Everything posted by Justin
-
துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி
அமெரிக்காவின் நீதித்துறை பலமாக இருக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம். இது ஒரு "கறுப்பு வெள்ளை" போல தெளிவான வழக்கு. வழக்கு நடந்தது பைடன் குடும்பம் கோலோச்சும், பைடன் பல ஆண்டுகளாக செனற்றராக இருந்த டெலவேயார் மாநிலத்தில். ஆனால், இது ஒரு சமஷ்டி வழக்கு. எனவே பைடன் ஆட்சியை விட்டுப் போகும் போது ஹன்ரருக்கு மன்னிப்பு வழங்குவார் என்று பேசிக் கொண்டார்கள். போன வாரம், தான் "தண்டனை கிடைத்தாலும் ஹன்ரருக்கு மன்னிப்பு வழங்கப் போவதில்லை" என பைடன் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். மறு பக்கம், ட்ரம்ப் தன்னைத் தானே "சமஷ்டி வழக்குகளில் கிடைக்கக் கூடிய தண்டனைகளில் இருந்து மன்னித்துக் கொள்வாரா இல்லையா?" என்றால் எதுவும் சொல்ல மறுக்கிறார்😂.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
ஊகிக்க இயலவியல்லையா? மஹிந்த (சந்திரிக்காவின் பின்னால் மறைந்து வந்தவர் என்ற வகையில்) போரை ஆரம்பிப்பார் என்பது தெரிந்திருக்க வேண்டும். எனவே, ரணிலைத் தோற்கடிக்கும் வகையிலான தேர்தல் புறக்கணிப்பை தமிழ் மக்களிடம் திணித்திருக்கக் கூடாது.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
உங்கள் "அரசியல் அறிவில்" ஒரு துளியை இங்கே பகிர்ந்து இந்தக் கூற்றை விளக்கலாமே? போரிட விருப்பமில்லாத ராஜபக்ஷ அமெரிக்காவில் சிவிலியனாக இருந்த கோத்தாவையும், வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற இரண்டாம் நிலை இராணுவ அதிகாரிகளையும் முன்னிறுத்தி படைகளைப் பலப்படுத்தினார் என்கிறீர்களா😎? ரணிலை, அவர் இயக்கத்தை உடைத்தார் என்ற கோபத்தில் பழிவாங்க எடுத்த முடிவு தான் புலிகள் வாக்களிப்பைப் பகிஷ்கரித்தது. இந்த தூர நோக்கில்லாத கோபாவேஷ முடிவை "இராசதந்திர முடிவு" என்று காட்ட பல தியரிகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. உங்களுடையது கொஞ்சம் புதிதாக இருக்கிறது!
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
கந்தையர், 2005 ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு கொழும்பில் 51% வாக்குகள். யாழ்ப்பாணத்திலும், வன்னி மாவட்டத்திலும் பதிவான 20 ஆயிரத்திற்கு உட்பட்ட வாக்குகளில் 70% ரணிலுக்கு. இதே போல ரணில் 70% வாக்குகள் பெற்ற இன்னொரு இடம் நுவரெலியா! இங்கே உங்களுக்குப் பின்னணி புரிகிறதா? தமிழ் மக்கள் தடுக்கப் பட்டிருக்கா விட்டால் ரணில் தான். அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பது எவருடையதுமான ஊகம். ஆனால், நடந்து விட்ட 2009 அழிவு ஊகமல்ல, நிஜமான சம்பவம்!
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
ஏன்? அவர் ஒருவரைச் சுட்டிக் காட்டினால் அவரைத் துரோகியில்லை என்று விடுவீர்களா😂? உங்களுக்கு யோசிப்பு இயலுமை இல்லாமல் இருக்கலாம், தாயக மக்களுக்கு/வாக்களர்களுக்கு கணிசமாக இருக்கிறது என நான் நம்புகிறேன்!
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
துரோகிப் பட்டம் எத்தனை தரம் தான் கொடுக்கிறது? ஒருக்காத் தான் தரலாம், அதை வைத்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியது பட்டம் வேண்டியவரின் பொறுப்பு😂! ஆனால்: சொன்ன விடயங்களோடு ஒப்புதல் தான்! தனி பொது வேட்பாளர் வேண்டாத வேலை, இருக்கும் 3 பேரில் பேச உகந்தவர் யாரென்று மக்கள் தீர்மானிக்கட்டும்.
