத்தியம் 100 க்கு 200% சதவீதம் உண்டு. ஏலவே... ரஷ்சிய எல்லைகளில் பல ஊடுருவிகளை செய்து தோற்றுப் போனது அமெரிக்க உக்ரைன் கும்பல். ரஷ்சிய சகபாடி.. ஆயுதக் குழுவையும் புட்டினுக்கு எதிராக திசை திருப்ப முனைந்து அந்த அமைப்பின் தலைவரும் வலது கையும் விமான விபத்தில் போய் சேர்ந்துவிட்ட பின்னர்.. அமெரிக்காவுக்கு.. சி ஐ ஏ யின் நம்பகத்தன்மைக்கு.. இப்போ... ஐ எஸ் ஐ எஸ் பயன்பட்டிருக்கலாம். இதன் பின்னணியில்.. இஸ்ரேலும் கூட்டிணைந்து இயக்கி இருக்க வாய்ப்புள்ளது. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு ரஷ்சியாவுக்குள் ஊடுருவது அவ்வளவு கடினமல்ல. ஏலவே அவர்கள் ரஷ்சியாவின் பரந்த எல்லைகளின் ஊடாக ஊடுருவி மேற்கு நாடுகளில் இருந்து துருக்கி வழியாக.. சிரியா .. இஸ்ரேலை கடந்தவர்கள் தான். இப்போ.. சி ஐ ஏ... மொசாட்.. உக்ரைன் உளவு அமைப்பு கூட்டினைந்து மேற்குலக ஆதரவோடு இத்தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கவே சாத்தியமுள்ளது. மேலும்.. இதனை திசை திருப்பும் நோக்கில் அமெரிக்கா சில எச்சரிக்கைகளை ரஷ்சியாவுக்கு வழங்கி இருந்தாலும்.. உக்ரைன்.. பெலருஸ் வழியாக தாக்குதலாளிகளை வழிநடத்தி மொஸ்கோ வரை நகர்த்துவது உக்ரைனுக்கோ.. அமெரிக்காவுக்கோ கடினமல்ல. எதுஎப்படியோ.. பலமான எதிரிகள் பல மார்க்கங்களையும் கையாண்டு ரஷ்சியாவை தாக்குவார்கள் என்பதை ரஷ்சிய உளவு அமைப்புகளும் பாதுகாப்பு அமைப்புக்களும் புட்டினின் ஆலோசர்களும்.. அறியாமல் இருந்தது.. அல்லது அமெரிக்க மேற்கு நாட்டு சவால்களை எளிதாக எடுத்துக் கொண்டது.. இத்தாக்குதல் மூலம் ரஷ்சியாவுக்கு நல்ல பாடத்தைப் புகட்டி இருக்கும். ரஷ்சியாவின் பல இழப்புக்கள்.. அதன் உளவுத்துறை.. செயற்பாட்டுத் துறையின் வினைத்திறனற்ற தன்மையால் நிகழ்வதோடு.. அந்த அமைப்பு.. இலகுவில்.. விலைக்கு வாங்கக் கூடிய அமைப்பாக இருப்பது புட்டினுக்கு சவாலாகவே இருக்கும். புட்டின் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கனும். உக்ரைனின் ரஷ்சியாவுக்குள் அமையும் எல்லாத் தாக்குதல்களுக்கும்.. ரஷ்சிய உளவு அமைப்புக்களும்.. பாதுகாப்பு அமைப்புக்களும்.. புட்டின் ஆலோசர்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்களே. ஏனெனில்.. அவர்களின் செயற்பாட்டுத் தோல்வி அல்லது பலவீனமே இப்படியான நிகழ்வுகள்.. ரஷ்சிய எல்லைக்குள் ஊடுருவித் தாக்குதல்.. மற்றும் ரோன் தாக்குதல்கள் தொடர முக்கிய காரணமாகும். புட்டின் இது விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தாவிடில்.. ரஷ்சியா மேலும் பல இழப்புக்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக.. அமெரிக்க.. இஸ்ரேல்.. மேற்குலக பின்புலத்தில் இயங்கும் மத அடிப்படைவாதக் குழுக்கள் குறித்து ரஷ்சியா மிகுந்த அக்கறை கொள்வது அவசியம். உக்ரைன் இவர்களை தனது தேவைக்கு பயன்படுத்தும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. அதை எதிர்பார்க்காதது ரஷ்சியாவின் தவறே ஆகும்.
