Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதைத் தடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி சந்திரிக்கா அரசை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட விவாதத்திலிருந்து தமிழ்க் கட்சிகள் வெளிநடப்பு. திங்கள், 24, புரட்டாதி 2001 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6337 டெலோ மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தபோது கூட்டாக வெளிநடப்புச் செய்தனர். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதைத் தடுக்கும் முகமாக தீவிர இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் கட்டாயத்தால் உருவாக்கப்பட்ட 17 ஆவது அரசியமைப்புத் திருத்தச் சட்டத்திற்குத் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். "50 வருடங்களுக்கு மேலாக தமிழர் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கான இதயசுத்தியான எந்த முயற்சியையும் நீங்கள் எடுக்கவில்லை. நீங்கள் இப்படியே காலத்தைக் கடத்தி வருவீர்களாக இருந்தால் ஒன்றுபட்ட இலங்கை எனும் கூப்பாடு இறந்தகாலத்திற்குள் சென்றுவிடும்" என்று டெலோ அமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தைவிட்டு ஏனைய தமிழ் உறுப்பினர்களுடன் சேர்ந்து வெளியேறும்போது கூறினார். "இந்த நாட்டில் இருக்கும் அதி முக்கிய பிரச்சினை தமிழர்களின் தேசியப் பிரச்சினையாகும். அதனை நீங்கள் முதலில் தீர்க்கவேண்டும். ஆனால் உங்களை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் தாளத்திற்கு நீங்கள் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்" என்றும் அவர் மேலும் கூறினார். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் கண்டனம் செய்யும் விவாதத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் உறுப்பினர்களை பிரதமர் அழைத்தபோது, "அமெரிக்கா மீது நடத்தப்பட்டது பயங்கரவாதத் தாக்குதல்தான். அதனை நாங்களும் கண்டிக்கிறோம். ஆனால் இதனைச் சாட்டாகப் பயன்படுத்தி எமது போராட்டத்தையும் நீங்கள் பயங்கரவாதம் என்று சித்திரிக்க முயல்வதை நாம் மறுக்கிறோம். இந்த நாட்டில் தம்மீது தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச அடக்குமுறைக்கும், தம்மீதான இனப்பாகுபாட்டிற்கும் எதிரான தமிழ் மக்களின் போராட்டமே இங்கு நடந்து வருவது. அரச பயங்கரவாதத்திற்கெதிராகவே எமது மக்கள் போராடி வருகிறார்கள். யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்து, தமிழர் தாயகம் மீதான பொருளாதாரத் தடையினை நீக்கி புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டால் ஒழிய‌ உங்களின் 17 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு எமது ஆதரவு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை" என்றும் செல்வம் கூறினார். "அரசியலமைப்புச் சபையினை உருவாக்குவதற்கு நாம் எதிர்ப்புக் காட்டப்போவதில்லை. ஆனால், நாட்டின் முக்கியமான இனப்பிரச்சினைக்கு தீர்வெதையும் காணாது அரசியலமைப்பு விடயத்தில் மாற்றங்களை செய்ய எத்தனிப்பதையே நாம் எதிர்க்கிறோம். அதனாலேயே பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தோம்" என்று தமிழ் உறுப்பினர்கள் பின்னர் தெரிவித்தனர்.
  2. நோர்வேயின் சமாதான முயற்சிகளை தோற்கடிக்க சந்திரிக்காவும், மக்கள் விடுதலை முன்னணியும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம். சந்திரிக்காவின் மக்கள் கூட்டணிக்கும், சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தம் இலங்கையில் சமாதானத்திற்கு பெரும் அச்சுருத்தலாக மாறியிருக்கிறது ‍- விடுதலைப் புலிகள் 11, புரட்டாதி 2001 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6311 சந்திரிக்காவின் மக்கள் கூட்டணிக் கட்சிக்கும், தீவிர இனவாத இடதுசாரிகளான மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடயே செய்யப்பட்டிருக்கும் நன்னடத்தைக் கால அரசு எனும் ஒப்பந்தம் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு அச்சுருத்தலாக அமைந்திருக்கிறதென்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து தமிழ் கார்டியன் பத்திரிக்கை புலிகளின் அரசியல் ஆலோசகரும், பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானியுமான திரு அன்டன் பாலசிங்கத்திடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது சந்திரிக்காவிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ள சரத்துக்கள், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக பரிந்துரைகள் முன்வைக்கப்படுவதை முற்றாகவே தடுக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது என்று கூறினார். திரு பாலசிங்கம் அவர்களின் கருத்துக்கள் புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து வெளிவரும் நாளேடான தமிழ் கார்டியனின் செவ்வாயன்று வெளிவந்த இதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. புலிகளுடனான பேச்சுக்களுக்கு தமது அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணியுடன் செய்துகொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் எவ்விதத்தில் தடையாக இருக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி சந்திரிக்காவும், வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக் கூறியிருப்பது பற்றி பாலசிங்கத்திடம் தமிழ் கார்டியன் வினவியபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார். "இது மிகவும் முட்டாள்த்தனமான கருத்தாகும். அவர்கள் செய்துகொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 20 ஆவது சரத்தில், நன்னடத்தைக் காலமான முதல் 12 மாதங்களுக்குள் தமிழரின் பிரச்சினையினை அரசியல் ரீதியாகத் தீர்ப்பது குறித்த எந்த பேச்சுவார்த்தைகளிலும் அரசாங்கம் ஈடுபடலாகாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. எமது மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நாம் அரசாங்கத்துடன் இதுகுறித்து இணக்கப்பாடு ஒன்றிற்கு வருவதில் ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா?" என்று பாலசிங்கம் வினவினார். "உண்மையென்னவென்றால், சமாதானப் பேச்சுக்களைச் சாத்தியமற்றதாக்குவதற்காகவே சந்திரிக்காவின் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றன. சந்திரிக்காவும், கதிர்காமரும் உளரும் வியாக்கியானங்கள் சர்வதேச அரசாங்கங்களில் இருப்பவர்களுக்காகப் புனையப்பட்டவையே அன்றி வேறில்லை. ஒரு பலவீனமான, ஊழலால் மூழகடிக்கப்பட்டிருக்கின்ற சந்திரிக்காவின் அரசிற்கும், சமாதானத்தையும், சர்வதேச மத்தியஸ்த்தத்தையும் தொடர்ச்சியாக எதிர்த்துவரும் அதிதீவிரவாத மாக்ஸிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையே செய்யப்பட்டிருக்கும் செயற்கைத்தனமான அருவருக்கும் இந்த இணைப்பின் ஊடாக சமாதானம் ஏற்பட்டுவிடும் என்று இவர்கள் இருவரும் கூறுவதை கண்களை மூடிக்கொண்டு இந்த சர்வதேச அரசாங்கங்கள் நம்புகின்றன" என்று அவர் மேலும் கூறினார். "இந்த நாட்டினை சிதைத்துக்கொண்டிருக்கும் இனவாதப் போரினை நிறுத்தி, தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான உண்மையான தீர்வினை வழங்கக் கூடிய ஒத்திசைவான நோக்கு சந்திரிக்காவின் மக்கள் கூட்டணிக்கோ அல்லது சிங்கள தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணிக்கோ எள்ளவும் கிடையாது. ஒருவருக்கொருவர் நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட இவ்விரு கட்சிகளும் செய்துகொண்டிருக்கும் நன்னடத்தைக்கால அரசாங்கமானது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து வெவ்வேறுவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சந்திரிக்காவின் மக்கள் கூட்டணி தமிழருக்கு "மிகவும் பலவீனமான" அதிகாரங்களைப் பகிரலாம் என்று கூறிவரும் அதேவேளை அவரது அரசாங்கத்தின் இன்னொரு பகுதியான மக்கள் விடுதலை முன்னணியோ, "தமிழருக்கென்று தனியாகப் பிரச்சினைகள் இல்லை, எல்லா இன மக்களும் சமம்" என்று கூறி வருகிறது. ஆனால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக தமிழர்களால் முன்வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க இவர்கள் எவருமே தயராக இல்லை" என்று பாலசிங்கம் கூறினார். "முடிவில் தமிழ் மக்கள் தமது தலைவிதியையும், அரசியல் தகமையினையும் தாமே