Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அகமதாபாத் விமான விபத்து: மன்னிப்புக் கோரினார் டாடா குழுமத் தலைவர். அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் ‘மன்னிப்பு’ கோரியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். ,இதனையடுத்து மொத்த உயிரிழப்பு 270ஐ தாண்டியது. இந்நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் ‘மன்னிப்பு’ கோரியுள்ளார். இது குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வௌியிட்ட சந்திரசேகரன்,’விமான விபத்து குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ந்துவிட்டேன். அதை புரிந்துகொள்ளவே எனக்கு சில நிமிடங்கள் ஆகின. விபத்து குறித்து கேள்விப்பட்டதும், விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன். ‘கடவுளே என்ன இது?’ எப்படியாவது அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது. அதன்பிறகு என்னை நானே தேற்றிக்கொண்டு உடனடியாக விமான நிலையம் புறப்பட்டு விட்டேன். விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல கூட வார்த்தைகள் இல்லாத மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறேன். டாடா நடத்தும் விமான நிறுவனத்தில் இந்த விபத்து நடந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இந்த நேரத்திலும் அதற்குப் பிறகும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்’ இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1436224
  2. ஈரான் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் ஒப்புதல்; தெஹ்ரானை கைவிட மாட்டோம் என்கிறார் கிம்! இஸ்ரேல்-ஈரான் மோதல் வியாழக்கிழமை (19) ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதலில் அமெரிக்கா இணையுமா என்பது குறித்து உலகை ஊகிக்க வைத்துள்ளார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஆனால் தெஹ்ரான் அதன் அணுசக்தி திட்டத்தை கைவிடுமா என்பதைப் பார்க்க இறுதி உத்தரவை வழங்குவதில் தாமதம் செய்துள்ளதாகவும் அவர் தனது நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலின் தாக்குதலில் இணையலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஏதேனும் முடிவு எடுத்துள்ளாரா என்பதை உறுதியாகக் கூற மறுத்துவிட்டார். அதேநேரம், ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் மீண்டும் கூறினார். அமெரிக்காவிற்கு ஒரு சாத்தியமான இலக்கு ஈரானின் ஃபோர்டோ அணு செறிவூட்டல் நிலையமாகும். இது நிலத்தடியில் ஆழமாக கட்டப்பட்டுள்ளது மற்றும் அழிக்க மிகவும் கடினம். மிகவும் சக்திவாய்ந்த குண்டுகள் மட்டுமே அதை அடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது இவ்வாறு இருக்க முன்னதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது நாடு சரணடையாது என்று கூறினார். எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் அமெரிக்காவை எச்சரித்தார். சர்வதேச தலைவர்கள் தெஹ்ரான் பிரதிநிதிகளுடன் சந்திப்பு ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை பொதுமக்கள் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும் என்று உறுதியாக உத்தரவாதம் அளிக்கும்படி தெஹ்ரானை வற்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை (19) ஜெனீவாவில் தங்கள் ஈரானிய பிரதிநிதியுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் தூதரக வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால், ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தாலும், 10 மில்லியன் மக்கள் வசிக்கும் தெஹ்ரானில் வசிக்கும் சிலர் புதன்கிழமை நகரத்திற்கு வெளியே நெடுஞ்சாலைகளை மறித்து, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முயன்றனர். மத்திய கிழக்கில் குவிக்கப்படும் அமெரிக்க இராணுவப் படைகள் அண்மைய நாட்களில் அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு அதிக இராணுவப் படைகளை நகர்த்தி வருகிறது. மூன்றாவது கடற்படை அழிப்புக் கப்பல் கிழக்கு மத்தியதரைக் கடலில் நுழைந்துள்ளது. மேலும் மற்றொரு விமானம் தாங்கிக் கப்பல் குழு அரபிக் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இது ஒரு தற்காப்பு நடவடிக்கை மட்டுமே என்றும், இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அமெரிக்காவுடன் இணையும் திறனையும் இது வழங்குகிறது என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. தெஹ்ரான் தனியாக இல்லை மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த மோதலில் தெஹ்ரான் “தனியாக இல்லை” என்பதை வலியுறுத்தினார். இந்தப் போரில் ஈரான் தனியாக இல்லை. வட கொரிய இராணுவம் மிக உயர்ந்த போர் தயார்நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடினமான காலங்களில் நாங்கள் எங்கள் நண்பர்களை கைவிட மாட்டோம். நாங்கள் ஈரானை முழுமையாக ஆதரிக்கிறோம். அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அழுத்தக் கொள்கை எங்களுக்கு நன்கு தெரியும். நாங்கள் எங்கள் நண்பர்களுடன் பக்கபலமாக நிற்கிறோம் என கிம் ஜாங்-உன் தனது அதிகாரப்பூர்வ உரையில் அறிவித்தார். எவ்வாறெனினும் மத்திய கிழக்கின் நிலைமை மோசமடைந்து வருகிறது. அண்மைய தாக்குதல்களால் ஈரானில் 450 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், ஈரானிய தாக்குதல்களால் இஸ்ரேலில் 24 பேர் இறந்துள்ளதாகவும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1436216