  6. ரஷ்சியா இப்படியான பெரும் மனிதப் படுகொலைகளை காண்பது இது முதற்தடவை அல்ல. எகிப்துக்கு மேல் வைச்சு ரஷ்சிய விமானம் குண்டு வைச்சு தகர்க்கப்பட்டு 200 மேல் மக்கள் கொல்லப்பட்ட பின் நடக்கும் பெரும் சம்பவம் இது. இது இஸ்லாமிய தீவிரவாதம் என்றால்.. இது மேற்குலகை அடைய அதிக காலம் எடுக்காது. இப்படித்தான் கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்காவால் பயிற்சி அளித்தவன் தான்.. இங்கிலாந்தில் மாஜ்சட்டரில்.. இதே மாதிரியான நிகழ்வில் குண்டு தாக்குதல் நடத்தி 22 பேரைக் கொன்றான். இஸ்லாமிய பயங்கரவாத்தை விலைக்கு வாங்கி உக்ரைன் ஆயுதமும் ஒத்துழைப்பும் ஊடுருவலும் வழங்கி இதனை நடத்தி இருக்கவும் வாய்ப்புள்ளது. அல்லது உக்ரைனே நடத்தி விட்டு இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது பழிபோட்டும் இருக்கலாம். இதனால் ரஷ்சிய - இஸ்லாமிய உலக உறவை சிதைப்பதுவும் நோக்கமாக இருக்கலாம். எதுஎப்படியோ.. உயிரிழந்த அப்பாவி ரஷ்சிய மக்களுக்கு அஞ்சலிகள்.
  7. கடந்த இரண்டு உலக யுத்தத்திலும் ஜேர்மனி - இத்தாலி - ஜப்பான்.. இவை எதிரிகளாகவும்.. அமெரிக்காவும் மிச்ச மேற்கும்.. நேச நாடுகளாகவும் இருந்தன. ரஷ்சியா அப்பவும் தனியாத்தான் சண்டை போட்டது. ஆனால் 3ம் உலகப் போரின் பரிமானம் வேறுபட்டதாக இருக்கும். ரஷ்சியாவோடு.. நேரடியாக நேட்டோ மோதினால்.. ரஷ்சியா.. கிழக்கு ஜேர்மனியில் நிற்காது.. பிரிட்டனிலும்.. அலஸ்கா வழியாக நியுயோர்க்கிலும் நிற்கும். ஏனெனில்.. கடந்த இரண்டு உலகப் போரின் போதும் அமெரிக்கா ரஷ்சியாவை எதிர்த்து சண்டை செய்யவில்லை. ஜேர்மனி தான் செய்தது. புட்டின் ஒரு உலகப் போருக்கு தானாகப் போகும் அளவுக்கு புத்திசாலித்தனமற்றவரல்ல.. ஆனால் போர் திணிக்கப்பட்டால் எதிர்கொள்வார். தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் புட்டினுக்கு வாழ்த்துக்கள். ரஷ்சியாவின் பொருண்மிய வளர்ச்சி.. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இவைகளே.. எதிரிகளுக்கு சரியான அடியாக இருக்கும். அதனை நோக்கி புட்டின் செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம். சுவீடனும்.. பின்லாந்தும் ஏலவே அமெரிக்காவின் வால் தான். அது ஏலவே நேட்டோ ஆயுதங்களை தான் வைச்சிருக்கின்றன. இப்போ வெறும் பேப்பர்களில் கையெழுத்து போட்டிருக்கினம்..! அவ்வளவே. ஏலவே அவை நேட்டோ ஒத்துழைப்பு நாடுகள் தான்.
  8. முத்தமிழ் முருகன் மாநாடு.. செம்மொழி மாநாடு.. ஊரார் கொள்கைகளில்.. சவாரி விடுவதை விட.. ஸ்ராலினுக்கு சொந்தச் சரக்கு எதுவும் இல்லை. திராவிடக் கூட்டமே ஒரு மாயைக் கூட்டம் தானே. தமிழர்களுக்குள் இவர்களின் இருப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
  9. இது ஒரு சீப்பான விளம்பரத் தேடலாக மாற்றியமைக்கப்படாமல்.. சமூகத் தூசிகளை தட்டி உதறிவிட்டு உங்கள் பணியை கவனியுங்கள். சமூக வெளியில் உள்ள குப்பைகளை.. தூசிகளை தூக்கிப் பிடிக்கப் போனால்.. நம் கவனமும்.. சக்தியும் வீணாகுமே தவிர.. நாம் சாதிக்க வேண்டியதை அடைய முடியாது.
