Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நல்ல விடயம் சுவியர். ஒரு வயதுக்கு மேல்... கட்டாயம் நீங்கள் செய்வது போல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வைத்தியரின் நேரடி பார்வைக்கு சென்று வருவது சிறப்பு. 👍 🙂
  2. மற்றப் பக்கம்... தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஸ்ரீதரன் போன்றவர்கள் வேறு முடிவில் உள்ளார்கள் போலுள்ளது. எப்படியோ... நல்ல புடுங்குப்பாடு விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.
  3. இது இலங்கை தமிழரசு கட்சியின் செயற்குழு முடிவா... அல்லது தான் தோன்றித்தனமாக அறிக்கை விடும் சுமந்திரனின் முடிவா என்பதை அறிய ஆவலாக உள்ளது. எப்படியோ தமிழரசுக் கட்சிக்கு, கடைசி ஆணி அடித்து... புதைகுழியில் மூட ஒரு ஆள் கிடைத்துள்ளது. அது விரைவில் நடக்கும் போலுள்ளது. 😂
  4. உப்பு வயலில், காசி தீர்த்தம் கலப்பதற்கு... இராணுவம், பௌத்த மதகுருக்கள் எல்லாருக்கும் ஏன் அழைப்பு கொடுத்தவர்கள். அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்? ஊரில் உள்ள சிறு கிராமங்களில் கூட வலிய இராணுவத்தையும், பௌத்த மதகுருமாரையும் அழைத்து விட்டு... அவன் விகாரை கட்டுகிறான் என்று புலம்பி என்ன பிரயோசனம். இவர்களே... அவர்களுக்கு வழி காட்டிக் கொடுக்கின்ற செயல் மாதிரி அல்லவா உள்ளது.
  5. உங்கள் கேள்வி... பக்கத்து இலைக்கு பாயாசம் போலுள்ளது.
  6. தொழில் முறை போட்டியில்.. அந்த மருந்தகத்தை பழிவாங்குகின்றார்கள் போலுள்ளது.
  7. இலங்கை முஸ்லீம்கள் மட்டுமல்ல.... இங்குள்ள துருக்கி, பாகிஸ்தான் எல்லாரிடமும் இந்தக் குணம் உள்ளது. வேலை இடத்தில் முதலாளியை பந்தம் பிடித்துக் கொண்டு காரியம் சாதிப்பார்கள். அவர் வேறு இடத்துக்குச் சென்றவுடன் கீழ்த்தரமாக கதைப்பார்கள். இதுகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். 😂
  8. பின்னை என்ன செய்யிறது விசுகர். வசிப்பது அனைத்து வசதிகளையும் கொண்ட உயர்தர நாடு. பலரும் மதிக்கும் கௌரவமான பதவி, அதுகும் கோவிலில்... இப்படியான பெருமைகளை கொண்ட ஒருவன் செய்யும் வேலையா இது. உண்மையிலேயே ஆத்திரம் வருகின்றது. இவனால்... அந்தக் கோவிலுக்கும், கனடாவில் வசிக்கும் மக்களுக்கும்... 3000 டொலருக்காக கொள்ளையடிக்க முயன்றவன் என்ற கெட்ட பெயர். இவனை கோவில் தலைவராக தெரிவு செய்த மக்கள் முகத்தில் சேறை அள்ளி பூசிவிட்டு நிறைகிறான் இந்தப் பர * சி. எங்களது மக்கள் எவ்வளவு கேவலமான முன்னுதாரணங்களை செய்து கொண்டு இருக்கின்றார்கள் என நினைக்க வேதனையாக உள்ளது.
  9. சென்ற வருடம் கனடாவில் வசிக்கும் ஒருவர்... அங்கிருந்து 50 கிலோ போதைப் பொருளை, ஒரு மரப் பெட்டியில் அடைத்து யாழ்ப்பாணத்துக்கு விற்க அனுப்பும் போது பிடிபட்டு விட்டது. நன்றாக உழைத்து சம்பாதிக்கக் கூடிய நாட்டில் இருந்து கொண்டு... ஊருக்கு போதை பொருளை அனுப்பி, அந்தக் காசில் வாழ நினைக்கின்ற கீழ்த்தரமான் மனிதர்களை கொண்டது எமது இனம். நினைக்கவே... அருவருப்பாக உள்ளது.
