Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. In April 1999, about two months after being acquitted by the Senate, Clinton was cited by federal District Judge Susan Webber Wright for civil contempt of court for his "willful failure" to obey her orders to testify truthfully in the Paula Jones sexual harassment lawsuit. For this, Clinton was assessed a $90,000 fine and the matter was referred to the Arkansas Supreme Court to see if disciplinary action would be appropriate. https://en.wikipedia.org/wiki/Impeachment_trial_of_Bill_Clinton#Public_opinion He was subsequently acquitted on all impeachment charges of perjury and obstruction of justice in a 21-day U.S. Senate trial. Clinton was held in civil contempt of court by Judge Susan Webber Wright for giving misleading testimony in the Paula Jones case regarding Lewinsky, and was also fined $90,000 by Wright. https://en.wikipedia.org/wiki/Clinton–Lewinsky_scandal#:~:text=He was subsequently acquitted on,21-day U.S. Senate trial.&text=Clinton was held in civil,also fined %2490%2C000 by Wright.
  2. ஆமாம் ஆமாம்.. அது தான் பைடன் இந்தத் தீர்ப்புத் தொடர்பில் கருத்துச் சொன்னாராக்கும். இது எதுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றால்.. எதுக்கு கருத்துச் சொல்லி மிணக்கட்டுக்கிட்டு..???! கிளிங்டன் - மோனிக்கா வழக்கில்.. முன்னாள் பின்னாள் சனாதிபதிகள் கருத்துச் சொன்னவையாக்கும்..??! ஆமாம் ஆமாம்.. நாசா சொல்லுறதெல்லாம்.. மிகவும் நம்பத்தகுந்தவை.. மற்றவை எல்லாம் பொய்..! இதுவே தங்கள் தத்துவார்த்தம். நீங்கள் அதற்குள் கட்டுண்டு கிடப்பதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. 😜
  3. வரவேற்கிறோம் சகோதரா. அவர்கள் வாழ்ந்ததும் நமக்காக.. இறந்ததும் நமக்காக.. வாழ்ந்தாலும் நமக்காக.. என்ற எண்ணம் எப்போதும் எம்மோடு இருக்க வேண்டும்.
  4. பரீட்சை முடிவுகள்.. பிரத்தியேகமானவை.. எதிர்கால தேவைக்கு என்றது போய்.. சமூக ஊடகத்தில்.. தம்மைப் பெரிசாகக் காட்ட போடும் வேடமாகிவிட்டது. உங்கள் பரீட்சை வெற்றிகளை உங்கள் சொந்தங்களோடு உங்கள் வெற்றியில் பங்களித்தவர்களோடு நன்றி செலுத்தி கொண்டாடி மகிழ்வது வேறு.. சமூக ஊடகத்தில் பொதுவெளியில் விளம்பரப்படுத்துவது தவறு.
  5. ஹிந்திய தேர்தல்களால்.. ஈழத்தமிழருக்கு ஒரு விமோசனமும் இல்லை. மோடி வந்தால் என்ன மூடி வந்தால் என்ன. 🤣
  6. ஏன் சலித்துக் கொள்கிறீர்கள். அவர்கள் வேறு யாருமல்ல.. உங்கள் சகோதர சகோதரிகள் மாமன்கள் மாமிகள்.. மச்சான்கள் மச்சாள்கள். எந்த உறவுமே அல்லாத சிங்களவனை ஆயுதத்தோடு சேர்த்து வைச்சு கூடி வாழப் பழகிவிட்ட வடக்குக் கிழக்கு தமிழர்களுக்கு.. இதைக் கேட்பதில் என்ன சலிப்போ..??!
  7. Michael Cohen accused of lying over phone call at Trump hush-money trial Donald Trump’s lawyer on Thursday attacked the core charge against the former president as he sought to undercut Michael Cohen, the former attorney whose $130,000 hush-money payment to the adult film star Stormy Daniels is at the heart of the criminal trial in New York. As Cohen returned to the stand for the third day, Blanche suggested Cohen’s latest objective was to see Trump go to jail, seeding the possibility that he might have also lied about the extent of Trump’s involvement in the hush-money scheme with Daniels. https://www.theguardian.com/us-news/article/2024/may/16/michael-cohen-cross-examination-trump-trial இந்த வழக்கில் ரம்பை சிக்க வைக்க பல பொய்கள்.. உருட்டுக்களை நடப்பு பைடன் அரசு சார்ப்பு ஆட்கள் செய்திருக்காங்க. அமெரிக்காவின் நீதித்துறை வெளியார் செல்வாக்குகளுக்கு உள்ளாகி இருப்பது வெளிப்படை. இது அமெரிக்காவின் நீதித்துறையை கேலிக்குரியதாக்கி இருக்கிறது.
