Everything posted by nunavilan
-
புடின் கைது செய்யப்படுவாரா..! சர்வதேச அளவில் பரபரப்பு
Sorry not sorry, says Mongolia after failure to arrest Putin. https://www.politico.eu/article/mongolia-failure-arrest-vladimir-putin-international-warrant-international-criminal-court/
-
யாழில் சர்வதேச விளையாட்டு மைதானம் – சஜித் வாக்குறுதி
சஜித் அள்ளி எறிகிறார் வாக்குறுதிகளை. சுமந்திரன் சொல்கிறார் தனக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் நாடே அழியுமாம். சி எம் ஆர் இணைய வானொலி.
-
வடக்கு கிழக்கை மையப்படுத்தி சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு; சஜித் அறிவிப்பு!
சரியாக தேர்தல் நேரம் ஒத்துளைப்பு மாநாடு நடாத்த தீர்மானித்துள்ளார். என்ன ஒரு கரிசனை???
-
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக முதலைக்கண்ணீர் வடிக்கும் ஜனாதிபதி - வே. இராதாகிருஷ்ணன்
அவர் எத்தனை உறுதி மொழிகளை தந்து ஏமாற்றி உள்ளார். அப்போதும் நம்மில் சிலர் அவருக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளோம்.
-
தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!
https://www.facebook.com/watch?v=1071579011636009 ஜனாதிபதி தமிழ் மக்களை மீண்டும் பழிவாங்குகிறார்.!! பக்கா அரசியல்வாதி என்பதை இதை தானோ??
-
இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை நிறுத்தம். - பிரித்தானியா!
பிரிட்டனின் நேர்மையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.🙃
-
பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.
https://www.ilmessaggero.it/AMP/en/rigivan_ganeshamoorthy_from_world_records_to_social_media_stardom-8329777.html
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
, சிங்களமும் இந்தியாவும் அன்றும் இன்றும் என்றும் தமிழர்களுக்கு எதிராக தோளோடு தோள் நின்று செயற்பட்டார்கள், செயற்படுகிறார்கள். ஜே வி பியை அடக்க கூட இந்திய ராணுவம் அழைக்கப்பட்டது.
-
பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.
வாழ்த்துக்கள் ரிஜிவன். 2024 லும் தனது தோலின் நிறம் பற்றி சமூக ஊடகங்களில் சிலரின் கருத்துக்கள் மன வருதத்தை தந்ததாக குறிப்பிட்டுள்ளார். 2015ல் வாகன விபத்தில் தனது ஒரு காலையும் , மனைவியையும் இழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து
-
போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்ட இஸ்ரேல் - ஹமாஸ்: இதுதான் காரணம்
நத்தனியாகுவுக்கு எதிராக ரெல் அவிவில் ஊர்வலம்
-
ஐ.எம்.எப் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர ரணிலுடன் அல்ல : அனுர பகிரங்கம்
பாணுக்கான வரிசையை இப்போதே மக்கள் ஆரம்பிக்கலாம்.
-
தனிநாடு எனது நோக்கமில்லை; - தமிழ் பொதுவேட்பாளர்
அப்போ பொது கூட்டமைப்பு வேட்பாளருக்கான முக்கல் எதற்கு???
-
தனிநாடு எனது நோக்கமில்லை; - தமிழ் பொதுவேட்பாளர்
ரனில், சஜித், அநுர என்ன செய்வார்கள் என சொல்லுங்கள்? மிக ஆவலாக உள்ளோம்.
-
நாலு வருடங்கள் தனிமைச் சிறையில்
இப்படி ஒருவர் புளோறிடாவில் (என நினைக்கிறேன்) சில காலங்களுக்கு முன் பிடிபட்டவர். இதுவும் ஒரு மன நோய் தான்.
