Everything posted by தமிழ் சிறி
-
பாசிக்குடாவில் சட்டவிரோத விபச்சார விடுதி முற்றுகை
விபச்சாரத்தையும், கள்ளச் சாராயத்தையும் ஒழிக்க முடியாது என்பதால்... இவற்றுக்கு அனுமதி கொடுத்து, தரக் கட்டுப்பாட்டை கண்காணித்து, அரசு... வரி அறவிட வேண்டும். அரசுக்கும் வருமானம் , வாடிக்கையாளருக்கும் திருப்தியாக இருக்கும். இல்லாவிடில்... குடிசை கைத்தொழில் மாதிரி, எல்லா இடமும் இது தன் பாட்டில் நடந்து கொண்டு இருக்கும். இதைச் சொன்னால்... நம்மளை பைத்தியக்காரன் என்பார்கள். 😂 ஆனால்... சொல்ல வேண்டியது நமது கடமை. 🤣
-
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பமாகி 8 வருடம் - வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டம்
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்கள் பூர்த்தி. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், அதனை முன்னிட்டு இன்று வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப்போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டுமாறும் கோரி முல்லைத்தீவு மாவட்ட உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதியுடன் எட்டு வருடங்கள், அதாவது 2923 நாட்கள் பூர்த்தியடைகின்றன. ஆனால் அக்கோரிக்கை இன்னமும் ஈடேறாத நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் 8 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு, வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஆரம்பமாகியது. ‘தாய்மார்களாக, பெற்றோராக, குடும்பமாக எமது உறவுகளைக் கண்டுபிடிக்க நீதிக்கான இந்த நீண்ட போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கிறோம்’ என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இன்றைய கவனயீர்ப்புப்போராட்டத்தை ‘போரின் இறுதி நாட்களில் வட்டுவாகல் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்த எங்கள் உறவுகள் என்னவானார்கள்?’ எனும் பிரதான கேள்வியுடன் முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இப்போராட்டத்தில் சகல தரப்பினரும் கலந்துகொண்டு தமக்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1424423
-
இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் – சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து
இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் – சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர திசாநாயக்கவுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற சந்திப்பு குறித்து தமது ‘X’ கணக்கில் பதிவிட்டு இதனை அவர் கூறியுள்ளார். முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக பணிப்பாளர் தனது ‘X’கணக்கில் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1424436
-
சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரிகள் அனைவருக்கும்... சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள். 💐
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
இயற்கை காட்சிகளை படம் எடுப்பதற்கும், முன்பின் தெரியாத மனிதரை படம் எடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. நீங்கள் படம் எடுத்த ட்ரக்றர்காரர், அந்தப் படத்தை வைத்து தவறான வழிகளில் பயன்படுத்தப் போகின்றீர்களோ என்று பயந்து இருக்கலாம். அதுகும்… இலங்கையில் புலனாய்வு பிரிவுகள் என்று மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டு இருக்கும் அன்னியர்களை நினைத்து அவர் உசாராகி இருக்கலாம்.
-
மத்தள விமான நிலையத்தை, விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானம்!
இரண்டு மூன்று விமான நிறுவனங்கள்… மத்தள விமான நிலையத்திற்கு தமது விமானங்களை இயக்கிய நினைவு உள்ளது. குறுகிய காலத்தில் அதனை நிறுத்தி விட்டார்கள். இது… கட்டிய செலவை விட… பராமரித்த செலவு அதிகம். 😂 ராகு காலத்தில்… பூமி பூஜை செய்து, அத்திவாரம் போட்டுள்ளார்கள் போலுள்ளது. 🤣
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
எனக்குப் பிடித்த காமெடி பீசு…. தெர்மகோல் செல்லூர் ராஜுதான். 😂 🤣
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
இவர் புலம்பெயர் தேசத்தில் வசித்து இருந்தும், பாடசாலைக்குள் சிறுவர், சிறுமியரை படம் எடுக்கக் கூடாது என்ற அடிப்படை சட்டம் கூட தெரியாதவர் போலுள்ளது. பொலிஸ் ஸ்ரேசனிலும் போய் அடாவடி செய்த படியால்… நட்டு, கிட்டு கழண்ட ஆளோ தெரியவில்லை. 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- மலரும் நினைவுகள் ..
