Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. பார்வை ஒன்றே போதுமே........(2). ஆங்காங்கே வயல் வெள்ளத்துக்குள் வந்திருந்த சின்ன மீன்களை கொக்கு, நாரை போன்ற சில பறவைகள் கொத்திக்கொண்டு பறப்பதும் ஒன்றோடொன்று சண்டை பிடிப்பதும் பார்க்க ரம்மியமாக இருக்கின்றது. இவ்வளவு பிரச்சினைக்குள்ளும் எவ்வளவு காலமாச்சுது இப்படியெல்லாம் ரசிச்சு என மனம் எண்ணிக் கொண்டது. தூரத்தில் ஒரு மேட்டில் ஒராள் நிற்பதைக் கண்டு அங்கு செல்கிறார். அது ஒரு நடுத்தர வயதுடைய பெண் என்று தெரிகின்றது. அந்தப் பெண்ணும் இவரைக் கண்டு விடுகிறாள். இவரது கோலத்தைப் பார்த்ததும் அங்கிருந்து செல்வதற்கு எத்தனிக்கிறாள். உடனே சாமிநாதனும் ஆம் அதுதான் அவரது பெயர் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவளைப் பார்த்து அம்மா போகாதேங்கோ , கொஞ்சம் நில்லுங்கோ என்றதும் அவள் சற்று நின்று, ம்....என்ன என்பதுபோல் பார்க்கிறாள். அப்பொழுது ஒரு குமர்ப் பிள்ளையொன்று வயலுக்குள் இருந்து ஆளளவு உயர்ந்திருந்த நெற்கதிர்களை விலத்திக் கொண்டு யாரம்மா இவர் என்னவாம் என்று கேட்டவாறே வரப்பில் ஏறி வருகின்றாள். அவள், கையில் ஈர்க்கில் கோர்த்தபடி அஞ்சாறு மீன்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. தெரியவில்லையம்மா, அதுதான் விசாரித்து கொண்டிருக்கிறேன் என்கிறாள். சாமிநாதனும் பயப்பிடாதையுங்கோ, கணக்க யோசிக்க வேண்டாம். நான் பக்கத்து ஊர்தான், அதோ அந்தக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது யாரோ என்னுடைய உடுப்புகளை எடுத்துக் கொண்டு போட்டினம். சுருக்கமாக தன் கதையை சொல்லிவிட்டு எனக்கு ஒரு உதவி செய்வீங்களோ, நான் கட்டுறதுக்கு ஏதாவது ஒரு துண்டு தரமுடியுமோ என்று கேட்கிறார். ஆனாலும் அவர்களுக்கும் கொஞ்சம் யோசனையாய்த் தானிருக்கு. அவரின் நிலையைப் பார்க்க பாவமாயும் இருக்கு. அப்போது அந்தப் பிள்ளை சித்ராவும் சிறிதும் யோசிக்காமல் இந்தாங்கோ ஐயா இப்ப இந்தத் துண்டைக் கட்டுங்கோ என்று தனது தாவணியை எடுத்துக் குடுத்துவிட்டு, அதோ அங்குதான் எங்கள் வீடு இருக்கிறது அங்கே அப்பாவின் சாரம் இருக்கு வாங்கோ எடுத்துத் தாறன் என்கிறாள். அவரும் அதை வாங்கிக் கொண்டு தனது கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்து அவளிடம் குடுக்க அந்தச் சுட்டிப்பெண்ணும் என்ன ஐயா ஒரு தாவணிக்கு சங்கிலி தாறீங்கள் இது ரோல்ட்கோல்டோ என்று பகிடி விட உடனே தாய் மகேஸ்வரி சும்மா இருடி உனக்கு வாய் ரெம்ப நீளம் என்று அவளை அதட்டி விட்டு பரவாயில்லை, அது உங்களிடமே இருக்கட்டும் என்கிறாள். இப்பொழுது அவரைப்பற்றிய எண்ணம் மாறி நல்ல எண்ணமாக வருகிறது. பின் அவரைப் பார்த்து உங்களை பார்த்தால் பசியோடு இருப்பதுபோல் தெரிகிறது, வீட்டுக்கு வாங்கோ சாப்பிட்டுட்டு போகலாம் என்று சொல்ல மூவரும் கதைத்து கொண்டே வீட்டுக்கு செல்கின்றனர். அவர்களின் பேச்சில் இருந்து மகேஸ்வரியின் கணவன் மாணிக்கம் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. அங்குள்ள சிறிய நகரத்தின் கடை வீதியில் பாதையோரத்தில் சின்ன இடத்தில் இருந்து தொழில் செய்து வந்திருக்கிறார். அவர்களுக்கு முத்து, சித்ரா என்று இரண்டு பிள்ளைகள். உழைப்பதில் தான் குடிப்பதுபோக கொஞ்சம் வீட்டுக்கும் கொடுப்பார்.ஊரில் நிறையக் கடன் வாங்கி வைத்திருந்தார். கடன் குடுத்தவர்கள் மாணிக்கத்தைக் கண்டால் வேறு பக்கமாக ஓடிவிடுவார்கள்....இவர் ஒன்றும் சண்டியனில்லை எங்கே மீண்டும் கடன் கேட்டு விடுவார் என்று.... கொசுவுக்கு பயந்து நாங்கள் வலைக்குள் படுப்பதுபோல்தான் இதுவும். கடந்த வருடம் இவரது நண்பரும் இன்னொருவரும் தவறணையில் சண்டை பிடித்த பொழுது மாணிக்கம் இடையிலே புகுந்து விலக்குப் பிடிக்கப் போய் எதிர்பாராமல் வயித்தில கத்தியால் குத்து வாங்கி இறந்து விட்டார். மாணிக்கத்துக்குப் பயந்து ஓடி ஒழிச்ச கடங்காரர் எல்லாம் இப்ப குளிர் விட்டுப்போய் வீட்டுக்கு வந்து கண்டபடி பேசி சண்டை பிடித்து விட்டு போவார்கள்.......! பார்ப்போம் இனி......! ✍️
