Everything posted by பெருமாள்
-
கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
உலகம் எங்கேயோ போயிட்டுது இப்பத்தான் எங்கடை புலம் பெயர் சனம் நித்திரையால் எழும்பி பார்க்கினம் போல் உள்ளது .
-
கடல்வளம் குன்றுகிறது!
தலையங்கம் கடல்வளம் குன்றுகிறது! இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பது தொடர்பாக அண்மைக் காலங்களில் மீனவர்களுக்கிடையே நிகழ்ந்துவரும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளச் செய்கிறது. ஒரே நாட்டின் அண்டை மாநில, மாவட்ட மீனவர்களுக்குள்ளேயே ஒற்றுமையோ, விட்டுக் கொடுத்தலோ இல்லாத நிலையில், அயல்நாட்டு மீனவர்கள் விட்டுக்கொடுத்து அவர்களது கடல் வளத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அண்மையில் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 26 பேரையும், அவர்களது 8 விசைப் படகுகளையும் வேதாரண்யம் மீனவர்கள் பிடித்து ஆறுகாட்டுத்துறை படகு துறையில் சிறை வைத்து விட்டனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 2 படகுகளில் ஆந்திர மாநில கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அம்மாநில மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோரால் தாக்கப்பட்டுள்ளனர். படகுகளை நோக்கி நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. வாக்கிடாக்கி, கைப்பேசிகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுவிட்டனர். சமாதான பேச்சுக்குப் பிறகு மீனவர்கள் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தூத்துக்குடி கடல் பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப் படகு மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது தொழில் போட்டியால் மோதல் சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாக மாறி இருக்கிறது. கடந்த 2024 மார்ச்சில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் கேரள மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, அங்குள்ள மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டனர். கிழக்குக் கடற்கரையில் மட்டும்தான் இந்த மோதல் என்றில்லை. மேற்குக் கடற்கரையில் கர்நாடக மீனவர்கள் கோவா கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்து வருவதாகக் கூறி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2022 முதல் 2024 வரையில் அவ்வாறான மோதல் சம்பவங்கள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் கூறப்படும் ஒரே காரணம் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறுவதுதான் வேடிக்கை. நாட்டைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் பகுதிகளிலும் சுமார் 12 கடல் மைல் பகுதிக்கு முழுமையான இறையாண்மை மத்திய அரசுக்குத்தான் உண்டு. சுமார் 200 கடல் மைல் பகுதி வரையில் உள்ள பொருளாதார வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில அரசுகள் அருகில் உள்ள கடல் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு போன்றவற்றை மட்டுமே செய்துகொள்ள முடியும். ஒரு மாவட்ட, மாநில மீனவர்கள் கடலைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு மற்ற மீனவர்களை தங்களது எல்லைகளுக்குள் வரக் கூடாது என சட்டபூர்வமாக தடுக்க முடியாது. ஆனால், மீனவர்கள் அவரவர் பயன்பாட்டின் அடிப்படையில் செயற்கையான எல்லை ஒன்றை வகுத்துக் கொண்டு மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருவது வருத்தமளிக்கிறது. நாட்டின் கடல் பகுதியை எல்லையாகக் கொண்ட 9 மாநிலங்களிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த மோதல்களுக்கு முக்கியக் காரணம், கடலில் மீன் வளம் குறைந்து வருவதும், மாறி வரும் நவீன மீன்பிடி தொழில்நுட்ப முறைகளும்தான். அதிவேக விசைப் படகுகள் மற்றும் இரட்டைமடி வலைதான் பிரச்னையின் மையப்புள்ளி. ஆந்திர மீனவர்கள் 200 முதல் 300 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை மீன்பிடி படகுகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால், காரைக்கால் மீனவர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 600 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்துகின்றனர். இதனால் வலைகள் மற்றும் மீன் வளம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக ஆந்திர மீனவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை பயன்பாடு நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இதே காரணங்களால் தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளது. அதனால்தான், ராமேசுவரம் மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இங்கு மீன் வளம் குறைந்துள்ள நிலையில், எஞ்சி இருக்கும் கொஞ்ச வளத்தையும் அபகரித்துச் செல்ல வரும் குளச்சல் மற்றும் கேரள மீனவர்களைச் சிறைபிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. ஆந்திர கடல் பகுதியிலும் மீன் வளம் குறைந்துவிட்டதாலும், அடிக்கடி புயல் தாக்குதல் இருப்பதாலும் அம்மாநில மீனவர்கள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆதலால், அண்டை மாநில மீனவர்கள் அங்கு வந்து மீன் பிடிப்பது உள்ளூர் மீனவர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது. தடை செய்யப்பட்ட என்ஜின் மற்றும் வலைகளை மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தடுக்க மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், அவற்றால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமம் கண்காணிப்புப் பணிகளை முறையாக மேற்கொண்டால் இந்த மோதல்களைத் தடுக்க முடியும். மோதல்களுக்கான காரணங்கள் கண்கூடு. அவற்றைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. https://www.dinamani.com/editorial/2025/Oct/07/marine-resources-are-dwindling
