Everything posted by பெருமாள்
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
ஆதராம் ? விடியோ பார்க்கவில்லையா ? நீங்கள் பார்க்காமல் இருந்து இருக்க சந்தர்ப்பம் இல்லை இப்ப மறுபடியும் பார்க்கணும் என்று ஆசைப்பட கூடாது .
-
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்
ஒஸ்லோ பிரகடனத்தை இங்கு யாழ் வாசகர்களுக்கு விளக்கமா சொன்னால் நல்லது எனக்கும் விளங்கவில்லை ? இந்திரா காந்தி இருந்து இருந்தால் தமிழ் ஈழம் கிடைத்து இருக்குமா?
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
சர்வ சாதரணமா கூகிளில் தட்டும் போது வந்து விழும் படங்கள் தற்போது வரவில்லை மற்றபடி கொசிப் ஒன்றும் கிடையாது .
-
16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை; அவுஸ்திரேலியாவில் பிரேரணை நிறைவேறியது
சட்டம் கடுமையாக்கப்பட்டால் எல்லாம் சரியாக்கபடும் இதே கேள்வியை சிங்கப்பூரில் கேட்டு பாருங்க அப்படித்தான் . முதன் முதல் கனடா வந்தபோது ஒரு பப் காண்பதே அரிதானது இங்கு இங்கிலாந்தில் பப் இல்லாத இடத்தை காண்பது அரிது . இளசுகளுக்கு ரெத்தம் சூடானது இலகுவாக டம்மி ஐடி தயாரித்து தேவையான பொருள்களை வாங்கி விடுவார்கள் .
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
கேவலமான படங்கள் என்பது அவர்களுக்கு அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு எதிரான படங்கள் இப்படி சொல்லியும் உங்களுக்கு புரியாது என்றால் இதுக்கு மேல் கதைக்க முடியாது . ஏன் அவரின் உயிருக்கு ஆபத்து வந்தது ? மற்றைய தமிழ் அரசியல் வாதிகளுக்கு வராத உயிர் ஆபத்து உங்கடை சுமத்துக்கு மட்டும் ஏன் வந்தது ? பின்கதவால் வந்த நா.....ஏன் இரண்டாவது தேர்தலில் ராணுவ பாதுகாப்புடன் தேர்தல் பரப்புரை செய்ய வேண்டிய தேவை என்ன ? மூன்றுக்கும் உண்மையான பதிலை எதிர்பார்க்கிறேன் .
-
16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை; அவுஸ்திரேலியாவில் பிரேரணை நிறைவேறியது
நல்லதொரு விடயம் .
-
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்
இந்தியாவுக்கு எதிரான அரசு இலங்கையில் அமைந்தால் ஐயாவின் வீரவேச அறிக்கைகள் பாய்ந்து வரும் ஊடகங்களில் இது வழக்கமான ஒன்றுதான் . முள்ளி வாய்காலில் ஒன்றரை லட்சம் சனத்தின் அழிவுக்கு நீலி கண்ணீர் விடுவோர் இந்திரா காந்தியின் தவறான வழிகாட்டல் என்பதை இலகுவாக மறைத்து விடுகினம் . கண்ட கண்ட யாழ் சண்டியர்களுக்கும் இராணுவ பயிற்சியை கொடுத்து இலங்கையை குழப்ப நிலைக்கு கொண்டு சென்றவர்களில் அவரும் ஒருவர் . பலர் நினைக்கினம் இந்திரா இருந்து இருந்தால் தமிழ் ஈழம் கிடைத்து இருக்கும் என்று அவர் உயிருடன் இருந்தாலும் முள்ளி வாய்க்கால் நடந்து இருக்கும் . கொஞ்சம் முன்னாடியே நடந்து இருக்கும் .
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
சில படங்கள் இவர்களை பற்றிய கேவலமான தரவு படங்களை கூகிளில் இருந்து பெட்டிசம் போட்டு அழித்து விட்டார்கள் இதுக்கு ஒரு வழி இருக்கு செய்து விட்டு சொல்கிறேன் கொஞ்சம் பொறுங்கள் .
