Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. அப்ப சிறிதரன் பா.உ வும் அனுர காவடியாக மாறி விட்டாரா? அல்லது பார் லைசென்ஸ் விடயம் வெளியே வராமல் இருக்க ஆட்சிக்கு வரும் எந்த அரசிடமும் சரணாகதி அடையும் நிலையா? சிறிதரன் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
  2. ட்ரம்ப் செய்திருக்கிறார். இதையே பைடனோ ஒபாமாவோ செய்திருந்தால் யாழ் களத்தில் "இடதுசாரிப் போர்வையோடு வலம் வரும் அதி வலதுசாரிகள்" இப்ப "ஏகாதிபத்தியம், பிள்ளைத் தாச்சிப் பத்தியம்" என்று ஒரே சருவச் சட்டியைத் தலையில் தூக்கிக் கொண்டு வந்திருப்பர். இப்ப எந்தத் "தலைவன்" பக்கம் சார்ந்து எழுதுவது என்ற "தொண்டையில் முள்ளு" நிலைமை😂!
  3. 2009 இல் மகப்பேற்று மருத்துவ நிபுணர் சபாரட்ணம் அருள்குமரன் இதே வகையான நைற் கௌரவம் பெற்று விட்டார். அவர் தான் நிபுணர்கள் பட்டியலில் நைற் கௌரவம் பெற்ற முதல் ஈழத்தமிழராக இருப்பார் என நம்புகிறேன். https://en.wikipedia.org/wiki/Sabaratnam_Arulkumaran சேர் அருள்குமரன் யாழ் மத்திய கல்லூரிப் பழைய மாணவர். எப்பவாவது "once in a blue moon" யாழ் மத்திய கல்லூரி ஓரிருவரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பும்😎. அப்படி மருத்துவராக வருபவர் ஏனைய பிரபல கல்லூரிகளில் இருந்து சென்றோரை விட உச்சமான தர நிலைக்கு வருவார்! மத்திய கல்லூரியின் கிணற்றுத் தண்ணீரில் தான் ஏதோ இருக்கிறது என நினைக்கிறேன் (அதனால் தான் Upper school இல் இருக்கும் அந்த ஒற்றைக் கிணற்றை நாம் இறைப்பதில்லை😂!)
  4. "சேர்" பட்டம் என்று தமிழில் சொல்வோமல்லவா? அது தான் பொதுவாக வழங்கப் படும் "நைற்" (Knight) பட்டம். பல வகையான நைற் பட்டங்கள் இருக்கின்றன. மேல் கல்வியாளருக்கு வழங்கப் பட்டது "சேர்" Sir என்று அவர் தன் பெயருக்கு முன்னாள் போட்டுக் கொள்ளக் கூடிய King's Bachelor என்ற நைற் பட்டம் என ஊகிக்கிறேன். பேராசிரியர் சேர் கனகராஜாவுக்கு வாழ்த்துக்கள். "King's Speech" என்ற திரைப் படத்தில் இந்த பிரிட்டிஷ் நைற் பட்டங்களைக் பற்றிய ஒரு உரையாடல் வருகிறது. பார்த்து ரசியுங்கள். காட்சியின் பின்னணி: ஆறாம் ஜோர்ஜ் மன்னருக்கு திக்குவாய்ப் பிரச்சினை (stuttering) இருந்ததால், ஒரு பேச்சுப் பயிற்சியாளரின் உதவியை நாடுகிறார். அவர்களது முதல் அறிமுகத்தின் போது நடக்கும் உரையாடலின் பகுதி இது: https://www.youtube.com/watch?v=arhkcfV6C28
  5. இந்தக் கலாச்சார வேறுபாடுகள் பற்றிய விழிப்புணர்வின்மை வேற்று நாட்டவருக்கு மட்டுமல்லாமல், வேற்று மாநிலத்தவர், ஒரே மாநிலத்தின் வேற்று நகரத்தவர் போன்றவர்களுக்கும் ஆப்பாக முடிந்திருக்கிறது. சில ஆண்டுகள் முன்பு, ஒஹையோவில் ஒரு பெரும்பனிப் புயல் வந்து, வீதிகளில் இருந்து வாகனங்கள் சறுக்கி மீடியனில் மாட்டிக் கொண்ட நிலை. இப்படி மாட்டிக் கொண்ட ஒரு வாகனத்தை, உதவும் நோக்கில் இன்னொரு வழிப்போக்கர் அணுகி