Jump to content

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5715
  • Joined

  • Last visited

  • Days Won

    67

Everything posted by Justin

  1. உங்களுக்கு உண்மையிலேயே இந்த உணர்வுகள் மட்டத்தில் ஏதோ சீரியசான பிரச்சினை தான்😂. ஊரில் இருந்து உழைப்பவனை இவ்வளவு கேவலமாக தகுதிகள் பட்டியலிடும் போது நீங்கள் எங்கே , யார் தயவில், எப்படித் தப்பி வாழ்கிறீர்கள் என்ற ஒரு சுய மதிப்பீடு கூட இல்லாத தெனாவெட்டு இருக்கிறதே? அது தான் நீங்கள்!
  2. நாட்டில் பிரச்சினை எனக்காட்டி, அப்படியே மூட்டை கட்டி வந்து இங்கிலாந்தில் இருந்தபடி, வெளிநாட்டில் படித்து விட்டு ஊர் திரும்பி இவ்வளவு திட்டுகளுக்கு மத்தியிலும் வேலை செய்ய முயலும் ஒரு அரசியல் பிரமுகருக்கு நீங்கள் தகுதி கேட்கிறீர்கள்? 😂 ஒருக்கா பட்டியல் போடுங்கோவன், உங்களுடைய தகுதியின் படி ஒரு தமிழ் அரசியல் வாதிக்கு எவையெவை இருக்க வேணும்? 1. தூய தமிழ் பெயர் 2. ஒரு குறிப்பிட்ட மதம் 3. தமிழ்க் காதலி/மனைவி 4. ..?? பெருமாள், உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், சுரணை என்பவை கிடையாதா?
  3. ஈஸ்ரர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாகத் தாக்கிய போதே அங்கே எதிர்ப்பு வைத்த சில குரல்களில் என்னுடையதும் ஒன்று. எதை வாசித்து விட்டு எதைக் குறிப்பிடுகிறீர்களோ தெரியவில்லை
  4. அப்பிடியோ? நாங்கள் நடுநிலைமையைக் கடைப்பிடிக்காத நேரம் கண்டிருந்தால் சுட்டிக் காட்டாமல் அப்பவும் கடந்து போயிருந்தீங்களோ? எப்ப அப்படிக் கடந்து போனீங்கள்?😂 இது எண்ணை ஊற்றும் முயற்சியல்ல, "வெளிப்படையாகத் தமிழ் தேசியம் பேசினால், மிச்ச எல்லாப் பாவங்களுக்கும் றெடிமேட் மன்னிப்பு" என்ற கள்ள மௌன சிஸ்ரத்தைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே!
  5. யெஸ், யெஸ் கடந்து செல்வோம், ஒருத்தருக்கும் நோகாமல்! 😂
  6. தமிழ் நாட்டிற்கு ஆளுனர்களாக வர வேண்டிய இரு தமிழர்களை தெலுங்கானாவும், மணிப்பூரும் எடுத்துக் கொண்டதால் இருக்கலாம்!
  7. தான் தேர்தலில் தோற்றதை நேரடியாக பொதுவெளியில் ஏற்றுக் கொள்ளாமல், புது ஜனாதிபதியின் பதவியேற்பிலும் கலந்து கொள்ளாமல் புளோரிடா வந்து தங்கியிருக்கும் பொல்சனாரோ "வயித்துக் குத்து" என்று மருத்துவ மனையில் போய் இருக்கிறாராம்!😂 விசாரணை கோரியிருக்கும் ஒரு பிறேசில் செனட்டர் கூறிய வார்த்தைகள், இங்கே குறிப்பிடத்தக்கவை: "Democracy is sacred, many realize it only after they lose it" "ஜனநாயகம் புனிதமான ஒன்று, அது இழக்கப்பட்ட பின்னர் தான் பலர் இதைப் புரிந்து கொள்கின்றனர்"
  8. சாத்ஸ், இதை முன்னரே ஒரு இடத்தில் நான் சொல்லியிருக்கக் கூடும் உங்களுக்கு, மீளச் சொல்வதற்கு மன்னியுங்கள். நீங்கள் "தொனிச் செவிடு, tone-deaf" என நான் நினைக்கிறேன். கொள்ளி செருகும் நோக்கமில்லை, ஆனால் சுமந்திரன், சாணக்கியன் பற்றி மேலே எழுதப் பட்ட கருத்தொன்றில் மதவாதம் இருப்பதாக உங்களுக்குப் புரியவில்லையா அல்லது உங்கள் நட்புணர்வு அதைக் காண விடாமல் தடுக்கிறதா? முதலில் ஐலண்ட் , பின்னர் கோசான் தவிர யாரும் கண்டிக்க முன்வரவில்லையென்பதைக் கவனித்தீர்களா? இந்தக் கள்ள மௌனம் தான் யாழ் களத்திலும், வெளியேயும் அரசியல் தலைவர்கள் மதம், தனிப்பட்ட குடும்பம் என்ற வகையில் தாக்கப் படுவதை இன்று வரை தொடர வைக்கிறது. இது போன்ற காரணிகள் அரசியல் வாதிகள் மீதான விமர்சனத்திற்கு அடிப்படையாக அமையவே கூடாதென்று வெளிப்படையாகச் சொல்லக் கூட உங்களுக்குத் தயக்கமா?
