Everything posted by கிருபன்
-
பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
தலைப்பில் ஐரோப்பிய யூனியன், கனடா கொடிகள் இருக்கின்றன. பிரித்தானியாவின் கொடி இல்லை! பிரித்தானியாவில் முன்னேற நிறைய வாய்ப்புக்கள் உள்ளன என்பதால் பலர் தும்படியில் இருந்து வெளியேறிவிட்டனர். ஆனால் இதே நிலை எல்லா நாடுகளிலும் இங்குள்ள வீதத்தில் இல்லை!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை செவ்வாய் 06 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI எதிர் GT 20 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் மூன்று பேர் மாத்திரம் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ சுவைப்பிரியன் ஏராளன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று நடந்த 51வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலாவது பந்தில் கருண் நாயரின் விக்கெட்டைப் பறிகொடுத்து மிக மோசமாக ஆட்டத்தைத் தொடங்கியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 12.1 ஓவர்களில் 62 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது. எனினும் ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸும் அஷுதோஷ் ஷர்மாவும் தலா 41 ஓட்டங்களுடன் இணைப்பாட்டத்தைக் கொடுத்து, இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலகுவாக வெல்லலாம் என்று நினைத்திருக்க வருணபகவான் எதிர்நிலை எடுத்ததால் மழை பொழிந்து தள்ளி ஆட்டம் கைவிடப்பட்டது. முடிவு: முடிவில்லை! இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவரும் “முடிவில்லை” என்று கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!
-
அநுர குமார திசாநாயக்க: கதாநாயகனா, வில்லனா?
அநுர குமார திசாநாயக்க: கதாநாயகனா, வில்லனா? கடந்த வெள்ளிக்கிழமை 'சிரச' தொலைக்காட்சியின் 'சட்டன' அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மிகுந்த பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பதிலளித்தார். இலங்கையின் 47 வருட கால நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி வரலாற்றின் முன்னுதாரணங்களற்ற ஒரு நிகழ்வு அது. எவ்விதமான பதற்றமோ சங்கட உணர்வுகளோ இல்லாமல் உச்ச மட்ட தன்னம்பிக்கையுடன் அவர் கேள்விகளை எதிர்கொண்ட லாகவம், வலிந்து வரவழைத்துக் கொள்ளாத இயல்பான நிதானம், எவரையும் ஆகர்ஷிக்கக் கூடிய மெல்லிய சந்தோசத்தை வெளிப்படுத்தும் உடல்மொழி ஆகிய அனைத்தும் அவருக்கேயுரிய தனித்துவமான பண்புகள். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரப் போக்குகள் (Macro Economy) குறித்து புள்ளி விபரங்களுடன் கூடிய தெளிவான ஒரு சித்திரத்தை முன்வைத்த அவர், அதனுடன் நின்றுவிடவில்லை. வெவ்வேறு துறைகளுக்கும் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் ஆகியோர் வழங்க வேண்டிய விரிவான தகவல்களை (துல்லியமான தரவுகளுடனும், பொருத்தமான உதாரணங்களுடனும்) முன்வைத்தார். மூன்றரை மணி நேரம் நெடுகிலும் எவ்வித தொய்வோ, தடுமாற்றங்களோ சொற்களைத் தேடுவதற்கான கால தாமதங்களோ எவையுமில்லாமல் ஒரே சீராக ஒலித்தது அவருடைய குரல். 1978 - 2024 காலப் பிரிவில் ஜனாதிபதி பதவியை வகித்த எண்மரில் எவரும் இந்த அளவுக்கு ' Homework' உடன் வந்து ஊடகவியலாளர்களை சந்தித்த வரலாறு கிடையாது. அதேபோல தனது அரசாங்கம் முன்னெடுக்கப் போகும் ஒட்டுமொத்த சீர்த்திருத்த நிகழ்ச்சிநிரலை (Comprehensive Reform Agenda) இவ்வளவு தெளிவாக, ஆணித்தரமாக எடுத்து விளக்கும் திறனையோ அல்லது தமது சிந்தனைகளை கோர்வையாக தொகுத்து சரளமான மொழியில் வெளிப்படுத்தும் ஆற்றலையோ அந்த முன்னைய எண்மரில் எவரும் கொண்டிருக்கவில்லை என்பதும் உண்மை. அந்த வகையில், அநுர குமாரவின் வசீகர ஆளுமைக்கும் (Charismatic Personality), தனித்துவமான தலைமைத்துவப் பண்புகளுக்கும், தொடர்பாடல் திறனுக்கும் சவால் விடுப்பதற்கு இன்று எதிர்க்கட்சியிலோ அல்லது ஆளும் கட்சியிலோ எவரும் இருந்து வரவில்லை என்பது நிதர்சனம். ஜனாதிபதியை நோக்கி 'அண்டப் புளுகன்' மற்றும் 'அந்தரே' (அரசவை கோமாளி) போன்ற வசைச் சொற்களை வீசுவதைத் தவிர, ஆக்கபூர்வமான திட்டங்கள் எவற்றையும் முன்வைக்கும் திராணியை இன்றைய எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கவில்லை. கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இந்த அளவுக்குப் பலவீனமான, மக்களிடமிருந்து வெகு தூரம் விலகிப்போயிருக்கும் ஓர் எதிர்க்கட்சி இருந்து வரவில்லை என்றே சொல்ல வேண்டும். இவ்வருடம் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விதம் ஓர் அரசியல் சக்தியாக NPP விசுவரூபமெடுத்து வருவதையும், SJB, SLFP மற்றும் SLPP போன்ற கட்சிகள் வீழ்ச்சியையும், சீரழிவையும் நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருப்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டியது. ஜனாதிபதி கனவில் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க மற்றும் திலித் ஜயவீர போன்றவர்கள், முன்னர் எடுத்து விளக்கப்பட்ட அநுர குமாரவின் சிறப்புத் தகுதிகளை எட்டும் விடயத்தில் இன்னமும் வெகு தூரம் பின்தங்கியவர்களாகவே இருந்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் உடனடியாக ஒரு மீட்சி நிலையை எடுத்து வந்து, விலைவாசிக் குறைப்பு மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் என்பவற்றின் வடிவில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்ற யதார்த்தத்தை நன்கு புரிந்து கொண்டிருக்கும் அரசாங்கம் வேறு சில துறைகளில் முழுக்க முழுக்க கவனஞ் செலுத்தும் ஓர் உத்தியை பின்பற்றி வருவதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. அந்தப் பின்புலத்திலயே, 'அரசியலிலும், அரச நிர்வாக யந்திரத்திலும் வேரூன்றியிருக்கும் இலஞ்சம், ஊழல், வீண் விரயம் மற்றும் முறைகேடுகள் என்பவற்றை இல்லாதொழிப்போம்' என்ற சுலோகத்தை ஜனாதிபதி கையில் எடுத்திருக்கிறார். அது மறைமுகமாக பொருளாதார மீட்சிக்கும், வளர்ச்சிக்கும் வழிகோல முடியுமென்பது அரசாங்கத்தின் கணிப்பு. கூட்டாக கொள்ளையடிக்கும் ஓர் உத்தியாக அரசியல்வாதிகளுக்கும். அரசு அதிகாரிகளுக்குமிடையில் இதுவரையில் நிலவு வந்திருக்கும் கள்ளக் கூட்டை (Politician - Bureaucracy Nexus) முடிவுக்கு கொண்டு வருவது இதற்கான முதற்படி. ஜனாதிபதி சுட்டிக் காட்டியதைப் போல அது இப்பொழுது