Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7218
  • Joined

  • Days Won

    24

Everything posted by இணையவன்

  1. அதேபோல் வடபகுதிக்கு ஒதுக்கப்படும் நிதியைத் தகுந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் கூட்டமைப்பு இதனைச் சரியாகச் செய்யவில்லை.
  2. நூலகம் எரிக்கப்பட்டதைத் தமிழர்களின் அறிவு ஒடுக்கப்பட்டது என்பதை விட எமது வரலாற்றுச் சான்றுகளை அழித்த செயலாகவே நோக்க வேண்டியுள்ளது. தற்போது நூலகம் நூலகமாக மட்டுமே இருக்குமானால் இதைக் கண்காட்சிக் கூடமாகவே பார்க்க வேண்டி வரும். அறிவியல் சார்பாக எவ்வாறு எதிர்காலத்தில் இதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கலாம் என்று ஆலோசிக்கப்பட வேண்டும்.
  3. பொருட்களின் விலையைக் கண்டபடி உயர்த்துவதை விட VAT யில் அரசங்கத்துக்கு வருமானம் அதிகரிக்கும். சாதாரண மக்கள் வேறு எதர்க்கும் வரி கட்டுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் வசதியாக வாழும் ஒருவர் தனது வீட்டுக்கு வருடத்துக்கு 50 ரூபா வரி கட்டுவதாகச் சொன்னார். இலவசக் கல்வி மருத்துவம் உள்ள நாட்டில் வரிகள் அதிகரிக்கப்பட்டால் மக்கள் உழைப்பை நோக்கிச் செல்வார்கள். நான் மேலே வரி என்று சொன்னது பொதுவாக எல்லா வரிகளையும்தான்.
  4. வரி அதிகரிக்கப்படுவது நல்லது. அதேபோல் வரிப்பணம் மக்கள் பணம் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்பட வேஎண்டும்.
  5. நன்றி வசீ. ஆரம்ப முதலீட்டாளர் என்பதால் எனது stop loss இனை 50% க்குக் கீழ் குறைக்க முடியாது. 🙂 forex கடினமனதுதான். கண்ணில் எண்ணை விட்டு எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
  6. நன்றி சுவி அண்ணா. குறைந்த முதலீடாக இருந்ததால் அதி கூடிய றிஸ்க் எடுத்தேன். பங்குச் சந்தை அதிஸ்டச் சீட்டு வாங்குவது போல் அல்ல என்பதை இதனுள் நுளைந்தவுடனேயே புரிந்து கொள்ளலாம். புதிதாகப் பங்குச் சந்தையில் இணைபவர்களில் 10 இல் 2 பேர் மட்டுமே நின்றுபிடிப்பதாகக் கூறினார்கள். அந்த 2 பேரில் நானும் இருக்கக் கூடாதா என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் பெற்றுக் கொண்ட அனுபவங்களுடன் ஆறுதலாக மீண்டும் புதிய முதலீட்டுடன் இறங்க உத்தேசித்துள்ளேன்.🙂
  7. இந்தத் திரி தந்த ஊக்கத்தினால் 700 ஈரோக்களுடன் அனுபவத்துக்காக 3-4 மாதங்களுக்கு முன்னர் நானும் பங்குச் சந்தையில் இறங்கினேன். பங்கு நிறுவனங்களின் தவணை நிதி அறிக்கைகளை ஆராய்வதும் அறிக்கை வெளியாவதற்கு முன்கூட்டியே குறைவான விலையில் பங்குகளை வாங்குவதுமாக ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நல்ல இலாபம் கிடைத்தது. பின்னர் NASDAQ, CAC40, DAX40 போன்றவற்றில் அதிக இலாபம் அடையலாம் போல் தெரிந்தது. சில வாரங்களிலேயே 1500 ஈரோக்களை எட்டிவிட்டேன். உக்ரெய்ன் போர் ஆரம்பித்தபோதுதான் வீழ்ச்சி ஆரம்பமானது. ஒரே நாளில் 300 ஈரோக்களை இழந்தேன். பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. படிப்படியாகக் குறைந்து 300 ஈரோவுக்கு வந்தது. 4 நாட்களுக்கு முன்னர் எல்லவற்றையும் சுருட்டி தங்கத்தில் முதலிட்டேன். இன்று எல்லாம் இழந்து 90 ஈரோவில் நிற்கிறது. 🤣 நான் பெற்றுக் கொண்டது நல்ல அனுபவம். ஆனால் உங்களைப்போல் சந்தை எதிர்காலத்தை ஆய்வு செய்ய முடியவில்லை.
