Everything posted by nedukkalapoovan
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
இந்தக் காணொளி யுரியுப்பரும் எமது ஆதங்கத்தைக் கொண்டிருந்திருக்கிறார். அதனை நேரடியாக சொறீலங்கா விமானப்படையிடம்.. கேள்வியும் ஆக்கி இருந்தார். சொறீலங்கா விமானப்படை பேச்சு ஆள்.. தாங்கள் யுத்த விமானங்களை கொண்டு வரவில்லை என்று சொல்லி இருக்கிறார். ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படவில்லை. சொறீலங்கா விமானப்படைக்குள் கூட ஒரு சிறிய புரிதல் இருந்திருக்குது.. இந்த நிகழ்வை இந்த மண்ணில் வேறுவிதமாகக் கையாளனுன்னு. அதுதான் அந்த மண்ணில் ஏற்படுத்திய வலிகளுக்கான ஒரு சிறிய மாற்றமாக இருக்கலாம்.
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
தவறாக புரிய கொண்டு சொல்லவில்லை. அது நியாயமில்லை என்றால்.. பின்னையது எப்படி நியாயம்..??! இந்த 20 மாணவர்களை இனப்படுகொலை சொறீலங்கா விமானப்படை விமானத்துக்கு வெள்ளையடிக்க பறப்பில் ஈடுபடுத்தியவர்களுக்கு.. ??
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
உங்கட கணக்குப்படி பார்த்தால்.. சொறீலங்கா பொருளாதாரம்.. இப்ப ரெம்பச் செழிப்பா இருக்கனுமே...?! அண்ணே உருட்டிறதிற்கும் ஒரு அளவு வேண்டும். அதுமட்டுமன்றி அப்பவே புறக்கணி சொறீலங்காவை கொண்டு வந்து கத்தின யாழ் உறவுகள் இருக்கினம். என்னைப் பொறுத்தவரை நான் இதுகாள் வரை சொறீலங்கா எயார்லைஸ் பாவிச்சதில்லை. பாவிக்கப் போறதும் இல்லை. புறக்கணிப்பில் அப்ப இருந்து இப்ப வரை தெளிவாகத்தான் இருக்கிறேன். எம் மக்களுக்கு இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கிடைக்கும் வரை..இது தொடரும்.
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
காணாமல் போன உறவுகளும் அதே மண்ணில் தான்.. இன்னும் இந்த ஆக்கிரமிப்பாளர்களால் காணாமல் அடிக்கப்பட்டவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். போர்க்குற்றவாளிகளை தண்டிக்கக் கோரிக்கொண்டிருக்கிறார்கள். இதே மண்ணில் தான் சக மாணவிகள்.. மாணவர்கள்.. படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.. இவர்களால். அதே மண்ணில் தான் இன்னும் இவர்களால் கொல்லப்பட்ட உறவுகளுக்கு ஒழுங்காக நினைவஞ்சலி செய்ய முடியாது மக்கள் குமுறினம். அதே மண்ணில் தான் இவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை விடுவிக்க கோரினம்.. அவற்றிற்கு ஒரு நீதியும் இல்லை. ஏன் மன்னிப்புக் கூட கோரவில்லை. அப்படியாப்பட்ட ஒரு சிங்கள.. விமானப்படையின் 73 வருடத்தை சிறப்பிக்கும் வகையிலும்.. தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமது இருப்புக்கும் செயற்பாட்டிற்கும் ஆதரவும் வெள்ளைத்தன்மையும் உள்ளது போன்று காட்ட.. வேண்டும் என்றே முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்விற்கு.. மாணவர்களை பயன்படுத்த அனுமதிப்பது நிறைய பாதிக்கப்பட்ட மக்களின் அவர் சார்ந்த மாணவ சொந்தங்களின் மனங்களை எவ்வளவு பாதிக்கும்..??! அதுகுறித்து எந்த moral humility இல்லாத போது..?! புலிகள்.. சொறீலங்கா வான்படைக்கு வெள்ளையடிக்கப் பறக்கவில்லை. புலிகள்.. பேச்சுத் தூதுக்குழுவாக.. பிற மேற்பார்வைகளால்.. ஏற்பாடு செய்யப்பட்ட பறப்புக்களில் ஈடுபட்டனரே தவிர.. புலிகள் சொறீலங்கா விமானப்படை நிகழ்த்திய அதன் சேவைக்கால நிறைவு.. நிகழ்வுளை கெளரவிக்க.. சொறீலங்கா விமானப்படைக்கு அதன் போர்க்குற்றங்களில் இருந்து வெள்ளையடிக்க.. பறப்பில் ஈடுபடவில்லை. மேலும்.. புலிகள் சொறீலங்கா விமானப்படை ஹெலிதான் தேவை என்றும் சொல்லவில்லை. சொறீலங்கா அரசு வழங்கியது.. சொறீலங்கா விமானப்படையினதாக இருந்தமை சொறீலங்கா அரசின பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட தீர்மானமே அன்றி.. புலிகள் கேட்டதல்ல. இதுவும் முக்கியம்.
