Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. போனகிழமை செய்தியில் கிளிநொச்சி அல்லது பூநகரி பக்கமாய் இருக்கனும் சனம் அடிக்க கலைக்க ரோட்டால் போன மோட்டார் சைக்கிளை மறித்து ஆள் மட்டு மட்டா தபியோடினவர் அதன் பின் வந்த முடிவாய் இருக்கும் .
  2. குட் மோர்னிங் பகல் முழுதும் தூக்கம்ஆக்கும் கொடுத்து வைத்த நீங்கள் 😀 இனியென்ன விடிய விடிய ஆட்டம் தான் .😀
  3. அதை போய் வீட்டில் சொன்னால் வீட்டில் டபுளா வாங்கி கட்ட வேண்டி வரும் . 😀
  4. யுனிவேர்சல் கிரடிட் பழையது போல் இல்லையாமே ரெம்ப கெடுபிடியாம் விடிகாலை மட்டும் கூத்தடிக்க முடியாது .
  5. இந்த பேய்கள் வெளிக்கிடும் நேரம் பார்த்து உங்கடை கருத்தை பார்த்து சிரிக்க வீட்டுக்குள் களோபரம் மீரா அவர்கள் இனி பகலில் கருத்தை போடுமாறு தயவுடன் கேட்கிறன் 😀
  6. அவர் உண்மையான தமிழ் கிருத்துவரா என்பதில் எனக்கு அடிக்கடி சந்தேகம் உண்மையான கிருத்துவத்துக்கு பிறந்தவர்கள் ஏதோ ஒரு வகையில் கல்யாண வீட்டில் மாலை மாற்றி கொள்வார்கள் தாலி கொடி போடுவார்கள் இந்து கோவிலுக்கு போகமாட்டார்கள் இந்த ஜந்து வேலியில் நிக்கும் ஒனான் போல் எல்லாபக்கமும் பாயும் தனது பிழைப்புக்காக .
  7. கை வைத்தால் மீண்டும் எதிர் கருத்து அவவின் வாயில் இருந்து வரகூடாது இப்ப என்ன நடக்குது ? இன்னும் மோசமாக கத்தி கொண்டு இருக்கிறா என்று கேள்வி ஒரு இனத்தை கேவலமாக சமூக வலைதளம்களில் பேசகூடாது ரிப்போர்ட்செய்து முடக்கலாம் .
  8. உங்களுக்கு யாழில் நடக்கும் வழமையான விடயங்களை எனக்கு சொல்லி மகிழ்ந்து கொள்வதில் அடித்து கொள்ள உங்களை விட்டால் வேறு ஆள் கிடையாது .
  9. ஒரு இனத்தை பற்றி இழிவாக கதைப்பதை காட்டியே ரிப்போர்ட் செய்து இலகுவாக அவரின் சமூக வலைதளம்களை முடக்கலாம் அப்படி இருக்கையில் இப்படி அடிப்பதால் இன்னும் மேலும் மேலும் அவருக்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளார்கள் அடி விழும் காணொளி வரும் மட்டும் இப்படியான ஆள் இருக்கிறார் என்றே தெரியாது . தலைவர் ஒழுக்கமான கட்டுகோப்பான தமிழர் படையை உருவாக்கியிருந்தார் .த
  10. நல்ல காலம் Slave i remain என்ற சொல் ஆங்கிலம் இல்லைஎன்று சொல்லாமல் விட்டது பெரும் அதிசயம் தேவையில்லாமல் தொப்பியை துக்கி போட்டு தேவயில்லாமல் நாடகம் போடுகிறீர்கள் சேர் பிரச்சனை யில் Slave i remainஎன்பது பொய்யாக இருக்கட்டும் உண்மையாக இருக்கட்டும் பக்ட் செக் என்ற ஒன்றை இழுத்தால் உண்மையாகும் என்றால் இனி உங்கள் கருத்துகளையும் சரி பிழை பக்ட் செக் தான் நீதிபதி .😃
