Everything posted by Justin
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
👇 இதற்கு பதில் இருக்காதென ஊகிக்கிறேன்? வைத்துக் கொண்டு வஞ்சகம் செய்யும் ஆள் அல்ல நீங்கள், எனவே போய் ஓரமாக அமருங்கள்👏!
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
நீங்கள் குறிப்பிட்டபடியே மாங்காய் பறிக்க இயலாமல் தான் போயிற்று சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும். ஆனால், இது வரை மாங்காய் பறிக்கும் திசை நோக்கி ஓர் அங்குலமாவது நகர்ந்த இன்னொரு தமிழ் அரசியல்வாதியைச் சுட்டிக் காட்டுங்கள். தீர்வை விடுங்கள் "இனப்படுகொலை நடந்ததை நிறுவ இயலாது" என்று சுமந்திரன் சொன்னதை "சிங்கள ஆதரவுச் சதி" என்று பேசிய சட்ட தமிழ் நிபுணர்களும், முன்னாள் நீதிவான்களும், தேர்தல் கால காளான்ககளாக முளைக்கும் ஜனாதிபதி சட்டத்தரணிகளும் ஏத்தனை வழக்குகளை இனப்படுகொலை என்று நிறுவும் நோக்கில் போட்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சர்வ தேசத்தை விடுங்கள், உள்ளூர் நீதிமன்றிலாவது எத்தனை வழக்குகளைப் போட முயன்றிருக்கிறார்கள் என்றாவது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் எடுத்து விடுங்கள், தெரியா விட்டால் குறைந்தது உப்புச் சப்பில்லாத அலட்டல்களையாவது எழுதாமல் விடுங்கள்! (முகமூடி போடாமல் நிஜப் படம் போட்டு நீங்கள் யாழில் எழுதுவதாக இன்று தான் நான் அறிகிறேன்😇!)
-
வாழைப்பூ வடை
இது எங்கள் தமிழ் ஆட்களிடம் தனித்துவமாக இருக்கும் கிரகிப்புக் குறைபாடோ தெரியவில்லை. மருத்துவர்கள் "வாழைத் தண்டிலும் பூவிலும் நிறைய நார்த்தன்மை இருக்கிறது, எனவே கிளைசீமிக் இண்டெக்ஸ்" குறைவு, அதனால் சாப்பிட்டாலும் சுகர் ஏறாது" என்று எழுதினால், வாசிப்போர் "வாழைத்தண்டு, வாழைப்பூ சுகர் வருத்தத்தைக் குணப் படுத்தும் மருந்து" என்று பெருப்பித்து விளங்கிக் கொள்கிறார்கள்! சுகர் வருத்தத்திற்கான மருந்து என்பது இன்சுலின் சுரப்பையோ அல்லது சுரக்கும் இன்சுலின் தொழில்பாட்டையோ அதிகரிக்கும் வேலையைச் செய்தால் மட்டுமே அது சுகர் வருத்தத்திற்கான மருந்து. தற்போதைக்கு மெற்போமின் போன்ற ஆங்கில மருந்துகள் மட்டும் தான் இந்த வேலையைச் செய்கின்றன. வேறெந்த மந்திர மாயமும் நாட்டு வைத்தியமும் இந்த வேலையைச் செய்வதாக ஆதாரங்கள் இல்லை! இந்த கிரகிப்புக் குறைபாட்டை வேறு பல வடிவங்களிலும் காண்கிறேன். அண்மையில் ஒரு நண்பர் தான் வொட்கா குடிக்க ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார். "நீங்கள் அல்கஹோல் குடிப்பதில்லையே, இப்போது புதிதாக ஆரம்பித்திருக்கிறீர்களா?" என்று கேட்ட போது "வொட்கா குடித்தால் இரத்த சுகர் ஏறாது என்பதால் குடிக்கிறேன்" என்றார்😂. நடந்தது என்னவென்றால், "உடலில் சுகரை ஏற்றாமல் எந்த மதுபானத்தைக் குடிக்கலாம் டொக்ரர்?" என்று எங்கள் தமிழ் நோயாளிகள் கேட்கும் போது சில டொக்ரர் மார் "வொட்காவில் சுகர் இல்லை, எனவே கொஞ்சம் குடிக்கலாம்" என்று