-
Telegram app founder Pavel Durov arrested at airport in France
Telegram Creator on Elon Musk, Resisting FBI Attacks, and Getting Mugged in California
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
மொத்தத்தில் தமிழரசு கட்சியையே மக்கள் நிராகரிக்க வேண்டும். எரியும் நெருப்பில் கொள்ளி பொறுக்குபவர்களாக உள்ளார்கள்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தமிழரசு கட்சியில் இருந்து பொது வேட்பாளராக அரியநேந்திரன் போட்டியிட்டது கட்சிக்கு விரோதமானது என்றனர். இப்போ சஜித்துக்கு ஆதரவு என்று ஒரு சிலர் அக்கட்சியில் இருந்து அறிவித்து இருப்பது கட்சிக்கு விரோதமானதில்லையா?? முஸ்லிம்களும் ஜனாதிபதி வேட்பாளர்களாக உள்ளனர்? எம்மை மாதிரி குடும்பி பிடி சண்டை இல்லையே? ஏன்? அவர்களும் சிறுபான்மையினர். அதே போல் மலையகத்தின் இருந்தும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் உள்ளார். யாரும் அவருக்கு சேறடித்ததாக தெரியவில்லை.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சிறிதரன் வெளிநாட்டில் காய்(சு)களை நகர்த்த உள்ளூர் காய்கள் உள்ளூரில் காய்களை நகர்த்துகிறார்கள்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சாணக்கியனும் சுமந்திரனும் சஜித்துக்கு வாக்கை போட சொன்ன படியால் தமிழ் மக்கள் நான் முந்தி நீ முந்தி என வாக்களிக்க போகிறார்கள். மிக முக்கியமாக தமிழருக்கு தீர்வொன்று வர போகிறது. மேற்கு நாடுகளுக்கும் ஒரு செய்தியை சொல்ல போகிறோம்.
-
தமிழரசுக்கட்சியின் திருகோணமலை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு
https://m.facebook.com/story.php/?story_fbid=528282889572876&id=100071735088932 இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் தமிழ் மக்களின் 8 சத வீத வாக்குகளை ஒன்றாக வைத்திருக்கும் பட்சத்தில் அவை தான் ஜனாதிபதி வேட்பாளாரை நிர்ணயிக்கும் என கூறியுள்ளார்.
-
அழகு நிலவே
எப்படி நான் சொல்வேனடி ஸ்ரிவ் கிளிவ், ஜொனிதா காந்தி
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
உண்மையும்..!!! புரளியும்...!!! CTC அமைப்பினால் நடாத்தப்பட்ட TAMIL FEST நிகழ்ச்சியின் எதிரொலியாக, Tamil ONE தொலைக்காட்சி ஊடக நிறுவனத்தின் வாகனம் எரியூட்டப்பட்டதான செய்தி வன்மையான கண்டனத்துக்குரியது என்பதை ஒரு ஊடகவியலாளனாகவும், பொதுமகனாகவும் பதிவு செய்கிறேன். எனினும், TAMIL ONE நிறுவனத்தின் அலுலக வளாகத்தில் வைத்து வாகனம் எரியூட்டப்பட்டமைக்கும், TAMIL FEST நிகழ்வுக்கும், முடிச்சுப்போடும் ஆதாரங்கள் உள்ளனவா ? அல்லது ஊகங்களின் அடிப்படையில் வதந்திகள் பரப்பப்படுகின்றனவா? என்ற மூலங்கள் ஆராயப்படவேண்டும். அத்துடன், TAMIL ONE நிறுவனம் அல்லது காவற்துறைத் தரப்புக்கள் தமது சந்தேகங்கள் விசாரணைகள் குறித்து தெளிவுபடுத்துவார்கள் என்று நம்புகிறேன். மேலும், TAMIL FEST நிகழ்வை ஒட்டியதாக இடம்பெற்ற, முட்டைகள் வீசப்பட்டமை, பதாகைகளை எரித்தமை, தகாத வார்த்தைப் பிரயோகங்கள், மதிப்பிற்குரிய பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களை அவமரியாதை செய்தமை போன்ற சம்பவங்கள் கண்டனத்துக்குரியவை மட்டுமல்ல; கவலைக்குரியதுமாகும். எனினும், சமூக அக்கறையோடும், ஆதங்கங்களின் எதிரொலியாகவும், மக்கள் தமது ஜனநாயக உரிமைகளின் பிரகாரம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையோ? புறக்கணிப்பில் ஈடுபட்டதையோ ? கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் எனக்கு இல்லை. பேச்சுரிமை, கருத்துரிமை, உணர்வு வெளிப்பாட்டுரிமை கொண்ட நாடு, கனடா. ஒரு பொது அமைப்பிடம் கேள்வி கேட்கும் அனைத்து உரிமையும் மக்களுக்கு உண்டு. அந்த உரிமைகளை மதிக்கவேண்டிய கடப்பாடும் அந்த அமைப்புக்கு உண்டு. ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமைகளையோ, புறக்கணிப்புச் செய்யும் உரிமைகளையோ கனடாவின் சட்டங்கள் மறுக்கவில்லை. அவ்வாறு மறுப்பதும், அவற்றுக்குத் தடை ஏற்படுத்துவது உரிமை மீறலாகும். காவற்துறையின் கண்காணிப்பு மற்றும் பிரசன்னத்துடன் மக்களின் உணர்வு வெளிப்பாடுகள் எதிரொலித்ததை நேரிலும், காணொளிகள் ஊடாகவும் பலரும் கண்ணுற்றனர். ஆயினும், மக்களின் உணர்வு வெளிப்பாடுகளின் அபாயங்கள் குறித்து ஒரு ஊடகவியலாளனாக அதனைத் தவிர்ப்பதற்கான அவசர வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தேன். சமூக அமைப்புக்களாலும், குழுக்களாலும் விடுக்கப்பட்ட தெருவிழா புறக்கணிப்பு, மற்றும் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆகிய அறிவிப்புக்களை அவதானித்த பின்னர், அத்தெரிவுகளில் அபாயங்கள் அற்ற, அதேவேளை அசம்பாவிதங்களைத் தவிர்க்கக்கூடிய தெரிவு, புறக்கணிப்பு என்பதை கனேடியத் தமிழர் கூட்டு பரிந்துரை செய்திருந்தது. அத்தெரிவு, அபாயங்கள் அற்ற அதேவேளை, கனதியான செய்தியைப் பிரதிபலிக்கும் ஒரு தெரிவாக நானும் கருதினேன். ஆகவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, புறக்கணிப்பு என்ற சமுகத்தின் தெரிவை ஜனநாயகத் தெரிவாகப் பரிந்துரைத்திருந்தேன். எனினும், கருத்துக்களை, செய்திகளை மக்களிடம் நாம் தெரிவிக்கலாம். ஆனால், அவர்கள் தான் முடிவெடுக்கும் சக்தி. அந்த மகா சக்தியை முடக்கும் வல்லமை உலகில் எந்த அரசுகளிடமும் இல்லை. அதனால் தான், ஜனநாயகக் கோட்பாடு (Democratic Theory) மக்களின் உரிமைகளை மதிக்கும் உயரிய கோட்பாக உலகில் போற்றப்படுகிறது. எனினும், கனடாவில் தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பதாக தன்னை அடையாளப்படுத்தும் CTC, அந்த மக்களின் கருத்துக்களை, உணர்வுகளை மதிக்காமல் பல்லாண்டுகளாகப் புறக்கணிப்புச் செய்துவந்ததன் கூட்டு எதிரொலியின் பிரதிபலிப்பே இது. இது இன்றோ ? நேற்றோ ? திடீரென்று ஏற்பட்ட உணர்வு வெளிப்பாடு அல்ல. நீண்டகாலமாக புகைந்துகொண்டிருந்த மக்கள் கோபத்தின் வெளிப்பாடு. எனினும், தம் மீதான விமர்சனங்கள் மற்றும் குற்றச் சாட்டுக்களை புறம்தள்ளி TAMIL FEST ஐ நடாத்த CTC எடுத்த மூடத்தனமான முயற்சி, மக்கள் தம்பக்கம் என்ற அவர்களின் விம்பத்தை முதன்முறையாக உடைத்துவிட்டது. பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்றகும் மக்கள் தொகையே, தமக்கான ஆதரவுத் தளம் என்று காண்பிக்க CTC கையாண்ட மூலோபாயம், முட்டுச் சந்தியில் முடங்கிப்போனது. கடந்த பல வருடங்களாக, கருத்தியற் தளத்தில் மக்களையும், ஊடகங்களையும் சந்திக்க CTC மறுத்து வந்ததன் விளைவே இது. தமிழினப்படுகொலையை பகிரங்கவெளியில் ஒப்புக்கொள்வதற்கே 15 ஆண்டுகள் CTC குத் தேவைப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வாண்டு இடப்பெற்ற தமிழினப்படுகொலை நினைவு வணக்க நிகழ்வைக் கூட ஒரு பொது நிகழ்வாக நடத்தாமல், மூடிய அறைகளுக்குள் தமது குறிப்பிட்ட ஆதரவாளர்களுடன் மட்டும் நடத்தும் அளவுக்கு, CTC க்கும் மக்களுக்குமான இடைவெளி பேணப்பட்டது என்பது எவ்வளவு பெரிய இழுக்கு. ஒரு ஊடகவியலாளனாக, CTC யின் நிர்வாகப் பிறழ்வுகள், இமாலயப்பிரகடன விவகாரங்கள், இலங்கை அரசுக்கும் அவர்களுக்குமான தொடர்புகள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும், CTC