Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. "கற்பனை கலந்த சுய அனுபவம்" என்று லேபல் போட்ட பின்னர், "இது முற்றிலும் என் சுயசரிதை" என்று அவர் பேசி வந்தால் அது சவாலுக்குட்படுத்த வேண்டிய விடயம் தான். ஆனால், கற்பனை கலந்த சுய அனுபவத்தில் இல்லாத பாத்திரங்களைக் கொண்டு வரலாம், பாத்திரங்களின் உரையாடலை மாற்றலாம், நடந்த காலத்தையும் மாற்றலாம். மேலே சுட்டிக் காட்டியது போல, அவரது பேச்சுத் தான் பிரச்சினை, எழுத்தில் அவர் கொண்டு வந்திருக்கும் விடயம் அவரது படைப்புரிமை. அதைக் கால முரண்பாடு என்று சொல்ல முடியாது. வழமையாக, இது போன்ற ஆக்கங்களில் எழுத்தாளர்கள் வெளிப்படையாக தம் "அனுபவங்கள் இவை, கற்பனையில் உதித்தவை அல்லது மாற்றப் பட்டவை இவை" என்று புத்தகத்தின் பின்னுரையிலேயே (epilogue) தெரிவித்து விடுவர். அதன் பிறகு யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். இந்த விடயத்தில் அது நடக்கவில்லை என்று தெரிகிறது.
  2. இள வயதினரிடையே எயிட்ஸ் அதிகரிக்க பிரதான காரணங்கள் பாதுகாப்பான உடலுறவு பற்றிய அறிவின்மை, மேலும் எயிட்ஸ் நோய் வைரஸ் தங்கள் உடலில் இருக்கிறதா என்பது தெரியாத நிலைமை. இந்த இரு காரணிகளையும் குறி வைத்து இலங்கையில் எயிட்ஸ் பரவலைக் கட்டுப் படுத்தும் வேலைத் திட்டங்களை USAID என்ற அமெரிக்க அரசின் நிறுவனம் 2025 ஜனவரி வரை முன்னெடுத்திருந்தது. ஏனைய தென்னாசிய நாடுகளோடு ஒப்பிடும் போது, இலங்கையில் இருக்கும் மருத்துவ அமைப்புகள் இந்த விடயத்தில் திறன்பட செயல்பட்டதாகவும் சில USAID இடங்களில் குறிப்பிட்டிருந்தார்கள். 2025 இல், ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடிய முதல் வெளிநாட்டுத் தொண்டு அமைப்பு இந்த USAID அமைப்பு. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், "ஏனைய நாடுகளில் ஒரு பாலின உறவை ஊக்குவிக்க மில்லியன் கணக்கில் செலவு செய்கிறது இந்த அமைப்பு" என்பதாக இருந்தது. இதை இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து இங்கே வந்து ட்ரம்ப் ஆதரவு "அமெரிக்கர்களாக" மாறி விட்ட சில ஈழத்தமிழ் நண்பர்களும் அடிக்கடி சுட்டிக் காட்டுவர். USAID உண்மையாக இதைச் செய்ததா? இலங்கையில் எயிட்ஸ் பரவலுக்கு பாரிய காரணியாக இருப்போர் beach boys எனப்படும் இளம் ஆண் பாலியல் தொழிலாளர்கள். இதை ஆய்வுகள் மூலம் அடையாளம் கண்ட பின்னர், இந்த பாலியல் தொழிலாளர்களிடையே பாதுகாப்பான உடலுறவு, கிரமமான இரத்தப் பரிசோதனைகள், எயிட்ஸ் இருந்தால் அதற்குரிய மருந்துகள் வாங்க உதவி போன்ற முக்கியமான திட்டங்களை மட்டுமே USAID செயற்படுத்தி வந்தது. இந்த நற்காரியத்தை "ஒரு பாலின உறவை ஊக்குவித்தல்" என்று ட்ரம்ப் தரப்பு சொல்ல, அதை நம்பி எங்கள் ஈழத்தமிழ் அமெரிக்கர்களும் USAID பூட்டப் பட்டதை ஆதரித்தார்கள். இனி இவர்களுள் சிலர் விடுமுறைக்கு இலங்கை போனால், இலங்கை மருத்துவ மனைகளில் இரத்தமேற்ற வேண்டிய (blood transfusion) நிலைமைகள் ஏற்படாமலிருக்க பிரார்த்திக் கொள்ள வேண்டும்😂. ஏனெனில், இரத்தங்கள் பரிசோதிக்கும் வேலைத் திட்டங்களில், அமெரிக்காவின் USAID விட்ட இடைவெளியை வேறெந்த அமைப்பு தற்போது எடுத்துக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. https://www.tamilguardian.com/content/us-launches-2-million-partnership-end-aids-sri-lanka