  10. இந்த லூசு முபாறக் அப்துல் மஜித்... கோத்தபாயா பதவியில் இருக்கும் போது, அவரை இனி இலலை என்று புகழ்ந்து காக்கா பிடித்துக் கொண்டிருந்த ஆள். இப்ப பதவி இல்லை என்றவுடன் இகழ்ந்து பேசுது. எல்லா... முஸ்லீம்களும் ஏன் இப்படி இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்று நிலையான கொள்கை இல்லையா... இந்தப் பிழைப்புக்கு....
  11. பயங்கர மாஃபியாக்கள் போல் 3000 டொலரை கொள்ளை அடித்திருக்கிறார்கள். 1) கனடா ஐயப்பன் கோவில் தலைவரிடமிருந்து கொள்ளை அடிக்கச் சொல்லி கட்டளை பிறப்பிக்கப் படுகின்றது. 2) கிளிநொச்சியை சேர்ந்த... ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட பெண்மணி... மூன்று அடியாட்களை அமர்த்துகின்றார். 3) அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து, பிரத்தியேக படகில் அனலைதீவுக்குச் சென்று தாக்குலை மேற்கொண்டு, கொள்ளையடித்துக் கொண்டு மீள பிரத்தியேக படகில் ஏறி தப்பி சென்றுள்ளார்கள். 4) யாழ்.கொள்ளைக்காரி... ஒன்றரை வருடமாக பிடிபடாமல் பொலீசுக்கு தண்ணி காட்டியுள்ளார். கேள்வி: 1) கனடா ஐயப்பன் கோவில் தலைவருக்கு இவர்கள் ஊருக்குப் போகும் விடயம் எப்படி தெரிந்தது. 2) இவர்கள் ஐயப்பன் கோவிலுக்குப் போன இடத்தில், இலங்கைக்கு செல்வதாக அவரிடம் தெரிவித்தார்களா... அல்லது வேறு ஆட்களுக்கு சொல்ல... அவர்கள் மூலம் இந்தச் செய்தி பரவி அவரின் காதுக்கு எட்டியதா? 3) அவர் கனடாவில் வசித்துக் கொண்டு, ஒரு பெரும் பொறுப்பில் இருந்து கொண்டு... 3000 டொலருக்கு ஏன் ஆசைப் பட்டார். ஊரில் கொள்ளையடித்தவர்களை சிங்கள போலீஸ் எப்படி கையாளப் போகின்றது என்று தெரியவில்லை. சிலவேளை இரண்டு பக்கமும் காசை வாங்கிக் கொண்டு வழக்கை இழுத்தடித்து காலப் போக்கில் மக்கள் அந்தச் சம்பவத்தை மறந்திருக்கும் நிலையில்... எல்லோரையும் விடுதலை செய்ய சந்தர்ப்பமும் உள்ளது. ஆனால்... முதலில் இந்த கனடா ஐயப்பன் கோவில் தலைவர் மீது கொலை முயற்சி, கொள்ளை போன்றவற்றை தூண்டியதாக கனடா பொலிசில் ஒரு முறைப்பாடு செய்து 50 வருசமாவது மறியலில் போட வேண்டும். ஒரு வசதியான நாட்டில் வாழ்ந்து கொண்டு... 3000 டொலருக்கு கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த எருமை ... உலகில் வெளியில் நடமாடவே அருகதை அற்றவன்.
  12. வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்! ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்கான ஏதுநிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர ஆகியோர் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. மேலும் ஜனாதிபதித் தேர்தல், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கயன மற்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் வஹாராதிபதி தம்மரதன தேரர் ஆகியோரும் களமிறங்குவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. இதேவேளை வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் மக்கள் சார்பாக பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடவுள்ளார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் திகதி இன்றையதினம் வெளியாகிய பின்னர் வேட்பாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்கான ஏதுநிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1393680
  13. கட்டுப்பணம் செலுத்தும் காலம் குறித்து வெளியான அறிவிப்பு! ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பணத்தை செலுத்துவது தொடா்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விபரங்களை வெளியிட்டுள்ளது. இன்று காலை 8.30 மணி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் வேட்பாளராக முன்மொழியப்பட்டால், 50 ஆயிரம் ரூபாவும் வேறு அரசியல் கட்சியால் அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக இருந்தால், 75 ஆயிரம் ரூபாவாகவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான உத்தரவுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரத்னநாயக்க குறிப்பிட்டுள்ளார். மேலும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து வேட்பாளர்களும் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1393683
  14. பல போராளிகள் மெல்ல, மெல்ல இறப்பதை கடந்த காலங்களில் காணக் கூடியதாக உள்ளது. இவர்களுக்கு மெல்லக் கொல்லும் நஞ்சு ஊட்டப் பட்டுள்ளதா என சந்தேகம் வலுக்கின்றது. சேகுவேராவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி.
