Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. புத்திசாலிகளான கிம் ரீம் எப்படி மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் பாருங்கள்😂? இப்படியே சிங்களவனும் இறுகப் பூட்டிய வீடாக இலங்கையை வைத்திருந்திருந்தால் தமிழர்களே அங்கே எஞ்சியிருக்காமல் போயிருப்பர்.
  2. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இவை நீங்கள் சரியாகச் சுட்டிக் காட்டியது போல சிறந்த வாழ்க்கைத் தரமோ, நீதி முறைமையோ கொண்ட நாடுகள் அல்ல! ஆனால், இவை எவையுமே ஒரு குண்டு மணியைக் கூட உற்பத்தி செய்ய இயலாமல் வெளிநாடுகளிடம் கையேந்தும் தோல்வியுற்ற நாடுகளும் அல்ல! வட கொரியா கடலுக்குள் விட்டு விளையாடும் வாணங்களுக்கு செலவழிக்கும் தொகையை தன் மக்களுக்கு அடிப்படை உணவு, உடை, சுகாதார வசதிகள் கொடுக்க செலவழிக்க வேண்டும். இலங்கை- அதன் குறைபாடுகள் எல்லாவற்றையும் தாண்டி - தன் மக்களுக்கு இலவசக் கல்வியும், சுகாதாரமும் வெளிநாடுகளிடம் பிச்சையெடுத்தாவது கொடுக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உங்கள் எண்ணம் போல வடகொரிய மொடலில் தனி தமிழர் தேசம் உருவாகியிருக்க வேண்டுமென்றால், அது உருவாகாமல் விட்டது தான் நல்லது!
  3. அந்த நேரமே செயற்கை நுண்ணறிவு வைத்துப் படமெல்லாம் தயாரித்திருக்கிறார்கள் போல! நிஜம் போலவே இருக்குது 👇! https://dbsjeyaraj.com/dbsj/?p=26627 https://www.colombotelegraph.com/index.php/pm-cameron-meets-cm-wigneswaran-in-jaffna/ "....The Prime Minister was received by Mr. Sampanthan, Mr. sumanthiran and Chief Minister Wigneswaran. He said “he was happy that after 1948, he was the first Head of Government to visit Jaffna”. The venue of the meeting was kept under wraps. Discussions took place in the 1st floor of Jaffna public library. The Prime Minister was accompanied by Edward Llewellyn, Chief of Staff to the PM. On their way back from the meeting, Chief Minister noted that the PM’s car was mobbed by the dear ones of those who were missing. There were shouts and sobs and an open expression of grief. The PM’s desire to meet them was being served." இனி உங்கள் முறை: உங்கள் அம்புலிமாமாக் கதைக்கான ஆதாரங்களை இணையுங்கள். யூ ரியூப் அலட்டல் பேர்வழிகள் தான் ஆதாரம் என்றால் இணைத்து மெனக்கெடாதீர்கள்😎!
  4. மேலே வணங்காமுடி சொல்லியிருப்பவையோடு இன்னொரு முக்கியமான விடயத்தையும் கவனிக்க வேண்டும்: குப்பை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல். இதை பள்ளிக் கூடங்களில் அமல் படுத்தி இளையவர்களைப் பயிற்றுவித்தால் எது குப்பை, எது மீள்சுழற்சி செய்யக் கூடிய பொருள் என்பதை அடுத்த 10 ஆண்டுகளில் சமூகம் உணர்ந்து கொள்ளச் செய்யலாம். அது வரை அல்லாட வேண்டியது தான். இந்தக் குப்பைகள் பற்றிய அலட்சிய மனப்பான்மை எங்கள் தமிழ்/தெற்காசிய ஜீன்களில் இருக்கிறதோ என்ற சந்தேகமும் எனக்குண்டு😂. இங்கே அமெரிக்காவில் நடக்கும் எங்கள் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகள் பலவற்றில், நிகழ்வு முடிந்ததும் சுத்தம் செய்வதற்குத் தான் நீண்ட நேரம் ஒதுக்குகிறோம். சாப்பிட்ட பேப்பர் தட்டு முதல், கோப்பிக் கோப்பைகள் வரை சிறுவர் முதல் பெரியோர் வரை அந்த இடத்திலேயே விட்டு விட்டுக் கிளம்பி விடும் பழக்கம் மிகப் பரவலாகக் காணக் கிடைக்கிறது. ஏற்பாட்டுக் குழு தான் முறிந்து சுத்தம் செய்ய வேண்டும்.