  9. வணக்கம் ரதி! ஒரு உரையாடலின் "பின் புலம் அல்லது பின்னணி" (context) என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? context - அதை எப்படிப் புரிந்து கொள்வது? நடக்கிற உரையாடலை முதலில் இருந்து வாசித்து , எதற்கு நான் கருவின் தமிழறிவையும் , பெயரில் தமிழ் வைத்திருப்பவர் பற்றியும் சுட்டிக் காட்டியிருக்கிறேன் என்று கண்டு பிடியுங்கோ பார்ப்பம்? இல்லா விட்டால் கருவிடம் உதவி கேளுங்கள்! 😂
  10. உண்மை. ஆனால், அனேகர் என்று சொல்லா விட்டாலும் உரத்துப் பேசும் தேசியவாதிகள் "தூய" தமிழர்களைத் தான் எதிர்பார்க்கின்றனர் எனக் கருதுகிறேன். அந்த "தூய்மையின்" வரைவிலக்கணமும் மாறிக் கொண்டே இருக்கிறது, சில சமயங்களில் பெயர், சில சமயங்களில் மதம்- இப்படி ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு அடிமட்டம் வைத்து தூய்மையை அளக்கின்றனர்.😂 உதாரணமாக இங்கே கரு , நான் அறிந்த வரையில், ஒரு தமிழறிஞர், ஆனால் அவரைக் கேளாக் கேள்வி கேட்போருக்கு பெயரில் மட்டும் தமிழ் இருப்பதாகப் பெருமை! இது தான் எங்கள் நிலை இன்று.
  11. நன்றி. இதே போன்ற கருத்தை நான் சொல்ல நினைத்து, எழுதி பின்னர் அழித்து விட்டுப் பேசாமல் இருந்து விட்டேன். என் பெயரும் தமிழ் அல்ல, மதமும் சைவமல்ல என்பதால்!
  12. வேலை பிறேக்கில் வந்து பார்த்தால் விருதெல்லாம் குடுத்து "உயரமான" பப்பா மரத்தில ஏத்தியிருக்கிறாங்கள்?😂 சீரியசாக: இணைய யுகத்தில் யாரும் எதையும் தேடியறியும் வசதி இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பலர் உரிய இடங்களில் தேடாமல் நம்பிக்கை குறைந்த மூலங்களில் முட்டுப் பட்டு நிற்பதே பிரச்சினை.
