Everything posted by கிருபன்
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காணியில் நூலகம் பயங்கரவாத தடை சட்டம் பாய்கிறது
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காணியில் நூலகம் பயங்கரவாத தடை சட்டம் பாய்கிறது; விசாரணைகளுக்கு பருத்தித்துறை நீதிமன்று அனுமதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக காணியில் நூலகமொன்றை அமைக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள புலிகளின் தலைவரின் பூர்வீக காணியில் நூலகம் ஒன்றினை நிர்மாணிக்க , அவரது சகோதரி வல்வெட்டித்துறையை சேர்ந்த அனந்தராஜ் என்பவருக்கு அற்றோணி தத்துவம் வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் காணியில் கட்டுமானங்களை மேற்கொள்ள வல்வெட்டித்துறை நகர சபையில் அதற்கான அனுமதிகளை பெறும் நடவடிக்கைகளை கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்தார். இந்நிலையில் குறித்த பகுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உருவங்கள் , ஓவியங்கள் , பதாகைகள் , வரலாற்று சின்னங்கள் , புலிகளின் தலைவரின் சிலை உள்ளிட்டவை காட்சிப்படுத்த உள்ளனர் எனவும் அதனூடாக விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சி எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். அத்துடன் இத் திட்டத்தை இலங்கையில் அனந்தராஜ் என்பவர் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் , அதற்காக அவருக்கு முதல் கட்டமாக 16 இலட்ச ரூபா நிதி வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறித்த பண பரிமாற்றம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க மன்றில் அனுமதி கோரிய நிலையில் , அதற்கான அனுமதியினை மன்று வழங்கியுள்ளது. https://akkinikkunchu.com/365852/
-
ஈரானிய மாலுமிகளை திருப்பியனுப்ப மறுக்கும் இலங்கை: அமெரிக்க அழுத்தங்களுக்கு இணங்கியதா?
ஈரானிய மாலுமிகளை திருப்பியனுப்ப மறுக்கும் இலங்கை: அமெரிக்க அழுத்தங்களுக்கு இணங்கியதா? March 28, 2026 ஈரானின் 250க்கும் மேற்பட்ட மாலுமிகளைத் திருப்பி அனுப்புமாறு தெஹ்ரான் விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்து, இலங்கை அவர்களைத் தொடர்ந்து தமது பாதுகாப்பில் தடுத்துவைத்திருக்கிறது. இவ்விடயத்தில் இலங்கை அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இணங்கியுள்ளதைக் காணமுடிகிறது. இலங்கையின் தீர்மானம் சட்டபூர்வமாக நியாயப்படுத்தக்கூடியதெனினும், போர்க்காலத்தில் பயிற்சி பெற்ற வீரர்களை ஈரானுக்குத் திருப்பியனுப்ப மறுப்பதனை, அதன் விளைவுகளின் அடிப்படையில் நோக்குகையில் எவ்வகையிலும் நடுநிலையான நகர்வாகக் கருதமுடியாது என இந்தியாவின் பிரபல பூகோள அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் பிரம்மா செல்லனே சுட்டிக்காட்டியுள்ளார். https://www.ilakku.org/sri-lanka-refuses-to-return-iranian-sailors-did-it-bow-to-us-pressure/
-
சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம்
சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம் 28 Mar, 2026 | 11:24 AM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) சவுதி அரேபியாவில் அமைந்துள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் (Prince Sultan Air Base) மீது ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலில், குறைந்தது 10 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாக த வொசிங்டன் போஸ்ட் ( The Washington Post ) செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் இருவர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் விளைவாக, அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாக்குதல் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது, பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்ன என்பதற்கான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/242142
-
தையிட்டி விகாரை காணியை விடுவிக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தி
தையிட்டி விகாரை காணியை விடுவிக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தி adminMarch 28, 2026 தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “மக்களின் காணி மக்களுக்கே.. ” என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புத்த சாசன அமைச்சரின் பணிப்பில் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , விகாரைக்குரிய விகாராதிபதி , உள்ளிட்டவர்களை உள்ளடக்கி குழு ஒன்று அமைக்கப்பட்டு , பேச்சுக்கள் நடாத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது காணிகளை அளவிட்டு , அதனை எல்லைப்படுத்தி , உரிமையாளர்களை அடையாளம் காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில் காணிகளை மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் 80 வீதம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் விரைவில் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்போம் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/231152/
-
உலகளவில் இரண்டாவது இடம்: இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி?
உலகளவில் இரண்டாவது இடம்: இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி? General28 March 2026 ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடி நிலைமையால் பொருட்களின் விலை அதிகரிப்பினால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக பிபிசி வெரிஃபை (BBC Verify) ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வழமையாக நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து, தற்போது ஒரு சில கப்பல்களாகக் குறைந்துள்ளதாக பிபிசி வெரிஃபை சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்புடன், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விவசாயத் தேவைகளுக்கான யூரியா, பொட்டாஷியம், அமோனியா மற்றும் பொஸ்பரேட் போன்ற உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு (1/3) பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முக்கிய பயிர்ச்செய்கை காலங்களாக இருப்பதால், தற்போதைய உரத் தட்டுப்பாடு ஆண்டின் பிற்பகுதியில் பயிர் விளைச்சல் குறைவதற்கு நேரடியாக வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஜெர்மனியின் கீல் ஆராய்ச்சி நிறுவனம்(Kiel Research Institute), ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% ஆகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் 5.2% ஆகவும் உயரக்கூடும் எனக் குறிப்பிடுகிறது. கீல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் பொருட்களின் விலை அதிகம் உயரக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த விலை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஜாம்பியா (30.7%), இலங்கை (15.3%), தாய்வான் (12.5%) மற்றும் பாகிஸ்தான் (11.4%) ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. https://hirunews.lk/tm/456304/second-place-in-the-world-a-massive-economic-crisis-awaits-sri-lanka
-
பாலியல் வன்முறையைத் தடுக்க ’Rape-aXe’
பாலியல் வன்முறையைத் தடுக்க ’Rape-aXe’ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்க, தென்னாப்பிரிக்க மருத்துவர் சொன்னெட்எஹ்லர்ஸ் (Sonnet Ehlers) உருவாக்கிய பாலியல் வல்லுறவு எதிர்ப்பு சாதனம் 'Rape-aXe' ஆகும். இது பெண்கள் உள்ளே அணியக்கூடிய, கூர்மையான கொக்கிகள் கொண்ட ஒரு தற்காப்பு சாதனமாகும். பாலியல் வன்முறை முயற்சியின் போது, உள்ளே இருக்கும் சிறிய கொக்கிகள் (Hooks) தாக்குபவரின் உறுப்பில் சிக்கி, உடனே கடும் வலியை ஏற்படுத்தும். இந்த சாதனத்தை மருத்துவரின் உதவி இன்றி அகற்ற முடியாது, இதனால் குற்றவாளியை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்க முடியும். பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து, பெண்களுக்குப் பாதுகாப்பு உணர்வை வழங்குவதே இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கமாகும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான இந்த புதிய முயற்சி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. https://www.tamilmirror.lk/விநோத-உலகம்/பாலியல்-வன்முறையைத்-தடுக்க-Rape-aXe/53-374648
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
ஜெயமோகனின் மாபெரும் விருது அறிவிப்பும் நவீன தமிழ் இலக்கியத்தின் ஆபத்தான இடமும் றியாஸ் குரானா 0000000000000000000000 தற்காலத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஜெயமோகன் ஆகப்பெரும் ஆளுமையாக உருவெடுத்துள்ளார் என்பதிலும், அவரது வாசிப்பு வீச்சும், எழுத்து வன்மையும் இணையற்றவை என்பதை நாம் முற்றிலும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். 'விஷ்ணுபுரம்' தொடங்கி 'வெண்முரசு' வரை அவர் உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான புனைவுலகம் என்பது இலக்கியச் செயல்பாட்டையும் தாண்டிய ஆழமான கருத்தியலாகும். அவரது எழுத்துக்கள் இந்திய மெய்யியல், அத்வைத தரிசனம், உன்னதவாதம் அத்தோடு ஆதிக்கப் பண்பாட்டுத் தொடர்ச்சி ஆகியவற்றைத் தனது அடிப்படைத் தத்துவார்த்த அடித்தளமாகக் கொண்டு இயங்குகின்றன. அவரது நாவல்கள், சிறுகதைகள், பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அதுபோலவே விவாதங்களை நாம் வெறும் மேலோட்டமான அழகியலாகவோ அல்லது தனிமனித அகத்தேடலாகவோ மட்டும் சுருக்கிப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தரவு சார்ந்த, பொருள்முதல்வாத மேலும் சமூகப் பொருளாதாரக் கோணங்களில் இருந்து ஒரு சமூக விமர்சகனாக இவற்றை நான் அணுகும்போது, ஜெயமோகனின் சிந்தனை முறைக்கு எதிராக மிகக் கடுமையான, ஆழமான, அத்தோடு கட்டமைப்பு ரீதியான விமர்சனங்களை நாம் ஈவிரக்கமின்றி முன்வைக்க வேண்டியுள்ளது. மனித இனம் இந்த உலகை வென்றதற்கு மிக முக்கியக் காரணம், மனிதர்களால் கற்பனையான கதைகளை உருவாக்கி, அதை உண்மை என நம்பி கோடிக்கணக்கானோருடன் இணைந்து செயல்பட முடிந்ததே காரணம் என்ற வரலாற்று யதார்த்தத்தை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மதம், தர்மம், சாதி, தேசம், கடவுள் என்பவை சமூகங்களை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் மனித மூளையின் கற்பனையில் உதித்த சமூகக் கருவிகளே தவிர, அவை எக்காலத்திலும் மாறாத பிரபஞ்ச உண்மைகளாகக் கருதப்படக்கூடிய தகுதியற்றவை. இந்தக் கோணத்தில் ஜெயமோகனின் ஆகப்பெரும் படைப்பான 'வெண்முரசு' அத்தோடு அவரது தத்துவார்த்தக் கட்டுரைகளை நாம் அணுகினால் அவர் மீதான மிகக் கடுமையான அரசியல் விமர்சனம் தன்னிச்சையாகவே எழும். ஜெயமோகன் இந்தப் புனைவுகளை வெறும் வரலாற்றுச் சமூகக் கருவிகளாக, அதற்கான கால வெளி சார்ந்த எல்லைகளுக்குள் வைத்துப் பார்க்காமல், அவற்றை பிரபஞ்சத்தின் அறுதி உண்மைகளாகவும், மனிதர்கள் எக்காலத்திலும் மீற முடியாத 'தர்மமாகவும்' புனிதப்படுத்துகிறார். ஒரு எழுத்தாளராக அவர் செய்வது மாபெரும் பிற்போக்குத்தனம் என்றே நான் ஆணித்தரமாகக் கருதுகிறேன். மனிதன் கற்பனையான புனைவுகள் அத்தோடு மாயைகளில் இருந்து விடுபட்டு, அறிவியல் மற்றும் சமூக யதார்த்தங்களை நோக்கி நகர வேண்டிய இந்த நவீன காலகட்டத்தில், ஜெயமோகன் தனது அபாரமான மொழி ஆளுமையைப் பயன்படுத்தி, மீண்டும் பழைய இதிகாச