  5. அப்படி அவர்கள் செய்ய நினைத்தாலும் அவர்களால் முடியாது என நினைக்கிறேன். "சதிகார" மேற்கு நாடுகள், அவர்கள் தங்கள் நாட்டை விட்டு எங்கும் போய் விடாமல் கடவுச் சீட்டை வாங்கி லொக்கரில் பூட்டி வைத்திருப்பார்கள் என ஊகிக்கிறேன். இதனால் தான், இஷ்டமில்லாமல் கஷ்டப் பட்டு இந்த மேற்கு நாடுகளிலேயே இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்😎!
  6. 😂 எனக்குத் தான் தமிழ் விளங்கவில்லையா அல்லது சாத்தான் "சில அரசியல் வாதிகளைத் துரத்தியது சரி தான்" என்று சொல்லியிருக்கிறாரா?
  7. வட கொரியாவின் பெரும்பாலான மக்களுக்கு உணவைக் கூட சீனாவும், ஐரோப்பிய யூனியனும், செஞ்சிலுவைசங்கம் போன்ற NGO அமைப்புகளும் தான் கொடுத்து உதவுகின்றன. இவ்வளவு வறுமையில் இருக்கும் மக்கள், இந்த உல்லாச விடுமுறைத் தளத்திற்குப் போய், தங்கி, mall இல் பொருட்கள் வாங்கி..என்ன விளையாட்டு இது😂? யாழ் களத்தில் கிம்மை "முன்னுதாரணத் தலைவராக" வரித்துக் கொண்ட உறுப்பினர்கள் இதை விளக்குவார்களா😎?
  8. நீங்கள் 2013 இல் டேவிட் கமெரூன் போன போது நடந்தவற்றைப் பேசுகிறீர்களா அல்லது முள்ளிவாய்க்கால் காலத்தைப் பேசுகிறீர்களா? 2013 எனில், உண்மையில் நடந்தது, உங்களைப் போன்ற கொம்பு சீவும் புலத்தமிழர்களின் அமைப்புகள், டேவிட் கமெரூன் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய அமைப்பு அமைச்சர் மாநாட்டைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று கோரினார்கள். கமெரூன், இதை மறுதலித்து, கொழும்பு போனார். மகிந்த அரசு அனுமதி வழங்க மறுத்த பின்னரும், பிரிட்டன் எம்பசியின் ஏற்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றார். கொழும்பில் எந்த சந்திப்பும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கவில்லை. ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சராக இருந்த விக்கி ஐயாவைச் சந்தித்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் குறிப்பிடும் தமிழ் தலைவர்கள் யாரும் ஒளித்துத் திரியவில்லை. ஒரு பிரிட்டன் பிரதமரை சும்மா போய் வாசலில் நின்று சந்திக்கும் நிலைமைகள் அன்றும் இல்லை, இன்றும் இல்லை. ஊரில் ஒரு கிராமசேவகரைச் சந்தித்த அனுபவம் கூட இல்லாதவர் போல இருக்கிறது உங்கள் கதை😂!
  9. தமிழர்கள் மட்டும் தான் வெங்காயப் பயிர் செய்கிறார்கள் என்பது தவறான புரிதல். இலங்கை முழுவதும் சின்ன வெங்காயம் செய்வோருக்கு பாதிப்பு என்று தான் யோசிக்க வேண்டும். ஆனால், சின்ன வெங்காயம் இறக்குமதி ஆரம்பித்தது உற்பத்திக்கும் கேள்விக்குமிடையே இடைவெளி வந்ததால் என நினைக்கிறேன். உள்ளூர் விவசாயிகள் இலாபம் அடைய வேண்டும், ஆனால் உற்பத்தியைக் குறைத்து விலையைக் கூட்டி கொள்ளை இலாபம் அடைவது சரியல்ல. தற்போது இறக்குமதி செய்யப் படும் வெங்காயத்திற்கும், உள்ளூர் வெங்காயத்திற்கும் 10 அல்லது 20 ரூபாய்கள் தான் விலை வேறு பாடு. எனவே, நுகர்வோர் நலனும், உள்ளூர் விவசாயிகள் நலனும் பேணப்பட்டிருக்கின்றன.