முடிவெடுப்பார்களே ஒழிய கொழும்பில் இருந்து ஆட்சி செய்யும் சிங்கள அரசியல் கட்சிகள் அதனை முடிவு செய்ய முடியாது என்பதை நாம் மீண்டும் மீண்டு கூறி வருகிறோம். திம்புப் பேச்சுக்களின் அடிப்படையில் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை சிங்களவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறுமிடத்து, தமிழர்கள் தம்வழியில்ச் சென்று தமக்கான விடுதலையினை அடைவதைத்தவிர வேறு தெரிவுகள் அவர்களுக்கு இருக்கப்போவதில்லை" என்றும் பாலசிங்கம் தெரிவித்தார். சமாதானப் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க நோர்வே அழைக்கப்பட்டிருப்பது குறித்து பாலசிங்கத்திடம் தமிழ் கார்டியன் வினவியபோது, "நோர்வே அரசின் சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபட்டிருக்கும் சொல்கெயிமின் முயற்சிகளை தொடர்ச்சியாக விமர்சித்துவருவதன் ஊடாக சந்திரிக்காவும், லக்க்ஷ்மன் கதிர்காமரும் பேச்சுக்களைத் தேக்க நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். நோர்வேயின் சமாதானத் தூதுவர் புலிகளுக்குச் சார்பாக இயங்கிவருகிறார் எனும் தீவிர மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சந்திரிக்காவும், கதிர்காமரும் நோர்வேயின் தலைமையில் நடைபெற்றுவந்த முயற்சிகளைக் கொன்று புதைத்துவிட்டார்கள். இது மிகப்பெரிய இராஜதந்திரத் தவறு. மூன்று தரப்புக்கள் கூடி நடத்தும் பேச்சுக்களில் ஒரு தரப்பு தாந்தோன்றித்தனமாக இவ்வகையான குழிபறிக்கும் காரியங்களில் ஈடுபடுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சொல்கெயிமை மீளவும் பிரதான சமாதானத் தூதுவராக பதவியில் அமர்த்துவதன் ஊடாக மாத்திரமே பேச்சுக்களுக்கு நாம் மீளவும் உயிர்கொடுக்க முடியும்" என்று புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான பாலசிங்கம் தெரிவித்தார். பாலசிங்கம் மேலும் கூறும்போது "நிலவிவரும் பொருளாதார அரசியல் சீர்கேட்டிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் ஒற்றை நோக்கிலேயே சந்திரிக்கா அரசு பேச்சுக்களில் ஈடுபட விரும்புவதாக காட்டிக்கொள்கிறது. தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு நேர்மையான அரசியல்த் தீர்வைக் காண்பதில் சந்திரிக்காவின் அரசிற்கு உண்மையான அக்கறை எதுவும் கிடையாது. தனது இக்கட்டான நிலையில், வேறு வழியின்றி தன்னிச்சையான யுத்தநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கலாமா என்று அது சிந்தித்து வருகிறது. ஆனால் இந்த சிந்தனைகள் எல்லாம் நன் நம்பிக்கையின் பால் உருவானவை அல்ல‌, மாறாக புலிகளை போரை விரும்பும் அரக்கர்கள் என்றும், சமாதானத்தின் எதிரிகள் என்றும் சர்வதேசத்தில் காண்பிக்க சந்திரிக்கா ‍- மக்கள் விடுதலை முன்னணி அரசால் புனையப்பட்டவை" என்றும் தெரிவித்தார். "உண்மையாகவே இந்த அரசு புலிகளுடன் நேர்மையான பேச்சுக்களில் ஈடுபட்டு தமிழரின் தேசியப் பிரச்சினையினை தீர்க்க விரும்பினால், முதலாவதாக அது செய்ய வேண்டியது சந்திரிக்கா - ஜே வி பி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் 20 ஆவது சரத்தினை முற்றாக நீக்கி, தமிழர் தாயகத்தின் மீது போடப்பட்டிருக்கும் பொருளதாரத் தடையினை விலக்கி, தமிழர் தாயகத்தில் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு சுமூகமான சூழ்நிலையினைக் கொண்டுவருவதுதான். மேலும் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு எம்மீது போடப்பட்டிருக்கும் தடையினை அரசாங்கம் நீக்குவதும் அவசியமாகும்" என்றும் அவர் கூறினார்.
  3. என்னை இங்கு வந்து தனிப்பட்ட ரீதியில் தாக்கியும், என் மீது வசை மாறி பொழிந்தும் இன்புற்றவர்களுக்கு முதற்கண் எனது நன்றிகள். எனென்றால், உங்களின் எதிர்ப்பே என்னை இத்தொடரை இறுதிவரை இழுத்துச் சென்று முற்றாகப் பதியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. உங்களின் வசைகளும், "நாசமாய்ப் போவாய்" என்கிற "ஆசீர்வாதங்களும்" என்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஊக்கமும் ஆதரவும் தரும் ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான், பெருமாள் ஆகியோரிற்கு எனது இருகரம் குவிந்த நன்றிகள். எழுதுவதற்கான எனது உரிமையை ஏற்றுக்கொண்டபோதிலும், இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள். யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன். நான் எழுதுவது நடந்த சரித்திரத்தை. சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் என்கிற ஆதங்கத்தில்த்தான். அதை இங்கே செய்யவேண்டாம் என்றாலும் கவலைப்படப்போவதில்லை. எனது கருத்துக்களை வெளிக்கொணர வேறு மார்க்கங்களும் இருக்கின்றன. எனது இனம் மீது இன்றுவரை நடத்தப்படுகின்ற திட்டமிட்ட இனக்கொலை, எனது தாயகம் மீது ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பெளத்த இராணுவம், நாள்தோறும் கபளீகரம் செய்யப்பட்டு, சிங்களமயமாகும் எனது தாயகம், கொல்லப்பட்ட எனது மக்களுக்கும், மாவீரர்களுக்குமான நீதி, அரசியல்கைதிகளுக்கான விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி...இவை அனைத்திற்குமான நேர்மையான பதில்களும், தீர்வுகளும் எந்தவொரு சிங்களத் தலைவனிடமிருந்து உண்மையாக வருகின்றதோ, அன்றைக்கு நான் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன். என்னை இனவாதி என்று அழையுங்கள், சாதியில் குறைந்தவன் என்று முகத்தில் உமிழுங்கள், ஆங்கிலமும் தமிழும் தெரியாதவன் என்று எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை. எனது பணி தொடரும். முடிந்தால் யாழில், இல்லாவிட்டால் எனக்கு எங்கெல்லாம் எழுதமுடியுமோ, அங்கெல்லாம். எல்லோருக்கும் நன்றி. இடதுசாரி எனும் போர்வைக்குள் ஒளிந்து நின்றுகொண்டு தனது தீவிர சிங்கள இனவாத முகத்தை மறைக்க எத்தனிக்கும் அநுரவுக்கெதிரான எனது கருத்துக்கள் மறுபடியும் இன்றிரவில் (சிட்னி நேரப்படி 8 மணி) இருந்து தொடரும். மறவாமல் உங்களின் வசைவுகளையும் அடிக்கடி இணையுங்கள், எழுத்துத்துணைக்கும் எனக்கு ஆள்த் தேவைப்படுகிறது.
  4. தமிழர்கள் தமது நோக்கத்தினை அடைவதைத் தடுக்க நன்னடத்தைக் கால அரசாங்கம் ஒன்றைக் கோரும் மக்கள் விடுதலை முன்னணி - 8, ஆவணி 2001 தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நன்னடத்தைக் கால அரசாங்கம் ஒன்றைக் கோரியிருக்கிறது. அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான மக்கள் ஆணையினைப் பெற்றுக்கொள்ளும் கால எல்லையினை நீட்டிப்பதைக் காட்டிலும் அதனை முற்றாக இரத்துச் செய்வதே சரியானது என்று அரசிற்கு அது எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது. பாராளுமன்றம் மீண்டும் கூடும் பட்சத்தில் அரசியலமைப்பு ஆலோசனை சபையொன்றினை நிறுவுவதன் மூலம் இச்சிக்கலைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருக்கிறார். "நாடு இன்றிருக்கும் இக்கட்டான தருணத்தில் அரசியல் ஆதாயம் நோக்கி நாம் செயற்படப்போவதில்லை. அதேவேளைத் தமிழ்ப் பிரிவினவாதிகளும் இச்சூச்ழ்நிலையினைப் பாவித்து தமக்கான ஆதாயங்களை அடைந்துகொள்ள நாம் அனுமதிக்கப்போவதில்லை" என்று அவர் கூறினார். அதிதீவிர சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் உட்பட்ட பல சிங்கள இனவாத அமைப்புக்கள் தேசிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்கும் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரிக்கா கொண்டுவர எத்தனிக்கும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் சிங்கள இனம் பிளவுபட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி கருதுகிறது. புலிகள் இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தமிழர்களுக்கென்று தனிநாடு ஒன்றினை உருவாக்குவதை சிங்களவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு தடுத்துவிட வேண்டும் என்றும் விமல் வீரவன்ச போன்றோர் கூறத் தொடங்கியிருக்கின்றனர். நிகழ்ந்துவரும் அரசியல்ச் சிக்கலில் தனது பங்கு சிங்களவர்களின் நலன்களுக்கு ஆபத்தாக அமையாது என்று தெரிவித்திருக்கும் இக்கட்சி, தமிழர்களுக்கு எவ்விதமான அதிகாரப் பரவலாக்கத்தையும் வழங்குவதை தாம் முற்றாக எதிர்க்கும் என்று தெளிவுபடுத்திக் கூறியிருக்கிறது. மேலும், இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு நாடு கம்மியூனிசம் நோக்கிச் செல்வதுதான் என்றும் அக்கட்சி கூறுகிறது.