  8. புலிகள் காலத்தில் எம் ஜி ஆர்- இந்திரா.. வி பி சிங்.. ஜார்ச் பெர்னான்டஸ் காலங்களைத் தவிர.. ஹிந்திய நடுவன் அரசுத் தேர்தல் ஈழத்தமிழர்களுக்கு முக்கியமாக அமைந்ததில்லை. அதே நிலை தான் தமிழகத்திலும்.. எம் ஜி ஆருக்கு பின்.. ஈழத்தமிழர் நிலைப்பாட்டில்.. தமிழக தேர்தல்கள் சாதகமான செல்வாக்குச் செய்யவில்லை. மாறாக.. தி மு க - கூட்டணி வெற்றியும் சரி.. அதிமுக-கூட்டணி வெற்றியும் சரி.. ஈழத்தமிழருக்கு பாதகமாக அமைந்ததே யதாத்தம். சிறு ஈழத்தமிழர் ஆதரவுக் கட்சிகளால்.. எம் ஜி ஆருக்கு பின் ஈழத்தமிழர் சார்பு நிலைப்பாட்டை எடுக்க முக்கிய கட்சிகளை வலியுறுத்தக் கூடிய வலிமை இருக்கவில்லை. அதனால் தான் தனித்து நிற்கும் நாம் தமிழரின் வெற்றியையும்.. நாம் தமிழரின் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டையும் மையப்படுத்தி.. ஈழத்தமிழர்கள்.. குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழர்கள்.. நாம் தமிழரின் வெற்றியை தார்மீக எதிர்பார்ப்புடன் கடந்து செல்கின்றனர்.. தேர்தலுக்கு தேர்தல். நாம் தமிழர் பெரிய மாற்றத்துக்கான சிறிய புள்ளியாக இருக்க முடியுமே தவிர.. அது பெரிய மாற்றத்துக்கான பெரிய சக்தி அல்ல. ஆனால்.. தேர்தலுக்கு தேர்தல் நாம் தமிழரின் செல்வாக்கு தமிழகத்தில் உயர்ந்து செல்வதை நாம் தமிழர் கட்சி சாதகமாக்கி மக்களை ஏமாற்றத்துக்கு இடமளிக்காது தொடர்ந்து தூய அரசியலை முன்னெடுத்தால்.. நிச்சயம்.. நாம் தமிழர் தமிழகத்தில் வலுவான மாற்றுச் சக்தியாக வளர இடமுண்டு. அது திராவிடக் கூத்தாடிகளின் ஈழத்தமிழர் எதிர்ப்பு மனநிலைக்கு முடிவு கட்டவும்.. தமிழ் நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்க முடியும். ஆனால்.. எனி தமிழகத்தில்.. ஒரு ஈழத்தமிழர் சாதக மாற்றம் வந்தாலும்.. இலங்கையில் அதன் செல்வாக்கு என்பது எந்தளவுக்கு.. ஈழத்தமிழினத்துக்கு சாதகமான விளைவுகளைக் கொணரும் என்பது கேள்விக்குறியே. ஏனெனில்.. ஹிந்திய நடுவன் அரசுகளின் நிலைப்பாடு தொடந்து ஈழத்தமிழர் விரோத.. சிங்கள பெளத்த பேரினவாத ஆதரிப்பாகவே இருந்து வருகிறது. இதில் மாற்றம் என்பதை நாம் தமிழர் சாதிக்க முன்.. ஈழத்தில் ஈழத்தமிழருக்கான அடையாளம் எஞ்சி இருக்குமோ என்பது சந்தேகமே. அந்த வகையில்... இந்த ஹிந்திய தேர்தல்களுக்கு ஈழத்தமிழர்கள் முக்கியம் கொடுப்பது என்பது.. அநாவசியமான காலவிரயமான விடயங்களே. வெறும் எதிர்பார்ப்பற்ற பார்வையாளர்களாக இருந்து கொள்வதே சிறப்பு.
