Everything posted by கிருபன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களுக்கும் தெரிவிக்கப்போகின்றவர்களுக்கும் மனங்கனிந்த நன்றிகள். இன்று நிழலியின் மகனுக்கும் பிறந்தநாள்! அவர் பல்கலையும் கற்றுப் பல்லாண்டு காலம் நீடுழி வாழ வாழ்த்துக்கள்
-
சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன் – 01 0
சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 05 ஹிருத்திக் நிஹாலே மிகப்பல வருடங்களாக பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்த சொர்ணம், யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர் அவரை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றார். அதன் பின்னான காலகட்டத்தில் எப்பொழுதாவது மிகச்சிறிய நாட்கள் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்ததே தவிர, மற்றும்படி இருவரும் ஆளுக்கொரு திசையில் இருந்தனர். அதுவரையான காலகட்டத்தில் பிரபாகரனை நிழலாக தொடர்ந்ததால், பிரபாகரனது குடும்பத்திற்கும் சொர்ணத்திற்கும் எப்படியான உறவு இருந்தது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தது. யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர், சொர்ணம் திருமலைக்கு அனுப்பப்ட்டு விட்டார். அந்த நாட்களில் பிரபாகரனது மூத்த புதல்வர் சாள்ஸ் அன்ரனிக்கு 10 வயதுகள் இருந்தது. அவர் சொர்ணத்தை அடிக்கடி கேட்டிருக்க வேண்டும். அதற்கு குடும்பத்தினர் ஏதோ தற்காலிக சமாதானம் சொல்லியிருக்க வேண்டும். 1996 இல், இம்ரான் பாண்டியன் படையணியின் நிகழ்வொன்று நடந்தது. அதற்கு பிரபாகரன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அந்த நிகழ்வில் சொர்ணத்தை சந்திப்பேன் என சாள்ஸ் அன்ரனி நினைத்திருந்தார். ஆனால் எல்லா தளபதிகளும் வந்த நிகழ்வில் சொர்ணம் மட்டும் இல்லை. சொர்ணம் மாமாவை காணவில்லை, எங்கே அவர் என சாள்ஸ் அன்ரனி பகிரங்கமாகவே தந்தையாரிடம் கேட்டார். “அவருக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு இங்கே வரமாட்டார். அவர் கொஞ்சநாள் அங்கால இருக்கத்தான் வேணும்” என தந்தையார் பதிலளித்தார். அதற்கடுத்த நான்கு வருடங்களில் ஈழப்போரியலின் மிகப்பெரிய பண்புமாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்தன. அதுவரை நினைத்தே பார்த்திருக்காத பெரும் போர்க்களங்கள் எல்லாம் நடந்தன. இந்த சமயத்தில்த்தான் விடுதலைப்புலிகள் மிகப்பெரிய காவலரண் வரிசையை அமைத்தார்கள். பலநூறு கிலோமீற்றர்கள் நீளத்திற்கு மன்னார் கடற்கரையிலிருந்து, மறு அந்தத்தில் இருந்த மணலாற்றின் நாயாற்று கடற்கரைவரை தொடர் காவலரண் அமைத்து தெளிவான எல்லைக்கோடு வகுத்து போரிட்டார்கள். இருதரப்பும் யுத்த டாங்கிகள், ஆட்லறிகள் கொண்டு மோதிக் கொண்டிருந்தன. அதாவது ஒரு மரபுப்போரின் அத்தனை அம்சங்களுடனுமான போர். இந்த சமயத்தில் சொர்ணம், திருகோணமலை காடுகளில் மறைந்திருந்து கெரில்லா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் இயக்கத்தில் இணைந்த காலப்பகுதில் எப்படியான போர் உத்திகளை பாவித்தாரோ, அதே உத்திகளுடனான ஒரு போர்க்களத்தில் வாழ்ந்தார். அது கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நீடித்தது. இந்த சமயத்தில் தமிழீழ போர்க்களம் நினைத்து பார்க்க முடியாத மாற்றங்களை சந்தித்தது. இந்த மாற்றங்கள் எதிலும் சொர்ணத்தை பங்கு கொள்ள வைக்காமல், தொலைவில் இருந்து பார்க்க வைத்து காலம் ஒரு விசித்திர கதையெழுதியது. புதிய புதிய தளபதிகள் உருவானார்கள். சொர்ணத்தின் முன்பாக மூக்குச்சளி ஒழுகத் திரிந்தவர்கள் எல்லாம், சொர்ணம் திரும்பி வந்தபோது, அவரிற்கு நிகராக களங்களை வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த மாற்றங்களில் அவர் பங்கு கொள்ளாததாலோ என்னவோ, மீண்டும் களமுனைக்கு திரும்பியவரால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதன் பின்னர், விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள் மூன்று களத்தை திறந்தார்கள். மிகப் பெரியவளங்களையும், ஆளணியையும், போரியல் உத்திகளையும் அந்தக்களம் புலிகளிடம் கோரியது. அவர்களும் சமாளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் ஆயுதப் பஞ்சம் புலிகளிடம் இருக்கவில்லை. மிகப்பெரிய ஆளணிப் பஞ்சமும் ஏற்பட்டது. கிராமியப்படை, எல்லைப்படை என ஆட்களை திரட்டி சமாளித்து கொண்டிருந்தார்கள். இதே காலப்பகதியில் இன்னொரு தட்டுப்பாடும் அவர்களிடம் ஏற்பட்டது. யுத்தகளத்தை வழிநடத்தும் கட்டளைத்தளபதியொருவரை புலிகள் தேடினார்கள். என்னதான் புதிய நட்சத்திரங்கள் தோன்றினாலும், முழுக்களங்களையும் வழிநடத்தும் திறமை மற்றும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமான தன்மை என்பனவற்றை கொண்டவரும், அதேசமயத்தில் மூத்த தளபதியாகவும் இருக்கும் ஒருவரை புலிகள் தேடினார்கள். இதுவரை அந்த பாத்திரத்தை வகித்து வந்த கருணா பற்றிய பல கசப்புக்கள் இயக்கத்திற்குள் உருவாகியிருந்தது. குறிப்பாக களமுனைகளில் அவர் சப்தகி முதலான சில பெண்போராளிகளுடன் கொண்டிருந்த பகிரங்க பாலியல் உறவு களமுனையிலிருந்த எல்லா போராளிகளின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. முறைதவறிய பாலியல் உறவிற்கு விடுதலைப்புலிகள் மன்னிப்பிற்கிடமில்லாத மரணதண்டனை வழங்கினார்கள். எனினும், ஜெயசிக்குறு களம் தீவிரம் பெற்றபின்னர், ஆட்பஞ்சம் நிலவியதாலும், வருடக்கணக்கில் போராளிகள் காடுகளில் அடைந்து கிடப்பதாலும் இந்த விவகாரத்தில் சற்று மேம்போக்கான கொள்கைகளை கடைப்பிடித்தார்கள். எனினும் நடைமுறைகள் ஒரு மரபாக உருவாவதைப் போல, திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவென்பது தண்டனைக்குரிய அல்லது மனித நடத்தைக்கு முரணான விடயம் என்பதைப் போன்ற ஒரு மனப்பிரதிமை பெரும்பாலான போராளிகளிடம் படிந்திருந்தது. இந்த சூழலில் போராளிகளின் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு தளபதியின் நடத்தை விடுதலைப்புலிகளை சங்கடப்படுத்தியது. அதற்காக அவரை தண்டனைக்குட்படுத்தவும் முடியவில்லை. ஜெயசிக்குறு களமுனையின் கட்ளைத்தளபதி அவர்தான். மற்ற மூத்ததளபதிகள் கள அனுபவமற்றிருந்தனர். பொட்டம்மான் விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் பிரபாகரனுடன் இணைந்து நடத்திக் கொண்டிருந்தார். அவர் களமுனையை வழிநடத்தும் நிலைக்கு அப்பால் சென்று விட்டார். மற்ற மூத்தவர்களில் ராயு, கடாபி, சூசை, பதுமன் போன்றவர்கள் தரைக்களமுனை செயற்பாடுகளில் ஈடுபாடு கொள்ளவில்லை. எதோவொரு துறைசார் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். பானு, தமிழ்ச்செல்வன், நடேசன் போன்றவர்கள் கட்டளைத்தளபதிகளாக தங்களை நிரூபிக்காதவர்கள். இப்பொழுதுதான் தீபன் புதிய நட்சத்திரமாக உருவாகியிருந்தார். எனினும், அவரிடம் உடனடியாக பொறுப்புக்களை ஒப்படைக்கும் மனநிலையில் பிரபாகரன் இருக்கவில்லை. எஞ்சியவர் சொர்ணம். அவர் கிழக்கில். ஒரு மனிதர் எவ்வளவுதான் அதிதீவிர திறமை கொண்டவர் எனினும், ஒழுக்கம், முன்னுதாரணம், அமைப்பு விசுவாசத்தில் சறுக்கினாலும் பிரபாகரன் அவருடன் சமாளித்துக் கொள்வதில்லை என்பதற்கு அந்த சமயத்தில் இரண்டு உதாரணங்கள் இருந்தன. ஒன்ற கருணா. மற்றது பால்ராஜ். நான் குறிப்பிட்ட இந்த மூத்தளபதிகள் பட்டியலில் பால்ராஜ் இருக்கவில்லை. அவர் இந்த சமயத்தில் ஒதுங்கியிருந்து விட்டு, மெதுமெதுவாக மீண்டும் அரங்கிற்கு வரத் தொடங்கியிருந்தார். 