  13. இந்த பிரதிநிதிகள் சபை விதிகளை மாற்றும் சக்தி தான் சபாநாயகர் பதவியின் மூலைக்கல், கவர்ச்சிகரமான அங்கம். அமெரிக்க காங்கிரஸின் (மேல் சபையும், கீழ் சபை) பெரும்பாலான செயல்பாடுகள் செயற்குழுக்கள் (committees) மட்டத்தில் தான் நடைபெறுகிறது. இந்தக் குழுக்களுள் சக்தி வாய்ந்த ஒரு குழுவாக Rules Committee இருக்கிறது. இதற்கு இன்னொரு பெயர் The Speaker's Committee - ஏனெனில் சபாநாயகரின் மறைமுகக் கட்டுப் பாட்டில் இந்தக் குழு இருப்பதால். பெரும்பான்மைக் கட்சி (இப்போது சிவப்புக் கட்சி) இந்தக் குழுவில் 2:1 என்ற விகிதாசாரத்தில் சிறுபான்மைக் கட்சியை விட மேலாண்மை வைத்திருக்கும். இந்தக் குழு வழியாக சபாநாயகர் விசேட விதிகளை (Special Rules) உருவாக்கலாம் , நிலை விதிகளை (Standing Rules) மாற்றியமைக்கலாம். மேலே குறிப்பிட்ட Motion to vacate the Speaker நிலை விதிகளில் அடங்குகிறதென நினைக்கிறேன். இப்படி ஒரு உறுப்பினர் பிரேரணை கொண்டு வந்து சபாநாயகரை மாற்றக் கோரும் வகையிலான மாற்றத்தை "மக்கார்தி தன் கழுத்தில் சுருக்குக் கயிற்றைக் கட்டி, கயிற்று நுணியை தீவிர வலது சாரிகளிடம் கொடுத்து விட்ட நிலை" என்று விபரிக்கிறார்கள். சிவப்புக் கட்சிக்கு இது ஏற்கனவே நடந்திருக்கிறது. 2015 இல் இப்படி இருந்த ஒற்றை உறுப்பினர் விதியைப் பயன்படுத்தி, ஒபாமாவோடு சில விடயங்களில் இணக்கமாகச் செயல்பட்ட சிவப்புக் கட்சிச் சபாநாயகர் ஜோன் பேனரை நீக்க ஆயத்தமானார்கள். ஜோன் பேனர் தானாகவே பதவி விலகிக் கொண்டார். அந்த நேரம் ஜோன் பேனருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் மக்கார்தி. ஆனாலும், 2015 இன் தீவிர வலது சாரிகள் மக்கார்தி சரிவரார் என்று போல் றையனை சபாநாயகராக்கினர். இப்ப பகிடி என்னவென்றால், 2015 இன் தீவிர வலதுசாரிகளை விட பல மடங்கு "நட் கேசுகள்" தான் 2023 இன் தீவிர வலது சாரிகள். மக்கார்தியின் பதவியாசை எப்படி இயங்கப் போகிறதென பொப் கோர்னோடு பார்த்து ரசிக்க ஆவலாக உள்ளேன்! 😂
  14. ஆனால், மக்கார்தியின் போராட்டம் முடியவில்லை இன்னும். 1. அதி வலதுசாரிகள் தங்கள் வாக்குகளை (4 வாக்குகள்) வழங்க மக்கார்திக்கு சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள். பெரும்பாலானவை வெளியே வராத நிபந்தனைகள். வெளியே கசிந்திருக்கும் ஒரு நிபந்தனை சபாநாயகரை நீக்கும் பிரேரணையை தனி ஒரு உறுப்பினர் தனித்துக் கொண்டுவர முடியும் (பின்னர் வாக்கெடுப்பில் சபாநாயகரை நீக்குவதா இல்லையா என்பது தீர்மானிக்கப் படும்). பெலோசி இருந்த போது இத்தகைய ஒரு பிரேரணை கொண்டுவர 50 உறுப்பினர்களின் கையொப்பம் அவசியம் என்ற விதி இருந்தது. தீவிர இடதுசாரிகளான "the Squad" என்று அழைக்கப் பட்ட AOC தரப்பு பெலோசியை தூக்கியெறிய முடியாமல் இந்த விதி காத்தது. 2. இனி வரும் ஒவ்வொரு சட்டவாக்கல் முயற்சியின் போதும் மக்கார்தி எதிர்ப்பாளர்கள் விடயங்களைத் தாமதப் படுத்த , தடுக்க முடியும். Freedom Caucus எனப்படும் குழுவில் இருக்கும் 20 பேரில், 4 பேர் மட்டும் நினைத்தால் சட்டவாக்கல் முயற்சியை இழுத்தடிக்கலாம். விவாதிக்கப் படும் சட்டத்தைப் பொறுத்து இந்த எண்ணிக்கை 4 ஐ விடக் கூடுதலாக இருக்கலாம். 3. ஆனால், மேலே இருக்கும் நிலை 2 நடந்தால், மக்கார்திக்கு உதவ நீலக் கட்சியின் ஒரு பகுதி முன்வரலாம். அப்படி அவர்கள் உதவ முன்வரும் போது சட்டவாக்கத்தில் அனுசரித்துப் போதல் என்பது நிகழலாம். மேல் சபையும், வெள்ளை மாளிகையும் நீலக் கட்சி கையில் இருக்கும் வரை இப்படி அனுசரித்துப் போக வேண்டிய ஒரு அழுத்தம் மக்கார்தி சார்ந்த சிவப்புக் கட்சிக்கு இருக்கும். 4. இந்த இடத்தில் ஒரு தெளிவான silver line : அண்டி பிக்ஸ், மற் கேற்ஸ் போன்ற ஒரு அதி வலதுசாரி சபாநாயகராக வராமல் மக்கார்தி வந்திருப்பது தான். மக்கார்தி வளையக் கூடிய Teflon முள்ளந்தண்டுடைய , பதவி ஆசை மிகுந்த ஒரு அரசியல் வாதி. ஒரு அதி வலது சாரியை விட இவரைக் கையாள்வது எதிரணிக்கு இலகுவாக இருக்கும்!