கண்ணாடியைத் தட்டிய போது உள்ளே இருந்த அரை லூசுப் பயல் துப்பாக்கியால் சுட்டதில் உதவ வந்தவர் இறந்தார். சுட்டவருக்கு பின்னர் நீண்ட சிறை கிடைத்தது, ஆனால் ஒரு நல்ல மனிதர் உலகில் இருந்து மறைந்தார். இங்கே வாகனங்களை ஒரு வீதியில் திருப்ப வேண்டிய தேவை (U-turn) வந்தால், முடிந்த வரையில் எந்த தனியார் வீடுகளின் வாசல் பகுதி (driveway) யினுள்ளும் நுழையாமல் திருப்ப வேண்டும் என ஆலோசனை இருக்கிறது. நியூ யோர்க் நகரில் இருந்து வடக்கில் இருக்கும் நியூயோர்க் மாநில கிராமம் ஒன்றுக்குச் சென்ற ஒரு இளையோர் குழு, ஒரு தனியார் வீட்டின் வாசலில் நுழைந்து வாகனத்தைத் திரும்ப முயன்ற போது உள்ளேயிருந்து வந்த ஒரு கிழவர் வாகனத்தை நோக்கிச் சுட்டதில் ஒரு இளம் பெண் பலியானார். இந்தக் கிழவருக்கும் நீண்ட சிறை கிடைத்தது. எந்த வீட்டில்/வாகனத்தில் எத்தகைய மனப் பிறழ்வுடைய மனிதர்கள் இருப்பார்கள் என்ற அறுதியில்லாத காரணத்தால் சற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே 911 அல்லது உள்ளூர் காவல் துறையை அழைப்பதும் ஏனையோருக்கு உதவும் ஒரு பாதுகாப்பான வழி.
  6. வாசுகி கணேசானந்தனின் “Brotherless Night” குடும்பத்தை விடுமுறைக் கால அங்காடி மேய்தலுக்காக இறக்கி விட்டு பார்ன்ஸ் அன்ட் நோபிள் புத்தகக் கடைக்குள் நுழைந்து நடந்த போது தற்செயலாகக் கண்ணில் பட்டது வி.வி. கணேசானந்தனின் "Bortherless Night” என்ற நாவல். இது இந்திய எழுத்தாளரின் படைப்பா அல்லது இலங்கை எழுத்தாளரினுடையதா என்ற குழப்பத்திற்கான விடை அட்டைப் படத்திலேயே தெரிந்தது: சைக்கிளோடும் பெண்கள் எங்கள் ஊர் வர்த்தகச் சின்னங்கள், ஒரு heritage என்று கூடச் சொல்லலாம். அதிகம் புனைவுகளை வாசிக்காத நான், ஒரு ஆர்வத்தில் வாங்கி வந்து ஆமை வேகத்தில் வாசித்து முடித்தேன். இதைப் பற்றி எழுதுவதா, தவிர்ப்பதா என்ற குழப்பத்தில் இருந்த போது விவிஜி யின் இன்னொரு சிறுகதை யாழில் இணைக்கப் பட்டிருந்தது நினைவிற்கு வந்தது. விவிஜி நேரடியாக "நாவல்" என்று மட்டும் குறிப்பிட்டிருந்தாலும் கூட, இது ஒரு “வரலாற்று நாவல்”. 83 கலவரத்தில் பாதிக்கப் பட்ட ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம், வடக்கு நோக்கிக் குடிபெயர்ந்து அதன் பின்னர் படிப்படியாக உள் நாட்டுப் போரினால் சூழ்ந்து கொள்ளப் பட்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. கொழும்பில் ஆரம்பிக்கும் நாவல் 2009 இல் நியூயோர்க்கில் முடிவடைகிறது. மிகச் சுருக்கமாகச் சொன்னால், 83 இல் இருந்து 2009 விடுதலைப் போரின் ஆயுதப் போராட்டம் நிறைவடையும் வரையான சம்பவங்களே நாவலின் சம்பவங்களாக விரிகின்றன. இந்த சம்பவங்களின் நாயகர்களும், நாயகிகளும் கூட, பெருமளவுக்கு நிஜமாக அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த மனிதர்களே என்பது அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த ஒரு வாசகருக்கு