Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் - கார்ல்சன் மோதி கையிலிருந்து போன பட்டம்.. இன்று குகேஷ் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருது.. இரண்டரை மில்லியன் டாலர் பரிசுத்தொகையோடு.. கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் இருபது கோடி ரூபாய் இருக்கலாம்.. பணம் இரண்டாம்பட்சம்.. ஒரு தமிழராக நாமும்.. இந்தியராக மொத்த நாடும் கொண்டாடித்தீர்க்க வேண்டிய விஷயம்... அறிவு மற்றும் கணித்தலின் பெரும் அளவுகோலாக கருதப்படும் சதுரங்க விளையாட்டில் வெற்றிகளை குவிப்பதின் மூலம் ஆனந்த், மற்றும் குகேஷ் போன்ற வீரர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் பிறர் தலைநிமிர்ந்து பார்க்க வைக்கின்றனர்.. இச் சாதனையை பெற்ற உலகின் 18 வயதே நிரம்பிய இளம் வீரர் என்கிற சாதனையையும் நிகழ்த்திய தம்பிக்கு இதயம் கனிந்த பாராட்டு. Suyambu Lingam
  2. பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர்! 10 ஆவது நாடாளுமன்றின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல சபையில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412204
  3. நேர்மையான அமைச்சர். மற்றவர்கள் கண்டுபிடித்து பிரச்சினை கிளப்ப முதல் தானாகவே அறிவித்து மாற்றி விட்டார்.
  4. சிலர் வியாபாரத்துக்காக... கலப்படம் செய்து விற்பதால், வாழ்வாதரத்திற்காக கஸ்ரப்பட்டு சுத்தமான தேனை சேகரித்து விற்பவர்களிடமும் நம்பி வாங்க பயமாக உள்ளது.
  5. நன்றி உடையார், அடுத்த முறை எவ்வளவு செலவு என்றாலும் பரவாயில்லை "சான்ட்விச்" மசாஜ் தான், செய்யிறது. 😂 🤣
  6. நிலாமதி அக்கா.... இப்போ குளிர்காலம். நமது கழுத்துப் பகுதி மிகவும் உணர்வுபூர்வமான பகுதி. அதனை குளிர் பிடிக்காமல் பாதுகாத்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இல்லை என்பது எனது சொந்த அனுபவம். கழுத்தை சுற்றி எப்பவும் Muffler scarf போன்றவற்றால் வெப்பமாக வைத்திருப்பது அவசியம். முக்கியமாக வெளியே செல்லும் போது குளிர் காற்று அடிக்காமல் இருக்க இதனை பின்பற்ற வேண்டும். அதிலும்... சிலருக்கு Muffler அவ்வளவாக பிடிக்காது. அதற்குப் பதிலாக Fleece துணிகளில் கழுத்துக்கு மட்டும் பாவிக்கக் கூடியமாதிரி சிறிய அளவில் உடலுக்கு உறுத்தாத துணிகளில், வாங்கக் கூடியமாதிரி பலவடிவங்களில் கடைகளில் உள்ளது. அதனை வாங்கி அணியுங்கள். கழுத்துப் பிடிப்பு எட்டியும் பார்க்காது. பல வருடங்களாக இந்த Fleece துணிகளையே வீட்டில் எல்லோரும் பாவிப்பார்கள். உடலில் அணிந்திருக்கும் உணர்வே தோன்றாது. குளிருக்கும் பாதுகாப்பானது. அதில் Fleece சட்டைகளும் உண்டு. முன் எச்சரிக்கையாக அதனையும் பாவிப்போம். உடலை எப்போதும் வெப்ப நிலையில் வைத்திருக்க Fleece துணிகளைப் போல் சிறப்பான உடைகள் வேறு எதுவும் இல்லை என்பது எனது அனுபவம்.
