Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது! யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது அண்மையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கீழ் மூன்று பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது. இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்றைய தினம் மூன்று பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையே பொலிஸார் கைது செய்து, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2024/1388695
  2. 1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆரம்பத்தில்; 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மொத்தம் 1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 1,400 கோடியாக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நிறுவனத்துக்கான உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முரளீதரன் எதிர்வரும் காலங்களில் தார் வாட்டில் மற்றொரு பிரிவையும் தொடங்க திட்டமிட்டுள்ளார் என குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1388719
  3. உத்தேச வாடகை வரி: அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்படுமென்பதே IMF இன் நிபந்தனை! சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுடன் உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாகவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” வாடகை வருமான வரி அறவீட்டில் முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என ஜனாபதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை. உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என்றே சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது. முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவதுடன். சாதாரன வருமானம் ஈட்டுபவர்களுக்கு அன்றி, அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். எனினும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் மாற்றம் மேற்கொள்ளமுடியாது என ஜனாதிபதி இதற்கு முன்னதாக தெரிவித்திருந்தார் ” இவ்வாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1388703
  4. தன்பாலினத் திருமணத்துக்குத் தாய்லாந்து அரசு அனுமதி! தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை தாய்லாந்து அரசு நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து அறியப்படுகின்றது. இதற்கான சட்ட மசோதாவை அந்த நாட்டின் செனட் மேல்சபை உறுப்பினர்கள் நேற்று (ஜூன் 18) வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றினர். இந்நிலையில் அரசின் குறித்த அறிவிப்பை அடுத்து தன்பாலின ஆர்வலர்கள் மற்றும் எல்.ஜி.பிடி சமூகத்தினர் ஒன்று கூடி வானவில் கொடியைக் காற்றில் பறக்க விட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் இது வரலற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1388687
  5. ஹஜ் யாத்திரைக்குச் சென்ற 550 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறந்த 550 பேரில் 323 பேர் எகிப்தியர்கள் என்று கூறப்படுகிறதுடன் அவர்களில் பெரும்பாலோர் நீர்ச்சத்து குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் வெப்பமான காலநிலையில் யாத்ரீகர்கள் யாத்திரை மேற்கொள்ள முடியாமல் தவித்த நிலையில், அவர்களில் பலர் மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் உயிரிழந்ததாக சவுதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1388638
  6. சும்மா நின்ற தேரை இழுத்து நடுத்தெருவில் விடுறது என்றால்... இதுதான். 😂
  7. முல்லைத்தீவில் பறிபோகும் தமிழா்களின் பூர்வீக காணிகள் – ரவிகரன் குற்றச்சாட்டு! முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழா்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளாா். முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 பெரும்பான்மை இனத்தவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவில் ஊடகங்களுக்குத் தொிவித்துள்ளாா். அத்துடன், தமிழ் மக்களுக்குச் சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு இணைந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அவா் குறிப்பிட்டுள்ளாா். மேலும், ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே பெரும்பான்மை இனத்தவா்களுக்கு வழங்கி, தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள் எனவும் அவா் தொிவித்துள்ளாா். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 47455 மொத்த குடும்பங்களும், 140931 மக்கள் தொகையாக காணப்படுகின்றது. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்த 12545 பேரும், முஸ்லீம் மக்களாக 1675 குடும்பங்களை சேர்ந்த 6382 பேரும் தமிழ் மக்களாக 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 பேருமாக காணப்படுகிறார்கள். குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை, 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கத்தின் அறிவிப்பின்படி 28676 இளைஞர், யுவதிகள் ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்திருந்த நிலையில், இன்றுவரைக்கும் அவர்களுக்கான காணிகள் வழங்கப்படவில்லை என துரைராசா ரவிகரன் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1388410
  8. பிரித்தானிய பொதுத்தேர்தல் : ரிஷியின் கட்சிக்கு முற்றுப்புள்ளி – கருத்துக் கணிப்புக்கள் கூறுவது என்ன? பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், எந்த கட்சிக்கு எவ்வளவு ஆசனங்கள் கிடைக்கும் என்பது தொடர்பாக பல அமைப்புகள் ஆய்வுகளை நடத்தி தனது கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, Savanta என்னும் ஆய்வமைப்பு, ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு, இந்த தேர்தலில் 21 சதவீத ஆதரவு மட்டுமே கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இந்த தேர்தல், கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையலாம் என, தங்களின் ஆய்வு முடிவுகள் கூறுவதாக Savanta ஆய்வமைப்பின் இயக்குநர் Chris Hopkins குறிப்பிட்டுள்ளார். அத்துடன், Keir Starmer இன் லேபர் கட்சி 46 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, Sunday Telegraph எனும் அமைப்பு மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி, லேபர் கட்சி 25 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, Survation என்ற அமைப்பு வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பிரித்தானிய நாடாளுமன்றத்திலிருக்கும் 650 இருக்கைகளில், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 72 இருக்கைகள் மட்டுமே கிடைக்கும் எனவும், லேபர் கட்சியோ, 456 இருக்கைகளைக் கைப்பற்றும் எனவும் கணித்துள்ளது. 