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- யாழில் மாற்றுவலுவுடையோருக்காக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளுரில் தயாரிக்கப் பட்ட வாகனங்களின் விசேட வாகன அனுமதி பத்திரத்தின் மூலம் அவர்களுக்கு, முன்னேற்றகரமான நல்ல ஒரு செயலை… அதுகும் இலங்கையில் யாழ். மாவட்டத்தில் முதன் முதலாக செயல்பட ஆரம்பித்தது மகிழ்ச்சியான செய்தி.- யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
சிலருக்கு…. வெளி நாட்டு பாஸ்போட்டுடன், ஊருக்குப் போனவுடன்.. ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த மாதிரி ஒரு நினைப்பு. இப்ப… இவர் வழக்கு முடியும் மட்டும், நாட்டை விட்டு போக இயலாது என நினைக்கின்றேன். கிடைத்த விடுமுறையில்… இரண்டு கிழமையை இலங்கை விளக்கமறியலில் கழிக்க வேண்டி வந்திட்டுது. 😂- நிர்வாண சைக்கிள் ஓட்டிக்கு விளக்கமறியல் நீடிப்பு
நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இவர், இடையில் மோட்டார் சைக்கிளை நிதானமாக நிறுத்தி, மூன்று இடங்களில் எரிபொருளும் நிரப்பிக் கொண்டு போயுள்ளார்.- இலங்கையில் எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்று உத்தரவாதம் இல்லை - சத்தாதிஸ்ஸ தேரர்
ஓம். இப்போ.... இவர்களின் சம்மதம் இல்லாமல் எந்த அரச காரியமும் நடவாது. இவர்களை பார்த்து... எல்லா அரச தலைவர்களும் பயப்படுகின்றார்கள். நிலைமை கை மீறிப் போய் விட்டது.- இலங்கையில் எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்று உத்தரவாதம் இல்லை - சத்தாதிஸ்ஸ தேரர்
இவர்கள்... யார் புத்தர் என்று, கேட்கக் கூடிய ஆட்கள்.- அருண் ஐஸ்கிறீம்.
1971ஆம் ஆண்டு முன்பு வரை பத்து பைசாவிற்கு வீதியில் ஐஸ் விற்றவர் ஜிகே சந்திரமோகன். சொத்தை விற்று கடன் வாங்கி ரூ13ஆயிரத்தை திரட்டி 1971ஆம் ஆண்டு ஜிகே அண்ட் கோ நிறுவனத்தை உருவாக்கி அருண் ஐஸ்க்ரீம் என்னும் தயாரிப்பை தமிழகத்திற்கு கொடுத்தார். இன்று தமிழக பட்டி தொட்டியிலும் இவருடைய தயாரிப்பான அருண் ஐஸ்க்ரீம் பிரபலமாகிவிட்டது. இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஐஸ்கீறீமுக்கு மூலதனம் பால் கொள்முதல், பிறகு அந்த பாலையும் தொழிலாக செய்தார். 1995ஆம் ஆண்டு ஆரோக்யா பால் என்னும் தயாரிப்பினை சந்தைகளில் இறக்கி விட்டார் அதுவும் இவருக்கு நல்ல ஒரு வெற்றியே பெற்றுக் கொடுத்தது. அதோடு நின்று விடாமல் மோர் தயிர் வெண்ணைய் நெய் என்று பால் சம்பந்தப்பட்ட பொருட்களையும் சந்தையில் இறக்கிவிட்டார். எல்லாமே மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இன்று இவருடைய நிறுவனம் வருடத்திற்கு சுமார் ரூ5000 கோடி வரை வருமானம் ஈட்டுகிறது. உண்மை உழைப்பு உயர்வு இவரை உச்சத்தில் ஏற்றியுள்ளது வாழ்த்துக்கள் சார்... தல ரசிகை சித்ரா வி- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
நரி வேட்டையாடப்பட்டது என்பதே நிதர்சனம். அதனை ஏற்றுக் கொள்ள சில நரிக் கூடாரத்தின் விசுவாசிகளால் முடியவில்லை. நரியே தனது மூக்குடைஞ்ச வேதனையில, ஊடகவியலாளர கூட்டி வெட்டிட்டாங்க கோர்த்துட்டாங்கனு அழுகுறார். பற்றாக்குறைக்கு சங்கங்களின் காலையே நக்கிட்டார். இங்க சிலர் இன்னும் நரியின்ர உடைக்கப்பட்ட மூக்குக்கு பேஸ்ற் பூசிட்டு வாரது தான் சகிக்க முடியல. ஈழத்தமிழர்களுக்கு சர்வதேசத்தில ஒரு களம் திறக்கையில உங்களுக்கு லைற்றா எரிய தான் செய்யும். Rest in Peace ப்ரண்ட்ஸ். Monisha Kokul- இலங்கையில் எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்று உத்தரவாதம் இல்லை - சத்தாதிஸ்ஸ தேரர்
