Everything posted by Justin
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஓம், "நிறைய தெரியும்" என்பதில் உடன்பாடு தான்! எங்க இருந்து எடுத்த தகவல்களால் "நிறைய தெரியும்"? என்பதில் தான் உடன்பாடில்லை😎! அதனால், போலித் தகவல்கள் யார் எழுதினாலும் என் பதில் கருத்து இருக்கும்!
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் ரஷ்ய யுத்தத்தின் காரணம் ஒன்று தான்: அது ரஷ்யா "இந்தா பார், பெலாரசில் இருந்து நான் படைகளை வீட்டை கொண்டு போகிறேன், ஒரு விக்கினமும் இல்லை!" என்று அறிக்கை விட்டு 24 மணி நேரத்தில் உக்ரைனுக்குள் முன்னேறிய ஆக்கிரமிப்பு. இதை cognitive dissonance காரணமாக மறந்து விட்டு, "யூத அடி கொண்ட செலன்ஸ்கி நாசி, எனவே நாசி நீக்கம் செய்ய ரஷ்யா வந்தது" "தானிய ஏற்றுமதியைத் தடுத்து தங்கள் தானியங்களை விற்க அமெரிக்கா கையப் புடிச்சு இழுத்தது" "மேற்கு நேட்டோவில் சேர்க்க ஷதி செய்தது" (2013/14 இலேயே உக்ரைன் மக்கள் ஐரோப்பா பக்கம் சாய வாக்களித்த பின்னும்) என்று கிறீஸ் போத்திலோடு சுற்றி ஓடிக் கொண்டிருப்பவர்கள் "ரெம்ப நிதானமாகத் தான்" இருக்கிறார்கள்😂!
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
"அப்டேற்" என்ற சொல் ஏன் பாவிக்கப் பட்டதென தெரியாமல் கோவிக்காதீர்கள். உதாரணமாக: "சகல உரிமைகளுடனும் உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்தது" என்ற தகவலை நீங்கள் எங்கேயிருந்து பெற்றீர்கள்? உக்ரைன் போரின் பின்னர் முளைத்த ரஷ்யாவின் bot தானியங்கிக் கணக்குகளும், ரஷ்ய அடிவருடிகளின் கணக்குகளும் சமூக வலை ஊடகங்களில் குறிப்பிடும் இந்த போலி வரலாற்றுத் தகவலை வேறெங்கிருந்து நீங்கள் பெற்றிருக்க முடியும்? உண்மையான தரவு என்ன? தனி சொத்துரிமையை உக்ரைன், லிதுவேனியா, லத்வியா போன்ற வளமான விவசாய நிலங்கள் நிறைந்த, 1920 இற்கு முன்னர் சுதந்திரமாக இருந்த நாடுகளில் கட்டாயமாக ஆயுத முனையில் அமல்படுத்தி மில்லியன் கணக்கான விவாசயக் குடும்பங்கள் பட்டினியால் இறந்தனர். சோவியத் கம்யூனிஸ்டுகளால் செயற்கையாக உருவாக்கப் பட்ட இந்தப் பஞ்சத்திற்கு "சிவப்புப் பஞ்சம்- Red famine" என்று பெயர். இது வரலாற்றாசிரியர்களால் ஆதரங்களுடன் பதிவு செய்யப் பட்டு, இன்றும் தேடினால் கிடைக்கக் கூடிய ஒரு தகவல். இது போன்ற சோவியத் கொடுமைகள் பற்றி அறியாமல் சமூகவலை ஊடகங்களில் இருந்து போலித் தகவல்களை எடுத்து நீங்கள் வைத்துக் கொள்ள உரிமை உண்டு. இங்கே அவற்றைப் பரப்பினால், சரியான தகவலைச் சுட்டிக் காட்டி "அப்டேற்" செய்யும் படி கேட்கும் உரிமை எந்த வாசகருக்கும் இருக்கிறது. எனவே இதைக் கவனத்திலெடுங்கள்!
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நீங்கள் சொல்ல முதலே ஐரோப்பியர்கள் இதை ஏற்றுக் கொண்டு விட்டதால் தான் சுதேச குடிகளின் சுயாட்சியின் கீழ் "முதல் தேசங்கள்- First Nations" என்று கனடாவும், "விசேட ஒதுக்கீட்டுப் பிரதேசங்கள்-Indian Reservations" என்று அமெரிக்காவும் சுதேச மக்களுக்கு ஓரளவு உரிமைகளையாவது கொடுத்திருக்கிறார்கள். ரிக் ரொக்கில் தலையை விட்டுட்டு இருக்காமல் சரியான வரலாற்றுத் தகவல்களை அறிந்து "அப்டேற்" செய்து கொள்ளுங்கள்😎!