பதில் சொல்கிறார்கள். இதனைத் தான் "வொட்கா குடித்தால் சுகர் ஏறாது" என சிலர் விளங்கிக் கொண்டிருப்பதாகத்தெரிகிறது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மேல் முகநூல் பதிவில் போய் பின்னூட்டங்களைப் பார்த்தால், கொண்டையை மறைக்கவும் முடியாமல், வெளிக்காட்டவும் முடியாமல் சில யாழ்ப்பாணத் தமிழ் பதிவர்கள் படும் பாடு சிரிப்பை வரவழைக்கிறது😂. எதற்கும் யாழ் களத்தில் இருக்கும் "குறுந்" தமிழ் தேசியர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்! அனேகமாகக் கள்ள மௌனம் தான்! NB: சுமந்திரனின் பெயரைக் கேட்டவுடன் தூக்கம் கலைக்கும் இரண்டு உறவுகளையும் கூட இங்காலப் பக்கம் காணவில்லை😎!
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
நீங்கள் குறிப்பிடும் "பின் கதவால் வெளியேறிய" சம்பவம் முகநூல் ஊடகங்களிலும், தமிழ் வின் எனும் ரொய்லெற் ஊடகத்திலும் வந்த விபரிப்புகள். உண்மையில் நூலகத்தின் உள்ளே விக்கியர், சுமந்திரன் உட்பட்டவர்களுடன் கமெரூனுடன் சந்திப்பு நடந்தது. அனந்திக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிருக்கவில்லை. எனவே வெளியே நின்று ("ஒரு பெண்ணாக இருந்த போதும்"😂- உங்கள் வரிகளில்) ஓடிப் போய் மகஜர் கொடுத்தார். நான் இணைத்த படத்தில் யார் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் கடந்து போய் விட்டு முகனூல் அலட்டல்களை உண்மைச் செய்திகள் போல இன்னும் தூக்கித் திரிகிறீர்கள்! உங்களுடைய இந்த உண்மை காண விரும்பாத கண்மூடித் தனத்தைத் தான் சுட்டிக் காட்ட விளைகிறேன். உங்களுக்குப் பச்சை போட்டவருக்கும் இதே "கண் மூடிப் பாசம்" சுமந்திரன், சாணக்கியன் மேல் இருக்கிறது. இதை உங்கள் பாரதக் கருத்துகளை வாசிப்போர் அறிய வைப்பதே என் நோக்கம்! உங்களுக்கெல்லாம் ஆதாரம் தேடி நிரூபித்து கண் திறக்க வைக்கும் "நாய் வால் நிமிர்த்தும்" வேலைக்கு என்னிடம் நேரமில்லை😎!
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
உக்ரைனில் விளைந்த தானியங்களை ஏற்றுமதி செய்ய விடாமல் தாக்குதல் செய்து உலக தானிய விலையை வட்டுக்குள் ஏற்றி விட்ட பின்னர், அந்த விலையேற்றத்தைச் சமாளிக்க இயலாத சில ஆபிரிக்க நாடுகளுக்கு கொஞ்சம் கிள்ளிக் கொடுத்தாராம் என்கிறது இந்தச் செய்தி! #தர்மதுரை புரின்😂! ReutersPutin promises African leaders free grain despite 'hypocr...Russian President Vladimir Putin on Thursday told African leaders he would gift them tens of thousands of tons of grain despite Western sanctions, which he said made it harder for Moscow to export its... "When taking out of the market millions and millions of tonnes of grains, it is clear that ... will lead to higher prices," U.N. Secretary-General Guterres told reporters. "So it's not with a handful of donations to some countries that we correct this dramatic impact that affects everybody, everywhere."
