Everything posted by Justin
-
மரப்பாவம்
வீடுகளில் மரங்களை வைக்கும், அல்லது இருக்கும் மரங்களைப் பேணும் பழக்கம் அருகி வருகிறது. இரு வீடுகளின் எல்லையில், எங்கள் காணிக்குள் நின்ற ஒரு Pin Oak மரம் இறந்து வரும் அறிகுறிகள் தெரிவதாக அயல் வீட்டுக் காரர் என்னிடம் சொன்னார். முறைப்பாடுகள் செய்யாத நட்பான மனிதர். வெட்டும் செலவில் அரைவாசியை தான் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி, அவரே மரம் தறிக்கும் கம்பனி ஒன்றையும் ஏற்பாடு செய்தார். ஆங்கிலத்தில் ஒரு சொல்லும் தெரியாத மெக்சிக்கன் வேலையாட்கள் வந்து சர சரவென்று 2 மணி நேரங்களில் சாய்த்து விட்டுப் போனார்கள். வீட்டின் முன் பக்கம் நிழல் பெரிய இழப்புத் தான் என்றாலும், புயல் காற்றில் வீட்டின் மேல் சாய்ந்திருந்தால் பெரிய வேலையாக முடிந்திருக்கும். எப்போதாவது வரும் புயல், மரம் வீழ்தல், காப்புறுதி என்று வலு சீரியசாக யோசிக்கும் இந்திய அமெரிக்க அயலவர்கள் வீடு வாங்கியவுடன் செய்யும் முதல் பணிகளில் ஒன்று சுற்றி நிற்கும் மரங்களை வெட்டிச் சாய்ப்பது தான்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
"போர்க்கால பாதுகாப்பு முஸ்லிம் குடிபெயர்வு!" வாவ்😂! என்ன ஒரு "சொற் சிலம்பம்" நெடுக்கர். முஸ்லிம்கள் "தாமாகவே சொத்துக்களை விட்டு விட்டு போர் சூழலில் இருந்து குடி பெயர்ந்தனர்" என்று எதிர்காலத்தில் எழுதுவார்கள் என நினைக்கிறேன்😂.
-
சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்
வாழ்த்துக்கள்! இவரது பெயரை முன்னரும் கேள்விப் பட்டிருக்கிறேன். சுவிசில் மேல் மட்ட அரசியல் பதவிகளுக்கு வருவது என்பது பிரிட்டன், அமெரிக்காவில் இருப்பது போல இலகுவான காரியமல்ல!
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
யாழ் களம் கேவலமாகி இருக்கிறதா? அப்படியானால் யாரால் கேவலமாகியிருக்கிறது? என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும் மருதர்😂! போலிச் செய்திகளையும், செயற்கை நுண்ணறிவு தயாரிக்கும் துணுக்குகளையும் இணைப்போர் முயற்சித்தும் கூட யாழ் களம் கேவலமாகி விடவில்லை! செய்தி/தகவல்களின் உண்மைத் தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் வசதி இருக்கும் வரை யாழ் களம் தரமாகத் தான் இருக்கும்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
சுமந்திரனுக்குக் கிடைக்கவிருக்கும் இந்த "ஆத்மீக" ஆதாயம் பற்றியும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்😎! ஒன்று மட்டும் புரிகிறது: பல "ஈழத்தமிழ் தேசியர்களின்" மெல்லிய மேல் பூச்சைச் சுரண்டி உண்மையான வர்ணத்தை வெளிக் கொண்டுவரும் வேலையைச் செய்யவாவது சுமந்திரன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்!
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
சரியான நேர்வழிப் புரிதல். ஆனால், உக்ரைனை "நேட்டோ உறுப்பினருக்கு வழங்கும் பாதுகாப்புக்கு ஒத்த (Article 5-like) பாதுகாப்பு " தருவோம் என்று ஏமாற்றும் வேலையை ட்ரம்ப் செய்வார் என நினைக்கிறேன். எப்படி? Article 5/சரத்து 5: ஒரு நேட்டோ உறுப்பு நாடு தாக்கப் பட்டால் நேட்டோ பதில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி செய்கிறது. Article 4/சரத்து 4: அப்படியாக ஒரு உறுப்பு நாடு தக்கப் பட்டால் அது நேட்டோ பதில் வழங்க வேண்டிய தாக்குதலா என்று ஆலோசனை நடத்த வேண்டுமென்கிறது. ஹங்கேரி, துருக்கி ஆகிய இரு நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் நேட்டோவில், உக்ரைனுக்காக சரத்து 5 இனை அமல் செய்ய ஆலோசனை செய்தால் என்ன பலன் இருக்கும் என்பது ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
அப்படியானால் செலன்ஸ்கி என்ற நவ நாசியை ஆட்சியில் இருந்து அகற்ற "விசேட நடவடிக்கை" என்று சொன்னது, அதை இங்கே புரின் புரியன் மார் தலை மேல் தூக்கித் திரிந்தது, எல்லாம் வெறும் புருடாவா😂?