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இங்கே "ரஷ்யாவிற்கு வரலாற்று ரீதியாக உக்ரைன் சொந்தம், எனவே உக்ரைன் மீது ரஷ்யா ஆகிரமிப்பு செய்தது பரவாயில்லை" என்று சில "வரலாற்று" விண்ணர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதே "வரலாற்று உரிமை" வாதப்படி பார்த்தால்: 1920 இல் இருந்து தான் ரஷ்யாவிற்கு உக்ரைன் சொந்தம். அதற்கு முன்னர், 1000 வருடங்கள் முன்பு கியேவ் பிரதேசத்தில் இருந்து தான் ரஷ்யாவே உருவானது. எனவே, ரஷ்யா உக்ரேனிய சிலாவ் குடிகளுக்குத் தான் சொந்தம். எனவே, உக்ரைன் ரஷ்ய நிலத்தைப் பிடிப்பதில் ஒரு தவறும் இல்லை😎!
-
அக்டோபர் 7 தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த, இஸ்ரேலால் தேடப்படும் ஒருவரை ஹமாஸ் தலைவராக்கியது ஏன்?
நிச்சயமாக ஹமாசின் இந்த தெரிவு ஹமாசுக்கு இலாபகரமானது தான். பலஸ்தீன தேசம் ஒன்று உருவாவதற்கு இது உதவாது. விட்டுக் கொடுப்போடு இரு தரப்புகளும் ஒரு பொது நிலைப்பாட்டை அணுகிய ஒஸ்லோ உடன்பாட்டை நிலைக்க அனுமதிக்காமல், இஸ்ரேல் மீது வலிந்து தாக்குதல் நடத்தி, தற்போது பதவியில் இருக்கும் வலது சாரியான நெரன்யாஹுவை தேர்தலில் வெல்ல வைத்ததே ஹமாஸ் தான். அன்றிலிருந்து தொடர்ச்சியாக ஹமாஸ் வெற்றி பெற்று வருகிறது : ஹமாஸ் தலைவர்களுக்கு மூன்றடுக்கு வீடுகள், பெற்றோல் சரியாகக் கிடைக்காத காசாவில் ஜப்பானிய வாகனங்கள், கட்டாரில் சொகுசான வில்லாக்கள் என ஹமாசுக்கு வெற்றி தான்😎! பலஸ்தீன மக்களை யார் கணக்கிலெடுத்தார்??
-
பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம்
சில ஆண்டுகள் முன்பு பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரத்தின் பாடசாலைகளில் பாலியல் தொடர்பான கல்வித்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பெற்றோர்கள் ஆர்ப்பார்ட்டம் செய்தனர். Good touch-bad touch இல் இருந்து குழந்தை உருவாகும் முறை, ஒரு பாலுறவு (homosexuality) என்ன என்பது போன்ற விடயங்களை உள்ளடக்கிய அந்தப் பாடத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாதென போராட்டம் செய்த பெரும்பான்மையான பெற்றோர் குடியேறிகளாக வந்து செற்றிலான முஸ்லிம் குடும்பத்தினர்😂. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு சமூகத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஒட்டு மொத்த நன்மை தரக் கூடிய முன்னேற்றகரமான கொள்கைகளை மேற்கத்தைய நாடுகள் அமல்படுத்த, வந்து குடியேறிய பிற்போக்கு வாதிகள் அனுமதிக்காமல் போராடும் வினோத நிலை பல மேற்கு நாடுகளில் உருவாகி வருகிறது. சில நடைமுறைகள் பிடிக்கவில்லையானால், தமக்குப் பிடித்தமான நடைமுறைகள் இருக்கும் நாடுகளுக்கு வெளியேறிச் செல்வதை விடுத்து, தாராளவாத நாடுகளின் நல்ல கொள்கைகளை தடுத்த படி அங்கேயே "டோரா போட்டு" அந்த நாடுகளையும் குட்டிச் சுவராக மாற்றி விடும் வேலைகள் நடக்கின்றன. இப்படியான குடியேறிகளுக்கு கொஞ்சம் அவர்களுடைய இன /மத வெறுப்பு மருந்தின் சுவை என்ன என்று இந்த பிரிட்டன் கலவரம் காட்டியிருக்கும். ஆனால், அப்பாவிகளும் பாதிக்கப் பட்டிருப்பது சோகம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வியற்நாம் போரை எதிர்த்த அமெரிக்கர்களை, ஈராக்கில் அமெரிக்கப் படை செய்த கொலைகளை வெளிக்கொண்டு வந்த அமெரிக்கப் படையினனை, அமெரிக்காவின் தவறான கொள்கைகைளைக் காய்ச்சி ஊத்தும் நியூயோர்க் ரைம்ஸ் எழுத்தாளர்களை, இப்படியானவர்களை என்ன செய்திருக்கிறார்கள் அமெரிக்காவில் என்று தேடிப்பாருங்கள் ஒரு தடவை. நீங்களாகத் தேடியறிந்தால் மனதில் நிற்கும்😎!
