Everything posted by பெருமாள்
-
துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
இங்கிலாந்து மக்களின் வரிபணத்தில் தமிழ் பி பி சி செத்த வீடு கொண்டாடுது .
-
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
அரசியல் தீர்வு என்பது முழுமையாய் ஏமாற்று பொருளாய் மாறிய பின் .உங்கள் பார்வையில் எப்படி நடந்து கொண்டு இருந்தால் நல்லது நடந்து கொண்டு இருக்கும் அந்த தீவில் ?
-
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதே ?
-
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
கனடா- பிரம்டன் நகரசபை தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்துள்ளது. பிரம்டன் நகரில் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் முற்றம் போன்ற தாயக சார்ப்பு நகர்வுகள் இடம்பெற்ற நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு வந்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் நாளை நவம்பர் 21 ஆம் திகதி காலை 9.30 க்கு பிரெம்ரன் நகரமுதல்வர் பற்றிக் பிறவுண் (Patrick Brown) தலைமையில் கென் வலன்ஸ் சதுக்கத்தில் (Ken Whillans Square) உள்ள கொடிக்கம்ப முற்றத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்படும் என பிரம்டன் நகர சபை அறிவித்துள்ளது. தமிழீழத் தேசியக் கொடி முன்னதாக தமிழீழத் தேசியக் கொடி நாளை அங்கீகரித்து பிரம்டன் நகர சபை சுற்றுநிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தமது விடாமுயற்சி மற்றும் முன்னகர்வுகளால் தமிழீழத் தேசியக் கொடி நாளுக்குரிய இந்த அங்கீகாரம் கிட்டியதாக உலகத் தமிழர் உரிமைக் குரல் என்ற கனேடிய புலம்பெயர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள் https://tamilwin.com/article/recognition-of-tamil-eelam-national-flag-in-canada-1763634312
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு என்ன நடக்கிறது?
இங்கு எல்லை தாண்டுவதை விட உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையே பாரிய பிரச்சனை அந்த முறை மூலம் அவர்கள் நாட்டுக்குள் அண்டை மாநில மீனவர்களை இதே வேதாரணியம் மீனவர்கள் சிறை பிடித்து பாரிய சர்ச்சைகள் உருவாகுவது வழமை ஆனால் வேண்டும் என்றே அந்த செய்திகள் மழுங்கடிக்கப்பட்டு போகின்றன . இந்த விளக்கம் கூட தெரியாத வகையில் இலங்கை மீன்பிடி அமைச்சர் இருக்கிறார் . பி பி சி தமிழ் இங்கிலாந்து வரி பணத்தில் வாழ்ந்து கொண்டு இந்திய மத்திய அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் ஊது குழல் அவர்களிடம் உண்மை வருமா ? செய்தி இருட்டடிப்பு தாண்டி உண்மை செய்திகள் அத்தி பூத்தது போல் வரும் அதில் ஒன்று கிழே இணைக்கிறேன் . இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பது தொடர்பாக அண்மைக் காலங்களில் மீனவர்களுக்கிடையே நிகழ்ந்துவரும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளச் செய்கிறது. ஒரே நாட்டின் அண்டை மாநில, மாவட்ட மீனவர்களுக்குள்ளேயே ஒற்றுமையோ, விட்டுக் கொடுத்தலோ இல்லாத நிலையில், அயல்நாட்டு மீனவர்கள் விட்டுக்கொடுத்து அவர்களது கடல் வளத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அண்மையில் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 26 பேரையும், அவர்களது 8 விசைப் படகுகளையும் வேதாரண்யம் மீனவர்கள் பிடித்து ஆறுகாட்டுத்துறை படகு துறையில் சிறை வைத்து விட்டனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 2 படகுகளில் ஆந்திர மாநில கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அம்மாநில மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோரால் தாக்கப்பட்டுள்ளனர். படகுகளை நோக்கி நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. வாக்கிடாக்கி, கைப்பேசிகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுவிட்டனர். சமாதான பேச்சுக்குப் பிறகு மீனவர்கள் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தூத்துக்குடி கடல் பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப் படகு மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது தொழில் போட்டியால் மோதல் சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாக மாறி இருக்கிறது. கடந்த 2024 மார்ச்சில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் கேரள மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, அங்குள்ள மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டனர். கிழக்குக் கடற்கரையில் மட்டும்தான் இந்த