Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இலங்கையில் இரண்டு உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்! இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மற்றும் இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தப்போது அதன் கட்டுப்பாடுகள் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது https://athavannews.com/2024/1414590
  2. சீமான் கைது! சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து பேசிய சீமான், அறவழியில் போராட கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என கூறினார். இதனையடுத்து வள்ளுவர்கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொலிஸார் கைது செய்தனர். முன்னதாக, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை பொலிஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1414658
  3. திருப்பதி காணிக்கை பணத்தில் 100 கோடி ரூபா மோசடி. திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தில் சுமார் நூறு கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக வழங்கப்பட்ட பல நாடுகளின் நாணயங்கள் இங்கிருந்து திருடப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு மேற்பார்வையாளராக பணியாற்றிய ஒருவர், தனது உள்ளாடைக்குள் மறைத்து உண்டியலிலிருந்த பணங்களை திருடியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் இது அவதானிக்கப்பட்டு வந்துள்ளது. சுமார் நூறு கோடி வரை இங்கு திருட்டு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.சி ராம்கோபால் ரெட்டி உள்ளிட்ட பலரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1414632
  4. கடந்த மூன்று நான்கு வருடங்களில், காங்கேசன்துறை - நாகை படகுச் சேவை 100 தடவைக்கு மேல், நிற்பாட்டி நிற்பாட்டி... மீள ஆரம்பித்து இருப்பார்கள். இதற்கு ஒரு விழா எடுக்கத்தான் வேண்டும்.
  5. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் போது, சஜித் உள்ள மேடையில் வைத்து, கருமாந்திரம் சாரி... "சுமந்திரம்" என்ற ஒரு பத்திரிகையை வெளியிட்டது நினைவு இருக்கின்றதா? அதற்குப் பிறகு அந்தப் பத்திரிகை ஏன் தொடர்ந்து வெளிவரவில்லை என்று யாருக்காவது தெரியுமா? மூஞ்சையின்ரை திறத்திலை... பத்திரிகை வெளியிட்டு "பவர்" காட்ட வெளிக்கிட்டவர், சனம் உசாராகி... சாணியால் அடித்துவிட்டு போய் விட்டார்கள். 😂 "சுமந்திரம் எனும் மந்திரம்" என்று சொல்லி...... சுமந்திரனை பப்பாவில் ஏற்றி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இல்லாமல் செய்ததுதான்.... சுமந்திரனின் அல்லக்கைகள் செய்த ஒரு நல்ல வேலை. 👍 😂
  6. சுத்துமாத்து சுமந்திரன் தமிழரசு கட்சியில் இருக்கு மட்டும், தமிழரசு கட்சிக்கு... ஏழரை சனியன் தான். 😲 சுத்துமாத்து சுமந்திரன் தேர்தலில் படு தோல்வி அடைந்தும், திருந்துகின்ற நோக்கம் இல்லாமல் வெட்கம் இல்லாமல் திரியுது. 😂 வர இருக்கும், உள்ளூராட்சி தேர்தலிலும்... தமிழரசு கட்சிக்கு மரண அடி வாங்கிக் குடுக்கத்தான்... சுத்துமாத்து சுமந்திரன் ஆயத்தம் செய்து கொண்டு இருக்கிறார். 🔴
  7. அதுவும் சரிதான். 2025´ம் ஆண்டு முழுக்க அவர் பழக அவகாசம் கொடுப்போம். அப்பவும் திருந்தவில்லை என்றால்... சவுக்கடிதான். 🤣
  8. இந்த வருடத்தின் மிக மோசமான போட்டோசொப் படம். 😂 இதனை தயாரித்தவனுக்கு 100 சவுக்கடி கொடுக்க வேண்டும். 🤣
  9. இலங்கையில்... வெள்ளம் வந்தது, இந்தியாவுக்கு தெரியாது போலை இருக்கு. 😀 தெரிந்திருந்தால்... அள்ளிக் கொட்டியிருக்கும். சீனாக்காரனின் சுறு சுறுப்பு... இந்தியரிடம் இல்லை. 🤣
  10. பாஞ்ச் அவர்களே.... என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லி விடுங்க. 😂
  11. போர் நடக்கும் இடத்தில்... சேவை ஆற்றிய மருத்துவரை, இஸ்ரேல் கைது செய்திருக்கின்றது. அதனை எந்த உலக நாடுகளும் கண்டிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இதற்குள் மற்றவர்களுக்கு... மனிதாபிமானம், மனிதநேயம் என்று கிலோ கணக்கில் ஆலோசனை வழங்கிக் கொண்டிப்பார்கள். வெட்கம் கெட்டவர்கள்.