-
மன்னார் இளம் தாய் உயிரிழப்பு: வைத்தியசாலை நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்ட விடயம்
முரளி வல்லிபுரநாதன் இந்த விடயத்தில் வழங்கும் ஆதரவு சீர்திருத்த முயற்சிகளுக்கு மிகவும் பலம் சேர்க்கக் கூடியது. ஆனால், பயன்படுத்திக் கொள்ள முன்வருவார்களா என்பது தான் சந்தேகம். அர்ச்சுனாவை நடத்திய விதம், தற்போது 4 விசாரணை செய்து விட்டு நடவடிக்கையெதுவும் எடுக்காமல் இருக்கும் நிலை என்பவற்றை வைத்துப் பார்த்தால், மன்னாரில் அதிகாரத்தில் இருக்கும் எல்லோரும் ஒரே "elite கிளப்பில்" உறுப்பினர்களாக இருக்கின்றனர் எனப் புரிகிறது. மிகப் பொருத்தமாக இத்தகைய ஊழல் நிறைந்த elite clubs ஐ அமெரிக்காவில் "சாக்கடை-swamp"என்பார்கள். உதாரணமாக, நகர நீதிபதி, வைத்தியத்துறை தலைவர்கள், எம்.பியின் ஆட்கள், பொலிஸ் அதிகாரிகள் என எல்லா உயர் வகுப்பினரும் அனேகமாக ஒரே இடத்தில் கூடி தண்ணியடிக்கும் ஆட்களாக இருப்பர்😂. இந்த இடங்களில் தான் இந்த சாக்கடை சிஸ்ரம் உருவாகிறது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
எல்லாரும் தான் வரி கட்டுகிறார்கள், இதையெல்லாம் சாதனையாகச் சொல்பவர்கள் எங்கள் ஆசியக் குடிகளாக மட்டும் தான் இருப்பரென நினைக்கிறேன்😂. கட்டின வரிக்கேற்ப விழுந்தால் அம்புலன்ஸ், வேலை போனால் சாப்பிடக் காசு, பிள்ளைகள் கூடினால் காசு என்று மீளத் தரும் நாடுகளில் இருக்கிறீர்கள். இருந்த படியே, ஜனநாயகம், அகதி அடைக்கலம், அங்கே பிறந்தவனுக்கே உரிமை என்று எதுவும் கொடுக்காத நாட்டைப் பார்த்து எச்சில் ஊறுகிறீர்கள் என நினைக்கிறேன். அதனால் தான் திரும்பத் திரும்ப "ஏன் அங்கே நீங்கள் தங்காமல், ஜேர்மனிக்கு வந்தீர்கள்?" என்று கேட்கிறார்கள் என நினைக்கிறேன்.
-
பருத்தித்துறை- அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பிய மருத்துவர்: நோயாளர்கள் அலைக்கழிப்பு!
நிச்சயமாக. இலங்கையில் வளத் துஷ்பிரயோகத்தில் முதல் இடம் அலுவலக வாகனத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்குத் தான், எல்லா மட்டத்தினரும் செய்வார்கள். 20 ஆண்டுகள் முன்பு, வவுனியாவில் உயர் பதவியில் இருந்த மருத்துவர், ICRC வவுனியா மருத்துவ மனைக்கு வழங்கியிருந்த வாகனத்தில் தான் தன் பிள்ளைகளைப் பளிக்கூடத்திற்கு ஏற்றி இறக்குவார். பின்னர் அவர் மாகாண அமைச்சராகவும் வந்தார். இப்போது வடபகுதியில் நடக்கும் அக்கப் போர் பற்றி மூச்சும் விடாமல் இருக்கிறார் 😎- காரணம் இது தான்!