  15. பேத்தி நலமாக இருப்பது கேட்டு மகிழ்ச்சி. சிறு குழந்தைகளில் காய்ச்சல் அதிகரித்தால் வலிப்பு வரும். குழந்தைகளில் காதுப் பகுதியில் வெப்பமானியை வைத்து அளக்கும் வெப்பநிலை உடலின் உண்மையான வெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாகத் தான் காட்டும். இதனால், நாம் 98 F என்று காது வெப்பமானியில் கண்டு பிடித்தால் உண்மையான வெப்பநிலை 99 F ஆக இருக்கும். 100 F இற்கு மேல் சிறு குழந்தைகளின் காய்ச்சல் அதிகரிக்க அனுமதிக்கக் கூடாதென்பர். இப்படி ஏதோ நடந்திருக்கிறது உங்கள் பேத்தி விடயத்தில் என ஊகிக்கிறேன். மேலும், சிறு குழந்தைகளில் ஈரல் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையாததால் தேவையில்லாமல் மருந்துகள் கொடுக்க மாட்டார்கள். அனேக மருந்துகளை உடலில் இருந்து அகற்ற முழுமையாகத் தொழிற்படும் ஈரல் அவசியம்.
  16. கு.சா சொல்லும் விடயத்தை ஒரு கேள்வியாக இங்கே ஒரு செய்திச் சேவையில் ஒரு சிவப்புக் கட்சிப் பிரநிதியிடம் கேட்டார்கள்: இந்த இழுபறியைக் காணும் மக்கள் சர்வாதிகாரம், ஒரு கட்சி ஆட்சி என்பன மேற்கத்தைய ஜனநாயகத்தை விட மேலானவை என நினைக்கக் கூடுமல்லவா? அந்தப் பிரநிதியின் பதிலும் மேலே விசுகர், கோசான் சொல்வது போலத்தான் இருந்தது. எல்லாவற்றையும் ஒருவரின் அல்லது ஒரு கட்சியின் கையில் கொடுத்து விட்டால் ஒரே மாதிரியான முடிவுகள் (தற்போது ரஷ்யா போல) இலகுவாக எடுக்கலாம். முன்னோக்கி நகர்வது என்பது காலப் போக்கில் இயலாமல் போய் விடும், சில சமயங்களில் பின்னோக்கி நகர்வது (இப்போது ரஷ்யா நகர்வது போல) மட்டும் நடக்கும். எனவே என்ன தான் மொக்கேனப் பட்டாலும் மேற்கத்தைய ஜனநாயகம் தான் இப்போதுள்ள ஆட்சி முறைகளில் சிறந்தது. குறைந்த பட்சம் நாணயமாற்று விகிதத்தை உயர்வாக வைத்திருக்கவாவது உதவும் முறை - எனவே எங்கள் தமிழ் ஆட்களுக்கும் நல்லது தானே?😂
  17. கடஞ்சா "breaking" இல் முட்டுப் பட்டு நிற்கிறார் போல. ஒரு சொல்லை வைத்துக் கொண்டே ஒரு தியரி கட்டியெழுப்புகிற திறமையை வியக்கிறேன். (என் துறையில் நான் ஒரு அம்பாரம் data வை வைத்துக் கொண்டு ஒரு ஆய்வுக் கட்டுரை பிரசுரத்திற்காக எழுதவே வாரக் கணக்காகத் திண்டாடுவேன்! இவ்வளவு மக்காக இருக்கிறேனே என மண்டையில் குட்டிக் கொள்கிறேன்!😅)
  18. நுண்ணுயிர் எதிரிகளை (antibiotic) நீங்கள் வசிக்கும் நாட்டில் இருக்கும் மருத்துவர் பரிந்துரைக்காமல் எடுத்துக் கொள்ளாதீர்கள். முதலில்: அன்ரிபையோரிக் தேவையா என்பதை மருத்துவர் தான் தீர்மானிக்க வேண்டும். இரண்டாவது: தேவையெனின் எந்த அன்ரிபையோரிக் உங்கள் நாட்டில் பரவலாகக் காணப்படும் பக்ரீரியா வகையைக் கட்டுப் படுத்துகிறது என்பதையும் உங்கள் மருத்துவர் தான் தீர்மானிக்க