Everything posted by Justin
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
பொய்யான செய்திகளையும், திரிக்கப் பட்ட படங்களையும் இணைப்பதைத் தடுக்கும் விதிகள் யாழ் களத்தில் இருக்கின்றன. இவற்றை மீண்டும் மீண்டும் மீறும் உறுப்பினர்களும் ஒரே உறுப்பினர்கள் தான். யாழ் களம் தற்போது இதனைக் கையாளும் விதம் சிறந்ததாக இருக்கிறது. இந்த உறுப்பினர்களைத் தண்டித்துத் திருத்துவது "நாய்வாலை நிமிர்த்தும் பயனற்ற செயல்"😂 என அறிந்து, நேரடியாகவே சக உறுப்பினர்களோடு சேர்ந்து பொய்ச் செய்திகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இப்படிச் செய்யும் போது குறிப்பிட்ட உறுப்பினர்கள் இணைக்கும் பல தகவல்களை வாசகர்கள் சீரியசாக எடுக்காமல் கடந்து போகும் நிலை உருவாகும் என நினைக்கிறேன். பொய்செய்திகள், படங்கள், வீடியோக்கள் இணைக்கும் உறவுகள் தாங்களாகவே தங்கள் நம்பகத்தன்மைக்கு ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், கிழுகிழுப்பிற்காக தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பர்!
-
பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு
சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர் அல்லவா? வரலாறு என்றால் பேராதனையில் இருந்த பத்மநாதன் அல்லது யாழ் பல்கலை புஷ்பரட்ணம். புஷ்பரட்ணம் இந்த மறைப்பைச் செய்யக் கூடியவராகத் தெரியவில்லை.
-
ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…!
உங்களுடைய "விரும்பி ஏற்ற கோமா" வைப் பற்றியா பேசுகிறீர்கள்😎? அவருக்கு அந்த நேரம் ஆயுதங்களுடன் திரிந்த எல்லோருடனும் முரண்பாடு இருந்தது. ஆனால், சாட்சிகள், சந்தர்ப்பங்கள் வைத்து அவர்கள் அன்று முதல் தெரிவித்து வருவது புலிகளின் ஆயுததாரி கொன்றார் என்று தான். இடையில், புலிகளின் பிஸ்ரல் குழுவிடம் இருந்து தான் தப்பிக் கொள்ள அற்புதன் என்ற ஒருவர் மட்டும் இன்னொரு அமைப்பைக் கைகாட்டி விட்டதால், "பெயின்ற் வாளி" ரீம் அதைத் தூக்கிக் கொண்டு திரிய ஆரம்பித்தனர். ஒவ்வொரு செப்ரெம்பரிலும், புலிகள் நினவு கூராமல் தடை செய்த ராஜினியின் நினைவு தினத்திற்கு அண்மையாக இத்தகைய பெயின்ற் வாளிகள் வெளியே வந்து மீண்டும் நித்திரைக்குப் போய் விடுவது வழமை😂!
-
பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு
பெயரைச் சுட்டிக் காட்டாமல் எழுதியிருக்கிறார், வழக்குப் போட்டு விடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை😂. பேராசிரியர் பத்மநாதனாக இருக்குமென ஊகிக்கிறேன். அவர் தான் பாடநூலாக்கக் குழுவில் இருந்தார். இது தான் கொழும்பு நூதனசாலையில் இருக்கும் அந்த சிவன் பார்வதி சிலை பற்றிய கட்டுரை. https://amazinglanka.com/wp/shiva-kovil-no-1/ இவற்றைப் பாடப் புத்தகத்திலும், பேராசிரியரின் (யாரும் வாசிக்காத) புத்தகத்திலும் மறைத்து என்ன பயன்? பொதுத் தளங்களில் இந்தச் சிலை பற்றிய உண்மையான வரலாறு இருக்கிறது. இதை மறைக்க இயலாது.
-
ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…!
