Jump to content

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5643
  • Joined

  • Last visited

  • Days Won

    67

Everything posted by Justin

  1. தமிழ் நாட்டு மீனவர்களும் சரி, இலங்கை மீனவர்களும் சரி சட்டத்தைக் கடைப் பிடிப்பதில் தான் பிரச்சினை. இதில் தமிழ் நாட்டு மீனவர்களால் எல்லை மீறல்கள் இடம் பெறுவது அதிகமாக இருப்பதன் காரணம், நீண்ட தூரம் சென்று மீன்பிடிக்கக் கூடிய சக்தி வாய்ந்த படகுகள் அவர்களிடம் இருக்கின்றன. இலங்கை மீனவர்களிடம் இத்தகைய படகுகள் குறைவு. எனவே, ஒரு பாரிய பல அசம நிலையில், இலங்கை மீனவர்களுக்கு அதிகம் பாதிப்பு, வாழ்வாதார இழப்பு. கனடாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையே கூட வட கிழக்கு எல்லைப் பகுதியில், நீர் எல்லைகள் அவ்வளவு வரையறுக்கப் படாத பிரதேசங்களில் மீன்பிடியில் பிணக்குகள் இருக்கின்றன. ஆனால், இது grey zones எனப்படும் வரையறை செய்யப் படாத பிரதேசங்கள் சம்பந்தப் பட்டது. இலங்கை, இந்திய எல்லையில் இத்தகைய grey zones - வரையறையற்ற பகுதிகள் இருக்கின்றனவா?
  2. ****** ஆனால், மரம் நடுகிற உங்கள் பணி பாராட்டுக்குரியது, வாழ்த்துக்கள்!
  3. ரிக் ரொக் சாதனைகளில் முதன்மையானது இப்படிப் பட்ட லூஸ் கூட்டங்களை ஆயிரக் கணக்கி உருவாக்கியது தான்😂! மற்றபடி, இது பார்வைக்காக ஒரு அரங்கேற்றப் பட்ட காட்சி. குட்டி யானை, 2 வயதுக்குள் இருக்கலாம், காப்பகத்தில் மரத்தில் கட்டப் பட்டிருக்கிறது. இப்படி கட்டப் பட்டிருக்கும் போது, இயற்கையாகவே தலையை ஆட்டியபடி தான் குட்டி யானைகள் நிற்கும். வளர்ந்த யானையாக இருந்திருந்தால் தும்பிக்கையால் தூக்கி, தரையில் எறிந்து விட்டு, முன்னங்காலால் ஒரு 1000 கிலோகிராம் நிறையோடு மிதித்திருக்கும்!
  4. ஒரு மனிதனுடைய பெறுமதி (value) என்பது அவனது குடும்பம் சார்ந்து இருக்கலாம், இனம் சார்ந்து இருக்கலாம், இதையெல்லாம் தாண்டி உலகம் சார்ந்தும் இருக்கலாம். இங்கே "இனத்திற்கு என்ன செய்தார் (கொல்லப் படாமலிருக்க என்ன செய்தார்?)" என்று நக்கலாகக் கேள்வி கேட்ட உறவுகளுக்காக கீழே இணைப்பு. https://hrp.law.harvard.edu/fellowships/visiting-fellowships/neelan-tiruchelvam-memorial-fellowship/ ஹார்வார்ட் சட்டக் கல்லூரியின் மனித உரிமைக் கழகம் இன்னும் நீலன் திருச்செல்வம் புலமைப் பரிசிலை அவர் நினைவாக வழங்கி வருகிறது. அந்த அமைப்பின் தளத்தில் இருக்கும் நீலன் பற்றிய விபரிப்பு: Neelan Tiruchelvam (1944-1999) was a Sri Lankan peace and human rights activist, lawyer, scholar and politician. Recognized nationally and internationally for his unyielding commitment to social justice and his efforts to end the Sri Lankan Civil War, Neelan Tiruchelvam was also a pioneering scholar of constitutional theory and minority rights. His illustrious career encompassed stations as Member of the Sri Lankan Parliament, Founding Director of the International Centre for Ethnic Studies, and Chair of the Council of Minority Rights Group International. One month before he was scheduled to join Harvard Law School as a Visiting Professor, Tiruchelvam was assassinated in Sri Lanka on July 29, 1999. During his life, Tiruchelvam had built deep connections with Harvard Law School, where he obtained his LL.M. in 1970 and completed his S.J.D. in 1973. He returned to Cambridge in 1986 as one of the first Visiting Fellows at the Human Rights Program (HRP), which had been created just two years before. While at HRP, Tiruchelvam delivered the Edward A. Smith Lecture about human rights in the context of ethnic conflict in Sri Lanka. On September 17, 1999, HRP organized a memorial service for Neelan Tiruchelvam at Harvard Law School. The memorial service proceedings are available on the HRP website.