இலகுவாகப் புரியும். எனவே, இந்தக் காலப் பகுதியில் வடக்கில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகள், அரசியல் படுகொலைகள், இந்திய இராணுவ வருகையின் பின்னர் மோசமான மனித உரிமைகளின் நிலை, திலீபனின் உண்ணா நோன்பு, அந்தக் காலப் பகுதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வான ராஜினி திராணகம படுகொலை என்பன நாவலின் மையங்களாகத் திகழ்கின்றன. இந்த நிகழ்வுகளின் விபரிப்பின் போது, பின்னணியில் வந்து போகும் பாத்திரங்களில் அந்தக் காலத்து புலிகள் இயக்கப் பிரமுகர்களையும் கூட இலகுவாக அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. கிட்டு மாமா தனது "Honda CD200" இல் யாழ் வீதிகளில் பறக்கும் போது அவரது தோள்களில் சில சமயங்களில் அமர்ந்து பயணிக்கும் செல்லப் பிராணியான “மகாக்” குரங்கு கூட வந்து போகிறது கதையில். என்னுடைய புரிதலின் படி, நாவலின் முதுகெலும்பாகத் திகழ்வது புலிகள் அமைப்பு எவ்வாறு மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்காத, ஒற்றைத் தலைமையைத் தமிழர்களிடம் ஊன்ற விளைந்த ஒரு அமைப்பாகத் திகழ்ந்தது என்ற கதையாடல் தான். இலங்கை இராணுவம்/அரசு, புலிகள் அமைப்பு, இந்திய இராணுவம் என எல்லாத் தரப்புகள் மீதும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விமர்சனம் வைக்கப் பட்டிருந்தாலும், மிகப் பெரும்பான்மையான விமர்சனம் புலிகள் அமைப்பு மீதும், அடுத்த படியாக அதிக பட்ச விமர்சனம் இந்திய இராணுவம் மீதும் வைக்கப் பட்டு எழுத்தாளர் கதையாடலைக் கொண்டு செல்கிறார். புலிகள் அமைப்புப் பற்றிய விமர்சனங்களைப் பொறுத்த வரையில், சில விடயங்களில் உண்மைத் தன்மையும், உறுதி செய்யப் பட்ட தகவல்களும் அடிப்படையாக அமைந்திருந்தாலும், சில முக்கியமான இடங்களில் இணையத்தில் நடக்கும் அரட்டைகளின் வழி பெற்ற தகவல்களும், புலிகளின் எதிர்ப்பாளர்கள் கட்டிய கதைகளும் அடிப்படையாக பயன் பட்டிருக்கின்றன. உதாரணமாக, 90 களில் துரோகிகள் எனக் குற்றஞ் சாட்டப் பட்டு மின்சாரத் தூண்களில் கட்டிச் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் அதிகமானோர் சாதி நிலையில் குறைந்தவர்களாக இருக்கலாம் என்ற அடிப்படையில்லாத சந்தேகங்கள் நாவலில் குறிப்பிடப் படுகின்றன. இப்படிக் கொல்லப் பட்டோர் எல்லோரும் துரோகிகள் அல்ல என்பது ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும், ஆனால் சாதி வேற்றுமை இவர்களது கொலைக்குக் காரணமாக இருந்தது என்பது தரவுகள் இல்லாத ஒரு புனைவு. இதே போல இன்னொரு உதாரணமாக பெண் கரும்புலியாகச் செல்லும் ஒரு போராளி இந்திய இராணுவத்தால் வல்லுறவுக்குள்ளான ஒருவர் என்ற சித்திரிப்பும் தெரிகிறது. பாலியல் பலாத்காரத்திற்குள்ளான ஒரு பெண்ணிற்கு தமிழ் சமூகம் காட்டும் வேற்றுமையும், பழிவாங்கும் உணர்வும் கரும்புலிகளாக அந்தப் பெண்கள் மாற முதன்மைக் காரணம் என்பது போன்ற - சில சிங்கள/இந்திய பிரச்சாரவாதிகளால் கட்டப் பட்ட