-
ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
மைதான் புரட்சி என்ற மக்கள் புரட்சி மூலம் "ரஷ்ய சார்பு ஜனாதிபதியை பதவி நீக்கினார்கள்" என்று முறையிட்டபடியே, ஒரு போர்க்கால உக்ரைன் ஜனாதிபதியை துரத்த வேண்டுமென்றும் சொல்கிறீர்கள்! flip flop கொள்கை😎?
-
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!
எங்கப்பா எங்கள் "அதிரடி, தடாலடி" யூ ரியூபர்கள்? "கட்டுநாயக்காவில் அதிரடியாக இறங்கிய இல்லியூஷின் 76 விமானம்! உண்மை நிலவரம் என்ன?" என்று யூ ரியூப் போட மாட்டார்களாமா😂?
-
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்
18 வயது வரை இலவசக் கல்வி தருவது, தெருக் கூட்டுவது, கான் கழுவுவது, தண்ணீர், மின்சாரம் வினியோகிப்பது போன்ற விடயங்களோடு அரசாங்கங்கள் மக்கள் சமூக ஊடகங்களில் endless scroll செய்யாமலிருக்கக் காவலும் இருக்க வேண்டுமென்கிறீர்களா😂? எப்படி இதைச் செய்யலாம்? இலங்கையில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அல்கோரிதம் வழியாக சமூகவலை ஊடகங்கள் பரப்பும் முட்டாள் தனங்களைக் கட்டுப் படுத்த இயலாது. Information is your responsibility என்பதன் படி பாவனையாளர்களே தங்களை உசாராக வைத்துக் கொள்ள வேண்டியது தான் வழி. இந்தச் சுய பொறுப்பை, வேறு யாரிடமும் ஒப்படைத்து விட்டு endless scroll செய்து கொண்டிருக்க முடியாது என நினைக்கிறேன்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இது தேர்தலில் தோற்று (சில சமயங்களில் தோற்றபின்னர் "பின் கதவால்" - அ+து தேசியப் பட்டியலில் உள்ளே வந்த) யோசப் பரராஜசிங்கம், கஜேந்திரன், சசிகலா ரவிராஜ், மாம்பழம் கட்சியின் தலைவர்போன்றோருக்கும் பொருந்தும் என்கிறீர்கள்😂?
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
சாத்தான், பெருமாள் போன்ற உறவுகளைப் பொறுத்த வரை, ஆதாரம் தேடிக் கொடுக்க நான் நேரம் செலவழித்துப் பயனில்லை. மேலே ஏனையோர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், யாழிலேயே பகிரப் பட்ட செய்திகள் இருக்கின்றன. 2010 இல் இருந்து ஹன்சாட்டில் பதிவாக இருக்கும் உரைகள் இருக்கின்றன. அவர்களே தங்களுக்குத் தேவையானதைத் தேடிக் கொள்ளட்டும். ஒரு வர்ணக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்த்தால் "புலிகள் பயங்கரவாதிகள்" முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புப் செய்யப் பட்டார்கள்" "இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை" என இன்னும் பல வாக்கியங்களும் தட்டுப் படும். ஆனால், கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி நின்று முழு உரையையும், முழுப் பேட்டியையும் பார்க்கும் எவருக்கும் பின்னணியை உருவி விட்டு முகனூல் போராளிகள் தூக்கித் திரியும் துரும்புகள் இவை என்பது புரியும்!
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
"சிம்ம சொப்பனமாக" பிரபாகரனைத் தவிர யாரும் இருக்கவில்லை. குறைந்த பட்சம் தகவல் கேட்டு வருவோரிடம் பேசுவதற்காகவாவது ஒருவர் தேவையல்லவா? இப்போது யார் இருக்கிறார்கள்? யாரையாவது சுமந்திரன் போல சென்று சந்திக்க, பேச முனையும் பா.உ தற்போது யார் இருக்கிறார்கள்? உங்களைப் போல "துடிப்பான" யாராவது இனி முன்வந்தால் தான் தமிழர்களுக்கு மீட்சி🤐!