  5. அமெரிக்காவின் மின்சார விநியோக வலைப்பின்னல், தொலை தொடர்பு போன்றவை உள்ளூர் நிறுவனங்களில் கைகளில் இருப்பது நல்லது. மருத்துவமனைகளின் தரவுகளைக் கூட பணயமாக ஹேக் செய்து திருடி வைத்துக் கொண்டு பணம் கறக்கும் ransomware கிரிமினல்கள் சீனா, வடகொரியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருக்கிறார்கள். அதிசயமான விடயம்: இந்த மூன்று நாடுகளிலும் தலைவருக்கெதிராக ஒரு வசனம் சொன்னாலே, தேடி வந்து பிடித்துப் போய் காணாமலாக்கி விடும் சட்ட இறுக்கம் இருக்கிறது. ஆனால், சைபர் கிருமினல்கள் சுந்ததிரமாக வாழ்வதும் இந்த நாடுகளில் தான். இது எதைக் காட்டுகிறது😂?
  6. மெட்வெடேவின் கூற்று, ரஷ்யா தற்போது பரப்பும் வரலாற்று மறுப்பு, திரிப்பு ஆகியவற்றின் அப்பட்டமான வெளிப்பாடு எனக் கருதுகிறேன். ரஷ்யாவின் பிறப்பிடம், தொட்டில் உக்ரைன் என்பது சரி. ஆனால், லெம்பேர்க் பிரதேசம் என்பது உக்ரைனின் கிழக்குப் பிரதேசங்கள் போலந்து, அவுஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளின் ஆட்சிகளிடையே பந்தாடப் பட்ட போது இருந்த பெயர். அந்த 1900 இல் இருந்து 1991 வரையான பகுதியில் நிகழ்ந்தவை எல்லாம் "நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" என்பது போல புரின் அணிக்கு மறந்து விட்டது😎. 1991 இல் சோவியத் ஒன்றியம் உடைந்த போது, இறுதி வரை மூன்று சோவியத் குடியரசுகள் ஒரு கூட்டமைப்பில் சேர்ந்து தொடர்வது பற்றி இறுதி வரைப் பேச்சு வார்த்தை நடத்தின: பெலாரஸ், உக்ரைன், கசாக்ஸ்தான், இவை தான் அந்த மூன்றும். இறுதியில், ஓரிரு நாட்களில் உக்ரைன் குடியரசின் மக்களவையில் கம்யூனிஸ்ட்டுகளே பிரிந்து போக விரும்பி வாக்களித்த போது உக்ரைன் பிரிந்து போனது, ரஷ்யாவின் யெல்ட்சின் அதனை ஆதரித்தார். உக்ரைன் பிரிந்ததும், கசாக்ஸ்தான், பெலாரஸ் எனபனவும் பிரிந்து போக முடிவெடுத்தன. இதன் பின்னர், சோவியத்தின் கடன்களை யார் கட்டுவது, இந்த நாடுகளின் எல்லைகள், சோவியத் அணுவாயுதங்களை என்ன செய்வது ஆகிய விடயங்களில் பேச்சு வாரத்தைகளும், ஒப்பந்தங்களும் ஏற்பட்டன. ரஷ்ய சமஷ்டியின் யெல்ட்சின் இதிலெல்லாம் பங்காளியாக இருந்திருக்கிறார் (கொர்பச்சேவின் பதவி நிலை, சோவியத் ஒன்றியத்தின் சுப்ரீம் சோவியத் கலைக்கப் பட்டவுடன் சக்தியிழந்தைமையால் யெல்ட்சின் தான் ரஷ்யாவின் அதிகாரமிக்க தலைவராக இருந்தார்). இதையெல்லாம் வரலாற்று ஆவணங்களில் வாசித்தறிய பொறுமையில்லாத மக்களை, புரின் அணி நன்றாக ஏமாற்றுகிறார்கள்.