மோதல் என்றில்லை. மேற்குக் கடற்கரையில் கர்நாடக மீனவர்கள் கோவா கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்து வருவதாகக் கூறி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2022 முதல் 2024 வரையில் அவ்வாறான மோதல் சம்பவங்கள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் கூறப்படும் ஒரே காரணம் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறுவதுதான் வேடிக்கை. நாட்டைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் பகுதிகளிலும் சுமார் 12 கடல் மைல் பகுதிக்கு முழுமையான இறையாண்மை மத்திய அரசுக்குத்தான் உண்டு. சுமார் 200 கடல் மைல் பகுதி வரையில் உள்ள பொருளாதார வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில அரசுகள் அருகில் உள்ள கடல் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு போன்றவற்றை மட்டுமே செய்துகொள்ள முடியும். ஒரு மாவட்ட, மாநில மீனவர்கள் கடலைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு மற்ற மீனவர்களை தங்களது எல்லைகளுக்குள் வரக் கூடாது என சட்டபூர்வமாக தடுக்க முடியாது. ஆனால், மீனவர்கள் அவரவர் பயன்பாட்டின் அடிப்படையில் செயற்கையான எல்லை ஒன்றை வகுத்துக் கொண்டு மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருவது வருத்தமளிக்கிறது. நாட்டின் கடல் பகுதியை எல்லையாகக் கொண்ட 9 மாநிலங்களிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த மோதல்களுக்கு முக்கியக் காரணம், கடலில் மீன் வளம் குறைந்து வருவதும், மாறி வரும் நவீன மீன்பிடி தொழில்நுட்ப முறைகளும்தான். அதிவேக விசைப் படகுகள் மற்றும் இரட்டைமடி வலைதான் பிரச்னையின் மையப்புள்ளி. ஆந்திர மீனவர்கள் 200 முதல் 300 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை மீன்பிடி படகுகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால், காரைக்கால் மீனவர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 600 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்துகின்றனர். இதனால் வலைகள் மற்றும் மீன் வளம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக ஆந்திர மீனவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை பயன்பாடு நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இதே காரணங்களால் தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளது. அதனால்தான், ராமேசுவரம் மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இங்கு மீன் வளம் குறைந்துள்ள நிலையில், எஞ்சி இருக்கும் கொஞ்ச வளத்தையும் அபகரித்துச் செல்ல வரும் குளச்சல் மற்றும் கேரள மீனவர்களைச் சிறைபிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. ஆந்திர கடல் பகுதியிலும் மீன் வளம் குறைந்துவிட்டதாலும், அடிக்கடி புயல் தாக்குதல் இருப்பதாலும் அம்மாநில மீனவர்கள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆதலால், அண்டை மாநில மீனவர்கள் அங்கு வந்து மீன் பிடிப்பது உள்ளூர் மீனவர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது. தடை செய்யப்பட்ட என்ஜின் மற்றும் வலைகளை மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தடுக்க மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், அவற்றால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமம் கண்காணிப்புப் பணிகளை முறையாக மேற்கொண்டால் இந்த மோதல்களைத் தடுக்க முடியும். மோதல்களுக்கான காரணங்கள் கண்கூடு. அவற்றைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. https://www.dinamani.com/editorial/2025/Oct/07/marine-resources-are-dwindling
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Buy one get one free யோ அல்லது பேப்பர்காரனின் எழுத்து பிழையோ ? ஒண்ணுமே புரியலை .
-
பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...
ஐயப்ப சாமி உண்மையோ பொய்யோ தெரியாது நண்பர் ஒருத்தர் கடந்த கொர்னோ காலத்தை விட 28 வருடமாய் சென்று வருகிறார் அப்படி சென்று வரும்போது அவரின் சுகர் பிரசர் போன்றவை கட்டுப்பாட்டில் ஒரு சில மாதம்களுக்கு இருக்கும் காரணம் அங்குள்ள காலநிலை நடந்து திரிந்து மலை ஏறுதல் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன் .ஆனால் இன்னும் சில புதிய சாமிகளின் அலப்பறை தாங்க முடியாது விமானத்தில் செல்லும்போது விமானத்தின் கதிரையில் இருக்காமல் தரையில் வாழையிலை போட்டு கறுத்த உடுப்புடன் கூட்டமாக உணவு உண்ணுகிறார்கள் அவர்களுக்கு யார் அப்படி செய்ய சொல்லிய வர்கள் என்று தெரியவில்லை .