முதலில் இந்தப் பிக்குமாரை பள்ளிக்கூடத்துக்கு படிக்க அனுப்ப வேண்டும். அப்பவாவது... மண்டைக்குள், பொது அறிவு... ஏறுதா என்று பார்க்க வேண்டும்.- மத்தள விமான நிலையத்தை, விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானம்!
கொஞ்சக் காலம் இந்த விமான நிலையத்தில், நெல் காயப் போட்டார்கள். இப்போ.... காயப் போட, நெல்லும் இல்லைப் போலுள்ளது.- மத்தள விமான நிலையத்தை, விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானம்!
மத்தள விமான நிலையம் தொடர்பாக அரசாங்கத்தின் தீர்மானம்! மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், மத்தள விமான நிலையத்தை பொருத்தமான வெளிநாட்டு பங்காளியுடன் இலாபம் ஈட்டும் முயற்சியாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மத்தள விமான நிலையம் 36.5 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஐந்து வருடங்களில் 38.5 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1424388- உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி; வைத்தியசாலையிலிருந்து வந்த போப்பின் குரல் செய்தி! நிமோனியாவால் வைத்தியசாலையில் சுமார் மூன்று வாரங்கள் போராடி வரும் போப் பிரான்சிஸ், தான் குணமடைய பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஆடியோ செய்தியை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த குரல் பதிவில் அவர், சதுக்கத்திலிருந்து என் உடல்நலத்திற்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு என் இதயப் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இங்கிருந்து உங்களுடன் இணைகிறேன் – என்று செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில் பிரான்சிஸ் கூறினார். மேலும், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, கன்னிகை உங்களைப் பாதுகாக்கட்டும். நன்றி – என்று அவர் தனது தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில் பேசும்போது மூச்சு விட சிரமப்பட்டார். இதன்போது, சில வார்த்தைகளில் வெளியில் விடவும் அவர் அவதிப்பட்டார். 88 வயதான பிரான்சிஸ், பெப்ரவரி 14 அன்று ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உலகம் அவரது குரலைக் கேட்பது இதுவே முதல் முறை. போப்பின் உடல் நலவுக்காக பிரார்த்தனை செய்ய ஒவ்வொரு மாலையும் புனித பீட்டர் சதுக்கத்தில் அவரது நலன் விரும்பிகள் கூடி வருகின்றனர். வியாழக்கிழமை (06) அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் அவரது செய்தியைக் கேட்டதும் கைதட்டினர். 2013 முதல் உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருக்கும் ஆர்ஜென்டீனியர் “நிலையான” நிலையில் இருப்பதாக வத்திக்கான் வியாழக்கிழமை முன்னதாகக் கூறியது. https://athavannews.com/2025/1424372- கருத்து படங்கள்
- மலரும் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.