Everything posted by Justin
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இதை சிறிலங்கா பொலிசுக்கு வக்காலத்தாகப் பார்க்காதீர்கள். இரண்டு இடங்களில் பொலிஸ் நிறுத்தும் படி கட்டளை கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. மிக இலகுவான கேள்விகள்: ஏன் நிறுத்தவில்லை? தப்பி ஓட வேண்டிய தேவை என்ன இருந்தது? மரணம் துயரத்திற்குரியது தான். ஆனால், மரணத்தை விட மோசமா சார் சிங்களப் பொலிஸ் நிறுத்தச் சொன்னால் நிறுத்துவது? இதே போல ஒரு யாழ் பல்கலை மாணவர் சில ஆண்டுகள் முன்னர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்று பொலிஸ் சுட்டதும், மக்கள் கொதித்ததும் நடந்தது. லைசென்ஸ் இருந்தால் பொலிஸ் நிறுத்தச் சொன்னால் என்ன செய்ய வேண்டுமென்றும் தெரிய வேண்டுமல்லவா? விதியை மீறி விட்டு இனி அழுது என்ன பயன்?
-
நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள்
வாய்ப் புற்று நோய்க்கு பிரதான காரணமாக வெற்றிலை, பாக்கு, புகையிலை மெல்லுதல் தெளிவாக அடையாளம் காணப் பட்டிருக்கிறது. மார்பகப் புற்று நோய் தடுப்பிற்கு வருடாந்த மார்பகப் பரிசோதனை (mammogram) மிகச் சிறந்த தடுப்பு முறை. கருப்பைவாயில் (cervix) புற்று நோய்க்கு Human Papillomavirus (HPV) என்ற வைரஸ் சில சமயங்களில் காரணமாக இருப்பதால், பெண் குழந்தைகளுக்கு பதின்ம வயதில் HPV தடுப்பூசி போட வேண்டும். இலங்கையில் இது நடைமுறையில் இருக்கிறதா தெரியவில்லை. மேற்கு நாடுகளில் HPV தடுப்பூசி ஆண், பெண் இருபாலாருக்கும் பரிந்துரைக்கப் படுகிறது. வாய் மூலப் பாலியல் (oral sex) நடவடிக்கைகளில் ஈடு பட்டால், ஆண்களில் வாய், தொண்டையில் புற்று நோய் ஏற்படவும் HPV காரணமாகலாம் என்பதால் இந்தப் பரிந்துரை.
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
சுவாரசியமான பாம்புக் கதைகள்! இந்தக் கதைகளை வாசிக்கையில் 1980/85 அளவில் யாழ்ப்பாணத்தில் வசித்த நசீர் என்ற கின்னஸ் சாதனை முயற்சியாளர் நினைவுக்கு வருகிறார். நசீர் அவர்களுடைய ஒரு சாதனை முயற்சி ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் சில டசின் பாம்புகளுடன் பல நாட்கள் வசிக்கும் முயற்சி. அப்பாவுடன் சென்று நாம் பார்த்த நினைவு, இடம் நினைவில்லை. சுற்றி வரப் பல வகையான பாம்புகள் அலைந்து திரிய, கூண்டின் நடுவில் ஒரு கட்டிலில் அமர்ந்து செய்திப் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார். சப்பாத்து அணிந்து, நீளக் காற்சட்டையின் கீழ் பகுதியை கிளிப் மூலம் கால்களோடு இறுக்கமாகக் கட்டியிருந்தார். இல்லா விட்டால் உறங்கும் போது கால் சட்டையின் கீழ் வழியாக ஏதாவது பாம்பு உள்ளே நுழைந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு😂.