நிகழ்ந்திருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அரச அதிகாரிகள் மட்டத்தில் மேலோங்கியிருக்கும் இலஞ்ச / ஊழல் கலாசாரத்தை முற்றாக ஒழிப்பதற்கு இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். ராஜபக்ச எதிர்ப்பை மையப் புள்ளியில் வைத்து இனவாத / மதவாத சக்திகளை பலவீனப்படுத்தி, முறியடிப்பதே அரசாங்கத்தின் அடுத்த முன்னுரிமை. ஒரு சில அரச சார்பு சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் இதற்கென இப்பொழுது களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், NPP அரசாங்கத்துக்கும் நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவளித்து வரும் யூடியூபர்களில் முதன்மையானவரும் முக்கியமானவரும் 'Sudaa' எனப் பிரபல்யமடைந்திருக்கும் சுதத்த திலகசிரி. அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களின் மறைமுக ஆசீர்வாதத்துடனும், அனுசரணையுடனும் அவர் செயல்பட்டு வருவதாக பரவலாக நம்பப்படுகிறது. (அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் விசேட பொலீஸ் பாதுகாப்பு தொடர்பாகவும் பலர் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.) தனியாகவும், இன்னொருவருடன் இணைந்தும் அவர் ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு காணொளிகளை அவருடைய யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். சிங்கள யூடியூப் உலகில் சுதாவின் எதிர்த்தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் முன்னணி நபர் இராஜ் வீரரத்ன; ராஜபக்சகளின் - குறிப்பாக இப்பொழுது நாமல் ராஜபக்சவின் - அடியாள் என்று சொன்னால் தப்பில்லை. இவ்விருவருக்குமிடையில் இடம்பெற்று வரும் உக்கிரமான சண்டைகள் - அவை பொருட்படுத்தக்கூடிய அரசியல் அலசல்களையோ அல்லது தர்க்கரீதியான வாதங்களையோ கொண்டிராவிட்டாலும் கூட - அவற்றின் வசைகள். இரட்டை அர்த்தம் தொனிக்கும் பகடிகள் மற்றும் இதுவரையில் எவரும் பொது வெளியில் பேசத் துணியாத சிங்கள தூஷண வார்த்தைகள் என்பவற்றுக்காக பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. "நாட்டின் பொதுசன அபிப்பிராயத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் ஒரு சக்தியாக சுதத்த திலகசிரி போன்றவர்கள் எழுச்சியடைந்திருப்பது பெரும் துரதிர்ஷ்டம் ............. ஆனால், இன்றைய சமூக ஊடக உலகில் அது ஒரு விதத்தில் தவிர்க்க முடியாதது" என்கிறார் மூத்த இடதுசாரி சிந்தனையாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான தீப்தி குமார குணரத்ன. NPP அரசாங்கம் குறித்து எதிர்க்கட்சிகளாலும், அரச எதிர்ப்பு யூடியூப் தளங்களாலும் முன்வைக்கப்பட்டு வரும் கடுமையான விமர்சனங்களை அரசாங்க அமைச்சர்களோ அல்லது புதுமுகங்களான நூற்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ தனித்து நின்று எதிர்கொள்ள முடியாது என்பதனை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. காட்சி ஊடகங்களில் தோன்றி, எதிரிகளை வாயடைக்கச் செய்யக்கூடிய அளவுக்கு எதிர்வாதங்களை முன்வைக்கும் திறனோ அல்லது முறையான தொடர்பாடல் பயிற்சியோ அரசாங்கத்திலிருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்று சொல்லலாம். ஒரு விதத்தில் அந்தக் குறையை ஈடு செய்யும் ஒரு பாத்திரத்தையே (அரசாங்கத்தின் சார்பில்) சுதத்த திலகசிரி வகித்து வருகிறார். கலரியை இலக்கு வைத்து அவர் வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் இந்த வேலைக்கு பிறதொரு தளத்தில் நின்று குறைநிரப்புச் செய்கிறார் 'History with Nirmal' என்ற யூடியூப் தளத்தை நடத்தி வரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி (அரசு ஆதரவு நிலைப்பாட்டில் நின்று) இலங்கையின் சமகால அரசியல், சமூகப் பிரச்சினைகளை அவர் இந்த யூடியூப் தளத்தில் அலசுகிறார். ஜனாதிபதி அநுர குமாரவின் நகர்வுகளுக்கான கோட்பாட்டு மற்றும் நடைமுறைசார் பின்புலத்தை வழங்குவதற்கும் முயற்சித்து வருகிறார். சுதத்த திலகசிரியின் யூடியூப் தளத்தில் தீவிர சிங்கள இனவாத தர்ப்புக்களை இலக்கு வைத்து முன்னெப்பொழுதும் இருந்திராத அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் தலையசைப்பு இருந்து வருவதாகவே தெரிகிறது. தலதா கண்காட்சியின் போது கண்டி நகரப் பள்ளிவாசல்களை திறந்து வைத்து, முஸ்லிம் சமூகம் காட்டிய சமய நல்லிணக்கத்திற்கான முன்மாதிரியை பெரிதும் சிலாகித்து அவர் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதனுடன் இணைந்த விதத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது முன்வைத்த துணிச்சலான வசைச் சொற்கள்; டாக்டர் ஷாபியின் மகளின் A/L பெறுபேறுகளை குறிப்பிட்டு அத்துரலியே ரதன தேரர், விமல் வீரசன்ச, உதய கம்மன்பில மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோருக்கு சாபமிடும் விதத்தில் வெளியிட்ட காணொளி ஆகிய அனைத்தும் இனவாதிகளின் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்தி, அதன் மூலம் அவர்களை பலவீனப்படுத்தும் நோக்குடன் நன்கு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சிநிரலின் அங்கங்களாகவே தென்படுகின்றன. டாண் பிரியசாத் அஞ்சலி உரையில் பலங்கொட கஸப்ப தேரர் எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்காமல் ஜிஹாத் தீவிரவாதிகள் டாண் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்த கருத்தும் சிங்கள சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. இவை அனைத்தும் தீவிர சிங்கள பௌத்த நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வரும் தரப்புக்களுக்கும், NPP அரசாங்கத்துக்குமிடையில் ஒரு மோதல் நிலை (Confrontation) தோன்றியிருப்பதையே காட்டுகின்றன. அவை அடுத்து வரும் மாதங்களில் மேலும் தீவிரமடைய முடியும். "திசைகாட்டியின் வெற்றி சிங்கள பௌத்தர்களின் தோல்வி" என்ற தலைப்பில் யூடியூப் தளமொன்றில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார் முன்னணி பிக்கு ஒருவர் - ''புத்தசாசனம் மற்றும் சமய விவகாரங்கள் என்பவற்றுக்குப் பொறுப்பான அமைச்சராக கிறிஸ்தவர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல; திட்டமிட்டே செய்யப்பட்டிருக்கும் காரியம்............. இவர்கள் 'நிராகமிக' (எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள்) அல்ல; இலங்கையிலுள்ள ஏனைய மதங்களை மதிக்கும் அதே வேளையில், பௌத்த மதத்தை மட்டும் இழிவுபடுத்துபவர்கள்." "................. கல்துவ ஆரண்ய புண்ணியஸ்தலத்தின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு வேலைகளை தொடர்ந்து கடற்படையினரே செய்து வந்திருக்கிறார்கள். ஆனால், இந்தத் தடவை அதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது 'ஒரு மணித்தியாலத்துக்கு 93,000 ரூபா வீதம் செலுத்தினால் மட்டுமே அந்த வேலைகளை பொறுப்பேற்க முடியும்' என்று ஒரு கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது." கடந்த மார்ச் மாதம் இறுதிப் பகுதியில் அமரபுர பீடத்துக்கு சொந்தமானது எனக் கூறப்படும் யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்தில் ஒரு புதிய மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. அதனையொட்டி இடம்பெற்ற சமயக் கிரியைகளின் போது பாதுகாப்புப் பணியிலும், அதேபோல அன்னதானங்களை விநியோகிக்கும் வேலையிலும் பெருந்தொகையான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். இராணுவ பாண்ட் வாத்தியக் குழுவொன்றும் அங்கு பிரசன்னமாகியிருந்தது. ஆனால். இராணுவத் தளபதியிடமிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பையடுத்து அங்கிருந்து உடனடியாக இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. . இதனைக் கண்டித்து விமல் வீரவன்ச கொழும்பில் நடத்திய ஒரு ஊடக மாநாட்டில் ஜனாதிபதி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அப்பொழுது அவர் சொன்ன ஒரு விடயம் இது: "அரசாங்கத்தின் முக்கியமான தலைவர் ஒருவர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை அழைத்து மிகவும் கண்டிப்பான ஒரு பணிப்புரையை வழங்கியிருக்கிறார். 'வடக்கு கிழக்கில் இருக்கும் தொல்லியல் அமைவிடங்களை இனிமேல் பௌத்த தொல்லியல் அமைவிடங்கள் என்றோ அல்லது இந்து தொல்லியல் அமைவிடங்கள் என்றோ அழைக்கக் கூடாது' என்பதே அப்பணிப்புரை.................... இது பௌத்த தொல்லியல் அமைவிடங்களுக்கு பிற்காலத்தில் இந்துக்கள் உரிமை கோரும் ஒரு நிலைமையை நிச்சயமாக எடுத்து வரும்". இது தொடர்பாக அமரபுர பீடத்தைச் சேர்ந்த கலாநிதி புஸ்ஸல்லாவே சோமவிசுத்தி மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் உள்ள பின்வரும் வ்ரிகளை வீரவன்ச வலியுறுத்திக் கூறி, மேற்கோள் காட்டியிருந்தார்: ''வேற்று மதத்தவரான இராணுவத் தளபதி இதிலும் பார்க்க ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டுமென்பதே எமது கருத்தாகும்." எளிதில் உணர்வுகளைத் தூண்டக் கூடிய பிரச்சினைகளை (Sensitive Issues) அரசாங்கம் மிகவும் நிதானமாக கையாண்டு வரும் அதே வேளையில், ஏற்கனவே ஸ்தாபிதமாகியிருக்கும் 'தவறான முன்னுதாரணங்களை' படிப்படியாக களைவதற்கு தேவையான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது என்பதனையும் மேற்படி இரு சம்பவங்களும் காட்டுகின்றன. 'கடந்த காலத்தில் நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை, அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் நோக்கியிருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சொல்லப்போனால் நாங்கள் அதிகமும் சிங்கள மக்கள் தொடர்பாக தான் கவனம் செலுத்தி வந்திருக்கிறோம்.....................' என 'சட்டன' நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒரு மெல்லிய குற்ற உணர்வுடன் சொன்னதையும் ஜேவிபி தரப்பில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு சிந்தனை மாற்றமாக இருந்து வருகிறது எனக் கருதலாம். அது தவிர, தந்ததாது கண்காட்சி தொடர்பாக நேர்ந்த ஒரு சில குளறுபடிகளையடுத்து, தியவடன நிலமே நிலந்த தள பண்டாரவை இலக்கு வைத்து சுதா யூடியூப் தளம் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் தாக்குதல்கள் இப்பொழுது உச்ச கட்டத்தை எட்டியிருக்கின்றன. தலதா மாளிகை நிதிகளை தியவடன நிலமே துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், சட்ட விரோதமான பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்று வருவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார் சுதா. அதற்கான ஆதாரங்களை அடுத்து வரும் நாட்களில் முன்வைக்கப் போவதாகவும் அவர் தள பண்டாரவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தியவடன நிலமே தெரிவுக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களின் இடம்பெறவிருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இஸ்லாமோபோபியாவை மூலதனமாகக் கொண்டு கடந்த 13 ஆண்டுகளாக அரசியல் செய்து வந்திருக்கும் ஞானசார தேரர் இப்பொழுது முதல் தடவையாக தான் எதிரியாக கருதும் ஓர் அரசாங்கத்தை (Hostile Government) எதிர்கொள்கிறார். அண்மையில் அவர் நடத்திய ஊடகச் சந்திப்புகளில் ஒரு வித பதற்றமும், அச்சமும் சூழ்ந்த உடல்மொழியை அவர் வெளிப்படுத்திக் காட்டியதை உன்னிப்பாக பார்க்கும் பொழுது அவதானிக்க முடிந்தது. 2010 - 2015 மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும், 2015 - 2019 நல்லாட்சி அரசாங்கத்திலும், அதே போல 2019 கோட்டாபய அரசாங்கத்திலும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பலர் இருந்து வந்தார்கள். ஆனால் இப்போழுது நிலைமை மாறியிருக்கிறது. ஞானசார தேரரின் அந்தரங்க வாழ்க்கை தொடர்பான ஒரு சில காணொளிகளை வெளியிட வேண்டி நேரிடலாம் என்ற விதத்தில் சுதா அவருக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கையும் ஒரு வேளை அவருடைய எதிர்கால செயல்பாடுகள் மீது தாக்கம் செலுத்த முடியும். எத்தகைய ஆதாரங்களையும் முன்வைக்காமல் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த கட்டுக் கதைகளை பரப்பி, சிங்கள மக்களுக்கு மத்தியில் ஒரு இனம் புரியாது அச்சத்தையும், மறுபுறம் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் பதற்ற உணர்வையும் தோற்றுவிக்கும் அவருடைய வழமையான நடைமுறையை இனிமேலும் தொடர முடியுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பொருளாதார நெருக்கடி, குமார குணரத்னத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 'அந்தரே' என்ற அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு செயற்பாடுகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றை கையாள்வது அநுர குமார திசாநாயக்க எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான ஒரு சவாலாக இருந்து வருகின்றது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சிறுபான்மை சமூகங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கதாநாயகனாக பார்க்கப்படுவாரா அல்லது வில்லனாக பார்க்கப்படுவாரா என்பது மீண்டும் நாட்டில் தலைத்தூக்க தொடங்கியிருக்கும் இனவாதிகளையும், மத வெறியர்களையும் அவர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே அமையும்! From Mlm Mansoor timeline https://www.facebook.com/share/p/1BJE2r4PYY/?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு வாட்டி காவ்யா மேடம் கட்டிப் புடிப்பாங்க🤪