  3. இந்த நூலை இன்னும் வாசிக்கவில்லை. ஆனால், எழுத்தாளர் "autofiction" என்று பெயர் வைத்ததே "தன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவுக் கதை" என்பதாலாக இருக்கலாம். Autofiction என்ற இலக்கிய வகையின் வரைவிலக்கணம் இப்படி இருக்கிறது: Autofiction, short for autobiographical fiction, is a genre of literature that combines elements of autobiography and fiction எழுத்தாளர் இதனை "சுயசரிதை-autobiography" என்று பெயரிட்டிருந்தால், கிரிதரன் , நெடுமாறன் ஆகியோரின் விமர்சனங்கள் நியாயமானவையாக இருக்கும். அப்படியொரு லேபல் இல்லாதவிடத்தில், இந்த விமர்சனங்கள் அர்த்தமற்றவை.
  4. உங்கள் சட்ட அறிவையும் பொது அறிவையும் காட்டும் கருத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறோம், நன்றி😇! உண்மையில், இன்று சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் பலரை ரணில் மைத்திரி அரசின் நிர்வாகம் கைது செய்யவில்லை. உங்கள் "சட்ட வியாக்கியானத்தின்" படி அதனால் தான் ரணில் அரசு விடுதலை செய்யத் தடை இருந்திருக்கிறது போல! நீங்களெல்லாம் இலங்கை சுப்றீம் கோர்ட்டில் இருக்காமல் ஏன் இங்க நிக்கிறீங்களோ தெரியவில்லை😎!
  5. நிழலி சொல்லியிருப்பது நியாயமான கருத்து. பொட்டர் மட்டுமல்ல, திலீபன் கூட மருத்துவக் கல்லூரி செல்லும் வாய்ப்பிருந்த ஒரு படிப்பாளி என்று அறிந்திருக்கிறேன். @island உங்கள் கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்!
  6. 🤣ஆம் உறவே! அநுர பால்குடி. "ஆணைப் பெண்ணாக மாற்றுவது தவிர எல்லாம் செய்யும் வல்லமை பெற்ற" அதிபர் பதவியில் இருந்த படி, ஆனந்த சுதாகரனைக் கூட விடுவிக்காமல் இருக்கும் அநுர, நீங்கள் சொன்னது போல இனவாதியல்ல! இது வெறும் அலகு குத்திய காவடியல்ல உறவே, அலகை "வேறெங்கோ" குத்திக் கொண்டு தூக்கும் அபூர்வ காவடி😎!
  7. இந்த மச்சை தானத்திலும், உடல் உறுப்பு தானத்திலும் எம்மவர்கள் அக்கறையாக ஈடு பட வேண்டும் என, சில ஆண்டுகள் முன்னர் ஒரு யாழ் கள உறவின் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பின் காலத்தில் எழுதியிருந்தேன். ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதி முறைகள் இருக்கலாம். அமெரிக்காவில், மச்சை தானத்திற்காக பதிவு செய்ய 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். ஆனால், 45 வயதிற்கு மேற்பட்டோரும் பதிவு செய்யலாம், ஆனால் பரிசோதனைக்கான செலவை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும். வயது ஒரு காரணமாக இருப்பதற்குக் காரணம், வயது அதிகரிக்கும் போது தானம் செய்பவரின் மச்சைக் கலங்கள் பெறுபவரின் உடலினுள் பெருக்கமடைவது குறைவாக இருக்கும் என்பதே.
