Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இலஞ்சம் கோரல் சம்பவங்களில் 34 நபர்கள் க‍ைது! இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் 2025 ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரை 3,022 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில், 54 சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களில் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த பத்து அதிகாரிகளும், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகளும் சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) இரண்டு அதிகாரிகள் அடங்குவதாகுவர். இதற்கு மேலதிகமாக ஆறு பொதுமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலக் கட்டத்தில் இலஞ்சம் கோரல் சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 60 சந்தேக நபர்களுக்கு எதிராக 50 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் ஆறு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 273 இலஞ்சம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் CIABOC தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 2025 ஜனவரி 01 முதல் ஜூலை 29, வரை மொத்தம் 122,913 நபர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு கூறியுள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் காலகட்டத்தில், அதிகாரிகள் 928,787 கிலோ கிராம் ஹெராயின், 1,396,709 கிலோ கிராம் ஐஸ், 11,192,823 கிலோ கிராம் கஞ்சா, 27,836 கிலோ கிராம் கொக்கெய்ன் மற்றும் 381,428 கிலோ கிராம் ஹாஷிஷ் போதைப்பொருள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில், ஜூலை 29 அன்று இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படை (STF) மற்றும் முப்படையினரால் நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 6,695 பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 10,128 வாகனங்கள் மற்றும் 7,734 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன. சோதனையின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 948 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்தக் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலதிமாக இந்த நடவடிக்கைகளின் போது மூன்று சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. https://athavannews.com/2025/1441291
  2. சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் இருந்த சந்தேக நபர், நேற்று (30) கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும், அறையின் கதவு திறக்கப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அண்மையில் பாணந்துறை பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் அவர் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தில் விடயத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட அதிகாரியும், சம்பவத்தின் போது பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த அதிகாரியும் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். https://athavannews.com/2025/1441288
  3. ஏர் இந்தியா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்! டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, மத்திய சிவில்விமானப் போக்குவரத்து ஆணையகம் (DGCA) நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12-ஆம் திகதி, குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ‘ஏர் இந்தியா போயிங் 787-8’ விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது. இந்த துயரச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானம் புறப்பட்டவுடன் அதன் இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் ‘ரன்’ நிலைமையில் இருந்து தானாகவே ‘கட் ஆப்’ நிலைக்கு மாறியதே விபத்துக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த DGCA, வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 51 பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் முக்கியமாக: போயிங் 787 மற்றும் 777 வகை விமானங்களை இயக்கும் விமானிகள் போதுமான பயிற்சி இல்லாமல் செயல்பட்டு வருவது, போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்கள் இயக்கப்படுவது, சவாலான விமான நிலையங்களை அணுகும்போது பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாதது, என்பவை குறிப்பிடத்தக்கவை. மேலும், அவசரகால உபகரணங்கள் சரிபார்க்கப்படாமலும், இயந்திரப் பாகங்கள் நேரத்தில் மாற்றப்படாமலும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பிழைகள் உள்ளதாகவும் ஏற்கனவே ஏர் இந்தியாவுக்கு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிலளிக்கப்படுமென என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441215
  4. விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம். அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட எரிஸ் (Eris) எனப்படும் ஓர்பிடல் ரொக்கெட் (orbital rocket) தனது முதலாவது சோதனை முயற்சியில் தேல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் (Gilmour Space Technologies ) நிறுவனம், தயாரித்த குறித்த விமானம் குவீன்ஸ்லாந்தில் உள்ள போயன் ஓர்பிடல் ஸ்பேஸ் போர்டிலிருந்து (Bowen Orbital Spaceport in North Queensland) விண்ணை நோக்கி செலுத்தப்பட்டிருந்த நிலையில் 14 செக்கன்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதன் காரணமாக குறித்த பகுதியை புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது. இது குறித்து அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இந்த சோதனை, நாட்டின் விண்வெளி துறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ”இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், இரண்டாவது சோதனை ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் நடைபெறும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓர்பிடல் ரொக்கெட் சோதனை முயற்சி, அவுஸ்திரேலியாவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441284
  5. குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம்! செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441266
  6. சில செத்த வீடுகளில்... குறிப்பிட்ட சிலர், பழைய பிரச்சினைகளை கிளறி ரணகளம் ஆக்க என்றே வருவார்கள். அவர்களில் தொழிலே இதுதான். அதில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் இருப்பார்கள். அந்த வாய் சண்டையை பார்க்க சுவராசியமாக இருக்கும். 😂
  7. கைதடிக்காரர் @Kandiah57 அடிக்கடி களத்துக்கு வருவதை கண்டுள்ளேன். ஆனால்... கருத்து எழுதாமல் இருக்கும் மர்மம் என்னவென்று தெரியவில்லை. தினமும் களத்திற்கு வந்து எல்லோருடனும் இனிமையாக பழகும் ஒருவர், திடீரென்று வராமல் இருக்கும் போது... மனதிற்கு சங்கடமாக உள்ளது. நீங்கள் சொல்வது போல்... சிலவேளை கோயில் திருவிழாக்கள் முடியத்தான் வருவார் போலுள்ளது.
