Everything posted by பெருமாள்
-
மற்றொரு ‘அரகலய ’விற்கான சாத்தியப்பாட்டிற்கு எதிராக அரசாங்கத்தை பாதுகாக்க முயற் சிக்கும் உத்தேச இணையவழி பாதுகாப்பு சட்டம்
கிஷாலி பின்ரோ ஜயவர்த் தன – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு (நட்பாகவோ அல்லது வேறு விதமாகவோ) பதிலடி கொடுத்தார் .அவர் ஒரு ஊடக ‘பாதுகாவலர்’ என்றும், அந்தவகையில், இலங்கையில் குற்றவியல் அவதூறு சட்டங்களை நீக்கினார். ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மற்றும்பிரிட்டனின் முன்னுதாரணங்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் பற்றிய கடுமையான பொது விமர்சனங்களால் வெளிப்படையாகத் தாக்கப்பட்ட ஜனாதிபதி, திசைதிருப்பும் ஒரு முயற்சியுடன் மறுத்தார். ஹோமாகம பிரதேச செயலகத்தில்சமுகமளித்திருந்தவர்கள் மத்தியில் உறுதியளித்த அவர், அரசாங்கத்தின் நோக்கம் ‘ஊடகங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு(அப்பாவிகளின்) உதவும்’ சட்டங்களைக் கொண்டுவருவது மட்டுமே என்றார். அந்த முடிவில், ஐக்கிய இராச்சியத்தில்நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் நடைமுறைகளைப் பார்க்குமாறு அவரது அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. சட்டமாஅ திபருக்கு ‘பிரிட்டனின் விதிமுறைகளில் சட்டமூலத்தை முன்வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஏனெனில் அங்கு முடிவெடுப்பதில் முன்னுதாரணங்களைப் பெறலாம் .குற்றவியல் அவதூறு சட்டத்தை ரத்து செய்த பிறகு, கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி திடமாக உறுதியளிக்கிறார். ,[‘ஜனாதிபதி செயலகம்,2023 ஜூன் 15, ). நிச்சயமாக, ஜனாதிபதியின் ஊடகக் குழு அந்த வாக்கியத்தை பொது வெளியீடாக வடிவமைத்ததில் உள்ள கசப்பான மொழி விரும்பத்தக்கதாகவே இருந்தது. இருந்தபோதிலும், ஒலி பரப்பு சட்டமூலம் , பொது ஆலோசனையிலிருந்து வெளிப்படையாக வாபஸ் பெறப்பட்டது. எவ்வாறாயினும், ஹோமாகமவில் ஜனாதிபதி அந்த இலகுவானஉறுதிமொழிகளுக்கு பொய்யை வழங்குவது அதன் பின்னரான அவரது அமைச்சரவையின் நடவடிக்கைகள் ஆகும். உதாரணமாக அருவருப்பான இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை எடுத்துக் கொண்டால் , அது ஒலி பரப்பு சட்டமூலத்தை மிக மோசமான வடிவத்தில் பின்பற்றுவதாகும். சட்டமியற்றும் வரைவு வேலை வெளிப்படையாக, இந்த சட்டமூலம் அதன் உள்ளடக்கங்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அதிர்ச்சி யான வடிவத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான உச்சகட்டத்தில் உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கைகளில், இந்த ஆவணம் ‘பிரிட்டனின் முன்னுதாரணங்கள்’ அல்லது வேறு எந்த முன்னுதாரணத்தின் மீதும் வரைவு செய்யப்பட்டதாக எந்தவித பாசாங்குகளும் இல்லை. முற்றுகையின் கீழ் ஒரு