மற்றும் மதப் புனைவுகளுக்குள் தமிழ் வாசகர்களைக் கட்டிப்போடும் வேலையைச் செய்கிறார். பல ஆயிரம் பக்கங்களில் அவர் திரும்பத் திரும்ப நிறுவுவது, மனிதர்களைப் பிரித்து ஆளும் பழைய காலக் கற்பனைகளைத்தான். அவரது எழுத்துக்கள், வாசகர்களின் தர்க்க சிந்தனையை மழுங்கடித்து, உணர்ச்சிகரமான கற்பனைகளுக்குள் மனிதனை அடிமையாக்கும் வேலையை மிகக் கச்சிதமாகச் செய்கின்றன. இந்த தத்துவார்த்த மாயையிலிருந்து விடுபட்டு, சமூகத்தின் விளிம்புநிலை யதார்த்தங்களை நாம் நோக்கினால், இந்தியாவின் வறுமை, விவசாயிகளின் துயரம், அத்தோடு விளிம்புநிலை மக்களின் அன்றாடப் பாடுகள் ஆகியவை அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் ஒட்டுமொத்தத் தோல்வியாகவே தரவுகளின் அடிப்படையில் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இந்த யதார்த்தவாதக் கோணத்தில் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலையோ அல்லது பிச்சைக்காரர்கள், பழங்குடியினர் குறித்து அவர் எழுதியுள்ள பல கட்டுரைகளையோ வாசிக்கும்போது, அவர் மீது மிகக் கடுமையான அறரீதியான குற்றச்சாட்டு எழுகிறது. ஜெயமோகன் வறுமையையும், மாற்றுத்திறனாளிகளின் நிலை, விளிம்புநிலை மக்களின் தீர்க்க முடியாத துயரத்தையும் ஒரு 'ஆன்மீகத் தரிசனமாக' மடைமாற்றி விடுகிறார். ஏழாம் உலகத்தில் பிச்சைக்காரர்களை வைத்து அவர் உருவாக்கும் தத்துவ விவாதங்கள் இலக்கிய ரீதியாக சுவாரஸ்யமானவையாக இருக்கலாம். ஆனால் சமூக ரீதியாக அவை மிகவும் ஆபத்தானவை. ஒரு பிச்சைக்காரனின் துயரம் என்பது பிரபஞ்சத்தின் ரகசியமோ அல்லது அவனது கர்ம வினையோ கிடையாது. அது ஆளும் வர்க்கத்தின் அரச வளங்கள் சிலரிடம் மட்டும் குவிக்கப்படுவதன் நேரடி விளைவு. ஜெயமோகன் விளிம்புநிலை மக்களின் பட்டினியை உன்னதப்படுத்துவதன் மூலம், அந்தப் பட்டினிக்குக் காரணமான அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தை எந்தவொரு விமர்சனத்திலிருந்தும் தப்ப வைக்கிறார். சுரண்டலைத் தத்துவப்படுத்துவது என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் ஆகப்பெரிய அறிவுசார் துரோகம். 'அறம்' போன்ற கதைகளில் வரும் மனிதர்களின் தியாகங்கள் கூட, சமூக அமைப்பின் கட்டமைப்பு ரீதியான அநீதிகளைக் கேள்வி கேட்காமல், வெறும் தனிமனித அறமாகச் சுருங்கிவிடுகின்றன என்பதை ஒரு சமூக விமர்சகனாக என்னால் சுட்டிக்காட்டாமல் கடந்து செல்ல இயலாது. இந்தச் சுரண்டலின் வேர் எங்குள்ளது என்று நாம் ஆழமாகப் பார்த்தால், பல நூற்றாண்டுப் பொருளாதாரத் தரவுகள் நிறுவுவது ஒன்றே ஒன்றைத்தான். செல்வம் அதுபோலவே அதிகாரம் என்பது தகுதியால் வருவது கிடையாது. அது வாரிசுரிமையாகவும், மூலதனக் குவிப்பாகவும் ஒரு சிறிய ஆதிக்க வர்க்கத்திடமே தங்கிவிடுகிறது. இந்த அமைப்புரீதியான சமத்துவமின்மையே சமூகத்தின் அனைத்து அநீதிகளுக்கும் அடிப்படைப் காரணம். ஆனால் ஜெயமோகனின் பல கட்டுரைகளில் (குறிப்பாக சாதி, குடி, அத்தோடு வர்ண அமைப்பு குறித்த விவாதங்களில்), அவர் இந்தியச் சமூகப் படிநிலைகளை முற்றிலுமாக நிராகரிக்காமல், அவற்றுக்கு ஒரு பண்பாட்டு அல்லது தொழில் ரீதியான 'சமநிலைக்' காரணம் இருந்தது என்று வாதிடுவதைக் காண முடிகிறது. "வர்ணம் வேறு, சாதி வேறு. வர்ணம் என்பது குணத்தின் அடிப்படையில் அமைந்தது" என்ற பழமையான, பலமுறை தோற்கடிக்கப்பட்ட வாதத்தை நவீன மொழியில் பலமுறை அவர் தற்காத்துப் பேசியுள்ளார். தகுதியுள்ளவர்களே தலைமை ஏற்க வேண்டும் என்ற சிந்தனை அவரது எழுத்துக்களில் அடிநாதமாக இழையோடும். ஆழமாகப் பார்த்தால், ஜெயமோகனின் சிந்தனை என்பது ஆதிக்க வர்க்கத்தின் சொத்துக் குவிப்பையும், அதிகாரப் பரம்பரையையும் நியாயப்படுத்தும் ஒரு அதிநவீனத் தத்துவச் சால்ஜாப்பு மட்டுமே. 'தகுதியானவர்கள்' என்று அவர் கருதுபவர்கள், தலைமுறைகளாகக் கல்வியையும் நிலத்தையும் தங்களுக்குள் குவித்து வைத்துக்கொண்ட வர்க்கமே தவிர, அவர்கள் பிறப்பால் எவ்வகையிலும் மேன்மையானவர்களும்கூடக் கிடையாது. ஜெயமோகனின் 'பண்பாட்டுத் தொடர்ச்சி' என்ற வாதம், உண்மையில் மூலதன ஆதிக்கத் தொடர்ச்சிக்கான ஒரு பண்பாட்டு முகமூடி மட்டுமே. இதற்கு வலு சேர்க்கும் விதமாக, அவர் தொடர்ந்து நவீன அறிவியலையும் உலகளாவிய முன்னேற்றங்களையும் நிராகரிப்பதைக் காண முடியும். உலகம் கடந்த காலத்தை விட இப்போதுதான் மிகச் சிறந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆயுள் காலம், சுகாதாரத் தரவுகள், வன்முறைக் குறைவு ஆகியவற்றின் மூலம் நம்மால் ஆணித்தரமாக நிறுவ முடியும். ஆனால் ஜெயமோகனின் பல எழுத்துக்கள் நவீன உலகை ஒரு சாபக்கேடாகவும், அறிவியல் பகுத்தறிவை ஆன்மாவைத் தொலைத்த இயந்திரத்தனமாகவும் சித்திரிக்கின்றன. அவர் தொடர்ந்து ஒரு 'இழந்த பொற்காலத்தை' நோக்கி வாசகர்களை ஈர்க்கிறார். பழங்காலக் கிராமிய வாழ்க்கை, பண்டைய ஞானிகளின் வாழ்வு முறை ஆகியவை மட்டுமே உன்னதமானவை என்ற பிம்பத்தைக் கட்டமைக்கிறார். ஆனால் அவர் உன்னதப்படுத்துகிற அந்தப் பழங்காலம் என்பது சிசு மரணங்கள் மலிந்த, தொற்றுநோய்களால் மனிதர்கள் கொத்துக் கொத்தாக மடிந்த, தீண்டாமை மேலும் அடிமைத்தனம் கொடிகட்டிப் பறந்த ஒரு கொடூரமான இருண்ட காலம் என்பதே தரவுகள் சுட்டிக்காட்டும் உண்மை. நவீன அறிவியலும், ஜனநாயக அமைப்புகளும் மட்டுமே மனிதனின் வாழ்நாளை நீட்டித்து, அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளன. (ஒப்பீட்டளவில்) ஜெயமோகனின் நவீனத்துவ மற்றும் அறிவியல் மீதான இந்த அவநம்பிக்கை என்பது, எதார்த்தத் தரவுகளைப் புறக்கணிக்கும் வெற்று உணர்ச்சிவாதமே ஆகும். அவர் தரவுகளின் வெளிச்சத்தைக் காட்டிலும், தொன்மங்களின் இருட்டையே அதிகம் விரும்புகிறார். இந்த இருட்டு, ஆதிக்க சக்திகள் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்த எப்படிப் பயன்படுகிறது என்பதை நாம் நுட்பமாக அவதானிக்க வேண்டும். அரசும் பெருநிறுவனங்களும் மக்களின் வளங்களைக் கொள்ளையடிக்கும்போது, மக்கள் அதனை எதிர்த்துப் போராடாமல், ஏதோ ஒரு தத்துவ விசாரணையில் மூழ்கியிருக்கவே அதிகாரம் எப்போதும் விரும்பும். ஜெயமோகன் தன்னை எந்தவொரு நேரடி அரசியல் கட்சிக்கும் சார்பற்றவர் என்று தொடர்ந்து கூறிக்கொண்டாலும், அவர் உருவாக்கும் 'இந்துப் பெருமிதம்', 'பாரதீயப் பண்பாட்டு மீட்சி', அத்தோடு 'ஆழ்ந்த ஆன்மீகத் தேடல்' ஆகிய கருத்தியல்கள், சமகால வலதுசாரி மற்றும் பெருமுதலாளித்துவ அரசியல் அதிகாரத்திற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குகின்றன. மக்கள் தங்கள் நில உரிமைகள், வேலைவாய்ப்பு, அத்தோடு பொருளாதாரச் சுரண்டல்கள் குறித்துக் கோபம் கொள்ள வேண்டிய காலகட்டத்தில், அவர் அவர்களை அத்வைதத்தின் நுட்பங்கள், இதிகாசங்களின் தத்துவங்கள், பண்பாட்டுப் பெருமைகளை நோக்கித் திசை திருப்புகிறார். என் வாசிப்பில், ஜெயமோகனின் எழுத்துக்கள் ஆதிக்க வர்க்கம் மக்களுக்குப் புகட்டும் ஒரு பண்பாட்டு மயக்க மருந்தாகவே செயல்படுகின்றன. அந்த வேலையை அவரது எழுத்துக்கள் மிகக் கச்சிதமாகச் செய்கின்றன. இவற்றின் தொடர்ச்சியாகவே, ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ் சார்புடையவரா என்ற தொடர் விமர்சனத்தையும் நாம் கருத்தியல் ரீதியாக அணுக வேண்டும். அவர் நேரடியாக வலதுசாரி அமைப்புகளிலோ கட்சியிலோ உறுப்பினராக இருந்ததில்லை. (விஷ்ணுபுரம் நாவல் ஆர்.எஸ்.எஸ் காரியாலயங்களில் விற்கப்பட்டன) தன்னை ஒரு காந்தியவாதி என்றும், அத்வைதி என்றுமே அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்துத்துவ அரசியலை அவர் பல இடங்களில் கடுமையாக விமர்சித்தும் உள்ளார். அவர்கள் மதத்தை வெறும் அரசியல் திரட்டலுக்கான கருவியாகச் சுருக்குகிறார்கள் என்று வெளிப்படையாகவே எழுதியுள்ளார். ஆனால், அவர் அரசியல் ரீதியாக அவர்களை விமர்சித்தாலும், தத்துவார்த்த ரீதியாக வலதுசாரி அரசியலுக்குத் தேவையான மிகப்பெரிய அறிவுசார் அடித்தளத்தை தமிழ்நாட்டில் உருவாக்குபவர் அவரே என்பது எனது ஆழமான நிலைப்பாடு. இந்தியாவை மொழிகளாலும் தேசிய இனங்களாலும் ஆன ஒரு கூட்டாட்சியாகப் பார்க்காமல், ஒற்றைப் பண்பாட்டு ஆன்மீகத் தேசமாக அவர் முன்வைப்பது இந்து ராஷ்டிர சிந்தனைக்கு மிகவும் நெருக்கமானது. மேலும், தமிழ்நாட்டில் வேரூன்றியிருக்கும் பெரியாரிய, திராவிட, மார்க்ஸிய சிந்தனைகளைத் தொடர்ந்து தாக்கி, அவற்றுக்கு மாற்றுவடிவமாகப் பாரம்பரிய தர்மத்தையும் அத்வைதத்தையும் அவர் நிறுவுகிறார். இந்தியாவின் வரலாற்றை ஒடுக்கப்பட்டவர்களின் அதிகாரப் போராட்டமாகப் பார்க்காமல், வேதாந்த சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சியாகவே முன்வைக்கிறார். ஆக, தற்கால வலதுசாரி அரசுகள் பெருமுதலாளித்துவத்துடன் இணைந்து இயங்கும்போது, ஜெயமோகன் உருவாக்கும் பிரம்மாண்டமான இந்து ஞான மரபு விவாதங்களும், பண்பாட்டுப் பொற்காலம் குறித்த ஏக்கங்களும், அந்த அதிகார வர்க்கத்திற்கு மிகச் சிறந்த கருத்தியல் கவசமாகப் பயன்படுகின்றன. அவர் வலதுசாரி அரசியல் தடையின்றி இயங்குவதற்கான பாதுகாப்பான சமூக மனநிலையைத் தயார் செய்து கொடுக்கிறார். இந்தச் சூழலில், இப்படியான பழமைவாதத்தை முட்டுக்கொடுத்து நிறுத்துகின்ற ஒருவர், பெருமுதலாளிகள் அதுபோலவே பழமைவாத ஆதரவாளர்களின் பின்புலத்துடன் 'ஒரு கோடி ரூபாய்' என்ற மாபெரும் பணப்பரிசுடன் ஒரு இலக்கிய விருதினை அறிவித்து, இந்தியாவிலேயே மிகப்பெரிய இலக்கிய அதிகார நிறுவனமாகத் தன்னை முன்னிறுத்துவது என்பது வெறுமனே இலக்கியச் செயல்பாட்டையும் தாண்டிய ஒரு மிகத் தீவிரமான அரசியல் மேலாதிக்கச் செயல்பாடாகவே உருவெடுத்துள்ளது. ஆதிக்க வர்க்கம் தங்களது சித்தாந்தத்தை மக்கள் மீது வன்முறையால் திணிப்பதைத் தவிர்த்துவிட்டு, நுட்பமான இலக்கிய நிறுவனங்கள் மற்றும் விருதுகள் மூலம் தங்களது மதிப்பீடுகளே ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனை முறையாக இருக்க வேண்டும் என மூளைச்சலவை செய்கிறது. ஜெயமோகன் முன்னெடுக்கும் இந்த மாபெரும் அதிகார நிறுவனமும், அதன் அபரிமிதமான பண பலமும் அத்தகைய மேலாதிக்கத்தை நிறுவும் கருவியே ஆகும். ஒரு கோடி ரூபாய் என்பது தமிழ் இலக்கியச் சூழலில் கற்பனைக்கெட்டாத ஒரு பெரும் மூலதனம். இந்த மூலதனத்தின் ஈர்ப்பு விசை, தன்னிச்சையாகவே பல இளம் எழுத்தாளர்களைத் தன்பால் ஈர்க்கும். மார்க்சிய, தலித்திய, பின்நவீனத்துவ, பெண்ணிய மற்றும் திராவிடச் சிந்தனை கொண்ட முற்போக்கு எழுத்தாளர்கள் கூட, இந்த அதிகார நிறுவனத்தின் அங்கீகாரத்திற்காகவும், பணப்பரிசுக்காகவும் தங்களது தீவிரமான சமூக விமர்சனங்களை மழுங்கடித்துக்கொண்டு, ஜெயமோகன் வரையறுக்கும் உன்னதவாத மற்றும் ஆன்மீக அளவுகோல்களுக்கு ஏற்பத் தங்களது எழுத்துக்களைச் சமரசம் செய்துகொள்ளும் நிலை உருவாகும். பணத்தின் மூலம் மாற்றுச் சிந்தனைகள் நேரடியாகத் தடை செய்யப்படாமல், அதிகார நிறுவனத்தின் பிரம்மாண்டத்தால் அவை தானாகவே அடங்கிப் போகச் செய்யப்படுகின்றன. சம்மதத்தை உற்பத்தி செய்யும் மிக நுட்பமான தந்திரம் இது. தமிழ் இலக்கியம் என்பது காலம் காலமாக மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், சிறுபான்மையினர் இலக்கியம், பின்நவீனத்துவம் எனப் பல்வேறு விளிம்புநிலை மக்களின் மாற்றுக்குரல்களால் பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் ஒரு களம். ஆனால், பெரும் பணபலத்தோடு ஒரு அதிகார நிறுவனம் உருவாகும்போது, அது ஒரு குறிப்பிட்ட அழகியலை மட்டுமே உண்மையான இலக்கியம் என்று உலகிற்கு அறிவித்து, மற்றவற்றின் மீது மிக மோசமான ஒரு குறியீட்டு வன்முறையைச் செலுத்துகிறது. ஜெயமோகனைப் பொறுத்தவரை, இந்திய ஞானமரபு, தொன்மங்கள், அத்தோடு