  10. "தடை" என்றால் injunction. எனவே அர்த்தத்தைப் பொறுத்த வரை சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன். பிரச்சினை இங்கே இந்த வழக்கோ, வழக்கின் காரணமோ அல்ல. "எப்பிடி நாங்கள் சுமந்திரனுக்கு நன்றி சொல்லுறது? நாக்கு இழுத்து விடாதா?"😂 (பகிடி தான், சீரியசாக எடுக்காதீர்கள்!)
  11. "அறக் காட்டாப்பு" என்று சொல்லலாமோ? அல்லது வெறுமனே "காட்டாப்பு"?? ஒரு வகையான exhibitionism தானே virtue signaling😎?
  12. "பிழையான, அடாவடித்தனமான" - இவையெல்லாம் சட்ட ரீதியான வினையுரிச் சொற்கள் அல்ல. இந்தச் சொற்களை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. "இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரான" என்பது தான் வர்த்தமானியை நிரந்தரமாக அரசின் ஆயுதங்களுள் இருந்து அகற்றும் மந்திரச் சொல். அதைத் தான் சுமந்திரன் மனுதாரராக வழக்குப் போட, அவர் சார்பில் ஒரு திறமையான சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகி தடை வாங்கியிருக்கிறது. நீங்கள் சட்டப் பரிச்சயம் இல்லாமல் இதன் பலனைக் கேள்விக்குள்ளாக்கலாம். ஆனால், இங்கே இன்னும் சிலர் வருவார்கள். வந்து உங்கள் கேள்வியை "நிரந்தரமாக வர்த்தமானியை அகற்றுவதில் இருந்து சுமந்திரன் அரசைக் காப்பாற்றியிருக்கிறார்" என்று புது விளக்கம் தர வெளிக்கிடுவார்கள்😂. இப்படித் தான் இன அழிப்பு பற்றிய ஜெனிவா விடயங்களிலும் சுமந்திரன் நடந்து கொண்டார் எனக் குற்றம் சாட்டினார்கள்.
  13. வட அமெரிக்காவில் இருந்து இவ்வளவு கேஸ்களைப் பற்றி இங்கே வாசிக்கிற நீங்களே இப்படி இருந்தால், சோசியல் மீடியாவில் சட்ட அறிவு பெறும் ஆட்களின் நிலையை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு வழக்கு முழுமையாக விசாரிக்கப் பட இரு தரப்பும் கோர்ட்டுக்கு வந்து விளக்கம் தர வேணும். அதன் பின்னர் தான் தீர்ப்பு (verdict) வரும். அப்படித் தீர்ப்பு வழங்கப் பட முன்னர், தீமை பயக்கும் செயல்பாடுகளை உடனே தடுக்கும் முறை தான் இந்த இடைக்காலத் தடை உத்தரவு (temporary injunction). இது அமலில் இருக்கும் போது வழக்கு முன்னோக்கி நகரும்!
  14. எங்கள் மென்ரல் டிசைனை சரியாகக் சொல்லியிருக்கிறீர்கள். மேற்கு நாடுகளில் வசித்து வேலை செய்கிற நாம் எல்லோருமே மேற்கின் பெருவணிக, முதலாளித்துவ சிஸ்ரத்தில் இருந்து உறிஞ்சி தங்கள் உடலையும் குடும்பத்தையும் வளர்ப்போர் தான் (cogs in the wheel/machine). ஆனால், சிலர் மட்டும் நீங்கள் சுட்டியிருப்பது போல, "சுரண்டுறான், பிறாண்டுறான்" என்று சொல்லிக் கொண்டு தாங்கள் கூட்டுப் பண்ணை வாழ்வில் இயற்கையோடு ஒன்றிப் பகிர்ந்து வாழ்வதாக ஒரு தோற்றம் காட்டுவர். எல்லாம் ஒரு "வில்டப்" தான்😎!