  11. இந்திய கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் (kachchatheevu) வலைகளை உலர விடலாம் என்ற விடயம் இருந்தது உண்மை எனவும் அது பின்னர் நீக்கப்பட்டதற்கு இந்தியாவின் சுயநலமே காரணம் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் நேற்று (05.04.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரம் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவில் தேர்தல் சூடு பிடித்துள்ளது. அந்தவகையில் இந்திய தமிழ்நாட்டு மக்களுடைய வாக்கு வங்கியை பலப்படுத்தல், இலங்கையில் இருந்து சீனாவின் (China) உடைய ஆதிக்கத்தை குறைப்பதற்கும் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்தியாவிற்கு சில தேவைகள் காணப்படுகின்றது. இந்த விடயங்கள் இரண்டையும் மையமாக வைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய அரசாங்கமானது ஒன்றுமே இல்லாத, எந்த பயன்பாட்டிற்கும் உகந்ததில்லாமல் இருக்கின்ற கச்சதீவு பிரச்சினையை தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். 50 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தை மற்றும் இணக்கப்பாடு மூலம் கச்சதீவானது இலங்கைக்கு உரியது என்ற வகையில் வழங்கப்பட்டுள்ளது.. தற்போது தமது வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்காக, அங்கே கச்சதீவை மீண்டும் பெற்றுத் தரலாம் என்ற விடயத்தை சுட்டிக்காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இலங்கை சிறிய நாடு. மிரட்டி பறித்து விடலாம் என்ற எண்ணம். இரண்டாவது இதனை ஒரு மைய புள்ளியாக வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கத்தை அடிபணிய வைத்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற தவறான எண்ணம். பேச்சுவார்த்தைகள் அருணாசல பிரதேசத்திலே பல இடங்களிலே சீனா தனது பெயர்களை கிராமங்களுக்கு சூட்டி வருகிறது. அதிலே ஒரு அங்குலத்தைக் கூட இவர்களால் மீளப்பெற முடியவில்லை. காரணம் சீனாவுடன் போராடுவதற்கு அல்லது எதிர்ப்பதற்கு திராணியற்ற ஒரு நாடாக இந்தியா (India) காணப்படுகிறது. கச்சதீவு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இலங்கையை அழைத்த இந்தியா தந்திரோபாயமாக தனது காரியத்தை சாதித்துக் கொண்டது. முதலாவதாக இந்திய - இலங்கை கடல் எல்லை பரப்பிலே கூடுதலாக ஒரு பகுதியை இந்தியா பெற்றுக் கொண்டது. இரண்டாவதாக இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற கன்னியாகுமரிக்கு அருகே இருக்கின்ற பிஸ் பாங் (fish bank) இனையும் தம்வசம் எடுத்து மீன் வளத்தையும் பெற்றுக் கொண்டது. மூன்றாவது, கச்சதீவை இலங்கையிடமிருந்து எடுத்துக் கொண்டால் அதிலே இருக்கின்ற இராணுவமோ அல்லது கடற்படையோ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க போகிறது. அவர்கள் இருந்துவிட்டால் கண்டிப்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிலே இருக்கின்ற தமிழர்களுக்கும் இடையேயான உறவு பாலம் வலுப்பெற்று அவர்களது உறவு மேலும் மேலும் வலுவடைய வாய்ப்பிருக்கின்றது. இந்திய அரசாங்கம் இது பிற்காலத்தில் இந்தியாவிற்கு பெரிய ஒரு இடர்பாடாக இருக்கும் என்ற உள்நோக்கத்தையும் வைத்துக்கொண்டு தாங்கள் இலங்கைக்கு விட்டுக் கொடுப்பது போல ஒரு பாசாங்கை செய்துவிட்டு அந்த பிரச்சினையிலிருந்து கைநழுவி சென்று விட்டார்கள். கச்சதீவுக்கு இந்திய