-
பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...
அப்ப அவர்களின் மலையாளிகளின் பதிமுகம் தண்ணி எனப்படும் மூலிகை தண்ணி டுபாக்கூர் தானா ?
-
இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!
இந்த சட்டம் நடைமுறைக்கு வரா விட்டால் ரிபோர்ம் வருவது 1௦௦ வீதம் உறுதி .
-
ஏன் இந்தியர்களை குறி வைக்கிறார்கள்?
- சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது
கொலை செய்யபட்ட காரணம் எங்கும் தெளிவாக இல்லை ஒரு பத்து பவுன் நகைக்கு கொலை என்பது சந்தேகமாக உள்ளது .- சிறுவர்களை புலிகள் மண்ணில் புதைத்திருக்க மாட்டார்கள் -சன்னி ஞானந்த தேரர் யாழில் தெரிவிப்பு!
சிறுவர்களை புலிகள் மண்ணில் புதைத்திருக்க மாட்டார்கள் -சன்னி ஞானந்த தேரர் யாழில் தெரிவிப்பு! November 4, 2025 0 செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞாஞானந்த தேரர் தெரிவித்தார். யாழ். நகர பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து செயல்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக் கூறிய இந்த ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த பின்னரும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவில்லை. தற்போது புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் அந்த குழியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் எலும்பு கூடுகள் வெளிவந்த படங்களை பார்த்தேன். செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களை புலிகள் புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை மூடி மறைக்க திட்டம் தீட்டுகிறது. அதேபோல் தெற்கில் பட்டலந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துக்காக ஆரம்பித்தவர்கள் அதை கிடப்பில் போட்டு விட்டார்கள். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்கு பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் எதனையும் செய்யாது ஒரு வருடம் தான் முடிந்திருக்கிறது எனக்கூறி ஐந்து வருடங்களையும் கடத்த போகிறார்கள். ஆகவே செம்மணி விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் நீதியானதும் உண்மையான விசாரணைகளை மேற்கொள்ளாது என அவர் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=347309- அவுஸ்திரேலியாவில் இலங்கை பிக்குக்கு சிறைத்தண்டனை
அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவியான 70 வயதான நாவோதுன்னே விஜிதா என்பவரே குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார். மெல்போர்ன் வசித்து வரும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி மெல்போர்ன் விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான வரலாற்று பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். 1994 மற்றும் 2002 க்கு இடையிலான காலப்பகுதுியில் இந்தக் குற்றங்களைச் செய்ததாக இன்றையதினம் கவுண்டி நீதிமன்ற நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. வயதான தேரரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான அனைத்து சிறுவர்களும் விகாரையில் சமய நெறி கற்க சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் ரீதியாக துன்பம் 16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாக துன்பம் செய்ததாக எட்டு குற்றச்சாட்டுகளிலும், 16 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் அநாகரீகமான செயலைச் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். தேரர் பாலியல் ரீதியாக 5 வயது சிறுமியை துன்புறுத்தியதாக நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Tamilwinஅவுஸ்திரேலியாவில் இலங்கை பிக்குக்கு சிறைத்தண்டனை - தமிழ்வின்அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அட...- அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
இன்று இவர்களை மீள் குடியேற யார் தடுக்கிறார்கள் ?- ஹிஸ்புல்லாவுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது.. கேள்வி எழுப்பிய ஞானசார தேரர்