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
இந்த வெயிலில் தொரைக்கு கோட் கேக்குதாம் . அதிரடிப்படையினருடன் வலம் வரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
- மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
வடகிழக்கில் உள்ள பழைய தோத்தான் குரங்கு அரசியல்வாதிகள் யாராவது தாயகத்தில் நடை பெற்ற மாவீரர் நினைவு தினம்களில் கலந்து கொள்ளவில்லையே ? நானும் தேடி தேடி பார்க்கிறேன் செய்தி கிடைக்கவில்லை இப்படியே விட்டால் அனுரா கூட்டம் ஒரு தும்பு கட்டையை யாழில் நிறுத்தினாலும் சனம் வோட்டு போட்டு தள்ளும் என்ற அறிவாவது இல்லையா அல்லது வேறு முக்கியமானவரை தூக்குவம் என்று சொன்ன இ...... என்பவர்களின் வார்த்தை நம்பிக்கையா?- விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
சிங்களம் இதை முதலிலே செய்து இருக்கலாம் ஆனால் கடந்த பதின் நாலு வருடத்தில் வாங்கிய பொருளாதார அடியில் எழுந்து இருக்க முடியாமல் பல வேசம்கள் போட்டு நாடகம் நடிக்குது புலம்பெயர் தமிழரிடம் வழக்கம்போல் எந்த ஒரு தீர்வும் தராமலே தமிழரை பேய்காட்டலாம் என்று நினைக்கின்றனர் ஏனென்றால் வழக்கம்போல் இனவாதம் கக்கும் ராஜபக்சா கூட்டம் அமைதியாக இருக்கிறது இனவாத தேரர் கூட்டம் அமைதியாக இருக்கிறது .- சிரிக்க மட்டும் வாங்க
இது ஒரு அபூர்வ சக்திவாய்ந்த மரம்! ஒருவன் வனப் பகுதியில் ட்ரெக்கிங் போய் கிட்டு இருந்தபோது அவனுடைய ஷு ! அறுந்து விட்டது! அங்கு இருந்த மரத்தில் அதை தொங்க விட்டான். ஒரு பலகை பக்கத்தில் இருக்க! " இந்த மரத்தில் உங்கள் காலணிகளை தொங்க விட்டால்! உங்கள் மனைவி உங்கள் பேச்சை கேட்பார்கள் " என்று எழுதி விட்டு சென்றான்! கொஞ்ச நாள் கழித்து அந்த மரத்தின் படம் இது! புரியுது! இந்த மரம் எங்கே என்று தானே கேட்கிறீங்க!😆- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் @வீரப் பையன்26 தம்பிக்கு வாழ்த்துகள். வளத்துடன் வாழ்க.- சிரிக்கலாம் வாங்க
"சார் எம் புருசனை ரெண்டு நாளா காணோம்?" "பேரு என்னம்மா?" "லியோ" "நீ தானா அவன் ஒயிஃப். இந்தாம்மா 'நீ தேடி வருவ, வந்து கம்பளைண்ட் கொடுக்கும் போது இந்த லெட்டரை கொடுங்கன்னு கொடுத்துட்டு போயிருக்கான்' "மதிப்பிற்குரிய காவல்துறை அதிகாரி ஐயா, என் வீட்டில் கடந்த செவ்வாய் அன்று என் மனைவி மீன் எடுத்து மீன் குழம்பு வைத்தார். செவ்வாய், புதன் என இரண்டு நாள்கள் மீன் குழம்பு மற்றும் வறுவலோடு ஓடியது. மூன்றாம் நாள் வியாழக்கிழமை நாளை என்ன குழம்பு என்று கேட்கும் போது 'மீன் குழம்பு தான் இருக்கே, அதுவே இன்னும் மூன்று நாளைக்கு வரும், சூடு பண்ணி வைக்கிறேன்' என்று சொன்னார். இது இந்த வாரம் மட்டுமல்ல கடந்த ஏழு வருடங்களாகவே தொடர்கிறது. இன்றோடு ஐந்தாம் நாள் மீன் குழம்புக்கு கெடு முடிந்த நிலையில் சனிக்கிழமை மாலை நானே வீடு திரும்புவேன் என்று கூறிக்கொள்கிறேன். நன்றி" "அந்தாளு வீட்டுக்கு வரட்டும், இன்னைக்கு இருக்கு கச்சேரி" "ஏம்மா அதான் வர்றேன்னு சொல்லிட்டார்ல. திரும்ப ஏம்மா பிரச்சினை?" "கல்யாணம் ஆகி எட்டு வருசம் ஆச்சு, ஏழு வருசம்னு