வேண்டும். இதைத் தீர்மானிக்க உதவும் Antibiograms போன்ற தகவல்கள் மருத்துவரிடம் தான் இருக்கும். இது இரண்டும் இல்லாமல் பயன்படுத்தும் அன்ரிபையோரிக் வேலை செய்யாமல் போகலாம். அத்தோடு கோசான் சொன்னது போல நீண்ட காலப் போக்கில் நுண்ணுயிர் எதிரிகளுக்கான எதிர்ப்பைப் (antibiotic resistance) பரப்பலாம். மருத்துவர் சொல்வதற்கு மேலதிகமாக சில எளிய முறைகள் மூலம் உங்கள் சுவாசத் தொற்றுக்களை உடல் இலகுவாகக் கையாள வைக்கலாம்: 1. உப்புக் கொப்பழித்தல்: ஒரு தேக்கரண்டி (4-5 g) கறியுப்பை இளஞ்சூடான முக்கால்வாசி கோப்பை நீரில் கரைத்து காலை, மாலை gargle செய்து கொப்பழியுங்கள். சாப்பாட்டிற்கு முன்னர் செய்வது சிறப்பு. எங்கள் தொண்டையின் ஆரம்பப் பகுதியில் இயற்கையாகவே இருக்கும் பக்ரீரியாக்கள் தான் வைரஸ் தொற்றின் போது மேலதிக தொற்றைச் சில சமயங்களில் ஏற்படுத்துகின்றன. இவற்றை தற்காலிகமாக வைரஸ் தொற்றின் போது அகற்றும் வேலையை உப்புக் கொப்பழித்தல் செய்யும். 2. சூடான பானங்களையே அருந்துங்கள், தண்ணீராக இருந்தாலும். 3. மெந்தோல் (menthol) எனப்படும் யூகலிப்ரஸ் வாசனையை இரவில் படுக்கும் நேரங்களில் நுகரலாம். இதை விக்ஸ் மணப்பதாலோ அல்லது மெந்தோல் வாசனை ஆவியாக வெளிவிடும் ஈரப்பதன் கூட்டிகளைப் (humidifier) பாவிப்பதாலோ செய்யலாம். 4. உங்கள் வீட்டின் காற்று குளிர்காலத்தில் சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. அனேக நவீன வீடுகளில் காற்றைச் சூடாக்கி அனுப்புவதன் (forced air) மூலம் தான் வீடு சூடாக்கப் படுகிறது. இந்த காற்றில் இருக்கும் மாசுக்களை அகற்றும் வடிகட்டியை (filter) சாதாரணமாக 3 மாதங்களுக்கொரு முறை மாற்ற வேண்டும். ஆனால், அதிக சுவாச ஆரோக்கியம் பாதிக்கப் பட்டால் ஒரு மாதத்திற்கு ஒரு வடிகட்டி எனக் குளிர் காலத்தில் மாற்றலாம். இந்த வடிகட்டிகளிலும் 1000 முதல் 1500 mpr (micro particle rating) வரை உடையவை அனேக சுவாசத் தொந்தரவு தரும் மாசுக்களை அகற்றக் கூடியவை. விலை கூட என்றாலும், இவை மூலம் வரும் சுவாச ஆரோக்கியம் விலை மதிப்பற்றது. எல்லோருக்கும் அல்ல - உடற்பயிற்சி செய்து பழகியோருக்கு மட்டும்: 5. காய்ச்சல், உடல் உழைவு இல்லாத தொண்டைக் கரகரப்பு, இரவில் மட்டும் இருமல் என்று இருப்போர் பகலில் மிதமான உடற்பயிற்சி செய்வது சுவாச ஆரோக்கியத்திற்கு நல்லது. எங்கள் உடல் இயங்கும் போது தசைகளில் இருந்து வெளிவிடப் படும் சில சுரப்புகள் எங்கள் நோயெதிர்ப்பு சக்திக்கு பலம் சேர்ப்பதால் இது நிகழ்கிறது. கொசுறுத் தகவல் இந்த இடத்தில்: மனிதன் உட்பட ஏனைய விலங்குகளுக்கு ஆபத்தான பல வைரஸ்களுக்கு வௌவால் காவியாக இருக்கிறது. ஆனால், வௌவாலுக்கு இந்த வைரசுகளால் தீவிர நோயோ, மரணமோ வருவது மிக அரிது. இதன் ஒரு காரணம், வௌவால் பறக்கும் போது அது தீவிரமான உடற்பயிற்சி செய்வதால், அதன் உடலில் நோய்த் தடுப்பிற்கு அவசியமான சுரப்புகள் பெருமளவில் சுரக்கப் படுவது தான். எனவே, வௌவால் போல இருங்கள்!😎