1998இல் ஆனையிறவு மீது புலிகள் ஒரு தாக்குதல் நடத்தினார்கள். பெருமளவு ஆட்லறிகளை கைப்பற்றிய பின்னரும், அதனை பத்திரமாக கொண்டு வரும் பாதை கைப்பற்றப்படாததால் அவை அங்கேயே வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் வெற்றியடையவில்லை. இந்த தாக்குதலை வழிநடத்திய பால்ராஜ் அதன்பின், பலகாலம் முகாமில் சும்மா உட்கார வைக்கப்பட்டிருந்தார். (பால்ராஜ் தொடர்பில் பின்னர் விரிவாக பார்க்கலாம்). ஆனையிறவிற்கு அப்பாலான களமுனைகளில் முதற்கட்ட மாற்றம் செய்ய பிரபாகரன் நினைத்து அந்த பகுதிகளில் பால்ராஜ் கட்டளை வழங்கினார். எனினும், அங்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில இளநிலை கட்டளைத்தளபதிகள் குழப்பம் விளைவித்தனர். இதனால் கோபமடைந்த பிரபாகரன், கருணாவை அழைத்து கடுமையாக கடிந்து கொண்டதுடன், கிழக்கு அணியை கிழக்கிற்கே அனுப்பி வைத்தார். மீண்டும் சொர்ணத்தை அழைத்தார் பிரபாகரன். யாழ்ப்பாணத்திற்கான சண்டையை வடக்கிலுள்ளவர்களே பிடிக்க வேண்டும் என்பதும் பிரபாகரனின் நிலைப்பாடாக இருக்கலாம் என இந்த கட்டுரையாளர் ஊகிக்கிறார். அந்த சமயத்தில் வன்னியில் தங்கிய கிழக்கு படையணிகள் பின்தள பணிகளிலேயே ஈடுபட்டன. மாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, அரசியல்த்துறை தாக்குதலனி, சாள்ஸ் அன்ரனி படையணி என்பன களத்தில் இருந்தன. தென்மராட்சியின் பெரும்பகுதி புலிகளிடம் இருந்தது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் வரை சென்றிருந்த புலிகள் சில கிலோமிற்றர்கள் பின்வாங்கி பாதுகாப்பான பகுதிகளில் நிலைகளையமைத்து கொண்டனர். இந்த களம் சொர்ணத்திடம் ஒப்படைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மீதான புலிகளின் நடவடிக்கைகளினால் நிலைகுலைந்து இராணுவமும் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது. இராணுவத்தரப்பிலும் அவசர மாற்றங்கள் செய்யப்பட்டன. மேஜர் ஜெனரல்கள் ஜானக பெரேரா, சரத் பொன்சேகா போன்றவர்கள் அவசரமாக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டனர். சில நாட்கள் இடைவெளி எடுத்து இருதரப்பும் தங்களை மீள் ஒழுங்கு செய்தன. இந்த அவகாசம் இந்திய தலையீட்டால் உருவானதென இராஜதந்திர வட்டாரங்களுடன் தொடர்புடையவர்கள் பல சமயங்களில் குறிப்பிட்டுள்ளனர். இராணுவம் தங்களை மீள் ஒழுங்கு செய்ததன் பின்னர், தென்மராட்சி மீதான தாக்குதலை ஆரம்பித்தது. இந்த சமயத்தில் ஜானகபெரேராவின் இராணுவ நுட்பங்கள் புலப்பட்டன. அவற்றை எதிர்கொள்ள சொர்ணத்திடம் எந்த உத்தியும் இருக்கவில்லை. அதுவரை மிகப்பெரும் போர்க்கள அதிசயங்களையெல்லாம் நிகழ்த்திக் கொண்டு வந்த படையணிகளிற்கு என்ன நடந்ததென்பது யாருக்கும் புரியவில்லை. இதற்கு சில வாரங்களின் முன்னர்தான் புலிகள் இத்தாவிலில் ஒரு பெட்டித் தாக்குதல் நடத்தி ஆனையிறவை வீழத்தி தென்மராட்சிக்குள் நுழைந்தார்கள். அதே பெட்டியை ஜானகபெரேராவும் கையிலெடுத்தார். சில நாள் இடைவெளியில் அடுத்தடுத்து, தென்மராட்சியில் படையினர் பெட்டித்தாக்குதல்களை நடத்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கான போராளிகள் மரணமாகிக் கொண்டிருந்தார்கள். மாலதி மற்றம் சோதியா படையணி போராளிகள்தான் அதிகளவில் இறந்தனர். போராளிகள் மரணமானதுடன், ஒவ்வொரு இடமாகவும் பறிபோய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஆளணி இழப்பில்லாத யுத்தம் பற்றி பிரபாகரன் தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்த சமயம். அவரது சிந்தனைக்கு நேர் எதிரான யதார்த்தம் தென்மராட்சியில் நிலவியது. இந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் நவீன ஆயுதமொன்றையும் இறக்குமதி செய்திருந்தனர். 14.5 mm ரகத்தை சேர்ந்த கனரக பீரங்கியது. அந்த ஆயுதத்தை ஏனைய போராளிகளே அறியாமல்த்தான இரகசியமாக வைத்திரந்தார்கள். அதற்கு “ஆமை”யென்ற சங்கேதப் பெயரும் வைத்தார்கள். அந்த யுத்தத்தில் இராணுவத்தால் முதன்முதலில் அந்த ஆயுதமொன்றும் கைப்பற்றப்பட்டது. மேலதிகமாக ஆட்களை இழக்க கூடாதென்பதற்காக விடுதலைப்புலிகள் தங்கள் படையணிகளை முகமாலைவரை பின்வாங்கிக் கொண்டார்கள். சொர்ணத்திற்கு மீண்டும் வழங்கப்பட்ட வாய்ப்பு, பயனற்றது. அவர் பற்றி மேலும் மோசமான அப்பிராயம் பிரபாகரனிடம் ஏற்பட்டது. அவர் தரையுத்தமுறைக்கே ஏற்றவர் அல்லவென நினைத்தாரோ, அல்லது அளவிற்கதிகமாக அவரை குற்றவுணர்ச்சி கொள்ள வைக்க நினைத்தாரோ தெரியவில்லை, அவரிற்கு மிகப்பெரிய தண்டனை வழங்கினார். அவர் கடற்புலிகளிற்கு மாற்றம் செய்யப்பட்டார். சூசை தலைமையில் இயங்கிய கடற்புலிகளில், மன்னார் பிரதேசத்திற்கு பொறுப்பாக சொர்ணம் நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகள் அடுத்த நெருக்கடியை சந்திக்கும் வரை அவர் அந்த பொறுப்பிலேயே இருந்தார். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிளவை சரி செய்ய வேண்டியிருந்தது. “கிழக்கு குழப்பக்காரர்களை” கட்டுப்படுத்த பிரபாகரன் தேர்வு செய்தது சொர்ணத்தை. ஏற்கனவே மாத்தையா விவகாரத்தையும் அவர்தான் கையாண்டார். என்னதான் களமுனை செயற்பாடுகளில் அதிருப்தியிருந்தபோதும், அவர் பற்றிய நம்பிக்கை பிரபாகரனிடம் குறைந்து விடவில்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. கிழக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், சொர்ணம் மீண்டும் திருகோணமலை பொறுப்பாளராகினார். திருகோணமலையின் மாவிலாற்று பகுதியில் போராளிகளின் தற்காலிக காவல்மையம் இருந்தது. இரவில் ஆற்றைக்கடக்கும் முன்னர் போராளிகள் ஆற்றின் நீரை மறித்துவிட்டு செல்வதும், மறுநாள் திரும்பும் போது திறந்து விட்டு வருவதும் வழக்கம். ஒருநாள் இந்த நடைமுறை தவறிவிட்டது. காவல்க்கடமைக்கு சென்ற அணி திரும்பி வரும்போது ஆற்றை திறந்துவிட மறந்து விட்டனர். ஆற்றுநீர் வராததையடுத்து, சிங்கள விவசாயிகள் நினைத்தார்கள், விடுதலைப்புலிகள் திட்டமிட்டு ஆற்றுநீரை மறித்துள்ளார்கள் என. விவசாயிகள் தரப்பில், திருகோணமலை அரசியல்த்துறை பொறுப்பாளர் எழிலனுடன் ஒரு சமரசப் பேச்சு நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகளிற்கு ஒரு தொகை பெற்றோல் உள்ளிட்ட பொருட்களை வழங்க சிங்கள விவசாயிகள் தாமாக முன்வந்தார்கள். தானாக வருவதை ஏன் விட வேண்டும் என எழிலன் நினைத்தார். அதனை சொர்ணத்திடமும் சொல்லி, ஆற்றுநீர் திறந்து விட வேண்டுமெனில் சற்று அதிகமாக பொருட்கள் புலிகளால் கோரப்பட்டது. இதன் பின்னர் நடந்தவை வரலாறு. சொர்ணம் தலைமையில் மூதூர் மீது ஒரு படைநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் விடுதலைப்புலிகளின் மீது மிகை மதிப்பீடு உலகளாவிய அளவில் இருந்தது. ஏன், விடுதலைப்புலிகளிடமும் இருந்தது. அந்த நடவடிக்கையின் முடிவில், முழு திருகோணமலையையும் விட்டு புலிகள் பின்வாங்கி வந்தனர். சொர்ணம் வன்னி வந்ததன் பின்னர், இந்த கட்டுரையாளர் உள்ளிட்ட சில நண்பர்கள் கூடியிருந்த சமயம் ஒன்றில் சொர்ணத்தை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது. அதில் ஒருவர், திருகோணமலையில் என்ன நடந்ததென கேட்டார். சொர்ணம் தனது வழக்கமான பாணியில் சிரிப்புடன் பதில் சொன்னார். “எடேய்.. எங்கடயாக்களின்ர கோமணம் எந்தளவில இருக்குதென்டு பார்க்க, ஒரு ரெஸ்ற் நடத்தின்னான். எனக்கு எல்லாம் விளங்கிவிட்டுது. தொங்கல் வரை ஓட நீங்களும் ரெடியாக இருங்கோ” என்றுவிட்டு போனார். இதன் பின்னர் யுத்தம் வன்னிக்கு வந்தது. மன்னாரில் ஆரம்பித்த யுத்தத்தை எதிர்கொள்ள புலிகள் ஒவ்வொரு தளபதிகளாக மாற்றிமாற்றி பார்த்தனர். அதனால் பலன் ஒன்றும் கிட்டவில்லை. சிலர் சற்று கூடுதல் காலம் தாக்குப்பிடித்தார்கள் அவ்வளவுதான். தீபன் மல்லாவியில் சில காலம் தாக்குப் பிடித்தார். வேலவன், ஜெயபுரத்தில் தாக்குப்பிடித்தார். ஆனாலும் படையினர் கையாண்ட நீர்பரவுவதைப் போன்ற உத்திக்கு, அகன்ற களத்தில் ஒரு இடத்தில் பலவீனம் தென்பட்டாலே போதும். இதற்குள்ளால் படையினர் நுழைந்து விடுவார்கள். மல்லாவியும் வீழ்ந்ததன் பின்னர், மீண்டும் சொர்ணம் களமிறக்கப்பட்டார். ஒவ்வொரு சிறு பட்டினங்களும் ஒவ்வொரு தளபதியின் பொறுப்பில் இருந்தது. மாங்குளம் சொர்ணத்திடம் வந்தது. போர்க்களத்தில் அவரைத் துரத்திய துரதிஸ்டம் அங்கும் வந்தது. அந்த சமயத்தில் ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல் தீவிரம் பெற்றிருந்தது. தளபதிகள் குறிவைக்கப்படாமல் இருக்க, களமுனைகளிற்கும், மூத்ததளபதிகளிற்கும் இரும்புக்கவசமிட்ட பவள் கவசவாகனங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. மாங்குளத்தில் நடந்ததை அந்த சமயத்தில் போராளிகள் பகிடியாக இப்படி சொல்வார்கள். மாங்குளம் களத்திற்கு சொர்ணம் பவள் கவசவாகனத்தில் சென்றார். சில நாளிலேயே நடந்து பின்வாங்கி வந்தார். ஏனெனில், இராணுவத்திடம் அவரது பவள் கவசவாகனமும் சிக்கிக் கொண்டது. இதன் பின்னர் புலிகளிற்கு தெரிவுகள் இருக்கவில்லை. எல்லாப்பக்கத்தாலும் யுத்தம் அவர்களை சூழ்ந்து விட்டது. பிரபாகரன் மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் சொர்ணத்தை ஏற்கனவே இரண்டுமுறை தனக்கு துணையாக அழைத்திருந்ததை பார்த்திருந்தோம். இபபொழுது மூன்றாவது முறையாகவும் அழைத்தார். யுத்தம் புதுக்குடியிருப்பிற்கு வந்து விட்டது. இந்த