  2. தப்பு தப்பா செய்யாமல் சரியாக சுவையாக உப்புமா செய்யுங்கள்.......! 👍
  3. உ பார்வை ஒன்றே போதுமே கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே. இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கின்றார்.நாளும் கிழமையும் கூட அவருக்கு மறந்து விட்டது.தான் வாழ்ந்த நகரத்தையும் தனது சொகுசான வீடு, ஆடம்பரமான கார்கள்,அன்பான மனைவி வளர்ந்துவிட்ட அழகழகான ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தாயிற்று. மேலே அண்ணாந்து பார்க்கையில் சூரியன் மதியத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.இவ்வளவு நாளும் பசியும்,களைப்பும் தெரியவில்லை.ஆனால் இப்பொழுது வயிறு பசி பசி என்று ஓலமிடுகின்றது.பசி ஒன்றும் அவருக்கு புதிதல்ல.சிறுவயது மற்றும் இளமைப் பருவங்களில் பசியோடு பங்காளியாக இருந்தவர்தான்.கடந்த பதினைந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அவரது இடைவிடாத உழைப்பின் பயனாக அது அவரை விட்டு வெகுதூரம் விலகியே இருந்தது.ஆனால் இப்பொழுது அவருக்கு பசித்ததும் கூடவே சிரிப்பும் வந்தது. இப்பொழுதுதான் உடல் உபாதையும் தொடர்ந்து நன்றாகத் தோய்ந்து குளிக்கவேண்டும் என்ற எண்ணமும் வந்தது.எங்காவது வாய்க்காலோ, குளமோ தென்படுகின்றதா என்று சுற்றிவரப் பார்த்துக்கொண்டே நடக்கின்றார்.அவர் எதிர்பார்த்த படியே அங்கு ஒரு குளத்தைக் கண்டதும் ஸ்நானம் செய்வதற்காக தனது கோட்சூட் சேர்ட் பூட்ஸ் எல்லாவற்றையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு அருகில் இருந்த பற்றைக்குள் ஒதுங்கிவிட்டு வந்து குளத்தில் அலுப்புத்தீர நன்றாக முங்கி முங்கி தோய்ந்து விட்டு வெளியே வந்தார். அங்கே பார்த்தால் அவர் கரையில் கழட்டிவைத்த ஆடைகள், பொருட்கள் எதுவும் அங்கில்லை.யாரோ வீதியால் சென்றவர்கள் அவற்றை எடுத்து சென்றிருக்க வேண்டும். அவரது கைபேசி மட்டும் கீழே புல்லுக்குள் கிடந்தது. அவர்கள் அவசரத்தில் எடுக்கும்போது இது நழுவி கீழே விழுந்திருக்க வேண்டும். எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார். இவ்வளவு நாளும் கோபத்தில் மழுங்கிக் கிடந்த மூளை இப்பொழுதுதான் தன் உணர்வடைந்திருந்தது. தான் இப்பொழுது எங்கிருக்கிறோம் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.தன்னை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டதும் மீண்டும் அவருக்கு சிரிப்பு வந்தது. இடுப்பில் ஒரு ஜட்டி, கழுத்தில் டாலருடன் கூடிய தடிமனான தங்கச் சங்கிலி,கையில் தங்கச் செயின் போட்ட கடிகாரம்,விரல்களில் வகைக்கொன்றாக நாலு மோதிரங்கள் இப்படி இருந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது. அப்படியே வயலுக்குள் இறங்கி வரப்புகளில் மேல் வெறுங் கால்களுடன் யாராவது தென்படுகினமா எனப் பார்த்துக் கொண்டு நடந்து போகிறார்......! பார்வை .....(1) 👁️ பார்ப்போம் இனி ......! ✍️
  4. meelsiragu (87 years old) nedukkalapoovan rubanram (47 years old) sankilikkaruppu (47 years o இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்காலபோவான் & அதர்ஸ்......! 💐
  5. எடிட்டர் தயவுசெய்து மேடைக்கு வரவும்
  6. வணக்கம் வாத்தியார்......! நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல் என் பெண்மை திரண்டு நிற்கிறதே திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொல்லச் சொல்கிறதா என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதரிந்தேன் என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா கட்டிளிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2) கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா.....! ---காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக---