அரசியல் ஸ்தாபனத்தால் சட்டமியற்றும் வேலையாக இது திகழ்வதுடன் என்னகஷ்டம் ஏற்பட்டாலும்அவற்றுக்கு எதிராக அனைத்து பாதுகாப்புகளையும் திரட்ட தயாராகிறது. சட்டமூலத்தின் சில அம்சங்கள் கடந்த வார பத்தியில் விவாதிக்கப்பட்டன. ஆனால் அதன் உள்ளடக்கங்கள் குறிப்பாக அழுகிய வெங்காயம் போன்றவை. அருவருப்பான முறையில் கட்டமைக்கப்பட்ட உட்பிரிவுகளின் ஒரு அடுக்கை நீங்கள் உரிக்கும்போது, அவை ‘சட்டத்தை உருவாக்கும்’ மற்ற மோசமான சாகச முயற்சிகளால் பின்பற்றப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தின் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உற்று நோக்குமாறு ஜனாதிபதி தனது அமைச்சர்களுக்கு அறிவுறுத்தலாம். இது அதன் கொடூரமான இலங்கைப் பெயருக்கு அப்பாற்பட்ட உலகம். அதிகாரத்தில் இருப்பவர்களால் ‘இணையவழி பாதுகாப்புச் சட்டத்தின்’ உண்மையான சுயவிவரம் எப்படி இருக்கும் என்பதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும். தற்செயலாக, பிரிட்டன்சட்டமூலம் இந்த மாதம் பாராளுமன்றத்தின் பரிசீலனைக்குஉட் படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது .அரசரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால்ஏனைய எல்லா வழிகளிலும், இது நாம் இங்கு காணும் கேலிக்கூத்தலில் இருந்து வேறுபட்டது. உலகளாவிய சமூக ஊடக தளங்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நீடித்த ஒரு விரிவான ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு பிரிட்டன்சட்டமூலம் வந்தது. திகைப்புமற்றும்அச்சத்திலிருந்து ஒரு அரசாங்கத்தை பாதுகாத்தல் அதன் உள்ளடக்கங்கள் கணிசமாக திருத்தப்பட்டன, பொது மக்களால். முன்மொழியப்பட்ட திருத்தங்கள், மக்கள்பிரதிநிதிகள் சபை மற்றும் பிரபுக்கள்சபை ஐக்கிய இராச்சியத்தின் தகவல் தொடர்பு அலுவலகம், அரச கட்டுப்பாட்டாளர், செயற் படுத்தல் மற்றும் அமு லாக்கத்தில் பணிபுரியும். சட்ட அமு லாக்க முகவர் சமூக ஊடக தளங்களில் பிள்ளைகளை ப் பாதுகாப்பதில் குறிப்பாக கவனம் செலுத்துவதன் மூலம் சட்ட விரோதமான இணையவழி உள்ளடக்கத்தை உடனடியாகச் சமாளிக்க சட்ட அமு லாக்க முகவரமைப்பு களுக்கு இந்தசட்டமூலம் உதவுகிறது. இதற்கு நேர்மாறாக, இலங்கையின் சட்டமூலம், நான் பார்ப்பது போல், வெளிப்படையாகவே ‘அச்சத்துடன்’ இருக்கும் அரசாங்கத்தை, மற்றொரு ‘அரகலய ’ (பாரியளவிலான எதிர்ப்பு) சாத்தியப்பாட்டிற்குஎதிராக பாதுகாக்க முயல்கிறது. அங்கே நாம் சுருக்கமாக விட யம் உள்ளது. சட்டமூலத்தின் தெளிவற்ற மற்றும் நிச்சயமற்ற ‘நோக்கங்கள்’ கடந்த வாரம் விவாதிக்கப்பட்டன, இதில் ‘எச்சரிக்கை அல்லது துன்பகரமான’ அறிக்கைகள் எதுவாக இருந்தாலும், ஆட் களைப் பாதுகாப்பது அடங்கும். உண்மையில், அதன் நீண்ட தலைப்பு கூட கொடூரமான வார்த்தைகளால் ஆனது. ‘உண்மையின் சில