கதைகளின் அடிப்படையிலான- சித்தரிப்பு இது. இந்தப் புலிகளின் மீதான விமர்சனம் என்பது "என் தனிப் பட்ட அரசியல்" என்ற பொறுப்புத் துறப்பை விவிஜி பின்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். வேறு யாரையும் அவர் குற்றம் சாட்டவில்லை. ஆனால், நாவலின் பின்னிணைப்பாக விவிஜி தந்திருக்கும் ஷெல்பி போல்க் என்ற எழுத்தாளருடனான உரையாடலில், "முறிந்த பனை" நூலினை வாசித்த பின்னர் தான் இந்த நாவலை எழுதும் தூண்டுதல் எழுத்தாளருக்கு உருவானதாகக் குறிப்பிடுகிறார். இந்த நாவலுக்கான தன் ஆராய்ச்சியை பல்வேறு நூல்கள், குறுந்திரைப் படங்கள், கட்டுரைகள் வழியாக மேற்கொண்டதாகவும் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டுரைகள், இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடர்பான நூல்கள் அனேகமானவை இந்தியாவின் நாராயணசாமி, இலங்கையின் அகிலன் கதிர்காமர், திருவரங்கன், ஹூல் சகோதரர்கள் ஆகியோரினால் எழுதப் பட்டிருப்பவையாக எனக்குத் தெரிகின்றன (நாவலின் மேலதிக வாசிப்புப் பட்டியலில் இவை இருக்கின்றன). அடிக்கடி இங்கே நான் தாயகத்தை "சின்னத்திரையில் பார்த்து விட்டு எழுதுவோர்" என்று சிலரைக் கண்டிப்பதுண்டு. அதே போல, ஒரு உள்நாட்டுப் போரின் சமூகவியலை - அதுவும் பெரும்பாலும் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் சிவிலியன்களின் சமூகவியலை- வெறுமனே, ஒரு குறிப்பிட்ட பார்வை உடைய தரப்பின் வரலாற்று நூல்கள் , கட்டுரைகள் வழியாக மட்டுமே வாசித்து ஆய்வு செய்து ஒரு வரலாற்றுப் புனைவை விவிஜி உருவாக்கியிருக்கிறார் எனக் கருதுகிறேன். இது அவரது படைப்புச் சுதந்திரம் என்றாலும், இதனால் புலிகளின் ஆட்சி மோசமான அடக்கு முறைக் கூறுகள் மட்டுமே கொண்ட ஒரு இஸ்லாமிய ஆயுதக் குழுவின் ஆட்சி போன்றது என்ற விம்பத்தை உண்மை நிலவரம் தெரியாத வாசகர்களிடம் ஏற்படுத்தி விடும் பேராபத்து இருக்கிறது. இது ஆங்கில வாசகர்களை நோக்கிய ஒரு நாவல் என்பதால் இந்த ஆபத்து நிச்சயமாக இருக்கிறது. விவிஜியின் எழுத்துலகப் பிரசன்னம் காரணமாக, அவரது முதல் நாவலான “Love Marriage” சுவீடிஷ், பிரெஞ்சு, குரோஷிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. அதே போல இந்த நாவலும் மொழி மாற்றம் செய்யப் படும் போது, ஒரு வரலாற்றுப் புனைவினூடாக தமிழர்களின் ஆயுதப் போராட்டம் குறித்து நியாயமில்லாத ஒரு கதையாடலை பரப்பும் பேராபத்தும் இருக்கிறது. -ஜஸ்ரின் வாசுகி கணேசானந்தன்: அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் வி.வி.கணேசானந்தன், இது வரை இரண்டு நாவல்களை வெளியிட்டுள்ளார். இவரது இரண்டாவது நாவலான “Brotherless Night” அமெரிக்க NPR இன் "ஆண்டின் சிறந்த நூல்-2024" என்ற கௌரவம் பெற்றிருக்கிறது. மேலும், 2024 இல், Women’s Prize for Fiction, Carol Shields Prize, New York Times Editors’ Choice ஆகிய கௌரவங்களையும், பரிசுகளையும் பெற்றிருக்கிறது.