ஆன்மீகத் தேடல் ஆகியவற்றைக் கொண்ட காத்திரமான படைப்புகளே ஆகச் சிறந்தவை என்ற அளவுகோல் உள்ளது. இந்த மாபெரும் விருதின் மூலம், இந்த குறிப்பிட்ட பழமைவாத மேலும் இந்துத்துவச் சார்புடைய அழகியலே இந்தியாவிலேயே தலைசிறந்தது என்ற பிம்பம் பண்பாட்டு மூலதனமாக உருவாக்கப்படுகிறது. இது தலித் இலக்கியத்தையோ, பெண்ணிய இலக்கியத்தையோ, பின்நவீனத்துவ இலக்கியத்தையோ நேரடியாகத் தாக்காது. அதற்கீடாக, அவற்றின் அழகியலை, "இது வெறும் பிரச்சாரம்", "இது உன்னதக் கலையென ஏற்கவியலாது" என்று முத்திரை குத்தி, இலக்கிய வரைபடத்தின் ஓரத்திற்குத் தள்ளிவிடும் அபாயம் உள்ளது. செவ்வியல் என்ற சொல்லுக்குள் ஒரு பெரும் ஆபத்தான வெடிகுண்டை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு நவீன தமிழ் இலக்கியத்தை அச்சுறுத்தும் தந்திரோபாயம் இதனுள் பொதிந்திருக்கிறது. ஜெயமோகனின் சிந்தனைகளும் எழுத்துக்களும் தனிமனிதனின் அகத் தேடலுக்கும், தமிழ் மொழியின் அழகியலுக்கும் மாபெரும் பங்களிப்பைச் செய்திருக்கலாம். ஆனால், ஒரு தீவிரமான விமர்சகனாக அவரை சமூக, வரலாற்று, பொருளாதார நிலைப்பாடுகளின் அடிப்படையில் அளவிடும்போது, அவரது ஒட்டுமொத்த எழுத்தியக்கமும் பழமைவாதத்தை முட்டுக்கொடுத்து நிறுத்துவதாகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தத்துவார்த்தமாக நியாயப்படுத்துவதாகவும், விளிம்புநிலை மக்களின் யதார்த்தப் பிரச்சினைகளை ஆன்மீக இருட்டடிப்புச் செய்வதாகவுமே வெளிப்படுகிறது. அவர் சொற்களால் கட்டும் பிரம்மாண்டமான தத்துவக் கோட்டைகள், எதார்த்தமற்ற புனைவுகளின் அடித்தளத்தில்தான் எழுப்பப்பட்டுள்ளன. இப்போது, அந்தப் புனைவுகளை வெறும் வார்த்தைகளைத் தாண்டியும், பல கோடி ரூபாய் மூலதனத்தின் துணையோடும், ஒரு மாபெரும் அதிகார நிறுவனத்தின் வாயிலாகவும் ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியச் சூழலின் மீதும் ஒரு மேலாதிக்கமாக நிலைநிறுத்த அவர் முற்படுகிறார். இது, தமிழின் பன்முகத்தன்மையை அழித்தொழித்து, ஒற்றைப் பரிமாண, ஆதிக்கச் சார்பு இலக்கியச் சூழலை உருவாக்கும் மாபெரும் அரசியல் செயல்பாடாகவே இதைக் கருதி எவ்விதச் சமரசமுமின்றி நாம் முழுமையாக எதிர்க்க வேண்டியுள்ளது. #ஜெயமோகன் #தமிழ்இலக்கியம் #இலக்கியவிமர்சனம் #பண்பாட்டுஅரசியல் #விருது #கருத்தியல்வன்முறை #விளிம்புநிலைஅரசியல் #tamilliterature #riyasqurana #றியாஸ்குரானா https://www.facebook.com/share/1K7cywzmw4/?mibextid=wwXIfr
-
செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை!
செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை! வெள்ளி, 27 மார்ச் 2026 05:41 AM வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - கதிர்காமத்திற்கான பாரம்பரிய புனித பாதயாத்திரை, ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது. ஸ்ரீ கதிர்காம கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆடிவேல் விழா மகோற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 15 தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இத்திருவிழா, ஜூலை மாதம் 29 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. இலங்கையின் மிக நீண்ட இந்தப் பாதயாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் அடியார்கள், ஜெயா வேல்சாமியுடன் 077-8386381 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தமது பங்கேற்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இம்முறை 95 யாத்திரிகர்கள் மாத்திரமே உள்வாங்கப்படவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் இந்தப் பாரம்பரிய பாதயாத்திரை, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களையும் கடந்து செல்லவுள்ளது. சுமார் 52 நாள்கள், 572 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்தப் பயணம், இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/55871
-
கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் வனவள திணைக்களம் அத்துமீறல் ; பொதுமக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டார் சத்தியலிங்கம்
கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் வனவள திணைக்களம் அத்துமீறல் ; பொதுமக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டார் சத்தியலிங்கம் 27 Mar, 2026 | 11:26 AM வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனகராயன்குளம், புளியங்குளம் ஆகிய பகுதியில் வனவள திணைக்களத்தினால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பிலான பொதுமக்களின் முறைப்பாடுகளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் புதன்கிழமை (25) பொதுமக்களுடன் நேரில் கலந்துரையாடி பெற்றிருந்தார். குறித்த பகுதியைச் சேர்ந்த மக்களுடன் ஏ9 வீதி, பரசங்குளம், புளியங்குளத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு மக்கள் தொடர்பகத்தில் குறைகேள் கலந்துரையாடலில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர், இதன்போது கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளிலிருந்து வருகைதந்திருந்த பொது மக்களினால் பிரதானமாக முன்னிலைப்படுத்தப்பட்ட வனவள திணைக்களத்தினரால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பிலான முறைப்பாடுகளையும், அதற்குரிய ஆவனங்களையும் பெற்றுக்கொண்டார். மேலும் மக்களால் தெரிவிக்கப்பட்ட தமதுபக்க நியாயாதிக்கத்தையும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் விரைவில் குறித்த காணிகளை நேரில் வருகைதந்து பார்வையிடுவதாகவும் தெரிவித்தார். மேற்படி விடயங்கள் தொடர்பில் மக்களால் கையளிக்கப்பட்ட ஆவனங்களை பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், விடயத்தை அரசாங்க அதிபர், வனவள திணைக்களம், பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/242058
-
’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி! பாலியல் குற்றங்கள் குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளன. அவரது பேச்சுக்குப் பாடகி சின்மயி ஸ்ரீபாதா நேரடியாகவும் கடுமையாகவும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. சர்ச்சைக்குரிய பேச்சு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எஸ்.வி. சேகர், சமூகத்தில் ஒழுக்கம் குறைந்து வருவதாகவும், குழந்தைகளுக்குக் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், அனைத்துத் தவறுகளுக்கும் அரசாங்கத்தையே குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசிய அவர், சர்ச்சையைத் தூண்டும் வகையில் சில உதாரணங்களைக் கூறினார்: "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. நான் என் வீட்டைப் பூட்டாமல் விட்டுவிட்டு, திருடன் திருடினான் என்றால் அதற்குச் சட்டம் எப்படிப் பொறுப்பாகும்?" எனக் கேள்வி எழுப்பினார். "பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் வெளியே சென்றால் ஒருவரைத் துணைக்கு அனுப்ப வேண்டும்," என்றும் குறிப்பிட்டார். மிக முக்கியமாக, அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "ஒரு பெண் புதருக்குள் சென்றதாகச் சொல்கிறார்கள்; அவர் ஏன் அங்கு சென்றார்? புதருக்குள் பொலிஸாரால் மின்விளக்கு பொருத்த முடியுமா?" எனக் கேட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணையே குறை கூறும் வகையில் அமைந்த இந்த வரிகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களைக் கிளப்பின. பாதிப்புக்குள்ளான பெண்ணின் பக்கம் நின்ற சின்மயி எஸ்.வி. சேகரின் இந்த கருத்துக்குப் பாடகி சின்மயி தனது 'எக்ஸ்' (X) பக்கத்தில் நேரடியான பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில் உள்ள முக்கிய அம்சங்கள்: "ஒரு பெண் ஏன் புதருக்குள் சென்றார் என்று கேட்கிறீர்கள். அந்த இடத்தில் கழிவறை வசதியே இல்லையென்றால் அவர் வேறு என்ன செய்வார்?" எனச் சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பெண் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகவே அங்கு சென்றார் என்ற தகவலை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் போதிய கழிவறை வசதிகள் இல்லாததால், திறந்தவெளியைப் பயன்படுத்தும் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது இது முதல் முறையல்ல என்பதை அவர் நினைவுபடுத்தினார். எவ்விதக் கூச்சமும் இன்றிப் பொதுவெளியில் ஜிப்பை கழற்றி சிறுநீர் கழிக்கும் ஆண்களிடம் கேள்வி கேட்காதவர்கள், பாதுகாப்பற்ற சூழலில் தள்ளப்படும் பெண்களைக் குறை கூறுவது ஏன் என அவர் சாடியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல், அவர்களின் மீதே பழி போடும் மனநிலையைச் சின்மயி தனது பதிவின் மூலம் கடுமையாகச் சாடியுள்ளார். https://www.tamilmirror.lk/cinema/கூச்சமில்லாமல்-ஜிப்பை-கழற்றுபவர்கள்-சின்மயி-கடும்-பதிலடி/54-374632
-
பாழ்கிணற்றுப் படுகொலை: ’’ சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது’’ :கண்டனப் போராட்டம்
பாழ்கிணற்றுப் படுகொலை: ’’ சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது’’ :கண்டனப் போராட்டம் ரீ.எல். ஜவ்பர்கான் மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது என வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கோரியும் மட்டக்களப்பு நகரில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டது. வெல்லாவெளி 40ஆம் கிராம மக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அதே கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பாரிய கொள்ளை மற்றும் கொலைகளின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இது தொடர்பாக மூவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 23ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில், மூவரை நான்கு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கவும், ஏனைய இருவரை மார்ச் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு இன்று (27) மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காந்தி பூங்காவிலிருந்து பழைய கச்சேரி (மாவட்ட செயலகம்) வரை பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள்: “இக்கொடூரக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது”, “குற்றவாளிகளுக்கு உச்சகட்டத் தண்டனை வழங்கப்பட வேண்டும்”.“பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர். "கொலைக்குற்றவாளிகளுக்குத் துணை போகாதே!", "பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்!", "பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது கை வைக்காதே!" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். மாவட்ட செயலகத்தின் முன்பாகத் திரண்ட மக்களைச் சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், அவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, இனிவரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை நீதித்துறை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அரசாங்க அதிபரிடம் போராட்டக்காரர்களால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோருடன் பிரதேச சபைத் தவிசாளர்கள், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/பாழ்கிணற்றுப்-படுகொலை-சட்டத்தரணிகள்-ஆஜராகக்-கூடாது-கண்டனப்-போராட்டம்/175-374634
-
’’தலைமையே பதவி விலகு; ரெலோ தலைமைக்கு எதிராக போராட்டம்!