  9. அமெரிக்க நீதித்துறை அரசியல்மயமாகி விட்டது ஆச்சரியமில்லை. அமெரிக்க சனநாகயமே தூக்கில தொங்கிக்கிட்டு கிடக்குது. இதில.. நீதித்துறை சொல்லி வேலையில்லை. ரம்ப் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் வெளி வருவார். தேர்தலிலும் வெல்ல வாய்ப்பிருக்குது. வென்றால் பைடனும் குடும்பமும் இதே நீதித்துறையால்.. 340 குற்றங்களுக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு அமெரிக்க நீதித்துறை அரசியல்மயமாகிவிட்டது. டொலருக்கு அடிமையாகிவிட்டது. Thousands of U.S. judges who broke laws or oaths remained on the bench https://www.reuters.com/investigates/special-report/usa-judges-misconduct/
  10. முள்ளிவாய்க்காலை ஒத்த தாக்குதல். முள்ளிவாய்க்காலில் முடியட்டும் என்று விடுப்பு பார்ப்பு. காசாவுக்கு அறிக்கை.. ஏனெனில்.. மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளின்.. ஆதரவு வளங்கள்.. சில முக்கிய மேற்கு நாடுகளுக்கு அவசியம் என்பதால்.
  11. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புப் படைக்கூலிகள் செய்தால்.. தமிழ் அதிகாரிகளும் அடங்கி விடுவினம். இது தெரியாதா.. இது தெரியாமல் என்ன அரசியல் செய்கிறீர்களோ..?! காலங்காலமாக இதுதானே நடக்குது சிங்கள பெளத்த இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ்.
  12. இதுவும் சிங்கள பெளத்த இனப்படுகொலை இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிச்ச கணக்குத்தான். அதற்காக புலிகள்.. தமிழ் மக்கள் மீதான பயம் இல்லாமல் போயிருந்தால்.. எதற்கு இன்னும் ஆக்கிரமிச்சு நிற்கனும்.. தமிழர்களின் நிலத்தை. சாதாரண சிங்களவர்கள் வந்து வெசாக் அலங்காரமா செய்கிறார்கள். ஏன் இராணுவம் அடாத்தாச் செய்யனும்..??!
  13. தனக்கும் தன் சார்ந்த சமூகத்திற்கும் நிகழ்ந்த மகா கொடுமைகளை.. இத்துணை அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் விட்டுக்கொடுப்புக்கோ.. அடிபணிவுக்கோ.. சமரசத்துக்கோ.. இணக்கத்துக்கோ வாய்ப்பளிக்காமல்.. உலகிற்கு உணர்த்த போராடும் இந்த தாய்க்கு உண்மையான பாராட்டுக்கள். இன்னொரு பூபதியம்மாவைக் காண்பது போன்ற உணர்வு. இவா.. எங்க.. சிங்கள இராணுவம் காட்டும் வேடிக்கையை விடுப்புப் பார்க்கப் போகும் கூட்டமெங்க.
  14. சொறீலங்காவில் இருந்து சொறீலங்கா புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் இருக்கும் விமான நிலையம் ஊடாக ஹிந்தியா போகும் வரை.. இவர்களை சொறீலங்காவுக்கு ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகள் என்று தெரியல்லையாம்... இப்ப தானாம் தெரியுது..??! சொறீலங்கா திட்டமிட்டு ஹிந்தியாவில் உயர் பதவியில் இருக்கும் யாரையோ கொல்லச் சொல்லி இவர்களை ஏவி விட்டிருக்கலாம். இப்ப பிடிபட்டதும்.. ஐ எஸ் ஐ எஸ் என்றும்.. தெரியாத மாதிரியும் நடிக்கக் கூடும். சொறீலங்கா குறித்த ஹிந்தியாவின் அணுகுமுறை தவறு என்பதற்கு.. இதுவும் நல்ல உதாரணம்.
  15. அப்போ தாங்கள் இலங்கை வாழ் இந்துக்களை இனக்கலவரங்கள் மூலமும் சிங்கள பெளத்த இராணுவ ஆக்கிரமிப்பு.. போர் மூலமும் கொன்று குவித்ததும்.. அதனை ஹிந்தியா விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்ததும்.. கூட உதவி நின்றதும்.. எந்த வகைக்குள் அடங்கும்...?! அப்ப ஏன் சொந்த நாட்டில் வாழும்.. இந்துக்கள் குறித்து இவருக்கு அக்கறை வரவில்லையாம்..?! இவரிடம் கேள்வி கேட்க உருப்படியான தமிழர்கள் சொறிலங்கா பாராளுமன்றத்தில் இல்லை.. அல்லது தூக்கமோ தெரியவில்லை.