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
இதில் ஏதாவது சொறீலங்கா இனப்படுகொலை இயந்திரத்திற்கு ஆக்கிரமிப்பு சக்திக்கு.. வெள்ளையடிப்பதாக இருக்குதா..??! ஆனால்.. சொறீலங்கா விமானப்படையின் 73ம் ஆண்டு கால நினைவேந்தலோடு.. அது நிகழ்த்தி வரும் இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்தும் போர்க்குற்றச் சாட்டில் இருந்துமான வெள்ளை அடிப்புக்கு உதவக் கூடிய செயல்களை தான் தவிர்க்கலாமே என்கிறோம். சொறீலங்கா விமானப்படை சேவை.. புலிகளை வன்னிக்காட்டில் ஏற்றி இறக்கவும் பயன்பட்டிருக்குது. அதற்காக.. அது செய்த இனப்படுகொலை கைங்கரியங்களுக்காக புலிகள் அவர்களோடு மோதாமல்.. விட்டார்களா..???! ஹிந்திய படை ஹெலிகளும் புலிகளை சுமந்திருக்குது. அதற்காக யுத்தம் என்று வந்த போது மக்களை தாக்க வந்த போது எதிர்த்து தாக்கினார்களா இல்லையா..??!
-
இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
தயவுசெய்து புடிச்சு எல்லாத்தையும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யவும். குரங்கை முடியுமுன்னா.. ஏன் நாயை முடியாது. ஒரு நாயை ஒரு அமெரிக்கன் டொலருக்கு கொடுத்தால் கூட நிறைய அந்நியச் செலவாணி வரும்.
-
நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
சதாம் குசைன் 900 பேரைக் கொன்றதால்.. போர்க்குற்றவாளி ஆனார். மிலேசவிச் 30,000 மக்களை கொன்றதால்.. போர்க்குற்றவாளி ஆனார். கடாபி 250 விமானப் பயணிகளைக் கொன்றதால்.. போர்க்குற்றவாளி ஆனார். ஆனால்.. இலங்கையில்.. அவைட கணக்குப் படி.. 1983 முதல்.. 6 இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கினம். ஜே ஆர் முதல் மகிந்த வரை... இதில் கூட்டுப் பங்களிப்புச் செய்திருக்கினம். இடையில் 15,000 தமிழர்களை ராஜீவ் காந்தியும் கொன்றார். இவை எல்லாம் எப்ப போர்க்குற்றவாளியாவது.. இவையை எந்த அமெரிக்கா.. மேற்குலகம் வந்து தண்டிக்கப் போகுது..????!