-
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
தாக்கியெல்லாம் பேசவில்லை. எந்த ஒரு தனிப்பட்ட கல்வி/தொழில் அடைவு நிலையும் ஒரு தனிப் பட்ட ரீதியான சாதனை தான். நாம் இது குறித்து மகிழ வேண்டும். அதுவும் உலகம் அறியாமையைப் பெருமையாகப் போற்றிக் கொண்டிருக்கும் தற்கால யுகத்தில், நிச்சயம் இவை மகிழ்ச்சிக்குரிய விடயங்கள்! என்னுடைய நிலைப்பாடு என்னவென்றால், ஏன் இது செய்தியாக வர வேண்டுமென்பது தான். இவரைப் போல டசின் கணக்கான விஞ்ஞான ஆய்வாளர்களை இங்கே ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். எனவே எங்கள் சமூகத்தில் இது மிகச் சாதாரணமான விடயம். இதை அறியாதோர், அல்லது அறிந்தும் "தமிழன் பெருமை" என்று வெற்றுப் பந்தாவில் இருப்போர் இந்த சாதாரண விடயங்களைச் செய்தியாக்கி, அல்பர்களாக எங்கள் சமூகத்தை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
அனுமதிப் பத்திரம் இல்லாமல் லஞ்சத்தை மட்டும் நம்பி வண்டி ஓட்டியிருக்கிறார். இலங்கைப் பொலிசிடம் மேற்கு நாட்டுத் தராதரத்தை எதிர்பார்த்து (வண்டியின் பதிவைப் பார்த்து வீடு தேடி வந்து கைது செய்வார்கள் என்று) நிறுத்தாமல் சென்றிருக்கிறார். விதிகளை மீற நினைக்கும் ஏனையோருக்கு இது தான் பாடம்: விதிகளை இப்படிப் பட்ட பிரச்சினைகள் வரும் வரை மீறலாம், ஒரு விக்கினமும் இல்லை, ஆனால், இப்படி எங்காவது மாட்டுப் பட்டால் உயிரே போய் விடும்.
-
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!
இலங்கை போன்ற நாடுகளில் அரசு மிகவும் கவனமெடுக்க வேண்டிய ஒரு விடயம் இந்த விசேட உடல் தேவையுடையோர் இயன்றளவு சுதந்திரமாக நடமாடும், பயணம் செய்யும் வசதியை உருவாக்குவது. சில அரச கட்டிடங்களில், சக்கர நாற்காலி செல்வதற்கான சாய்தளப் பாதை (ramp) கூட இல்லாமல் இருப்பதை 2016 இல் வந்த போது கவனித்தேன். இப்போது எப்படியோ தெரியாது. பஸ்களில் kneeling bus என்றொரு வகை இருக்கிறது. வயதானோர், கைத்தடியோடு வருவோர், இலகுவாக ஏறும் வகையில், ஒரு hydraulic gear மூலம் பஸ்ஸின் முன்பகுதி நிலத்தோடு பதியும் படி செய்வார்கள். ஏறும் படிகளின் கீழேயே மடிக்கப் பட்ட சக்கர நாற்காலிக்குரிய சாய்தளம் இருக்கும். இந்தப் புதிய பஸ்களில் இவை இருக்கும் என நம்புகிறேன்.
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
"முந்தானை முடிச்சு" திரைப் படம முருங்கைக் காய் விடயத்தை தமிழர்களிடையே பரப்பிய மாதிரி, சிறீப்பிரியா நடித்த "நீயா" படம் இந்தச் சோடிப் பாம்பு பற்றிய கதையைப் பரப்பியது. பாம்பு, பென்குயின் போல ஒரே சோடியோடுவாழ் நாளைக் கழிக்கும் உயிரினம் அல்ல. அப்படியெல்லாம் அடித்தவரைச் சோடி அடையாளம் கண்டு வருவதானால், ஒரு சோடிகளின் படையே வர வேண்டும். அந்தளவுக்குப் பல தார மணம் செய்வது பாம்பினம். அப்படியெதுவும் நிஜத்தில் நடப்பதில்லை, திரையில் பார்த்து ரசிக்க வேண்டியது தான்!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அப்பாவிகளையும், பத்திரிகையாளர்களையும் கொன்ற டக்கியை நீங்கள் "ஜனநாயக நீரோட்டத்தில்" இணைந்தவர் என்று கருதுவதாலா இந்தக் கேள்வி😂?