’’தலைமையே பதவி விலகு; ரெலோ தலைமைக்கு எதிராக போராட்டம்! எஸ். கீதபொன்கலன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கட்சியின் 12-வது தேசிய மகாநாட்டை உடனடியாகக் கூட்டி புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்ய வலியுறுத்தியும் இன்று (27) திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், கட்சியின் மாவட்டக் காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமானது. அங்கிருந்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்ற அங்கத்தவர்கள், திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்பாகத் தொடர்ந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கட்சியின் மூத்த உறுப்பினர் கௌரிதாஸ் பத்மலோஜினி கூறியதாவது: "கட்சியின் யாப்பு விதிகளின்படி, தற்போதைய தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 23.03.2026 அன்றுடன் நிறைவடைந்துள்ளது. எனவே, தாமதமின்றி கட்சியின் 12-வது தேசிய மகாநாடு கூட்டப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்." மேலும் அவர் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் கட்சியின் புதிய நிர்வாகிகள் யாப்பு விதிகளின்படி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட நிர்வாகிகளின் தெரிவும் கட்சியின் தலைமைக் குழு முன்னிலையிலேயே நடைபெற்றது. இருப்பினும், இந்தத் தெரிவு யாப்புக்கு முரணானது என தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் கட்சியின் தலைமைத்துவத்தின் ஆசீர்வாதம் இருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாகவும், உட்கட்சி ஜனநாயகத்தை மீறும் இச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி, வழக்கை மீளப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அவற்றுள் சில: • "தலைமைக் குழுவே! தேசிய மகாநாட்டை உடனே நடத்து!" • "தங்கண்ணா, சிறி அண்ணா கட்டிக்காத்த கட்சியைச் சீரழிக்காதே!" • "கட்சித் தலைமையே! இரட்டை வேடம் போடாதே, ரெலோவை அழிக்காதே!" • "பதவி ஆசை போதும்; சாகும் வரை நீங்களா பதவியில் இருப்பீர்கள்?" • "தலைமைக்குழு உறுப்பினர்களே! பதவி ஆசைக்காகவா அன்று ஆயுதம் தூக்கினீர்கள்?" கட்சியின் புதிய நிர்வாகிகளின் தெரிவை அங்கீகரித்து, ஜனநாயக ரீதியாக மகாநாட்டை நடத்தி புதிய தலைமையை உருவாக்க வழிவிடுமாறு போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர். https://www.tamilmirror.lk/செய்திகள்/தலைமையே-பதவி-விலகு-ரெலோ-தலைமைக்கு-எதிராக-போராட்டம்/175-374635
-
10 இந்திய மீனவர்களுக்கு 10 வருட சிறை – தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்- சான்று பொருட்கள் அரசுடமையாக்கம்
10 இந்திய மீனவர்களுக்கு 10 வருட சிறை – தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்- சான்று பொருட்கள் அரசுடமையாக்கம் adminMarch 27, 2026 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத் தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 19 ஆம் திகதி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய 10 மீனவர் களின் வழக்கு விசாரணை நேற்றைய தினம் வியாழக்கிழமை (26) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 19 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து 2 படகுகளுடன் குறித்த 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது குறித்த மீனவர்களை நேற்று வியாழக்கிழமை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் குறித்த மீனவர்கள் 10 பேர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 10 மீனவர்களையும் எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவித்தார். மேலும் ஒவ்வொரு மீனவர் களுக்கும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு வழக்கின் சான்று பொருட்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. https://globaltamilnews.net/2026/231091/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் 20 போட்டிகளை விட்டுவிட்டு ஏப்ரல் 13 இலிருந்து கேள்விக்கொத்தில் போடலாம். எல்லாருக்கும் 40 புள்ளிகள் இனாமாகக் கொடுக்கலாம்😀
-
AI எழுதிய கவிதை -நானும் கிளோடும்
கவிதைகள் நல்லாக இருக்கு. ஆனால் சுருக்கமான prompt போதாது. கேட்கின்ற கேள்வி தரமாக இருந்தால், மனதில் உள்ளதை அப்படியே prompt இல் கொடுத்தால் Generative AI இலிருந்து கிடைக்கும் பதில் ஆச்சரியப்படவைக்கும். ஆனால் சிலநேரம் அது எல்லைதாண்டி மயங்கிவிடும் ஆபத்தும் உள்ளது.
-
சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும்
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்ததுக்கு கோட்பாட்டு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த ஜி. பார்த்தசாரதி March 25, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — (கடந்த வாரத்தைய தொடர்ச்சி ) 1931 — 1947 காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த டொனமூர் அரசியலமைப்பு ஐக்கியப்பட்ட தேசிய அடையாளம் ஒன்றை உருவாக்கும் குறிக்கோளுடன் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அது உண்மையில் இலங்கையில் இனவாத அரசியலை தீவிரப்படுத்தியதன் மூலமாக எதிர்மறையான ஒரு திருப்புமுனையாக மாறியது. இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சர்வஜன வாக்குரிமையுடன் பிராந்தியப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அந்த அரசியலமைப்பு சிங்களப் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை நகர்த்தியது. இதன் விளைவாக சிறுபான்மைச் சமூகங்கள் பாகுபாட்டுக்குள்ளாகின. பெரிய அரசியல் அபிலாசைகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்கவும் முற்போக்கு தேசிய கட்சியை கைவிட்டு சிங்கள மகாசபையை ஆரம்பித்தார். சமஷ்டி முறைக்காக குரல் கொடுப்பதை நிறுத்திய அவர் அதற்கு பதிலாக பன்முகப்படுத்தலை ஆதரிக்கத் தொடங்கினார். உள்ளூராட்சி முறையை மேம்படுத்தி பன்முகப்படுத்தலின் மூலமாக பெருமளவில் சுயாட்சியை வழங்குவதை பண்டாரநாயக்க ஆதரித்தார். பெரிய உள்ளூராட்சி அதிகார அலகாக மாகாணங்களை நோக்கத்தொடங்கிய பண்டாரநாயக்க மாகாணசபைகளை அமைக்க விரும்பினார். இரண்டாவது அரசாங்க சபையில் உள்ளூராட்சி அமைச்சராக அவர் பதிவி வகித்தபோது அந்த அமைச்சின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக இருந்த ஆர்.எஸ். எஸ். குணவர்தன மாகாணசபைகளை அமைப்பதற்காக கொண்டுவந்த பிரேரணையை அரசாங்க சபை அங்கீகரித்தது. ஆனால், விளங்கிக்கொள்ள முடியாத காரணங்களுக்காக பண்ட ரநாயக்க மாகாணசபைகளை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கவில்லை என்று ஜெயராஜ் எழுதியிருக்கிறார். பிறகு தனது சிங்கள மகாசபையுடன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து சுதந்திர இலங்கையில் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் முதலாவது அமைச்சரவையில் உள்ளூராட்சி அமைச்சராக பதவியேற்ற பண்டாரநாயக்க மக்களுக்கு நெருக்கமாக அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கான ஒரு வழிமுறையாக மாகாணசபை திட்டத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க முயற்சித்த போதிலும், அமைச்சர்களாக முழுமையாக தாங்கள் அனுபவித்த அதிகாரங்களை இழக்க அவரது சகாக்கள் விரும்பவில்லை. அதனால் பண்டாரநாயக்காவினால் மீண்டும் மாகாணசபை திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. பண்டாரநாயக்க மாகாணசபைகளை அமைப்பது குறித்து சிந்தித்த காலப்பகுதியில் அவற்றுக்கு இன்று இருப்பதைப் போன்று இனத்துவ அரசியல் பரிமாணம் ஒன்று இருக்கவில்லை என்பதால் பெருமளவுக்கு பிரச்சினைகள் இல்லாமல் அவற்றை அன்று அமைத்திருக்க முடியும் என்பது ஜெயராஜின் அவதானிப்பாக இருக்கிறது. 1951 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அமைத்து ஐந்து வருடங்களில் பிரதமராக பதவிக்கு வந்த பிறகு அவரது அரசாங்கம் முன்னெடுத்த கொள்கைகள் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது எதிர்கால இருப்புக் குறித்து அச்சம் கொள்கிற அளவுக்கு இனவாத அரசியலை முனைப்படையச் செய்தன. தனிச்சிங்களச் சட்டம் அதில் முக்கியமானது. இலங்கையில் முதன்முதலாக சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரல்கொடுத்த ஒரு அறிவார்ந்த தலைவர், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் எஸ். ஜே வி. செல்வநாயகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது சமஷ்டி பற்றி பேசுவதை தவிர்ப்பதில் கடுமையான கவனம் செலுத்திய அளவுக்கு அவரின் கொள்கைகளில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது. இன்று நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபைகள் முறை 39 வருடங்களுக்கு முன்னர் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அது. அடிப்படையில் பல தசாப்தங்களுக்கு முன்னர் பண்டாரநாயக்கவின் சிந்தனையில் உதித்ததே என்பது கவனிக்கத் தக்கது. பிராந்திய சபைகளை அமைப்பதற்காக செல்வநாயகத்துடன் பண்டாரநாயக்க செய்துகொண்ட 1957 ஒப்பந்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பைக் கிளப்புவதில் முன்னரங்கத்தில் நின்ற ஜெயவர்தன, மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மாகாணசபைகளை அமைப்பதற்கு வழிவகுத்த நிகழ்வுப் போக்குகளை இனிமேல் பார்ப்போம். சமாதான உடன்படிக்கை: பிராந்தியங்களுக்கு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடு எதையும் ஒருபோதும் கொண்டிராத இலங்கையில் இந்தியாவின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் மாகாணசபைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்காது என்பதில் சந்தேகமில்லை. தேசிய இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சகல விவகாரங்களிலும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவரான ஜனாதிபதி ஜெயவர்தனவை அந்த பிரச்சினைக்கு முடிவைக் கொண்டுவர வேண்டும் என்றால் அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடு ஒன்று அவசியம் என்று நம்பவைப்பதில் அல்லது வழிக்குக் கொண்டுவருவதில் இந்தியா அந்த நேரத்தில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியது. 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கையில் முரண்பட்டு நின்ற இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்கு நல்லெண்ண உதவிகளை வழங்க முன்வந்த அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தனது விசேட தூதுவராக நியமித்த கோபாலசுவாமி பார்த்தசாரதிக்கு ஜெயவர்தனவை இணங்க வைப்பதில் முக்கிய பங்கு இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தலைசிறந்த அரசியலமைப்புச்சட்ட நிபுணருமான காலஞ்சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வம் பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரை ஒன்றில், ஜனாதிபதி ஜெயவர்தன ஒரு அரசியலமைப்பு நிபுணராக இருந்த போதிலும் கூட, அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டின் பயனுடைத்தன்மை மீது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பெரும் கஷ்டப்பட வேண்டியிருந்தது என்று தன்னிடம் பார்த்தசாரதி ஒரு தடவை கூறியதாக குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக எழுதிய கட்டுரையொன்றில் கறுப்பு ஜூலைக்கு பின்னரான காலப் பகுதியில் இலஙகையில் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது எதிர்நோக்க வேண்டியிருந்த கஷ்டங்கள் குறித்து பார்த்தசாரதி புதுடில்லி சந்திப்பொன்றில் தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார். 