  5. வெளிநாட்டு மத்தியஸ்த‌த்திற்கெதிராகத் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தீவிர சிங்கள இடதுசாரி இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் - 13, மார்கழி 2000 இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதற்கெதிராகவும், உயர்ந்துசெல்லும் வாக்கைச் செல்வினைக் கண்டித்தும் பலநூற்றுக்கணக்கான சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். மாலை 4 மணிக்கு ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டில்வின் சில்வா, தமது கட்சி இலங்கை இனப்பிரச்சினையில் எந்த வெளிநாடு தலையீடு செய்ய வந்தாலும் அதனை எதிர்க்கும் என்று கூறினார். வெளிநாடுகள் தமது சொந்த நலன்களுக்காகவே மத்தியஸ்த்தம் செய்ய வருகின்றன, அவர்கள் ஒருபோதும் பிரச்சினையினைத் தீர்க்கப்போவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார். இருமுறை ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டுத் தோல்வியடைந்த மக்கள் விடுதலை முன்னணி த‌ற்போது பாராளுமன்றத்தில் 10 ஆசனங்களைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
  6. மக்கள் விடுதலை முன்னணியைத் தொடர்ந்து நோர்வேயிற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சிகல உறுமய, நோர்வே அமைச்சரின் கொடும்பாவியை எரித்த‌ இனவாதப் பிக்கு - கார்த்திகை 2000 இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதில் நோர்வே வகிக்கவிருக்கும் மத்தியஸ்த்திற்கெதிராக தீவிர இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி சிங்கள மக்களை அணிதிரட்டி கடுமையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. தமிழர்களுக்கான தனிநாட்டினை உருவாக்கவே நோர்வே வந்திருப்பதாக சிங்கள மக்களிடையே கடுமையான பிரச்சாரத்தை அக்கட்சி கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இக்கட்சியின் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இன்னொரு சிறிய இனவாதக் கட்சியான சிகல உறுமயவும் நோர்வேயிற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருக்கிறது. கொழும்பிலிருக்கும் நோர்வேயின் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிகல உறுமயவின் பிக்குகள் அணியினர் அங்கு எரிக் சொல்கெயிமின் கொடும்பாவியையும் எரித்தனர். பின்னர் நரகென்பிட பகுதியில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தமிழருக்குத் தீர்வினை வழங்கும் எந்தமுயற்சியையும் தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்தனர். முன்னர் சுமார் 700 உறுப்பினர்களுடன் நோர்வே தூதரகத்திற்குச் சென்ற அக்கட்சியின் தலைவர் திலக் கருணாரட்ன, நோர்வேயின் மத்தியஸ்த்தத்தினை எதிர்த்து ஆர்ப்பரித்ததுடன், இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையில் நடக்கும் பேச்சுக்களையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று கோஷமிட்டார். புலிகளின் ஆலோசனையின் பேரிலேயே நாட்டைத் துண்டாடும் கைங்கரியத்தில் சொல்கெயிம் இறங்கியிருப்பதாக அவர் கூறினார். அண்மையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்கெயிம் மல்லாவியில்ச் சென்று சந்தித்ததை தீவிரவாத இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையாக விமர்சித்திருக்கும் பின்னணியில் இன்னொரு இனவாதக் கட்சியான சிக உறுமயவும் மக்கள் விடுதலை முன்னணியின் வழியில் சென்று பேச்சுக்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. அநுரவின் இனவன்மம் தொடரும்........
  7. தமிழீழத் தேசியத் தலைவருக்கும் நோர்வேயின் விசேட தூதுவருக்கும் இடையே மல்லாவியில் நடைபெற்ற பேச்சுக்களை இரகசியப் பேச்சுக்கள் என்று கடுமையாகக் கண்டித்திருக்கிறது மக்கள் விடுதலை முன்னணி ‍ - கார்த்திகை 2000 கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 10 ஆசனங்களை வென்றுள்ள தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்கெயிம் மல்லாவியில் நடத்திய பேச்சுக்களை "இரகசியப் பேச்சுக்கள்" என்று கூறி தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி எனும் தீவிர சிங்கள இனவாதக் கட்சி வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில், இலங்கை அரசாங்கம் மீது நோர்வே அரசியல்த் தீர்வொன்றைத் திணித்துவருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. அதனை அடையும் நோக்கத்தின் முதற்படியே தலைவருக்கும் சொல்கெயிமிற்கும் இடையிலான இரகசியப் பேச்சுவார்த்தை என்றும் அது விமர்சித்திருக்கிறது. 70 களிலும் 80 களின் இறுதிப்பகுதியிலும் இருமுறை ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட இக்கட்சி, நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடனான இனப்பிரச்சினைத் தீர்வுக்கெதிரான தனது நிலைப்பாட்டினை ஆரம்பமுதல் கடுமையான ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்திவருவது நாம் அறிந்ததே.
  8. நாடுதழுவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை அழைத்து அரசியலமைப்பு மாற்றத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் விடுதலை முன்னணி ‍- ஆவணி 2000 இடதுசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் நாடு தழுவிய ரீதியில் உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கெதிராக கடுமையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புதிய தேர்தல் நடைமுறை தொடர்பான தமது ஆர்ப்பாட்டம் ஒன்றினை கொழும்பு உச்ச நீதிமன்றத்தின் முன்னாலும் மக்கள் விடுதலை முன்னணி இன்று நடத்தியது. உத்தேச அரசியலமைப்பு சீர்திருந்த்தத்திற்கெதிரான ஜே வி பி யின் ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றதுடன், மாகாணத் தலைநகரங்களான கண்டி, மாத்தறை, காலி ஆகியவிடங்களிலும் ஜே வி பி உறுப்பினர்கள் இவ்வார்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர். அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினை தாம் நிராகரிப்பதான சுவரொட்டிகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வடக்குக் கிழக்கைத் தவிர்த்த ஏனைய பகுதிகளில் மக்கள் விடுதலை முன்னணியினரால் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. மேலும், உத்தேச அரசியல்ச் சீர்திருத்தம் முற்றாகத் தோற்கடிக்கப்படும்வரை தமது போராட்டங்கள் ஓயாது என்றும் மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாடு பிரிந்து தமிழர்கள் தனிநாட்டினை அடைந்துகொள்வார்கள் என்பதற்காகவே தாம் அதனை எதிர்ப்பதாகவும் அக்கட்சி கூறியிருக்கிறது.
  9. இனப்பிரச்சினைக்கான தீர்வினை ஏதுவாக்க அரசு கொண்டுவர எத்தனிக்கும் அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்த்து சிங்களவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி ‍- ஆவணி 2000 இலங்கைப் பாராளுமன்றத்திற்குச் செல்லும் வழிகளை அடைத்து சுமார் நான்காயிரம் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் கடுமையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏதுவாக்கும் நோக்கில் சந்திரிக்கா அரசு மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படும் அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்த்தே இவ்வார்ப்பட்டத்தினை தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி ஒழுங்கு செய்திருந்தது. ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான சந்தியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வருகையில் ஆயுதம் தரித்த கலகம் அடக்கும் பொலீஸாரினால் அவர்கள் மறிக்கப்பட்டார்கள். அரசியலமைப்பு மாற்றத்திற்கான பரிந்துரைகள் அன்று முற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தன. அரசு அரசியலமைப்பு மாற்றத்தைக் கைவிடாத பட்சத்தில் நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களைத் தாம் ஒழுங்குசெய்யப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவாகக் களத்தில் குதித்திருக்கும் தீவிரவாத பிக்குகள் அமைப்பொன்று, அரசியலமைப்பின் மூலம் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் சிங்களவர்கள் அரசியல் அநாதைகளாகிவிடுவார்கள் என்றும், இதனால் மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக தாமும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.