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யாழ் களத்தின் சக உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து தான் கண்டிக்கிறார்கள். உங்களுக்குச் சரியாகத் தெரியும் ஒரு கருத்து இன்னொருவருக்கு கடைந்தெடுத்த இனக் குரோதக் கருத்தாகத் தெரிந்தால் அவர் நிச்சயம் சுட்டிக் காட்ட வேண்டும். அதைத் தான் செய்திருக்கிறார்கள், "எங்கள் அங்கீகாரம் பெற்றுக் கொண்டு எழுதுங்கள்" என்று யாரும் சொல்ல வரவில்லை!
-
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
ஜெய்ப்பூர் அறிவிடமிருந்து ஒரு சாம்பிளுக்கு... Several Sri Lankan-born researchers and professionals hold fellowship or senior academic positions in Australia, spanning fields from the arts to health and data science. Notable examples include Dr. Amaara Raheem (2026 Forrest Creative Fellow, Edith Cowan University), Dr. Nirukshi Perera (Research Fellow at Curtin University), and Rashmika Nawaratne (Adjunct Research Fellow at La Trobe University). Key Individuals and Roles Dr. Amaara Raheem: A Sri Lankan-born artist-in-residence/researcher awarded the 2026 Forrest Research Foundation Creative Fellowship to develop a digital archive for performance art at Edith Cowan University. Dr. Niru Perera: A sociolinguist at Curtin University (PRECRU) specializing in health communication, multilingualism, and language policy, with research focusing on Sri Lankan languages in the diaspora. Rashmika Nawaratne: An AI and Data Science researcher at La Trobe University, specializing in machine learning and IoT. Chinthani Rathnayake: Postdoctoral Research Fellow at the University of Melbourne. Ranjith Pathirana: Research Fellow at Plant & Food Australia Pty Ltd. Ranjith Pathirana: Research Fellow at Plant & Food Australia Pty Ltd முகநூல் செய்தி ஊடகத்தின் படி "Fellow" என்றால் "ஆள்கிறார்" என்று அர்த்தம்😇!
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
இலங்கையைப் பொறுத்த வரை 5 முக்கியமான விசப் பாம்புகள் இருக்கின்றன. 1. நாக பாம்பு -Cobra- பல பெயர்களால் அழைக்கப் பட்டாலும், இது ஒரே வகையான இந்திய நாக பாம்பு தான். உதாரணமாக, கருநாகம் என்பது நன்கு வயது முதிரும் போது கருமையாக மாறி விட்ட நாக பாம்பு. பற நாகம் என்பது கற்பனைப் பெயர். "பறக்கும் நாகம்" என்ற மிகைப் படுத்தலினால் உருவான கற்பனையாக இருக்கலாம். இலங்கையில் ராஜநாகம் -King Cobra என்ற இன்னொரு வகையான பாம்பும் இருக்கக் கூடும், ஆனால் நான் அங்கிருந்த காலத்தில் அறியவில்லை. ராஜநாகம், பெயரில் நாகம் இருந்தாலும் , நாக பாம்பு அல்ல! நாக பாம்பையே உணவாக உட்கொள்ளக் கூடிய 20 அடிகள் வரை வளரக் கூடிய வேறொரு இனப் பாம்பு. 2. கண்ணாடி விரியன்-Russel's viper: இது முக்கியமான புடையன் வகைப் பாம்பு. நாகத்தை விட மூர்க்கமான பாம்பு. 3. சுருட்டை விரியன்-Saw-scaled viper: இதுவும் ஒரு புடையன் பாம்பு. கண்ணாடி விரியனை விடச் சிறிதென்றாலும் விசம் கண்ணாடி விரியன் போன்றது. வன்னியில் "முத்திரைப் புடையன்" என்று பெயர் கேள்விப் பட்டிருக்கிறேன். இது கண்ணாடி விரியனைக் குறிப்பதா அல்லது சுருட்டை விரியனைக் குறிப்பதா என இன்றும் எனக்குக் குழப்பம். இந்த இரு புடையன்கள் கடித்தாலும் சிறு நீரில் இரத்தம் வெளியேறும் என்பதால், "மூத்திரப் புடையன்" என்று இரண்டுமே அழைக்கப் படுகின்றனவோ தெரியவில்லை. 4. கண்டங்கருவளை-common krait - மூர்க்கம் குறைந்த ஆனால், நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் விசம் கொண்ட பாம்பு. 5. Hump-nosed viper - இதுவும் சிறிய ஒரு புடையன் பாம்பு. உள்ளூர்ப் பெயர் கோடாலிப் பாம்பு, கோடாலிப் புடையன் என்பதாக இருக்கலாம். இதன் மூக்குப் பகுதி தெளிவாக மேல் நோக்கி வளைந்திருப்பதால் இந்தப் பெயர்.