கடற்றொழிலாளர்கள் சென்று வலைகளை உலர்த்தலாம் என்று கூறப்பட்டது. நேருஜீ, இந்திரா காந்தி காலத்திலே அந்த சரத்தும் எடுக்கப்பட்டு விட்டது. இப்போது இருக்கின்ற சரத்தை பொறுத்தவரையிலே இந்திய கடற்றொழிலாளர்கள் அந்த கடற்பரப்பில் வலைகளை கூட உலர்த்த முடியாது என்ற நிலைப்பாடு தான் இருக்கின்றது. இந்திய தமிழக கடற்றொழிலாளர்களின் நலன் கருதியோ அல்லது கச்சதீவை தாங்கள் மீளப் பெறும் நோக்கிலேயோ இந்திய அரசாங்கம் இந்த பிரச்சினையை கையில் எடுக்கவில்லை. கண்டிப்பாக இலங்கைக்கு அழுத்தத்தை கொடுத்து தங்களுடைய காரியத்தை செய்வதற்கு தான் முயற்சிக்கிறதே தவிர எந்த காலத்திலும் கச்சதீவை இந்திய அரசாங்கம் மீளப்பெறும் என நான் நினைக்கவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/mv-subramaniam-revealed-facts-about-kachchadivu-1712387474
  12. கிஷாலி பின்ரோ ஜயவர்த் தன – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு (நட்பாகவோ அல்லது வேறு விதமாகவோ) பதிலடி கொடுத்தார் .அவர் ஒரு ஊடக ‘பாதுகாவலர்’ என்றும், அந்தவகையில், இலங்கையில் குற்றவியல் அவதூறு சட்டங்களை நீக்கினார். ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மற்றும்பிரிட்டனின் முன்னுதாரணங்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் பற்றிய கடுமையான பொது விமர்சனங்களால் வெளிப்படையாகத் தாக்கப்பட்ட ஜனாதிபதி, திசைதிருப்பும் ஒரு முயற்சியுடன் மறுத்தார். ஹோமாகம பிரதேச செயலகத்தில்சமுகமளித்திருந்தவர்கள் மத்தியில் உறுதியளித்த அவர், அரசாங்கத்தின் நோக்கம் ‘ஊடகங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு(அப்பாவிகளின்) உதவும்’ சட்டங்களைக் கொண்டுவருவது மட்டுமே என்றார். அந்த முடிவில், ஐக்கிய இராச்சியத்தில்நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் நடைமுறைகளைப் பார்க்குமாறு அவரது அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. சட்டமாஅ திபருக்கு ‘பிரிட்டனின் விதிமுறைகளில் சட்டமூலத்தை முன்வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஏனெனில் அங்கு முடிவெடுப்பதில் முன்னுதாரணங்களைப் பெறலாம் .குற்றவியல் அவதூறு சட்டத்தை ரத்து செய்த பிறகு, கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி திடமாக உறுதியளிக்கிறார். ,[‘ஜனாதிபதி செயலகம்,2023 ஜூன் 15, ). நிச்சயமாக, ஜனாதிபதியின் ஊடகக் குழு அந்த வாக்கியத்தை பொது வெளியீடாக வடிவமைத்ததில் உள்ள கசப்பான மொழி விரும்பத்தக்கதாகவே இருந்தது. இருந்தபோதிலும், ஒலி பரப்பு சட்டமூலம் , பொது ஆலோசனையிலிருந்து வெளிப்படையாக வாபஸ் பெறப்பட்டது. எவ்வாறாயினும், ஹோமாகமவில் ஜனாதிபதி அந்த இலகுவானஉறுதிமொழிகளுக்கு பொய்யை வழங்குவது அதன் பின்னரான அவரது அமைச்சரவையின் நடவடிக்கைகள் ஆகும். உதாரணமாக அருவருப்பான இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை எடுத்துக் கொண்டால் , அது ஒலி பரப்பு சட்டமூலத்தை மிக மோசமான