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
MATCH DELAYED BY RAIN 55th Match (N), Hyderabad, May 05, 2025, Indian Premier League DC (20 ov) 133/7 SRH
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை திங்கள் 05 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 17 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஈழப்பிரியன் சுவி செம்பாட்டான் ஏராளன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் ராமனுல்லா குர்பாஸ், அன்கியா ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங் ஆகியோரின் கமியோ ஆட்டங்களினாலும், அண்ட்ரே ரஸல்ஸின் அதிரடிப் புயல்வேக 25 பந்துகளில் அடித்த 57 ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பித்தாலும் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்ததால் துரத்துவதில் சறுக்கி 5 விக்கெட்டுகளை 71 ஓட்டங்களில் இழந்திருந்தது. எனினும் மோயின் அலியின் மூன்றாவது ஓவரில் ரியான் பராக் 5 சிக்ஸர்களை அடித்தபோது ஆட்டம் திசைமாறியது. ரியான் பராக் புயல்வேகத்தில் 95 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். ஷிம்ரொன் ஹெட்மயர், ஷிவம் டுபேயின் அதிரடி ஆட்டங்களால் வெற்றிக்கோட்டுக்கு அண்மித்து, இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரே ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ப்ராப்சிம்ரன் சிங்கின் மின்னல்வேக 91 ஓட்டங்களுடனும், ஜொஷ் இங்கிலிஸ், ஷ்ரேயஸ் ஐயர், ஷஷாங் சிங் போன்றோரின் கமியோ ஓட்டங்களுடனுன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பிக்கொண்டிருந்ததால் வெற்றி வாய்ப்பு கடினமாக இருந்தது. ஆயுஷ் படோனியும், அப்துல் சமட்டும் முறையே 74 ஓட்டங்களையும், 45 ஓட்டங்களையும் விளாசியும் இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
- IMG_0795.jpeg
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இலகுவாக வெல்லவேண்டிய மட்ச்.. இப்படி ரண் அவுட்டில் வெல்லவேண்டியதாகப் போச்சு! ரிங்கு சிங் நொண்டுவதைப் பார்த்தால் அவர் இனி விளையாடமாட்டார் போலிருக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
KKR வெற்றி! ஹார்ட் அற்றாக் வராத குறை!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு ஓவர்கள் உள்ளன. KKR வெல்லுமா? KKR 206/4 RR (18/20 ov, T:207) 174/7 RR need 33 runs in 12 balls. CRR: 9.66 • RRR: 16.50 • Last 5 ov (RR): 40/2 (8.00)
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
KKR 206/4 RR (13/20 ov, T:207) 134/5 RR need 73 runs in 42 balls. CRR: 10.30 • RRR: 10.42 • Last 5 ov (RR): 62/0 (12.40)
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை.. இலங்கையிலிருந்து 1990களிலிருந்து தான் தமிழர்கள் அதிகளவாக புலம்பெயர ஆரம்பித்தார்கள் ஐரோப்பா,கனடாவை நோக்கி.. நான் ஐரோப்பா வந்தது 2002ல், வெற்றிகரமாக 23 ஆண்டுகள் ஐரோப்பாவில் பல நாடுகளில் காலம் தள்ளியாச்சு.. சரி நான் சொல்ல வந்த விசயம்.. புலம் பெயர்ந்து வந்த முதலாவது தலைமுறையில் 50-60% வீதமானவர்கள் இப்போது ஓய்வூதியம் பெறும் வயதில் இருக்கிறார்கள்.. இவர்களைப் பற்றிய ஒரு சில தகவல்கள்.. 🔗புதிதாக வந்த நாட்டில் மொழி தெரியாமல், கல்வி தகமை அதிகம் தேவையில்லாத தொழில்கள் (துப்பரவு,உணவகம்) மூலம் தங்கள் வாழ்க்கையை தொடங்கியவர்கள். முதலாவது தலமுறையில் இங்கு முதல் வந்தவர்கள் 90% ஆண்கள் தான். (ஒவ்வொரு நாடுகளிலும் குறிப்பிட்ட சிலரே மொழி படித்து, மேற்கொண்டு படித்து வேறு வேலைகளுக்குள் சென்றவர்கள்) மேலும் சிலர் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு சொந்த தொழில் தொடங்கி அதில் ஈடுபட்டார்கள். ஆனால் இன்றும் பலர் ஆரம்பத்தில் என்ன வேலையில் இருந்தார்களோ இன்று வரை அதே தொழிலில் தான் இருக்கிறார்கள். 🔗பல பேர் வந்து அகதி அந்தஸ்து கிடைத்தபின் மனைவிமாரை இலங்கையிலிருந்து கூப்பிட்டார்கள். 🔗பல பேர் சகோதரர்களை, ஒரு சிலர் மனைவிமாரை பல லட்சங்கள் கட்டி இலங்கையிலிருந்து கூப்பிட்டார்கள். 🔗பின் மனைவிமாரின் சகோதரங்களையும் கூப்பிட உதவி செய்தார்கள். 🔗வெளிநாடு வராத நாட்டிலிருக்கும் பெற்றோர்,சகோதரங்கள், சகோதரங்களின் பிள்ளைகள் என எல்லோருக்கும் உதவி செய்தார்கள். இப்படி தனது இளமைக்காலம் முழுவதும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர்கள் தான் இந்த பெரும்பாலான முதலாம் தலைமுறையினர்.. இவர்களில் பெரும்பாலானோரை இன்றுவரை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவர்களின் உறவுகள் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரி இலங்கையிலிருக்கும் உறவுகள் தான் இவர்களை பயன் படுத்துகிறார்கள் என்றால், இங்கு பிறந்து, நன்றாக கல்வி கற்று, பெற்றோரை விட நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில் இருக்கும் சொந்த பிள்ளைகளும் இதை தான் செய்கிறார்கள்.. 🔗 இங்கு பிறந்தவர்கள் தங்களது முதல் வீடு வாங்குவதற்க்கு வங்கிக்கு கட்ட வேண்டிய 10-15% வீத முன் பணத்தை பெற்றோரிடம் தான் எதிர் பார்க்கிறார்கள்.(பெற்றோர் எந்த உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த முயற்சியில் தான் வீடு வாங்கியிருப்பார்கள்) 🔗தங்களின் ஆடம்பர கல்யாணத்திற்க்கும் பெற்றோர்களை தான் எதிர்பார்க்கிறார்கள்.. 🔗அவர்களை வளர்துவிட்டது காணது என்று அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் இவர்கள் தான் கவனித்துக்கொள்கிறார்கள்.. இப்படி சொல்வதற்க்கு ஏராளம் இருக்கின்றது.. ஒரு சில பிள்ளைகள் இதற்கு விதிவிலக்காகவும் இருக்கிறார்கள்.. இப்ப சொல்லுங்கள் இந்த முதலாம் தலைமுறையினர் பாவப்பட்டவர்கள் தானே??😔 https://www.facebook.com/share/p/18ohX1u8m1/?mibextid=wwXIfr- Tourist Family Review: இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; இந்த டூர் நல்லாருக்கே!