-
இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா
50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. அமெரிக்க நிதித்துறை, ஈரானிய எரிசக்தி ஏற்றுமதியை ஊக்குவித்த 50-க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கு தடைகளை விதித்துள்ளது. இதில் இந்தியரான வருண் புலா, சோனியா ஷ்ரேஸ்தா மற்றும் ஐயப்பன் ராஜா ஆகியோர் அடங்குவர். இவர்கள் ஈரானிய எண்ணெய் மற்றும் LPG ஏற்றுமதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வருண் புலா, மார்ஷல் தீவுகளில் பதிவு செய்யப்பட Bertha Shipping Inc. நிறுவனத்தை நடத்துகிறார். இந்த நிறுவனம் PAMIR என்ற கப்பலை இயக்குகிறது,இது 2024 ஜூலை முதல் சீனாவுக்கு 4 மில்லியன் பீப்பாய்கள் ஈரானிய LPG ஏற்றுமதி செய்துள்ளது. ஐயப்பன் ராஜா Evie Lines Inc. என்ற நிறுவனத்தை நடத்துகிறார். SAPPHIRE GAS எனும் கப்பலை இயக்கும் இந்நிறுவனம், 2025 ஏப்ரல் முதல் சீனாவிற்கு 1 மில்லியன் பீப்பாய்கள் LPG ஏற்றுமதி செய்துள்ளது. சோனியா ஷ்ரேஸ்தா இந்தியாவிலுள்ள Vega Star Ship Management Pvt Ltd. நிறுவனத்தை நடத்துகிறார். NEPTA என்ற கப்பலை இயக்கும் இந்நிறுவனம், 2025 ஜனவரி முதல் பாகிஸ்தானுக்கு ஈரானிய LPG ஏற்றுமதி செய்துள்ளது. இந்த தடைகள் அமெரிக்காவில் உள்ள அல்லது அமெரிக்க நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நபர்களின் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் உரிமைகளை முடக்குகின்றன. மேலும், 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பங்குகளை கொண்ட நிறுவனங்களும் தடைக்குள்ளாகின்றன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. Lankasri Newsஇந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதி...50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.அமெரிக்க நிதி...
-
17 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்: 24 மணிநேரமும் மீனுக்கு இராணுவ பாதுகாப்பு- ஏன்?
வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹில்சா வங்காளதேசதத்தின் தேசிய மீன் என்பதால், இம்முறை 17 போர்க்கப்பல்கள், ட்ரோன்கள், ரோந்து படகுகள், ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பயணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 22 நாட்கள் கொண்ட இந்த தடைக்காலம், அக்டோபர் 4 முதல் 25 வரை கடைபிடிக்கப்படுகிறது. வங்காள விரிகுடா மற்றும் பத்மா, மேக்னா மற்றும் ஜமுனா போன்ற முக்கிய நதி அமைப்புகள் உட்பட நியமிக்கப்பட்ட இனப்பெருக்க மண்டலங்களில் உள்ள அனைத்து கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை ஹில்சா மேலாண்மை பிரிவின் துணை இயக்குநர் ஃபிரோஸ் அஹமது, "ஹில்சா மீனின் பாதுகாப்புக்காக நாங்கள் விரிவான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இது அதன் இனப்பெருக்கத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை" என கூறியுள்ளார். வங்காளதேசதத்தின் தெற்கு பகுதியில் உள்ள பரிசால் மற்றும் சட்டோகிராம் மாவட்டங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், கடற்படை, கடலோர காவல் படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட 4 சிறப்பு படைகள் ஈடுபட்டுள்ளன. கடந்த சில நாட்களில், தடை காலத்தில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடி வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்காளதேசம் உலகின் மிகப்பெரிய ஹில்சா உற்பத்தி நாடக இருந்தாலும், உள்ளூர் தேவை அதிகமாக இருப்பதால் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், துராக் பூஜை காலத்தில் இந்தியாவுக்கு சிறப்பு அனுமதியுடன் ஹில்சா மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் 1,200 டன் ஹில்சா மீனை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் ஏற்றுமதி குறைவாகவே இருந்தது. Lankasri News17 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்: 24 மணிநேரமும் மீனுக்கு...வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஹில்சா வங்காளதேசத...
-
மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா….
உத்திர பிரதேசத்தில் இலங்கையின் வடகிழக்கு இளையோர்களுக்கு ராணுவ பயிற்சி அவசர அவசரமாய் பொல்லு கொட்டனுடன் கொடுத்தது பாகிஸ்த்தான் ராணுவம் என்றால் தான் நாங்க நம்புவம் .😀 எஜமானர்களுக்கு ஒரு கீறல் விழுமாக இருந்தால் சாக்கை பிய்த்து தலையில் போட்டு கொண்டு உடுப்பு அவிழ்ந்து விழுவது கூட தெரியாமல் ஆடவும் செய்வம்😁 .. புதிதாய் எழுதப்பட்ட மாகாவம்சத்தில் கொக்குவில் ராணுவம் தாக்கபட்ட போது கனோன் பீரங்கி உடன் ஒரு சிங்கள ராணுவ வீரர் ஒலிபரப்பு கோபுரத்தில் ஏறி நின்று தாக்குதல் நடத்தி யதை சிங்களவர்களே நம்ப தயராக இல்லை அதை மாற்றி எழுத சொல்லி திருத்துகிறார்கள் இங்கு என்னடா என்றால் இன்னமும் முழு யானையை சோத்துக்குள் புதைக்க வெளிக்கிடுனம் .
