Everything posted by தமிழ் சிறி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரனுக்கு… 2015’ம் ஆண்டிலிருந்து, 2024’ம் ஆண்டுவரை, ஓவ்வொரு தேர்தலிலும் 50 % மான வாக்குகள் குறைந்தே வந்துள்ளது. 😁 வருகின்ற தேர்தலில்… சுமந்திரன் போட்டியிடும் ஐடியா இருந்தால், இப்பவே மூட்டை கட்டி வைப்பது நல்லது. 😂 இல்லாட்டி…. 7,500 வாக்கு எடுத்து, கட்டுக் காசும் இழக்க வேண்டி வரும். 🤣 அதை விட சிங்கள பியதாச, யாழ்பாணத்தில் கூட வாக்கு எடுத்து விடுவார். 😁 😂 🤣
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இந்த முபறாக் முத்தி…. தமிழரை சாட்டி, பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறார். 😂 இவ்வளவு காலமும்… மகிந்த, மைத்திரி, கோத்தா, ரணில் என்று ஜானாதிபதி பதவியில் இருப்பவர்களுக்கு குழை அடித்து காரியம் பார்த்துக் கொண்டு இருந்த ஆள்… எந்த வெட்கமும் இல்லாமல், ****… அனுர புகழ் பாட வந்து விட்டார். 🤣
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
கபிதனுக்கு…. சுமந்திரன் தோற்ற கவலையும், ஶ்ரீதரன் மேல் உள்ள கடுப்பும்… சம்பந்தம் இல்லாதவற்றை எழுத வைக்குது. 😂 இங்கு ஒரு பாலமோ, அணையோ கட்டினால்… அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எத்தனை வருடங்கள் கடந்தாலும் அந்தப் பாலத்தைக் கட்டிய நிறுவனங்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அந்த விதத்தில்…. இதனை கட்ட ஒப்பந்தம் கொடுத்த அமைச்சகமும், பாலத்தை கட்டிய நிறுவனமுமே பதில் சொல்ல வேண்டியவர்கள். அதை விடுத்து…. ஶ்ரீதரன் உள்ளூர் மேசன்மாரை வைத்து சீமெந்து குழைத்து அணையை கட்டினமாதிரி கபிதனின் கதை போகுது. 😂 ஶ்ரீதரனுக்கு சேறு அடிக்கிற வேலையை விட்டுட்டு, அங்காலை சுமந்திரன் சோகத்தில் அழுது கொண்டு இருக்கின்றார் போய் ஒத்தடம் குடுத்து விடுங்கோ. 🤣
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
@வீரப் பையன்26 உங்களாலை, புத்தன் அரசியலை விட்டே ஒதுங்கப் போகின்றாராம். அவரை…. ஒதுங்க வேண்டாம் என்று சொல்லி விடுங்கோ. 😂 🤣
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அனுர அரசு… முஸ்லீம்களை அமைச்சரவையில் சேர்க்காமல் விடும் போதே, முஸ்லீம்களிடம் இருந்து பாரிய எதிர்ப்பு வரும் என்று அறிந்தே இருப்பார்கள். இது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு அல்ல. நன்கு தெரிந்தே செய்யப் பட்டது. இவ்வளவிற்கும் பெரும்பாலான முஸ்லீம்கள் தமக்கும் ஒரு மாற்றம் வேண்டி, அனுர கட்சிக்கு பிரச்சாரம் செய்து இருக்கும் போது… முஸ்லீம்கள் இல்லாத அமைச்சரவையை நியமித்து, அவர்களுக்கு ஏதோ ஒரு செய்தியை மறைமுகமாக சொல்கிறார்கள் என்றே எனக்குத் தெரிகின்றது. அது என்னவாக இருக்கும்… ? எனது சந்தேகம், சில வேளை…. 1) இவர்கள் தமது மதத்தையும், அரசியலையும் ஒன்றாக கலப்பது. 2) சொந்த நாட்டுக்கு விசுவாசம் இல்லாமல், முஸ்லீம் நாடுகளுடன் கள்ளத் தொடர்பில் இருப்பது. 3) பௌத்தத்தை விட தமது மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது. 4) எவருடன் ஒன்றாகச் சேர்ந்து இயங்கினாலும்… நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லாமல், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வது. 5) பௌத்த ஶ்ரீலங்காவிற்கு ஒவ்வாத இவர்களின் கலாச்சார உடைகளான தொப்பி, பர்தா போன்றவைகளாக இருக்குமோ என நினைக்கின்றேன். இதனை விட... வேறு காரணங்கள் இருந்தால், அறியத் தாருங்கள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
