Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகள் நெறிமுறைப் படுத்தப் பட்டு, அரசாங்கத்தின் ஊடாக நடைபெற வேண்டும் என்று ஒரு செய்தி சிலகாலத்திற்கு முன்பு வந்திருந்தது. அப்படி இருக்க… புலம் பெயர்ந்தவர்கள் தொடர்ந்து அர்ச்சுனாவிற்கு பணம் அனுப்ப அரசு சம்மதிக்குமா? அர்ச்சுனா… ஆழம் தெரியாமல் காலை விட்டு, மீண்டு “நோஸ் கட்” வாங்கப் போகிறார் போலுள்ளது.
  2. இந்த ரோஹிங்யா முஸ்லீம் அகதிகளை பொறுப்பேற்க, ஏன்... இலங்கை முஸ்லீம்கள் முன்வரவில்லை. இவர்களை தமிழ்ப் பகுதிகளில் குடியேற்றி... எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை உருவாக்க அரசு திட்டமிடுகின்றதா. ஏற்கெனவே... போரால் பாதிக்கப் பட்டு இடம் பெயர்ந்த தமிழ் மக்களே பல வருடங்களாக சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல்... தத்தளிக்கின்றார்கள் தமிழர்களுக்குள் முஸ்லீம்களை ஏன்... கலக்க வேண்டும். ஏற்கெனவே கிழக்கில் முஸ்லீம்கள் செய்யும் சண்டித்தனம் போதாதா?
  3. கபிதனுடைய அவதாரும், கந்தையா அண்ணையின் அவதாரும் பச்சை நிறத்தில் K என்று இருந்ததால் ஆள் மாறாட்டம் ஏற்பட்டு விட்டது. 😂 கந்தையா அண்ணை... அதற்குள் நைசாக புகுந்ததை, கவனிக்காமல் விட்டு விட்டேன். 😂 கபிதன் திருந்தி விட்டார் என்று நான் சந்தோசப் பட்டு 15 நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள் ரசோதரனும், அல்வாயனும், நுணாவிலானும் தட்டி எழுப்பி விட்டார்கள். 😃 சரி... அது, ஒரு கனவாகவே போகட்டும். 🤣 நுணா.... நான், நேற்று சுவிஸில் இருந்து ஜேர்மனி திரும்பி விட்டேன். 😃
  4. கபிதன்... உண்மையில், இப்படி ஒரு சிறந்த பதிவு உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.அருமை. 👍 இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு... பல இடங்களில், பலரிடம் பேச்சு வாங்குவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. 😂
  5. அப்பிடி எல்லாம் சொல்லாதீர்கள் ஈழப்பிரியன். 68 எல்லாம் ஒரு வயதா? இன்னும் நிறைய பார்க்க இருக்கு. மனதை உற்சாகமாக வைத்திருங்கள். ❤️
  6. சிரிப்புக் குறி போட்டு எழுதுற கருத்துக்கும்... சீரியசாக பதில் எழுதுற ஆள் நீங்கள் ஒருவர்தான் கபிதன். 😂 வருசம் முடியுற நேரம்... கூல் டவுன் புரோ... 🤣
  7. இதே Formula, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் வக்கீலும் ஆகிய ஆபிரகாம் சுமந்திரனுக்கும் பொருந்தி வர வேண்டும் என்பதே எனது நத்தார் கால பிரார்த்தனை. 😂
  8. ROSÉ & Bruno Mars - APT. (Lyrics) | SONG OF THE YEAR! 채영이가 좋아하는 랜덤 게임, 랜덤 게임 Game start 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh Kissy face, kissy face sent to your phone, but I'm trying to kiss your lips for real (uh-huh, uh-huh) Red hearts, red hearts, that's what I'm on, yeah Come give me somethin' I can feel, oh-oh-oh Don't you want me like I want you, baby? Don't you need me like I need you now? Sleep tomorrow, but tonight go crazy All you gotta do is just meet me at the 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh It's whatever, it's whatever, it's whatever you like (whoo) Turn this 아파트 into a club (uh-huh, uh-huh) I'm talking drink, dance, smoke, freak, party all night (come on) 건배, 건배, girl, what's up? Oh-oh-oh Don't you want me like I want you, baby? Don't you need me like I need you now? Sleep tomorrow, but tonight go crazy All you gotta do is just meet me at the 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh Hey, so now you know the game Are you ready? 'Cause I'm comin' to get you, get you, get you Hold on, hold on, I'm on my way Yeah, yeah, yeah, yeah, yeah, I'm on my way Hold on, hold on, I'm on my way Yeah, yeah, yeah, yeah, yeah, I'm on my way Don't you want me like I want you, baby? Don't you need me like I need you now? Sleep tomorrow, but tonight go crazy All you gotta do is just meet me at the 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh (just meet me at the) 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh (just meet me at the) 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh (just meet me at the) 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh
  9. முல்லைத்தீவிற்கு இடம் மாற்றப்பட்ட ரோஹிங்யா அகதிகள்! திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் – ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர். பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் குறித்த அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று (23) காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்கள் மிரிஹானை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டிருந்த நிலையில் கேப்பாப்பிலவு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (19) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 115 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு கடந்த வெள்ளிக்கிழமை (20) திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், அன்றைய தினம் மாலை குறித்த பயணிகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது 12 மாலுமிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன் ஏனைய 103 பயணிகளும் திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்காக கடந்த சனிக்கிழமை (21) மியன்மார் அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். எனினும், குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுமதி வழங்காததன் காரணமாக அவர்கள் மீள திருகோணமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413681
  10. இனியும்... வெள்ளைக்காரன் உசார் ஆகவில்லை என்றால், அவர்களின் மண்டைக்குள், களிமண் மட்டுமே இருக்குது என்று அர்த்தம்.
  11. சத்தியமூர்த்தி ஐயாவிற்கும்... அர்ச்சுனாவின் பழக்கம் தொற்றி விட்டது.
  12. பங்களாதேஷிக்கு செல்லும் மின்சாரத்தை இலங்கைக்கு விற்பனை செய்யும் வழிகளை ஆராயும் அதானி நிறுவனம்! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் அமைந்துள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பங்களாதேஷுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தை இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கனா வழிகளை அதானி பவர் (Adani Power) நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. 2X800 மெகாவாட் திறன் கொண்ட ஜார்கண்ட் ஆலை, பங்களாதேஷுக்கு மின்சாரம் வழங்க அதானி பவரின் அர்ப்பணிப்பு திட்டமாகும். பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக சில சிக்கல்களுக்கு மத்தியில் ஆலையில் இருந்து பங்களாதேஷிற்கு மின்சாரம் வழங்கும் அளவை நிறுவனம் குறைத்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தக்கவைக்க, உள்நாட்டுச் சந்தையில் மின்சார விற்பனையை இந்திய அரசாங்கம் அண்மையில் அனுமதித்திருந்தாலும், இந்த விடயத்தில் ஒரு புதிய பரிமாற்ற வலையமைப்பு அவசியம் என்று தி இந்து பிசினஸ் லைன் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய விதிமுறைகளைப் பொருத்தவரை இலங்கைக்கு மின்சாரத்தை விற்பது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றாலும், அதற்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேஷ் அரசாங்கம் ஆலையில் இருந்து வாங்கிய மின்சாரத்திற்காக அதானி குழுமத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிவிட்டது. இன்னும் பல நூறு மில்லியன் டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது. எனினும், அந்த சரியான தொகை தொடர்பில் இரு தரப்புக்கும் இடையே சர்ச்சை நிலையுள்ளது. இதற்கிடையில், பங்களாதேஷில் அதானி திட்டம் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. இப்போது, அதானி திட்டத்தை உள்ளடக்கிய ஏழு திட்டங்களின் விரிவான விசாரணைக்கு அங்குள்ள மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1413655
  13. ஷரியா நீதிமன்றங்களின் மேற்கு தலைநகராக மாறும் ஐக்கிய இராஜ்ஜியம்! ஷரியா நீதிமன்றங்களின் மேற்கத்திய தலைநகராக தற்சமயம் ஐக்கிய இராஜ்ஜியம் மாறியுள்ளது. திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான குடும்ப விடயங்களில் தீர்ப்பளிக்கும் 85 ஷரியா நீதிமன்றங்கள் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இப்போது உள்ளன. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து முஸ்லிம்கள் இந்த இஸ்லாமிய சபைகளுக்கு மேல்முறையீடு செய்ய வருவதால், ஷரியா நீதிமன்றங்களின் “மேற்கு தலைநகராக” ஐக்கிய இராஜ்ஜியம் உருவாகி வருவதாக தெரிவிக்கின்றன. கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் இஸ்லாமிய ஷரியா நீதிமன்றம், 1982 இல் உருவாக்கப்பட்டது மற்றும் கிழக்கு லண்டனில் உள்ள லெய்டனை தளமாகக் கொண்டது. மேலும் இது நிக்காஹ் (திருமணம்) சேவைகள், தலாக் (கணவரால் தொடங்கப்பட்டது) மற்றும் குலா (மனைவியால் தொடங்கப்பட்டது) விவாகரத்து நடைமுறைகளை வழங்கும் ஒரு பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வாழும் முஸ்லிம்களால் இஸ்லாமிய சட்டங்களை உருவாக்கக்கூடிய ஒரு பயன்பாடும் உள்ளது. பயன்பாட்டில், ஒரு கீழ்தோன்றும் விதியில் ஆண்கள் தங்களுக்கு எத்தனை மனைவிகள் உள்ளனர் என்பதைத் தேர்வு செய்யலாம். இது ஒன்று முதல் நான்கு வரை இருக்கும். இதை ஷரியா நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது என்று டைம்ஸ், பிரிட்டன் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்த ஷரியா நீதிமன்றங்கள் இஸ்லாமிய அறிஞர்களின் குழுவைக் கொண்டிருக்கின்றன அவர்கள் பெரும்பாலும் ஆண்களே. அவை முறைசாரா அமைப்புகளாக செயல்படுகின்றன மற்றும் விவாகரத்து மற்றும் திருமணம் தொடர்பான பிற விடயங்களில் மதத் தீர்ப்புகளை வழங்குகின்றன. தரவுகளின்படி, ஐக்கிய இராஜ்ஜியத்தில் சுமார் 100,000 இஸ்லாமிய திருமணங்கள் நடந்துள்ளன, இவற்றில் பல சிவில் அதிகாரிகளிடம் பதிவு செய்யப்படவில்லை. இந்த திருமணங்களுக்கு பெரும்பாலும் கலைக்க மதத் தீர்ப்புகள் தேவைப்படுகின்றன, குறிப்பாக விவாகரத்துக்காக