  3. கையில் 50 ரூபா கீல்ஸ் சொப்பிங் பேக், மற்றும் 120 ரூபா வெள்ளை மாஸ்க் அணிந்து கொண்டு... கோடிக்கணக்கு மோசடி வழக்கில் குடும்பம் சகிதம் ஜெயில் செல்லும் முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் இன்றைய (18) காட்சிகள்! Vaanam.lk
  4. சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்! பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இன்று (18) உத்தரவிட்டார். அதன்படி, சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேக நபர்களுக்கு வௌிநாட்டு பயணத்தடை உத்தரவையும் பிறப்பித்தார். இந்த வழக்கு நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் விசாரணைக்கு வந்தது, அங்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்தனர். இந்த சந்தேக நபர்கள் 97.35 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றமை தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டனர். குறித்த சந்தேக நபர்களின் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு தகவல் அளித்ததாகவும், அதன்படி, இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சரின் மனைவிக்கும், மூன்றாவது சந்தேக நபரான மகளுக்கும் சொந்தமான தலா 30 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு நிலையான வைப்பு கணக்குகள் விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த சந்தேக நபர்களுக்குச் சொந்தமான 150 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்ட மூன்று வங்கிக் கணக்குகள் வேறு நபர்களின் பெயர்களில் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேக நபர்களை பிணையில் விடுவித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு ஓகஸ்ட் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதவான் அறிவித்தார். எவ்வாறாயினும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி மற்றும் மகள் சந்துல ரமாலி ரம்புக்வெல்ல ஆகியோர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436198
  5. காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இருந்து எரிபொருள் விநியோகப் பணி ஆரம்பம்! காங்சேன்துறையிலுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோக களஞ்சியசாலையின் திருத்தப் பணிகள் யாவும் நிறைவுபெற்று, கடந்த 08ஆம் திகதி புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பண நிகழ்வு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றிருந்தது. இதையடுத்து, குறித்த களஞ்சியசாலையிலிருந்து எரிபொருள்கள் பரீட்சார்த்தமாக யாழ். மாவட்ட எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலையின் புனரமைப்புக் காரணமாக, இவ்வளவு காலமும் அநுராதபுரத்திலிருந்தே யாழ்ப்பாணத்துக்கு எரிபொருள்கள் எடுத்துவரப்பட்டன. இதனால் எரிபொருள் விநியோகத்துக்கான கோரிக்கை கிடைத்தும் சில நாள்களின் பின்னரே எரிபொருள் வந்துசேர்ந்தது. இதனாலேயே, கடந்தகாலங்களில் தாமங்கள் ஏற்பட்டிருந்தன. எனினும் இனிவரும் காலங்களில் உடனுக்குடன் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1436090
  6. வெளியேற முடியாது இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்! வணிக நோக்கங்களுக்காக இஸ்ரேலில் உள்ள பல இலங்கையர்கள் வெளிச்செல்லும் விமானங்கள் இல்லாததால் சிக்கித் தவிப்பதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போது, ஈரானுடனான மோதல் காரணமாக இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையமான பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மற்றும் இஸ்ரேலிய வான்வெளி அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தூதரக அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும், தேவைப்பட்டால் இஸ்ரேலை விட்டு வெளியேறுவதற்கான ஆதரவையும் வழங்குவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார குறிப்பிட்டார். தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேறுபவர்கள் ஈலாட் எல்லை வழியாக எகிப்துக்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பழைய கட்டிடங்களில் முறையான தங்குமிடங்கள் இல்லாமல் வசிக்கும் சில இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளதாக தூதர் நிமல் பண்டார தெரிவித்தார். அதன்படி, தாக்குதல்களின் போது தங்குமிடத்திற்கான தற்காலிக மாற்று வழிகளை அடையாளம் காணவும், தனிப்பட்ட அவசரகால திட்டத்தை உருவாக்கவும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட சமூக சேவையாளர்களை அணுகுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், அவசரநிலைகள் ஏற்பட்டால் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும் தூதர் நிமல் பண்டார அறிவுறுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1436066