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
தாயகத்தில் நாம் சிறுவர்களாக இருக்கையில் நம்பிய பாம்புக் கதைகளை நினைத்தால் இப்போது சிரிப்புத் தான் வருகிறது. கொம்பேறி மூக்கன் விசமில்லாத பாம்பு. கூகிள் தேடலில் இந்தப் பாம்பின் ஆங்கிலப் பெயர் Bronzeback tree snake என்று வருகிறது. எல்லா வகைப் பாம்புகளும் லாவகமாக மரங்களில் ஏறுவதில்லை. கொம்பேறி மூக்கன் மரங்களில் ஏறி மரங்களிலேயே வாழக் கூடிய ஒரு பாம்பு வகை. இதையொட்டி இட்டுக் கட்டிய கற்பனைக் கதை தான், "ஆளைக் கடித்து விட்டு மரத்தில் போய் ஏறிக் கொள்ளும் கொம்பேறி மூக்கன், கடித்த ஆள் இறந்து எரிக்கப் படும் புகை தெரியும் வரை மரத்தை விட்டு இறங்காது" என்ற கதை. (இதனால், "சும்மா எதையாவது எரித்து புகை கிளப்பினால், கொம்பேறி மூக்கன் இறங்கி வரும்" என்று சில ஊர்ப் பெரிசுகள் கதையை கௌதம் மேனன் பாணியில் நீட்டித்துச் சொல்லவும் கேட்டிருக்கிறேன்). கொம்பேறி மூக்கன் பற்றிய இன்னொரு அபாண்டமான பழி, இது "ஆண் சாரைப் பாம்பு" என்ற கதை. சாரைப் பாம்பும் கொம்பேறி மூக்கனும் வெவ்வேறு இனப் பாம்புகள். சாரை (Indian rat snake) மரங்களில் வேகமாக ஏற முடியாமல் தரையில் மாட்டிக் கொள்ளும் இன்னொரு விசமில்லாத பாம்பு. ஆனால், இரண்டுமே மிகவும் அச்சுறுத்தப் பட்டால் ஒரு சீறல் (hissing) ஒலியை எழுப்பக் கூடியவை, கடிக்கவும் செய்யும். ஆனால், விசப் பல் இல்லாமையால் சாதாரண காயம் ஏற்படும். உயிருக்கு ஆபத்துக்கள் இல்லை.
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
இப்பிடியும் ஒண்டு போகுதா? யார் இந்த மொக்கராசு, திரு திருக்குமரன்? என்ன ஆராய்ச்சிக்கு ஹூல்கள் உதவினார்கள் என்றே தெளிவாகச் சொல்கிறார்? இவரும் பங்கு பற்றியிருப்பாரோ😂??