டூரிஸ்ட் பேமிலி: விமர்சனம்! 3 May 2025, 1:08 PM சசிகுமார், சிம்ரன் ஜோடியின் ‘அட்ராசிட்டி’ எப்பூடி..!? மிக மெலிதான திரைக்கதை கொண்ட படங்களுக்குத் தமிழ்நாட்டு ரசிகர்கள் வரவேற்பு தருவார்களா? திரையுலகக் கலைஞர்களை வாட்டி வதைக்கிற கேள்விகளுள் இதுவும் ஒன்று. அதனாலேயே, மிக லேசான கதையைக் கொண்ட ரொமான்ஸ், காமெடி, ட்ராமா வகைமை திரைப்படங்களை எடுக்கப் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். அவற்றின் மீது கவனத்தைக் குவிக்கிற வகையில் ‘வித்தியாசங்களை’ப் புகுத்தக் கஷ்டப்படுகின்றனர். ‘நல்லதா ஒரு பின்னணி கிடைச்சா அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல’ என்கிற பதிலோடு, மிகச்சிலர் மட்டும் அந்த ‘ரிஸ்க்’கை ‘ரஸ்க்’ சாப்பிடுவது போலக் கையாண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் மேலுமொன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘டூரிஸ்ட் பேமிலி’ படக்குழு. புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந் இயக்கியிருக்கிற இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். முதன்முறையாக சசிகுமார் உடன் சிம்ரன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இவர்களோடு மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகிபாபு, ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன் ஜோடியின் ‘அட்ராசிட்டி’ எவ்வாறு இருக்கிறது? பிழைப்பு தேடி..! இலங்கையின் வல்வெட்டித் துறையில் இருந்து ராமேஸ்வரத்திற்குச் சட்டவிரோதமாகப் படகில் வருகிறது ஒரு குடும்பம். தர்மதாஸ் (சசிகுமார்) எனும் நபர், அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), நிதுஷன் (மிதுன் ஜெய்சங்கர்), முள்ளி (கமலேஷ்) என்று நான்கு பேர் வந்திறங்கியதுமே, கடலோரப் பாதுகாப்புக்காக ரோந்து வரும் போலீசார் அவர்களைச் சுற்றி வளைக்கின்றனர். அவர்களை அழைத்துச் செல்ல வந்த வசந்தியின் சகோதரர் (யோகிபாபு) போலீசாரை பார்த்ததும் ஒரு படகில் மறைந்து கொள்கிறார். அவரையும் பிடிக்கின்றனர். ஐவரையும் கைது செய்து வேனில் அழைத்துச் செல்கிறார் கான்ஸ்டபிள் பைரவன் (ரமேஷ் திலக்). செல்லும் வழியில், சிறுவன் முள்ளி கையில் இருக்கிற நாய்க்குட்டியைப் பார்க்கிறார். ‘எப்படியும் எங்களை ஜெயில்ல போட்டுடுவீங்க. இதுக்காவது நல்ல சாப்பாடு கிடைக்கட்டும். நீங்க எடுத்துகிட்டு போய் வளர்த்துடுங்க’ என்று பைரவனிடம் சொல்கிறார் முள்ளி. கூடவே, ‘எனது பெயர் ஆகாஷ்’ என்கிறார். அது பைரவனின் மகன் பெயர். முள்ளி சொல்லும் பொய்யை உண்மை என்று நம்பும் பைரவன், கொஞ்சமாக ‘மெல்ட்’ ஆகிறார். அவர்களை பாதி வழியில் இறக்கிவிட்டு சக போலீசாரோடு சென்றுவிடுகிறார். ஆனால், பைரவனோடு இருப்பவர்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. என்னதான் முள்ளி பொய் சொல்லித் தப்பிக்க வைத்தாலும், அதனை தர்மதாஸால் ஏற்க முடிவதில்லை. அவரிடத்தில் இருக்கிற உண்மையும் நேர்மையும் அப்படியேதான் இருக்கின்றன என்பதை அடுத்தடுத்து நடக்கிற விஷயங்கள் நிரூபிக்கின்றன. சென்னைக்குப் பயணிக்கும் அவர்கள், அங்கு ஒரு வீட்டில் தங்க முடிவெடுக்கின்றனர். இறங்கிய இடத்தில், சாலையில் மயங்கிக் கிடக்கிற ஒரு இளைஞரைப் பார்த்ததும் ஓடிச் செல்கிறார் தர்மதாஸ். அவரது நிலை கண்டு பதறி, உடனே ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்குமாறு கூறுகிறார். அவரது உறவினரும் வேண்டாவெறுப்பாக அதனைச் செய்கிறார். கேசவநகர் காலனியில் தர்மதாஸ் குடும்பத்தினரைக் குடி வைக்கிறார். ’இந்த ஊர் பாஷை பழகற வரைக்கும் யார்கிட்டயும் வாய் திறக்காதீங்க’ என்பது வசந்தியின் சகோதரர் அக்குடும்பத்தினருக்குத் தரும் அறிவுரை. ஆனால், அவர்களால் அதனைப் பின்பற்ற முடிவதில்லை. அதனால் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கின்றன? அதன் தொடர்ச்சியாக, தர்மதாஸ் குடும்பத்தின் என்ன மாற்றங்கள் உருவாகின்றன என்று சொல்கிறது இப்படத்தின் மீதி. இந்தக் கதையின் தொடக்கத்தில், ஒரு குப்பை தொட்டியில் இருந்த குண்டு வெடித்து ஊடகங்களில் ‘பரபரப்புத் தீ’ பற்றிக் கொள்வதாகக் காட்டப்பட்டிருக்கும். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்குக் கிளம்புகையில், அந்த இடத்தில்தான் தர்மதாஸ் குப்பையைக் கொட்டியிருப்பார். அதன் தொடர்ச்சியாக, அவர் மீது போலீசாரின் ‘சந்தேகப்பார்வை’ விழுவது இத்திரைக்கதையின் ஊடே ‘கிளைக்கதையாக’ச் சொல்லப்பட்டிருக்கும். இப்படிச் சில முடிச்சுகள் ஆங்காங்கே இருப்பதுதான், ஒரு மெல்லிய நீரோடை போன்று நகர்கிற திரைக்கதையில் ஏற்ற இறக்கங்களுக்குக் காரணமாகின்றன. படத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன. கலக்கும் ‘காஸ்ட்டிங்’! சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் என்று நான்கு பேரையும் ஒரு குடும்பமாகத் திரையில் காட்டிய விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந். ‘அவர்கள் நால்வரும் ஒரு குடும்பம்தானோ’ என்று எண்ணுகிற அளவுக்கு, அவர்களிடையேயான ‘கெமிஸ்ட்ரி’ திரையில் தெரிகிறது. அதுவே இப்படத்தின் வெற்றி. சசிகுமார் – சிம்ரன் ஜோடி ‘அட்ராசிட்டி’ என்று சொல்கிற அளவுக்குப் பெரியளவில் காட்சிகள் இல்லை. ஆனாலும், அப்பாத்திரங்களின் அன்னியோன்யத்தை, கருத்து வேறுபாடுகளை, உணர்வுக் கொந்தளிப்புகளைக் காட்டுகிற வகையில் சில காட்சிகள் இருக்கின்றன. அவை கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியிருக்கின்றன. இப்படத்தில் இருவருமே நடுத்தர வயது மனிதர்களாகத் தோன்றியிருக்கின்றனர். அவர்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் மிதுன், கமலேஷ் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கின்றன. ‘விளையாட்டுப் பையன்’ என்றளவில் கமலேஷுக்கு ‘மைலேஜ்’ ஏற்றப்பட்டிருப்பதற்கு இணையாக, ‘கொஞ்சம் பக்குவமான இளைஞன்’ எனும் பிம்பத்திற்குப் பொருத்தமான காட்சிகள் மிதுனுக்குத் தரப்பட்டிருக்கின்றன. அதிலும், தான் காதலிக்குக் கல்யாணம் என்ற உண்மையைத் தாங்க முடியாமல் பிதற்றுகிறபோது அக்குடும்பம் அவரைத் தேற்றுவதாக ஒரு ‘காட்சி’ வருகிறது. ’கமர்ஷியல் படம்னா இப்படியும் இருக்கும்’ என்பதற்கான உதாரணமாக, அக்காட்சி கைத்தட்டல்களை அள்ளுகிறது. இந்த படத்தில் யோகிபாபு, பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, ரமேஷ் திலக், யோகலட்சுமி உட்படச் சுமார் ஒன்றரை டஜனுக்கும் மேற்பட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். குடியிருப்புவாசிகளாகச் சிலர் வந்து போயிருக்கின்றனர். அவர்களுக்கும் இத்திரைக்கதையில் வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. விசாரணை மேற்கொள்ளும் ஐபிஎஸ் அதிகாரியாக வருபவரும் கூட, ‘யார் இவர்’ என்று கேட்கிற அளவுக்குத் திரையில் தோன்றியிருக்கிறார். ஆதலால், சந்தேகமேயிலாமல் இப்படத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் ‘காஸ்ட்டிங்’ மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் அஜித் கோஷி தவிர்த்து, மற்றனைவரையும் வேறெந்தப் படங்களிலும் இது போன்ற பாத்திரங்களில் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு ‘அது’ அமைந்திருக்கிறது. ஒரு ஐரோப்பிய படம் பார்த்தது போன்ற உணர்வைத் தனது ‘பளிச்’ பிரேம்களால் ஏற்படுத்தியிருக்கிரார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன். கதாபாத்திரங்களுக்கும் காட்சிப் பின்னணிக்கும் ஏற்ற கலை வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் கலை இயக்குனர் ராஜ்கமல். சிரிப்பதற்கு இடம் தந்து காட்சிகளைச் சரியான வேகத்தோடு நகரும் வகையில் நறுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன். படத்தில் ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, நிறக்கலவை என்று பல அம்சங்கள், இயக்குனரின் கதை சொல்லலைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன. ஷான் ரோல்டனின் இசையமைப்பில் பாடல்கள் முதன்முறையாகக் கேட்கிறபோதே மனதோடு ஒட்டிவிடுகின்றன. பின்னணி இசையானது காட்சிகளின் தன்மையை மேலுயர்த்துகிற வகையில் அமைந்திருக்கின்றன. இப்படி ‘டூரிஸ்ட் பேமிலி’யில் இடம்பெற்ற நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே ஒருங்கிணைந்து செயல்பட்டு, இயக்குனர் அபிஷன் ஜீவிந் விரும்பிய உலகைப் படைத்திருக்கின்றனர். கடினமான பின்னணியைக் கொண்ட கதாபாத்திரங்கள். சோகத்தில் உழல வேண்டிய அவர்களது எண்ணங்களும் செயல்பாடுகளும் வேறொரு திசையில் இருக்கிறது. அவர்களால் அவர்களது வாழ்வு மட்டுமல்லாமல், சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையும் நல்மாற்றங்களுக்கு உள்ளாவதை, ‘ஓவர் மெலோட்ராமா’வாக இல்லாமல் சுவைபடச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி. ’ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு சிம்ரன் ஆடுவது, மிதுனிடம் யோகலட்சுமி தனது காதலை சூசகமாக வெளிப்படுத்துவது, சசிகுமார் பாத்திரத்தினால் உண்டான மாற்றங்களை இயக்குனர் அபிஷன் பாத்திரம் விவரிப்பது என்று ‘டூரிஸ்ட் பேமிலி’யில் ரசிக்கத்தக்க காட்சிகள் கணிசமாக உள்ளன. அவை இப்படத்தைக் காண வந்ததை அர்த்தமுள்ளதாக்குகின்றன. அவற்றைத் தாண்டி, இலங்கை போர் தொடர்பான விஷயங்களை இதே கதையில் இடம்பெறச் செய்து, உலகெங்கும் வாழ்கிற தமிழ் மக்கள் மனதைத் தொடுகிற திரையனுபவத்தை, இப்படம் மூலம் தந்திருக்கலாமே என்பது போன்ற ஆதங்கங்கள் சிலருக்கு எழலாம். அதற்கு மாறாக, இயக்குனரின் பார்வை அமைந்திருப்பது நிச்சயம் தவறு அல்ல. அது மட்டுமல்லாமல், எவரையும் குறைத்துச் சொல்வது போன்ற சித்தரிப்பை இதில் அவர் கையாளவில்லை. ஆதலால், அது போன்ற குறைகளும் லாஜிக் மீறல்களும் கூடப் புறக்கணிக்கத்தக்கதாகவே இருக்கின்றன. பின்பாதியில் ஓரிடத்தில் ‘கணவன் மனைவி தாம்பத்திய உறவு’ பற்றி ‘கமெண்ட்’ அடிப்பது தவிர, இப்படத்தில் ‘ஆபாசமான’ விஷயங்கள் என்று எதுவுமில்லை. குறிப்பிட்ட ‘அந்த’ வசனங்கள் கூட, இன்றைய மொபைல் உலகில் சர்வசாதாரணமானதுதான். ஆகையால், குடும்பத்தோடு சேர்ந்து சிரிக்கிற, ரசிக்கிற வகையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ இருக்கிறது. இப்படிப்பட்ட கதை சொல்லலோடு ‘கமர்ஷியல் படங்கள்’ உருவாக்கப்படுவது நமது ரசனையின் கிளைகளை மேலும் விரிவடையச் செய்யும். ‘கமர்ஷியல் படங்கள்’ என்ற போர்வையில் ரத்தத்தையும் சத்தத்தையும் தியேட்டரில் வாரியிறைத்து அடுத்த தலைமுறையின் மூளையை ‘மடத்தனத்தால்’ நிரப்புவதற்கு, இது எவ்வளவோ தேவலை..! https://minnambalam.com/tourist-family-movie-review-2025-sasikumar-simran/- தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு
தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு May 3, 2025 தமிழீழ தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள பிரசார நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் ஒரே மாதிரியானவர்கள் என்று வரிகள் எழுதப்பட்ட பாடல் ஒன்றை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தாய் மற்றும் தந்தையின் பெயரில் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும் அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவ்வாறான பிரசார நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசிய தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம் , இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயரை வைப்போம் என கடற்றொழில் அமைச்சர் உறுதி அளிப்பாரா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதனை கடற்றொழில் அமைச்சர் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தட்டும். அதனை விடுத்து, ஆதரவு பாடல் என்ற ஒன்றை வெளியிட்டு மக்களை குழப்பும் செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட சகலரும் அமைதியையே விரும்பியதாகவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியுள்ளார். https://www.ilakku.org/தேசிய-தலைவரின்-பெயரை-பயன/- ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
தோல்விக்கு நானே பொறுப்பு - மஹேந்திர சிங் தோனி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், இந்த தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். போட்டி நிறைவடைந்த பின்னர் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். ”நான் துடுப்பாட்டம் செய்யத் தொடங்கிய போது அழுத்தத்தைக் குறைக்க இன்னும் வேகமாகத் துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும். ஆனால் நான் அதனை செய்யத் தவறிவிட்டேன். தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். பந்துவீச்சில் இன்று சுதப்பி விட்டோம். ”என இதன்போது மஹேந்திர சிங் தோனி குறிப்பிட்டார். https://www.hirunews.lk/tamil/404566/தோல்விக்கு-நானே-பொறுப்பு-மஹேந்திர-சிங்-தோனி- டிரம்ப் பாப்பரசர்: நாலாபுறமும் எதிர்ப்பு
டிரம்ப் பாப்பரசர்: நாலாபுறமும் எதிர்ப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாப்பரசராகத் தோன்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்தப் புகைப்படத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி விமர்சிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புகைப்படம் வெள்ளை மாளிகை ஊழியர்களின் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றப்பட்டது. புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார், மேலும் அது 7 ஆம் திகதி கார்டினல்களின் வாக்கெடுப்பு மூலம் நடைபெறும். இதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் குழு ஒன்று இந்த புகைப்படத்தை உருவாக்கி, அவர் போப் பதவிக்கு பொருத்தமானவர் என்பதைக் குறிப்பிட்டு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. போப்பாண்டவருக்கு ஏற்பட்ட அவமானத்தை சித்தரிக்கும் புகைப்படத்தை உருவாக்கி அதை சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்தியதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம், டொனால்ட் டிரம்ப் போப் ஆக விரும்புவதாக வெளியிட்ட பொது அறிக்கையின் அடிப்படையில், டிரம்ப் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏ.எஃப்.பி) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/டிரம்ப்-பாப்பரசர்-நாலாபுறமும்-எதிர்ப்பு/50-356644- ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள்
