Everything posted by கிருபன்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது - டிரம்ப் 24 JUN, 2025 | 11:01 AM இஸ்ரேல் ஈரான் இடையில் யுத்தநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். தயவுசெய்து அதனை மீறாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலுடனான யுத்தநிறுத்தம் தற்போது ஆரம்பமாகியுள்ளது என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/218296
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ceasefirepublished at 23:13 23:13BREAKING US President Donald Trump has announced a "complete and total" ceasefire between Israel and Iran on social media. Trump says the ceasefire will begin "in approximately six hours from now" after each country has "wound down" their military operations. Trump's announcement contains a periodic unravelling of hostilities but says that "upon the 24th hour" the war will officially end. Israel and Iran are yet to confirm a ceasefire has been reached. BBC
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேலில் இரண்டு மில்லியன் ரஷ்யமொழி பேசும் யூதர்கள் இருப்பதால் ஈரானுக்கான உதவிகள் வெறும் வாய்வார்த்தைகளாகத்தான் புட்டினிடம் இருந்து வரும்.! ஈரானின் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுவது காஸாவில் உள்ள பலஸ்தீனியர்களும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனியர்களும்தான்.. பையன் ஹமாஸுக்கு இஸ்ரேல் செப்பல் அடி கொடுப்பதை வரவேற்றமாதிரி நினைவு😃
-
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!
அணையா விளக்கு போராட்டம்- அணிதிரளுமாறு எஸ் ஸ்ரீதரன் அழைப்பு! செம்மணி பகுதியில் (23) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் அணிதிரளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில் முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும்,செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும் நாடக அளிக்கையும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் போராட்டத்தின் இறுதி நாளன்று ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர்டர்க் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. https://akkinikkunchu.com/?p=329904
-
வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவனப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும்
வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவனப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும் Published By: VISHNU 23 JUN, 2025 | 02:37 AM வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவனப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும் ஞாயிற்றுக்கிழமை (22) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் அமெரிக்கமிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது வடகிழக்கில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலைந்து உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூரும் வகையில் ஈகச்சுடர் ஏற்றப்பட்ட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது காணாமல்ஆக்கப்பட்டவர்களின் கண்ணீர்கதைகளை சுமந்துவந்த எழுநா அமைப்பினால் தயாரிக்கப்பட்ட நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவனப்படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் மு.முரளிதரன்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான எஸ்.நிலாந்தன்,பிரதேசசபை உறுப்பினர்களான வசந்தன்,சுவேந்திரன்,சமூக செயற்பாட்டாளர்கள்,வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இதன்போது ஆவன திரைப்படத்தினை பார்வையிட்டதன் பின்னர் கருத்துப்பகிர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/218173
-
இலங்கையில் இதுவரை 20 மனித புதைகுழிகள் : செம்மணி புதைகுழியின் மர்மம் துலங்குமா?
செம்மணி – மயூரப்பிரியன்! adminJune 22, 2025 செம்மணி என்றால் , கூடவே புதைகுழி என்பதும் நிச்சயமாக ஞாபகம் வரும். அந்தளவுக்கு செம்மணி புதைகுழி இலங்கையை 90களின் பிற்பகுதியில் உலுக்கி இருந்தது. மீண்டும் சுமார் 27 வருடங்களின் பின்னர் செம்மணி பகுதியில் உள்ள சிந்துபாத்தி மயானமும் அதனை சூழவுள்ள பிரதேசமும் மனித புதைகுழியாக யாழ் . நீதவான் நீதிமன்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. செம்மணி. யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் உள்நுழையும் போது, நாவற்குழி பாலத்தை தாண்டியதும் யாழ்ப்பாணத்திற்கு வருவோரை வரவேற்கும் முகமாக யாழ் வளைவு என அழைக்கப்படும் பெரும் வளைவு அமைந்துள்ள பிரதேசமே செம்மணி பிரதேசமாகும். பரந்த வெளி. நீரேந்து பிரதேசமாகவும் , உப்பளமும் , வயல் வெளியையும் தன்னகத்தே கொண்ட மிக அழகிய இயற்கை வனப்பு கொண்ட பிரதேசம். அது 1990களின் பிற்பகுதியில் கொடிய சூனிய பிரதேசமாக மாற்றம் கண்டது. 1995ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்னர் யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பட்டுக்குள் முற்றாக வந்தது. அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாரிய இராணுவ முகாம்கள் தோற்றம் பெற்றன. அவ்வாறு தோற்றம் பெற்ற இராணுவ முகாம்களில் செம்மணி இராணுவ முகாமும் ஒன்று, ஆள் ஆரவற்றமற்ற வெளி, வயல் வெளிகளும் , செம்மணி உப்பள வெளிகளும் , நீரேந்து பிரதேசத்திற்கு மத்தியிலையே அந்த முகாம் அமைந்திருந்தது. தென்மராட்சி பகுதிகளில் இருந்து , யாழ்ப்பாண நகர் பகுதிக்கு வருவோரும் , யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து தென்மராட்சி பகுதிகளுக்கு செல்வோரும் இந்த முகாமை தாண்டியே பயணிக்க வேண்டிய கட்டாயம். அந்த முகாமில் சோதனைகள் மிக மோசமாக இருக்கும். உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணித்தல் என்றால் என்ன என்பதனை அக்காலத்தில் அந்த முகாமை தினமும் கடந்து சென்று வந்தவர்களை கேட்டால் சொல்வார்கள். அவ்வாறு அந்த முகாமை கடந்து யாழ் . நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள சுண்டுக்குழி மகளிர் கல்லூரிக்கு சென்று வந்த மாணவி கிருசாந்தி குமாரசாமி 1996.09.07 அன்று அந்த இராணுவ முகாமில் இருந்த இராணுவத்தினரால் மறித்து , இராணுவ முகாமுக்குள் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். கிருஷாந்தி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தை நேரடியாக கண்ணுற்ற சிலர் தாயாரிடம் தெரிவித்துள்ளனர். உடனே தாயார் இராசம்மா பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிதம்பரம் கிருபாமூர்த்தியையும் தனியார் வகுப்பு போய் வந்த 16வயதான மகன் பிரணவனையும் அழைத்துக்கொண்டு செம்மணி இராணுவ முகாமிற்க்கு சென்று கிருசாந்தியை விசாரித்தார் அவர்கள் மூவரையும் இராணுவ முகாமிற்குள் அழைத்து சென்ற இராணுவத்தினர் , கிருஷாந்தியுடன் தடுத்து வைத்தனர், பின்னர் அன்றைய தினம் இரவு கிருசாந்தியை பொலிசாரும் இராணுவத்தினருமாக வன்புணர்வு செய்தனர். நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் கிருசாந்தியை வன்புணர்ந்து கொலை செய்தனர். அதன் பின்னர் மூன்று புதைகுழிகளில் நான்கு பேரையும் புதைத்தனர். மாணவி கிருஷாந்தியும் அவரது தாய் , தம்பி மற்றும் அயலவர் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன. இதனால் பாராளுமன்றத்தில் பெரும் வாதங்கள் எழுந்தன. சர்வதேச ரீதியிலும் குரல் எழுப்பப்பட்டன. அதனால் அன்றைய சந்திரிக்க அரசாங்கம் மாணவி காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்தது. விசாரணைகளின் அடிப்படையில் இராணுவ முகாமில் கடமையில் இருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் என கைது செய்யப்பட்டு நீதிமன்றில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, அரசாங்கம் எதிர்பாராத விதமாய் கிருசாந்தி கொலை வழக்கு செம்மணிப் புதைகுழி வழக்காக மாறியது. கிருஷாந்தி கொலை வழக்கில் 1998ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தை சேர்ந்த சோமரத்தின ராஜபக்ச என்பவர் கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலம் பெரும் கவனத்தை ஈர்த்தது. ‘”செம்மணியில் கிருசாந்தி, அவரது தம்பி , தாயார், அயலவர் மட்டுமல்ல இன்னும் 300 தொடக்கம் 400 பேர் வரையில் புதைக்கப்பட்டுள்ளார்கள். நான் கிருசாந்தியையோ மற்றவர்களையோ கொலை செய்யவில்லை. எனது மேலதிகாரிகள் கொன்றுவிட்டு கொண்டு வந்த சடலங்களை அவர்களின் கட்டளையின் பேரில் புதைப்பதுதான் எனது வேலை. என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்.” என வாக்கு மூலம் அளித்தார். அத்துடன் படுகொலைகளுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் பட்டியலையும் தரமுடியும் என்றும் கூறினார். அவரது வாக்குமூலம் ஒட்டு மொத்த இலங்கையை உலுக்கியத்துடன் , சர்வதேச நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் இலங்கை மீது திரும்பியது. அதனால் , சந்திரிக்க அரசாங்கம் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து புதைகுழியை அகலும் நடவடிக்கையையும் மேற்கொண்டது. அகழ்வின் போது 13 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டன. அதனை தொடர்ந்து வந்த கால பகுதியில் ஆட்சி மாற்றம் , யுத்தம் என காலங்கள் மாறியதால் , கால ஓட்டத்தில் அதனை மறக்கடிக்கும் விதமான காரியங்கள் நிகழ்ந்தன. இந்த நிலையில் தான் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக கிடங்குள் வெட்டப்பட்ட வேளை எலும்பு எச்சங்கள் தென்பட்டுள்ளன. மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவருடையதாக இருக்கலாம் எனும் எண்ணத்தில் ஆரம்பத்தில் அதனை எவரும் பொருட்படுத்தாத நிலையில் , மீண்டும் ஒரு கிடங்கில் மேல் பகுதியில் இருந்து எலும்புகள் மீட்கப்பட்டமையால் , ஏற்கனவே செம்மணி புதைகுழிகள் இந்து மயானத்திற்கு அருகிலையே ஏற்கனவே கண்டறியப்பட்டு இருந்தமையால் , இவையும் மனித புதைகுழியாக இருக்கலாம் எனும் சந்தேகத்தில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகராம் பொலிஸார் நீதிமன்றின் கவனத்திற்கு விடயத்தினை கொண்டு சென்றதை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணி முறைப்பாட்டின் பிரகராம் பொலிஸார் நீதிமன்றின் கவனத்திற்கு விடயத்தினை கொண்டு சென்றதை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது. 15ஆம் திகதி ஆரம்பமான அகழ்வு பணிகள் இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில் , யாழ்ப்பாணத்தில் மழை பெய்தமையால் , சில நாட்கள் தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , மீண்டும் கடந்த 02ஆம் திகதி ஆரம்பமாகி 07ஆம் திகதி வரையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றன. அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 07ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 19 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சிசு மற்றும் சிறார்களுடையது என சந்தேகிக்கப்படும் மூன்று எலும்பு கூட்டு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இணைந்த நிலையில் கூட எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டமையால் , குறித்த பகுதி பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்பட்டது. மூன்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் ஒரு பகுதியில் இருந்து மீட்கப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய , யாழ் . நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் , குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என விண்ணப்பம் செய்தனர். அதன் வழக்கு விசாரணைகளின் போது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பேராசிரியர் ஆகியோரின் நிபுணத்துவ அறிக்கை மற்றும் அபிப்பிராய அறிக்கை ஆகியவை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 அடி ஆழத்தில் மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒழுங்கு முறையின்றி குழப்பமான சூழலில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது. ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை போன்ற விடயங்கள் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை அடுத்து அப்பகுதி மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் , மேலும் 45 நாட்களுக்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க நீதிமன்று அனுமதித்துள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் 45 நாட்களுக்கு தொடர் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதியளவில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த அகழ்வு பணிகள் சர்வதேச கண்காணிப்புடன் நடைபெற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கையை முன் வைத்து போராட்டம் ஒன்றினையும் நடத்தியுள்ளனர். செம்மணிப் புதைகுழி விவகாரமும் இப்போது அவ்வாறு வெளிக்கிளம்பி நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உரிய வகையில் முன்கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலை வலுவாக்கப்பட வேண்டும் என்பதுடன் புதைகுழிகளின் நீட்சி அறியப்படவும் வேண்டும் என்பதும் மிகவும் அவசியமானது. எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக்கூடாது என பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர். அத்துடன் , அவலமாக மரித்த உயிர்களின் ஆத்மாக்கள் அமைதிகொள்ளும் போது தான் நாடுமுன்னோக்கிச் செல்ல முடியும். மாறாக அந்த ஆத்மாக்களின் அவலக்கதைகள் தொடர்ந்தும் மூடிமறைக்கப்பட்டால் அவற்றினால் விளையும் பாதிப்புக்கள் நாட்டை மேலும் மோசமானநிலைக்கு இட்டுச் செல்லும். இதனையுணர்ந்து செம்மணிப் புதைகுழி விவகாரம் கைவிடப்படும் விடயமாகவன்றி உண்மையையும் நீதியையும் நிலைநாட்டக்கூடிய வகையில் முன்கொண்டு செல்லப்படும் விடயமாக மாறவேண்டும் என்பதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த கால அரசாங்கங்கள் போல் புதைகுழி மூடி மறைக்கப்படுமா ? அல்லது புதைகுழிகளின் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டக்கூடிய வகையில் முன்கொண்டு செல்ல தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒத்துழைக்குமா ? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நன்றி மயூரப்பிரியன் https://globaltamilnews.net/2025/217136/
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு – எரிபொஷரட்களின் விலை உயர வாய்ப்பு! adminJune 22, 2025 ஈரான் – இஸ்ரேல் நாடுகள் ஒரு வாரத்திற்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க இராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெற்றோல், டீசல், விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி ஹார்முஸ் ஜலசந்தி என்பது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய கடல்வழிப் பாதையாகும். இது உலக எரிசக்தி வர்த்தகத்தில் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தக் குறுகிய நீர்வழிப்பாதை சுமார் 21 மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இரண்டு 2 மைல் அகல கப்பல் வழித்தடங்களை கொண்டுள்ளது. உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26 சதவீத போக்குவரத்திற்கு இந்த வழித்தடத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இது உலகளவில் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாக அமைகிறது. இந்த பாதையில் நடைபெறும் எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் சர்வதேச எரிசக்தி சந்தையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச எரிசக்தி அமைப்பு கூறியிருக்கிறது. https://globaltamilnews.net/2025/217159/
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
- எரிபொருள் வரிசையில் நின்ற மக்களும் தொங்கு சபைகளும் - நிலாந்தன்
எரிபொருள் வரிசையில் நின்ற மக்களும் தொங்கு சபைகளும் - நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தையில்,இஞ்சி வாங்கினேன். ஒரு கிலோ 3000 ரூபாய். ஏன் அவ்வளவு விலை என்று கேட்டேன். “இஸ்ரேலும் ஈரானும் மோதத் தொடங்கி விட்டன. அதனால் விலையை ஏற்றி விட்டார்கள்” என்று வியாபாரி சொன்னார். “மேற்காசியாவில் இருந்தா எங்களுக்கு இஞ்சி வருகிறது?” என்று கேட்டேன். ”எங்கிருந்து வருகிறதோ தெரியாது. ஆனால் சண்டை தொடங்கியதால் விலை கூடிவிட்டது என்று மொத்த வியாபாரிகள் கூறுகிறார்கள்” என்று அவர் சொன்னார். அதே நாளில் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நின்றார்கள். மேற்காசியாவில் போர் தொடங்கியதால் எரிபொருள் தட்டுப்பாடு வரலாம் என்ற ஊகம்;பயம்; தற்காப்பு உணர்வு போன்றவைகள் காரணமாக எரிபொருளை நிரப்புவதற்குச் சனங்கள் முண்டியடித்தார்கள். கடந்த திங்கட்கிழமை மட்டுமல்ல இதற்கு முன்னரும் மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றம் ஏற்படும் போது யாழ்ப்பாணத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக இவ்வாறு நீண்ட வரிசைகளைக் காண முடிந்தது. யாழ்ப்பாணத்தவரின் முன்னெச்சரிக்கை உணர்வும் ரத்தத்தில் ஊறிய சேமிப்புக் கலாச்சாரமும்தான் அதற்குக் காரணமா? முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு சமூகம் அவ்வாறு முன்னெச்சரிக்கையோடு சில விடயங்களை ஊகித்து-அந்த ஊகங்கள் பிழையாக இருந்தாலும் பரவாயில்லை- தற்காப்பு உணர்வோடு சிந்திப்பது நல்லது. யாழ்ப்பாணத்தின் சேமிப்புக் கலாச்சாரம் என்பது தற்காப்பு உணர்வின் அடிப்படையானது. அரசற்ற ஒரு மக்கள் கூட்டம் தற்காப்பு உணர்வின் அடிப்படையில் சிந்திப்பது நல்லது. ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால், இவ்வளவு முன்னெச்சரிக்கை உணர்வுடைய;தற்காப்பு உணர்வுடைய ஒரு மக்கள்கூட்டம் தமது பிரதிநிதிகளைத் தெரியும் பொழுது எந்த அடிப்படையில் முடிவெடுக்கின்றது? படித்த பெரும்பாலான யாழ்ப்பாணத்தவர்களைக் கேட்டால், கணிதம் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைத்தான் உயர்வான பாடங்கள் என்று கூறுவார்கள். ஆனால் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொழுது தமிழ் மக்கள் கணிதமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் சிந்தித்து முடிவெடுக்கின்றார்களா? லண்டனைச் சேர்ந்த ஒரு மருத்துவர் சில நாட்களுக்கு முன் முகநூலில் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். மேற்காசியாவில் நிகழும் போர் தொடர்பான காணொளிகளைப் பற்றிய குறிப்பு அது. “படிச்ச பெரிய மனிதர்கள் என்கிறார்கள். டொக்டர், எஞ்சினியர்கள் என்கிறார்கள். அதுகூடப் பரவாயில்லை ,சொப்ட்வெயார் எஞ்சினியர் என்று புரொபைலில் போட்டு வச்சிருக்கானுகள். ஆனால் இப்படியான AIபடங்கள் (செயற்கை நுண்ணறிவின் மூலம் தயாரிக்கப்பட்ட படங்கள்) அதுவும் AI படங்கள் என்று இலகுவாக கண்டு பிடிக்கக்கூடிய படங்களையும், வீடியோக்களையும் பகிர்கிறார்கள்….என்னதான் படித்தாலும் பொதுப்புத்தி இல்லை. அடுத்தது தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்துகொள்ளும் ஆர்வமில்லை.” அவர் கூறுவதுபோல தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொழுது தமிழ் மக்களில் எத்தனை பேர் பொதுப் புத்தியைப் பயன்படுத்துகின்றார்கள்? ஒரு பக்கம் கணித,விஞ்ஞான ஒழுக்கங்களைப் போற்றும் ஒரு சமூகம், பூகோள அரசியலில் நிகழும் மாற்றங்களை வைத்து தற்காப்பு உணர்வுடன் சிந்திக்கும் ஒரு சமூகம்,ஆனால் உள்நாட்டில் தனது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொழுது அவ்வாறு அறிவுபூர்வமாக,தீர்க்கதரிசனமாகச் சிந்தித்து முடிவெடுக்கின்றதா? கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை எந்த அடிப்படையில் தெரிவு செய்தார்கள்? கடந்த மாதம் நடுப்பகுதியளவில் மானிப்பாய் அந்தோணியார் கோவிலில் நடந்த ஒரு மக்கள் சந்திப்பில் இந்த கேள்வியை வளவாளர் அங்கு வந்திருந்தவர்களிடம் கேட்டார். பெரும்பாலானவர்கள் சொன்னார்கள்,உள்ளூர் உணர்வுகளை மதித்து வாக்களித்ததாக.”எமது ஊரவர்; எமக்கு வேண்டியவர்; எமது இனசனம்;எமதுசமயம்;எமது சாதி; எமக்கு உதவுபவர்”…போன்ற உள்ளூர் உணர்வுகளின் அடிப்படையில்தான் தமிழ்மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதேசமயம் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது எந்த அடிப்படையில் அதைச் செய்தன? முக்கியமாக மூன்று அளவுகோல்கள் அங்கே இருந்தன. முதலாவது அளவுகோல், அவர் உள்ளூரில் வெல்லக்கூடியவராக இருக்க வேண்டும். இரண்டாவது அளவுகோல், அவர் கட்சித் தலைமைக்கு விசுவாசமானவராக இருக்க வேண்டும். கட்சித் தலைமையின் சொல் கேட்டு நடப்பவராக இருக்க வேண்டும். மூன்றாவது அளவுகோல்-இது ஒரு விதத்தில் ஒரு சட்ட ஏற்பாடும் கூட-ஒரு தொகுதி வேட்பாளர்கள் பெண்களாக இருக்க வேண்டும். இந்த மூன்று அளவுகோள்களிலும் எனது கட்டுரைகளில் நான் திரும்ப திரும்ப கூறுவதுபோல,கீழிருந்து மேல் நோக்கிய தேசியப் பண்புமிக்க உள்ளூர்த் தலைமைகளை வார்த்தெடுக்க வேண்டும் என்ற கட்சிகடந்த தமிழ்த் தேசியத் தரிசனம் எத்தனை கட்சிகளிடம் இருந்தது? வாக்களித்த மக்களும் தேசியப் பண்புமிக்க உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று கருதி வாக்களிக்கவில்லை. வேட்பாளர்களைத் தெரிவு செய்த கட்சிகளும் கீழிருந்து மேல் நோக்கிய உள்ளூர் தலைமைகளைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற தரிசனத்தோடு அதைச் செய்யவில்லை. மிகச் குறைந்தளவு விதிவிலக்குகளைத்தவிர இப்போதுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் எத்தனை பேர் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல தமிழ் மக்களின் புத்திக் கூர்மையை; தற்காப்பு உணர்வை; எதிர்காலத்தை நோக்கிய முன்னெச்சரிக்கை உணர்வைப் பிரதிபலிக்கிறார்கள்? அண்மை நாட்களாக புதிய சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையே நடக்கும் மோதல்களும் ரகசியப் பேரங்களும் ரகசிய வாக்கெடுப்புகளும் எதைக் காட்டுகின்றன ?அது தேசத்தைத் திரட்டும் அரசியலா?