  10. நோர்வேயின் மத்தியஸ்த்தை எதிர்த்து 10,000 சிங்களவர்களைக் கொழும்பில் திரட்டிய மக்கள் விடுதலை முன்னணி ‍- பங்குனி 2000 இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்காக மத்தியஸ்த்தத்தில் ஈடுபடும் நோர்வேயினை எதிர்த்து சுமார் 10,000 சிங்களவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் நடத்தியது. மத்தியஸ்த்தத்தினை எதிர்த்தும், பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை நாட்டு மக்களுக்கு அரசாங்கம் உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று கோரியே இப்பேரணி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான பெளத்த பிக்குகள் முன்னால்ச் செல்ல, மக்கள் விடுதலை முன்னணியின் பிரமுகர்களான டில்வின் சில்வா மற்றும் விமல் வீரவன்ஸ ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தினர். சமாதானப் பேச்சுக்களில் நோர்வே மத்தியஸ்த்தம் வகிப்பதை எதிர்த்து சுலோகங்கள் எழுப்பப்பட்டதோடு, பதாதைகளும் ஆர்ப்பாட்டக் காரர்களால் எடுத்துச் செல்லப்பட்டன.
  11. நோர்வே மத்தியஸ்த்தத்தினை நாம் எதிர்ப்போம் டில்வின் சில்வா - பங்குனி 2000 இலங்கையில் நிலவிவரும் இனப்பிரச்சினையினைத் தீர்த்துவைக்கும் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க நோர்வே முன்வந்தால் தாம் அதனை எதிர்த்து நாடுதழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். இஸ்ரேலிற்கும் பலஸ்த்தீனர்களுக்கும் இடையிலான ஒஸ்லோ உடன்படிக்கையின்போது நோர்வே இஸ்ரேலியர்களுக்குச் சார்பாகவே நடந்துகொண்டது. அதுபோல் இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்குச் சார்பாக நடந்துகொள்ளவே நோர்வே மத்தியஸ்த்தம் வகிக்க வருகிறது. அதனால் அந்த மத்தியஸ்த்தத்தினை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். புலிகளுடன் சமாதானப் பேச்சுக்கள் நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியுடனும், நோர்வேயுடனும் அரசு மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்கான தீர்வு என்பது அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதனூடாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் அரசியலமைப்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் எல்லாம் நாட்டு மக்களின் ஒப்புதல் இன்றியே உருவாக்கப்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார். தமிழர்கள் ஏனைய இன மக்களுடன் ஒன்றாக வாழவே விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கான சம உரிமைகளை அவர்கள் கேட்கிறார்கள், அவ்வளவுதான் என்று கூறிய அவர், தமது கட்சியின் முதலாவது ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தார்.
  12. தமிழர்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் புலிகளுடன் பேச முடியாது டில்வின் சில்வா - வைகாசி 1999 "இலங்கையில் தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கிறதென்பதை ஏற்றுக்கொள்கிறோம். அடுத்தடுத்து ஆட்சிசெய்த சிங்கள அரசுகள் தமிழர்கள் மீது பாகுபாடு காட்டினார்கள். இதனால் தமிழர்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்" என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார். "இலங்கை ஒரு பல்லின, பல்மத நாடாகும், ஆகவே இது ஒரு சிங்கள பெளத்த நாடு என்று கூறப்படுவதை நாம் ஏற்கவில்லை. இலங்கை மக்கள் பல்லின, பல்கலாசார பின்னணியைக் கொண்டவர்கள் என்பதனை ஆட்சிக்கு வரும் அரசுகள் உணரத் தவறுவதாலேயே தமிழ் மக்கள் இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள். ஆனாலும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவே தாம் போராடி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறுவதை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். அவர்களுடன் எந்த இணக்கப்பட்டிற்கும் எம்மால் வரமுடியாது. தமிழரின் பிரச்சினைக்கு பிரிவினையினை புலிகள் இயக்கம் தீர்வாக முன்வைக்கிறது. அதை எம்மால் ஏற்கமுடியாது. அது எமது நாடு துண்டுகளாக சிதைவடைவ‌தற்கு வழிவகுக்கும், ஆகவே நாம் அதனை முற்றாக எதிர்க்கிறோம். ஆயுதங்கள் மூலம் பெறப்படும் தீர்வு சமூக அநீதிகளுக்கு இட்டுச் செல்லும். பேச்சுவார்த்தையின் ஊடாகவே அரசாங்கம் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
  13. முக்கிய வர்த்தக, தொழில் அமைப்புக்களின் தலைவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட "வடக்குக் கிழக்கு இனப்பிரச்சினைக்கு சமாதானமான முறையில் தீர்வு காணுவோம்" எனும் அரசுசாரா அமைப்புக்களின் கருத்தரங்கைப் புறக்கணித்த மக்கள் விடுதலை முன்னணி ‍- ஐப்பசி 1998 இலங்கையில் செயற்பட்டு வரும் பிரதான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புக்களின் தலைவர்களின் சம்மேளணம் வடக்குக் கிழக்கில் நடந்துவரும் போரினை முடிவிற்குக் கொண்டுவந்து சமாதான ரீதியில் தீர்வொன்றைக் காணும் நோக்கில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கருத்தரங்கொன்றினை ஒழுங்கு செய்திருந்தது. அனைவரினதும் இன்றைய தேவை நடந்துவரும் போரினை முடிவிற்குக் கொண்டுவருவதே என்றாகிறபோது இக்கருத்தரங்கிற்கு பலரும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர். ப‌ண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் முஸ்லீம் காங்கிரஸும் பங்குபற்றின. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, லங்கா சம சமாஜக் கட்சி, கொம்மியூனிஸ்ட் கட்சி, மகஜன எக்சத் பெரமுன ஆகிய கட்சிகள் இக்கருத்தரங்கை முற்றாகப் புறக்கணித்திருந்தன. வடக்குக் கிழக்குப் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கான காத்திரமான தீர்வு என்ன? என்பதுடன் ஆரம்பித்த இக்கருத்தரங்கில் பேசிய ஐக்கிய‌ இடதுசாரிகளின் முன்னணியின் உறுப்பினர் லீனஸ் ஜயதிலக்க, "வடக்குக் கிழக்கில் நடத்தப்படும் போர் உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கிருந்து இராணுவத்தினர் முற்றாக மீளப்பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்" என்று கோரிக்கை முன்வைத்தார்.
  14. தமிழர்களுக்கு தீர்வொன்றினை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மாகாணசபை முறைமையினை எதிர்த்துப் படுகொலைகளில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி தற்போது மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதை எதிர்க்கிறது ‍- ஆவணி 1997 மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடும் அரசின் முடிவினை சட்ட ரீதியில் எதிர்க்கப்போவதாக சூளுரைத்திருக்கிறார். தனது கட்சி உட்பட அனைத்து இடதுசாரிகளையும் திரட்டி அரசின் இம்முடிவிற்கெதிராகப் போராடப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஜே வி பி இன் இம்முடிவினை விமர்சித்திருக்கும் அரசாங்கத்தின் பிரதியமைச்சர் செனிவிரட்ன, மக்கள் விடுதலை முன்னணி அரசியல் ஆதாயத்திற்காகவே இதனைச் செய்கிறது என்று கூறியிருக்கிறார். "இன்று மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவேண்டும் என்று கூப்பாடு போடும் இதே கட்சியினர்தான் 1988 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் மாகாணசபைத் தேர்தலில் ஈடுபடுவோர் அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டி வந்தனர்" என்றும் கூறினார்.
  15. ஈழப் பிரிவினைவாதிகளுக்கு கொடுக்கப்படும் தானமே சந்திரிக்காவின் தீர்வுப்பொதி ‍ மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நிகால் கலப்பதி - ‍ ஐப்பசி 1997 தமிழ்க் கட்சிகளில் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியிலும் தனது தீர்வுப்பொதியினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க சந்திரிக்கா அரசின் அரசியலமைப்பு அமைச்சர் ஜி எல் பீரிஸ் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த தீர்வு வரைபே அரசின் இறுதியான வரைபாகும் என்பதுடன் ஏனைய கட்சிகளின் கருத்துக்கள் இந்த வரைபில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அரசு கூறுகிறது. இத்தீர்விற்கான தனது எதிர்ப்பினை தனது சொந்த பரிந்துரைகள் ஊடாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸும் இணைந்து கிழக்கில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்புத் தொடர்பான தமது நிலைப்பாட்டினை தமது பரிந்துரையாக முன்வைத்திருக்கின்றன. ஈ பி டி பி கட்சி இத்தீர்வுப்பொதி தொடர்பான தனது பரிந்துரைகளை 19 பக்கங்கள் அடங்கிய ஆவனமாக அரசிடம் சமர்ப்பித்திருப்பதுடன் அவை தீர்வுப்பொதியில் சேர்க்கபடுமுன்னர் தீர்வுப்பொதி வெளியிடப்படலாகாது என்றும் கோரியிருக்கிறது. புளொட், டெலோ ஈரோஸ் மற்றும் ஈ பி ஆர் எல் எப் அமைப்புக்கள் தமது பரிந்துரைகளை அரசு கவனத்தில் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியிருக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரொ நிஹால் கலப்பதி, சந்திரிக்காவினால் வழங்கப்படும் தீர்வுப்பொதியினூடாக ஈழம்வாதிகள் மகிழ்வடையப்போகிறார்கள், அவர்கள் கேட்பதை சந்திரிக்காவே வழங்கப்போகிறார் என்று இத்தீர்வுப் பொதிக்கெதிரான தனது கட்சியின் நிலைப்பாட்டினைத் தெரிவித்திருக்கிறார்.