  7. அணு ஆயுத தாக்குதல்; ஈரானின் கூற்றை மறுக்கும் பாகிஸ்தான்! ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்ற தெஹ்ரானிய மூத்த அதிகாரியின் கூற்றினை இஸ்லாமாபாத் உடனடியாக மறுத்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டைப் பயன்படுத்தினால், பாகிஸ்தானும் இஸ்ரேலை அணுகுண்டைப் பயன்படுத்தித் தாக்கும் என்று பாகிஸ்தான் எங்களிடம் கூறியுள்ளது என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதியும் ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் உறுப்பினருமான ஜெனரல் மொஹ்சென் ரெசாய் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானும் இஸ்ரேலும் ஏவுகணைத் தாக்குதல்களை தொடங்கும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. எனினும், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் இந்தக் கூற்றை நிராகரித்ததுடன், இஸ்லாமாபாத் அத்தகைய உறுதிமொழியை அளிக்கவில்லை என்றும் கூறினார். எவ்வாறெனினும், இஸ்ரேலுடனான பரந்த மோதலில் ஈரானுக்கான பாகிஸ்தானின் ஆதரவினை அவர் வெளிப்படையாக வெளிப்படுத்தினார். ஜூன் 14 அன்று, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தேசிய சட்டமன்றத்தில் முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார். இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட முஸ்லிம் நாடுகள் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்றும், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கூட்டு மூலோபாயத்தை உருவாக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ஆசிப் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1435944
  8. எங்கு, எப்போ, என்னென்ன… தட்டுப்பாடுகள் வரும் என, பல மாதங்கள் முன்பே துல்லியமாக கணிக்கும்… யாழ்ப்பாணிகளின் மூளைக்கு, இந்த உலகில் எவனும் கிட்ட நெருங்க முடியாது. 😂 🤣
  9. பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி! இத்தாலி விமான நிலையத்தில் சீனப் பெண் ஒருவர் தரையில் புரண்டு அழும் காணொளியொன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான குறித்த பெண், கடந்த சனிக்கிழமை இத்தாலியில் உள்ள மிலான் மல்சேனா விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதன்போது அவர் கொண்டு வந்த பயணப் பொதி அதிக எடையுடன் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அப் பெண் பயணியிடம், `கூடுதல் எடைக்கு பணம் செலுத்துகிறீர்களா அல்லது எடையை குறைக்கிறீர்களா என வினவியுள்ளனர். இதனைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த அப் பயணி அங்கேயே தரையில் படுத்து அழத் தொடங்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத விமான நிலைய அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் அவர் சமாதானம் ஆகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவர் செல்லவிருந்த விமானத்தில் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும், இதன் பின்னர் அவருக்கு வேறு விமானத்தில் டிக்கெட் ஒழுங்கு செய்து கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே விமான நிலையங்களில் அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் சலசலப்புகள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு காரணமாக விமான நிலைய அதிகாரிகள் அவ்வப்போது விதிகளை மாற்றி வருகின்றனர். எனினும் இதனை பயணிகளுக்கு சரியான முறையில் அதிகாரிகள் தெரிவிப்பது இல்லை என பயணிகள் விசனம் தெரிவித்து வருகின்றனர். கடந்தாண்டு சிக்காகோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தவறவிட்ட பயணி கோபமடைந்து அங்கிருந்த கணினியை எடுத்து விமான நிலைய அதிகாரி மீது வீசிய வீடியோவொன்றும் இணையத்தில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsபயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!இத்தாலி விமான நிலையத்தில் சீனப் பெண் ஒருவர் தரையில் புரண்டு அழும் காணொளியொன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான குறித்த பெண், கடந்த சனிக்கிழமை இத்தா...