ராஜினி திராணகம திடீரென்று "மனித உரிமை ஆர்வலராக" தலையில் சுமக்கப் படுவதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை! அதே நேரம், சிங்களப் பேரினவாத அரசும் உண்மைகளை வெளிக்கொணர முயலும் நல்ல தரப்பாக நம்ப வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள் "பெயின்ற் அடிக்கும்"😂 குழுவினர். அமரர் ராஜினியைச் சுட்ட ஒற்றை நபர் (கட்டையான, சிவந்த ஒருவர்) யாரென்று யாருக்கும் தெரியாது - அற்புதனுக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுடப் பட்ட அந்த நாளிலும், அதற்கு முந்தைய நாட்களிலும் நிகழ்ந்த சம்பவங்களின், உரையாடல்களின் சாட்சிகளை வைத்துத் தான் முறிந்த பனையின் எழுத்தாளர்கள் புலிகளே சுட்டதாகச் சொல்கிறார்கள். முறிந்த பனையை இங்கே இணைத்து உரையாட இயலாது, ஆனால் அதில் இருக்கும் தகவல்கள் அற்புதனின் தொடரில் இருக்கும் தகவல்களை விட மிக நுணுக்கமாக (granular) இருப்பதாக நான் உணர்கிறேன். அத்தனை நுணுக்கமான சாட்சிகளையும், உரையாடல்களையும் யாரும் கற்பனையில் உருவாக்கி விட முடியாது. மிக முக்கியமான இன்னொரு விடயம், இந்திய இராணுவத்தையும் ஒட்டுக் குழுக்களையும் துகிலுரிந்த முறிந்த பனையை புலிகள் தடை செய்தனர், அமரர் ராஜினியின் உருவப் படத்தைக் கூட பல்கலைக் கழகத்தில் நினைவுச் சுவரில் மாட்ட அனுமதிக்காமல் புலிகள் தடுத்திருந்தனர். 2012 இற்குப் பின்னர் தான் அவரது உருவப் படம் பல்கலை மருத்துவ பீடத்தில் காட்சிப் படுத்தப் பட்டது. கோமாவில் இருப்போர் இன்னும் "ஆழமான" கோமாவிற்குப் போய் ஒளிந்து கொள்ளட்டும்😎!
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
நிச்சயம் வந்து பதில் தருவார், அப்படியே காத்திருங்கள்😂! தமிழ் சிறி உட்பட தவறான தகவல்களைப் பரப்பும் ஒரிருவர் காலாகாலமாக ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கின்றனர்: தவறான தகவலை இப்படியாக மெனக்கெட்டு எழுதுவது. சக உறுப்பினர்கள் தகவலை சவாலுக்குட்படுத்தினால், அவர்களை தரங்கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி "தலையால் கிடங்கு கிண்டுவது" - அதற்கு ஒரிருவர் வந்து ஊக்கமும் கொடுப்பர், குழுவாதம் காரணமாக! மட்டு யாராவது வந்து தகவல் தவறைச் சுட்டிக் காட்டினால், மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காமல் "நான் இணையத்தில் பார்த்தேன், இணைத்தேன்" என்று விட்டு தெனாவெட்டாக நிற்பது. ஆனால், அந்தத் திரியை விட்டுக் கழன்று விடுவர்! இன்னொரு திரியில், 1-3 ரிபீற். இந்த நடத்தைப் போக்கை - pattern of behavior யாராவது கண்டித்தால்/பரிகசித்தால் இடையில் சில ஜட்ஜ் மார் நித்திரையால் எழும்பி "நீங்க ஏன் எப்பவும் குறை பிடிக்கிறீர்கள்?" என்று உடைந்த நீதித் தராசோடு வருவர்😎!
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
இது உங்களுடைய tunnel vision பார்வை, இதில் அதிசயம் ஒன்றுமில்லை. "ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும்" என்று இலங்கையிலோ தமிழகத்திலோ வாக்களிக்கக் கூடிய எல்லோரும் பிரபாகரனுக்கே அந்த வாக்கை வழங்குகின்றனர் என்பது உங்களது தவறான பார்வை. ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான போரை பிரபாகரன் தலைமை தாங்கி நடத்தினார் என்பது உண்மை, ஆனால் ஈழத்தமிழர்களின் சுதந்திரம் என்ற நோக்கத்தை அவருக்கு முன்னரும் பின்னரும் பலர் ஆதரித்திருக்கின்றனர், இனியும் ஆதரிப்பர்!
-
யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது
எந்த நாட்டிற்குச் செல்ல ஆயத்தமாக இருந்தார் என்று தெரியுமா? ஏற்கனவே இப்படியானவர்கள் விசா அவசியமில்லாத தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாகச் சென்று "ஜோதியில்" கலந்து விட்ட உதாரணங்கள் இருக்கின்றன. வவுனியாவில் பிரபல தெரு றௌடியாக இருந்த ஒரு இளவல் தற்போது பிரான்ஸ் லாசப்பலில் தெருவில் நிற்கிறார் என அறிந்தேன்!