  16. விடுப்புப் பார்ப்பதற்கும்.. விரும்பிப் போவதற்கும் வித்தியாசம் உள்ளது. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு இராணுவம் விடுப்புக்காட்ட அதை.. வேடிக்கை விடுப்பு பார்க்கப் போகின்றனர் வேலைவெட்டி இல்லாது வெளிநாட்டுக் காசில் வாழும் தமிழர்கள்.
  17. விடுதலைப்புலிகள் சும்மா சிங்களவர்களைக் கொல்லவில்லை. ஒன்றில் ஊர்காவல் படை என்ற பெயரில் ஆக்கிரமித்து நின்ற சிங்களவர்களை தாக்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு வந்த சிங்களவர்களை தாக்கினார்கள்.. சிங்கள முப்படை பொலிஸ் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்களை தாக்கினார்கள். தென்னிலங்கை தாக்குதல் சம்பவங்கள் வடக்குக் கிழக்கில் சிங்களப் படைகளும் ஊர்காவற்படையும் செய்த படுகொலைகளின் பழிவாங்கல் மட்டுமே. சிங்களப் படைகள் 2 இலட்சம் தமிழர்களைக் கொன்றிருந்தால்.. புலிகள் ஒரு 2000 சிங்களவர்களை தான் கொன்றிருப்பார்கள். அதிலும் பல சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தாக்குதல்களில்.. தவிர்க்க முடியாமல் நிகழ்ந்த இழப்புக்கள். இதற்கும் திட்டமிட்டு இன அழிப்பு நோக்கில் சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளும் படைகளும் கொன்ற தமிழர்கள்..ஈடாக மாட்டார்கள்.
  18. இருந்தாலும் எங்கள் பங்களிப்பையும் வழங்கி உதவி இருக்கிறோம். ஏதோ நல்லது நடந்தால் சரி.
  19. https://www.justgiving.com/campaign/kilipeople-jmfoa-uk-emf2024 https://www.justgiving.com/search?includeBoostedQuery=true&q=KILIPEOPLE%20 https://www.justgiving.com/search?includeBoostedQuery=true&q=KILIPEOPLE%20 மொத்தமா எத்தனை பேர் ஓடுராய்ங்க. ஏன் ஆளாளுக்கு ஒரு கணக்குத் திறந்து சேகரிக்கினம்..?! இது இவைட நோக்கம் நல்லமா இருந்தாலும்.. கேள்விக்குரியதாக்குகிறது..!!
  20. நன்றி சுவி அண்ணா. =================== உண்மையில் இது ஒரு உண்மைச் சம்பவத்தை ஒட்டிய கிறுக்கல். காலை நேரம்.. வேலைக்கு கிளம்புகிறான் அந்த பையன். தன் துணைவி.. குடும்பத்திற்காகவும்.. தனக்காவும்.. நனிகுளிர் காலத்தின் அந்த நடுங்கும் குளிருக்குள் இருந்து தப்ப.... இழுத்துப் போர்த்திக் கொண்ட ஜாக்கட்டுக்குள் பதுங்கிய படி.. தொடரூந்தில் ஏறி அமர்கிறான். அதுவரை எதனையும் அவதானிக்காதவன்.. எதிர்முனையில் அமர்ந்திருந்த அந்த இளம் பெண்ணை காண்கிறான். தலையில் கறுத்த முக்காடு.. ஓரளவு மேக் கப்.. ஆனாலும் அவளுக்குள் ஏதோ ஒரு படபடப்பு என்பதை பார்த்த மாத்திரத்தில் உணர்ந்துவிடுகிறான். இருந்தாலும்.. அந்த நாட்டுச் சட்டப்படியும்.. அவனின் மனச்சாட்சிப்படியும்.... ஒருவரை அதிக நேரம் உற்றுப் பார்ப்பது.. வரவேற்கப்படவில்லை.. என்பதால்.. தன் நீளக்காற்சட்டை பொக்கட்டுக்குள் இருந்த போனை எடுத்து நோட்ட மிடுகிறான்.. என்ன ஒரு அதிர்ச்சி. எதிர்முனையில் அமர்ந்திருந்த பெண்.. அழுவது விம்பமாக விழுகிறது மீண்டும் அவன் கண் திரையில். எதற்கும் உறுதி செய்து கொள்ள நோட்டமிடுகிறான். ஆம் அவள் அழுகிறாள் தான். கண்ணீர் தாரையாகி கன்னங்களில் வழிந்தோடிய நெடிய கோடுகள் இரண்டு.. இரண்டு பக்க