-
மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா….
மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா…. ஏலையா க.முருகதாசன் October 9, 2025 0 இந்தியா இலங்கைக்குப் பக்கத்து நாடாக இருப்பதில் சாதகமான சூழ்நிலையைவிட அரசியல் ரீதியான பாதகமான சூழ்நிலையே அதிகரித்து வருகின்றது. இந்தியா, இலங்கைத் தமிழரை வைத்து எவ்வாறு பகடைக்காய் உருட்டியது என்பதும்,அதே சம ஆட்டமாக இலங்கை அரசை தமிழருக்கெதிராக தூண்டியது என்பதை அறிந்து கொள்ள இலங்கைத் தமிழர்கள் எவரும் சதியரசியலில் கலாநிதிப் பட்டம் பெற வேண்டியதில்லை. எல்லாருக்கும் அது புரியும். தமிழர்களில் பெருமளவாக இல்லாவிட்டாலும் தாம் கூறவந்த அரசியல் சூட்சும அறிவினை விளங்கப்படுத்திய விபரப்படுத்திய கணிசமான தமிழர்கள், தமிழ்த் தலைவர்கள் தமீழீழ உணர்ச்சிக் கயிறுகளால் தமிழர்களைக் கட்டி ஒரு திசைநோக்கி இழுத்தக் கொண்டு சென்றதைத் தவறென்று சுட்டிக்காட்டிய போது அதனை யாரும் காதுகொடுத்துக் கேட்கவும் இல்லை,.மாற்றுக்கருத்தினர் அப்படி என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதைக் கவனத்தில் எடுக்கவும் இல்லை. இந்தியாவின், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் அரசியல் தந்திரமுறையில் மிகமகிழ்ந்து உச்சி குளிர்ந்து எல்லாமே நீங்கள்தான் எனத் தமிழ்த் தலைவர்கள் புளகாங்கிதம் அடைந்தனர். நாம் பேசியிருக்கிறோம்,அவர்கள் இலங்கையரசுடன் பேசுவதாக உறுதியளித்திருக்கிறார்கள் எனப் பத்திரிகைகளில் அறிக்கைகளைவிட்டு இந்தியப்பயணம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது என்ற முற்றுப்புள்ளியுடன் இந்திய இராஜதந்திர அரசியலாளர்களைச் சந்தித்த புகைப்படங்களுடன் தவணை நகர்வு நிறைவுபெறும். தமிழ்த் தலைவர்கள் அனைவருமே மிகப் படித்தவர்கள்.அரசியல் அனுபவங்கள் நிறைந்தவர்கள்.எனினும் இத்தலைவர்களுக்கு இந்தியாவின் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் தந்திரத்தை ஏன் ஊகிக்க முடியாமல் போனது என்பது தெரியவில்லை. இறுதியில் ஆயுதப் போரில் தவனை நகர்வு நிறைவுபெற்ற போது இலங்கையை என்றுமே குழப்பத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதில் தண்ணீர் ஓடுகிற திசையில் வாய்க்காலை வெட்டியது போல தமிழீழ விடுதலைப் போருக்கு ஆயுத வழியே சரியென்று பலபக்கத்தாலும் மூளைச்சலவை செய்யப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளை வைத்தே இலங்கையைச் சீரழித்ததை உணர முடிகின்றது;அதுதான் உண்மையும்கூட.தமிழீழ விடுதலை ஆயதப் போராட்டம் புலிகளின் பெயரால் இந்தியாவால் நடத்தப்பட்டது அல்லது புலிகளைக் கொண்டு இந்தியாவல் நடத்தப்பட்டது என்றும் கூறலாம். இன்றைய அரசின் நடவடிக்கையும் இலங்கை ஜனாதிபதி திரு.அநுர குமார திஸநாயக்காவின் நுட்பமான நகர்வும் இந்தியாவுக்கு பெரும் ஐமிச்சத்தைக் கொடுத்துள்ளது.தமிழர்கள் ஜனாதிபதியை காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு விடுவார்களோ அது நடக்கக்கூடாது என்பதில் அடுத்து என்ன செய்யலாம் எனச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது இந்தியா. ஜனாதிபதி அவர்கள் எல்லா நாடுகளுக்கும் இராஜதந்திர பயணங்களை மேற்கொள்வதைப் பார்த்து அவரை எடைபோட போட முடியாத நிலைக்கு வந்துள்ளது இந்தியா. ஒரு நாடு என்பது அந்நாட்டு மக்களோடு இணைந்த ஒன்றாகும்.நாட்டை நிர்வகிப்பதற்கான அரசைத் தெரிவு செய்கின்ற மக்கள் தமக்கான தேவைகளை அரசு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்புடனேயே அரசைத் தெரிவு செய்கின்றனர். உலகம் நாடுகளாகி,மக்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்த போது,இனக் குழுமங்களில் தானாக உருவாகிய தலைவர்கள் காலப்போக்கில் மக்களால் தெரிவு செய்யப்படம் தலைவராக மாறினார்கள். ஒரு காலகட்டம் வரையும் ஒரு நாட்டினது செயல்பாடுகள் யாவும் அந்நாட்டின் உள்ளகச் செயல்பாட்டை மட்டுமே கொண்டதாக இருந்து வந்தது. தொடர் வளர்ச்சிநிலையில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் தொடர்பு கொண்டது.