  15. நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி சற்றுமுன்னர் வெளியாகியது. நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி சற்றுமுன்னர் வெளியாகியது மேலதிக தகவலுக்கு எம்முடன் இணைந்திருங்கள்…. https://athavannews.com/2024/1393623
  16. பொலிஸ் மா அதிபரின் நியமனத்தில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி ரணில்! பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான விடயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான விடயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இன்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பாக ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் காலப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கவேண்டிய தேவை ஏற்படும் எனவும் சட்டவல்லுநர்கள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளனர். மேலும் இந்த நியமனத்தை முன்னிலைப்படுத்தி மனுக்கள் தாக்கல் செய்ய முடியும் என்றும் சட்ட வல்லுணர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரியப்படுத்தியுள்ளர். எனவே பொலிஸ்மா அதிபர் விடயத்தில் தலையீடு செய்வதை தான் தவிர்த்து கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளார். https://athavannews.com/2024/1393636
  17. பொலிஸ் மா அதிபா் விவகாரம் – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம் – பிரதமா் தினேஸ்! தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளாா். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவா் இதனைத் தொிவித்தாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியவர், பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தார். இந்தநிலையில், கடந்த 25 ஆம் திகதி உயர்நீதிமன்றமானது, பொலிஸ் மா அதிபருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்த அமர்வு நவம்பர் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நவம்பர் மாதம் என்பது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒருமாதம் கடந்து இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். புதிய ஜனாதிபதி பதவியேற்கும் காலத்தில்தான் இந்த வழக்கு விசாரணை அடுத்ததாக இடம்பெறும். பொலிஸ் மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டிய இந்தத் தருணத்தில் தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றுக்குள்ளும் தற்போது குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 4 ஆவது உறுப்புரையில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக நீதியான தேர்தலை நடத்த வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், உயர்நீதிமன்றமானது இந்தத் தடையை விதிக்கும் முன்னர், தேர்தல் ஆணைக்குழுவின் கருத்தைக் கேட்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அரசமைப்பின் 44 (அ) 2 ஆம் உறுப்புறுமையின் கீழ், 14 நாட்களுக்குள் பொலிஸ் மா அதிபரை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவானது, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அரசமைப்புச் சபையின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இதற்காக தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். இப்போதும் பொலிஸ் மா அதிபராக இடைக்கால தடை விதிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரே இருக்கிறார் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளாா். https://athavannews.com/2024/1393654
  18. சுயாதீன (சுயேட்சை) வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் சி பெரேராவினால் குறித்த தொகை வைப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதன்படி, ஜனாதிபதி சார்பாக அவரது சட்டத்தரணி தேர்தல் ஆணைக்குழுவில் சுயாதீன வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1393644
  19. விரைவில் நிறைவடையவுள்ள பாம்பன் ரெயில் பாலம்! பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கருத்துத் தெரிவிக்கையில்” ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் முதல் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் 40 ரெயில்வே மேம்பால திட்டப்பணிகளில் ரெயில்வே துறை தனது பணிகளை முடித்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் மாநில அரசின் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1393509
  20. ராஜவன்னியன்... நானும் இதனை இணையத்தில் பார்த்து விட்டுத்தான் இங்கே பதிந்தேன். @suvyயரும் கண்டதாக சொன்னார். பகிடி என்னவென்றால்.... யாரோ எழுதிய இந்தக் கதையை தமது சொந்தக் கதை போல் பிரசுரிக்கின்றார்கள். தமிழ்நாட்டிலுள்ள சில மேடைப் பேச்சாளர்களும் தமது உரையின் போது.. இந்தக் கதையையும் சொல்வதாக சிலர் குறிப்பிட்டு இருந்தார்கள். இந்தக் கதையை... வாசிக்க நல்ல சிரிப்பாக இருந்தது. அவர் சொன்ன விதம் அவ்வளவு சிறப்பு. இதே போன்ற இன்னொரு கதையின் இணைப்பையும் கீழே தருகின்றேன். நேரம் இருக்கும் பொது வாசித்துப் பாருங்கள் ராஜவன்னியன். நிச்சயம் சிரிப்பு வரும். 😂 👇

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.