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
"வங்கியை" குறி வைக்கிறார்கள் சில தமிழக அரசியல் வாதிகள் - இது உண்மை. இதை "பிரபாகரனுக்கு இருக்கும் ஒரு வாக்கு வங்கி" என்று அவசரப் பட்டு நீங்கள் புளகாங்கிதம் அடைவது வழமை தான். இப்படி பிரபாகரன் மேல் இருக்கும் அபிமானத்தை, வாக்காக மாற்ற ஒரு மூன்றாம் தர தமிழக அரசியல்வாதி எத்தனை ஆண்டுகளாக முயல்கிறார், எவ்வளவு முன்னேறியிருக்கிறார் என்று அவதானிப்போருக்கு உங்கள் கருத்து நகைச்சுவையாகத் தெரியும்😎!
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
அப்படியான ஒரு வாக்கு வங்கி பிரபாகரனுக்கு இருப்பதால் தான் போலும், உண்ணாவிரத நாடகமாடிய கருணாநிதியின் திமுகவும், புலிகளை வெளிப்படையாகவே பயங்கரவாதிகள் என்று கூறிய ஜெ யின் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெறுகின்றன என நினைக்கிறேன்😂!
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
ஓம், பல சமயங்களில் வலி தரும் யதார்த்தத்தில் இருந்து தப்பி ஒரு "குமிழிக்குள்" வாழவும் கற்பனை உதவுகிறது😂!
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
யாழ் களம் ஏன் இன்னும் கருத்துக் களமாக இருக்கிறது? அக்கினிகுஞ்சு, தமிழ்வின், ஆதவன் போல அர்த்தமேயில்லாத செய்திகளின் உறைந்த தளமாக இல்லாமல் கருத்துக் களமாக இருக்கிறது? பிரதான காரணம், யாரும் பொய்களை, போலிகளை, திரிப்புகளை இணைத்து விட்டு சவாலுக்குட்படாமல் போய் விட முடியாது. சமூக ஸ்திரத்தன்மையை அவாவுவோர் இந்த சவாலுக்குட்படுத்தலை ஆரோக்கியமான விடயமாகவே பார்ப்பர். அப்படி எதிர்பார்ப்பில்லாதோருக்கு குடைச்சல் ஏற்படுவது தவிர்க்க இயலாதது!
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
ஏன் இவ்வளவு facts சொல்லி மெனக்கெடுகிறீர்கள் எனத் தெரியவில்லை😂. சுமந்திரன் பின்கதவு (தேசியப் பட்டியல்), ஆனால் கஜேந்திரன் தேசியப் பட்டியல் (முன்கதவு). கஜேந்திரகுமார் தேர்தல்களில் எத்தனை தடவைகள் தோல்வி? சுமந்திரன் லவ்வர்சுக்கு facts என்பது பாகைக் காய் மாதிரி!
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
திருந்த வேண்டியது வேறு யாரும் அல்ல! கருத்தாடலின் இடையில் திடீரென்று தூக்கத்தில் இருந்து விழித்து, ஒரு தரப்பைப் பார்த்துக் கேள்வி கேட்கும் நாட்டாமை மட்டுமே திருந்த வேண்டும்😂! (அது நடக்காதென்பதும் தெரியும்😎!)
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
இப்படிக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால், பிளேட்டை அப்படியெ எ மாத்திப் போட்டு "சிங்கள தொல்லியல் திணைக்களம் தமிழர்களின் காணியைப் பிடிக்குது, சிங்களப் பகுதிகளில் இப்படி செய்வார்களா?" என்று ஒரு "பொங்கல்" வைத்திருப்பீர்களே?
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
சுயமரியாதை இயக்கக் கட்டுரையில் "மூத்திரச் சந்தைக்" கொண்டு வந்தவரைக் கேட்க மாட்டீர்களா😂? உண்மை. யாழ்ப்பாணம் மட்டுமல்ல, முறுகண்டியும் கூட அப்படித்தான் என அறிந்தேன். ஆனால், ஐரோப்பாவில் இருப்போருக்கு ஒரு ஐரோப்பிய நாட்டைச் சுட்டிக் காட்டுவது பொருத்தம் என்பதால் பிரான்ஸ் உதாரணமாகியது!
