Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. புத்தி கூர்மையுடன் செயற்பட்டிருக்க வேண்டியவர்கள் தலைமை தாங்கியவர்களேயொழிய சாமான்யர்கள் அல்லர். இதுவரை தலைமை தாங்கிய எவருக்கும் அந்த பொறுப்பு இல்லாத போது சாமான்யர்களால் என்ன செய்ய முடியும்.
  2. கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் மேடைகளில் பீத்திக் கொள்ளவும் கவிஞரகள் கவிதை எழுதவும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதவும் மட்டுமே உதவியது. உரிய நேரத்தில் புத்திக்கூர்மையான அரசியல் முடிவுகளும் அதையொட்டிய ராஜதந்திரமுமே தமிழ் மக்களை மற்றய இனங்களுக்கு ஈடாக வாழ வைக்கும் துரதிஷரவசமாகஅதை இதுவரை எவருமே செய்யவில்லை.
  3. நோர்வே பாலஸ்தீன மக்களுக்கு எந்த தீமையும் விளைவிக்க வில்லை. அதை விளைவித்தவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளும், இஸ்ரேல் கடும்போக்குவாதிகளுமே. நோர்வே வெறும் அனுசரணையாளர் மட்டுமே. இருபகுதியும் யுத்தத்தை விரும்பினால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அதுவே இலங்கையிலும் நடந்தது. அங்கும் இரு பகுதியும் யுத்தத்தே விரும்பியது உண்மை. தலைவர் எப்ப அடிக்கபோறார் என்று 2005 ல் இருந்து எதிர்பார்த்து காந்திருந்து யுத்தத்திற்கு தூபமிட்ட புலம் பெயர் தேசிக்காய் குஞ்சுளுக்கு நன்கு தெரியும் நோர்வே தமிழ் மக்களுக்கு எந்த தீமையும் விளைவிக்க வில்லை என. இருப்பினும் தமது குற்றத்தை மறைக்க இந்த பொய்யை தமிழர்களிடையே மட்டும் பரப்ப வேண்டிய துர்பாக்கிய நிலை.
  4. சிறியரிடம் நோர்வே தூதுவரே தூது போவார் என்ற ஜோக்கை ரசித்து விட்டு மெளனமாக கடந்து வந்தால், அந்த ஜோக்கிற்கு பதிலான எனது ஜோக்கையும் ரசித்து விட்டு செல்ல வேண்டியது தான்.
  5. உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிக்காமல் தலைக்கு மேல் வெள்ளம் போனபின் நள்ளிரவில் அறிவித்தால் உலகில் எவராலும் இந்த Guarntee, warranty எல்லாம் கொடுக்க முடியாது. அதற்கு நேரமும் கிடைத்திருக்காது. ( கடைசி ஆறு மாதங்களில் இணைத்தலைமை நாடுகள் அதை பல முறை வலியுறுத்தின. அப்போது அதை செய்திருந்தால் கோட்டாவால் அதை செய்திருக்க முடியாது. சரணடைந்தது நோர்வேயிடம் அல்ல. மிக மோசமான கோட்டாவின் படையிடம். சரண்டைந்தவர்களை கொல்லும் மகா பாதகத்தை செய்தவர் அவரே. ஆனால் அதற்கும் தமிழரின் உரிமை போர் தோல்வியடைந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே நோர்வே தமிழருக்கு துன்பம் விளைவித்தனர் என்ற உங்கள் கூற்று தவறானது. யாரையோ காப்பாற்ற மீண்டும் மீண்டும் தமிழருக்குள் மட்டும் பேசப்படும் பொய் அது.
  6. நோர்வே தமிழ் மக்களுக்கு ஒரு துன்பமும் விளைவிக்க வில்லை. யானை தன் தலையில் மண் அள்ளிப் போட்டது தான் நடந்தது. 14 வருட அரசியல்வாதிகளின் காலத்தை விட தமிழ் மக்களுக்கு மிக மிக அதிக துன்பங்களை அதற்கு முன்னரே அனுபவித்துவிட்டார்கள். அதை மறைக்கவே 14 வருட அரசியல்வாதிகள் மீது முழுப்பழியும் போடப்படுகிறது. தமிழ் மக்களின் அரசியலுக்கு தலைமை தாங்கியவர்கள் ஏற்படுத்திய அவல நிலையை போக்க பெருமாள் போன்ற ஜாம்பவான்களாலே முடியாத போது இந்த அரசியல்வாதிகள் எம்மாத்திரம்.
  7. சிறியரிடம் நோர்வே தூதுவர் தூது போய், அவர் சொல்வதை சிறியர், “என்னவாம்” என்று முழுச அதை மொழிபெயர்கக சாணக்கியன் கூட போகவேண்டிவரும். 😂
  8. தமிழீழ கோழி இட்ட முட்டைகளை எதிர்காலத்தில் முட்டையடிக்க கனடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான உடன்படிக்கையில் இருதரப்பும் கைச்சாத்திட்டனர்.