ஜனாதிபதி அனுரவுக்கு வியட்நாமில் அமோக வரவேற்பு வியட்நாமுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் நோய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டு சனிக்கிழமை (03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமின் நோய் பாய் (Noi Bai International Airport) சர்வதேச விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை (04) முற்பகல் சென்றடைந்தார். அங்கு, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் வெளியுறவுத் துறை பிரதி அமைச்சருமான நுயென் மான் குவோங் (Nguyen Manh Cuong) உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் அமோகமாக வரவேற்கப்பட்டனர். இந்த வரவேற்பு நிகழ்வில் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டேம் (Trinh Thi Tam),வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் போசித பெரேரா மற்றும் இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸ கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை ( Tô Lâm), ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் சந்திக்க உள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களிலும், திங்கட்கிழமை (05) ஈடுபட உள்ளார். ஹோ சி மிங் நகரில், மே 06 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிறப்புரை நிகழ்த்துவார். இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடவும், வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரச விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவும் இணைந்துகொண்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-அனுரவுக்கு-வியட்நாமில்-அமோக-வரவேற்பு/175-356662- மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது - நிலாந்தன்
மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது - நிலாந்தன் உப்புக்குத் தட்டுப்பாடு. ஒரு கிலோ உப்பு பக்கெட் 300ரூபாய்க்கு மேல் போகிறது. இத்தனைக்கும் இலங்கை ஒரு தீவு. சுத்திவர உப்புக்கடல். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரச்சாரத்திற்கு அள்ளிக் கொட்டுவதற்கு தாராளமாக நிதி இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரமாண்டமான கூட்டங்களை சிறீதரன் ஒருவரைத் தவிர தேசிய மக்கள் சக்திதான் ஒழுங்குபடுத்துகின்றது. கிராமங்களிலும் நகரங்களிலும் அவர்கள் தமது இருப்பை காட்சிப்படுத்தும் விதத்தில் தமிழ்க் கட்சிகளிடம் இல்லாத ஓர் உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். பூட்டிக் கிடக்கும் ஒரு கடை அல்லது ஒரு மண்டபம் அல்லது ஒரு முழிப்பான இடம் போன்றவற்றில் கவிழ்த்து விடப்பட்ட பானா வடியில் ஒரு முகப்பை நிறுவுகிறார்கள். அல்லது தமது சுவரொட்டிகள் பதாகைகள் மூலம் அப்படியொரு வாசலை உருவாக்குகிறார்கள். அது தேசிய மக்கள் சக்தியின் வாசல் என்ற ஓர் உணர்வை மக்களுக்கு கொடுக்கும். அந்த முகப்பில் வாசலைத் தவிர ஏனைய எல்லாப் பரப்புகளையும் சுவரொட்டிகளால் நிரப்புகிறார்கள். தமிழ்க் கட்சிகள் இந்த அளவுக்குக் காசைக்கொட்டிப் பிரச்சாரம் செய்வதாகத் தெரியவில்லை. பெரிய கூட்டங்களை நடத்துவதற்குச் சத்தியற்றவைகளாக தமிழ்க் கட்சிகள் காணப்படுகின்றன. குறுகிய கால இடைவெளிகளுக்குள் வந்த,வருகின்ற மூன்று தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளிடம் பெரும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நிதி இல்லை என்பது அவதானிக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி பெயராவிட்டால் பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது. இது தமிழரசியலின் அடிப்படைப் பலவீனம் ஒன்றைக் காட்டுகின்றது. எந்தவோர் அரசியல் நடவடிக்கைக்கும் நிதித் திட்டமிடல் வேண்டும். நிதியை எப்படிச் சேகரிப்பது? எவ்வளவு காலத்துக்குள் சேகரிப்பது? போன்றவை தொடர்பாக பொருத்தமான தரிசனங்கள் இருக்க வேண்டும். போதிய நிதி இருந்தால்தான் கட்சி நடத்தலாம்; அரசியல் செய்யலாம். முழு நேரச் செயற்பாட்டாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். அரை நேரச் செயல்பாட்டாளர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது. அதுவும் இன அழிப்புக்கு எதிரான அரசியலைச் செய்ய முடியாது. பச்சைத் தண்ணீரில் பலகாரம் சுட முடியாது. காற்றைக் குடித்துக் கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது. தமிழ்க் கட்சிகளிடம் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிகிறது. புலம்பெயர்ந்த தமிழ் கோப்பரேட்கள் சிலர் கடந்த இரண்டு தேர்தல்களிலும் உதவியதாகக் கூறப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் பெருங்கூட்டங்களை நடத்தக்கூடிய அளவு நிதி பெயரவில்லை என்று தெரிகிறது. ஒப்பீட்டு ரீதியாக தமிழ்க் கட்சிகளின் நிதி ரீதியான பலவீனங்களை பிரச்சாரக் களம் உணர்த்துகின்றது. அதே சமயம் ஆளுங்கட்சியான என்பிபி அரச பலத்தோடும் வளத்தோடும் அதிகளவு நிதியைக் கொட்டி ஒரு பிரச்சாரப் போரை நடாத்துகின்றது. அரச பிரதானிகள் அந்தப் பிரச்சார மேடைகளில் தோன்றுகிறார்கள். குறிப்பாக அனுர கலந்து கொள்ளும் கூட்டங்களில் அவரோடு கைகளைக் குலுக்கி கொள்வதற்காக தமிழ் ஆண்களும் பெண்களும் முண்டியடிக்கிறார்கள். சில சமயங்களில் குழந்தைகளும் அனுரவோடு செல்ஃபி எடுப்பதற்கு அழுகிறார்கள். இது கைபேசிகளின் காலம். மனிதர்களிடம் இயல்பாக உள்ள தன்மோகமானது செல்ஃபி யுகத்தில் ஒரு நோயாக மாறி வருகிறது. அறிவிற்கும் மந்தமானதுக்கும் இடையிலான இடைவெளியானது யூரியுப்பர்களின் காலத்தில் மேலும் ஆழமானதாகி வருகிறது. பிரபல்யமானவரோடு படம் எடுப்பது; கைகுலுக்குவது; செல்ஃபி எடுப்பது; பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி பெருமைப்பட்டுக் கொள்வது. என்பிபி எந்தளவுக்கு டிஜிட்டல் ப்ரோமோஷனில் கவனமாக இருக்கிறது என்பதற்கு அண்மையில் நடந்த மே தின கூட்டத்தில், அனுர பேசும் போது,”லங்கா தீப” ஊடகவியலாளர் லஹிரு ஹர்ஷண எடுத்த ஒளிப்படம் தொடர்பான சர்ச்சை ஒரு சான்று. அந்த ஒளிப்படம் அனுரவை மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் ஒரு தலைவராக முன் நிறுத்தவில்லை. மாறாக எதையோ கண்டு மிரண்டு, நம்பிக்கையிழந்து, கையறு நிலையில் தன்னை காப்பாறுமாறு பிராத்தித்திக்கின்ற ஒருவராகத்தான் அந்த படம் அவரை முன்னிறுத்துகிறது.அந்தப் படத்தை வெளியில் வரவிடாமல் என்பிபிக்காரர்கள் தடுத்திருக்கிறார்கள். அதாவது அனுரவின் எந்தப் படம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் என்பிபி கவனமாக இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளிலும் அப்படித்தான். வல்வெட்டித் துறையில் அனுரவை அணைக்கும் மூதாட்டி; கிட்டு பூங்காவில், வவுனியாவில் அனுரவை நோக்கிக் கைகுலுக்க அந்தரப்படும் ஆண்கள்,பெண்கள் போன்ற படங்களும், காணொளிகளும்; அனுரவை ஒரு கதாநாயகராகக் கட்டியெழுப்பும் நோக்க முடியவை. அனுர எளிதாக அணுகப்படக்கூடிய, தொட்டுப் பழகக்கூடிய, எளிமையான ஒருவராகக் காணப்படுகிறார். எனவே அவரோடு கை குலுக்கிப் படம் எடுப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் ஆர்வமாகக் காணப்படுகிறார்கள். பாவம் தமிழ் அரசியல்வாதிகள். அவர்களோடு கைகுலுக்கவோ அல்லது செல்பி எடுக்கவோ ஆட்கள் இல்லை. அப்படி எடுத்துக் கொண்டாலும் அதை டிஜிட்டல் ரோமோஷன் செய்வதற்கு அவர்களிடம் காசு இல்லை. எனினும் ஒரு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒரே கூட்டில் நிற்கின்றன. என்பிபியை, அல்லது ஜேவிபியை அம்பலப்படுத்துவது, எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது என்ற ஒரு விடயத்தில் மட்டும் நான்கு தமிழ்த்தேசியத் தரப்புகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன. எனைய பெரும்பாலான விடயங்களில் தங்களுக்கு இடையே முட்டி மோதுகின்றன. அங்கே போட்டித் தவிர்ப்பிற்கான