(Tamil voter) Sri Lanka is A multicultural country? with just over 25% of the population are ethnic minorities however What AKD's cabinet evidently reflects is that minorities are RULED by majority. It further divides the country that is already polarised ethnically. Cabinet appointments explicitly shows that not everyone is equal in our country, one of the promises AKD was pontificating against before the election . Even the far right parities had few ministers from the minorities in the past just to show all Sri Lankans are inclusive in governing but NPP demonstrably exceeds those parties in terms of divide and rule. Tamils definitely feel let down by the appointments and those Tamils VOTED FOR AKD should now feel ashamed. 39 17 இலங்கை ஒரு பன்முக கலாச்சார நாடு? மக்கள்தொகையில் வெறும் 25% க்கும் அதிகமான சிறுபான்மையினர் இன சிறுபான்மையினராக உள்ளனர், இருப்பினும் AKD இன் அமைச்சரவை தெளிவாக பிரதிபலிக்கிறது, சிறுபான்மையினர் பெரும்பான்மையினரால் ஆளப்படுகின்றனர். ஏற்கனவே இன ரீதியாக துருவப்படுத்தப்பட்ட நாட்டை மேலும் பிளவுபடுத்துகிறது. நமது நாட்டில் அனைவரும் சமமானவர்கள் அல்ல என்பதை அமைச்சரவை நியமனங்கள் வெளிப்படையாகக் காட்டுகின்றன, தேர்தலுக்கு முன்பு ஏகேடி அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. அனைத்து இலங்கையர்களும் ஆட்சி செய்வதில் உள்ளடங்கியவர்கள் என்பதைக் காட்டுவதற்காகவே கடந்த காலங்களில் சிறுபான்மையினரைச் சேர்ந்த சில அமைச்சர்களை தீவிர வலதுசாரிகள் கூட பெற்றிருந்தனர், ஆனால் பிளவுபடுத்துதல் மற்றும் ஆட்சி செய்வதில் NPP அந்த கட்சிகளை விட அதிகமாக உள்ளது. இந்த நியமனங்களால் தமிழர்கள் நிச்சயமாக ஏமாற்றமடைகின்றனர், AKDக்கு வாக்களித்த தமிழர்கள் இப்போது வெட்கப்பட வேண்டும். 39 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. ☹️
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
@goshan_che (Nada) Cabinet is not diverse. It should represent the minorities too. Hope this will be looked at. 48 53 சிறுபான்மையினரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று சொல்லியற்கு 48 பேர் விரும்பவில்லை. ################# ############## ########### (Francis.) First day in office laid the foundation for communal displeasure regardless of any reasons. 88 26 பதவிக்கு வந்த முதல் நாள், எந்தக் காரணமும் இல்லாமல் வகுப்புவாத அதிருப்திக்கு அடித்தளமிட்டது. 88 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. 26 பேர் மட்டுமே ஆமோதித்து இருக்கின்றார்கள். ############### ############# ############ Many muslims voted but no even a single minister Are promises made correctly? 9 17 பல முஸ்லிம்கள் வாக்களித்தனர் ஆனால் ஒரு அமைச்சர் கூட இல்லை திங்கள், வாக்குறுதிகள் சரியாக கொடுக்கப்பட்டதா? 9 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
முஸ்லீம்கள் ஊமைக் குத்து விழுந்ததை, வெளியே சொல்ல முடியாமல்.. மனதுக்குள் வெதும்பிக் கொண்டு இருக்கின்றார்கள் என நினைத்தேன். 😂 இணைப்பிற்கு நன்றி கோசான். 👍
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
என்னுடைய சந்தேகம்... பக்கத்து சகுனி நாடு. போனவருடம் மாவீரர் நாட்களை முன்... துவாரகா உயிருடன் உள்ளார்கள் என்றவர்கள், இப்போ... இப்படி ஒன்றை வெளியிட்டு... தமிழ் / சிங்கள மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் போலுள்ளது.
-
சிரிக்கலாம் வாங்க
- குத்துச்சண்டை: மைக் டைசனை சாய்த்த முன்னாள் யூடியூபர் - நடந்தது என்ன? ரசிகர்கள் சந்தேகம் ஏன்?