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
நீங்கள் இப்ப நியூயோர்க்கா? எப்படிச் சமாளிக்கிறீர்கள்😇?
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
👍 இதைத் தான் நானும் எழுத நினைத்தேன்: "நாங்கள்" 2002 இல் கூட்டுத் தலைமை பாலசிங்கத்தார் மூலமாக எச்சரிக்கை கொடுத்த பின்னரும் போராடியது வீரம்! அதையே முழுமையான சுதந்திர நாடாக 30 ஆண்டுகள் வரை இருந்த உக்ரைனின் ஒரு தலைவர் செய்தால் "கோமாளித் தனம்". இதைச் சொல்வோர் ஆமி சுடாத ஷொட் கண்ணோட ஜீப்பில் திரிந்த காலத்திலேயே ஐரோப்பாவுக்குப் பறந்த ஆட்கள். இன்னும் சிலர், உயிர் காக்க ரஷ்யாவூடாக தப்பி, அமெரிக்காவில் வந்து லேண்ட் ஆன ஆட்கள்! இன்னும் என்னவெல்லாம் கேட்க வேண்டுமெண்டு எங்களுக்குச் சபிச்சிருக்குதோ தெரியேல்ல🤔!
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
90 களில் 15 ஆயிரம் என்பது சாதாரண வக்கீல் கூலி தானே? ஓ.சியில் கூப்பன் அரிசி, மண்ணெண்ணை கிடைக்கலாம், வழக்குப் பேச வக்கீலும் ஓ.சியில் வேண்டுமென்றால் என்ன மன அமைப்பய்யா இது😂? உங்களுக்கு கண்ணதாசன் என்ற புலிகளுக்கு ஆட் சேர்த்தார் என்ற பெயரில் கைதான ஒரு அரசியல் கைதியை சுமந்திரன் ஆஜராகி விடுவித்த செய்தி தெரியாதா? 2010 இல் அரசியலுக்கு வருவதற்கு முதலே சுமந்திரன் சில அரசியல் கைதிகள் வழக்கில் ஆஜராகி இருக்கிறார்! நீங்கள் என்னவென்றால் தகவல் ஏதுமில்லாத வெறுமையில் இப்படி அளந்து விடுகிறீர்கள்?
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
நல்ல விசயம்! நீரிழிவு வருவதைத் தள்ளிப் போடலாம் அல்லது முற்றாகத் தவிர்க்கலாம்!
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
உங்களுக்கு நீங்கள் எழுதிய கருத்துக்களே மறு நிமிடம் காற்றில் மறைந்து மறந்து விடும், இந்த நிலையில் எந்தத் திரியில் எதை யார் எழுதினார்கள் என்று நினைவில் வைத்திருப்பீர்களா என்ன😂? அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் தனிமைப் படுத்தலை அமல் செய்யாமல் மக்களைச் சாக விட்ட நேரத்தில், சீன தடுப்பூசி கிடைக்கும் வரையில் தனிமைப் படுத்தலைக் கடுமையாகக் கடைப் பிடித்தமைக்காகத் தான் கோத்தா அரசைப் பாராட்டினார்கள். அந்த திரிகளில் "இலங்கை இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பதாக" போலிச் செய்திகளைப் பரப்பி நீங்கள் "விஞ்ஞான மணி" போல வலம் வந்தது நினைவிருக்கிறது பெருமாள்!