1984 பேச்சுவார்த்தைகளின் போது ஒரு கட்டத்தில் ஜனாதிபதி ஜெயவர்தனவின் வேண்டுகோளின் பேரில் கண்டியில் உள்ள பௌத்தபீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்ததாகவும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பது சாத்தியமில்லாத அளவுக்கு கடுமையானது என்பதை தெரிந்து கொண்டதாகவும் பார்த்தசாரதி தன்னிடம் கூறியதாகவும் கலாநிதி ஜெயதிலக எழுதியிருந்தார். சிக்கல் மிகுந்த மத்தியஸ்த முயற்சிகளை பொறுமையுடன் முன்னெடுப்பதற்கு எமது பிராந்தியத்தின் பூகோள அரசியலை முறையாகப் புரிந்து கொண்டவராகவும் இலங்கையின் அரசியலமைப்பின் சிக்கலான தன்மைகளைப் புரிந்து கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வல்லவராகவும் இருக்கக்கூடிய இராஜதந்திரி ஒருவரே அவசியம் என்று கருதியதனால்தான் இந்திரா காந்தி தனது நம்பிக்கைக்கு பெரிதும் பாத்திரமானவரான பார்த்தசாரதியை விசேட தூதுவராக அனுப்பினார். அவர் வெளியுறவுச் செயலாளர் உட்பட பல இராஜந்திர பதவிகளை வகித்தவர். தனது பணிக்கு முன்னதாக இருந்த சிக்கல்களும் இடறுகுழிகளும் பாரதூரமானவை என்பதை தெளிவாகப் புரிந்து கொண்ட பார்த்தசாரதியின் முதற்பணி அன்றைய அரசாங்கத் தலைவர்களினதும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களினதும் அச்சங்கள், ஏக்கங்கள், பிரமைகள் மற்றும் எண்ணப் போக்குகளை மிகுந்த நிதானத்துடன் கிரகிக்க வேண்டியதாகவே இருந்தது. இலங்கையின் பழைய இடதுசாரித் தலைவர்களுடன் அவரால் எளிதாகப் பழகிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. தமிழ்த் தலைவர்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய அரசியல் தெரிவுகளின் மட்டுப்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்பதும் பேச்சுவார்த்தை செயன்முறைகள் தொடர்பில் அடிப்படைவாத நிலைப்பாடுகளில் பிடிவாதமாக இருப்பவர்கள் போராடிக்கொண்டே பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட வேண்டும் என்பதே அவர்களுக்கான பார்த்தசாரதியின் ஆலோசனையாக இருந்ததாக கலாநிதி திருச்செல்வம் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். பிராந்திய சபைகளுக்கு (Regiinal Councils) அதிகாரங்களைப் பகிர்வதற்கான ஒரு தொகுதி யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதே பார்த்தசாரதியின் தனித்துவமான பங்களிப்பாகும். அந்த யோசனைகளே ‘இணைப்பு — சி’ ( Annexure — C ) என்று பிரபல்யமாக அழைக்கப்பட்டவையாகும். 1983 ஆகஸ்ட் தொடக்கம் டிசம்பர் வரை கொழும்பிலும் புதுடில்லியிலும் ஜனாதிபதி ஜெயவர்தனவுடன் நடத்திய சந்திப்புக்களில் இந்த இணைப்பு -. சி யைப் பூரணப்படுத்தும் செயற்பாடுகளை பார்த்தசாரதி நிறைவு செய்தார் என்று கூறப்பட்டது. தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ஜெயவர்தன அரசாங்கத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிப்பதில் ஒரு முழுநிறைவான சமரசப் பேச்சுவார்த்தையாளருக்குரிய சகல திறமைகளையும் மதிநுட்பத்தையும். வெளிக்கொணர்ந்தாகக் கூறப்பட்ட பார்த்தசாரதியினால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் அம்சங்களை. ஜெயவர்தன உடனடியாகவே இணங்கிக் கொண்டார். ஆனால், அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படை அலகு (Unit of Devolution) தொடர்பில் இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதென்பது தொடர்ந்தும் கஷ்டமானதாகவே இருந்தது. ஒரு மாகாணத்திற்குள் இருக்கும் மாவட்டங்களை இணைத்த பெரியதொரு அதிகாரப்பகிர்வு அலகு தமிழர்களுக்கு வழங்கப்படக்கூடாத ஒரு சலுகையாக நோக்கப்பட்டது. பிறகு 1983 டிசம்பரில் ஜெயவர்தன புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தனியொரு மொழிரீதியான பிராந்தியத்தை (Single Linguistic Region) அமைப்பதற்கான யோசனையை முன்வைப்பதற்கு இந்திரா காந்தியின் ஆதரவை பார்த்தசாரதி பெற்றிருந்தார். அத்தகைய யோசனைக்கு இணங்குவதன் மூலம் தென்னிலங்கையில் தனது ஆதரவுத்தளத்தை இழப்பதற்கு ஜெயவர்தன விரும்பவில்லை. ஆனால், அவர் விட்டுக்கொடுப்பு ஒன்றைச் செய்வதற்கு இணங்கினார். இணைப்பு — சி யில் பிராந்திய சபைகள். என்று இருந்ததை மாகாண மட்டத்துக்கு மட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். புதுடில்லி அஷோக் ஹோட்டலில் நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியத் தரப்பின் நெருக்குதலினால் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஜெயவர்தன, பார்த்தசாரதியை நோக்கி “நான் எங்கே கையெழுத்திட வேண்டும்” என்று கேட்டதாகவும் அதற்கு பதிலளித்த பார்த்தசாரதி “இது ஒரு உடன்படிக்கை அல்ல. கையெழுத்து ஒன்றும் தேவையில்லை” என்று கூறியதாக அந்த நேரத்தில் இந்திய ஊடகங்களில் செய்தி வௌயாகியது. 1984 ஜனவரியில் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டில் இணைப்பு — சி சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், சிங்கள அமைப்புக்கள், பௌத்த குழுக்கள் மற்றும் சில எதிர்க்கட்சிகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து ஜெயவர்தன அதிலிருந்து தன்னைத் தூரவிலக்கிக் கொண்டார். இணைப்பு — சி யின் உள்ளடக்கங்களுக்கு தான் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை என்று அவர் கைகழுவிவிட்டார். அதனால் சர்வகட்சி மகாநாடு தோல்வியில் முடிவடைந்தது. இந்திரா காந்தியின் மறைவுக்கு பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்றதை தொடர்ந்து 1985 முற்பகுதியில் புதுடில்லியில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், தாயாரின் நம்பிக்கைக்குரியவராக விளங்கிய பார்த்தசாரதியை பேச்சுவார்த்தை செயன்முறைகளில் ஈடுபடுத்துவதை மகன் தவிர்த்தார். தமிழ் அரசியல் தலைவர்கள் வழிகாட்டலுக்காகவும் ஆலோசனைக்காகவும் பெருமளவுக்கு பார்த்தசாரதியில் தங்கியிருந்த காரணத்தால் அவரின் வகிபாகத்தில் இலங்கை அரசாங்கத்தரப்புக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கியமை அவரை ஓரங்கட்டுவதற்கு ராஜீவ் காந்தி தீர்மானித்தற்கான ஒரு காரணி என்று கூறப்பட்டது. வெளியுறவு செயலாளர் ரொமேஷ் பண்டாரி, அமைச்சர்கள் பி. சிதம்பரம் மற்றும் நட்வர்சிங் ஆகியோரையே இலங்கை இனப்பிரச்சினையைக் கையாளுவதற்கு ராஜீவ் காந்தி பயன்படுத்தினார். 1987 ஜூலை 29 சமாதான உடன்படிக்கையில் கொழும்புக்கு வருகைதந்த ராஜீவ் காந்தியுடன் செல்வாக்குமிக்க அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய பெரிய தூதுக்குழுவொன்று வந்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் ஆரம்பக்கட்டங்களில் தீர்க்கமான பாத்திரத்தை வகித்து சமாதான உடன்படிக்கைக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த பார்த்தசாரதி அந்த தூதுக்குழுவில் இல்லாதது ஒரு பிரகாசமான வெற்றிடமாக இருந்ததாக அந்த நேரத்தில் அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் வர்ணிக்கப்பட்டது. எது எவ்வாறிருந்தாலும், இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்துக்கான கோட்பாட்டு அடிப்படையையும் பல்லின சமுதாயமொன்றுக்கான அரசியலமைப்பு அத்திபாரத்தையும் (Constitutional foundation for a multi – ethnic polity) அமைத்த பெருமையில் பெரும்பகுதி பார்த்தசாரதிக்கே உரியது என்று என்பதில் சந்தேகமில்லை என்று நீலன் திருச்செல்வம் எழுதினார். மாகாணசபைகளை அமைப்பதற்காக இலங்கை அரசியலமைப்புக்கு 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டு 38 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அது இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவுமில்லை, மாகாணசபைகள் ஒழுங்காக இயங்கவுமில்லை. கடந்த எட்டு வருடங்களாக மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் ஒரு வருட காலத்திற்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக உறுதியளித்த போதிலும், சாத்தியமானளவுக்கு அந்த தேர்தல்களை மேலும் பின்போடுவதற்கான வியூகங்களே முன்னெடுக்கப்படுகின்றன போன்று தெரிகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறையின் அடிப்படையிலான தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகின்றன. வேறு காரணத்துக்காக என்றாலும் சிங்களவர்கள் தரப்பில் சமஷ்டி ஆட்சிமுறை யோசனை முன்வைக்கப்பட்டு ஒரு நூற்றாண்டும் தமிழர் தரப்பினால் அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு முக்கால் நூற்றாண்டும் கடந்துவிட்ட நிலையில், அரைகுறையான அதிகாரங்களுடன் கூடிய மாகாண சபைகளைக் கூட ஒழுங்காக செயற்பட வைப்பதில் அக்கறையில்லாமல் சிங்கள அரசியல் சமுதாயம் இருக்கிறது. தமிழர் அரசியல் சமுதாயம் சமஷ்டி முறைத் தீர்வொன்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும், புதிய அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டுவரும் பட்சத்தில் முதலில் மாகாணசபைகளைக் காப்பாற்றப் போராடவேண்டியிருக்கும். https://arangamnews.com/?p=12770
-
ஈரான் - வெட்ட வெட்ட தழைத்தல் !
ஈரான் - வெட்ட வெட்ட தழைத்தல் ! பா. ரவீந்திரன் sudumanal அமெரிக்காவும் இஸ்ரேலும் கனவு கண்டதைப்போல ஈரான் அரசாங்கத்தை விரைவாக கவிழ்த்து தமக்கு சார்பான அடிவருடி -ஷா இன் புத்திரனான- றேசா பாலவியை ஆட்சிக்குக் கொண்டுவர முடியவில்லை. தலைவர்களைக் கொல்வதன் மூலம் அல்லது உள்நாட்டு மக்களின் அரசுக்கு எதிரான நியாயமான போராட்டங்களினுள் புகுந்து மடைமாற்றி அல்லது அதை செயற்கையாக உருவாக்கி ஆட்சியைக் கவிழ்த்த அமெரிக்க நரித்தன வரலாறு ஈரானிடம் வந்து முட்டி மோதி நிற்கிறது. அதற்கான காரணங்களில் மிக முக்கியமானது, ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புத்தான். உச்சத் தலைவரை மட்டுமல்ல இராணுவத் தளபதிகள் ஆலோசகர்கள் என சுமார் 50 பேருக்கு மேல் இதுவரை அமெரிக்காவும் இஸ்ரேலும் கொலைசெய்தபோதும் ஈரான் அரசை சரிக்க முடியவில்லை. 1979 ஈரானியப் புரட்சியின் பின் கட்டமைக்கப்பட்ட அரசாட்சி வடிவமே ஈரானின் அரசியல் அமைப்பாக இருக்கிறது. உச்சத் தலைவர் என ஒருவர் இருக்கிறபோதும், அவர் ஒருவரே அந்த இடத்துக்கான தகுதி படைத்தவர் அல்ல. அவர் வீழ்ந்தால் தாமதமின்றி அந்த இடத்தை நிரப்பக்கூடிய வகையில் “வல்லுனர் சபை” என்ற கட்டமைப்பு உள்ளது. அதிலிருந்து ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு தாமதமின்றி பதவியேற்பார். 86 மதத் தலைவர்களைக் கொண்ட சபை அது. இச் சபை உச்சத் தலைவரை நியமிக்கும் அதிகாரம் மட்டுமல்ல, அவரை நீக்கக் கூடிய அதிகாரமும் கொண்டதாகும். இந்த 86 பேரையும் 8 வருடத்துக்கு ஒருமுறை மக்கள் தெரிவுசெய்வர். இதைவிட பாதுகாப்புச் சபை, நிபுணர் சபை, பாராளுமன்றம், ஜனாதிபதி என எல்லாமும் சேர்ந்த ஒரு வலைக் கட்டமைப்பு கொண்டது ஈரானிய அரசு முறைமை. பாதுகாப்புப் படை கட்டமைப்பைப் பொறுத்தவரை 1979 ஈரானியப் புரட்சியின்பின் உச்சத் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தும்; ஐ.ஆர்.ஜி.சி மற்றும் பாராளுமன்றம் பிரதிநிதித்துவப் படுத்தும் அரச இராணுவம் (ஆர்ற்ரெஷ்) என இரு பெரும் பிரிவுகள் தோன்றின. மையப்படுத்தப்பட்ட முறையில் இந்த இராணுவ பிரிவுகள் இயங்கின. அரச இராணுவமும் ஐஆர்ஜசியும் தத்தமக்கான காலாட் படை, வான்படை, கப்பற்படை, உளவுப்படை, சேவைப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு என்பவற்றைக் கொண்டன. 2003 இல் ஈராக் இன் தலைவர் சதாம் வீழ்த்தப்பட்டவுடன் அந்த நாடும் வீழ்ந்தது. இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டனர், ஐ.ஆர்.ஜி.சி ராணுவத் தலைவர்கள்!. தலைவர் கொல்லப்படுகிறபோது, மையப்படுத்தப்பட்ட இராணுவக் கட்டமைப்பும் வீழ்ந்து போய்விடும்; என்பதை கண்டுபிடித்தனர். 2005 இல் ஜெனரல் மொகமட் ஜபாரி அவர்கள் இராணுவக் கட்டமைப்பில் “மொசைக்” என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தினார். அது உச்சத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதன்படி ஈரானின் 31 மாகாணங்களையும் கவனத்தில் எடுத்து இராணுவக் கட்டமைப்பு 31 பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவும் தனியாக போரிடக் கூடிய வலுவடன் உருவாக்கப்பட்டது. ஒவ்வொன்றும் தமக்கான தலைமையகத்தையும், ஆயுத இருப்பையும், உளவு வலையமைப்பையும் கொண்டனவாக இருந்தன. தமக்கான ஏவுகணை பிரிவுகளையும் இருப்பையும் கொண்டுள்ளன. தெஹ்ரானில் மத்தியப்படுத்தப்பட்டகட்டளைத் தலைமையகத்திலிருந்து போர்க் காலங்களில் தகவலை பெற முடியாத சந்தர்ப்பங்களில் அல்லது அது தாக்கப்பட்டு செயலிழந்திருக்கும் பட்சத்தில் இந்த 31 பிரிவுகளும் தனித்தனியாக சுயமாக முடிவெடுத்து இயங்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. அதற்கான முன் அங்கீகாரம் வழங்கப்பட்டுமிருக்கிறது. தெஹ்ரானிலிருந்து எந்த அறிவிப்பும் தேவையில்லை. உச்சபட்ச தலைவரிடமிருந்தும் எந்த கட்டளையும் தேவையில்லை. “எவராவது நிறுத்தும்படி சொல்வது வரை நிறுத்தாதே” என்பது அதன் தாரக மந்திரமாக இருக்கிறது. அதாவது நிறுத்தும் சுவிச் அந்த இராணுவ இயந்திரத்துக்கு இருக்காது. இன்னொரு வகையில் சொன்னால், தமது இருத்தலுக்காக இயக்குபவர் இல்லாமலே இயங்குகிற வல்லமை கொண்ட இராணுவ இயந்திரமாகும். இயக்குபவர் இல்லாமல் போகலாம். ஆனால் இயந்திரம் ஓடிக்கொண்டேயிருக்கும். அதனால்தான் ஈரான் இராணுவத்தை குண்டுகளாலோ அல்லது அதன் தலைவர்களைக் கொல்வதாலோ எவராலும் நிறுத்த முடியாது. ஏன், ஈரான் விரும்பினால் கூட இந்த இயந்திரத்தை நிறுத்த முடியாது என்கின்றனர், இராணுவ வல்லுநர்கள். தற்போதைய போர் ஈரான் வெற்றி பெறுவதற்கான போராட்டம் அல்ல. ஈரான் ஒருபோதும் வீழ்ந்துவிடக் கூடாது என்ற போராட்டம். அதாவது இருத்தலுக்கான போராட்டம். இராணுவ கட்டமைப்பு ஆர்ற்ரெஷ், ஐ.