சமயத்தில் சிதறியிருக்கும் விடுதலைப்புலிகளின் வளங்களையும், ஆளணியையும் ஒருங்கிணைக்க பாதுகாப்பு செயலர் என்ற ஒரு பதவிநிலையை புலிகளும் ஏற்படுத்தினார்கள். அவர்களின் முதலாவது பாதுகாப்பு செயலர் தமிழேந்தியப்பா. அந்த சமயத்தில் புலிகள் கேப்பாப்பிலவின் மீது ஒரு தாக்குதல் நடத்தினார்கள். நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகள் செய்த குறிப்பிடும்படியான ஒரேயொரு வெற்றிகரமான தாக்குதல் அதுதான். அவர் கணக்கில் புலி. அது மாதிரி எந்த தளபதியிடம் எத்தனை போராளிகள் உள்ளனர் என்பதை பார்த்து, பொறுக்கியெடுப்பதிலும் கில்லாடி. ஆனால், இந்த திறமை மட்டும் போதவில்லை போலும். மற்றும் இன்னதென இந்த கட்டுரையாளரால் தெளிவாக குறிப்பிட முடியாத காரணங்களினால் அவர் மாற்றப்பட்டு, சொர்ணம் அந்த பொறுப்பை எடுத்தார். ஆனந்தபுரம் சண்டையும் முடிந்ததன் பின்னர், புலிகள் தவிர்க்கவே முடியாத ஒரு வலிந்த தாக்குதலை நடத்தினார்கள். இந்த தாக்குதலின் தளபதிகள் இருவர். ஒருவர் சொர்ணம். மற்றவர் சாள்ஸ் அன்ரனி. முள்ளிவாய்க்கால், மாத்தளன், சாலை உள்ளிட்ட நிலப்பிரப்பை பிரிக்கும் சிறுகடலை கடந்து தேவிபுரம் பகுதியில் ஏறுவதுதான் திட்டம். அதன் பின்னர், சுதந்திரபுரம் பகுதிவரை பக்கவாட்டாக பரவி, பரந்தன் முல்லைத்தீவு வீதியில் ஏறுவது. இராணுவத்தின் பின்தளத்தை குழப்புவது இதுதான் திட்டம். கட்டாயமாக பிடிக்கப்பட்டவர்கள், இரண்டு மூன்றுநாள் பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்ட சுமார் 800 போராளிகள் இந்த நடவடிக்கையில் களமிறக்கப்பட்டனர். இந்த சமயத்தில் விடுதலைப்புலிகளில் ஏற்பட்டிருந்த இன்னொரு மாற்றத்தையும் குறிப்பிட்டேயாக வேண்டும். பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி அமைப்பிற்குள் குறிப்பிடும்படியான நிலைக்கு முன்னகர்த்தப்பட்டார். ஆரம்பத்தில் அவரிடம் கனிணி பிரிவுதான் ஒப்படைக்கப்பட்டது. அது ஒரு நிர்வாக அலகு என்பதற்கு அப்பால், தனியான இயக்கத்தைப் போல ஆளணி மற்றும் பௌதீக வளங்கள் வழங்கப்பட்டன. இதனால் போராளிகள், நீ பிரபாகரனின் இயக்கமா, சாள்ஸின் இயக்கமாக என பகிடியாக கேட்கும் நிலையும் ஏற்பட்டிருந்தது. சாள்ஸ் ஒரு சிறந்த தொழில்நுட்பவியலாளன். மோசமான தலைவன். அவரது நிர்வாக நடைமுறைகள், போர்க்களக்கதைகள் பற்றிய நகைச்சுவை சம்பவங்களை ஒருபெரும் திரட்டாகவே தயார் செய்யலாம். அவரை போராளிகள் இரகசியமாக புலிகேசியென அழைத்து வந்தனர். (இம்சையரசன் 23ம் புலிகேசி மன்னனை ஒத்த செயற்பாடுகளை குறிக்க அந்த பெயர் பயன்படுத்தப்பட்டது) சாள்ஸின் வரவு தளபதிகளிற்குள் என்னவிதமாக எண்ணத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் தெளிவாக குறிப்பிட முடியாதென்றுதான் நினைக்கிறேன். ஏனெனில், அப்படியான சம்பவங்கள் பரவலாக பதிவு செய்யப்படவில்லை. பல தளபதிகள் சாள்ஸை அரவணைத்து செல்லவே விரும்பினார்கள். இவர்களில் பானு முன்னிலையில் இருந்தார். இதனால், பானு எது சொன்னாலும் சரியாக இருக்குமென சாள்ஸ் நம்பினார். சாள்ஸ் தொடர்பான எதிர்மறையான இரண்டு சம்பவங்கள்தான் பதிவாகியுள்ளன. கடற்புலிகளின் தளபதி சூசை சாள்ஸின் முன்னிலைக்கெதிரான அதிருப்தியை பல சந்தர்ப்பத்திலும் காட்டினார். சாள்ஸ் நடத்திய பல கூட்டங்களில் அவர் கலந்து கொள்வதில்லை. யுத்தத்தின் இறுதி சமயத்தில் அவர் இரண்டு விதமாக சாள்ஸை பேசியிருக்கிறார். ஒருமுறை, “கொப்பர் உருவாக்கினதெல்லாததையும் அழிக்கிறதுக்கென்டே பிறந்திருக்கிறாய்” என பல போராளிகளின் மத்தியில் மாத்தளனில் பேசினார். மற்றது இன்னும் கடுமையானது. தமிழுணர்வாளர்களை அதிர்ச்சியடைய வைப்பது. அதனை சூசை பற்றிய பகுதியில் பார்க்கலாம். தேவிபுரத்திற்குள் புலிகளின் படையணிகள் நுழைந்ததும், படையினர் வேவுவிமானங்களின் உதவியுடன் அந்த சாவலை எதிர் கொண்டனர். அணிகள் நகர்வதை வேவுவிமானங்களினால் அவதானித்து, தரை நகர்வு மற்றும் செல் தாக்குதல்கள் நடத்தினார்கள். இந்த சண்டை மிகமோசமான தோல்வியில் முடிந்தது. சண்டையின் இரண்டாம் நாளே சொர்ணம் மிக மோசமாக காயமடைந்தார். அவரது கால்த் தொடை எலும்பொன்று உடைந்தது. சாள்ஸ் அன்ரணியும் காயமடைந்தார். இதனையடுத்து அணிகள் பின்வாங்கத் தொடங்கின. இந்த சமயத்தில் தேவிபுரத்தில் 75 பேரைக் கொண்ட பெண்கள் அணியொன்று படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. அவர்கள் அத்தனைபேரும் இரண்டொருநாள் இராணுவப்பயிற்சி பெற்றவர்கள். இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டதும், அவர்கள் ஒரு தோட்டாவைத்தானும் சுடாமல் கைகளை உயர்த்தி விட்டனர். அவர்கள் முன்னரங்க நிலைகளில் இருந்த படையினரின் உடற்தேவைக்காக பகிர்ந்து வழங்கப்பட்டார்கள். பின்னர், மாத்தளன் வைத்தியசாலைக்கும், சாலைப்பகுதிக்கும் இடையில் இருந்த படையினரின் முன்னரங்க மண்ணரனில் நிர்வாணமாக ஏற்றிவிட்டனர். அந்த யுத்தகளத்தில் எதிர்த்தரப்பை கோபமடைய வைக்க இப்படியான நிறைய வேலைகள் நடந்தன. பின்னர், விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்பு வழிகளிற்குள் நுழைந்த படையினர் அந்த பெண்கள் பற்றிய கிண்டல்களை அடித்துக் கொண்டிருந்தார்கள். தங்களிற்கு எதிர்முனையில் தமது சகபோராளிகளான பெண்கள் நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்தது, முன்னரணில் இருந்த போராளிகளிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அது அவர்களின் உளவுரணை சிதைக்கவல்லது. காலையில் ஏற்றப்பட்டவர்கள். விடயம் சாள்ஸ்சின் ஆலோசனையில் இருந்து, பின்னர் அவர் தனது தந்தையுடன் ஆலோசித்தார். அந்தப்பெண்களின் கைகளில் துவக்கு கொடுக்கப்பட்டிருந்ததுதானே. இனி நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை. இப்படியே வைத்து பார்த்துக் கொண்டிருக்க முடியாதென முடிவு செய்யப்பட்டது. உடனடியாக சினைப்பர் அணி அந்தப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் மண்ணரனில் நின்றவர்களை சுட்டார்கள். அது தவிர, எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டது. இதன் பின்னர், சொர்ணம் படுத்த படுக்கையாகவே இருந்தார். படுத்த படுக்கையாக இருந்தே களத்தை வழிநடத்தினார். அவர்தான் முழு களத்தையும் கவனித்து கொண்டிருந்தார். இதே சமயத்தில் அவர் தன்னுடனிருந்த போராளிகளிடம் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தை சொல்லிக் கொண்டிருந்தார். “அண்ணைக்கு ஏதும் நடக்க முதல் நான் செத்திடுவன்” என அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் ஆளணி தட்டுப்பாடு, ஆயுதத்தட்டுப்பாடு அதிகமாக நிலவியது. இதனால் களமுனைகளை கட்டுப்படுத்த முடியாமல் சொர்ணம் திண்டாடிக் கொண்டிருந்தார். அந்த தட்டுப்பாடுகள் பல சந்தர்ப்பத்தில் அவரை விரக்தியடைய வைத்தது. தொலைத் தொடர்பு கருவியிலேயே அனைவரும் அனைத்தையும் பேசிக் கொண்டனர். பின்தளங்களிற்கு வந்து சந்திக்க பொழுதும் இடமும் இருக்கவில்லை. இந்த கட்டுரையாளர் சொர்ணத்தின் கட்டளைகளையும், விரக்தி பேச்சுக்களையும் தொடர்ந்து தொலைத்தொடர்பு வழிகளில் கேட்டுக் கொண்டிருந்தார். 2009 மே 14ம் திகதி அன்று காலையில் கட்டளைத்தளபதி வேலவனுடன் சொர்ணம் ஏதோ தர்க்கப்பட்டு கொண்டிருந்தார். ஆளணி பற்றாக்குறையையடுத்து, வேலவனின் உதவியாளர்களையும் களமுனைக்கு அனுப்பும்படி சொர்ணம் சொல்ல, வேலவன் ஏதோ அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருந்தார். இது நடந்து ஒரு அரைமணித்தியாலத்திற்குள்- காலை சுமார் 10 மணியிருக்கும், அவர் இறந்து விட்டார் என்ற தகவல் வந்தது. அவருக்கு மிக அருகில் எறிகணையொன்று விழுந்தது. அதன் சிதறலில், ஏற்கனவே பாதிக்கப்பட்ட காலைவிட மற்றக்காலிலும் காயமடைந்து விட்டார். அவரிற்கு அனைத்தும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அவரது உதவியாளர்களும் சுதாகரிக்க முன்னர், தனது கழுத்தில் இருந்த சயனைட் வில்லையை உட்கொண்டு மரணமானார். அவரது உடலத்தை அந்த முகாமிலேயே (வெள்ளாமுள்ளிவாய்க்கால்) போராளிகள் புதைத்தனர். (அவர் 2009.05. 14 அன்று மரணமானபோதும், அவர் 15ம் திகதி இறந்ததாகவே தற்போது குறிப்பிடப்பட்டு வருகின்றது) http://pagetamil.com/?p=9941
-
சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன் – 01 0
எழுத்துப் பிழைகளைத் திருத்தினால் தமது காப்புரிமையை மீறிவிட்டதாக வழக்குப் போட்டாலும் போடக்கூடும் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்!