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
🤣 தென்கச்சி கோ சுவாமிநாதன் மாதிரி "இன்று ஒரு தகவலா? அல்லது, "இந்த எளிமையான விளக்கம் இல்லாமையால் நான் அவர்களைக் கண்டித்து விட்டேன்" என்கிறீர்களா😂? "ஐலண்ட் இஸ்லாமியர்" என்றும் திட்டுகிறார்கள். இதன் அர்த்தம் அவர் தமிழினம் அல்லாத வேற்றினம் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். பிறகெப்படி இஸ்லாமியரும் தமிழரும் ஒரே மரத்தில் இருந்து வருவதாம்? அடிப்படையான விடயம் என்னவென்றால், நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாமல் மூலைக்குள் மாட்டுப் படும் போது, இது போன்ற வசவுகள் தான் ஒரே வழி!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
ஒரு எடுகோளுக்கு, ஐலண்ட் இஸ்லாமியராகவே இருக்கட்டும் (எவருக்கும் அவரது இன அடையாளம் தெரியாது என்பதே உண்மை). இப்படி ஒரு இனவாதக் கருத்து? அதற்கு பல விருப்பக் குறிகள் வேற! இது போன்ற கருத்துக்களை உங்களைப் போன்றோரே வெளியிடும் போது தான், "குதிரைக்கு கடவுள் கொம்பு கொடுக்காதது அதன் குணம் அறிந்து தான்!" என்ற சொலவடை பொருத்தமாகத் தெரிகிறது😂!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உங்களுடைய எல்லாக் கருத்துகளுக்குமான பதில் இது: "சம்பந்தர் சொன்னதில் 99% தரவுத் தவறுகள் இல்லை" - என்பது தான் நான் எழுதியது. ஆனால், "கதிகாமர் 2012 நிலை கண்டு கிலேசம் கொண்டிருப்பார்" என்பது எனக்கு நம்பக் கஷ்டமான விடயம். அது சம்பந்தரின் வாய் வசனம், என் வாயில் நீங்கள் திணித்தால் தான் உங்கள் கருத்துக்குப் பலம் கிடைக்கும் என்றால், தாராளமாக "சம்பந்தரே ஜஸ்ரின் தான்" என்றும் எழுதி விடுங்கள்😂! இங்கே பேசப்படும் விடயங்கள் எல்லாம், சம்பந்தர் போன்றோர் ஏன் ஆயுதக் குழுக்களை நேசிக்கவில்லை? எப்படி புலிகளுக்கு ஆதரவாக வன்னி மக்களே முன்வந்து போராட முயலவில்லை (வலுக்கட்டாயமாக ஆட் சேர்க்க வேண்டியிருந்தமை), எவ்வாறு சர்வதேச அரங்கில் கதிர்காமர் சுட்டிக் காட்டக் கூடிய விடயங்களைப் புலிகள் செய்தனர்.. இவை பற்றியெல்லாம்பல பல வருடங்களாக cut and dry ஆக, சீரியசாக பலர் எழுதியாகி விட்டது. அந்த சீரியசான பதில்களை வாசிக்காமல் கடந்து போய் விட்டு மீண்டும் வந்து திரித்தல் அரைத்தல், பொரித்தல் என்று சிலர் ஆரம்பிக்கும் போது நிச்சயம் அவர்களுக்கு நக்கல் மூலம் தான் பதில் தர முடியும்! நக்கலுல் எள்ளலும் சுடுகிறதென்றால், தங்கள் கண் மூடித்தனமாக பக்தியில் திரிப்புகளை எழுதுவோரைத் தான் நீங்கள் கட்டுப் படுத்த வேண்டும்!
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
இதனை நிராகரிக்கிறேன். "நரி" ரணிலால் தங்கள் இருப்பிற்கே ஆபத்து என்று கண்டு கொண்ட பின்னர் புலிகள் எடுத்த முடிவு மகிந்தவைக் கொண்டு வருவது என்பது. அப்படிக் கொண்டு வந்த பின்னர் 2005 இல் "அவர் யதார்த்தமாக நடப்பவர் என்கிறார்கள்" என்று அது வரை எந்த சிங்களத் தலைவர் பற்றியும் சொல்லாத கருத்தை மாவீரர் தின உரையிலேயே பிரபாகரன் சொன்னார். இந்தப் பின்னணியில், "எவர் வந்தால் அதிக தீமை மக்களுக்கு?" என்று புலிகள் சீர்தூக்கிப் பார்த்ததாக எங்கேயும் பதிவுகள் இல்லை. அப்படி ஏதும் இருந்தால் இங்கே பகிருங்கள், பேசலாம். புலிகளின் இலக்கு, 2004/05 இல் தங்கள் அமைப்பிற்கு இருந்த existential threat இனை நீக்குவது மட்டும் தான். யுத்தம் ஆரம்பித்த பின்னர், வன்னியில் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்த போது, மக்கள் இழப்பைப் பற்றி புலிகள் பெரிதாகக் கரிசனை கொள்ளவில்லை என்பதை மீண்டும் நிரூபித்தனர். இதையெல்லாம் நான் உங்களுக்குப் பதிலாக எழுதுவது நீங்கள் வாசித்து, யோசிப்பீர்கள் என்பதால் அல்ல! உங்கள் போன்றவர்களுடைய பக்தியும், மயக்கங்களும் எதிர்கால சந்ததிக்கு வரலாறாக காவப் படும் ஆபத்து இருக்கிறது (ஏற்கனவே AI நாங்கள் செவி மடுக்க விரும்பும் வரலாற்றை எழுதும் படி கேள்வி கேட்கும் பணியை ரஞ்சித் ஆரம்பித்து விட்டார்!). இதைத் தடுப்பது மட்டுமே என் நோக்கம்!