  19. உங்கள் புரிதல் சரி. ஒரு வைரஸ் தொற்று ஏற்படும் போது அதனாலும் நோய் வரும் (primary infection), அதற்கு மேலதிகமாக பக்ரீரியாத் தொற்றினாலும் (secondary infection) நோய் வரலாம். எனவே, வைரஸ் தொற்று 7 நாட்கள் கடந்தும் சளி (அதுவும் மஞ்சள் நிறச் சளி) இருந்தால் அது பக்ரீரியாத் தொற்றாக இருக்கலாம். அன்ரிபையோரிக் வேலை செய்யும். ஆனால், சில சமயங்களில் பற்றீரியாத் தொற்றும் , அதிக சளியும் இல்லாமலே இருமல் அடுத்த 2 , 3 வாரங்கள் தொடரவும் செய்யும். இது தொற்றின் பின் விளைவு உடலில் தங்கி விடுவதால் நிகழ்கிறது. இதற்கு anti-histamines அல்லது ஏனைய சில இருமல் மருந்துகளும், சுடு நீர் போன்ற கை வைத்தியங்களும் உதவலாம்
  20. இங்க பாருங்கோ கடஞ்சா, இந்த "ஆதாரமில்லை, யூ ரியூபில் வந்தது, எனவே அது மெயின் மீடியாவில் வரவில்லை, எனவே அது இவ்வளவு உண்மை இவ்வளவு வீதம் பொய்" இப்படியெல்லாம் சிவிங்கம் மாதிரி இழுக்கலாம். மேற்கில் தணிக்கை மீறிய ஊடகவியலாளர் தண்டிக்கப் பட்டதை, ஒதுக்கப் பட்டதைக் காட்டுங்கள் என்றால் ஒரேயொரு ஆய்வாளரைக் கொண்டு வந்து அவரைக் கடைசியில் investigative journalist ஆகவும் மாற்றி விட்டீர்கள்! இது யூ ரியூபில் உண்மை தேடும் சதிக் கோட்பாட்டாளர்களின் predictable நடத்தை தான். ஆனால், நேரம் விரயமானாலும் இதைச் சுட்டிக் காட்டி எழுதுவது இந்த சதிக் கோட்பாட்டு ஈர்ப்பு என்பது தொற்றக் கூடிய ஒரு மனநிலை. அப்படி அது தொற்றிப் பரவியதால் தான் அமெரிக்கா இந்த இக்கட்டான நிலையில் இன்று இருக்கிறது, உலகம் மூன்றாம் போரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. மதுபானியோ, யாரோ: ஆதாரம் தர முடியாதா?, அப்படியானால் பேசாமல் இருக்க வேண்டியது தான். ஆதாரம் தர முடியாததை வெளியே சொல்லி, என்ன நன்மை நிகழ்ந்து விட்டது, ஒரு சதிக்கோட்பாட்டாளருக்கு அவல் கிடைத்ததை விட? எனவெ மதுபானிக்கு என் ஆலோசனை: "keep your pie hole shut!"😂
  21. மேலே கொஞ்சம் சந்தேக விதைகள், சதிக் கோட்பாட்டு விதைகள் தூவுகிறார்கள் என நினைக்கிறேன் (so predictable😂): ஓம், வட அமெரிக்காவிலும் சுவாசத் தொற்றுக்கள் அதிகரித்திருக்கின்றன. கோவிட் 19 அதில் பெரிய பங்கை வகிக்கிறது. ஆனால், இன்புழுவன்சா, ஆர்.எஸ்.வி. அடினோவைரஸ், பராஇன்புழுவன்சா வைரஸ் என ஒரு குழு வைரசுகளும் கணிசமான தொற்றுக்களுக்குக் காரணம். எனவே, எல்லா சுவாசத் தொற்றுக்களும் கோவிட் அல்ல!