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஏன் அழைக்கக் கூடாது? மலையகத் தமிழர் என்பது ஒரு தாழ்வான பெயர் என்று இருந்தால் தான் அப்படி அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். அது அவர்கள் பிறந்து வாழ்ந்த பிரதேசம் என்ற அர்த்தத்தில் சொன்னால் தவறு அதில் இல்லையே? வெளிநாட்டில் வளரும் எங்கள் அடுத்த சந்ததியை "பிரெஞ்சுக் காரன், ஜேர்மனியன், அமெரிக்கன் என்ற" தேசிய அடையாளங்களினால் அழைக்கலாம். அதே வேளை ஆசிய, தென்னாசிய, (சில சமயம்) தமிழ் என்ற வம்சாவளியைக் குறிப்பிட்டும் அடையாளப் படுத்துகிறார்கள் அல்லவா? 🤣 ஓம்.."அங்கே பார்! மேலே பார்! கீழே பார்!.. உரையாடலுக்கு மையமான கருத்தை மட்டும் பார்க்காதே! " இந்த ட்ராபிக் கான்ஸ்ரபிள் வேலையை முன்னர் தமிழக அரசியல் திரிகளில் மட்டும் பார்த்தோம், இப்போது எல்லா திரிகளிலும் இந்த வேலையைச் செய்வோர் இருக்கிறார்கள் போல😎!
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
👇 இதற்கு பதில் இருக்காதென ஊகிக்கிறேன்? வைத்துக் கொண்டு வஞ்சகம் செய்யும் ஆள் அல்ல நீங்கள், எனவே போய் ஓரமாக அமருங்கள்👏!
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
நீங்கள் குறிப்பிட்டபடியே மாங்காய் பறிக்க இயலாமல் தான் போயிற்று சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும். ஆனால், இது வரை மாங்காய் பறிக்கும் திசை நோக்கி ஓர் அங்குலமாவது நகர்ந்த இன்னொரு தமிழ் அரசியல்வாதியைச் சுட்டிக் காட்டுங்கள். தீர்வை விடுங்கள் "இனப்படுகொலை நடந்ததை நிறுவ இயலாது" என்று சுமந்திரன் சொன்னதை "சிங்கள ஆதரவுச் சதி" என்று பேசிய சட்ட தமிழ் நிபுணர்களும், முன்னாள் நீதிவான்களும், தேர்தல் கால காளான்ககளாக முளைக்கும் ஜனாதிபதி சட்டத்தரணிகளும் ஏத்தனை வழக்குகளை இனப்படுகொலை என்று நிறுவும் நோக்கில் போட்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சர்வ தேசத்தை விடுங்கள், உள்ளூர் நீதிமன்றிலாவது எத்தனை வழக்குகளைப் போட முயன்றிருக்கிறார்கள் என்றாவது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் எடுத்து விடுங்கள், தெரியா விட்டால் குறைந்தது உப்புச் சப்பில்லாத அலட்டல்களையாவது எழுதாமல் விடுங்கள்! (முகமூடி போடாமல் நிஜப் படம் போட்டு நீங்கள் யாழில் எழுதுவதாக இன்று தான் நான் அறிகிறேன்😇!)
-
வாழைப்பூ வடை
இது எங்கள் தமிழ் ஆட்களிடம் தனித்துவமாக இருக்கும் கிரகிப்புக் குறைபாடோ தெரியவில்லை. மருத்துவர்கள் "வாழைத் தண்டிலும் பூவிலும் நிறைய நார்த்தன்மை இருக்கிறது, எனவே கிளைசீமிக் இண்டெக்ஸ்" குறைவு, அதனால் சாப்பிட்டாலும் சுகர் ஏறாது" என்று எழுதினால், வாசிப்போர் "வாழைத்தண்டு, வாழைப்பூ சுகர் வருத்தத்தைக் குணப் படுத்தும் மருந்து" என்று பெருப்பித்து விளங்கிக் கொள்கிறார்கள்! சுகர் வருத்தத்திற்கான மருந்து என்பது இன்சுலின் சுரப்பையோ அல்லது சுரக்கும் இன்சுலின் தொழில்பாட்டையோ அதிகரிக்கும் வேலையைச் செய்தால் மட்டுமே அது சுகர் வருத்தத்திற்கான மருந்து. தற்போதைக்கு மெற்போமின் போன்ற ஆங்கில மருந்துகள் மட்டும் தான் இந்த வேலையைச் செய்கின்றன. வேறெந்த மந்திர மாயமும் நாட்டு வைத்தியமும் இந்த வேலையைச் செய்வதாக ஆதாரங்கள் இல்லை! இந்த கிரகிப்புக் குறைபாட்டை வேறு பல வடிவங்களிலும் காண்கிறேன். அண்மையில் ஒரு நண்பர் தான் வொட்கா குடிக்க ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார். "நீங்கள் அல்கஹோல் குடிப்பதில்லையே, இப்போது