விழிகளின் கீழும்... பேட்டிருந்த மேக் கப்பை கழுவித்தள்ளியபடி.. வழிந்தோடி இருந்ததன் அறிகுறிகள் அவை. சிறிது நேரத்தில் மீண்டும் அதிர்ச்சி. தன் கைப்பையில் இருந்த பேனை எடுத்து தான் அழுவதை ஒரு செல்பி எடுக்கிறாள் அந்த இளம்பெண். அதனை அவசர அவசரமாக வாட்ஸ் அப் வழியாக அஞ்சல் செய்வது தெரிகிறது. மீண்டும்.. போனை கைப்பையில் இடுகிறாள். மீண்டும் இவன் நோட்ட மிடுகிறான். அவள் கண்களில் மீளவும்.. கண்ணீர் திரண்டு வழிகிறது. மீண்டும் செல்பி எடுக்கிறாள்.. இப்படியே.. செய்து கொண்டிருந்தவள்.. அவளின் தரிப்பிடம் வந்ததும் இறங்கிச் சென்று விடுகிறாள். ஆனாலும்.. அந்தப் பையனுக்குள் ஒரு கேள்வி.. அவளின் பரிதவிப்பு.. கண்ணீர் எல்லாமே.. பட்சாபத்திற்குரியது என்றாலும்.. எதற்கு அதனை செல்பி ஆக்கினாள்.. அஞ்சல் செய்தாள்.....???! விடை காண தேவையற்றவனாயினும்.. தனக்குள் எழுந்த வினாக்களோடு.. உலக மனித நடத்தைக் கோலங்களின் மாற்றங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதவனாய்.. தன் வேலையிடம் நோக்கிப் போகிறான் அவன். வினாக்களுக்கோ விடையில்லாமலே தன்னைச் சுற்றிய உலகத்தில் நடப்பவற்றை எல்லாம் நொந்தபடி...!
  21. தடம்புரண்டோடும் மனித வாழ்வில் தடம்புரளா வண்டி போல் அவன் தடம்பற்றி ஓடும் வண்டி ஒன்றில் தபுதாரனற்ற ஒருத்தன் தவிப்பில் அவள் தவிர்க்க முடியாது தவித்த அவன் விழிகள் தத்தை அவள் தகிக்கும் வதனம் காண...... தண்ணீர் போல் கண்ணீர் தத்தளிக்கும் துளிகள் தரவரிசையாய் சரிகின்றன. தவிக்கிறது அவன் மனசு தரமறியாது தவிர்க்கிறது வார்த்தை உதிர்க்க.. தவிர்த்த விழிகள் தகர்ந்து போகின்றன தகரடப்பா போல் போனுக்கு தத்தை அவள் கண்ணீர் கோலம் தரவாகிறது தகவலாய் மறுமுனை தாவ தத்தையும் தேடுறாள் பட்சாதாபம்...! தகர்கிறது தண்ணீராய் ஓடிய அவள் கன்ன அருவியில் தகரும் அவள் வதனப் பூச்சொடு தத்தை மேல் வைத்த காருணியம். தவித்தே போகிறது அவன் மனம் தரணியில் மனிதக் கோலங்கள் கண்டே...!
  22. இப்ப விளங்குது.. தேரர்களின் உடல் வலிமையை எப்படி இருக்கென்னு. பாவம் புத்தருக்கு இது விளங்கேல்ல.
  23. நல்ல காலம் கடலுக்க இறங்காமல் விட்டிச்சே.. சொறீலங்காவின் தட்டுவண்டி.
  24. அப்ப.. மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி.. ஓஓஒ.. அது புலிகள் இருக்கும் வரை தங்களின் கோசமோ..?! தாடியருக்கு அறளை பெயர்ந்துவிட்டது. எனியாவது.. ஒட்டுக்குழு அரசியலில் இருந்தும்.. ரவுடித் தனத்தில் இருந்தும் விடைபெற்றுக் கொள்வது சிறப்பு. ஏனெனில்.. தாங்கள் கடந்து வந்த தங்களால் நிறைந்த.. சொந்த இனத்தின்.. இரத்தக்கறை படிந்த பக்கங்களை அறிந்த மக்கள் பலர் இன்னும் வாழ்கிறார்கள்.. தாடியர்.
  25. இதைக் கூட தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக திராவிட ஆட்சியாளர்களும் செய்யவில்லை.. நாம் தந்தை நாடு என்று சொல்லிக் கொண்டு இன்று வரை ஏதோ ஒரு வகையில் தாங்கி நிற்கும் ஹிந்தியாவும் செய்யவில்லையே..???! நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும்... அது இன்று வரை தொடர்கின்ற நிலையிலும்..!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.