  8. விளக்கத்துக்கு நன்றி வசி. நிச்சயமாக ஒரு சில நாளில் 1900 இனைத் தாண்டிவிடும் என்றே உறுதியாக நம்பினேன். இருந்தாலும் 1300 வரை இறங்கும் என்பதையும் நம்பக் கடினமாக உள்ளது.
  9. நேற்று Nasdaq 5 வீதத்தை இழந்தது. இது கோவிட் வீழ்ச்சிக்குப் பின்னரான பாரிய சரிவாகும். தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட விலையேற்றம் முடிவுக்கு வருவதாகக் கூறுகிறார்கள். அமேசன் 7 வீதத்துக்கு மேல் சரிந்தது. தங்கம் வெள்ளி போன்றவை மிகக் குறைவான விலையில் உள்ளன. முதலீடு செய்ய விரும்புபவர்கள் இவற்றில் முதலிடுவது உறுதியானதாக இருக்கும். தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் பெறுமதி குறைவதால் Bit coin உம் சேர்ந்தே இறங்குகிறது.
  10. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சுவி அண்ணா !
  11. @பகிடி, உங்கள் கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பொன்றைத் தந்தால் இதனை யாழ் 24 அகவைக்கு மாற்றி விடுகிறேன்.
  12. இந்த வருடம் Bit coin 20k வரை செல்லும் என்று கூறுகின்றனர். Ethereum இன் ஏற்ற இறக்கம் Bit coin இனை ஒத்ததாக இருந்தாலும் சில வேளைகளில் கணிசமான முன்னேற்றம் தெரிகிறது.
  13. கபிதான், பிரெஞ்சு பத்திரிகைகள் ரஸ்ய தமிழ் செய்திகளைப்போல் பொய்களை அள்ளிக் கொட்டுவதில்லை. பல தடவை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் அவர்களது கொன்றபோதும் தாங்கள் சுதந்திரமாக எழுதுவதை நிறுத்தப் போவ்தில்லை என்ற கொள்கை உடையவர்கள். இங்கும் பக்கச்சார்பான பத்திரிகைகள் உண்டு. எல்லாவைற்றையும் படிப்பதுண்டு. போர் நிலமை உங்களுக்குத்தான் புரியவில்லை. இத் தலைப்பின் தொடக்கத்திலேயே தமிழ்சிறி மேற்கோள் காட்டியதுதான் புட்டினின் சூழுரை. அது ஏன் சொன்னது என்பது திரியின் தலைபில் உள்ளது. நான் ஆரம்பத்தியேயே குறிப்பிட்ட RS-28 Sarmat ஏவுகணை பற்றி இன்னும் தெரிந்துகொள்ளவில்லை என்றால் தேடிப் பாருங்கள். ஒருவன் வாளுடன் நின்று கிட்ட வா பார்க்கலாம் என்று சண்டித்தனம் காட்டுவது அவனோடு கொஞ்சி விளையாடுவதற்கா ? அதுவும் ஒரு பொறுப்புள்ள வல்லரசுத் தலைவரின் பேச்சா இது ? அமெரிக்கா பாவித்த அணுஆயுதத்தை இலகுவாக மறந்துவிட்டதாகக் கூறியுள்ளீர்கள். மேலோட்டமாக வாசித்துவிட்டுக் கருத்தெழுதியுள்ளீர்கள். அதனை இதே திரியில் ஏற்கனவே அழுத்தமாகக் கூறி விட்டேன். இன்னொரு விடயம். ஐநா வில் ஈழத் தமிழருக்கு ஆதரவான தீர்மானங்களை ரஷ்யா எதிர்த்து வாக்களித்து வந்துள்ளதுடன் சிங்கள அரசுக்கு ஆதரவாக வாதாடியும் உள்ளது. இந்த ஒரு காரணமே போதும், ஈழத் தமிழனாகிய எனக்கு புட்டினின் சூளுரைகளைப் பார்த்துப் பெருமைப்படாமல் இருப்பதற்கு. .
  14. உலகளாவிய விலையேற்றத்துக்கு உக்ரெய்ன் போரினால் பங்குச் சந்தையில் ஏற்படும் பதட்ட நிலையும் ஒரு காரணம் என்று நம்புகிறேன். போர் ஆரம்பித்த முதல் நாள் அமெரிக்க ஐரோப்பிய பங்குகள் (NASDAQ, CAC40, DAX40 போன்றவை) பாரிய வீழ்ச்சியை அடைந்தன. பின்னர் ஒவ்வொரு நாளும் உயர முயற்சித்தாலும் சண்டையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் சம்பவங்களினால் மறுபடி திடீர் சரிவைச் சந்தித்தன. உதாரணமாக ரஸ்ய படைகள் சேர்னோபில் அணு நிலையத்தைச் சுற்றி வளைத்தபோது மீண்டுமொரு பாரிய சரிவு ஏற்பட்டது. அதேவேளை மூலப்பொருட்கள் வரலாறு காணாத அளவில் ஏறியது. இதற்கான காரணம் ஒருவேளை பங்குச் சந்தை முதலீடுகளை மூலப் பொருட்களில் நகர்த்தப்பட்டதாக இருக்கலாம். மூலப் பொருட்களில் தங்கம் வெள்ளி பல்லாடியம் பிளட்டினம் போன்றவற்றுடன் கோதுமை பெற்றோல் போன்றனவும் அடங்கும்.
