Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. யாயினிக்கும், விசுகு அவர்களின் துணைவியாருக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மூன்றாம் நம்பர், நல்ல நம்பர்.(ஏனென்றால்... நானும், மூன்று தான்)
  2. பிறந்த திகதியை... வைத்து நல்ல நம்பர் எண்டு பார்க்கக் கூடது . எத்தனையாம்... ஆண்டு, ரதி பிறந்தவ எண்டும்... பாக்கவேணும் . அதுக்குப் பிறகு தான்... ஒரு முடிவுக்கு வர வேணும்... வந்தி
  3. ராஜபக்சேவுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி, மேளம் தாளம் ஆட்டம் பாட்டத்துடன் தீ வைத்த மாணவர்கள் சென்னை கடற்கரையில் 20.03.2013 புதன்கிழமை பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, ராஜபக்சேவின் உருவபொம்மையை மேளம் தாளம் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று தீவைத்தனர். செய்தியின் மூலம்: நக்கீரன். படங்கள்: ஸ்டாலின்
  4. இணையவனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. சென்னையில் ஆரம்பித்த‌ மாண‌வர்களின் போராட்டம்.... எட்டு நாளில், தமிழகம் முழுவதும் பரவி... கர்நாடகம், ஆந்திரா வரை சென்று.... மெதுவாக ஐரோப்பிய நகரங்களையும்... தொற்றியுள்ளதைப் பார்க்க... எமக்கு நல்ல தீர்வு கிடைக்க சாத்தியக் கூறுகள் உள்ளதாக, உள் மனம் கூறுகின்றது. மாணவர்களின் சக்தி, மாபெரும் சக்தி என்று... சும்மாவா சொன்னார்கள்.
  6. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WPfVChRa5F8 கர்நாடகம், பெங்களூரைச் சேர்ந்த மாணவர்கள்... தமிழ்நாட்டு மாணவர்களுக்கு.... ஆதரவாக நடத்தும் போராட்டம். ஆந்திரா, கர்நாடக மாணவர்களும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில்.... மலையாளம் மௌனமாக இருக்கின்றது.
  7. பையன், நாளை ஆளுநர் மாளிகையை... முற்றுக்கை இடும் போராட்டத்தை... முன் எடுக்கப் போவதாக, மாணவர்கள் அறிவித்துள்ளார்கள். ஏதாவது பெரிய மாற்றம் ஏற்படலாம்... மாணவர்கள், அவதானமாக இருக்க வேண்டும்.
  8. நேற்று இரவு மெரினாவில்... உண்ணாவிரதம் இருந்த‌ சட்டக் கல்லூரி மாண‌வர்களை கைது செய்த காவல் துறைக்கு, இன்று பொதுமக்கள் செய்யும் போராட்டத்தைப் பார்க்க... அதிர்ச்சியாக இருக்கும். மே 17 இயக்கத்தின் போராட்டம் இது என நான் எண்ணுகின்றேன்.
  9. மாணவர்கள் நடாத்திய போராட்டம் மெதுவாக... பொது மக்கள் மத்தியிலும் ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியை தருகின்றது. மெல்லெனப் பாயும் நீர், கல்லையும் கிழித்துப் பாயட்டும்.
  10. மாணவர்கள் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை - மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகம் முன்பு போராட்டம்! சென்னை: தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தன்னெழுச்சியாக எழுந்த மாணவர் போராட்டம் தற்போது தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பாக உருவாகியிருக்கிறது. சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் 7-வது நாளாக நீடித்திருக்கிறது. சென்னை நந்தனம் விருத்தாசலம் உள்ளிட்ட சில இடங்களில் மாணவர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாளை 18-ந் தேதியன்று சென்னையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் மாவட்டங்களில் அனைத்து மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 20-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்ட நடைபெற இருக்கிறது. நன்றி தற்ஸ்தமிழ்.