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
அதாகப்பட்டது.. சில ஆக்களின் கொள்கை... உல்லாசப் பயணம் போக.. சொறீலங்கா விமான சேவையை தருவதால்.. தமிழர் தாயகத்தில்.. தமிழர் தலையில் குண்டு போடலாம். கொல்லலாம். குடிமனைகளை அழிக்கலாம். வாழ்வாதாரங்களை அழிக்கலாம்.. சொறீலங்கா வான்படைக்கு நில அபகரிப்புச் செய்யலாம். புலம்பெயர் தமிழர்கள்.. சொறீலங்கா விமான சேவையை பயன்படுத்துவதற்கும்.. இனப்படுகொலை நடந்த இடத்தில்.. நீதிக்கான கோரிக்கைகள்.. போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி தேடப்படும் நிலையில்... போர்க்குற்றவாளிகள்.. தமக்கு வெள்ளையடிக்கும் கைங்கரியத்தில்.. திட்டமிட்டு.. செய்யும் காரியங்களுக்கு துணை போவதென்பது... எப்படி சமன்படும்.. எப்படி சமன்பாடுகளை போடினம்..??! காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் தான் இஸ்ரேலின் அநியாயத்தைச் சொல்ல முடியும். வெளிநாட்டில் உள்ள பலஸ்தீனர்கள் அல்ல. வெளிநாட்டில் உள்ள பலஸ்தீனர்கள் தார்மீக ஆதரவளிக்கலாம். ஒரு தனியார் ஹெலிக்கொப்டரை வாடகைக்கு அமர்த்தி இதை செய்ய பாடசாலைகளால்.. அல்லது பழைய மாணவர் சங்கங்களால் முடியாதா..?! சாமத்திய வீட்டுக்கு ஹெலில பறக்கினம்..????! தன் குடும்பத்தை.. இனத்தை கொன்று வாழ்விடத்தை ஆக்கிரமிச்சு நிக்கிறவனிடம்.. போய்.. கேடயம் வாங்கனும் என்ற நிலைக்கு ஒரு மாணவனை தள்ளுவது போல் இழி நிலைமை எதுவுமில்லை. அதனை வரவேற்பதிலும் தூக்கில் தொங்கலாம். என்ன.. இந்த தலைப்பில் சிலரின் புலி வேசம் கலைந்து தொங்குது. எப்பவோ கலையத் தொடங்கினது.. இப்ப தொங்குது.
-
ஹவ்தி தாக்குதலுக்குள்ளான கப்பலில் சொறீலங்கா கூலிப்படை.
சி என் என் சொறீலங்கா கூலிப்படைகளைப் பற்றி மூச். என்ன ஒரு மூடிமறைப்பு... சனநாயக ஊடக சுதந்திரம்.
-
ஹவ்தி தாக்குதலுக்குள்ளான கப்பலில் சொறீலங்கா கூலிப்படை.
மத்திய கிழக்கி ஏமன்.. ஏடன் முனைக்கு அருகில் இன்று நடந்த கடல்வழி ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான பாபேடோஸ் நாட்டுக்கொடியுடைய True Confidence கப்பலில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த கப்பலில் தீப்பிடித்துள்ளது. அதில் 20 கப்பல் சிற்பந்திகளும் 3 ஆயுதம் தாங்கிய காவலர்களும் இருந்துள்ளனர். அதில் 3 ஆயுதம் தாங்கிய காவலர்களில் இருவர் இலங்கையை சேர்ந்திருக்கிறார்கள். மற்றவர் நோபாளம். கப்பல் சிற்பந்திகளில் 1 இந்தியர், 4 வியட்நாமியர்கள் மற்றும் 15 பிலிப்பினோ காரர்கள் இருந்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான கப்பலில் தொடர் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அருகிருந்த கப்பல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கப்பலுக்கு அமெரிக்க கடற்படை தற்போது உதவிவருவதாகச் சொல்லப்பட்டாலும் கப்பல் நிர்வகிக்கும் நிறுவன முகாமைத்துவம்.. இந்தக் கப்பல் மற்றும் கப்பல் பணியாளர்களின் நிலை காவலுக்கு போனவர்கள் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ளது. அமெரிக்காவும் பிரிட்டனும் Houthi நிலைகள் மீது விமானத் தாக்குதலை ஆரம்பித்த பின் மிக மோசமான தாக்குதல்களை ஹவ்தி நடத்தி வருகிறது. இது பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அநியாயத்தை எதிர்த்தே இத்தாக்குதல்களை நடத்துவதாக உரிமை கோரி வருகிறது. Two crew members have been killed in a Houthi missile strike on a cargo ship off southern Yemen, US officials say - the first deaths the group's attacks on merchant vessels have caused. The Barbados-flagged True Confidence had been abandoned and was drifting with a fire on board, managers said. It was hit in the Gulf of Aden at about 09:30 GMT, they added. The Houthis say their attacks are to support the Palestinians in the war between Israel and Hamas in Gaza. The vessel had a crew of 20, comprising one Indian, four Vietnamese and 15 Filipino nationals. Three armed guards - two from Sri Lanka and one from Nepal - were also on board. https://www.bbc.co.uk/news/world-middle-east-68490695
-
சுழிபுரம்: புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் - சுகாஷ் எச்சரிக்கை!