யால் நடாத்தப்படும் TAMIL FEST சார்ந்தும் உள்ள சர்ச்சைகள், குறித்தும் என்னால் இயன்றளவு சமூகத்திற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கான பங்களிப்பை நான் ஆற்றியுள்ளேன். எனது, கடந்த 8 மாதகால Facebook பதிவுகளை பின்னோக்கிப் பார்ப்பதன் ஊடாக இவற்றின் பின்னணி குறித்த அனைத்துத் தரவுகளையும் நீங்கள் தெரிந்தும் புரிந்தும் கொள்ளலாம். மேலும், சக ஊடகவியலாளரான Lankathas Pathmanathan அவர்களின் பதிவுகள் மற்றும் அவரது 'தேசியம்' இணையப் பதிவுகள் ஊடாகவும், அனைத்துத் தரவுகள், தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். கனேடியத் தமிழ் வாசகர்களுக்காக பிரத்தியேகமாக கனடாவின் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் தகவல்கள் பலவற்றையும் அவரது இணைய, மற்றும் சமூகவலைத் தளங்கள் வழங்கி வருகின்றன. மேலும், சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக, கடந்த வாரம் August 20 ஆம் திகதி பிரத்தியேக நேரலை ஊடாக, பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் ‘கருத்தாடல்’ நிகழ்ச்சி ஒன்றை நான் நெறிப்படுத்தியிருந்தேன். 2 மணிநேரம் 45 நிமிடம் இடம்பெற்ற அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது தரப்புக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்களுக்கு CTC தரப்பில் இருந்து சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், இவ்வாறான அசம்பாவிதங்கள் அனைத்தையும், தவிர்ப்பதற்கான அத்தனை சந்தர்ப்பங்களும், கனேடியத் தமிழர் பேரவையிடம் இருந்தது. எனினும், சமூகத்தின் கோரிக்கைகளை செவிமடுத்து, சமரசம் செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. சமூக உணர்வுகள் கொந்தளிப்பாக இருப்பதை உணர்ந்தும், அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க CTC கடைசிவரை தயாராக இருக்கவில்லை. ஒரு குருட்டு நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. இந்நிலையில், TAMIL FEST க்கு அனுசரணை வழங்கும் வணிக நிறுவனங்கள், நிகழ்ச்சிகளை வழங்கும் கலைஞர்கள் எனப் பலரும் நிகழ்ச்சி இடம்பெறும் நாளுக்கு முன்பாகவே பின்வாங்கத் தொடங்கிவிட்டனர். கனடாவில் தமிழ் சமூகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் ஒருவரைத் தவிர, வேறு எவரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதை எனது முன்னைய பதிவிலேயே தெளிவாகத் தெரிவித்திருந்தேன். அத்துடன், கனேடியப் பிரதமர், எதிக்கட்சித் தலைவர், மற்றும் மூன்றாம் நிலை எதிர்கட்சித் தலைவர் உட்பட வழமையாக திருவிழாவில் பிரசன்னமாகும் கனேடிய அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்பதையும் எனது முன்னைய பதிவில் சுட்டிக்காட்டி இருந்தேன். இவை அனைத்தும் நான் வானத்தை அண்ணாந்து பார்த்து அறிந்துகொண்டவை அல்ல. CTC எதிர்கொண்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு அவர்கள் ஆற்றிய எதிர்வினைகளை அவதானித்த அனைவருக்கும் தெரிந்த விடயம். எனவே, இந்த இக்கட்டான சூழலை, தமது ஆக்கபூர்வமான நகர்வுகள் ஊடாக எதிர்கொள்ளக்கூடிய பந்து CTC தரப்பிடமே இருந்தது. எனவே, போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை மொக்குத்தனமாக அனுமதித்து, அவற்றின் ஊடாக அனுதாபத்தைப் பெற்று, தமது தவறுகளை மூடிமறைக்க CTC தரப்பு முயன்றுள்ளது என்ற சமூகத்தின் சந்தேகம் இங்கே வலுப்பெறுகிறது. இந்நிலையில், தெருவிழாவின் முதல்நாளில், தமது தவறுகளுக்கு மன்னிப்புகோருவதாக CTC யின் தற்போதைய