Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ட்ரம்பின் ஹோட்டலுக்கு வெளியே வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் லாஸ் வேகாஸில் (Las Vegas) அமைந்துள்ள ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியது. புத்தாண்டு தினமான புதன்கிழமையன்று (01) இடம்பெற்ற இந்த வெடிப்பில் வாகனத்திற்குள் இருந்த அதன் சாரதி உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தற்சமயம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். வெடித்துச் சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமானது. அவர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார் – அவரது வெற்றிகரமான 2024 அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்திற்கு மில்லியன் கணக்கான நன்கொடைகளை பில்லியனர் வழங்கினார். அது மாத்திரமல்லாது அவர் ட்ரம்பின் அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்தும் பணியையும் பெற்றுள்ளார். இதனிடையே லாஸ் வேகாஸில் நடந்த சம்பவம் ஒரு சாத்தியமான பயங்கரவாத தாக்குதலாக பார்க்கப்படுவதாக மூன்று மூத்த அமெரிக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், வெடிப்புக்கான காரணத்தை இதுவரை அதிகாரிகள் கண்டறியவில்லை. https://athavannews.com/2025/1414932
  2. துனிசியாவில் இரு புலம்பெயர்ந்த படகுகள் மூழ்கியதில் 27 பேர் உயிரிழப்பு! மத்திய தரைக்கடலை கடக்க முயற்சித்த இரு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 ஆப்பிரிக்க குடியேறியவர்களின் உடல்களை துனிசியாவின் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை (02) தெரிவித்தனர். ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடிக்கடி பயன்படுத்தும் புறப்படும் இடமான துனிஷியாவின் ஸ்ஃபாக்ஸ் (Sfax) நகருக்கு அப்பால் படகுகள் நீரில் மூழ்கியுள்ளன. எனினும், இரண்டு படகுகளில் பயணித்த 87 பேரை கடலோர காவல்படையினர் காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத இடப்பெயர்வு நெருக்கடியால் துனிசியா பாதிக்கப்பட்டுள்ளது. துனிசியர்கள் மற்றும் ஐரோப்பாவில் வாழ விரும்பும் மக்களுக்கு இது இப்போது முக்கிய புறப்படும் இடமாக ஸ்ஃபாக்ஸ் மாறியுள்ளது. கடந்த மாதம், துனிசியாவின் கடலோரக் காவல்படை இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் சுமார் 30 புலம்பெயர்ந்தோரின் உடல்களை மீட்டெடுத்தது. அவர்கள் ஐரோப்பாவை நோக்கிச் படகுகளில் பயணித்தவர்கள் ஆவர். https://athavannews.com/2025/1414955
  3. தெற்கு கலிபோர்னியாவில் விமான விபத்து; இருவர் உயிரிழப்பு, 18 பேர் காயம்! தெற்கு கலிபோர்னியாவில் வியாழன் (02) அன்று வணிக கட்டிடத்தின் மேற்கூரையில் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்ததாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவின் புல்லர்டன் நகரில் நடந்த விபத்து குறித்து அந்நாட்டு நேரப்படி வியாழன் பிற்பகல் 2.09 மணிக்கு பொலிஸாருக்கு அறிக்கை கிடைத்ததாக நகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டி வெல்ஸ் கூறினார். விபத்தினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் தீயை கட்டுப்படும் முயற்சிகளை முன்னெடுத்தனர். விபத்தினை அடுத்து காயமடைந்த 10 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எட்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேநேரம், விபத்தில் இருவர் உயிரிழந்ததாக புல்லர்டன் நகர பொலிஸார் உறுதிப்படுத்தினர். விபத்தில் காயமடைந்தவர்கள் விமானத்தில் இருந்தார்களா அல்லது தரையில் இருந்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை. நான்கு இருக்கைகள் கொண்ட ஒற்றை எஞ்சின் கொண்ட விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் விபத்துக்குள்ளானதை விமான கண்காணிப்பு இணையதளமான ஃப்ளைட்அவேர் குறிப்பிட்டது. புல்லர்டன் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து தென்கிழக்கே 40 கிமீ தொலைவில் சுமார் 140,000 மக்கள் வசிக்கும் நகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1414964
  4. நாய் கடித்து, இறந்த கோழியை... சமைத்து சாப்பிடலாமா? 😂 நாம தின்னுட்டு... மிச்சத்தை, நாய்க்கு போடுறப்போ... அதுகும் இப்பிடித்தானே நினைச்சிருக்கும். 🤣
  5. மலையகத்தில்... தனியார் வாகனம் ஒன்றில் வந்த மீன் வியாபாரி, தனது கடையின் மீன் கழிவுகளை வீதியோரத்தில் கொட்டி விட்டு செல்லும் போது, அந்த வாகனத்தை மறித்த சிலர் அக்கழிவுகளை அள்ளி அவரின் வாகனத்திற்குள் கொட்டி அனுப்பி வைத்துள்ளார்கள்.
  6. ரணில் ஆட்சியில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுவதற்கான அறிவித்தல் வந்த போது, சுமந்திரன்... தமிழரசு கட்சி தனியாக போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து, பிரிவை ஏற்படுத்தியவர்.
