Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்(Patrick Brown) தெரிவித்துள்ளார். எக்ஸ் தள பதிவு ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு ,அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும், சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை ஆகும். ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைகள், வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டுவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போல்பொட் , ஸ்லோபடான் மிலோசோவிக், ஹென்றிச் ஹிம்லர் மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கும் மோசமானவை. கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/
  2. வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினருடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவையொட்டி 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மே 14, 2025 அன்று லண்டனில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வு மிட்சம் மற்றும் மோர்டன் தொகுதியைச் (Mitcham and Morden) சேர்ந்த லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழுக்கான அனைத்துக் கட்சி குழுவின் தலைவருமான Dame Siobhain McDonagh தலைமையில் நடந்துள்ளது. நிகழ்வில் Stratford and Bow தொகுதி பிரிட்டனின் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமாரன், ஈஸ்ட் ஹாம் தொகுதியைச் சேர்ந்த Rt Hon Sir Stephen Timms, Ealing North MP James Murray, ஓல்ட் பெக்ஸ்லி மற்றும் சிட்கப் தொகுதி எம்.பி. லூயி பிரென்ச் மற்றும் ருய்ஸ்லிப், நார்த்வுட் மற்றும் பின்னர் தொகுதி எம்.பி. டேவிட் சிம்மன்ட்ஸ், ஹேரோ வெஸ்ட் தொகுதி எம்.பி. காரத் தோமஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். தமிழரின் அரசியல் உரிமைகள் மேலும் நிகழ்வில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட இயக்குநர் பிரான்சிஸ் ஹேரிசன் , இலங்கையின் சமாதானம் மற்றும் நீதிக்கான இயக்கத்தின் இயக்குநர் இவோன் ஸ்கோஃபீல்ட், Freedom from Torture அமைப்பின் Head of Accountability Roslyn Renni, Tamils for Labour அமைப்பின் தலைவர் சென் கந்தையா ஆகியோர் சமூகநீதியும், மக்களவுரிமைகளும் தொடர்பான உரைகளை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் International Tamil Youth Organisation (TYO International) ஒருங்கிணைப்பாளராக செயல்படும் மதுஷா குமரேசன், PEARL அமைப்பின் பேரவையின் வழக்குரைஞராக செயல்படும் சிவானி ரவீந்திரன் ,பிரான்சிலிருந்து ரூத் சாருகா தேவகுமார் ஆகிய இளம் தமிழ் செயல்பாட்டாளர்களும் பங்கேற்று உரையாற்றியிருந்தனர். நிகழ்வின் முக்கியக் கருத்தாக, நாடு கடந்ததமிழீழ அரசாங்கத்தின் (TGTE) துணைப் பிரதமர் மகிந்தன் சிவசுப்பிரமணியம் மற்றும் TGTE உறுப்பினர்கள் முள்ளிவாய்க்கல் படுகொலையின் நீதி மற்றும் தமிழரின் அரசியல் உரிமைகள் குறித்து வலியுறுத்தியுள்ளனர். https://tamilwin.com/
  3. அவர் சிங்களவர் தான் பெயர் Abailija Patawadige Pathum Udayanga வயது 31 https://essential-japan.com/news/sri-lankan-man-arrested-over-death-of-female-brazilian-tourist-in-japan/
  4. அது நான் அல்ல chatgpt யின் பதில்கள் தமிழில் கேள்வி கேட்டால் கூட தமிழில் பதில்கள் வருகின்றன. நேற்று Cupboard அடிக்க வந்த கிந்தி மட்டுமே தெரிந்த இருவர் வந்தனர் அவர்களுக்கு ஆங்கிலத்தில் சொல்வது ஒன்றும் புரியவில்லை chatgpt மூலம் நாம் தமிழில் சொல்வதை ஹிந்தியில் மொழி மாற்றி மொபைல் சொல்லியவுடன் புரிந்து கொண்டார்கள் உலகம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது இந்த கேட்டுக்குள் சிங்களம் படி கிந்தி படி என்று ஒரு கூட்டம் அலையுது .