  8. அநுரவுக்கு அலகு குத்தி நீங்கள் தூக்கிய காவடியை இறக்கி வைப்பதா அல்லது புத்தர் சிலை விவகாரம் ஆரம்பித்த பின்னர் வந்து கருத்துச் சொன்ன ஏனையோரைக் காட்டி அனுர அரசுக்கு முரட்டு முட்டுக் கொடுப்பதா என்ற தெரிவுகளில் இரண்டாவதைத் தேர்ந்திருக்கிறீர்கள்😂! நான் இன்னொரு திரியில் சுட்டிக் காட்டியது போல, முள்ளிவாய்க்காலுக்குக் காரணமான மகிந்தவை பதவியில் அமர்த்த உதவிய புலிகளைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன😎? இது போன்ற முட்டாள் தனமான கேள்விகளைப் பத்தியாக மாற்ற நிலாந்தன் எந்த ஹோட்டலில் றூம் போட்டு யோசிக்கிறார் என்று அறிய வேண்டும்! அநுர பதவியில் இருப்பதால் , எந்த தமிழ் கட்சியாக இருந்தாலும் அனுரவோடு தான் பேச வேண்டும். இதை விட்டு விட்டு "நாம் 14 மாதங்கள் முன்பு ஆதரித்த சஜித் பதவிக்கு வரும் வரை பேச்சு வார்த்தையில் இறங்கோம்!" என்று நிற்க தமிழர்கள் என்ன நிலமும், இராணுவமும் வைத்துக் கொண்டு காலங் கடத்தும் வகையில் வசதியாக இருக்கிறார்களா என்ன?
  9. நீதிமன்றத்தின் தீர்ப்பையே உதாசீனம் செய்து "பெண்கள் உள் நுழைய முடியாது" என்று விதி வைத்திருக்கும் கோவில் அல்லவா இது? பெண்களை விலக்கி வைத்தவர்கள் திருடர்களை அவர்களுக்கு மாதவிடாய் வருவதில்லை என்ற காரணத்தால் அனுமதித்திருக்கிறார்கள். பிறகு தங்கம் திருடு போகாமல் இருக்குமா😎?
  10. 2004 இல், மகிந்தவை மறைமுகமாக பதவிக்கு வர ஆதரித்து முள்ளிவாய்க்காலில் மக்களையும் இழந்து தாமும் அழிந்த புலிகளும் இப்போது இல்லை. 2024 இல் சஜித்தை ஆதரித்த சுமந்திரனும் இப்போது மக்கள் பிரதிநிதியாக இல்லை. ஆனால், முள்ளிவாய்க்கால் வரை புலிகளோடு அரசியல் துறைப் பிரபலமாக பயணித்த நிலாந்தன் மாஸ்ரர் மட்டும் எதையும் இழக்காமல் "ஆய்வாளர்" பதவியிலேயே இருக்கிறார்😂!
  11. இதைக் கொஞ்சம் 30,000 அடி உயரத்தில் இருந்து பாருங்கள்: கொழும்புப் பல்கலையின் கலைப் பீடத்தினுள் வரும் ஒரு பிரிவு (division) பொருளியல் பிரிவு. ஆனால், கொழும்புப் பல்கலையின் சட்ட பீடத்தில் முதலாவது பீடாதிபதியே (Dean) பேராசிரியர் நடராஜா எனும் தமிழர் தான். அதன் பிறகு வி.ரி. தமிழ்மாறன் கூட பீடாதிபதியாக இருந்திருக்கிறார். வேறு சில தமிழர்களும் இருந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், தற்போதும் கலைப் பீடத்தின் இது போன்ற பல பிரிவுகளில் முஸ்லிம்கள், அதுவும் பெண்கள் இருந்திருக்கிறார்கள். இந்தப் பெரிய பரப்புப் பார்வையில் இருந்து பார்க்கும் போது, பேராசிரியர் பொருளியல் பிரிவுக்கு தலைவராக வந்தது என்ன பெரிய ஆச்சரியம்? அவரது உழைப்பு மெச்சத் தக்கது! ஆனால், ஏன் இந்த தேவையற்ற "முதல் தமிழன்" அலட்டல்?
  12. அப்ப இதை எழுதியது யார்😂? நீங்கள் எழுதும் ஒரு கருத்திலேயே உங்களோடு நீங்களே முரண்பட்டுத் தான் எழுதுகிறீர்கள் என்றால், உங்கள் கருத்துகளை வேறு யார் கவனிக்கப் போகிறார்கள்?