-
சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன் – 01 0
சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 04 1994களின் முற்பகுதி. அப்பொழுதுதான் மாத்தையா விவகாரம் முடிந்திருந்தது. பாதுகாப்பு அணியிலும் தலைகீழ் மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்து விட்டன. அப்பொழுது பிரபாகரனின் முகாம் யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்திருந்தது. பிரபாகரன் ஒரு நடைப்பிரியர். மிக நீண்ட தூரங்களிற்கும் விறுவிறுவென நடந்து செல்வார். இலேசில் களைப்படைவதில்லை. கொக்குவிலின் உள்வீதிகளினால் நடப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஒருநாள் இப்படி நடந்துவிட்டு, முகாமிற்கு வந்தவர் காலைத்தினசரியுடன் தனது வீட்டின் முன்கூடத்தில் வந்தமர்ந்தார். தினமும் நடைப்பயிற்சி முடிந்ததும் நிறைய தண்ணீர் அருந்துவது அவரது வாடிக்கை. அன்றும், வழக்கம் போலவே எல்லாம் நடந்தது. உட்கார்ந்ததும், தண்ணீர்க்குடுவையை எடுத்துவரும்படி ஒரு போராளிக்கு சொன்னார். வீட்டின் உட்பகுதியில் இருந்து அவர் தண்ணீர்க்குடுவையை கொண்டு வந்தார். அப்பொழுது, பாதுகாப்பு அணிப்பொறுப்பாளராக இருந்த செல்லக்கிளி அந்தப் போராளியை கூப்பிட்டு, தண்ணீரை வாங்கினார். அப்பொழுது அவர்தான் பாதுகாப்பு அணி பொறுப்பாளர். தண்ணீரை பரிசீலித்து பார்க்கப் போவதாக சொன்னார். அந்தக்காலப்பகுதியில், பிரபாகரனின் உணவுகளை பரிசீலித்து பார்ப்பதும் பாதுகாப்பு அணித்தலைவர்தான். ஆனால் அந்த பரிசீலனை ஒரு கிரமமானதாக இருந்ததில்லை. பாதுகாப்பு அணித்தலைவர்கள் எப்பொழுதாவது திடீர்திடீர் என பரிசோதித்து பார்த்தார்கள். அப்பொழுது பிரபாகரனை நெருங்கி, பெரும் அபாயங்கள் ஏற்படுமென யாரும் எதிர்பார்க்கவில்லை. மாத்தையா விவகாரம், மற்றும் இதில் குறிப்பிடப்படும் விவகாரங்களின் பின்னர்தான் பிரபாகரனின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கனமான நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. பின்னாளில், அவரது உணவுப்பரிசோதனையை, அவரது தனிப்பட்ட மருத்துவப்போராளியே கவனித்தார். ஒவ்வொருவேளை உண்பதையும் பரிசோதித்தார். மருத்துவப்போராளி பரிசோதித்த, பன்னிரண்டாவது நிமிடத்தின் பின்னர்தான் பிரபாகரனிடம் உண்ணக் கொடுப்பதை பாதுகாப்பு அணியினர் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த சம்பவம் நடந்த சமயத்தில் அப்படியான ஏற்பாடுகள் இருக்கவில்லை. தண்ணீர் கொண்டுபோன போராளியை இடைமறித்து செல்லக்கிளி தண்ணீரை வாங்கி சிறிது குடித்தார். அப்பொழுதுதான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. தண்ணீர் குடித்ததுமே, வாந்தி எடுத்தபடி செல்லக்கிளி நிலத்தில் விழுந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. தண்ணீரில்த்தான் ஏதோ பிரச்சனையென நினைத்தார்கள். உடனடியாக செல்லக்கிளி யாழ்ப்பாண பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிரபாகரனிற்கும் தண்ணீர் அந்த தண்ணீர் வழங்கப்படவில்லை. தண்ணீர்க்குடுவையும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. தண்ணீர்க்குடுவையை பரிசீலித்ததில் அதற்குள் சயனைட் கலந்திருந்தது தெரியவந்தது. அது பாதுகாப்பு வட்டாரங்களையே அதிர்ச்சியடைய வைத்தது. சொர்ணம் இரண்டாவது தடவையாக நிலைகுலைந்து போனார். தனது பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அணியில் இவ்வளவு ஓட்டைகள் என்றதும், உணர்ச்சிவசப்பட்டு என்ன செய்வதென தெரியாமல் திண்டாடினார். கடந்தமுறையைப்போல, இந்தமுறையும் பொட்டம்மான் தான் அவரை நிலைப்படுத்தினார். இம்முறை விசாரணைகளை பொட்டம்மான் நேரடியாக கவனித்தார். இரண்டாம்நாளே, சயனைட் மர்மம் உடைந்தது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த செல்லக்கிளி சிகிச்சை முடிவில் கைது செய்யப்பட்டார். விசாரணைகளில் சயனைட் கலந்ததை அவர் ஒப்பும் கொண்டார். அவரது ஒப்புதல்வாக்குமூலம், சொர்ணத்தின் தெரிவொன்றை சிதைத்தது என்பது இன்னொரு விடயம். அப்பொழுது பாதுகாப்பு அணியில், சொர்ணத்திற்கு அடுத்த நிலையில் கடாபி இருந்தார். கடாபியும் மிகப்பல வருடங்களாகவே, பிரபாரனின் நிழலாக வாழ்ந்து வந்தவர்தான். சொர்ணம், தனது பொறுப்பிலிருந்து மாற்றம்பெற்று செல்வதென்றால், அடுத்து யார் என்ற கேள்வி வந்தது. இது பல தெரிவுகளை கொண்டதல்ல. பலரிற்கு ஒரே தெரிவு. அது கடாபி. சிலருக்கு இரண்டு தெரிவுகள். கடாபி, செல்லக்கிளி. சொர்ணம் இரண்டாம் வகை. இருவரில் ஒருவரை நியமிக்கலாம் என சொர்ணம் ஆலோசனை முன்வைத்தார். தற்போது பிரித்தானியாவில் வசிக்கும் செல்லக்கிளி மட்டக்களப்பை சேர்ந்தவர். 1985இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து, 1987 முதல் பிரபாகரனின் பாதுகாப்பு அணியில் கடமையாற்றி வந்தார். பாதுகாப்பு அணியில் இருவருமே செல்வாக்க மிக்கவர்களாக இருந்தனர். பிரபாகரனுடன் நெருக்கமாக உள்ள முதல்வட்ட பாதுகாப்பு அணியின் பொறுப்பாளராக செல்லக்கிளி இருந்தார். எனினும், கடாபி இந்த போட்டியில் எப்பொழுதும் ஒருபடி முன்னால் இருந்து கொண்டிருந்தார். தானும் போட்டியில் உள்ளேன் என்பதை அறிந்ததும், செல்லக்கிளி அதனை குறுக்குவழியில் எட்ட முடிவு செய்தார். பிரபாகரன் அருந்தும் நீரில் மிகச்சிறிதளவு சயனைட்தூளை கலந்து விடுவதென அவர் முடிவு செய்தார். பின்னர், அந்த நீரை தானே பருகுவதென்றும் முடிவு செய்தார். அதனை பருகியதும், நடந்த அத்தனை விடயங்களையும் செல்லக்கிளி முன்கூட்டியே அனுமானித்திருந்தார். இதன்மூலம், பிரபாகரனிடம் தன்பற்றிய அபிப்பிராயத்தையும், அனுதாபத்தையும் பெற்றுக் கொண்டு விடலாமென அவர் கருதினார். அவர் நினைத்ததனைத்தும் நடந்தன. அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு, பிரபாகரன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு நேரே சென்று செல்லக்கிளியை பார்த்தார். செல்லக்கிளியில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டுமென பொட்டம்மான் கூறிய போது, அதனையும் கடுமையாக ஆட்சேபித்தார். எனினும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு, குற்றத்தையும் ஒப்புக் கொண்டார். இந்த காலப்பகுதியில் இம்ரான்-பாண்டியன் படையணியின் தளபதியாக கடாபி நியமிக்கப்பட்டார். அளவிற்கதிகமாக விசுவாசம் கொண்டிருந்த தனது தலைவனை பாதுகாக்கும் பணியில் இரந்து சொர்ணம் வெளியேறினார். இதனை இன்னொரு விதத்தில் சொன்னால், சொர்ணம் தனது வீழ்ச்சிகளை நோக்கி நடக்கத் தொடங்கினார் என்றும் கூறலாம். அதன் பின்னர், அவர் முழுக்க முழுக்க ஒர களத்தளபதிதான். களத்தில் சிறப்பாக செயற்பட்டால் மாத்திரமே ஜொலிக்க முடியும். ஆனால் அது சொர்த்தினால் முடியாமல் போனது. அவரது யுத்தமுறை நவீனயுத்தமுறைகளிற்கு பொருந்தாமல் போனது. எனினும், ஈழப்போர்க்களங்களில் அவரது போரியல் அணுகுமுறைக்கு இரண்டு சிறந்த உதாரணங்கள் உள்ளன. முதலாவது எற்கனவே கறிப்பிட்டபடி FNC சண்டை என்று அழைக்கப்பட்ட கட்டைக்காடு அயுதக்களஞ்சியத் தாக்குதல். அந்த சண்டையில் அவர் ஒரு புதிய போருத்தியை ஈழக்களங்களில் அறிமுகப்படுத்தினார். எதிரியின் தளத்திற்குள் இரகசியமாக ஊடுரவிச் சென்று, எதிரியின் பின்னால் நிலையெடுத்துவிட்டு, எதிரியின் பிடறியில் அடித்து அதிர்ச்சியடைய வைப்பது. ஈழக்களங்களில் அதனை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் அவர். இன்னொன்று, பலாலி கிழக்கு காவலரண்கள் தகர்த்தது. ஆயுதங்களை கடலிற்குள்ளால் நகர்த்தி சென்று, எதிரியின் பிரதேசத்திற்குள் சேமித்து, அங்கிருந்தபடியே தயாராகி தாக்குவது. இம்ரான்-பாண்டியன் படையணியிலிருந்து விடுவித்து கொண்டதும், அவருக்கு இன்னொரு பணி காத்திருந்தது. அப்பொழுதுதான் விடுதலைப்புலிகள் கூட்டுப்படை தலைமையகம் என்ற ஒரு கட்டமைப்பை ஆரம்பித்தார்கள். அதன் முதலாவது தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். அவர் சிறந்த போர்த்தளபதியாக இருந்தபோதும், பரந்தபட்டளவில் ஆளுமை செலுத்தும் தளபதியாக ஜொலிக்க முடியாமல் போனது. கூட்டுப்படை தலைமையகத்தின் தளபதியாக அவர் நியமிக்கப்பட்ட பின்னரும், அவர் முன்னர் வகித்த வன்னிமாவட்ட தளபதி அல்லது சாள்ஸ் அன்ரணி படையணி தளபதியாகவே அவர் செயற்படுகின்றார் என்ற விமர்சனம் அவர்மேல் வைக்கப்பட்டது. அவர் தனது அத்தனை நடவடிக்கைகளிற்கும் மேற்படி இரண்டு அணிகளையுமே நம்பியிருந்தார். அல்லது அவர்களை வைத்தே திட்டமிட்டு, காரியமாற்றினார். இந்த விமர்சனங்களையடுத்து சொர்ணம் கூட்டுப்படை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது காலத்தில்த்தான் யாழ்ப்பாணத்தின் மீது இராணுவம், சூரியக்கதிர் நடவடிக்கையை ஆரம்பித்தது. சூரியக்கதிர் போன்ற ஒரு பிரமாண்டமான நடவடிக்கையை புலிகள் அதற்கு முன்னர் எதிர்கொண்டயிருக்கவில்லை. அதனை சமாளிக்கும் வல்லமையும் அவர்களிடம் இருக்கவில்லை. அதனால் அந்தப் பின்வாங்கலிற்கு தனிப்பட்ட யாரையும் காரணமாக கூற முடியுமென நினைக்கவில்லை. எனினும், அந்த பிரமாண்டமான நடவடிக்கையின் சின்னச்சின்ன முனைகளில் நடந்த தவறுகளிற்கும், தோல்விகளிற்கும் சிலர் காரணமாக இருந்திருக்கலாம். அப்படி இந்த தோல்விகளின் பழியை ஏற்றவர்கள் மூவர். முதலாமவர் களத்திலேயே மரணமடைந்தார். மணலாறு தளபதியாக இருந்த மேஜர் வெள்ளை. புத்தூரில் பெருமளவு போராளிகளுடன் மரணமானார். அந்த களத்தில் பெருமளவான போராளிகள் மரணமானதற்கு வெள்ளையின் போர்த்தந்திரங்களின் குறைபாடு காரணமாக கூறப்பட்டது. இத்தனைக்கும் அவர் தலைசிறந்த சண்டைக்காரனாக அறியப்பட்டிருக்கவில்லை. நிர்வாகத்திறன் மிக்கவராகத்தான் அறியப்பட்டிருந்தார். அவர் முக்கிய பங்காற்றிய களங்களின் சரிவிற்கு ஏற்கனவேயும் உதாரணங்கள் இருந்தன. அதனால் அவரிற்கு மரணத்தின் பின் மேஜர் படிநிலையே வழங்கப்பட்டது. மிகச்சாதாரணமாகவே அவரிற்கு லெப்.