  12. கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்! அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக இந்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இதில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இதில் அருட்தந்தையர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2024/1414486
  13. ஆண்டுகள் பல கடந்தாலும், எமது போராட்டத்துக்கான தீர்வும், நீதியும் இன்றுவரை கிடைக்கவில்லை! தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தருவதாகக் கூறிய புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். குறித்த போராட்டம் இன்று காலை கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அலுவலகம் முன்பாக இடம் பெற்றதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது படங்களை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எமது பிள்ளைகள் கையளித்தும், சரணடைந்தும் காணாமல் ஆக்கப்பட்டள்ளனர். கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளைத் தேடி நாங்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றோம். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க சர்வதேசம் முன்வர வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் போராடுகின்றோம். இதற்கு முன் இருந்த அரசுகள் எம்மை ஏமாற்றின. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடுகிறோம். ஆண்டுகள் பல கடந்தாலும், எமது போராட்டத்துக்கான தீர்வும், நீதியும் இன்றுவரை கிடைக்கவில்லை. எமக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு நீதி பெற்றுக் கொடுப்பேன் என புதிய ஜனாதிபதி கூறினார். ஆனால் 6 மாதங்களாகியும் இன்றுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனைய ஜனாதிபதிகள் போன்று இவரும் ஏமாற்றுவதாகவே உணர்கின்றோம். இன்றுவரை பாதிக்கப்பட்ட எம்முடன் பேசக்கூவில்லை. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலியும், கண்ணீரும் எனக்கும் தெரியும் என்றார். அதன் வலி எனக்கு புரியும் என்றார். ஆனால் இன்றுவரை எந்த முயற்சியும் அவர் எடுத்திருக்கவில்லை. நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றபட்டே வருகின்றோம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர் https://athavannews.com/2024/1414481
  14. ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்! அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. “தூய்மையான இலங்கை” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படை தளபதிகள் உட்பட 18 பேர் இந்த செயலணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த ஜனாதிபதி செயலணியின் பொறுப்புகள், “தூய்மையான இலங்கை” திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் என்பனவாகும். https://athavannews.com/2024/1414438
  15. பாடசாலை நாட்கள் எண்ணிக்கையில் மாற்றம்! 2025 ஆம் ஆண்டு பாடசாலை பருவ நாட்கள் எண்ணிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் வருடத்திற்கு பாடசாலை நாட்களை அடுத்த வருடம் 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதிகளவிலான அரசு விடுமுறைகள் மற்றும் முதல் தவணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் அரசுப் பாடசாலைகளில் ஆண்டுதோறும் கல்வி பயிலும் மாணவர்களின் வருகை திகதி குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்வதற்கு, ஜனவரி 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பாடசாலையின் முதல் 03 வாரங்கள் நடைபெறவுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக அடுத்த ஆண்டுக்கான கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டுக்கு 26 பொது விடுமுறைகள் உள்ளன, அதில் 4 நாட்கள் மட்டுமே வார இறுதி நாட்கள். ஏனைய அனைத்தும் வாரநாட்களாக இருப்பதால் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த இயலாது, இதனால் பாடசலைகள் நடத்தும் நாட்கள் 181 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1414448
  16. விலை மனுக்கோரல் மூலம்; 78 கோடி ரூபா நட்டம்! கடந்த மூன்று மாதங்களில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி எரிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சியிருக்கும் சாம்பல் விலை மனுக்கோரலுக்கு விடப்பட்டதன் மூலமாக அரசாங்கத்திற்கு 78 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய இந்த சாம்பல், தொன் ஒன்று 13,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டாலும், தொன் ஒன்றுக்கு 2,900 ரூபாவுக்கு விலை மனுக்கோரல் விடப்பட்டுள்ளது. இதனால், தொன் ஒன்றுக்கு 10,400 ரூபாய் நஷ்டத்தில் இந்த ஆண்டு மே 15 ஆம் திகதி அவசர விலை மனுக்கோரல் அழைப்பின் மூலம் பெரிய அளவில் சீமெந்து வியாபாரிகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு இந்த விலை மனுக்கோரல் விடப்பட்டுள்ளது. இதன்படி 36 மாதங்களில் அரசாங்கத்திற்கு 6.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1414455