  7. இதை நீங்கள் உங்களுடைய தகவல் மூலத்தை இணைப்பதன் மூலமே நிரூபீக்கலாமென நினைக்கிறேன்? ஏன் தயக்கம்😎?
  8. என்ன மீண்டும் புதிய தியரியை வைத்து முதல் பக்கத்தில் இருந்து துவங்குவீங்கள் போல இருக்கு😂? ஐலண்ட் சொல்வது போல புலிகள் நடந்திருக்கா விட்டால் ஆனந்தராஜா, அமீர், யோகேஸ்வரன், நீலன் முதல் இறுதியாக இராஜதுரை வரை எப்படிக் கொலையானார்கள்?
  9. 🤣உண்மை வரலாறு? எது, வசி எழுதியதா?? ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். யாழுக்கு வெளியே , ஒரு 10 பேரைத் தெரிவு செய்து இந்த "உண்மை வரலாற்றை" ஒரு தடவை சொல்லிப் பாருங்கள். உங்களை எப்படிப் பார்வை பார்க்கிறார்கள் என்று குறித்துக் கொண்டு இங்கே வந்து சொல்லுங்கள். நீங்கள் கிட்டத் தட்ட ஒரு பிரம்மை (delusional) நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். எதுக்காக? ஒரு "மாசில்லாத அமைப்பாக புலிகள் இருந்தனர்" என்று காட்டும் ஒரு பயனற்ற முயற்சிக்காக. இந்தப் பிரம்மையை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டுமென்கிறீர்கள்! அனேகமாக, புலிகளின் நல்ல பக்கத்தைக் கூட அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை, இந்தப் பிரம்மையினால் ஏற்படப் போகிறது!
  10. சிரிப்பு நல்லது தான், அதற்காக நீங்கள் standup comedian ஆக நடந்து கொண்டிருப்பது இன்னொருவரின் மரணவீட்டில். இது உலகின் எந்த பண்பாட்டிலும் இல்லாத அருவருப்புத் தரும் ஒன்று! "ஒன்றாகப் பயணிப்போம்" என்று நேற்று அறிக்கை விட்ட விசுகர், உங்கள் கொமெடியை சீரியசாக மேற்கோள் காட்டியிருப்பதைக் கவனியுங்கள்😎! எனவே தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் deadpan comedy script ஐ! எங்களுக்கு சிரிப்பு, விசுகர் போன்றோருக்கு பிடித்துக் கொள்ள ஒரு கற்பனைக் கயிறு! ஒரு கல்லில் இரு மாங்காய்கள்!😂
  11. நானும் இதை மிக்க ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ன நடக்குமென்று. யாழ்ப்பாண பல்கலைக்கு, பரமேஸ்வரன் கோவிலில் தீபமேற்றி திருநீறு அணியாத ஒருவர் துணைவேந்தராக வர முடியாது. சில ஆண்டுகள் முன்பு, பேராசிரியர் சாம் தியாகலிங்கம் என்ற மிகத் திறமையான அமெரிக்காவின் ஹொப்கின்ஸ் பல்கலைப் பேராசிரியர் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த போது, "அவர் தன் திணைக்களத் தலைவரின் அத்தாட்சியைச் சமர்ப்பிக்கவில்லை" என்று விண்ணப்பத்தை நிராகரித்தார்களாம் -அமெரிக்கப் பல்கலையில் திணைக்களத் தலைவர் பதவியின் தன்மை பற்றித் தெரியாத பன்னாடைகள் தேர்வுக் குழுவில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி இது. இப்படி சக தமிழனுக்கே பாகுபாடு காட்டி ஆப்பு வைத்தால் சிங்களவன் வந்து ஆப்பு வைக்கும் போது ரசிக்கத் தான் முடிகிறது!