கேணல் தரநிலை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த அதிர்ச்சியை அவர் தளபதியாக இருந்த மணலாற்று மக்கள் வெளிப்படுத்தினார்கள். சிறிய அதிருப்தி கூட்டமொன்று நடத்தப்பட்டது. இன்னொருவர் ரவி. வலிகாமம் முழுமையாக விடுபட்ட பின்னர், அவர்தான் யாழ் களநடவடிக்கைகளை களத்தில் வழிநடத்தினார். சூரியக்கதிர் நடவடிக்கை ஆரம்பித்தபோது, அவ்வளவு பிரபல்யமில்லாதவராக இருந்தவர், சில வாரங்களிலேயே நடச்த்திரமாகி, களமுனை பொறுப்பை எடுத்துக் கொண்டார். தென்மராட்சி நோக்கி படையினர் நகர்ந்தபோது, அவர்களை எதிர்கொள்ள போராளிகள் இருக்கவில்லை. மிக இலகுவாக இரவுநகர்வில் படையினர் உள்நுழைந்தனர். இத்தனைக்கும், படையினர் உள்நுழைந்த பகுதிகளை பாதுகாக்க ரவியிடம் தாக்குதலணிகள் வழங்கப்பட்டிருந்தன. அவர் உரிய இடத்தில் அவர்களை நிறுத்தவில்லை. தனக்க வழங்கப்பட்ட மகளிர்படையணியை மேலதிக அணியாக பின்தளத்தில் நிறுத்தி வைத்திருந்தார். இது படையினருக்கு வாய்ப்பாகி, மிகச்சுலபமாக சாவகச்சேரிக்குள் நுழைந்தனர். வன்னிக்கு புலிகள் பின்வாங்கிய பின்னர், இதற்கான தண்டனை ரவிக்கு வழங்கப்பட்டது. அவர் ஏழுபேர் கொண்ட அணியில் ஒருவராக இருக்க கணிக்கப்பட்டார். மூன்றாமவர், சொர்ணம். அவர்தான் யாழ்க்களத்தை ஒட்டுமொத்தமாக கவனித்தவர். அவரது முதலாவது வீழ்ச்சி இங்குதான் ஆரம்பித்தது. அவர் திருகோணமலை தளபதியாக அனுப்பப்பட்டார். இதன் பின்னர் அவரது வாழ்வில் ஏறுமுகமே இருக்கவில்லை. ஒவ்வொரு களத்திலும், ஒவ்வொரு பருவத்திலும் அவர் வீழ்ச்சியடைந்து கொண்டேயிருந்தார். ஒரு யுத்தப்பிரவுவைப் போல நடமாடியவரை, அவரது யுத்தமுறைகளை நகைச்சுவைக்குரிய ஒன்றாக போராளிகள் மத்தியில் ஆக்கியது. ஒரு பக்கம் அவர் வழிநடத்திய களங்களின் தொடர் தோல்விகள்.. மறுபுறம் அவரது தலைவனில் கொண்டிருந்த அளவற்ற விசுவாசத்தின் பலாபலன்கள் என இருதுரும்புகளிற்கிடையில் அவர் தத்தளித்து கொண்டிருந்தார். http://pagetamil.com/?p=9241
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நான் இல்லாத என் வீடு - ஆதிலட்சுமி:- வெறிச்சோடிக் கிடக்கிறது என்வீடு நீரின்றி இறந்துகொண்டிருக்கும் மரங்களின் இலைகளால் நிறைந்து கிடக்கிறது வாசல். கூரை களவாடப்பட்டு....மழைநீரில் கரைந்துகொண்டிருக்கின்றன சுவர்கள். ஆளுயரத்துக்கு புற்றெடுத்துக் கிடக்கிறது வீட்டின் பின்புறம்.. பழுத்து விழுந்த பழங்களின் விதைகள் முளைத்து நிற்கின்றன பற்றையாய்.... நாய்கள் வந்து சுதந்திரமாய் மலங்கழித்துப் போகின்றன தரையில். எவரையும் காணாத துயரத்தில் இரவு முழுவதும் அழுதுவிட்டு போகிறது நிலவு. அவ்வப்போது அடிக்கும் காற்றில் மூக்கைத்துளைக்கிறது அழுகிய பிணவாடை... பிள்ளையின் ஆசைக்காய் கட்டிய மாமரத்து ஊஞ்சல் அறுந்து தொங்குகிறது தாலிக் கயிறாய்.... வெடித்த பலூனின் சிதறல்களாய் பிள்ளைகளும் பறந்திட... உடைந்த போத்தில்களையும் உருப்படாத பொருட்களையும் களவாக கொண்டுவந்து கொட்டுகிறது ஊர்ச்சனம்..... அனுமதிக்கு விண்ணப்பித்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகும் வெந்த மனத்துடனும் வளவுக்குள் நுழையமுடியாத் துயரத்துடனும் வீதியில் நின்று, என்வீட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109591/language/ta-IN/article.aspx
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
ஒரு துளி இசையும் ஒரு பாம்புசட்டையும் சுகிர்தராணி அவள் அந்த இசைக்கருவியை இரு கைகளாலும் பற்றியிருக்கிறாள் முலைமுதிரா இளம்பெண்ணின் செழிப்பான கனவைப் போல பருத்திக்கும் நீண்ட மூங்கிலது உடலின் துளை களைப் பதுக்கிக்கொண்டு ஓர் உயிர்பிரியும் இசையை வழியவிடக் காத்திருக்கிறது காமப்பழத்தின் விதைகளையும் கொண்டாடாட்டத்தின் தானியங்களையும் வலியூறிய இறகுகளையும் தன்னுள் தளும்பியபடி சரிந்திருக்கின்றது விரகம் மீதூறும் மெல்லி முத்தத்தைச் சுவைப்பது போல உதடுகுவித்து அவளதை இசைக்கிறாள் காமத்திலும் காயத்திலும் புரண்ட இசை கோடையின் சுழலாய் மேலும்புகிறது அவள் இசைக்க இசைக்க உடலெங்கும் தாழைக்காட்டின் வாசனை உயிர் எப்போதோ உருகியிருந்தது அவள் வாசித்து முடிந்ததும் அவ்வறையில் எஞ்சியிருந்தன ஒருதுளி இசையும் ஒரு பாம்புச்சட்டையும் http://www.oodaru.com/?p=7648
-
சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன் – 01 0
சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன்- 02 ஹிருத்திக் நிஹாலே தமிழ்ச்செல்வனுடன் சம்பூரில் இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் அப்படியொரு சம்பவத்தை கற்பனை செய்தே பார்த்திருக்க முடியாது. அந்தக் காலத்தில் சொர்ணம் சர்வ வல்லமை பொருந்திய ஒருவராக இருந்தார். அவர் அப்படியிருந்ததற்கு காரணமுமிருந்தது. விடுதலைப்புலிகளின் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியின் பொறுப்பாளராக இருந்தமை மற்ற எல்லோரையும் விட, அவரை தலைமைக்கு நெருக்கமானவராக காண்பித்தது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இப்படியானதொரு மரபு இருந்து வந்தது. மெய்ப்பாதுகாவலர் அணியின் பொறுப்பாளர்கள் இயக்கத்தின் சக்தி மிக்கநபர்களாக இருந்ததற்கு சொர்ணம் மட்டுமே உதாரணம் என்றில்லை. கடாபி, இரட்ணம் என அவரின் தொடர்ச்சிகள் எல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள். மெய்ப்பாதுகாவலர் அணியினர், மற்ற எல்லா படையணியினரையும் விடவும் மிகவும் மதிப்பு வாய்ந்தவர்களாகவும், கௌரவம்மிக்கவர்களாகவும் அணுகப்பட்டனர். கிட்டத்தட்ட தமிழ் சமூகத்தில் நிலவும் சாதியப்படிமுறையை ஓரளவுக்கு ஒப்பிடலாம். மிக நீண்ட காலமாக தனது தலைமைக்கு விசுவாசம் மிக்கவராகவும், குறிப்பிடத்தக்கதொரு தளபதியாகவும் உருவெடுத்தபின்னர், அவர் ஒரு போர்ப்பிரபுவைப் போலவே இருந்தார். சட்டென்ற முன்கோபம், எதையும் எடுத்தெறிந்து அணுகும் மனோபாவம் என்பன அவரைப்பற்றிய விதவிதமான பிம்பங்களை போராளிகள் மத்தியில் உருவாக்கியிருந்தது. இரண்டாம்…ஈழப்போர்க்காலத்தில் அவரின் முன்பாக வெகு இயல்பாக நின்று கதைக்க முடிந்தவன் ஆயிரத்தில் ஒருவனாகத்தான் இருந்திருப்பான். மூன்றாம் ஈழப்போர்க்காலத்தில் அவரது வாகனத்தை நடுவீதியில் நிறுத்திவிட்டு, வாகனச்சாவியை கழற்றிப் போட்டுவிட்டு போராளியொருவன் சென்றான். அப்பொழுது அவர், பல்லிழந்த அல்லது கூண்டில் அடைப்பட்ட சிங்கம். எனினும் அவர் நினைவில் காடுள்ள மிருகமாகவே இறுதிவரை இருந்தார். இன்னும் விளக்கமாக சொன்னால், நரேந்திரமோடியை வட்டச்செயலாளராக நியமிப்பதை போல. அவர் நடந்தால் திசைகள் அதிருமாப் போலவும், எதிரிகள் கிலி கொள்வதைப்போலவும் உருவாகியிருந்த பிம்பங்களிற்கும், அவரது யதார்த்தத்திற்குமிடையில் எதிரெதிரான போக்குத்தான் அவரது வாழ்வின் இறுதியில் இருந்தது. தமிழ்ச்செல்வன், பால்ராஜ், பராவுடன் முகமாலையில் 1990களில் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளில் இருந்த அதிகபட்ச இராணுவப்படிநிலை கேணல். 1993 இல் கிட்டுவிற்கு வழங்கப்பட்டது. அந்த சமயத்திலேயே போராளிகள் மத்தியில் சொர்ணத்திற்கு பேச்சுவழக்கில் இராணுவப்படிநிலை வழங்கப்பட்டாயிற்று. பிரிகேடியர் சொர்ணம். இது சாதாரணமாக உருவானதில்லை. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த படையினர் தமக்கிடையிலான தொலைத் தொடர்பு உரையாடல்களில் அப்படியொரு சொல்லை பாவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் இதனை ஒருவிதமான பரவசத்துடன் மட்டுமே தொலைத்தொடர்பு கண்காணிப்பு பிரிவினர் கேட்டுக் கொண்டிருந்தனர். விரைவிலேயே, போராளிகள் மத்தியிலும் அது ஒரு வழக்கமாகிவிட்டது. இரண்டாம் காலத்தில் அவர் எப்படியிருந்தார் என்பதற்கு சில உதாரணங்கள் சொல்லலாம். 