  7. தேங்காய் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியானது! நாட்டின் அண்மைக்காலமாக நிலவிவரும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு வருடத்தின் முதல் சில மாதங்களில் நிலவிய கடுமையான வெப்பமான வானிலையே பிரதான காரணம் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் வருடாந்தம் பயிரிடப்படும் தென்னை மரக்கன்றுகளின் எண்ணிக்கை சுமார் 70 இலட்சம் வரை குறைந்துள்ளமையும் இதற்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ‘குறுகிய காலத்திற்குள் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படுவதென்றால் குரங்களுகளின் எண்ணிக்கையில் உடனடி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படியொரு உடனடி அதிகரிப்பு இல்லை என்பது தெளிவாகிறது. மேலும் மார்ச் முதல் ஜூன் வரை, நாட்டில் அதிக வெப்பநிலை உயர்வு மற்றும் தேங்காய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தென்னை மரத்திற்கு உகந்த வெப்பநிலை 27-28 சென்டிகிரேட் வெப்பநிலையாகும். ஆனால் 33 சென்டிகிரேடுக்கு மேல் செல்லும் போது, தென்னை மரங்களின் மகரந்தச் சேர்க்கை குறைந்து, காய்க்கும் தன்மை குறைகிறது” இவ்வாறு பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார் இதேவேளை உலகிலேயே அதிக தேங்காய் பாவனையைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்வதாகவும், ஒருவர் வருடத்திற்கு 114 தேங்காய்களை உட்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412082
  8. இலங்கையர்களுக்கு ஜெமினிட் விண்கல் மழையை காணும் வாய்ப்பு! வருடத்தின் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை இலங்கையினர் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் மிக அற்புதமான ஜெமினிட் விண்கல் மழையை இன்றும் நாளையும் இரவு நேரத்தில் வானில் காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை இரவு விண்கற்களின் அற்புதமான மற்றும் உச்சகட்ட பொழிவினை இலங்கையர்கள் பார்வையிடலாம். இரவு 9 மணிக்குப் பின்னர் வடகிழக்கு வானில் இந்த விண்கற்கள் பொழிவு தென்படும் என ஆர்தர் சி கிளார்க் மையத்தின் வானியல் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானி இந்திக மெதகங்கொட தெரிவித்தார். ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு இந்த ஆண்டின் மிகவும் சிறந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் ஜெமினிட்ஸ் என சொல்லப்படும் இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் சமயத்தில் ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்களை நாம் காண முடியும். விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாவதால் ஏற்படும் நெருப்புச் சிதறல் நட்சத்திரம் புஸ்வாணம் போல சீறிப் பாய்வதாக காட்சியளிக்கும். மேகமூட்டமில்லாமல் வானம் தெளிவாக இருக்கும் இடங்களில் தொலைநோக்கிகள் இல்லாமல் வெறும் கண்ணுக்கே இந்த எரிகல் மழை தென்படும். https://athavannews.com/2024/1412100
  9. எலிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை! எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்தில் உள்ள விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு அந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது“ யாழ் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ் போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது மேற்படி காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக்காய்ச்சல் தற்போது பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளது. அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது ” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1412111
  10. டைம் இதழின் ஆண்டின் சிறந்த நபராக பெயரிடப்பட்ட ட்ரம்ப்! அமெரிக்காவின் பிரபல டைம் இதழானது, ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) 2024 ஆம் ஆண்டின் சிறந்த நபராக பெயரிட்டுள்ளது. இதற்கு முன்பு ட்ரம்ப், 2016 இல் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்த கௌரவத்தை பெற்றார். 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்பின் வரலாற்று வெற்றி, அடுத்த பதவிக் காலத்தின் போதான மறுசீரமைப்புக் கொள்கைகள் என்பன இந்த ஆண்டின் சிறந்த நபராக ட்ரம்ப்பை தேர்வு செய்வ வழி வகுத்ததாக டைம் இதழின் பிரதம ஆசிரியர் சாம் ஜேக்கப்ஸ் (sam jacobs) குறிப்பிட்டுள்ளார். டைம் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில், குடியரசுக் கட்சித் தலைவர் தனது இரண்டாவது பதவிக் காலத்திற்கான சில திட்டங்களை மீண்டும் வலியுறுத்தினார். நேர்காணலின் போது ட்ரம்ப், தனது தேர்தல் வெற்றி, பொருளாதாரம் மற்றும் உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சூழ்நிலைகள் குறித்து விவாதித்தார். மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது, ஜனவரி 6 கேபிடல் கலவர பிரதிவாதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது உள்ளிட்ட தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கூறினார். இந்த ஆண்டின் சிறந்த நபர் விருதுக்கு, துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், வேல்ஸ் இளவரசி மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் உட்பட பத்து பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412088
  11. சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
  12. டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
  13. நல்ல முயற்சி. அனைத்தும் சிறப்பாக நடக்க வேண்டும்.