அல்லது கட்சி அரசியல் போட்டியா? மிகக்குறிப்பாக அவை தமிழரசுக் கட்சிக்குள் உள்ள முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன. கட்சியின் மத்திய குழுவுக்கு விசுவாசமாக இருப்பதா? அல்லது தேசத் திரட்சிக்கு விசுவாசமாக இருப்பதா ? என்ற கேள்வி எழும் பொழுது உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் சிறு தொகையினர் தமது கட்சித் தலைமைக்கு விசுவாசமாக முடிவெடுக்கவில்லை. இந்த விடயத்தில் தமிழ்த் தேசியப் பேரவை தந்திரமாகக் காய்களை நகர்த்தி சில சபைகளைக் கைப்பற்றியிருக்கிறது. அதேசமயம் இந்த நகர்வுகள் தமிழ்த் தேசிய பேரவைக்கும் சுமந்திரன் அணிக்கும் இடையிலான முரண்பாடுகளை மேலும் ஆழமாக்கக் கூடியவை. சுமந்திரன் அணி எதிர் காலத்தில் பழிவாங்கும் உணர்வோடு சபைகளைக் கையாளும். அது பிரதேச சபைகளை நிர்வகிப்பதில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும். பிரதேச சபைகளை ஸ்திரமாக நிர்வகிப்பது சவால்களுக்கு உள்ளாகலாம். வென்ற கட்சிகளும் வெல்லாத கட்சிகளும் முகநூலில் மோதிக் கொள்ளும் காட்சிகளைப் பார்த்தல் அப்படித்தான் சிந்திக்க வேண்டியுள்ளது. நாடு பிடிக்கப் புறப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் பிரதேச சபைகளைப் பிடிப்பதற்கு அடிபடும் காட்சி ரசிக்கத்தக்கதாக இல்லை. தமிழ் கட்சிகளுக்கு இடையிலான பிடுங்குப்பாடு தனக்குச் சாதகமானது என்று தேசிய மக்கள் சக்தி நம்புகின்றது. தேசிய மக்கள் சக்தி தமிழ்ப் பகுதிகளில் இறுதி வாக்கெடுப்பின்போது நடுநிலை வகித்ததாகக் கூறுகிறது. ஆனால் அவர்கள் வாக்கெடுப்பில் நடுநிலைமை வகித்தமை என்பது தந்திரமானது. தனக்குத் தேவை என்று கருதிய சபையில், குறிப்பாக தையிட்டி விகாரை அமைந்திருக்கும் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ரகசிய வாக்கெடுப்பைக் கேட்டது. மேலும், ஏனைய சபைகளில் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதில் குழப்பம் ஏற்பட்டால் தமிழ்க் கட்சிகள் அதை இனமுரண்பாட்டுக்கூடாக வியாக்கியானப்படுத்தும். மாறாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டால் தமிழ்க் கட்சிகள் தாங்களே தங்களுக்குள் மோதி சபைகளைக் கொட்டிக் குலைக்கும். அதைவிட முக்கியமாக இதுவரை காலமும் யாரோடு கூட்டுச்சேர மாட்டோம் என்று கூறி வந்தார்களோ அவர்களோடு கூட்டுச்சேர அல்லது அவர்களுடைய ஆதரவை மறைமுகமாகப் பெறவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அவ்வாறு இதுவரை காலமும் தாங்கள் துரோகிகள் என்று பழித்தவர்களின் ஆதரவைக் கேட்கும் கட்சிகளை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் விதத்தில் அமைச்சர் சந்திரசேகரன் கருத்துத் தெரிவித்து வருகிறார். ஒருபுறம் அரசாங்கம் தமிழ்க் கட்சிகளை குறிப்பாக தமிழரசுக் கட்சியை வாக்காளர்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இன்னொருபுறம் தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு இடையே மோதி உள்ளூராட்சி சபைகளை போட்டுடைக்கும்போது தமிழ்மக்கள் அக்கட்சிகளின் மீது வெறுப்படைந்து, சலிப்படைந்து தேசிய மக்கள் சக்தியை நோக்கித் திரும்புவார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடந்ததுபோல்.ஏன், உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திதானே இரண்டாம் இடத்தில் நிற்கின்றது? தேசிய மக்கள் சக்தி அப்படியொரு எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஒரு பின்னணிக்குள் தமிழ்க் கட்சிகள் எல்லா விதமான முரண்பாடுகளுக்கும் அப்பால் உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசிய நிர்வாகத்தை பலப்படுத்துவது என்ற அடிப்படையில் முடிவெடுத்தால் மட்டும்தான் உள்ளூர்ப் பொருளாதாரத்தை தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகக் கட்டி எழுப்பலாம்; உள்ளூர்த் தலைமைகளை தேசியப் பண்புமிக்கவர்களாக வார்த்து எடுக்கலாம். இல்லையென்றால் முன்னாள் மாகாண சபை உறுப்பினரான, மறைந்த பசுபதிப்பிள்ளை ஒருமுறை மாகாண சபையில் கூறியதுபோல “நந்தவனத்து ஆண்டிகள் போட்டுடைத்த தோண்டிகளாக”உள்ளூராட்சி சபைகள் மாறக்கூடுமா? https://www.nillanthan.com/7466/- ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
பெத்தப்பா என்னும் தெய்வம் தி. செல்வமனோகரன் December 13, 2024 | Ezhuna அறிமுகம் மனிதர் பேரியற்கை மீது கொண்டிருந்த வியப்பு, அச்சம் மற்றும் மரணம், பிறப்புப் பற்றிய சூக்குமமறியா மனோநிலைகள், துயரம் தந்த வாழ்வு போன்றன இயற்கைக்கதீதமான ஒன்றைப் பற்றிச் சிந்திக்கவும், அதை நம்பவும் வழிபடவும் செய்தது. அச்சந்தர்ப்பத்தில் குறித்த துயரத்தில் இருந்து விடுபடல் நிகழும் போது அதனை மேலும் மேலும் வழிபடச் செய்தது. அரூப இயற்கையை – வெறுவெளியை அல்லது நிலம், நீர், காற்று, தீ என்பவற்றை வழிபடுதல் பூரண பிடிப்பைத் தராத சூழலில் கல், மரம் முதலான இயற்கைப் பொருட்களைக் குறியீடாகப் பயன்படுத்தி தெய்வத்தை உருநிலைப்படுத்தி வழிபடத் தொடங்கினர். அது ஆவி, முன்னோர், உயிரியம், மனா எனப் பன்முகத்தளத்தில் அமைந்திருந்ததை மானிடவியலாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர். பிற்காலத்தில் ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி பல்வேறு படித்தரங்களை மானுட வாழ்விலும் சமய வாழ்விலும் ஏற்படுத்திற்று. பல்வேறு பெருந்தெய்வங்களும் அரச, அதிகார ஆதரவுடனுமான சமயங்கள், தத்துவங்களும் உருவாக்கம் பெற்றன. ஒன்றுடன் ஒன்று மோதித் தம்மையே மெய்மை என நிரூபணம் செய்ய அரும்பாடுபட்டன. வலியது வாழ மீதி மறைந்தன. மறைந்தவற்றுள் சில மீள வலிமை பெற்று எழுந்து நின்று நிலைத்தன. பெருங்கோயில்கள், கலையடையாளங்கள் என மனித குல வரலாற்றில் அவை தனித்துவமான சமூகப் பெறுமானத்தைப் பெற்றன. ஆனால் சாதாரண சனங்களின் வாழ்வில் இயற்கையோடு இயைந்த தெய்வ வழிபாடுகளே இன்றும் நின்று நிலவுகின்றன. தங்கள் வாழ்வில் ஏற்பட்ட நல்லவைகளுக்குத் துணை நின்ற தெய்வங்களைத் தாம் கவனியாது – ஆதரியாது விடும் போது தமது வாழ்வில் பல்வேறு துன்பங்கள் ஏற்படுவதாக அவர்கள் நம்புகின்றனர். தமது குறைகளை நீக்கவும், நன்மை நடக்கவும் இத்தெய்வங்களை வழிபடுகின்றனர். இவை நிலம், தொழில், சாதி என்ற பல்வேறு அடித்தளங்களில் இருந்து உருவான தெய்வங்களாகக் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் ஈழத்துப் புலத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இன்றும் நின்று நிலவும் கிராமியத் தெய்வங்களுள் ஒன்றாக ‘பெத்தப்பா’ காணப்படுகின்றது. “சேர் உங்களுக்குப் பெத்தப்பா வழிபாடு பற்றி ஏதும் தெரியுமா?” என்ற வினாவோடு தனது ஆய்வேடு தொடர்பாக என்னுடன் 2019 இல் உரையாட வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறையைச் சேர்ந்த செல்வி ப. கீதாஞ்சலிக்கு, “ஓம், தென்மராட்சியில் இருக்க வேண்டும்” என்று பதில் கூறினேன். “நான் கிட்டத்தான் இருக்கிறன். ஒரு கோயிலை வச்சுக் கொண்டு என்ன செய்கிறது?” என்று அவர் மீண்டும் வினாவினர். கச்சாயைப் பூர்வீகமாகக் கொண்ட, தற்பொழுது திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ் பிராந்தியத்திற்குப் பொறுப்பாக இருக்கும் திரு க. கந்தவேளுடன் அவரைத் தொடர்புபடுத்திவிட்டேன். நண்பரும் புவியியல் ஆசிரியருமான திரு மா. மோகனகிருஷ்ணன், புங்குடுதீவில் இவ்வழிபாடு இருப்பதை அறியத் தந்தார். இந்த முன்னறிவுடன் களஆய்வில் ஈடுபட்ட பின்னர் இக்கட்டுரை எழுதப்படுகிறது. பெத்தப்பா ஈழத்தின் கடலோடு ஒட்டிய வாழ்வியல் புலம் பல்வேறு வழிபாட்டு முறைகளை எமக்குத் தந்தது. பெத்தப்பா கடலை அண்மித்த யாழ்ப்பாணம், புங்குடுதீவு மற்றும் சாவகச்சேரி, கச்சாய் கடல்நீரேரியை அண்மித்த ஊர்களான பாலாவி, கெற்பேலி போன்ற இடங்களில் நின்று நிலவும் தெய்வமாகக் காணப்படுகின்றார். ‘பெத்தப்பா’ எனும் சொல் அகராதிகளில் இடம்பெறவில்லை. அது பேச்சு வழக்குச் சொல்லாகவே காணப்படுகின்றது. பெத்தப்பா என்பதை பெற்ற அப்பா என்று பொருள் கொள்ளலாம். சங்க இலக்கியத்தில் பெற்றதாய், வளர்ப்புத்தாய் என்போர் நற்றாய், செவிலித்தாய் என அழைக்கப்பட்டமை போல இது அமைகின்றதெனலாம். பெரியப்பா, சித்தப்பா – குஞ்சியப்பா எனும் வழக்காறுகள் தோன்றிய காலத்தில் பெத்தப்பா என்ற சொல் தோன்றி நிலைத்திருக்கலாம். புங்குடுதீவில், பெத்தப்பா தெய்வம் பெத்தப்பு, பெத்தப்பர் எனக்கூறி வழிபடப்படுகின்றார். தமிழில் “தாயை நல்லம்மா என்றும் பேயைப் பெத்தப்பா என்றும் பேச வேண்டிய காலம்” எனும் பழமொழி ஒன்றுண்டு. இது, பேய் – முன்னோர் வழிபாடாக பெத்தப்பா வழிபாடு உருவாகி இருக்கலாம் எனும் ஊகத்துக்கு இடமளிக்கின்றது. அதேவேளை பெத்தப்பா, பெத்தாச்சி என்பவைகளை தாத்தா, அப்பம்மாவை அல்லது பெரியப்பா, பெரியம்மாவைக் குறிப்பதாகப் பொருள் கொள்வோரும் உளர். ‘இச்சா’ நாவலில் க்ஷோபசக்தி எழுதிய “அம்பாலை மரக்காலைக்காரர் செய்த ஊழைச் சூனியம், அப்பாவை முடக்கி விசர்க் கோலமாக்கியது. பெத்தப்பா மீது யாரோ மூதேவி அழைப்பை ஏவி விட்டிருந்தனர். பெத்தப்பாவுடன் வீட்டுக்கு வந்த புலுடு என்ற பேய் பெத்தாச்சியின் தூசணத்துக்கு நாணி அகன்றது” எனும் வரிகள் இதனைச் சான்றுபடுத்துகின்றன. ‘மூனா கானா’ தினகரனில் (2013.2.10) எழுதிய ‘குஞ்சார் பெத்தப்பா கதையும் வேறு சில கதைகளும்’ இஸ்லாமிய தமிழ்ச் சமூகத்திடம் இச்சொல் இன்றுவரை பெருவழக்கில் இருப்பதை உறுதி செய்கின்றன. ஸ்ரீ பெத்தம்மா தாய் கோயில் (Sri Peddamma Thalli Temple) அல்லது பெத்தம்மா தல்லி குடி என்பது தெலுங்கானாவின் ஐதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். பெத்தா மற்றும் அம்மா என்ற இரண்டு தனித்தனி சொற்களைக் கொண்ட ‘பெத்தம்மா’ என்ற வார்த்தையின் அர்த்தம் ‘பெரிய தாய்’ என்பதாகும். ‘பெத்தம்மா’ என்பதை ‘பெரிய அம்மன்’ என்றும் பொருள் கொள்ளலாம். கிராமியத் தெய்வங்களின் 11 வடிவங்களில் ஒன்றான இது, மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. தெலுங்கானா மக்களின் காவல் தெய்வம் என்ற சிறப்பைக் கொண்டதாகத் திகழ்கிறார். 200 ஆண்டுகளுக்கு முன்பு, மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக, இந்தத் துர்க்கை அம்மன் ஆலயம் கருதப்படுகிறது. இந்தக் கோவில் தோன்றியதற்கு பல்வேறு விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் துன்பத்தை விளைவித்து வந்த ஒரு அசுரனுடன் துர்க்கா தேவி போரிட்டாள். அந்த அசுரனை வதம் செய்தபிறகு, அந்தக் களைப்பு நீங்க ஒரு கிணற்றின் நீரை அருந்தி துர்க்கை அம்மன் தாகம் தணித்துக் கொண்டாள். அப்போது அந்த வழியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் துர்க்கை அம்மனைக் கண்டார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அன்னையின் திருவுருவம் மறைந்தது. தனக்கு தெய்வத்தின் அருட்காட்சி கிடைத்ததை நினைத்து அவர் மனம் மகிழ்ந்தார். அன்னை காட்சி தந்த அந்த இடத்திலே ஒரு சிலை இருப்பதையும் கண்டு அவ்விடத்தில் இந்த பெத்தம்மா ஆலயத்தைக் கட்டினார் என்று இதன் தல வரலாறு கூறப்படுகின்றது. இவ்வாறான தல வரலாறுகளோ கதையாடல்களோ பெத்தப்பா ஆலயங்களுக்கு இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் பெத்தப்பா வழிபாடு இல்லை. ஈழத்தில் பெத்தம்மா வழிபாடு இருப்பதாக அறியமுடியவில்லை. ஆயினும் தெலுங்கு தேசத்துடன் மற்றும் தமிழகத்துடனான உறவு வழியே ஆண் தெய்வ வழிபாடாக பெத்தப்பா உருவாகி இருக்க வேண்டும். ஈழத்தில் பெத்தப்பா வழிபாடு ஈழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாலாவி, கெற்பேலி முதலான ஊர்களில் பெத்தப்பா வழிபாடு காணப்படுகின்றது. பாலாவி தெற்கில் ஏழு கோயில்களையும்; பாலாவி வடக்கில் ஒரு கோயிலையும்; கெற்பேலி மேற்கில் நான்கு கோயில்களையும் எம்மால் அடையாளப்படுத்த முடிகின்றது. ஆக தென்மராட்சியில் பன்னிரண்டு கோயில்களையும் அதே போல யாழ்ப்பாணத்துத் தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் மூன்று கோயில்களையும் அறிய முடிந்தது. ஈழத்தின் வேறு பிரதேசங்களிலோ தமிழகத்திலோ இவ்வழிபாடு இருப்பதாக அறிய முடியவில்லை. புங்குடுதீவு பிரதேசத்தில் உள்ள பெத்தப்பா ஆலயங்கள் சிவாலயங்களாகவே இன்று கருதப்பட்டு வருகின்றன. ஆனால் தென்மராட்சிப் பிரதேச ஆலயங்களில் பெத்தப்பா தனித் தெய்வமாக வழிபடப்பட்டு வருகின்றார். தென்மராட்சிப் பிரதேசத்தில் இத்தெய்வத்தை வழிபடுபவர்கள் சாண்டார் இன மக்களாக – எண்ணெய்ச் செக்கு வைத்துத் தொழில் புரிபவர்களாகக் – காணப்படுகின்றனர். ஆயினும் இவர்கள் தொன்று தொட்டு விவசாயத்திலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புங்குடுதீவில் வேளாளர், பறையர் சமூகத்தினரின் வழிபடு தெய்வமாகவே பெத்தப்பா விளங்குகின்றது. இதனை முன்னோரால் கையளிக்கப்பட்ட வழிபாடாகவும் நீண்ட பாரம்பரியமுடைய வழிபாடாகவும் இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். பெத்தப்பா தெய்வம் குறித்த தனிக் கதையாடல்கள் எதனையும் இம்மக்களால் எடுத்துரைக்க முடியவில்லை. ‘முன்பிருந்தே வழிபடுகின்றோம், எங்கள் தாத்தா காலத்துக்கு முன்பிருந்தே வழிபடுகின்றோம்’ போன்ற வரிகளையே அவர்கள் உதிர்க்கின்றனர். அதேவேளை இத்தெய்வத்தை ஆதரிக்காது விடுமிடத்து தமக்குப் பல்வேறு குறை குற்றங்களும், துன்பங்களும், நோய் நொடிகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஒழுங்காக ஆதரித்துவரும் பட்சத்தில் தமக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது. பெத்தப்பா பெரும்பாலும் சிவனாகவே கருதப்படுகின்றார். ஆதலால் திரிசூல