  15. நெடுக்ஸ் உங்கள் பழிவாங்கும் உணர்வைப் புரிந்து கொள்கிறேன். நூறு வருடங்களுக்கு மேல் எம்மை அடிமைப்படுத்தி நாடற்றவர்களாக்கிய பிரித்தானியா மீதல்லவா உங்கள் பழிவாகல் முதலாவதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு இருப்பதைப் பெருமையாகக் கருதிக் கொண்டு எங்கேயோ கூலிக்கு மாரடித்தவனைப் பழிவாங்குவதாக நினைக்கிறீர்கள். எனக்குப் பிடித்த கருத்துக்குத்தானே நான் பச்சை குத்த முடியும். அது எனது பக்கச் சார்பான கருத்தாகவும் இருக்கலாம்தானே. சில வேளைகளில் ஒருவர் எனக்குப் பதிலளித்திருந்தால் அதனைப் பார்த்து ஆமோதிக்கிறேன் என்பதற்காகவும் குத்தியுள்ளேன். பச்சை குத்துவது தீர்ப்புச் சொல்வது என்று குழம்பியுள்ளீர்கள். 😂
  16. கபிதான், நான் பிரெஞ்சு செய்திகளை அதிகம் வாசிப்பதுண்டும். ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளதின்படி Kiev இனைப் பிடிப்பதற்காகத்தான் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு ரஸ்யப் படைகள் அங்கு நகர்த்தப்பட்டன. அந்த நகரைப் பிடிக்காமல் ஏன் பலமான இழப்புகளுடன் ஏன் பின்வாங்க வேண்டும் ? ஒரு நாட்டின் இராணுவ பலத்தைச் சிதைக்க வேண்டுமானால் அதன் தலைநகரைப் பிடிப்பதை விட்டு ஏன் தனது நாட்டு எல்லையில் நின்று வீரம் பேச வேண்டும் ? புட்டின் சர்வாதிகாரி என்பது எனது சொந்தக் கருத்தாக நீங்கள் கருதினால் இது பற்றி உங்களுடன் உரையாடுவதில் பயனில்லை. கொழும்புத் தாக்குதலைச் சுட்டிக் காட்டியது எந்த நிலையிலும் புலிகளின் இலக்கு சிங்கள பொதுமக்கள் இல்லை. தற்போது உக்ரெய்னில் இருந்து வரும் செய்திகளையும் படங்களையும் பார்த்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும் அது முற்றிலும் இராணுவ இலக்குகள் இல்லை. இதுவரை மேற்கு நாடுகள் யுத்தத்தில் இறங்காமைக்குக் காரணம் இயலாமை அல்லது மூன்றாவது உலக யுத்தம் மூழும் என்ற காரணம் இல்லை. ரஸ்யாவிடம் உள்ள அணு ஆயுதங்களும் ஐரோப்பா முழுவதும் உள்ள மின்னணு ஆலைகளும்தான். மேற்கு நாடுகளிடம் அணு ஆயுதம் இருந்தாலும் அது இனி ஒருபோது பாவிக்கப்பட மாட்டாது என்று நம்பலாம். ரஸ்யா அப்படி அல்ல. புட்டின் எடுப்பதுதன் முடிவு. புட்டினை நீங்கள் ஒரு பொறுப்புள்ள மனிதராகக் கருதினால் அது உங்கள் விருப்பம். வெட்கித் தலை குனியவேண்டிய சிந்தனை எனக் குறிப்பிட்டது எதோ ஒரு காரணத்துக்காக முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்களைப் பேரினவாதம் பலியிட்டதோ அதே இனம் அதேபோன்று இன்னொரு தேசத்தில் ஏதோ காரணத்துக்காக அங்கும் பொதுமக்கள் சாவதைக் கண்டுகொள்ளாது அதை வெற்றியாகக் கொண்டாடுவதைத்தான். ரஸ்ய ஏவுகணை ஆதாரம். இது பிரெஞ்சில் உள்ளது. RS-28 Sarmat பற்றித் தேடிப் பாருங்கள்.