  13. 2000 களில் மாணவனாக வந்த, ஒற்றையாளாக இருந்த எனக்கும் இதே அனுபவம் தான். ரியூசன் இலவசம் (50% பணி செய்த காரணத்தால்), மருத்துவ காப்புறுதி 90% இலவசம். வீட்டு வாடகையும், உணவும் தான் செலவு. அமெரிக்காவின் வறுமைக் கோட்டிற்குக் கீழானது என்று எனக்கும் அன்று தெரியாமல் வந்த சம்பளத்தில் ஊருக்கு அப்பாவின் செலவுக்கும் அனுப்பி, எஞ்சிய சேமிப்பில் முதல் வாகனமாக மூவாயிரம் டொலர்களுக்கு ஒரு பழைய காரை வாங்கி அதில் பழகி சாரதி அனுமதிப் பத்திரம் எடுக்கவும் முடிந்தது. இத்தனைக்கும் நான் மாநில அரசின் உணவு உதவியைக் கூட பெற்றுக் கொள்ள முயலவில்லை (ஒரு கௌரவ கவரி மான் சின்ட்றோம் தான்😂!). இப்படி குடியேறிகளாக வந்த என்னையும் உங்களையும் போன்ற பலரை இலவசங்கள், சலுகைகள் கொடுத்து நிமிர்த்தி விட்டிருக்கிறார்கள். அதே உதவிக் கரங்களை இனி வரும் குடியேறிகளுக்கும் ஓரளவு கொடுப்பதற்கு நாம் ஆதரவாக இருக்கிறோம். ஆனால், எம்மிடையேயும் சிலர் விசித்திரமாக இருக்கிறார்கள். உதாரணமாக, "பெரும்பாலான அமெரிக்கர்களின் வரியை உயர்த்தாமலே, படிப்புக் கடன் -student loan பெற்றவர்களுக்கு அரசு ஒரு பகுதிக் கடனைக் கட்டி அவர்களை மீட்கும்" என்று பைடன் அறிவித்த போது, எதிர்ப்புக் காட்டிய என் ஈழத்தமிழ் அமெரிக்க நண்பர்கள் பலர், இதே சலுகையெல்லாம் அனுபவித்து தற்போது செல்வந்தர்களாக இருப்போர் தான்! "என்ன டிசைனோ?" என்று அடிக்கடி நான் யோசிப்பதுண்டு😂!
  14. பேராசிரியருக்கு வாழ்த்துக்கள் நிச்சயம் உரித்தாக வேண்டும்! ஆனால், தமிழரசு ஏன் இதை "வரலாற்று சாதனை,தமிழனுக்கு முதல் அங்கீகாரம்" என்று தலைப்புப் போட வேண்டி வந்திருக்கிறதென விளங்கவில்லை😂. இலங்கையின் கல்விப் புலத்திலும், தற்போது உலகத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்களிலும் பல ஈழத்தமிழர்கள் தலைமை பொறுப்புகளில் சத்தமில்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவை சாதனைகள், நல்ல விடயங்கள். ஆனால், யூ ரியூபர்களின் அலட்டல் வீடியோக்களுக்கு இத்தகைய கல்விப் புல ஆளுமைகள் சில்லறைக் காட்சிப் பொருளாவதில் உடன்பாடில்லை!
  15. ஏராளனுக்கு இவை தெரிந்தே இருக்குமென நம்புகிறேன். ஊரில் இருப்போருக்கு பெரும்பாலானோருக்கு தற்போது நிலைமை விளங்கியிருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், போன ஆண்டு இறுதியில் ஒரு நிகழ்வில் ஒருவரைச் சந்தித்த போது அப்படியல்ல என்று புரிந்தது. இலங்கையில் வங்கியில் ஒரு நல்ல வேலையில் இருந்த ஒருவர், அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்திருந்தார். எப்படி வந்தார் என்று நான் கேட்கவில்லை, ஆனால் குடும்பத்தோடு வந்திருந்தார். வேலை கிடைக்கவில்லை, மருத்துவக் காப்புறுதி இல்லை. நேரடியாக வங்கித் துறையில் வேலை கிடைத்து விடும் என்ற தவறான புரிதலில் வந்தாரோ தெரியவில்லை. மிகவும் கஷ்டப் பட்டார், என்ன செய்தார் என்று தெரியவில்லை.