  7. எதையும் தாங்குவேன் அன்புக்காக......! 👍
  8. விசித்திர உலகம் 82t1f2t0hph oca8ehhhd · அரபு நாட்டில் கட்டப்பட்ட சிவாலயத்திற்கு வருகை தந்த அரபு மன்னர் சிவலிங்கத்திற்கு திருநீறு பூசும் காட்சி - செய்தி. இங்க இருக்கற முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும், வெளிநாடுகள்ல இருக்கற முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? வெளிநாட்டு கிறிஸ்துவன் இங்க வந்தான்னா எல்லா இந்து கோவிலுக்கும் சென்று அனைத்து பிரசாதங்களையும் வாங்கி சாப்பிடுவான். இங்க கிறிஸ்துவ மதம் மாறிய நம் மக்கள் இந்து கோவில் பிரசாதத்தை தொடவே மாட்டாங்க. அதேபோல அரபு நாடுகள்ல இருக்கற முஸ்லீம்கள் இந்து கோவில்ல வந்து கேசூவலா சாமி கும்பிடுவாங்க எல்லா திருவிழாக்கள்லயும் கலந்துக்குவாங்க. இங்க இருக்க முஸ்லீம்கள் பெரும்பாலும் வரமாட்டாங்க. ஏன்னா அவிங்க இருவருமே( அரபு இஸ்லாமியர்கள் மற்றும் மேலைநாட்டு கிறிஸ்துவர்கள்) மதம் மாறியவர்கள் கிடையாது. அவர்களுக்கு தாய் மதமே இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம்தான். ஆனால் இந்தியாவில் எல்லாருமே மதம் மாறியவர்கள்தான். இவர்களுக்கு அவை இரண்டுமே தாய்மதம் கிடையாது. இந்துக்களும் எல்லா சர்ச்சுகளுக்கும், தர்காவுக்கும் போவாங்க. ஏன்னா இந்துக்களுக்கு இந்துமதம் என்பது தாய்மதம். யாரெல்லாம் மதம் மாறாமல் தாய் மதத்திலேயே இருக்கிறார்களோ அவர்கள் மற்ற மதங்களையும் மதித்து நடப்பார்கள். மதம் மாறியவர்கள் செய்யும் அலப்பறைகள்தான் சற்று முகம் சுளிக்க வைக்கின்றன. மதம் கடந்து மனிதத்தை மட்டுமே நேசிப்போம். விசித்திர உலகம்
  9. வணக்கம் வாத்தியார்......! ஆண் : சொந்தமில்லை நீ எனக்கு பந்தமில்லை நான் உனக்கு இருந்தாலும் என்னுயிரே உன் வரவை தேடுகிறேன் ஆண் : மேடை போடும் நாள் வருமோ கடவுள் தந்த வாழ்வினிலே ஆண் : குங்கும உதட்டழகும் கொடி போன்ற உடலசைவும் சங்கு கழுத்தழகும் கண்டு மனம் வாடுகிறேன் ஆண் : மானினமும் மீனினமும் மை போடும் பெண்ணினமும் வாழைத் தோப்புக்குள்ளே வந்திருக்க காணுகிறேன் ஆண் : கரையேறி மீன் வருமோ கை தேடித பால் வருமோ இந்த ஜென்மம் இல்லையென்றால்….ஆஅ….ஆ…. இந்த ஜென்மம் இல்லையென்றால் மறு ஜென்மம் உன்னருகே இருந்திட ஆண்டவனை எப்போதும் வேண்டுகிறேன்…..! ---அத்தை மகளும் இல்லை---
  10. எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்.....இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்......! 👏
  11. siya (68 years old) தமிழ் சிறி (14 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி & சிவா .....! 💐
  12. முதல்ல பாடமாக்குங்கள் ......எல்லாம் மறந்துட்டியள் ......! 😂
  13. அலைகடலின் அலையில் ஓய்வின்றி அலையவேண்டும் - அதனால் இன்று ஓய்வெடுத்து கொள்கின்றோம்.......! 😂
  14. kalyani (32 years old) simz (34 years old) Sona (50 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கல்யாணி & அதர்ஸ் ......! 💐
  15. வணக்கம் வாத்தியார்......! பெண்: தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தானிருக்க உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே ஆண்: புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன் பெண்: உன் கழுத்தில் மாலையிட ஒண்ணிரண்டு தோளைத் தொட என்ன தவம் செஞ்சேனோ என் மாமா ஆண்: வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட உள்ளம் மட்டும் உன் வழியே நானே உள்ளம் மட்டும் உன் வழியே நானே பெண்:அடிக்கிற காத்தைக் கேளு அசையற நாத்தைக் கேளு நடக்கிற ஆத்தைக் கேளு நீ தானா … ஆண்: இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே ஆ.......! --- இஞ்சி இடுப்பழகி---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.