அத்தொடர்புகள் இன்னும் வளர்ந்து செல்கையில் நாடுகள் ஒவ்வொன்றும் இன்னொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடத் தொடங்கின. உளவாளிகளை நியமித்து மற்றைய நாடுகளை கண்காணிக்கும் செயலுக்கு வழிவகுத்தது. மேலே கூறப்பட்ட விடயங்களால் பல நாடுகளில் உள்ளநாட்டுக் கிளர்ச்சிகளும்,ஆட்சி மாற்றங்களும் முரண்பாடுகளும் தோன்றவே செய்தன. ஒரு நாட்டில் இன்னொரு நாட்டினது தலையீட்டினால் ஏற்படும் விளைவகள் அந்தந்த நாடுகளின் அரச பலத்தைப் பொறுத்ததாவிருக்கும். இதுவே காலப் போக்கில்இன முரண்பாடுகளைச் சில நாடுகள் தமக்குச் சாதகமாகப் பாவிக்கத் தொடங்கின.அது ஒரு சூழ்ச்சி,திட்டமிட்ட சதி.அத்தகு நிலையே இந்தியா இலங்கையை கையாள முயற்சிக்கின்றது. ஒரு நாட்டினது தலைவனோ அமைச்சகர்களோ தமது நாட்டு மக்களின் வளமான வாழ்வுக்காக உலக நாடுகள் எங்கும் சென்று உதவிகளைப் பெறுதல் பரஸ்பரம் பண்டமாற்றினை செய்து கொள்ளல் என்பது இயல்பான ஒன்று அதில் எந்த ஒரு நாட்டுக்கும் அறிவுரை சொல்லவோ கருத்துச் சொல்லவோ உரிமையில்லை. இந்தியா,இலங்கை கொண்டுள்ள பல நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது.இலங்கையில் ஏற்பட்ட இன முரண்பாடுகளுக்கு இந்தியாதான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றைய ஜனாதிபதி எந்த நாட்டுக்குப் பேகிறார் என்பதையோ,இந்தெந்த நாடுகளுக்கு போவதை தாங்கள் விரும்பவில்லை சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறோம் என இந்தியா நினைக்கவும் சொல்லவும் அவர்களுக்கு உரிமையே இல்லை. இதுவரையில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் கொடுக்காத ஒத்துழைப்பை இன்றைய ஜனாதிபதியான மான்புமிகு திரு.அநுரகுமார திஸநாயக்காவுக்கு தமிழர்கள் கொடுத்துவருவதை இந்தியாவால் ஜீரணிக்க முடியவில்லை. சிங்களவர்களையும் தமிழர்களையும் இனவாதத்தின் மூலமும் இனக்கலவரங்களை ஆரம்பித்து அதன் மூலமும் முரண்பட வைத்து அது தொடர்ச்சியாக வளரவேண்டும் என்பதற்காக ஆயதப் போராட்டத்தை வளர்த்தும் தமிழர்களையும் அழித்து இலங்கையைச் சீரழித்ததும் இந்தியாதான் இந்தியாவேதான். https://akkinikkunchu.com/?p=343999
-
பொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந்த அணியினர் கேள்வி
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எதற்காகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை சரத் பொன்சேகா முன்வைத்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச தூக்குத் தண்டனைக்குத் தகுதியானவர் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் இதையடுத்தே, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சரத் பொன்சேகா செயற்படுகின்றார் என்றும், அதற்காகவே அவருக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில், இறுதிப் போரை முடிப்பதற்கு முன்னர், மகிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது எனச் சரத் பொன்சேகா கூறி வருகின்றார். இது பொய்யான அறிவிப்பாகும். போர் முடிவுக்கு வரப்போகின்றது என்பது தெரிந்திருந்தால், எதற்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக சரத் பொன்சேகா சீனாவுக்குச் சென்றார்? முடியப்போகும் போருக்கு எதற்காக ஆயுதங்கள்? போர் முடியப்போகின்றது என மகிந்தவுக்கும் தெரியாது. பொன்சேகாவுக்கும் தெரியாது. போரின்போது பணியாற்றிய படைத் தளபதிகளில் பொன்சேகாவைத் தவிர, ஏனைய அனைவருக்கும் எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பொன்சேகாவுக்கு எதிராக எந்தத் தரப்பாலும் போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. ஏனெனில், படையினரை ஐரோப்பிய நாடுகளிடம் காட்டிக் கொடுத்தவரே பொன்சேகாதான் என குறிப்பிட்டுள்ளார். Tamilwinபொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந...முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எதற்காகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிப...