  5. chatgpt பதில்கள் . ✅ 1. அர்மேனிய இனப்படுகொலை (Armenian Genocide) – 1915-1923 பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: பெரும்பாலான நாடுகள் 2000களுக்குப் பிறகு மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஏற்றன. இனப்படுகொலை செய்தது: ஒட்டோமன் எமிரேட் (துருக்கி) மரணங்கள்: 1.2–1.5 மில்லியன் அர்மேனியர்கள் நடப்பு நிலை: துருக்கி இன்னும் இது இனப்படுகொலை என்பதை மறுக்கிறது. ✅ 2. ஹொலோடோமோர் (Holodomor) – 1932-1933 பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: 2006–2020களில் மேற்கு நாடுகள் ஏற்றன. இனப்படுகொலை செய்தது: சோவியத் ஒன்றியம் (உக்ரைனியர்களுக்கு எதிராக) மரணங்கள்: 3–7 மில்லியன் நடப்பு நிலை: ரஷ்யா மறுக்கிறது; உக்ரைன் அதை இனப்படுகொலையாக அறிவித்துள்ளது. ✅ 3. ஹெரெரோ மற்றும் நாமா இனப்படுகொலை (1904–1908, நமீபியா) பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: ஜெர்மனி 2021ல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. இனப்படுகொலை செய்தது: கெய்சர் ஜெர்மன் எமையர் (German Empire) மரணங்கள்: ~80,000 ஹெரெரோ மற்றும் நாமா மக்கள் நடப்பு நிலை: இப்போதும் நஷ்ட ஈடு குறித்து விவாதம் நடக்கிறது. ✅ 4. ரூவாண்டா இனப்படுகொலை (1994) பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: ஒரே ஆண்டிலேயே பலர் ஏற்றனர், ஆனால் மேற்கு நாடுகள் தாமதமாகவே பதிலளித்தன. இனப்படுகொலை செய்தது: ஹூதூ எக்ஸ்ட்ரீமிஸ்ட் அரசு மரணங்கள்: ~800,000 துட்சி மக்கள் நடப்பு நிலை: ஐ.நா. உட்பட உலகம் இனப்படுகொலையாக ஏற்றது. ✅ 5. சுதான் – தர்ஃபூர் இனப்படுகொலை (2003–தொடர்பது) பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: 2000களில், ஐ.நா. மற்றும் பல மனித உரிமை அமைப்புகள் இனப்படுகொலை செய்தது: சுதான் அரசு, ஜஞ்ஜவீட் படைகள் மரணங்கள்: ~300,000+ நடப்பு நிலை: சில நாடுகள் மட்டும் இனப்படுகொலையாக அறிவித்துள்ளன. இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொரு சம்பவமும் காலத்திற்குப் பின் மட்டுமே பொதுவாக ஏற்கப்பட்டது. இது போல ஏராளமான "ஏற்றுக்கொள்ளப்படாத" அல்லது விவாதிக்கப்படும் சம்பவங்களும் உள்ளன (உதா: தமிழீழ யுத்தம், சீனாவின் ஜின்ஜியாங் நிலைமைகள், ரொஹிங்க்யா மேன்முறைகள்). இங்கு யாரும் துள்ளி குதிக்கவும் இல்லை அழவும் இல்லை தமிழர்களின் ஒவ்வொரு நகர்வுக்கும் அழுது தொலைப்பது சிலரின் வாடிக்கை .
  6. தமிழ் இன அழிப்பை நிறுவுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை அப்படி ஒன்றே நடந்தது இல்லை என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி திரியும் சுமத்திரன் அவரின் கனடிய பினாமி சொத்துக்களை முடக்குவதுடன் அவரின் கனடிய ஆதரவாளர்களையும் விமானமேற்றி கொழும்புக்கு அனுப்பி விடவும் என்று மெயிலை தட்டி விடனும் இந்த செய்தியை படிக்கும் அனைவரும் .
  7. இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Patrick Brown) தெரிவித்துள்ளார். கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் மீதான தாக்குதல் நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது. இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள். ஆனால், இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றது என தெரிவித்த பிரம்டன் முதல்வர், உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் அவர்கள் முயன்றனர். இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Tamilwinதமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்ட...இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Pa...
  8. சம்மர் கட் ..😄😄😄 சம்மர் கட் ..😄😄😄
  9. லீவ் கேட்டா பேசாம கொடுக்கனும் அதை விட்டு விட்டு! ஊழியர் - சார் !! தாத்தாவுக்கு ஊரில் உடம்பு சரியில்லை ரெண்டு நாள் லீவ் கொடுங்க! அதிகாரி - லீவ் இருக்கட்டும் நான் கேட்கிற கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு! பாகுபலியை ஏன் கட்டப்பா குத்தினார்! ஊழியர் - சார்! சரியான நேரத்தில்.இந்த கேள்வியை கேட்டு இருக்கீங்க சார்! பாஹுபலி கிட்ட நம்ம கட்டப்பா தாத்தா உடம்பு சரியில்லை என்று ரெண்டு நாள் லீவ் கேட்டு இருக்கார்! கொடுக்களை அதான் போட்டு தள்ளிட்டார்! அதிகாரி - ரெண்டு நாள் என்ன நாலு நாள் லீவ் எடுத்துக்கோ ப்பா!