  15. சாத்தான், உங்களுக்கு இதை "வெளக்கி"😎 ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தெரியும். ஆனாலும் ஏனைய வாசகர்களுக்காக உங்கள் புலம்பலை ஒட்டி இந்தப் பதில். எல்லா அரசியல் வாதிகளையும் வெளியேற்றினார்களா? அர்ச்சுனா இராமநாதன் இப்ப அரசியல்வாதி இல்லையா? அவர் படத்தில் நிற்கிறாரே? இது தமிழரசுக் கட்சியின் உள் சண்டை (சிறிதரன் சுமந்திரன் அணி மோதல்) வெளியே வந்திருக்கிறது. அணையா விளக்கு இருந்த இடத்தில் நடந்த கூட்டத்தில் எல்லோரும் இருந்திருக்கிறார்கள் இவர்கள் பங்கு பற்றிய போது எதிர்ப்பு எழுந்ததாக ஏதும் வீடியோ பார்த்தீர்களா? அப்படி எதுவும் நிகழவில்லை. வாகனம் நோக்கி நடக்கும் போது மட்டும் தான் ஒருவர் பின்னால் திட்டிய படி வருகிறார். அதை வீடியோ எடுத்து "துரத்தினார்கள், விரட்டினார்கள், செருப்பைக் கைப்பற்றினார்கள்" 😂என்று எழுதுகிறார்கள். சிவஞானம் - அவரது அரசியலில் எனக்கு உடன்பாடில்லா விட்டாலும்- ஒரு வயசாளியாக மதிக்கப் பட வேண்டியவர். அவரைப் பின் தொடர்ந்து மரியாதையில்லாமல் திட்டி வரும் இளையவரின் வயது, சிவஞானம் தமிழர்களுக்கான அரசியலில் இருக்கும் வருடங்களை விடக் குறைவாகத் தான் இருக்கும். இப்படி, தமிழ் தேசிய வரலாற்றை முக நூலிலும், இன்ஸ்ராவிலும் பார்த்து வளர்ந்த இளையோரை, கொம்பி சீவி விடும் அரிய சேவையை புலத் தமிழரும், உள்ளூரில் சிலரும் செய்கிறார்கள். நீங்களும் ஒரு கொம்பு சீவி தான்!
  16. ஈரான் 2015 வரை JCPOA என்ற ஒபாமா அரசுடனான ஒப்பந்தப் படி பிசகாமல் நடந்திருக்கிறது. இதற்குக் காரணம், ஈரானின் நேர்மை என்பதை விட, 200 வரையான அணு விஞ்ஞானிகளாலும், நிபுணர்களாலும் தயாரிக்கப் பட்ட கண்காணிப்பு (monitoring) நுட்பங்கள் மிக நுணுக்கமானவையாக இருந்தமை தான் காரணம் என்கிறார்கள். அந்த கண்காணிப்பை மீறி, ஈரான் யுரேனியத்தை உள்நாட்டில் செறிவாக்கியிருக்க இயலாது என்று தான் நிபுணர்கள் சொல்கிறார்கள். ட்ரம்ப் அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்ட நாளில் இருந்தே ஈரான் செறிவாக்கலை வெளிப்படையாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அப்படிச் செறிவாக்கிய யுரேனியம் தான் இப்போது அமெரிக்கா தேடிக் கொண்டிருக்கும் 600 kg செறிவாக்கிய யுரேனியம். இதை எந்த அமெரிக்க ஊடகங்களிலும் யாரும் சுட்டிக் காட்டியதாகத் தெரியவில்லை. நேச்சர் இதழில், ஈரானின் யுரேனியம் செறிவாக்கல் வரலாற்று பற்றி ஒரு நல்ல கட்டுரை வந்திருக்கிறது, நேரம் இருக்கும் போது தமிழில் மாற்றிப் போடுகிறேன்.