வடிவத்தில் பின்பற்றுவதாகும். சட்டமியற்றும் வரைவு வேலை வெளிப்படையாக, இந்த சட்டமூலம் அதன் உள்ளடக்கங்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அதிர்ச்சி யான வடிவத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான உச்சகட்டத்தில் உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கைகளில், இந்த ஆவணம் ‘பிரிட்டனின் முன்னுதாரணங்கள்’ அல்லது வேறு எந்த முன்னுதாரணத்தின் மீதும் வரைவு செய்யப்பட்டதாக எந்தவித பாசாங்குகளும் இல்லை. முற்றுகையின் கீழ் ஒரு அரசியல் ஸ்தாபனத்தால் சட்டமியற்றும் வேலையாக இது திகழ்வதுடன் என்னகஷ்டம் ஏற்பட்டாலும்அவற்றுக்கு எதிராக அனைத்து பாதுகாப்புகளையும் திரட்ட தயாராகிறது. சட்டமூலத்தின் சில அம்சங்கள் கடந்த வார பத்தியில் விவாதிக்கப்பட்டன. ஆனால் அதன் உள்ளடக்கங்கள் குறிப்பாக அழுகிய வெங்காயம் போன்றவை. அருவருப்பான முறையில் கட்டமைக்கப்பட்ட உட்பிரிவுகளின் ஒரு அடுக்கை நீங்கள் உரிக்கும்போது, அவை ‘சட்டத்தை உருவாக்கும்’ மற்ற மோசமான சாகச முயற்சிகளால் பின்பற்றப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தின் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உற்று நோக்குமாறு ஜனாதிபதி தனது அமைச்சர்களுக்கு அறிவுறுத்தலாம். இது அதன் கொடூரமான இலங்கைப் பெயருக்கு அப்பாற்பட்ட உலகம். அதிகாரத்தில் இருப்பவர்களால் ‘இணையவழி பாதுகாப்புச் சட்டத்தின்’ உண்மையான சுயவிவரம் எப்படி இருக்கும் என்பதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும். தற்செயலாக, பிரிட்டன்சட்டமூலம் இந்த மாதம் பாராளுமன்றத்தின் பரிசீலனைக்குஉட் படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது .அரசரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால்ஏனைய எல்லா வழிகளிலும், இது நாம் இங்கு காணும் கேலிக்கூத்தலில் இருந்து வேறுபட்டது. உலகளாவிய சமூக ஊடக தளங்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நீடித்த ஒரு விரிவான ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு பிரிட்டன்சட்டமூலம் வந்தது. திகைப்புமற்றும்அச்சத்திலிருந்து ஒரு அரசாங்கத்தை பாதுகாத்தல் அதன் உள்ளடக்கங்கள் கணிசமாக திருத்தப்பட்டன, பொது மக்களால். முன்மொழியப்பட்ட திருத்தங்கள், மக்கள்பிரதிநிதிகள் சபை மற்றும் பிரபுக்கள்சபை ஐக்கிய இராச்சியத்தின் தகவல் தொடர்பு அலுவலகம், அரச கட்டுப்பாட்டாளர், செயற் படுத்தல் மற்றும் அமு லாக்கத்தில் பணிபுரியும். சட்ட அமு லாக்க முகவர் சமூக ஊடக தளங்களில் பிள்ளைகளை ப் பாதுகாப்பதில் குறிப்பாக கவனம் செலுத்துவதன் மூலம் சட்ட விரோதமான இணையவழி உள்ளடக்கத்தை உடனடியாகச் சமாளிக்க சட்ட அமு லாக்க முகவரமைப்பு களுக்கு இந்தசட்டமூலம் உதவுகிறது. இதற்கு நேர்மாறாக, இலங்கையின் சட்டமூலம், நான் பார்ப்பது போல், வெளிப்படையாகவே ‘அச்சத்துடன்’ இருக்கும் அரசாங்கத்தை, மற்றொரு ‘அரகலய ’ (பாரியளவிலான எதிர்ப்பு) சாத்தியப்பாட்டிற்குஎதிராக