வழிபாடு அதிகம் காணப்பட்டாலும் சங்கு, விளக்கு, கல், வேல் போன்றவற்றை வைத்து வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது. பெரும்பாலும் பெத்தப்பா ஆலயங்கள் ஓலைக்குடிசைகளாலும் மண்ணால் கட்டப்பட்டதாகவுமே காணப்படுகின்றன. பிற்காலத்தில் கற்களால் கட்டப்பட்டன. அதிலும் சில கோயில்கள் கருவறை, முன் மண்டபம், உடையனவாகவும் தனியாட்களின் கோயில்களாகவும் காணப்படுகின்றன. இவற்றுக்குப் பரிவார மூர்த்திகள் இல்லை. ஆயினும் பிற்காலத்தில் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த பெத்தப்பா ஆலயம் ஸ்ரீ முருக மூர்த்தி தேவஸ்தானமாக்கப்பட்டு 1982 இல் மஹா கும்பாபிக்ஷேகம் நிகழ்த்தப்பட்டு ஆகமக் கோயில் ஆக்கப்பட்டுள்ளது. தீவின் ஏனைய பெத்தப்பா ஆலயங்களும் இன்று ஆகமமயமாதலுக்கு உள்ளாகி விட்டன. தென்மராட்சிப் பிரதேசக் கோயில்கள் பல ஆகமம் சாராத கிராமிய வழிபாட்டினைக் கொண்டமைந்த மக்கள் தெய்வத்தின் ‘மெய்தீண்டி இன்புறத்தக்க’ வழிபாட்டு முறையுடனே காணப்படுகின்றன. ஆயினும் வசதி படைத்த சில ஆலய உரிமையாளர்கள் குறிப்பிட்ட சில சிறப்புத் தின வழிபாடுகளுக்கு பூசகரை அழைக்கும் வழக்கம் காணப்படுகிறது. இங்கு பெத்தப்பா மூர்க்கத் தெய்வமாக அமையவில்லை. அருட்தெய்வமாகவே மக்களால் நம்பப்படுகின்றார். இத்தெய்வ ஆதரிப்பு முறை தந்தை வழி, தாய் வழி என இரு மரபும் துய்ய நிகழ்வது குறிப்பிடத்தக்கது. பூசையும் வழிபாடும் இந்த ஆலயங்களில் தத்தம் வசதிக்கேற்ப விளக்கு வைத்தல் நடைபெறுகின்றது. வாரத்தில் ஒரு நாள், ஒவ்வொரு நாளும் வைத்தல் எனும் முறைகள் காணப்படுகின்றன. சில கோயில்களில் காலை, மாலை பூசையாக இது காணப்படுகின்றது. நாளாந்தப் பூசை முறையில், பூசாரி விளக்கு வைத்து கற்பூரம் ஏற்றுவார். வசதியான ஆலயங்களில் பால், பழம், பொங்கல் வைத்து வழிபடும் முறைமையும் காணப்படுகின்றது. இங்கு பூசாரி என்பவர் பரம்பரை பரம்பரையான உரிமையாளராகவே பெரிதும் காணப்படுகின்றார். ஏனைய கிராமியத் தெய்வங்களைப் போலவே வைகாசி மாதம் இத் தெய்வத்திற்குச் சிறப்பு வாய்ந்தது. வைகாசி விசாகப் பொங்கலை அடுத்து வரும் திதிகளில் ஆண்டுப் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிர தைப்பூசம், தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு, சிவராத்திரி, நவராத்திரி, திருவம்பா போன்ற தினங்களிலும் விசேட பூசை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான விசேட தினங்களில் அவிசு, பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கும் நடைமுறை எல்லா பெத்தப்பா ஆலயங்களிலும் காணப்படுகின்றது. ஆண்டுப் பொங்கலில் முதல் நிகழ்வாக அமைவது மடைப்பண்டம் எடுத்தல் ஆகும். இதில் பழங்கள், மரக்கறி வகைகள், வெற்றிலை, பாக்கு, பால், அபிஷேகத் திரவியங்கள், பட்டு, உத்தரியம், கற்பூரம், சாம்பிராணி, மஞ்சள், தேசிக்காய், சிலம்பு, கண்ணாடி, பிரம்பு போன்றவை எடுத்துச் செல்லப்படும். அத்தோடு இத்தெய்வத்திற்குப் பலியிடுவதற்காக ஆடு, கோழி என்பனவும், அவற்றை வெட்டுவதற்கான கத்தி அல்லது வாள் என்பனவும் மடைப்பண்டங்களாகக் கொண்டு செல்லப்படுகின்றன. புங்குடுதீவு பெத்தப்பா ஆலயங்களில் பலியிடல் ஆரம்ப காலம் தொட்டே நடைபெறுவதில்லை என எஸ்.கே. சண்முகலிங்கம் (முன்னாள் அதிபர்), ஆறுமுகம் யோகநாதன் (வர்த்தகர்) போன்றோர் குறிப்பிடுகின்றனர். மடைப்பண்டத்தை உரிமையாளர் வீட்டிலிருந்து அல்லது அருகில் உள்ள சந்தியில், மரத்தடியில் இருந்து எடுக்கும் வழக்கம் காணப்படுகிறது. பெரும்பாலும் பண்டத்தை நடைப்பயணமாகவே கொண்டு செல்லும் வழக்காறும் இருந்துள்ளது. இந்நடைப்பயணத்தின் போது கிராமிய வழிபாட்டின் வாத்தியங்களான பறை, உடுக்கு, மத்தளம், சங்கு, சேமக்கலம் சகிதம் ஊர்வலமாகச் செல்லுதலே வழக்கமாக உள்ளது. கொண்டு செல்லப்பட்ட மடைப்பண்டத்தில் பொங்கல் வளந்தை பூசாரி, வாத்தியங்களின் இசைகேற்ப மேலே எறிந்தெறிந்து ஏந்துவார். இது ‘தூளி பிடித்தல்’ எனப்படும். இது எல்லாத் திக்குகளையும் நோக்கி எறிந்து ஏந்தப்படும். இது பக்தியுணர்வைத் தரும் சடங்காகக் கூறப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் நடைபெறும் இப்பொங்கலுக்கு ஏனைய தெய்வங்களால் இடையூறு நிகழாமல் இருக்கும் வண்ணம் பூசாரியால் மேற்கொள்ளப்படும் சடங்கு ‘பரிகலம் அழைத்தல்’ ஆகும். மந்திர உச்சாடனத்துடன் கூடிய சடங்காக இது நிகழ்த்தப்படுகிறது. பூசாரி வளந்துப் பானை வைத்து பொங்கலிட, ஏனைய மக்களும் பொங்கலிட்டு பூசையில் மடை பரவுவர். இம்மடை பரவுதல் பெரும்பாலான கோயில்களில் உள்மடை, வெளிமடை எனப் பரவப்படுகிறது. உள்மடை பூசாரி மற்றும் கோயில் உரித்துடையவர்களாலும் வெளிமடை ஏனையவர்களாலும் வைக்கப்படும். உள்மடையில் காய்மடை, பூமடை, பழமடை என்பன அடுக்காக வைக்கப்பட்டிருக்கும். உள்மடை, பிரசாதத்துடன் கோயில் உரித்துடையவர்களுக்கு வழங்கப்படும். வெளிமடையில் பொங்கல், பலகாரங்கள், அவிசு, அன்னதானக் கறி, சோறு உள்ளிட்டவை படைக்கப்படும். இவை ஆலயத் தொண்டர்கள், அடியவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த உள்மடை, வெளிமடைச் செயற்பாட்டை வர்க்க வேறுபாடாகவே எண்ணத் தோன்றுகிறது. பூசாரி கலையாடி குறி சொல்லுகின்ற – கட்டுச் சொல்லுகின்ற நடைமுறையும் காணப்படுகிறது. அதேவேளை கோயில் உரித்தாளரும் கலையாடும் முறைமையும் சில ஆலயங்களில் காணப்படுகின்றது. குறித்த தாள கதியில் வாத்தியங்கள் இசைக்கப்பட அதற்கேற்ற கலையாடல் நிகழும். ஒருவர் மீது பல தெய்வங்கள் மாறி மாறி உருப்பெறுதலும் உண்டு. இது ‘கலை மாற்றி ஆடுதல்’ எனப்படுகிறது. கட்டுக்கேட்போருக்குக் கட்டுச்சொல்லி திருநீறு இடப்படும். கட்டுக்கேட்போர் அவர் உரைத்ததற்கு ஏற்ப பரிகாரங்களை தம் பெத்தப்பா தெய்வத்துக்குச் செய்துவரும் வழக்கமும் காணப்படுகிறது. காவடி, கற்பூரச்சட்டி, பாற்செம்பு முதலானவை எடுத்தல், விரதமிருந்து மடை பரவுதல், நேர்த்திப் பொருட்களை வாங்கி வழங்குதல் போன்றன அவற்றுட் சில. பெரும்பாலான தென்மராட்சிக் கோயில்களில் பலியிடும்முறை தொன்றுதொட்டுக் காணப்பட்டு வந்துள்ளதெனினும், இன்று அது அருகி வருகிறது. ஆடு, கோழி முதலானவற்றை வாங்கி காதறுத்து விடுதல், சிறு கீறு கீறி இரத்தம் காணல் அல்லது ஆலயத்துக்கு நேர்ந்துவிடுதல் முதலியனவே இன்று பெரிதும் காணப்படுகின்றன. இறுதியாக நடைபெறும் சடங்கு ‘வழிவெட்டுதல்’ ஆகும். பொங்கல் முடிந்தவுடன் மடைப்பண்டங்களான இளநீர், தேசிக்காய் போன்றவற்றோடு ஏனைய பொருட்களையும் எடுத்துக்கொண்டு பூசாரியும் ஆலய உரித்துடையோரும் சிறிது தூரம் சென்று அவற்றைப் படைப்பர். செல்லும் வழியில் இளநீர், தேசிக்காய் என்பவற்றை வெட்டிச் சென்று படையலிட்ட பின் தெய்வத்துக்கு நன்றி சொல்லி, ஆண்டுப் பொங்கலை நிறைவு செய்வதாகவும், அடுத்த ஆண்டுப் பொங்கல் எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டியும் தடை வெட்டி வருவார். தென்மராட்சிப் பாலாவி பிரதேச பெத்தப்பா கோயில் ஒன்றில் பெண் பூசாரி பூசை நிகழ்த்துவதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் வழக்கில் இருக்கும் கிராமியத் தெய்வக்கோயில்களில் விளக்கு வைத்தல் முதலியன பெண்களால் செய்யப்பட்டு வரும்போதும், பூசாரிகளாக ஆண்களே காணப்படும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. தனது கணவனின் பரம்பரைக் கோயிலில் பூசாரியாக இருக்கும் திருமதி அருந்தவமலர் தர்மலிங்கம், கணவன் இல்லாததால் தானே பூசை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சில அவதானிப்புகள் பெத்தப்பா என்னும் சொல் சமயத்துக்கு அப்பாலான நாட்டார் வழக்காற்றுச் சொல்லாக விளங்குகின்றது. பெத்தப்பா சுவாமி கோவில்கள் தென்மராட்சி பாலாவி, கெற்பேலி கிராமங்களிலும் புங்குடுதீவிலும் மட்டுமே காணப்படுகின்றன. இத் தெய்வம் பற்றிய தொல் மரபுக் கதைகள் எதையும் அறிய முடியவில்லை. பெத்தப்பா எனும் இத் தெய்வம் சிவனாகவே பெரிதும் சித்தரிக்கப்படுகின்றது. ஆயினும் புங்குடுதீவின் ஊரதீவில் உள்ள பெத்தப்பா, தொன்று தொட்டு முருகனாக வழிபடப்பட்டு வருகின்றது. முருகன் – தகப்பன்சுவாமி; ஆகவே பெத்தப்பா எனும் தெய்வம் முருகனாகவே இருக்கலாம் அல்லது இது சிவ – முருக இணைவு வழிபாடாகவும் உருவாகி இருக்கலாம். தென்மராட்சியில் சாண்டார் சமூகத்தின் குலதெய்வமாக காணப்படும் இத்தெய்வம் புங்குடுதீவில் வேளாளர், பறையர் சமூகத்தினரால் வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. இம்மூன்று சமூகத்தினரும் நிலத்தோடும் விவசாயத்தோடும் தொடர்புபட்டவர்களாக இருப்பது கவனத்தை கோரும் விடயமாகும். புங்குடுதீவு பெத்தப்பா கோயில்கள் ஆகமமயமாதலுக்கு உள்ளாகிவிட்டன. தம் அடையாளத்தைத் துறந்து வருகின்றன. தென்மராட்சி ஆலயங்களில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பினும் அவை முழுமையான ஆகமமயமாதலுக்கு இன்னும் உள்ளாகவில்லை. பெத்தம்மா வழிபாடும் சொல் வழக்கும் தெலுங்கில் முதன்மை பெற்றவை. அதன் வழி வந்த சொல்லாக பெத்தப்பா எனும் சொல் வழக்கும் தெய்வமும் ஈழத்தவர்களிடம் செல்வாக்குப்பெற்று இருக்கலாம். முகமது ரியாஸின் ‘சிகிரி மார்க்கம்’ சிறுகதைத் தொகுப்பில் வரும் பெத்தம்மா எனும் சொல் தெலுங்கு பரப்பில் இருந்து (வணிகம் மற்றும் குடியேற்றம் என்பனவற்றின் ஊடாக) வந்தமையை உறுதி செய்கின்றது. ஆக பெத்தப்பா, பண்பாட்டு ஆய்வை கோரி நிற்கும் ஒரு வழிபாடாக – சொல்லாகத் திகழ்கின்றது. முடிவுரை தமிழகம், தெலுங்கானா போன்ற பிரதேசங்களில் பெத்தம்மா வழிபாடு காணப்பட்ட போதும் ஈழத்தில் இவ்வழிபாடு இல்லை. ஆயினும் பெத்தப்பா வழிபாடு ஈழத்திலேயே காணப்படுகின்றது. ஆண் வழிச் சமூக அமைப்பின் தொடர்ச்சியாக இவ்வழிபாடு விளங்குகிறது எனலாம். தென்மராட்சி, புங்குடுதீவுப் பிரதேசங்களில் காணப்படும் இவ்வழிபாடு சாண்டார், பறையர், வேளாளர் சமூகங்களில் குலதெய்வ வழிபாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சாதியப் போராட்டம் நிகழ்ந்த புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் சூழலில் பறையர் சமூகத்தவராலும் வேளாளராலும் குலதெய்வமாக பெத்தப்பா வழிபடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கண்ணகி கோயில் திருவிழா பற்றிய அறிவித்தலில் பறையர் சமூகத்தை இக்கால நிர்வாகத்தினர், ‘காராம் பசு வாகனத் திருவிழா (மூன்றாம் திருவிழா) உபயகாரர்கள் பெத்தப்பா சிவாலயம்’ எனக் குறிப்பிடுதல் சாதியம் தாண்டிய குலவழிபாடாக பெத்தப்பா வழிபாடு இருத்தலை உணர்த்துகின்றது. அதற்கு தெய்வத்தின் மீது மக்கள் கொண்டிருந்த அதீத நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம். ஆயினும் இத்தெய்வம் பற்றிய கதைகள், அற்புதங்கள் பற்றிய உரையாடல்கள் பேணப்படாதது வருத்தத்துக்கும் ஆச்சரியத்துக்கும் உரியதாகும். இன்று கலையாடுதல், மடைப் பண்டம் எடுத்தல், உள்ளிட்ட பல பாரம்பரியங்கள் அருகிவருகின்றன. கற்கோயில்களாகப் பெரும்பாலான கோயில்கள் மாறி வருகின்றன. முன்மண்டபமுடையதான ஆலயங்கள் சிலவற்றில் சாதாரண தினங்களில் பூசாரியும்; விசேட தினங்களில் பிராமணர் அல்லது சைவக்குருக்களும் பூசை செய்யும் முறைமையை அவதானிக்க முடிகிறது. மேனிலையாக்கச் சிந்தனை வழி ஆகம மரபுக்கு உட்பட்டு வரும் இவ்வழிபாடு, அதன் கதைகள் போலவே சிறிது காலத்தில் காணாமல் போவதற்கும், இதனூடாக சமூக வரலாற்றின் ஒரு பகுதி இழக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. இது தமிழர் அல்லது தமிழ் பேசும் மக்களின் அடையாளச் சிதைவுக்கும் வழிவகுக்கும் எனலாம். https://www.ezhunaonline.com/goddess-bethappa/- தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு Bookday15/04/2025 தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 9 | ‘நோ லோகோ’ (No Logo) மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு அ. குமரேசன் “என்னை வாட்டிக்கொண்டிருப்பது உண்மையில் நேரடியாக இங்கே ஒரு வெளி இல்லை என்பதல்ல, மாறாக இவற்றை உருவகப்படுத்துவதற்கான வெளி இல்லையே என்ற ஏக்கம்தான்: விடுதலை, தப்பித்தல், ஒரு வகையான திறந்த சுதந்திரம்.” – இவ்வாறு பொருளாதார ஆய்வாளரும் களச்செயல்பாட்டாளருமான கனடா நாட்டு எழுத்தாளர் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) தமது ‘நோ லோகோ’ (No Logo: Taking Aim at the Brand Bullies – வேண்டாம் இலச்சினை) என்ற நூலில் குறிப்பிடுகிறார். 