குத்துச் சண்டை போட்டியின் முடிவில் டைசன் இவ்வாறாக சொன்னார், நேற்றைய இரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், கடைசியாக ஒரு முறை இந்த வளையத்துக்கு வந்ததற்காக எனக்கு எந்த வருத்தமுமில்லை. நான் கிட்ட தட்ட ஜீன் மாதமே இறந்து விட்டேன். அந்த மாதத்தில் மட்டும் எனக்கு எட்டு முறை ரத்தம் ஏற்றப்பட்டது, 25 பவுண்ட்கள் எடையும் குறைந்தேன், அதனால் தான் நான் ரிங்கில் போராட வேண்டியிருந்தது. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த டல்லாஸ் ஸ்டேடியத்தில் எனது வயதில் பாதி வயதுடையை ஒரு திறமையான போராளியுடன் நான் போராடினேன். இந்த வயதிலும் எட்டு ரவுண்ட்கள் தாக்கு பிடித்து நின்றதை என் பிள்ளைகள் பார்த்தால் போதும், வேறு எவருக்கும் இதை விமர்சிக்க உரிமை இல்லை..!!💜 M Jency Stefana- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பொய்ச் செய்தி.- பெண்ணாக மாறிய, பிரபல கிரிக்கெட் வீரரின் மகன்.
பெண்ணாக மாறிய, பிரபல கிரிக்கெட் வீரரின் மகன். இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், தான் ஹார்மோன் மாற்றுச்சிகிச்சை எடுத்துக்கொண்டு பெண்ணாக மாறியதை அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமாக இருந்தவர் சஞ்சய் பாங்கர். இவருடைய மகன், ஆர்யன். இவர், தற்போது பெண்ணாக மாறியுள்ளார். தவிர, தனது பெயரையும் அனயா என மாற்றிக்கொண்டு உள்ளார். இதுகுறித்து அவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்மூலமே இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்த அந்தப் பதிவில், "கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எனது கனவுக்காக பல தியாகங்களை, போராட்டங்களை, அர்ப்பணிப்பை நான் மேற்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் விடியற்காலை களத்துக்குச் சென்று பலரது சந்தேகங்கள் மற்றும் முன் முடிவுகளுக்கு மத்தியில் எனது வலிமையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தேன். ஆனால், இந்த ஆட்டத்தைத் தாண்டி எனக்கு இன்னொரு பயணமும் இருந்தது. என்னை நானே சுயமாக கண்டறிய வேண்டிய பாதையில் நிறைய சவால்களை சந்தித்தேன். எனது சுயத்தை அடைவதற்குச் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது. இது அத்தனை எளிதாக இல்லை. இன்று இந்த விளையாட்டில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் வந்த பாதை எளிதானது அல்ல. ஆனால், எனது சுயத்தை நான் கண்டறிந்தது தான் மிகப்பெரிய வெற்றி” என அதில் தெரிவித்துள்ளார். முன்னதாக, அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனால், அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சூழலில்தான், ஆர்யன் பெண்ணாக உணர்ந்ததை அடுத்து அவர் ஹார்மோன் மாற்றுச்சிகிச்சை மேற்கொண்டு தற்போது பெண்ணாக மாறி இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொண்டவர்களுக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி இல்லை என கூறி இருந்தது. அதனால் தற்போது அனயாவாக மாறியுள்ள ஆர்யனுக்கும் இனி கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. சக்திவேல் வடலூர் நகராட்சி நகராட்சி- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் "மொமென்ட்". 😂- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
👍 தகவலுக்கு நன்றி ஏராளன்.- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
நீங்கள் மூக்கு சாத்திரம் பார்த்து... ஊகத்தின் அடிப்படையில் எழுதும் கருத்துக்களை நான், சீரியஸாக எடுப்பதில்லை. 😂 🤣 ஒரு, ஹ... ஹா... ஹா... தான். வாய் விட்டு சிரிங்க... நோய் விட்டுப் போகும்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது முகநூலில் இருந்தது. உண்மை / பொய் உறுதிப்படுத்த முடியவில்லை.- ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் தமிழில் வெளியான அறிக்கையின் உண்மைத் தகவல்
சபாஷ்... பலே... அனுரவுக்கும், டிரம்புக்கும் சரியான போட்டி. 😂 ஹ்ம்ம்... நடக்கட்டும். 🤣- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
நெடுக்ஸ்... அன்றும், இன்றும்... அமைச்சரவை. அன்று.... அரைவாசி பாராளுமன்றமுமே அமைச்சர்கள். இன்று.. 21 பேர் மட்டுமே அமைச்சர்கள். பிற்குறிப்பு: என்னை ஜே.வி.பி. காரன் என்று முத்திரை குத்திப் போடாதீங்கப்பு. 😂- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
