-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
வீடியோக்களில் அடிக்கடி இஸ்லாமிய நபர்கள் தோன்றுகிறார்கள். இங்க சில பேருக்கு gasket போகப் போகுது இண்டைக்கு😂!
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
2005 இல் "சிங்களத் தேர்தல் எமக்கு வேண்டாம்" என்று புறக்கணித்து, மறைமுகமாக மகிந்தவை வெல்ல வைத்தவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்! வென்ற பிறகு "கொள்கையில் நாம் வேறு, ஆனால் யதார்த்த வாதியாகத் தெரிகிறார்" என்று மாவீரர் தின உரையில் குறிப்பிட்டதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்😂!
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
மக்கள் மிகவும் "பயத்துடன்" பங்கு பற்றிய மாதிரித் தான் தெரிகிறது😂!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தமிழர் நலன் தவிர்த்து புலிகளைப் பழி வாங்கும் படி நடந்து கொண்டோர் டக்கி, கருணா, ஆனந்த சங்கரி ஆகியோர் இருக்கிறார்கள். சம்பந்தர் அப்படியான வகை அல்ல! ஆனால் "தமிழர் நலன் என்பதே புலிகளை அப்படியே சிரம் மேல் காவுவது மட்டும் தான்!"😎 என்ற புரிதலுடையோருக்கு, சம்பந்தர், சுமந்திரன், சாணக்கியன், நீலன் என எல்லோருமே தமிழர் விரோதிகள் தான்! ஒரு துரும்பையும் நகர்த்தாமல், ஏனைய கட்சிக் காரர்களை "கொள்கை எதிரிகள்" என்று மட்டும் திட்டிக் கொண்டு ஒற்றை சீற்றைப் பேணி வரும் கஜேந்திரகுமார் எவருக்கும் துரோகம் செய்யாமல் அப்படியே பா.உ வாக நிலைத்து ஓய்வு பெறுவார்😇!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
22 ஆசனங்கள் கூட்டமைப்பிற்குக் கிடைத்த போது "பின் கதவால்" (தேசியப் பட்டியலின் இன்னொரு பெயர்!) புலிகளால் உள்ளே கொண்டு வரப் பட்டவர் தற்போது அமரராகி விட்ட ஈழவேந்தன். சம்பந்தர் நாட்டிலேயே இருந்து செய்யக் கூடிய விடயங்களைச் செய்து கொண்டிருந்தார், இதற்குப் பயன் இருந்ததா இல்லையா என்பது வேறான ஒரு விவாதம். அமரர் ஈழவேந்தன், பா. உக்களுக்கான விசேட சலுகைகளைப் பாவித்து உலகம் சுற்றினார். "உலகம் சுற்றும், விடு முறையில் நிற்கும் பா.உவுக்கு விடுதி எதற்கு?" என்று சிங்கள அரசு பறித்துக் கொள்ள முயன்ற போது விடுதிக்காகவும் போராடினார். பின்னர் "அளவுக்கதிகமாக விடுமுறை எடுத்துக் கொண்டார்" என்று பதவியைப் பறித்த போது ஈழவேந்தன் கனடாவில் செற்றிலாகி விட்டிருந்தார். சம்பந்தன் காலமாகிய திகதிக்கு அண்மையாக இவரும் காலமானார். "சம்பந்தர் இறந்தது நல்லது" எனக் கொண்டாடிய புலம் வாழ் தேசிய வீரர்கள் பலர் ஈழவேந்தன் கனடாவில் பரத நாட்டிய அரங்கேற்றங்களில் ஆற்றிய வீராவேச உரைகள் காரணமாக அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். எங்கள் ஆட்களுக்கு, பேச்சுத் தான் முக்கியம்! வாய் மட்டும் இருந்தால் எங்கள் புலத் தமிழர்கள் பலரைப் பேய்க்காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த சம்பந்தர் ஈழவேந்தன் ஒப்பீடு!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
புலிகள் இல்லாமல் போனது சம்பந்தருக்கு ஏன் கவலையைக் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? சம்பந்தர் போன்ற ஆயுத வழியை எட்ட நின்று பார்த்த அரசியல் வாதிகளும், சில சமயங்களில் எட்டி நின்றாலும் சுடப் பட்ட சிவ சிதம்பரம் போன்றவர்களும் புலிகள் இல்லாமல் போனால் ஒப்பீட்டளவில் நல்லதென நினைத்திருப்பர் தான். இந்த நினைப்பின் தோற்றுவாய் சம்பந்தரிடம் இல்லை, அமிர், யோகேஸ்வரன் சுடப் பட்ட காலத்தில் இருக்கிறது. இதன் பிறகு எதை எதிர்பார்த்து, யார் சம்பந்தருக்கு தொலை பேசி எடுத்தார்களாம்?