200 ஆண்டுகளில் இல்லாதளவில், கன்சர்வேட்டிவ் கட்சி மிகவும் மோசமான தேர்தல் முடிவுகளை சந்திப்பது இததான் முதல்முறை எனவும் Survation என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், YouGuv அமைப்பின் கருத்துக்கணிப்பின்படி, பிரெக்சிட் கட்சி என அழைக்கப்பட்ட, Nigel Farage இன் Reform UK கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சியை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி, எதிர்க்கட்சி என்னும் அந்தஸ்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட கிடைக்காது என கருதப்படுகிறது. https://athavannews.com/2024/1388504
  9. பூமி குறித்த புதிய கண்டுபிடிப்பு! கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் இது நேரம், நாட்கள் மற்றும் வாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்காரணமாக உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், காலமாற்றத்தில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக 2010ஆம் ஆண்டில், பூமியின் உட்புறத்தின் சுழற்சி வேகம் குறைய ஆரம்பித்திருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388476
  10. நாவூறு படுத்திப் போடாதேங்கோ. அடுத்த பங்சனிலை பலகாரம் கிடைக்காமல் போயிடும். 😂
  11. பூந்தி லட்டு நேற்றுத்தான் சாப்பிட்டு முடிந்தது. பயித்தம் பணியாரம் இன்னும் மூன்று கிழமைக்கு சாப்பிட காணும். பகோடாவையும், மிக்சரையும் ஆறுதலாக சாப்பிடுவம் என்று இறுக்கி கட்டி வைத்திருக்கிறன். 🙂 Dortmund கொண்டாட்டத்துக்கு @Kandiah57 அண்ணைக்கு மட்டும்தானா அழைப்பு? எங்களுக்கு இல்லையா.... 😂
  12. Hasaranga ~ இந்த மெட்சயாவது வென்றால்தான் உள்ள போக முடியும் Mendis~ சுப்பர் 8 உள்ளயா.? Hasaranga ~ சுப்பர் 8 உள்ளயா...? நாட்டுக்குள்ளடா..... 😂 Vijay Vj
  13. ஆஹா..... முதுகிலை பலகார மூட்டை 😃. சிரித்து வயிறு நோகுது. 😂 நாங்கள் பலகாரம் கடத்திக் கொண்டு வந்ததை, கவி அருணாசலம் கண்டுள்ளார் போலுள்ளது. 🤣
  14. நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்த நால்வர் கைது! நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்பதியினர் உட்பட நால்வரை பிலியந்தலை, படகெத்தர பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸாரின் விசாரணையில் ” குறித்த சீன நிறுவனத்திற்கு தரம் மற்றும் செயல்திறனைப் பொறுத்து ஒரு வீடியோவிற்கு 50,000 முதல் 100,000 ரூபாய் வரையில் சந்தேக நபர்கள் விற்பனை செய்து வந்துள்ளமை” தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388415
  15. நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மையே! “நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக” மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டோருக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் கல்வித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இதுவரை காலமும் நீட் நுழைவுத் தேர்வுகளில் எந்தவித முறைகேடுகளுமே நடக்கவில்லை என சாதித்து வந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தற்போது முதல் முறையாக நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை நீட் நுழைவுத் தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு, கர்நாடகா அரசுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388317
  16. சவுதியில் கடும் வெப்பம் – மக்காவில் 19 வெளிநாட்டு யாத்திரீகர்கள் உயிரிழப்பு! சவுதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலைகாரணமாக 19 வெளிநாட்டு யாத்திரீகா்கள் உயிாிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் இவ்வாறு உயிரிழந்து உள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சவுதி அரேபியாவில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாகவும், மக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெப்பத் தாக்கத்தினை எதிர்கொள்ள கூடிய வகையிலான மருத்துவ குழுவினர் உள்ளிட்ட 1600 இராணுவ வீரர்களை சவுதி இராணுவம் மக்காவிற்கு அனுப்பியுள்ளது. அத்துடன், 30 விசேட குழுவினரும் 5 ஆயிரம் சுகாதார மற்றும் முதலுதவித் தன்னார்வலர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜெட்டாவில் உள்ள சவுதி அதிகாரிகளுடன் இணைந்து உயிாிழந்தர்களின் உடல்களை ஜோர்டானுக்கு அனுப்புவதற்கான பணிகளை ஜோர்டான் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. மக்காவிற்கு புனிதப் பயணம் வந்துள்ள 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனித யாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமானது. இதற்காக 15 இலட்சம் பக்தர்கள் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மக்காவிற்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388318
  17. மலாவியின் மறைந்த துணை ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் 4 பேர் உயிரிழப்பு! கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியின் மறைந்த துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமாவின் (Saulos Chilima) இறுதி ஊர்வலத்தின் மீது வேகக் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று மோதியத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தலைநகர் லிலாங்வேக்கு தெற்கே 180 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிலிமாவின் சொந்த கிராமமான என்சிபே வழியாக அவரது உடல் நேற்றைய தினம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் கடந்த 10 ஆம் திகதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388333
  18. ஸ்ரீலங்கா ரீமை... அம்பானிக்கு விற்று விடச் சொல்லி, ஒரு சிங்களவர் கருத்து தெரிவித்து இருக்கின்றார். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.