  8. 2020 களில்... தெற்கு கானாவின் கிரேட்டர் அக்ரா பிராந்தியத்தில் உள்ள இசைக்குழு... "அப்பா இறந்துவிட்டார்" என்ற பொருள்பட இசை நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் மற்றும் கானாவிற்கு வெளியேயும் நிகழ்ச்சிகளை நடத்தி உலக மக்களின் பெரும் அபிமானத்தை பெற்றார்கள். இன்று கூட அவர்களின் மீம்ஸ்கள்... முடிவே இல்லாமல், இணையத்தில் பிரபலமாக போய்க் கொண்டு உள்ளது. ஆக... மரணத்தைக் கூட, ஏதோ ஒரு வகையில் மக்கள் ரசிக்கின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
  9. வட மாகாணத்தில் இருக்கும்... ஊர்களிலேயே, திடுக்கிடும் பல வகையான செய்திகளை கொடுப்பதில் சாவகச்சேரியை அடிக்க ஏலாது. 😂 அந்த மண்ணில் ஏதோ... விஷயம் இருக்கு. 🤣
  10. செல்வச் சந்நிதி கோவிலில்... கள்ள மோட்டார் சைக்கிளுக்கு, பூசை செய்துள்ளார்.
  11. குருநாகல் பேருந்து நிலையத்தில் வெற்றிலை எச்சில் துப்பிய ஏழு பேர் அதிரடி கைது. 🙂 ஸ்ரீலங்கா.... சிங்கப்பூர் ஆகிற நாள் வெகு தொலைவில் இல்லை. பீடா, வெத்திலை, பாக்கு கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். எங்கடை அப்பு, ஆச்சிமார் பாவம்... 😂
  12. கள்ள மோட்டார் சைக்கிளுக்கு... கோவிலில் பூசையும் நடக்கின்றது. காணொளி: 👉 https://www.facebook.com/myjaffna/videos/1410267050249344 👈 களவு எடுத்த நகையை விற்று வாங்கிய புது மோட்டார் சைக்கிளுக்கு கோவிலில் வைத்து பூசை நடக்கின்றது. 😂 மோட்டார் சைக்கிளில் வெள்ளோட்டம் ஓடுபவர்தான்... அந்த, மச்சம் உள்ள காதலன். 🤣 ஐயர் மோட்டார் சைக்கிள் ரயரில் தேசிக்காய் வைத்து நசித்தும்... அந்த மோட்டார் சைக்கிள், ரோட்டில் ஓடாமல்... பொலிஸ் ஸ்ரேசனிலை நிற்க வேண்டி வந்திட்டுது. 😜
  13. அப்ப அந்த 500 க்கு கொஞ்ச உடுப்புகள் மட்டும்தான் வாங்கலாம். அதற்குப் பிறகு வாற செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றால்... மேற்கொண்டு குழந்தை பெறுவதைப் பற்றி சீனர்கள் அக்கறை செலுத்துவார்கள். 😂
  14. உலகின் மிகவும் அழகான தீவாக இலங்கை தேர்வு! உலகளாவிய பயண தளமான ‘Big 7 Travel’ தொகுத்த உலகின் 50 சிறந்த தீவுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, இலங்கை உலகின் மிக அழகான தீவாக முடிசூட்டப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் பிரெஞ்சு பாலினேசியாவின் மோரியா, ஈக்வடாரில் உள்ள கலபகோஸ் தீவுகள் மற்றும் சீஷெல்ஸ் போன்ற பிரபலமான தீவுகளை முந்தி முதலிடத்துக்கு வந்துள்ளது. Big 7 Travel தகவலின்படி, இலங்கை அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றின் கலவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தீவு தேசத்தின் தனித்துவமான வனவிலங்குகள், பழங்கால கோயில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சுறுசுறுப்பான உள்ளூர் சுற்றுலா பகுதிகளுக்காக இந்தப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாத் துறை அதன் நிலையான மீட்சி மற்றும் மாற்றத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த உலகளாவிய அங்கீகாரம் மேலும் அதனை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1441145
  15. அமெரிக்காவை தாக்கத் தொடங்கியுள்ள சுனாமி அலைகள்! ரஷ்யாவின் கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உண்டான சுனாமி அலைகள் அமெரிக்காவின் ஹவாயை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஹவாய் அருகே 6 அடி (1.8 மீ) உயரம் வரை சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கம்சட்காவில் 3-4 மீ (10 முதல் 13 அடி) உயரத்திலும், ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் 60 செ.மீ (2 அடி) உயரத்திலும், அலாஸ்காவின் அலூடியன் தீவுகளில் அலை மட்டத்திலிருந்து 1.4 அடி (30 செ.மீ க்கும் குறைவான) உயரத்திலும் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன. 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று புதன்கிழமை (30) அதிகாலை ரஷ்யாவின் தூர கிழக்கைத் தாக்கியது. 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கம்சட்கா தீபகற்பத்தை உலுக்கி, வடக்கு பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது. 