1999இல் வெளியான அந்தப் புத்தகத்தைத் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் வரிசையில் சேர்க்க முடியாது முடியாது – ஏனெனில் நேரடியாக அது எந்த நாட்டின் அரசாங்கத்தாலும் தடை செய்யப்படவில்லை. ஆனால் தடை செய்ய வேண்டும் என்ற அழுத்தத்துடன் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகித் தப்பிப் பிழைத்தது. யார் அவ்வாறு தாக்கினார்கள் என்றால் உலகளாவிய கார்ப்பரேட் சக்திகளும் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரச் சிந்தனையாளர்களும். “வேண்டாம் இலச்சினை” என்று நூலாசிரியர் கூறுவது கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக இலச்சினைகளைத்தான். மக்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் என்பதற்கு மாறாக, குறிப்பிட்ட நிறுவனங்களின் விற்பனைச் சரக்குகள் மீது ஒரு விசுவாசத்தனமான மோகத்தை ஏற்படுத்துவதற்கு அந்த இலச்சினைகள் மூளைக்குள் பதிய வைக்கப்படுவதை அவர் அம்பலப்படுத்துகிறார். தி ஷாக் டாக்ட்ரைன் (The Shock Doctrine – அதிர்ச்சிக் கோட்பாடு), திஸ் சேஞ்ஜஸ் எவ்ரிதிங் (This Changes Everything – இது எல்லாவற்றையும் மாற்றுகிறது) என்ற புத்தகங்களையும் எழுதியுள்ள நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பருவநிலை நீதித்துறைப் பேராசிரியருமாவார். இந்த நூல் பற்றித் தெரியவந்தபோது செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அடிப்படையான புரிதலுக்கு உதவுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளை விற்பது என்பதைத் தாண்டி, மக்களுக்கான வாழ்க்கை முறைகளையே விற்பனை செய்கின்றன. நுகர்வோர் கலாச்சாரத்தில் ஊடுருவி, பல்வேறு தயாரிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்காமல் குறிப்பிட்ட வணிகப் பெயர்கள் (பிராண்டுகள்) மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதற்குத் தங்களை ஒப்படைத்துக்கொள்ள வைக்கின்றன. உலகமயமாக்கலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நாடுகளில் கிளை பரப்பியிருந்தாலும், அவர்களின் லாபம் பெருகிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் பெருகிடவில்லை, மாறாக வேலையிழப்புகள்தான் அன்றாடச் செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. இதன் தாக்கங்கள் பலவகையான போராட்டங்களில் வெளிப்படுகின்றன. புத்தகம் எதைப்பேசுகிறது? இந்தச் செய்திகளைத்தான் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein). இது நாவலோ தனித்தனிக் கட்டுரைகளின் தொகுப்போ அல்ல. வணிக இலச்சினையை மையமாக வைத்து உலகளாவிய கார்ப்பரேட் சுரண்டலின் பரிமாணங்களை விளக்குகிற பொருளாதார–அரசியல்–சமூக ஆய்வு நூல் என்று கூறலாம். வெளி இல்லை (No Space), தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில்லை (No Choice), வேலைகள் இல்லை (No Jobs), இலச்சினை இல்லை (No Logo) என்ற நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொருள்களின் தரம் என்பதை இலச்சினைகளோடு தொடர்புபடுத்துவது முதல், நிறுவனங்களில் பல்வேறு வேலைகள் வெளி ஒப்பந்ததாரர்களிடம் விடப்படுவது (outsourcing), மலிவான கூலிக்குத் தொழிலாளர்கள் கிடைக்கக்கூடிய நாடுகளில் தயாரிப்பு ஆலைகளை நிறுவுவது வரையில் புத்தகம் அலசுகிறது. நமது நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளோடு ஆலைகள் அமைக்க வழி செய்யப்பட்டதையும், மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த ஊதியத்தில் இங்கே தொழிலாளர்களை நியமிக்க முடியும் என்பதால் பல நிறுவனங்கள் வந்ததையும் சாட்சியங்களாகக் கொண்டுவரலாம். சாம்சங் தொழிலாளர் போராட்டம் உள்பட எத்தனை சான்றுகள்! வணிகத்தோடும் வருமானத்தோடும் நின்றுவிடாமல் மக்களின் வாழ்க்கை முறை, நுகர்பொருள்களின் தேர்வு ஆகியவற்றில் கார்ப்பரேட் ஆதிக்கம் மேலோங்குவது பற்றியும் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) விவாதிக்கிறார். வியர்வைக் கொட்டகைகளாக இருக்கும் இயந்திரக் கூடங்கள், கார்ப்பரேட் பாணி தணிக்கைகள், கருத்துகளை வெளியிடுவதற்கான பொதுவெளி அரிக்கப்படும் நிலைமைகள் ஆகியவை தொடர்பான அவதானிப்புகளையும் பகிர்ந்திருக்கிறார். உலக சமுதாயத்தின் வேர்மட்டத்தில் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு, உழைப்பாளி வர்க்கத்தின் எழுச்சி, அதில் தொழிலாளர் சங்கங்களின் பங்களிப்பு ஆகியவற்றை விவரிக்கிறார். அந்தப் போராட்டங்களோடு சமூகநீதி, சமத்துவ இலட்சியங்களும் இணைந்திருப்பதைக் காட்டுகிறார். அந்த இலட்சியங்களை நோக்கிச் செல்கையில் இந்த இலச்சினைகள் இனி இல்லை என்ற நிலை ஏற்படும் என்ற தன் கனவைப் பகிர்ந்துகொள்கிறார். தகவல்களையும் கருத்துகளையும் சொல்வதோடு, இத்தகைய மாற்றங்களுக்காகச் செயல்படவும், அவ்வாறு செயல்படுவோருக்கு ஆதரவாக இருக்கவும் வாசகர்களைத் தூண்டுகிறது என்று புத்தகம் பற்றிய பதிவுகள் தெரிவிக்கின்றன. வெளிகள் ஆக்கிரமிப்பு சுதந்திரமான விவாதங்களுக்கான பொதுவெளிகள் விளம்பரங்களால் ஆக்கிரமிக்கப்படுவது, தங்களுடைய பிராண்டுகள் சந்தையில் முந்தியிருக்கச் செய்வதற்காக நிறுவனங்கள் கையாளும் மூர்க்கத்தனமான வழிமுறைகள், அதில் பலியிடப்படும் சுதந்திரமான கருத்து வெளிப்பாடுகள், அடிமைப்படுத்தப்படும் படைப்பாக்கத் திறன்கள், மறக்கடிக்கப்படும் வட்டாரப் பண்பாடுகள் ஆகியவற்றையும் புத்தகம் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. உலகமயமாக்கல் சூழலில் தன்னாளுமை உரிமைகளை மீட்பதற்கு ஒவ்வொரு தனிமனிதரும் முன்வர வேண்டுகோள் விடுக்கிறார் நூலாசிரியர். உலக மயமாக்கலின் ஆக்கப்பூர்வமான விளைவுகளை நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) பார்க்கத் தவறுகிறார், உலகப் பரப்பு இன்று எவரும் எளிதில் சென்றுவரக்கூடியதாக மாறியிருப்பதை, இதனால் தனிமனித வாழ்க்கையிலும் சமூகச் சூழல்களிலும் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றங்களை க்ளெய்ன் நிராகரிக்கிறார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஏற்கெனவே கூறியது போல கார்ப்பரேட்டுகள் தரப்பிலிருந்தும் கார்ப்பரேட் ஆதரவுச் சிந்தனையாளர்களிடமிருந்தும் இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. சிலர், உலகமயமாக்கலால் நன்மைகளே ஏற்படவில்லையா என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்விக்குப் புத்தகத்தில் பதில் இருக்கிறதா என்று தெரியவில்லை. உலகமயமாக்கலின் பல்வேறு நன்மைகளை மறுப்பதற்கில்லைதான். உலகின் சில பகுதிகளில் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வறுமைக்கோடு அளவு உயர்ந்திருக்கிறது. வட்டாரத்திற்குள் சுருங்கியிருந்த வாழ்க்கை பரந்த எல்லைகளுக்கு விரிவடைந்திருக்கிறது. குடியிருப்பு வசதிகள், நவீன வாகனங்கள் என்ற விளைச்சல்களையும், பாலின சமத்துவச் சிந்தனைகள் முன்னுக்கு வந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. என்ன விளக்கம்? ஆனால், உலகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வெளியேற்றப்படுவதற்கும், அதனால் அவர்களது குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படும் சிக்கல்களுக்கும் எப்படி விளக்கம் அளிப்பது? எடுத்துக்காட்டாக, தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி செக்டார்) சார்ந்த ஊழியர்கள் நல்ல ஊதியம் பெறுகிறார்கள் என்ற தோற்றம் ஒரு புறமிருக்க, எல்லா ஐடி நிறுவனங்களிலும் அந்த நிலைமை இல்லை என்பது இன்னொருபுறமிருக்க, எந்த நேரத்திலும் வீட்டுக்கு அனுப்பப்படலாம் என்ற உறுதியற்ற நிலையில் தினமும் காலையில் கண்விழித்துக்கொண்டிருக்கிறார்களே – அதை எப்படி இல்லை என்று கூறுவது? அந்த நிறுவனங்களின் தேவைகளை ஏற்று, பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் செய்துகொள்கிற சமரசங்கள், சட்டத் திருத்தங்கள் போன்றவற்றை எப்படி நியாயப்படுத்துவது? வறுமையின் அளவு மாறியிருக்கிறதா என்று ஆய்வாளர்கள் சொல்லட்டும், ஆனால் வறுமையின் கொடுமைகளும் துயரங்களும் தற்கொலை உள்ளிட்ட அவலங்களும் மாறவில்லையே? பாலின சமத்துவத்தில் முன்னேற்றம் என்ற தோற்றத்திற்குப் பின்னால், பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான சுரண்டல்கள் அதிகரித்திருக்கின்றனவே? வேலையிழக்கும் ஆண்களால் அவர்களின் வீடுகளில் பெண்கள் தாக்கப்படுவது செய்தியாகிக்கொண்டிருக்கிறதே? முற்போக்கான மாற்றங்கள்தான் இனி நிகழும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, மதவாத. சாதியவாத வன்மங்கள் தாண்டவமாடுகின்றனவே? இயற்கை வளங்களும் பசுமைப் பரப்புகளும் சூறையாடப்படுகின்றனவே? கட்டுப்பாடற்ற கரிம வெளியேற்றத்தால் சுற்றுச் சூழலுக்குப் பேராபத்து ஏற்படுத்தப்படுகிறதே? சமுதாய வளர்ச்சியின் இறுதிக்கட்டம் முதலாளித்துவம் அல்ல, உலகமய கார்ப்பரேட் யுகம் அல்ல என்று மேலும் மேலும் தெளிவாகப் புலப்பட்டு வருகிறது. அதன் வளர்ச்சியின் பின்னால் இருப்பது மூலதனக்காரர்களின் “தொழில் திறமை” மட்டுமல்ல, அரசாங்கங்களின் பங்களிப்பு, வலதுசாரி அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு, மதம், இனம், சாதி சார்ந்த சமுதாயத் தலைவர்களின் கைகோர்ப்பு ஆகியவை இருக்கின்றன. பொருளாதார அடியாள் போல 2004ஆம் ஆண்டில் வந்த ‘கன்ஃபெஸ்ஸன்ஸ் ஆஃப் அன் எகனாமிக் ஹிட் மேன்’ (Confessions Of An Economic Hit Man) என்ற புத்தகம் வந்தது. அமெரிக்கரான ஜான் பெர்க்கின்ஸ் என்ற வணிக ஆலோசகர் எழுதிய அந்தப் புத்தகத்தை அதற்கடுத்த ஆண்டிலேயே, இரா. முருகவேல் மொழிபெயர்ப்பில் தமிழில் கொண்டுவந்தது பாரதி புத்தகாலயம். உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசாங்கங்களைக் கைக்குள் போட்டுக்கொள்வதற்காக ஊழல் உட்பட மோசமான குற்றங்கள் எதையும் செய்யத் தயாராக இருப்பதை அந்தப் புத்தகம் கூண்டில் நிறுத்தியது. அப்படிப்பட்ட “அடியாள்” வேலைகளில் ஈடுபட்டு, பின்னர் மனசாட்சியோடு அதிலேயிருந்து வெளியேறி, வேட்டையாடப்பட்ட, ஆயினும் துணிந்து நின்றவர் ஜான் பெர்க்கின்ஸ். அவரே தன் கதையைச் சொல்வதாக எழுதப்பட்ட அந்தப் புத்தகம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கார்ப்பரேட் சுரண்டல் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு கையேடாகியிருக்கிறது. அதே போல், உலகக் கார்ப்பரேட்டுகளின் வணிகச்சூது உலகத்தை சந்திக்குக் கொண்டுவரும் புத்தகம்தான் இது என புரிந்துகொள்ள முடிகிறது. “வேறுபட்ட கலாச்சாரங்கள் இருந்தபோதிலும், உலகம் முழுவதும் நடுத்தர வர்க்க இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை வேறு ஏதோவொரு நிகர்நிலை உலகத்தில் வாழ்வது போலத் தோன்றுகிறது. அவர்கள் காலையில் எழுகிறார்கள், தங்கள் லெவிஸ் ஆடைகளையும் நைக் காலணிகளையும் அணிகிறார்கள், தொப்பிகளையும் முதுகுப் பைகளையும் சோனி பெர்சனல் சிடி பிளேயர்களையும் எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார்கள்.” –உலகமய கார்ப்பரேட் யுகம் எப்படி வளரும் தலைமுறைகளை ஒரு மாதிரியாக வார்த்து வைத்திருக்கிறது என்று தன் மனக்குமுறலை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein). தமிழிலும் உலகின் அனைத்து மொழிகளிலும் வரவேண்டிய புத்தகம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. அந்த முயற்சியில் ஈடுபடக்கூடியவர்களை கைகுலுக்கி வரவேற்கலாம், வாழ்த்தலாம். https://bookday.in/naomi-klein-no-logo-taking-aim-at-the-brand-bullies-book-oriented-article-written-by-a-kumaresan/- சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்!
சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்! -சாவித்திரி கண்ணன் ஆருயிராய் நினைத்த அண்ணன் தன்னையே வேரறுப்பான் என தயாநிதிமாறன் நினைக்கவில்லை. ஆனால், இந்த இரு சகோதரர்களும் தமிழகம் மட்டுமின்றி, இந்திய காட்சி ஊடகத்துறையில் கருவறுத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அந்த சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தில் புதைந்திருக்கும் எலும்புக் கூடுகளும் எண்ணற்றவை; எத்தனையெத்தனையோ நிறுவனங்கள், கலைஞர்கள், தொழில் முகவர்கள், ஊழியர்கள், அரசு அதிகாரிகளின் பேரழிவிலே கட்டி எழுப்பப்பட்ட சாம்ராஜ்யம் தான் சன் குழுமம்! அரசியல் அதிகார பலத்துடன் ஒரு ஆக்டோபஸ் மிருகத்தைப் போல, அடங்காப் பசியுடன் போட்டியாளர்களை அழித்தொழித்து விழுங்கி ஏப்பம் விட்ட நிறுவனம் தான் சன் குழுமம். அண்ணனும், தம்பியும் கைக் கோர்த்து ஆடிய அதிகார ஆட்டங்களை பல வால்யூம்களாக எழுதலாம். இன்று அவர்களுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணனை தொழில் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக்க தம்பி செய்த தகிடுதத்தங்கள் ஏராளம். அதே போல தம்பியை அரசியலில் முன்னினைபடுத்த அண்ணன் செய்த ஊடக நரித்தங்கள் சொல்லில் அடங்காதவை. இதுவே கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரகள் குடும்பமும் பிரியக் காரணமானது. ஆனால், விரைவில் ஒன்று பட்டனர். இந்த காலகட்டத்தில் நான் எழுதிய நூல் தான் சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும். இவர்கள் துளிர்விட ஆரம்பித்த காலம் தொடங்கி தொடர்ந்து அணுக்கமாக அவதானித்து வருகிறேன் நான்! 1989 ஆம் ஆண்டு வாக்கில் குங்குமம் வார இதழில் நான் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளனாக கட்டுரைகள், புகைப்படங்கள் தந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கலாநிதியும், தயாநிதியும் பூமாலை என்ற வீடியோ கேசட் கொண்டு வந்தனர். அதில் குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் போன்றவற்றில் வேலை பார்த்த பத்திரிக்கையாளர்களையே ஊதியம் தராமல் பயன்படுத்திக் கொண்டனர். 1990-ல் கலைஞர் ஆட்சிக்கு வந்த போது வீடியோ கேசட் கடைகளை மிரட்டி விற்பனை செய்ய வைத்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. 1989-ல் வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலிமாறன் நகர்புற அமைச்சராகப் பதவி பெற்ற வாய்ப்பில் ஏற்பட்ட தொழில் அதிபர்கள் தொடர்புகளால் தன்னை வளப்படுத்திக் கொண்டார். 1992- அக்டோபரில் இந்தியாவின் முதன்முதல் சேட்டிலைட் சேனலாக ZEE தொலைகாட்சி வந்தது. உடனே தன் மகன்களுக்கு காட்சி ஊடகத்தில் இருக்கும் ஆர்வத்தை அறிந்திருந்த மாறன் ஏப்ரல் 14 1993-ல் சன் குழுமத்தை ஆரம்பித்தார். திமுக கழகத்தின் நிதியைத் தந்து, அதுவும் போதவில்லை என மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் கட்சி சொத்தை அடமானம் வைத்து வாங்கப்பட்ட நிதியில் ஆரம்பிக்கப்பட்டது தான் சன் தொலைக்காட்சி. அவர் தான் சேர்மன் தயாளு அம்மாள், மல்லிகா மாறன் இருவரும் பெயருக்கு இயக்குனர்கள். கலாநிதி, தயாநிதி, ஸ்டாலின் மூவரும் பங்குதாரர்கள். இது தான் தொடக்கம். ஆனால், இன்றைக்கு சுமார் 98 சதவிகித பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறார் கலாநிதி எனச் சொல்லப்படுகிறது. இதன் மதிப்பு லட்சம் கோடிக்கும் அதிகமாகும். முரசொலி அலுவலகத்தையே முதலில் பயன்படுத்தியதும், பிறகு அறிவாலயத்திற்கு எதிர் வாடையில் உள்ள சென்சூரி பிளாசாவில் 2000 சதுர அடிக்கு வாடகையில் இருந்து அதையும் தரமுடியாமல் அறிவாலயத்திற்கே வந்ததும், ஒவ்வொரு நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடமும் ரூபாய் ஐயாயிரம் என்றாலும், பத்தாயிரம் என்றாலும் தொடர்ந்து பல முறை தானே போனில் நச்சரித்து பேசி வாங்கிய கலாநிதியின் பொருளாதார நெருக்கடிகளும் அவருக்கு மறந்து போயிருக்கலாம். 2000 ஆம் ஆண்டு சுமங்கலி கேபிள் விஷனை தயாநிதி மாறன் தான் தொடங்கினார். அப்போது தமிழகம் முழுமையும் 30,000 கேபிள் ஆப்ரேட்டர்கள் இருந்தனர். இவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லோக்கல் சேனல் நடத்தி வந்தனர். சுமார் 200 பேராவது எம்.எஸ்.ஓ நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பலர் தொழிலைவிட்டே விரட்டி அடிக்கப்பட்டனர். சிலர் நடுத்தெருவிற்கு வந்தனர்,. ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டனர். அங்குமிங்கும் சில கொலைச் சம்பவங்களும் அரங்கேறின. சரண்டரானவர்கள் மட்டுமே தப்பித்தனர். மத்தியி பாஜகவுடன் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் கலைஞர் ஆட்சி, மாநகராட்சியில் ஸ்டாலின் மேயர். கருணாநிதி குடும்ப அதிகாரம் கோலோச்சிய காலம் அது. சென்னையில் சிட்டி கேபிள், ஹாத்வே, ஏ.எம்.என் போன்றவர்கள் கேபிள் நெட்வொர்க்கில் இருந்தனர். இவர்கள் கேபிள் வயர்களை இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அறுத்து எறிந்தவர் தயாநிதி. அவரே களத்தில் இறங்கி ஒரு பேட்டை ரவுடி போல செயல்பட்ட காலகட்டங்கள் அவை. இதே போல 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியிலே தயாநிதி தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அப்போது தமிழில் சேனல் தொடங்க விண்ணப்பித்து இருந்த 60 நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்தார். 2007 ஆண்டு மாறன் சகோதர்களுக்கும், மு.க அழகிரிக்குமான மோதலில் மதுரை தினகரன் அலுவலகம் பற்றி எரிந்தது. மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் ஏற்பட்ட பகையில் தயாநிதி மத்திய அமைச்சர் பதவி இழந்தார். அப்போது தான் சுமங்கலி கேபிள் விஷனின் கொட்டத்தை ஒடுக்க அரசு கேபிளை தொடங்குகிறார் கலைஞர். நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி அஞ்சா நெஞ்சரான உமாசங்கர் அதன் இயக்குனராகிறார். அவர் மிக கடுமையாக உழைத்து அரசு கேபிளை நிலை நிறுத்தும் போது, சுமங்கிலியின் அட்ராசிட்டிகளை அடக்குகிறார். இதனால் பயந்து போன மாறன் சகோதர்கள் கலைஞரோடு சமாதானமாகிறார்கள். அத்துடன் அரசு கேபிளை அம்போவென விட்டுவிடுகிறார். உமா சங்கர் ஐ.ஏ.எஸ் பழிவாங்கப்படுகிறார். குடும்பம் ஒன்று சேர்ந்தவுடன் பொது நன்மைக்கு உழைத்த அதிகாரி அவமானப்படுத்தப்படுகிறார். இந்த சன் குழும சதிக் கூட்டத்தின் அதிகார ஆட்டத்தை அடி முதல் நுனி வரை விவரித்து நான் இரண்டு நூல்கள் எழுதியுள்ளேன். முதலாவது 2007 ஆம் ஆண்டு எழுதிய சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும். அடுத்து 2013 –ல் கொண்டு வந்த கேபிள் தொழிலும், அரசியல் சதிகளும். இவற்றை மிக விரைவில் கிண்டிலில் வெளியிட உள்ளேன். இன்றைக்கு என்ன நிலைமை? இந்தியாவின் பல மொழிகளில் 30 க்கு மேற்பட்ட சேனல்களுக்கு அதிபர். எம்.எம் வானொலிகள், ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர், இன்னும் பல பிசினஸ்கள்..எல்லாவற்றிலும் தம்பியைத் தவிர்த்துவிட்டு தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டார். சுமங்கலி கேபிள் விஷனையும் அவரே எடுத்துக் கொண்டார். நிறுவனங்களின் 98 சதவிகித பங்குகளை கலாநிதியே வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தம்பியை அரசியலில் நீ சம்பாதித்துக் கொள். தொழில் சம்பாத்தியம் அனைத்தும் எனக்கே என முடிவு செய்துவிட்டார் போலும். அரசியலில் இருக்கும் போது கூட அண்ணனுக்கு அடியாள் வேலை மட்டுமே பார்த்தவர் தான் தயாநிதி. பல உயர் நிறுவனங்களில் அண்ணனை பங்குதாராக்க நிர்பந்தம் கொடுத்தார். ரத்தன் டாட்டா அவர்கள் இந்த மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம் என மூஞ்சிக்கு நேராக சொல்லி அனுப்பிவிட்டார். இல்லாவிட்டால் டாட்டாவையே மொட்டை அடித்து தெருவில் நிற்க வைத்திருப்பார்கள். ஆட்சி மாற்றங்களும், காட்சி மாற்றங்களும் நடந்தன. திமுக குடும்பத்தில் இன்றைக்கு மிகவும் சக்தி வாய்ந்தவராக சபரீசன் வந்துவிட்டார். கலாநிதி மாறனே கதிகலங்கி போய் அவரோடு கைகுலுக்கி தன்னை தற்காத்துக் கொண்டார். தயாநிதியோ அரசியலில் புதிதாக உள்ளே நுழைந்த சோட்டா பாயான உதயநிதிக்கு கீழ் படிந்து நடக்க வேண்டிய நிலையில் உள்ளார். அரசியலில் தனக்கான எதிர்காலம் குறித்து அவருக்கு அச்சம் இருக்கிறது. எல்லாமே அண்ணன் என இருந்துவிட்டதால் அண்ணன் பார்த்து செய்வார் என தனக்கான சேனல் என்பதாக தன் மகனைக் கொண்டு கரண் தொலைகாட்சி தொடங்க முயன்றார். தன்னைத் தவிர யாருமே வளர்வதை அறவே விரும்பாத இயல்பு கொண்டவரான கலாநிதி தம்பியை வளரவிடுவாரா? நான்கைந்து வருட காத்திருப்புக்கு பிறகும் தயாநிதியால் தனக்கென ஒரு சேனலை சாத்தியப்படுத்த முடியவில்லை. தன் மகனுக்கு சன் குழுமத்தில் ஒரு முக்கிய பொறுப்பையும் பெற்றுத் தர முடியவில்லை. கலாநிதியின் மனைவியும் மகளுமே அங்கு ஆதிக்கம் செலுத்த முடிகிறது. இந்தச் சூழலில் தான் 22 வருடங்களாக மனதில் பொத்தி வைத்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் தயாநிதி. ஆனால், பாட்டி தயாளு அம்மாள், அம்மா மல்லிகா மாறன் ஆகியோரையே நிராகரித்து தன்னை மட்டுமே மையப்படுத்திக் கொண்ட கலாநிதி, தன் இயல்புக்கு ஏற்ப தம்பியை நிராகரித்துள்ளார். ஸ்டாலின் பேசியும் கலாநிதி ஒத்து வரவில்லை. தம்பிக்கு ஒரு நியாயமான பங்கை தர இசைவு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தயாநிதியின் வக்கில் நோட்டீஸ் அண்ணன் கலாநிதியை கலவரப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தையடுத்து சன் குழுமத்தில் அமலாக்கத் துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட பல அரசு அமைப்புகள் மூக்கை நுழைக்கும் சந்தர்ப்பம் கனிந்துள்ளது. அட்டூழியக்காரர்கள் தங்கள் அழிவை தாங்களே வலிந்து உருவாக்கி கொண்டு அழிவர் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அந்த வகையில் பற்பலரின் பேரழிவுக்கு காரணமான சன் குழுமத்தினரின் சங்கதியும் ஒரு முடிவுக்கு வருமா? அல்லது சமாதானமாகிக் கொண்டு ஒன்றிணைந்துவிடுவார்களா/ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21935/kalanidhi-vs-thadhayanidhi/- தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம்
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம் சேருவில பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த, உறுப்பினரை கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த தங்கநகர் வட்டார உறுப்பினர் கந்தசாமி சுதேஸ்குமார் என்பவரையே, கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும், பிரதேச உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சி அறிவித்துள்ளது https://akkinikkunchu.com/?p=329829- வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்?
வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்? மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தெரிவு செய்யப் பட்டு ஆட்சியை கைப்பற்றியதுடன் அதற்கு தேவையான ஒரு வாக்கை தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கரஸ் கட்சி உறுப்பினரா ? ஆதரவு வழங்கிய கறுப்பு ஆடு ? என அரசியல் கட்சிகளுக்குள்ளே கறுப்பாடு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வாகரை பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் அமர்வு வெள்ளிக்கிழமை (20) பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த பல்கோஸ் மோகனராசா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதனையடுத்து தவிசாளர் தெரிவு செய்ய உள்ளூராட்சி ஆணையாளர் கோரியபோது திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழரசு கட்சி 6 உறுப்பினர்களும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் 2 பேர் உட்பட 8 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்புக்கு வாக்களித்ததுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 7 உறுப்பினர்களும் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சத்தி ஒரு உறுப்பினர் உட்பட 11 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு வாக்களித்தனர். இதனை தொடர்ந்து தவிசாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் 12 வாக்குகளை பெற்றதுடக் இலங்கை தமிழரசு கட்சி பல்கோஸ் மோகனராசா 7 வாக்குகளை பெற்றதையடுத்து கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து பிரதித் தவிசாளருக்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சண்முகநாதன் ரசிகரன் ஐக்கிய மக்கள் சத்திய சேர்ந்த கட்சியைச் சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் போட்டியிட்டனர் இதில் சன்முகநாதன் ரசிகரனுக்கு 10 வாக்குகளும். மொஹமெட் ஹைதருக்கு ஆதரவாக 8 வாக்குகளும் கிடைத்ததுடன் ஒரு உறுப்பினர் வாக்களிப்பதை நிராகரித்த நிலையில் தமிழரசு கட்சி சண்முகநாதன் ரசிகரன் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில் தவிசாளராக போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினருக்கு 7 பேருடன் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சத்தி உறுப்பினர் ஒருவர் உட்பட 11 பேர் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் அவர் 12 வாக்குகளை பெற்றுள்ளார். எனவே மேலதிகமாக அந்த ஒரு வாக்கை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவாக தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினரா? வாக்களித்தார். இதனால் யார் அந்த கறுப்பு ஆடு, எந்த கட்சி உறுப்பினர் ? என்பது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் குழப்பகரமாக உள்ளது. https://akkinikkunchu.com/?p=329808- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ; மத்திய கிழக்கு வான்வெளியைத் தொடர்ந்து தவிர்க்கும் விமான நிறுவனங்கள் Published By: DIGITAL DESK 3 22 JUN, 2025 | 03:13 PM ஈரானின் அணுசக்தித் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து விமான நிறுவனங்கள், மத்திய கிழக்கில் உள்ள பெரும்பகுதிகளைத் தவிர்க்க முற்படுகின்றன. அங்கு நடக்கும் இருபக்க ஏவுகணை தாக்குதல்களால் விமானச் சேவை நிறுவனங்கள் மத்திய கிழக்கின் பெரும்பகுதி வான்வெளியைத் தவிர்க்க முற்படுகின்றன. ஈரானின் அணுசக்தித் தளங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த வாரம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்க அந்த வட்டாரத்திலுள்ள விமானச் சேவை நிறுவனங்கள் வான்வெளியைத் தவிர்த்து வருகின்றன என்று ‘ஃப்ளைட்ரேடார்24’ விமானப் போக்குவரத்துக் கண்காணிப்புத் தளம் தெரிவித்துள்ளது. ஈரான், ஈராக், சிரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான்வெளியில் விமானப் போக்குவரத்து இல்லை என ‘ஃப்ளைட்ரேடார்24’ தளம் காண்பிக்கிறது. கேஸ்பியன் கடல் வழியே வடக்குமுகமாக அல்லது எகிப்து, சவூதி அரேபியா வழியே தெற்குமுகமாக விமானங்கள் செல்கின்றன. இதனால் பயண நேரம் கூடுதலாக நீள்வதுடன் எரிபொருள், பணியாளர் செலவும் அதிகரிக்கின்றன. பதற்றமிக்க வட்டாரங்களில் ஏவுகணைகளை, ஆளில்லா வானுர்தி ஆகியவற்றால் விமானப் போக்குவரத்திற்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. ஜூன் 13ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விமான நிறுவனங்கள் தனது சேவைகளை நிறுத்தியுள்ளது. இருந்தபோதும் பக்கத்து நாடுகளிலிருந்து அவர்களது குடிமக்களை வெளியேற்றும் சேவைகள் இயங்கி வருகின்றன. வேறு சில சேவைகள், ஈரானில் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களை அவர்களது நாடுகளுக்குக் கொண்டுவரவுள்ளன. https://www.virakesari.lk/article/218142- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; உலகிற்கு பேரழிவு” போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர்அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அன்டோனியோ குட்டெரெஸ் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும். மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும். இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். ஐ.நா. சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் கீழ், ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தவும், போர் பதற்றத்தை தணிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆபத்தான நேரத்தில், மேலும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இராணுவ நடவடிக்கை எதற்கும் தீர்வு இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. அமைதி மட்டுமே ஒரே நம்பிக்கை." என்று தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஈரான்-மீது-அமெரிக்கா-தாக்குதல்-உலகிற்கு-பேரழிவு/50-359672- காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தயங்குவது ஏன்? - எம்.ஏ. சுமந்திரன்
காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தயங்குவது ஏன்? - எம்.ஏ. சுமந்திரன் http://www.samakalam.com/wp-content/uploads/2021/03/111103829_sumanthiran-04.jpg வடக்கில் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தீர்மானித்திருந்த அரசாங்கம், குறித்த இரத்து செய்யும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்த ஏன் தாமதிக்கிறது என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வினவியுள்ளார். தனது முகநூலில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ”வடக்கில் 5941 ஏக்கர் காணிகளுக்கான தமது உரித்தை நிரூபிக்குமாறு காணி நிர்ணய சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.1025 அன்று 2420/25 இலக்கமிட்ட வர்த்தமானி, காணி உரிமையாளர்களுக்கு கொடுத்த காலக்கெடு 28.06.2025 உடன் முடிவடைகிறது. சட்ட மறுப்புப் போராட்டத்துக்கு நாம் கொடுத்த அவகாசம் முடிவடைவதற்கு 1 நாள் இருக்க, அதை மீளப் பெறப் போவதாக 27. 05.2025 அன்று அரசு அறிவித்தது. அது உடனடியாக செய்யப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் 2 வாரமாகியும் இந்த வர்த்தமானி மீள் கைவாங்கப்படாத காரணத்தால் உச்ச நீதிமன்றத்திலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு (SC FR 112/2025) 12.06.2025 அன்று தாக்கல் செய்தேன். 17.06.2025 இவ் வழக்கு ஆதரிப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது அமைச்சரவையின் அறிவுறுத்தல் பெறுவதற்கு சட்ட மா அதிபர் இன்று வரை கால அவகாசம் கேட்டிருந்தார். இன்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரசின் முடிவை அறிவிக்க 27.06.2025 வரை (காலக்கெடு முடிவதற்கு 1 நாள் அவகாசம் இருக்க) மீண்டும் அவகாசம் கோரியிருக்கிறார்! தாம் தீர்மானித்ததாக கூறியதை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது ஏன்?” என சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். https://www.samakalam.com/காணிகளைச்-சுவீகரிக்கும்/- செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!
“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் ; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு 22 Jun, 2025 | 10:30 AM யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் ‘மக்கள் செயல்’ என்கின்ற தன்னார்வ இளையோர் அமைப்பால், திங்கட்கிழமை (23) முதல் புதன்கிழமை (25) வரையிலான மூன்று நாட்கள் செம்மணி வளைவுப் பகுதியில் ‘அணையா விளக்கு’ போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சிவில் சமூக அமைப்புகள் இணைந்து அணையா விளக்கு என்ற போராட்டத்தை மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. நாங்கள் ஒரு பங்காளராக பங்கேற்று முற்றுமுழுதாக வடக்கு கிழக்கில் மிகப்பெரிய அழைப்பை முன்னெடுக்கின்றோம். எமது உறவுகளுக்காக உயிரிழந்த உறவுகளுக்காகவும் இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் தமிழ் தேசமாக திரண்டு போராட்டத்தில் ஒன்றுசேர வேண்டும். இலங்கைக்கு தற்போது வருகைதரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்ய உள்ளதாக அறிய முடிகிறது. மிக முக்கியமாக செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தை மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்க வேண்டும். தொடர்ச்சியாக சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு சர்வதேசத்தின் முற்று முழுதாக தலையிட்டு அகழ்வாய்வை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையை திசை திருப்பவே மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கை அரசாங்கம் அழைத்துள்ளது. வடக்கு கிழக்கு தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி எங்கள் பிரச்சினைகளையும் மனித புதைகுழிகள் தொடர்ச்சியாக தோண்டப்படும் விடயங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/218106- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின் பிராந்திய அதிகாரிகள் 22 JUN, 2025 | 07:26 AM அமெரிக்கா மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதை ஈரானின் பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இஸ்பஹான் நட்டன்ஸ் போர்டோ அணுஉலைகள் தாக்கப்பட்டிருக்கலாம் என பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்பு கோம் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு விரோத இலக்குகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் ஒரு பகுதி எதிரி விமானப்படைகளால் தாக்கப்பட்டது ”என்று கோம் பிராந்தியத்தின் நெருக்கடி மேலாண்மை மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக ஃபார்ஸ் மற்றும் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன ஃபோர்டோ அணு உலையில் வடக்கு ஈரானின் மலைகளில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளது மேலும் யுரேனியத்தை அதிக தூய்மை தரங்களுக்கு செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மேம்பட்ட மையவிலக்குகள் உள்ளன. அதன் ஆழம் காரணமாக அமெரிக்காவின் "பதுங்கு குழி" bunker busters குண்டுகள் மட்டுமே இந்த அணு உலையில் சேதத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் வசதிகளும் தாக்கப்பட்டதை இஸ்ஃபஹானின் துணை பாதுகாப்பு ஆளுநர் உறுதிப்படுத்தினார். இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸில் உள்ள அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் ஊடுருவல்களை நாங்கள் கண்டோம்" என்று அவர் கூறினார் "எதிரி இலக்குகளை எதிர்கொள்ள" வான் பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டது ஆனால் "பல வெடிச்சத்தங்கள் கேட்டன" என்று அந்த அதிகாரி கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. ஈரானிய ஊடகங்களின்படி அந்த நிலையங்கள் முன்பே அகற்றப்பட்டுவிட்டன https://www.virakesari.lk/article/218098 ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் அல்லது கப்பல்பாதைகளில் தாக்குதலை மேற்கொள்ளலாம்- ஸ்கை நியுஸ் 22 JUN, 2025 | 07:13 AM ஈரான் மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை அல்லது கப்பல்களை இலககுவைக்கலாம் என ஸ்கை நியுசின் மத்தியகிழக்கிற்கான செய்தியாளர் அலைஸ்டர் பங்கெல் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஈரான் அமெரிக்காவின் தாக்குதலிற்கு பதில் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் தாக்குதலை மேற்கொண்டேயாகவேண்டிய நிலையில் உள்ளதுஆனால் அதன் தாக்குதல் எவ்வாறானதாக அமைந்திருக்கும் என்பது தெரியவில்லை. பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடன் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து அல்லது அமெரிக்க இராணுவ தளங்களை ஈரான் குறிவைக்கக்கூடும் அவர்கள் அமெரிக்கப் படைவீரர்களைக் கொன்றால் இது மிக விரைவாக மிகவும் குழப்பமாகிவிடும். ஈரான் குறிப்பிட்ட அளவிலான தாக்குதலை மேற்கொண்டால் பதிலடி கொடுத்துவிட்டதாக அவர்கள் திருப்தியடையலாம் டிரம்ப் அதைத் தொடர விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன் மேலும்போதும் நீங்கள் நூற்றுக்கணக்கான இலக்குகளைத் தாக்கி ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டீர்கள். நான் இப்போது இதைச் செய்துவிட்டேன். இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது'.என டிரம்ப் இஸ்ரேலியர்களிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கின்றேன் ஈரானுடனான மோதலில் இஸ்ரேலிய மக்கள் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக "மிகவும் ஒற்றுமையாக" உள்ளனர் ஆனால் யாரும் நீடித்த போரை விரும்பவில்லை. "அமெரிக்கர்கள் வெற்றி பெற்று இப்போது எல்லாம் முடிந்துவிட்டால் இஸ்ரேலிய அரசாங்கத்திற்குள் அது ஒரு வேலை முடிந்தது என்ற உண்மையான உணர்வு இருக்கும் என்று நான் நினைக்கிறேன் அது மிகப்பெரியது https://www.virakesari.lk/article/218097 அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை 22 Jun, 2025 | 10:36 AM ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்கா தாக்குதலை கண்டித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் இந்த தாக்குதலால் நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். இன்றுகாலை நிகழ்வுகள் மூர்க்கத்தனமானவை மேலும் அவை நித்திய விளைவுகளை ஏற்படுத்தும் என தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அபாஸ் அரக்சி ஈரானிற்கு அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்த தயார் என குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா ஈரானின் அமைதியான அணுஉலைகளை தாக்கியதன் மூலம் ஐநா சாசனம் சர்வதேச சட்டம் மற்றும் அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தம் என்பவற்றை கடுமையாக மீறியுள்ளது என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218111- குபேரா : விமர்சனம்!