காணாவில் 2 மில்லியன் டொலர் முதலிட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு எங்கிருந்து பணம் வந்தது. கிழக்கில் தங்க மலையேதும் உருவாகியுள்ளதா என்று ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், "இஸ்லாத்தில் ஹாக்கிமியத் மற்றும் கிலாபத் என்ற மதவாதங்களை நிலைநாட்டுவதற்காகவும் அவர்களின் நோக்கங்களை செய்து கொள்வதற்காக இலங்கைக்கு மிகப் பாரிய தொகை பணங்கள் வந்துள்ளன. முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை பிரிப்பதற்கு அவர்களின் ஊடக செயற்பாடுகளை நாமறிவோம். தனிப்பட்ட குரோதங்கள் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை பாரியது. ஹிஸ்புல்லாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இல்லை. ஈஸ்டர் தாக்குதலுக்கான சஹ்ரான் எல்லாம் உருவாகியது கிழக்கில் தான். ஏறாவூர் பகுதியில் சரியா நீதிக்கு விருப்பமானவர்கள் மற்றும் அதை நடைமுறைப்படுத்துமாறு சில பள்ளிவாசல்களில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு கையொப்பம் பெறப்படுகின்றன. அதனால் அவர்களுக்கென்று தனியான பல்கலைக்கழகம் வழங்க முடியாது. அதை அரசு சுவீகரிக்க வேண்டும். ஜமாஅதே இஸ்லாம் என்பது பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட இஸ்லாம் இராச்சியத்தின் கொள்கையாகும். அந்த கொள்கை தான் இலங்கையில் பலமான இஸ்லாம் கொள்கையாகும் என்றார். https://tamilwin.com/article/m-l-a-m-hizbullah-gana-1761738186- கிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்கு
கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, இன்று (ஒக்டோபர் 21) காலை 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிண்ணியா - குரங்குபாஞ்சான், இரட்டைக்குளம் பகுதியில் வைத்து இன்று காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பாதிப்புகளின் விவரங்கள் 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளன. 12 மாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நான்கு மாடுகளைக் காணவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாள் வெட்டுக்கு இலக்கான மாடுகள், கால்நடைகள் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். நீண்டகால நிலப் போராட்டம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, கிண்ணியா பிரதேச கால்நடை விவசாயிகளுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையிலான நில மீட்புப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், 2876 ஹெக்டேயர் நிலம் மேய்ச்சல் தரைக்கு உரியது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பானது, கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றிப் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த கிண்ணியா கால்நடை விவசாயிகளுக்கு வாழ்வில் விடிவை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். எனினும், இத்தீர்ப்பைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், தங்களுக்குரிய விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கித் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு கோரி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பகுதிக்குள் விவசாயிகளை வேளாண்மை செய்ய அனுமதிக்க வேண்டாம் என கமநல சேவை திணைக்களங்களுக்கு கிண்ணியா பிரதேச செயலாளரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே இன்றைய தினம் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியிலும் பதற்ற நிலை நீடிப்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. Tamilwinகிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வ...கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போர...- தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
“விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை” - முஸ்லிம்கள் ஆதங்கம் தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தாலும் அவர்கள் காலத்தில் இப்படியான ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்கின்றனர் வடக்கு முஸ்லிம் மக்கள். கடந்த 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ள இன்னல்கள் தொடர்பில் தனது ஆதங்கத்தினை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்கிறார் வணிகரும், யாழ் முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமட் தாகீர். யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் வசிக்கும் முகமட் தாகீர் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, மீளவும் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது முதலாவதாக வருகை தந்தவருமாவார். விடுதலை புலிகளும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும் படக்குறிப்பு,வணிகரும், யாழ் முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமட் தாகீர். தமிழீழ விடுதலை புலிகள் தமது போரட்டத்தில் வெல்வதற்கு சில வழிமுறைகளை கையாண்டனர். அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக யாழ் மாவட்டத்திலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை வெளியேற்றினாலும் விடுதலைப்புலிகள் எமது மதம் சார்ந்த விடயங்களில் தலையிடவில்லை. முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கும் விடுதலைப் புலிகள் தடை போட்டதில்லை என்கிறார் முகமட் தாகீர். ஆனால் தற்போது நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பழிவாங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறுகின்றார். வடக்கிலே விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் யுத்தம் நடந்த காலத்தில் விடுதலை புலிகள் மற்ற மக்களுடன் எப்படி நடந்து கொண்டார்களோ அவ்வாறு முஸ்லிம் மக்களுடனும் நடந்து கொண்டனர். அதனால் எங்களை வெளியேற்றியமைக்காக அவர்களை மனவருத்ததுடன் மன்னித்துள்ளோம் எனக் கூறும் முகமட் தாகீர், 1997க்கு பிறகு நாம் இந்த பூமியில் காலடி வைக்கும்போது முதன்முதலில் வந்தவன் என்ற வகையில் எங்களை யாழ். பேருந்து நிலையம் முன் இரு கைகூப்பி வரவேற்ற காட்சி இன்னமும் என் கண்களில் உள்ளது என்று கூறியவர், அவர்கள் கொண்டு வந்த குளிர்பானங்களை குடிக்க வைத்தது அவர்களின் பாசம் எனவும் கூறுகிறார். விடுதலை புலிகள் இயக்கம் எம்மை வெளியேற்றியதற்காக தமிழ் மக்கள் எம்மை வெறுக்கவில்லை, அதுபோல் விடுதலை புலிகள் எம்மை வெளியேற்றியதற்காக நாமும் தமிழ் மக்களை வெறுக்கவில்லை என்கிறார் அவர். இன்று என்ன நடக்கிறது? யாரோ ஒரு பயங்கரவாதிகள் செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த இலங்கையில் உள்ள முஸ்லிம்களை வதைப்பதும், பள்ளிவாசல் மீது கல்லெறிவதும், தீ வைப்பதும், வீதியில் செல்கையில் ஏளனமாக பார்பதும் முஸ்லிம் மக்களின் இன்றைய நிலையாகிவிட்டதாக முகமட் தாகீர் கூறுகிறார். சில இடங்களில் வியாபார நடவடிக்கையினை தடுப்பதுமாக செயற்படுகின்றனர். இவ்வாறு ஒரு கீழ்தரமான செயலை தமிழ் மக்கள் எமக்கு செய்யவில்லை என்கிறார் முகமட் தாகீர். யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தமிழ் மக்களுடன் இணைந்து தொழில் செய்து பொருளாதாரத்தை விஸ்தரித்துள்ளோம். அவர்களும் தமது புரிந்துணர்வுடன் தமது அன்பை வெளிப்படுத்துகின்றனர் எனக்கூறும் அவர், எம்மீதான விடுதலை புலிகளின் செயற்பாட்டுக்காக சில கல்விமான்களும் மன்னிப்பு கேட்டதும் நம் மனதில் நிற்கின்றது. நாம் யாழ்ப்பாணத்தில் உள்ள வரை தமிழ் மக்களுடன் நெருக்கமாக இருப்போம் எதிராக செயற்படமாட்டோம் என உறுதிபட கூறுகிறார் முகமட் தாகீர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் முஸ்லிம் மக்களின் நிலை முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாத சமூகம் என்பது கவலை அளிக்கிறது எனவும், பெண்கள் அணியும் முகத்திரையினை தடை செய்தவர்கள் ஒன்றை விளங்கிகொள்ள வேண்டும். ஒருசிலர் செய்த இந்த தாக்குதலுக்கு அதன் ஒட்டுமொத்த சமூகத்தையும் பழிவாங்கும் செயற்பாடுதான் இடம்பெற்றுகொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்த அவர், இதற்கு முக்கிய காரணம் கடந்த காலத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் சிறுபாண்மையினரால்தான் தாங்கள் தோற்றுள்ளோம் என்பதனால் இவ்வாறு செயற்பட்டு சிறுபான்மையினரை தம்வசம் திருப்புப