அறிக்கைகளை’ தடை செய்வதே இதன் நோக்கம் என்று இது கூறுகிறது. ஆனால் சிங்கப்பூரில் உள்ள மிகக் கொடூரமான சட்டம், இணையவழி பொய்கள் மற்றும் கையாளுதல் சட்டத்திலிருந்து உலகெங்கிலும் உள்ள பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான எதேச்சதிகாரர்களின் மகிழ்ச்சியாக உள்ளது. ‘உண்மைகுறித்த பொய்யான அறிக்கைகளை’ தடைசெய்வது போன்ற அதன் நோக்கத்தை இன்னும் கேவலமாக அறிமுகப்படுத்துகிறது. சிங்கப்பூர் சட்டம் மோசமாக இருந்தால், முன்மொழியப்பட்ட இலங்கையின் சட்டமூலத் தின் மோசமானதன்மை எல்லையற்றது. தீங்கிழைக்கும் வகையிலான வரைவு விதிகள் தடைசெய்யப்பட்ட மற்றும் தவறான அறிக்கைகளை வரையறுக்கும் இலங்கை சட்டமூலத்தின் உட்பிரிவுகள் விரிவானவை. கடந்த வாரம் விவாதிக்கப்பட்டதைப் போல, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தில் (ஐ சி சி பி ஆர் சட்டம், 2007) அதே தடைசெய்யப்பட்ட தன்மையும் இதில் அடங்கும், இது விமர்சகர்களுக்கு எதிராக இரக்கமின்றி ஆயுதம் ஏந்தப்பட்டது. மேலும் காயத்திற்கு அவமானம் சேர்க்கும் வகையில், எங்களிடம் ஏனைய உட்பிரிவுகள் உள்ளன. ச ரத்து 14 ‘தவறான முறையில் அல்லது வேண்டுமென்றே தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான அறிக்கையை வழங்குவதைத் தடுக்கிறது.உண்மையான கலவரம் ஏற்படாவிட்டாலும், இந்தக் குற்றம் (குறைந்த தண்டனையுடன் இருந்தாலும்) எழுவதாகக் கருதப்படுவது மிகவும் ஆபத்தானதாக இல்லாவிட்டால் அதன் விளைவுவேடிக்கையாக இருக்கும். தேவைப்படுவதெல்லாம், சுயாதீனமற்ற இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழுவின் மதிப்பீடு மட்டுமே. உட்பிரிவு 15, 16 மற்றும் 17 ஆகியவை முறையே ஒரு மதக் கூட்டத்தின் ‘தொந்தரவு’ அல்லது வேண்டுமென்றே ‘காயம்’ மற்றும் ‘சீற்றம்’ மத உணர்வுகளை ஏற்படுத்தும் தவறான அறிக்கைகளுடன் தொடர்புடையது. ஐ சி சி பி ஆர் சட்டத்தின் குறைந்தபட்சம் பிரிவு 3 (1) குற்றத்தின் ஒரு பகுதியாக பாரபட்சம், விரோதம் அல்லது வன்முறைக்கு ‘தூண்டுதல்’ பரிந்துரைக்கிறது என்றாலும், பொலிசாரின் கைதுகள் மற்றும் வழக்குகள் அந்த அம்சத்தை எப்போதாவது கணக்கில் எடுத்துக்கொள்ளும். இருப்பினும், இந்த சட்டமூலத்தில் குற்றமாக கருதப்படும் செயல்களின் முட்டாள்தனம் புரிதலை மீறுகிறது. எந்த விதத்தில் ஒரு ‘தொந்தரவு’ அல்லது ‘நோக்கம்’ ‘காயம்/ சீற்றம்’ உணர்வுகளை குற்றமாக விளக்கலாம்? அரச முகவர்களை வெறித்தனமாக செல்ல அனுமதித்தல் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், இலங்கைப் பிரஜைகள் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் ‘சீற்றம்,’ ‘காயமடைந்த’ அல்லதுஇரண்டும் ‘கலந்த’ நிலையில் உள்ளனர். சட்டரீதியான பின்விளைவுகளைத் தீர்மானிப்பது போன்ற திட்டவட்டமான பேச்சுவழக்கு சொற்றொடர்களுக்கு இது ஒரு முட்டாள்தனம். இவ்வாறான