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
கெட்டிக் காரன்! அப்படியே அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சியுங்கள்😎!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதில் இருப்பவை ஒரு 99% உண்மையான தகவல்கள் தானே? "மனித உரிமைகளை எப்போதுமே மதிக்கவில்லை" என்பதை மட்டும் மறுக்கலாம். மறுப்பதற்குரிய செயல்களைப் புலிகள் செய்திருக்கிறார்கள். மற்றபடி டித்த எழுத்தில் காட்டிய பந்தியில் சம்பந்தர் சொல்லியிருப்பதன் சாராம்சம் இப்படி இருக்கிறது: 1. புலிகளை வெளியே இருந்து யாரும் அழிக்கவில்லை, அவர்களாகவே ஜனநாயகமில்லாத தன்மையால் அழிந்தார்கள் (implosion). 2. பலர் புலிகளை அழித்த செயலுக்கு உரிமை கோருகின்றனர். ஆனால், கதிர்காமர் புலிகளைப் பலவீனமாக்கிய முக்கிய நபர், அவர் இன்று இருந்திருந்தால் இன்றைய நிலைமை குறித்து கிலேசம் அடைந்திருப்பார். 3. எங்களைப் புலிவால்கள் (proxies) என்கிறீர்கள். நான் உட்பட பல தமிழ் தலைவர்கள் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்திருக்கிறோம். பிறகெப்படி எங்களைப் புலிவால்கள் என்கிறீர்கள்? இது போல candid ஆக உண்மையைப் பேசாமல், தற்போதைய சில பா. உக்கள் போல பேசாமல் இருந்தால் மக்கள் ஆதரவு சரியாமல் இருக்கும் போல😂!
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
அநுர ஆட்சிக்கு முன்னரே நிலைமை மாறி விட்டது. ஒரு உதாரணம். கொத்தலாவல பாதுகாப்புத் துறைப் பல் கலைக்கு வடக்கு கிழக்கில் இருந்தும் இளையோர் கற்கச் செல்கிறார்கள். இது நடக்க முதல் இன்னொரு விடயம் செய்தார்கள். உயர்தர வகுப்பு மாணவர்களை "தலைமைத்துவப் பயிற்சி" என்று அழைத்துச் சென்று, பெரிதாக தேச பக்தி, சிங்கக் கொடி என்று தீத்தாமல், முறையான தலைமைத்துவப் பயிற்சி, நேரம் தவறாமை என்பவற்றைப் பயிற்றுவித்திருக்கிறார்கள். இலங்கை இராணுவமே நடந்தி வரும் ஒரு பயிற்சி இது, சென்று வந்த இளையோர் தங்கள் வாழ்க்கை மாறியிருக்கிறது என்கிறார்கள். இப்படி சிங்களத் தரப்பு கடந்த 16 வருடங்களில் அணுகுமுறையை மாற்றி வென்று வருகிறது. தமிழ் தரப்பு என்ன செய்கிறது? தமக்கு கருத்து ரீதியில் ஒத்து வராத ஒரிரு அரசியல் வாதிகளை அகற்றினால் தான் தமிழ் ஈழம் கிடைக்கும் என்ற முட்டாள் தனமான கனவில் குட்டிச் சுவரில் முட்டிக் கொண்டு நிற்கும் காளைமாடுகள் போல நடந்து கொள்கிறது ஒரு தரப்பு. இந்தத் தரப்பிற்கு அருகிலேயே நிற்க விருப்பமில்லாமல் சாதாரண மக்கள் தம் வாழ்வும் என ஒதுங்கி விட்டார்கள். #மோட்டுச் சிங்களவன்#ஆளப் போறான் தமிழன்😇!