முயற்சிக்கின்றனர் என குற்றஞ்சாட்டுகிறார். அதைதான் கிறிஸ்தவ பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கூறியுள்ளதாகவும் அவருக்கு பின்னால் முஸ்லிம் மக்கள் எமது ஆதரவை கொடுப்போம் எனவும் தெரிவித்தார். பெண்கள் முகத்திரை தொடர்பில் நம் மத தலைவர்கள் தமது தலைமை போட்டி காரணமாக இவ்வாறு செய்திருக்கின்றனர் என கூறிய முகமட் தாகீர், இது தனக்கு மிகவும் கவலையாகவும் மனவருத்தமாக உள்ளதாகவும் கூறிகிறார். பட மூலாதாரம்,Getty Images அண்மையில் கிழக்கில் இருந்து வந்த முஸ்லிம் பெண்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது அவர்களை இறங்கும்படி அரசு படை கூறியுள்ளது என்ற தகவலை தெரிவித்த முகமட் தாகீர், ஊடகங்களும் முஸ்லிம் சமூகம் என்று கூறி எம்மை பயங்கரவாதிகள் போல் சித்திரிக்கிறார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். "என்னதான் நடந்தாலும் நாம் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தை ஆதரித்து அவர்களை ஆட்சியில் ஏற்றுவோம் என கனவில் கூட நினைக்க வேண்டாம். நாம் வாக்களிக்கமாட்டோம்" என உறுதிபட பேசினார் முகமட் தாகீர். நோன்பு காலத்தில் நாம் பெரும் இன்னல்களை சந்திக்கின்றோம் எனவும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். இந்த குண்டுதாரிகளின் சரியான பின்னணி கண்டறியப்படாவிட்டால் இந்த நாடு பயங்கரவாதத்தினால் முற்றாக அழிந்து போகும் என்பதை திட்டவட்டமாக கூறினார் முகமட் தாகீர். தவுஹீத் ஜமாத் அமைப்பு தவுஹீத் ஜமாத் என்று கூறி முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை உருவாக்கி இருக்கின்றனர் என கூறும் இவர், இலங்கையில் ஜம்மியத் உலமா என்ற சபை உள்ளதாகவும், இதுதான் முஸ்லிம்களின் மிக உயர்ந்த சபை அந்த சபையில் தவுஹீத் ஜமாத், ஜபிலிக் ஜமாத், ஹரிகா என்ற அங்கங்ளை கொண்டதுதான் இந்த அமைப்பு என்றார். ஆகவே தவுஹீத் ஜமாத் அமைப்பை மட்டும் தடை செய்து அவர்களை மட்டும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பது தலைவர்கள் தமக்குள் உள்ள போட்டியை சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம்களை பழிவாங்கும் செயலாக உள்ளதாகவும், இதை ஒரு சூழ்ச்சியாகவே பார்பதாகவும் முகமட் தாகீர் தெரிவித்தார். ஜம்மியத் உலமா சபை சரியான முறையில் நடந்துகொள்ளாததால்தான் தவுஹீத் ஜமாத் அமைப்பின் விடயங்களை இவர்கள் பெரிதுபடுத்தி கிழக்கில் முஸ்லிம்களை பழிவாங்கிகொண்டு இருக்கின்றனர் என்றார் முகமட் தாகீர். தவுஹீத் ஜமாத் அமைப்பு ஒரு நேர்வழிகாட்டும் அமைப்பு. பயங்கரவாதிகள் இல்லை என்கிறார் அவர். "இங்கு ஆயுதங்களுடன் பிடிக்கபட்டவர்களை பயங்கரவாதிகளாக தண்டிக்கப்படுவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் தமிழ் மக்கள் ஆயுதங்களுடன் பிடிபட்டால் அது விடுதலை புலிகள் என்று கூறுபவர்கள் ஏன் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எங்களை மட்டும் ஒட்டுமொத்த முஸ்லிம்களாக பறைசாற்றுகின்றனர்" எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார். அவர்களின் நோக்கமே இலங்கையில் முஸ்லிம் மக்களை ஒடுக்கி உயர்ந்த இடங்களுக்கு வரவிடாமல் தடுப்பதும்தான் என குற்றஞ்சாட்டும் இவர், பொருளாதாரத்தை இல்லாமல் செய்வதே இவர்களின் முக்கிய விடயம் என்கின்றார். முஸ்லிம் மதத்தில் உள்ளவர்கள் எவரும் இவ்வாறான செயலில் ஈடுபடமாட்டார்கள் எனவும் முஸ்லிம்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் பயங்கரவாதத்தை முற்றாக எதிர்கின்றோம். இஸ்லாமில் பயங்கரவாத்திற்கு இடமில்லை எனவும் கூறும் முகமட் தாகீர், தற்கொலைக்கும் இடமில்லை; அவ்வாறு தற்கொலை செய்பவர்களை முஸ்லிம் என நாம் ஏற்றுகொள்ளப்போவதில்லை எனவும் உறுதியாக தெரித்தார். BBC News தமிழ்“விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதி...விடுதலை புலிகள் இயக்கம் எம்மை வெளியேற்றியதற்காக தமிழ் மக்கள் எம்மை வெறுக்கவில்லை, அதுபோல் விடுதலை புலிகள் எம்மை வெளியேற்றியதற்காக நாமும் தமிழ் மக்களை வெறுக்கவில்லை என்கிறார் அவர்.- ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த இரு நாய்கள் பரிதாபமாக உயிரிழப்பு!
