Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. பற்றைக் காட்டின் நடுவே பாதையொன்று பயணிக்கின்றது......! 💫
  2. ஹா......ஹா......பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த எவனும் விகடத்தில் வீக்காக இருந்ததில்லை.......! 😂
  3. வணக்கம் வாத்தியார்.......! பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே பேதம் தெரியல்லே நான் இருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான் அவன் இருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன் நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியல்லே இப்போ நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் தெரியல்லே அட என்னத்த சொல்வேன்டா தம்பி என்னத்த சொல்வேன்டா தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான் நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான் உண்மை இன்று கூட்டுக்குள்ளே கலங்கி நிக்குதடா அட உருட்டும் புரட்டும் சுருட்டிக்கொண்டு வெளியில் நிற்குதடா அட என்னத்த சொல்வேன்டா தம்பி என்னத்த சொல்வேன்டா......! ---யாரை எங்கே வைப்பது என்று---
  4. பார்வை ஒன்றே போதுமே..... ( 4). உறவினரா என்று சோமு கேட்க ஒரு வினாடி சுதாகரித்த முத்து, ம்....அப்பா வழியில் சொந்தம் என்று சொல்லி விட்டு அவரை தன்னோடு அழைத்துச்சென்று தான் வேலை செய்யும் இடத்தில் இருத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று சூடாக பால்தேனீரும் வடையும் வாங்கி வந்து அவருக்கும் குடுத்து தானும் சாப்பிட்டான். பின் வாடிக்கையாளர்கள் வர வர முத்துவும் வேலையில் மூழ்கி விட்டான். அவன் வேலை செய்யும் வேகத்தையும் லாவகத்தையும் பணம் வாங்குவதும் மிகுதியை குடுப்பதுமாக அவனது சுறு சுறுப்பைப் பார்த்த சாமிநாதனுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது.தன்னையறியாமல் அவனுக்கு கூடமாட எல்லா உதவிகளையும் செய்கிறார். மத்தியானம் அவருக்கும் சேர்த்து முத்து சாப்பாடு வாங்கி வர இருவரும் சாப்பிடுகின்றனர். இரவு இருவரும் ஒன்றாக வீட்டுக்கு வருவதைக் கண்ட மகேஸ்வரி ஆச்சரியத்துடன் அவர்களை வரவேற்கிறாள்.அப்போது முத்து காலையில் இருந்து நடந்ததை தாயிடம் சொல்கிறான். நாட்கள் மாதங்களாக உருண்டோடுகின்றன.சாமிநாதனும் இப்போது அவர்களில் ஒருவராகி விட்டார். அவரும் செருப்பு தைக்கும் தொழிலை நன்றாக கற்றுக்கொண்டு விட்டார். அதனால் முத்துவும் இவரை அங்கே விட்டு விட்டு தான் வீடுகளுக்கு பேப்பர் போடுதல், டிப்போவில் இருந்து பால் வீடுகளுக்கு மற்றும் கடைகளுக்கு எடுத்து சென்று குடுத்தல் போன்று வேறு சில வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். சாமிநாதனின் வழிகாட்டலில் அந்தக் குடும்பம் மாணிக்கம் பட்ட கடன்களை அடைத்துக் கொண்டே வந்தது. முத்து சாமிநாதனுக்கு பணம் தர முற்பட்டபோதும் அவர் வாங்கவில்லை.மறுத்து விட்டார். ஆயினும் மகேஸ்வரி அவருக்கென்று ஒரு சிறு தொகையை தனியாக சேமித்துக்கொண்டு வருகிறாள். அவரது ஊர் மற்றும் குடும்பம் பற்றி எதுவும் தெரியாததால் நாளைக்கு ஒரு பிரச்சினை மனக் கசப்பு வரக்கூடாது என்று அந்தச் சேமிப்பு. அதில் அவள் உறுதியாய் இருக்கிறாள். சித்ராவும் பரீடசைகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி இருந்தாள். இப்போது அவர்களின் கையில் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பணமும் சேர்ந்து கொண்டிருந்தது. கூடவே மகேஸ்வரியையும் சாமிநாதனையும் இணைத்து வதந்திகள் அக்கம் பக்கம் எல்லாம் பரவி