-
நன்றி கெட்ட உலகமிது 😡
அடி ஆத்தி?? நீங்க நல்லவரா கெட்டவரா😂? இப்படி தமிழ் நாட்டில் எழும் தனித்தமிழ் ஆட்சியில், எந்த பரிசோதனையை வைத்து தமிழ், சுத்த தமிழ், அரைத்தமிழ் என்று தீர்மானிப்பார்களாம்? நாசிகள் செய்தது போல, ஒரு பாட்டன்/பாட்டி யூதராக இருந்தால் ஓகே, இரு பக்க பாட்டி/தாத்தாக்களும் யூதரெனின் "Juden- யூதன்" என்றது போல ஏதாவது செய்வாங்களா😅?
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
ஒன்று துறக்க ஆயத்தப் படுத்த வேண்டும், அல்லது "நான் AfD இற்கு வாக்களித்தவன்" என்று உடலில் வெளித்தெரியும் பகுதியில் பெரிதாகப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும். ஏன் என்பதற்கு பதிலாக அமெரிக்காவில் நடந்த ஒரு உதாரணம் சொல்கிறேன். 2016 இல் ட்ரம்ப் "முஸ்லிம்களுக்கு விசா கொடுக்காமல் செய்வேன்" என்று பிரச்சாரம் செய்த போது பல மோடி வாலா இந்தியர்கள் ட்ரம்பை வெளிப்படையாக ஆதரித்தனர். சிலர் அவருக்கு வாக்களித்திருக்கவும் கூடும். அவர் வென்றார். அவர் வென்ற பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசம் அமெரிக்காவில் அதிகரித்தது. கன்சாஸ் நகரில் இரு மண்ணிறத்தோல் குடியேறிகளை ஒரு ட்ரம்ப் விசுவாசி துப்பாக்கியால் சுட்டு, ஒருவர் சாக மற்றவர் காயத்துடன் தப்பினார். "மத்திய கிழக்கில் இருந்து வந்த பயங்கரவாதிகளென நினைத்து சுட்டேன்" என்றார் ட்ரம்ப் ஆதரவாளர். சுடப் பட்ட மண்ணிறத் தோல் குடியேறிகள் இருவரும் தென்னிந்தியர்கள். எனவே, இப்பவே பச்சை குத்த ஆயத்தப் படுத்துங்கள்😂!
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
வாத்தியார், எதிராக எழுத வேண்டுமென்பதற்காக அர்த்தமில்லாத கருத்துக்களை எழுதும் நபராக மாறாதீர்கள். சொல்லப் பட்ட தரவின் விளக்கம்: ஐரோப்பிய நாடுகள், 1918 இலும், மீண்டும் 1940 களிலும் அமெரிக்க இராணுவ உதவியினால் தான் அதி வலது சாரிகளின் பிடியில் இருந்து மீண்டன. இது ஐரோப்பாவில் வந்தேறு குடிகளாக இருக்கும் சில தமிழர்களுக்கு இன்னும் புரியாத வரலாறு. "வாத்தியார்" என்று பெயரை வைத்துக் கொண்டு நீங்களும் அவர்கள் போல மாற வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்😎.
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
கடந்த வாரம் தான் அதி வலது சாரி நாசிகளின் பிடியில் இருந்து மேற்கு ஐரோப்பாவை மீட்க இலட்சக்கணக்கான அமெரிக்க, பிரிட்டன், கனேடிய இளைஞர்கள் உயிரைத் தியாகம் செய்து நோர்மண்டியில் வந்திறங்கிய (D-Day) 80 வருடத்தை நினைவு கூர்ந்தார்கள். இனி இந்த நவீன அதி வலது சாரிக் குப்பைகள் ஐரோப்பாவை மீளவும் ஒரு இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும்! ஏதாவது ஆனால், இருக்கவே இருக்கிறார்கள் அமெரிக்கர்களும், கனேடியர்களும், மீண்டும் வந்து மீட்டுக் கொடுக்க! இப்படித் தான் ஓடுகிறது ஐரோப்பாவின் வாழ்க்கை வட்டம்😎!
-
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் கையளிப்பு!