  10. கர்மா சாத்திரம் போன்றவற்றை நம்புவதில்லை நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது நம்ப தோனுது.
  11. அது வசியின் தமையனின் கொம்பனி . வசிக்கும் குடும்பம் ஒன்று இருந்து டைவேர்ஸ் ஆகி விட்டது .இதற்க்கு மேல் இங்கு வேணாம் .
  12. கல்யாண மண்டப அலப்பறைகள்! திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத்தான் இப்போ பாக்கப் போறோம். ( நம்மளை மாதிரி வேலை வெட்டி இல்லாதவன் போல ) . 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி. 2. கல்யாண வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும்.அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா. 3. ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இ. அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டிருப்பாரு. 4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது, வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது, இறங்குறதுன்னு ரொம்ப ஆக்டிவா, ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான்.அவன்தான் மாப்ளையோட தம்பி.ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான். 5. மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான்.அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். ( அவன் தான் உலகத்தின் பாவப்பட்ட ஜீவன்) 6. கல்யாணம் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, “இய்ய்ய்யாய்…எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது..” ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பார்.அவரை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவரை உள்ள கூப்டாங்கன்னா அவர் தான் மாப்ளையோட தாய் மாமன்.( பல நேரங்களில் அவர் நாய் மாமன் ) பத்து மணி கல்யாணத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு.ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம்தான் நடக்கணும்னு வேற எதிர்பாப்பாரு. அப்போ அவரைப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும். 7. கூட்டத்துல உட்ககார்ந்திருக்க எல்லாரும் “எப்பப்பா… கல்யாணம் முடியும்..எப்பப்பா சோறு போடுவாங்க” ன்னு ஒரே ஆவலோட உட்கார்ந்திருக்கும்போது,ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும்.அப்டி இருந்தா.அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும்,அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம். 8. மே மாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உட்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், “வாங்க வாங்க.. சாப்ட்டு போங்க” ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா. 9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா,ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும்.அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாக நகையப் போட்டுட்டு நம்மள டம்மி ஆக்கிறப்போறாங்களோங்குற பீதியிலயே இருக்கும். 10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யாணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும்.அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரங்க. 11.கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போன மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க.அவிங்க வேற யாரும் இல்லை.மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ, இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வராங்கன்னு அர்த்தம். 12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young, Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிக்கிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க.அவனும் வேற யாரும் இல்லை.மாப்ளையோட காலேஜ் ஃப்ரண்டாத்தான் இருப்பான். அவசரப்பட்டு அவங்க பேட்ச்லயே மொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டின்னு ஆயிட்டதால இப்டி பேச்சிலர் பார்ட்டில கலந்துக்க முடியாம சோகத்துல இருக்கவன். 13. கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது,பொண்ணோட ஃப்ரண்ட்ஸ பாத்து “இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு” மைண்டுல நினைக்கிறான்பாருங்க. அவர்தான் நம்ம மாப்ள்ளை. திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத்தான் இப்போ பாக்கப் போறோம். ( நம்மளை மாதிரி வேலை வெட்டி இல்லாதவன் போல ) . 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி. 2. கல்யாண வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும்.அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா. 3. ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இ. அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டிருப்பாரு. 4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது, வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது, இறங்குறதுன்னு ரொம்ப ஆக்டிவா, ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான்.அவன்தான் மாப்ளையோட தம்பி.ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான். 5. மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான்.அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். ( அவன் தான் உலகத்தின் பாவப்பட்ட ஜீவன்) 6. கல்யாணம் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, “இய்ய்ய்யாய்…எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது..” ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பார்.அவரை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவரை உள்ள கூப்டாங்கன்னா அவர் தான் மாப்ளையோட தாய் மாமன்.( பல நேரங்களில் அவர் நாய் மாமன் ) பத்து மணி கல்யாணத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு.ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம்தான் நடக்கணும்னு வேற எதிர்பாப்பாரு. அப்போ அவரைப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும். 7. கூட்டத்துல உட்ககார்ந்திருக்க எல்லாரும் “எப்பப்பா… கல்யாணம் முடியும்..எப்பப்பா சோறு போடுவாங்க” ன்னு ஒரே ஆவலோட உட்கார்ந்திருக்கும்போது,ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும்.அப்டி இருந்தா.அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும்,அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம். 8. மே மாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உட்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், “வாங்க வாங்க.. சாப்ட்டு போங்க” ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா. 9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா,ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும்.அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாக நகையப் போட்டுட்டு நம்மள டம்மி ஆக்கிறப்போறாங்களோங்குற பீதியிலயே இருக்கும். 10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யாணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும்.அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரங்க. 11.கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போன மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க.அவிங்க வேற யாரும் இல்லை.மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ, இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வராங்கன்னு அர்த்தம். 12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young, Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிக்கிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க.அவனும் வேற யாரும் இல்லை.மாப்ளையோட காலேஜ் ஃப்ரண்டாத்தான் இருப்பான். அவசரப்பட்டு அவங்க பேட்ச்லயே மொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டின்னு ஆயிட்டதால இப்டி பேச்சிலர் பார்ட்டில கலந்துக்க முடியாம சோகத்துல இருக்கவன். 13. கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது,பொண்ணோட ஃப்ரண்ட்ஸ பாத்து “இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு” மைண்டுல நினைக்கிறான்பாருங்க. அவர்தான் நம்ம மாப்ள்ளை.