  16. கடந்த காலங்களில் சுமந்திரனும் தமிழரசுக் கட்சியும் இதைக் கோரிக்கையாக வைத்த ஆதாரங்களை இங்கே முன் வைத்தால், என்ன செய்து விடப் போகிறீர்கள்? வழமை போலவே நைசாக கடையை மூடி விட்டுப் போய் விடுவீர்கள்😂. பின் அடுத்த படத்தைக் கண்டதும் வந்து ஏதோ அலட்டுவீர்கள்! ஒவ்வொரு முறையும் ஒன்றைச் சொல்வீர்கள், அதற்கு படங்கள் இணைத்துக் கூட ஆதாரங்கள் தந்தால் "எஸ்" ஆவதைத் தவிர நீங்கள் ஒன்றும் உருப்படியாக விமர்சனம் வைப்பதில்லை. இதை வாசகர்கள் கவனிக்க வேண்டுமென்பதற்காகவே இங்கே அழைத்தேன்!
  17. எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை, அமெரிக்காவில் (அல்லது எந்த மேற்கு நாட்டிலும்) வருமானம் இல்லா விட்டால் வாழ முடியாது. வருமானம் வேலையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாதோர், அல்லது வரும் வருமானம் போதாமல் இருப்போர் ஆகிய தரப்பினருக்காக 60 களில் உருவாக்கப் பட்ட SNAP உணவுத் திட்டத்தைப் பற்றி அபிலாஷ் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார். இது பணவீக்கம் அதிகரித்தமையால் மக்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்த பின்னர் உருவான திட்டமல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போருக்கான உதவித் திட்டம் அவ்வளவு தான். வறுமை இல்லையானால் பெற்றுக் கொள்ள முடியாது. மற்றபடி இது மட்டுமே அமெரிக்காவில் உணவு உதவி புரியும் திட்டம் என்றும் சொல்ல முடியாது. பல்வேறு தொண்டு அமைப்புகளும், உள்ளூர் அரசு அமைப்புகளும், பள்ளிக் கூடங்களும் கூட குழந்தைகள் பட்டினி கிடக்காமல் இருக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். தெருவில் நிற்கும் இந்தியர்களை மாடமாளிகையில் வாழும் இந்தியர்கள் பார்த்துக் கொள்வதை விட சிறப்பாக இங்கே வாழும் மக்கள் இத்தகைய திட்டங்களுக்கு நன்கொடை வழங்கி ஏனையோரின் பசி தீர்க்க உதவுகிறார்கள்.
  18. இலங்கையிலும் பாராளுமன்றத்திற்கு வெளியே இதைச் செய்ய முடியாது. அர்ச்சுனா மட்டுமல்ல, கஜேந்திரகுமார் போன்றோர் கூட பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி உள்ளே பேசலாம். அதற்கும் கட்டுப் பாடுகள் உண்டு - பேசி ஒலி/ஒளி போடலாம். ஆனால், கட்டுப் பாடுகளை மீறினால் அப்படியொரு உரை நிகழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஹன்சாட்டிலிருந்து உரையை அகற்றி விட முடியும். இதை விட நுணுக்கமான வேறு விடயங்களும் உண்டு. இலங்கை அரசியலைமைப்பின், "பிரிவினை கோருதல் குற்றம்" என்று சொல்லும் "6 வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன்" என்று சத்தியப் பிரமாணம் எடுத்துத் தான் பா.உ க்கள் எல்லோரும் பதவியேற்றிருக்கிறார்கள். ஆனால், அனல் பறக்கும் பேச்சுக்களை மட்டும் கவனமாகப் பேசுவர்!
  19. சுமந்திரனின் படம் போட்டு 3 மணி நேரமாகிறது! @satan நலமாக இருக்கிறாரா? எங்கே காணவில்லை😇?
  20. என்னது? காசு ..இல்லையா? சரி போகட்டும்! "Money is not everything" credit cards, letter of credit, unlimited credit line..என்று பல விடயங்கள் இருக்கே? அதில ஒன்றை எடுத்து "வியாபாரக் காந்தமாக" வலம் வரலாமே😂?