  7. உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அறிவிப்பு! உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு இந்த திருத்தங்கள் வழங்குகின்றதுடன் புதிய வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் முக்கிய நோக்கத்துடன் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அண்மையில் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1414845
  8. ஆளே இல்லாத கடையில், யாருக்கு "ரீ" ஆற்றுகிறீகள். நீங்கள் கெட்ட கேட்டுக்கு, உங்களை யாரும் தேர்தலில் போட்டியிடச் சொல்லி கேட்டார்களா? வந்திட்டாங்கள் தாங்களும் ஒரு ஆட்கள் என்று. போய்.... உங்கடை ஆட்களுக்கு, மாறி, மாறி முதுகு சொறிஞ்சு கொண்டு இருங்கோ.
  9. அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்; 15 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! புத்தாண்டு தினத்தன்று அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர், தனது டிரக் வாகனத்தில் இஸ்லாமிய அரசுக் (ஐஎஸ்ஐஎஸ்) கொடியை பறக்கவிட்டபடி நியூ ஆர்லியன்ஸின் நெரிசலான பகுதியில் தாக்குதலை நடத்தியுள்ளார். அமெரிக்க நகரத்தின் மிகவும் சுறுசுறுப்பான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றான பிரெஞ்சு காலனியின் மையத்தில் உள்ள போர்பன் தெருவில் புதன்கிழமை (01) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்து அல்ல என்று விபரித்துள்ள அமெரிக்க புலனாய்வுப் பிரிவு (FBI) அது ஒரு பயங்கரவாதச் செயல் என்று கூறியுள்ளது. மக்கள் கூட்டத்தின் மீது டிரக் வாகன் மோதி விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அதனை செலுத்திய சாரதி தடுப்பி ஓட முயற்சித்த போது சட்ட அமுலாக்கத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால், இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும், சட்ட அமுலக்கா அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டினால் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வாளர்கள், சந்தேக நபர் 42 வயதான அமெரிக்க குடிமகன் என்றும், அண்டை மாநிலமான டெக்சாஸைச் சேர்ந்த ஷம்சுத்-தின் ஜப்பார் என்ற இராணுவ வீரர் என்றும் அடையாளம் கண்டு கொண்டனர். இந்த நிலையில், புத்தாண்டு தினத்தில் 15 பேரைக் கொன்ற நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் சந்தேக நபர் தனியாக செயல்படவில்லை என்று அமெரிக்க புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். அவர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் ஒரு இஸ்லாமிய அரசுக் குழுவின் கொடியும், அருகிலேயே இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டனர். https://athavannews.com/2025/1414848
  10. இலங்கை அரச படையினரால், சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களுக்கும் நினைவஞ்சலிகள். 🙏
  11. நானும் அவரைத்தான் நினைத்தேன். ஆனால்…. அவரில் கை வைத்தால், மகிந்த கோஷ்டி அதனை வைத்து அனுதாபம் தேடப் பார்க்கும்.
  12. இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி! இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அது மாத்திரமின்றி புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1414791
  13. தென்கொரிய விமான விபத்து; கறுப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் பிரித்தெடுப்பு! கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பிரித்தெடுப்பதை புலனாய்வாளர்கள் முடித்துவிட்டதாக தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. காக்பிட் குரல் பதிவில் (cockpit voice recorder) இருந்து தரவு இப்போது ஆடியோ கோப்பாக மாற்றப்படும், அதே நேரத்தில் இரண்டாவது கருப்பு பெட்டி – ஒரு விமான தரவு பகுப்பாய்வுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் என்று அமைச்சின் அதிகாரிகள் கூறியுள்ளனர். (காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆனது விமானிகளின் உரை, விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறையுடனான உரை, விமானத்தின் சுவிட்ச் மற்றும் விமான இஞ்சின் ஒலியென அனைத்தையும் பதிவு செய்கிறது.) இந்த தரவுகள் விமான விபத்துக்கு வழிவகுத்த முக்கியமான தருணங்களைப் பற்றிய மேம்பட்ட தகவல்களை வழங்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். தாய்லாந்திலிருந்து தென்கொரியாவுக்கு 181 பயணிகளை சுமந்து வந்த ஜெஜு ஏரின் 7C2216 விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் அடிப்பகுதி உரசியபடி சென்ற நிலையில், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி பலத்த வேகத்தில் சுற்றுச்சுவரில் மோதியது. இதனால் விமானம் முழுமையாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் மொத்தமாக 179 பேர் உயிரிழந்திருந்தனர். இது தென் கொரிய மண்ணில் நடந்த மிக மோசமான விமான விபத்து ஆகும். https://athavannews.com/2025/1414797
  14. விகாரைகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் அல்ல, விகாரை கட்டும் பணிகளில் ஈடுபட்டதற்காகவே, அவர்கள் நீக்கப் பட்டதாக செய்தியில் உள்ளது. இனி... விகாரை கட்டும் பணிகளிலும், தொய்வு ஏற்படப் போகுது. 🤣
  15. பொன்சேகாவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது... அலைகடல் என திரண்டு வந்த மக்கள் கூட்டம். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.