  11. சென்னை மெரினாவில் நள்ளிரவில் போராட்டம்- 20 சட்ட மாணவர்கள் கைது- தொடர் உண்ணாவிரதம்! சென்னை: இலங்கை அரசுக்கு எதிராக சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 20 பேர் திடீரென மெரினா கடற்கரையில் நேற்று இரவு உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சமூக நலக் கூடத்தில் தங்களது உண்ணாவிரதத்தை 20 பேரும் தொடர்கின்றனர். தமிழீழம் கோரி தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு பின்னரே போராட்டம் தீவிரமானது. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களும் பள்ளிக்கூட மாணவர்களும் இணைந்து கொண்டனர். இந்நிலையில் சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் 20 பேர் திடீரென நேற்று மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு வந்த போலீசார் அனுமதி இன்றி போராட்டம் நடத்தக் கூடாது என்றனர். ஆனால் மாணவர்களோ மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம் என்றனர். இதை ஏற்காத போலீசார் வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றினர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாணவர்கள் வேனில் ஏற்றப்பட்டு மயிலாப்பூரில் சமூக நலக் கூடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கும் 20 பேரும் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கின்றனர். நன்றி தற்ஸ்தமிழ்.
  12. இலங்கை தமிழர் விஷயத்தில் தமிழக அரசு இரட்டை வேடம்! கல்லூரி மாணவர்களின் கண்டன குரல்கள்! இலங்கை தமிழருக்காக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் வலுவற்று உள்ளதால் இந்தியாவே முழுமையான தீர்மானத்தை கொண்டு வந்து உலக நாடுகளின் ஆதரவை திரட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவெண்ணை நல்லூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி மாணவர்கள் கடந்த 11ஆம் தேதி முதுல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், அரியலூர் அரசு கல்லூரி மாணவர்கள், தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரி மாணவர்கள் என மாணவர்களின் போராட்டம் வேகமெடுத்தது. இதைகண்டு மிரண்டுபோன அரசு, அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறையை அளித்து மறைமுகமாக இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது ஜெ. அரசு என்கிறார்கள் மாணவ சமுதாயத்தினர். அவர்களை போராட்ட களத்தில் சந்தித்தோம். விருத்தாசலம் கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர் ஆதரவு மாணவர் கூட்டமைப்பு என்ற பெயரில் நித்யானந்தன் தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். நித்தியானந்தன் கூறும்போது, எங்களின் போராட்டத்தை கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் ஒடுக்க பார்த்தது. இப்போது கல்லூரிகளுக்கெல்லாம் அரசு விடுமுறை அளித்துள்ளது. இருந்தாலும் எங்களது போராட்டம் தொடரும் என்றார். அரியலூர் அரசு கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேர், தென்னரசு என்ற மாணவர் தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மாணவர்கள் தமிழ்ச் செல்வன், சுரேஷ் ஆகியோர் கூறியதாவது, இலங்கை தமிழர்களின் பிரச்சனையை தீர்க்க முயற்சி எடுக்காமல் தமிழக அரசு போராட்டத்தை ஒடுக்க நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் எந்த வழியிலேனும் தொடருவோம். சிலம்பரசி என்ற மாணவி கூறும்போது, தமிழக அரசின் போக்கில் சந்தேகம் எழுகிறது. ஒருபக்கம் இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்கிறது தமிழக அரசு. இன்னொரு பக்கம் இலங்கை தமிழர்களுக்காக போராடும் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கிறது. இது இரட்டை வேடமா என்றார். மாணவர்களின் போராட்டம் மின்னல் வேகத்தில் தமிழகம் முழுவதும் வேகமெடுத்ததை கண்டு, கல்லூரி மாணவ மாணவிகளின் பிரதிநிதிகளை அழைத்து கல்லூரி நிர்வாகம் மூலம் மிரட்டி அடக்கியுள்ளது அரசு என்று குற்றம் சாட்டியுள்ளனர் உணர்வுள்ள மாணவர்கள். செய்தி,படங்கள்: நக்கீரன், எஸ்.பி.சேகர்
  13. எனது அன்புச் சகோதரி, ரதிக்கு... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.