  12. ஒரு கைக்குழந்தைக்குத் தந்தை என்பதால், பிரபாகரனைக் கொல்ல முயன்றவரையே கொல்லாமல் மன்னித்து விட்டவர்கள், ஒரு தீர்வுத் திட்டத்திற்காக நீலனைக் கொன்றிருப்பார்களா என்று "ஒரு கதை" மூலம் கேட்கிறார்! உங்களுக்கு சிரிப்பூட்டினாலும் இனி இது தான் கதையாடல்-narrative😂: "புலிகள் இருந்த போதே அங்கே பல்வேறு குழுக்கள் தற்கொலைப் படையோடு சமகாலத்தில் இருந்திருக்கின்றன. அவை மொசாட், றோ, சி.ஐ.ஏ, கே.ஜி.பி (ஏன், பின் வீட்டு பொன்னம்மாக்கா ரீம்😎) என்று பல்வேறு அமைப்புகள் சார்ந்து கொலைகள் செய்திருக்கிறார்கள்! எல்லாம் அநியாயத்திற்கு புலிகள் தலையில் கட்டப் பட்டன! (விளங்குதா?? அவர்களும் இனி எந்த மூலையில் தான் போய் ஒழிப்பது, பாவம் விடுங்கோ!)
  13. வணக்கம் விசுகர், இதற்கு நானும் பதில் தரலாமா? முதலில், கடந்த காலத் தவறுகளை 10 பக்கத்திற்குப் பேச வேண்டிய தேவையை உங்கள் மேற்கருத்தே தோற்றுவிக்கிறது என நினைக்கிறேன். இங்கே எழுதும், வாசகர்களாக இருக்கும் மிகப்பெரும்பாலானோர் தாயகத்தில் பிறந்து வளர்ந்து அன்றாடச் செய்திகளை உள்ளூர் பத்திரிகைகளிலும், சில சம்பவங்களில் ஈடுபட்டவர்களோடு உறவாடியும் தகவல் அறிந்தவர்கள். இவர்களையெல்லாம் முட்டாள்களாக மாற்றும் வகையில் "தற்கொலைத் தாக்குதல்களை புலிகளை விட வேறு யாரோ செய்து புலிகளின் தலையில் போட்டிருக்கலாம்" என்று நீங்கள் ஒரு புது திசையில் கதையை ஆரம்பிப்பது இது தொடர்ந்து பேசப்படவே வழி வகுக்கும். இத்தகைய ஆதாரங்களை தலைகீழாக மாற்றி விட்டு, கற்பனைக் கதையை வைத்து சில தவறுகளை மறைக்கும் நிலைக்கு நீங்கள் வந்திருப்பது கவலைக்குரியது. அப்படியானால் என்ன தான் தவறுகளைப் பேசாமல் விட வழி? முதலில், புலிகளோ எந்த ஆயுத அமைப்போ தவறுகளே விடாதோர் என்ற கற்பிதத்தை நம்புவதையும், பரப்புவதையும் நாம் நிறுத்த வேண்டும். தவறுகள் - நீலன் கொலை போன்றவை- நடந்தன. இதை ஏற்றுக் கொண்டு ஒரு வசனத்தில் முடித்து விட்டால் இது மீள மீள பேசப்படுவது குறையும். இல்லா விட்டால் இரண்டு தீமைகள் காத்திருக்கின்றன: 1. நியாயப் படுத்தப் பட்ட அரசியல் கொலைகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, தற்போது தீவிரமாக வெறுக்கப் படும் தமிழ் அரசியல்வாதிகள் மீது வன்முறை ஏவப்படலாம். இதை செய்ய பலர் தேவையில்லை, உசுப்பேற்றப் பட்ட ஒரு முட்டாப்பீசே ஒரு கொலையைச் செய்யப் போதும். 2. நமக்குள் பிரிவினைகள் அதிகமாகும். என்னைப் பொறுத்தவரை, அரசியல் படுகொலைகளை தேசிய உணர்வோடு ஏற்றுக் கொள்ளும், பெருமை கொள்ளும் ஒரு தமிழ் அணியோடு எந்த திட்டத்திலும் சேர்ந்து நிற்க மாட்டேன். என்னைப் போன்ற பல ஆயிரம் புல, தாயக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு விளங்குகிறது. எனவே, முன்னோக்கிப் பாருங்கள், தீமைகளை எப்படிக் குறைப்பதென்று யோசியுங்கள். பழம் பெருமை, பக்தி, சதிக்கதைகள் இவற்றால் என்ன நன்மைகள் விளையும் என உங்களையே கேட்டுப் பதில் காணுங்கள்🙏.