  7. இது அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் அதிகம் நிகழக் கூடிய ஒரு ஆபத்துத் தான். ஜோர்ஜியாவின் தலை நகரான சவன்னாவில் சில ஆண்டுகள் முன்னர் ஒரு இந்திய வயோதிபர் காலை நடைப் பயிற்சி சென்ற போது "சந்தேகத்திற்கிடமானவர் திரிகிறார்" என்று யாரோ பொலிசைக் கூப்பிட பொலிஸ்காரர் வந்து அவரிடம் உரையாட முயல்கிறார். வயோதிபருக்கு ஆங்கிலம் தெரியாது, அவர் சிரித்து விட்டு தொடர்ந்து நடக்க, அந்தப் பொலிஸ்காரர் அவரை நிலத்தில் தள்ளி வீழ்த்திக் கைது செய்ததில் அவரது கழுத்தெலும்பு பாதிக்கப் படுகிறது. பல நாட்கள் மருத்துவ மனையில் இருந்த அவரது குடும்பம் நகர நிர்வாகம் மேல் வழக்குப் போட்டு சில மில்லியன்கள் நட்ட ஈடு பெற்றார்கள் என நினைக்கிறேன். ஒரேயடியாக அச்சம் கொள்ள வேண்டியதில்லை, ஆனால் அவதானமாக இருக்க வேண்டும். தேவையின்றி ஒருவருக்கு உதவப் போகக் கூடாது. இது எங்கள் தென்னாசியக் கலாச்சாரத்தில் இருந்து வேறுபாடானது தான், ஆனால் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது பாதுகாப்பிற்கு அவசியம். "வெள்ளையின மீட்பர்கள்" வந்து இது போன்ற நிறவாதம் பார்க்கும் இளம் தாய்மாருக்கு உதவுவார்கள். இந்த ஆசியரை 2 மாதங்கள் சிறையில் வைக்கச் செய்த அதே பெண்ணுக்கு, சில நிமிடங்களில், இன்னொரு வெள்ளையின ஆண் அவரது வண்டிலைத் தொட்டு உதவும் வீடியோவையும் வால்மார்ட் சேர்த்தே வெளியிட்டு உதவியிருக்கிறது. எனவே தான், தென் மாநிலங்களில் வசிக்கும் பிறவுண் மனிதர்கள், வெள்ளையின மீட்பர்களை உதவ அனுமதித்து விட்டு வாழ்க்கையை அமைதியாக அனுபவிக்க வேண்டுமென்கிறேன்😇.
  8. அப்படியானால் போன வாரம் சுமந்திரனைப் போட்டுத் தாக்க இங்கே கூட்டம் கூடிய கீழ் திரியில் இருப்பது போலிச் செய்தியா? "தடையுத்தரவு நீங்கியதால் நிர்மாணப் பணிகள் துரித கதியில்" என்கிறது கீழே இருக்கும் செய்தி. "நிதியை மாற்றி விட்டோம்" என்கிறார் அரச அதிபர். அங்கே சதிக்கதைகள் பின்னிய @வாத்தியார், புலவர், எங்கள் "சொல்லின் செல்வர்"😎 மருதங்கேணி ஆகியோர் இங்கே எதுவும் எழுத மாட்டார்கள் போல!
  9. இந்த ஆண்டின் வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் (FeTNA) வருடாந்த ஒன்று கூடல் வட கரோலினாவில் 3 நாட்கள் நடந்தது. அழைப்பிதழில் வாகீசனும் வந்து நிகழ்ச்சி செய்வார் என்று இருந்தது, ஆனால் அவர் வரவில்லை. ஏன் வரவில்லை என்று விசாரித்த போது சில தகவல்கள் தெரிய வந்தன. இந்த நிகழ்ச்சிக்காக ஒரு 3 பேர் கொண்ட கலைஞர் குழுவாக அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறது வாகீசன் குழு. குழுவின் முகாமையாளர் என்ற பெயரில் இராசையா உமாகரனைக் குறிப்பிட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். உமாகரனின் முகநூல் பதிவுகளை அமெரிக்க விசாப் பிரிவில் பரிசீலித்திருப்பார்கள் போல. வாகீசன் குழுவுக்கு அமெரிக்க விசா மறுக்கப் பட்டிருக்கிறது.
  10. திராவிடப் பெயர் கொண்ட கட்சிகள் தான் அறிக்கை விட்டிருக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் பெயரைக் காணவில்லை? பிரபாகரன் போஸ்ரரை வைத்து வாக்குக் கேட்கும் நன்றிக்காகவாவது அறிக்கை விடலாமே?
  11. நிரோஷன் அவர்கள், இந்திய/தமிழ் நாட்டு அரசியல் பிரபலங்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்ததும், நெஞ்சைப் பிடித்த படி மருத்துவ மனையில் போய் படுப்பது போன்ற ஒரு சிஸ்ரத்தை ஈழத்திலும் உருவாக்குவார் போலிருக்கிறது. சில ஆண்டுகள் முன்பு, பிரதேச சபை போட வேண்டிய வீதியை, பிரதேச சபை கவனிக்காமல் விட்டிருந்த சூழலில், அங்கஜன் பா.உ க்களுக்கு ஒதுக்கப் பட்ட நிதியைப் பயன்படுத்தி செப்பனிட முயன்றார். விளம்பரத்திற்காக பெயர்ப்பலகையும் வைத்தார். அந்தப் பெயர்ப் பலகையைப் பிடுங்கிச் சென்று ஒளித்து வைத்தவர் தான் இந்த நிரோஷன் என நினைக்கிறேன். எதிர்காலத்தில் தமிழ் பா.உ வாக வருவதற்குரிய சகல தகுதிகளும் உடைய ஒருவர் எனலாம்😂!