-
மனதுக்கு பிடித்த BGM Background Music
- மனதுக்கு பிடித்த BGM Background Music
- மனதுக்கு பிடித்த BGM Background Music
- ஐஸ் போதைப்பொருள் குழுக்களின் பின்னணியில் நாமல் ராஜபக்ச குழுவினர்.. பிரபு எம்பி வெளியிட்ட தகவல்
நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுக்கள் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "உலக குடியிருப்பாளர் தினத்தினை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட முதல் கட்டமாக 70வீடுகளும் இரண்டாம் கட்டமாக 28வீடுகளும் அமைக்கப்பதற்கான நிதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டதாக 70மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வீடுகளை வீட்டின் உரிமையாளர்களிடம் கையளித்திருக்கின்றோம். அதனைவிட இந்த நாட்டில் இளைஞர்கள் போதைபாவனை தொடர்பான விடயங்களில் உள்ளீர்க்கப்பட்டு அதன்மூலம் அவர்களின் வாழ்க்கை இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றது" என குறிப்பிட்டுள்ளார். Tamilwinஐஸ் போதைப்பொருள் குழுக்களின் பின்னணியில் நாமல் ராஜபக்ச கு...நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுக்கள் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்துவதாகதேசிய மக்கள் சக்தி நாடாள...- பொலிஸாருக்கு எதிராக யாழ்.வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்
பொலிஸாருக்கு எதிராக யாழ்.வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் October 7, 2025 0 நீதிமன்ற அனுமதியின்றி காவல்துறையினர் ஒரு வழக்கறிஞரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை செய்ததாகக் குற்றம் சாட்டி, யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்கள், செவ்வாய்க்கிழமை(07) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் நிலப் பத்திர மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நில மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான அத்தகைய ஒரு வழக்கறிஞரை கைது செய்யும் நோக்கத்துடன், காவல்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் ஞாயிற்றுக்கிழமை(05), நுழைந்து, வீட்டிற்குள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்றத்தின் முன் அனுமதி அல்லது பிடிவிறாந்து பெறாமல் சோதனை நடத்தியதாக காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, காவல்துறையினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து நீதிமன்றங்களுக்கு முன்பாக வழக்கறிஞர்கள் போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையில், நில மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்கள், காவல்துறையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்க நாளை (புதன்கிழமை) நீதிமன்றத்தில் முன்பிணை மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=343714- ஒரு கிராமமே பிரமிட் மோசடியில் சிக்கியது – மொத்தமாக கோடிக்கணக்கில் பணத்தை இழந்த அம்பாறை பிரதேச மக்கள் சத்தமிட்டு சாபம் விடும் நிலையில் மோசடிக்காரர்கள் குழந்தையையும் விட்டுவிட்டு ஊரிலிருந்து தப்பியோடி தலைமறைவு
wp-content/litespeed/avatar/2684735edbe524bb22324f0d9738aa29.jpg?ver=1759301393 Madawala News14 hours ago 0 2 minutes read wp-content/uploads/2025/10/Picsart_25-10-06_13-48-50-155-780x993.jpg அம்பாறை மாவட்டம் தமன பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பன்னல்கம கிராம மக்கள் அனைவரும் பிரமிட் திட்டத்திற்குள் சிக்கி கடனாளிகளாகிவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு, பன்னல்கம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அருணலு பஹன்சிலு என்ற பெயரில் விளக்கு திரிகளை தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, இது ஒரு பத்தி தயாரிக்கும் தொழிலாகத் தொடங்கப்பட்டது, மேலும் கிராம மக்களுக்கும் அதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருவர் ரூ. 50,000 தொகையை வைப்பீடு செய்யும்போது, அவர்களுக்கு 1,000 பத்திகள் மற்றும் பெட்டிகள் வழங்கப்படுகின்றன. பத்திகளை பெட்டிகளில் அடைத்து, தயாரித்து, கொண்டு வந்து ஒப்படைக்கும்போது, இந்த நிறுவனம் ரூ. 75,000 தொகையை வழங்கியுள்ளது. பன்னல்கம கிராமத்தில் தொடங்கப்பட்டு இந்த வர்த்தகத்தில், கிராமத்தில் ஏராளமான மக்கள் ரூ. 50,000 யை செலுத்தி, பத்திகளை எடுத்து, பொதிச் செய்து திருப்பி அனுப்பி, ரூ. 75,000 பெற்றுள்ளனர். இந்த வணிகம் கிராமத்திலும் சுற்றியுள்ள ஏனைய கிராமங்களிலும் எல்லா இடங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டது, இரண்டாவது கட்டத்தில், ஒவ்வொரு இடத்திலும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு, இந்த வணிகத்தை மேலும் விரிவுபடுத்த அந்த பிரதிநிதிகள் மூலம் பணம் பெறப்பட்டது. பின்னர், இந்த வியாபாரி அதை ரூ. 