புதிதாக ஆரம்பித்திருக்கிறீர்களா?" என்று கேட்ட போது "வொட்கா குடித்தால் இரத்த சுகர் ஏறாது என்பதால் குடிக்கிறேன்" என்றார்😂. நடந்தது என்னவென்றால், "உடலில் சுகரை ஏற்றாமல் எந்த மதுபானத்தைக் குடிக்கலாம் டொக்ரர்?" என்று எங்கள் தமிழ் நோயாளிகள் கேட்கும் போது சில டொக்ரர் மார் "வொட்காவில் சுகர் இல்லை, எனவே கொஞ்சம் குடிக்கலாம்" என்று பதில் சொல்கிறார்கள். இதனைத் தான் "வொட்கா குடித்தால் சுகர் ஏறாது" என சிலர் விளங்கிக் கொண்டிருப்பதாகத்தெரிகிறது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மேல் முகநூல் பதிவில் போய் பின்னூட்டங்களைப் பார்த்தால், கொண்டையை மறைக்கவும் முடியாமல், வெளிக்காட்டவும் முடியாமல் சில யாழ்ப்பாணத் தமிழ் பதிவர்கள் படும் பாடு சிரிப்பை வரவழைக்கிறது😂. எதற்கும் யாழ் களத்தில் இருக்கும் "குறுந்" தமிழ் தேசியர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்! அனேகமாகக் கள்ள மௌனம் தான்! NB: சுமந்திரனின் பெயரைக் கேட்டவுடன் தூக்கம் கலைக்கும் இரண்டு உறவுகளையும் கூட இங்காலப் பக்கம் காணவில்லை😎!
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
நீங்கள் குறிப்பிடும் "பின் கதவால் வெளியேறிய" சம்பவம் முகநூல் ஊடகங்களிலும், தமிழ் வின் எனும் ரொய்லெற் ஊடகத்திலும் வந்த விபரிப்புகள். உண்மையில் நூலகத்தின் உள்ளே விக்கியர், சுமந்திரன் உட்பட்டவர்களுடன் கமெரூனுடன் சந்திப்பு நடந்தது. அனந்திக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிருக்கவில்லை. எனவே வெளியே நின்று ("ஒரு பெண்ணாக இருந்த போதும்"😂- உங்கள் வரிகளில்) ஓடிப் போய் மகஜர் கொடுத்தார். நான் இணைத்த படத்தில் யார் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் கடந்து போய் விட்டு முகனூல் அலட்டல்களை உண்மைச் செய்திகள் போல இன்னும் தூக்கித் திரிகிறீர்கள்! உங்களுடைய இந்த உண்மை காண விரும்பாத கண்மூடித் தனத்தைத் தான் சுட்டிக் காட்ட விளைகிறேன். உங்களுக்குப் பச்சை போட்டவருக்கும் இதே "கண் மூடிப் பாசம்" சுமந்திரன், சாணக்கியன் மேல் இருக்கிறது. இதை உங்கள் பாரதக் கருத்துகளை வாசிப்போர் அறிய வைப்பதே என் நோக்கம்! உங்களுக்கெல்லாம் ஆதாரம் தேடி நிரூபித்து கண் திறக்க வைக்கும் "நாய் வால் நிமிர்த்தும்" வேலைக்கு என்னிடம் நேரமில்லை😎!
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
உக்ரைனில் விளைந்த தானியங்களை ஏற்றுமதி செய்ய விடாமல் தாக்குதல் செய்து உலக தானிய விலையை வட்டுக்குள் ஏற்றி விட்ட பின்னர், அந்த விலையேற்றத்தைச் சமாளிக்க இயலாத சில ஆபிரிக்க நாடுகளுக்கு கொஞ்சம் கிள்ளிக் கொடுத்தாராம் என்கிறது இந்தச் செய்தி! #தர்மதுரை புரின்😂! ReutersPutin promises African leaders free grain despite 'hypocr...Russian President Vladimir Putin on Thursday told African leaders he would gift them tens of thousands of tons of grain despite Western sanctions, which he said made it harder for Moscow to export its... "When taking out of the market millions and millions of tonnes of grains, it is clear that ... will lead to higher prices," U.N. Secretary-General Guterres told reporters. "So it's not with a handful of donations to some countries that we correct this dramatic impact that affects everybody, everywhere."