1990 களின் முற்பகுதி. இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர், தனது அமைப்பில் இருந்த மூத்தவர்களிற்கு விடுதலைப்புலிகள் படிப்படியாக திருமணம் செய்து வைத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒருநாள், பிரபாகரன் சொர்ணத்தை அழைத்தார். அவரிற்கும் வயதாகிவிட்டதால் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். சொர்ணம் இதனை எதிர்பார்க்கவில்லை. பார்க்கலாம் என்றிருக்கிறார். அவரது பார்க்கலாம் என்பது பிரபாகரனிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாரையாவது காதலித்து, அல்லது மனதில் விருப்பத்துடன் இருக்கிறாரா என பிரபாகரன் கேட்டிருக்கிறார். சொர்ணம் அதனை மறுத்து விட்டார். இதன் பின்னர் இருவரும் அது பற்றி பேசிக் கொள்ளவில்லை. இராணுவச்சிந்தனைகளுடனேயே இருக்கும் இருவர், எப்பொழுதும் பொது விடயங்களில் குறிப்பிட்ட எல்லைகளிற்கு மேல் செல்வதில்லை. அப்படி பேசுவதை கௌரவக்குறைவாக நினைக்கலாம். அல்லது ஆர்வம் இல்லாமலுமிருக்கலாம். இந்த தொடரின் முதல்ப்பகுதியில் சொர்ணம் குறித்து, அவரது குண இயல்புகள் குறித்து பேசும்போது, சொல்லாமல் விட்ட விடயமொன்றுண்டு. எதையும் தீவிரமாக சிந்திப்பவர், இரண்டாவது தெரிவுகள் அற்றவர் என சில இயல்புகளை குறிப்பிடப்பட்டிருந்தேன். இந்த இயல்புடைய இன்னொருவரை விடுதலைப்புலிகள் அமைப்பில் தேடினால், அது அதன் தலைவர் பிரபாகரன்தான். பிரபாகரன் களத்தில் இந்தவிதமான செயற்பாடற்றவர். எப்பொழுதும் அதீத தந்திரோபாயங்களிற்கு முக்கியத்துவம் அளிப்பவர். தனது அமைப்பில் மிகக்குறைந்த போராளிகள்தான் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞை எப்பொழுதும் அவரிடம் இருந்து கொண்டேயிருந்தது. அதனால்த்தான், அவர் பெரும் உயிரிழப்புக்களை குறைக்கும் விதமான இராணுவத் தந்திரங்களில் ஆர்வம் காட்டினார். கரும்புலிகள் அணியின் உருவாக்கம்கூட இந்தவிதமான எண்ணத்தினால் உருவானதுதான். ஆனால் சொர்ணம் அதற்கு நேர்மாறானவர். அவரிடம் உயிரிழப்புக்கள் பற்றிய அக்கறை இருந்ததில்லை. அவர் அர்ச்சுனன் மாதிரி. கிளியின் தலைதான் தெரியும். எந்த இலக்குடன் புறப்பட்டோம் என்பது மட்டும்தான் அவரது நினைவில் இருந்தது. இருந்த போதிலும்,சில உபஇயல்புகள் இப்படி வேறுபட்டாலும், காரியத்தில் தீவிரமாக இருப்பதென்பதில் இருவரும் ஒத்த அலைவரிசையுடையவர்கள். முன்னவரின் தம்பி பின்னவர் எனலாம். பிரபாகரன் குடும்பத்துடன், சொர்ணம், பானு, ஜெயம், சுமன், வெள்ளை உண்மையில் அதுவரை சொர்ணத்திற்கு காதல் கத்தரிக்காய் என்ற எதுவுமே ஏற்பட்டிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்னர் நடந்தவை பற்றி இந்த தொடர் கவனம் கொள்ளவில்லை. இதில் குறிப்பிடப்படுபவை அனைத்தும், சொர்ணம் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்ததன் பின்னர்தான். அவர் இயக்கத்தில் இருந்த நாட்களில் நினைத்தார், தான் இயக்கத்தில் இருப்பது தலைவரை விசுவாசித்து கொண்டிருக்கவே என்று. அதனையும் மீறி ஒன்றென்றால், இயக்கத்தை விசுவாசித்து கொண்டிருந்தார். அவரளவில் இரண்டும் ஒரே அர்த்தமுடையவைதான். ஒருவன் விடுதலைப்புலிகளில் இணைந்து விட்டாலே அவன் அனைத்து ஆசாபாசங்களையும் துறந்து விட வேண்டும் என அவர் நினைத்தார். அப்படித்தான் அவரது இயக்க வாழ்க்கை முழுக்க இருந்தது. அவர் பிரபாகரன் மேல் கொண்டிருந்தது அளவிட முடியாத விசுவாசம். இதனை இந்த சம்பவம் புலப்படுத்தும் என நினைக்கிறேன். விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் மாத்தையா விவகாரம் உருவானது. அதுவரை விடயத்தை மிக இரகசியமாக கையாண்டு வந்த பொட்டம்மான், ஒரு கட்டத்தில் செயலில் இறங்குகிறார். அதுவரை விடயம் யாருக்கும் வெளிப்படுத்தப்படவில்லை. பிரபாகரனும், பொட்டம்மானும் மட்டுமே விடயங்களை கையாண்டு கொண்டிருக்கின்றனர். மாத்தையா மீதான சந்தேகம், மற்றும் அதை தொடர்ந்து உருவான பதற்ற நிலைகளின் போது, பிரபாகரன் இந்த விடயத்தில் விட்டுப்பிடிக்கும் முடிவுடன்தான் இருந்தார். மாத்தையா எல்லைமீறிச் செல்ல திராணியற்ற ஒரு விசுவாசியென்பதுதான் அவரது கணக்கு. அவர் அப்படி நினைத்ததற்கு காரணமிருந்தது. இந்தியப்படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில், பிரபாகரன் மணலாற்று காட்டிற்குள் இருந்தார். மாத்தையா வன்னியில் இருந்தார். அந்த சமயத்தில் இந்திய புலனாய்வு அமைபபான றோ அவரை தொடர்பு கொள்ள முயன்றது. கிளிநொச்சியிலிருந்த ஓய்வுபெற்ற தபாலதிபர் ஒருவரின் மூலம்தான் இதன் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நடந்தன. தபாலதிபரின் குடும்பத்துடன், மாத்தையாவிற்கு நெருங்கிய உறவிருந்தது. இந்திய புலனாய்வு அமைப்பு ஏற்படுத்திய தொடர்பை மாத்தையாவும் சங்கடமின்றி ஏற்றுக் கொண்டார். அவர் அந்த தொடர்பை என்ன நோக்கத்துடன் எற்படுத்தினார் என்பதை இந்த கட்டுரையாசிரியரால் உறுதி செய்து கொள்ள முடியவில்லை. பொதுவாக, விடுதலைப்புலிகள் இவ்வாறான உத்தியை கையாள்வது வழக்கம். எதிர்த்தரப்பு தொடர்பு கொள்ள முயன்ற சமயங்களிலெல்லாம், அவர்களுடன் உடன்பட்டு செல்வதைப்போல பாவனை பண்ணி, பலனடைந்து கொள்வதற்கு விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாறு முழுக்க நிறைந்த உதாரணங்கள் இருந்தன. மாத்தையாவும் சுயமாக முடிவெடுக்க வல்ல ஒரு மூத்த தளபதியென்பதாலும், அந்த சமயத்தில் பிரபாகரனை அடிக்கடி சந்திக்க முடியாததால் அதனை அவரிடம் சொல்லாமலும் இருந்திருக்கலாம். எனினும், அந்த சமயத்தில் விடுதலைப்புலிகளிற்கு எதிராக நடந்து கொள்ளும் எந்த எண்ணமும் அவரிடம் இருந்திருக்கவில்லையென்பதை உறுதியாக நம்பலாம் என்பதே இந்த கட்டுரையாசிரியரின் முடிவும். எனினும், அந்த சமயத்தில் கிளிநொச்சியில் இருந்த லெப்.கேணல் சந்திரன் இதனை தெரிந்து கொண்டதும், பிரபாகரனின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என முடிவு செய்தார். அந்த சமயத்தில் முத்துஐயன்கட்டு பிரதேசம் விடுதலைப்புலிகளின் இரகசிய சந்திப்பிடம், மறைவிடம், மருத்துவ பிரதேசமாக இருந்தது. கிளிநொச்சியிலிருந்து அங்கு சென்ற சந்திரன், மணலாற்றிலிருந்த தலைவரிடம் மிக அரகசியமாக இந்த தகவலை சேர்ப்பிக்குமாறு அன்புவிடம் சொல்லியனுப்பினார். (லெப்.கேணல் அன்பு. மணலாறு மாவட்ட தளபதியாக இருந்த சமயத்தில் 1993 இல் ஒப்ரேசன் தவளை நடவடிக்கையில் வீரச்சாவடைந்தார்) அன்பு முத்துஐயன்கட்டிலிருந்து மருந்துப் பொருட்களுடன் மணலாறு திரும்பி சென்றதும், விடயத்தை பிரபாரனிடம் கூறினார். உடனடியாக பிரபாகரன் மாத்தையாவை மணலாற்றிற்கு வந்துவிட்டு செல்லுமாறு அழைத்தார். இந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பதில், அந்த சமயத்தில் பிரபாகரனிற்கு குழப்பமிருந்தது. ஆனால் மாத்தையாவிடம் அந்த குழப்பமிருக்கவில்லை. இரண்டு நாளின் பின்னர் அவர் மணலாற்றில் நின்றார். பிரபாகரன் விடயத்தை நேரடியாகவே மாத்தையாவிடம் கேட்டார். “இந்திய புலனாய்வு அமைப்புடன் உனக்கு தொடர்புள்ளதாக அறிந்தேன். உண்மையா” என்ற பிரபாகரனின் கேள்வியில் மாத்தையா நிலைகுலையவில்லை. ஒரு கணமும் தாமதிக்காமல் ஒத்துக் கொண்டார். அவர்களிடமிருந்து எதையாவது பெற்றுக் கொள்ளலாமா எனப் பார்ப்பதாக அவர் கூறினார். ஆனாலும், இந்த விவகாரத்தில் பிரபாகரனிற்கு அவ்வளவு உடன்பாடு இருக்கவில்லை. எதிர்த்தரப்பை கையாளும் கத்திமேல் நடக்கும் விளையாட்டுக்களை, பொதுவாகவே அமைப்பின தலைமைகள் தமது நேரடி கண்காணிப்பில் நடத்தவே விரும்புவார்கள். ஏனெனில், எதிர்த்தரப்பு கச்சிதமாக நடந்து, தமது பக்கத்திலிருந்து ஆட்களை இழுத்து எடுத்து விடுவார்கள் என்ற முன்னெச்சரிக்கை தலைவர்களிடம் இருப்பது வழக்கம்தானே. இந்த தொடர்பை நிறுத்திவிடும்படி பிரபாரன் கூறி, மாத்தையாவை அனுப்பினார். இதன் பின்னர்தான் மாத்தையா விடுதலைப்புலிகளின் பிரதித்தலைவரானார். சொன்னால் எதையும் கேட்கும் நம்பிக்கைக்குரிய விசுவாசி மாத்தையா என்பது பிரபாகரனின் ஆரம்ப கால கணிப்பு. ரெலோ அமைப்பிலிருந்து மாத்தையா பிரபாகரனின் பக்கம் வந்த பின்னர், அவரது தன்னடக்கமான செயற்பாட்டை இந்தியாவில் நடந்த பயிற்சி முகாமொன்றில் நடந்த குழப்பத்தின் போதும் பிரபாகரன் குறிப்பிட்டு சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், மாத்தையா விவகாரத்தில் ஆபத்தான விளைவுகள் இருக்கலாமென விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை எச்சரித்ததை தொடர்ந்தும், மாத்தையாவின் உண்ணாவிரதத்தை தொடர்ந்தும் அவரை கைது செய்யலாமென பிரபாகரன் முடிவு செய்தார். அதற்கான அனுமதி கிடைத்ததும், பொட்டம்மானின் அணி வேட்டையில் இறங்கியது. இதில் அதிர்ச்சியளிக்கத்தக்க விடயம் என்னவென்றால், மாத்தையாவின் நெருக்கமானவர்களாக இருந்ததில் பலர், பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தவர்கள்தான். பிரபாகரனின் தனிப்பட்ட செய்தித் தொடர்பாளர் முருகன், சாரதி செங்கமலன், நிர்வாக பொறுப்பாளர் ஜெரி என பலரை பிரபாகரனின் கொக்குவில் முகாமில் வைத்து அடுத்தடுத்து பொட்டம்மான் நேரடியாக வந்து கைது செய்தார். இந்த கைதுகள் நடக்கும் வரை இப்படியொரு சதித்திட்டம் நடப்பதையே சொர்ணம் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அவர்தான் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியின் தளபதி. புலனாய்வுப்பிரிவு பொறுப்பாளர் பொட்டம்மான் பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனைகள் சொல்வாரே தவிர, வேறு விடயங்களில் நேரடியாக தலையிடுவதில்லை. அனைத்தும் பாதுகாப்பு பிரிவு தளபதியின் கையில்த்தான் உள்ளது. பிரபாகரனின் உதவியாளர்கள், உள்ளக பாதுகாப்பு பொறுப்பாளர்கள், தொடர்பாளர்கள், செயலர்கள் என அனைத்தும் பாதுகாப்பு