  12. செய்தி என்கிறீர்கள், இங்கே இணையுங்கள். என்ன சொல்கிறார்கள் என்று அறியலாம் எல்லாரும். நன்றி!
  13. உங்களுக்கு சரியாக விளங்கவில்லையென நினைக்கிறேன். கவி அருணாசலம் சொன்ன நீண்ட பதிலில் "சிறிதரன் பா.உ தள்ளி விழுத்தப் பட்டார்" என்பது பொய்த்தகவல் என்றிருக்கிறார். அதற்குத் தான் "தரவுகளுடனான பதில்" என்றிருக்கிறேன், நீங்கள் தெரிந்தெடுத்து மேற்கோள் காட்டிய பகுதி தரவு அல்ல - அபிப்பிராயம். உங்களுக்கு இரண்டிற்கும் வேறுபாடு கிடையாது என்பது இங்கே எல்லோருக்கும் புரியும்! உங்களிடம் சொறியவில்லை, இடையிடையே வந்து சும்மா "காற்றில் இருந்து நீங்கள் பிடுங்கிப் போடும்-plucked from thin air" பொன்மொழிகளுக்கு ஆதாரங்கள் மட்டுமே கேட்கிறேன். நீங்கள் ஏதோ பதில் எழுதுகிறீர்கள், மட்டுக்கள் யாரோ அகற்றுகிறார்கள் என்று உங்கள் பதிலில் இருந்து புரிந்து கொள்கிறேன். ஆனால், நான் விசில் ஊதி அவர்கள் வந்து உங்கள் பதில்களை அகற்றுவதில்லை என்பதைச் சொல்ல வேண்டியது என் கடமை. இப்பவெல்லாம் வாசகர்கள் பதிவோரின் விறுத்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே எனக்கு😂!
  14. அப்ப பலர் சொன்னது போல, சுமந்திரன் பின் கதவால் வர ரணில் காரணம் இல்லையா? மகிந்த ரீம் தான் காரணமா? என்ன 15 வருடங்கள் முன்னர் நடந்தவற்றையே திரிக்கு ஒன்றாக மாற்றிச் சொல்கிறீர்கள்? இந்த இலட்ணத்தில் உங்களுக்கு சுமந்திரனின் தாத்தாவைப் பற்றிய அறிமுகம் எப்படித் தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்😇??
  15. ஏன் கொழும்பில் போய் தேடுவான்? ஐங்கரநேசனின் "தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்" பரிஸ்ரர் பட்டம் பெற்ற கஜேந்திரகுமார் பா.உ வின் கூட்டில் தான் இருக்கிறது. புலவரும், வாத்தியாரும் குத்தி முறிந்து இங்கே செய்ய முயல்வது "Don't Look Up" என்ற திரைப் படத்தில் சித்திரித்த மடை மாற்றும் வேலையை மட்டும் தான்😎! இவர்களுக்கு பழைய பூங்காவின் பாதுகாப்பிலும் அக்கறை இல்லை, சூழல் பாதுகாப்பிலும் துளி ஆர்வம் இல்லை!
  16. பார்த்து... மொள்ளமாக..அடியுங்கோ! "மயிலிறகு" வேணுமென்டால் சொல்லுங்கோ, யால சரணாலயத்தில் என் நண்பர் தான் மிருக வைத்தியராக இருக்கிறார். எடுப்பிச்சுத் தரலாம்😎!
  17. உங்கள் இருவரையும் போலவே "ரூம் போட்டு" யோசித்திருக்கிறார் போல சுமந்திரன்😂. அதனால் தான் மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய மூன்று நீதி மன்றங்களினாலும் மாற்றி எழுதப் பட முடியாத மாவட்ட நீதிமன்றில் அரசைக் காப்பாற்றியிருக்கிறார்!