சசி.. இரண்டு தமிழ் அமைச்சர்கள் உள்ளார்கள். அதில் ராமலிங்கம் சந்திரசேகர் தமிழிலேயே சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். இந்தத் தேர்தலில், நாடெங்கிலும் உள்ள முஸ்லீம்களும்.... அனுர கட்சிக்காக கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப் படவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கோசான் இரண்டு தமிழர் அமைச்சர் என்று வயிறு வலிக்க சிரிக்கின்றீர்களே... எனக்குத் தெரிந்து ராமலிங்கம் சந்திரசேகர் அனுராவின் கட்சியில் 30 - 35 வருடங்களுக்கு மேல் இருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப் பட்டவர்கள் மிகக் குறுகிய காலத்தில் அனுர கட்சியில் இணைக்கப் பட்டவர்களே ஆகும். அதிலும் வைத்தியர் எஸ். சிறி பவானந்தராஜா ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்... இரண்டு மாதத்திற்குள் கட்சியில் இணைக்கப் பட்டவர். (இவருடன்... திருமலை நீதிபதி இளஞ்செழியனையும் இணைத்து வடக்கில் போட்டியிட அனுர கட்சியில் முயற்சிக்கப் பட்டது. நீதிபதி இளஞ்செழியன் ஏனோ பின்வாங்கி விட்டார்.) தேர்தலுக்காக இணைக்கப்பட்ட புதியவர்களுக்கு பாராளுமன்றத்துக்கு தெரிவானவுடனேயே அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். 🙃 நீங்கள் ஏதோ... எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது போலுள்ளது. 😂 அதைவிட... இந்தத் தேர்தலில், நாடெங்கிலும் உள்ள முஸ்லீம்களும் அனுர கட்சிக்காக கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு ஒரு அமைச்சுப் பதவியும் கொடுக்கப் படவில்லையே. அவர்கள் இதுவரை கவலையை தெரிவிக்கா விட்டாலும், உள்ளுக்கு புழுங்கிக் கொண்டு இருப்பார்கள். நீங்கள் இரண்டு கிடைத்தது என்று திருப்தி அடையுங்கள். 😃 "போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து." 💪 கிடைத்ததை வைத்து சந்தோசப் படுபவன்.. முழு மனிதன். 😂 கிடைத்ததும் காணாது என்று.. அடம் பிடிப்பவன்.. அரை மனிதன். 🤣- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
முன்னாள் டக்ளசின் மீன்பிடி அமைச்சுப் பதவி... தற்போது ராமலிங்கம் சந்திரசேகருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கேரள கஞ்சா வாற வழியை பிடிக்க போட்ட பொறி போல் உள்ளது. டக்ளசின் வியாபாரம் எல்லாம் அம்பிடப் போகுது.- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
ஜனாதிபதி அநுரவின் அமைச்சரவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள்! இலங்கையின் புதிய அமைச்சரவையில் இன்று இரண்டு தமிழ் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) மற்றும், சரோஜினி சாவித்திரி போல்ராஜ் ஆகியோரே இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகரும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜி சாவித்திரி போல்ராஜும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவான நிலையில் மொத்தமாக 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408957- யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பக்கத்தில்... மாசேதுங் சிலை வைக்க வேணும். அத்துடன்... அங்கு இனி காந்தி ஜெயந்தி, காந்தி வசந்தி... எல்லாம் இனி கொண்டாட முடியாது என்று தடை செய்ய வேண்டும். 😂- பைடனை எச்சரிக்கும் புடின்!
பைடனை எச்சரிக்கும் புடின்! ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்கா இதனை உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கையானது அமெரிக்க கொள்கையின் முக்கிய மாற்றமாக கருதப்படுகின்றது. அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கடந்த பல மாதங்களாக கோரிக்கை விடுத்திருந்தார். ஏடிஏசிஎம்எஸ் எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் ரஷ்ய எல்லைகளுக்கு அப்பால் ஏவகணை பயன்பாட்டிற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408986 - குத்துச்சண்டை: மைக் டைசனை சாய்த்த முன்னாள் யூடியூபர் - நடந்தது என்ன? ரசிகர்கள் சந்தேகம் ஏன்?
Important Information
By using this site, you agree to our Terms of Use.