  10. டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது! ஆப்பிரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இன்ஸ்டா பிரபலம் ”கபேன் காபி லேம் (Khaby-lame) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான காபி லேம் அமெரிக்காவின் நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30-ம் திகதி அமெரிக்காவிற்குள் நுழைந்த அவர், தனது விசா காலத்தையும் தாண்டி,விதிமுறைகளை மீறி அதிக நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் அவரைச் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதுக்குப் பின், அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுவதாக அவர் கூறிக் கொண்டதால் காபி லேம்மை விடுவித்துள்ளனர். தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறி உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காபி லேம் கைது செய்யப்பட்ட தகவல் தற்போது சமூக ஊடகங்களில் தீயாய் பரவி அவரது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காபி லேம்மிற்கு ஒரு வயதாக இருக்கும் போது அவரது குடும்பத்தினர் இத்தாலிக்குக் குடிபெயர்ந்ததால், அவர் இத்தாலி நாட்டுக் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இதனையடுத்து தனது பதின்ம வயதில் தொழிற்சாலையில் CNC இயந்திர ஆபரேட்டராகப் பணிபுரிந்த அவர் கொரோனா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் டிக்டாக்கில் வீடியோ பதிவிட ஆரம்பித்தார். சிக்கலான வாழ்க்கைச் சம்பவங்களை இதைவிட எளிமையாக யாராலும் புரிய வைக்க முடியாது என யோசிக்கும் அளவுக்கு வார்த்தைகளற்ற சைகையால் துவம்சம் செய்து வீடியோ பதிவிட ஆரம்பித்தார். விழுந்து புறண்டு ஊதிப் பெரிதாக்கும் சம்பவங்களைச் சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருப்பார்கள். இது ஒரு விஷயமா? என சைகையால் கேள்வி கேட்பதோடு, அதைக் கிண்டல் செய்து பதிவிடும் இவரது வீடியோவால், பலரும் காபி லேம்மிற்கு ரசிகர்களாகத் தொடங்கியுள்ளனர். காபி லேமின் தனித்துவமான கையசைவு சைகையைப் பின்பற்றி, அவரைப் போலவே வீடியோ வெளியிட்டுப் பலரும் பிரபலமாகி உள்ளனர். அதில் விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் உண்டு. குறிப்பாக ஹர்திக் பாண்டியாவும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று அவரைப்போலத்தான் போஸ் கொடுத்தார். டிக்டாக்கில் 162 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்களை வைத்துள்ள அவர் இன்ஸ்டாகிராமில் 80 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்களை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1435754
  11. தேடியமைக்கு நன்றி நியாயம். குறுகிய கால பிரயாணமாக இலங்கை சென்று.... Battery ஐ Recharge பண்ணிக் கொண்டு வந்துள்ளேன். 😂 🤣
  12. விற்பனைக்கு வைத்திருக்கும் பொருளை… அடிக்கடி அழைந்து கொண்டு இருந்தால், வியாபாரி கோவிப்பார்தானே. 😂 சிங்களப் பயல்… பச்சை தண்ணியிலை பலகாரம் சுடப் போன ஆள் போலை இருக்கு. 🤣
  13. வெட்கம் கெட்ட சிங்களவன். போயும்… போயும் திருநங்கையின் உடல் உறுப்பை தொட்டுப் பார்த்திருக்கின்றான். இவனால், ஶ்ரீலங்காவுக்கே அவமானம். 54 வயதிலை…. அதை, சுருட்டி வைக்கிறதை விட்டுட்டு… போற வாற இடம் எல்லாம் நீட்டிக் கொண்டு திரிந்தால் செருப்படி வாங்க வேண்டும். ஆமா… 😂
  14. அனுராவின் நாக்கில்… சனி பகவான் வந்து குடியிருக்கப் போகிறார் போலுள்ளது. 😂
  15. இளநீர் குடிக்கிறவன் ஆரோ… கோம்பை சூப்பிறவன் ஆரோ எண்ட மாதிரி…. குமாராசாமியின்ரை ராசி அப்பிடி. 😁 😂 🤣
  16. ஶ்ரீலங்காவில் முதலில், தடை செய்யப் பட வேண்டிய அமைப்பு என்றால்…. பிக்குமாரைத்தான் தடை செய்ய வேண்டும். 😎 இது நடக்கிற காரியமா….? 😜 ஆனாலும், இது…. நடக்க வேண்டும் என்று Hamm அம்மாளாச்சியை வேண்டிக் கொள்கின்றேன். 🙏 வந்தால்… சுல்தான், போனால் பக்கிரி. 😂 🤣
  17. நீங்கள்…. சந்துல, சிந்து பாடி விட்டீர்கள். 😂 🤣
  18. இதில் தமிழ், முஸ்லீம் அமைப்புகள் மட்டுமே இருக்கும். சிங்கள அமைப்புகள் எதுவும்… மருந்துக்கும் இராது. அதனை ஏன் மினக்கெட்டு வாசிப்பான். சிங்களவன் உத்தமனாம் என்பார்கள். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.