ஆர்.ஜி.சி என இரு அடுக்குகளைக் கொண்டது என பார்த்தோம். ஆர்ற்ரெஷ் ஆனது மரபார்ந்த இராணுக் கட்டமைப்பு. அது ஒரு நாட்டுக்கான இராணுவக் கட்டமைப்பு ஆகும். மற்றது இஸ்லாமிய புரட்சிக் காவற்படை ஐ.ஆர்.ஜி.சி. இது உள்நாட்டுப் பாதுகாப்பையும் இஸ்லாமியக் குடியரசு அரசியல் கட்டமைப்பின்; இராணுவப் பாதுகாப்பாகவும் இருக்கும். வெளியிலிருந்து வரும் தாக்குதலை அதாவது போரை மரபு இராணுவத்துடன் சமாந்தரமாக நடத்துபவர்களாகவும் இருப்பர். மரபு இராணுவத்துக்கும் ஐ.ஆர்.ஜி.சி க்கும் தனித்தனியான கட்டளைத் தலைமையகம் இருக்கிறது. இரண்டுக்கும் இடையில் தொடர்பும் இருக்கிறது. தொடர்புபட்ட நடவடிக்கைகளும் இருக்கின்றன. இரண்டு பிரிவுகளிலும் மொத்தமாக 610’000 நிரந்தர படை வீரர்கள் இருக்கிறார்கள்.350’000 றிசேவ் படை வீரர்கள் இருக்கிறார்கள். 93 மில்லியன் மக்களைக் கொண்ட ஈரானின் நிலப்பரப்பு மிகப் பெரியது. மலையையும் பாலைவனத்தையும் சமதரையையும் கொண்ட இந் நிலத்தை தரைவழியாக அமெரிக்கா ஆக்கிரமிப்பது எந்தளவு சாத்தியம் என தெரியாது. அது நடந்தால் ஆக்கிரமிப்பு இராணுவம் இலகுவில் மீள முடியாத சேற்றுள் காலத்தைப் புதைப்பதாக முடியும். மரபு இராணுவக் கட்டமைப்பைக் கொண்ட ஆப்கானிஸ்தானையே வெற்றி கொள்ள முடியாமல் தோற்றுப்போனது அமெரிக்கா. ஈரானின் வித்தியாசமான இராணுவ மூலோபாயக் கட்டமைப்பை முன்வைத்தும், ஏவுகணைத் தொழில்நுட்பத்தை முதன்மையிலும் வைத்தும் ஓர் அசமச்சீர்ப் போர் முறையில் தனது இருத்தலுக்கான போராட்டத்தை ஈரான் நடத்துகிறது. பலவீனமான கடற்படையைக் கொண்டிருந்தாலும் மினி நீர்மூழ்கிக் கப்பலையும் கடற் கண்ணிவெடிகளையும் கொண்ட இன்னொரு அசமச்சீர் கடற் போர்முறையை கொண்டு போராட அதனால் முடியும். அதேபோலவே பலவீனமான வான்படையைக் கொண்டிருந்தாலும் வான்பரப்பை ஏவுகணைகளால் முடிந்தளவு ஆக்கிரமித்து வைத்திருக்கவும் செய்கிறது. 1979 இலிருந்து பொருளாதாரத் தடையை அந்த நாடு எதிர்கொண்டு வருகிறபோதும் அங்கு வேலைவாய்ப்பின்மை 7.2 வீதம் மட்டுமே உள்ளது. படிப்பறிவைப் பொறுத்தவரை வயதானவர்களினது 89 வீதமும் இளஞ்சந்ததியினது 99 வீதமுமாக உள்ளது. பல்கலைக் கழகத்தில் கல்வி கற்போரில் பெண்கள் 60-70 வீதமானோர் என்கிறது புள்ளிவிபரம். எண்ணற்ற விஞ்ஞானிகளை அது உருவாக்குகிறது. எல்லா தடைகளுக்கூடாகவும் தொடரும் அவர்களது இருத்தலுக்கான போராட்டத்தில் இப்போ இன்னொரு போரை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். அழிவுகள் மிகப் பயங்கரமானதாகவே இருக்கிறது. இந்தப் போரின் சூத்திரதாரிகள் மனிதவிரோதிகளான இஸ்ரேலும் அமெரிக்காவும்தான் என்பது உலகு அறியும். வெட்ட வெட்ட தழைக்கும் வலுவும் வளமும் கொண்டது ஈரான் என்பதை அமெரிக்க அதிகாரம் நம்ப மறுக்கலாம். ஆனால் இதுவும் கடந்து போகும் என்ற நிலையில் ஈரான் உறுதியோடு நிற்கிறது. பாசிஸ்டுகள் பார்ப்பதற்கு விறைப்பானவர்கள் போல் தெரிந்தாலும், அவர்கள் கோமாளிகள் என்றார் சார்லி சப்ளின். எந்தளவு உண்மை என தெரியாது. ஆனால் முன்னுக்குப் பின் மாத்தி மாத்தி பேசுவதிலும், தனது மூளை அக் கணத்தில் எடுக்கும் முடிவுகள்தான் தன்னை வழிநடத்துவதாகவும் கூறும் டொனால்ட் ட்றம்ப் இன் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது சப்ளின் சொன்னது உண்மைதானோ என எண்ணத் தோன்றுகிறது. https://sudumanal.com/2026/03/22/7651/
-
சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும்
சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும் March 16, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத் தூதுக் குழுவுக்கு தலைமை வகித்த பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அண்மையில் ‘இலங்கையின் சமாதான செயன்முறை; ஒரு உட்பக்க நோக்கு’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார். சமாதானச் செயன்முறையை அந்த நேரத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு நேர்மையுடன் முன்னெடுத்தது என்பதைப் பற்றி எங்களுக்கு தனியான அபிப்பிராயம் இருக்கிறது என்ற போதிலும், அரசாங்கத்தின் தலைமைப் பேச்சாளராக பேராசிரியர் பீரிஸ் பங்கேற்றவர் என்பதால் அவரது நூல் பரவலான கவனத்துக்கு உரியதாக இருக்கிறது. நூலின் முதல் அத்தியாயத்தின் முதற் பந்தியிலேயே அவர் இலங்கையில் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பிலான யோசனையின் தோற்றுவாய் குறித்து தெரிவித்த கருத்து இன்று சகல தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகளும் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையின் அடிப்படையில் நிலையான தீர்வொன்று காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கும் பின்புலத்தில் சகல சமூகங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. தனது நூலின் ஊடாக ஆராயப்படும் அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம் மற்றும் சமஷ்டிமுறை என்ற தொனிப்பொருட்கள் அவற்றின் தோற்றுவாயை இனத்துவத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளில் கொண்டிருக்கவில்லை என்று எழுதியிருக்கும் பேராசிரியர், இலங்கைக்கு பொருத்தமான ஒரு ஆட்சிமுறைக் கட்டமைப்பாக சமஷ்டிமுறை என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு பின்புலத்திலேயே முன்மொழியப்பட்டது என்பதை நினைவூட்டுகிறார். தொடக்கத்தில் சமஷ்டி முறை யோசனை தமிழர்களின் அபிலாசைகளுடன் அல்ல, கண்டிச் சிங்களவர்களின் அபிலாசைகளுடனேயே தொடர்புபட்டதாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரலெழுப்பி இந்த வருடத்துடன் சரியாக ஒரு நூற்றாண்டு நிறைவடையும் நிலையில் பேராசிரியர் இதைக் குறிப்பிட்டிருப்பது தற்செயலானதாக இருந்தாலும் கூட, அதில் ஒரு பொருத்தப்பாடு இருக்கிறது. கனடாவில் வாழும் மூத்த இலங்கைப் பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் ‘100 வருடங்களுக்கு முன்னர் பண்டா ரநாயக்க விடுத்த சமஷ்டி ஆட்சி முறைக்கான அறைகூவல்’ என்ற தலைப்பில் அண்மையில் ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரலெழுப்புவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னதாகவே 1920 களின் முற்பகுதியில் இளம் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவும் அந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் டொனமூர் ஆணைக்குழுவின் முன்னிலையில் கண்டிச் சிங்களப் பிரதிநிதிகளும் சமஷ்டி முறைக்காக குரல் கொடுத்தனர் என்றும் வடக்கு — கிழக்கு மாகாணம் ஒன்று உட்பட மூன்று மாகாணங்களுடனான சமஷ்டி இலங்கை யோசனையை கண்டிச் சிங்களவர்கள் முன்வைத்தனர் என்றும் அரசியலமைப்புச் சட்ட நிபுணரான கலாநிதி றொஹான் எதிரிசிங்க ‘சமஷ்டி முறை; மாயைகளும் யதார்த்தங்களும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டியே ஜெயராஜ் தனது கட்டுரையை தொடங்கினார். “அந்த யுகத்தின் அரசியல் தலைவர்கள் மத்தியில் தலைசிறந்த அறிவுஜீவியான பண்டாரநாயக்க ஒரு வகையான சமஷ்டிமுறை மாத்திரமே இலங்கையின் ஆட்சிமுறைப் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கமுடியும் என்று முன்கூட்டியே 1926 ஆம் ஆண்டளவில் வாதாடினார். “கரையோரச் சிங்களவர்களுக்கும் மலைநாட்டுச் சிங்களவர்களுக்குமாக இரு அலகுகளையும் தமிழர்களுக்காக வடக்கு — கிழக்கில் ஒரு அலகையும் கொண்ட ஒரு சமஷ்டி ஏற்பாட்டை 1927 ஆம் ஆண்டில் கண்டிச் சிங்களவர்கள் முன்மொழிந்தனர். “சிங்களவர்களினால் முன்மொழியப்பட்டபோது சமஷ்டிமுறையை இலங்கைத் தமிழர்கள் நிராகரித்தார்கள். தங்களுக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் வடக்கு — கிழக்கு தமிழர்களுக்காக சமஷ்டிமுறையை வழங்குமாறு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கோரிக்கையை முன்வைத்திருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கக்கூடிய சகல சாத்தியப்பாடுகளும் அன்று இருந்தன. “பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்தில் இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி முறையையோ அல்லது தனிநாட்டையோ கூட கோரவில்லை. பதிலாக அந்தக் கோரிக்கைகளை தமிழ்த் தலைவர்கள் பிரிட்டிஷார் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் மாத்திரமே முன்வைத்தனர்” என்று அவர் எழுதியிருந்தார். நூறு வருடங்களுக்கு முன்னர் ‘மோர்ணிங் லீடர்’ பத்திரிகைக்கு ஆறு கடிதங்களை எழுதிய பண்டாரநாயக்க இலங்கைக்கு சமஷ்டி ஆட்சிமுறையே பொருத்தமானது என்று தமிழர்களை நம்பவைப்பதற்கு ‘யாழ்ப்பாண விரிவுரையை’ நிகழ்த்த 1926 ஜூலை 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். அன்றைய தினம் ‘எமது அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு சமஷ்டி முறையே’ என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் இனவேறுபாடுகளைக் கையாளுவதற்கும் பிராந்திய சுயாட்சியே சீரான வழி என்று வாதிட்டார். சமஷ்டி முறைக்காக குரல்கொடுக்க தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு அவர் விடுத்த வேண்டுகோளை தமிழர்கள் நிராகரித்தார்கள். யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் (பிறகு அது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது) சமஷ்டிமுறை யோசனையை எதிர்த்தது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரகாசமான கல்வியைப் பெற்றதன் பின்னர் 1925 ஆம் ஆண்டில் நாடுதிரும்பிய பண்டாரநாயக்க இலங்கை தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இருந்த அதேவேளை, அரசியல் சுயாட்சி இலக்கை அடைவதற்காக முற்போக்கு தேசியக் கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியின் யாப்பு பண்டாரநாயக்கவின் மனதில் இருந்த சமஷ்டி ஆட்சிமுறை பற்றிய திட்டவரைவு ஒன்றை உள்ளடக்கியதாக இருந்தது. கரையோரச் சிங்களவர்களையும் மலைநாட்டுச் சிங்களவரையும் தமிழர்களையும் நாட்டின் பிரதான குழுக்களாகக் குறிப்பிட்ட அந்த யாப்பு ஒவ்வொன்றும் முற்றுமுழுதான சுயாட்சியைக் கொண்ட ஒன்பது மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பண்டாரநாயக்கவின் யோசனையை அவரின் நெருங்கிய நண்பரான கல்விமான் ஜேம்ஸ் ரி. இரத்தினத்தை தவிர, முற்போக்கு தேசிய கட்சியின் சகல உறுப்பினர்களும் ஆதரித்தனர். சமஷ்டிமுறை தொடர்பிலான யோசனை அந்த காலகட்டத்தில் இனவாத உணர்வுகளையோ அல்லது சிங்களவர்களிடமிருந்து எதிர்ப்பையோ கிளப்பவில்லை. அந்த யோசனைக்கு கடுமையான எதிர்ப்பு ஒரு சிங்களவரிடமிருந்து அல்ல, தமிழரிடமிருந்தே வந்தது என்று ஜெயராஜ் எழுதினார். இது இவ்வாறிருக்க, காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பிரபல்யமான பிரிட்டிஷ் சிவில்சேவை அதிகாரியாக இருந்த லெனார்ட் வூல்வ் 1930 களின் பிற்பகுதியில் இலங்கைக்கு சுவிட்சர்லாந்தின் கன்ரோன் முறையே அதிபொருத்தமானது என்ற கருத்தை முன்வைத்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. 1938 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில் லெனார்ட் வூல்வ் கரையோரச் சிங்கள மாகாணம், கண்டியச் சிங்கள மாகாணம், தமிழ் வடக்கு மாகாணம், தமிழ் கிழக்கு மாகாணம் என்று நான்கு கன்ரோன்களையும் மலைநாட்டில் இந்திய வம்சாவளி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தேயிலைத் தோட்டப்பகுதிகளை உள்ளடக்கி ஐந்தாவது கன்ரோன் ஒன்றையும் உருவாக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் தேசிய நலன்களைப் பேணுவதற்காக அவர்களுக்கென்று தனியொரு கன்ரோனை பரிந்துரைத்த ஒருவர் என்றால் நாமறிந்தவரை அது லெனார்ட் வூல்வ் மாத்திரமேயாவார். கன்ரோன் முறையை அறிமுகப்படுத்தக்கூடிய அளவுக்கு இலங்கை பெரிய நாடு அல்ல என்ற வாதம் முன்வைக்கப்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த அவர் இலங்கையின் பரப்பளவு சுவிட்சர்லாந்தின் பரப்பளவை விடவும் 10 ஆயிரம் சதுரமைல்கள் அதிகம் என்று சுட்டிக் காட்டியதுடன் இனத்துவ அடிப்படையிலான சனத்தொகையைப் பொறுத்தவரை சுவிட்சர்லாந்தில் ஜேர்மன் மொழி பேசுபவர்களை இலங்கையில் சிங்களவர்களுடனும் பிரெஞ்சு மொழி பேசுபவர்களை தமிழர்களுடனும் இத்தாலி மொழி பேசுபவர்களை முஸ்லிம்களுடனும் ஒப்பிட்டார். இவை ஒரு காலனித்துவ நிருவாகியாக இருந்த முற்போக்குவாதியான ஆங்கிலேயர் ஒருவர் ஏழு ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து அதன் மக்களை நெருக்கமாக அறிந்து பெற்றுக்கொண்ட அனுபவங்களின் விளைவாக முன்வைத்த யோசனைகளாகும். பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து அன்றைய தமிழ்த் தலைவர்கள் சமஷ்டிமுறைக்காக குரல்கொடுத்துப் போராடியிருந்தால் இலங்கையின் அரசியல் வரலாறு நிச்சயமாக வேறுபட்டதாக இருந்திருக்கும். 1931 ஆம் ஆண்டில் டொனமூர் அரசியலமைப்பின் மூலமாக சர்வஜன வாக்குரிமையும் பிராந்திய அடிப்படையிலான பிரதிநிதித்துவமும் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பண்டாரநாயக்கவின் அரசியல் நோக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளை அடுத்தவாரம் பார்ப்போம்.(தொடரும்) https://arangamnews.com/?p=12739