  16. அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த சிங்கள இனவாத, இடதுசாரிகளின் கட்சியின் வேட்பாளர் திசாநாயக்க முதியான்சலாகே அநுர குமார திசாநாயக எனும் இனவாதியை சிங்களவர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களில் பெரும்பான்மையினர், குறிப்பாக இளைஞர்கள் போற்றிப் புகழ்வதும், இவரது ஆட்சியின் கீழ் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடப்போகின்றன என்று ஆர்ப்பரித்து அவர் பின்னால் அணிவகுத்துச் செல்வதும் நடக்கிறது. இத்தேர்தலில் வன்னியில் 16,000 வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 27,000 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதையடுத்து இனிவரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் தமது கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்த இனவாதிகளின் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் அநுரவைக் கதாநாயகன் எனும் நிலைக்கு உயர்த்திவைத்திருக்கும் தமிழ் இளைஞர்கள் பாராளுமன்றத் தேர்தலில் இவரது கட்சிக்கு தாமே முன்னின்று வாக்குச் சேகரிக்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. ஆனால், இவர்கள் எல்லோரும் எளிதாக மறந்துவிட்ட இன்னொரு பக்கம் ஒன்று இக்கட்சிக்கும் இன்றிருக்கும் அதன் தலைவருக்கும் இருக்கின்றதென்பதை இவ்விளைஞர்களுக்கு உணர்த்துவது காலத்தின் கட்டாயம். நன்கு கட்டமைக்கப்பட்ட சிங்கள இனவாதமும், தமிழரின் இருப்பிற்கெதிரான இக்கட்சியின் தொடர்ச்சியான நடவடிக்கைகளும், தமிழரின் சரித்திரத்தை மாற்றியமைப்பதில் இக்கட்சி செயற்பட்டு வரும் விதமும் இதுவரை இலங்கையை ஆண்ட ஏனைய பெளத்த சிங்களக் கட்சிகள் எவ‌ற்றிற்கும் இக்கட்சி சளைத்தது இல்லை என்பதையே காட்டுகிறது.. ஆகவே இக்கட்சி பாராளுமன்றத்திற்கு தனது ஆட்களை அனுப்பிய காலத்திலிருந்து அக்கட்சியினால் தமிழருக்கெதிராக செய்யப்பட்ட சில நடவடிக்கைகளை நான் இங்கே பட்டியலிட விரும்புகிறேன். தமிழ்நெட் இணையத்தளம் மற்றும் சங்கம் இணையத்தளம் ஆகியவற்றிலிருந்தே நான் இத்தகவல்களை பெற்றுக்கொண்டேன் என்பதையும் இத்தாள் அறியத்தருகிறேன். தமிழர்களுக்கு வழங்கப்போகும் தீர்விற்கெதிராக வடக்குக் கிழக்கில் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்யப்போகும் மக்கள் விடுதலை முன்னணி ‍- 1997 சந்திரிக்காவின் மக்கள் கூட்டணியினால் தமிழர்களுக்கு வழங்கப்படவிருப்பதாக் கூறப்படும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை எதிர்த்து தமிழர்கள் வாழும் வடக்குக் கிழக்கின் முக்கிய நகரங்களில் பிரச்சாரம் செய்யப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கிறார். சிங்கள கிராமப் புறங்களில் தலைவிரித்தாடும் வறுமை மற்றும் போரில் ஏற்பட்டுவரும் பின்னடைவுகளால் அவர்கள் அடைந்துவரும் ஏமாற்றம் ஆகியவற்றை பிரச்சாரப் பொருளாக்கி இக்கட்சி அண்மைய தேர்தல்களில் குறிப்பிடத் தக்களவு வெற்றியினைப் பெற்று வருகிறது. தமிழர்களுக்கு பிராந்திய சுயாட்சியை வழங்க சந்திரிக்கா தயாராகி வருவதாகக் கூறி சிங்கள மக்களிடையே இனவாதம் கக்கும் பிரச்சாரத்தை கடந்த வாரம் சிங்களவர்களின் மதக் கலாசார தலைநகர் என்று போற்றப்படும் அநுராதபுரத்தில் இருந்து இக்கட்சி ஆரம்பித்து வைத்தது. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வினை எக்காரணம் கொண்டும் வழங்கிவிடக் கூடாது எனும் கருத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக விதைத்து, தமிழருக்கெதிரான சிங்களவரின் இனவுணர்வைத் தூண்டிவரும் இக்கட்சி, சந்திரிக்காவின் அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக தமிழரின் வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிப் பிராந்தியத்தின் பொலீஸ் மா அதிபராக பிரபாகரன் நியமிக்கப்படப்போகிறார் என்றும் கூறிவருகிறது. தனது கட்சியில் இனவாதம் இல்லையென்று கூறிவரும் இக்கட்சி, தமிழர்களுக்கென்று தனியான இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லையென்றும் இருப்பது சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் மட்டும்தான் என்றும் கூறிவருகிறது. மேலும் தென்னாசியாவை துண்டாட அமெரிக்க உளவு நிறுவனமான சி ஐ ஏ போட்ட‌ திட்டம்தான் தமிழர்கள் கோரிவரும் ஈழம் எனும் தனிநாடு என்றும் அது கூறுகிறது. ஸ்டாலினினது மார்க்ஸியச் சிந்தனைகளைப் பின்பற்றும் இக்கட்சி, தமிழர்களிடையே காணப்படும் சாதிய வேற்றுமைகளே அவர்களுக்கான ஒரே பிரச்சினை என்றும், அவர்களுக்கென்று இனரீதியிலான பிரச்சினைகள் கிடையாது என்றும் கூறி வருகிறது. "எமது நகரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஆசீருடனே ஜே வி பி போன்ற இனவாதிகள் எமது பிரதேசங்களுக்கு வந்து எமக்கு இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று வெளிப்படையாகக் கூறமுடிகிறது, புரட்சிகர மார்க்ஸிஸ்ட்டுக்கள் என்று தம்மை அழைக்கும் இவர்கள் எல்லோரும் சந்தர்ப்பவாத சிங்கள இனவாதிகள் தான்" என்று திருகோணமலையில் வசிக்கும் இடதுசாரித் தமிழர் ஒருவர் தெரிவித்தார்.