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
Baba banaras என்ற தீவிர முஸ்லிம் எதிர்ப்பு, இந்திய தீவிர தேசியம் பேசும் கீச்சகக் கணக்கில் இருந்து "1000 இந்துக்கள் கொல்லப் பட்டிருப்பதாக" செய்தி பரப்புகிறார்கள். இதை நம்பி எடுபட்டுப் போகும் யாழ் உறவுகள் அவதானமாக, பொய்ச்செய்திகளின் காவிகளாக மாறாமல் இருக்க வேண்டும்😎!
-
பருத்தித்துறை- அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பிய மருத்துவர்: நோயாளர்கள் அலைக்கழிப்பு!
ஆஸ்பத்திரியில் வேலை செய்வோர் எல்லோரும் "மருத்துவர்கள்" அல்ல என்று இலக்கு இணையத்திற்கு யாராவது சொல்ல வேண்டும். "சிற்றூழியர்" என்று செய்தி எழுதி விட்டு, "மருத்துவர்" என்று தலையங்கம். இது தற்போது சூடாக இருக்கும் சூழலை வைத்து வயிறு வளர்க்கும் சாக்கடை ஊடக நுட்பம் என நினைக்கிறேன்.
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
இது "வரும் ஆனால் வராது" என்ற கதையாகத் தான் இருக்குமென நினைக்கிறேன். மாகாண அமைச்சுக்கு யார் தவறு செய்தார் என்பது இப்போது தெரியும். அந்தப் பணியாளர்களை மத்திய அரசின் விசாரணை முடியும் வரை சம்பளமில்லாத பணி இடை நிறுத்தம் செய்யலாம், செய்தால் மத்திய அரசின் விசாரணையை பணி நீக்கம் செய்யப் பட்டவர்களே துரிதமாகச் செய்யும்படி மன்றாடுவர். என் கணிப்பு, இப்படி பணி இடை நிறுத்தம் செய்ய மாட்டார்கள். மக்கள் மறந்து நகரும் வரை மத்திய அரசின் விசாரணை தொடரும். இறுதியில் யாரும் தண்டிக்கப் பட மாட்டார்கள். சீரழிந்த சிறிலங்காவின் நடைமுறைகளில் இது புதிதல்ல. இதற்கு தீர்வு என்ன? நீதிமன்றில் பாதிக்கப் பட்ட குடும்பம் சிவில் வழக்குப் போட வேண்டும். மன்னார் மருத்துவமனைப் பணிப்பாளரையும் அந்த நேரம் கடமையில் இருந்த மருத்துவரையும் எதிராளிகளாக (respondents) குறிப்பிட்டு வழக்கைப் போட்டு வைக்க வேண்டும். சிவில் வழக்கு இழுபடும், ஆனால் பெயர்கள் வெளியே வரும், ஒரு கட்டத்தில் மாகாண அமைச்சின் அறிக்கையையும் நீதி மன்றில் சமர்ப்பிக்க வேண்டி வரும். முகநூலில் நேரம் வீணாக்குவதை தவிர்த்து சட்டத்தரணிகள் இதைச் செய்ய உதவினால் அது பயனுள்ளதாக இருக்கும்.
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
எதைத் தான் எழுதுவது இந்த கொலைகாரக் கூட்டத்தைப் பற்றி? இப்படியாக பல கேஸ்கள் இருபது ஆண்டுகள் முன்பு கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன். லேடி ரிட்ஜ்வேயில் கைக்குழந்தைக்கு கை அகற்ற வேண்டிய நிலை வந்த அசமந்த நிலை, ஒரு புற்று நோய் நிபுணரான மருத்துவருக்கே எச்.ஐ.வி தொற்றிய இரத்தத்தை ஏற்றிய கதை, நோயுற்ற சூலகத்தை விட்டு விட்டு நல்ல சூலகத்தை அகற்றிய கதை என்று சம்பவங்கள் பல, ஆனால் எதற்கும் நடவடிக்கையென்று எதுவும் எடுக்கப் பட்டதாக நான் அறியவில்லை. ஒரு பட்டத்தை எடுத்து, தங்களுக்கு மேல் மேற்பார்வை செய்யவோ அறிக்கையிடவோ யாரும் இல்லையென்று வந்து விட்டால் எந்த நிபுணரும் இந்த அசமந்த மருத்துவ சேவையாளர்கள் போலத் தான் நடந்து கொள்வர்- complacency?. இலங்கையில் Sri Lanka Medical Council என்ற மருத்துவர்களைப் பதிவு செய்து பணி செய்ய அனுமதிக்கும் அமைப்பும் இருக்கிறது. இவ்வளவு அக்கப் போர் நடக்கிறது, இந்த அமைப்பு இதைப் பற்றி ஒரு மூச்சும் விட்டதாகவோ, தற்காலிகமாவேனும் சம்பந்தப் பட்ட மருத்துவர்களின் அனுமதியை மீளப் பெற்றதாகவோ தெரியவில்லை. இந்த தாயின் மரணத்தினாலாவது ஏதாவது நன்மை நடக்கட்டும்!