எழுதியிருக்கார் பாருங்க 🤬🤬"- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- அநுர மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சுமந்திரன் தொடர்பான முடிவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படாமல் போனது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் அரசாங்கத்திற்கு சார்பாகவே செயற்பட்டிருப்பார். எனவே, அவர் தேர்தலில் தோல்வியுற்றது அநுர மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எனக் கூறப்படுகின்றது. சுமந்திரன் தமிழ் மக்களின் உரிமைக்காக தீவிரமாக போராடியிருந்தால் தென்னிலங்கையில் அவருக்கு இந்தளவுக்கு ஆதரவு இருந்துருக்காது. இவ்வளவு காலமும் அரசாங்கத்துக்கு சார்பாக சுமந்திரன் செயற்பட்டதாலேயே அவரை வடக்கு மாகாண மக்கள் நிராகரித்த போதும் தென்னிலங்கை மக்கள் ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி, https://tamilwin.com/article/southern-sri-lanka-s-perspective-on-sumanthiran-1732557870- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றவேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த 04.10.2024 அன்று பயணித்த குறித்த இளைஞர் அவரது சகோதரி பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அங்கு தொழில் நிமித்தமாக செல்ல முயற்சித்துள்ளார். அந்த இளைஞனுக்கு ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர்கள் இந்நிலையில், ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமென இவர்களை கூட்டிச் சென்ற முகவர் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்களைத் தங்க வைத்து இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கி 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரைனின் எல்லையில் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு மனு இவ்விடயம் தொடர்பாக குருநகர் பகுதியை சேர்ந்த கோமஸ் அதிஸ்ரராஜா மிதுர்ஷன் என்ற 25 வயது இளைஞன் தாயாருக்கு தனது புகைப்படங்களைத் பகிர்ந்து நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தாயார் தனது மகனையும் ஏனையவர்களை மீட்பதற்கு ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மனு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த பயணத்திற்காக முகவர் ஒருவருக்கு ஒவ்வொருவரும் தலா 60 இலட்சம் ரூபாய் வரையான பணத்தை செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/jaffna-guy-forced-to-involved-in-russian-army-1732537133- யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
ஏற்கனவே உங்க ஆள் சுமத்திரன் செய்த வேலைகளால் கோமணத்தை கூட முகத்தை மூட முடியாமல் கூனி குறுகி நின்றோம் வேட்டிதானே .😁- சிரிக்கலாம் வாங்க