-
ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
மைதான் புரட்சி என்ற மக்கள் புரட்சி மூலம் "ரஷ்ய சார்பு ஜனாதிபதியை பதவி நீக்கினார்கள்" என்று முறையிட்டபடியே, ஒரு போர்க்கால உக்ரைன் ஜனாதிபதியை துரத்த வேண்டுமென்றும் சொல்கிறீர்கள்! flip flop கொள்கை😎?
-
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!
எங்கப்பா எங்கள் "அதிரடி, தடாலடி" யூ ரியூபர்கள்? "கட்டுநாயக்காவில் அதிரடியாக இறங்கிய இல்லியூஷின் 76 விமானம்! உண்மை நிலவரம் என்ன?" என்று யூ ரியூப் போட மாட்டார்களாமா😂?
-
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்
18 வயது வரை இலவசக் கல்வி தருவது, தெருக் கூட்டுவது, கான் கழுவுவது, தண்ணீர், மின்சாரம் வினியோகிப்பது போன்ற விடயங்களோடு அரசாங்கங்கள் மக்கள் சமூக ஊடகங்களில் endless scroll செய்யாமலிருக்கக் காவலும் இருக்க வேண்டுமென்கிறீர்களா😂? எப்படி இதைச் செய்யலாம்? இலங்கையில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அல்கோரிதம் வழியாக சமூகவலை ஊடகங்கள் பரப்பும் முட்டாள் தனங்களைக் கட்டுப் படுத்த இயலாது. Information is your responsibility என்பதன் படி பாவனையாளர்களே தங்களை உசாராக வைத்துக் கொள்ள வேண்டியது தான் வழி. இந்தச் சுய பொறுப்பை, வேறு யாரிடமும் ஒப்படைத்து விட்டு endless scroll செய்து கொண்டிருக்க முடியாது என நினைக்கிறேன்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இது தேர்தலில் தோற்று (சில சமயங்களில் தோற்றபின்னர் "பின் கதவால்" - அ+து தேசியப் பட்டியலில் உள்ளே வந்த) யோசப் பரராஜசிங்கம், கஜேந்திரன், சசிகலா ரவிராஜ், மாம்பழம் கட்சியின் தலைவர்போன்றோருக்கும் பொருந்தும் என்கிறீர்கள்😂?
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
சாத்தான், பெருமாள் போன்ற உறவுகளைப் பொறுத்த வரை, ஆதாரம் தேடிக் கொடுக்க நான் நேரம் செலவழித்துப் பயனில்லை. மேலே ஏனையோர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், யாழிலேயே பகிரப் பட்ட செய்திகள் இருக்கின்றன. 2010 இல் இருந்து ஹன்சாட்டில் பதிவாக இருக்கும் உரைகள் இருக்கின்றன. அவர்களே தங்களுக்குத் தேவையானதைத் தேடிக் கொள்ளட்டும். ஒரு வர்ணக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்த்தால் "புலிகள் பயங்கரவாதிகள்" முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புப் செய்யப் பட்டார்கள்" "இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை" என இன்னும் பல வாக்கியங்களும் தட்டுப் படும். ஆனால், கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி நின்று முழு உரையையும், முழுப் பேட்டியையும் பார்க்கும் எவருக்கும் பின்னணியை உருவி விட்டு முகனூல் போராளிகள் தூக்கித் திரியும் துரும்புகள் இவை என்பது புரியும்!
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
"சிம்ம சொப்பனமாக" பிரபாகரனைத் தவிர யாரும் இருக்கவில்லை. குறைந்த பட்சம் தகவல் கேட்டு வருவோரிடம் பேசுவதற்காகவாவது ஒருவர் தேவையல்லவா? இப்போது யார் இருக்கிறார்கள்? யாரையாவது சுமந்திரன் போல சென்று சந்திக்க, பேச முனையும் பா.உ தற்போது யார் இருக்கிறார்கள்? உங்களைப் போல "துடிப்பான" யாராவது இனி முன்வந்தால் தான் தமிழர்களுக்கு மீட்சி🤐!