  14. இந்த மன்னார் மனித புதைகுழி எச்சங்கள் காபன் டேற்றிங் செய்யப் பட்ட போது சங்கிலிய மன்னன் கொலை செய்த மதம் மாறிய தமிழர்கள் என்பதற்கான சான்றுகள் வெளியாகின. விஞ்ஞானமா திரித்த வரலாறா என்ற விவாதத்தில், திரித்த வரலாற்றை சில உறவுகள் தழுவிக் கொண்ட ஞாபகம் இருக்கிறது.
  15. 😎ஓ யெஸ்..முன்னுக்குப் பின் முரணாக, தங்களுக்கே சிரிப்பு வரவைக்கும் விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார்கள்..இவர்களை வெளியே இருந்து தான் ஒருவர் "மட்டந் தட்ட" வேணும்!
  16. 😂😂🤣அட்ரா சக்கை! அப்ப விசுகர் ஐரோப்பிய முறைப்படி "உரிய படிமுறைப்படி-due process" போகும் ஆள் போல! அந்த உரிய படிமுறை புலிகளுக்கு மட்டும் தான் கிடைக்க வேணுமோ அல்லது புலிகள் தண்டனை கொடுத்த அரசியல்வாதிகளுக்கும் தேவையோ😎? உதாரணமாக, நீலன் மீது புலிகள் வைத்த குற்றப் பத்திரிகை எங்கே? எப்படி அவர் விசாரிக்கப் பட்டார்? எங்கே due process? பி.கு: 10 பக்கம் வந்த பின்னர் திடீரென்று குத்துக் கரணமடித்து நீலனைப் புலிகள் கொல்லவில்லை என்றிருக்கிறீர்கள், அப்படியே கந்தயரையும் ரியுனை மாத்தச் சொல்லுங்கோ! சேச்சே நினைத்திருக்க மாட்டார்- நம்புகிறார் அப்படி😂! விசுகரோடான அரசியல் கொலை பற்றிய உரையாடல்கள் வருடக் கணக்காக இப்படித் தான் முடிகின்றன. முதலில் வேள்விக்காக கொலை, பின்னர் அங்க இங்க ஓட்டம், இது இறுதிப் பாகம்: புலிகள் செய்யவில்லை! இந்த ஜோக் அமீர் யோகேஸ்வரன் கொலை பற்றிய திரியிலும் நடந்தது! இனி இந்த திரி "சிரிக்க சிறக்க" மாதிரி இருக்கும்🤣!
  17. ஒரு அரசியல் கொலை பற்றிப் பேசாவிட்டால் கொலைக்கு ஆதரவு என்கிறீர்களா? இதுவும் உங்கட "வில்லாய் வளைஞ்சு குத்தி முறிந்த" கந்தையா தியரிகளில் ஒன்றா😂? இங்கே யாராவது இந்தக் கொலைகளைப் பற்றிப் பேசப் பட்ட திரிகளில், இந்த பலியான நபர்கள் கொல்லப் படவேண்டிய காரணங்களை அடுக்கி வாதிட்டுக் கண்டிருக்கிறீர்களா? நான் யாழில் உறுப்பினராக இருக்கும் கடந்த 17 வருடங்களில் அப்படி நடந்து காணவில்லை. ஏனென்று நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு அரசியல் கொலைக்காளானவரின் கொலைக்கு நியாயம் கற்பிப்பது இன்னும் கொலைகளை ஊக்குவிக்கும் செயல்பாடு. இப்படியான நிராயுத பாணிகளின் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்காமல் ஒருவரைத் தடுப்பது மனிதத் தன்மை. இதில் அரசியல் சார்பு/எதிர்ப்பு எதுவும் அவசியமில்லை. உதாரணமாக நீலனை எடுங்கள், அவரது மக்கள், பேரப் பிள்ளைகள், சகோதரங்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர் அநியாயமாகக் கொல்லப் பட்டார் என்று என்னைப் போலவே அவர்களும் நம்புகிறார்கள். இங்கே உங்களைப் போன்றோர் கொலை செய்தவனுக்கே மரண தண்டனை வழங்காத ஐரோப்பிய நாட்டில் இருந்து கொண்டு, அவர் கொல்லப் பட்டதை எள்ளலோடு நியாயப் படுத்தும் போது, நீலனின் உறவுகளின் காயத்தில் உப்புத் தடவுகிறீர்கள் என்ற குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாமலா இருக்கிறீர்கள்?