குபேரா : விமர்சனம்! 20 Jun 2025, 6:11 PM ஹீரோயிசம் காட்டுவது நாகார்ஜுனாவா, தனுஷா? ’ஹீரோ ஸ்கிரீன்ல வந்தாலே தன்னால தீப்பிடிக்கும்’ என்று கதை சொல்கிற தெலுங்கு மசாலா பட இயக்குனர்களில் இருந்து நிறையவே வேறுபட்டவர் சேகர் கம்முலா. இவரது திரைப்படங்களில் ஹீரோயிசம் ‘அதீதமாக’த் தென்படாது. அதேநேரத்தில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தந்து திரைக்கதையை நகர்த்துவதில் பெயர் பெற்றவர். இப்படியொரு இயக்குனரின் கையில் தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இரண்டு நாயகர்கள் கிடைத்தால் என்னவாகும்? அவர்களில் ஒருவர் சீனியராகவும் இன்னொருவர் ஜுனியராகவும் இருந்தால் கதை சொல்லலில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும்? அப்படியொரு படமானது முழுக்க இயக்குனரின் பாணியில் அமையுமா அல்லது வழக்கமான ‘கமர்ஷியல் பட பேக்கேஜ்’ ஆக இருக்குமா? இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாகத் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா உடன் ராஷ்மிகா மந்தனா, ஜிம் சரஃப், தலீப் தஹில், பாக்யராஜ், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘குபேரா’ தரும் திரையனுபவம் எத்தகையது? எளியவர்களின் வலி! திருப்பதி மலையடிவாரத்தில் பிச்சைக்காரராக இருக்கிறார் தேவா (தனுஷ்). அவரை அழைத்துச் செல்கிறது ஒரு கும்பல். அவரை மட்டுமல்லாமல், இன்னும் மூன்று பேரை வெவ்வேறு இடங்களில் இருந்து மும்பைக்குக் கூட்டிச் செல்கிறது. அவர்களது தோற்றத்தை மாற்றி, மெல்ல அவர்களைப் பணக்காரர்களாகச் சிலர் முன்பு நிறுத்துவதே அவர்களது திட்டம். இதன் பின்னணியில் இருக்கும் நபர் தீபக் (நாகார்ஜுனா). இவர் ஒரு முன்னாள் சிபிஐ அதிகாரி. நேர்மையாகச் செயல்பட்டதற்காகச் சிறைத் தண்டனை பெற்றவர். அவரைச் சிறையில் இருந்து வெளியே அழைத்து வருகிறார் தொழிலதிபர் நீரஜ் (ஜிம் சரஃப்). பதிலுக்கு, ’தனது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிற வேலையை வெளியே தெரியாமல் செய்ய வேண்டும். என்னை எந்த கேள்வியும் கேட்கக் கூடாது’ என்று சில நிபந்தனைகளை முன்வைக்கிறார். அதனை ஏற்கிறார் தீபக். அதற்காகத்தான், தேவா உள்ளிட்ட நால்வரையும் ‘பினாமி’களாக மாற்றி, அவர்களது பெயரில் போலி நிறுவனமொன்றை தொடங்கி, அவற்றின் வழியே வர்த்தகத்தில் ஈடுபட்டதாக ஏமாற்றி, கருப்பு பணத்தை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குப் பரிமாற்றம் செய்யத் திட்டமிடுகிறார் தீபக். அந்த விஷயம் நிகழும்போது பாதியிலேயே ‘பணால்’ ஆகிறது. தேவா உடன் வந்த இரண்டு பேர் கொலை செய்யப்படுகின்றனர். அந்த உண்மை தெரிய வந்தபிறகு தேவாவும் குஷ்புவும் என்னவானார்கள் என்று சொல்கிறது இப்படத்தின் மீதி. இந்த விஷயத்தை மையமாக வைத்துக்கொண்டு, சுற்றிச் சுற்றி கண்ணாமூச்சி ஆடும்விதமாகத் திரைக்கதை அமைப்பதில் தவறிழைத்திருக்கிறது படக்குழு. அதில் சில ‘கிம்மிக்ஸ்’ சேர்த்திருந்தால் சுவையான திரையனுபவம் கிடைக்குமாறு செய்திருக்க முடியும். அதே நேரத்தில், எளியவர்களின் வலி ஒரு சமூகத்தில் வெல்லவே முடியாத வலிமையுடன் அதிகார பீடத்தில் வீற்றிருக்கிற நபர்களுக்குப் பிடிபடுகிறதா என்று சொல்வதே இக்கதையின் சிறப்பு. அசத்தும் தனுஷ்! திரையில் படம் தொடங்கிச் சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகே தனுஷ் தலைகாட்டுகிறார். படம் முழுக்க தேவா எனும் பாத்திரமாக, அசத்தல் நடிப்பைத் தந்திருக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் படம்பிடிக்கப்பட்டபோதும், அந்த வித்தியாசம் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். இதில் தீபக்காக நாகார்ஜுனா, அவரது மனைவியாக சுனைனா நடித்துள்ளனர். சமீரா எனும் பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களது நடிப்பு கதைக்குத் தேவையான வகையில் உள்ளது. ராஷ்மிகா இதில் யாருக்கு ஜோடி என்ற கேள்வி திரைக்கதையில் இருப்பது சிறப்பானதொரு விஷயம். அதே நேரத்தில், அவர் சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் விவரமாகத் திரையில் சொல்லப்படவில்லை. நாகார்ஜுனாவின் தீபக் பாத்திரம் நல்லதா, கெட்டதா என்பதைச் சொல்லவும் இயக்குனர் தடுமாறியிருக்கிறார். ‘இது என்னாச்சு’, ‘அது என்னாச்சு’ என்று ரசிகர்கள் கேட்கும்விதமாகச் சில விஷயங்களை ‘அம்போ’வென்று திரைக்கதையில் நிறுத்தி வைத்திருக்கிறார். அனைத்தையும் தாண்டி, இப்படம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஓடுகிறது. அதனைச் சரி செய்யும் வகையில் கொஞ்சம் திரைக்கதையைச் செறிவானதாக ஆக்கியிருக்கலாம். கூடவே, வில்லனின் ஆட்கள் மற்றும் இதர பாத்திரங்களூக்கான முக்கியத்துவத்தையும் அதிகப்படுத்தியிருக்கலாம். சசி இயக்கிய ‘பிச்சைக்காரன்’ படத்தை இதற்கான உதாரணமாகக் கொண்டிருக்கலாம். சைதன்யா பிங்கலி உடன் இணைந்து இதற்குத் திரைக்கதையாக்கம் செய்திருக்கிறார் சேகர் கம்முலா. அகோரம் பன்னீர்செல்வத்தின் தமிழ் வசனங்கள் ஆங்காங்கே நம்மை ஈர்க்கின்றன. ‘உன் சாவை நீ சாவு, என் சாவை நான் சாவுறேன்’, ‘வாழ்றதுக்காகத்தான் பொழைக்கணும்’ என்பது போன்ற வசனங்கள் முதலில் அயர்ச்சியூட்டினாலும், அடுத்தடுத்து ஒலிக்கையில் கைத்தட்டலை பெறுகின்றன. இந்த படத்தில் வில்லனாக வரும் ஜிம் சரஃப் அசத்தியிருக்கிறார். இன்னும் தலீப் தஹில், பாக்யராஜ் என்று சில சீனியர்கள் திரையில் வந்து போயிருக்கின்றனர். குறிப்பாக, பாக்யராஜை அவரது குரல் கொண்டே அடையாளம் காண முடிகிறது. தெலுங்கு பதிப்பில் அப்பாத்திரத்திற்கு அவரே ‘டப்பிங்’ பேசியிருக்கிறாரா எனத் தெரியவில்லை. கேலு, திவ்யா, குஷ்புவாக நடித்தவர்கள், அடியாட்களாக வருபவர்கள் உட்படச் சிலருக்குச் சரியான முக்கியத்துவம் திரைக்கதையில் தரப்படவில்லை. அவை உறுத்தலாகத் தென்படுகின்றன. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியன படத்தை ‘கலர்ஃபுல்’லாக காட்ட உதவியிருக்கின்றன. கார்த்திகா ஸ்ரீனிவாஸின் படத்தொகுப்பு இன்னும் கூர்மையாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும். இது போக ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, டிஐ என்று பல நுட்பங்கள் கதை சொல்லலுக்கு உதவியிருக்கின்றன. தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை முன்பாதியில் இருக்கும் மந்தத்தன்மையை நன்றாகவே மறைத்திருக்கிறது. பின்பாதியில் அதனைச் சரிக்கட்டத் திணறியிருக்கிறது. ஆனாலும், ‘கத கத’, ‘போய்வா நண்பா’ பாடல்கள் நம்மை ஆட்டுவிக்கின்றன. நாகார்ஜுனா, தனுஷ் ஆகிய இரண்டு நடிகர்களைக் கொண்டு திரையில் ‘ஆடு புலி ஆட்டம்’ ஆட முயன்றிருக்கிறார் சேகர் கம்முலா. ஆனால், அது சரிவர அமையப் பெறவில்லை என்பதே உண்மை. கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சி வலிந்து திணிக்கப்பட்டாற் போல உள்ளது. ஜிம் சரஃப் பாத்திரம் பற்றி இறுதிக்காட்சியில் தனுஷ் பேசுகிற வசனங்களுக்கும் அதனைத் தொடர்ந்தாற் போல இடம்பெற்ற சண்டைக்காட்சிக்கும் பெரிதாகத் தொடர்பு ஏதும் இல்லை. ஆக்ஷன் காட்சிகளில் நாகார்ஜுனாவையும், வசனங்கள் மற்றும் நடிப்பு வழியே தனுஷையும் திரையில் காட்டி ‘ஹீரோயிசத்தை’ வெளிப்படுத்த முயன்றிருக்கிறார் சேகர் கம்முலா. ஆனால், இரண்டுமே போதுமான அளவு படத்தில் எடுபடவில்லை என்பதுதான் குறை. அதேநேரத்தில், சமீபகாலமாக வந்த ‘பான் இந்தியா’ மற்றும் பிரமாண்ட படங்களைக் காட்டிலும் வேறுபட்டதொரு திரையனுபவத்தைத் தருகிறது ‘குபேரா’. இதிலிருக்கிற லாஜிக் மீறல்கள், அடிப்படைக் குறைகள் உள்ளிட்டவற்றைப் புறந்தள்ளிவிட்டால், ஓரளவுக்கு வேறுபட்ட கமர்ஷியல் படம் பார்த்த எண்ணம் மனதில் உருவாகும். அது போதும் என்பவர்கள் மட்டுமே ‘குபேரா’வை பார்த்துச் சிலாகிக்க முடியும்..! https://minnambalam.com/dhanush-kuberaa-movie-review-june-20/- நல்லூரில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் புதிய நிலையம் விரைவில் அமைக்கப்படும்; தவிசாளர் மயூரன் அறிவிப்பு
யாழ். நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை 21 JUN, 2025 | 11:27 AM நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி, அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள குறித்த நிலையத்தால், அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மருத்துவ, இலத்திரனியல், இரசாயன, பொலித்தீன், பிளாஸ்டி உள்ளிட்ட கழிவுகளை தரம் பிரிக்காமல் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதேவேளை தாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் துர்நாற்றத்தையே சுவாசித்து வருவதாகவும் , நிலத்தடி நீரை சுத்தமாக குடிக்க முடியாமலும் நிம்மதியாக உறங்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாகவும் நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மைக்காலமாக இனம் தெரியாத நபர்கள் குறித்த கழிவுகளுக்கு இரவு வேளைகளில் தீ வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த பிரதேச சபையினர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், தீயினால் ஏற்படும் புகையினால் அயல் மக்கள் பெரும் துன்பங்களையும் எதிர்கொண்டு வந்தனர். அவ்வாறான நிலையில் இதனை ஒரு பொதுத் தொல்லையாகவும் சூழல் மாசடையக் கூடிய வகையில் காணப்படுகின்றமை தொடர்பிலும் யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் மீதான விசாரணைகளை அடுத்து, அப்பகுதியில் கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்துமாறும், அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை காரைக்காலில் உள்ள கழிவு தரம் பிரிக்கும் மையத்தை அப்பகுதியில் இருந்து அகற்றி, பிறிதொரு இடத்திற்கு அதனை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இனிவரும் காலங்களில் கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரித்தே கையளிக்க வேண்டும் எனவும், தரம் பிரிக்காத கழிவுகளை பிரதேச சபை சுகாதார தொழிலாளிகள் கையேற்க மாட்டார்கள் எனவும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218047- செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்! adminJune 21, 2025 யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ வெளிப்படுத்தப்படவில்லை. எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும் என்கிற குறியீட்டு அர்த்தத்திலேயே இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் எரியக்கூடிய அணையா விளக்கு ஏற்றப்படுகின்றது. போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில், முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி் முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும், செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும், நாடக அளிக்கையும் இடம்பெறும். 25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும். போராட்டத்தின் இறுதி நாளன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/217105/- மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டம்: 30 பேர் விடுதலை
மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டம்: 30 பேர் விடுதலை மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி 2023 ஒக்டோபர் 8 அன்று கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார். கடந்த 2023 ஒக்டோபர் 8 அன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு – செங்கலடி வருகையின்போது, மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக, வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், முறைகேடாக ஆட்களைத் தடுத்து வைத்தல் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஏறாவூர் பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் நேற்று (20) நடைபெற்றது. விசாரணையின்போது, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு மேலதிக ஆதாரங்கள் இல்லாததால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 186ஆவது பிரிவின் கீழ் நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து, குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். https://akkinikkunchu.com/?p=329597- சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து
தமிழரசுக்கட்சி -தமிழ் மக்கள் கூட்டணி கூட்டு ஆட்சி – சந்தர்ப்பவாத தமிழ்த்தேசிய விரோதம்! சுமந்திரனுடன் தமிழரசுக்கட்சி சார்பில் ஒப்பந்தம் செய்துள்ளமை திரு.க.வி.விக்னேஸ்வரனின் சந்தர்ப்பவாத தமிழ்தேசியவிரோத சக்திகளுடனான வங்குரோத்து அரசியல் வியாபாரம் என்பதால் மிகவும் ஏமாற்றத்துடன் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம். இவ்வாறு முன்னாள் தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினர் ச.ஸ்ரார்லின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் அனுப்பப்பட்ட ஊடக அறிக்கையில் உள்ளதாவது, தமிழ்தேசிய பரப்பில் இவருக்காக மீன்சின்னத்தை வழங்கி பாராளுமன்றம் அனுப்பிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்காமல் யாரின் பதவிமோகத்திற்காகவும் எதற்காகவும் இந்த ஒப்பந்தம் என்பதை மான் சின்னத்திற்கு வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்தேசிய விரோத மேல்சாதிய கோட்பாடுகளை முன்னிறுத்தி அரசியல் செய்யும் திரு.விக்னேஸ்வரன் பிரத்தியேக ஆலோசகரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டு பின்னர் அதுபற்றி எதுவும் தெரியாதவர்போன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த நாடகத்தை நாம் நன்கு அறிவோம்.தமிழ்தேசிய கொள்கைபற்றுள்ளவர்கள் கட்சியிலிருந்து மட்டுமல்ல அலுவலகத்திலிருந்தும் வெளியேற்றப்படுவது ஏன் என்பது இப்போது தெளிவாகின்றது. தமிழ்தேசியத்தை நேசிப்பவர்களால் தமிழினத்துரோகிகளாக அடையபளப்படுத்தப்பட்ட ஈபிடீபி யினருடன் தமிழ்தேசியநலன்களை புறம்தள்ளி பதவிக்காகவும் தமிழ்தேசியம் ஒற்றுமைபடுவதை சிதைக்கும் எண்ணகருவுடன் ஒப்பந்தம் செய்த சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான தமிழரசுக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்ததன்முலம் முன்னர் வி.மணிவண்ணன் முதல்வர் பதவிக்காக ஈபிடீபியுடன் இனைந்து ஆட்சியமைத்தமையை போன்று இப்போதும் தமிழ் மக்கள் கூட்டணியில் நடப்பதால் இப்படியான அரசியல் வியாபாரத்திற்காகதானோ தமிழ்தேசியகொள்கை பற்றாளர்கள் திரு.மணிவண்ணனின் உள்வருகையுடன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது நிதர்சனமாகின்றது. திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியபோது அவர் தமிழ்தேசிய வெற்றிடத்தை நிரப்ப வந்தவர் என்ற பெரும்நம்பிக்கையுடன் மக்கள் ஆதரவுகாட்டினர் நாமும் அவ்நம்பிக்கையுடனே தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்காக உழைத்தோம் எனினும் முன்னர் திரு.ஆ.சுமந்திரனிடம் சூடு வாங்கிய திரு.விக்னேஸ்வரன் மீண்டும் சூடு வாங்க உள்நுழைந்துவிட்டார் நல்ல மாட்டிற்கு ஒரு சூடு போதும். அவனே கொள்கை பற்றாளனாக மதிக்கப்படுவான் போற்றுதலுக்குரியவன். சூடு சொரணை இல்லாதவர்கள் எம் தமிழ்தேசியப்பரப்பில் எதற்காக? எம்வாக்குகளால் அவர்களும் அவர் சார்ந்தவர்களும் சொந்த நலன்களை அனுபவித்தது போதும். இவ்வாறானவர்களை இணங்கண்டு நீக்கிவைத்து நாம் தமிழர்களாக எம்தேசியத்திற்காக ஒன்றிணைவோம்.- என்றுள்ளது. https://akkinikkunchu.com/?p=329609- தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்
பண்டிதர் பரந்தாமனின் நூலில் இருந்து சில பகுதிகள் - எரிபொருள் வரிசையில் நின்ற மக்களும் தொங்கு சபைகளும் - நிலாந்தன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.