50,000 க்கு பதிலாக ரூ. 250,000 ஆக அதிகரித்து 6,000 பத்திகளையும் பெட்டிகளைக் கொடுத்தார், மேலும் பத்திகளை மீண்டும் பொதி செய்த பிறகு, ரூ. 250,000 உடன் கூடுதலாக ரூ. 150,000 கொடுத்தார். இந்த வணிகம் தங்களுக்கு பெரும் நன்மைகளைத் தரும் என்று நினைத்த கிராம மக்கள், தங்கள் வயல்களை அடமானம் வைத்து, வட்டிக்கு கடன் வாங்கி, தங்கள் பொருட்களை அடகு வைத்து, இந்த தொழிலதிபருக்கு ரூ. 10 லட்சம், 15 லட்சம், 30 லட்சம், 40 லட்சம், 100 லட்சம் கொடுத்தனர். சில நாட்களுக்குப் பிறகு, பணத்திற்குத் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காததால் சிலர் தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் மற்றவர்கள் மூலப்பொருட்கள் உடனடியாக வழங்கப்படும் என்று கூறி ஏமாற்றப்பட்டுள்ளனர். பின்னர், இது ஒரு பிரச்சனைக்குரிய சூழ்நிலையாக இருந்ததால், இந்த விஷயம் தொடர்பாக 2025.09.29 அன்று பன்னல்கம விஹாரையில் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது, மேலும் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்ட மக்களும் பிரதேச சபையின் அரசியல் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். தான் அனுப்பிய பொருட்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பொருட்களை திருப்பி அனுப்பியதாகவும், பிரச்சினையைத் தீர்த்து ஒரு மாதத்திற்குள் மக்களிடமிருந்து அறவிடப்பட்ட பணத்தை செலுத்துவதாகவும் கூறினார். இருப்பினும், 3 ஆம் திகதி மாலை, பன்னல்கம கிராமத்தில் வசிக்கும் அனைத்து மக்களின் பார்வையிலும் மண்ணை தூவிவிட்டு இந்தத் தொழிலை மேற்கொண்ட பன்னல்கம கிராமத்தைச் சேர்ந்த சுரங்க சதருவன் மற்றும் பியூமி புத்தினி ஜெயதுங்கா ஆகியோர் பன்னல்கம கிராமத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களுக்குப் பிறந்த குழந்தையை அவர்கள் வெளியேறும்போது அவர்களுடன் அழைத்துச் செல்லவில்லை, பின்னர் அவர்களின் உறவினர் ஒருவர் குழந்தைக்கு மருந்து வாங்கச் செல்வதாகக் கூறி குழந்தையைத் தன்னுடன் அழைத்துச் சென்று தாய் மற்றும் தந்தையிடம் ஒப்படைத்தார். இப்போது இந்தத் தொழிலைச் செய்த பெண்ணின் தாய் மற்றும் தந்தை மட்டுமே அந்த வீட்டில் உள்ளனர். 2025.10.04 அன்று, அசல் பன்னல்கம கிராம மக்கள் அந்த வீடுகளுக்கு அருகில் நாள் முழுவதும் கூடினர், மேலும் அவர்களின் பணத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமற்றதாகிவிட்டது. சில பெண்கள் அழுது, இந்தப் பணத்துடன் ஓடிப்போனவர்களை சபித்தனர். இந்த மூலப்பொருட்களை வாங்கும் போது, பணம் கொடுப்பவர்களுக்கு ஒரு ரசீது வழங்கப்படுகிறது, மேலும் பில்லை ஆய்வு செய்தபோது, அந்த ரசீதில் அவர்கள் கையொப்பமிட்டு பணம் செலுத்தியதாகத் தெரிந்தது. பணம் கொடுத்தவர்களுக்கு பணம் செலுத்தப்பட்டதை இது குறிக்கிறது. பன்னல்கம கிராமம் முழுவதும் மற்றும் தொட்டம, குமனா, பக்மிடியாவ, ஹிகுரானா, திம்பிரிகொல்ல, மடவலந்த, எக்கலோயா, உஹான அம்பாறை கொக்னஹாரா, சியம்பலாந்துவ, வெல்லவாய, மொனராகல மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் இந்த பிரமிட் திட்டத்தில் மிகவும் நுட்பமான மோசடியுடன் சிக்கியுள்ளனர். பன்னல்கம கிராமத்தில் மட்டும், 10 லட்சம் வைப்பிலிட்ட பலர் உள்ளனர், மேலும் இந்த ஜோடி சுமார் 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமண காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு குழுவினர் புகார் அளித்துள்ளனர், மேலும் அதிக பணம் செலுத்தியவர்கள் அம்பாறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மோசடி புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்துள்ளனர். கிராம மக்கள் மற்றும் சில தொழிலதிபர்கள், சுகாதார அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், குடும்ப சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்தப் பண மோசடியில் சிக்கியுள்ளனர். இந்தத் தொழிலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளானவர்கள் இப்போது தப்பி ஓடிவிட்டதாகவும், தங்கள் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டவர்கள் இன்னும் கிராமங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரதிநிதிகள் கிராம மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதன் மூலம் இந்த மோசடிக்கு உதவியுள்ளனர். இங்குள்ள சோகமான உண்மை என்னவென்றால், கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யும் சில பெண்கள் பத்து சதவீத வட்டிக்கு பணம் கடன் வாங்கி இந்த மோசடி செய்பவருக்கு லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்துள்ளனர், இப்போது அவர்களால் கடன் கொடுத்தவருக்கு பணம் கொடுக்க முடியவில்லை, மேலும் மிகவும் உதவியற்றவர்களாக உள்ளனர். சில பெண்கள் இந்தத் தொழிலுக்காக தங்கள் கணவர்களிடம் கொள்ளையடித்து பணம் கொடுத்துள்ளனர், இப்போது அந்த வீடுகளில் உள்ள கணவர்கள் சண்டையிடத் தொடங்கியுள்ளனர். பன்னல்கம கிராமம் முழுவதும் இப்போது ஒரே மரண ஓலம் கேட்கிறது. பன்னல்கம மக்கள் வரவிருக்கும் பருவத்தில் நெல் அல்லது மருதாணி பயிரிட முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்ட சிலர், கிராம மக்கள் இந்த வலையில் சிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர், ஆனால் அவர்களின் அதிகப்படியான பண ஆசை காரணமாக, இந்த கிராம மக்கள் இந்த மோசடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். https://madawalaenews.com/29576.html- நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