  21. இது முற்றிலும் சரியான தகவல் அல்ல. "யூதம்" ஒரு மதம் என்பது சரி. ஆனால் யூத மக்களின் வாழ்க்கை முறை, மணம் முடிக்கும் முறைகள் காரணமாக jewishness என்பது அவர்களது தாய்வழியின் (matrilineal) ஊடாகப் பேணப் பட்டு வரும் ancestry உதாரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக மத்திய, கிழக்கு ஐரோப்பிய யூதர்களை அஷ்கெனாசி (Ashkenazi) யூதர்கள் என்பார்கள். இவர்களின் சிறுமணி டி.என்.ஏ (mitochondrial DNA) யில் அவர்களின் தாய்வழி அஷ்கெனாசி டி.என்.ஏ பண்பு இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். பல ஆண்டுகள் முன்னர், இந்தியாவின் கிழக்கு மாநிலத்தில் இருந்து "நாம் கிழக்கு நோக்கி குடிபெயர்ந்த போது தொலைந்து போன யூத கோத்திரங்களில் (tribe) இருந்து வந்தவர்கள்" என்று ஒரு இந்திய யூதர்கள் சமூகம் இஸ்ரேலுக்குச் சென்று டி.என்.ஏ பரிசோதனையை கோர்ட்டில் சமர்ப்பித்து இஸ்ரேல் குடியுரிமையைப் பெற்றார்கள். "யூத ஜீன்" என்ற ஒன்று இல்லை, ஆனால் ancestry இன் வழியாக யூதப் பின்னணியைக் கண்டறியலாம், நிரூபிக்கலாம்.
  22. அப்படி வாங்கினால் இரண்டு விடயங்களை நிச்சயம் செய்யுங்கள். பள பள (satin) வெள்ளையாக இருக்கும் உள் வர்ணத்தை off white ஆக, அல்லது வேறொரு வெளிர்நிறமாக மாற்றி விடுங்கள். தரையை இப்படி வளுக்கல் தரையாக வைத்திருக்காமல், எங்கள் ஊர் லேலண்ட் பஸ்களில் இருக்கும் உராய்வு கொண்ட (friction) தரையாக மாற்றுங்கள். இல்லா விட்டால், கனடா இலண்டனில் இருந்து இதற்காகவே கூட்டமாக பிளைற் பிடித்து வந்து படகில் வழுக்கி விழுந்த பின்னர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடுவார்கள்😂. நீங்கள் நஷ்ட ஈடு கொடுக்க இயலாமல் படகை நீங்களே மூழ்கடித்து விட்டு அதற்குரிய காப்புறுதியை எடுத்துக் கொண்டு பிரிட்டனுக்கு வந்து விட வேண்டியிருக்கும்! பிகு: இப்படித் தப்பிப் போவது தவறென்று யோசிக்காதீர்கள்! பிரிட்டன் சட்டங்களில் இதற்குரிய ஓட்டைகள் சலுகைகள் உங்களுக்கு இருக்கும், யாழ் களத்திலேயே உங்களுக்கு லோயரைப் பிடிக்கலாம்😎!
  23. பாராட்டுக்கள்! ஆனால், சரியாக ஒரு வருடம் கழித்து இந்த யூ ரியூபர் இதே படகைச் சென்று பார்த்து வீடியோ போட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். படகின் உள்ளக வர்ணத்தை நம் ஊரின் சூழ்நிலை தெரியாமல் வெள்ளையாக ஆக்கியிருக்கிறார்கள். என்ன ஆகுமோ தெரியவில்லை😂!
  24. இந்த கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்று யாருக்காவது தெரியுமா? கழிவிலிருந்து உயிர்வாயு (Biogas) எனப்படும் மீதேன் வாயுவை உற்பத்தியாக்கி, அதன் மூலம் நீராவி உருவாக்கி மின்சாரமா? மீதேன் வாயு, காபனீரொட்சைட்டை விட 6 மடங்கு மோசமான ஒரு பச்சை வீட்டு விளைவு வாயு. இதனால் சூழல் மாசடைதல் மோசமாகாதா?
  25. ஈழத்தமிழர்களும் அவர்களது பிரச்சினையும் தான் "உலகத்தின் மையம்" என்ற நினைவில் நிக்சன் சீனாவில் நடக்கும் "சட்ட ஆட்சி"😎 யை விபரித்திருக்கிறார் என நினைக்கிறேன். நிக்சனின் இந்த விதந்துரைப்பை திபெத்தியர்களிடமும், சிங்ஜியாங் பிரதேச முஸ்லிம் சீனர்களிடமும் காட்டினால் சக துவாரங்களாலும் சிரிப்பார்கள் என நினைக்கிறேன்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.