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
பதிலுக்கு நன்றி வாத்தியார். சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப் பட்டவர், சுமந்திரனால் தமிழ் மக்களுக்கு அதிசயம் எதுவும் நிகழவில்லை. இவையிரண்டும் உண்மைகள். கேள்வி அதுவல்ல! சுமந்திரன் தமிழ் மக்களின் துன்பங்களைப் பற்றிப் பேசவில்லை என்பது எவ்வளவு தூரம் உண்மை? எவ்வளவு ஆதாரங்கள் இருக்கின்றன இந்தக் கூற்றுக்கு? இது தான் கேள்வி. "சுமந்திரனும் வேறு சில கூட்டமைப்பு அரசியல்வாதிகளும் யாழ் நூலகத்தில் இருந்து தப்பியோடினர்" என்று எழுதிய உங்கள் கருத்திற்கு படங்களை இணைத்து ஆதாரம் தந்திருந்தேன். அங்கேயும் சரி, வேறு இரு இடங்களிலும் சரி பேசாமல் போய் விட்டு, பின்னர் சுமந்திரனின் படத்தை இங்கே கண்டால் மீண்டும் வருவீர்கள். இது தான் உங்கள் கருத்துப் போக்கு. இந்த ஆண்டில் ஒரு கூடுதல் போக்கு, அப்படி வரும் போது அனுர காவடியோடு வருவீர்கள்😂! இத்தகைய, தரவுகளைத் தரும் போது "மெள்ள மாறி" விடுதல் தான் பெட்டிக் கடையைப் பூட்டுதல் எனப்படுகிறது. இப்போது கூட, ஆதாரங்களும் இல்லை, தரவுகளும் இல்லை, வெறும் அலட்டல் பாரதம் மட்டும் தான் கொண்டு வந்திருக்கிறீர்கள்!
-
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்
சோசியல் மீடியாக்களின் குப்பை மேட்டுத் தனத்தினால், அதன் வழியாகப் பரவக் கூடிய உயிர்காக்கும் தகவல்களும் மறைக்கப் படுகின்றன என்பதை நிலாந்தன் சுட்டிக் காட்டியிருக்கிறார். நான் இங்கே பல தடவைகள் சுட்டிக் காட்டியிருப்பது போல, எந்த மூலத்தில் இருந்து தகவலை எடுத்தாலும், அந்த தகவலைச் சொல்பவருக்கு அடிப்படையான அறிவு நிலைத் தகுதியிருக்கிறதா எனச் சீர் தூக்கிப் பார்க்கும் பழக்கத்தை பார்வையாளர்கள் ("வியூவர்ஸ்" என்று அழகாகச் சொல்லியிருக்கிறார் நிலாந்தன்😎!) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகுதியில்லாத பதிவர்களின் பின்னால் செல்லும் நிலை, உடல் ஆரோக்கியம் பற்றிய விடயங்களில் பல ஆண்டுகளாக நிலவுகிறது. ஒரு உதாரணம்: "நியாண்டர் செல்வன்" என்ற முகநூல் பதிவர் கணணித் துறை சார்ந்தவர். ஆனால், அவரது ஆர்வம் காரணமாக பேலியோ உணவு முறை என்ற விஞ்ஞான அடிப்படையற்ற ஒரு உணவு முறை பற்றிப் பதிவுகளை இட்டு வருகிறார். ஒரு புத்தகம் கூட இதைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று அறிந்தேன். இவரது நிபுணத்துவம் என்ன என்று சீர்தூக்கிப் பார்த்தால், இவரது உணவு ஆலோசனைகளைப் பின் தொடர்வதா இல்லையா என்று இலகுவாகத் தீர்மானிக்கலாம். இதை எப்படிச் செய்யலாம்? குறுக்கு வழியெதுவும் இல்லை! தேடி அறிந்து கொள்வது தான் ஒரே வழி.