  13. காலத்துக்கு ஏற்ப மாறி கொள்ளனும் இங்குள்ள புல்லு வெட்டும் மெசினை அங்கு கொண்டு போய் வாடகைக்கு விடலாம் அதேபோல் சிறு ரக இயந்திரம்களை கொண்டு போய் இறக்கி வாடகைக்கு விட்டு காட்ட பின்னால உங்கடை கொப்பி பண்ணிக்கொண்டு ஒரு நூறு பேர் வருவார்கள் உடனே உங்கடை வாடகை கொம்பனியை நல்ல விலைக்கு வித்து விட்டு அடுத்த சந்தர்ப்பத்தை தேட தொடங்குகள் .
  14. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மகத்தான வரவேற்பினை வழங்கியிருந்தது. தனக்கான வரவேற்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக இந்திய பிரதமர் தனது சமூக வலைத்தளமான எக்ஸில் குறிப்பிட்டிருந்தார். மகத்தான வரவேற்பு இந்நிலையில் கொழும்பை வந்தடைந்த இந்திய பிரதமருக்கு இலங்கை வாழ் இந்தியர்கள் மகத்தான வரவேற்பினை வழங்கியிருந்தனர். இந்திய மாநிலம் ஒன்றுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளும் போது, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுவதை போன்று, பிரதமர் கொழும்பில் தனது செயற்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தார். அந்தக் காட்சிகளை பார்க்கும் போது இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதா என சிந்திக்கும் அளவுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏற்கனவே இந்தியாவின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள இலங்கையை மற்றுமொரு இந்தியாவின் மாநிலமாக மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தியாவின் நாணயத்தையும் இலங்கையில் பயன்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில், இந்திய பிரதமரின் வருகையின் போதான வரவேற்பும் அதனை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/
  15. இந்த குழப்பம் இன்னும் புதிய பணக்காரர் களை உருவாக்கி தள்ளபோகுது ஒரு பிரச்சனை வருகிறது என்றால் சந்தர்ப்பங்களையும் காவி கொண்டே வரும் .
  16. இதெல்லாம் போலி செய்தி என்று அமெரிக்காவில் இருந்து குரங்குக்கு வைத்தியம் செய்பவர் வந்து சொல்வார் நம்புங்க மக்களே நம்புங்க .😄
  17. உலகில் தடை செய்யப்பட்ட இந்த கடலடி ரோலிங் மூலம்அவர்களின் வலைகளை கடலில் போடப்படும் வாகனம்களோ அல்லது அவர்களின் படகுகளோ அறுத்து நாசம் பண்ணி விடும் அதனால் மறுபடியும் இலங்கை வடகிழக்கு கடல் பகுதிக்குள் ரோலிங் பண்ணி மீன் பிடிக்க வரமாட்டார்கள் நமது வடகிழக்கு மீனவர் பாரம்பரிய மீன்பிடி முறை அவர்களுக்கு பாதிப்பு பெரிதாக கிடையாது . இப்படி கடலில் போடப்படும் படகுகளால் தமிழ்நாட்டு பத்து ரோலர் களின் உலகில் தடை செய்ய பட்ட கடலடி வலைகள் அறுக்க பட்டால் மறுபடியும் வடகிழக்கு கடல் எல்லைக்குள் வரவே மாட்டார்கள் .