  18. சரி, 2009 வரையான காலத்தில் இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய வேறு அமைப்புகள், நபர்கள் யாரென்று சொல்லி விடுங்கள். இது பலருக்கு புதினமாக இருக்கும்😎, ஆனால் புதினம் பார்க்கத் தானே யாழுக்கு வாசகர்கள் வாறவை? யார் அது வேற தற்கொலை தாரிகள்?
  19. இல்லை. புலிகள் இல்லாமல் போன பின்னர் நடந்த ஈஸ்ரர் குண்டு வெடிப்பு புலிகள் அல்ல! அப்ப சீரியசாக நான் பகிடிக்குச் சொன்னதை வைத்து ஹமாஸ், ஹிஸ்புல்லா தான் நீலனைக் கொன்றனர் என்கிறீர்களா? பிறகேன், மேல ரண்டு ஜட்ஜ் மார் நீண்ட தீர்ப்பெழுதி மெனக்கெட்டவையாம்? இப்படி கொமெடியனாக நீங்கள் மாறுவதைப் பார்க்க எனக்குக் கூசுது!
  20. எதிர்பார்த்த திசையில் தான் போகுது உரையாடல்: "நீலனை நாங்க தான் கொன்றோம், இவை தான் காரணங்கள்" என்றார்கள் - எல்லாம் மொக்கைக் காரணங்கள் (இதே காரணங்களுக்காக அன்ரன் பாலசிங்கத்தையும் நாமளே சாக்கோல்லியிருக்கோணும், சீரியசாக!😂) காரணம் சரியில்லை என்றவுடன், "புலிகள் உரிமை கோரினார்களா? எப்படி நிரூபிப்பீர்கள்? என்கிறார்கள். நான் நினைக்கிறேன் நீலன் விடயத்தில் ஹமாஸ் அல்லது ஹிஸ்புல்லா செய்திருக்கலாமென?? ஏனெனில் அவர்களிடம் தான் தற்கொலைப் படை இருந்தது?
  21. இந்தா, இரண்டாவது ஜட்ஜும் வந்து concurring decision எழுதியாச்சு😂! கந்தையராவது வாழ்ந்து கற்றவர்..இவரோ மடியில இருந்து கதை கேட்டு வரலாறும் சட்டமும் கற்ற "ஜட்ஜ் ஐயா"! நான் நினைக்கிறன் இனி தமிழர் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டம், ஐடியாக்கள் யாராவது முன் வைத்தால், அவர்கள் தங்கள் சொந்தக் காசைப் போட்டாவது அதை நடைமுறைப் படுத்திப் போடோணும்! இல்லையோ பொத்திக் கொண்டிருக்கோணும். இரண்டுக்குமிடையில மாட்டிக் கொண்டால் "kill first, explain later" என்று எங்கள் அரைகுறை ஜட்ஜ் மார் தீர்ப்பெழுதுவீனம்😎!
  22. இந்த ஆய்வில் - ஆய்வைச் செய்தவர்களே ஒப்புக் கொண்டிருப்பது போல- பல குறைபாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பதிவு செய்யப் பட்ட பக்க விளைவுகளை எடுத்து ஒன்றாகக் கூட்டி இந்த 100 மில்லியன் தரவுப் புள்ளிகளை எடுத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட நாடுகளில், மக்களினங்களில் இருக்கக் கூடிய மாறிகள், விகாரங்கள், பழக்க வழக்கங்கள், என்பவற்றால் ஏற்படும் விளைவுகள் எவையும் கணக்கிலெடுக்கப் படவில்லை.