பாதுகாக்க முயல்கிறது. அங்கே நாம் சுருக்கமாக விட யம் உள்ளது. சட்டமூலத்தின் தெளிவற்ற மற்றும் நிச்சயமற்ற ‘நோக்கங்கள்’ கடந்த வாரம் விவாதிக்கப்பட்டன, இதில் ‘எச்சரிக்கை அல்லது துன்பகரமான’ அறிக்கைகள் எதுவாக இருந்தாலும், ஆட் களைப் பாதுகாப்பது அடங்கும். உண்மையில், அதன் நீண்ட தலைப்பு கூட கொடூரமான வார்த்தைகளால் ஆனது. ‘உண்மையின் சில அறிக்கைகளை’ தடை செய்வதே இதன் நோக்கம் என்று இது கூறுகிறது. ஆனால் சிங்கப்பூரில் உள்ள மிகக் கொடூரமான சட்டம், இணையவழி பொய்கள் மற்றும் கையாளுதல் சட்டத்திலிருந்து உலகெங்கிலும் உள்ள பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான எதேச்சதிகாரர்களின் மகிழ்ச்சியாக உள்ளது. ‘உண்மைகுறித்த பொய்யான அறிக்கைகளை’ தடைசெய்வது போன்ற அதன் நோக்கத்தை இன்னும் கேவலமாக அறிமுகப்படுத்துகிறது. சிங்கப்பூர் சட்டம் மோசமாக இருந்தால், முன்மொழியப்பட்ட இலங்கையின் சட்டமூலத் தின் மோசமானதன்மை எல்லையற்றது. தீங்கிழைக்கும் வகையிலான வரைவு விதிகள் தடைசெய்யப்பட்ட மற்றும் தவறான அறிக்கைகளை வரையறுக்கும் இலங்கை சட்டமூலத்தின் உட்பிரிவுகள் விரிவானவை. கடந்த வாரம் விவாதிக்கப்பட்டதைப் போல, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தில் (ஐ சி சி பி ஆர் சட்டம், 2007) அதே தடைசெய்யப்பட்ட தன்மையும் இதில் அடங்கும், இது விமர்சகர்களுக்கு எதிராக இரக்கமின்றி ஆயுதம் ஏந்தப்பட்டது. மேலும் காயத்திற்கு அவமானம் சேர்க்கும் வகையில், எங்களிடம் ஏனைய உட்பிரிவுகள் உள்ளன. ச ரத்து 14 ‘தவறான முறையில் அல்லது வேண்டுமென்றே தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான அறிக்கையை வழங்குவதைத் தடுக்கிறது.உண்மையான கலவரம் ஏற்படாவிட்டாலும், இந்தக் குற்றம் (குறைந்த தண்டனையுடன் இருந்தாலும்) எழுவதாகக் கருதப்படுவது மிகவும் ஆபத்தானதாக இல்லாவிட்டால் அதன் விளைவுவேடிக்கையாக இருக்கும். தேவைப்படுவதெல்லாம், சுயாதீனமற்ற இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழுவின் மதிப்பீடு மட்டுமே. உட்பிரிவு 15, 16 மற்றும் 17 ஆகியவை முறையே ஒரு மதக் கூட்டத்தின் ‘தொந்தரவு’ அல்லது வேண்டுமென்றே ‘காயம்’ மற்றும் ‘சீற்றம்’ மத உணர்வுகளை ஏற்படுத்தும் தவறான அறிக்கைகளுடன் தொடர்புடையது. ஐ சி சி பி ஆர் சட்டத்தின் குறைந்தபட்சம் பிரிவு 3 (1) குற்றத்தின் ஒரு பகுதியாக பாரபட்சம், விரோதம் அல்லது வன்முறைக்கு ‘தூண்டுதல்’ பரிந்துரைக்கிறது என்றாலும், பொலிசாரின் கைதுகள் மற்றும் வழக்குகள் அந்த அம்சத்தை எப்போதாவது கணக்கில் எடுத்துக்கொள்ளும். இருப்பினும், இந்த சட்டமூலத்தில் குற்றமாக கருதப்படும் செயல்களின் முட்டாள்தனம் புரிதலை மீறுகிறது. எந்த விதத்தில் ஒரு ‘தொந்தரவு’ அல்லது ‘நோக்கம்’ ‘காயம்/ சீற்றம்’ உணர்வுகளை குற்றமாக விளக்கலாம்? அரச முகவர்களை வெறித்தனமாக செல்ல அனுமதித்தல் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், இலங்கைப் பிரஜைகள் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் ‘சீற்றம்,’ ‘காயமடைந்த’ அல்லதுஇரண்டும் ‘கலந்த’ நிலையில் உள்ளனர். சட்டரீதியான பின்விளைவுகளைத் தீர்மானிப்பது போன்ற திட்டவட்டமான பேச்சுவழக்கு சொற்றொடர்களுக்கு இது ஒரு முட்டாள்தனம். இவ்வாறான குற்றச்செயல்கள் இலங்கையின் தண்டனைச் சட்டத்தை இருண்ட மற்றும் சோதிக்கப்படாத நிலைகளுக்கு இழுத்துச் செல்கின்றன. அரச முகவர்கள் காட்டுமிராண்டித்தனமாக செல் வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வீச்சை மிகைப்படுத்த முடியாது. இதற்கிடையில், ஒரு நபரை ‘அச்சுறுத்தல், பயமுறுத்துதல் அல்லது துன்புறுத்துதல்’ மற்றும் மிகவும் விசேட மாக, ‘ஒரு நபரின் கண்ணியத்தை மீறும்’ விளைவைக் கொண்ட எந்தவொரு செயல் தொடர்பாக . வேண்டுமென்றே தவறான அறிக்கைகளை வெளியிடுவதை 21-வது பிரிவு தடை செய்கிறது. பின் வரும்உதாரணங்கள் தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான உறவுகளுடன் தொடர்புடையவை, ஆனால் சரியான கடுமையான கட்டமைப்பில் இல்லாததால், இந்த ச ரத்து ஒரு ‘இலக்குவைக்கப்பட்ட நபரின்’ அரசியல் விமர்சனத்தை மறைக்கப் பயன்படுத்தப்படலாம். ஹோமாகமவில் ஜனாதிபதியின் கூற்று, கேள்விக்குரிய ச ரத்து ‘பொய்யான’ அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், கொள்கையளவில் அதை எதிர்க்க வேண்டும். அரசில் ஒரு பயங்கரமான முன்னுதாரணத்தை அமைத்தல் ஒட்டுமொத்தமாக, கூச்சமின்றி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட (மற்றும்நிராகரிப்பு செய்யப்பட வேண்டிய) இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழு இந்த மிகவும் போட்டியிட்ட கேள்விகளை மதிப்பிடுகிறது. இங்குதான் இந்தசட்டமூலத்தின் திகில் உள்ளது. ‘எந்தவொரு நபராலும்’ தூண்டப்பட்டு, மீறல் குறித்து திருப்தி அடைந்த பிறகு, ஆணைக்குழு இயற்கை நீதியின் விதிகளைக் கடைப்பிடிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரைக் கேட்கவும் கடமைப்பட்டிருக்காது. அதற்கு பதிலாக, இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கீழ்ப்படிய வேண்டிய உள்ளடக்கத்தின் புழக்கத்தைத் தடுக்க இது அறிவிப்பை வெளியிடலாம். இல்லையெனில், இணைய அணுகல் சேவை வழங்குநர் அல்லது இணைய இடைத்தரகரால் இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும், அதன் பிறகுதான், கிட்டத்தட்ட ஒரு பின் சிந்தனையாக. ‘இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்’ ஆணைக்குழுவின் உத்தரவுக்கு கீழ்ப்படியாததற்கு ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்படலாம். உண்மையிலேயே பயமுறுத்துவது என்னவென்றால், இது எதிர்காலத்திற்கு அமைக்கும் ஓர்வெல்லியன் [எதிர்கால எதேச்சாதிகாரதிற்கான ]முன்னுதாரணமாகும் சண்டே டைம்ஸ் https://thinakkural.lk/article/275330
  13. ஒரே நாடு ஒரே இனம் என்ற கூட்டம் கடைசியில் எப்படி இருக்கினம் 😃இன்னும் இருக்கு புத்தரை காவிக்கொண்டு இருங்க .