  17. யுத்தநிறுத்த காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒபரேஷன் கிறீன் அரோ நடவடிக்கை புரட்டாதி மாதத்தின் நடுப்பகுதியில் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி திருகோணமலை மாவட்டத்தில் ஒப்பரேஷன் க்றீன் அரோ (Operation Green Arrow) எனும் பெயரில் வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றினை இலங்கை இராணுவம் முன்னெடுத்திருப்பதாகக் கூறினர். போராளிகளை இன்னும் மூன்று மாத காலத்திற்கு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை நீட்டிக்குமாறு வலியுருத்தி வந்த ரோ அதிகாரிகளிடம் பேசிய அவர்கள், உலகையும், இந்தியாவையும் ஏமாற்றவே ஜெயவர்த்தன பேச்சுக்களில் ஈடுபட விரும்புவது போல பாசாங்கு செய்கிறார் என்றும், உண்மையிலேயே யுத்தம் ஒன்றின் மூலமே தமிழர்களின் பிரச்சினையினை அவர் தீர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறினர். திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழர்களை முற்றாக வெளியேற்றும் நோக்கிலேயே இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களில் இருந்து அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வருவதனால் அதனைத் தடுத்து, தமிழ் மக்களைக் காப்பற்ற தாம் நடவடிக்கையில் இறங்கவேண்டியது அவசியம் என்றும் அவர்கள் கூறினர். இராணுவத்தினரின் தாக்குதலை திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து வழிநடத்திய தேசிய பந்தோபஸ்த்து அமைச்சர் லலித் அதுலத் முதலி, பத்திரிக்கையாளரிடம் பேசும்போது, "இப்பகுதியில் தொற்றுநோய்போல பரவியிருக்கும் பயங்கரவாதிகளைத் தேடியழித்து வருகிறோம்" என்றும், "பயங்கரவாதிகளை இங்கிருந்து விரட்டி வருகிறோம்" என்றும் கூறினார். லலித் மேலும் பேசும்போது, திருகோணமலையைச் சுற்றியும், வடமத்திய மாகாணத்தின் வடக்கு எல்லைகளிலும் இராணுவத்தால் நடத்தப்படும் தாக்குதல் தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஊடுருவலில் இருந்து இப்பகுதிகளை விடுவிக்கவே நடத்தப்படுவதாக அவர் கூறினாலும், இப்பகுதியில் அமைந்திருக்கும் பல தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்களை அப்புறப்படுத்துவதே இத்தாக்குதலின் உண்மையான நோக்கம் என்பதை அவர் வெளிப்படுத்த மறுத்திருந்தார். 1940 ஆம் ஆண்டுகளில் இருந்து சிங்கள அரசுகளால் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நன்கு கொள்மையப்படுத்தப்பட்ட, அரச ஆதரவிலான சிங்கள மயமாக்கலுக்கு ஜெயவர்த்தன அரசாங்கத்தின் பங்களிப்பாக தமிழர் தாயகத்தின் வடமாகாண‌ எல்லைகளின் நீளத்திற்கு நன்கு ஆயுதம் தரிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளை அமர்த்துவதென்பது அமைந்தது. சிங்கள இனவாதிகளின் இந்நோக்கம் இன்றுவரை வடக்குக் கிழக்கில் உயிர்ப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறதென்பது இங்கு நினைவுகொள்ளத் தக்கது. இதன்மூலம் தமிழ் மக்களை வெகுவாகப் பலவீனப்படுத்தி, ஈற்றில் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரவே தொடர்ந்துவரும் சிங்கள் ஆட்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். வவுனியா மாவட்டத்தில் தமிழ்க் கிராமங்களை அகற்றி உருவாக்கப்பட்டிருக்கும் பதவியா எனும் தனிச் சிங்களக் கிராமத்தின் சிங்கள ஊர்காவல்ப் படையினர் - 1999 ஆம் ஆண்டு. சிங்கள குடியேற்றக்காரர்களுக்கு பக்கபலமாக நிற்கும் ஆக்கிரமிப்பு இராணுவம் ‍- சிங்களக் குடியேற்றக் கிராமம் ஒன்றில் அமர்த்தப்பட்டிருக்கும் இராணுவத்தின் கவச வாகனம், 1999 தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த மயமாக்கல் 1940 களின் ஆரம்பத்தில் குடியேற்றத் திட்டங்கள் எனும் பெயரில் தெற்கில் கணியற்ற சிங்களவர்களை கிழக்கு மாகாணத்திலும், வட மாகாணத்தில் தென் எல்லைகளிலும் சிறப்பான‌ நீர்வசதியும், செழிப்பான வளமும் கொண்ட நிலங்களில் அரசு குடியேற்றத் தொடங்கியிருந்தது. ஆனால், ஆரம்பக் குடியேற்றங்களின் வெற்றியினால் உற்சாகமடைந்த சிங்கள அரசுகள், பின்னர் வந்த வருடங்களில் இக்குடியேற்றங்களை இப்பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கவும், தமிழர்களின் இருப்பைப் பலவீனமாக்குவதற்காகவும் பாவிக்கலாயினர். இவ்வாறான குடியேற்றங்களில் மிகவும் பாரிய முன்னெடுப்புக்களுடன் நடத்தப்பட்ட குடியேற்றங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றம், திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட அல்லை மற்றும் கந்தளாய் சிங்களக் குடியேற்றங்கள், வவுனியா மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட பதவியா சிங்களக் குடியேற்றம் என்பவற்றைக் குறிப்பிட்டுக் கூற முடியும். இக்குடியேற்றங்கள் உருவாக்கப்படுவதே தமிழரின் இருப்பை பலவீனப்படுத்துவது எனும் நோக்கில்த்தான் என்று சிங்கள அரசுகள் திட்டமிட்டு செயற்பட்டு வந்தமையினால் இதுகுறித்த தமிழரின் எதிர்ப்பை தெற்கின் அரசுகள் தொடர்ச்சியாக உதாசீனம் செய்தே வந்திருந்தன. சிங்களக் குடியேற்றம் கல்லோயா சிங்களக் குடியேற்றத்தின் உருவாக்கம். கல்லோயா சிங்களக் குடியேற்றத்தின் பிதாமகர்கள் திட்டமிடலின்பொழுது ‍- டி எஸ் சேனநாயக்கவுடன் சிங்கள இனவாத அதிகாரிகள் வவுனியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் பதவியா சிங்களக் குடியேற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புரண‌ கம ‍ சிங்களவர்கள் இப்பகுதியில் புராதன‌ காலத்திலிருந்து வாழ்ந்துவருவதாக வரலாற்றை மாற்றியெழுதும் சிங்களவர்கள் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்களக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்துவேன் என்று தமிழர்க்கு வாக்குறுதியளித்து அவர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தன தனது ஆட்சிக்காலம் நெடுகிலும் செய்தது தமிழர் மீது திட்டமிட்ட இராணுவத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டதுதான். தமிழர் மீதான ஜெயவர்த்தனவின் முதலாவது இனவாதத் தாக்குதல்கள் 1977 ஆம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்டன. இத்தாக்குதலின்பொழுது சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்துவந்த பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவழித் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். இவ்வாறு அடித்துவிரட்டப்பட்ட பல இந்திய வம்சாவழித் தமிழர்களில் ஒருபகுதியினர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஏற்கனவே பாதுகாப்பாகக் குடியேறி வாழ்ந்துவந்த தமது உறவினர்கள் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டனர். தமிழ் மக்களின் ஒருபகுதியினரான இம்மக்களின் அவலங்களினால் அனுதாபம் கொண்ட பல தமிழ் தொழில் வல்லுனர்கள், சமூக சேவையாளர்கள், தமிழ் அரச உத்தியோகத்தர்கள் போன்றோர் இம்மக்களை வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதிகளில் குடியேற்றினர். தமிழர் தாயகத்தின் இதயப்பகுதி நோக்கி முன்னேற எத்தனித்து வந்த சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கும் நோக்கிலேயே மலையகப்பகுதியில் இருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட தமிழர்களை இம்மாவட்டங்களில் எல்லைகளில் குடியேற்ற இவர்கள் முடிவெடுத்தனர். இந்த நடவடிக்கைகள் 1982 ஆம் ஆண்டுவரை நடந்து வந்தன. 1982 ஆம் ஆண்டளவில் தமிழ் ஆயுத அமைப்புக்கள் தோற்றம்பெறத் தொடங்கியிருந்தன. இராணுவம் மீதான தமிழ்ப் போராளிகளின் தாக்குதல்கள் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்திருந்தன. தமிழர்களுக்கென்று தனியான சுதந்திர நாடொன்று தேவை என்கிற கோஷம் வலுபெறத் தொடங்கியிருந்தது. 1982 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு பொலீஸாரும் இராணுவத்தினரும் வழங்கிய தகவல்களின்படி வவுனியா மாவட்டத்தில் தமிழ்ப் போராளிகளின் செயற்பாடுகள் அதிகரித்துவருவதாகக் கூறப்பட்டிருந்தது. தமிழ் சமூக ஆர்வலர்களால் வவுனியா மாவட்டத்தில் மலையகத் தமிழ் மக்களைக் குடியேற்றி உருவாக்கப்பட்ட காந்தியம் பண்ணையில் தமிழ் ஆயுத அமைப்புக்களின் செயற்பாடு அதிகரித்துக் காண‌ப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஆகவே தமிழ் ஆயுத அமைப்புக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு காந்தியம் பண்ணையிலிருந்து மலையகத் தமிழர்கள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டு, இப்பண்ணைகள் அழிக்கப்படுவதும், இப்பகுதிகளின் தெற்கின் சிங்களவர்களைக் குடியேற்றி வடக்கு நோக்கிய சிங்கள விரிவாக்கம் முடுக்கிவிடப்படுவதும் அவசியம் என்றும் அவர்கள் ஜெயாரிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சரானா ஜனதிபதி ஜெயார், காணி மற்றும் மகாவலி அமைச்சரான காமிணி திசாநாயக்கா ஆகிய இருவரும் இணைந்து வடக்குக் கிழக்கிலிருந்து மலையகத் தமிழர்களை முற்றாக அப்புறப்படுத்தும் தமது நோக்கத்திற்கான அடித்தளத்தினை இதுதொடர்பான பிரச்சாரங்களை சிங்கள மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் உருவாக்கிக்கொண்டனர்.