-
படுபட்சி நாவல்: விசாரணை
😂இது தான் உங்கள் "வலுவான ஆதாரம்"?? "இது வரை அவர் எதையும் எழுதவில்லை, எனவே அவர் இதை எழுதியிருக்க முடியாது". அதை விட கிரிதரன் அவர்கள் பரீட்சை எழுதுவது மாதிரி "வலைத் தளத்தில் புனைவு தொடர்ந்து எழுதட்டும் பார்க்கலாம்" என்று வேறு சிறு பிள்ளைத் தனமான ஒரு சவாலை விட்டிருக்கிறார். கிரிதரன் அவர்கள் எழுத ஆரம்பித்த போது வலைத் தளங்களும், முகநூல் "இலக்கிய விமர்சகர்களும்"😎 இல்லாமல் இருந்தது கிரிதரனின் அதிர்ஷ்டம், ஒருவாறு லைசென்ஸ் எடுத்துக் கொண்டு இலக்கிய உலகில் நுழைந்து விட்டார் என நினைக்கிறேன். உங்களுடைய பிரச்சினைகள் ஒன்று அல்ல, பல்வேறு என நினைக்கிறேன்: அனுபவம் பொய் என்றீர்கள், அதை autofiction என்பதால் சீரியசாக முன்னிறுத்த முடியாத போது, இவர் இவ்வளவு நாளும் எழுதாமல் இப்ப எப்படி எழுதுவார்? என்ற மொக்கைக் காரணத்தோடு வருகிறீர்கள். ஆனால், எதிர்ப்பிற்கு உண்மையான காரணங்கள் இவையிரண்டுமே அல்ல. ஷோபா சக்தி மீதான காண்டு, அவர் செம்மைப் படுத்தி உதவிய இந்த எழுத்தாளர் மீதும் பாய்கிறது. அது தான் உண்மையான (ஆனால் வெளிப்படையாகச் சொல்ல வெட்கப் படும்) உங்கள் காரணம் என ஊகிக்கிறேன். ஆசி கந்த ராஜா, டொமினிக் ஜீவா, எஸ்.பொ, டானியல் ஆகியோரின் வரலாறு இந்த இடத்தில் அவசியமற்ற தேங்காய்ப் பொச்சு, அதை வைத்து "வெருளியை" நிரப்புகிறீர்கள் என நினைக்கிறேன்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
@satan இந்த இடத்திலாவது நின்று பதில் சொல்லுங்கள், பெட்டிக் கடையை மூடிவிட்டு ஓடாமல்😂: சுமந்திரன், சாணக்கியன் தமிழ் மக்களின் அழிவுகளை மௌனமாக இருந்து மூடி மறைத்த ஆதாரங்கள் எவை? அதே போல, தமிழ் மக்களின் அழிவுகளை இன்று சுமந்திரனுக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் அதே கட்சியைச் சேர்ந்த பா.உக்கள் எத்தனை பேர் வெளிக் கொணரப் பாடுபடுகின்றனர்? அனேகமாக, நீங்கள் சைலன்ற் எஸ்கேப் தான், ஆனாலும் அப்படியான எஸ்கேப் போலி தான் நீங்கள் என வாசகர்கள் அறிய வேண்டுமென்பதால் கேட்டு வைக்கிறேன்!
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
புதிதாக ஏதும் சொல்வீர்கள் என்று பார்த்தால் அதே பழைய கதை தான்: "இன்ரர்னெற்றில் இருந்து அமெரிக்கர்கள் அகற்றி விட்டார்கள் ( ரஷ்யாவிற்கு இன்ரர்னெற்றைத் தொடவே வசதியில்லை, இன்னும் ரின் பால் பேணியில் நூல் கட்டிய போன் தான்! எனவே ரஷ்யாவால் மீள ஏற்ற முடியாது ஆவணங்களை😂!) "இந்தி தெரியாது போடா!" என்பவனுக்கு உண்மையிலேயே இந்தி தெரியாமலும் இருக்கலாம்!