  18. இதைத் தான் கையறு நிலை என்பதா? அல்லது இரு தலைக் கொள்ளி எறும்பு என்பதா? 😂 நல்ல சட்டத் தரணியல்லாத சுமந்திரன்: "அரசியல் கைதிகள் சார்பில் ஆஜராக வேண்டும்!" "காணிப் பிரச்சினையில் ஆஜராக வேண்டும்" "இனப்படுகொலை விசாரணைக்கு சர்வ தேச நீதி மன்றில் உதவ வேண்டும்!" இப்படிக் கேட்போரெல்லாம் வரிசையில் வாருங்கள்! சிரட்டையில் தண்ணீர் நிரப்பித் தருகிறேன், அதற்குள் குதித்து விடுங்கள்😎! ஆனாலும், நல்ல சட்டத் தரணியென்று பெயரெடுக்க இலகுவான வழி சட்டப் பட்டத்தை (அது இங்கிலாந்தில் எடுத்த "பரிஸ்ரர்" பட்டமாக இருந்தாலும் கூட) பிறேமிற்குள் போட்டு சுவரில் மாட்டி விட்டு, கோர்ட்டுப் பக்கமே போகாமல் இருப்பது தான்😇!
  19. 2016 இல் அச்சில் வந்த ஒரு புத்தகம், அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்குக் குடி பெயர்ந்த எழுத்தாளர் பில் பிறைசனுடையது (Bill Bryson) வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவர் தரும் தகவலின் படி பிரிட்டனில் 1800 களில் இருந்தே ஒரு சட்டம் நகர அமைப்புத் தொடர்பாக இருக்கிறதாம். எந்த வகையான நகர அபிவிருத்தியின் போதும் ஒரு பசுமை வலயம் (Green Belt) நகரைச் சூழப் பேணப் பட வேண்டும் என்ற சட்டம் அது. இதனால் தான் லண்டனில் இருந்து 20 - 30 கிமீ தூரத்திலும் பசுமையான வனங்களையும், வெளிகளையும் காண முடிகிறது என்கிறார். ஐரோப்பாவின் ஏனைய சில நகரங்களும் அப்படியாகத் தான் இருக்கின்றன போலும். மத்திய பேர்லினில் பரபரப்பான வீதியில் இருந்து விலகி அடர் மரங்கள் கொண்ட பிரதேசங்களுக்குள் இறங்கி நடந்து மீண்டும் இன்னொரு பர பரப்பான நகர மத்தியை அடையலாம். போலந்தின் வட கிழக்கில் பாதுகாக்கப் பட்ட ஒரு பிரதேசத்தில் இருக்கும் வனப் பகுதியை நாசிகள் தங்கள் பரிசோதனைகளுக்காக ஆரம்பித்தார்கள். போலந்து அரசு இன்னும் அந்த அடர் காட்டை (Black forest) வாகனங்கள் நுழைய முடியாத பிரதேசமாகப் பேணி வருகிறது. பழைய பூங்கா காக்கப் பட வேண்டிய நகர வனமாக (Urban forest) உருவாக வேண்டும். சுமந்திரன் காக்க முனைந்தார் என்பதற்காக இனி அனுர காவடிகள் வந்து மற்றப் பக்கம் சார்ந்து "ஆடுவார்கள்" என நினைக்கிறேன்😎.
  20. நிதானமான, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பதில்👍. உங்கள் கடமையைச் செய்திருக்கிறீர்கள், ஆனால் பலனை எதிர்பார்த்து ஏமாறாதீகள் என்று எச்சரிக்க வேண்டியது என் கடமை😂! பொய்ச் செய்திகளிலும், சில சமயங்களில் "எந்த செய்தியும்" இல்லாமலே ஏனைய தமிழ் அரசியல் வாதிகளை - அவர்களை தாயக மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருந்த வேளையில்- கேவலமாகத் திட்டியபடி இருந்த இருவர் தான் உங்களுக்கு நாகரீகம் கற்பிக்க முயல்கிறார்கள் என்பதைக் கவனித்தால் பலனை எதிர்பார்க்க மாட்டீர்கள்.
  21. என்ன எண்ணைக் கிணறை விட்டு விட்டீர்கள்😂? பெற்றோல் நிலையம் வாங்கிய புலத் தமிழ் "பிசினஸ் மேக்னற்" கசாக்ஸ்தானில் எண்ணைக் கிணறையும் வாங்கினார் என்று எழுதினால் இன்னும் தூக்கலாக இருக்கும்! ஆனால், இந்த வளர்ச்சி, சாதனையெல்லாம் யாழ்ப்பாணத் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள் தான் செய்யலாம்! வெளியே இருந்து வந்தால் வீட்டில் வேலைக்குத் தான் வைத்திருப்போம்😎!