  14. சார் என்பது பிழையான தகவலை தந்ததுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும் kavi அருணாசலம் ஐயா . வழக்கம்போல் வேலை அவசரத்தில் எனக்கும் இந்த சார் சார் என்று போட்டு விட்டு வேலையை முடிக்காமல் இருப்பது பிடிக்காது அந்த வெறுப்பில் இந்த சார் வெறுப்பை உண்மை என்று நம்பி போட்டு விட்டேன் பக்ட் செக் செய்யாமல் வேலை அவசரத்தில் இனி நானும் 5 ௦ வயதில் பென்சன் எடுத்தால் இந்த பக்ட் செக் செய்யலாமோ என்று ஒரு யோசனை உருவாக்கியவர்களுக்கு நன்றி .
  15. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரில் இலங்கை படையினர் பங்களிப்பை வழங்கி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது இலங்கையின் ஆயுதப்படையினர் கூலிப்படையாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய படையினரின் சார்பாகவும் உக்கரையின் படையினரின் சார்பாகவும் பொருளாதார நலன்களினால் சுமார் நூற்றுக்கணக்கான இலங்கை படையினர் பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளில் போரில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் படை வீரர்கள் இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்கிரேன் சார்பில் போரில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை இராணுவத்திலிருந்து விலகி ரஷ்ய படையில் இணைந்து கொண்ட படைவீரர் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தமை குறித்த தகவல்களை ஊடகம் ஒன்று அறிக்கையிட்டிருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டில் இலங்கை அரச படையினர் பெரும் எண்ணிக்கையிலான போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தமிழர்கள் மீது பாரியளவில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குடியுரிமை மற்றும் மாதாந்தம் 2000 டொலர் சம்பளம் ஆகிய நலன்களை கருத்திற் கொண்டு பல இலங்கை படையினர் ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் ரஷ்யாவில் உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கையர், இலங்கையில் இராணுவத்தில் இணைந்திருந்த போது வெறும் 20,000 ரூபா சம்பளத்தையே பெற்றுக்கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இரண்டு இலங்கையர்கள் அண்மையில் ரஷ்யாவின் Dontesk பகுதியில் கொல்லப்பட்டதாகவும், கடந்த ஆண்டு இறுதியில் மூன்று இலங்கையர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் உலகில் சனத்தொகையின் சதவீதத்தின் அடிப்படையில் கூடுதல் எண்ணிக்கையிலான படை பலத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கின்றது. கடந்த 2018ஆம் ஆண்டில் இலங்கையில் படைவீரர்களின் எண்ணிக்கை 317,000 என உலக வங்கி அறிக்கையிட்டிருந்ததுடன் இது பிரித்தானியாவின் வழயைமான படைவீரர்களின் எண்ணிக்கையை விடவும் இரட்டிப்பு எண்ணிக்கையாகும். தமிழர் தாயகப் பிரதேசங்களின் சில இடங்களில் இரண்டு சிவிலியனுக்கு ஒரு படைவீரர் என்ற அடிப்படையில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ரஷ்ய இராணுவத்தின் உறுதி கடந்த ஆண்டில் ரஷ்ய