தலைவர் குமார் (இ)ரட்ணம் அவர்கள் ஒரு பட்டியலை வெளியிட்டபோதிலும், அவை மக்களின் நன்மதிப்பை அறுவடை செய்யவில்லை. நமது சமூகம், CTC யின் அறிக்கைகளில் நம்பிக்கை இழந்து பலகாலம் ஆகிவிட்டது. நம்பிக்கையைக் கட்டியெழுப்ப செயல்களே அவசியம். அந்த மன்னிப்புக்களுக்குப் பின்னரும் கூட, மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குத் தீர்வுகாண CTC தரப்பு தயாரில்லை என்பதை அதன் நிர்வாகசபை இயக்குனர், சமூக வெளியில் இன்று வெளியிட்ட கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன. எதேச்சாதிகாரத் தன்மை கொண்டவராக, பிரச்சனைகளின் நாயகனாக மக்களாலும், அமைப்புக்களாலும் விமர்சிக்கப்படும், “…CTC யின் நிறைவேற்று இயக்குனர் டான்ரன் துரைராஜா பதவியில் இருந்து விலகமாட்டார். அவ்வாறு அவர் விலக்கப்படும் நிலைவந்தால் CTCயை மூடிவிடுவோம்….” என்று இயக்குனர்களில் ஒருவரான டில்ஷான் நவரட்ணராஜா இன்று சமூகவலைத்தள பதிவு ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். இலாப நோக்கற்ற மக்கள் அமைப்பு ஒன்றை ஒரு எதேச்சாதிகார நிறுவனம்போல் நடத்தும் உரிமையை யார் கொடுத்தது. அந்நிறுவனத்தை ஒரு தனிநபருக்காக நடத்துவோம் அல்லது மூடிவிடுவோம் என்று எச்சரிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது..? மக்களே சிந்தியுங்கள். பொதுவெளியில் பேசும்போது, தரவுகளும் தகவல்களும் சரியா என்று பகுத்தறிந்து பேசுங்கள். நிறைவாக ஒன்று, போராட்டக் காரர்களைத் தூண்டிவிட்டதாக என் மீது சில தரப்புக்களால் முன்வைக்கப்படும் விசமத்தனமான பிரச்சாரங்களை முற்றாக நிராகரிப்பதோடு, அவ்வாறு வீண் பழி சுமத்தும் தரப்புக்களின் அணுகுமுறைகள் ஜனநாயக வரைமுறைகளின் பிரகாரம் அணுகப்படும் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன். நன்றியுடன், உதயன் S. பிள்ளை @highlight @followers
-
டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பிரான்சில் திடீர் கைது - என்ன காரணம்?
உக்ரைன், காசாவில்.. அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த டெலிகிராம்! பாவெல் துரோவ் கைதுக்கான காரணமே இதுதான் By Halley Karthik பாரிஸ்: டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டது உலகம் முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் இவரது கைதுக்கு காரணம், உக்ரைன் மற்றும் காசா போரில் அமெரிக்காவுக்கு எதிராக பரப்பப்பட்ட தகவல்கள்தான் என்று சொல்லப்படுகிறது. பாவெல் துரோவ் அடிப்படையில் ரஷ்ய நாட்டை சேர்ந்தவராவார். ஆனால் ரஷ்யாவுக்கும் இவருக்குமே பெரிய அளவில் செட் ஆகாது. காரணம் டெலிகிராம்தான். ஊருக்குள்ள பத்து பதினஞ்சு ஆப் வெச்சிருக்கிற கூகுள் கூட நிம்மதியா இருக்கான்.. ஒரே ஒரு ஆப் வெச்சிக்கிட்டு.. என துரோவ் புலம்புவதற்கு முதல் காரணம் ரஷ்யாதான். அதாவது கடந்த 2010ம் ஆண்டு, உக்ரைனில் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள், எந்த செய்திகளை பகிர்ந்துக்கொள்கிறார்கள்? என்கிற விவரங்களை ரஷ்யா கேட்டு ஏழரையை கூட்டியது. ஆனால், பயனாளர்களின் பிரைவசி ரொம்ப முக்கியம். எனவே, எங்களால் தகவல்களை தர முடியாது.. என துரோவ் வெளிப்படையாக மறுத்துவிட்டார். மட்டுமல்லாது, உள்ளூரில் இனி கடையை வைத்திருந்தால் நம்மை காலி செய்துவிடுவார்கள் என்று உணர்ந்த அவர், அமெரிக்காவுக்கு ஜம்ப்பாகிவிட்டார். அமெரிக்கா மட்டும் என்ன உத்தம புத்திரரா? கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி, டிரம்ப் ஆதரவாளர்கள் கேப்பிட்டல் ஹாலுக்குள் நடத்திய கலவரம் டெலிகிராமில்தான் திட்டமிட்டதாக