பிரிவு தளபதியின் பொறுப்புத்தான். மாற்றங்கள் நிகழும் சமயத்தில் எப்பொழுதுதாவதுதான் அதற்கான காரணத்தை பிரபாகரன் கேட்பார். மாத்தையா விவகாரம் மற்றும், தான் நியமித்த நம்பிக்கைக்குரிய ஆட்களின் சதிச் செய்தி என்பன சொர்ணத்தை ஆடிப் போகச் செய்துவிட்டது. பிரபாகரனின் பாதுகாப்பில் தான் குறை ஏற்படுத்திவிட்டதாக கருதினார். அவரால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. என்ன செய்வதென குழப்பத்துடன் இருந்தவர், இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தார். தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு, இணுவிலில் இருந்த பொட்டம்மானின் முகாமிற்கு சென்றார். ஒரு காலைப்பொழுதில் தனது முகாமின் வரவேற்பு பகுதியில் உட்கார்ந்து பொட்டம்மான் காலைத்தினசரிகளை புரட்டிக் கொண்டிருந்த சமயத்தில் திடுதிப்பென சொர்ணம் முகாமிற்குள் நுழைந்தார். சொர்ணத்தின் திடீர் வரவு காவலர்களிற்கும் ஆச்சர்யம்தான். எனினும், அவரை யாரும் எங்கும் அந்த காலத்தில் மறிப்பதில்லை. நேராக உள்ளே சென்றார். பொட்டம்மானும் ஆச்சரியமாக பார்க்க, யாரும் எதிர்பாராத விதமாக பொட்டம்மானின் காலடியில் உட்கார்ந்து விட்டார். அவரது கால்களில் தனது தலையைப் புதைத்துக் கொண்டு குலுங்கிக்குலுங்கி அழத் தொடங்கிவிட்டார். ஒரு மலை சரிந்து விழுந்ததை அன்றுதான் பலரும் பார்த்தார்கள். பிரபாகரனின் பாதுகாப்பில் தான் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லையென்றும், தற்போதைய சூழலில் எப்பொழுது என்ன நடக்குமென தெரியாமல் உள்ளதால், பிரச்சனையாகும் முன் தலைவரை பாதுகாக்கும்படியும், அவரை உடனடியாக பொட்டம்மானின் பொறுப்பில் எடுக்குமாறும் சொன்னார். சொர்ணத்தை ஆறுதப்படுத்தி அனுப்பி வைக்க பொட்டம்மானிற்கு போதும்போதுமென்றாகியிருக்கும். இந்த கோபமும், ஆற்றாமையும், ஆத்திரமும் மாத்தையா கைதின் போது சொர்ணத்திடம் பகிரங்கமாகவே வெளிப்பட்டது. மாத்தையாவின் சதித் திட்டத்துடன் தொடர்புபட்டவர்கள் என கருதிய பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்தவர்களை கைது செய்ததன் பின்னர், மாத்தையாவை கைது செய்வதென பிரபாகரன் முடிவு செய்தார். இந்த நடவடிக்கைக்கு யாரைப் பொறுப்பாக நியமிக்கலாம் என்ற இரண்டு தெரிவு பிரபாகரனிடம் இருக்கவில்லை. ஒரேயொரு தெரிவுதான். சொர்ணம். சொர்ணம் தனது படையணியினருடன் நடவடிக்கைக்கு கிளம்பினார். சொர்ணத்தின் அணியுடன் ஒரு பா்வையாளரைப் போல பொட்டம்மானும் சென்றார். எனினும், இந்த நடவடிக்கையை முற்றுமுழுதாக சொர்ணமே வழிநடத்தினார். ஏற்கனவே பிரபாகரனிற்கு எதிரான சதியில் ஈடுபட்டார் என கடுமையான அதிருப்தி மாத்தையா மேல் இருந்தது. அன்று ஒரு துப்பாக்கி மோதலிற்கு தயாராகவே போராளிகள் சென்றனர். மாத்தையாவின் முகாம் வாயிலில், காவல்க்கடமை பலமாக இருந்தது. சில சமயங்களில் அவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தலாம் என்றும் சொர்ணம் தரப்பு நினைத்தது. எனினும், எந்த தயக்கமும் இல்லாமல் வாகனத்தில் இருந்து இறங்கி சொர்ணம், யாரையும் எதிர்பாராமல் முகாம் வாயிலை நோக்கி சென்றார். (தொடரும்) http://pagetamil.com/?p=7454
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
அவளும் அவளைப் பின்தொடரும் மிருகமும் சாய் ராம் தினமும் நடக்கும் விஷயம் தான். தன் அறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவளை அந்த மிருகம் பின்தொடரும். அரூபமானது! வக்கிரமானது! நிழல் போல! சூடான மூச்சுக்காற்றினைப் பின்கழுத்தில் உணர்வாள். பின்புறத்தில் அதன் பார்வையின் சூடு எரிச்சலூற்றும்! பழமொன்று கெட்டு போனதைப் போன்ற அதன் வாடை எங்கும் நிரம்பி இருக்கும்! நெருக்கடியான ஜனக் கூட்டத்தில் காதில் எதாவது முணுமுணுத்து கொண்டே இருக்கும். ஆட்களற்ற தார் சாலையில் அவள் நடக்கும் போது உயர்ந்து எழும்பி இருக்கும் கட்டிடங்களின் ஜன்னல்கள் அதன் கண்களாய் மாறியிருக்கும். காலங்கள் கடந்தாலும் அது அன்னியமாகவே இருக்கிறது. அவளுடைய பதட்டம் குறையவே இல்லை. http://sairams.com/2014/06/அவள்/
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
புரூட்டஸ்களின் புன்னகை பாரிமைந்தன் புரூட்டஸ்களின் புன்னகைக்குள் ஒளிந்திருக்கிற வன்மத்தை ஒருபோதும் உணர்ந்திருப்பதில்லை சீசர்கள். கத்திகளால் குத்தப்படுவதை விட கொடுமையானது துரோகத்தின் வலி என்பதை புரிந்துகொள்வதில்லை ஒருபோதும் புரூட்டஸ்கள். ஆண்டவரே! இவர்கள் செய்வதறியாது செய்கிறார்கள் இவர்களின் பிழையை காத்து இரட்சியுமென வேண்டிக் கொள்கிறார்கள் இயேசு நாதர்கள் எப்போதும் தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்காகவும் காலாகலமும் அப்பழுக்கற்றவர்கள் வீட்டு முற்றத்திலேயே அடிக்கடி முளைக்கின்றன துரோகச்செடிகள். http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=3684fcce-0327-420c-a06e-02b0ca016a5e
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நெடுங்காமம் அவள் ஏறும் போது நான் கவனிக்கவே இல்லை, அவளின் குரல் மட்டும் இருக்கை கிடைத்து விட்ட சந்தோஷத்தில் கூவியது, என் முன் இருக்கையின் குறுக்கில் அவள் உட்கார்ந்த போதும் முகத்தை பார்கவே இல்லை, நிமிர்ந்து பார்க்காத என்னை பார்த்த பின்பு அவளின் அழகின் மேல் அவளுக்கே சந்தேகம் வந்திருக்க வேண்டும் , இப்படி ஒருவனா என்று தோன்றி இருக்க கூடும் , அவள் பேசினாள், அவள் ஏதோ கையை ஆட்டி கொண்டே தாயுடன் பேசினாள், அவளின் செய்கை அப்பட்டமாக என்னை நோக்கி என்று புரிந்தது, கருப்பு உருவம் , மெலிந்த தேகம், லட்சணமான முகம், இருந்தும் என்னை கவரவில்லை, மீண்டும் புத்தகத்துள் ஆழ்ந்தேன். கதையில் கடுங்காதலுற்ற யவன ராணி இளஞ்செழியனிடம் காதலை உரைக்கும் வார்த்தைகள் புத்தகத்தின் தாள்களிடமிருந்து பீய்த்து கொண்டு என் உடலில் மெதுவாக ஏறின, என் பார்வையை அவளின் பால் திருப்பினேன், “அட இவள் அழகாய் தானே இருக்கிறாள்”, பார்த்து கொண்டே இருந்தேன் , நான் பார்ப்பது தெரிந்து அவளின் உள்மனது திருப்தி அடைந்திருக்க வேண்டும் போல, அவளும் ஒரு ராணிக்குரிய மிடுக்குடன் தன்னை நிலைப்படுத்து அமர்ந்தாள், சிறிது நேரம் கழித்து பார்வையை திருப்பினாள், அப்போதும் அவன் (என் ) பார்வை தழைக்காததை கண்டு சற்றே சலிப்புடன் திரும்பிக்கொண்டாள், மற்றுமொரு நேரம் திரும்பி பார்க்கையில் அவன் மாறாததை கண்டு அவளுக்கு கோபம் தான் வந்தது. சற்று முன்னர் “இப்படி ஒரு ஆண் பிள்ளை இருப்பானா?” என்று அதிசயிதவள், இப்போது “ச்சே இப்படி ஒரு ஆண் பிள்ளை இருப்பானா, கூச்ச படாமல் பார்த்து கொண்டு ” என்று வெறுக்கிறாள், இந்த பொல்லாத காற்று அவள் கூந்தலை என் முகத்தில் வீசிவிட்டு போனது, அவளை சடாரென்று கட்டியணைத்து முத்தமிடும் பேராவலை அடக்கிகொண்டேன். யாரோ சொன்னார்கள் பேருந்து கட்டுபாட்டை இழந்து விட்டதென்பதை, ஜன்னல் வழியே பார்த்தேன் பேருந்து சாலையை விட்டு விலகி காய்ந்த வயல்வெளியில் இறங்கி தறிகெட்டு ஓடி கொண்டிருந்தது… http://kaatchipizhai.wordpress.com/2008/12/23/நெடுங்காமம்/
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நானும் dns சேர்வரைப் புதுப்பித்துப் பார்த்தேன். குக்கீஸ் எல்லாம் அழித்துப் பார்த்தேன். எதுவும் சரிவந்த மாதிரித் தெரியவில்லை. ஆனால் mobile இல் வேலை செய்கின்றது!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புதிய சேர்வர் மாற்றத்தின் பின்னர் வேலைத் தளத்தில் யாழுக்கு வரமுடிவதில்லை. இந்த சேர்வரை கறுப்புப்பட்டியலில் போட்டுவைத்திருக்கின்றார்கள் போலிருக்கு!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனது ஆறாவது வயதைக் கொண்டாடும் தமிழ் சிறி அண்ணா பல்கலையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சைவ சமயத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எனக்கு மத நம்பிக்கை என்பது துளியளவும் இல்லை. மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வை தக்க வைத்துக் கொள்ள இந்து மதக் கொள்கைகள் உதவவில்லை என்று எத்தனை பக்கங்கள் வேண்டும் என்றாலும் எழுதிக்கொண்டு போகலாம். ஆனால் அதையும் தாண்டி யதார்த்தத்தில் என்ன நடக்கின்றது என்பது பொதுப்புத்தி உள்ளவர்களுக்குப் புரியும். எனவே சுயமாகச் சிந்தித்து தனது ஆன்மீகத் தேடலுக்குத் தகுதியான மதத்தைத் தேர்ந்துகொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பூரண உரிமை உண்டு. அதேவேளை மதப்பிரச்சாரம் செய்பவர்கள் பிற மதங்களைத் தூற்றி தமது மதத்தைத் தூக்கிப் பிடிப்பது தவறானது. இதனால்தான் யெகோவாவின் சாட்சிகள் போன்ற அமைப்புக்களில் இருந்து வருபவர்களை துளியும் மதிப்பதில்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இன்று Windows 8.1 OS க்கு மாறிய பின்னர் Internet Explorer 11 install ஆகியுள்ளது. இதில் புதிய திரி ஒன்றைத் திறக்கும்போது Rich Format இல் வெட்டி ஒட்டமுடியவில்லை. இந்த்ப் பிரச்சினையை சரிசெய்ய முடியாவிட்டால் வெட்டி ஒட்டும் வேலைகளை இலகுவாகச் செய்யமுடியாது போய்விடும்! நிர்வாகம் கவனிக்குமா?