குற்றச்செயல்கள் இலங்கையின் தண்டனைச் சட்டத்தை இருண்ட மற்றும் சோதிக்கப்படாத நிலைகளுக்கு இழுத்துச் செல்கின்றன. அரச முகவர்கள் காட்டுமிராண்டித்தனமாக செல் வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வீச்சை மிகைப்படுத்த முடியாது. இதற்கிடையில், ஒரு நபரை ‘அச்சுறுத்தல், பயமுறுத்துதல் அல்லது துன்புறுத்துதல்’ மற்றும் மிகவும் விசேட மாக, ‘ஒரு நபரின் கண்ணியத்தை மீறும்’ விளைவைக் கொண்ட எந்தவொரு செயல் தொடர்பாக . வேண்டுமென்றே தவறான அறிக்கைகளை வெளியிடுவதை 21-வது பிரிவு தடை செய்கிறது. பின் வரும்உதாரணங்கள் தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான உறவுகளுடன் தொடர்புடையவை, ஆனால் சரியான கடுமையான கட்டமைப்பில் இல்லாததால், இந்த ச ரத்து ஒரு ‘இலக்குவைக்கப்பட்ட நபரின்’ அரசியல் விமர்சனத்தை மறைக்கப் பயன்படுத்தப்படலாம். ஹோமாகமவில் ஜனாதிபதியின் கூற்று, கேள்விக்குரிய ச ரத்து ‘பொய்யான’ அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், கொள்கையளவில் அதை எதிர்க்க வேண்டும். அரசில் ஒரு பயங்கரமான முன்னுதாரணத்தை அமைத்தல் ஒட்டுமொத்தமாக, கூச்சமின்றி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட (மற்றும்நிராகரிப்பு செய்யப்பட வேண்டிய) இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழு இந்த மிகவும் போட்டியிட்ட கேள்விகளை மதிப்பிடுகிறது. இங்குதான் இந்தசட்டமூலத்தின் திகில் உள்ளது. ‘எந்தவொரு நபராலும்’ தூண்டப்பட்டு, மீறல் குறித்து திருப்தி அடைந்த பிறகு, ஆணைக்குழு இயற்கை நீதியின் விதிகளைக் கடைப்பிடிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரைக் கேட்கவும் கடமைப்பட்டிருக்காது. அதற்கு பதிலாக, இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கீழ்ப்படிய வேண்டிய உள்ளடக்கத்தின் புழக்கத்தைத் தடுக்க இது அறிவிப்பை வெளியிடலாம். இல்லையெனில், இணைய அணுகல் சேவை வழங்குநர் அல்லது இணைய இடைத்தரகரால் இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும், அதன் பிறகுதான், கிட்டத்தட்ட ஒரு பின் சிந்தனையாக. ‘இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்’ ஆணைக்குழுவின் உத்தரவுக்கு கீழ்ப்படியாததற்கு ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்படலாம். உண்மையிலேயே பயமுறுத்துவது என்னவென்றால், இது எதிர்காலத்திற்கு அமைக்கும் ஓர்வெல்லியன் [எதிர்கால எதேச்சாதிகாரதிற்கான ]முன்னுதாரணமாகும் சண்டே டைம்ஸ் https://thinakkural.lk/article/275330
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
கவனமாக இருங்கள் .
-
ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கை படை
ஒரே நாடு ஒரே இனம் என்ற கூட்டம் கடைசியில் எப்படி இருக்கினம் 😃இன்னும் இருக்கு புத்தரை காவிக்கொண்டு இருங்க .