-
ரஸ்யாவினால் விடுதலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் உட்பட மூவர் அமெரிக்கா சென்றடைந்தனர் - விமானதளத்தில் காத்திருந்த பைடன் கமலா ஹரிஸ்
இது சாதாரணமான விடயம், பனிப்போர் காலத்திலிருந்து நடக்கும் விடயம். தீவிர யுத்த காலத்தில் கூட இவை நிகழ்வதற்கான பல காரணங்கள் இருக்கின்றன. 1. இரண்டு தரப்பிலும் அப்பாவிகள், குற்றம் சாட்டப் பட்டவர்கள், குற்றம் நிரூபிக்கப் பட்டவர்கள் என்று எதிர் நாடுகளில் சிறையில் இருப்பார்கள். எதிரி நாடுகளின் உள்ளே, இவர்களை மீட்டுத் தரும்படி உள்ளூர் அழுத்தம் இருக்கும். பைடனுக்கு போல் வேலனை மீட்கும் படியான அழுத்தம் வெளிப்படையாக இருந்தது (இவர் ஒரு உளவாளியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால்). 18 மாதங்களாக பேச்சு வார்த்தை நடந்தாலும், தேர்தலுக்கு முன்னர் இவர்களை விடுவித்தால் அது நிச்சயம் பிளஸ் பொயிண்ராக பார்க்கப் படும். எனவே, தற்போது இதை விரைவு செய்திருப்பார்கள். 2. இந்த அவசரம் பைடனுக்கு இருப்பதை, ரஷ்யாவும் பயன்படுத்திக் கொண்டு ஜேர்மனியில் ஒரு கொலை முயற்சியில் கையும் மெய்யுமாக அகப் பட்டு சிறையில் இருந்த ஒரு ரஷ்ய கேணல் உட்பட, பல ரஷ்ய உளவாளிகளை மீளப் பெற்றுக் கொண்டிருக்கிறது. போன தடவை ஒரு அமெரிக்க விளையாட்டு வீரரை ரஷ்யாவிலிருந்து விடுவிக்க, அமெரிக்காவில் சிறையில் இருந்த merchant of death என அழைக்கப் படும் விக்ரர் பௌற் விடுவிக்கப் பட்டார். 3. மூன்றாவது காரணி மத்தியஸ்தர்-mediator. தற்போது துருக்கி மத்தியஸ்தர். பல காலங்களாக சுவிஸ் இந்த விடயங்களில் மத்தியஸ்தர். வட கொரியா என்று வந்தால் சுவீடன் எப்போதும் இந்த விடயங்களில் மத்தியஸ்தர். இந்த நாடுகள் உலக அரங்கில் தம் பிரபலத்தை (profile) இது போன்ற விடயங்களில் நிரூபித்தால், அவர்களுக்கு பல ஆதாயங்கள் கிடைக்கும். துருக்கி போன்ற நாடுகளுக்கு இந்த ஆதாயங்கள் நீண்ட கால நோக்கில் நன்மை பயக்கும். எனவே, இப்படியான உளவு, களவு, கொலை வேலைகள் இரு தரப்பிலும் இருக்கும் வரை, புரோக்கர் மாரும் இருக்கும் வரை பரிமாற்றங்கள் தொடரும்.