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இறுதியில் கண் விழிக்கும் போது முன்னே நிற்கும் எருமை இருக்கிறதே? அது தான் cherry on the top! சான்சே இல்லை😂!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
புலவர் இனிப் போய் விடுவார்! வேறெங்காவது மீண்டும் வருவார், கேள்வி கேட்டால் மீண்டும் போய் விடுவார்😎! "சிவப்பு, பச்சை, நாவல்" என்று கலர் அடித்து விளையாடும் "முதிர்ந்தும் வளராத" பெரிசுகளுக்குரியவை தான் இது போன்ற திரிகள்😂! உண்மையா, திரிப்பா என்று உரசிப் பார்த்து வாசகர்களுக்கு தகவல் தெளிவை உருவாக்கும் பதிவர்களுக்குரியவையல்ல!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதில் மூன்றாவது கருத்து மட்டும் பாதி உண்மை. ஏனைய இரண்டு கருத்துக்களும் முழுமையான உண்மைகள் தானே? உண்மையான ஒரு விடயத்தைச் சொன்னதற்கா சம்பந்தனுக்கு இவ்வளவு எதிர்ப்பு😂?
-
திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
இது நிச்சயம் பெரிய அவியலாகத் தான் இருக்கும்! பேராசிரியர் சொல்லியிருக்க மாட்டார், வேறு எவராவது அவித்திருப்பர். இயற்கை அனர்த்தங்களில் இன்று வரை எதிர்வு கூர முடியாத ஒன்றாக இருப்பது நில நடுக்கம். இன்ன பிரதேசம் நில நடுக்கத்திற்கு அதிக வாய்ப்புள்ள இடம் என்று சொல்லலாம், ஆனால் எப்போது நிலம் நடுங்குமென எதிர்வு கூரும் தொழில் நுட்பம் எதுவும் இது வரை உருவாகவில்லை.
-
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
அமெரிக்கா வசிப்பதற்கு நல்ல நாடு தான். ஆனால், 2016 இலும், பின்னர் 2024 இலும் கிடைத்த பாடங்களின் படி அமெரிக்காவின் கட்டமைப்பில் ஒரு பாரிய "ஓட்டை (vulnerability)" இருப்பது தெளிவாகி விட்டது: ட்ரம்ப் போன்ற உள்ளூரில் பிறந்த எந்த ஒரு பன்னாடையும் கொஞ்சம் காசைச் சேகரித்தால் அமெரிக்காவில் அதிபராகலாம் என்பது தான் அந்த ஓட்டை. இது போன்ற ஒரு ஓட்டையை 1780 களில் அமெரிக்க அரசியல் சாசனத்தை எழுதிய மூத்தோர் குழு எதிர்பார்க்கவில்லை. இனி இந்த ஓட்டையை அடைக்கவும் முடியாது. எனவே, படிப்படியாக அமெரிக்க டொலர், அமெரிக்க பங்குச் சந்தை, அமெரிக்க தொழில் நுட்பம் என்பவற்றில் இருந்து நாடுகள் விலகிச் செல்ல ஆரம்பிக்கும். கனடாவே இனி அமெரிக்காவுடன் பழைய நிலை உறவை நிலைநாட்டப் போவதில்லை எனும் போது, வேறு நாடுகள் விலகி ஓடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சீவகன் அவர்களின் "அரங்கம்" தளத்தில் எழுதுவோரில், கருணாகரன் சுமந்திரன் சார்பாகவும், அழகு குணசீலன் சுமந்திரன், சாணக்கியன் எதிர்ப்பாகவும் எழுதுவர்.ஆனால், இருவரும் இந்த வாரம் எழுதியிருக்கும் ஆக்கங்களில், சுமந்திரனைத் தவிர நிர்வாக ஆளுமையும், தொடர்பாடல் இயலுமையும் உடைய இன்னொருவர் கட்சிக்குள் இல்லையென்ற அவதானிப்பைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இந்த தகுதிகளுக்காக சுமந்திரன் செய்யும் எல்லாவற்றையும் ஆதரித்து ஊக்குவிக்க வேண்டுமென்பதில்லை, ஆனால் சுமந்திரனை ஒரேயடியாக தமிழ் அரசியலில் இருந்து அகற்றும் எண்ணத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 2020 தேர்தல் காலத்தில், சுமந்திரனுக்கு எதிராக புலம் பெயர் முகநூல் "போராளிகளும்", யோதிலிங்கம் போன்ற உள்ளூர் பத்திரிகையாளர்களும் முன்னெடுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தின் போதே இதைச் சிலர் சுட்டிக் காட்டினார்கள். அந்த ஆண்டில் மகிந்த கட்சியின் அங்கஜன் யாழ்ப்பாணத்தில் பாரிய வெற்றி பெற்றார். இப்படியான நிலை 2024 இலும் தொடர்ந்தது. சிங்களக் கட்சியின் சார்பில் இன்று பல தமிழ் பா.உக்கள் உருவாகி விட்டார்கள்! "நமக்குத் தலை போனாலும் பரவாயில்லை, நாம் எதிர்க்கும் சுமந்திரன், சாணக்கியன் போன்ற தீவிர தேசியம் பேசாதோருக்கு மூக்குப் போக வேண்டுமென்ற" மன நிலை இருக்கும் வரை, சிங்களக் கட்சியிடம் மாகாணசபை கூடப் போகலாம்!