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
எந்திரன் போகன் நான் ஒரு கதை சொல்லி என்று வந்தான் அவன். உங்கள் நாட்குறிப்புகளைக் கொடுங்கள். உங்கள் வாழ்வைக் கதையாய்ப் பின்னித் தருகிறேன் என்றான் என் நாட்கள் யாவும் நகல்களால் நிரம்பியவை எனினும் தன்கதையைப் பிறர் பேசக் கேட்கும் அற்ப ஆசை என்னையும் தொட்டது, சில காலம் கழித்து ஏமாற்றத்துடன் வந்தான் . 'மன்னிக்கவேண்டும் நான் ஒரு அறிவியல் கதை சொல்லி அல்ல. இயந்திரங்களைப் பற்றி எழுத எனக்குத் தெரியாது.' என்றான் வருத்தமாய்.. http://ezhuththuppizhai.blogspot.co.uk/2010/07/blog-post_21.html
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
தியான வெளி இந்திரன் காகித விளக்குகளை ஏற்றி வைக்கிறாய் நாற்புறமும்.. மெலிதான கொசுவலைக்குள் இருவரும் . ஒருவர் விழியில் மற்றவரின் பிம்பம் இடவல மாற்றங்களோடு இருப்பதைப் புரிந்து கொண்டு. கிரகங்களால் அலங்கரிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் நீயும் நானும் ஒன்றை ஒன்று பொருத்தி சுடர்விட்டு எரியத் தொடங்கும் இரண்டு அகல் விளக்குகள். உன்னைத் தொடாமலேயே உனது உடம்பை நான் மனத்துக்குள் உணர்கிறேன் நாகலிங்கப் பூவிற்குள் தேன் தேடும் எறும்பைப் போல் உனது மேனியைத் மெலிதாய்த் தொடுகிறேன் விந்தையான புதிர் ஒன்றைத் தொடுவது போல். ஒரு புறாவைப் போல் நீ சிலிர்த்துக் கொள்கையில் மாறிப் போய் ஒலிக்கும் உன் குரலில் நீ முணுமுணுப்பது மந்திர உச்சாடனம் போல் கேட்கிறது . எனது வலது கரம் உனது இடது கரத்தின் மீதும் உனது வலது கரம் எனது இடது கரத்தின் மீதும் இசையின் இரண்டு கமகங்கள் போல் படிகின்றன. உனது விரல்களின் நுனிகள் இதயத்தின் வார்த்தைகளைப் பேசுவதை உடம்பின் அதிர்வலைகளால் உணர்ந்து கொள்கிறேன். கண்களை மெலிதாய் மூடியபடி ராகமாலிகையொன்றை உதட்டுக்குள் நெய்தெடுக்கிறாய் என்னைப் போலவே. ஒருவர் பாடும் பாடல் ரீங்கரிக்கிறது மற்றவர் செவியில். ஒருவருக்குள் இன்னொருவரின் உயிர் உருகத் தொடங்கியதும் இருவருக்குள்ளும் உறங்கும் சக்தி விழித்துக் கொண்டு மிதக்கத் தொடங்குகிறது காதல் மணக்கும் தியான வெளியில். http://malaigal.com/?p=3629
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை மகிழ்வுடன் கொண்டாடும் சகாறா அக்கா, ரகுநாதன், முத்து அண்ணா ஆகியோருக்கு மனமுவந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞரின் கைது மிகவும் கவலையளிக்கின்றது. மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்களுக்கும், சிறிலங்கா அரசின் போக்கை விமர்சிப்பவர்களுக்கும் மகிந்த குடும்பத்தினர் சுதந்திரமாக நடமாடவோ கருத்துக்களைத் தெரிவிக்கவோ அனுமதிப்பதில்லை என்பதை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். கவிஞர் விரைவில் விடுதலை பெற்று வெளியே வருவார் என்று நம்புகின்றேன்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
குறைகூறி மகுடேசுவரன் நம்மைச் சுற்றி எப்படி வந்தான் இந்தக் குறைகூறி ? இவனிடமிருந்து நம்மைப் பாதுகாக்கவே ஆற்றல் அனைத்தும் விரயமாகிவிடுகிறது. வெள்ளைத்தாளில் கரும்புள்ளி தேடுவதே இவன் வாடிக்கை. தோசையின் பசியணைக்கும் வள்ளாண்மையைப் பேசாமல் அதன் வட்டக்குறைகளையே பேசுபவன். வடக்கு நோக்கி நின்றால் நீ கிழக்கு நோக்கி நின்றிருக்கலாம் என்பான். மனச்செயலியை முற்றாகக் குலைக்கும் வைரஸாகிவிடுகிறது குறைகூறி உதிர்க்கும் ஒரு கருத்து. ஒருவனின் மழலையே அவன் என்பதில் நான் முழுநம்பிக்கையுள்ளவன். அந்த மழலையை அரிந்து அகற்றுவதில் குறைகூறி குறியாயிருக்கிறான். குறைகூறியை நாம் எப்போதும் நாடுவதில்லை அவன்தான் நம்மைத் தேடியபடியே இருக்கிறான். அவனிடமிருந்து நாம் ஒளிந்துகொள்ளாததால் அவன் நம்மைக் கண்டுகொள்கிறான். ஒரேயொரு குறைகூறி நம்மை எல்லாத்திசையிலும் முடக்கிவிடுவான். ஒரேயொரு குறைகூறி நம்மை என்றும் எழாதபடி வீழ்த்திவிடுவான். ஒரெயொரு குறைகூறி நம்மைக் குதறிக் கொன்றுவிடுவான். குறைகூறி என்னும் பெருநோயாளி வைத்தியக் குறிப்புகள் கூறுபவனைப்போல் தோன்றுவான். குறைகூறி என்னும் பைத்தியக்காரன் அலையாத விழிகளோடு எதிரே நிற்பான். குறைகூறி என்னும் குற்றவாளி நமக்கு நீதி செய்பவன்போல் அமர்ந்திருப்பான். குறைகூறி என்னும் தாழ்ந்த சுயமதிப்பீட்டாளன் நம்மை விமர்சனத் தராசில் நிறுத்துவான். இப்பொழுது நான் எச்சரிக்கையாகிவிட்டேன். அவன் என்னை எந்நோக்கோடு அணுகுகிறான் என்பதைப் புரிந்துகொண்டேன். அவன் ஓர் ஆளே இல்லை என்பது தெரிந்துவிட்டது. முன்பெல்லாம் குறைகூறி எதைச் சொன்னாலும் ‘அப்படியா சொல்றீங்க ?’ என்று கேட்டுக்கொண்டிருந்தேன். இப்பொழுது ‘போடாங்கொய்யாலே’ சொல்கிறேன். http://kavimagudeswaran.blogspot.co.uk/2011/12/blog-post_25.html
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நம் பொய்கள் ஜி. முருகன் பனிப் பொழிவைப்போல நம் வாழ்க்கையின்மேல் உதிர்ந்து கொண்டிருக்கின்றன பொய்கள் சில பொழுது மேகங்களைப் போல காதலின் வசீகரமாகி முத்தத்தில் எச்சிலைப்போல கலக்கின்றன ஆடை கலைப்பில் கூடி முயங்கி முனகலிட்டு தாபத்தில் கலக்கும் பொய்யும் பொய்யும் விடுபட்டு சரிந்து களைப்புறுகின்றன ஒவ்வொரு முறையும் நாம் பொய்யின் பரிசுகளையே பரிமாறிக்கொண்டு விடைபெறுகிறோம் பொய்கள் விடைபெறுவதில்லை அவை வாழ்க்கையின் கண்ணாடி குடுவையை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. http://gmuruganwritings.wordpress.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
பாதி பருகிய குவளைகள் ஈரோடு கதிர் எதிர்பாரா ஒரு பொழுதில் எதிரெதிரே கலந்த கண்களில் ஒளிர்ந்தடங்கியது ஒற்றை மின்னல் அவள்தானா? அவன்தானா? ஆண்டுகள் தீர்ந்தும் நினைவின் இடுக்குகளில் சிதையா முகத்தின் மிச்சம் விழிகள் விரிந்த நொடியில் உதடுகளில் புன்னகை உதிர விசாரிப்புகள் விருப்பப் பார்வைகள் நேசம் பொதிந்த நெடுமூச்சுகள் ஏதாவது சாப்பிடலாமென அருகாமைக் கடையில் காபி குவளைகளோடமர்ந்து உதடுகள் ஒன்றை உரையாட விழிகள் வேறொன்றைப் பேச தீரத் தவிக்கும் நிமிடங்களை தீர்க்கமற்றுப் பிடித்து தீரத் துடிக்கும் காபியை பருகாமல் பருகி பாதியாய் வைத்த நொடியின் விளிம்பில் அவனறியாமல் இடமாற்றி வைத்தாள் பாதி பருகிய குவளைகளை அவனறிந்ததை அறியாமலே! http://maaruthal.blogspot.co.uk/2013/03/blog-post_16.html
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
பெண் புலி! தினேஷ் பாலா ஒரு நீண்ட கனவு அது ஒரு நீண்ட கனவென்று என்னால் உறுதியாய் கூறமுடியும் காடுகளும் மலைகளும் சூழ்ந்த நட்ட நடு வனத்திற்குள் அத்தனை ஆக்ரோஷமாய் மூச்சிரைக்க ஓடி வருகிறது அத்தனை அன்புகளை சுமந்து கொண்டு ஒரு புலி அது அதன் மொத்த பிரியங்களையும் ஒரு மூட்டையாய் கட்டி சுமந்து ஓடி வருகிறது இருந்தும் புலியென்றால் பயம் என்று மட்டுமே எனக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது நான் என் சுயத்தை பத்திரப்படுத்த ஓடி வருகிறேன் இங்கே நான் மறைத்துக்கொள்ள மறைந்துகொள்ள நிறைய வழிமுறைகள் இருக்கின்றன எதார்த்தம் எளிமையானது எளிய எதார்த்தம் மிக மிக எளிமையானது எதார்த்தத்தின் சிலந்தி வலைக்குள் சிக்க மனமில்லாமல் அதை கிழித்துக் கொண்டு ஓடி வருகிறது அந்த புலி நிஜத்தில் இத்தனை மைல்கள் நான் ஓட முடியுமாவென தெரியவில்லை எனக்கு இன்னும் சில தூரங்களுக்கு அப்பால் நான் இந்த புலியிடம் அகப்பட்டுக் கொள்ளலாம் அல்லது தப்பித்தும் சென்றுவிடலாம் நான் விரும்புவதெல்லாம் ஒன்றேயொன்றுதான் இந்த வனத்திற்குள் நான் தனியே நின்று கதறியழும் தருணமென்று ஒன்று வரவே கூடாது அதற்குள் எனக்கு இந்த கனவு கலைந்துவிட வேண்டும்!!! http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6404
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் விசுகு ஐயாவிற்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்