-
பிரிட்டனில் கத்திக்குத்து தாக்குதல் - 9 பேர் காயம்
இந்த செய்தியையும், மேலே மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பா வரும் குடியேறிகளை AfD பாணியில் திட்டி எழுதியிருக்கும் "ஜேர்மனியரின்" கருத்தையும் பார்த்தால் கோசான் அடிக்கடி சொல்லும் "கே.எவ்.சிக்கு வாக்குப் போடும் கோழிகள்" என்ற வாக்கியம் நினைவில் வருகிறது😎. இன்று, இந்த குற்றத்தை செய்த 17 வயது குற்றவாளியின் அடையாளத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இவர் ருவாண்டாவில் இருந்து பிரிட்டனுக்கு குடியேறிய பெற்றோருக்கு பிரிட்டனில் பிறந்த பிள்ளை. இவர் இஸ்லாமியர் என்பதற்கான அடையாளத்தையும் பெயரில் காணவில்லை. ஆனால், English Defense League (EDL) எனப்படும் எல்லா வெள்ளையரல்லாத குடியேறிகளுக்கும் எதிரான வன்முறை வழி நாடும் அமைப்பு, ஒரு பள்ளிவாசலையும் தாக்கி, மேலே இருப்பது போன்ற ஆசியக் குடியேறிகளின் உடைமைகளையும் தாக்கியிருக்கிறது. ஏன்? சமூகக் கேடாக மாறியிருக்கும் சமூக வலை ஊடகங்களில் "கொலையாளி குடியேறியான முஸ்லிம்" என்ற பொய்த்தகவலைப் பரப்பி, மேலே இருக்கும் ஜேர்மனியக் குடியின் மண்டையைக் கழுவியது போலவே பலரின் மண்டையைக் கழுவியிருக்கிறார்கள்.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
உரிமைகளை இஸ்ரேல் தானாகக் கொடுக்காது, கொடுக்காமல் நிலைக்கக் கூடிய ஆதரவும், இராணுவ பலமும் இருக்கும் போது ஏன் தான் கொடுப்பார்கள்? ஆனால் வெளிநாட்டுத் தலையீடுகள், நோர்வேயின் சமரசம் (இப்ப சிலபேருக்கு அலர்ஜி ஆரம்பிக்கும் நோர்வே என்றதும்😂) போன்றவற்றால் 1993 ஒஸ்லோ ஒப்பந்தம் உருவானது. சில குறைபாடுகள் (நிவர்த்தி செய்யக் கூடியவை) இருந்தாலும், அது தான் இஸ்ரேலின் இருப்பை PLO ஏற்றுக் கொண்ட, பலஸ்தீனம் உருவாக வேண்டுமென்று இஸ்ரேலும் ஒப்புக் கொண்ட முதல் ஒப்பந்தம். இதை வேண்டாமென்று எதிர்த்தது ..வெயிற் போர் இற்..இந்த ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்புகள் சேர்ந்த தீவிரவாதிகள் தான். இஸ்ரேல் தரப்பில் யிற்ஷாக் ராபினும் ஒரு வலதுசாரி யூதரால் கொல்லப் பட, பலஸ்தீன தரப்பில் ஹமாஸ் PLO வினை அடித்துத் துரத்தி விட்டு காசாவை எடுத்துக் கொண்டார்கள். எனவே, நீங்கள் சொல்வது பகுதியளவில் உண்மை (ஆனால், அது உங்களுக்கே எழுதும் போது தெரியாதென நம்புகிறேன்😎!)
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
லொல்..ப்றோ😂! பலஸ்தீனம் இன்று இருக்கும் நிலையையும்,இஸ்ரேலின் நிலையயும் மனதில் வைத்து இந்த வரலாற்றுத் துணுக்குகளை வாசித்துப் பாருங்கள்: 1. ஓட்டோமான் (பழைய துருக்கி தேசம்) வீழ்ந்த நேரம் இஸ்ரேலுக்கு பல்போர் பிரகடனம் மூலம் நிலத்தை பிரிட்டன் ஒதுக்கிக் கொடுத்தது. அந்த நேரம் பலஸ்தீன அரபுக்கள் நிராகரித்து வன்முறையை ஆரம்பித்தார்கள். இந்த வன்முறையை எதிர் கொள்ள யூதர்கள் உருவாக்கிய பராமிலிற்றரிக் குழு ஹகானா (Haganah) இஸ்ரேலிய இராணுவத்தின் (IDF) முன்னோடிப் படை இது தான். 