  18. பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்கிற எனது விருப்பு (எனக்கு வாக்களிப்பில் பங்கில்லை என்கிற போதும்) அவர்களது நிலைப்பாட்டில் இருந்தே உருவானது. இதுவரையில் தமிழர் சார்பாக இருந்த தமிழ் அரசியல் வாதிகளின் கையாலாகத்தன்மையும், தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான விடுதலையினை முன்னெடுக்காமையும், சிங்கள் ஆட்சியாளர்கள் தொடர்பான அவர்களின் சிநேகமான பார்வையும்தான். அதனாலேயே தமிழரின் அரசியல் அபிலாஷைகளை மீண்டும் பேசுகின்ற, அவலங்களைப் பேசுகின்ற, உரிமைகளை நினைவுபடுத்துகின்ற ஒருவர் வருகின்றபோது அவரை ஆதரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.மேலும் இதுவரை காலமும் சிங்களத் தலைவர் ஒருவருக்கு தமிழர்கள் கொடுத்துவந்த ஆதரவினால் இதுவரையில் நாம் அடைந்தது எதுவும் இல்லையென்பதும் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களின் அரசியல் உங்களை அண்டி வாழ்வதல்ல என்பதைக் காட்டுவதற்கும் பொதுவேட்பாளர் தேவை என்று எண்ணினேன். அதனாலேயே பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டின் பின்னால் நின்ற அரசியல்வாதிகள் குறித்து நான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களின் கடந்தகால அரசியலும், பின்னணியும் எப்படியிருப்பினும் நோக்கம் சரியானதாக எனக்குப் பட்டது. அதனாலேயே அக்கோட்பாட்டை ஆதரித்தேன். இப்போதும் அக்கோட்பாட்டினை ஆதரிக்கிறேன், அதில் எனக்கு எந்த ஐய்யமும் இல்லை. ஆனால் இவ்வுன்னத கோட்பாட்டின் பின்னால் ஒளிந்துநின்று தமது சொந்த நலன்களைப் பெற்றுக்கொள்ள முயன்ற அதே அரசியல்வாதிகளின் முகங்களை இப்போது பார்க்கும்போது வருத்தமடைகிறேன். சுரேஷ், விக்கி, சிறீதரன் என்று அதே பழைய முகங்கள். பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு இவர்களின் சுய ரூபங்களைப் புதுப்பிக்கவில்லை, இவர்களை மாற்றவில்லை. பொதுவேட்பாளரின் பின்னால் நின்ற அதே அரசியல்வாதிகளின் இன்றைய செயற்பாடுகளும், பேரம்பேசல்களும் இவர்களின் இணைப்பினாலேயே பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கருவிற்கான தமிழ் மக்களின் ஆதரவு குறைவடைவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் எண்ணத் தோன்றுகிறது. இவர்களிடையே உண்மையான இனம் சார்ந்து செயற்பட்டு, பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டிற்கு உயிர் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள், நிலாந்தன் ஆகியோரின் முயற்சிகளை நாம் மறக்கவில்லை. அவர்களின் நோக்கம் உண்மையானது, சமூக நலன் சார்ந்தது. அவர்கள் எடுக்கும் தமிழர் நலன்சார்ந்த எந்த முயற்சிக்கும் எப்போதும் எனது ஆதரவு இருக்கும்.
  19. ஹமாஸோ ஹிஸ்புள்ளாவோ உருவாக்கப்பட்டது பலஸ்த்தீன மக்களின் விடுதலை ஒன்றை நோக்கமாகக் கொண்டே. இஸ்ரேலை முற்றாக அழிப்பதென்பது அவர்களின் இன்னொரு நோக்கமாக இருந்தாலும் பலஸ்த்தீன மக்களின் விடுதலையும், சுமூக வாழ்வும் இவ் அமைப்புக்களின் முக்கிய நோக்கமாகும். இப்போது ஹிஸ்புள்ளாவின் தலைவரையும், ஹமாஸின் தலைவரையும் இஸ்ரேலும் கொன்றிருக்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரையில் தனது முக்கிய எதிரிகளில் இருவரை அது கொன்றிருப்பதாக ஆனந்தம் அடையலாம். ஆனால், பலஸ்த்தீன மக்களுக்கு? தென் லெபனானை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து ஹிஸ்புள்ளா காத்துக்கொள்ளும் என்று நம்பியிருந்த லெபனானிய மக்களுக்கு? உலகெங்கும் பரந்து வாழும் பலஸ்த்தீன, லெபனான் புலம்பெயர் மக்களுக்கு? இது ஒரு பாரிய இழப்புத்தான். தமது பெருத்த நம்பிக்கைகளில் பல ஒரே நேரத்தில் சாய்க்கப்பட்டது தாங்கொணாத் துயர்தான். இவர்களின் இழப்போடு எமது தலைவரும் போராளிகளும் நினைவில் வருகிறார்கள். ஏனென்றால், பலஸ்த்தீனர்களும் எம்மைப்போன்றே ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு நிற்கும் ஒரு இனம்தான்.
  20. அட ஞான சூனியமே, குமார் பொன்னம்பலம் போட்டியிட்டபோது எத்தனை தமிழ் கட்சிகள் அல்லது எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் அவரை எதிர்த்து, சிங்கள வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தீர்கள்? எத்தனை பேர் குமார் பொன்னம்பலத்திற்கு தமிழர்கள் வாக்குப் போடக் கூடாது என்று தமிழர்களிடம் தீயாகப் பிரச்சாரம் செய்தீர்கள்? அப்படி எவருமே குமாருக்கு எதிராகவும், சிங்களத்தின் சந்திரிக்காவையோ வேறு எவரையும் ஆதரித்தும் பிரச்சாரம் செய்யவில்லை. அவர் வெற்றிபெறவேண்டும் என்பதில் கொழும்புத் தமிழர்களுக்கு விருப்பம் இருந்தது, ஆனால் வடக்குக் கிழக்கில் அவரை அதிகம் அறியாததால் வாக்குகள் விழவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கெதிராக எத்தனை தமிழ் அரசியல்க் கட்சிகள், தமிழ் அரசியல்ப் பிரமுகர்கள், அரசியல் விற்பனர்கள், தனிமனிதர்கள், குழுக்கள், இணையத் தளங்கள், பத்திரிக்கைகள் என்று போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தீர்கள்? சுத்து மாத்து மட்டுமே எத்தனை தேர்தல் மேடைகள், கூட்டங்கள், பிரச்சாரப் பேரணிகள் என்பவற்றில் கலந்துகொண்டு "பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதே எனது ஒற்றை நோக்கம்" என்று சூளுரைத்து வந்தது? இவ்வளவு எதிர்ப்பிற்கும், அவதூறுப் பிரச்சாரத்திற்கு மத்தியிலும் பொதுவேட்பாளர் 1.67 வீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்றால், நீங்கள் அனைவரும் அவருக்கெதிராகப் பிரச்சாரம் செய்யாது விட்டிருந்தாலே அன்று குமார் பெற்றதைக் காட்டிலும் அதிகம் பெற்றிருப்பார். ஆனால் அவரை எங்கே விட்டீர்கள்? பேரம் பேசுகிறோம் பேரம் பேசுகிறோம் என்று தோற்கிற குதிரையில் கட்டிவிட்டு வென்ற குதிரையிடம் போய்க் காசு கேட்கிறீர்களே?