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
நீங்கள் சரியாகத் தான் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஜேம்ஸ் பேக்கர் வாய் மூலம் வழங்கிய வாக்குறுதி இது என்று தான் தற்போது இருக்கும் ரஷ்ய தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இதற்கு அமெரிக்கர்கள் சொல்லியிருக்கும் பதில் "கிழக்கு ஜேர்மனியில் இருந்து சோவியத் படைகள் வெளியேறும் வரை, ஒரு அங்குலம் கூட மேற்கு ஜேர்மனியில் இருக்கும் நேட்டோ படைகள் கிழக்கு ஜேர்மனி நோக்கி நகராது" என்ற வாய் வாக்குறுதி மட்டுமே கொடுக்கப் பட்டிருந்தது" இதையே, காலமாகி விட்ட கொர்பச்சேவும் கூறியிருந்தார் (அவர் பேச்சு வார்த்தையில் நேரடியாக ஈடுபட்டிருந்த ஒருவர்). இதைப் பற்றி ரஷ்யர்களும், உக்ரேனியர்களும், அமெரிக்கர்களும் எழுதிய பல நூல்கள் இருக்கின்றன. முதல் நிலை ஆதாரங்களும் இருக்கின்றன. ஆனால், யூ ரியூப் அலட்டல்களைக் கேட்டு விட்டு அப்படியே இங்கே வந்து ஒப்புவிப்பார்கள்- ஆதார ஆவணம் கேட்டால் தாறு மாறாகத் திட்டி விட்டுப் போய் விடுவார்கள். இப்போது திட்டுவது மட்டும் கொஞ்சம் குறைந்திருக்கிறது😂.
-
தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!
மனித அபிவிருத்திச் சுட்டெண் போன்ற பொருளாதாரம், மருத்துவம், கல்வி ஆகிய எல்லாவற்றையும் சேர்த்த ஒரு அளவீட்டில் பார்த்தால் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதை தான். இதில் மொழி எங்கே வருகிறது? இந்தக் கவுண்ட லொஜிக் படி பார்த்தால் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியைப் பேசும் பீகார் தான் "மிக்க வளர்ச்சியடைந்த" மாநிலம்😂!
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
அப்படி மூன்றாம் நபர் சொல்வதை பொய் என்று நிரூபியுங்களேன்? ஜோர்ஜ் புஷ் '89 இல் சோவியத் ரஷ்யாவுக்குக் கொடுத்த "எழுத்து மூல" வாக்குறுதியில் இருந்து ஆரம்பியுங்கள்😇!
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
"புரின் சர்வாதிகாரி" என்று சொல்லும் அதே ஆட்கள் தான் - குறைந்த பட்சம் இந்தக் களத்திலாவது- "ட்ரம்ப் ஒரு மெலிதான (lite) சர்வாதிகாரி" என்றாவது எழுதுகிறார்கள். கறுப்பின மக்கள் மேல் நடத்தப் பட்ட, நடத்தப் படும் அடக்கு முறையையும் அவர்கள் தான் இங்கே கண்டித்திருக்கிறார்கள். பெண்கள் - ஓம், பெண்கள்😉 - மேல் நடத்தபடும் அடக்கு முறைகள், மாற்றுப் பாலினர் மேல் நடத்தபடும் அடக்கு முறைகள் இவையெல்லாவற்றையும் இங்கே கண்டிக்கிறார்கள். உங்கள் "காய்ச்சல் இல்லாத கண்ணுக்கு" இவற்றுள் எதையாவது "புரின் புரியன்மார்" இங்கே பேசியதாக தெரிந்திருந்தால் ஒரு தடவை சுட்டிக் காட்டுங்கள்! புலிகள் மீது இருந்த குறைகளை சொல்வோரால் புலிகளின் பெயர் நாறியதை விட, அந்தப் பிழைகளுக்கு முரட்டு முட்டுக் கொடுக்கும் "மண் லாறி" களால் தான் அவர்கள் பெயர் இங்கே மிகவும் நாறியிருக்கிறதென நினைக்கிறேன்.