2. சேர்ச்சிலுக்கு யூதர், இந்தியர், ஆபிரிக்கர் ஆகிய யாரையும் பிடிக்காது. அவர் பல்போர் பிரகடனத்தில் இருந்த இஸ்ரேல் நிலப்பரப்பைப் பிரித்து ஜோர்தான் நாட்டை உருவாக்கினார் (இதுவும் பலஸ்தீன அரபுக்களுக்குப் பிடிக்கவில்லையென்பது வேறு கதை). 3. 1947 இல், ஐ.நா வினால் இஸ்ரேல் அங்கீகரிக்கப் பட்ட போது, பல்போர் பிரகடனம் ஒதுக்கிய நிலப்பரப்பை விட குறைந்த நிலம் தான் இஸ்ரேலுக்கு வழங்கப் பட்டது. இப்போது ஹமாஸ் இருப்பது போல இஸ்ரேல் தரப்பில் இருந்த கடும்போக்காளர்கள் "இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது, அடித்துப் பிடிப்போம்!" என்ற போது இஸ்ரேல் தலைவராக இருந்த டேவிட் பென்கூரியன் "ஒரு மேசைத்துணி அளவிலான நிலம் கூட சர்வதேச அங்கீகாரத்தோடு கிடைத்தால் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று இஸ்ரேலை உருவாக்கினார். 4. ஒருவாறாக இஸ்ரேலை உருவாக்கிய பின்னர் அதன் சனப்பரம்பலைப் (demography) பார்த்தால், இஸ்ரேல் நாட்டில் அரபுக்களுக்கும், யூதருக்கும் ஒரு லட்சம் சனத்தொகை அளவு தான் வித்தியாசம். அரபுக்களின் பிறப்பு வீதப் படி பார்த்தால், ஒரு தலைமுறையில் இஸ்ரேல் இன்னொரு அரபு நாடாகும் சாத்தியம் தெரிந்தது😂. இதைப் பார்த்து இஸ்ரேல் தலைவர்கள் கையைப் பிசைந்து யோசித்துக் கொண்டிருக்க, "இஸ்ரேலை ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று போரை ஆரம்பித்து இஸ்ரேலின் பிரச்சினையைத் தீர்த்து வைத்தனர் பலஸ்தீன அரபுக்கள். பின்னர் நடந்தது வரலாறு!
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
அப்பிடியே இந்த 3 நாடுகளும் சேர்ந்து ஆரம்பித்த தாக்குதலில் இஸ்ரேல் இழந்த நிலப்பரப்பு எவ்வளவு எண்டும் ஒருக்கா எழுதி விடுங்கோ😂!
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
🤣விசுகரைத் தான் ஏமாற்றி விட்டார்கள் போல, பாவம்!. உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யும் பிரதான துறைமுக நகரான ஒடெஸ்ஸா பலமாகப் பாதுகாக்கப் பட்ட ஒரு நகரம், உல்லாசப் பயணிகளைக் கவரும் நகரும் கூட. இங்கே இந்த உல்லாசப் பயணி போன ஒரு மூலையில் எல்லாம் நலமாக இருக்கிறதென சின்னத் திரையில் பார்த்து நம்பும் உங்கள் போல புத்திசாலிகளை நம்பித் தான் புரின், ஹமாஸ், கிம் ஜன் உன் எல்லாம் நிலைத்திருக்கிறார்கள்😎.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
35 வருடங்களுக்கு முன்னரே அவர் தேர்ந்து கொண்ட பாதை, இப்படித் தான் முடியுமென்று அவருக்கே தெரிந்திருக்கும் - occupational hazard. நிலைமை இப்படி இருக்க ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு "அனுதாபங்கள்" என்று கண்ணீர் உகுப்போரைப் பார்த்து இந்த மரண வீட்டிலும் சிரிப்பே வருகிறது😂. இஸ்ரேல் ஒக்ரோபர் தாக்குதலுக்குப் பதிலடியாக இதைப் போன்ற குறி வைத்துப் போட்டுத் தள்ளும் வேலைகளைத் தான் செய்திருக்க வேண்டும், காசாவில் 40K மக்களைக் கொன்றதால் எதையும் இஸ்ரேல் அடையவில்லை. அதைச் செய்திருக்காமல் இப்படியான வேலைகளைத் தொடர்ந்தால் பயன் பல மடங்கு இருக்குமென நினைக்கிறேன்.