சிறுநீரகம் செயலிழந்தவர்களில் பயன்படுத்தும் dialysis machine ஆக இருக்கும். அல்லது, இதய சத்திர சிகிச்சைகளின் போது பயன்படும் cardiopulmonary bypass machine ஆக இருக்கலாம். விலையைப் பார்க்கையில் dialysis machine என்று ஊகிக்கிறேன்.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
சூசை அவர்கள் எல்லாம் முடியப் போகும் நேரத்தில் சொன்னது பொதுவான ஒரு கருத்து என்பது என் அபிப்பிராயம். அதை ஒலிப்பதிவு செய்து வைத்தது சீமானுக்கு வாய்ப்பாகப் போய் விட்டது. எனவே "கப்பில் கிடா வெட்டிய கில்லாடியாக" சீமான் வெளிப்படுகிறார். அவர் பின்னால் மண்டை கழுவிய செம்மறி ஆடுகளாக பலர் தொடர்கிறார்கள்!
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
ஓணாண்டியார், சுகமா? கனகாலம் கண்டு. அவசரப் பட்டுட்டியள். புலிகள் தத்துவத்தைப் பேச லைசென்ஸ் வேண்டுமென்றோ அல்லது பேசவே கூடாதென்றோ சொல்லவில்லை. எதற்காகப் பேசுகிறோம், பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் தேவை என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன். ஒரு தமிழக அரசியல் வாதி, தன் ஊரில் வாக்குகள் பெற, ஈழவரிடம் நிதி பெற, அதனால் தன் அரசியல் கட்சியை ஆட்சியில் அமர்த்த புலிகளின் கொடியை, பிரபாகரன் படத்தைப் பயன்படுத்துவது தவறு என்பது என் அபிப்பிராயம். ஆனால், யாராவது "ம்.." என்றால் "ஐயோ கொச்சைப் படுத்தி விட்டார்" என்று ஒப்பாரி வைக்கும் யாழ் கள சீமான் விசிறிகளுக்கு சீமான் செய்வது "மகிமைப் படுத்தலாக" தெரிவதில் ஆச்சரியமில்லை என நினைக்கிறேன்😎. டிசைன் அப்படி!
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
சீமான் புலிகளின் சின்னத்தையும், கொடியையும் ஆட்டையைப் போட்டிருக்கா விட்டால், அவர் இது வரை பயணித்திருக்கவே முடியாது. ஈழத்தமிழர்களும் அவரைக் கணக்கிலெடுத்துப் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் (இப்போதும் தாயகத்தில் சீமான் பற்றி உள்ளூர் ஊடகங்கள் கணக்கிலெடுப்பதில்லை!). "நதி மூலம் ரிஷி மூலம்" சீமான் பார்த்தால் அவருடைய பரம்பரை பற்றி சுட்டிக் காட்டிப் பேசுவதில் நியாயம் இருக்கிறது. பானையைப் பார்த்து சட்டி கறுப்பென்று சொல்ல முடியாதல்லவா😎?
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
கணக்கில் புலியல்ல, ஆனால் numerical data என்ன சொல்கிறது என்று தேடுவது தான் என் பிரதான தொழில். அந்த அனுபவத்தில்: தொகுதிகளின் எண்ணிக்கையால், கிடைத்த வாக்குகளின் வீதத்தைப் பிரித்தால் வரும் பதில், சிம்பிளாக ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வீதம் வாக்கு விழுந்திருக்கிறது என்று காட்டும். இதன் அர்த்தம் என்ன? போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை ஒரு கட்சியின் முடிவு, அது கட்சியின் பிரபலத்தைப் பிரதிபலிக்காது. அப்படிப் பல தொகுதிகளில் நின்று, கொஞ்சூண்டு வாக்குகளை வென்றால், இப்போது நா.த.க செய்வது போல "இது வெற்றி" என்று கொண்டாடலாம். ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் (சராசரியாக) 1% இற்கும் குறைவான வாக்குகளே நாதகவிற்குக் கிடைத்திருக்கிறது என்பது கொண்டாடக் கூடிய தரவு அல்ல.