  22. ஏன் வரலாற்றை 1954 ஓடு நிறுத்தி விட்டீர்கள்😂? அப்படியே 1922 வரை பின்னோக்கிப் போனால் உக்ரைன் பிரதேசமே சோவியத் ஒன்றியத்தில் இருக்கவில்லை. 1922 இல் வலுக்கட்டாயமாக இணைத்தார்கள். இன்னும் ஒரு 600 ஆண்டுகள் பின்னோக்கிப் போனால் கிரைமியா இன்றைய துருக்கியை உள்ளடக்கியிருந்த ஒட்டோமான் பேரரசின் சொத்து. 1800 களில் ரஷ்ய சாம்ராஜ்ஜியம் கைப்பற்றிக் கொண்டது. இதெல்லாம் தாண்டி 1991 - 94 களில் ரஷ்யா கிரைமியாவை உள்ளடக்கிய உக்ரைன் தேசத்தை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது - இது தான் இறுதியாக எல்லைகள் ஏற்றுக் கொள்ளப் பட்ட சந்தர்ப்பம். "கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் கூட வர மாட்டோம்.." என்ற வாய் வார்த்தையை இங்கே மந்திரம் போல ஓதும் "புரின் புரியன்மார்" எவரும் 90 களில் ஏற்றுக் கொண்ட உக்ரைன் எல்லையை 2014 இல் ஏன் புரின் கிழித்தெறிந்தார் என்று ஆராய முனைய மாட்டார்கள்! ஏனெனில், அவர்கள் தகவல் பெறுவது சந்திரனுக்குப் போன ஸ்புட்னிக்கில் இருந்து😎!
  23. அழுங்கோ, பரவாயில்லை😎! ஈழத் தமிழருக்கு எதிரான அநீதிக்கு எதிராக ஈழத்தமிழர் போராடினர், இந்தியா ஆரம்பத்தில் உதவியது. உக்ரைனியர்கள் தம் விருப்பப் படி தங்கள் நாட்டை கொண்டு நடத்த அனுமதிக்காத பெரியண்ணனின் அநீதிக்கெதிராகப் போராடினர். ஐரோப்பிய நாடுகள் உதவுகின்றன. என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது இரண்டிற்குமிடையில்?
  24. "இதை எப்படிச் செயல்படுத்துவீர்கள்? முன்மொழிவைத் தாருங்கள் முதலில்!" என்று கேட்கும் "புலம் வாழ் பிளானிங் ஒபீசர் மார்"😎 எப்பவாவது இருந்து விட்டு சின்னத்திரையில் தான் தாயகத்தை இங்கிருந்து பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. இங்கே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில திட்டங்கள் ஏற்கனவே நடை முறையில் இருக்கின்றன. உதாரணமாக மலையக தமிழ் மாணவர்கள் ஒரு தொகையினரை யாழ் மத்திய கல்லூரியின் விடுதியில் இலவசமாகத் தங்க வைத்து கல்விச் செலவையும் புலமைப் பரிசில்கள் மூலம் ஈடு செய்யும் திட்டமொன்று சில ஆண்டுகளாக நடை முறையில் இருக்கிறது. வெளிநாட்டு பழைய மாணவர் சங்கங்கள் தான் இதற்கு நிதி ஆதரவு. இவை பற்றி யூ ரியூப் வீடியோக்கள் வராது, எனவே யூ ரியூப் வழியாக தாயகத்தைத் தரிசிக்கும் நோக்கர்களுக்கு இவை தெரிய வராது. ஆனால், இந்த செயல்படுத்தல் பற்றிய நிஜமான கரிசனை அல்ல இங்கே எதிர்ப்பவர்களின் உண்மைக் காரணம். நமக்குப் பிடிக்காத சுமந்திரன், மனோ கணேசன் சொன்னார்கள், எனவே எதிர்க்க வேண்டுமென்ற குருட்டுத் தனமான காழ்ப்புணர்வு ஒரு காரணம். "நாங்க யாழ்ப்பாணத்தார், எங்கள் றோயல் பிளட் லைன் மலையகத் தமிழர் நிரந்தரமாக வந்து தங்கினால் நஞ்சாகி விடும்"😂 என்ற அச்சம் இரண்டாவது காரணம். இதனால் தான் நானும் ஐலண்டும் சில சமயங்களில் இங்கே சொல்லியிருக்கிறோம்: புலிகள் இருந்த போது கிடைக்காத தமிழ் ஈழம், இப்ப இருக்கும் வால்களிடம் கிடைக்கக் கூடாது! அது தமிழர்களுக்கே ஆப்பாகத் தான் முடியும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.