கடைசியிலை நாய்களையும் குடு நாய்களா மாத்தி போட்டாங்கள் .- பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?
இரும்பு சத்துக்கு பேரீச்சை பழம் என்பது சுத்த டுபாகூர் உருட்டு நெட் ல் தேடியதில் கிடைத்த தரவுகள் சொல்கின்றன . அதே போல் கடுமையான மத கட்டு பாடுகளை கொண்ட புகைத்தல் மது அருந்துதல் போன்ற தடை செய்ய பட்ட சில அரபு நாடுகளில் புற்று நோய் குறைவாக காணபடுகிறது பிறகென்ன இனம் பெருக்கம் தான் அவர்களின் ஒரே ஒரு பொழுது போக்கு ஆக இருக்கலாம் . ஒரு பிடி முருங்கை கீரையில் உள்ள இரும்பு சத்து அதிகம் என்று நம்ம நாட்டு முருங்கை கீரையை கொரியன் வாங்கி கொண்டு செல்கிறான் நம்ம தமிழ் கடைகளில் .- எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
அதில் ஒட்டுண்ணிகள், பாக்டீரியா, வைரஸ்கள், கன உலோகங்கள் மற்றும் காற்று மற்றும் சேகரிப்பு மேற்பரப்புகளிலிருந்து வரும் ரசாயனங்கள் போன்ற அசுத்தங்கள் இருக்கலாம் என்கிறார்கள் .- தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!
இவ்வளவு பாரிய போதை பொருள்கள் திடிர் திடிர் என்று கைபற்ற அதை உபயோகித்த நபர்களுக்கு மாற்றீடு தேவையே அதை எப்படி நிவர்த்தி செய்ய போகிறார்கள் ? குறைந்த பட்ச சாதாரண வியாதிகளுக்கு உரிய மருந்தே தட்டுபாடான நாட்டில் போதை புனர்வாழ்வு மையங்கள் எப்படி நிறுவ போகிறார்கள் ?அப்படியான புனர் வாழ்வு மையங்கள் இல்லாமல் போகும் பட்சம் மிக மிக கொடூரமாக சட்டம் ஒழுங்கு பாதிக்க படும் என்பதை மிக இலகுவாக மறந்து விடுகிறார்கள் . இறுதி யுத்தத்தில் எப்படியாவது தமிழரை அழித்து தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை தமிழர் அழியணும் எனும் இன கோதாவில் ராஜபக்சா குடும்பத்தால் அறிமுகபடுத்தபட்ட விளைவுகளுக்கு சிங்களம் பொதி சுமக்கிறது .- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.
வெண்கல கடைக்குள் யானை புகுந்தது போல் ட்ரம் செய்யும் கூத்துகளால் சும்மா கிடந்த தங்க விலை பறக்க தொடங்கி விட்டது எனகென்னவோ வேண்டும் என்றே தங்க விலை கூடுகிறது போல் உள்ளது தங்கத்தின் மதிப்பு உயர உயர அமெரிக்க கடன்கள் குறைவாகும் . ஏனென்றால் அவர்களின் தங்க இருப்பு அப்படி .- கடல்வளம் குன்றுகிறது!