புரிந்துணர்வு இல்லை. “நாங்கள்தான் பெரிய கட்சி, மற்றவை உதிரிக் கட்சிகள்” என்று கூறும் சுமந்திரன் “நாங்கள் ஏனைய கட்சிகளை விமர்சிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்”என்று கூறுகிறார். ஆனால் நடைமுறையில் உள்ளூரில் ஏனைய கட்சிகளுக்கு எதிராகத்தான் பிரச்சாரம் நடக்கின்றது. ஏன் அதிகம் போவான்? தமிழரசுக் கட்சிக்குள்ளேயே கிளிநொச்சி மாவட்டத்தில் கட்சிக்குக் கிடைக்கும் வெற்றி மறைமுகமாக சுமந்திரனையும் பலப்படுத்தி விடுவோமா என்ற பயம் பல வேட்பாளர்களிடம் உண்டு. அண்மையில் ஒரு பெண் வேட்பாளர் அவ்வாறு கேட்டதாக சிறீதரன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் வைத்துக் கூறியுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சுமந்திரனின் “எக்கிய ராஜ்ய”வை வைத்து அவரைத் தாக்குகிறது. தங்களுடையது மட்டும்தான் கொள்கைக் கூட்டு என்று கூறுகின்றது. யாழ். மாநகர சபைக்கான தேர்தல் களத்தில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தால் மணிவண்ணன் போட்டிக் களத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். ஒரு பிரதான போட்டியாளர் அவ்வாறு அகற்றப்பட்டிருப்பது ஏனைய கட்சிகளுக்கு அதிகம் வாய்ப்பானது. அங்கே அரசாங்கத்தின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள யாழ். பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் ,நீக்கலான மேல்வாய்ப் பல்லோடு, குழந்தைத்தனமான முகத்தோடு காணப்படுகிறார். நகரத் திட்டமிடல் தொடர்பில் தனக்குள்ள பாண்டித்தியத்தை நிரூபிக்கும் அறிக்கைகளை விடுகிறார். மணிவண்ணன் இல்லாத போட்டிக் களம் தனக்குச் சாதகமானது என்று நம்பி என்பிபி உழைகின்றது. அர்ஜுனாவுக்கும் மூன்று என்பிபிக்காரர்களுக்கும் வாக்களித்த மக்கள் இனி யாருக்கெல்லாம் வாக்களிக்கப் போகிறார்களோ? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்பிபிக்கும் அர்ஜுனாவுக்கும் கிடைத்த எதிர்பாராத வெற்றி என்பது தமிழ் ஐக்கியமின்மையினதும் தமிழ்த் தேசிய இயலாமைகளினதும் விளைவு. அந்த ஐக்கியமின்மை இப்பொழுதும் உண்டு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையானது ஒரு புதிய ஐக்கிய முயற்சி.ஆனால் அது தமிழரசுக் கட்சியைப் பிரதியீடு செய்யும் வளர்ச்சியை இன்னும் பெறவில்லை. இப்பொழுதும் தமிழரசுக் கட்சிக்குத்தான் தாயக அளவில், ஒப்பீட்டளவில் அதிக வெற்றி வாய்ப்புக்கள் தெரிகின்றன. முன்னணி முன்னரை விட முன்னேறி வருகிறது. இப்படிப்பட்ட பலமுனைப் போட்டிக்குள் நான்கு தமிழ்த் தேசியத் தரப்புகளில் யார் வென்றாலும் அது தேசிய மக்கள் சக்திக்குத் தோல்விதான். அதேசமயம் எந்த ஒரு தமிழ்த் தேசியத் தரப்பு தோற்றாலும் அந்த வாக்குகள் ஏனைய மூன்று தமிழ்த்தேசியத் தரப்புகளுக்கு போகுமாக இருந்தால் அதுவும் பாதுகாப்பானதே. அப்பொழுது மீன் கரைந்தாலும் சட்டிக்குள் இருக்கும்.மாறாக தமிழ்த் தேசியப் தரப்பிலிருந்து என்பிபிக்குத் திரும்பும் வாக்கு ஒவ்வொன்றும் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழும் வாக்குத்தான். https://www.nillanthan.com/7354/- காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவை புனரமைக்க நடவடிக்கை
காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவை புனரமைக்க நடவடிக்கை adminMay 4, 2025 சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் சனிக்கிழமை களவிஜயம் செய்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 131.20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு அமைய, அத் திட்டங்களில் உள்ளடங்கியுள்ள காங்கேசன்துறை கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் பகுதி கடுமையான கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு சிறுவர் பூங்காவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் அவ் விடத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதனாலும் அதனை விரைவாக புனரமைப்புச் செய்வது தொடர்பாக மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டது.அதற்கமைய மாவட்ட செயலர் நிலமைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சி. சுதீஸ்னர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வீ. சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். https://globaltamilnews.net/2025/214992/- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏதாவது டிஜிரல் ரேடியோவில் இருக்கும். கிரிக்கெட்டில் பிபிசி ரேடியோ கொமென்ரரியைத் தவிர வேறு ஏதும் கேட்டுப் பழக்கமில்லை. டெஸ்ட் மட்ச் கொமென்ரரியளை ரேடியோவில் கேட்பதில் உள்ள த்ரில்லிங் நேரே பார்ப்பதில்கூட வராது! ரிச்சி பேர்னாட், ஜெஃப்ரி போய்கொட்டின் கொமென்ரரி எப்போதும் பிடிக்கும்!- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை ஞாயிறு 04 மே GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 17 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் ஆறு பேர் மாத்திரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா கந்தப்பு வாதவூரான் ஏராளன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் ராஜஸ்தான் ராயல்ஸ் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS எதிர் LSG 13 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா செம்பாட்டான் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வசீ அல்வாயன் சுவி சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 52வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஜாகப் பெதலினதும் விராட் கோலியினதும் வேகமான அரைச் சதங்களுடனும், பின்னர் வந்து மரண அடி கொடுத்து 14 பந்துகளில் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்கள் எடுத்த ரொமாரியோ ஷெப்பேர்ட்டினது ஆட்டத்துடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ஓட்டங்களை அள்ளிக் குவிக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 17 வயதேயான வீரர் ஆயுஷ் மாத்ரேயின் புயல்வேக 94 ஓட்டங்களுடனும், கூட இணைப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்கள் எடுத்த ரவீந்திரா ஜடேயாவினது பங்களிப்புடனும் வெற்றி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறினர். எனினும் ஆயுஷ் மாத்ரே 16.2 ஓவரில் ஆட்டமிழக்க அடுத்த பந்தில் டெவால்ட் ப்ரெவிஸும் ஆட்டமிழக்க போட்டி திசை மாறியது. 18வது ஓவரை சுயாஷ் ஷர்மா இறுக்கமாகப் போட்டு ஆறு ஓட்டங்கள் மாத்திரமே கொடுத்தார். இறுதி ஓவரில் வெற்றிபெற 15 ஓட்டங்கள் இருந்த நிலையில் மூன்றாவது பந்தில் தோனி அவுட்டாகி வெளியேறினாலும், அடுத்த பந்து ஷிவம் டுபேயால் சிக்ஸருக்குப் போனதும், அது உயரம் காரணமாக நோபோல் ஆனதும் வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கம் திசை மாற்றியது. மூன்று பந்துகளில் ஆறு ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் யஷ் தயாலின் இறுக்கமான பந்துவீச்சால் மூன்று ஓட்டங்களே எடுக்கமுடிந்தது. இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்களையே எடுத்தனர். முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டே இரண்டு ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: - பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
Important Information
By using this site, you agree to our Terms of Use.