  22. தரவுகள் அல்ல, "எழுதிய அபிப்பிராயத்திற்கு எழுதியவரே பொறுப்பு" என்பது தரவுகளை மட்டும் அடக்கியதல்ல. உங்கள் புரிதல் தவறானது. ஆனால் என் கேள்வி ஆரம்பித்த இடத்தில் இருந்து, அனேக சதித் திட்ட ஆர்வலர்கள் போல, வேறெங்கோ போய் நிற்கிறீர்கள் இப்போது. உங்களிடம், மேற்குலக ஊடகத்தால் அல்லது மேற்கின் அரசினால் தணிக்கை செய்த தகவலை மீறியதால் பின் விளைவை எதிர்கொண்ட ஊடகப் பரப்பில் பணியாற்றும் ஒருவரினது பெயர் கூட இல்லை என்பது தான் வாசிபோருக்குப் புரியும் விடயம்! இதைப் பூசி மெழுக, இராணுவ ஆய்வாளரெல்லாம் Press card ஓடு திரியும் பத்திரிகையாளராகக் காட்ட வேண்டிய தேவை வந்து விட்டது! பல்லாயிரம் பேர் வேலை செய்யும் பிரதான ஊடகங்களில் பொய்யையெல்லாம் சொல்லி விட்டு மொக்கேனப் படாமல் இருக்க முடியாது, அதுவும் சி.ஐ.ஏ யின் கோவணத்தையே hackers உருவி கொடியில் போட்டு விடும் காலத்தில். ரஷ்யாவில், சீனாவில் ஒரு மறைக்க விரும்பும் செய்தியை வெளியே விட்டால் ஆளே காணாமல் போய் விடும் - ஆய்வாளர் அல்ல, செய்தியாளர்! உங்கள் "மென்ரல் மேக்கப்பிற்கு" வரும் அளவிற்கு நான் இன்னும் "அதிகம் யோசிக்க" ஆரம்பிக்கவில்லை! வேறு பயனுள்ள வேலைகள் இருக்கின்றன என்பதால் அனேகமாக அது நடக்காது!😂
  23. வீட்டைக் காற்றோட்டமாக வைத்திருக்க வேணும் தான், அதுக்காக எலி, பெருச்சாளி, கரப்பான் எல்லாம் உள்ளே அனுமதிக்கும் அளவுக்கு திறந்து வைப்பதில்லையல்லவா?😂 அது தான் காரணம். புலிகள் இந்தியாவின் சில சஞ்சிகைகளைத் தடை செய்தது போல, 40 களில் கோயபல்ஸின் வானொலிச் சேவைகளை பிரிட்டனில் இடையீடு செய்தது போல, RT யும் தடை செய்யப் பட வேண்டிய ஒரு பொய் பிரச்சார ஊடகம் தான். ஆனால், நவீன காலத்தில் இதெல்லாம் முற்றாக நடைமுறையில் தடையாகாது. நீங்கள் தாராளமாக இணைய வழியில் இரு காதுகளையும் கொடுத்து விட்டு இருக்கலாம்! பூந்தோட்டம் வைத்து அறுவடை செய்வார்கள்!😎
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.