எல்லோரும் கதைத்து மகிழ்ந்து அலுத்து அது அப்படியே புஷ்வாணமாகிப்போய் அந்தக் குடும்பத்துக்கென்று ஒரு கௌரவமும் மதிப்பும் உண்டாகியிருந்தது. சாமிநாதன் வீட்டுக்கு வெளியே திண்ணையில் இருக்கும் கட்டிலில் படுத்தபடி வானத்தைப் பார்க்கிறார். நல்ல நிலா வெளிச்சமாக இருக்கிறது. நினைவுகள் பின்னோக்கி நகர தான் வீட்டை விட்டு கிளம்பிய அன்றும் இப்படித்தான் நிலவு எறித்துக் கொண்டிருந்தது. அன்று மாலை தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வருகிறார்.அங்கு அவர் மனைவி ரேகா இல்லை. கைபேசியில் அழைத்தும் அழைப்பில் இல்லை. வேலைக்காரியிடம் கேட்ட பொழுது அம்மா வெளிக்கிட்டுக்கொண்டு கிளப்புக்கு சென்றிருப்பதாக சொன்னாள். காத்திருந்தார் வரவில்லை.நேரம் நள்ளிரவாகிக் கொண்டிருந்தது. காரை எடுத்துக் கொண்டு அவள் வழக்கமாகப் போகும் கிளப்புக்கு போனார்.ஹோலில் இருந்த கூட்டத்தில் ரேகா இல்லை.எங்கு போயிருப்பாள் என்று யோசித்துக் கொண்டு மதுவுக்கு ஓடர் குடுத்து விட்டு காத்திருக்கும் பொழுது அவள் ஆடைகள் விலகிய நிலையில் ஓர் அந்நிய ஆணின் அணைப்பில் போதையில் தள்ளாடியபடி மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். சாமிநாதனுக்கு கோபத்தில் கண்கள் எல்லாம் சிவந்து அங்கேயே அந்த இடத்திலேயே அவர்கள் இருவரையும் கொன்று விடலாம் போலத் தோன்றியது. எதுக்கும் வீட்டுக்கு வரட்டும் என்று நினைத்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். உள்ளே கோபம் தணலாக எரிந்து கொண்டிருந்தது. மேசை லாச்சியைத் திறந்து கைத்துப்பாக்கியை எடுத்து அதில் ரவைகளைப் போட்டு தயார் நிலையில் வைத்துவிட்டு "குட்டி போட்ட பூனைபோல்" அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்......! பார்ப்போம் இனி.........! ✍️
  5. வணக்கம் நிர்வாகம்.......! யாழ் ஒருபக்கம் (வலது) இழுத்துக் கொண்டு போய் நிக்குது. கொஞ்சம் கவனியுங்கள்........!
  6. மனத்தோட்டம் போதுமென்று......! 😍
  7. பார்வை ஒன்றே போதுமே........(3). வீட்டுக்கு வந்ததும் மகேஸ்வரி விரைவாக சோறும் ஆக்கி மீன்குழம்பும் ஒரு கீரையும் வைக்கிறாள்.....சித்ரா ஓடிப்போய் பெட்டிக்குள் இருந்து தகப்பனின் ஒரு சாரமும் டீ - சேர்ட்டும் எடுத்து வந்து சாமிநாதனிடம் தர அவரும் அதை வாங்கி உடுத்திக் கொள்கிறார்.....பின் அவர் திண்ணையில் இருந்து பார்க்க, மழைக்கு வீட்டின் கூரையில் இருந்து ஒழுகிய இடங்களில் வாளி , சட்டி என்று வைத்திருந்தார்கள். திண்ணைக்கும் குசினிக்கும் இடையில் இருக்கும் பனைமட்டை வரிச்சின் இடைவெளியில் மகேஸ்வரி குந்தியிருந்து கால்களை அகட்டி வைத்து அம்மியில் அரைப்பது தெரிகிறது.அவர் பார்வையை வேறு பக்கம் திருப்பி வெளியே எழுந்து வருகிறார்.இவ்வளவு ஏழ்மையிலும் அவர்களது விருந்தோம்பல் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அப்போது அவர்களது மகன் முத்து ஒரு சைக்கிளில் வந்து அதை திண்ணையில் சாத்தி விட்டு சாமிநாதனைப் பார்த்தபடி வீட்டுக்குள் போகிறான்....அங்கு அவனுக்கு சித்ரா நடந்ததை சொல்லி முடிக்கவும் மகேஸ்வரி குரல் கொடுக்கவும் சரியாக இருக்கின்றது. தம்பி கத்தியை எடுத்து கொண்டுபோய் வாழையிலை ரெண்டு வெட்டிக்கொண்டு வா. திண்ணையில பாயைப்போடு பிள்ளை சாப்பாடு முடிஞ்சுது அவரைக் கூப்புடு. எல்லோரும் சாப்பிட்டு முடிந்தபின்பு வெளியே இருந்து வெறியில் வந்த ஒருவர் இவர்களிடம் பணம் கேட்டு சண்டை பிடித்து விட்டு கண்டபடி தூசண வார்த்தைகளால் பேசிக்கொண்டு போகிறார். விருந்தாளிக்கு முன்பாக கடங்காரன் வந்து கத்திவிட்டுப் போனது