  17. உலகெங்கிலும் தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-நரேந்திர மோடி! நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார் இன்னிலையில் நேற்றுடன் 117-வது அத்தியாயத்தை எட்டியுள்ளதுடன் இந்தாண்டுக்கான கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார் இதில் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி ஆகும் என்றும் இது, இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதமான, பெருமை சேர்க்கும் விஷயம். என்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அவர் தெரிவித்தார் இதேவேளை கடந்த மாத இறுதியில் ஃபிஜியில் இந்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் கடந்த 80 ஆண்டுகளில் ஃபிஜியில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மொழியை பயிற்றுவிப்பது இதுவே முதல்முறையாகும் மேலும் ஃபிஜி மாணவர்கள் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இந்த சம்பவங்கள் வெறும் வெற்றிக் கதை அல்ல. நம்மை பெருமிதத்தால் நிரப்புபவை எனவும் நரேந்திர மோடி தெரிவித்தார் https://athavannews.com/2024/1414458
  18. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 100 ஆவது வயதில் காலமானார்! 1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியாக பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter), தனது 100 ஆவது வயதில் ஜோர்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று அமெரிக்க ஊடகத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தனது மனிதாபிமானப் பணிக்காக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற கார்ட்டர், இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்திய பெருமைக்குரியவர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கார்ட்டர், 1976 அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் ஜெரால்ட் ஃபோர்டை தோற்கடித்து வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தார். முன்னதாக கலிபோர்னியா ஆளுநராக பணியாற்றிய நடிகரும் அரசியல்வாதியுமான ரொனால்ட் ரீகனால் 1980 தேர்தலில் கார்ட்டர் தோற்கடிக்கப்பட்டார். கார்ட்டரின் மறைவு குறித்து அவரது புல்வர் சிப் கார்ட்டர் இட்டுள்ள பதிவொன்றில், “என் தந்தை எனக்கு மட்டுமல்ல, அமைதி, மனித உரிமைகள் மற்றும் தன்னலமற்ற அன்பில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் ஒரு ஹீரோ” என்று கூறியுள்ளார். கார்ட்டர், அண்மைய ஆண்டுகளில், கல்லீரல் மற்றும் மூளைக்கு பரவிய மெலனோமா உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளால் தொடர்ந்தும் போராடி வந்தார். அவர் 2023 ஆம் ஆண்டில் தீவிர நோய்வாய்ப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு வகை சுகாதாரப் பராமரிப்பைப் பெற முடிவு செய்தார். மேலும் கூடுதல் மருத்துவ தலையீட்டிற்கு உட்படுத்த வேண்டாம் என்றும் அவர் தீர்மானித்திருந்தார். 2023 நவம்பர் 19 அன்று, 96 வயதில் உயிரிழந்த அவரது மனைவி ரோசலின் கார்டரின் இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொண்டார். இதன்போது அவர் பலவீனமான நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். எவ்வாறெனினும், கார்ட்டர் தனது பதவிக் காலத்திற்குப் பின்னர், மற்ற எந்த அமெரிக்க ஜனாதிபதியையும் விட நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற சிறப்பை அடைந்தார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முன்னெடுப்பதைத் தவிர, சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் கண்டறிவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 2002 இல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. ஓவல் அலுவலகத்தில் (அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அலுவலகம்) அவர் நான்கு ஆண்டுகள் பணியாற்றியது இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1978 ஆம் ஆண்டு கேம்ப் டேவிட் உடன்படிக்கைகளுக்கு பெரும் பங்களிப்பை நல்கியது. இது இரு நாடுகளுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தியதுடன், மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரவும் உதவியது. எனினும் ஒரு பொருளாதார மந்தநிலை, அவரது செல்வாக்கற்ற தன்மை மற்றும் 1979 ஈரான் பணயக்கைதிகள் நெருக்கடி ஆகியவை அவருக்கு எதிராக ஒரு சூழ்நிலையை உருவாக்கியது. மேலும் அவர் 1980 அமெரிக்க தேர்தலில் ரீகனிடம் தோற்று வெளியேற்றப்பட்டார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டனர் மேலும் அதில், கார்டரை “அசாதாரண தலைவர், அரசியல்வாதி மற்றும் மனிதாபிமானவாதி” என்றும் நினைவு கூர்ந்தனர். அதேநேரம் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், கார்ட்டர் தனது பதவிக்காலத்தில் தான் எதிர்கொண்ட துன்பங்களுக்கு மத்தியிலும் அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்ட