இலங்கை தொடர்பில் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருந்தும் கூட இந்த வருடம் நிறைவேறவுள்ள தீர்மானம் அவை அனைத்தையும் விட மிகவும் மோசமான, பலவீனமான ஒரு தீர்மானம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜெனீவா தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து ஜெனிவா அமர்வுகளில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களும் எடுக்கின்ற நடவடிக்கைகளும் மோசமான ஏமாற்றமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைந்திருந்தும்கூட இந்த வருடம் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விட மிகவும் பலவீனமான ஒரு தீர்மானம். ஒரு வருடத்தை கடந்த தேசிய மக்கள் சக்தி அரசு பொறுப்பு கூறல் சம்பந்தமாகவும் தமிழ் மக்களின் இன பிரச்சினை சம்பந்தமாகவும் எந்த விதத்திலும் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் மாறாக இதற்கு முதல் ஆட்சியில் இருந்த இனவாத அரசாங்கங்கள் செயல்பட்டதை போன்றே அதே நிலைப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் தொடர்கின்றதாகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கின்ற நிலையிலும் ஜெனீவாத் தீர்மானம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்ற அடிப்படை துரோகம். முழுக்க முழுக்க தங்களுடைய நலன்கள் சார்ந்த முடிவுகளாக இந்த நாடுகள் எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை கொடுக்காத,மாறாக நிரந்தரமாகவே பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை உண்மையில் நாம் கண்டிக்கிறோம். அந்த வகையில் செம்மணியிலே சுழற்சி முறையில் போராடிக் கொண்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்பங்கள் இந்த வருட ஐ.நா.வின் அறிக்கையை எரித்தார்கள். 2009 ஆம் ஆண்டில் இருந்து பொறுப்புக்கூறலுக்கு அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளக ரீதியாக செய்ய வேண்டும் எனக் கேட்டும் அந்த கோரிக்கையை முன் வைக்கின்ற வகையிலும் சர்வதேச கோணத்தில் எந்த விதமான பொறுப்பு கூறலும் வலியுறுத்தாமல் இருப்பது இந்த தீர்மானம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது. இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ள சுமந்திரன் தலைமையிலான செயற்பாடுகளை கண்டறிய வேண்டும். சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் பிரித்தானியாவிற்கு இரகசியமாக சென்று இந்த வரைவை தயாரிப்பதில் பணியாற்றினார். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பான ஒரு வரைவை உருவாக்குவதற்கான முயற்சியை நிராகரித்து தமிழ் அரசுக் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர் குழுவை விலத்தி வைத்திருந்து தீர்மானத்தின் இறுதி வடிவங்களை வரைந்திருந்த சூழலில் அவர் அந்த தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற வேண்டும் என்ற கருத்துக்களையும் கூறி பச்சைக் கொடி காட்டுகின்றார். மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர் தன்னுடைய செல்வாக்கை கட்சிக்குள் பயன்படுத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்புகளுடைய செல்வாக்கை தன்னுடைய தோல்வி அடைந்த போக்குக்கு பயன்படுத்துகின்ற அவல நிலையை நாங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக சுமந்திரன், சிவஞானம் போன்றவர்களின் படுமோசமான செயற்பாடுகளை விளங்கிக்கொண்டு மக்கள் நிராகரிக்கின்ற தரப்புகளை கட்சிக்குள் எதிர்ப்பதற்கு முன்வர வேண்டும். அல்லது அவர்களும் சேர்ந்து இந்த படுமோசமான செயற்பாடுகளை தமிழ் மக்களுக்கு எதிராக செயலாற்றுகிறார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வர வேண்டி இருக்கும் என்றார். https://akkinikkunchu.com/?p=343593- யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது
இப்படியான பெண் சட்டத்தரணிக்கு ஆதரவாக பின்கதவு புகழ் சுமத்திரன் ஆஜராகினார் என்று யுடுப் களில் சொல்கிறார்கள் . பாவம் இப்ப அனுரா வந்தது தொடக்கம் பின்கதவுக்கு உழைப்பு இல்லை போல் உள்ளது .- அமெரிக்காவில் பதற்றம்.. களமிறக்கப்பட்ட ஆயுதப்படையினர் - ட்ரம்ப் மீது கடும் அதிருப்தி!