  9. @அக்னியஷ்த்ரா @valavan இதற்கு இவ்வளவு பெரிய விவாதம் எதற்கு? புலம் பெயர் நாடுகளில் புலிகளின் நேரடி உறுப்பினர்களாக நீண்ட காலம் இருந்தவர்களே இப்படியான எமகாதகர்களாக இருந்திருக்கும் போது ஊரில் ஒரு உதவியாளர் அப்படி இருந்தது புரிந்து கொள்ளக்கூடிய விடயமே. அதாவது யுத்த காலத்தில் ஊரில் குடும்ப உறுப்பினரை பிடித்தை வைத்து வெளி நாட்டில் காசு அறவிட்ட பின்னர் அந்த குடும்ப உறுப்பினர் விடுதலை செய்யப்பட்ட சம்பவங்களின் போது அப்படி காசு அறவிட்டு அதை ஊருக்கு உறுதிப்படுத்திய நீண்ட கால உறுப்பினரே எப்படிப்பட்ட எம காதகர்கள் என்பது யுத்த முடிவில் தெரியவந்தது. அப்படியிருக்க அக்னியேஷரா கூறிய இந்த தமிழர்கள் அனைவராலும் சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய சிம்பிள் மற்றர். உண்மை, புலிகள் உட்பட அனைத்து ஆயுத இயக்கங்களும் போராட்டம், புனிதம் என்ற பெயரில் செய்த இவ்வாறான வேலைகள் பல. இதை மறுக்க நாம் ஒன்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து நேற்று தான் வந்து பூமியில் குதித்தவர்கள் அல்ல.
  10. கருணாநிதியில் சுயநல அரசியலில் சீமான் அவரின் வாரிசு தான். ஆனால் கருணாநிதி சாயிபாபாவை சென்று சந்திக்கவில்லை. சாயிபாபா தான் கருணாநிதியிடம் நேரம் கேட்டு, வீடு தேடிசென்று சந்தித்தார்.
  11. அது மட்டுமல்ல 1982 ல் பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பின் பிரபா, உமா இருவரையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு ஜே. ஆர் கேட்ட போது தமிழ் நாட்டில் இருந்த திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் மற்றும் வேறு பல கட்சிகளும் இணைந்து அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக போராடியதோடு மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தனர். அதனாலேயே அந்த நாடுகடத்தில் தவிர்க்கப்பட்டது. அன்று பிரபாவோ உமாவோ தமிழ் நாட்டில் எந்த அரசியல் முக்கியத்துவமும் அற்ற வெறும் தமிழ் போராளிகள் மட்டுமே. அதை விட போராட்டம் நடைபெற்ற காலத்தில் பல திராவிட இயக்க தொண்டர்கள் நினைத்து பார்கக பாரிய உதவிகளை போராளிகளுக்கு செய்திருந்தனர். குளத்தூர் மணி புலிகள் மறைவாக பயிற்சி பெற பெரும் நிலப்பரப்பை தனது ஊரில் ஏற்பாடு செய்து கொடுத்ததோடு போராட்டத்திற்கு பல விடயங்களில் உறுதுணையாக இருந்தார். அவரின் சிபார்சுலேயே சீமான் ஈழத்திற்கு சென்றார். ராஜீவ் கொலைக்கு பின் இந்திய கியூ பிராஞ் பொலிசாரால் அதிகம் துன்புறுத்தப்பட்டவர்கள் திராவிட இயக்க தோழர்களே. அந்த அடக்கு முறையையும் மீறி பலர் உதவி செய்ததி ருந்தனர். அதனால் பலர் வருடக்கணக்கில் சிறை சென்றனர். ஆனால் நன்றி கெட்ட புலம் பெயர் ஈழ தமிழர்கள் சீமானின் சொல்லை கேட்டு அவர்களில் பலரை துரோகிகளாக முத்திரை குத்தினர்.
  12. அரச்சனாவுக்கு பாராளுமன்ற நடை முறைகளோ நிலையியற் கட்டளைகள் பற்றியோ, பன்மைத்துவ அரங்கில் எப்படி உரையாற்ற வேண்டும் என்பதோ தெரியாது என்றில்லை. ஆனால் இவரது Fan group இற்கும் இவரை தேர்தெடுத்தவர்களுக்கும் இது பற்றிய அறிவு கிஞ்சித்தும் கிடையாது என்பதை நன்றாக அறிந்து அவர்களை திருப்திப்படுத்த மட்டுமே உரையாற்றுகிறார்.