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
இதற்கும் மேல் கட்டுரைக்கும் என்ன தொடர்பு😂? நீங்கள் பிரான்ஸ் பக்கம் போகவில்லைப் போல தெரிகிறது. மிகச்சாதாரணமாக முட்டுச் சந்தில் சிறு நீர் கழிக்கும் ஆட்களைக் கொண்ட இடங்கள் அங்கே இருக்கின்றன! லா சப்பலிலேயே நான் கண்டிருக்கிறேன்.
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
உங்கள் போன்ற கற்பனையுலகில் வாழும் ஆட்களுக்குப் பதில் எழுதும் நோக்கில், இறந்த ஒருவரின் படங்கள் வீடியோக்களை மீண்டும் இங்கே இழுத்து வரவேண்டிய அவசியம் இல்லை என்பதால் நான் இணைக்கப் போவதில்லை! ஆனால், இணையத்தில் "பிரபாகரன் இறப்பு" என்ற தேடற்சொல் மூலம் எப்படித் தேடல் செய்வது என்பது கூடத் தெரியாமலா "சனல் 4" பார்க்கிறீர்கள்😂?
-
ஜெர்மனி ICU வில்.
இது சரியான தகவலாகத் தெரியவில்லை. தகவல் மூலத்தை இணைத்தால் நன்றிகள். இரண்டாம் உலகப் போரின் பின் அமெரிக்கா ஜேர்மனியின் அகதிகள்/குடியேறிகள் கொள்கையை மாற்றியிருந்தால், அது வரை இலட்சக் கணக்கான துருக்கியர்கள் எப்படி ஜேர்மனிக்கு வந்தார்கள்? அவர்களுள் பலர் நிரந்தரக் குடிகளாக வேரூன்றினார்களே?
-
ஜெர்மனி ICU வில்.
"ஜேர்மனி அமெரிக்காவின் மடிக்குள் இருக்கும் நாடு" என்பதை விட, மேற்குலகின் பாரம்பரியத்திற்குள் இரண்டாம் உலகப் போர் முடிவின் பின்னர் மீள வந்து இணைந்து கொண்ட, அதனால் பலன் பெற்ற நாடு என்பது தான் சரியாக இருக்கும். இதற்கு ஒரு காரணம், மேற்கு, கிழக்கு என பிரிந்திருந்த வேளையில், மேற்கினை நன்கு அமெரிக்காவும் மேற்குலகும் உதவி செய்து வளர்த்தன. வெளியே இருந்து அகதிகளாக வந்தோர் கூட, கிழக்குப் பாதியில் சற்றுத் தங்கி, பின்னர் பளபளப்பாக இருந்த மேற்கு ஜேர்மனிக்குள் தான் நிரந்தரமாக வாழ வந்தார்கள் - இந்த சொந்த அனுபவத்தை மறந்தவர்கள், நித்தி புகைக்கும் அதே வஸ்துக்களைப் புகைக்கும் ஆட்களாக இருப்பார்கள் என சந்தேகிக்கிறேன்😎. ஜேர்மனி, குடியேறிகளை வரவேற்கும் நாடாகச் செய்த ஒரு தவறு, தன்னுடைய ஜனநாயகப் பாரம்பரியங்களோடு ஒத்து வராத, ஒன்றிணைய விரும்பாத மக்களையும் பிரஜைகளாக ஏற்றுக் கொண்டமை தான். அது புதிதாக வந்த இஸ்லாமியர்களாகவும் இருக்கலாம், சில தசாப்தங்கள் முன்னர் வந்த இலங்கையர்களாகவும் இருக்கலாம்!
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
சனல் 4 காட்டிய படத்தில் இருப்பது பிரபாகரன் அல்ல, அது வேறு யாரோ (இறந்த ஒருவரின் உடலா என்பதும் சந்தேகம்) ஆனால், சனல் 4 ஐ ஏன் பார்க்கிறீர்கள்? ரூபவாகினி உட்பட்ட உள்ளூர் ஊடகங்களில் காட்டப் பட்ட வீடியோக்கள் இன்னும் இணையத்தில் இருக்கின்றன. அவற்றைக் கண்டால் இறுக கண்களை மூடிக் கொண்டிருக்கிறீர்கள் போல தெரிகிறது😂!