தலைவர் என்று கூறினார். கார்ட்டர் ஒரு பிரபலமற்ற ஜனாதிபதியாக பதவியை விட்டு வெளியேறினார், ஆனால் அவரது பதவிக்காலத்திற்குப் பின்னர், அவர் மனிதாபிமான காரணங்களுக்காக பல தசாப்தங்களாக ஆர்வத்துடன் பணியாற்றினார். அடுத்த ஆண்டுகளில், கார்ட்டர் ஒரு மனித உரிமை சாம்பியனாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார், மேலும் பின்தங்கியவர்களுக்கான குரலாக பிரபலமடைந்தார். அவர் பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தினார் மற்றும் முன்னோடியில்லாத புகழ் பெற்றார், இது ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் போது கூட அவரால் அடைய முடியாத பெருமிதம் ஆகும். https://athavannews.com/2024/1414431
  19. தாய்லாந்தில் இருந்து வந்த விமானம் தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 181 பேரில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். விபத்திற்கு சற்று முன், பறவை தாக்கும் விமானிகளுக்கு கோபுரம் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. தென்கொரியாவின் முவான் நகரில் விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். அதிகாரப்பூர்வ Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்தபடி, தீயணைப்புத் துறை இதை உறுதிப்படுத்தியது. 181 பேரில் இருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். பல வருடங்களில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்று. யோன்ஹாப்பின் கூற்றுப்படி, விமானத்தில் மொத்தம் 173 தென் கொரிய மற்றும் இரண்டு தாய்லாந்து பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்தனர். இதுவரை, 65 பேர் இறந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தீயணைப்பு ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. விமானம் சுவரில் மோதியதையடுத்து, பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உயிர் பிழைத்தவர்கள் இரண்டு குழு உறுப்பினர்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த தென் கொரிய மலிவு விலை விமான நிறுவனமான Jeju Air இன் Boeing 737-8AS, காலை 9 மணிக்கு (உள்ளூர் நேரம்) சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓடுபாதையை நெருங்கி, ஓடுபாதையின் பின்னால் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியது. தரையிறங்கும் கருவிகள் மடிக்கப்படவில்லை - பறவை தாக்கியதா? தென் கொரிய தொலைக்காட்சியில் காட்டப்பட்ட ஒரு வீடியோ, தரையிறங்கும் கியர் இல்லாமல் ஓடுபாதையில் சறுக்கிச் செல்வதைக் காட்டியது, பாதையின் முடிவில் விபத்துக்குள்ளானது மற்றும் தீப்பிடித்தது. யோன்ஹாப்பின் கூற்றுப்படி, தரையில் இருந்த பல நேரில் கண்ட சாட்சிகள் விசையாழிகளில் ஒன்றில் நெருப்பைக் கண்டதாகவும் பல இடி சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை, போயிங் 737-800 விமானத்தில் எந்தக் கோளாறும் ஏற்படவில்லை. ஊடக அறிக்கைகளின்படி, அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் விபத்துக்குப் பிறகு ஜெஜு ஏர் நிறுவனத்தைத் தொடர்புகொண்டது. அதிகாரிகளை மேற்கோள் காட்டி Yonhap அறிக்கை, ஒரு பறவை தாக்கியது, அதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பறவைகளுடன் மோதியதால், தரையிறங்கும் கருவி பழுதடைந்திருக்கலாம். அதன்படி, விமானிகள் தரையிறங்குவதற்கான முதல் முயற்சியை மேற்கொண்டனர், ஆனால் அதைக் கலைத்துவிட்டு பின்னர் கிராஷ் லேண்டிங்கிற்கு முயன்றனர். இருப்பினும், ஓடுபாதையின் முடிவை அடையும் முன், விமானத்தின் வேகத்தை அவர்களால் போதுமான அளவு குறைக்க முடியவில்லை. தென் கொரிய போக்குவரத்து அமைச்சகத்தின் கூற்றுப்படி, விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு விமானத்தின் விமானிகளை பறவை தாக்கும் என்று கோபுரம் எச்சரித்தது. "ஒரு நிமிடம் கழித்து விமானி அவசர அழைப்பு விடுத்தார், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு விமானம் விபத்துக்குள்ளானது," என்று கொரியா டைம்ஸ் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியது. இரண்டு பணியாளர்கள் உயிர் தப்பினர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள், விபத்து நடந்த இடத்தில் பெரிய, இருண்ட புகை மூட்டங்களைக் காட்டியது. பின்னர் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அழிக்கப்பட்ட விமானத்திலிருந்து எரியும் சிதைவுகள் மற்றும் எரிந்த குப்பைகள் மற்றும் தீயணைப்புத் துறையின் தீயணைப்பு இயந்திரங்களைக் காட்டியது. விபத்து நடந்த இடத்தில் டஜன் கணக்கான மீட்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர், தீயை அணைத்து, உயிர் பிழைத்த பயணிகளை மீட்டனர். அதே நேரத்தில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியது. https://www.faz.net/aktuell/gesellschaft/ungluecke/suedkorea-fast-180-tote-bei-flugzeugabsturz-in-muan-110200177.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.