அமெரிக்காவின் ஒரேகான் மாநில ஆயுதப்படையினரை போர்ட்லாந்துக்கு அனுப்புவதை நீதிமன்றம் தடை செய்ததால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், கலிபோர்னிய ஆயுதப்படையினர் 300 பேரை அங்கு அனுப்பியுள்ளது. போர்ட்லாந்துக்கு ஆயுதப்படையினரை அனுப்புவதற்கு எதிரான குறித்த தடை உத்தரவு நீதிமன்றத்தால் 60 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. போர்ட்லாந்தில் குடிவரவு மற்றும் சுங்க கட்டிடத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அங்கு ஆயுதப்படையினர் தேவை என ட்ரம்ப் கூறிய பின்னரும் இந்த தடை உத்தரவை நீதிபதி பிறப்பித்திருந்தார். ட்ரம்ப் மீது விமர்சனங்கள் இந்நிலையில், கலிபோர்னிய ஆயுதப்படையினரை ட்ரம்ப் நிர்வாகம் அங்கு அனுப்பியுள்ளது. இவ்வாறிருக்க, இராணுவத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் ட்ரம்ப் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. கலிபோர்னியா இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் என ஆளுநர் குறித்த மாநில ஆளுநர் கெவின் நியூசம் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
பெரும் மக்கள் கூட்டத்தையும் பெரும் கல்விசமூகத்தையும் கொண்டிருக்ககூடிய வடக்கு -கிழக்கு பிரதேசங்களில் யாழ், வன்னி மாவட்டங்களில் தமிழரசுக்கட்சியின் தெரிவு அல்லத அதில் உள்வாங்கியவர்கள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியே தேசிய மக்கள் சக்தியின் வெற்றியாக மாறியதாக கருதப்படுகின்றது. இந்தநிலையில் தமிழர் பகுதிகளில தமிழ் கட்சிகள் வென்றிருந்தால் ஐ.நா ஆணையாளரின் வருகை கூட மாறியிருக்கும் என்று பிரித்தானிய தமிழர்பேரவையின் மனிதஉரிமைகள் இணைப்பாளர் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐ.நாவில் தமிழ் மக்களுக்கான பின்னடைவிற்கான முழுபொறுப்பையும் தமிழரசுக்கட்சி ஏற்க வேண்டும். தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த சம்பந்தன் பல விடயங்களை கட்டுப்படுத்தியிருந்தால் தமிழினத்திற்கு இவ்வாறான விடயங்கள் நடைபெற்றிருக்காது என குறிப்பிட்டார். இந்த விடயங்கள் தொடர்பிலும், சுமந்திரனின் நிலைபாடு தொடர்பிலும் அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு... https://tamilwin.com/- மனதுக்கு இதமான இசை
- பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து நேற்று பலமுறை பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றததாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று(3) அதிகாலை கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்து காணப்பட்டது. பழுது நீக்கி மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட குறித்த பேருந்து ஆனது மீண்டும் இடை நடுவே பழுதடைந்துள்ளது. பயணிகள் சிரமம் பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது மீண்டும் அதே பேருந்து கேவில் நோக்கி நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டது அதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த பேருந்து மீண்டும் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்துள்ளது. இதனால் குடாரப்பு தொடக்கம் கேவில் வரை செல்ல வேவண்டிய பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இரவு வேளையில் குழந்தைகளுடன் பலர் வீதியில் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சிறந்த தரமான ஒரு பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாக பேசப்பட்டபோது 750. வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் நல்ல நிலையிலுள்ள பேருந்தை வடமராட்சி கிழக்கிற்க்கான சேவையிலீடுபடுத்துமாறு வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவரும் ஒருங்கிணைப்பு தலைவருமான றஜீவன் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மக்களின் கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை இதனால் வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் அரச பேருந்துகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட வழிவகை செய்யுமாறு நாளை பருத்தித்துறைக்கு வரவிருக்கும் போக்குவரத்து அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்லுமாறு வடமராட்சி கிழக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/- யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
இந்த கெட்ட பழக்கம் புலம்பெயர் தேசம்களிலும் தொடர்வது எமது இனத்தின் சாபகேடு .- தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
தமிழ் நகை கடை வைத்திருக்கும் பெருசாச்சாளிகளின் வண்டியை வளர்க்காமல் பேசாமல் 24 கரட் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது. தமிழ் கடையில் ஒரு நகையை வாங்கி பக்கத்து நகை கடையில் விலைக்கு கொண்டு போனால் 4௦ வீத பெறுமதி குறைத்து கேட்ப்பார்கள் .- லண்டனிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்!
இந்திய பிரதமர் நரேந்திரமோடி கூட இந்த லண்டன் காந்தி சிலையை சேதப்படுத்துவதில் பின்னணியில் இருக்கலாம் மோடி rss இயக்கத்தின் நீண்ட கால விசுவாசி . நாதுராம் விநாயக் கோட்சே rss இயக்கத்தில் இருந்து கடைசி வரை விலகவேயில்லை ஆதாரம் https://www.bbc.com/tamil/india-60108094- தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
இரண்டு டிரோன் இங்கிலாந்து பக்கமும் பறந்தால் தங்க விலை யும் சேர்ந்தே பறக்கும் . போனமாதம் காஸ்ட்கோ தங்க விலைக்கு இந்தமாத தங்க விலை வித்தியாசம் 11௦௦ பவுன் கூடியுள்ளது . us டொலரில் நம்பிக்கை இன்மை இன்னும் போக போக விலை அதிகரிக்கும் என்கிறார்கள் .- திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிப்பு -
வீதியில் நிக்கும் காலையும் கையையும் மறைத்து கொண்டு பிச்சை எடுக்கும் நடிப்பு பிச்சை காரன் போல் உள்ள மோடிக்கு ட்ரம் பல பக்கத்தாலும் கலைத்து கலைத்து சூட்டு குறி இழுக்குறார் பாப்பம் யார் வெல்லுகினம் என்று . இந்த கேட்டுக்குள் இந்திய யுடுப் கூட்டம்கள் அலப்பறை தாங்க முடியலை .- கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!
சாதுக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ..........! - மனதுக்கு பிடித்த BGM Background Music
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.