  17. இது "உப்புத் தண்ணி தரப் போகும் கிணறு தான்" என்று இங்கே அந்த நேரம் சொன்னவர்கள் மூக்குச் சாத்திரம் பார்த்துச் சொல்லவில்லை, உலகிலும் அமெரிக்காவிலும் நிகழ்ந்த சம்பவங்களைப் பார்த்தே சொல்லியிருந்தார்கள். சும்மா பைடனின் மேலிருந்த கடுப்பில் ட்ரம்பைப் பெரிய ஆளாகக் காட்டியவர்கள் களைத்து விழுந்து கிணறு வெட்டித் தண்ணியைச் சுவைத்த பின்னர் தான் நம்பியிருக்கிறார்கள்! இதைத் தான் சொல்வது, மூடனுக்கு காலில் அசுத்தம் அப்பினால் 3 இடங்களில் அப்புமாம் என்று😂!
  18. இவர் பிரபல திரைப்பட இயக்குனரான மீரா நாயரின் மகன் என்று இன்று அறிந்தேன். பல நல்ல திரைப் படங்களை உருவாக்கிய சமூகப் பிரக்ஞையுடைய இயக்குனர்!
  19. PBS NewsFrance passes anti-radicalism bill that worries MuslimsThe bill covers most aspects of French life but has been hotly contested by some Muslims, lawmakers and others who fear the state is intruding on essential freedoms and pointing a finger at Islam."பிரான்ஸ் ஏதாவது புதிய சட்டங்கள் இயற்றியிருக்கிறதா?" என்று தேடினால் 2021 இல் இயற்றப் பட்ட மத மயப்படுத்தலுக்கு எதிரான சட்டம் மட்டும் தான் வருகிறது. நான் நினைக்கிறேன் யாரோ கோமாவில் இருந்து விழித்து, பழைய செய்திகளை மெதுவாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள், இப்போது தான் 2021 இற்கு வந்திருக்கிறார்கள்😂!
  20. கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படம் மாதிரி "இந்தா வருகுது வருகுது" என்று எத்தனை வருடங்களாக இந்த பிரிக்ஸ் இன்னும் வந்து கொண்டிருக்குது😂? இந்த "பல்துருவ" உலகை நாடும் எழுத்தாளர்களும் அதை ஒரு காரணியாக எடுத்துக் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
  21. இது சிந்தனையில்லாத பேச்சு! நீங்கள் கடலுக்கடியில் தேடாமல் இணையத்தில் தேடி தகவல் சரி பார்க்கிறீர்கள்! இது இங்கே செல்லாது☺️!
  22. தெய்வமே, நீங்கள் கட்சி மாறி விட்டியள் போல இருக்கே😂? அல்லது சில யாழ் கள மெம்பர்சிடமிருந்து flip-flop-itis வியாதி உங்களுக்கும் மெய்நிகர் வழியாகத் தொற்றி விட்டதா😂?
  23. அதானே? ஏன் போகவில்லை சுமந்திரன்? ஒரு கனதியான விவகாரம் பற்றி நடக்கும் போராட்டத்திற்குச் சென்று சில "விசிலடிச்சான் குஞ்சுகளுடன்" ஓடிப் பிடித்து விளையாடாமல் தவிர்த்த சுமந்திரனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்😂!
  24. பையன் சார், நன்றி! கடைசியாக ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஒரு உண்மைத் தகவலை😂!
  25. மாறாத ஒன்று புலத்தமிழர்கள் சிலரின் "போர்க்குணம்"😎 தான்! சிங்கார சுவிசில் இருந்து ஐரோப்பா முழுவதும் வகேஷன் போய் வரும் முகநூல் ஊடகவியலாளர் "இணுவையூர்"😂 மயூரன் விடு பட்ட செருப்புகளை பெருமையோடு பகிர்ந்திருக்கிறார். இது போன்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் முகநூல் போர்க்குணத்தால் மட்டும் தான் "விடுதலைப் போராட்டம் இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது" விளங்குதோ??😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.