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
ஜேர்மன் நண்பரைப் போலவே உங்களுக்கும் விளக்கக் குறைவு போல தெரிகிறது: 1. சிங்களத் தலைவர்களின் இனவாதம், சிங்கள இராணுவத்தின் அட்டூழியம் - இவற்றைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் உயிர் பிழைக்க ஒரு ஈழவர் ரஷ்யா ஊடாகப் பயணித்து அமெரிக்கா வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். 2. சில வருடங்களில் அமெரிக்காவில் அவர் தானே விரும்பி பிரஜையாக வந்து விடுகிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். 3. அமெரிக்காவின் பிரஜையாக வந்த பின்னர், ரஷ்யாவைப் பார்த்து "எவ்வளவு அருமையான தலைமை அங்கே இருக்கிறது, எவ்வளவு அருமையான உள்ளூர்க் கொள்கைகள் இருக்கின்றன!" என்று விதந்துரைக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். இதைக் காணும் ஒருவர், "அப்ப ஏன் அவர் ரஷ்யாவிலேயே தங்கவில்லை? அல்லது அங்கே போய்ப் பிரஜையாக முயலவில்லை?" எனக் கேட்பது சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடியது தானே? இந்தக் கேள்வி ஏன் சிலருக்குக் கோபமூட்டுகிறது எனில், அவர்களுடைய "நான் சொல்வதைச் செய், ஆனால் நான் செய்வதைக் கண்டு கொள்ளாதே!" 😎 என்ற போலித் தனத்தைத் தோலுரித்துக் காட்டி விடுவதால் தான்!
-
படுபட்சி நாவல்: விசாரணை
இது வேறு பிரச்சினையல்லவா? இதற்கான ஆதாரங்கள் ந.செ சொல்வது போல அவரிடம் இருந்தால் அதை முன்வைத்துத் தான் பேச வேண்டும். தற்போதைக்கு ந.செ விடம் இருக்கும் "ஆதாரம்" கீழிருக்கும் வரிகளில்👇: இது ந.செ வின் அபிப்பிராயம் அல்லவா? இதை வைத்துக் கொண்டு முகநூலில் விவாதம் செய்யலாம். வேறெதுவும் செய்ய இயலாது. தற்கால இலக்கிய வாதிகளுக்கு (அல்லது அப்படியாகத் தம்மை அழைத்துக் கொள்வோருக்கு) காலை எழும்பியதும் "முகநூலில் என்ன விவாதிப்பது?" என்பது தான் யோசனை போல இருக்கிறது😂.
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
புரின், கிம், சகோதரத் தோழர் கடாபி, குர்திஷ் மக்களைக் கொன்ற சதாம் - இந்த தற்குறித் தலைவர்களை எதிர்ப்போர் இலங்கையில் வாழாமல் அமெரிக்கா, ஐரோப்பா என்று வந்தது புரிந்து கொள்ளக் கூடியது தானே? புரின், கிம், சகோதரத் தோழர் கடாபி, குர்திஷ் மக்களைக் கொன்ற சதாம், இவர்களையெல்லாம் முன்னுதாரணத் தலைவர்களாகப் புகழும் ஒருவர் ஏன் அந்தந்த உதாரணத் தலைவர்களின் கீழிருக்கும் நாடுகளிலோ அல்லது ராஜபக்சக்களின் இலங்கையிலோ போய் வாழ முனையவில்லை என்பது நியாயமான கேள்வி தானே? இந்த வேறு பாடு புரியாமலா இவ்வளவு நாளும் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள்?
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
அந்த எழுத்து வடிவ வாக்குறுதியை இங்கே இணைத்தால் நாம் புரிந்து கொள்ளலாமே மருதர்? "மேற்கில் தணிக்கை செய்து விட்டதால்" நம் போன்றவர்களுக்கு அது தெரியாமல் போயிருக்க கூடுமல்லவா😎?