மீசைகார நண்பன்.. கவனிச்சா.. மீசை இல்லா நண்பன்.. இராணுவ முகாம் வாசலில்.. இராணுவத்துக்கு பைல் காவிக்கிட்டு நிற்பாரே. அந்தளவுக்கு நெருக்கம்.. இருவரும். 🤣
-
ரஷ்சிய ஏவுகணை தாக்குதல் - மயிரிழையில் உயிர் தப்பினார் உக்ரைன் அதிபர்.
உக்ரைனின் துறைமுக நகரான ஒடிசாவுக்கு கிறீஸ் நாட்டு அதிபருடன் விஜயம் மேற்கொண்டிருந்த உக்ரைன் அதிபர் அங்கு ரஷ்சியாவின் ஏவுகணைத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. ரஷ்சிய ஏவுகணை இரு தலைவர்களும் சந்தித்துப் பேசிய இடத்தில் இருந்து சும்மார் 150 மீட்டர் தொலைவில் வீழ்ந்து வெடித்துள்ளது. இருந்தாலும் இரு தலைவர்களும் உயிர்பிழைத்திருக்கின்றனர். இதனிடையே இத்தாக்குதல்.. உக்ரைனின் கடல் ரோன்களின் காப்பிடம் மீது நடத்தப்பட்டதாக ரஷ்சியா கூறியுள்ளது. மேலும் இலக்கு சரியாக தாக்கப்பட்டதாகவும் அறிவித்திருக்கிறது. உக்ரைன் கடற்படை இத்தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கிறீஸ் அதிபரோ.. சைரன் ஒலியும் கேட்டது.. ஏவுகணை வெடிப்பும் கேட்டது...நமக்கு அருகில். நமக்கு ஒளிந்து கொள்ளக் கூட போதிய அவகாசம் இருக்கவில்லை. மேலும் கிறீஸ் அதிபர்.. இங்கு போர் என்பது ஊடகங்களில் செய்தி வாசிப்பது போல் அவ்வளவு எளிதாக இல்லை.. இது வேறொரு அனுபவம்.. செவியால் கேட்பது.. கண்ணால் காண்பது என்று தனது பயபீதியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியமும் விழுந்தடிச்சு கண்டிச்சிருக்கிறது. Deadly explosions have rocked Ukraine's southern port city of Odesa as President Volodymyr Zelensky was meeting Greek PM Kyriakos Mitsotakis. Ukraine's navy says five people were killed. The BBC has been told no-one from either delegation was hurt. Mr Mitsotakis said the pair heard the sound of sirens and explosions. Russia said it targeted a maritime drone facility in a commercial port area of the city during an attack on Wednesday. During a joint news conference, the Greek prime minister said "we heard the sound of sirens and explosions that took place near us. We did not have time to get to a shelter." "It is a very intense experience... It's really different to read about the war in newspapers, and to hear it with your own ears, see it with your own eyes," he added. https://www.bbc.co.uk/news/world-europe-68492688
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