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
சார் என்பது பிழையான தகவலை தந்ததுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும் kavi அருணாசலம் ஐயா . வழக்கம்போல் வேலை அவசரத்தில் எனக்கும் இந்த சார் சார் என்று போட்டு விட்டு வேலையை முடிக்காமல் இருப்பது பிடிக்காது அந்த வெறுப்பில் இந்த சார் வெறுப்பை உண்மை என்று நம்பி போட்டு விட்டேன் பக்ட் செக் செய்யாமல் வேலை அவசரத்தில் இனி நானும் 5 ௦ வயதில் பென்சன் எடுத்தால் இந்த பக்ட் செக் செய்யலாமோ என்று ஒரு யோசனை உருவாக்கியவர்களுக்கு நன்றி .
-
ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கை படை
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரில் இலங்கை படையினர் பங்களிப்பை வழங்கி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது இலங்கையின் ஆயுதப்படையினர் கூலிப்படையாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய படையினரின் சார்பாகவும் உக்கரையின் படையினரின் சார்பாகவும் பொருளாதார நலன்களினால் சுமார் நூற்றுக்கணக்கான இலங்கை படையினர் பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளில் போரில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் படை வீரர்கள் இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்கிரேன் சார்பில் போரில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை இராணுவத்திலிருந்து விலகி ரஷ்ய படையில் இணைந்து கொண்ட படைவீரர் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தமை குறித்த தகவல்களை ஊடகம் ஒன்று அறிக்கையிட்டிருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டில் இலங்கை அரச படையினர் பெரும் எண்ணிக்கையிலான போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தமிழர்கள் மீது பாரியளவில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குடியுரிமை மற்றும் மாதாந்தம் 2000 டொலர் சம்பளம் ஆகிய நலன்களை கருத்திற் கொண்டு பல இலங்கை படையினர் ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் ரஷ்யாவில் உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கையர், இலங்கையில் இராணுவத்தில் இணைந்திருந்த போது வெறும் 20,000 ரூபா சம்பளத்தையே பெற்றுக்கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இரண்டு இலங்கையர்கள் அண்மையில் ரஷ்யாவின் Dontesk பகுதியில் கொல்லப்பட்டதாகவும், கடந்த ஆண்டு இறுதியில் மூன்று இலங்கையர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் உலகில் சனத்தொகையின் சதவீதத்தின் அடிப்படையில் கூடுதல் எண்ணிக்கையிலான படை பலத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கின்றது. கடந்த 2018ஆம் ஆண்டில் இலங்கையில் படைவீரர்களின் எண்ணிக்கை 317,000 என உலக வங்கி அறிக்கையிட்டிருந்ததுடன் இது பிரித்தானியாவின் வழயைமான படைவீரர்களின் எண்ணிக்கையை விடவும் இரட்டிப்பு எண்ணிக்கையாகும். தமிழர் தாயகப் பிரதேசங்களின் சில இடங்களில் இரண்டு சிவிலியனுக்கு ஒரு படைவீரர் என்ற அடிப்படையில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ரஷ்ய இராணுவத்தின் உறுதி கடந்த ஆண்டில் ரஷ்ய இராணுவம் வெளிநாட்டு படையினரை ஆட் சேர்ப்பதற்கான திட்டத்தை அறிவித்திருந்ததுடன் ரஷ்ய கடவுச்சீட்டை துரித கதியில் பெற்றுக்கொடுக்கவும், மாதாந்தம் 2000 டொலர் சம்பளம் வழங்கவும் உறுதிமொழி வழங்கியுள்ளது. இந்நிலையில் ஓய்வு பெற்றுக்கொண்ட படைவீரர்கள் ரஷ்ய படையில் இணைந்து கொண்டுள்ளதாகவும் மேலும் பலர் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அரச புலனாய்வுப் பிரிவினர் விசேட புலனாய்வு அறிக்கை ஒன்றை பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்னவிடம் ஒப்படைத்துள்ளனர். இலங்கை இராணுவப் படையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு இராணுவத்தில் இணைத்து கொள்வதற்கான முகவர்களாக தொழிற்பட்டு வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினை நடத்திச் சென்ற இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் சுற்றுலா வீசாக்கள் மூலம் சென்று படைகளில் இணைந்து கொள்வதாகத் குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் முதலில் இந்தியாவின் டெல்லிக்கு சென்று அங்கிருந்து போலந்து சென்று அசர்பைஜான் வழியாக உக்ரைன் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/sri-lankan-army-in-russia-ukraine-war-1712264758?itm_source=parsely-api
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
கிண்ணியாவில் பிள்ளயார் கோவில் இடித்து புத்தர் சிலை வைக்கும் போது உங்கடை பம்மந்தர் கொழும்பு இலவசமாய் கிடைக்கும் வீட்டுக்கு வாய திறந்து கொண்டு கிடந்தவர் கிண்ணியா பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை ஏன் இதுவே ஒரு முஸ்லிம் இடத்தில் நடந்தால் அவங்கடை அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா ?