  21. 1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும் சிலருக்குப் புரியப்போவதில்லை. சுத்து மாத்து மந்திரத்திற்கும் புரியவில்லை என்பது இப்போது புரிகிறது. ஆக, இவ்வளவு நாளும் இது தெரியாமல்த்தான் இந்த அறிவாளி செயற்பட்டு வந்திருக்கிறார். 2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன? சிங்களவர்கள் தாமாக விரும்பித் தரும் தீர்வை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். சிங்களவர்களைக் கோபப்படுத்தினால் நாம் சாம்பலாகிவிடுவோம். ஆகவே அவர்களைக் கோபப்படுத்தும் எந்தச் செயலிலும் நாம் ஈடுபடலாகாது. இதுதான் சுத்து மாத்து மந்திரனும் அவரது ஆசான் சாவக்கிடந்த சம்பந்தனும் 2009 இலிருந்து இன்றுவரை செய்த, செய்துவருகின்ற சாணக்கிய, சமரச, சரணாகதி அரசியல். ஆகவே இப்படியான சிங்களத்தின் கைத்தடிகளுக்குத் தமிழரின் பிரச்சினை குறித்த எந்தச் செயற்பாடும், எந்த வெளிப்படுத்தலும் விசப்பரீட்சையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும். தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்னவென்று முதலில் சுத்து மாத்து மந்திரன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்று தமிழர்கள் நம்புவதற்கும், சுத்து மாத்து எண்ணுவதற்கும் இடையில் பாரியளவு வேறுபாடு இருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆகவேதான், தான் நம்பிவரும் தமிழரின் அபிலாஷைகள் என்பதற்கு மாற்றாக வேறு எவரும் தமிழரின் அபிலாஷைகளைப் பெற்றிப் பேசினால் அவருக்குக் கெட்ட கோபம் வந்துவிடுகிறது. சுத்து மாத்து இன்று பேச மறுக்கின்ற, பேச விரும்பாத தமிழரின் அபிலாஷைகளை இன்னொருவர் பேசுமிடத்து, தான் சிங்களத்திடம் கூறிவருகின்ற தனது பாணியிலான தமிழரின் அபிலாஷைகள் குறித்து வெளியே, குறிப்பாக தமிழருக்குத் தெரிந்துவிடும் என்பதால்"ஏன் அதுகுறித்து இப்போது மீண்டும் பேசவேண்டும்?" என்று அப்பாவியாகக் கேட்கிறார். ஏன், இப்போது பேசினால் என்னவாம்? நீயும் பேசமாட்டாய், பேசுபவனையும் விடமாட்டாய் என்றால் வைக்கொல் பட்டடை நாய்தான் நினைவிற்கு வருகிறது. தமிழரின் அரசியல் அபிலாஷைகளை எப்போது பேசலாம், எப்போது பேசக்கூடாதென்று சட்டம் ஒன்று இருக்கிறதா, என்ன? 4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த பேரம்பேசும் பலகாரத்தை 1950 களில் இருந்தே பார்த்து வருகிறோம். ஐம்பதுக்கு ஐம்பது, தமிழரசு, சமஷ்ட்டி, இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சி என்று பல பெயர்களில் பேரம் பேசி, ஒவ்வொரு பேரம் பேசலிற்குப் பின்னரும் தவறாது ஏமாற்றப்பட்டதே வரலாறு. எந்தப் பேரம் பேசலும் எமக்கான நீதியைத் தரப்போவதில்லை என்று கற்றுணர்ந்த பின்னர்தான் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. ஆக, சுத்து மாத்து மந்திரன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பேரம் பேசப்போகிறாராம். எப்பிடி? சிங்கள இனவாதிகளின் வேட்பாளர் ஒருவரின் தேர்தல்ப் பிரச்சார மேடையில் ஏறி "ஐயோ கும்பிட்டுக் கேட்கிறன், பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க சஜித்துக்கு வாக்குப் போடுங்கோ" என்று ஊழைக் கும்பிடு போட்டுப் பேரம் பேசினது போன்றா? அதுசரி சஜித்துடன் நடத்திய பேரம் என்னவென்றாவது சுத்து மாத்து தமிழ் மக்களுக்குச் சொல்வாரா? இதில் வேடிக்கை என்னவென்றால், சுத்து மாத்து ஆதரவளித்த சஜித்தும் வெல்லவில்லை, மனதளவில் விரும்பிய ரணிலும் வெல்லவில்லை. வென்றிருப்பது தெற்கின் இனவாதிகளின் கதாநாயகனான அநுர. அவரின் வெற்றியில் சிறு துரும்பைந்தன்னும் சுத்து மாத்து எடுத்துப் போடவில்லை. அப்படியிருக்க அவருடன் பேரம்பேசி தமிழரின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறாராம். முதலில் சுத்து மாத்து விழுந்து விழுந்து அடிமைச் சேவகம் செய்த பொன்சேக்கா (2010), மைத்திரி(2015), ரணில் (2015), சஜித் (2019) என்ற எவருமே சுத்து மாத்துடன் செய்த எந்தப் பேரத்தையும் இன்றுவரை சட்டை செய்யவில்லை. நல்லிணக்க அரசாங்கத்தின் பங்காளிகள், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அரிதாரங்களைப் பூசிக்கொண்டு வலம் வந்தபோதும் கிடைத்தது கொழும்பு கறுவாத் தோட்டத்தில் வீடும் லான்ட்குரூஸர் வாகனமும் மட்டும்தான். இந்த இலட்சணத்தில் அனுரவைத் தோற்கடிக்க சஜித்துக்கு காவடி தூக்கிவிட்டு இனவாதமில்லாத‌ தெற்கின் தலைமைத்துவத்துடன் பேரம் பேசப்போகிறாராம். "நீ எனக்காக என்ன செய்தாய்?" என்று அநுர செருப்பால் அடிக்காதவரை சரி. 5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது. அட, என்னவொரு அருமையான யோசனை? இது ஏன் முன்பிருந்த தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியவில்லை? ஆக அநுர வெல்லப்போவது சுத்துமாத்திற்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தெரியவில்லையா? நம்பீட்டம். தெற்கு எங்கிலும் அநுர அலை. வெல்லப்போவது அநுரதான் என்பது கொழும்பில் வசித்துவந்த சாதாரண தமிழருக்கே நன்கு தெரிந்திருக்க சிங்கள அரசியலின் செல்லப்பிள்ளையான சுத்து மாத்திற்கு அது தெரியாமல்ப் போனதென்பது நம்பக்கூடியதா? இல்லை, அநுரதான் வெல்லப்போகிறார் என்று தெரிந்திருந்தும் சஜித்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை சுத்து மாத்து கேட்டிருந்தால் எப்படிப் பேரம் பேசலாம் என்று எண்ணிவைத்திருப்பார். வெல்லப்போகும் வேட்பாளரை முதலில் அடையாளம் கண்டு, அவருடன் பேரம்பேசி, அதனைத் தெளிவாக தெற்கிலும், வடக்குக் கிழக்கிலும் (முன்னர் செய்ததுபோல தெற்கிற்கு தலையையும், வடக்குக் கிழக்கிற்கு வாலையும் காட்டியது போல அல்லாமல்) மக்களிடம் வெளிப்படையாகவே கூறி, உனது வெற்றிக்காக நாம் பிரச்சாரம் செய்கிறோம், ஆனால் அதற்குமுன் தமிழரின் அபிலாஷைகளை நீ ஏற்றுக்கொண்டு எமக்கான தீர்வைத் தருவதாக எழுத்துமூல வாக்குறுதி தரவேண்டும் என்று கேட்டிருக்கவேண்டுமா இல்லையா? இப்படி எதையும் செய்யாது கண்ணைமூடிக்கொண்டு , நிபந்தனையில்லாத ஆதரவு என்று மறுபடியும் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு சிங்கள வேட்பாளருக்கு மணியடித்துவிட்டு தமிழரின் ஆதரவின்றி வென்ற ஒருவனுடன் என்ன முடியை வைத்துக்கொண்டு பேரம் பேசலாம் என்று சுத்து மாத்து கூறுகிறார்? 6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும். தமிழரின் வாக்குரிமையினை இதுவரை காலமும் எத்தனை முறை, அருமையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி தமிழருக்கு எத்தனை தீர்வுகளை சுத்து மாத்து பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதை முதலில் அவர் பட்டியலிடட்டும். அவர் பட்டியலிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், அப்படி அவர் பெற்றுக்கொடுத்த ஒவ்வொரு தீர்வையும் தமிழ் மக்கள் தீர ஆராய்ந்து இனிவரும் காலங்களிலும் சுத்து மாத்து தமது பொன்னான வாக்குகளை சிங்களத்தின் காலடியில் நிபந்தனையின்றிக் கொட்டுவதற்கு அனுமதி தருவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் வாக்குகளை வாரி, அள்ளிச் சுருட்டிக்கொண்டு கொத்தாக ஏதோவொரு சிங்கள இனவாதியின் காலில், "ஐயா, இந்தமுறை அவர்களை நன்றாக ஏமாற்றி எல்லா வாக்குகளையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம், ஏதாவது பார்த்துச் செய்யுங்கள். கொழும்பு 7 இல் வீடும் லான்ட்குரூசரும் போன தடவை தந்தீர்கள், அதற்கு எமது கோடி நன்றிகள் ஐயா, இந்தமுறை ரேஞ்ரோவர் ஸ்போர்ட்டும் சங்கிரிலா உல்லாச விடுதியில் ஒரு புளொக்கும் தாங்கோ" என்று இந்தமுறையும் சுத்து மாத்தும், "வடிவேலு பாணியில் அவனிட்டை வேண்டின காசுக்கு அவனுக்கு ஒரு குத்து, இவனுக்கு வேண்டின காசுக்கு இவனுக்கொரு குத்து - புகழ் மாவையும்" நிச்சயம் சொல்லியிருப்பார்கள். இன்னும் எத்தனை நாளுக்குத்தான் தமிழரின் வாக்குகளை விற்று வயிறு வளர்க்கப்போகிறீர்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.