  10. உலகில் போர் மூலம் அதிக அகதிகளை உருவாக்கிய பெருமை.. ஒபாமாவை சாரும்.. அவருக்கு உலக சமாதான நோபல் பரிசு. உலகில் பேரழிவு ஆயுதம்.. அணு குண்டு வீசிய நாடு அமெரிக்கா. அதற்கு சனநாயக வேசம். உலகில் மாபியாக்கள் அதிகம் உள்ள நாடுகள்.. மேற்கு ஐரோப்பிய நாடுகள்.. இவைக்கு உலக மனித உரிமை காக்கும்.. வேசம். இதுகளோடு ஒப்பிடும் போது ரஷ்சியாவும் புட்டினும் எவ்வளவோ மேல். உக்ரைன் ரஷ்சியாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத வரலாற்று உண்மை தெரியாதவர்களோடு ரஷ்சியா.. புட்டின் மட்டுமல்ல.. யாராலும் எந்த உண்மையான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. உதாரணத்துக்கு சொறீலங்காவில் தமிழர் தாயக இருப்பை மறுப்பவர்களுக்கு ஒப்பானது.
  11. இவ்வளவும் நடந்திருக்கு இரண்டு.. குறூப் மூச். 1. சம் சும் மாவை கும்பல். 2. சிவசேன.. சச்சி கும்பல்.
  12. கோலங்கள் கோலங்கள்! [தேசப்பிரியன்] விமானம் யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து கிளம்புகிறது. ஏக்கம் கவ்விய மனதோடு கவின் யன்னலோர இருக்கையில் இருந்து சொந்த தேசத்தின் அவலங்களை பார்த்தபடி பறக்கிறான். என்ன அழகான தேசம், என்ன நேர்த்தியான கட்டுமானங்கள், கட்டம் கட்டமாக வயல்களும் தோட்டங்களும், இன்று அவை இருந்த அடையாளங்கள் சிதைந்து சின்னாபின்னமாகி..காவலரண்களால் நிறைந்திருக்கின்றன. காணும் காட்சி கவலையைத் தந்தாலும் ஐரோப்பிய இயந்திர வாழ்க்கைக்குள் செயற்கைச் சூழலுக்குள் கடந்த பதினைந்து ஆண்டுகளாக சுழன்றவனுக்கு சொந்த தேசத்தின் அலங்கோலம் கூட ரசிக்கக் கூடியதாவே இருந்தது. அன்று ஒரு நாள், அதிகாலை நேரம், சன்னங்கள் வீட்டு யன்னல்களைப் பதம்பார்க்கின்றன. நாய்கள் விடாமல் தொடர்ந்து குரைக்கின்றன. "பூட்ஸ்" சத்தங்கள் வீட்டைச் சுற்றிவளைக்கின்றன. சிறிது நேரம் கழித்து பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. "சலோ சலோ" என்று ஹிந்தியில் சொல்லி சிலர் கத்துகிறார்கள். "அம்மா இந்தியன் ஆமி வந்திருக்கிறான் என்ன செய்யுறது" கவின் சிறுவனாக பயத்தால் குரல் நடுங்கியடி, தாயை அணைத்துக் கொண்டு கேட்கிறான். " பொறு..பயப்பிடாத.. அப்பா போய் என்னென்று பார்ப்பார்.." அம்மா மகனைத் தேற்றியபடி. கணவனைப் பார்த்து "என்னங்க தனியப் போகாதேங்கோ நாங்களும் வாறம்". தகப்பன் முன்னே செல்ல தாயும் கவினும் பின்னே நிற்க, கதவு திறக்கப்பட்டதும் ஹிந்தியில் ஏதோ கத்தியபடி இந்தியன் ஆமி வீட்டுக்குள் நுழைந்து நாலு பக்கமும் சூழ்ந்து கொள்கிறது. அவர்களில் ஒருவன் சென்னைத்தமிழில் " உங்க வீட்டுக்க எல்ரிரிஈ ஆக்கள் பதுங்கி இருக்கிறதா..? சோதனை பண்ணனும்". அவன் சொல்லி முடிப்பதற்குள் வந்த மற்றையவர்கள் வீடு முழுவதும் தட்டிக்கொட்டி சோதனை செய்யும் சத்தம் கேட்கிறது. தொடங்கிய சோதனை முடிவதற்குள் மீண்டும் அந்த ஆமிக்காரன் தமிழில் " உங்க வீட்டில இருந்துதான் எல்ரிரிஈ சுட்டிருக்கு.. விசாரணைக்கு ஒருவர் வரனும்" அதைக்கேட்ட கவினின் அப்பாவும் அம்மாவும் செய்வதறியாது திகைத்துப் போயினர். " என்ர அவரை தனிய விட ஏலாது நானும் பிள்ளையும் கூட வாறம்" என்று கவினின் அம்மா காட்டமாகச் சொல்ல " எல்லாரும் நட, ஜீப்பில