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
"தேர்தலைப் பெருமளவு தமிழ் மக்கள் புறக்கணித்தால், யாருக்கு வாக்கு ரீதியில் அனுகூலம்?" என்று உய்த்துணர இயலாத, சாதாரண எண் கணிதக் கணக்குப் பார்க்க இயலாத தலைமை தான் அந்த நேரம் தேர்தல் புறக்கணிப்பை ஊக்குவித்தது என்கிறீர்கள்? "சரி தான்" என நானும் ஏற்றுக் கொள்கிறேன்.😇 ரணிலும் புலிகளை அழித்திருப்பார், ஆனால் கருணா பிரிப்புப் போல மேலும் செய்து அழித்திருப்பார். ஆனால், மகிந்தவைத் தேர்வு செய்து புலிகள் எதிர்பார்த்தது, பெரும் போர் நிகழ்ந்து "உலக நாடுகள் தட்டிக் கேட்டு, ஈழம் பெற்றுத் தரும்" என்ற எதிர்பார்ப்பில். இந்த எதிர்ப் பார்ப்பிற்கு எதிராகத் தான் மேற்கு நாடுகளின் எச்சரிக்கை இருந்திருக்கிறது. பாலசிங்கத்தாரை ஓரங்கட்டாமல் இருந்திருந்தால் இது விளங்கியிருக்கும். எப்படியானாலும், கர்மா போல வந்து புலிகளின் வினோதமான "மகிந்த ஆதரவு" நிலையே அவர்களை அழித்து விட்டது. அநியாயமாக புலிகள் தங்களுடன் தடுத்து வைத்திருந்த வன்னி மக்களும் அழிந்தார்கள். உங்களைப் போன்ற புலத் தமிழர்களோ "மோட்டுச் சிங்களவனுக்கு புலிகள் டிமிக்கி கொடுத்தார்கள்" என்ற கஞ்சா மயக்கத்தில் இருந்து இன்னும் எழவில்லை😂.
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
வீடியோக்களில் அடிக்கடி இஸ்லாமிய நபர்கள் தோன்றுகிறார்கள். இங்க சில பேருக்கு gasket போகப் போகுது இண்டைக்கு😂!
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
2005 இல் "சிங்களத் தேர்தல் எமக்கு வேண்டாம்" என்று புறக்கணித்து, மறைமுகமாக மகிந்தவை வெல்ல வைத்தவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்! வென்ற பிறகு "கொள்கையில் நாம் வேறு, ஆனால் யதார்த்த வாதியாகத் தெரிகிறார்" என்று மாவீரர் தின உரையில் குறிப்பிட்டதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்😂!
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
மக்கள் மிகவும் "பயத்துடன்" பங்கு பற்றிய மாதிரித் தான் தெரிகிறது😂!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தமிழர் நலன் தவிர்த்து புலிகளைப் பழி வாங்கும் படி நடந்து கொண்டோர் டக்கி, கருணா, ஆனந்த சங்கரி ஆகியோர் இருக்கிறார்கள். சம்பந்தர் அப்படியான வகை அல்ல! ஆனால் "தமிழர் நலன் என்பதே புலிகளை அப்படியே சிரம் மேல் காவுவது மட்டும் தான்!"😎 என்ற புரிதலுடையோருக்கு, சம்பந்தர், சுமந்திரன், சாணக்கியன், நீலன் என எல்லோருமே தமிழர் விரோதிகள் தான்! ஒரு துரும்பையும் நகர்த்தாமல், ஏனைய கட்சிக் காரர்களை "கொள்கை எதிரிகள்" என்று மட்டும் திட்டிக் கொண்டு ஒற்றை சீற்றைப் பேணி வரும் கஜேந்திரகுமார் எவருக்கும் துரோகம் செய்யாமல் அப்படியே பா.உ வாக நிலைத்து ஓய்வு பெறுவார்😇!