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
பௌலா ஜோன்ஸ் என்ற பெண் தொடுத்த சிவில் கேஸை (மொனிகா கேஸ் அல்ல), ட்ரம்பின் கிரிமினல் கேசோடு ஒப்பிடும் அளவுக்கு "தெளிவாக" இருக்கிறீர்கள் நெடுக்கர்! அமெரிக்காவில் convicted felon ஆக வருவது மிகக் கஷ்டம் -இது ட்ரம்பின் வரலாற்றுச் சாதனை, ஆனால் சிவில் கேஸ் (இது அரச தரப்பு தொடுக்கும் வழக்கு அல்ல) போறவன் வாறவன் எல்லாம் போடலாம், வெல்லலாம். அதைத் தான் "செரிப் பழமாக" பிடுங்கி வந்து இங்கே போட்டிருக்கிறீர்கள். அது சரி, ட்ரம்பும் ஒரு சிவில் கேசில் இதை விட 3 மடங்கு பணம் ஒரு பெண்ணுக்குக் கட்டினார் (அந்தப் பெண்ணைக் கிண்டல் பண்ணியவர் கூட உங்க குறுக்கால மறுக்கால ஓடித் திரியிறார்😎!). கிளின்ரனுக்கும் வழக்கு, ட்ரம்புக்கும் வழக்கு, தற்போது ஹன்ரர் பைடனுக்கும் வழக்கு என்றால் உங்கள் அமெரிக்காவின் ஊழல் நீதி வாதம் அடிபட்டுப் போகிறதே?
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
ஏனெனில் தமிழ்நாடு பீகார் அல்ல, குஜராத் அல்ல! கல்வியில், பொருளாதாரத்தில், சமூக அபிவிருத்தியில் முன்னேற வேண்டுமானால், "வாதக் குணம்😎" இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை முன்னுதாரணங்கள் மூலம் நிரூபித்திருக்கும் ஒரு மாநிலம். அங்கே போய் ,மக்களிடம் "தமிழ் ஜீன்", பச்சைத் தமிழன், ஆங்கிலம் கக்கா (ஆனால், என் மகன் ஆங்கில மீடியம் தான்😂!) என்று அவித்தால் யார் போடுவார்கள்? மண்டை கழுவிய சிலர் எடுபடுவர், ஏனையோர் தவிர்த்து விடுவர்!
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
ஆனால், சீமான் தம்பிகளும் (சில சமயங்களில் சீமானும்) ஆள்வது பற்றியா சொல்கிறார்கள்? பல தசாப்தங்கள் முன்பு ஒன்றாக இருந்த தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர் என்ற மொழி வாரி இனங்களில் இருந்து வந்த வம்சாவழியினர் "தமிழர்" அல்ல என்றும், அயல் மாநிலத்தவர் தொழில் தேடி வந்து குடியிருப்பதையும் கூட தன் பிரச்சாரத்திற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள அல்லவா செய்கிறார்கள்? இது தமிழனை தமிழன் ஆள்தல் என்ற வகைக்குள் அல்ல வருகிறது. இது கடைந்தெடுத்த இனத்தூய்மை வாதம். அப்படி இனத்தூய்மை வாதம் பேசும் சீமானுக்கே மலையாள அடி இருக்கிறது என்கிறார்கள், மனைவி தெலுங்கர் வழி என்கிறார்கள். இப்படியெல்லாம் நடைமுறை இருக்க, இனத்தூய்மை வாதம் பேசி வாக்குக் கேட்கும் வரை, நா.த.க ஒரு முதன்மைக் கட்சியாக உருவாகாது என்பது தான் என் கருத்து. தற்போது ஈழவரிடையேயும் உருவாகிக் கொண்டிருக்கும் "கிறிஸ்தவன் தமிழனா" என்ற கேள்வியின் தோற்றுவாய் எங்கேயிருந்து வந்திருக்கும் என்கிறீர்கள்? அதைக் கேட்கும் பலர் நாதக ஆதரவாளர்களாக இருப்பதையும் கவனித்திருக்கிறேன். சிங்களம் - ஈழத்தமிழ் வேறு பிரச்சினை.அது மட்டுமன்றி தமிழ் நாட்டில் நா.த.க என்ற இனத்தூய்மை வாதக் கட்சி ஆண்டால் ஈழவருக்கு நன்மை கிடைக்கும் என்று உங்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பும் ஆதாரங்களற்றது.