இந்தப் பிள்ளைகளுக்கு தெரியுமா.. இவர்கள் எங்களுக்கு நெருக்கமானவர்கள் அல்ல.. எங்கோ இருக்க வேண்டியவர்கள்.. இந்த வானூர்திகளில் வந்தே எங்கள் நிலங்களை அபகரித்தார்கள்.. இல்லங்களை தகர்த்தார்கள்.. பல சந்ததிகளை சொந்த நிலத்தை விட்டு ஓடச் செய்தார்கள்.. எம் தாத்தா பாட்டி.. அம்மா அப்பா... சித்தப்பா.. சித்தி.. பெரியப்பா.. பெரியம்மா... மாமன்... மாமி.. மச்சான்.. மச்சாள்.. இப்படி எம் சொந்தங்களை எல்லாம் 1986 முதல் கொக்குவிலில் ஆரம்பிச்சு.. 2009 மே வரை..முள்ளிவாய்க்கால்வரை வானில் இருந்து கொண்டு போட்டும்.. அதற்கு முன் ஹெலிகளில் இருந்து கலிபர்களால் சுட்டும்.. கிரேனேட் வீசியும் கொன்றார்கள் என்று. நான் நினைக்கிறேன்.. 1986.. கோப்பாய் வெளியில் வைச்சு.. 4 யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களை இதே சொறீலங்கா விமானப்படை தாழப்பறந்து சுட்டுக்கொன்றிருந்து. அதுவும் மாணவர் சீருடையில். இதே விமானப்படை நாகர்கோவிலில் பாடசாலை மீது குண்டு வீசி.. 19 குழந்தைகளைக் கொன்றிருந்தது. அதேபோல்.. வன்னியில்..வள்ளிபுனம் செஞ்சோலை மாணவர்கள்...65 பேரை குண்டு போட்டுக் கொன்றது. திருமலையில்.. கடற்படையுடன் இணைந்து 5 தமிழ் மாணவர்களை வேட்டையாடியது. அவர்கள் எல்லாம் இந்த பிள்ளைகளின் சொந்தம் என்று தெரியுமா..?! தெரியாது என்றால்.. அது பெற்றோரினதும்.. குறித்த பாடசாலைகளினதும் அறியாமையின் வெளிப்பாடு. இந்த நிகழ்வை யாழ் இந்துக்கல்லூரி தனது மைதானத்தை பயன்படுத்த அனுமதித்திருக்கக் கூடாது. சொறீலங்கா விமானப்படை கடந்த காலத்தில் படுகொலை செய்த சீருடை அணிந்த யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களின் படுகொலைக்கு எழுத்து மூல.. பகிரங்க மன்னிப்புக் கோராத வரை.
-
சுழிபுரம்: புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் - சுகாஷ் எச்சரிக்கை!
நான் நினைக்கிறேன் இப்படியே அடர்த்தியான.. சிங்கள இராணுவ இருப்பை நாம் சகித்துக் கொண்டிருப்போமானால்.. வலிவடக்கு முழுவதும்.. வன்னியும்.. புங்குடுதீவு போன்ற பகுதிகளும்.. சிங்கள பெளத்த மயமாகும் காலம் மறறைய இடங்களை விட விரைவாக நிகழ்ந்தேறும். ஏனெனில்.. இந்த புத்தர் சிலை வரவு என்பது சகட்டுமேனிக்கு அரசமரம் உள்ள இடமெல்லாம் வருகுது. அது சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வேலிக்குள் இருந்தால் என்ன வெளியில் இருந்தால் என்ன. மக்கள் சுகாஷிற்கு ஆதரவு வழங்காலும் விட்டாலும் பரவாயில்லை.. அவரின் இந்த வேண்டுகோளை அதிதீவிரமாகக் கொள்ளாவிட்டால்.. மாதகலை.. அழுத்து சுழிபுரம்.. சிங்களத்தின் முன்னேறிப்பாய்தலை.. புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்து.. புக்காரா (1) வீழ்த்தி.. எம் மறவர்கள் உயிர் கொடுத்து மீட்ட நிலங்கள் எல்லாம் இப்போ எம் கண் முன்னாலேயே பறிபோகிறது. நவாலி தேவாலய மக்களின் உயிர்பலிகளையும் இந்த நில ஆக்கிரமிப்பை மையப்படுத்தியே சிங்களம் மேற்கொண்டிருந்தது. குறிப்பாக சந்திரிக்கா- ரத்வத்தை கூட்டு இனப்படுகொலைக் கும்பல்.