  17. நல்லது. இந்தத் திகதிக்கு அடுத்த 10 நாட்களில் இலங்கைத் தீவில் பயங்கரவாத்ததை அழித்து இலங்கையைக் காப்பாற்றிய நாளாக சிங்களவர் கொண்டாடுவார்கள். இரண்டுக்கும் ஒற்றுமை என்னவென்றால் எத்தைனையாயிரம் மக்கள் பலியானால் என்ன, எத்தனை கோடி சொத்துகள் அழிக்கப்பட்டால் என்ன, பக்கச்சார்பான போர் வெற்றிதான் முக்கியம்.
  18. நீங்கள் குறிப்பிட்ட மேற்கு நாடுகளின் அராஜகத்தை நானும் எதிர்க்கிறேன். 2 வாரத்தில் Kiev இனைப் பிடிப்பதாக ஆரம்பிக்கப்பட்ட ரஷ்சிய ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டு மே 9 இற்குள் எதையாவது பிடித்து வெற்றியைக் கொண்டாடினால் போதுமென்ற நிலையில் ரஸ்யா உள்ளது. அதற்காக ரஸ்யா எதனையும் செய்யும். ஏனென்றால் புட்டின் ஒரு சர்வாதிகாரி. Marioupol Donbass பகுதி பலநூறு கிலோ மீற்றர் ரஸ்ய எல்லையைக் கொண்டது. அது தவிர அங்கு ஏற்கனவே பிரிவினைவாதிகள் போராடும் பகுதி. இதைவிட இலகுவான யுத்தத்தை உலகின் வல்லரசு எதிர்கொள்ள முடியாது. போர்க்கள நிலமையை விடுவோம். பல தசாப்தங்களுக்கு முன் அமெரிக்கா யப்பானில் செய்த மானுடருக்கெதிரான மாபெரும் அழிவுக்குப் பல மடங்கு மேல் என்னால் செய்ய முடியும் என்று மார்தட்டும் ஒரு மிகப் பெரிய பயங்கரவாதியை ஆதரித்து மகிழும் மனநிலை கொண்டவர்களா ஈழத் தமிழர்கள் ? மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளை இங்கு இழுப்பதற்கு மன்னிக்கவும். இறுதிப் போரில் தம்மிடமுள்ள போர்த்திறனை இழந்தபோதிலும் இறுதியாக இருந்த இரு விமானங்களை மிகச் சிரமத்தின் மத்தியுலும் கொழும்பிலுள்ள இராணுவ மையங்களையே தாக்கினார்களே தவிர கொழும்பை அழிக்க நினைக்கவில்லை. வெட்கித் தலைகுனிய வேண்டிய சிந்தனை.
  19. நாம் ஈழத் தமிழர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஒவ்வொரு விதமான திரிகளில் நடைபெறும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்புடனேயே பழக முயற்சிக்கிறேன். ஒருவர் எழுதிய கருத்தைப் பார்க்காமல் அது யார் எழுதியது என்று பார்ப்பதுதான் தவறு. அவர் தனக்குப் பிடித்தவராக இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதற்கும் பச்சை குத்துவதற்கும் யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதுதான் குழுவாதம். ஆரோக்கியமானது இல்லை. பல தடவைகள் ஒவ்வொரு பிரச்சனைகளின்போது குழுவாதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படுவதற்கான காரணம் அது யாழின் வளர்ச்சிக்கு முற்றிலும் முரனானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நன்றி.
  20. கருத்துக்களத்தை வாசிப்பவர்கள் யார் கருத்து எழுதுகிறார்கள் என்று தெரிந்துகொண்டுதானா வாசிக்க வேண்டும் ?
  21. பலகோடி மக்கள் வாழும் நாடொன்றைத் தன்னால் ஒரே ஏவுகளையால் அழிக்க முடியும் என்று மார்தட்டுபவனை விட உலகின் அதியுர்ந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்க முடியாது. இதைக் கேட்டு மகிழ்பவரை என்னவென்று சொல்வது ? அதுவும் போரை அனுபவித்து ஒருக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்களாம்.
  22. மிகவும் அதிர்ச்சியன செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள்.
  23. பிளவுகளுடன் தீர்வை நோக்கி எவ்வாறு நகர முடியும் ? எங்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். எதிரியுடன் பேசும்போது உள்பிரச்சனைகளைப் புறம்தள்ளிய ஒற்றுமை வேண்டும். அது எம்மிடம் இல்லை. அது தவிர வெளிநாட்டில் எமக்கான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் எதுவும் இல்லை. ஈழத் தமிழர் போராட்டம் என்று ஒன்று உள்ளதா ? அது எங்கே, அதை யார் நடத்துகிறார்கள் ? நான் அறிந்த வகையில் இலங்கையில் அது முற்றாக இல்லை. வெளிநாட்டில் யாராவது செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால் விபரம் தாருங்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.