-
யாழில். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வு – சிவில் சமூகம் புறக்கணிப்பு!
இவை கூட்டம் கூட்டினா அவை வராயினம், அவை கூட்டம் போட்டா இவை போகாயினம்...இந்த இலட்சணத்தில "ஒற்றுமையாக" ஒரு பொது வேட்பாளருக்கு எல்லோரும் வாக்குப் போட வேண்டுமென்று அட்வைஸ் மழை😎!
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
கிளின்ரன் - மோனிகா விடயத்தில் "வழக்கு" நடந்ததோ நெடுக்கர்? எங்க? சந்திரனிலா😎?? (நீங்கள் எனக்கு பதிலாக எதை எழுதினாலும் பச்சை போட ஒரு "முதுகு சொறியும்" குழு இருக்கும்! பப்பா மரம் தான் என்றாலும் பார்த்து ஏறுங்கோ😊!)
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
தற்போது நடக்கும் விடயங்களை செய்தித் துணுக்குகளாகப் பார்த்து, யானை பார்த்த குருடன் போல இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அவசர அவசரமாக பைடன் நியமித்த நீதிபதிகள் எத்தனை பேர்? ட்ரம்ப் தன் காலத்தில் நியமித்த நீதிபதிகள் எத்தனை பேர்? இவர்கள் எந்த வகை நீதிபதிகள் (federal? appellate) ? ட்ரம்பிற்கெதிராக சமஷ்டிக் கோர்ட்டுகளில் இருக்கும் வழக்குகள் எத்தனை (அது தான் சமஷ்டி நீதிபதிகளின் கீழ் நடக்கும்), மாநிலக் கோர்ட்டுகளில் இருக்கும் வழக்குகள் (பைடன் நியமிக்காத நீதிபதிகளின் கீழ் வருவன) எத்தனை? இப்படி ஏதாவது தேடினீர்களா? அல்லது, ட்ரம்ப் நியமித்த நீதிபதிகளே ட்ரம்ப் கேஸ்களில் சாட்சியங்களையும் சட்டங்களையும் மட்டும் அடிப்படையாக வைத்து நடப்பதைச் செய்திகளில் பார்க்கவில்லையா? ஒரு தீர்ப்பு வருகிறது. உடனே ஒரு அமெரிக்க அதிபர் வழமையாக நியமிக்கும் நீதிபதிகள் அவசரமாக நியமிக்கப் பட்டு எதிராளிக்கெதிராக நகர்த்தப் படுகின்றனர் என்ற புரிதலை ஏற்படுத்த தீர்ப்பை விரும்பாதோர் - ட்ரம்ப் விசிறிகள்- கதையைப் பரப்புவர் தான். இதையெல்லாம் கேட்ட நீங்கள், தீர்ப்பை வழங்கியது 12 சாதாரண நியூ யோர்க் மக்கள் என்பதை cognitive dissonance போல மறந்து விட்டீர்களென நினைக்கிறேன். ஜனவரி 6 இல் அமெரிக்க அரசியலைப்பிற்கெதிராக கலகத்தைத் தூண்டிய போதே ட்ரம்ப் எந்த அரச பதவியையும் வகிக்கும் தகுதியை இழந்து விட்டார் என்பது தான் பல நிபுணர்களின் கருத்து. அதையே அந்த இரு முன்னாள் நீதிபதிகளும் சொல்லியிருப்பர், அதிசயமில்லை. இதனால் தான் இரண்டாம் முறை ட்ரம்ப் impeach செய்யப் பட்டார், அவரது அரசியல் சகாக்கள் காப்பாற்றினர்.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
வளரட்டும் தாராளமாக! "பச்சைத் தமிழ்" , "தமிழ் ஜீன்" என்று முட்டாள் தனமான கருத்துக்களை தமிழ் நாட்டோடு மட்டும் மட்டுப் படுத்திக் கொண்டு தன் அரசியலைச் செய்தால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால், இன்று ஈழத்தமிழர்களிடையேயும் இந்த முட்டாள் கருத்துக்களைப் பரப்பி அவர்களை அறிவலட்சியம் கொண்ட மடையர்களாக மாற்றும் வேலையில் நா.த.க வெற்றி பெற்றிருக்கிறது. நா.த.க ஆளும் கட்சியாக வந்தால் கூட இந்த அறிவலட்சியம் பரப்பும் வேலையை எதிர்க்க வேண்டியிருக்கும்.