ஏறு" என்று உத்தரவு வருகிறது. நடந்த சம்பவம் தொடர்பாக எதுவும் அறியாத அவர்கள் மூவரும் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு கண்கள் கட்டப்பட்டு நீண்ட பயணத்தின் பின் முகாம் ஒன்றில் இறப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். விசாரணையின் பின் தாய் வேறாகவும் தகப்பனும் சிறுவனான கவினும் சேர்த்து வேறாகவும் பிரிக்கப்பட்டு அடைக்கப்படுகின்றனர். பல மணி நேரம் விசாரணை தொடர்வதாக சொன்னாலும் இறுதியில் கவின் மட்டும் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறான். பள்ளிச் சிறுவன் என்று காரணம் காட்டி அவனை வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். அந்த நாள் வரை தாயையும் தந்தையும் பிரிந்தறியாத கவின் அன்று அவர்களின் பிரிவால் பெரும் துன்பப்பட்டான். பதட்டம் பயம் ஒரு புறம் பெற்றோறைப் பிரிந்த கவலை மறுபுறம் வாட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவனின் துன்பத்தைப் பாராது விடுப்பு கேட்பதிலேயே அதிகம் அக்கறை காட்டினர். அதுவும் கூட அவனுக்கு மிக வேதனை அளித்தது. பிறர் உதவிகள் ஏதும் இல்லாது தனிமைக்குள் தனித்துவிட்ட சின்னவனான கவின் வீட்டில் அழுதபடி கண்ணீரோடு காலம் தள்ளத்தொடங்கினான். அதுவே தொடர்கதையுமானது. இப்படியே வந்த நாட்கள் சோகமாக கடந்தனவே தவிர தாயும் தகப்பனும் விடுவிக்கப்படுவதாக இல்லை. பின்பு ஒரு நாள் தாயும் தகப்பனும் காங்கேசன்துறை இந்திய இராணுவ வதை முகாமுக்கு மாற்றப்பட்டு அங்கு நீண்ட நாள் காவலில் அடைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் மூலம் அறிந்து கொண்டான். நீண்ட நாள் பெற்றோரின் பிரிவு, அது தந்த விரக்தி, நீதி என்பதே கிட்டாது எனும் போது எழுத்த ஆதங்கம், மனச்சோர்வு இவை தந்த பாதிப்புக்களால் வாழ்கையில் வெறுமைக்குள் சென்ற கவின் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமலே வீட்டை விட்டு வெளியேறி இயக்கத்தோடு இணைந்து செயற்படத் தொடங்கினான். சில காலம் இயக்கத்தோடு செயற்பட்ட பின் அவன் ஐரோப்பாவுக்கு நெருங்கிய உறவினர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டான். ஐரோப்பிய மண்ணில் பல வித்தியாசங்களை சந்தித்த போதும் வசதிகள் வாய்ப்புக்கள் இருந்த போதும் அவனால் மனதளவில் அவற்றோடு ஒன்றித்து அவற்றை திருப்தியோடு அனுபவிக்க முடியவில்லை. அவற்றோடு ஒன்றித்து தன்னை வித்தியாசமானவனாக காட்டி போலியாக வாழவும் முடியவில்லை. பெற்றோரின் பிரிவும் அவர்களுக்கு என்ன நேருமோ என்ற ஏக்கமுமே அவனுக்குள் எப்போதும் குடிகொண்டிருக்கும். வீட்டு நினைவுகளால் அவன் அடிக்கடி ஆளப்படுவான். சொந்த மண்ணில் கண்ட அனுபவங்களே அவனை அந்நிய மண்ணிலும் கொள்கைப்பற்றோடு ஒரு தெளிவான வளமான இலட்சியத்தோடு பற்றுறுதியோடு வாழ வழி சொல்லிக்கொண்டிருந்தது. ஐரோப்பாவிலும் அவன் தனிமையையே விரும்பினான். தானும் தன் படிப்பும் வேலையும் அதுவே அவனுக்கு வாழ்வாகிப் போனது. மற்றைய ஊர் ஆட்கள் போல அவனால் சொந்த மண்ணின் அவலங்களை மறந்து சொந்த வாழ்வில் சந்தித்த துயரங்களை மறந்து போலிப் போர்வைக்குள் புகுந்து இயல்பான அடையாளங்கள் தொலைத்து ஐரோப்பியனாக தன்னை அடையாளம் காட்டி போலித்தனத்தனமாக வாழவும் அவனால் முடியவில்லை. அதற்காக அவன் அப்படி வாழும் மற்றவர்களைக் குறை கண்டதும் இல்லை. அவரவர் தங்கள் மனத்துக்குப் பிடித்தது போல வாழ்கிறார்கள்.