ஷரியா நீதிமன்றிடம் ஒப்புதல் பெற வேண்டிய பெண்களைப் பாதிக்கிறது. பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் பாரம்பரிய ஷரியாவின் பல அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன, ஆனால் திருமணம் மற்றும் விவாகரத்து விடயங்களில் பாரம்பரிய தீர்ப்புகள் அடிக்கடி கடைபிடிக்கப்படுகின்றன. கணவன் விவாகரத்து வழங்க விரும்பவில்லை என்றால், மனைவியின் வேண்டுகோளின் பேரில் திருமணங்களை முடிக்க நீதிமன்றங்களுக்கு மத அதிகாரம் உள்ளது, இருப்பினும் இந்த செயல்முறை சிவில் நடவடிக்கைகளிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது. இஸ்லாமிய விவாகரத்து கோரும் ஆண்கள் மூன்று முறை “விவாகரத்து” என்று கூறி தங்கள் திருமணத்தை முடித்துக் கொள்ளலாம், இது பாலின அடிப்படையிலான மத நடைமுறைகளில் முற்றிலும் மாறுபட்டது. எவ்வாறெனினும் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள இந்த சட்ட அமைப்புகள் குறித்து தேசிய மதச்சார்பற்ற சங்கம் குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளது. சங்கத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் எவன்ஸ், இந்த நீதிமன்றம் “அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை எதிர்மறையாக பாதிக்கிறது என்று விமர்சித்தார். https://athavannews.com/2024/1413567
  14. அதிலும்... முதல் பிரயாணத்தை, @ஈழப்பிரியன் தானே தொடக்கி வைக்கின்றார். பிரயாணம் முடிந்து வந்த பின்... ஆண்மையில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டிருக்கோ... என்று, கேட்டு அறியலாம்தானே.
  15. நைஜீரியால் கூட்ட நெரிசலில் சிக்கி 67 பேர் உயிரிழப்பு! நைஜீரியால் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்பட்ட உணவுகளை பெறுவதற்காக சென்ற 67 பேர் கூட்ட நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் கடந்த வாரம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த உணப்பொருட்களை பெற ஏராளமான மக்கள் அப் பகுதிகளுக்கு படையெடுத்ததால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் அதில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஓயோ மாநிலத்தில் கடந்த புதன் கிழமை ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 35 குழந்தைகள் வரை உயிரிழந்துள்ளனர் எனவும், தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், அந்நாட்டின் தலைநகர் அபுஜாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாட்டு ஜனாதிபதி அனைத்து கொண்டாட்டங்களையும் இரத்து செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு நாட்டில் நிலவும் அதிகப்படியான வறுமை, விலை அதிகரிப்பு மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே காரணம் எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413670
  16. இதனைத்தானே... "வைத்தியர் அர்ச்சுனா"வும் தட்டிக் கேட்க வெளிக்கிட, அவரை... "பைத்தியர் அர்ச்சுனா" என்று சில மக்கள் சொல்கிறார்கள். 😎 🤣
  17. பழைய கட்டிடங்களைப் புனரமைக்க யாழ் . மாநகர சபை தீர்மானம்! யாழ் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்பட்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” யாழ்ப்பாணம் கடந்த காலங்களில் மிகவும் தூய்மையான நகரமாக இருந்தது. எனினும் தற்போது மிகவும் மோசமாக காட்சியளிக்கின்றது. எனவே யாழ்ப்பாணத்தைத் தூய்மையான அழகான நகரமாக மாற்றியமைக்கும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இந்த மீன் சந்தை மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டியதாகக் கூறினார்கள். இதை எப்படி நாங்கள் பயன்படுத்தப்போகின்றோம் என்பதில்தான் எமது வெற்றி தங்கியிருக்கின்றது. இது உங்களுக்குரிய கட்டிடம். இதை தூய்மையாக வைத்துப் பராமரிப்பது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு. நீங்கள் அவ்வாறு பராமரிப்பீர்களாக இருந்தால் அதிகளவு நுகர்வோர்கள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது” இவ்வாறு ஆளுநர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413554
  18. சுப்பர் லூப் தொழில் நுட்பத்தில் சாத்தியம் என்று @goshan_che சொல்கிறார் புலவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.