-
என்ன பார்ட்டி இது??
நமக்கு இந்த நிலையை அடைய நிறைய காலம் இருப்பதனால்.. அடைந்தால்.. கருத்துச் சொல்லலாம். மற்றும்படி.. ஒரு ஓசிப் பார்ட்டிக்கு எப்படி எப்படி எல்லாம் ஐ டியா போடுறாய்ங்கப்பா. 🤣
- 2022.gif
-
பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!
Abortion percentage by country, in Europe--most recent data as of 2022, country average. இந்த சட்டத்திருத்தம் இல்லாமாலே நல்லாத்தானே நடக்குது. இன்னும் நல்லா நடக்கும். பிறந்தும் கொல்லுறாங்கள்.. பிறக்காமலும் கொல்லட்டும் கொள்கை வளரட்டும்.
-
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டு
- பெரும் ஆபத்தில் இலங்கை: அவுஸ்திரேலியாவிலிருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முதலீட்டாளர்களும் பெரிய அளவில் முதலீடு செய்ய வருகினம் இல்லை.. பொருளாதார ஸ்ரத்தன்மை பற்றிய அச்சம். ஆனால்.. சில முதலீட்டாளர்கள் இந்தச் சூழலை இலங்கையிலான முதலீட்டின் ஆரம்பமாக்க விளைகின்றனர்.. அதற்கேற்ப சிறிய அளவிலான முதலீடுகளை செய்ய முன்வருகின்றனர். அவர்களே முதலீடுகளை கொண்டு வருகினம். அது கல்லாப்பெட்டியை அடையாது.- 45 போலி நோட்டுகளுடன் ஒருவர் கைது; பொத்துஹரவில் சம்பவம்!
எல்லாம் ரமிழ்நாட்டு ரீல்களின் தாக்கம் தான். (அந்த தாக்கத்திற்கு உள்ளானது வீரகேசரி மட்டுமல்ல.. நாங்களும் தான்.)- என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய
முன்பக்கத்தில்.. கோவணத்துடன் ஓடிய கோத்தாவை போட்டிருந்தால்.. நூல் இன்னும் அமோகமாக ஓட வாய்ப்பிருக்கு. மேலும்.. வெளிநாட்டு சக்திகள் மட்டுமல்ல.. அனுராதபுரம் போய் சத்தியப்பிரமானம் எடுத்ததே பிழை. அது தமிழர் தலைநகரம். புத்தருக்கே பிடிக்கல்ல. அதுபோக.. நாம ஓடுவது முதல் தடவை அல்லவே. மண்டைதீவில் வைச்சும் ஓடினது தானே. அந்த வகையில் விற்பனையும் வருமானமும் தான் முக்கியம்.- பெரும் ஆபத்தில் இலங்கை: அவுஸ்திரேலியாவிலிருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அதாவது கல்லாப்பெட்டி மொத்தமும் காலி. இப்ப வந்திருக்கிற கடனுகளையும்.. வாற உல்லாசப் பயண வருவாய்களையும் வைச்சு நாடு ஓடிக்கிட்டு இருக்கு. இதில எது நின்றாலும்.. சொறீலங்கா.. குடைசாயும். ஏனெனில்.. நாட்டின் கல்லாப்பெட்டியை நிரப்ப.. கமிசன் குறூப் விடாது. அது தன் பொக்கட்டுக்களை தான் நிரப்பும். அந்த வகையில் போன மச்சான் பசில்.. மீண்டும் வந்திருக்கிறார். எனி கமிசனை ஆளாளுக்கு கொண்டு வந்து கொட்டுங்கோ. ஏய் டக்கி.. உங்க பக்கம் தான் கூடவாம். அடிச்சது காணும். இஞ்சாலும் கொட்டும்.- ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது: அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பைடன் நிர்வாகத்தின் மிகக் கீழ்த்தர சனநாயக செயற்பாடுகளையும் அமெரிக்க சனநாயகத்தின் சாக்கடை தனத்தையும் இனங்காட்டிய சிங்கம். பெட்டை வழக்கு.. கிழவி வழக்கு.. பாலியல் வன்கொடுமை வழக்கு.. கப்பம் வழக்கு.. ஊழல் வழக்கு.. புட்டினுடன் சேர்த்து தேசத்துரோக வழக்கு.. ஆவண மோசடி வழக்கு.. இப்படிப் பல... கடைசியில்... தேர்தலில் நிற்கக் கூடாது வழக்கு வரை போட்டாங்கள். சிங்கம் சீறி பாய்ஞ்சடிச்சு வெளில வந்திட்டுது. ஆனால் என்ன ஒரு சனநாயக நாட்டில்... சட்டம் எப்படி எல்லாம் தவறாக ஒரு தனிமனிதனை முடக்க பாவிக்கப்பட முடியும் என்பதை.. இது இன்னும் அரைகுரை சனநாயக நாடுகளாக விளங்கும் நாடுகளுக்கு.. பாடமாக்கி இருப்பது தான் மிகப் பெரிய ஆபத்து. குறிப்பாக தெற்காசிய சன நாய் அகம்.. இதனை லபக் என்று அள்ளிக்கொள்ளும். ரம்புக்கு எதிராக அதிகம் மறைமுகமாக உழைப்பது அமெரிக்க ஊடகங்களை விட பிபிசி தான். பிபிசி மிக பக்கச்சார்பான ஊடகம்.- ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது: அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பைடனுடன் அந்த ஒன்றுக்கும் லாய்க்கில்லாத கமலாவுக்கும் குட்பாய் சொல்லனும். அதோட சிலுங்கி.. நெஞ்சை புடுச்சிக்கிட்டே போயிடுவார். உக்ரைன் மக்கள் மீண்டும் தங்கள் ரஷ்சிய சகோதரர்களுடன் இணைந்து வாழும் காலம் உருவாகும். சொந்த சகோதரர்களை மோதவிட்டு பலவீனப்படுத்தி.. அதின் பின்.. ரஷ்சியா மீது... தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்த அமெரிக்க மேற்குலக நேட்டோ கூட்டணியின்.. உக்ரைன் நாட்டில் ஊடுருவி உருவான.. யூத ஏஜென்டு.. சிலுங்கி இப்பவே சிணுங்க தொடங்கிட்டார்.- கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத கடற்தொழில் முறை நிறுத்தப்பட்டது போல் வடக்கிலும் நிறுத்தப்பட வேண்டும் - முன்னாள் தலைவர் அன்னராச
டக்கிளஸ் நந்தி விடாது. அதன் ஏவலாளியாக இருக்கும்.. ஆளுநர் நந்திக்கு பாதகமாக ஏதும் செய்வாரா என்ன. டக்கிளசுக்கு ஏதாச்சும் ஒரு பிரச்சனை இருக்கனும். முன்னர் ரோடு விடுவிப்பு... பின் கடல் விடுவிப்பு... காணி விடுவிப்பு.. இப்ப மீனவர் பிரச்சனை...இப்படி ஏதாவது இருந்தால் தானே அவரும் பொக்கட்டை நிரப்பலாம்.. பல வழிகளிலும். - பெரும் ஆபத்தில் இலங்கை: அவுஸ்திரேலியாவிலிருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Important Information
By using this site, you agree to our Terms of Use.