-
வட மாகாண ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
வட மாகாண ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் மாகாண கல்வித் திணைக்களம் தமது இடமாற்றக் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்யாது, மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்து வட மாகாண ஆசிரியர்கள் இன்றையதினம் (26) போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஒன்றுகூடிய ஆசிரியர்கள், பல்வேறு பதாதைகளைத் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். ஏற்கனவே கஷ்டப் பிரதேசங்களில் பணிபுரிந்தோர், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் குடும்பச் சூழல் காரணமாகத் தூர இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் எனப் பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். தமது இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாகாண கல்வித் திணைக்களத்திற்கு மேன்முறையீடு செய்தும், அந்த விண்ணப்பங்களை மாகாண கல்வித் திணைக்களம் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கவில்லை என ஆசிரியர்கள் இதன்போது குற்றம் சுமத்தினர். இதனைத் தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் உள்ளிட்ட பிரதிநிதிகள், வட மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வார்பிள்ளை ஸ்ரீ என்பவரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தீபன் திலீசன், "மாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக எந்தவொரு மேன்முறையீடும் தமக்கு அனுப்பப்படவில்லை என்றும், அவ்வாறு அனுப்பப்பட்டால் மட்டுமே தம்மால் அவற்றைப்பரிசீலிக்க முடியும் என்றும் செயலாளர் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டார். பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் பதிலைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் தமது போராட்டத்தை வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகத் தொடர்ந்தனர். தமது மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டுத் தீர்வு வழங்கப்படும் வரை, தற்போது பணியாற்றும் பாடசாலைகளிலேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறில்லாத பட்சத்தில் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனவும் ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்தனர். https://adaderanatamil.lk/news/cmn73j6rd0002356p9ed32igh
-
மாகாண சபை தேர்தல் நடக்கும்
மாகாண சபை தேர்தல் நடக்கும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து, யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி கூடி ஆராய்ந்துள்ளது. இந்த ஆராய்வானது இவ்வருடத்திற்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிகிறது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் தேர்தலுக்கான திகதி மற்றும் எந்த முறைமையின் கீழ் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசு வெளியிடும் என்றும் தகவல் கசிந்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு, விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்றை நியமிப்பதற்கான யோசனையை ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ 2026.01.06 அன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இந்த யோசனையின் அடிப்படையில் ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது. மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறைப்படி நடத்துவதா என்பது தொடர்பில் ஆராய்ந்து யோசனைகளை முன்வைக்க நியமிக்கப்பட்டுள்ள 12 பேரில், ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர்களான சுனில் வட்டகல, முனீர் முழப்பர், அருண் ஹேமசந்திரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுணராச்சி, சமன்மலி குணசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க, சந்தன சூரியாராச்சி ஆகியோர் அடங்குகின்றனர். எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். கடந்த 8 வருடங்களாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்கி வருகின்றன. எல்லை நிர்ணய முறைமை இதுவரையில் நிறைவு செய்யப்படாத காரணத்தால், 1988ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்தம் செய்து, தற்போதுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறைமைக்கமைய தொகுதி அடிப்படையில் தேர்தலை நடத்துவது சிக்கலாகியுள்ளது. தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டத்தின் குறைகளை அவதானித்து திருத்தங்களை முன்வைக்க 2022ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட விசேட குழு, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறைமைக்கு அமைய எல்லை நிர்ணயம் செய்து, அதன் பின்னர் சட்ட வரைவைத் தயாரிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. அதேநேரம், அதுவரையில் விகிதாசாரத் தேர்தல் முறைமையில் தேர்தலை நடத்தலாம் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், இன்னமும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதே தற்போதைய பிரச்சினையாகும். நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கான தீர்மானத்திற்கு விசேட செயற்குழு வருவது, அரசியல் தரப்பினருக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். அத்துடன், மாகாண சபைத் தேர்தலில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களும் வாக்களிக்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக அறியமுடிகிறது. நீண்டகாலக் கோரிக்கைகளான தேர்தல் முறைமை மாற்றம், புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை தொடர்பான பரிந்துரைகள் இதற்கான சூழலை உருவாக்கியுள்ளன. இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக அமையலாம். இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் ஜூன் மாதத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், அதற்கான முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை இவ்வருடத்துடன் நிறைவடைகின்றது. இந்தச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட 27 நிபந்தனைகளை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன், இவ்வருட செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத்தொடரை அரசு எதிர்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தொடரில் இலங்கை அரசு மீது தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கு முன்னதாகவே மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழுக்கள் அமைப்பதும், ஆராய்வதும், அறிக்கை சமர்ப்பிப்பதும் பின்னர் அவை கைவிடப்படுவதும் நமது நாட்டில் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. இதனால் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் காணப்பட்டாலும், இந்த அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக மாகாண சபைத் தேர்தல் இவ்வருடத்திலேனும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் நிர்வாகத்தை முன்னெடுப்பதாலும், மக்கள் ஆதரவு குறைந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், தேர்தலுக்கான தற்போதைய நகர்வுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன. சுயநிர்ணயக் கோரிக்கையுடன் தமிழ் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக இந்தியா இதில் தலையிட்டு, 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைத் தீர்வை உருவாக்கியது. அவ்வாறு உருவாக்கப்பட்ட மாகாண சபைகளில் வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த சபை காணப்பட்டாலும், ஏனைய மாகாணங்கள் தனித்தனியாக இயங்கி வந்தன. வடக்கு மற்றும் கிழக்கு தற்காலிக இணைப்பின் அடிப்படையில் ஒரே மாகாணமாக 1988இல் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 1990இல் இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்துடன், வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ‘தமிழீழப் பிரகடனத்தை' மேற்கொண்டுவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் ஆளுநர்களின் அதிகாரத்திலேயே இம் மாகாண சபை இருந்து வந்தது. 2006ஆம் ஆண்டு ஜே.வி.பி (JVP) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்காக நல்லாட்சி அரசாங்க காலத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது, தேர்தலை நடத்த முடியாத முட்டுக்கட்டை நிலையை ஏற்படுத்தியது. 2012ஆம் ஆண்டில் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2013இல் மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், 2014இல் ஊவா மாகாணத்திலும் தேர்தல்கள் இடம்பெற்றன. இப்போது பழைய முறையிலா அல்லது புதிய கலப்புத் தேர்தல் முறையிலா தேர்தல் நடைபெறும் என்பது தெரியாமலேயே காலம் கடக்கிறது. வட-கிழக்குத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையின் ஊடாகத் தமிழர்கள் பெற்ற பயனை விடவும், ஏனைய மாகாணங்களே அதிக பயனை அடைந்துள்ளன. அரசியல் உரிமைகளை அனுபவிக்க அரசியல் கட்டமைப்புகள் அவசியமானவை. அந்த வகையில் கடந்த 8 வருடங்களாகத் தேர்தல் நடைபெறவில்லை என்ற கவலை இவ்வருடத்துடன் நீங்கும் என நம்புவோம். எனினும், ஈரானை மையப்படுத்தி மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் முடிவுக்கு வருவதும் தேர்தல் நடைபெறுவதற்குச் சாதகமாக அமைய வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாகாண-சபை-தேர்தல்-நடக்கும்/91-374400
-
அந்தரத்தில் தொங்குகிறது இலங்கை - மே மாதம் நடுப்பகுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்
அந்தரத்தில் தொங்குகிறது இலங்கை மே மாதம் நடுப்பகுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்: இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதி எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருளைத் தட்டுப்பாடுகளின்றி விநியோகிக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார். எரிபொருள் கையிருப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எரிபொருள் தட்டுப்பாடு குறித்த பொதுமக்களின் கவலைகளுக்கு மத்தியில், மே மாதப் பாதி வரை போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31-ஆம் திகதி வரை எரிபொருள் கப்பல்கள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஏப்ரல் 6-ஆம் திகதி முதல் 29-ஆம் திகதி வரை மேலதிக விநியோகங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான அளவை விட 10% க்கும் அதிகமான மேலதிக எரிபொருளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முன்பதிவு செய்துள்ளது" எனக் குறிப்பிட்டார். இதேவேளை, சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளைப் பதுக்கி வைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி, சில நிலையங்கள் ஆறு மாதங்களுக்குத் தேவையான எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் சுமார் 18 எரிபொருள் தாங்கிகளைக் கோரியுள்ளன. இவ்வாறான பதுக்கல் நடவடிக்கைகள் சாதாரண வாகன ஓட்டுநர்களுக்கு எரிபொருள் கிடைப்பதைக் கடினமாக்கும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. இத்தகைய செயற்பாடுகளை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முறையாகக் கண்காணிக்கிறதா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் கூறினாலும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் நீண்ட வரிசைகள், தட்டுப்பாடு குறித்த பயத்தினால் மக்கள் எரிபொருளைச் சேமிக்கத் தொடங்கியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இது கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழிகள் மீதான நம்பிக்கையைக் குறைப்பதாக அமைந்துள்ளது. வரவிருக்கும் மாதங்களை எதிர்கொள்ள இலங்கை உண்மையிலேயே தயாராக உள்ளதா அல்லது மறைமுகமான எரிபொருள் நெருக்கடி ஒன்று உருவாகிறதா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளதாக விமர்சகர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/அந்தரத்தில்-தொங்குகிறது-இலங்கை/175-374574