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
உங்கள் அவதானிப்பிற்கு ஒரு காரணம் இருக்கிறது. மருத்துவர்கள் கற்கும் மருத்துவ பீடம் தான் அந்தக் காரணம். இலங்கையில் இருக்கும் சிறந்த மருத்துவ பீடமான கொழும்புப் பீடத்தில் சில வருடங்களுக்கொரு முறை பாரியளவில் பாடத்திட்டத்தை மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப மாற்றுவார்கள், புரட்டிப் போடுவார்கள். இது போல ஒரு மீளாய்வு (review) முறை யாழ் மருத்துவ பீடத்தில் இருப்பதாக நான் அறியவில்லை. அதே 50 வருடப் பழைய முறையான பேராசிரியர் சொல்வதை கேள்வி கேட்காமல் செவிமடுத்து, பரீட்சை எழுதி பாஸ் ஆகி மருத்துவராகி விட்டு நோயாளியோடு உரையாடும் முறை கூட தெரியாமல் வாய்க்குள் கொழுக்கொட்டை அடக்கி வைத்திருக்கும் மருத்துவர்களை யாழ் பீடம் உருவாக்குகிறதென நினைக்கிறேன். யாழ் மருத்துவ பீடத்தில் கற்பிக்கும் பேராசான்கள் எப்படியாக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்: Internal Medicine எனப் படும் உள்ளக மருத்துவத்தில் பேராசிரியராகவும், யாழ்ப்பாணம் நொதேர்ன் மருத்துவமனையில் தனியார் தொழிலும் செய்யும் ஒரு மருத்துவரிடம் என் உறவுக்காரர் ஒருவர் போயிருக்கிறார். அளக்கப் பட்ட அவரது இரத்த அழுத்தம் 140/90, இது Stage II உயர் இரத்த அழுத்தம், கவனிக்கப் பட வேண்டிய ஒரு குணங்குறி. ஆனால், அதைப் பற்றி நோயாளிக்கு எதுவும் சொல்லாமல், முப்பதினாயிரம் ரூபா பெறுமதியான இரத்த பரிசோதனைகளை எழுதிக் கொடுத்து "இங்கேயே செய்தால் தான் நம்புவேன்" என்று சொல்லியிருக்கிறார். என் சொந்தக்காரர் வாரம் மூன்று தரம் கருவாடு சாப்பிடும் சாப்பாட்டுப் பிரியர் என்று எனக்குத் தெரிந்திருந்ததால் "மருத்துவர் உணவைப் பற்றி ஏதாவது அறிவுரை சொன்னாரா?" என்று கேட்டேன். "எதுவும் சொல்லவில்லை, என் உணவுப் பழக்கங்கள் பற்றி அவர் கேட்கக் கூட இல்லை" என்றார். இத்தனைக்கும் அவர் ஒரு தடவை சிறிய மூளை இரத்த அடைப்பு (stroke) வந்து தப்பிய ஒருவர். இந்த நோயாளிக்கு ஒரு அடிப்படை ஆலோசனை/தகவல் கூட வழங்காத பேராசிரியரின் பட்டங்கள் (certifications) அவர் பெயரை விட நீளம்😂. இவை தான் அந்தப் பட்டங்கள்: MD (Col), FRCP (Lon), FRCP (Edin), FCCP, MRCP (UK), MRCP (Ireland), MSc (Col), FACP (USA). இந்த நோயாளிக்கு என்ன பயன் இவ்வளவு தகுதிச் சான்றிதழ்களால்? இவர்களுக்கெல்லாம் மருத்துவத் தொழில் ஒரு கேடா? என்று தான் எனக்குத் தோன்றுகிறது.
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
இது போன்ற மரணங்கள் மிகவும் அநியாயமானவை, 100% தடுத்திருக்கப் படக் கூடியது இது. சிசேரியன் செய்து 3 வாரங்களுக்குள் இரத்தப் பெருக்கு அல்லது வயிற்றினுள் கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த இரு நிலைகளுமே ஆபத்தானவை. ஒன்று hypo-volemic shock இற்கு இட்டுச் செல்லும், மற்றது septic shock இற்கு இட்டுச் செல்லும். எனவே தான், நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து உடனே சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். இந்த அடிப்படை மருத்துவம் தெரியாமல் சாதாரண வார்ட்டில் அனுமதிக்கும் அளவுக்கு தாதியரும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்றால், இவர்களை அர்ச்சுனா குறிப்பிடுவது போல மக்கள் அடித்துத் துரத்துவதில் ஒரு தவறும் இல்லை!
-
மலிபன் பிஸ்கட்
ம்..தனிப்பட்ட விருப்பு வெறுப்பை யாரும் எதுவும் சொல்ல முடியாது, ஆனால் இது சர்க்கரை வியாதி இன்னும் இல்லாத நான் சாப்பிடும் சீனி, மாவை விட அதிகமாக இருக்கிறதே😂?