  18. அவர்களுக்கே தெரியும் தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பார்கள் . அதே போலத்தான் சிறிமாவோ பண்டாரநாயக்கா யாழில் 7௦ களில் செய்ய வைத்த மிளகாய் சின்ன வெங்காயம் உற்பத்தி கடைசியில் மிஞ்சியது கான்சர் தான் அதிலும் தப்பினால் நிற மாறும் வேடம் பிரான்சில் இப்படியான நபரை கண்டு கொண்டேன் ஊரில் இருக்கும் மட்டும் தோட்டத்துக்கு மருந்து அடிப்பது அவரின் தொழில் இங்கு பிரான்ஸ் வந்த பின் உடம்பு முழுக்க வெள்ளை என்ன வெள்ளைகாரனே அவர்தான் . அவர் வரணி பகுதியை சேர்ந்தவர் .
  19. டக்கியும் இப்படித்தான் ஓடாத பஸ்களை கொண்டு போய் கடலில் பேருக்கு கொட்டி விட்டு இந்திய ரோலர் முதலாளி களின் பண பெட்டியை வாங்கி கொண்டு அமைதியாகினார் . அனுரா அரசு சொல்லிக்கொண்டு இருக்குதே தவிர செயலில் பின்னுக்கு இருக்கினம் அப்படி கொண்டு போய் கடலில் போடுவதுக்கு முன் இஞ்சின் பகுதிகளில் உள்ள கழிவு ஒயில் களை எடுத்து விட்டு போடட்டும் .
  20. இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கைக் கடற்றொழில் திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய விசைப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு பின்னர் இலங்கைச் சட்டப்படி அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. அந்த விசைப் படகுகளை மீன் பெருக்கத் திட்டத்தின் கீழ் நடுக்கடலுக்கு எடுத்துச் சென்று மூழ்கடிக்க கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களம் திட்டமிட்டுள்ளது. கடற்றொழில் சங்கங்கள் வலியுறுத்து இதற்காக யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் பிடிக்கப்பட்டு, மாவட்டக் கடற்றொழில் திணைக்களங்கள் மூலம் நீதிமன்றங்கள் ஊடாக அரசுடைமையாக்கப்பட்ட படகுகளே நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்படவுள்ளன. இரண்டு மாவட்டங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய விசைப் படகுகள் சேதமடைந்து, படகுகளின் உள்ளே மழை நீரும் கடல் நீரும் உட்புகுந்து காணப்படுவதனால் அவற்றை அவை தரித்துள்ள கரையோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்துமாறு கடற்றொழில் சங்கங்கள் வலியுறுத்துகின்றன. மயிலிட்டித் துறைமுகத்தில் காணப்படும் இத்தகைய படகுகளை அகற்றுமாறு கடற்றொழிலாளர்களுடன் துறைமுக அதிகார சபையும் கோரிக்கை விடுத்து வருகின்றது. இவற்றைச் சீர்செய்யும் வகையிலும் மீன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் நடுக் கடலில் மூழ்கடிக்கப்படவுள்ள படகுகளைக் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் நேரில் பயணித்து அவதானித்து அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளார். மேலும் விரிசல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்து திரும்பியதும் இந்தப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது. அதுவரை இது தொடர்பில் இரகசியம் காக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இலங்கை போக்குவரத்து சபையால் கை விடப்பட்ட 15 பேருந்துகள் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து கடற்படையினரின் கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்டு நடுக்கடலில் இப்படி மீன் பெருக்கும் நோக்கத்துக்காக இறக்கப்பட்டன. இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமது படகுகளை மீட்டுத் தருமாறு இந்தியாவின் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றபோது, நடுக்கடலில் அவற்றை மூழ்கடிக்கும் இலங்கையின் திட்டம் இந்திய கடற்றொழிலாளர்களின் மனநிலையில் மேலும் விரிசலை ஏற்படுத்தக்கூடும் என்றே கருதப்படுகின்றது. ஏனெனில், இலங்கையில் இந்திய கடற்றொழிலாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், 2022ஆம் ஆண்டு இதேபோன்று ஏலம் விடப்பட்ட சமயம் இந்தியாவில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது யாழ்ப்பாணத்தில் 57 படகுகளும், மன்னாரில் 7 படகுகளும், கிளிநொச்சியில் 10 படகுகளும் அரசுடைமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளாக உள்ளன. இவற்றையே நடுக்கடலில் மூழ்கடிக்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதற்கிடையில் இந்தப் படகுகளில் சிலவற்றைத் தங்கள் பாவனைக்குத் தருமாறு இலங்கைக் கடற்படை இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகின்றது என்று மற்றொரு வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. https://tamilwin.com/
  21. கெடுவார் தாங்கள் செய்த பாவத்துக்கு எந்த பக்கம் போனாலும் சகுனம் பிழைதான் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.