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
பிழையை திருத்தியதுக்கு நன்றி
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
என்னத்துக்கு கருத்து இப்படி வந்தது என்றே தெரியாமல் நீங்கள் மட்டுமே யாழில் கருத்து எழுதுவதாக நினைக்க வேண்டாம் பிழைகளை சுட்டி காட்டுவது பிழை என்கிறிர்கள் .
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
நன்றி ரசொதரனுக்கு . சார் என்பதன் முழு அர்த்தம் Slave i remainஇதன் பின் சார் என்று எழுதுவது நல்லதா கெட்டதா நீங்களே உணர்ந்து கொள்ளுங்க ? கவி அருணாசலம் ஐயா கனகாலம் தமிழ்நாட்டில் இருந்தவர் போல் உள்ளது .
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
எல்லாவிடமும் பிழைகள் உள்ளது அதுக்காக நடக்க வேண்டியதை பார்க்கணும் அதை விட்டு சொறிந்து கொட்டிக்கொண்டு இருக்க கூடாது .
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
சம்பந்தர் என்பவர் யார் என்றாவது தெரியுமா ? மேலே புத்தர் சிலைமற்றைய சமயத்தவர் பக்கம் வைக்க போகாயினம் காரணம் அந்த இனத்தினில் உங்களை போல் ஆட்கள் இல்லை .
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
சமபந்தர் பிழை வேண்டும் என்றே .
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
அது சிங்கள் அமைச்சர்களின் வேலையை இவர் ஏன் கூவி குலவை அடிக்கிறார் ? சவால் விடுகிறேன் முடிந்தால் முஸ்லிம் கிறிஸ்த்துவ ஆலயங்களுக்கு அருகில் புத்தர் சிலையை வைக்கட்டும் பார்க்கலாம் முடியாது அவர்களால் . ஆனால் திருகோனமலையில் பார்க்கும் இடமெல்லாம் புத்தர் எல்லாம் எங்கடை சமபந்தர் எனும் கோடாலி காம்பின் அனுசாரனை 1௦8 சிவலிங்கத்துக்கு வெறும் 16 பேரே உள்ள சிங்களவர்கள் எதிர்ப்பு இவ்வளவுக்கும் காரணம் சுமத்திரன் எனும் ரணிலின் பொம்மை .
-
Wadge Bank - இந்தியா தட்டி தூக்கிய கடல் பொக்கிஷம்... "மிரள வைக்கும் இந்திராவின் ராஜதந்திரம்.."
அட பிச்சை கார சிங்கள கூட்டம் தமிழர்களின் அனுமதி இன்றி அப்பவே இந்தியாவுக்கு தமிழர்களின் முக்கிய மீன் வளம் உருவாகும் கடல் பூமியை தாரை வார்த்து விட்டார்களா ? அதுக்காக சர்வேதேச தடையில் உள்ள ரோலர்களை வைத்து அந்த மீன் விளையும் கருவறையை நாசம் பண்ணகூடாது என்ற விடயம் உள்ளதல்லவா .