  13. ஆமாம், உங்கள் ஊகம் சரி. அத்துடன் ஶ்ரீதரனின் உரையில், அரச அதிகாரிகள் எங்களை விட படித்தவர்கள் அவர்களுடன் அணுகுவதற்கு ஒரு முறையுள்ளது என்று ஶ்ரீதரன் கூறிய கருத்துக்கு அர்சுனா தனது முக நூலில், அவருக்கு அது பொருந்தலாம் அதனால் தனக்கு பொருத்தமானது ஶ்ரீதரன் ஐயா எனக்கு பிரயோகிக்க கூடாது என நக்கலாக பதிலளித்துள்ளார். 😂 ( ஆனால், அர்சனாவின் அணுகுமுறை ஊழலை நிரந்தரமாக ஒழிக்க உதவுமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு, ஏனெனில் ஊழல் என்பது அதிகாரிகளில் மட்டும் தங்கி இல்லை ஒட்டு மொத்த மக்களிலுமே அந்த ஊழல் கலாச்சாரம் ஊடுருவி உள்ளது. காசை எறிந்து தமது வேலைகளை விரைவாக முடிப்பதில் புலம் பெயர் தமிழர்கள் விண்ணர்கள். அவர்களில் பலரே அர்சசுனாவின் ஆதரவாளர்கள் கூட. அதிகாரிகள் ஊழல் செய்ய வேண்டும். அதை பொது வெளியில் அம்பலப்படுத்தி நான் ஹீரோ ஆகவேண்டும் என்பதே அர்சசுனாவின் மனவோட்டம் போல தெரிகிறது. காலப்போக்கில் அவர் தனது போக்கை மாற்றி சரியாக செயற்படலாம். அவருக்கு திறமை , தகைமை உண்டு என்பது மறுப்பதற்கில்லை.)
  14. அந்த ஐந்த ஆண்டுகளுக்காக நீங்க சின்னவயசில் இருந்து வெயிற்றிங் போல. 😂
  15. சிவசிதம்பரம் மட்டுமல்ல மாமனிதர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட ரவிராஜ் அவர்களும் அதேபோன்றவரே. யாழ் மேயர் பொன் சிவபாலன் புலிகளால் குண்டுவைத்து படுகொலை செய்யப்பட்ட போது உதவி மேயராக இருந்தவர். கொல்லப்பட்ட சிவபாலனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர். அன்றைய குண்டு வெடிப்பு நாளன்று வேறு வேலைகளால் அங்கு செல்லாததால் அதிஷர்வசமாக தப்பியவர். அன்று அந்த கூட்டதில் பங்கு பற்றியிருந்தால் அவர் துரோகி. பங்கு பற்றாததால் மாமனிதர். அதன் பின்னர் அடுத்த யாழ் மேயர் சறோஜனி யோகேஸ்வரன் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போது அவரின் பூதவுடலை தூக்கி சென்றவரும் இதே மாமனிதர் ரவிராஜ் தான். கணவனும் மனைவியும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரே அமைப்பினால் அரசியல் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் தமிழீழ விடுதலைப்போராட்டதில் தான் நடந்தது. இதை இங்கு கூறுவதற்கு காரணம் துரோகிகும் மாமனிதருக்கும் நூலிழை வேறுபாடுதான் உள்ளது என்ற செய்தியை கூறிய ஒரு சிறு உதாரணம் தான் திரு ரவிராஜ் அவர்கள். இப்படி எத்தனை ரவிராஜ்கள் அதிர்ஷரமின்மையால் துரோகிகளாகி இவ்வுலகை விட்டு சென்றனர். இவை இத் திரியோடு சம்பந்தம் அற்ற பழைய விடயங்கள் என்றாலும் இன்றும் பொய் வரலாறுகளை இன்றும் எழுதி உண்மைகளை மறைப்பவர்களுக்ககவே இந்த உண்மைகளை பதிவு செய்தேன்.
  16. நீண்ட காலம் போராடி ஒரு இரண்டு தலைமுறையை இழந்து ஈழத்தமிழர்களின் political goal இறுதியில் அடைந்தது, இப்படியாக முகநூல்களிலும் இணையத்திலும் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோசங்கள் மட்டுமே. இதை வைத்து திருப்தி கொள்ள வேண்டியது தான். எஞ்சியது இது தான்.
  17. படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும் கூட வக்காலத்து வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி.
  18. இந்திய உயர் மட்ட குழு அவசரம் அவசரமாக இந்த கடிதத்தைப் பற்றி தற்போது விவாதித்து கொண்டிருப்பதாகவும் அதனால் அநுராவுடனான சந்திப்பை இன்று மாலை வரை இந்திய பிரதமர் பின்போட்டிருப்பதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உரிய நேரத்தில் இந்த கடிதத்தை எழுதியதற்காக கஜேந்திரகுமார் அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் நன்றி தெரிவித்து அவசர செய்தி அனுப்பப்படுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி பி. ரி.ஐ செய்தி ஸதாபனம் தெரிவித்துள்ளது.