கூறி, குற்றம் சாட்டப்பட்ட அந்த தனிநபர் தகவல்களை தங்களுக்கு தருமாறு கேட்டது ஜோ பைடன் நிர்வாகம். ஒருமுறை தகவல்களை கொடுத்துவிட்டால், எல்லா முறையும் இதையே மேற்கோள் காட்டி தகவல்களை பெற, பல்வேறு நாடுகளின் அரசுகள் முயற்சிக்கும் என்பதை உணர்ந்த துரோவ், அமெரிக்க அரசின் கோரிக்கையை நிராகரித்து அங்கிருந்து வெளியேறிவிட்டார். தற்போது துபாயில் டெலிகிராம் தலைமை அலுவலகத்தை வைத்து நடத்தி வருகிறார். இதுதான் அவருடைய பின்னணி. இப்படி இருக்கையில் சமீபத்தில் பிரான்ஸ் வந்திருந்த அவர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பண மோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆபாச பதிவுகள் போன்றவற்றிற்கு டெலிகிராம் செயலி காரணமாக இருக்கிறது என, ஏற்கெனவே பிரான்ஸ் அரசு அவர் மீது குற்றம் சுமத்தி இருந்தது. இதையடுத்து கடந்த 24ம் தேதி அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இருப்பினும் துரோவ் கைது செய்யப்படுவதற்கு இது உண்மையான காரணம் இல்லை என்று சொல்லப்படுகிறது. " டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ் பிரான்ஸில் கைது.. பரபரப்பைக் கிளப்பிய சம்பவம்! என்ன காரணம்?" அப்படியெனில் உண்மை காரணம் என்ன? இதற்கு மூன்று விடைகள் சொல்லப்படுகிறது. முதல் விடை பாலஸ்தீனம்-இஸ்ரேல் போர். இந்த போரின் பின்னணி பொதுவாக எல்லோருக்கும் தெரியும். ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் செயல்படும் இஸ்ரேல், அதற்கு அமெரிக்கா முழு உதவி அளித்து வருகிறது என்றும், காசாவில் அப்பாவி பொதுமக்கள் தாக்குதல் நடத்தப்படுகிறது எனவும் உலகம் முழுவதும் விமர்சனம் கிளம்பியுள்ளது. இதற்கு டெலிகிராம் முக்கிய காரணம். அதாவது காசாவில் அப்பாவி மக்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஆதாரங்களாக வீடியோ இருக்கிறது. இந்த வீடியோக்கள் மேற்கத்திய நாட்டு ஊடகங்களில் அடிக்கடி வெளியாகி உலக நாடுகள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோக்கள் முழுக்க முழுக்க டெலிகிராம் மூலமாகவே லீக் செய்யப்படுகின்றன. இதை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டாவது காரணம் உக்ரைன்-ரஷ்யா போர். இந்த போரில் உக்ரைனுக்கு, அமெரிக்கா ஆயுத உதவியை செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், இந்த போரில் அமெரிக்கா நேரடியாக பங்கேற்கவில்லை என்று கூறி வருகிறது. ஆனால்.. உக்ரைன் போர் முனையில் உயிரிழந்த நேட்டோ வீரர்களின் படங்கள் டெலிகிராமில் பகிரப்பட்டு வருகிறது. அதாவது உக்ரைன் போரில் எங்கள் பங்களிப்பில்லை என்று அமெரிக்கா கூறிக்கொண்டே, எல்லைக்கு தொடர்ந்து வீரர்களை அனுப்புகிறது என ரஷ்யா, டெலிகிராம் உதவியுடன் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து வருகிறது. இதனால், போர் குறித்து ரஷ்யாவுககு எதிரான கருத்தாக்கங்களை அமெரிக்காவால் உருவாக்க முடியவில்லை. இது சிஐஏவுக்கு பெரிய தோல்வி. மூன்றாவது காரணம் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் படைகள் செய்த அட்டூழியம். இது தொடர்பான அனைத்து தகவல்களும் களத்திலிருந்து, எடுத்து டெலிகிராம் வழியாக உலக மக்களிடையே, ஆப்பிரிக்கா மக்கள் அம்பலப்படுத்தினர். இது பிரான்ஸுக்கு பேரடி. இதெல்லாம்தான், துரோவை கைது செய்ய காரணமாக அமைந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/paris/real-reason-behind-the-arrest-of-telegram-founder-pavel-durov-was-the-wars-in-ukraine-and-israel-633245.html
- நடனங்கள்.