-
570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்
570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள் adminMarch 25, 2026 யாழ்ப்பாணத்தில் சுமார் 500 மீற்றர் வீதியினை புனரமைக்க 76 நாட்களுக்கு மேல் சென்றதாகவும் , ஒப்பந்தக்காரரின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் , அதிகாரிகளின் பாராமுகம் தொடர்பிலும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபவானந்தராசா தலைமையில் நடைபெற்றது. அதன் போதே பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் குறித்த குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். 43 வீதிகள் புனரமைப்பு. வலி.வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான 43 வீதிகள் கடந்த வருடம் 2025ஆம் ஆண்டு பிரதேச செயலகம் ஊடாக நிதி விடுவிக்கப்பட்டு , பிரதேச செயலகத்தின் நேரடி கண்காணிப்பில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் மாங்கொல்லை வீதியானது 570 மீற்றர் நீளமும் , 3.90 மீற்றர் அகலமும் கொண்ட வீதியாகும். அதன் புனரமைப்பு பணியினை சிவா கட்டடத்தாரர் ஒப்பந்த அடிப்படையில் வீதி புனரமைப்பு பணிகளுக்கான வேலையினை பெற்றிருந்திருந்தனர். 570 மீட்டர் நீள வீதியை புனரமைக்க 76 நாட்கள் வீதியின் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த டிசம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் வேலையை ஆரம்பிக்காது காலம் தாழ்த்தி வந்த ஒப்பந்தக்காரர் , வீதியின் புனரமைப்பு பணிகளை முடித்து வீதியின் இரு மருங்கிலும் மண் இட்டு வேலையை பூர்த்தி செய்தது கடந்த 13ஆம் திகதியே. அதன் அடிப்படையில் 570 மீற்றர் நீளமான வீதியினை புனரமைக்க ஒப்பந்தக்காரருக்கு 76 நாட்கள் தேவைப்பட்டுள்ளன. குறித்த வீதியின் புனரமைப்புக்கு 76 நாட்கள் எடுத்திருந்த நிலையிலும் , வீதியின் புனரமைப்பில் திருப்தி இல்லை என அயலவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் ,நேற்றைய தினம் நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் வீதி புனரமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார் கூட்டத்தில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, மாங்கொல்லை வீதி புனரமைப்பு பணிக்காக டிசம்பர் மாதம் 27ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் பணிகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் ,பிரதேச செயலருடன் அது தொடர்பில் பல்வேறு தடவைகள் தொடர்பு கொண்டு பணிகள் ஆரம்பிக்கப்படாதமை குறித்து தெரிவித்து வந்தேன். அவரும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் பொங்கலுக்கு முன் பணிகள் நிறைவு பெறும் என வாக்குறுதிகள் வழங்கினார். ஆனால் அவை எவையும் நடைபெறவில்லை. அதேநேரம் மாங்கொல்லை வீதியின் நடுவில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பத்தினை இழுத்து கட்டியிருந்த கம்பி காணப்பட்டது. வீதி புனரமைப்பின் போது அதனை அகற்றி ,வீதியினை புனரமையுங்கள் என பிரதேச செயலகத்திடம் கோரிக்கை வைத்தேன். அதேநேரம் மின்சார சபையிடமும் அது தொடர்பில் கோரிக்கை வைத்தேன். அவர்கள் வீதியின் நடுவில் உள்ள கம்பியை தாங்கள் அகற்றுவது எனில் தமக்கு அதற்கான செலவீனங்களை தர வேண்டும் அதனை யார் தருவார்கள் என என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். இது தொடர்பில் நான் பிரதேச செயலகத்திடம் மீண்டும் கம்பியை அகற்றி விட்டு பணியை தொடருமாறு கோரிய போது , என்னையே கடிதம் கொண்டு வருமாறு அலைக்கழித்தனர். பின்னர் ஒருவாறு அந்த கம்பி கழட்டப்பட்ட பின்னர் , வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பிரதேச செயலர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தேன். ஒரு கட்டத்தில் ஒப்பந்தக்காரர் வேலையை முடித்து தருகிறார் இல்லை. நீங்களே அவருடன் கதைத்து உங்கள் வீதி வேலையை முடியுங்கள் என எனக்கு அவரின் தொலைபேசி இலக்கத்தை தந்தனர். அவரிடம் அது தொடர்பில் தொடர்பு கொண்டு கதைத்த போது விரைவில் முடித்து தருவேன் என உறுதி அளித்து , வீதியில் கற்களை பரவி விட்டு ,ஆட்கள் வர மாட்டார்கள், அந்த வீதியால் பயணித்தவர்கள் வீதியில் கொட்டப்பட்ட கற்களுக்கால் சிரமத்துடன் பயணித்தனர். தொடர் இழுபறிகளுக்கு மத்தியிலையே வீதி புனரமைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டி, வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து 76 நாட்கள் சென்ற பின்னரே 570 மீட்டர் நீளமான வீதியினை புனரமைத்து முடித்துள்ளனர். 76 நாட்களாக புனரமைக்கப்பட்ட வீதியின் தரத்தில் கூட எமக்கு திருப்தி இல்லை. எனவே பிரதேச செயலகத்தினால் புனரமைக்கப்பட்ட 43 வீதிகளின் புனரமைப்பு பணிகளையும், அந்த வீதிகளின் தரத்தினையும் மீள் சோதனை செய்ய வேண்டும் என கோருகிறேன் என தெரிவித்தார். அதனை அடுத்து வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் மீள் கணக்காய்வு செய்யப்பட வேண்டும் எனவும் , வீதிகளின் தரம் தொடர்பில் மீள் சோதனை செய்யப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது . https://globaltamilnews.net/2026/231009/
-
யாழ்.பல்கலை துணைவேந்தராக வேல்நம்பி பதவியேற்பு
பட்டதாரிகள் வேலை தேடுபவர்களாக இருக்காது துறை சார் வல்லுநர்களாக இருக்க வேண்டும் adminMarch 25, 2026 நீண்ட பாரம்பரியத்தை கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன்றைக்கு 12 பீடங்களை கொண்டு விளங்கும் பல்கலைக்கழகமாக காணப்படுகிறது. இலங்கையில் அதிகூடிய பீடங்களை கொண்ட பல்கலைக்கழகமாக யாழ்ப்பாண பல்கலை கழகமே காணப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் தற்போது 14ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த பல்கலைக்கழகத்தை தாங்கிய வழிநடத்தி சென்ற அத்தனை துணைவேந்தர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு, அவர்களின் பணிகளை தொடர்ந்து வரும் காலங்களில் முன்னெடுத்து செல்வேன். அத்துடன் புதிதாகவும் பல்வேறு நடவடிக்கை முன்னெடுக்க திட்டங்களை வைத்துள்ளேன். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சமூகத்தோடு இணைந்து இருக்க வேண்டும். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் சமூகத்துடன் இணைத்து தமது பங்களிப்பை செய்ய வேண்டும். சர்வதேச ரீதியாகவும், இலங்கை ரீதியாகவும் எமது பல்கலைக்கழத்தை தரப்படுத்தலில் முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும். அதற்கு பேராசிரியர்கள் , பீடாதிபதிகள் , நிர்வாக உத்தியோகஸ்தர்கள் எல்லோருடனும் இணைந்து செயற்படுவோம் புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. பட்டதாரிகள் வெறும் பட்டத்தை வைத்து அரச வேலை தேடுபவர்களாக இருக்காது , தமது துறை சார்ந்து சிறப்பாக செயற்பட கூடியவர்களாக மாற வேண்டும். அதற்காக அவர்களை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகள் பல்கலைக்கழக மட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் பட்டதாரிகள் தொழில் தேடுபவர்களாக இருக்காது , தொழில் முயற்சிகளை முன்னெடுக்க கூடிய தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கி அவர்கள் ஊடாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் பங்களிப்பை வழங்க வைக்க வேண்டும். அறிவுத்திறன், ஆராய்ச்சி மற்றும் சமூக பொறுப்பு என்பவற்றை மாணவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் எமது சமூகத்தில் அக்கறையுள்ள அனைத்து துறை சார் வல்லுனர்களையும் எம்முடன் இணைந்து பயணிப்போம். அதற்கான எதிர்கால திட்டங்கள் என்னிடம் உண்டு அதனை நோக்கி நாம் பயணிப்போம் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/231019/
-
ஓய்வு பெற்றார் யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா
ஓய்வு பெற்றார் யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா 25 Mar, 2026 | 11:19 AM யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து செவ்வாய்க்கிழமையுடன் (24) விடைபெற்றுச் சென்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் 2023 ஆகஸ்ட் 28 வரை தனது முதலாவது பதவிக் காலத்தையும், 2023 ஆகஸ்ட் முதல் இன்று 2026 மார்ச் 24 வரை இரண்டாவது பதவிக் காலத்திலும் துணைவேந்தராகப் பதவி வகித்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா புதன்கிழமை தனது 65 ஆவது அகவையை நிறைவு செய்து 66 ஆவது அகவைக்குள் காலடி பதிக்கிறார். எதிர்வரும் ஆகஸ்ட் 28 திகதி வரை ஜனாதிபதியினால் இவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்த போதிலும், பல்கலைக்கழக சட்டத்தின் படி 65 வயதை நிறைவுசெய்த பின்னர் நிர்வாகப் பதவிகளை வகிப்பதற்கு இடமளிக்காததன் காரணமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தானாகக் கேட்டு, அடுத்த துணைவேந்தருக்கான தெரிவை உரிய காலத்தினுள் நடாத்தி, புதிய துணைவேந்தரிடம் பதவியை கையளித்தார். எனினும், பல்கலைக்கழகச் சட்ட ஏற்பாடுகளின் படி, அவர் பணியாற்றும் விஞ்ஞான பீடத்தின் நடப்புக் கல்வியாண்டு நிறைவு பெறும் - எதிர்வரும் செப்ரெம்பர் 30 வரை அவர் தனது கல்விப் பணியில் தொடர்ந்தும் கணிதவியல் பேராசிரியராகச் சேவையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241878
-
யாழில் யானைகள் திட்டமிட்டே கொண்டுவந்து விடப்பட்டுள்ளன - பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவிப்பு
யாழில் யானைகள் திட்டமிட்டே கொண்டுவந்து விடப்பட்டுள்ளன - பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவிப்பு 25 Mar, 2026 | 12:35 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, கேவில்பகுதியில் யானைகள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டு விடப்பட்டதாக அப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கவலை தெரிவித்துள்ளார். உரிய முறையில் அறிவித்தும் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை அதிகாரிகள் இன்னும் பார்வையிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், ஒரு சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு - கேவில் கடற்கரைக்கு வருகை தந்த ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் அங்கு காணப்பட்ட 36 இற்கும் அதிகமான தென்னைகளை நாசம் செய்தன. சம்பவம் தொடர்பாக உரியவர்களுக்கு தெரிவித்தோம். இதுவரை உரியவர்கள் வந்து பார்வையிடவோ, நஷ்ட ஈடு வழங்கவோ இல்லை.. யானைகள் சேதம் ஏற்படுத்திய இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இராணுவ முகாம் இருக்கிறது. அவர்களுக்கு யானைகள் வந்தது தெரியவில்லை என்றும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கின் பெரும் பகுதி அதாவது கட்டைக்காட்டில் இருந்து சுண்டிக்குளம் வரையான பெரும் நிலப்பரப்பு தேசிய பூங்கா என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக வனஜீவராசிகள் திணைக்களகத்தினர் வேண்டுமென்றே இந்த யானைகளை வடமராட்சி கிழக்கு காட்டு பகுதிக்கு கொண்டு வந்து விட்டதாக சந்தேகமாக உள்ளது. யானைகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு முன்னாயத்தம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட குடும்பஸ்தர் யானைகளால் அழிக்கப்பட்ட 36 தென்னைகளுக்கும் இழப்பீடு கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/241887