சபாஷ் சரியான போட்டி ! - நீயா ! நானா ! ஒரு முறை ஒரு பெண்மணி பொருட்கள் வாங்க சூப்பர் மார்கெட் சென்றார் . பொருட்கள் வாங்கிய பின் பணத்தை கொடுக்க பர்ஸை திறக்க அதில் டீவி ரிமோட் ஒன்று இருக்க, அதை பார்த்த கேஷியர் அவரிடம் ! " என்னம்மா ! எப்பவும் டீவி ரிமோட் வைத்து இருப்பீர்களா " என்று கேட்க அதற்கு அவர் ! " இல்லை ! நான் கடைக்கு போக வேண்டும் கொஞ்சம் வாங்க என்று என் கணவனை கூப்பிட்டேன் ! அவர் இன்று கிரிக்கெட் மேட்ச் இருக்கு நான் வரலை என்று சொல்லிவிட்டார் ! அதான் அவரை பழி வாங்க டீவியை ஆஃப் செய்துவிட்டு ரிமோட்டை எடுத்து வந்து விட்டேன் ! இப்ப அவர் எப்படி படம் பார்ப்பார் " என்றார் ! நீதி - எப்பொழுதும் மனைவி வெளியே செல்ல கூப்பிட்டால் மறுக்காமல் செல்லவும் ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! பொருட்களுக்கு கொடுக்க பணம் குறைவாக இருந்ததால், பெண்மணி அவரின் க்ரெடிட் கார்டை கொடுக்க ! அதை வாங்கி SWIPE செய்த கேஷியர் சிறிது கொண்டே ! " அம்மா ! உங்கள் கணவர் உங்கள் க்ரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டார் ! என்று சொன்னார் ! நீதி - கணவனின் கருத்திற்கு மதிப்பு கொடுங்கள் ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! பெண்மணி ! தன் பர்ஸில் இருந்த கணவனின் க்ரெடிட் கார்டை எடுத்து, கொடுக்க !கணவன் தன் கார்டை பிளாக் செய்யவில்லை ! நீதி - மனைவியின் புத்திசாலித்தனத்தையும் அறிவையும் குறைத்து எடை போட்டு விடாதீர்கள் ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! கேஷியர் கார்டை swipe செய்ய அது பின் நம்பர் கேட்க ! கேஷியர் பெண்மணியை பார்த்து உங்க கணவரின் மொபைலுக்கு பின் நம்பர் வந்திருக்கும் கொஞ்சம் சொல்லுங்க என்று சொல்ல ! நீதி - சில நேரம் ஆண் தோற்றாலும் ! அவன் சார்ந்த தொழில் நுட்பம் அவனை காப்பாற்றும் ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! பெண்மணி ! இருங்க சொல்றேன் என்று பர்ஸை திறந்து அதில் இருந்த கணவனின் போனை எடுத்து பின் நம்பரை கேசியார் கிட்ட சொன்னார் ! ரிமோட் எடுக்கும்போதே எதற்கும் இருக்கட்டும் என்று, கணவனின் க்ரெடிட் கார்டையும் மொபைலையும் எடுத்து வந்தார் ! நீதி - மனைவியின் அபார புத்திசாலித்தனம் சாதாரணமானது இல்லை ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! பொருட்களை வாங்கி கொண்டு ! டாக்சி பிடித்து வீடு வந்த சேர்ந்த பெண்மணி , கணவனின் வண்டி இல்லாதது கண்டு ஆச்சரியம் அடைய ! வீட்டிற்குள் சென்று பார்த்தல் , மேசையில் ஒரு பேப்பர் எழுதி இருந்தது! அதி " எல்லா இடங்களிலும் டீவி ரிமோட் தேடி பார்த்தேன் ! கிடைக்கவில்லை அதனால் என் நண்பர்களுடன் மேட்ச் பார்க்க போகிறேன் ! உனக்கு எதாவது வேண்டும் என்றால் என் போனுக்கு கூப்பிடு என்று எழுதி இருந்தது ! நீதி - கணவனை கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள் ! நீங்கள் தோற்று போவீர்கள் !- யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அந்த அறிவாளிதான் ஒரு தங்கத்திடம் தோத்தான் குஞ்சு ஆனது இதுக்கு பிறகும் தனக்கு மானம் ரோசம் இருக்கெண்டு என்னெண்டுதான் தமிழ் மக்கள் முன்னிலையில் நடமாடுதோ ?- யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
உங்கட சுமத்திரன் சேர் க்கு இப்படி பாடம் எடுக்க உங்களால் முடியுமா ? - மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.