  23. உங்களுடைய இந்த கொல்லப் பட்டவரின் மீது, எள்ளலுடன் குற்றத்தைச் சுமத்தி, கொலை செய்தவர்களின் மீது ஒரு மாசும் படாமல் பாதுகாக்கும் அலட்சிய "அலட்டல்" இருக்கிறதே😂? இது தான் எங்கள் தலைமுறை தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்பது நல்லதென்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது எனக்கு. இப்படியான அறிவலட்சியத்தோடும், மனிதாபிமான உணர்வும் இல்லாமல் இருக்கும் தலைமுறையின் கைகளில் தமிழர்களின் ஆட்சி கிடைக்காமல் இருப்பது தமிழர்களுக்கு நல்லது! சுத்தமான அடுத்த தலைமுறைக்கு அது கிடைத்தால் கிடைத்து விட்டுப் போகட்டும், அவர்களை நஞ்சூட்டாமல் காத்தால் போதும்!
  24. நன்றி. இது போன்ற மூலங்களில் தகவல்களைத் தேடியறிய இயலாமல், நன்னியர் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என்பதை அவரது முன்னைய இரு கருத்துக்கள் மூலம் புரிந்து கொண்டதால் நான் பதிலளித்து மெனக்கெடவில்லை. இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கும் தீவிர தமிழ் தேசியர்களின் "மண்ணு லாறி" (உபயம்: கோசான்😂) தத்துவத்திற்கும் ஒரு ஒற்றுமையுண்டு: இலங்கை பயங்கரவாத தடை சட்டத்தில், அப்பாவித் தமிழரைப் பிடித்து "No date" அடித்து சிறையில் வைத்து விட்டு, "சந்தேக நபர் குற்றமற்றவர் என்று அவர் தான் நிரூபிக்க வேண்டும்" என்பார்கள். இங்கால தீவிர தமிழ் தேசியர்கள் "புலிகளால் கொல்லப் பட்டவர் கொல்லப் படாமலிருக்க உண்மையில் தகுதியானவரா என்பதை கொல்லப் பட்டவரும் அவருக்கு அஞ்சலி செய்வோரும் தான் நிரூபிக்க வேண்டும்" என்பார்கள். பி.கு: மேலே Justice கந்தையா உங்கள் வாதத்தைக் கேட்ட பின்னர் நீலனுக்கு posthumous தீர்ப்பெழுதியிருக்கிறார் பாருங்கள்😎!
  25. 😂 இப்ப தான் நீங்கள் நித்திரையால் எழும்பி வந்து ஏன் நோண்டுகிறார்கள்? என்ன பயன்? என்று கேட்கிறீர்கள்! இந்த திரியிலும், வேறு சில திரிகளிலும் "மாற்றுக் கொள்கையுடையவர்களைப் போட்டுத் தள்ளுவது ஓகே" என்ற தொனியிலான கருத்துக்கள் வந்த பின்னர் தான் இதை நோண்ட வேண்டிய தேவையே வந்தது. மற்றபடி அடுத்த ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து, இதே தவறுகள் நடக்காமல் நடத்த வேண்டுமென்ற நோக்கமெல்லாம் இங்கே யாருக்கும் இல்லை - ஒரு ஆயுதப் போராட்டம் இனி நடக்காது. ஆனால், புலிகளைச் சிரம் மேல் வைத்திருக்கிறேன், இதயத்தில் வைத்திருக்கிறேன் என்று சொல்வோர் "புலிகள் செய்த அரசியல் படுகொலைகள் - அதுவும் நிராயுத பாணிகளின் படுகொலைகள் கூட- புனிதமானவை" என்று புளகாங்கிதம் அடையும் போது, தற்காலத்திலும் இதே வன்முறை தமிழர்களிடையே அதிகம் திட்டு வங்கும் சுமந்திரன் போன்ற அரசியல் வாதிகளை நோக்கிப் பாயும். ஏற்கனவே "அவர் யோசப் பரராஜசிங்கம் போல வாழ வேணுமெண்டு" பூடகமாகச் சொன்னவர் இங்கே திரிகிறார். இது நடக்கக் கூடாதென்பதே நோண்டலின் நோக்கம். பெரிய நகைச்சுவை என்னவென்றால், ஒரு தவறு நடக்கும் போது ஆத்திரம், கோபம் கொள்ளாதவர்கள், அந்த தவறைப் பேசினால் ஆத்திரம் கொள்கின்றனர்! இத்தகைய கண்மூடித் தனமான பக்தியா அல்லது அரசியல் வன்முறை இல்லாத அடுத்த தலைமுறையா என்றால், இரண்டாவது தான் என் தெரிவு!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.