இராணுவம் வெளிநாட்டு படையினரை ஆட் சேர்ப்பதற்கான திட்டத்தை அறிவித்திருந்ததுடன் ரஷ்ய கடவுச்சீட்டை துரித கதியில் பெற்றுக்கொடுக்கவும், மாதாந்தம் 2000 டொலர் சம்பளம் வழங்கவும் உறுதிமொழி வழங்கியுள்ளது. இந்நிலையில் ஓய்வு பெற்றுக்கொண்ட படைவீரர்கள் ரஷ்ய படையில் இணைந்து கொண்டுள்ளதாகவும் மேலும் பலர் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அரச புலனாய்வுப் பிரிவினர் விசேட புலனாய்வு அறிக்கை ஒன்றை பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்னவிடம் ஒப்படைத்துள்ளனர். இலங்கை இராணுவப் படையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு இராணுவத்தில் இணைத்து கொள்வதற்கான முகவர்களாக தொழிற்பட்டு வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினை நடத்திச் சென்ற இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் சுற்றுலா வீசாக்கள் மூலம் சென்று படைகளில் இணைந்து கொள்வதாகத் குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் முதலில் இந்தியாவின் டெல்லிக்கு சென்று அங்கிருந்து போலந்து சென்று அசர்பைஜான் வழியாக உக்ரைன் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/sri-lankan-army-in-russia-ukraine-war-1712264758?itm_source=parsely-api
  16. கிண்ணியாவில் பிள்ளயார் கோவில் இடித்து புத்தர் சிலை வைக்கும் போது உங்கடை பம்மந்தர் கொழும்பு இலவசமாய் கிடைக்கும் வீட்டுக்கு வாய திறந்து கொண்டு கிடந்தவர் கிண்ணியா பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை ஏன் இதுவே ஒரு முஸ்லிம் இடத்தில் நடந்தால் அவங்கடை அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா ?
  17. என்னத்துக்கு கருத்து இப்படி வந்தது என்றே தெரியாமல் நீங்கள் மட்டுமே யாழில் கருத்து எழுதுவதாக நினைக்க வேண்டாம் பிழைகளை சுட்டி காட்டுவது பிழை என்கிறிர்கள் .
  18. நன்றி ரசொதரனுக்கு . சார் என்பதன் முழு அர்த்தம் Slave i remainஇதன் பின் சார் என்று எழுதுவது நல்லதா கெட்டதா நீங்களே உணர்ந்து கொள்ளுங்க ? கவி அருணாசலம் ஐயா கனகாலம் தமிழ்நாட்டில் இருந்தவர் போல் உள்ளது .
  19. எல்லாவிடமும் பிழைகள் உள்ளது அதுக்காக நடக்க வேண்டியதை பார்க்கணும் அதை விட்டு சொறிந்து கொட்டிக்கொண்டு இருக்க கூடாது .
  20. சம்பந்தர் என்பவர் யார் என்றாவது தெரியுமா ? மேலே புத்தர் சிலைமற்றைய சமயத்தவர் பக்கம் வைக்க போகாயினம் காரணம் அந்த இனத்தினில் உங்களை போல் ஆட்கள் இல்லை .
  21. அது சிங்கள் அமைச்சர்களின் வேலையை இவர் ஏன் கூவி குலவை அடிக்கிறார் ? சவால் விடுகிறேன் முடிந்தால் முஸ்லிம் கிறிஸ்த்துவ ஆலயங்களுக்கு அருகில் புத்தர் சிலையை வைக்கட்டும் பார்க்கலாம் முடியாது அவர்களால் . ஆனால் திருகோனமலையில் பார்க்கும் இடமெல்லாம் புத்தர் எல்லாம் எங்கடை சமபந்தர் எனும் கோடாலி காம்பின் அனுசாரனை 1௦8 சிவலிங்கத்துக்கு வெறும் 16 பேரே உள்ள சிங்களவர்கள் எதிர்ப்பு இவ்வளவுக்கும் காரணம் சுமத்திரன் எனும் ரணிலின் பொம்மை .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.