அவர்கள் மூவருக்கும் ஒருமாதிரி கூச்சமாக இருந்தது. ஆனாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் பையன் முத்துதான் இப்பொழுது தகப்பன் பார்த்துவந்த வேலையை செய்துகொண்டு வருகின்றான். தமக்கை சித்ரா படிப்பதற்காகவும் குடும்பச் செலவுகளுக்காகவும் தனது படிப்பை நிறுத்தி வைத்து விட்டு சம்பாதித்து கொண்டுவந்து தாயிடம் குடுக்கிறான். ஆனாலும் தான் இப்பொழுது அவர்களுக்கு எப்படி உதவ முடியும். இன்று தான் ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் இவர்களைச் சந்திக்க வேண்டியதாகி விட்டது. தான் கொடுத்த சங்கிலியைக்கூட அவர்கள் வாங்கவில்லை. ம்...என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டார். பின் மாலையாகி நேரத்துக்கே இருட்டத் தொடங்கி விட்டது. அதனால் அவர்களிடம் சொல்லி விடைபெற்றுக்கொண்டு அவர் கிளம்பி விட்டார். அடுத்தநாள் நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சாமிநாதனின் தலையில் யாரோ தண்ணி ஊற்றுவதை உணர்ந்து பதறியடித்துக் கொண்டு எழுந்தவர் திகைப்புடன் நிமிர்ந்து பார்க்க கடை திறப்பதற்காக வந்து சிப்பந்தி சோமு கடை விறாந்தையில் யாரோ பிச்சைக்காரன் படுத்திருப்பதைக் கண்டு எரிச்சலுடன் அவர்மீது வாளித்தண்ணியை கொட்டி விட்டான். அவருக்கு கொஞ்சம் கோபம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு பேசாமல் எழுந்து வெளியேவர, அப்போது எதிர்ப் பக்கத்து கடையில் இருந்து ஒரு பையன் வீதியைக் கடந்து ஓடிவந்து சோமுவை கடிந்து விட்டு ஐயா நீங்களா, அட நீங்கள் இரவு வீட்டில் தங்கி விட்டு காலையில் கிளம்பியிருக்கலாமே என்று சொன்னான். அப்போது சோமு என்ன முத்து இவரை உனக்கு முன்பே தெரியுமா என்று வினாவ ஓம் சோமு தெரிந்தவர்தான் நேற்று வீட்டுக்கு வந்திருந்தார்......! பார்ப்போம் இனி.........! ✍️
  8. வணக்கம் வாத்தியார்.......! மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்- அவள் மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனை தேடி நின்றாள்!! ஆசை ஒருபுறம் நாணம் மறுபுறம் கவலை ஒருபுறம்-அவள் நிலைமை திரிபுரம்...!!! கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே.! -அவள் கூந்தலில் சூடிய மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே...!! நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை - அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை.! முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம் சீதை தனியிடம் - அவள் சிந்தை அவனிடம்.......! ---ஜனகனின் மகளை---
  9. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே ஏன் ரெண்டு பக்கங்கள் பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே ஆண் : தாமரை பூவென்றாள் காகித பூவானாள் ராமனைப்போல் வந்தான் ராவணன் போலானான் ஆண் : பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது ஊருக்கு ஒரு உள்ளம் ஊருக்கு ஒரு இன்பம் யாருக்கு அவன் சொந்தம் யாருக்கு அவள் மஞ்சம் தண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாளே பெண் மங்கை ஆண் : வேதங்கள் அறிகின்றான் வேதனை தருகின்றான் நல்லவர் அல்லாத பாதையில் செல்கின்றான் ஆண் : அப்பாவி பெண் உள்ளம் இப்பாவி செயல் கண்டு தள்ளாடுது காலையில் ஓர் வண்ணம் மாலையில் ஒர் வண்ணம் மாறுது அவன் பாதை வாடுகிறாள் பாவை பூச்சூடி வந்தாளே புரியாமல் நின்றாளே இப்போது......! ---மான் கண்ட சொர்கங்கள்---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.