இதைத்தானே பலவருட காலமாய் இலங்கையின் வடகிழக்கு போரினால் பாதிக்க பட்ட தமிழ் மீனவர்கள் உங்களிடம் இரந்து கேட்கிறார்கள் . இது புரியாமல் எங்களுகதுகளும் ஆளாளுக்கு விசைபலகையில் விசமிட்டு செல்கிறார்கள் இவ்வளவு காலமும் அரசல் புரசலாய் இருந்த நிலை தற்போது நேரடியாக இந்திய மாநில மீனவர்களிடையே பிரிவினையை உருவாக்கும் அளவுக்கு கடல் வள கொள்ளை தாண்டவம் ஆட தொடங்கி விட்டது ஒரே வழி உலகளவில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகளை ஒரேயடியாக பாரபட்சம் பார்க்காமல் தடை செய்வதே .- போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம்
பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்ட புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்காக குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். போலியான திருமணம் பிரித்தானியா குடியுரிமையைப் பெறுவதற்காக ஒரு இளம் வயது பெண்ணை போலியாக திருமணம் செய்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானிய புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியாவில் குடியிருக்கும் பொருட்டு, அவரையே மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் நசீர் கலீல் என்பவர் ஸ்லோவாக்கியா சிறுமி ஒருவரை போலியான திருமணம் செய்து ஏமாற்றியதாக சிறையில் அடைக்கப்பட்டார். குறித்த ஸ்லோவாக்கியா பாடசாலை மாணவிக்கு 16 வயது நிரம்பிய 4 நாட்களுக்கு பின்னர் இருவருக்குமான திருமணம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்துள்ள அந்த பாகிஸ்தானியருக்கு தொடர்புடைய ஸ்லோவாக்கியா இளம் பெண்ணுடன் பிள்ளைகளும் உள்ளனர். நீதிமன்ற விசாரணையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பொருட்டு, வறுமை நிலையில் இருக்கும் குடும்பங்களில் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொள்ளும் குழுவில் நசீர் கலீல் என்பவரும் ஒருவர் என வெளிச்சத்திற்கு வந்தது. ஸ்லோவாக்கிய பெண்ணுடன் சட்டத்திற்கு உட்பட்டு மீண்டும் திருமணம் முடிந்த ஓராண்டுக்கு பிறகு, 2019ல் நசீர் கலீல் பாகிஸ்தானிற்கு நாடுகடத்தப்பட்டார். மட்டுமின்றி, பிரித்தானியாவில் தங்கள் குழந்தைகளுடன் தங்குவதற்கு குறித்த பெண்ணிற்கு காலவரையற்ற விடுப்பு வழங்கப்பட்ட பிறகு அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்தே, குடும்ப விசா மூலம் இங்கிலாந்து திரும்புவதற்கான முயற்சியில் அவரது சட்டத்தரணிகள் உள்விவகார அலுவலகத்திற்கு புதிய விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ளனர். மட்டுமின்றி, பிரித்தானியாவில் வசிக்கும் பொருட்டு அந்த பாகிஸ்தானியர் சட்ட அமைப்பைப் பல வழிகளில் பயன்படுத்தியுள்ளார். நசீர் கலீலுக்கு விசா உத்தரவாதம் அளிப்பவர் அவரை விட இரண்டு தசாப்தங்கள் இளையவர், மேலும் பாடசாலை மாணவியாக இருந்தபோது அந்த நபரின் போலியான திருமணத்திற்கு இலக்கானவர். சட்டப்பூர்வ உரிமை 2012 ஆம் ஆண்டு ரோச்டேலில் உள்ள குடும்பத்தைப் பார்க்க கலீல் முதன்முதலில் பிரித்தானியாவிற்கு வந்தார். ஆரம்பத்தில் நுழைவு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் சிறிது காலம் தங்க அனுமதிக்கப்பட்டார். ஆனால், அனுமதிக்கப்பட்ட காலம் கடந்தும் அவர் பிரித்தானியாவில் தங்கியிருந்தார். மட்டுமின்றி, பாகிஸ்தானில் உள்ள தமது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில், ஸ்லோவாக்கியா சிறுமிக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல், அவர் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் திருமணமும் நடந்துள்ளது. அதன் பின்னர் கலீல், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள இயக்க சுதந்திரச் சட்டங்களை மேற்கோள் காட்டி, பிரித்தானியாவில் தங்குவதற்கு தனக்கு சட்டப்பூர்வ உரிமை இருப்பதாக குறிப்பிட்டு ஸ்லோவாக்கியா இளம் பெண்ணுடன் நடந்த திருமண ஆவணங்களைப் பயன்படுத்த முயன்றார். மட்டுமின்றி, 2016ல் அவர் நாடுகடத்தப்படும் போது பாகிஸ்தானில் உள்ள தாலிபான்களால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் வாதிட்டுள்ளார். தற்போது மீண்டும் குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் தற்போது உள்விவகார செயலாளர் ஷபானா மஹ்மூத் வசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Lankasri Newsபோலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித...பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்டபுலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்க... - சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.