அது அவரவர் சுதந்திரம் என்றுணர்ந்தும் கொண்டான். விமானம் இரத்மனால விமான தளத்தை நெருங்குகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இராணுவ வதை முகாமுக்குள் விட்டுவிட்டு வந்த பெற்றோரைக் கண்டு, கொஞ்சி மகிழ்ந்த திருப்தியும், சொந்த மண் பெரும் அவலத்தைக் கண்டிருந்தாலும் இன்னும் அழியாது வைத்திருக்கும் சில அழகுகளை ரசித்த திருப்தியும் மனதிற்கு ஒரு சின்ன ஆறுதலை தந்தாலும், வானூர்தியில் இருந்து அவன் அவதானித்த தாய் மண்ணின் கோலத்தையும் சிங்கள மண்ணின் கோலத்தையும் ஒப்பிட்ட பார்த்த போதுதான் தன் தாய் மண்ணின் ஏழ்மையையும் அவள் இன்னும் ஓரவஞ்சனையை சந்தித்துக் கொண்டிருப்பதையும் தெளிவாக உணரமுடிந்தது. மனதில் அதை படமாக்கிப் பதிந்தும் கொண்டான். ஐரோப்பாவிலும் சரி சிங்கள மண்ணிலும் சரி கடனோ சொந்தமோ வசதிகள் என்று வாழ்ந்தாலும் அந்நியத்தனம் என்பது மனதுக்குள் தேடாமல் தேடி வரும் ஒன்று. அதை சொந்த மண்ணில் அவன் உணரவே வாய்ப்பிருக்கவில்லை. வசதிகளால் ஏழ்மை என்றாலும் சொந்த மண் மனதுக்கு தரும் திருப்தியால் என்றும் நிறைவானதுவே." சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல் ஆகுமா"...என்ற கவிவரிகளின் யதார்த்தத்தை அனுபவம் தந்த உணர்வுகளால் உள்வாங்கியபடி கவின் கொழும்பு இரத்மனால விமான தளம் விட்டு வெளியே நடக்கிறான். https://eluthu.com/kavithai/267955.html
  13. சுமந்திரனின் இறுதி இலக்கு அமைச்சர் பதவி. அதற்காக அவர் படிப்படியா உழைச்சுக் கிட்டு தான் இருக்கார். புலி நீக்கவாதி தமிழ் தேசிய நீக்கவாதி மாவீரர் நீக்கவாதி மிதவாதி சிங்கள பெளத்த பேரின புகழ்வாதி சொறீலங்கா.. எக்க ராஜ்ஜய வாதி ஜனாதிபதி சட்டவாதி தமிழசுக் கட்சி சுவீகரிப்புவாதி புலி இனச்சுத்திகரிப்பு வாதி இப்படி பல வாதங்களோடு ஏன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.. எப்பவும் ரணிலுக்கு பின்னால் பக்கத்தில் தான் நிற்பார். அதிசயமோ ஆச்சரியமோ அல்ல. டக்கி இலக்கம் 2 தயாராகி கொண்டிருக்குது.
  14. x 100 = 2 கோடியை ரிக்கெட் மூலம் மட்டும் புடுங்கப் போயினம். அதுக்கு மேல.. வேற வழியிலும் காசு பறிக்கப்படுகுது. அங்கால.. இவையால அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் கொடுக்க ஆக்களில்லை...!!!
  15. இவ்வளவு காலமும் சிங்கள பெளத்த பொலிஸ் இனவெறி அடாவடித்தனம் என்னென்று தெரியாமல் தான் அவைட... அமைச்சராக இருக்கிறாரோ. 🤣 எனி வரும் காலங்களில் ஆயுதங்கள் கைகளில் இருக்கப் போவதில்லை. உலக போரொழுங்கு மாறிக்கொண்டே போகுது. ஆனால்.. தமிழர்கள் எனியும் போரழிவுகளை தாங்கிக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை. பக்கத்தில்.. பெளத்தத்தை பலப்படுத்த காசு கொடுக்கிற ஹிந்து அரசு.. பதவியில் இருக்குது.. அவைட சொல்லலாமே..??!
  16. நாங்க சின்னப் பிள்ளையா.. நேரா.. சீமான் அண்ணாவை கேட்டுக்கிறம். உங்க கருத்தைக் கேட்கனுன்ன அவசியமில்லை தானே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.