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
"இதுக்கெல்லாம் ஆதாரமில்லை" என மனம் தளர்வது ஏன்? "பச்சைக் கலரு சிங்குச்சா, சிவப்புக் கலரு சிங்குச்சா" என்று நீங்கள் பத்து இடத்தில் எழுதி விட்டாலே அது சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் வரை நின்று பிடிக்கக் கூடிய ஆதாரமாகி விடுமே😇??
-
ஜெர்மனி ICU வில்.
இது "நான் வளர்கிறேனா மம்மி?" 😂என்று வேறு யாரோ ஒரு கட்சிக் காரரின் ஆட்கள் கேட்டது போல இருக்கிறது. இந்தியாவை விட 10 மடங்கிலும் குறைவான சனத்தொகை கொண்ட ஜேர்மனி உலக பொருளாதார பலத்தில் (GDP) மூன்றாமிடம். ஒரு பில்லியன் மக்கள் கொண்ட இந்தியா மிக அண்மையாக நான்காவது இடம் (அதுவும் ஜப்பான் படுத்து விட்டதால் கிடைத்த இடம்). கோவிட்டின் பின்னரான வளர்ச்சியில் ஜேர்மனியை விட மோசமான மந்த நிலையடைந்த ஜி7 நாடுகளும் இருக்கின்றன. ஆனாலும், இருக்கும் நாடுகளுள் ஜேர்மனி தான் இன்னும் ஐரோப்பாவின் பொருளாதார powerhouse என்று சொல்லக் கூடிய நிலையில் இருக்கிறது. முதல் உலகப் போரில் இருந்து அவர்களது பலமே உடனே சுதாரித்துக் கொண்டு மொடலை மாற்றி வளர்ச்சியைத் தூண்டுவார்கள். இப்படியான ஒரு நிலை இந்தியாவில் சாத்தியமில்லை.
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
பார்க்காமையால் தான் இங்கே இணையுங்கள் என்றேன். இப்போது தான் இது புரிந்ததா😂? இப்பவாவது இணையுங்கள், என்ன சொல்லியிருக்கிறார், யாரைச் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்பம்! நீங்கள் தாயகத்தில் யுத்த காலத்தில் வசித்து யுத்தத்தில் இறந்த, மின் கம்பத்தில் கட்டப் பட்ட உடல்களுள் ஒன்றைத்தானும் பார்த்தறியாத ஒருவர் போலத் தெரிகிறது (உங்கள் ஏனைய பாரதங்களும் அதைத் தான் காட்டுகின்றன😎). "12.7 mm தோட்டா" என்று செய்தியில் இருக்கிறது. இந்தத் துப்பாக்கி ரவை ஏற்படுத்தும் வெளியேறும் காயம் (exit wound) எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஜெர்மனி ICU வில்.
கொரொனா வந்து 2021 இல் மீண்டும் நாடுகள் மீண்ட போது பல பிரச்சினைகள்: அமெரிக்காவில் சும்மா நிவாரணமாகக் கிடைத்த காசினால் பணவீக்கம், பாரவூர்தி -HGV ஓட்டுனர்கள் இல்லாமையால் பிரிட்டனில் வினியோகச் சங்கிலிப் பாதிப்பும், விலையுயர்வும், அதே போல ஜேர்மனியிலும் விளைவு இருந்தது. ரஷ்யாவின் விலைகுறைந்த எண்ணையும், எரிவாயுவும் உள்ளூரில் விலைகளைக் குறைவாக வைத்திருக்க உதவின. ஆனால், அது தான் ஜேர்மனியின் நீண்ட கால வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்தது என்பது ஜேர்மனியில் வசித்தாலும் அதன் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் வாழும் சிலரின் தவறான கணிப்பு. வெளிநாடுகளுக்கு விற்கவென்றே பொருட்களைச் செய்து ஏற்றுமதி செய்த ஜேர்மனி, தற்போது அந்தப் பொருளாதார மொடல் சந்தைப் போட்டி காரணமாக வேலை செய்யாமல் விட்டதால் பாதிக்கப் பட்டிருக்கிறது. சீனாவும் இதே போன்ற ஒரு உற்பத்திக் குறைவினால் (manufacturing slowdown) பாதிக்கப் பட்டிருக்கிறது. இதையெல்லாம் ICU என்றால் "இந்தியா எப்பவோ அரை உயிரோடு புதைக்கப் பட்டு விட்டது" என்றல்லவா எழுத வேண்டும்😂? இவையளும் இவையிண்ட அரைவேக்காட்டு ஆய்வுகளும்!