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
இந்த தொடரில் மிக முக்கிய விடயம் என்றால் இந்த காலத்தில் இந்த தொடரை சொல்லுபவர்கள் எழுதுபவர்கள் தங்களின் அரசியல் கட்சி நடை முறைகளுக்கு ஏற்ப வளைத்து நெளித்து ஓட்டுகிறார்கள் உண்மையான கொப்பி நூலகத்தில் உள்ளது .
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
இந்த தொடரை முதலில் இங்கு யாழில் மட்டுகளின் அனுமதியுடன் ஆரம்பித்தேன் ஆரமபத்தில் என்னிடம் இருந்த சேகரிப்புகள் இடம் இருந்தே எழுதியதுக்கு காரணம் அப்போதைய புலி எதிர் பாளர்களின் புலி வரலாறை தவறாக எழுத தொடங்கியது ஆனால் காலம் செல்ல பலபக்கத்தால் நெருக்கடிக்குக்கு உள்ளாகி அத்தொடரை நிறுத்தவேண்டிய நிலைக்கு ஆளானேன் 6௦ வயதுக்கு மேல் எனக்கு இந்த பூமியில் வாழ்வுண்டால் நிறைய தொடர்கள் வெளி வரும் . https://yarl.com/forum3/topic/149916-அல்பிரட்-துரையப்பா-முதல்-காமினி-வரை/
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுமே அக்காவுக்கு .
-
வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்!
போரில் காணாமல் போனதில் மரங்களும் உள்ளது போல் இருக்கு .
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
போர்டிங் கவுண்டரில் டிக்கெட் மாற்றம் பண்ண முடியுமா என்று கேட்டு பாருங்க ஆட்கள் குறைவாக இருந்தால் குறைந்த விலையில் முதல் வகுப்பு கிடைக்கும் மிக நீண்ட பயணம் என்றால் மிக நல்லது . இப்படி பெற்று கொண்டது பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் இப்ப அந்த சூட்சுமம் வேலை செய்யுமா தெரியலை .
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பயண வருசை குறைவாக இருந்தால் போர்டிங் பாஸ் எடுக்கையில் ஒரு 1௦௦ இருநுறு பவுன் உடன் அப்டேட் முதல்வகுப்பு கிடைக்கும் நமக்கு எங்கே என்றாலும் நித்திரை வந்துடும் ஓரிரு முறை ஆசைக்கு ஏறி இறங்கியதுடன் சரி மற்றபடி எக்கனாமிக் ல் பெல்ட் போட்டால் குரங்குக்கு பெல்ட் போட்டு கட்டியது போல் மனபிராந்தி உருவாகுவதை தவிர்க்க முடியாது 😃 அவர்களுக்கு மணித்தியாலம் ஒன்றுக்கு 12௦ பவுன் வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வரும் வருமானத்துக்கு முதல் வகுப்பு சிலவை காட்டினால் வரி விலக்கு கிடைக்கும் தானே ........