  19. இந்த பொது வெளியில் நான் எழுதிய அரசியல் கருத்தானது புரிந்து கொள்ளும் ஆற்றல், அறிவு உடையவர்களுக்கானது மட்டுமே.
  20. ஓகோ, ஒரு ஆசாமிக்கு சுட்டு போட்டுதோ. பரவாயில்லை, ஒரு cool shower எடுத்தா சரியாகிடும். 😂😂😂😂😂
  21. சைக்கிள் கட்சியில் இப்படியான பொது சபை கூட்டங்கள் நடை பெறுகின்றனவா? தலைவர் தெரிவு நடை பெறுமா? ஏன் கேட்கிறேன் என்றால் தமிழரசு கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து இங்கு அதிக அக்கறையுடன் பேசுபவர்கள் பேசுபவர்கள் சைக்கிள் கட்சியின் வாரிசு அரசியலை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள். இது தனது வீட்டுக்குள் நடக்கும் கூத்துகளை விடுத்து அடுத்தவன் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்று வேலிக்குள்ளால் விடுப்பு பார்ககும் கலாச்சாரம் தானே. 😂 இலங்கையில் மூன்று தலைமுறை குடும்ப கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்து கொண்டு தமிழ் நாட்டில் வாரிசு அரசியல் என்று பேசும் போலிகள் தான் இந்த தீவிர வரட்டு தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகள்.
  22. அர்ச்சனா உண்மையில் கோமாளியா அல்லது யாழ்பாண/புலன்பெயர் தலைமுறையின் மனோநிலையை நன்கு Stady பண்ணிய மனோதத்துவவியலாளரா? பிரச்சனைகளை தீர்ப்பதை விட பிரச்சனைக்கு காரணமானவராக தம்மால் கற்பிதம் செய்தவர்களை நடுசந்தியில் நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாலே ஆர்கஸம் அடையும் மனோநிலை கொண்ட ஒரு கூட்டத்தை திறமையாக புரிந்து கொண்டு செயற்படுகிறார். இவரது செயற்பாடுகள் வெறும் பேஸ்புக், யுருயூப் விசிலடிப்புகளுக்காக மட்டுமே. தொண்டர் உதவியாளர்கள் என்ற பிரச்சனை 2002 ம் ஆண்டில் இருந்து உள்ள பிரச்சனை. அதை பற்றி அர்சனாவுக்கும் நீண்ட காலமாக தெரியும். இதனை சுகாதார அமைச்சுன் கவனத்துக்கு வருவதற்கான போராட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று அந்த விடயம் ஒரளவு அது முன்னேற்ற மான நிலையிலும் உள்ள நிலையில் அதனை மென்மேலும் வலுப்படுத்தக்கூட வகையில் சுகாதார அமைச்சுடன் நேரடியாக பேசக்கூடிய இயலுமை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அர்ச்சனாவுக்கு உண்டு. இருப்பினும் அதை விடுத்து சத்தியமூர்த்தி அவர்களின் அலுவலக்கதுக்குள் அத்து மீறி நுளைந்தது அவரோடு இவருக்கு இருக்கும் தனிபட்ட ஈகோவுக்காகவும் இவரது சமூகவலைதள விசுலடிச்சான் குஞ்சுகளுக்காகவுமே. மேலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் ஊழல் ஒழிப்பை முக்கிய பிரச்சனையாக கையிலெடுத்தி ருக்கக்கூடிய நிலையை புரிந்து கொண்டு இவ்வாறு தடாலடியாக இவர் நடந்து கொள்வதும் ஒரு தந்திரம் தான். தானாக கனியும் கனிகளை தான் புகைபோட்டு தான் கனிந்தது என்ற பிம்பத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதும் நோக்கம். ஏற்கனவே மருத்துவர்களைக்கெதிராக இவரது குற்றச்சாட்டுகள் இவரால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு மக்களுக்கு காட்டப்பட்டது. எதற்கும் இவரிடம் ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத, அவதூறுகளை கண்ணை மூடிக் கொண்டு நம்பும் ஒரு மக்கட் கூட்டதை நன்கு புரிந்து செயற்படுகிறார். பொதுத் துறை ஊழலை ஒழிக்க உண்மையாக மனப்பூர்வமாக இவர் விரும்பினால் ஆதாரங்களை திரட்டி அதை அரசிடம் கையளிக்கலாம். பாராளுமன்றத்தில் ஆதாரங்களை முறைப்படி வெளியிடலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.