-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
ஏன், விபுலானந்தன் போல ஒரு மாணவன் இறந்து கிடப்பதாகவும் சீன் காட்டலாம். ஆனால், உல்லாசப் பயணிகளாக வருவோர் உங்களை விட வரலாற்றுக்கு மரியாதை கொடுப்போராக இருப்பர் என நினைக்கிறேன்😎. அதனால் தகவல் பலகைகளே போதும் அவர்களுக்கு!
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் உயர் பதவிகளில் அமர்வது இன்னும் உங்கள் போன்றோருக்கு ஆச்சரியமாகத் தெரிவது தான் ஆச்சரியமான விடயம். இப்படியான பின்னணியில், ஒற்றை எஞ்சின் செஸ்னாவை ஓட்டி விட்டு "முதல் தமிழ் விமானி" என்பதும், உள்ளூராட்சி சபையில் தவிசாளர் பதவியைப் பெற்று விட்டு, "மாநில முதல்வர்" என்று பெருப்பிப்பதும் நகைப்பிற்குள்ளாக்கப் படுவது நடக்கும் தானே? தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த (உங்கள் பாசையில்) "மோட்டுச்" சிங்களவர்களும் வெளிநாடுகளில் உச்ச நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் பிரபல ஆய்வுப் பல்கலைக் கழகமான Caltech இன் அடுத்த தலைவர் ஒரு இலங்கை சிங்களவர்! California Institute of TechnologyRay Jayawardhana Appointed Caltech's Tenth PresidentThe Johns Hopkins University provost, renowned astrophysicist, and award-winning author will begin as the Institute's leader on July 1, 2026.
-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
துரத்தப் பட்ட இராணுவம் எதிர்காலத்தில் திரும்பவும் வந்து குந்தி விடக் கூடாதென்ற பாதுகாப்புக் காரணம் தான் கோட்டை மிகக் கஷ்டப் பட்டு பகுதி பகுதியாக உடைக்கப் படக் காரணம். கோட்டைக்கு அண்மையில் இருந்த பாரிய யாழ் பிரதான தபாலகக் கட்டிடம், தளபாடங்கள் எல்லாம் புலிகளால் அகற்றப் பட்ட பின்னர் எரியூட்டப் பட்டும், உடைக்கப் பட்டும் யாரும் பயன்படுத்த இயலாத நிலையில் கைவிடப் பட்டதும் இதே பாதுகாப்புக் காரணமாகத் தான். அடிமைச் சின்னம் தான் கோட்டை என்றால், அதைப் பார்வையாளர்களுக்கு சுட்டிக் காட்டும் படியான தகவல் பலகைகள் வைத்து எங்கள் வரலாற்றை பிறர் அறியச் செய்த படியே சுற்றுலாப் பயணிகளிடம் பணமும் வசூலிக்கலாம். அல்லது, எங்களுக்கு உள்ளூர் மக்களுக்கு உதவக் கூடிய சுற்றுலாத் துறை வருமானத்தை விட "உணர்ச்சி பூர்வமான சாகசங்கள்" தான் முக்கியம் என்றால் பகுதி பகுதியாக உடைத்து அகற்றி விட்டு, அதை சிங்களவர் வந்து விகாரை கட்ட அனுமதிக்கலாம்😇!