-
மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை அமைப்பு
இது சிவசேனையின் இன்னொரு பிராண்ட் பெயர் என்பதைத் தவிர வேறு காரணங்கள் இல்லை. அமெரிக்காவில் கூட இந்தியாவின் RSS அமைப்பு HSS என்ற இன்னொரு பெயரில் 501(c) தொண்டு நிறுவனமாக பதிந்து செயல்படுகிறது. இதன் காரணம், RSS அமைப்பை தீவிரவாதப் போக்குடைய ஒரு அமைப்பாக அமெரிக்காவின் சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவும், Southern Poverty Law Center உம் கண்காணித்து வருகின்றன. எனவே, "நான் அவன் இல்லீங்க" என்ற பாணியில் HSS என்ற பெயரில் RSS செய்யும் அதே வேலைகளை அமெரிக்காவில் செய்கிறார்கள்.
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
இதற்குத் தான் அடிப்படை என்னவென்று கேட்டேன். "எனது நடுநிலைமையான பார்வை" என்று உங்கள் பார்வையையே "தரவாக" எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் தொடர்ந்து உங்களை கேட்கவில்லை😎. அமெரிக்கன் பிராண்ட் குத்துக் கரணம் அடிக்க முயன்றது உண்மை. தேர்தலை ஏற்றுக் கொள்ளாமல் ஜனவரி 6 இல் கலகத்தை த் தூண்டிய போது தான் குத்துக் கரணம் உச்சம் தொட்டது. அது முதல் ட்ரம்ப் அணி மீது ஆதாரங்களுடன் குற்றச் சாட்டுகளும், தற்போது ஒரு தீர்ப்பும் வந்திருக்கிறது. இந்த வழக்குகளின் பின்னால் இருக்கும் சட்டவாளர்களின் உழைப்பை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென நினைக்கிறேன். முடிந்தால், ஒரு சாம்பிளுக்கு இந்த வழக்கிலேயே ட்ரம்பிற்கு எதிராக அவர்கள் நீதிமன்றில் காட்டிய நுணுக்கமான சான்றுகளை (exhibits) ஒரு தடவை போய் பாருங்கள். இதற்கு உள்ளடி வேலை அவசியமில்லை, ட்ரம்பே தூக்கிக் கொடுத்திருக்கிறார் சாட்சியங்களை. அந்தளவுக்கு சட்டமும் தெரியாத, தன் லோயர் மாரையும் செயல்பட அனுமதிக்காத ஒரு முட்டாப் பீசு அவர்😂!
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
நீங்கள் "ட்ரம்பை நிரபராதியாக்கும் தகவல்கள்" என்று குறிப்பாகத் தேடினால் இது உட்பட்ட பல செரிப் பழங்கள் கிடைக்கும், நீங்களும் சுவைத்து இங்கே இருக்கும் "ட்ரம்ப் காதலர்களோடும்"😎 பகிரலாம், நல்ல விடயம் தான். ஆனால், சில நூறு பக்கங்கள் இருக்கும் கேஸ் transcript, நீதி மன்ற தளத்தில் இருக்கிறது, அதில் போய் மைக் கோஹனின் சாட்சியத்தை உறுதி செய்த ஏனைய சாட்சிகளையும் ஒருக்காப் பார்த்தால் இப்படி செரிப் பழம் பிடிங்கி மெனக்கெடத் தேவையில்லை. ஜூரர்கள், deliberate செய்யும் போது திரும்பி வந்து ஒரு குறிப்பிட்ட சாட்சியத்தை மீள தாங்கள் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள், அதையும் ஒரு தடவை யாரென்று தேடிப் பாருங்கள். அதைக் கேட்ட போதே தீர்ப்பு எப்படியிருக்கப் போகிறதென்று உள்ளூரில் இருப்போருக்கு விளங்கி விட்டது. பி.கு: கேஸ் மாநில கேஸ், சமஷ்டி கேஸ் அல்ல. பைடன் நிர்வாகம், ஆட்கள் எப்படி செல்வாகுச் செலுத்துவர்? இது நாசாக் கதை மாதிரிப் போகும் போல இருக்கே😂?