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஊருக்கு போய் வருபவர்களில் பலவகை இருக்குது . ஊரில் இருந்து வியபாரம் செய்பவர்கள் அடிக்கடி போய் வருவார்கள் முட்டை போட்ட ஆமை போல் அமைதியாக இருப்பார்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது போனின் ரிங் சத்த வேறு பாடு மூலமே ஆள் எங்கு நிக்கிறார் என்று தெரியும் . இன்னொரு வகை முப்பது நாப்பது வருஷம் கழிந்து ஊர் பக்கம் போனவர்கள் அப்படியானவர்கள் ஊரை பார்த்த புளுகில் அவர்கள் ஏதாவது வாட்சப் குழுமத்தில் இருந்தால் அந்த குழுமத்தில் சிங்கன் ஊரில் நிக்கும் காலம்மட்டும் பனாட்டு வேப்பமரம் பணம் கிழங்கு கருவாடு எல்லாம் இலவச ஒளிபரப்பில் படமாய் கொட்டி மண்டை காய வைப்பார்கள் .குழந்தையின் ஆனந்த ஆட்டத்தை ரசிப்பது போல் அமைதியாக இருந்துட வேண்டியதுதான் 😀 அடுத்த கூட்டம் ஊரைபார்த்த புளுகில் தாங்கள் ஊரில் இருக்கும்மட்டும் கனவு இடங்களின் விலையை பார்த்து உடனே காணியை வேண்டி மூன்று மாடி வீடும் கட்டி கமராவை பூட்டி விட்டு இங்கு வந்து கமராவுக்குள் தங்கள் வீட்டை பார்த்து ஆனந்தப்படும் கூட்டம் இருக்குது அங்கிருக்கும் வசதியில்லாத ஆரையாவது குடியேற்றி இருக்கலாமே என்று கேட்டால் ஓம் இரவு வந்தால் லைட் போட ஒரு ஆளை வேலைக்கு வைத்து இருக்கிறேன் என்பார் .😀இரண்டு மூன்று வருடத்துக்கு ஒருக்கா ஊர் போறவர்களுக்கு ஏன் வீடு தேவை? அடுத்தது இங்கிருக்கும் மட்டும் வாட்சப் குழுமத்தில் புலி பற்றி எதாவது செய்தி வந்தால் வீழ்ந்து விடாத வீரம் அப்படி இப்படி உசுப்பேத்தும் ஸ்ட்டேட் போட்டு கொண்டு இருப்பவர் ஊர் போய் வந்த வுடன் புலி புலித்தலைமை எல்லாத்தையும் போட்டு திட்டும் வகை இந்த சேர்க்கையில் யாழிலும் ஒரு சிலர் உள்ளனர் . ஆனால் எல்லாத்திலும் ஒரு மோசமான கூட்டம் உண்டு அவர்கள்தான் நீங்கள் சொல்லும் ஆட்கள் ஊரில் இருபவர்களுக்கு படம் காட்டும் கூட்டம் அனேகமாக அவர்கள் சோசல் பணத்தில் அரசின் உதவிகளை பெற்றுகொள்பவர்கள் இவர்கள் ஊர் போய் வந்தால் அங்கு அப்படி இப்படி ஆகா ஓகோ என்று இலங்கையரசின் உத்தியோகப்பற்று அற்ற உல்லாசபயண விளம்பர முகவர் ஆட்டம் ஆட்டம் காட்டுவார்கள் .அத்துடன் அடிக்கடி போய் வருவார்கள் . இதுக்குள் @goshan_cheஎல்லாத்தையும் ஒரு செய்தியாளர் போல் கவனிக்க முயற்சி பண்ணியிருக்கார் . இப்ப விடயம் என்னவென்றால் நீங்கள் சொல்வது போல் ஒன்றுக்கு ஒன்று வந்தால் யார் போவார்கள் அரச உதவி கூட்டம் மட்டுமே போகும் காரணம் அதுகளுக்கு இங்கு சிலவு செய்ய முடியாது . அடுத்த உண்மை எந்த ஒரு காலமும் யுரோவுக்கு அல்லது பவுனுக்கு நிகராக இலங்கை நாணயம் வலுபெற போவதில்லை காரணம் இலங்கையை சுற்றி கடல் மாத்திரம் அல்ல கடனும் இருக்கிறது.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் இன்று இலங்கை வருகின்றனர்
சந்தோசம் சொந்த நாடு வந்ததுக்கு .
-
ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
ஏப்ரல் இரண்டா ஆகி விட்டது லண்டன் இன்னும் குளிர் போகவில்லை .
-
அமெரிக்காவில் மோதிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தவை ஆபத்தான கழிவுப் பொருட்கள்
உங்களுக்கு தெரிந்துது அவ்வளவுதான் வந்து சேர்ந்த கப்பல்களின் கொண்டிய்யினர் களில் என்னதான் இருக்கு என்று வெளிப்படையாக சொல்ல சொல்லுங்க அதன் பின் நீங்களும் சொறிலங்கா சொல்லுவீர்கள் .😀@goshan_cheUNKALUKKUM THAAN .