1952 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பகுதியில் ஏற்பட்ட மிக வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடுமையான பின்னதிர்வுகள் ஏற்பட்டன. நில அதிர்வு நிபுணர்கள் வரும் வாரங்களில் 7.5 ரிக்டர் அளவு வரை மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். வடக்கு குரில்ஸ்கைத் தாக்கிய சுனாமி அலை, குடியேற்றத்தின் சில பகுதிகளையும் உள்ளூர் மீன்பிடி வசதியையும் வெள்ளத்தில் மூழ்கடித்தது. கம்சட்கா, குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அலாஸ்கா, ஹவாய் மற்றும் நியூசிலாந்து வரை சுனாமி எச்சரிக்கைகள் ஒலித்தன. https://athavannews.com/2025/1441188
  16. பொரளை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகன சாரதிக்கு விளக்கமறியல்! பொரளை பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கனரக வாகன சாரதியை எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, வாகன உரிமையாளரை 500,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார். பொரளை பொலிஸார் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று காலை பொரளை, மயான சந்தியில் கனரக வாகனம் ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7பேர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பதும் நேற்றைய சோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். https://athavannews.com/2025/1441081 #################### ######################### பொரளை கோர விபத்து – கஞ்சா பாவனையில் கிரேன் சாரதி! பொரளை, கனத்தை சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இது தெரியவந்தது. பொரளை கனத்த சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனா தெரிவித்தார். காயமடைந்தவர்களில் இருவர் பெண்கள் என்றும், மீதமுள்ள ஐந்து பேர் ஆண்கள் என்றும் மருத்துவர் கூறினார். இன்று காலை, ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் லொறி ஒன்று, கனத்தை சுற்றுவட்டத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்களுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்தவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துக்கு காரணமான கிரேன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கிரேன் பிரேக்குகள் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறெனினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1440915
  17. யாழ்.செம்மணியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் ! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (29) புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 09 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 34 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 24 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 09 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 34 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 33 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 99 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441104
  18. இறந்தவரின் சகோதரி பொலிஸாருக்கு கொடுத்த வாக்குமூலம் ஒரே சொதப்பலாக உள்ளதால், சீக்கிரம் அம்பிட்டு விட்டார். 😂 🤣 இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டார்க்களாம், தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்ற வேளை... அவர்கள் உள்ளே வந்து தன்னை கட்டி போட்டுவிட்டு நகைகளை திருடிச் சென்று விட்டார்களாம், பின்னர் அதிகாலை 3 மணியளவில் தான் கட்டினை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்த வேளை தம்பி சடலமாக காணப்பட்டாராம், மாரடைப்பால் இறந்தவரை... கொலை என்று ஏன் சொன்னார்? 😂 தனது நகையை... இவரே என் ஒளித்து வைத்தார்...? என்று, துப்புத் துலக்க வேண்டிய பகுதிகள் நிறைய இருக்கும் போலை இருக்கு. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.