  14. நேரம் கிடைத்தால்…. இஸ்லாமியர்களின் தலைமயிர் வெட்டும் காணொளிகளை பாருங்கள். படு பயங்கரமாக தலையில் அடிப்பார்கள், திடீரென்று கழுத்தை எதிர்பாராத கோணத்தில் திருப்புவார்கள், நெருப்பு கொழுத்துவது என்று ஒரே… பயங்கரமாக இருக்கும். “யூ ரியூப்பில்” பார்வையாளர்களை கவர்வதற்காக செய்கிறார்கள் போலுள்ளது. ஆனாலும்…. தலையை கொடுத்தவன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
  15. உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள், “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
  16. 1) ஆண் செய்யும் மசாஜ். 2) பெண் செய்யும் மசாஜ். மேலே உள்ள இரண்டும்தானே குமாரசாமி அண்ணே. 🧐 அல்லது வேறு ஏதாவது இருக்காண்ணே…. 😂
  17. “தாய்லாந்து மசாஜ்”….. ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂 தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣 ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது. இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃
  18. அமைச்சர் நேருவின் மகனை... "சின்னவர்" என பேனர் வைத்ததால், உதயநிதி ரசிகர்கள், அந்த பேனரை கிழித்தனர்.
  19. அல்லாரும்... ஒண்ணுக்க ஒண்ணா இருந்தா... ஒலகத்தில சண்டை ஏது, சச்சரவு ஏது. 😂 🤣
  20. சாதனை படைத்துள்ள அம்பேவெல பால் பண்ணை. அம்பேவெல பண்ணை நாளொன்றுக்கு 62,000 லிட்டர் பாலை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. அதன்படி, இது நாளொன்றுக்கு 3,000 லிட்டரில் இருந்து 60,000 லிட்டராக பாரிய அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. 2001ல் பொதுப்பணித்துறை கையகப்படுத்தியபோது, தினசரி உற்பத்தி 3000 லிட்டர் பால் குறைவாக இருந்தது. தற்போது இந்த பண்ணையானது இலங்கையின் தேசிய விநியோகத்திற்கு வருடாந்தம் 20 மில்லியன் லீற்றர் பாலை வழங்குகிறது. 2019 இல் 5 பில்லியன் ரூபாய் முதலீடு மற்றும் நவீனமயமாக்கல் மூலம், உற்பத்தி திறன் இரண்டு ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மேலும், மேம்பட்ட இனப்பெருக்கத் திட்டங்கள் உள்நாட்டில் அதிக மகசூல் தரும் மாடுகளை உற்பத்தி செய்வதை சாத்தியமாக்கியுள்ளன. உலகெங்கிலும் உள்ள சிறந்த வணிக மந்தைகளுடன் ஒப்பிடக்கூடிய நாட்டின் மரபணு ரீதியாக உயர்ந்த பசுக்கள், 305 நாட்களில் 12,000 லிட்டர் பால் உற்பத்தி செய்கின்றன. மேலும், கடுமையான சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகள், பசுக்கள் ஆரோக்கியமாகவும் நோயற்றதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. சர்வதேச ஊட்டச்சத்து நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், மாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட துல்லியமான உணவு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக, பண்ணை மேய்ச்சல் நிலங்களில் வளர்க்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட புற்கள் உணவளிக்கப்படுகிறது. இதன் விளைவாக, அம்பேவெல பண்ணையில் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு பசுவிடம் இருந்து 40 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. https://athavannews.com/2024/1411893

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.